New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: NEWS FOR READING


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: NEWS FOR READING
Permalink  
 


முதல்வர் ஸ்விட்ச் போர்டு மாற்றினால் இரண்டு ஆண்டு சிறை!

1.jpg

""என்னோட நண்பன் ரொம்ப சாதுவான டைப் சார். அவன் வீடு மகாபலிபுரம் ஐந்து ரதம் கோயிலுக்குப் பக்கத்துல இருக்கிற பழைய வீடு. கூட்டுக் குடும்பம். ஜனநடமாட்டம் வீட்டுக்குள்ள அதிகம். மழை பெஞ்சா ஒருபக்கம் சோவென தண்ணி ஒழுகும். அவனுக்குக் கல்யாணம் ஆச்சு. புதுசா வந்த பொண்டாட்டி, நமக்குன்னு தனியா ஒரு பாத்ரூம் கட்டுங்கன்னு சொன்னா. பொண்டாட்டிக்காக ஒத்தக்கல் சுவரு போட்டு ஆஸ்பெஸ்டாஸ் கூரையைப் போட்டு ஒரு பாத்ரூம் கட்டினான் பாருங்க... அடுத்தநாளே கவர்மெண்டு அதிகாரிங்க வந்து பாத்ரூமை இடிச்சுட்டாங்க. ஈ.பி.க்காரன் வந்து கரண்டை கட் பண்ணிட்டான். உங்க வீட்டை ஏன் நாங்க இடிக்கக்கூடாதுன்னு இரண்டு பக்கத்துக்கு பெரிய நோட்டீஸை இங்கிலீஷ்ல கொடுத்துட்டாங்க. எல்லாம் மருமவளாலதான் வந்துச்சுன்னு குடும்பமே சொல்ல... அந்தப் பொண்ணு கிருஷ்ணாயில தலையில ஊத்தி தற்கொலை பண்ணப் போயிட்டா'' -என ஒரு சோகக் கதையை விளக்குகிறார் செங்கல்பட்டு வழக்கறிஞர் லோகு.

லோகுவின் நண்பர் குடும்பத்திற்கு மட்டுமல்ல... தமிழகத்தின் 4 லட்சம் கிலோமீட்டர் பரப்பளவில் தலைநகர் சென்னை தொடங்கி மகாபலிபுரம், திருப்போரூர், மதுரை, திருநெல்வேலி என தமிழகத் தின் கால் பாதம் அமைந்துள்ள கன்னியாகுமரி வரை வசிக்கும் அனைவருக்கும் இதுதான் கதி.

தமிழகத்தின் ஒட்டுமொத்த பரப்பளவில் இரண்டு சதவிகிதம் நிலத்தை மத்திய அரசு தனது ஆளுமைக்கு கொண்டுவந் துள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் பாத்ரூம் கட்டுவதில் தொடங்கி உடைந்து கிடக்கும் கால்வாயை சுத்தம் செய்வது வரை அனைத்து வேலை களுக்கும் டெல்லியில் உள்ள மத்திய அரசின் தொல்பொருள் துறையிடம் தான் அனுமதி வாங்க வேண்டும் என எப்பொழுதும் சத்தத்துடனும் உறுப் பினர்களின் எதிர்ப்பு கோஷங்களுக் கிடையேயும் நடைபெறும் இந்திய பாராளுமன்றத்தில் சத்தமில்லாமல் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி ஒரு சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்றியது.

அதன்படி புராதன நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள இடத்தில் 100 மீட்டர் தொலைவு தடை செய்யப்பட்ட பகுதி. அதற்குப் பக்கத்தில் உள்ள 200 மீட்டர் பகுதி வரையறுக்கப்பட்ட பகுதி என மொத்தம் தமிழகத்தில் 350 இடங் களை தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது.

இந்தப் பகுதிகளில் மத்திய தொல்பொருள் துறையின் அனுமதியின்றி எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறக்கூடாது. தொல்பொருள் துறையின் ஆளுமைக்குட்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் அலுவலகத்தில் புதிதாக ஒரு ஸ்விட்ச் போர்டு மாற்றினால் கூட இந்த சட்டத்தின்படி தவறு.

அதையும் மீறி தொல்பொருள் துறையின் அனுமதியின்றி முதல்வர் செய்வாரேயானால் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை, ஒருலட்ச ரூபாய் அபராதம். இந்தத் தண்டனையை எதிர்த்து சாதாரண கோர்ட்டில் மட்டு மல்ல சுப்ரீம் கோர்ட்டில் கூட வழக்குத் தொடர முடியாது.

""இலங்கை போன்ற சர்வாதிகார நாடுகளில் கூட அமல்படுத்த அஞ்சும் இந்த சட்டத்தை உடனடியாக அமல் படுத்துங்கள்'' என்கிறார் சத்யபாமா பத்ரிநாத் என்கிற வெறும் கண்காணிப்பாளர் அந்தஸ்து பெற்ற ஒரு அதிகாரி. 

"ஊரான் ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய். காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்' என்பது மாதிரி தமிழக அரசின் அனைத்துத் துறைக்கும் 350 இடங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். தொல்பொருள் துறையின் உத்தரவை மீறினால் அதிகாரிகளுக்கும் கடும் தண்டனை என வரும் கடிதத்தில் உரிய கட்டளைகளை வெள்ளைக்காரன் உத்தரவை அப்படியே அமல்படுத்திய ஜமீன்தாரர்கள் போல் மாநில அதிகாரிகளும் படிப்படியாக அமல்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

அது எப்படி நடக்கிறது என்பதை சிறுதாவூர் கிராமத்தைச் சேர்ந்த முரளி சொல்கிறார். ""சிறுதாவூர் கிராமத்துல ஒரு மலையில் பழங்காலத்துல இறந்தவர்களை புதைச்ச முதுமக்கள் தாழி இருக்கு. அதுக்குப் பக்கத்துல அம்பேத்கர் நகர்னு குடிசைப் பகுதியில் மக்கள் ரொம்ப காலமா வசித்து வந்தாங்க. அந்தப் பகுதிக்கு பட்டா கொடுங்கன்னு போனமாசம் திருப்போரூருக்கு எம்.எல்.ஏ. மூர்த்தி தலைமையில் போய் ஆர்ப்பாட்டம் செஞ்சாங்க. அடுத்தநாளே மத்திய அரசு அதிகாரிங்க புல்டோசர் வச்சு குடிசைகளையெல்லாம் இடிச்சுத் தரைமட்டமாக்கிட்டாங்க'' என்கிறார். 

திருப்போரூர் நகராட்சிக் கவுன்சிலர் சசிகலா, ""திருப்போரூர் முருகன் கோயில் சன்னிதானத்துல முருகனை கழுவுற தண்ணி போகிறதுக்கு ஒரு குழாய் போட நகராட்சி முடிவு செஞ்சு வேலையை ஆரம்பிச்சது. அதற்கு தொல்பொருள்துறை தடை விதித்துவிட்டது. கடந்த ஒரு மாசமா முருகனுக்கு அபிஷேகம் ஒழுங்கா நடக்கலை'' என்கிறார்.

மகாபலிபுரம் சிற்பிகள் பாஸ்கரன், ஆனந்தன்... ""நாங்கள் ஐந்து ரதத்திற்கு எதிரே சிற்பக்கூடம் அமைத்து வருகிறோம். ஏற்கனவே அரசு எங்களுக்கு பூஞ்சேரி கிராமத்தில ஒரு சிற்பக் கலைக்கூடம் அமைக்க ஏற்பாடு செய்தது. அது நிறைவேறவில்லை. இப்பொழுது தொல்பொருள் துறை எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி எங்களது கட்டட வேலைகளை நிறுத்திவிட்டது'' என்கிறார்கள்.

இதுபோன்ற குரல்கள் தமிழ்நாடு முழுவதும் கேட்க ஆரம்பித்துள்ளது. ""இந்தியா முழுவதும் தொல்பொருள் சின்னங் களை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், தமிழ்நாட் டுக்கு பொருந்தாது. வடநாட்டில் பல இடங்களில் கல்லறைகள்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் கோயில்கள்தான் உள்ளது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற கொள்கை யோடு வாழ்ந்த குடிகளை, கோயி லின் பழைமையைக் காட்டி கொடுமைப் படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்'' என்கிறார் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளரான மல்லை சத்யா.1.jpg

மாவட்ட அமைச்சரான தா.மோ.அன்பரசன், ""காஞ்சி மாவட்டத்தில பல்வேறு இடங் களில் இந்த பிரச்சினை என் கவனத்திற்கு வந்தது. இதையெல் லாம் மத்திய தொல்பொருள் துறையிடம் பேசி மக்களுக்கு மின்சாரம், குடிநீர் போன்றவற்றை ஏற்பாடு செய்து தர கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என்கிறார்.

ஏற்கனவே மத்திய அரசு கொண்டுவந்த மீன்பிடி சட்டம் போன்ற மக்கள் விரோத சட்டத்தை எதிர்ப்பின் காரணமாக மத்திய அரசு அமல்படுத்துவதை நிறுத்தி வைத்தது. அதேபோல் தமிழக முதல்வர் இதில் தலையிட்டு இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

டைனோசருக்கு பலம் அதிகமா அல்லது ஆப்பிளுக்கு பலம் அதிகமா?

1.jpg
டைனோசருக்கு பலம் அதிகமா அல்லது ஆப்பிளுக்கு பலம் அதிகமா என்று யாராவது கேட்டால், நாம் நிச்சயம் அவரைப் பார்த்து சிரித்திருப்போம்.

என்ன, சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்றிருப்பார் நம் வடிவேலு.

ஆனால், 60 மி்ல்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியை தாக்கிய மாபெரும் எரிகல்லால் ஏற்பட்ட பயங்கரமான சுற்றுச்சூழல் மாற்றங்கள் தான் (பல லட்சம் அணு குண்டுகள் வெடித்தால் ஏற்படும் அளவுக்கு சேதம் பூமியில் உண்டானது. அப்போது எழும்பிய தூசு மண்டலம், சூரிய ஒளியை பல்லாண்டுகள் மறைத்ததால் உலகின் பெரும்பாலான தாவரங்கள் அழிந்து, அதை நம்பி வாழ்ந்த மிருகங்களையும் அழித்தது, குறிப்பாக டைனோசர்களை கூண்டோடு ஒழித்துக் கட்டியது என்பது தியரி) டைனோசர்களை அழிந்தன.

ஆனால், அதில் தப்பிப் பிழைத்த ஒரு சில தாவர வகைகளில் ஒன்று ஆப்பிள் என்பது சமீபத்திய 'ஜீனோம்' ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ஆப்பிளின் சுமார் 600 மில்லியன் அடிப்படை டிஎன்ஏக்களை சமீபத்தில் அக்குவேறு ஆணிவேறாக வகைப்படுத்தி (genome profiling) முடித்துள்ளனர் நியூசிலாந்து விஞ்ஞானிகள்.

ஆப்பிளின் நிறம், சுவை, அதன் ஜூஸ் தரும் தன்மைக்கான காரணங்களை ஆராய்வதற்காகவும், இந்த குணங்களை அதிகரித்து மிகச் சுவையான ஆப்பிள்களை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சி தான் இது. ஆனால், இந்த ஆராய்ச்சி நம்மை டைனோசர்களின் கதையை நோக்கி கொண்டு போயுள்ளது.

ஆப்பிள்களுக்கு மிக நெருக்கமான இனத்தைச் சேர்ந்த ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட தாவர வகைகளில் 7 அல்லது 8 குரோமோசோம்கள் தான் உள்ளன. (நமது ஜீன்களை ஏந்திய டிஎன்ஏக்களைக் கொண்ட செல் உறுப்பு தான் குரோமோசோம்). ஆனால், ஆப்பிள்களில் 17 குரோமோசோம்கள் உள்ளது சமீபத்திய 'ஜீனோம்' ஆராய்ச்சியில் (டிஎன்ஏக்களை வரிசைப்படுத்தல்) தெரியவந்துள்ளது.

ஆப்பிளின் தற்காப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்ட இந்த குரோமோசோம்கள் இரண்டு முறை உருவாகியுள்ளன. அதாவது 'டூப்ளிகேட்' ஆகியுள்ளன. இதனால் தான் ஆப்பிள் குடும்பத்தைச் சேர்ந்த பிற தாவரங்களில் 8 குரோமோசாம்கள் இருக்க, ஆப்பிளில் மட்டும் 17 குரோமோசாம்கள் உள்ளன.

இந்த டூப்ளிகேசன் நடந்தது 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அந்த சமயததில் தான் பூமியில் இன்னொரு முக்கிய நிகழ்வும் நடந்தது. அந்த காலகட்டத்தில் தான் டைனோசர்கள் கூண்டோடு காலியாயின.

இந்த இரு தனித்தனி சம்பவங்களுக்கும் ஒரே காரணம் இருந்திருக்கலாம் என்பது தான் விஞ்ஞானிகள் சொல்லும் சுவாரஸ்யமான தகவல்.

எரிகல் தாக்கி தாவர இனங்கள் அழிந்தபோது, தாக்குப் பிடித்த ஓரிரு இனங்களில் ஆப்பிளும் ஒன்று என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள். அந்த காலகட்டத்தில் தப்பிப் பிழைக்க, ஆப்பிள் இனத்தில் நடந்த 'சம்பவம்' தான் குரோமோசாம் டூப்ளிகேஷன் என்கிறார்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

05_09_2010_003_046baby.jpg?w=300&h=181
05_09_2010_013_025-kuzanthai.jpg?w=300&h=183


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்!



p3a.JPG
விகடனில் ரஜினிக்கு கடிதம். ( இதுவும் வாசகர் விருப்பம் )


அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்!

உங்களிடம் நேரில்தான் பேசவே முடியாதே... சில விஷயங்களை மனசைவிட்டு தங்களின் காலடியில் இறக்கிவைக்கவே இந்தக் கடிதம்! தமிழகத்தில் நிறைய அரசியல்வாதிகள் தலைவராக தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டாலும், எல்லோரையும் யாரும் இப்படி அன்பொழுக அழைப்பது இல்லை. எந்தக் கட்சியையும் தொடங்காதபோதே, 'தலைவா' என்று உயிர் உருக உங்களை அழைத்த லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒரு துளி நான்.

நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா தலைவரே? நாங்கள் சந்தோஷமாக இல்லை! 'போக்குவரத்து நெரிசல், கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் மகள் திருமணத்துக்கு வரவேண்டாம்' என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இதே அறிக்கையை உங்கள் படம் ரிலீஸ் ஆகும்போது விடுவீர்களா? அப்போதும் தியேட்டரைச் சுற்றிலும் கூட்டம், போக்குவரத்து நெரிசல், பிதுங்கும் ஜனத்திரள் எல்லாமே இருக்குமே!

இந்த நேரத்தில், மூத்த மகள் மணவிழா சென்னை பட்டினப்பாக்கம் மேயர் ராமநாதன் ஹாலில் நடந்ததும் ஞாபகம் வருகிறது. கோட்டு சூட்டு போட்டவர்களையும், கார்களில் வந்தவர்களையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றீர்கள். ஆனால், நாங்களோ மண்டப வாசலிலேயே சத்யநாராயணா மூலம் கெடுபிடியாக வெளியே தள்ளப்பட்டோம். வெள்ளித் திரையில் உங்களுக்கு கற்பூர

ஆரத்தி எடுத்த எங்களின் கண்களில், கண்ணீர்த் திரை அப்போது வழிந்தது நிஜம். உங்களின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஊருக்கே சோறு போட்டவர்கள், 'உள்ளே வராதே' என்று விரட்டி அடிக்கப்பட்டோம்.

அதே மண்டபத்தில் நடிகர் பிரபுவின் மகன் கல்யாணம். திருமணத்துக்கு முதல் நாள் ரசிகர்களை மண்டபத்துக்கு அழைத்து, மணமக்களை அறிமுகப்படுத்தி விருந்து கொடுத்தார். அந்த பாசத்தை உங்களிடம் நாங்கள் எதிர்பார்த்தது தவறா? ரசிகன் கட்டும் தோரணம் வேண்டும்... கட்-அவுட் வேண்டும்... டிக்கெட் காசு வேண்டும்... நாங்கள் மட்டும் வேண்டாமா? பெரிய பெரிய வி.ஐ.பி-க்களோடு எங்களைச் சேர்த்து வைத்து வரவேற்க வேண்டாம்... உங்கள் குடும்பத்தின் இந்த சந்தோஷ நிகழ்ச்சியை முன்னிட்டு எங்களுக்கென்று தனியாக ஓரிரு மணி நேரம் நீங்கள் ஒதுக்கக் கூடாதா? மேடைகளிலும், அறிக்கைகளிலும் உங்களைத் தூற்றி நகையாடியவர்களுக்குக்கூட நேரில் போய் பத்திரிகை வைத்தீர்களே... தூஷித்தவர்களுக்கு விருந்து வைத்து போஷிக்கிறீர்கள்...... உங்களை வாரி அணைத்தவர்களை வாசலுக்கு வெளியே நிறுத்தலாமா?

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும். நீங்கள் திடீரென்று விமான நிலையத்தில் ஸ்டைலாக நின்றுகொண்டு, 'இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு' என்று போஸ் கொடுத்துவிட்டுப் பறந்துவிடுவீர்கள். உங்கள் வார்த்தையை உயிராய் சுமந்து ஓடியாடி உழைப்போம். அரசியல்வாதிகள் எங்களைத் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு, கறிவேப்பிலையாகத் தூக்கி வீசிவிடுவார்கள். ஒரு தடவை தி.மு.க-வை ஆதரிக்கச் சொல்வீர்கள். அடுத்த தரம், ஜெயலலிதா வீட்டில் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கும் போட்டோ ரிலீஸ் ஆகும். எது சொன்னால் என்ன... மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாக ஆடி, கடைசியில் சொந்தக் காசில் சூடு வைத்துக்கொள்வோம்!

நிதானமாக யோசித்தால், ஒன்று புரிகிறது... நீங்கள் தெளிவினும் தெளிவு. உங்கள் ஒவ்வொரு படம் வரும்போதும், ரசிகர்களின் மனசைக் கரைத்துவிடுவீர்கள். கடந்த முறை 'குசேலன்' படம் ஓடத் திட்டமிட்டு, கரிசனம் காட்டித் திடீரென ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து, 'என்னையும் ரசிகர்களையும் பிரிக்க முடியாது.' என்று சொல்லி, கோடம் பாக்கத்தையே கொடைக்கானல் ஆக்கினீர்கள்! ஆனால், ஒரு படம் ஓகோவென ஓடினால் நன்றி சொல்ல அழைத்தது உண்டா? வெற்றிச் செய்தி காதில் விழுந்ததுமே இமயமலையில் கால்வைத்து விடுவீர்கள்!

உங்களை கேவலமாகத் திருமாவளவன் வசை பாடியபோது, கோபமாகி எதிர்த்தோம். விளைவாக, கட்சியினரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்தோம். நீங்கள் ஒரு வார்த்தையாவது 'என்னாச்சு?' என்று கேட்டதில்லை. இன்று வரை பகை நெருப்புபற்றி எரிகிறது எங்களுக்குள். ஆனால், பெரியவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டீர்கள். திருமாவின் வீடு தேடி, திருமண அழைப்பு தருகிறீர்கள். ஆனால், அன்று எங்களை அடித்தவர்கள், இன்று மறுபடியும் எங்களைப் பார்த்து மிகக் கேவலமாகச் சிரித்தபடி 'எங்க பவர் புரியுதா?' என்று வாய் கூசாமல் கமென்ட் அடிக்கும் போது உயிரோடு போட்டுச் சிதைப்பது போல் இருக்கிறதே தலைவா!

'பாபா' படம் வந்தபோது, வட மாவட்டங்களில் கலவரம் தலைவிரிக்க... பா.ம.க-வினர் அரங்குகளில் படப் பெட்டிகளையே தூக்கினர். தடுத்த எங்களுக்கு அடி, உதை... ரத்தக் கசிவு நின்றாலும், வடுக்கள் இன்னும் உடலில்! இப்போது நீங்களோ அன்புமணி இல்லம் தேடிப் போய் அழைப்புவைத்து அளவளாவுகிறீர்கள்! 'பகையைப் பாராட்டாத பரந்த உள்ளம்' என்றும் 'நாகரிகம் அறிந்த நல்ல மனிதர்' என்ற பெயர்கள் உங்களுக்குக் கிடைக்கலாம்... ஆனால், காயம்பட்ட எங்களை மட்டும் சுத்தமாகப் புறக்கணிக்கும்போது நெஞ்சில் ரத்தக் கண்ணீர் வடிகிறதே!

எங்களைப் பார்த்து வளர்ந்த விஜய காந்த் ரசிகர்கள்கூட கரை வேட்டி கட்டிக்கொண்டு, எங்களை ஏதோ காயலான் கடை பொருள்போல ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக்கொள்ள?

எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக் கொண்டு திரும்பத் திரும்ப உங்கள் பின்னால் இன்னும் எத்தனை நாளைக்கு நாங்கள் ஓடி வர முடியும்? காலம் எல்லாம் தாங்கிக்கொண்டு சும்மா இருக்க எங்களுக்கு 'எந்திர' இதயம் இல்லையே! அது ரத்தமும் சதையினாலும் அல்லவா ஆனது?

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் தலைவா!

இப்படிக்கு
ஈர விழிகளுடன்,
உங்களின் ரசிகன்

( நன்றி: விகடன் )



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

திறந்தவெளி பல்கலை பட்டங்கள்:
-குழப்பத்தின் உச்சியில் அரசு ஊழியர்கள்!

University.jpg



பலருடைய எதிர்கால வாழ்க்கையை கேள்விக் குறியாக்கி இருக்கிறது. தலைமைச் செயலகத்தில் ஆரம்பித்து, தமிழகத்தின் கடைக்கோடியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர் வரையில் தூக்கமிழந்து தவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 

எல்லாவற்றுக்கும் காரணம் தமிழக அரசின் ஒரே ஒரு அரசாணை. குழப்பங்களை மட்டுமே கொட்டிவைத்திருக்கும் அந்த அரசாணையின் பின்னணி?

2008-ம் ஆண்டில் சென்னை பிலிம் இன்ஸ்டி-டியூட்டின் முதல்வர் பதவி காலியானது. அந்த பதவிக்கு சீனியாரிட்டி அடிப்படையில் ரமேஷ் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் திறந்தவெளி பல்கலைக் கழகம் மூலமாக நேரடியாக எம்.ஏ. படிப்பு படித்தவர்.

ஆனால், இவருக்கு அடுத்த நிலையில் இருந்த மதன் கேப்ரியேல் என்பவர் முறையாக பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு அதன்பிறகு முதுநிலைப் படிப்பு படித்தவர். ‘எனக்குத்தான் முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும். திறந்தவெளிப் பல்கலைக் கழகம் மூலமாக எம்.ஏ., படிப்பு முடித்த ரமேஷுக்கு முதல்வர் பதவியை வழங்கியது தவறு...’ என்று சொல்லி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார் கேப்ரியேல். 

இதனை விசாரித்த நீதிமன்றம், ‘பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்படாத முதுநிலை படிப்பு முடித்த ஒருவருக்கு முதல்வர் பதவி வழங்கியது தவறு...’ என்று உத்தரவிட்டது. தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ரமேஷ் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.

இதனைத் தொடர்ந்து திறந்தவெளிப் பல்கலைக் கழகம் மூலம் படித்து முதல்வர் பதவி பெற்ற ரமேஷ் நீக்கப்பட்டு, பிலிம் இன்ஸ்டிடியூட்டின் முதல்வராக கேப்ரியேல் பொறுப்பேற்றுக் கொண்டார். 

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஆகஸ்ட் 18 அன்று தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ஓர் உத்தரவை வெளியிட்டிருக்கிறது. அதுதான், அரசு ஊழியர்கள் பலருடைய எதிர்கால வாழ்க்கையிலும் இருட்டைப் பாய்ச்சியிருக்கிறது

University%201.jpg. ‘திறந்தவெளி பல்கலைக் கழகம் மூலமாக முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இனிமேல் அரசு வேலைவாய்ப்புத் தரமுடியாது. பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு, பட்டப்-படிப்பு, அதன்பிறகு முதுநிலை பட்டப்படிப்பு முடித்ததையே முறையான தகுதியாக எடுத்துக் கொள்ளப்பட்டு, பதவி உயர்வும் வழங்கப்படும்...’ என்பதுதான் அந்த அரசாணை! 

இதனால், ஏற்கனவே திறந்தவெளிப் பல்கலைக் கழகம் மூலமாக நேரடியாக முதுநிலைப் பட்டப்-படிப்பு முடித்து வேலைக்கு சேர்ந்து, பதவி உயர்வும் பெற்றவர்களின் நிலை என்ன? என்ற மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்திருக்கிறது.

இதுபற்றி அரசு ஊழியர் சங்க வட்டாரங்களில் பேசினோம். ‘‘முதலில் அரசின் இந்த உத்தரவு எந்த காலத்திலிருந்து நடைமுறைக்கு வருகிறது என்கிற தகவல் எதுவும் இல்லை. ஏற்கனவே திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் படித்து அரசுப் பணிக்கு வந்து பதவி உயர்வு பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகளா? மற்றவர்கள் ஏமாளிகளா?

பத்தாம் வகுப்பு முடித்த கையோடு ஆசிரியர் பயிற்சி முடித்து பட்டயம் பெற்று பணியில் சேர்ந்த பலரும் பிறகு நேரடியாக எம்.ஏ., முடித்து அதற்கான பதவி உயர்வு பெற்று பணியில் இருக்கிறார்கள். பிறகு பி.எட்., என்கிற படிப்பையும் முடித்து மொத்தம் நான்கு ஊதிய உயர்வோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், நேரடியான எம்.ஏ., படிப்பு செல்லாது என்றால், அவர்களின் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் ரத்து செய்யப்படுமா? 

பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட தமிழக அரசின் 32 துறைகளிலும் இந்த முறையை பின்பற்றத்தான் அரசு உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அரசு பணியாளர்களை அரசுக்கு பணியமர்த்தும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இதற்கு நேர்மாறான நிலை நிலவுகிறது. 

‘திறந்தவெளி பாடத்திட்ட முதுநிலைப் பட்ட-தாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கலாம். ஆனால், இனிமேல் பணிக்கு அமர்த்தப்படுகிறவர்கள், திறந்தவெளி அமைப்புப் பாடத்திட்டம் மூலமாக நேரடியாக முதுநிலை பட்டப்படிப்பு படித்திருந்தால், அதனை தகுதியாக எடுத்துக் கொள்ள முடியாது...’ என்கிறார்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில். 

கடந்த மார்ச் மாதம் குரூப்-2 தேர்வு எழுதி, இரண்டு லட்சம் பேர் வரையில் முடிவுக்காக காத்திருக்கிறார்கள். தேர்வு எழுதியவர்களில் எண்பது சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் திறந்தவெளி பாடத்திட்ட முறையில் நேரடியாக முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள்தான். அவர்கள் தேர்வில் தேர்ச்சி அடைந்தால், பணிவாய்ப்பு பெற முடியாதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. 2009-லேயே உச்ச நீதிமன்ற உத்தரவு தெளிவாக வெளியிடப்பட்ட பிறகும், அதனை கண்டுகொள்ளாமல் பணியாளர் தேர்வாணையம் இருந்தது ஏன்? தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த விவரங்களை கோரினால், ‘உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து அப்போதைக்கு எங்களுக்கு எந்தத் தகவலும் கிடையாது...’ என்கிறார்கள். 

இதற்கிடையில், அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரின் படிப்பு குறித்த விவரங்களும் அவர்களுடைய சர்வீஸ் ரெக்கார்டு புத்தகத்தில் பதியப்பட்டிருக்கும். ஆனால், எந்த வகையில் அவர்கள் படித்து வந்தார்கள் என்பது அதில் தெளிவாக இருக்காது. லட்சக்-கணக்-கான அரசு ஊழியர்--களையும் அழைத்து, இனிமேல் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என்றால், அது நடைமுறையில் சாத்திய-மில்லாதது. எனவே, இந்தக் குழப்பத்தை எப்படி அரசு தீர்க்கப் போகிறது என தெரியவில்லை’’ என்று விளக்கமாக கூறினார்கள்.

இது தொடர்பாக பணியாளர் நலத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நீதிமன்ற அவ-மதிப்புக்கும் தமிழக அரசு ஆளாகிவிடக் கூடாது என்பதையும் மனதில் வைத்து, நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அரசு ஊழியர்கள் ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார்கள்.

ஒருபக்கம் வருமானத்துக்காக திறந்தவெளி அமைப்புப் பட்டப்படிப்பை அனுமதிப்பதும், இன்னொருபக்கம் நீதிமன்ற உத்தரவைக் காட்டி, ‘திறந்த வெளி’ பட்டப்படிப்பு படித்தவர்களை நசுக்குவதுமாக அரசுத் தரப்பு இரட்டை முகம் காட்டி வருகிறது. ஆக, இந்த விஷயத்தில் அரசு ஊழியர்களைக் காட்டிலும் குற்றவாளி என்றால் அது அரசுதான்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தொழிலாளர்கள் பெயரில் அவர்களுக்குத் தெரியாமலேயே கடன்: 
மோசடி பணத்தில் சினிமா எடுத்த பாதகர்கள்!

Trichy%203.jpg



குடும்பத்துக்கு இருக்கும் 50 ஆயிரம் கடனை அடைப்பதற்காக வேலை தேடி துபாய் போனவருக்கு இப்போது 70 லட்சம் ரூபாய் கடன்! என்னது..? 

ஆமாம்... ஒருவர் இருவர் அல்ல, சம்பாதிப்பதற்காக துபாய் போன சுமார் 150 தமிழர்களின் நிலைமை இதுதான். 

Trichy%202.jpg‘துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள எங்களது அல் தவா கான்கிரீட் கம்பெனி, அல் லிஜிமா பிளாஸ்டர்- டைல்ஸ் கான்ட்ராக்ட், ஆசியா- கல்ப் டெக் கான்ட்ராக்ட் உள்ளிட்ட 16 நிறுவனங்களில் பணியாற்ற கொத்தனார், பிளம்பர், எலக்ட்ரீசியன் தேவை’ 

-இப்படியொரு விளம்பரத்தைப் பார்த்து இந்தியா முழு-வதி-லுமிருந்தும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வளைகுடா நாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களில் திருச்சி மாவட்டம் நெற்குப்பையைச் சேர்ந்த தினேஷும் ஒருவர். நடந்ததை அவரே விளக்கினார்.

‘‘2005-ம் வருடம் தூத்துக்குடியைச் சேர்ந்த முத்தரசு என்பவரின் கான்ட்ராக்ட் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணிக்கு சேர்ந்தேன். என்னுடன் பணிபுரிந்த பலரிடமும், ‘உங்களுக்கு இனிமேல் சம்பளம் வங்கிக் கணக்கில் போடச் சொல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, வங்கியில் அக்கவுன்ட் ஆரம்பிக்கவேண்டும் என்று கையெழுத்து வாங்கினார்கள். ஆனால், சம்பளத்தை வழக்கம்போல் கையிலேயே கொடுத்தார்கள். 

இந்த நிலையில்தான் சிட்டி பேங்க் அதிகாரிகள் சிலர் எனது வீட்டுக்கு வந்து, ‘உங்கள் மகன் 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். எப்போது கட்டுவீர்கள்?’ என கேட்டிருக்கிறார். இதை குடும்பத்தினர் எனக்கு போன் பண்ணிச் சொல்ல, அதிர்ச்சியாகிவிட்டேன். உடனே, எனது உரிமையாளர் முத்தரசிடம் கேட்டபோது, ‘எனது அண்ணன் செண்பககுமார் நிறுவன வளர்ச்சிக்காக கடன் வாங்கி இருக்கிறார்’ என்றார். மேலும் அதிர்ச்சியாகி செண்பககுமாரிடமே கேட்டேன். 

‘சில தேவைகளுக்காக நானே உங்கள் பெயரில் கடன் வாங்கி இருக்கிறேன். விரைவில் கடனை தீர்த்து உங்களை இந்தியா அனுப்பிவிடுவேன்’ எனக் கூறினார். ஆனால், அதற்கான அறிகுறியே இல்லாததால் நான் தொடர்ந்து பிரச்னை செய்தேன். அதனால், கடந்த டிசம்பர் மாதம் எனது சிட்டி பேங்க் கடனை முடித்து என்னை அனுப்பிவிட்டனர்’’ என கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்த தினேஷ்... 

‘‘நான் இங்கு வந்தபிறகுதான் என் பெயரில் மேலும் 2 வங்கிகளில் இன்னும் 70 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றிருப்பது எனக்குத் தெரிந்தது. இப்போது செண்பககுமாரும் வங்கி மோசடிக்காக சிறையில் இருக்கிறார். என்னை தேடி மீண்டும் வங்கிக்காரர்கள் வந்தால் என்ன செய்வது?” என்று தேம்பித்தேம்பி அழுகிறார் தினேஷ். 

Trichy%201.jpgஇவரது உதவியுடன் துபாயில் உள்ள ராமசாமி நாராயணனுடன் பேசினோம். “தூத்துக்குடியைச் சேந்த செண்பககுமார், முத்தரசு ஆகியோர் ஷார்ஜா தூதரகத்தில் பணியாற்றும் ஜமால் ஒபைட் அல்மசூரி என்ற அரேபியரின் பெயரில் துபாயில் மெஸ்கோ மெரைன் சர்வீசஸ் மற்றும் 16 துணை நிறுவனங்களை லைசென்ஸ் பெற்று நடத்தி வருகின்றனர். துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் ஜேக்கப் தாமஸ் என்பவர் இவர்கள் நிறுவன பங்குதாரர். வந்த வருமானத்துடன் மேலும் பெரும் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு துபாயில் 2006 மற்றும் 2007-ம் ஆண்டு இளையராஜாவை அழைத்து 2 இசை நிகழ்ச்சிகளையும் நடத்தினர். இதுபோன்ற செலவுகளுக்காக இவர்களிடம் பணிபுரியும் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெயரில் வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றனர். 

தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களின் பாஸ்போர்ட் ஆவணங்கள் இவர்களிடமே இருந்ததால் இது எளிதாகி உள்ளது. தொழிலாளர்களிடம் வங்கி கணக்கு தொடங்கி தருகிறேன் என்று கையெழுத்து பெற்று, சில ஆயிரங்கள் சம்பளம் பெறும் எங்களுக்கு, இவர்களே சில லட்சங்கள் சம்பளம் என போலி சம்பளச் சான்றிதழ் தயாரித்து கடன் வாங்கியுள்ளனர். மேலும் தொழிலாளர்களின் விசா காப்பியிலும் மாறுதல் செய்துள்ளனர். இதுபோல் இவர்கள் மொத்தம் ரூ.150 கோடி அளவிற்கு கடன் பெற்றுள்ளனர்.

இந்த கடன் தொகையில்தான், கூல் புரொடெக்ஷன்ஸ் என்ற பெயரில் ‘மகேஷ் சரண்யா மற்றும் பலர்’, பரத் நடித்த ‘ஆறுமுகம்’, மற்றும் ‘பிடிச்சிருக்கு’ ஆகிய படங்களை தயாரித்தனர். இசை நிகழ்ச்சிக்காக வந்த இளையராஜா, எஸ்.பி.பி. உள்ளிட்ட திரை பிரபலங்களுக்காக துபாயில் கிலோ கணக்கில் தங்க நகைகள் வாங்கி உள்ளனர். இது தவிர செண்பககுமாரின் 2 மனைவிகளும் சென்னை, கேரளாவில் சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். வங்கி அதிகாரிகள் எங்களது அலுவலகத்திற்கு வந்தபோதுதான் எங்கள் பெயரிலும் கடன் இருப்பது தெரியவந்தது. இதைத் தவிர எங்களது விசாவிற்கும் அவர்கள் கட்டணம் செலுத்தாததால் வெளியில் செல்லும் நடைபாஸ் (பதாக்கா) இல்லாமல் நாங்கள் வெளியில் தலைகாட்ட முடியவில்லை’’ என்ற ராமசாமி நாராயணன் தொடர்ந்து,

Trichy%204.jpg‘‘6 மாதங்களுக்கு முன்பு துபாயில் உள்ள சிட்டி பேங்கில் கடன் மோசடி செய்ததாக செண்பககுமாரை கைது செய்துவிட்டனர். செண்பககுமாரின் தம்பியான முத்தரசு துபாயில் ஏற்கனவே ரூ.70 கோடி வரை கடன் பெற்று, இந்தியாவிற்கு வந்து தூத்துக்குடியில் ஸ்டார் ஓட்டல் வைத்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். எங்களை வங்கி கடன்தாரர் பட்டியலில் இருந்து விடுவிக்க வேண்டும். இல்லையென்றால், இந்தியாவில் உள்ள செண்பககுமாரின் சொத்துக்களை கைப்பற்றி வங்கிகள் தங்கள் பணத்தை மீட்கவேண்டும். இந்த பிரச்னைகளை எல்லாம் இந்திய தூதரகம் மற்றும் துபாய் தூரகத்திற்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. யாரோ கடன் பெற்று உல்லாசமாய் வாழ்ந்ததற்கு அப்பாவிகளான 150 பேருக்கு மேல் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் கொடுமையாக இதுபோல கடன் பெற்றதாக வங்கி அதிகாரிகளால் மிரட்டப்பட்டதால் வாய்மேட்டைச் சேர்ந்த அன்பழகன் என்பவர், துபாயிலேயே தற்கொலை செய்துகொண்டுவிட்டார் ” என்றார்.

தலைமறைவான மற்றொருவரான முருகன், “செண்பககுமாரின் நிறுவனங்களுக்கு ஸ்பான்சராக உள்ள அரபி மசூரியன் எங்களிடம் வந்து நான் கடனை தீர்த்து உங்களை காப்பாற்ற முயற்சி செய்கிறேன். புகார், பத்திரிகை செய்தி என்று போனால் நீங்கள் இருக்கும் இடத்தை வங்கி அதிகாரிகளுக்கு காட்டிகொடுத்து விடுவேன். சிறைக்கு செல்ல வேண்டி வரும் என்று மிரட்டுகிறார்” என்றார் அழுதபடியே.

இந்த பிரச்னை குறித்து தமிழக முதல்வர், மத்திய அமைச்சர் நெப்போலியன், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்கள் என பலரிடம் புகார் கொடுத்தும் இதுவரை தீர்வு எதுவும் வரவில்லை என்கின்றனர் கடனாளியாகி நிற்கும் குடும்பத்தினர்.

வழக்கம் போல் தமிழனை- தமிழன் ஏமாற்றும் இந்த பிரச்னையில் அரசுகள் ஆறப்போடாமல் துரித நடவடிக்கை எடுத்து 150 குடும்பங்களைக் காப்பாற்ற முன்வரவேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

06_09_2010_001_005-sa-22.jpg?w=162&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

காஷ்மீருக்கு சுயாட்சி கொடுத்தால் தவறில்லை!

Kalai%201.jpg

 



கடந்த வாரத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பிரச்னை குறித்து சூடான விவாதம் நடந்துள்ளது. அதில், காஷ்மீரில் தற்போது நிலவிவரும் கலவரச்சூழலை எப்படி சமாளிப்பது என்பது குறித்த விவாதத்தில், பல கட்சிகளும் பல்வேறு தீர்வுகளை முன்வைத்துள்ளன. “தெருவில் கல்லெறிந்து போராடும் இளைஞர் கூட்டத்தை மென்மையாகக் கையாளும் முறைகளை படைப்பிரிவினர் கண்டுபிடிக்க வேண்டும்” என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

Kalai.jpgஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசியது எல்லோரையும் கவர்ந்தது. அதில் காஷ்மீரிகளின் உள்ள கிடக்கையையும் எதிர்பார்ப்புகளையும் விளக்கியதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் (றிளிரி) பகுதியை மீட்பது குறித்தும் அவர் நினைவுபடுத்தினார். 1993&ல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காஷ்மீர் மாநிலத்திற்கான சுயாட்சி தீர்மானத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்வது குறித்து வலியுறுத்தினார்.

அவரது இந்த கோரிக்கையின் பின்னே ஒரு வரலாறு உள்ளது. இந்தியா & பாகிஸ்தான் பிரிவினையின் போது அன்றைக்கு மன்னராட்சியின் கீழ் இருந்த பகுதிகள் தங்கள் நிலையை தாங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டது. காஷ்மீரின் அப்போதைய மன்னர் ஹரிசிங் தனித்து இருக்க முடிவு செய்தார். ஆனால் பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்தின் உதவியுடன் பாகிஸ்தானிய பழங்குடியினர் காஷ்மீருக்குள் ஆயுதங்களுடன் ஊடுருவிய போது, அதை தடுக்க முடியாத ஹரிசிங் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க ஒப்புக் கொண்டார். இந்தியப் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்தபோது, ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட 2/5 பகுதியை மீட்கமுடியாமல் போனது. 

ஆனால் மன்னர் ஹரிசிங்கை எதிர்த்து, ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியின் கீழ், இந்தியாவுடன் இணைவதற்காக ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களும் போராடினர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் அவர்கள் போராடினர். உழுபவர்களுக்கு நிலம் பிரித்து தரப்படவேண்டும் என்ற அவர்களது கோரிக்கை சுதந்திர இந்தியாவில் நிறைவேற்றப்பட்டது. தவிர, மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரம் கோரும் அவர்களது கோரிக்கையும் 1952-ல் ஷேக் அப்துல்லாவுடன் போட்ட ஒப்பந்தத்தில் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதே கோரிக்கையை ஆதரித்து 1944-லிலேயே தேசிய மாநாட்டுக் கட்சியின் கோபோர் மாநாட்டில் கம்யூனிஸ்டுகளால் கொண்டு-வரப்பட்ட தீர்மானத்தை காங்கிரஸ் கட்சியும் ஆதரித்தது. ஆனால், மத்தியில் ஆட்சிக்கு வந்தபின்பு, காங்கிரஸ் கட்சி அதிகாரக்-குவிப்பில் இறங்கியது. மாநில உரிமைகளை மிதித்தது. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுயாட்சி உரிமையை வலியுறுத்தியதற்காக, 1953-ல் ஷேக் அப்துல்லாவின் அரசு கலைக்கப்பட்டு, அவர் சிறைக்காவலில் வைக்கப்பட்டார். இந்தியாவுடன் இணைந்திருப்பதற்கு இறுதிவரை உறுதியோடு போராடிய அவருக்கு ஏற்பட்ட கதி இதுதான். இன்று அவரது மகன் பரூக் அப்துல்லாவும் அதே உணர்வுடன்தான் பேசுகிறார். “எல்லாவிதத்திலும் தோல்வியடைந்த பாகிஸ்தானுடன் இணைய காஷ்மீர் மக்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். ஆனால், தனிக் காஷ்மீரம் என்ற பிரிவினைவாதிகளின் குரலுக்கு அவர்கள் செவிசாய்க்கும் ஆபத்து உருவாகியுள்ளது. இந்திய அரசு உடன் செயல்படாவிட்டால், அது நிகழும்” என்று அவர் கூறியபோது, பி.ஜே.பி. தவிர மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அதற்கு பலத்த ஆதரவு இருந்தது. ஆனால், காஷ்மீருக்கு மட்டும் மாநில சுயாட்சி வழங்கினால், மற்ற மாநிலங்களும் அதே கோரிக்கையை முன்வைக்கும் என்று மத்திய அரசு பயப்படுகிறது.

Kalai%203.jpg“பல்வேறு மொழி பேசும், கலாசார வேறுபாடுகளைக் கொண்ட மாநிலங்களின் கூட்டாட்சிதான் மத்திய அரசு” என்று நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கூட்டாட்சி தத்துவத்தை மத்தியில் ஆண்டு வருபவர்கள் தொடர்ந்து மீறி வருகின்றனர். அவ்வாறு மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கப்படுவதால், தேசத்தின் ஒருமைப்பாடு மேலும் வலுப்பெறும் என்பதற்கு அமெரிக்காவின் அரசியல்முறை சிறந்த உதாரணம். சோவியத் யூனியன் இதில் சாதனையே படைத்தது. அங்கு தேசிய இனப்பிரச்னை எழவே இல்லை. ஐ.நா.வின் மனித உரிமைக் கழகமும் இதை ஆதரிக்கிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட பிரிவினை-வாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை எதிர்த்து, காஷ்மீர் மக்கள் வரலாறு காணாத அளவில் திரண்டு வந்து வாக்களித்தனர். மத்திய ஆட்சி-யாளர்-களின் தொடர்ந்த நிராகரிப்புகளுக்குப் பின்பும் காஷ்மீர் மக்கள் இந்திய அரசின் மீதிருந்த தங்களது நம்பிக்கையை இதன்மூலம் எதிரொலித்தனர். ஆனால், பயங்கரவாதத்தை அடக்குவது என்ற பெயரால் சிறப்பு அதிகாரம் கொண்ட துணை ராணுவப் படையை அங்கு குவித்து, தொடர்ந்து அட்டூழியங்கள் புரியச் செய்து, அம்மக்களிடமிருந்து அரசு அன்னியப்பட்டு விட்டது.

காஷ்மீரில் நடப்பது மக்களின் தன்னெழுச்சியான போராட்டம். அங்கு போராடும் மக்களின் எண்ணங்களை அரசு புரிந்து கொண்டு செயல்படவேண்டும். அங்குள்ள படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை உடன் ரத்து செய்து, படைகளை நிலைமை சீர்படுத்துவதற்கு ஏற்ப விலக்கிக் கொள்ளும் உறுதிமொழியுடன் பாகிஸ்தான் ஆதரவு இயக்கங்களைத் தவிர்த்து, மற்றவர்களுடன் பேச்சுவார்த்தையை உடனே துவங்குவதுதான் அரசின் முன்னுள்ள ஒரே வழி. சட்டமன்றத்தில் சுயாட்சி குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு பேசி, சுயாட்சி வழங்குவது அடுத்த கட்ட நடவடிக்கை. 

Kalai%202.jpgமத்தியில் தனித்து ஆட்சி செய்ய எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்க மட்டும் வாய்ப்புள்ள இன்றைய நிலையில், மற்ற மாநிலங்களுக்கும் சுயாட்சி வழங்குவதால் எந்த பாதிப்பும் வராது. இக்கோரிக்கையை வலுவாக முன்வைத்த திராவிடக் கட்சிகள்கூட, ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற தங்கள் கோஷத்தின் முதல் பகுதியைப்பற்றி கவலைப்படுவது இல்லை. 1957-ல் தனது தேர்தல் அறிக்கையில், பிரிந்து போகும் உரிமையைக் கோரிய தி.மு.க., இன்றைக்கு மத்திய ஆட்சியில் பங்கு பெறுவதையே குறிக்கோளாக்கிக் கொண்டுள்ளது. எனவே காஷ்மீருக்கு மாநில சுயாட்சி வழங்கினால், எங்களுக்கும் தாருங்கள் என்று கேட்கும் நிலையில் கூட பல மாநில அரசுகள் இல்லை. மாநிலத்திற்கும், மத்திய அரசிற்கும் கூட்டாக உள்ள உரிமை பட்டியலில் (நீஷீஸீநீuக்ஷீக்ஷீமீஸீt றீவீst) உள்ள பல சட்டப்பிரிவுகளை மத்திய அரசின் பட்டியலுக்கு மாற்றும்போது கூட இக்கட்சிகள் வாய் திறப்பதில்லை. 

இதையெல்லாம் மனதில் கொண்டு காஷ்மீர் மக்களை இந்திய அரசு வென்றெடுக்காவிட்டால், காஷ்மீரை சர்ச்சைக்குரிய பகுதி என்று கூறிவரும் சீனாவின் கரமும் வலுப்பெறும் ஆபத்து உள்ளது. அதன்பிறகு, காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு இணையாக சீனாவையும் சமாளிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு இந்தியா தள்ளப்படும் அபாயமும் ஏற்படலாம்! 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

07_09_2010_005_011-kallushop.jpg?w=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

07_09_2010_006_039-aryavathi.jpg?w=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

07_09_2010_010_012-adopt.jpg?w=300&h=209

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

07_09_2010_007_027-pc.jpg?w=300&h=228

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

07_09_2010_016_003-cell.jpg?w=300&h=126

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

07_09_2010_002_005-direct.jpg?w=132&h=30007_09_2010_001_005-movie.jpg?w=300&h=290

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஆஸ்திரியாவில் பள்ளி சிறுமியை கடத்தி 8 ஆண்டுகள் செக்ஸ் சித்ரவதை
aPlus.gifக்கள்

ஆஸ்திரியாவில்    பள்ளி சிறுமியை கடத்தி 8 ஆண்டுகள் செக்ஸ் சித்ரவதை
வியன்னா, செப்.7-
ஆஸ்திரியா நாட்டில் உள்ள டொனாவ்டேட் நகரை சேர்ந்தவர் நடாஷா காம்புஷ்க் (22). 10 வயது சிறுமியாக இருந்தபோது இவள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாள்.
மிகவும் அழகாக இருந்த அவளை பிரிக்லோபில் (44) என்ற நபர் ஒரு வேனில் கடத்தி சென்றான். பின்னர் வியன்னாவில் புறநகர் பகுதியில் உள்ள தனது வீட்டின் குடோனில் அடைத்து வைத்தான்.
பின்னர் அவளை அடித்து உதைத்து சித்ரவதை செய்தான். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தி “செக்ஸ்” சித்ரவதை செய்தான். அவளை வெளியே விடாமல் 8 ஆண்டுகள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி வந்தான்.
இந்த நிலையில் அங்கிருந்து தப்பி வெளியே வந்து போலீசில் புகார் செய்தாள். உடனே போலீசார் பிரிக்லோபில்லை கைது செய்ய சென்றனர். போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிய அவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.

நடாஷா காம்புஷ்சுக்கு தற்போது 22 வயதாகிறது. இவள் தனது சுயசரிதையை புத்தகமாக எழுதியிருக்கிறாள். அதில் தான் கடத்தப்பட்டு செக்ஸ் சித்ரவதை செய்யப்பட்டதை மிக உருக்கமாக தெரிவித்து இருக்கிறா
ள்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Chola statue: TN team meets Modi

Ajitha Karthikeyan | TNN

Chennai: Chances of getting back the 11th century bronze statue believed to be that of great Chola king Rajaraja I from a private museum in Ahmedabad brightened after a high-level team from Tamil Nadu,led by school education minister Thangam Thennarasu,made a representation to Gujarat chief minister Narendra Modi and museum authorities in this regard.
A day after calling on Modi and apprising him of the significance and sensitivities attached to the Chola statue,the team visited the Calico Museum of Textiles on Tuesday and handed over a letter written by chief minister M Karunanidhi,requesting the museum authorities to gift the statue to the state.With Tamil Nadu set to celebrate later this month the millennium of the world famous Brahadeeswarar Temple (Big Temple) built by Rajaraja I,there has been a popular demand that the government should get back the statue from the museum,managed by Sarabhai Foundation.
The bronze statue,which according to temple inscriptions was made by Thennavan Moovendha Velan the chief administrative officer of the Big Temple during the lifetime of Rajaraja I (circa 1010 AD),was acquired in 1940s by trust founder Gautam Sarabhai.A statue of his queen,Lokamadevi,is also a prized possession of the museum.
The team,which also comprised state tourism secretary V Irai Anbu,renowned archaeologist Dr R Nagaswamy and historian Kudavayil Balasubramaniyan,met Sarabhai Foundations managing trustee Gita Sarabhai and made a direct request,besides seeking Modis help to resolve the issue.
Calico Museum director D S Mehta told TOI that the team met our managing trustee and gave a letter written by the chief minister.However,weve asked them to give us evidences in writing to prove that the statue is that of the Rajaraja. 
Once they provide us evidence by archaeologists,we will place it before our trustees and consultants for discussion and take a decision.Unless and until they give the evidence in writing,we cannot comment on the issue, he said.

Pc0070900.jpg
BONE OF CONTENTION: The statue at Calico museum


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

MoD yet to order probe into mystery death of Captain

TIMES NEWS NETWORK

New Delhi: Did Captain Sumit Kohli,a Shaurya Chakra awardee,kill himself Or,was he killed because he knew the culprits behind a fake encounter in Jammu and Kashmir 
The mystery behind the death of Kohli,who was serving with 18 Rashtriya Rifles in Lolab Valley of Jammu and Kashmir when he was found dead with gunshot wounds on April 30,2006,is yet to be resolved even after four years.
On August 28,defence minister A K Antony had assured Kohlis mother Veena,who claims her son was murdered,that the matter would be examined once again,as reported earlier.On Tuesday,however,both the ministry as well as the Army said no fresh probe had been ordered into the incident as yet.Defence secretary Pradeep Kumar has called for the relevant files and will look into them, said an official.
Kohlis family members are demanding an independent probe since they claim the brave officer was targeted by his seniors because he knew who was behind the killing of four porters in a fake encounter in Lolab on April 20,2004.Pointing at the glaring contradictions in the autopsy and medical reports,they say there was a cover-up to pass off the murder as suicide.
The Army,on its part,has claimed Kohli was on psychotropic drugs since he was depressed due to serious personal and marital problems and it was a clear case of suicide.
Kohlis sudden death,just two months after he was awarded the Shaurya Chakra,the countrys third-highest gallantry award in peacetime,had wreaked havoc on his family.His father had suffered a stroke,and died a day after the officers cremation.

Pc0081700.jpg
WAITING FOR JUSTICE: Defence minister A K Antony had assured Kohlis mother Veena that the matter would be examined once again



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பாப்பாடகி மீது பாதுகாவலர் “செக்ஸ்” புகார்
Las Vegas வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 10, 11:59 AM IST
லாஸ்ஏஞ்சல்ஸ், செப். 10-
பாப்பாடகி மீது பாதுகாவலர் “செக்ஸ்” புகார்
அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி பிரிட்னி பியர்ஸ், இவரது முன்னாள் பாதுகாவலர் பெர்னாண்டோ பிளோர்ஸ், இவர் லாஸ்ஏஞ்சல்ஸ் புறநகர் கோர்ட்டில் பிரிட்னி பியர்ஸ் மீது ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் தான் அவரிடம் பணிபுரிந்த போது விருப்பம் இன்றி தன்னுடன் செக்ஸ் உறவு வைத்து கொண்டதாகவும், அடிக்கடி அது போன்று தொந்தரவு கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அவரது அறைக்கு அழைத்து தன் முன் ஆடையின்றி நிர்வாணமாக “போஸ்” கொடுத்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
இது, அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்னி பியர்ஸ் அமெரிக்காவின் உயரிய கிரம்மி விருது பெற்றவர்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நரபலியான நஜிமுன்நிஷா?
-அதிர்ந்த அவத்தாண்டை

Kishore.jpg



ஒன்றுமறியாத ஆறுவயது பெண் குழந்தை நஜிமுன்நிஷா மர்மமான முறையில் இறந்து போக, ‘நரபலி’ என்று ஒருதரப்பும், ‘இல்லை... பகையைத் தீர்த்துக் கொள்ள பழிவாங்கிவிட்டார்கள்...’ என்று இன்னொரு தரப்பும் சொல்லிக் கொண்டிருக்க, சோகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது சாயல்குடி அருகேயுள்ள அவத்தாண்டை கிராமம்.

பிரச்னையை அந்தப் பகுதியில் இருக்கும் த.மு.மு.க.-வினர் கையில் எடுக்க, போலீஸ் பதட்டத்தில் செய்வதறியாது தவிக்கிறது.

Kishore%202.jpgநிஷாவின் தாயார் ரசீதாபானு நம்மிடம், ‘‘கடந்த வாரம் ஒரு நாள் காலை 11 மணி இருக்கும். பக்கத்து வீட்டு புள்ளையோட வேப்ப மரத்துகிட்டப் போய் வேப்பமுத்து பொறுக்கி விளையாடிகிட்டு இருந்தா நஜிமுன். கொஞ்ச நேரம் கழிச்சுப் போய் பார்த்தா, அவளைக் காணலை. ஊர்முழுக்கத் தேடினோம். கண்டுபிடிக்க முடியலை.ஊருக்குள்ள விசாரிச்சேன். வேப்ப மரத்தடியில் விளையாடிகிட்டு இருந்த புள்ளைய மதரசாவில் குர்-ஆன் படிக்கும் ஷாஜகானும், அரிய நாயகிபுரத்தை சேர்ந்த நிஜாமுதீனும் மிட்டாய் வாங்கி கொடுத்து கூட்டீட்டு போனாங்கன்னு தகவல் சொன்னாங்க.

Kishore%201.jpgஅவங்க ரெண்டு பேரையும் தேடினோம். அகப்-படலை. மறுநாள் மதியம்... ஆடு மேய்க்கும் சில பேர் வந்து, ‘கண்மாய் காட்டு கருவைக்குள் நஜிமுன்நிஷா நரபலிக்காக கொலை செய்யப்பட்டிருக்கா. சென்ட்ரிங் கட்டையால் தலையை அடிச்சி நொறுக்கி, நரபலி கொடுத்திருக்காங்க’னு சொன்னாங்க. பதறி-அடிச்சு-கிட்டுப் போய்ப் பார்த்தோம். என் செல்ல மகளை நரபலி கொடுத்துட்டாங்க...’’ என்று சொல்லி கதறினார்.

நஜிமுன்நிஷாவின் தந்தை இப்ராஹிமிடம் பேசினோம். ‘‘நஜிமுன்நிஷா கொலை செய்யப்பட்டுக் இடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட சென்ட்ரிங் கட்டையானது, கோடாங்கியின் புதுவீடு கட்டும் இடத்தில் இருந்துதான் எடுத்துச் செல்லப்பட்டிருக்கு. கோடாங்கி, பேய் வன-வாசம் செய்யும் இடத்துல வீடுகட்டுறாரு. அதுக்கு பரிகார-மாகத்தான் எம்பிள்ளைய நரபலி கொடுத்து இருக்காரு. எம் புள்ளையை கொலை செய்ய கோடாங்கிக்கிட்ட கொண்டு போய் ஒப்படைச்சதுதான் ஷாஜகான், நிஜாமுதீன் வேலையா இருக்கும். 

இதையெல்லாம் போலீஸ்-கிட்டயும் சொல்லி-யாச்சு. நடவடிக்கை இல்லை. விவகாரத்தை இனிமேல த.மு.மு.க. பார்த்துக்கும்...’’ என்றார்.

அவத்தாண்டை பஞ்சாயத்து தலை-வரான அமானுல்லா நம்மிடம், ‘‘சந்தேக-மெல்லாம் அந்த கோடாங்கி பயமீதுதான் படிஞ்சு கிடக்கு. இப்ராஹிமுக்கும் கோடாங்கிக்கும் பகை உண்டு. பகையை தீர்த்துக்-கறதுக்காகத்தான் ஒருபாவமும் அறியாத பச்சிளம் குழந்தையை கொன்னுருக்கணும்...’’ என்றார். 

கோடாங்கி என்ன சொல்கிறார்?

‘‘குர்-ஆன் ஓதுற பசங்கதான் கடைசியா அந்தப் புள்ளைய அழைச்சுகிட்டுப் போனதை பார்த்-திருக்காங்க. அவனுங்களை இறுக்கி பிடித்து விசாரித்-தாலே போதும்... உண்மை வந்துடும். மற்றபடி, கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை.’’ என்றார் கோடாங்கி.

மாவட்ட போலீஸ் எஸ்.பி.யான பிரதீப் குமாரிடம் கேட்டபோது, ‘‘கொலையில் க்ளூ கிடைச்சு இருக்கு. வெகுவிரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்...’’ என்றார் உறுதியாக.

கொலையாளிகளை விரைந்து பிடித்து, பிஞ்சுக் குழந்தையின் மர்ம மரணத்துக்கு விடை காண வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 


<!--.style2 {color: #0033CC}.style3 {color: #FF0000}.style4 {color: #003399}.style5 {color: #0000CC}
-->

ராமஜெயம் உயிருக்கு குறி:
அதிர்வுகளை ஏற்படுத்திய அடுத்தகட்ட விசாரணை!

Ramajayam%202.jpg

 

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயத்தை கொலை செய்ய சதி’ என கடந்த வாரம் முழுவதும் மீடியாக்களில் செய்திகள் அலையடித்தன.

இந்த பரபரப்புச் செய்தி, அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. ராமஜெயத்தை கொலை செய்ய தீட்டப்பட்ட சதித் திட்டத்தில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தியானேஸ்வரனின் மகன் செந்தூரேஸ்வரனுக்கு தொடர்பிருக்கிறது என்று போலீஸ் விசாரணையைத் தொடங்க, விவகாரம் மெல்ல அரசியலாகிக் கொண்டிருக்கிறது. காரணம், செந்தூரேஸ்வரன் தே.மு.தி.க.வில் மாநில நிர்வாகியாக இருப்பதுதான்.

மத்திய மண்டலத்தில் பிரபல தாதாவாக விளங்கிய ‘முட்டை’ ரவி என்கவுன்ட்டர் செய்யப்பட்டபிறகு திருச்சியை சுற்றிலும் வளர்ந்து வந்த ரவுடிகள் பலரும் வாலைச் சுருட்டி அமைதியானார்கள்.

கொஞ்ச காலத்துக்குப் பிறகு, சுருட்டிய வால் மீண்டும் நீள ஆரம்பித்திருக்கிறது. இப்படிப்பட்டவர்களில் ஒருவன்தான் குணா என்கிற குணசீலன். ‘முட்டை’ ரவியின் வலது கரமாக இருந்து செயல்பட்டவன். ரவி, மரணத்துக்குப் பிறகு வேகமாக வளர ஆரம்பித்தான்.

பிரபல ரவுடி சேட்டு, செங்கல்பட்டு அ.தி.மு.க. பிரமுகர் குரங்கு குமார் ஆகியோர் கொலை செய்யப்-பட்ட வழக்குகள் உட்பட பத்தொன்பது வழக்குகள் குணா மீது நிலுவையில் உள்ளன.
Ramajayam%203.jpg
மத்திய மண்டலத்தில் நடந்துவந்த குற்றச் செயல்கள் பலவற்றிலும் குணாவின் பங்களிப்பு இருப்பதாக சந்தேகித்து, அவனை தேடி வந்தனர் போலீஸார். இந்நிலையில்தான் குணாவை கைது செய்தது திருச்சி போலீஸ்.

குணாவை மீடியாக்களுக்கு முன்பு நிறுத்திய போலீஸ், ‘வரிசையாக நாலைந்து கொலைகளைச் செய்ய திட்டமிட்டிருந்தான். இதில் திருச்சியின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரும் அடக்கம்’ என்று பரபரப்புத் திரியை பற்ற வைத்தார்கள்.

Ramajayam%201.jpgஅமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம்தான் திருச்சியைச் சேர்ந்த அந்த அரசியல் பிரமுகர் என செய்திகள் கசிய ஆரம்பித்தன. இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக செந்தூரேஸ்வரனை அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தியது, அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

குணா கைது விவகாரத்தில் என்னதான் நடக்கிறது? போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘குணாவை கைது செய்து தீவிரமாக விசாரித்தோம். சில பிரமுகர்களை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகச் சொன்னான். கொலைப் பட்டியலில் ராமஜெயமும் இருப்பதாகவும் கேஷுவலாக சொல்ல, அதிர்ச்சியாக இருந்தது.

‘சேலத்தில் நடந்த வீரபாண்டி ஆறுமுகம் மகன் கல்யாணத்துக்கு திருச்சியில் இருந்து காரில் போனார் ராமஜெயம். அப்பவே அவரை முடிச்சிடணும்னு திட்டம் போட்டோம். வொர்க் அவுட் ஆகலை. தப்பிச்சுட்டார்’னு குணா சொன்ன தகவல் அடிப்படையிலதான் விசாரணை விறுவிறுப்பாக நடக்கிறது.

செந்தூரேஸ்வரனுக்கு ராமஜெயத்தோடு முன்விரோதம் இருக்கும் தகவல் தெரிந்து, அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம். தமிழ்நாடு கூடைப்பந்து சங்க விவகாரத்தில்தான் இரண்டு குடும்பத்துக்கும் பகை இருக்கிறது.

Ramajayam.jpgகூடைப்பந்து வீரரான செந்தூரேஸ்வரனை சங்கத்தின் செயலாளராக நியமிக்க வேண்டும் என்பது தியானேஸ்வரனின் ஆசை. அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. அப்போதுதான் பிரச்னை வெடித்து, நடிகர் நெப்போலியன் தலைமையில் ஒரு குரூப், தியானேஸ்வரனுக்கு எதிராகக் கிளம்பியது. சங்கத்தை தங்கள் கைக்குள் கொண்டுவர அவர்கள் முயற்சித்தார்கள்.

அந்த சமயத்தில் நெப்போலியனுக்கு ஆதரவாக ராமஜெயம் செயல்பட ஆரம்பித்தார். ராமஜெயத்தின் அடுத்தடுத்த நகர்வுகளை தியானேஸ்வரனால் சமாளிக்க முடியவில்லை. உடனே, நீதிமன்றத்தை நாட ஆரம்பித்துவிட்டார். இருந்தும், சட்ட ரீதியாகவே சங்கத்தை தன்வசப்படுத்தி விட்டார் ராமஜெயம். சங்கத்தின் தலைவராகவும் ஆகிவிட்டார். இதனால், ராமஜெயத்தின் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள், தியானேஸ்வரனும் மகனும். அதுதான், குணா மூலம் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறதோ என்று சந்தேகித்து விசாரிக்கிறோம். குணாவின் செல்போனுக்கு ஒரு குறிப்பிட்ட போனிலிருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்திருக்கிறது.



அதை விசாரிக்கும்போதுதான், செந்தூரேஸ்வரன் வரை தொடர்புகள் நீள்கிறது. அந்த விஷயங்களை விசாரிக்கத்தான் செந்தூரேஸ்வரனை அழைத்தோம். தனக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் மறுத்து விட்டார். தேவையானால், தொடர்ந்து விசாரணைக்கு அழைப்போம். இன்னும் சில தினங்களில் விசாரணை முடிந்துவிடும். அப்போது எல்லா தகவல்களும் வெளியில் வரும்’’ என்றார்கள்.

ராமஜெயம் தரப்பில் பேசினோம்.

‘‘சங்கத்தில் நிறைய முறைகேடுகள் நடப்பதாக பல்வேறு கிளப்புகள் சார்பாகப் புகார்கள் வந்தன. அதன்பிறகுதான், ராமஜெயம் அந்த விவகாரத்தில் தலையிட்டார். தற்போது சங்கம் ஒழுங்கான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. மற்றபடி, அவருக்கு யாரும் எதிரிகள் கிடையாது. சொல்லப்போனால் ‘மறப்போம், மன்னிப்போம்’ என்கிற ரீதியில் செந்தூரேஸ்வரனுக்கும் சங்கத்தில் பொறுப்பு கொடுக்கலாம் என்கிற முடிவில் இருந்தார் ராமஜெயம். அதற்குள் இப்படியொரு தகவல் வந்து அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது...’’ என்றார்கள்.

திருச்சியில் விசாரணைக்கு ஆஜராக வந்திருந்த செந்தூரேஸ்வரனிடம் பேசியபோது, ‘‘நான் என் வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். சம்பந்தமில்லாமல் என்னை வம்புக்கு இழுக்குறாங்க. குணா யார்னே எனக்குத் தெரியாது’’ என்றார் சிம்பிளாக.

திருச்சி கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட குணாவிடம் பேசினோம். ‘‘செந்தூரேஸ்வரன் கறுப்பா, சிவப்பான்னே எனக்குத் தெரியாது. போலீஸ் ஏன் இப்படியொரு தகவலைப் பரப்புதுன்னு தெரியலை. எந்த வாக்குமூலமும் நான் கொடுக்கலை...’’ என்றான்.

குணாவின் வழக்கறிஞர் ராஜேந்திரகுமாரோ, ‘‘குணாவை என்கவுன்ட்டரில் கொலை செய்து விட போலீஸ் துடிக்கிறது. அதனால்தான் விடாமல் கதைகளை பரப்புகிறார்கள். சட்டரீதியாக இந்த என்கவுன்ட்டர் சதியை முறியடிப்பேன்’’ என்றார்.

திருச்சி போலீஸ் கமிஷனர் வன்னியப்-பெருமாள், ‘‘குணா வாக்குமூலம் கொடுத்-திருப்பது உண்மை. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. முடிந்ததும் விரிவாகப் பேசுகிறேன்’’ என்றார்.

எப்படியோ குணா விவகாரம், பலருடைய உறக்கத்துக்கு உலை வைத்திருக்கிறது.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மதுரை விமான நிலையத்துக்கு யார் பெயர்?
கலவர பீதியில் தென்மாவட்டங்கள்

Madurai.jpg



மதுரை சர்வதேச விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும்’ என்று தேவர் அமைப்புகளும், ‘இமானுவேல் சேகரன் பெயரைத்தான் சூட்ட வேண்டும்...’ என்று தலித் அமைப்புகளும் வரிந்துகட்டி நிற்கின்றன. வேறு சில சாதிய அமைப்புகளும்கூட தங்கள் இனத்துத் தலைவரின் பெயரை சூட்ட வேண்டும் என்று குரலெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக போராட்டம், உண்ணாவிரதம் என்று மதுரை தகித்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், வருகின்ற செப். 12-ம் தேதி மதுரை சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவுக்கு நாள் குறித்திருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சி எப்படி நடக்கப் போகிறது என்பதை பதட்டத்தோடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள் மதுரை மக்கள். ‘தென் மாவட்டங்களில் இந்தப் பெயர் விவகாரம் சாதிய கலவரத்தையும் தூண்டி விடலாம்...’ என்று அரசுக்குக் கிடைத்திருக்கும் தகவலைத் தொடர்ந்து, ரொம்பவே பதைபதைப்பில் இருக்கிறார்கள் அதிகாரிகள்.

Madurai%201.jpg தேவர் தேசிய பேரவையின் தலைவர் திருமாறனிடம் இதுகுறித்துப் பேசினோம்.

‘‘சுதந்திரத்துக்காக போராடிய தேசிய தலைவர் முத்துராமலிங்கத் தேவர். இன்றைக்கு சாதிய தலைவராக குறுகிய வட்டத்திற்குள் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவில் இரண்டு பேருக்கு மட்டும்தான் பிரிட்டிஷ் அரசாங்கம் வாய்ப்பூட்டு சட்டம் போட்டது. அதில் ஒருவர் தேவர் ஐயா.

தென் தமிழ்நாட்டில் முக்குலத்தோர் எண்ணிக்கை அதிகம். மதுரை திருநகரில்தான் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்தார். மறைந்தார். பத்தொன்பது சாதிகளை அடிமைப்படுத்தி வைத்திருந்த கைரேகை சட்டத்தை எடுக்கச் சொல்லி போராடியவர். முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு விழாவுக்காக மதுரைக்கு வந்த முதல்வர் கலைஞர், ‘மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டப்படும்...’ என்று சொல்லிவிட்டுப் போனார். நாங்களும் சந்தோஷப்பட்டோம். ஆனால், சாதியத் தலைவர்கள் பலரையும் தூண்டிவிட்டு, ‘விமான நிலையத்துக்கு எங்கள் சாதி தலைவர் பெயரைத்தான் வைக்கணும்’னு சொல்லி கொடிபிடிக்க வைத்தார். அவரு நேரடியா சொல்லாட்டியும், கலைஞரோட தூண்டுதலாலத்தான் அவங்க எல்லாம் இப்படி கிளம்பி வந்தது. கலைஞர், இப்படித்தான் முக்குலத்தோரை தொடர்ந்து ஏமாத்துறாரு.

மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல், காங்கிரஸின் சுதர்சன நச்சியப்பனை அனுப்பி எங்களிடம் பேச சொல்லியிருக்கிறார். அதுபடி நச்சியப்பனும் எங்ககிட்ட பேசுனாரு. ‘மதுரை சர்வதேச விமான நிலையத்தை பிரபுல் பட்டேல் திறக்க வரும்போது பிரச்னை எதுவும் கூடாது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் தான் வைக்கப்படும்’ என்று உறுதியளித்தார். அதைத்தான் நாங்க நம்பியிருக்குறோம். எங்க நம்பிக்கை பொய்த்துப் போனால், தென் மாவட்டத்துல ஏற்படப்போகும் டென்ஷனை யாராலும் தடுக்க முடியாது...’’ என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துச் சொன்னார்.
Madurai%202.jpg
தலித் அமைப்புகள் சார்பாக, ‘தியாகி இமானுவேல் பேரவை’யின் பொதுச் செயலாளர் சந்திரபோஸ் நம்மிடம் பேசினார்.

‘‘தியாகி இமானுவேல் தீண்டாமைக்கு எதிராக போராடிய தலைவர். அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததால் தான் வரலாறுகள் மறைக்கப்பட்டுவிட்டது. அடிமைப்பட்டுக் கிடந்த தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு அடிப்படை உரிமைகளை பெற்றுத் தர போராடி தன்னுயிரை கொடுத்தவர் இமானுவேல்.

Madurai%204.jpgமதுரை விமான நிலையம் 1932&ல் தொடங்கப்-பட்டது. அப்போது அந்த விமான நிலையம் அமைக்க பள்ளர் சமூகத்தினருடைய விளைநிலங்கள் தான் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவரை மூன்று முறை விரிவாக்கம் செய்திருக்கிறார்கள். இதனால் எங்கள் சமூக மக்கள் விளைநிலம் 98 ஏக்கர் அரசுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்திற்குக்கூட எண்பத்தொன்பது வீடுகளை சின்ன உடைப்பு கிராமமக்கள் விட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

தொடர்ந்து விமான நிலையத்துக்காக எங்கள் சமூக மக்கள்தான் நிலம் கொடுத்திருக்கிறாங்க. அதனால மதுரை விமான நிலையத்துக்கு எங்க மக்களின் தலைவராக இருக்கும் இமானுவேல் சேகரனுடைய பெயரைத்தான் சூட்ட வேண்டும். முத்துராமலிங்கத் தேவருக்கு நாடாளுமன்றத்தில்கூட சிலை வைத்து கௌரவப்படுத்தியிருக்காங்க. ஆனால், இமானுவேலுக்கு அப்படி எந்த கௌரவமும் கிடைக்கலை. குறைந்தபட்சம், விமான நிலையத்துக்காவது பெயர் வைக்கலாமே...’’ என்றவர், ‘‘முதல்வர் கருணாநிதி முக்குலத்தோர் என்றால் பயப்படுகிறார். ‘மதுரை சர்வதேச விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க சிபாரிசு செய்கிறேன்’ என்று சொல்லும் கருணாநிதி, தலித் மக்களையும் முக்குலத்தோர் மக்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இத்தனைக்கும் பிறகு, மீறி மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்பட்டால், தலித் மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் தலித் இன மக்கள் கருணாநிதிக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.’’ என்று முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்து பேசிமுடித்தார்.

திராவிடர் கழகத்தின் மாநில சட்டத்துறை தலைவர் மகேந்திரன் நம்மிடம் பேசும்போது,

‘‘சென்னையில் உள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச விமான நிலையங்களுக்கு காமராஜர் மற்றும் அண்ணா பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் காமராஜர் போன்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதையைவிட குறைவான மரியாதைதான் பெரியாருக்கு கொடுக்கிறார்கள். சமூகநீதிக்காக போராடியவர் பெரியார். தீண்டாமை ஒழிப்புக்கு குரல்கொடுத்தவர். திராவிடர் கழகத்தில் பயின்ற கலைஞர் சமத்துவ நாயகன் பெரியார் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு சூட்ட வேண்டும். தென் தமிழகம் வாயார அவர் பெயரைச் சொல்லிப் பார்க்க வேண்டும். இது பெரியாருக்கு கலைஞர் செய்யும் தொண்டாக இருக்கும்...’’ என்றார்.

மதுரையில் கற்புக்கரசி கண்ணகிக்கு சிலை வைத்து வழிபடும், ‘கண்ணகி பேரவை’யின் நிர்வாகிகளும் இந்த விவகாரத்தில் கொடிபிடித்து கிளம்பியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் நம்மிடம்,

‘‘மன்னனிடம் நீதி கேட்டு போராடி மதுரையை கண்ணகி எரித்த வரலாறு உண்டு. அப்படிப்பட்ட மதுரையில் அமைந்திருக்கும் சர்வதேச விமான நிலையத்திற்கு கண்ணகி பெயர் வைப்பது தான் சிறப்பாக அமையும்...’’ என்றார்கள். ‘அய்யய்யோ, இன்னும் எவ்வளவு பேர், பெயர் கோரிக்கையோட லெட்டர் பேடும் கையுமா திரியறாங்களோ தெரியலையே...’ & விமானத் துறை அதிகாரி ஒருவரின் சோகப்புலம்பலுக்கு, விடை சொல்வார் யார்?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கம்பளிக்குள் சுருண்டு கிடக்கும் கராத்தே சாம்பியன்!
-அலட்சியம் காட்டும் பள்ளி நிர்வாகம்

Karthick%201.jpg



மாவட்ட அளவில், மாநில மற்றும் தேசிய அளவில் என தேசம் முழுவதும் வென்றெடுத்த பதக்கங்களின் எண்ணிக்கை 140. இதில் தங்கப்பதக்கம் மட்டும் நாற்பது. இலங்கை, இந்தோனேஷியா, சிங்கப்பூர் நாடுகளில் ஜூனியர் உலக சாம்பியனாக வலம் வந்ததற்காக மட்டும் நான்கு தங்கப்-பதக்கங்கள். இதில்லாமல் 2016-ம் ஆண்டு இந்திய தேசத்தின் சார்பாக கராத்தே வீரனாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு.

இத்தனை சாதனைகளுக்கும், தகுதி-களுக்கும் சொந்தக்காரரான திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த 13 வயது கராத்தே வீரன் கோகுலுடைய இப்போதைய நிலைமை..?

Karthick%202.jpgதலையை சுற்றிலும் முப்பதுக்கும் மேற்பட்ட தையல்கள். இரண்டு வருடங்கள் கட்டாய ஓய்வு. எந்த பயிற்சிக்கும் செல்ல முடியாத நிலைமை. போதாக்குறைக்கு பக்கவாதம் பற்றிக்கொள்ளும் அபாயம்! மகனின் நிலையைக் கண்டு, அவனருகே கண்ணீருடன் சோகக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த கோகுலின் தந்தை ராஜ முத்துவை சந்தித்தோம்.

‘‘குழந்தை பருவத்தில் எந்த சுறுசுறுப்பும் இல்லாமல் அமைதியாகவே இருப்பான். யாரிடமும் பேசவே மாட்டான். அப்படிப்பட்டவனை, உற்சாகப்படுத்தி, கராத்தே பயிற்சிக்கு அனுப்பி வைத்தோம்.

அவனுடைய கராத்தே திறமையை பார்த்து கோவை, திருப்பூரில் உள்ள பெரிய பள்ளிகளில் இருந்து கட்டண சலுகை கொடுக்கிறோம். இங்கே சேர்த்துவிடுங்கள் என்று அழைத்தனர். தொலைவில் இருக்கும் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று, இங்குள்ள ஜெயந்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்த்தோம்.

அவர்களும் அட்மிஷன் போது டியூசன் பீஸ் கட்ட வேண்டாம். மற்ற பீஸ்களை மட்டும் கட்டினால் போதும். வெளிநாடுகள் சென்று போட்டிகளில் கலந்துகொள்ளும் செலவு முழுவதையும் நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்றுதான் கோகுலை சேர்த்துக் கொண்டார்கள்.

ஜெயந்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சேர்ந்த இரண்டு வருடங்களில் மூன்று முறை வெளிநாடுகளுக்கு சென்று மூன்று முறையும் தங்கப்பதக்கம் வென்று வந்திருக்கிறான். இதுவரை ஒரு ரூபாய் கூட பள்ளி சார்பில் செலவிடவில்லை. பதக்கம் பெற்று வந்தபோது மட்டும் ஜெயந்தி மெட்ரிக்குலேஷன் மாணவன் கராத்தேவில் உலக சாம்பியனாயிருக்கிறான் என்று விளம்பரப்-படுத்திக்-கொண்டவர்கள், இப்போது எந்த கராத்தே போட்டியிலும் கலந்துகொள்ள முடியாமல் செய்து-விட்டனர்’’ என்ற போதே அவர் கண்களில் நீர் வழிகிறது.

துடைத்துக்கொண்டு தொடர்ந்தார். ‘‘இதுவரை அந்தப் பள்ளியில் விளையாட்டு போட்டிகளே நடத்தாதவர்கள் கடந்த மாதம்தான் விளையாட்டு பொருட்களை வாங்கிவந்து பள்ளி அளவில் போட்டிகளை நடத்த முயற்சித்தனர். வகுப்புகள் முடிந்ததும் ப்ராக்டீஸ் செய்ய மாணவர்களை கிரவுண்டிற்கு அனுப்பிவிட்டு பி.டி. மாஸ்டர் காணாமல் போய்விட்டார்.

ஒரு பகுதியில் இருந்து ஜாவ்லின் த்ரோ (ஈட்டி எறிதல்) ப்ராக்டீஸ் நடந்து கொண்டிருந்திருக்கிறது. அப்போது ஒரு மாணவன் எறிந்த ஈட்டி கோகுலின் தலையில் பாய்ந்து விட்டது. கோகுலின் தலையில் ஈட்டி குத்தி ரத்தம் கொட்ட... மாணவர்கள் எல்லோரும் பயந்து அலறி ஓட, கோகுலாகவே தலையை பிடித்துக்கொண்டு பி.டி. ரூமிற்கு ஓடியிருக்கிறான். அங்கிருந்த ஆசிரியர்கள், அருகில் உள்ள அருள்புரம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு டாக்டர் இல்லை. அங்கிருந்த நர்ஸ் ஏழு தையல் போட்டு, பள்ளி தாளாளர் காரில் கொண்டுவந்து வீட்டு வாசலில் இறக்கிவிட்டு போய்விட்டனர். தகவல் கேட்டு நான் வீட்டுக்குச் சென்று பார்த்தால், வாந்தி எடுத்தபடி கோகுல் சுயநினைவில்லாமல் இருந்தான்.

Karthick.jpgஅதன்பின் கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஸ்கேன் எடுத்தோம். அதில், தலை எலும்பு முறிந்து மூளையில் குத்தி ரத்தம் உறைந்திருப்பதால் உடனடியாக ஆபரேஷன் செய்யச் சொன்னார்கள். ஆபரே­ஷன் செய்து மூன்று நாட்கள் ஐ.சி.யு. வார்டில் வைத்து காப்பாற்றி இப்போதுதான் கோகுலை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறோம்.

கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய் வரை செலவாகியிருக்கிறது. ஒரு முறை மருத்துவமனைக்கு வந்த பள்ளியின் தாளாளர் கிருஷ்ணன், எழுபதாயிரம் ரூபாய் கொடுத்தார். மீதி தொகைக்கு ஏதாவது வழி செய்யுங்கள் என்று கேட்டேன். அவர்களிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை.

ஈட்டி குத்தியதால் வலது கையும் காலும் பக்கவாதத்தால் பாதிக்கப்படக்கூடிய நிலை இருக்கிறது. இரண்டு வருடத்திற்கு எந்த பயிற்சியும் செய்யக்கூடாது. இரண்டு வருடம் முடிந்தவுடன் மீண்டும் ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை உள்ளது என்று டாக்டர் சொல்லியிருக்கிறார். என்னோட மகனின் கனவும் தகர்ந்து, அவன் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்டது...’’ என்று கதறியழுதார்.

கோகுலின் பாதிப்பை பற்றி கேட்க பள்ளிக்குச் சென்றோம்.

‘முகப்பிலே இந்தோனேஷியாவில் நடந்த கராத்தே போட்டியில் பங்கேற்று திரும்பும் கராத்தே ஜூனியர் உலக சாம்பியன் கோகுல் வருக... வருக!’ என்ற பிளக்ஸ் போர்டுகள் நம்மை வரவேற்றன. ‘பள்ளியில் தாளாளரும் இல்லை... முதல்வரும் இல்லை’ என்றார்கள்.

பள்ளி தாளாளர் கிருஷ்ணனை தொலைபேசியில் பிடித்தோம். ‘‘கிரவுண்டில் விளையாடும் போது தெரியாமல் நடந்திருக்கிறது. அதற்கு நிர்வாகம் என்ன செய்யமுடியும்? இருந்தும் அந்த பையனுக்கு செலவெல்லாம் பார்த்தாகிவிட்டதே. இனிமேல் நாம் என்ன செய்ய முடியும்?’’ என்று நம்மிடமே அவர் கேட்டவிதம் நம்மை நிலைகுலையச் செய்தது.

கடல் கடந்து கராத்தேவில் சாதனையை புரிந்தவன் கம்பளிக்குள் சுயநினைவின்றி இருப்பது நியாயமா என்பதை பள்ளி தாளாளர் சிந்தித்து, அந்த குடும்பத்துக்கு உரியதை உரிய நேரத்தில் செய்தால், அதுதான் பள்ளிக்கு கௌரவம் தேடித்தரும். அதை செய்வார்கள் என்றே நம்புவோம்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தடை நீக்கம்: 2- வது குழந்தை பெற சீனா அனுமதி
Beijing சனிக்கிழமை, செப்டம்பர் 11, 10:58 AM IST
பெய்ஜிங், செப்.11-
தடை நீக்கம்:    2- வது குழந்தை பெற சீனா அனுமதி
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை திட்டத்தை சீனா அரசு கட்டாயமாக அமல்படுத்தி வருகிறது. அதையும் மீறி ஒன்றுக்கு மேல் குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு கடுமையாக அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும் கருகலைப்பு செய்தல், வயிற்றில் வளரும் குழந்தையை அழித்தல் போன்றவையும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சீன மக்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
எனவே, சீனர்கள் ஆண் குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்கின்றனர். பெண் குழந்தைகளை கருவிலேயே அழித்து விடுகின்றனர். இதனால் அங்கு பெண்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் திருமணம் செய்யும் ஆண்களுக்கு பெண் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஒரு குழந்தை திட்டத்தை ரத்து செய்ய சீன அரசு முடிவு செய்துள்ளது. மக்கள் தொகை குறைவாக உள்ள 5 மாகாணங்களில் 2-வது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குவது என முடிவு செய்துள்ளது.
அதுவும், ஏற்கனவே ஒரு குழந்தை மட்டும் இருக்கும் தம்பதி மட்டுமே 2-வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவர். இத்திட்டம் அடுத்த ஆண்டு (2011) முதல் அமலுக்கு வருகிறது.
பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் 4 மாகாணங்களில் 2012-ம் ஆண்டில் இருந்தும், அதைத் தொடர்ந்து 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நாடு முழுவதும் படிப்படியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த தகவலை அரசுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் ஹே யாபு தெரிவித்துள்ளார். ஒரு குழந்தை திட்டத்தை கட்டாயமாக அமுல்படுத் தியதன் மூலம் சீனாவில் 40 கோடி மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப கட்டுப்பாடு திட்ட கமிஷன் தெரிவித்துள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

13_09_2010_011_043-mukesh.jpg?w=291&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

13_09_2010_009_011-marana.jpg?w=300&h=156

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

2014ல் உலகப் பெரும் பணக்காரராக முகேஷ் அம்பானி உயர்வார்-போர்ப்ஸ்Mukesh Ambani

பாஸ்டன்: 2014ம் ஆண்டில் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரராக ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி உயர்வார் என்று போர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

தற்போது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 29 பில்லியன் டாலர்களாகும். ஆனால் இன்னும் 4 ஆண்டுகளில் இது 62 பில்லியன் டாலர்களாக உயர்ந்து உலகிலேயே மிகப் பெரிய பணக்காரராக உருவெடுப்பார் முகேஷ். இதன் மூலம் உலகப் பெரும் பணக்காரர் பட்டியலில் தற்போது முதலிடத்தில் இருக்கும் மெக்சிகோ தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம்மை பின்னுக்குத் தள்ளி விடுவார் முகேஷ் என்றும் போர்ப்ஸ் கூறியுள்ளது.

மெக்சிகோவில் நிலவி வரும் அரசியல் , பொருளாதார குழப்பங்களால் கார்லோஸின் சொத்து மதிப்பு குறைந்து விடும் எனவும் போர்ப்ஸ் கணித்துள்ளது.

53 வயதாகும் முகேஷ் தற்போது போர்ப்ஸின் உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கரூர்: கரூரில் சர்ச் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கரூர் அருகே உள்ள புகளூர் சி.எஸ்.ஐ. சர்ச், ஹைஸ்கூல் மேடு பெந்தகோஸ்தே ஜெப சபை , முல்லை நகர் ஈ.சி.ஐ. சர்ச், பைபாஸ்ரோடு ஆர்.சி. சர்ச் ஆகியவை மீது கடந்த 9ம் தேதி மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சர்ச் கதவு, ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 

கரூர் சர்ச்கள் மீது தாக்குதல் [^]-இந்து முன்னணியினர் மீது வழக்கு [^] பதிவு!

Church

இந்தத் தாக்குதலுக்கு இந்து முன்னணியினர் தான் காரணம் என பாதிக்கப்பட்ட சர்ச் பாஸ்டர்கள் காவல் நிலையத்தில்புகார் [^]அளித்தனர்.

அதன் பேரில் இந்து முன்னணியினர் மீது வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நேற்றும், இன்றும் கரூர் பகுதியில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடைபெற்றதால் இந்து முன்னணியினர் முக்கிய நிர்வாகிகள் கைது தள்ளிப் போனதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

14 பேரின் கருணை மனு: ஜனாதிபதி ஏற்பு- மரண தண்டனை ஆயுளாக குறைப்பு

Prathiba Patil

டெல்லி: 14 பேரின் கருணை மனுக்களை ஏற்று அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளார் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல். இதனால் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் தண்டனையும் இதேபோல குறைக்கப்படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த 2 மாதங்களில் இந்த 14 பேரின் கருணை மனுக்களை ஏற்றுள்ளார் பிரதீபா.

இதில், தனிப்பட்ட விரோதம் காரணமாக 17 பேரை கொன்ற பியாரா சிங் மற்றும் அவரின் மூன்று மகன்களான சரப்ஜித் சிங், சத்னாம் சிங், குருதேவ் சிங் ஆகியோரும் அடக்கம். இவர்களின் கருணை மனுக்கள் 1991ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சொத்தை அபகரிப்பதற்காக தனது மாமா, அவரின் மூன்று சிறிய குழந்தைகள் உட்பட ஐந்து பேரை ஒட்டு மொத்தமாக கொன்ற தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் உத்தரப் பிரதேசத்தில் வீடு புகுந்து மூன்று பேரைக் கொன்று, அவர்களின் தலையை துண்டித்து ஊர்வலமாக கொண்டு சென்றதோடு, பத்து வயது சிறுவனை சுட்டுக் கொன்று, அவனது உடலை தீயில் வீசிய செரோம், ஷியாம் மனோகர் மற்றும் 4 பேரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த மறு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், இவர்களின் தண்டனையை ஜனாதிபதி குறைத்துள்ளார்.

இது குறித்து உள்துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்க அறிக்கையில், இந்தக் கொலைகாரர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டாலும் அவர்கள் சாகும் வரை சிறையில் தான் இருக்க வேண்டும். பரோலில் அவர்களை ஒருபோதும் விடுவிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த 14 பேரின் தண்டனை குறைக்கப்பட்டதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் தண்டனையும் இதேபோல குறைக்கப்படுமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதற்கு முன்னோட்டமாகவே இந்த தண்டனைக் குறைப்பை ஜனாதிபதி அறிவித்துள்ளாரோ என்ற சந்தேகமும் பரவியுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

14_09_2010_005_019-schoolbus.jpg?w=300&h=247

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

14_09_2010_005_033-cbi.jpg?w=300&h=155

-- Edited by devapriyaji on Tuesday 14th of September 2010 06:29:09 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

14_09_2010_011_014-palllimanavi.jpg?w=283&h=30014_09_2010_002_006-delay.jpg?w=300&h=247

-- Edited by devapriyaji on Tuesday 14th of September 2010 06:28:04 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

14_09_2010_014_009-thondu.jpg?w=300&h=193

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

14_09_2010_002_002-child-abuse.jpg?w=241&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

15_09_2010_014_007-thangakasu.jpg?w=300&h=146

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

15_09_2010_016_008-rajaraja.jpg?w=300&h=167

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

15_09_2010_009_036minor.jpg?w=68&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

All major brands of honey contain antibiotics: Study

TIMES NEWS NETWORK

New Delhi: If you have been giving your kids honey bought from the market in the hope that it will help boost immunity and fight bacterial infections,this could come as a shock.According to a study carried out by the Centre for Science and Environment,most honey brands being sold in the country contain varying amounts of antibiotics and their consumption over a prolonged period of time could induce resistance to antibiotics,lead to bloodrelated disorders and injury to the liver.
CSE said the study busts the myth that commercially produced honey was a natural and pure product.For the study,12 samples were picked in Delhi,all well known brands including one each from Australia and Switzerland.Other than a single brand,Hitkari Honey,all were found to contain multiple antibiotics.Ironically,while there are no standards for antibiotics in India,the honey samples would have failed the standards that have been set for export by the Export Inspection Council.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Illegal places of worship thrive despite concerns

Political Pressure,Sentiments In Way Of Their Razing 

TIMES NEWS NETWORK

Chennai: Pressure from political parties,religious sentiments and fear of revenue loss have come in the way of the authorities removing unauthorised religious structures,even as some of such structures are being administered by the governments own Hindu Religious and Charitable Endowments department.
On Tuesday,a Supreme Court bench headed by Justice Dalveer Bhandari granted two weeks time to states to file their responses on the issue.It was submitted before the court that Tamil Nadu has the largest number of 77,450 unauthorised religious structures,followed by Rajasthan (58,253) and Gujarat (15,000).Some temples administered by HR&CE and found to be in public place have been removed or relocated.But we find it difficult to remove some temples as they have become a major revenue earner.The temple at Luz Corner,right on the platform,is an example, said an official of the department.
According to M Ravi,additional police commissioner (traffic ),The traffic police has identified 23 such structures and recommended the corporation to relocate them as they cause hindrance to free movement of traffic.So far 10 such structures across the city have been removed, he said.
Some small structures like the one on Venkatakrishna Road in Mandaveli was removed recently without much opposition.In another case,despite the Madras high court ruling in favour of the petitioner seeking to remove a structure at the entrance of the court,the corporation has not taken any action following opposition from a section of lawyers.The structure near the HC has,among other idols and photos,a picture of M G Ramachandran.Some religious structures have also come up at autorickhsaw stands causing hindrance to traffic movement.These structures are patronised by the auto drivers with political and police connections.While the corporation has demolished several unauthorised temples,HR&CE officials are of the opinion that they should be relocated.

Legal Wrangle


TN has the dubious distinction of having highest number of unauthorised places of worship Arunachal Pradesh received the compliment from SC as the most civilised state when its counsel said it did not have a single unauthorised structure The Centre,states and UTs have said they were evolving policies to remove the structures

Pc0050800.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Two elders burnt alive in Andhra Pradesh for sorcery

TIMES NEWS NETWORK

Choutuppal (Nalgonda): Two senior citizens were burnt alive by a mob of 60 in Kaithapuram village hardly 28 km from L B Nagar in Hyderabad in Choutuppal mandal in Nalgonda district on Wednesday.The charges against the duo was that they were performing black magic on the villagers.One of the persons burnt was a Dalit and the other belonged to the backward caste.
Led by a brigade of 50 women,the mob dragged the two persons Yellaiah (70) and Narasimhaiah (65) to a hillock in the village.The angry mob tied the hands and legs of the duo,thrashed them before pouring kerosene on them.Later,they burnt them alive even as bystanders and others let out victory cry.
Sources said the flashpoint came three days ago when some women allegedly saw Yellaiah performing black magic in the outskirts of the village.It was then they decided to kill him and Narasimhaiah.It was a well-planned attack, a source said.The frail looking elders didnt offer much resistance when they were beaten up and later burnt alive,it was later known.
The villagers believe that the recent bout of fever that hit the village was the handiwork of the duo.They even believe that Yellaiah was responsible for the death of a village boy in a road accident in Ranga Reddy district a month ago, sources added.
The villagers first took Narasimhaiah from his home.Later,they took Yellaiah from a crushing unit where he worked and tied them with ropes.Both were beaten up black and blue as the possessed women heaped invectives for causing misery to their families, sources said.The women insisted that they be taught a lesson.It was the women who claimed that they were behind the killing of the black magicperforming-duo, sources said.
Narasimhaiah was a shepherd.Sources said Yellaiah,a Dalit,was beaten up and warned against performing witchcraft some seven years ago.District SP Rajesh Kumar said a case under Section 302 of IPC has been slapped against all the accused.A case under subsections 2 and 5 of the SC/ST Atrocities Act has also been filed, he said.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

CASTE HINDUS REMOVE FENCES 
Dalits werent allowed even to sing film songs in public

K A Shaji | TNN

Dharapuram: Revenue and police officials on Wednesday directed caste Hindus of N Kumarapalayam village,near Dharapuram in Tirupur district,to remove two fences they had erected to prevent dalits from using public roads.Revenue divisional officer M Ali Akbar,tahsildar Samiyappan and deputy superintendent of police Manthramoorthy reached the village with a heavy posse of police personnel and warned the caste Hindus of severe action if they refused to remove the fences.Fearing arrest,about 50 caste Hindus came forward and removed the fences.They also gave an assurance to the authorities that nobody from the village would resort to such acts in the future.
According to Maran,60,people from the dalit hamlet had been using the roads for over 25 years despite attempts by the caste Hindus to obstruct their movement.
The caste Hindus also tried to prevent the dalits from singing film songs in public places and using bicycles,alleged Murugesan,45,a coolie from the same hamlet.
RDO Akbar said police and revenue officials would step up vigil in the village to prevent any altercation.The roads will continue to be open for all and any attempt to use them as symbols of untouchability will be resisted, he said.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

No domestic standards for honey

New Delhi: Most honey brands being sold in the country contain varying amounts of antibiotics,according to a study carried out by the Centre for Science and Environment.
Antibiotics are widely used by beekeepers to prevent diseases in their bee colonies.In 1965,an Italian bee species was introduced in India by the Punjab Agriculture University since they were docile and had a much better yield.However,the bees also turned out to be much more delicate and vulnerable to disease.
CSE director Sunita Narain said that since there were no domestic standards,no monitoring was being carried out.Honey meant for international markets,meanwhile,goes through stringent checks.
Oxytetracycline,an antibiotic,is also widely being used by keepers to get queen bees to lay more eggs.While there are no checks prescribed for antibiotics in honey,when we procure our stock we are not going to know whether it contains the drugs.The industry has been aware of the problem for the past several years.Most big industries are not concerned with manufacturing and only sell packaged honey.It is only a question of knowing the areas where such methods of bee-rearing are not used, said Nitin Malhotra,general manager,Hitkari Pharmacy,manufacturers of Hitkari Honey.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

63K abortions in TN in 2008,next only to UP

Kounteya Sinha | TNN

New Delhi: First the good news: The number of medical termination of pregnancies (induced abortions) has started to dip in India.The bad news,however,is that the country still records a large number of such abortions in 2008,India saw 6.41 lakh abortions across 12,510 institutions approved to carry out MTP.
According to the Family Welfare Statistics in India 2009,brought out by the Union health ministry,India recorded 7.25 lakh MTPs in 2005,7.21 lakh in 2006 and 6.82 lakh in 2007.
According to the 2008 figures,the latest compiled data,Uttar Pradesh recorded the highest number of MTPs (89,194),followed by Tamil Nadu (63,875),Orissa (59,945),Assam (58,409) and Maharashtra (54,545).Other states with high abortion numbers include West Bengal (46,753),Haryana (31,126),Delhi (30,846),Rajasthan (29,292),Gujarat (27,837) and Bihar (24,149).
While Punjab recorded 14,834 abortions,the Union Territory of Chandigarh recorded 1,162.Madhya Pradesh had 19,385 MTPs,Kerala 14,227 and Karnataka 17,500.The states/UTs with the lowest abortion figures included Daman and Diu (42),Andaman and Nicobar Islands (94) and Goa (930).

Pc0012600.jpg

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

[Previous] Times City [Next]


Print Maximize


Former bank manager gets 4-yr jail for fraud

TIMES NEWS NETWORK

Chennai: Additional special judge for CBI cases,Chennai,S Manoharan on Monday convicted three persons including a dismissed manager of Central Bank of India in a bank fraud case.The former bank manager,V Pattabiraman,was sentenced to four years RI and asked to pay a fine of Rs 2.4 lakh.The economic offences wing of CBI registered a case against then Central Bank of India branch manager Pattabiraman,proprietor of Maharaja Forest Products VMS Haji Mohammed and a private agent,S Thillai Selvan,following a complaint of misappropriation of bank funds.The case was registered in March,2002 following a complaint alleging that Pattabiraman along with the two others forged documents and securities in order to release credit facilities in favour of Southern Timber Traders for business in timber and defrauded the bank to the tune of Rs 225.51 lakh.
EOW filed the chargesheet after investigation in December 2002 and the trial court convicted all the three accused on Monday.VMS Haji Mohammed has also been sentenced to four years rigorous imprisonment and fined Rs 11 lakh.The third accused,Thillai Selvan,was sentenced to one year RI.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Becoming PM is not my only priority,says Rahul

Someswar Boral | TNN

Santiniketan: If there was any doubt that Rahul Gandhi sees himself as the PM-inwaiting,it was removed when the Congress general secretary told a group of students at Santiniketan in answer to a question,Becoming the Prime Minister is not my only priority, meaning obviously that prime ministership was one among his several priorities.
Replying to a students question,How do you plan to reform the education system if you become the Prime Minister,Rahul said,Becoming the Prime Minister is not my only priority.Is this the only post that one needs before bringing change You can bring about a change,we all can do that. 
Clearly,the Congress general secretarys visit to Santiniketan went well beyond the mere symbolic renewal of ties or nostalgia that the Nehru-Gandhis have traditionally had for Visva Bharati.
In the event,the young Congress MP also asked questions on knowledge and wisdom and asked students to differentiate between the two.The students werent prepared for such questions.Some of them mumbled,while one said knowledge helps in assimilation and application of information.The scene resembled an open-air class Santiniketans USP.
The philosophical lesson soon gave way to trading of charges when a third-year student of anthropology complained against the apathy of teachers and rising corruption in the university.Rahul tried to stop him,but the student,egged on by his classmates,went on levelling allegations.
Rahul then cut him short.I understand you have a little wisdom.Whats the use of telling me all this,or writing to me Its easy to complain.You will get applause if you start talking about corruption,but not so much if you start thinking about a solution to it.Are you willing to take up some reform work here

Pc0101400.jpg
GUEST OF HONOUR: AICC general secretary Rahul Gandhi arrives at Santiniketan in Birbhum district of West Bengal on Tuesday


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Political parties bank on generosity

While Congress Raised 598cr In Two Years,BJP Managed 298Cr From Donations 

Himanshi Dhawan | TNN

New Delhi: Politics,it would appear,brings out the generosity in people who are bankrolling our political parties with voluntary contributions.So much so that the Congress has succeeded in raising funds to the tune of Rs 598 crore in two years alone through sale of coupons. 
Sale of coupons,a euphemism for donations,has also added Rs 50 crore to the coffers of the NCP over the same period.The BJP too sourced its funds mainly from voluntary donations,which amounted to Rs 297.7 crore,while the BSP was able to drum up Rs 202.94 crore in contributions.Data relating to income tax returns and assessments of political parties for 2007-2008 and 2008-2009 was analysed by the Association of Democratic Reforms and National Election Watch.The information was disclosed under RTI after an order to that effect by the CIC.Other major sources of income for the parties analysed for 2007-08 and 2008-09 were levyfor CPM,Rs 46 crore,and interest on income.
The major expenditure of the Congress party was on elections Rs 215 crore while on publicity it spent about Rs 58 crore.The party also distributed aid worth Rs 56 crore.
The BJP spent the largest chunk of its funds or Rs 89.16 crore on advertising and publicity while the BSP made purchases worth Rs 85 crore of immovable properties.
During the period,the Congress has declared the maximum aggregate income of Rs 718 crore followed by the BJP,which has declared assets worth Rs 344 crore and the BSP Rs 252 crore.
Mayawatis BSP has shown the maximum growth in terms of total income from Rs 69.74 crore in 2007-08 to Rs 182 crore in 2008-09,which is nearly 161%,while the NCP shows a growth of 130% followed by the Congress,which shows an increment of 125%.The CPI is the only party whose income dipped during the period.From Rs 1.24 crore in 2007-08,the income of the party has dipped to Rs 1.16 crore in 2008-09.

Pc0111000.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

SC move to appoint local CJs breach of convention: Judges

Dhananjay Mahapatra | TNN

New Delhi: Former CJIs and sitting Chief Justices of various high courts have frowned upon the reported recommendation of the Supreme Court Collegium headed by CJI S H Kapadia to post local judges as CJs of HCs in clear breach of a long standing unwritten code against such appointments.
The CJI Kapadia-headed Collegium is reported to have recommended appointment of Justice Nisar Ahmad Kakru,present CJ of the Andhra Pradesh HC,as the next CJ of Jammu and Kashmir HC and Justice Aftab Hussain Saikia,present CJ of the J&K HC,as the next CJ of Gauhati HC.While Justice Kakru belongs to J&K,Assam is the home state of Justice Saikia.
Law minister Veerappa Moily said he had not yet received any recommendation of the SC Collegium in this regard.Though he refused to comment on the situation arising out of the breach of the unwritten code,it surely is going to be discussed hotly within the government,which had in the past stood firm by the custom and precedent of no home state posting for CJs of HCs.
The code not to appoint a home state judge as the CJ of the HC was evolved decades ago at a conference of CJs and chief ministers.It was felt that CJs of the HCs,who play an important role in the selection and appointment of judges to the HCs,should be from outside the state to maintain purity of the process and not give in to pressures and demands of local lobbies.
At one point of time there were appointments to the Andhra Pradesh HC from one particular community.Though attempts were made during Justice B N Kirpals tenure as CJI to change the unwritten code of outsider CJs for HCs,the conference of CMs and CJs did not agree on any dilution, said a former CJI.
Another ex-CJI said that this surely would lead to resentment among many sitting CJs,which TOI found to be true after contacting some of them,astheir request for similar home transfers were earlier rejected.
The law ministry,however,confirmed receiving the Collegiums recommendation for transfer of 12 judges of high courts to other states in public interest as there had been some complaint or irregularity alleged by Bar Associations against them.This is in consonance with CJI Kapadias public stand that corruption and irregularities within the judiciary would not be tolerated.

Pc0111100.jpg
Collegium system undemocratic

In a scathing indictment of the current system of judicial appointments,former Delhi high court Chief Justice A P Shah on Tuesday said the collegium system was not transparent and contrary to democratic principles.He was speaking at the annual convention of the Central Information Commission.Shah who is best remembered for his ruling bringing the office of Chief Justice of India within the ambit of the RTI Act,said,The present system of judicial appointments in constitutional courts exemplifies the misalignment between the core values of judicial independence and accountability. TNN



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Communist Cuba plans to lay off half a million

Elisabeth Malkin

Mexico City: In perhaps the clearest sign yet that economic change is gathering pace in Cuba,the government plans to lay off more than half a million people from the public sector in the expectation that they will move into private businesses,Cubas labor federation said on Monday.
Over the past several months,President Ral Castro has given stern warnings that Cubas economy needs a radical overhaul,beginning with its workers.With as many as one million excess employees on the state payroll,Castro has said,the government is supporting a bloated bureaucracy that has sapped motivation and long sheltered a huge swath of the nations workers.We have to erase forever the notion that Cuba is the only country in the world where one can live without working, he told the National Assembly last month.
Since permanently taking over from his brother Fidel two years ago,Castro has often pledged to make Cubas centralized,Soviet-style economy more efficient and open up opportunities for people.The government has handed tens of thousands of acres of state-held farmland to private farmers and begun freeing up a market for agricultural supplies.It has loosened restrictions on cellphones and other electronics,and created a few areas for private business,allowing barbers shops to become cooperatives and giving more licenses to private taxi drivers.
But these initial reforms have been comparatively limited,many analysts contend,and Cubas economy grappling with the fallout from the global financial crisis and the aftermath of hurricanes in 2008 appears to be in dire shape.Tourism revenues have flagged,the country has faced rice shortages and its sugar crop has been disastrous.
Last year,as the government tried to hold onto desperately needed hard currency,imports fell by 37%.Whats stunning is that they put a date and they put a number on it 500,000, said Philip Peters,who follows Cuba for the Lexington Institute.Its a very substantial decision, he added.Its a major shift towards a larger private sector in a socialist economy. The state currently employs 95% of the official workforce as part of a socialist model that has endured for five decades.Our state cannot and should not continue supporting businesses,production entities and services with inflated payrolls. NYT NEWS SERVICE

Pc0161700.jpg
SHIFTING GEARS: The decision indicates a major shift towards a larger private sector in a socialist economy


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

17_09_2010_001_060-cji.jpg?w=228&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

17_09_2010_002_019-malnutrion.jpg?w=300&h=298

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

17_09_2010_001_017-18crore.jpg?w=300&h=15717_09_2010_004_040-ms-univer.jpg?w=300&h=137
17_09_2010_004_043-uni.jpg?w=300&h=297


__________________
« First  <  Page 4  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard