New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாது சுந்தர் செல்வராஜ்


Guru

Status: Offline
Posts: 9863
Date:
சாது சுந்தர் செல்வராஜ்
Permalink  
 


சாது சுந்தர் செல்வராஜ் என்று ஒரு அண்டப்புளுகன். தன்னுடைய சொந்த டி வி சேனலில் இவன் செய்யும் அழும்பு சொல்லிமுடியாது. சமீபமாக இவனும் இயேசுவும் பரஸ்பரம் பேசிக்கொள்வது மற்றவர்களுக்குக் கேட்பதில்லை என்பதால் ஏதோ ஒரு புது கருவி வாங்கவேண்டுமாம். அதற்கு ஜஸ்ட் ஒரு ஐந்தரை கோடி ரூபாய் வேண்டுமாம். அது வாங்கி வைத்துவிட்டால் இவர்கள் பேசுவது எல்லாருக்கும் கேட்கும்படி செய்துவிடலாமாம். 
அதற்கும் ஆமாம் சாமி போட்டு பணம் கொடுக்கத்தான் முட்டாள் கிறிஸ்தவர்கள் மலிந்துவிட்டார்களே?
இதுவும் செய்வாங்க, இதுக்கு மேலேயும் செய்வாங்க....

ஏன், இவர்கள் பிரசங்கம் செய்யும் அந்த "இயேசு சாமி" அவ்வுளவு ஏழையா!! ஒரு ஐந்தரை கோடி இவர்களுக்கு கொடுத்து உதவ முடியாதவரா!! காது இருக்கு என்ரு இவர்கள் பூ சுற்றுவதற்கு அளவே இல்லாமல் போய் விட்டது!! இயேசு கிறிஸ்து யார் என்றும் அவரின் மகத்துவம் என்ன வென்றும் இந்த குருடர்களும், செவிடர்களும் அறிய மாட்டார்கள். இவர்கள் அறிந்தது எல்லாம் ஓசியில் சாப்பிட்டு, இவர்கள் கானும் அபத்தமான கணவுகள் தேவன் தான் கொடுத்தார் என்றும் ஏதோ ஒரு பிசாசிடம் பேசி விட்டு, நாங்கள் இயேசு சாமியிடம் (கிறிஸ்து என்னும் இயேசு என்று இவர்களுக்கு உச்சரிக்கவே வராது) பேசினோம் என்று ஏ.சி ஸ்டுடியோவில் அடுத்தவர்கள் பணத்தில் மேல் வலித்தவர்களாக சோம்பேரிகளாக சோஃப்பாக்களில் உட்கார்ந்து நேரத்தை செலவிட்டு, இன்னும் இப்படி பேச பிச்சை கேட்பார்கள். அதிலும் தமாஷ் என்னவென்றால் இவர்களை போலவே கணவுகள் பார்த்து சொல்லும் மற்றவர்களை இவர்களு குறை கூறுவது. இவர்களுக்கு கொடுத்தால் தீர்க்கதரிசியின் பலனை அடைவார்கள் என்று விளம்பரம் வேறு, இவர்களை போல் உள்ள தீர்க்கதரிசியின் பலன் என்னவென்று பார்ப்போமா,மத். 7:22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

பிரியமானவர்களே, இது தான் இவர்கள் போன்ற தீர்கதரிசிகளுக்கு உண்டான பலன், இதை அடையவா இத்துனை பேர் போட்டி போட்டு கொண்டு பணத்தை தருகிறார்கள்!? இதற்கு அடுத்த வசனத்தை வாசித்து, உங்கள் வீடுகளை கன்மலையின் மேல் கட்டுங்கள், ஏனென்றால் அந்த கன்மலை கிறிஸ்துவே, தயவு செய்து மணல் போல் உள்ள இந்த கள்ள தீர்கதரிசிகள் மீது கட்டாதீர்கள்!!


தமிழகத்தை சேர்ந்த இன்னோரு ஊழிய வாரிசு குடும்பம் 3.5 கோடியில் தேவனை ஆராதிக்க ஒரு ஆடிட்டோரியம் கட்ட காசு கேட்கும் வேட்டையில் இருக்கிறார்களே! அப்புறம் திறப்பின் வாசல், ஜெப கூடம், ஜெப மைய்யம், ஜெப கோபுரம் போன்றவற்ற கட்ட காசு வேட்டை ஆங்காங்கே நடந்துக்கொண்டு இருப்பது அனைவருக்கும் தெர்நிததே!! இயேசு கிறிஸ்துவோ தனிமையில் ஜெபிக்கும்படியாக அதிகலையிலையில் வனாந்தரித்திற்கு புறப்புட்டு போவாராம், இவர்களை போல் மேற்கொண்டவைகளை கட்டி தான் ஜெபிக்கவேண்டும் என்று சொல்லி தரவில்லை. யாரிடம் கற்றுக்கொண்டு யாரை பிரசங்கம் செய்துக்கொண்டிருக்கிறார்களோ இவர்கள். இதை எழுதுவது இது போன்ற ஊழியர்கள் திருந்துவார்கள் என்று அல்ல, மாறாக வாசிக்கும் ஒரு உண்மை இருதயம் உள்ள கிறிஸ்தவன் இந்த வேஷதாரிகளின் கபடத்தை அறிந்துக்கொள்வார்கள் என்கிற ஆதங்கத்தில் தான். தேவன் தாமே அனைவரையும் வழி நடத்தட்டும்.

விரியன் பாம்பு குட்டிகளே, வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகளே, சாத்தானுக்கு பிறந்தவர்களேபோன்றவைகளும் வேதத்தில் உள்ள வார்த்தைகளே. "சாத்துனுக்கு ஒப்பு கொடுத்தேன்" என்று பவுல் சொல்லுகிறார். இது எல்லாம் வயிற்றெரிச்சலினால் வந்த வார்த்தைகள் கிடையாது என்பது தாங்கள் அறிவீர்கள் என்று நான் நினைக்கிறேன். இவர்கள் வைத்திருக்கும் பணத்திற்கோ வசதிக்கோ நாங்கள் எதிரி அல்ல, மாறாக அதை சம்பாதிக்க இவர்கள் செய்து வரும் தந்திரங்களுக்கு அதுவும் தேவனின் நாமத்தை பயன்படுத்தி செய்து வரும் "ஊழியங்களை" நிச்சயமாக வெளிப்படுத்து கடமைபட்டிருக்கிறோம். இதில் என்ன தவறு? இவர்கள் போன்றவர்களை வெளியரங்கமாகும் நாள் சமீபமாக தான் இருக்கிறது. யாரையும் ஆதாயப்படுத்தும் நோக்கம் அல்ல, மாறாக ஏமாறுவோரை ஏமாற்றுவோரிடமிருந்து தப்பிக்க செய்யலாமே.குறும்தகுடகளில் "பரீட்ச்சை எழுதும் பிள்ளைகளுக்கு ஜெபம்" போன்றவற்றை போட்டு சம்பாதித்தார்களே, மாநில அளவில் இடம் பிடித்த மாணவர் பட்டியலை பார்த்தீர்களா!! இனி இவர்களின் ஸ்தாபனங்களில் பணம் கொடுத்து சாட்சிகள் இறக்குமதி செய்வார்கள். இதை பார்த்தும் இன்னும் இந்த வேஷதாரிகளை செய்யும் வியாபாரத்தை நம்ப சொல்லுகிறீர்களா. சரியான வழியை காண்பிக்க முடியாவிட்டாலும் தவறான வழிகளை வெளிப்படுத்துவதும் சிறந்ததே என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. இது அவர் அவர் எடுத்துக்கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது. மேலும் நாங்கள் மனுஷர்களை விரோதிகளாக நினைக்கவில்லை, இவர்கள் கையாளும் தந்திரங்களையே சாத்தானின் தந்திரங்களுக்கு ஒப்பிடுகிறோம். மனசாட்சியை திறந்து சொல்லுங்கள், இது சரி தானா என்று!!வஞ்சிக்கும் மனிதர்களிடம் (வஞ்சிக்கும் ஆவிகளின் தந்திரங்கள்) இருந்து காப்பாற்றுவது நிச்சயமாக தேவனுக்கு செய்யும் ஊழியம் தான். இது போன்ற சாத்தனின் கிரியகளுக்கு துனை போவது தான் யாருக்கு செய்யும் ஊழியம் என்று தெரியவில்லை!!"மேலும் பரீட்சைக்கான ஜெப‌ சிடியின் நோக்கம் மற்றும் இலக்கு கிறித்தவர்களல்ல;எனவே தான் அவர்கள் இந்துக்களின் வழக்குப்படி 'ஆண்டவன்' என்று ஒருமையிலும் 'இறைவன் இயேசு' என்றும் தரம் தாழ்த்தி குறிப்பிடுகிறார்கள்;"இதை தானே ம‌த‌ வியாபாரிக‌ள் என்று சொல்லுகிறோம். ஒரு திற‌மையான‌ வியாபாரியை போல் யாரிட‌ம் எப்ப‌டி பேச‌ வேண்டும் என்று தேவ‌னையே வியாபார‌ப்பொருளாக‌ வைத்திருக்கும் இவ‌ர்க‌ளை என்ன‌ த‌லைக்கு மேல் வைத்து மெச்சிக்க‌ சொல்லுகிறீர்க‌ளா!!"நீங்கள் குறிப்பிட்டதுபோல வெற்றிபெற்ற மாணவர்களை விலைகொடுத்து வாங்கி அவர்கள் பெற்ற வெற்றிக்கு இவர்கள் சொந்தங்கொண்டாட முடியாது;இந்த கருத்து வெற்றிபெற்றவர்களைக் கொச்சைப்படுத்துவதாகும்; "இது ந‌ட‌க்குதா இல்லையா என்று மாத்திர‌ம் பொருத்திருந்து பாருங்க‌ளே!!"மற்றபடி 'செட்டப்' பண்ணுகிறார்கள்,என்று நாமே சொன்னால் பிறகு நமக்கும் இந்துவெறியனுக்கும் வித்தியாசமில்லாமற் போகும்..!"வெறி பிடித்த‌வ‌ர்க‌ள் எல்லா ம‌த‌ங்க‌ளிலும் இருக்கிறார்க‌ள், கிறிஸ்த‌வ‌ம் உட்ப‌ட‌. இந்த‌ த‌ள‌த்தில் நான் வேறு ம‌த‌த்தின‌ரை தேவை இல்லாம‌ல் குறை கூற‌ விரும்ப‌வில்லை. ந‌ம் வீட்டை இருட்டாக‌ வைத்துக்கொண்டு அடுத்த‌வ‌ன் வீட்டில் வெளிச்ச‌ம் இல்லையே என்று சொல்லுவ‌து போல் இருக்கிற‌து.என்னுட‌ன் வேலை பார்க்கும் ஒரு ஹிந்து ச‌கோத‌ரி, "கிறிஸ்த‌வ‌ர்க‌ளை நான் ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ங்க‌ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஒரு முறை ஒரு ச‌ர்ச்க்கு போனேன். அங்கே பிர‌ச‌ங்க‌ம் செய்துக்கொண்டு இருந்த‌வர், ஹிந்துக்க‌ள் எல்லாம் பிசாசை வ‌ன‌ங்குகிறார்க‌ள், என்று ரொம்ப‌வும் கொச்ச‌யாக‌ பேசினார் சார்! என்று என்னிட‌ம் சொன்னார்க‌ள்! ஒரு ம‌த‌ வெறிய‌னின் பேச்சை கேட்ட‌தால் அவ‌ர்க‌ளுக்கு முழு கிறிஸ்த‌வ‌ ச‌முதாய‌மே இப்பொழுது க‌ச‌க்க‌ ஆரம்பித்து விட்ட‌து. இது தான் ந‌ம்ம‌வ‌ர்க‌ள் த‌ரும் சாட்சி. ப‌வுல் கூட‌ விக்கிர‌க‌ங்க‌ள் நிறைந்த‌ அந்த‌ கிரேக்க‌ர்க‌ள் ம‌த்தியில் இப்ப‌டி ப‌ட்ட‌ ஒரு போத‌னையை த‌ர‌வில்லை.

இவ‌ர்க‌ள் (கிறிஸ்துவிற்காக ஊழியம் செய்கிறோம் என்கிறவர்கள்) ப‌ண‌ம் என்னும் பிசாசை தானே என்னிக்கொண்டு இருக்கிறார்க‌ள்!! இவ‌ர்க‌ளே பிசாசை வ‌ண‌ங்கிக்கொண்டு பிற‌ர் பிசாசை வ‌னங்குகிறார்கள் என்று சொல்ல‌ எந்த‌ த‌குதியும் இல்லை.

மேலும் நீங்க‌ள் த‌ந்திருக்கும் "ப‌ழ‌மொழிக‌ளோ, புதுமொழிக‌ளோ" என‌க்கு அர்த்த‌ம் புரிய‌வில்லை. முடிந்தால் விள‌க்க‌மாக‌ எழுதுங்க‌ள்.





__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

க்ரெப்லோ டாலர் என்ற மஹாதிருடன்

க்ரெப்லோ டாலர் என்ற மஹாதிருடன். செழிப்பு உபதேசத்தில் ஜனங்களை மோசம் போக்கும் உத்தி. இவனுக்கென்று சொந்த விமானம், ரோல்ஸ்ராய்ஸ் கார்கள்  உண்டு. நம்பமுடியவில்லையா?

சொடுக்குங்கள்

http://www.youtube.com/watch?v=XAG_zFO17d8

http://www.youtube.com/watch?v=F_TBGRKDPEk


-- Edited by devapriyaji on Tuesday 28th of September 2010 07:25:22 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

விடாக்கண்டன் கொடாக்கண்டன் தினகரன், பென்னிஹின் கூத்து.
விடாக்கண்டன் தினகரன் பரலோகம் போய் ப்வுலையும், பேதுருவையும் பார்த்தாராம் அதைக்கேட்டு ஆமாசாமி போட்டுவிட்டு இப்படி சொல்பவர்கள் பொய்யர்கள் என்று கொடாக்கண்டன் பென்னிஹின் பிரசங்க்கம் செய்கிறான். இந்தத் தொடுப்பை சொடுக்குங்கள், விஷயம் புரியும்.



http://www.youtube.com/watch?v=Gv9cu6U0ohM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தங்களை ஊழியர்கள் என்று அழைத்துக்கொள்ளும் பலர், "இயேசு என்னிடம் இதைச் சொன்னார், அதைச் சொன்னார்" என்று புருடா விடுவது நாம் அறிந்ததே. நமது கேள்வியெல்லாம் இப்படி இவர்களுடன் 'நேரடியாக' பேசும் இவர்கள் இயேசு ஏன் வேத சம்பந்தமான கேள்விகளுக்கு இவர்களுக்கு விடை அளிப்பதில்லை? வேலை நேரத்தில் ஊழியம் செய்யக்கூடாதென்றெல்லாம் 'சொல்லுகிறாராம்' ஆனால் சாமுவேல் என்னவானார் என்று சொல்லிக்கொடுப்பதில்லை. வினோதமாக உள்ளது!

//மரணத்தை பற்றிய  முழுதெளிவு இன்றுவரை யாருக்குமே கிடையாது. ஒருவர் மரித்து பிழைத்து வந்து சொன்னால்தான் உண்டு. அதையும் யாரும் நம்ப போவது இல்லை. ஏனெனில்  அனைத்தும் அறிந்த  ஆண்டவராகிய இயேசு மிக தெளிவாக மரித்த ஐஸ்வர்யாவான்  பாதாளத்தில் வேதனை அனுபவித்தான் என்று  சொல்லி யிருந்தும், அதையே நீங்கள் முற்றிலும் நிராகரித்து அது உண்மையல்ல என்று வாதிடும்போது இயேசுவை விட உங்களுக்கு மரணத்தை பற்றி அதிகம் தெரியுமா?
லூக்கா 16:23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்
பாதாளம் என்ற வார்த்தைபற்றிய உண்மைகளை முழுமையாக அறிந்தால்தான் மட்டுமே  மரணம் பற்றிய மறைபொருளை அறியமுடியும்! //

மரணத்தைப் பற்றிய தெளிவு யாருக்குமே இல்லையாம்.இவருக்கு இல்லையெனறால் யாருக்குமே இல்லை என்று அர்த்தமல்ல. மரித்து எழுந்த இயேசுதான் இவரிடம் அடிக்கடி வந்து பேசுகிறாரே அவர்கூட சொல்லிக்கொடுப்பதில்லையா?

ஐசுவரியவான் - லாசரு என்பது ஒரு உவமை என்றுகூட தெரியாமல் வியாக்கியானம் செய்கிறார்கள்

இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்களோ?


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நண்பர்களே எரிச்சலும் பரியாசமும் நிறைந்த உங்கள் கருத்துக்களால் யாரை ஆதாயப்படுத்தப் போகிறீர்கள்? யாருக்கு செய்யும் ஊழியம் இது?

நமக்கு விரோதியாயிராதவன் நம் பட்சத்திலிருக்கிறான் என்றார்,ர்வவல்ல‌ தேவனாகிய இயேசுகிறிஸ்து;ஆனால் சரியான சத்தியத்தைச் சொல்ல முயற்சிக்கும் உங்களுடைய அணுகுமுறை உலகத்தாரைப் போலவும் உங்களைப் பொருட்படுத்தாமல் தவறான ஊழியத்தைச் செய்வோர் இயேசுவைப் போலவும் நடந்துகொள்ளும் மாயத்தை நான் என்னென்று சொல்வேன்..!



// குறுந்தகடுகளில் "பரீட்சை எழுதும் பிள்ளைகளுக்கு ஜெபம்" போன்றவற்றை போட்டு சம்பாதித்தார்களே,மாநில அளவில் இடம் பிடித்த மாணவர் பட்டியலை பார்த்தீர்களா? இனி இவர்களின் ஸ்தாபனங்களில் பணம் கொடுத்து சாட்சிகள் இறக்குமதி செய்வார்கள்;இதை பார்த்தும் இன்னும் இந்த வேஷதாரிகளை செய்யும் வியாபாரத்தை நம்ப சொல்லுகிறீர்களா? //

நண்பரே, மாணவர்களில் மார்க்க வித்தியாசம் பார்த்தல் வேண்டாமே, இன்றைக்கு அநேக மாணவர்களின் மனதில் இயேசுவானவர் நிறைந்திருக்கிறார்; 

இன்னும் சொல்லப்போனால் கிறித்தவ மாணவனைவிட மாற்று மார்க்கத்தைச் சார்ந்த மாணவன் அதிகமாக ஆண்டவருக்கு பயப்படுகிறான்; இது எனது தனிப்பட்ட அனுபவம் சார்ந்த கருத்தாகும்;

எனவே 'உண்மையாய் தம்மை நோக்கி கூப்பிடும் யாவருக்கும்,அவர் உண்டென்ற விசுவாசத்துடன் வேண்டுதல் செய்யும் யாவருக்கும் பலனளிப்பேன்'என்று வாக்களித்த தேவன் அவர்களை வெற்றிபெறச் செய்திருப்பதில் வியப்பில்லை;

மேலும் பரீட்சைக்கான ஜெப‌ சிடியின் நோக்கம் மற்றும் இலக்கு கிறித்தவர்களல்ல;எனவே தான் அவர்கள் இந்துக்களின் வழக்குப்படி 'ஆண்டவன்' என்று ஒருமையிலும் 'இறைவன் இயேசு' என்றும் தரம் தாழ்த்தி குறிப்பிடுகிறார்கள்;

பரீட்சைக்கான ஜெப‌ சிடியின் ஜெபிக்க அறியாத மாற்று மார்க்கத்தவர் நம்முடைய ஜெப முறையினை அறியும் வாய்ப்பும் ஏற்படுகிறது;ஏன் கிறித்தவ குடும்பங்களிலும் கூட "தேனும் திணை மாவும் நானுன‌க்குத் தருவேன்,நீ எனக்கு..." என்ற 'டைப்'பில் தான் ஜெபம் நடக்கிறது;

நீங்கள் குறிப்பிட்டதுபோல வெற்றிபெற்ற மாணவர்களை விலைகொடுத்து வாங்கி அவர்கள் பெற்ற வெற்றிக்கு இவர்கள் சொந்தங்கொண்டாட முடியாது;இந்த கருத்து வெற்றிபெற்றவர்களைக் கொச்சைப்படுத்துவதாகும்; 

உண்மையிலேயே வெற்றிபெற்ற குறிப்பிட்ட மாணவன் அல்லது மாணவி ஏதாவதொரு வகையில் இந்த ஊழியர்களுடன் தொடர்பிலிருந்து அவர்களுடைய பிரார்த்தனையினால் மனோதைரியமும் மனசாந்தியும் பெற்றிருந்து அதினால் வெற்றிபெற்றிருந்தால் மட்டுமே தாமாக முன்வந்து சாட்சி சொல்லுவார்கள்,அது தவறல்ல;

மற்றபடி 'செட்டப்' பண்ணுகிறார்கள்,என்று நாமே சொன்னால் பிறகு நமக்கும் இந்துவெறியனுக்கும் வித்தியாசமில்லாமற் போகும்..!


// மனசாட்சியை திறந்து சொல்லுங்கள்,இது சரிதானா என்று? //

"ஆலையில்லா ஊரில் இலுப்பப்பூ சர்க்கரையாம்..!"

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=33996033




// தேவ‌னையே வியாபார‌ப்பொருளாக‌ வைத்திருக்கும் இவ‌ர்க‌ளை என்ன‌ த‌லைக்கு மேல் வைத்து மெச்சிக்க‌ சொல்லுகிறீர்களா..? //

மெச்சிக்கொள்ளச் சொல்லவில்லை...
"போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறெ அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.

ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,

அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியிலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.

அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்.

ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்."(1.கொரிந்தியர்.3:11 15)

மேற்கண்ட வசனத்தின்படி பொறுத்திருக்கவேண்டியதாக இருக்கிறது; கிறிஸ்துவைப் பற்றிய பிரஸ்தாபத்தில் இவர்கள் முன்னணியிலிருக்க - இவர்களால் கவரப்பட்டோர் அடுத்த நிலைக்கு முன்னேறி வரும்போது சரிசெய்யப்படுவர்;

அதாவது சபைகளாலும் ஜெபக் குழுக்களாலும் இன்னும் ஆண்டவரைக் குறித்து சரியாக அறிந்துக்கொண்டு தூய்மைப்படுத்தப்படுவர்;

அதாவது நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து பாளம் பாளமாக வெட்டியெடுக்கப்படும் மண்ணிலிருந்து பொன்னானது பல்வேறு கட்டங்களில் பிரித்தெடுக்கப்படுவது போலும் எண்ணெய் கிணறுகளிலிருந்து எடுக்கப்படும் "க்ரூட் ஆயில்" எனப்படும் திரவத்திலிருந்து பெட்ரோல்,டீசல்,மண்ணெண்ணெய் போன்ற பல்வேறு உபயோகமான பொருட்கள் பிரித்தெடுக்கப்படுவது போலும் பரலோக ராஜ்யத்துக்கென ஆண்டவரால் முன்குறிக்கப்பட்ட ஆத்துமாக்கள் சேகரிக்கப்படுகிறார்கள்;

மற்றபடி தேவனை யாராலும் வியாபாரப்பொருளாக ஆக்கமுடியாது,அது கூடாதது;ஜெப சிடி ஜெபத்துக்கான வழிகாட்டு உபகரணம் மட்டுமே;அதன் தயாரிப்புச் செலவைப் பொறுத்து விலை நிர்ணயம் பண்ணப்படுகிறது;

உத்திராட்சக் கொட்டைக்கூட இன்றைக்கு 'டெலி மார்க்கெட்டிங்'கில் விற்பனைக்கு வந்து சுமார் 1000 ரூபாய் வரை விற்கப்படுகிறது;ஆனால் நேர்மையான முறையில் ஒரு மாதிரி ஜெபம் ஆயத்தம் செய்யப்பட்டு வெறும் 50 ரூபாய்க்கு விற்றால் அது தேவனையே விற்பது போலாகாது என்பது என் கருத்தாகும்.

அன்புக்குரிய நிர்வாகி அவர்களுக்கு,
உங்கள் அனுமதியில்லாமல் நான் செய்த ஒரு காரியத்தினால் உங்களது பார்வையாளர் எண்ணிக்கை இதோ "ஜம்ப்"ஆகியிருக்கிறது;அது என்ன என்று கேட்கவேண்டாம்;இது நான் செய்துள்ள இரண்டாவது முயற்சியாகும்;

இந்த தளத்தை நான் நேசிக்கிறேன் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்கமுடியாது;அதுபோலவே நாமனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்பதே என்னுடைய தரிசனமாகும்;

அதற்கான காலம் கனியட்டும்..! 

bereans

சகோ சில்சாம் அவர்களே,

தாங்கள் இந்த தளத்தின் மேல் வைத்திருக்கும் அன்பிற்கு மிக்க நன்றி. தங்களின் முயற்சியால் அநேகர் இந்த தளத்தை பார்வையிட்டு செல்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதற்கும் நன்றி! இது சபை பாகுபாடற்ற ஒரு கிறிஸ்தவ தளம். நடப்பது அனைத்திலும் தேவனின் சித்தம் இருக்கிறது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடையவன் நான். எது நடந்தாலும் தேவனின் மகிமைக்கென்றே நடக்கட்டும்.

நிர்வாகி
கோவைபெரெயன்ஸ்


10:48:29 Jun 8, 2010
நானும் ஒரு எழுத்தாளன் (..?!) என்பதால் தங்கள் காயங்களை அறிந்திருக்கிறேன்;ஆனாலும் தங்கள் பார்வையாளர் எண்ணிக்கை 17 அல்லது 20 லேயே தொடர்வதைக் கண்டு வருந்தியதுண்டு;நம்முடைய பிரயாசம் சிறியதாகவும் பலன் பெரியதாகவும் இருத்தல் வேண்டும் என்பதே பவுலடிகளின் பாணி;

இதனை மாற்ற நான் செய்த ஒரு சின்ன முயற்சி என்ன என்பதை ‍ நல்லபிள்ளையாக இருந்து கேட்காதது குறித்து அதிக மகிழ்ச்சி;

இனி தினமும் குறைந்தது 500 பேராவது வந்து செல்லும் தளமாக உயர நீங்கள் செய்யவேண்டியது என்ன என்பதைக் குறித்து யோசியுங்கள்;

கர்த்தர்தாமே தங்கள் முயற்சிகளை வெற்றியடையச் செய்வாராக..!


bereans

முன்பே எழுதியது போல் "நடப்பது அனைத்தும் தேவனின் சித்தமே" அது நம் வெற்றியாக இருந்தாலும் சரி தோல்வியாக இருந்தாலும் சரி என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த வெற்றியை அல்லது தோல்வியை சந்திக்க நடத்தி செல்பவரும் அவரே. தோல்வி என்றால் அது நம் விசுவாசத்திற்கு வரும் ஒரு சோதனை என்றே நான் என்னுவது. வெற்றி என்றால் அது தேவன் தந்த ஒரு கிருபை என்பது என் விசுவாசம்.

500 பேரா 5 பேரா என்கிறபடி கணக்கு பார்த்து என்ன! வருவோருக்கு பிரயோஜனமாகவும், தேவனின் நாமம் மகிமைப்படவுமே என் முயற்சி. கர்த்தர் நடத்தட்டும்.


soulsolution
சிங்கிளாக வரும் சிங்கங்கள் போதும் இத்தளத்திற்கு. சிறு மந்தை சிறியதுதான். வஞ்சிக்கப்படுவதற்குத்தான் 'அநேகர்' தேவை.

ஆத்துமாவின் பிசின் (soulsolution) அன்று சொன்னதும் இன்று சொல்வதும்...

//  சிங்கிளாக வரும் சிங்கங்கள் போதும் இத்தளத்திற்கு. சிறு மந்தை சிறியதுதான். வஞ்சிக்கப்படுவதற்குத்தான் 'அநேகர்' தேவை. //

************************

நன்றி கூறுகிறோம்!

தாங்கள் எத்தனை பலவீனமானவர்கள் (வசனத்தில்) என்று தனித்தளம் தொடங்கி நிரூபித்த ஒவ்வொரு "தள நிர்வாகி"க்கும் கோவை பெரெயன்ஸ் குழு நன்றி தெரிவிக்கின்றது. உங்களுடைய அதிமேதாவித்தனத்தினால்தான் எங்கள் தளத்துக்கு வரும் சகோதர, சகோதரிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

உங்களது இந்த மஹோன்னத ஊழியம் தொடரட்டும். ஜனங்கள் சத்தியத்தை அறியட்டும்!!

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 80 பேர் தளத்துக்கு வருகை தருகிறார்கள்.

நன்றி!
அன்பு, 
சில்சாம் மற்றும் 
சுந்தர் மூவருக்கும்.....

******************************************************


நான் தாழ்மையுடனும் நட்புணர்வுடனும் எத்தனை முறை இங்கே வந்தாலும் புறக்கணிப்பும் எகத்தாளமும் தொடருகிறது;இதுதான் கிறிஸ்துவின் அன்பு என்றால் மாற்று மார்க்கத்திலிருந்து இங்கே வந்ததைக் குறித்த அதிர்ச்சியும் இன்னும் வரக்காத்திருப்போரின் நிலையைக் குறித்த அச்சமும் அதிகரிக்கிறது..!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 

சகோ.சாதுசுந்தர் செல்வராஜ் அவர்களின் பொய் சாட்சி:

சகோ.சாது சுந்தர் செல்வராஜ் ஆரம்ப காலத்தில் கூறியதாவது, சாது சுந்தர்சிங் அவர்கள் மரித்தப்பின் அந்த ஊழியத்தை செய்ய கர்த்தர் என்னை அபிஷேகித்து என் வாழ்நாள் முழுவதும் திபெத் பகுதியிலேயே ஊழியம் செய்து இரத்தசாட்சியாய் நீ எனக்காக மரிக்கப்போகிறாய் என்றார். அப்படியே அவர் அங்குபோய் வந்தார்.

n4.jpg

star2.gif  ஆஸ்ட்ரேலியாவில், திபெத்தில் நடக்கும் ஊழியத்தை விளக்கி பணம் திரட்டினார். அப்போது ஆஸ்ட்ரேலியாவில் உள்ள இலங்கை தமிழ் கிறிஸ்தவர்கள் இவர் செய்யும் ஊழியம் உண்மைதானா? சாது சுந்தர்சிங்கைப் போல நிறைய அற்புதங்களை கர்த்தர் இவர் மூலமாக செய்ததாக எங்களிடம் அறிவிக்கிறார். எங்களுக்கு உண்மை தெரியவேண்டும். எங்களுக்கு இவரைப் பற்றி பெருத்த சந்தேகம் எழுகிறது. இந்தியாவிலிருந்து எங்களுக்கு இவரைப்பற்றி விவரம் அறிவிக்க யாரும் இல்லை என்றார்கள். திபெத்துக்கு நேரில்போய் பார்க்காமல் அங்குள்ளவர்களை விசாரிக்காமல் என்னால் அவர்களுக்கு பதில் எழுத முடியவில்லை. நோபாளம் வரை இரண்டுமுறை நான் தனியே ஊழியத்துக்கு சென்றேன். அங்குள்ள ஊழியர்களிடம் இவரைப்பற்றி விசாரித்தேன். அவர் குறிப்பிட்ட ஊழியங்கள் திபெத்தில் நடப்பதாக எங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்றார்கள்.

star2.gif  அவர் திபெத்தில் நடந்ததாக கூறும் சாட்சிகளை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவைகளாக இருந்தது. உதாரணத்துக்கு இவர் கூறிய பொய்சாட்சி ஒன்றை மட்டும் கூறுகிறேன்.

star2.gif  இவர் சென்னையில் ஒரு வீட்டுக்கு திடீரென்று போனாராம் அங்கு பல வருடங்கள் எழுந்திருக்கவோ நடக்கவோ முடியாதபடி, டாக்டர்கள் கைவிட்டநிலையில் படுக்கையில் இருக்கும்சிறுவனை கண்டாராம். அவனை வெறுமனே உற்றுப்பார்த்தாக இவர் அறிவிக்கிறார். அந்த பார்வை பட்டவுடன் பையன் எழுந்து நடந்து விளையாட வெளியே போய்விட்டானாம். அந்த வீட்டுபெண்மனி அதிர்ச்சியுடன் வெளியில்வந்து ஐயா, நீங்கள் யார்? இத்தனை வருடம் ஆடாமல் அசையாமல் கை, கால் அசைக்கமுடியாமல் படுக்கையில் கிடந்த என் பையன் இப்போது எழுந்து ஓடுகிறானே! நீங்கள் என்ன செய்தீர்கள்? என்றாராம். சகோதரி நான் ஒன்றும் செய்யவில்லை. படுக்கையில் இருக்கும் பையனை வெறுமனே உற்றுப்பார்த்தேன் அவ்வளவுதான். அவன் நடக்கமுடியாதவன் என்றோ, பல வருடங்கள் வியாதிப்படுக்கையில் இருப்பவன் என்றோ! அவன் டாக்டர்கள் கைவிட்ட கேஸ் என்றோ! எனக்கு தெரியாது என்றேன். ஐயா, நீர் இயேசுகிறிஸ்துவா என்றாள். இப்படி போகிறது இவரின் சாட்சியின் கதை.

star2.gif  பலர் இதைக்குறித்து எனக்கு எழுதினார்கள். உடனே நான் சாது சுந்தர் செல்வராஜ் அவர்களுக்கு என் வழக்கப்படி கடிதம் எழுதினேன். இந்த சாட்சியை நான் ஜாமக்காரனில் வெளியிடவேண்டும். ஆனால் அந்த சம்பவத்தின் உண்மையை அறிய விரும்புகிறேன். நீங்கள் சந்தித்த அந்த பையனின் வீட்டு விலாசம் தரமுடியுமா? என்று கேட்டு எழுதினேன். அதற்கு அன்றைய நாட்களில் அவரே எழுதிய கடிதத்தை நீங்களே வாசித்துப் பாருங்கள்.

n5.gif

இந்த கடிதத்தில் அவர் பொய் சாட்சியின் உண்மை வெளிவந்துவிடும் என்று அறிந்து அந்த வீட்டு விலாசம் மறந்துவிட்டேன் என்று எழுதியுள்ளார்.

star2.gif  இது மாதிரி ஒரு ஊழியனின் கண்பார்வையில் ஒருவனுக்கு சுகம் கிடைத்தது என்றால் அது சாதாரண விஷயம் அல்லவே! ஆனால் இவரின் சாட்சியில் சில கேள்விகளுக்கு பதில் வேண்டும்! அந்த பையன் பலவருடம் நடக்க இயலாதவனாக இருந்தது வாஸ்தவமா? அப்படியானால் அவனை டாக்டர்கள் ஏன் கைவிட்டார்கள்? அந்த பையனின் மெடிக்கல் ரிப்பேர்ட் என்ன? இந்த விவரங்களை அறிந்தால் உண்மை விளங்கிவிடுமே! இயேசு செத்துப்போன பெண்ணை பார்த்தார், சிறு பெண்ணே எழுந்திருஎன்றார். ஆனால் சாது செல்வராஜ் அந்த பையனை எதுவும் பேசாமல் கண்பார்வையிலேயே சுகப்படுத்தி விட்டார் என்றால் அது சாதாரண விஷயமா? மேலும் அந்த பையனின் தாய் கேட்ட கேள்வியிலேயே சாது செல்வராஜ் அந்த பெண்ணை இதற்கு முன்பார்த்ததில்லை என்று விளங்குகிறது. அதனால்தான் அந்த பெண் அவரை நோக்கி ஐயா, நீங்கள் யார்? என்று கேட்டிருக்கிறாள். அப்படியானால் முன்பின் பழக்கமில்லாத அந்த பெண்ணின் வீட்டுக்கு இவர் ஏன் போனார்? என்ற கேள்விக்கள் நமக்கு எழவில்லையா? இந்த கடிதத்துக்குப்பின்தான் அவர் என்னை முற்றிலும் வெறுக்க ஆரம்பித்தார். வாசகர்களாகிய நீங்களே சொல்லுங்கள், இது பொய்சாட்சி இல்லையா?.

star2.gif  அந்த வீட்டுக்கு இயேசுவைப்பற்றி அவர் சுவிசேஷம் ஏதும் கூறவில்லை, அந்த நடக்க இயலாத பையனுக்கு இயேசுவை அறிமுகப்படுத்தவில்லை! பின் எதற்காக அங்கு போனார்? சுகம் பெற்ற பையன் தான் சுகம்பெற்ற சந்தோஷத்தை தன் தாய்க்குதானே அறிவிக்க ஆசைவரும். ஆனால் பையனோ வெளியே விளையாட ஓடிவிட்டான். இந்த சாட்சியில் எங்கேயோ இடிக்கிறதே! இந்த சம்பவத்தை நம்ப இயலவில்லையல்லவா! தன்னையே இயேசுவாக அல்லவா அந்த வீட்டாருக்கு காண்பித்துவிட்டு பதில் கூறாமல் திரும்பியிருக்கிறார்! இந்த நிகழ்ச்சியில் அவர்களுக்கு இயேசுவை கூற நல்ல சந்தர்ப்பம் கிடைத்ததே!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

விமர்சனம் கடிதம்:

ஆந்திராவிலிருந்து திரு.டி.ராஜேந்திரசிங் நாடார் என்பவர் 26ம் தேதி மே 2010 அன்று சாது சுந்தர் செல்வராஜ்க்கு மிக நீண்ட கடிதம் எழுதியிருக்கிறார். அதில் குறிப்பாக, 2008 டிசம்பரில் மிகப்பெரிய யுத்தம் இஸ்ரவேல் நாட்டில் நடக்கும் அப்போது ஐரோப்பாவிலிருந்து ஒருவர் வந்து சமாதானப்படுத்துவார். அவர்தான் அந்திகிறிஸ்து என்று அடிக்கடி தீர்க்கதரிசனம் கூறினீர்கள். ஆனால் இதுவரை அப்படி ஏதும் நடக்கவில்லையே? அந்த தீர்க்கதரிசனம் நடக்காமல் இருந்தும் அந்த தீர்க்க தரிசனத்தை 2009 வரை ஏஞ்சல் டிவியில் திரும்ப திரும்ப ஒளிப்பரப்பிக்கொண்டிருந்தீர்கள்.

star2.gif  ஒருநாள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சூப்பர் ஸ்டார்.ரஜினிகாந்த் ஸ்டைலில் நின்று கொண்டு என்னைப்பார்த்தார் என்று கூறினீர்கள். சினிமா உலக பாதிப்பு உங்களைவிட்டு போகவில்லையே! இயேசுவை நடிகர்.ரஜினிகாந்த்துடன் ஒப்பிவடுவது சரியா?

star2.gif  மரியாளிடம் தூதன் உன் கர்ப்பபை எனக்கு வேண்டும் என்று கர்த்தர் கேட்கிறார் என்றீர்கள். வேதத்தில் அப்படி எங்கும் காணவில்லையே! கர்ப்பபை ஆண்டவருக்கு எதற்கு? இந்த செய்தியை TV யில் திரும்ப திரும்ப ஒளிப்பரப்பினீர்கள். ஏன்? மேலும் ஆண்டவர் சிலுவைபாடுகளை அன்று எருசலேமில் நடந்ததை அப்படியே எனக்கு காட்டினார். உடனே நான் அதை அப்படியே என் வீடியோவில் பதிவு செய்துவிட்டேன் என்று 3 முறை TVயில் போட்டுகாட்டினீர்கள். உடனே நான் அந்த VCDஐ ஒருகாப்பி எனக்கு அனுப்புங்கள் நான் பணம் அனுப்புகிறேன் என்றேன். இப்போது அது எங்களிடம் ஸ்டாக் இல்லை என்று உங்கள் அலுவலகத்திலிருந்து பதில் வந்தது. வீடியோவில் பதிவு செய்தேன் என்று கூறினீர்கள் ஏன்? அதை எங்களுக்கு அனுப்பக்கூடாது. அப்படியானால் நீங்கள் பொய் பேசுகிறீர்கள் என்று ஏன் நாங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. உங்கள் பொய் ஏஞ்சல் TVயில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஜாக்கிரதை! பொய் பேசும் அனைவரும் இரண்டாம் மரணமான அக்கினி கடலில் பங்கடைவார்கள் என்று வெளி 21:8ல் கூறியிருப்பதை உங்களுக்கு ஞாபகப் படுத்துகிறேன். இப்படி இந்த சகோதரன்போல் நிறையபேர் சாது சுந்தர் செல்வராஜ்க்கு கடிதம் எழுதி எச்சரிக்கவேண்டும்! அப்போதாவது கொஞ்சமாவது அவருக்கு தெய்வபயம் வருகிறதா! என்று பார்ப்போம். star2.gif  கர்த்தர் சொன்னார் என்று ஏஞ்சல் டிவி-ஐமுதன்முதல் ஆரம்பித்தார். star2.gif  திடீரென்று ஏஞ்சல் TV நிறுத்தப்பட்டது. கர்த்தர் என்னோடு பேசி உன்னைதிபெத்துக்குத்தானே அனுப்பினேன். போய் அந்த ஊழியத்தை மறுபடியும் தொடங்கு என்று கர்த்தர் அறிவித்தார் என்று டிவியிலேயே இவர் கூறியதை யாவரும் அறிவோம். (ஆனால் நடுவில் ஏஞ்சல் TVஏன் நிறுத்தப்பட்டது என்பதற்கு காரணம் வேறு என்பதை நான் ஜாமக்காரனில் அன்றே எழுதினேன்).

star2.gif  ஆனால் சிலவாரங்களிலேயே தூதர்கள் கூறினார்கள். நீ மறுபடியும் ஏஞ்சல் TVயை தொடங்கு நான் உனக்கு முன்பைவிட பெரிய அளவில் TV நிகழ்ச்சிகளை தொடர உதவி செய்வேன் என்று கூறியதாக இவரே TVயில் அறிவித்ததை வாசகர்கள் அறிவீர்கள். அப்படியானால் திபெத்துக்கு திரும்பப் போ என்று இவரிடம் கூறிய கர்த்தர் இப்போது எங்கே போனார்? இப்போது இவரிடம் பேச கர்த்தருக்குபதில் தூதன் ஏன் வந்தான். அப்படியானால் இப்போ நடக்கும் ஏஞ்சல் TV கர்த்தரால்நடத்தப்படுவதல்ல, தூதனால் நடத்தப்படுகிறது என்பது அறியமுடிகிறது! என்றால் அந்த தூதன் யார்?தயவுசெய்து மக்களின் இந்த கேள்விக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சாது சுந்தர் செல்வராஜ் அவர்களே பதில் கூறுங்கள்.

star2.gif  சகோதரனே! கிறிஸ்தவ மக்கள் முன்புபோல அல்ல! மக்கள் விழித்துக்கொண்டார்கள். ஆகவே இந்த கேள்விக்கு நீங்கள் பதில் கூறியே ஆகவேண்டும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard