New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எசேக்கியா பிரான்ஸிஸ்


Guru

Status: Offline
Posts: 9863
Date:
எசேக்கியா பிரான்ஸிஸ்
Permalink  
 


எசேக்கிய ஃபரான்சிஸ் கூட்டம் வசியப்பட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு கூட்டம். மேடையிலிருந்து அவரும் அவரின் மொழிப்பெயர்ப்பாளரும் பேசுவார்கள். பேசுவார்கள் என்றால் என்ன, வசிய வார்த்தைகள் தான். தங்களின் வாழ்க்கை அனுபவத்தை வசனமாக மாற்றி சொல்லுவது. எல்லாரும் வாய் பிளந்து வசியபட்டு உட்கார்ந்திருப்போம், நானும் தான்! அதன் பின் அந்நிய பாஷை என்கிற ஒரு கொடுமை. நான் அப்படி பட்ட ஒரு மட்டமான அனுபவத்தில் அப்பொழுது வரவில்லை, ஆகவே அந்த அறங்கமே அந்நிய பாஷையில் புகுந்து விளையாடியது, பெரும்பாளுமானோர் பெந்தகோஸ்தே பாஸ்டர்மார்களும், விசுவாசிகளும் தானே அங்கே வந்திருந்தார்கள், அந்நிய பாஷை பேசினால் தான் பரிசுத்த ஆவியை பெற்ற அடையாளம் என்று நம்பும் கூட்டத்தார் அவர்கள்!!. நான் பலரிடம் என்ன பேசினீர்கள் என்று கேட்டதறு, அர்த்தம் சொல்ல தெரியாது, ஆனால் தேவனே வந்து அவர்களின் நாவில் அவ்விதமான பாஷைகளை வைத்து போவாராம்!! என்ன கொடுமை இது. அர்த்தம் தெரியாமல் எல்லாம் ஒரு மொழியா! வேதம் சொல்லுகிறது, உலகத்தில் பேசப்படும் மொழிகளுக்கு அர்த்தம் இருக்கிறதே, அது எப்படி அர்த்தம் இல்லாத ஒரு மொழியை இவர்கள் பேசுகிறார்கல்! அங்கு தங்கி இருந்த நான்கு நாட்களும், வந்திருந்தோர் அனைவரும் (என்னை தவிர என்று தான் நினைக்கிறேன்) பல பாஷைகளில் துள்ளி குதித்தார்கள்,மேடையிலிருந்து கைகளை தட்ட சொன்னால் கைத்தட்டுவார்கள், பக்கத்தில் இருப்பவரை பார்த்து ஏதாவது ஒன்றை சொல்ல சொல்லுவார்கள், "பிரதர், நீங்கள் ஒரு தீர்க்கதரிசி' என்று சொல்ல சொல்லுவார்கல் (வசியம்) என் பக்கத்தில் இருப்பவர் அப்படி இல்லாவிட்டாலும், மேடைக்கு கட்டுபட்டு நானும் அப்படியே சொன்னேன் (என் பக்கத்தில் இருந்த நபர் அதன் பின் ஒரு பாஸ்டராக மாறி, இப்பொழுது ரெவெரெண்ட் என்கிற அந்தஸ்தில் இருக்கும் ஒரு பெந்தெகோஸ்தே நபர்). அந்த கூட்டங்களில் 1 கொரி. 12ம் அதிகாரத்தை மாத்திரமே மைய்யமாக வைத்து தங்களின் வாழ்க்கையில் நடந்த சில சுவையான (!!) சம்பவங்களை சொல்லி எங்களை போன்ற (மேடையில் பேசுபவர் தேவ மனுஷன் என்கிற நம்பிக்கையில் இருப்போர் கூட்டம்) மக்கள் வாயை பிளந்து தான் உட்கார்ந்திருபோம். பிறகு தான் உச்சமே வந்தது. பரிசுத்த ஆவியில் சிரியுங்கள் என்று ஒரு கட்டளை மேடையிலிருந்து வர, எனக்கு அழுகை தான் வந்தது. அங்கே இருக்கும் ஒவ்வொரு நபரும் பேய் தனமாக சிரிக்க ஆரம்பித்தார்கள். இது தான் பரிசுத்த ஆவியில் சிரிப்பதாம். வசியப்பட்டவர்களாக அவர்கள் சிரித்துக்கொண்டு இருப்பதை மேடையில் இருப்பவர்கள் ரசிப்பார்கள் (இவனுங்களை போல் கிறுக்கன்களை எப்படி வேண்டுமென்றாலும் நடத்தலாம் என்று பார்ப்பார்கள் போல்).

இயேசு பண்னை என்கிற அந்த இடத்தில் தங்கி இருந்த அந்த 4 நாட்களும் இப்படி தான். பரிசுத்த ஆவியில் சிரியுங்கள், நடனமாடுங்கள், அந்நிய பாஷையில் பேசுங்கள் என்பது மாத்திரமே. ஹிப்னாடிசம் செய்யும் ஒருவர் செய்யும் அனைத்தையும் ஊழியக்காரர்கள் என்கிற போர்வையில் இவர்கள் செய்கிறார்கள். அன்பு மாத்திரமே அங்கு மிஸ்ஸிங். அவர்களின் முகங்களில் ஒரு போலி சிரிப்பு இருப்பதை மாத்திரம் உணர முடிந்தது. சகோ ஆத்துமா எழுதியது போல், முன்பெல்லாம் பக்கெட் எடுத்து வாந்தி எடுக்க வைப்பார்கள், நானும் அப்படி நினைத்து தான் சென்றேன், நல்ல வேலை, என் வயிற்றை அவர்கள் கழுவிவிடவில்லை. தப்பித்தேன். ஆனால் அந்த கூட்டத்தில் கலந்து விட்ட பிறகு அவர்களை போல் அந்நிய பாஷையில் பேச வேண்டும் என்கிற என்னம் எனக்குள்ளும் வித்து விட துவங்கியது. அது பால் தினகரன் நடத்திய பவர் மினிஸ்டிரி கூட்டத்தில் நிறைவேறியது. அதை அடுத்த பதிவில் தருகிறேன்.

இந்த பதிவு வெளிவர ஊக்கப்படுத்திய சகோ அன்புக்கு நன்றி. (எழுத்து பிழைகளை கண்டுக்கொள்ளாதீர்கள்!!)

http://kovaibereans.activeboard.com/index.spark?aBID=128972&p=3&topicID=37651953




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

எங்கள் பாஸ்டர் மட்டும் அப்படியல்ல‌....

என்ற மாயைதான் இன்றைய கிறிஸ்தவத்தின் தலையாய பிரச்சனையே. அந்த அளவு இந்த ஊழியக்காரன்கள் அவர்கள் "கஸ்டமர்களை" குருடாக்கிவைத்திருக்கிறார்கள். 

எசெக்கியா பிரான்ஸிஸ் சரியில்லையா என்றால் ஆமாம் பிரதர்; 

பால்தினகரன்? அவரும்தான் பிரதர், 

அலன் பால்? அவரும்தான் பிரதர்; 

உங்கள் பாஸ்டர்.....? 

ச்சேச்சே எங்கள் பாஸ்டர் நல்லவரு, வல்லவரு வல்லமயா ஜெபிக்கிறவரு, "ஊழியத்திலகம்" அவருகிட்ட ஒரு கொறயும் இல்ல பிரதர், என்று ஏறத்தாழ எல்லாக் கிறிஸ்தவர்களும் சர்டிபிகேட் கொடுப்பார்கள்.

நீங்கள் எப்படி? 

சபை என்று சொல்லிக்கொள்ளும் எந்த அமைப்புமே அந்திகிறிஸ்துதான் என்று அறியீர்களா? 

சபை என்ற பெயரில் உங்களைக் கட்டிவைத்து காசுபார்த்துக்கொண்டிருக்கிறார்களே, நீங்களும் கல்யாணத்துக்கும் அடக்கத்துக்கும்தானே சபையில் அங்கத்தினராக உள்ளீர்கள். 

என்றைக்காவது வேதத்தை ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறதா? வெளியில் கிறிஸ்தவன் என்று காண்பித்துக்கொள்ளத்தானே இத்தனை பிரயாசம்? 

ஞாயிறு ஆனால் ஒரே பக்தி மயமாய் கையில் கருப்பு பைபிளை எடுத்துக்கொண்டுபோய் கற்றுக்கொள்வதெல்லாம் குப்பைகள். 

என்றைக்காவது உங்களுக்கு இயல்பாக வரும் கேள்விகளுக்கு உங்கள் போதகரிடம் பதில் கேட்டதுண்டா? பதிலால் திருப்தியடைந்ததுண்டா? 

போதகனெல்லாம் கொம்பனில்லை அவன் உங்களை அடக்கிவைக்கும் வித்தையைக் கற்றுக்கொண்டவன் அவ்வளவே! 

கிறிஸ்து மட்டுமே பிரதான ஆசாரியர் என்று அறிந்தும் போய் அறிவுகெட்ட மனிதர்களிடம் ஜெபிக்கச்சொல்கிறோமே ஏன்? நம் ஜெபத்தில் நமக்கே நம்பிக்கை இல்லையா?

ஆக, வேதம் எதையோ சொல்லிவிட்டுப் போகட்டும்; எனக்கு ஒரு அமைப்பு வேண்டும். கல்யாணம் கருமாதி செய்ய ஒரு பூசாரி வேண்டும். சத்தியம் எப்படியிருந்தால் எனக்கென்ன? என்று எண்ணித்தான் இன்றைய முழு கிறிஸ்தவமும் "பாபிலோன் மகாவேசி"யின் சுகத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறது, வெளியே வர மனதில்லாமல்... (வெளி 18:4)

நடக்கட்டும்!

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இன்று அநேகர், அன்பாக எடுத்து சொல்லுங்க பிரதர், ஏன் இப்படி கோபம் உங்கள் தளத்தில் தெரிகிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு இந்த வசனம் தான் என்னால் தர முடியும். திருவ‌ச‌ன‌ம் சொல்லாத‌தை சொல்லுகிற‌வ‌ர்க‌ள், க‌ன‌வுக‌ள் காட்சிக‌ள் போன்ற‌ மாயையினால் ப‌ல‌ வித‌மான‌ கேட்டின் உப‌தேச‌ங்க‌ளை வெளிப்ப‌டுத்துகிற‌வ‌ர்க‌ல், தேவ‌ன் த‌ருகிற‌ வெளிப்பாடு என்று த‌ங்க‌ளின் ம‌ன‌தில் எழும்பும் இச்சைக‌ளை சொல்லுவோர் தான் தேவ‌ வ‌ச‌ன‌ங்க‌ளுக்கு எதிர்பேசுகிற‌வ‌ர்க‌ள், இவ‌ர்க‌ளை க‌ண்ட‌ன‌ம் பண்ண‌ ப‌வுல் தீமோத்தியிட‌ம் சொல்லுகிறார், உண்மையான‌ வ‌ச‌ன‌ங்க‌ளுக்கு சாய‌ம் பூசி இவ‌ர்க‌ள் (எதிர்பேசுகிற‌வ‌ர்க‌ள்) அத‌ற்கு வேறு அர்த்த‌ம் கொடுத்து வ‌ருகிறார்க‌ள். இந்த‌ எதிர் பேசுகிற‌வ‌ர்க‌ளில் அநேக‌ர், வ‌ச‌ன‌த்தின்ப‌டி விருத்த‌சேத‌முள்ள‌வ‌ர்க‌ள் என்று இருக்கிற‌து. ப‌வுல் இதை எழுதும் போது யார் இந்த‌ கூட்ட‌த்தார், வேறு யாரும் இல்லை, ப‌ழைய‌ ஏற்பாட்டை பின்ப‌ற்றிய‌ யூத‌ர்க‌ள் அவ‌ர்க‌ள், இன்று யாரென்றால், ப‌ழைய‌ ஏற்பாட்டை நாம் பின் ப‌ற்ற‌வேண்டும் என்று போதிப்ப‌வ‌ர்க‌ள் தான் அந்த‌ எதிர்பேசுகிற‌வ‌ர்க‌ள். இப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் வாயை அடைக்க‌ இந்த‌ த‌ள‌ம் நிச்ச‌ய‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுகிற‌து, ப‌ய‌ன்ப‌டும். இந்த‌ கூட்ட‌த்தார் த‌ங்க‌ளுக்கு இழிவான‌ ஆதாய‌த்தை உண்டுப்ப‌ன்ன‌ த‌காத‌வைக‌ளை உப‌தேசித்து வ‌ருவ‌தை இன்றும் க‌ண்கூடாக‌ பார்க்க‌ முடிகிற‌து.

1.  த‌ச‌ம‌பாக‌ம் கோட்பாட்டில் ச‌ரித்திர‌ம் ப‌டைத்து வ‌ரும் ஆல‌ன் பால் போன்ற‌வ‌ர்க‌ள்
2.  ப‌ரிசுத்து ஆவியின் விற்ப‌னையில் இற‌ங்கி இருக்கும் எசேக்கிய‌ ஃபரான்ஸிச் போன்ற‌வ‌ர்க‌ள்
3.  க‌ட்டிட‌ம் க‌ட்டியே ஊழிய‌ங்க‌ளை செய்து வ‌ரும் குடும்ப‌ ஊழிய‌ர்க‌ளான‌ பால் தின‌க‌ர‌ன் குடும்ப‌த்தார்
4. அமைதியான‌ முறையில் பிர‌ச‌ங்கித்து கூடார‌ம் க‌ட்டி வ‌ரும் மோஹ‌ன் சி லாச‌ர‌ச் போன்ற‌வ‌ர்க‌ள்
5. நாங்க‌ள் ப‌டுத்தாலும், உட்கார்ந்தாலும் ந‌ட‌ந்தாலும், கூட்ட‌த்தில் பேசினாலும் இயேசு எங்க‌ளுக்கு ப‌க்க‌த்தில் நிற்க்கிறார், ப‌ரிசுத்த‌ ஆவியான‌வ‌ர் அசைவாடிக்கொண்டு இருக்கிறார் என்று பித‌ற்றும் ஏஞ்ச‌ல் டீவி இர‌ட்ட‌ய‌ர்க‌ளான‌ சாது சுந்த‌ர் செல்வ‌ராஜ், வின்சென்ட் செல்வ‌குமார் போன்றோர்.
6.  சுக‌ம் த‌ருகிறோம் (Divine Healing Centre, Coimbatore) என்று சொந்த‌ வைத்திய‌த்திற்காக‌ சிங்க‌ப்பூர் ம‌ற்றும், ஹோமியொப‌தி வைத்திய‌ம் எடுத்துக்கொண்டு இருக்கும் ஜ‌வ‌ஹ‌ர் சாமுவேல் போன்ற‌வ‌ர்க‌ள்
7.  வ‌ருட‌ம் தோறும் வேலூர் அல்ல‌து கோவையில் ந‌ட‌க்கும் கூச்ச‌ல் ஐவ‌ர் கூட்ட‌னி கூட்ட‌ங்க‌ள்

அன்பான‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ளே, மேலே குறிப்பீட்ட‌ இவ‌ர்க‌ளை எல்லாம் ஊழிய‌க்கார‌ர்க‌ள் என்று சொன்னால் ப‌வுல் பேதுருவை என்ன‌வென்று சொல்லுவ‌து, இளிச்ச‌வாய‌ர்க‌ளா!! ஏமாந்த‌வ‌ர்க‌ளா!! பிழைக்க‌தெரியாத‌வ‌ர்க‌ளா!!. மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌ இந்த‌ ஊழிய‌ர்க‌ள்(!!??), இது வெறும் எடுத்துக்காட்டு தான், இவ‌ர்க‌ள் பெரிய‌ அள‌வில் துனிகரமாக யாரும் கேட்கமாட்டார்கள் என்று செய்கிறார்க‌ள், இவ‌ர்க‌ளை உதார‌ன‌மாக‌ அல்ல‌து முன்மாதிரியாக‌ (இயேசு கிறிஸ்துவை அல்ல‌) வைத்துக்கொண்டு சிரிய‌ அள‌வில் வ‌ல‌ர்ந்து வ‌ருகிறார்க‌ள். மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌ இந்த‌ க‌ள்ள‌ தீர்க்க‌ட‌ரிசிக‌ளின் கூட்ட‌ம் ஒரே மேடையில் ஒரே போத‌னையை (வேத‌ம் ஒன்று தானே) த‌ர‌ முடியுமா? முடிய‌வே முடியாது. ஏனென்றால் அவ‌ன் அவ‌ன் வையிற்று பிழைப்பிற்கு அவ‌ன் அவ‌ன் த‌ந்திர‌ங்க‌ளை வைத்து தான் போதிக்கிறான். இது போன்ற‌ க‌ள்ள‌ தீர்க்க‌த‌ரிசிக‌ள், ஏமாற்றுக்கார‌ர்க‌ள், பொய்ய‌ர்க‌ளின் கூட்ட‌த்தை வெளிப்ப‌டுத்த‌ இந்த‌ த‌ள‌ம் நிச்ச‌ய‌ம் ப‌ய‌ன் ப‌டும். இது த‌வ‌று என்று சுட்டி காண்பிப்ப‌வ‌ர்க‌ள் ஒன்று அவ‌ர்க‌ளுகு துனை போவோர், அல்ல‌து அவ‌ர்க‌ளும் கிறிஸ்த‌வ‌ர்க‌ள் (!!) தான் என்கிற‌ ம‌த‌ ஒற்றுமையின் அடிப்ப‌டையில் அவ‌ர்க‌ளுக்கு வ‌க்கால‌த்து வாங்கிற‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள்!, இப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளிட‌மும் எச்ச‌ரிக்கையாக‌ தான் இருக்க‌ வேண்டும்.

மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் போத‌னைக‌ளை பெரும்பாளுமானோர் கேட்டிருப்பீர்க‌ள், சொந்த‌ க‌தைக‌ள், அனுப‌வ‌ங்க‌ள், நான் என‌க்கு, எங்க‌ளுக்கு, எங்க‌ள் ஊழிய‌ம் மூல‌ம் சுக‌மான‌தாக‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ள், என‌க்கு த‌ந்த‌ வெளிப்பாடு என்று த‌ற்பெருமை பாராட்டும் ஈன‌ ஜென்ம‌ங்க‌ள் இந்த‌ கூட்ட‌ம், கேட்டின் உப‌தேச‌த்தின் மூல‌ம் கூட்ட‌ம் சேர்ப்ப‌வ‌ர்க‌ள்.

உண்மையான‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள், இவ‌ர்க‌ளால் "சாதார‌ன‌ விசுவாசிக‌ள்" என்று முத்திரை குத்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ஆவார்க‌ள்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பவுல் தீமோத்தியுவிடம் "திருவசனத்தை" மாத்திரமே பிரசங்கம் பண்ண சொல்லுகிறார், அவனின் சொந்த அனுபவங்களையோ, சொந்த சரக்கையோ சொல்லவில்லை. பவுல் போன்ற அப்போஸ்தலனிடம் பயிற்சி பெற்ற தீமோத்தியுவிற்கு கொடுக்கப்படாத வெளிப்பாடுகள் இன்று பாவத்தில் பெறுகி கிடக்கும் இன்றைய ஊழியர்களுக்கு வருவது ஆச்சரியமான விஷயம் தான். தீமோத்தியுவிற்கு நிச்சயம் கனவுகள் காட்சிகள் வந்திருக்கலாம், ஆனால் அது எல்லாம் சொல்லப்படவில்லை, எழுதப்படவில்லை, ஏனென்றால் அது எல்லாம் தேவை இல்லை. வேதம் முடிந்த பிறகு அநேகர் தங்களின் கணவுகளால் காட்சிகளால் பெரும் திரளான கூட்டத்தை தங்களுக்கு சேர்த்துக்கொண்டு "சபைகள்" உறுவாக்கியிருக்கிறார்கள். ஒரு சபையிலிருந்து இன்னோரு சபைக்கு ஆள் கடத்தல், திருட்டு ஊழியம் தான் செய்திருக்கிறார்கள்!! எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் என்றவுடன் அமைதியாக பேச சொல்லவில்லை மாறாக குணத்தில் சாந்தகுணம் உள்ளவனாக இருக்க சொல்லி, வசனத்தை உபதேசமாக சொல்லும் போது, கண்டனம் பண்ணி, கடிந்துக்கொண்டு புத்தியில் உறைக்கும்படியாக தான் சொல்ல சொல்லியிருக்கிறார். இந்த தளம் அதையே செய்து வருகிறது. இப்பவுல் சொல்லுகிறேன், மனிதர்களை அல்ல, அவர்களின் குருட்டு உபதேசங்களையும், வெறித்தனமான வேதத்திற்கு புறம்பான வெளிப்பாடுகளையும், போதனைகளையும், தான் நாங்கள் கண்டனம் செய்கிறோம். ஊழியம் செய்கிறோம் பேர்வழி என்று ஐசுவரியத்தை நாடுகிறவர்களின் ஊழியத்தை நிச்சயமாக கண்டனம் பண்ணி எழுதுகிறோம்.

ஏனென்றால் இந்த குருட்டாட்ட வெளிப்பாட்டுக்காரர்கள் வேதத்தில் உள்ள உபதேசங்களை பொறுத்துக்கொள்ளமனதில்லாருப்பார்கள், ஏனென்றால் எங்களுக்கு வெளிப்பாடுகள் கிடைக்கும் போது, நான் ஏன் வேதத்தில் இருந்து ஏற்று கொள்வது, வேதத்தில் மாத்திரம் தான் தேவன் பேசியிருக்கிறாரா, என்னிடத்திலும் தான் பேச முடியும், போன்ற விதண்டாவாதங்களினால் வசனங்களை தாங்கிக்கொள்ள மாட்டார்கள், இப்படிப்பட்டவர்கள், தங்கள் வெளிப்பாடுகளை நிறுபிக்க தங்களுக்கு வசதியான "தேவ மனுஷர்களை" (கிறித்துவத்தை கெடுத்த ஓநாய்கள் இவர்கள்) தங்களுக்கு சாதகமாக சேர்த்துக்கொள்வார்கள், "செவித்த்னவுள்ளவர்களாகி" என்ராள், காது குடையும் போது ஏற்படும் ஒரு சுகம் இருக்கிறதே, அப்படி சுகமாக தந்திரமாக இந்த "தேவ மனுஷர்கள்" பேசுவார்களாம், ஏனென்றாள் இவர்கள் சத்தியத்தை பேசாமல், இவர்கள் சேர்க்கும் கூட்டத்தார் என்ன விரும்புகிறார்களோ, அந்த இச்சையையே உபதேசமாக சொல்லுவார்கள். "உன்னை உயர்த்துவதற்காகவே தேவன் உன்னை இந்த கூட்டத்திற்கு கொண்டு வந்திருக்கிறார், உனக்கு பதவி உயர்வு தருவதே தேவனுக்கு சித்தமாக இருக்கிறது" போன்ற இச்சையான வார்த்தைகளால் இவர்கள் கூட்டங்களை கவர்வார்கள், ஏன் இந்த பதவி உயர்வு எல்லாம் அவர்கள் வேலைக்கு போனால் அவர்களுக்கு கிடைக்காதா, சோம்பேறிகள்!! க‌ட்டுக‌தைக‌ளும், பாட்டிக்க‌தைகளும், சொந்த‌ அனுப‌வ‌ங்க‌ளும், ப‌ர‌லோக‌ ந‌ர‌க‌ சென்று பார்த்து வ‌ருத‌ளும், ச‌ர்வ‌ சாதார‌ன‌மாக‌ இத்துனை பேரை ம‌ர‌ண‌த்திலிருந்து எழுப்பினேன் என்று புழுகும் க‌தைக‌ளும், இதையே கேட்டு இன்றைய‌ "சாதார‌ன‌ விசுவாசிக‌ள்" வாய் பிழ‌ந்து போயிருக்கிறார்க‌ள், ச‌த்திய‌த்தை மாத்திர‌ம் இது போன்று செவிகொடுத்து கேட்டார்க‌ள் என்றால், எத்துனை ந‌ல‌மாக‌ இருக்கும்.

எல்லாவ‌ற்ற்குக்கும் மேலாக‌ தீங்க‌னுப‌விப்ப‌து தான் ஒரு சுவிசேஷ‌கனுக்கு  (இன்றைய‌ தேவ‌ ம‌னுஷ‌ர்க‌ள்) அழ‌கு. ஆனால் இன்றைய‌ தேவ‌ ம‌னுஷ‌ர்க‌ளை பார்த்தால் அப்ப‌டி ஒன்றும் தெரிய‌வில்லை. ச‌ரி சொந்த‌மாக‌ உழைத்து, என் உழைப்பின் தானே நான் பென்ஸில் போகிறேன் உண‌க்கு என்ன‌ என்று கேட்க‌ ஒரு ஊழிய‌க்கார‌னுக்கும் திரானி இல்லை, பிற‌கு என்ன‌ இந்த‌ வ‌ச‌திக‌ள் வான‌த்திலிருந்தா வ‌ந்த‌து. இல்லை, த‌ச‌ம‌பாக‌ம் வேட்டை, குறி சொல்லுத‌ல் (அதை தான் தீர்க்க‌த‌ரிச‌ன‌ம் என்று ஏமாற்றி வ‌ருகிறார்க‌ளே) பொன்ற‌ வேத‌த்துக்கு புற‌ம‌பான‌ ச‌ம்பாரிப்பால் வ‌ந்த‌து, ஆக‌வே கேள்வியும் கேட்க‌ முடியாது. வெக்க‌ங்கெட்ட‌ த‌ன‌மாக‌ இவ‌ர்க‌ளும், இவ‌ர்க‌ளின் வாரிசுக‌ளும் ஊரார் ப‌ன‌த்தில் வ‌ள‌ர்வ‌தில் ச‌ற்றும் வெட்க்க‌ ப‌டுவ‌தில்லையே!! சுவிசேஷ‌த்தின் நிமித்த‌ம், தீங்க‌னுப‌விப்ப‌து என்றால் இந்த‌ ஓநாய்க‌ளுக்கு தேரியாது!!




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தேவனுக்கே உதவி...

சாத்தானுக்கும் தேவனுக்கும் நடக்கும் ஒரு மாபெரும் யுத்தத்தில் தேவன் தன்னால் படைக்கப்பட்ட ஜனங்கள் அழிவை(?) நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து இவர்களைக் "காப்பாற்ற" என்னசெய்வதென்றறியாமல் ஊழியர்களைத் "தெரிந்து கொண்டு" அந்த ஊழியர்கள் உதவியால் ஏதோ ஒன்றிரண்டு ஆத்துமாக்களை நரகத்துக்குத் தப்பவைத்துக்கொண்டிருக்கிறார். 

இதில் ஊழியர்கள் பங்கு தேவனுடைய செயல்பாடுகளைவிட அதிகம். ஏனென்றால்இவர்கள் ஜெபிக்காவிட்டால் தேவனால் செயல்பட முடியாது. இவர்கள் பிரசங்கிக்காவிட்டால் 'தேவ செய்தி' ஜனங்களுக்குப் போய்ச் சேராது.அதனால்தான் முழங்கால் யுத்தம்; இந்தியா இயேசுவுக்கே என்றெல்லாம் ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் ஒரு மாவட்ட வரைபடத்தை எடுத்து வைத்துக்கொண்டு அதில் 
இந்துக்கள் இத்தனைபேர்; 
முஸ்லீம்கள் இத்தனைபேர்; 
ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள், 
ஆவியில்லாத கிறிஸ்தவர்கள் இத்தனை பேர், மாவட்ட பரப்பளவு இத்தனை 
சாராயக்கடைகள், 
இத்தனை சினிமா வளாகங்கள்... இத்யாதி என்று புள்ளிவிவரங்களோடு அந்த "மேப்" மீது கை வைத்து ஜெபிக்கிறார்கள். 

தேவனுக்கு இதெல்லாம் தெரியாதல்லவா?  இந்தியா 2007ல் "கிறிஸ்தியா" என்று அழைக்கப்படும் என்று 2004ல் கோவையில் போலித்தீர்க்கதரிசனம் சொன்னவன் இந்த எசேக்கியா பிரான்ஸிஸ்.

ஆக, இந்த ஊழியக்கார (ஓ)நாய்கள் இல்லாமல் தேவன் ஒரு கையாலாகாதவராக இருக்கிறார் என்று ஒரு மாயையை உண்டுபண்ணி கேடுகெட்ட பிழைப்பு நடத்துகிறார்கள். இதைவிட ஒரு மாபெரும் தேவதூஷணம் இருக்க முடியாது. 

கர்த்தரது வருகையின் வெளிச்சம் வர வர இந்த வேசிமார்க்க பாபிலோனியர்கள் லைட் போட்டால் ஓடி ஒளியும் கரப்பான் பூச்சிகள் போல ஓடி ஒளிவார்கள் என்பதில் ஐயமில்லை. அந்த வெளிச்சத்தின் ஒரு சிறு கீற்றுதான் இத்தளம். வெகு சீக்கிரம் இந்த ஓநாய்களின் தந்திரங்கள் வெட்ட வெளிச்சமாகும். குழப்ப பாபிலோனிலிருந்து ஏற்கனவே மக்கள் வெளியேற ஆரம்பித்துவிட்டனர்...

இன்னும் வரும்....




__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard