New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: NEWS FOR READING


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: NEWS FOR READING
Permalink  
 


18_07_2010_006_014.jpg

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

புதிய கல்லூரிகளை தொடங்கும் முஸ்லீம்களுக்கு நிலத்தை வக்பு வாரியம் வழங்கும்

வியாழக்கிழமை, ஜூலை 22, 2010, 14:42[IST]

 

சென்னை: புதிய கல்லூரிகளை தொடங்கும் முஸ்லீம் சமூகத்தாருக்கு கல்லூரிகள் கட்டுவதற்கான இடத்தை வக்பு வாரியம் வழங்கும் என்றுதமிழ்நாடு [^] வக்பு வாரிய தலைவர் [^] கவிக்கோ அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியா முழுவதும் 2020-ம் ஆண்டுக்குள் கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சதவிகிதத்தை தற்போதுள்ள 12.4 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு [^] முடிவு செய்துள்ளது.

இதையடுத்து பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை 700 ஆகவும், கல்லூரிகளின் எண்ணிக்கையை 25 ஆயிரமாகவும் உயர்த்த மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது என்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் [^] கபில் சிபல் அன்மையில் தெரிவித்தார்.

எனவே, இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் புதிய கல்லூரிகளை தொடங்கும் முஸ்லீம் சமூகத்தாருக்கு கல்லூரிகள் கட்டுவதற்கான இடத்தை வக்பு வாரியம் வழங்கும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி புதிய கல்லூரிகளை தொடங்கி முஸ்லீம் சமூகத்தை கல்வியில் மேம்பட செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
R


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘குடியிருப்பு பகுதியில் கழிவு சுத்திகரிப்பு நிலையமா?
கொதிக்கும் தூத்துக்குடி

Tuticorin%203.jpg

மக்கள் குடியிருக்கும் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொதிக்கிறது தூத்துக்குடி.

Tuticorin%201.jpgதூத்துக்குடி மாநகராட்சியில் 20, 34, 35 வார்டுகளில் பாத்திமா நகர், இந்திரா நகர், புல்தோட்டம், காந்தி நகர், லயன்ஸ் டவுன், டெலிபோன் காலனி போன்ற பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இதில் பெரும்பாலானோர் மீனவ மக்கள். 

தூத்துக்குடி மாநகராட்சியில் நடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தின் ஒரு பகுதியாக புல் தோட்டம் பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. கழிவு நீரை ஒரே இடத்தில் தேக்கி மறு சுழற்சி முறையில் தண்ணீரையும் திடக் கழிவுகளையும் தனியாகப் பிரித்து தண்ணீரை கடலிலும், திடக் கழிவை உரமாகவும் மாற்றும் வகையில் இந்தச் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. மாநகராட்சிக்குச் சொந்தமான 5.22 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் இந்த சுத்திகரிப்பு நிலையத்துக்குத்தான் எதிர்ப்பு வலுக்கிறது. 

அனைத்துக் கட்சியினர், அனைத்து பொது நல அமைப்புகள் சார்பில் ‘மக்கள் பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி ஜூலை 7&ம் தேதி சுத்திகரிப்பு நிலையத்தை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதற்கு தலைமை வகித்த இக்னேஷியசிடம் பேசினோம். 

‘‘கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமையப்போகும் இடத்தின் நான்கு பக்கமும் வீடுகள் உள்ளன. மனிதக் கழிவு சக்கை, பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகள், பள்ளிகள் வழியாக லாரியில் கொண்டு செல்லப்படும். இதனால் தொற்று நோய் பரவும். இந்த நிலையத்தை எதிர்த்துTuticorin.jpgஅடுத்தகட்டமாக 15 ஆயிரம் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி போராட உள்ளோம். இந்த போராட்டத்துக்காக சிறை செல்லவும் தயார்’’ என்றார்.

தேசிய சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் அன்டன் கோமஸ் நம்மிடம், ‘‘ஏற்கனவே தொழிற்சாலை கழிவுகளால் மீன்வளம் பாதிக்கப்பட்டு தூத்துக்குடிக்கு பெருமை சேர்க்கும் முத்துக்குளியலே அழிந்து விட்டது. இந்த நிலையில் மனிதக் கழிவு மறுபிரிப்பு ஆலை அமைத்து சுத்திகரித்த தண்ணீரை கடலில் விடுவது ஆபத்து. மாசுக் கட்டுப்பாடு வாரியம் 24 மணிநேரமும் இதனைக் கண்காணிக்கும் என்று ஆட்சியர் கூறுகிறார். தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளை இதுவரை மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்து என்ன நடவடிக்கை எடுத்தது? தூத்துக்குடி புறநகர் பகுதியில் 513 ஏக்கர் இடம் உள்ளது. அங்குதான் இந்த ஆலையை அமைக்க வேண்டும். இந்தப் பிரச்னையை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் வரை கொண்டு செல்வோம். அவரும் செவி சாய்க்காவிட்டால் ஆகஸ்டு 31 முதல் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்வோம்’’ என்றார் ஆவேசமாக. 

மீனவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அலங்கார பரதர் நம்மிடம், ‘‘முப்பதாயிரம் மீனவ மக்களுக்கு எதிராக திட்டமிட்டு செய்யப்படுகிற துரோகம் இது. கழிவுசுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை உடனே கைவிட வேண்டும். இல்லையெனில் மீனவ மக்களின் போராட்டம் பெரிய அளவில் வெடிக்கும்’’ என்று எச்சரித்தார். 

இதுபற்றி மாவட்ட ஆட்சியர் பிரகாஷிடம் பேசினோம். ‘‘சிறந்த வல்லுனர்களைக் கொண்டு நன்கு ஆய்வு செய்த பின்னர்தான் இத்திட்டம் துவங்கப்பட்டது. ஒரு சிலரின் தூண்டுதலில் பெயரில்தான் போராட்டங்கள் நடைபெறுகிறது’’ என்றார். ஆனால் தி.மு.க., காங்கிரஸ் மாவட்ட முக்கியஸ்தர்கள் நீங்கலாக அனைத்து தரப்பினரின் ஆதரவோடு மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் போராட்டம் தொடர்கிறது. 

படங்கள்-: எஸ்.எஸ்.முருகன்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மருத்துவரின் மாவட்டத்தில் மாங்கனியை துண்டாடுவது யார்?

PMK.jpg

‘சாராய சாம்ராஜ்யம், கட்டப் பஞ்சாயத்து ராஜ்யம் செய்பவரும், பல கொலைகளைச் செய்தவருமான அலெக்ஸ் ரவி அவர்களை மாவட்டச் செயலாளராக நியமனம் செய்ய பரிந்துரைத்த பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பாரத சோதி வேல்முருகன் அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்’’


-இப்படியான சுவரொட்டிகள் மருத்துவர் ராமதாஸின் சொந்த மாவட்டமான விழுப்புரத்தில், வன்னியர் சங்கத்தின் பெயரால் ஒட்டப்பட பரபரப்பு பற்றிக் கொண்டிருக்கிறது பா.ம.க.வில். 

PMK%201.jpgயார் இந்த அலெக்ஸ் ரவி? ஏன் இந்த சுவரொட்டிகள்? வன்னியர் சங்க வட்டாரங்களில் துருவினோம்.

‘‘விழுப்புரத்தில் பிரபல ரவுடி மின்னல்ராஜா, தி.மு.க. பிரமுகர் கே.எஸ். ஆனந்த் ஆகியோர் கொலை வழக்கு உள்ளிட்ட சுமார் 40&-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் அலெக்ஸ் ரவி. இவர் பா.ம.க.வில் மாவட்ட மாணவரணிச் செயலாளராக இருந்தபோது டாக்டர் கொடுத்த காரிலேயே சாராயம் கடத்தியதாக வழக்கு உள்ளது. அதன் பிறகு அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அலெக்ஸ் ரவிக்கு இப்போது மாவட்டச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டதுதான் பரபரப்பைக் கிளப்பியுள்ளது’’ என்றனர். 

பரபரப்பு கிளப்பிய அந்த போஸ்டரை ஒட்டிக்கொண்டிருந்த பா.ம.க. மாணவரணி செயலாளர் ஸ்ரீராமிடம் பேசினோம்.

PMK%202.jpg‘‘அலெக்ஸ் ரவியை சாராய வியாபாரி, கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற புகார்களின்படிதான் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார் டாக்டர். ஆனால், மீண்டும் பா.ம.க.வில் வந்து சேர்ந்த அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காக பரிந்துரை செய்தவர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன். 

இவர், கடலூர் மாவட்டத்தில் அரசியல் செய்வதை விட்டுவிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் செய்கிறார். அதுவும் ரவுடிகளுக்கெல்லாம் பதவிக்கு பரிந்துரை செய்கிறார். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல, பா.ம.க. தொண்டர்களின் கருத்தும்கூட. இதைச் சொன்னதற்காக என் மீது தலைமை நடவடிக்கை எடுத்தாலும் சரி.. நான் சாகும்வரை பா.ம.க-.வுக்கு உண்மை தொண்டனாக இருப்பேன்’’ என்றார். 

இப்போது அலெக்ஸ் ரவி நியமிக்கப்பட்ட பதவில் இருந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் அன்பு-விடம் பேசினோம். ‘‘நான் தலைமைக்கு கட்டுப்பட்டவன் எந்த செய்தியையும் பத்திரிகைகளுக்கு கூற எனக்கு அதிகாரம் இல்லை. எதுவாக இருந்தாலும் தலைமைதான் சொல்லவேண்டும்’’ என்று ஒதுங்கிக் கொண்டார். 

அவரது ஆதரவாளர்களிடம் பேசியபோது,

PMK%204.jpg‘‘கடந்த ஜூன் 13&ம் தேதி -தைலாபுரத்தில் நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் அன்புவை மாவட்டச் செயலாளராக தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், மறு நாள் அலெக்ஸ் ரவி மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டதாக செய்திவருகிறது. 6 ஆண்டுகளாக அன்புதான் மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.சி., எம்.பி.சி. இன மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இவர்களிடையே அடிக்கடி மோதல் வரும். அன்பு பதவியில் இருக்கும் வரை இவர்களிடையே மோதல் குறைந்திருந்தது. இவர் பொன்முடியை எதிர்த்து போராட்டம் நடத்தி அவர் உருவபொம்மையை எரித்து வழக்கில் ஜெயிலுக்கு போனபோது, அன்புவின் அப்பா இறந்துவிட்டார். அப்பாவுக்கு கொள்ளி போடக் கூட முடியாமல் கட்சிக்காக சிறையில் இருந்தார் அன்பு. இப்படிப்பட்டவரை நீக்கிவிட்டு அலெக்ஸ் ரவி போன்றவர்களை பதவிக்குக் கொண்டுவருவது கட்சிக்கு நல்லதாகத் தெரியவில்லை’’ என்றனர். 

இந்த விவகாரம் குறித்து பா.ம.க.வின் புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட அலெக்ஸ் ரவியிடம் பேசினோம்.

‘‘எனக்கு பதவி கொடுக்கக்கூடாது என்று பலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஏதோ காலத்தின் சூழ்நிலையால் தி.மு.க. அமைச்சர் பொன்முடி என் மீது போலி வழக்குகள் போடவைத்தார். நான் கொலை செய்தேன் என்று சொல்லப்படும் மின்னல்ராஜாவும் நானும் நெருங்கிய நண்பர்கள். அவரையா நான் கொலை செய்வேன்? 

PMK%203.jpgதி.மு.க.வின் தூண்டுதலால்தான் ஸ்ரீராம் எனக்கு எதிராக நோட்டீஸ் அடித்து வன்னியர் சங்கம் சார்பில் வெளியிடுகிறார். நான் பதவிக்கு வந்தால் கட்சியை வளர்க்கமாட்டேன் ரவுடியிசத்தைதான் வளர்ப்பேன் என்று சொல்கிறார்கள். ஆனால் எனக்கு ரவுடியிசமே தெரியாது’’ என்றார். 

இந்த விவகாரம் பற்றி பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகனிடம் கேட்டபோது, ‘‘இது முழுக்க முழுக்க ஒரு நாளிதழின் தூண்டுதலில் செய்யப்படும் வேலை. அந்த நாளிதழில் எங்கள் கட்சிபற்றி தவறான செய்தி வெளியிட்டதை கண்டித்தோம். அதனால் அவர்கள் இப்படி நூறு சுவரொட்டிகள் அடித்து ஒட்ட வைத்திருக்கிறார்கள்’’ என பட்டென முடித்துக் கொண்டார். 

பா.ம.க.வின் விவகாரத்தில் அமைச்சர் பொன்முடி தலை உருட்டப்படுவதைப் பற்றி தி.மு.க.வினரிடம் பேசினோம்.

‘‘அமைச்சர் பொன்முடிக்கு தனது அமைச்சகப் பணிகளையும், கட்சிப் பணிகளையும் பார்க்கவே நேரம் போதவில்லை. அவர் ஏன் அடுத்த கட்சியின் உள் விவகாரத்தில் தலையிடப் போகிறார்? எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி டாக்டர் ராமதாஸின் தம்பியான சீனு கவுண்டரின் சிபாரிசால்தான் அலெக்ஸ் ரவிக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைத்ததாக பேசிக் கொள்கிறார்கள்’’ என சூடாக பதிலளிக்கிறார்கள். மருத்துவர் ராமதாஸின் சொந்த மாவட்டத்திலேயே மாங்கனியை துண்டாட சிலர் திட்டம் தீட்டுவது மட்டும் உறுதியாகப் புரிகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

புதுவை காங்கிரஸுக்கு வில்லனா? ஹீரோவா?
ரங்கசாமியின் ‘ஜூலை 30 ’ கிளைமாக்ஸ்

Pondy%202.jpg

‘சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி...’ என்றொரு பழமொழி உண்டு. அந்த ஆண்டியோடு புதுச்சேரி காங்கிரஸை ஒப்பிட்டுப் பேசுகிறார்கள் சீனியர் கதர்களே.


அப்படியென்றால் சும்மா இருந்த சங்கு? புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமிதான்!

முதல்வர் பதவியிலிருந்து விலகிய கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசின் எந்த நிகழ்ச்சிக்கும் செல்லாமல், கட்சியின் எந்த நிகழ்ச்சிக்கும் செல்லாமல் புறக்கணித்துவந்தார் ரங்கசாமி. மேலும், புதுச்சேரிக்கு மேலிட காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, பிரணாப் முகர்ஜி என யார் வந்தாலும் அவர்களைப் பார்க்காமல் தவிர்த்தே வந்திருக்கிறார் ரங்கசாமி.

Pondy.jpgஇந்நிலையில் ரங்கசாமியின் தொடர் மௌனத்தைக் கண்டு மிரண்டுபோயிருக்கும் புதுச்சேரி காங்கிரஸ் தலைமை... ‘ரங்கசாமியின் செயல்பாடுகள் காங்கிரஸ் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. எனவே ரங்கசாமி மீது நடவடிக்கை எடுக்க அனுமதியும் வழங்க-வேண்டும்’ என டெல்லி தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இதற்கு டெல்லி தலைமை, ‘‘வரும் 30-&ம் தேதி புதுவைக்கு வரும் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி கலந்துகொள்ளும் குழந்தைகள் நல மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்கிறாரா என்று பாருங்கள். இல்லை என்றால் அவர் மீதான நடவடிக்கை படிப்படியாக தொடரும். அதுவரை அமைதி காக்கவும்’’ என்று பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
Pondy%203.jpg
சோனியா காந்தி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் ரங்கசாமி கலந்துகொள்வாரா என்பதுதான் புதுவை காங்கிரஸின் இப்போதைய ஒரே கேள்வி. 

இதுகுறித்து காங்கிரசின் மூத்த தலைவர்கள் சிலரிடம் பேசினோம். “மக்களிடம் இமேஜ் வேண்டும் என்பதற்காக சக அமைச்சர்களை பகைத்துக் கொண்டார் ரங்கசாமி. அதனால் அவர் பதவி விலகவேண்டிய நிலை ஏற்பட்டது. இவர் பதவி விலகிய பிறகு இதுவரை புதுவைக்கு இரண்டு முறை வந்தார் ராகுல்காந்தி. ஆனால் மரியாதை நிமித்தமாகக் கூட அவரைச் சந்திக்கவில்லை. பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், கபில்சிபில், குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வந்தபோது அவர்களையும் சந்திக்-காமல் புறக்கணித்தார். இவரை மீண்டும் ஆக்டிவ் அரசியலுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்திய குலாம்நபி ஆசாத்தையும் மதிக்கவில்லை. 

மேலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரங்கசாமியின் ஆதரவாளர்கள் ரங்கசாமியின் படத்தைப் போட்டே பா.ம.க.வுக்கு ஆதரவு திரட்டினர். அப்போது உழவர்கரை நகராட்சி சேர்மன் ஜெயபால் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட எட்டு பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அப்போது கூட ரங்கசாமி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம், ஒரு நல்ல தலைவரை கட்சி இழக்கக்கூடாது என்பதுதான். ஆனால் இன்றுவரை காங்கிரஸுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். வரும் 30-&ம் தேதி சோனியாகாந்தி கலந்துகொள்ளும் விழாவில் பங்கேற்பதைப் பொறுத்துதான் ரங்கசாமியின் எதிர்காலம் இருக்கிறது’’ என்கின்றனர். 

இதுகுறித்து ரங்கசாமி ஆதரவாளகளிடம் பேசினோம். 

“ரங்கசாமி முதல்வராக இருந்தபோது வழங்கிய 10 கிலோ இலவச அரிசி, பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தலா ரூ.500, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், இலவச கணினி என பல திட்டங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களின் ஏகோபித்த ஆதரவை சம்பாதித்து மக்கள் முதல்வராக திகழ்ந்தார். 

தற்போது நாங்கள் அனைத்து தொகுதியிலும் ரகசியமான கணக்கெடுப்பை தொடங்கியுள்ளோம். அதில் கிடைத்த பேராதரவை ரங்கசாமியிடம் தெரிவித்தோம். இதையடுத்து மீண்டும் அனைத்து தொகுதியிலும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கட்சியிலிருந்து விலகி இருக்கும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். காங்கிரஸ் கட்சி இவர் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் இவர் சுதந்திரப் பறவையாகி தனிக்கட்சி தொடங்கவும் ஆயத்தமாகி விட்டார். அதாவது ‘பிரதேச ராஜீவ் காங்கிரஸ் கட்சி’ என்ற பெயரில் ஒரு புதுக் கட்சி பதிவு செய்யப்-பட்டிருக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்க திட்டமிட்டு வருகிறார் ரங்கசாமி. அதனால்தான் அனைத்து தொகுதியிலும் மற்றும் அனைத்து தொழிற்சாலைகளிலும் என்.ஆர்.பேரவை மற்றும் என்.ஆர். தொழிற்சங்க பேரவை போன்ற அமைப்புகளை தொடங்கிவருகிறோம்’’ என்றனர். 

ரங்கசாமியின் ஆதரவாளர்கள் சொல்வதற்கு ஏற்ற மாதிரி சமீபத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட ‘காங்கிரஸ் ஆட்சியின் மீதான குற்றப்பத்திரிகை’ என்ற 56 பக்கம் அடங்கிய புத்தகத்தில், ரங்கசாமிக்கு இருக்கும் ஆதரவையும், புதுவை முதல்வர் வைத்தியலிங்கம் மீதான குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து முன்னாள் முதல்வர் ரங்கசாமியிடம் பேசினோம். “என்னை அரசியலுக்கு அறிமுகப்படுத்தியது காங்கிரஸ்தான். எனவே, நான் காங்கிரஸுக்கு ஒருபோதும் துரோகம் செய்யமாட்டேன். என் மீது பற்றுள்ள ஆதரவாளர்கள் என் பெயரில் பேரவை மற்றும் இயக்கங்கள் தொடங்குகிறார்கள். அவர்களின் ஆர்வத்தைக் கெடுக்க நான் தயாராக இல்லை. மற்றபடி காங்கிரஸ் என் மீது நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் அதற்காக நான் சோர்ந்து-போகவும் மாட்டேன்” என்று முடித்துக்கொண்டார். 

இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியத்திடம் பேசினோம். “ரங்கசாமி சிறந்த மனிதராகவும் சிறந்த முதல்வராகவும் செயல்பட்டவர். சோனியாகாந்தியிடமே பலமுறை பாராட்டு பெற்றவர். அவர்மீதுள்ள பற்றின் காரணமாக கண்டிப்பாக சோனியா காந்தி பங்கேற்கும் விழாவில் கலந்துகொண்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கிறோம். அதேநேரம் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் யார் நடந்துகொண்டாலும் கட்சி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்” என்றார் விட்டுக்கொடுக்காமல்.

ஜுலை 30&ம் தேதியன்று புதுவையில் சோனியா பங்கேற்கும் விழாதான் புதுவை காங்கிரஸுக்கு ரங்கசாமி வில்லனா, ஹீரோவா என்பதற்கான கிளைமாக்ஸ்! 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இட ஒதுக்கீடு விஷயத்தில் திருப்புமுனை தீர்ப்பு:
கலைஞர் செய்ய வேண்டியது என்ன?
கருணாநிதி யோசனை

Karunanithi.jpg

‘‘தமிழகத்தில் 50 சதவிகிதத்துக்கும் மேல் பின்தங்கிய மக்கள் இருக்கிறார்களா என்பதற்கான ஆவணங்களையும், ஆதாரத்தையும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் தமிழக அரசு அளிக்க வேண்டும். அதற்கேற்ப புதிய இடஒதுக்கீடு சட்டத்தை உருவாக்க வேண்டும். அதுவரை தமிழகத்தில் 69 சதவிகிதம் இடஒதுக்கீடு அமலில் இருக்கும்’’ - ஜூலை 13 ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு சமூக நீதி ஆர்வலர்களால் உற்று நோக்கப்படுகிறது.


இந்நிலையில், பிற்படுத்தப்பட்டோர் நலனில் அக்கறை கொண்டவரும், இந்த வழக்கில் அரசு தரப்புக்கே பல ஆதாரங்களை அளித்து உதவியவருமான அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்கள் நலச் சங்க பொதுச் செயலாளர் கருணாநிதியை சந்தித்தோம். இட ஒதுக்கீட்டு வழக்கு கடந்து வந்த பாதையை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘உச்சநீதிமன்றம் வகுப்பு வாரி இடஒதுக்கீட்டை 1950-ம் ஆண்டு ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து பெரியார் நடத்திய போராட்டத்தின் விளைவாக அரசியல் பிரிவின் முதல் திருத்தம் சமூக நீதிக்கான திருத்தமாக இருந்தது. இன்று ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இடஒதுக்கீட்டை பெற்று இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் பெரியாரும், தமிழகமும்தான். இந்தியாவில் 1921-ம் ஆண்டு முதல் 1950-ம் ஆண்டுவரை நூறு சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கிய ஒரே மாநிலம் தமிழகம்தான். தற்போது அது 69 சதவிகிதமாக உள்ளது. தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்தும் விதத்தில் அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து அனைத்து கட்சிகளின் ஆதரவோடு 19.11.93ல் நிறைவேற்றினார். 1.9.94ல் இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இந்தச் சட்டம் ‘தமிழ்நாடு இடஒதுக்கீடு 1993 சட்டம்’ என்று முதன்முறையாக இந்தியாவில் முன்மாதிரியான சட்டம் உருவாக்கப்பட்டது. 

பிரதமர் வி.பி.சிங் பிற்படுத்தப்-பட்டோர்களுக்கு வழங்கிய 27 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் எந்தக் கட்டத்திலும் இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்துக்கு மேல் கூடாது என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு முன்னரே தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. மண்டல் கமிஷன் பரிந்துரை தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பைக் காரணம் காட்டி, தமிழகத்தில் ‘வாய்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த விஜயன் 50 சதவிகிதத்துக்கு மேல் இடஒதுக்கீட்டை உயர்த்தக் கூடாது என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்தான் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது’’ என கூறிய கருணாநிதி, இந்த வழக்கு விவகாரத்தில் தமிழகம் செய்யவேண்டியது பற்றியும் விளக்கினார். 

‘‘சமூக நீதியின் தலைநகரமாக இருக்கக் கூடிய தமிழகத்தில் ஏறத்தாழ 80 ஆண்டு கால வரலாற்றில் இது முக்கியமான தீர்ப்பு.

உச்சநீதிமன்றம் 1950ல் வழங்கிய தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 25 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டபோது வந்த தீர்ப்பு. ஆனால் 2010ல் வந்த இந்த தீர்ப்பு 50 விகிதத்திற்கு மேல் இடஒதுக்கீடு தொடர்வதற்கு ஒரு மாநிலம் வழிவகை செய்யக் கூடிய தீர்ப்பு. 

இந்தியாவில் பல மாநிலங்களில் 50 சதவிகிதத்திற்கும் மேல் இடஒதுக்கீடு கிடையாது. இந்தத் தீர்ப்பின் மூலம் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க ஒரு வாய்ப்பினை அளித்திருக்கிறது. 

தமிழக பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ஜனார்த்தனம் ஏற்கனவே தமிழக அரசுக்கு ஓர் அறிக்கை தந்திருக்கிறார். அதில், ‘மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுத்துவரும் நிலையில், தமிழகத்தில் ஜாதிவாரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் அனுப்ப வேண்டும். மக்கள் தொகை இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு 2011&ம் ஆண்டு நடைபெறும் போது தமிழகத்தில் ஜாதிவாரியான கணக்கெடுப்பை நடத்த உதவ கேட்டுக்கொள்ள வேண்டும். தமிழக அரசு தனியாக நடத்தினால் கால தாமதம் மற்றும் 500 கோடி ரூபாய் அளவுக்கு செலவாகும். மத்திய அரசு எடுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு சேர்த்து எடுத்துவிட்டால் எல்லாம் மிச்சப்படும்’ என்றும் கூறியிருக்கிறார்.

சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் தமிழகத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கையும், அவர்களில் எத்தனை பேர் டாக்டர்கள், இன்ஜினியர்கள், விவசாயிகள், வறுமைகோட்டிற்கு கீழே இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். 1931&ம் ஆண்டுக்குப் பிறகு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்கவில்லை என்று சிலர் சொல்வது தவறு. அதேபோல ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினால் தேவையற்ற கொந்தளிப்பு ஏற்படும் என்று சொல்வதும் தவறு. ஆங்கிலேயர் காலத்தில் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பகுதிகள் இந்தியாவில் இருந்த காலகட்டத்திலேயே இது சாத்தியப்பட்டிருக்கிறது. மேலும் டச்சு ஆதிக்கம் இருந்த புதுச்சேரி மற்றும் கோவா போன்ற பகுதிகள்தான் இந்தப் பட்டியலில் இல்லை. வசதிகள் இல்லாத காலகட்டத்திலேயே ஜாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியப்பட்டபோது, அனைத்து வசதிகளும் நிறைந்த இந்தியாவில் இது சாத்தியப்படாதா?

ஒரு ஆண்டுக்குள் அறிக்கை சமர்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் கணக்கெடுப்பு முடிவுகள் மூன்று மாதத்தில் வந்துவிடும் என்பதால் நாம் அதை வைத்து அறிக்கை தயாரித்துவிடலாம். இதன் மூலம் ஆண்டுதோறும் இடைக்கால நிவாரணம் மூலம் 69 சதவிகித இடஒதுக்கீட்டை பெறுவது தடுக்கப்பட்டு, முழுமையான நிவாரணம் கிடைக்கும்’’ என்று விளக்கி முடித்தார் கருணாநிதி.

இந்திய அளவில் சமூக நீதியை நிலைநாட்டும் பெருமையை தமிழகம் பெறவேண்டுமானால், அதன் பலன்களை இந்தியா முழுமையும் அனுபவிக்க வேண்டுமானால்... தமிழக அரசு ஒரு வருடத்துக்குள் உச்சநீதிமன்றம் கேட்ட அறிக்கையை தாக்கல் செய்வதில் வேகம் காட்ட வேண்டும் என்பதே சமூக நீதி ஆர்வலர்களின் அவா.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

"தினபூமி' ஆசிரியர் கைது: ஜனநாயக விரோத செயல் : பல தரப்பினர் கண்டனம்

சென்னை : "சமூக விரோதியைப் போல், "தினபூமி' ஆசிரியர் மணிமாறனை நள்ளிரவில் கைது செய்தது, ஜனநாயகத்திற்கு எதிரான செயல்; வாய்ப்பூட்டு போடும் நடவடிக்கைகள், கருத்து சுதந்திரத்தை படு குழியில் தள்ளும்' என, பல்வேறு தரப்பினரும் கண்டம் தெரிவித்துள்ளனர்.

large_45180.jpgவிதிமுறைகளை மீறி மதுரையிலிருந்து கிரானைட் கற்கள் கடத்தப்படுவதாக சில நாட்களுக்கு முன், "தினபூமி' நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, பணம் கேட்டு மிரட்டியதாக, "தினபூமி' ஆசிரியர் மணிமாறன் (55), உட்பட மூன்று பேரை, மதுரையில் போலீசார் கைது செய்தனர். இச்செயலுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

"தினபூமி' நாளிதழ் செய்தி ஆசிரியர் புருசோத்தமன் வெளியிட்ட அறிக்கையில், "ஊழலை அம்பலப்படுத்தியதற்காக நள்ளிரவில் சமூக விரோதி போல், பத்திரிகை ஆசிரியரை கைது செய்துள்ளது, பத்திரிகை சுதந்திரத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும், செய்தி வெளியிடும் சுதந்திரத்தின் மீதும் தொடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய தாக்குதல். இதை சட்டப்பூர்வமாக சந்திப்போம்' என்று தெரிவித்துள்ளார்.

பா.ஜ., மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், "தி.மு.க.,வைச் சேர்ந்தவர்களுக்கு நள்ளிரவு கைதின் துயரம் தெரியும். இருந்தும், ஒரு பத்திரிகை ஆசிரியரை, நள்ளிரவில் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. அவர் எழுத்துக்களில் தவறு இருப்பின், கோர்ட், அரசு நடவடிக்கைகளின் மூலம் தீர்வு காண முடியும். தமிழக அரசின் எடுத்தோம், கவிழ்த்தோம் செயலை, பா.ஜ., கண்டிக்கிறது' என தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூ., மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிரானைட் கற்கள் சட்ட விரோதமாக கடத்தல், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்த, "தினபூமி' செய்திக்கு, உண்மை நிலையை விளக்குவதற்கு பதிலாக, ஆசிரியரை நள்ளிரவில் கைது செய்துள்ளதை மார்க்சிஸ்ட் செயற்குழு கண்டிக்கிறது. கடத்தல் தொடர்பாக உண்மை விவரத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்ற இணை செயலர் பாரதி தமிழன் வெளியிட்ட அறிக்கையில், "செய்திகளை வெளியிடுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பதும், கைது செய்து சிறையில் அடைப்பதும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல். வாய்ப்பூட்டு போடும் நடவடிக்கைகள், கருத்து சுதந்திரத்தை படுகுழியில் தள்ளிவிடும்' என தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

ஆசிரியர் விடுதலை: முதல்வர் கருணாநிதி, தினபூமி ஆசிரியை விடுவிக்குமாறு நேற்று காலை உத்தரவிட்டார்.  அதற்கேற்ப, தினபூமி ஆசிரியரும், அவர் மகனும், தங்களை ஜாமீனில் விடுவிக்கும்படி, கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். மூவருக்கும் ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி உத்தரவிட்டார். நேற்று மதியம் விடுவிக்கப்பட்டனர்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மது அருந்திய ஆசிரியரை “டிஸ்மிஸ்” செய்யலாம் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு
மது அருந்திய ஆசிரியரை    “டிஸ்மிஸ்” செய்யலாம்    ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு
சென்னை, ஜூலை. 19-
வேலூரைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ஜான்பாஸ்கோ ஆர்.சி.எம். பள்ளியில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 1992-ம் ஆண்டு பள்ளி நிர்வாகத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஜான்பாஸ்கோ ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் கூறி இருந்ததாவது:-
எனக்கு அதிக ரத்த அழுத்தம் இருந்ததாகவும், மது அருந்தியதாகவும் பள்ளி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்தது. பள்ளியில் கொடுக்கப்பட்ட அதிக பணி சுமைதான் எனது ரத்த அழுத்தம் உயர்வதற்கு காரணம் ஆகும்.
எனது இயலாததன்மையை கருத்தில் கொண்டு மாற்றுத் திறனாளியாகி கருதி எனக்கு பள்ளியிலேயே தகுந்த வேலை ஒதுக்கி தரவும், என்னை பள்ளி நிர்வாகம் “டிஸ்மிஸ்” செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பால்வசந்தகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளியின் சார்பில் விளக்கம் அளித்தனர். அதில், ஆசிரியர் ஜான்பாஸ்கோ தினமும் மது அருந்தி விட்டுத்தான் பள்ளிக்கு வருவார். பாடம் நடத்த முடியாமல் மாணவர்கள் முன்பு தள்ளாடுவார். கரும்பலகையில் எழுத முடியாமல் அவரது கைகள் உதறும். எனவே அவரது நடவடிக்கைகள் வருங்கால தூண்களான மாணவ-மாணவிகள் கெட்ட நடவடிக்கைகளுக்கு தூண்டும் என்பதால் டிஸ்மிஸ் செய்தோம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பால்வசந்த குமார் அளித்த தீர்ப்பு வருமாறு:-
பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒழுங்கீன செயல்களை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த நீதிமன்றம் இது போன்ற பல்வேறு வழக்குகளை விசாரித்துள்ளது.
மது அருந்திய ஆசிரியர்கள் மற்றும் ஒழுங்கீனமானவர்களின் செயல்களை ஏற்றுக் கொண்டால் அது மாணவர்களின் கல்வியையும், பள்ளியையும் பாதிக்கும். கல்விப்பணிக்கு களங்கம் ஏற்படும். எனவே மது அருந்தி பள்ளிக்கு வந்த ஆசிரியரை “டிஸ்மிஸ்” செய்தது செல்லும். அதே நேரத்தில் பென்சன் உள்ளிட்ட சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தீர்ப்பு கூறினார்.
aPlus.gif


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Sexual relations on false promise of marriage not rape: HC
PTI, Jul 23, 2010, 03.35pm IST
NAGPUR: The Bombay High Court has ruled that sexual relationship with a woman on a false promise of marriage does not amount to rape. 

Acquitting a Yavatmal man in a rape case, the single bench High Court here observed that sexual relationship after promising marriage and reneging on it does not amount to rape. 

Justice Ambadas Joshi set aside the Yavatmal Session Court order convicting Sandip Rathod (now 42) under IPC section 376 (rape). The victim was allegedly 16 years old in 1996. 

The court said the victim's age has been proved to be around 18 when the incident occurred. 

Rathod, then 30 years old, was serving at a forest office near the victim's house. He developed physical relations with her and promised marriage. She informed her parents when she became pregnant and Rathod was arrested following a complaint lodged by her parents. 

Charged with repeatedly having sexual relations with an then "underaged" girl on and before November 11, 1996, the sessions court sentenced him to 10-year rigorous imprisonment. 

Two years later, the convict moved the High Court.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘இன்னும் அதிகம் பேசுவேன்!’’
சீற்றம் குறையாத சீமான் பேட்டி
Seeman%202.jpg

‘‘நான் சிறைக்கு செல்கிறேன் என்றால் அந்த சிறையிலும் நாம் தமிழர் இயக்கத்தின் கிளையை துவங்கப்போவதாக பெருமிதப்படுவேன்’ என தன் இயக்கத்தினரிடம் உற்சாகமாகச் சொல்வார் இயக்குனர் சீமான். அதன்படியே வேலூர் மத்திய சிறையில் ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் கிளையை துவக்கி வைக்க சீமானை அங்கு அனுப்பியிருக்கிறது தமிழக அரசு.


Seeman%201.jpgஇனப் படுகொலை குற்றவாளியான இலங்கைக்கு உதவும் ரஷ்ய, சீன அரசுகளை கண்டித்தும், இதுவரை 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்களக் கடற்-படைக் காடையர்கள் சுட்டும் அடித்தும் கொன்றதைக் கண்டித்தும் ‘நாம் தமிழர்’ இயக்கம் சார்பில் ஜூலை 10 &ம் தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

அதில் பங்கேற்ற சீமான், ‘‘தமிழகத்தில் எத்தனை சிங்களர்கள் இருக்கின்றனர் என்று, ‘நாம் தமிழர்’ இயக்கம் கணக்கெடுத்து வைத்திருக்கிறது. இனி ஒருமுறை தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால், சிங்களர்கள் யாரும் உயிருடன் இலங்கை திரும்ப முடியாது. இந்த நிலை நீடித்தால் தமிழகத்தில் சிங்கள மாணவர்கள் யாரும் வெளியில் நடமாட முடியாது’’ என்று பேசினார். இந்தப் பேச்சுக்-காகத்தான் இனக்கலவரத்தை தூண்டியதாக சீமான் மீது வழக்குப் பதிவு செய்தது தமிழக போலீஸ். சீமான் உடனடியாக ஜாமீனில் வெளியே வந்து-விடக் கூடாது எனத் திட்டமிட்டு விடுமுறை நாட்களான சனி, ஞாயிறுக்குள் கைது செய்ய களமிறங்கியது போலீஸ். போலீஸாரின் முயற்சி பலிக்கவில்லை. அவர் கோர்ட்டில் சரணடைவதை தடுக்க சைதாப்பேட்டை, எழும்பூர், ஜார்ஜ் டவுன் உள்ளிட்ட பல கோர்ட்டுகள் முன்பும் உளவுத் துறை போலீஸார் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில்தான் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் (பிரஸ் கிளப்) செய்தியாளர்களை 12&ம் தேதி காலை சந்தித்துவிட்டு அங்கேயே கைதாக திட்டமிட்டார் சீமான். 

இந்தத் தகவல் பரவ... அன்று காலை 6 மணி முதலே பிரஸ் கிளப் அமைந்திருக்கும் சேப்பாக்கம், அரசினர் தோட்டத்தை ஆக்கிரமித்தது போலீஸ். இதற்கிடையில் சீமான் சார்பில் தீரன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் பேட்டியளித்தனர். அப்போது பேசிய ஷாகுல் அமீது, ‘பத்திரிகையாளர் முன்னிலையில் சீமான் கைதாவார்’ என்று தகவலை கசியவிட்டார். 

கைதாகும்போது சீமானின் வாயிலிருந்து ஒற்றைச் சொல் கூட உதிர்ந்துவிடக் கூடாது என்பதற்காக ரொம்பவே மெனக்கெட்டனர் போலீஸார். அரசினர் தோட்டத்துக்கு வந்த எம்.எல்.ஏ.க்களின் கார்களைக் கூட... கண்ணாடியை இறக்கி சோதனை செய்த பிறகே செல்ல அனுமதித்தனர். ஏதோ காஷ்மீர் தீவிரவாதியைப் பிடிப்பதைப் போல பிரஸ் கிளப் பின்புறம் இருந்த முட்புதர்களுக்குள்ளும் போலீஸார் பதுங்கியிருந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் ஓமக்குச்சி நரசிம்மன் சைசில் மொபட்டில் ஹெல்மெட் அணிந்து வந்தவரைக் கூட தடுத்து நிறுத்தி ஹெல்மெட்டைக் கழற்றச் சொல்லி, அவர் சீமானா என்று பார்த்ததுதான்.

இத்தனை பரபரப்புக்கிடையில் காலை 11.30 மணிக்கு சிகப்பு நிற காரில் பிரஸ் கிளப் வந்தார் சீமான். காரைவிட்டு இறங்கி அவர் பேட்டியளிப்பதை தடுத்து, சீமானை கைது செய்ய காருக்கு அருகே விரைந்தது போலீஸ். இதனால் சில நிமிடங்கள் காருக்குள்ளேயே இருந்தார் அவர். பத்திரிகையாளர்கள் வட்டத்தில், தான் இருப்பதை உறுதி செய்துகொண்ட சீமான் வெளியே வந்து பேசத் தொடங்கினார். எனினும் அவரை பேசவிடாமல் பத்திரிகை-யாளர்களை தள்ளிவிட்டு சீமானை இழுத்துச் செல்ல முனைந்தது போலீஸ். இதில் பல பத்திரிகையாளர்கள், டி.வி. கேமரா மேன்கள் காயமடைந்தனர். இதைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இதற்கிடையே சீமான், தன் கைப்பட எழுதி கொண்டுவந்த நான்கு பக்க கடிதத்தை பத்திரிகையாளர்களிடம் கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் அவரை வேனில் ஏற்றிய போலீஸார் சென்னை மெரினா பீச் வழியாக கொண்டு சென்றனர். ரகசிய இடத்தில் அவரை சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் வைத்திருந்து... பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை ஜார்ஜ் டவுன் ஏழாவது கோர்ட்டில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் உத்தரவு வாங்கினர். 

சிறைக்குச் செல்லும் முன் நீதிமன்ற வளாகத்தில் சீமானை சந்தித்தோம். 

உங்கள் கைதுக்கான காரணத்தைப் போலீஸார் சொன்னார்களா?

நான் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பேசியதாக என் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. நான் இலங்கை அரசைத்தான் கண்டித்து பேசியிருக்கிறேன். இதில் எங்கே இந்திய ஒற்றுமைக்கு ஆபத்து வந்தது? அப்படி ஆபத்து என்றால் இலங்கை, இந்திய மாநிலங்களில் ஒன்றா? இந்த என் கேள்விக்கு கலைஞர் பதில் சொல்ல வேண்டும். எந்த சொந்த நாடாவது தன் மக்களை கொல்லுமா? தமிழகத்தில் 537 மீனவர்களை கொன்று இருக்கிறது இலங்கை அரசு. அவர்களை கண்டிக்க வக்கில்லாத தமிழக அரசு என் மீது பொய் வழக்கு போடுகிறது.

உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்-பட்டதும் ஏன் தலைமறை-வானீர்கள்?

தமிழக போலீஸார் என்னை இரவு நேரத்தில் கைது செய்திருப்பார்கள். அதற்கான காரணத்தை முறையாக என்னிடம் சொல்லியிருக்க மாட்டார்கள். எங்கோ என்னை கொண்டு சென்று மறைத்து வைத்து நாடகமாடியிருப்பார்கள். என் கைதின் மூலம் சட்டம்& ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தலாம், எங்களை மக்கள் விரோத கட்சியாக சித்தரிக்கலாம் என்ற கலைஞரின் திட்டத்துக்கு நாங்கள் பலியாகவில்லை. அதனால்தான் இன்று (12&ம் தேதி) பத்திரிகை-யாளர்களை சந்தித்துவிட்டு, உங்கள் முன்னிலையில் போலீஸாரிடம் கைதாகும் திட்டத்தோடு இருந்தேன். ஆனால், என்னை பத்திரிகையாளர்களிடம் பேச விடாமல் தடுத்து போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். 

உங்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளார்களாமே?-

‘‘ஈழத் தமிழர்கள் பற்றி என்னை பேச விடாமல் தடுக்கவும், எமது இயக்க வளர்ச்சியை முடக்கவும் கலைஞர் எடுத்த நடவடிக்கைதான் இந்தக் கைது. என் மீது அவர் ஆயிரம் பொய் வழக்குகள் பதிவு செய்தாலும் அதில் இருந்து நான் வெளியே வருவேன். இதைவிட அதிகம் பேசுவேன் என்று என்னைவிட கலைஞருக்கு நன்றாகத் தெரியும்.

தமிழக மீனவர்கள் நலன், ஈழத் தமிழர்கள் நலனுக்காக போராடும் நான் குண்டர் என்றால்... உண்மையான குண்டர்களை இந்த அரசு என்ன சொல்லும் தியாகி என்றா? அவர்களை என்ன செய்யும்?’’ என்று ஆவேசமாகக் கேட்டுவிட்டு சிறைக்குக் கிளம்பினார் சீமான்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அங்கீகாரமற்ற போதை மீட்பு மையங்களை மூட உத்தரவு

சென்னை : "தமிழகம் முழுவதும் செயல்படும் அங்கீகாரமற்ற போதை மீட்பு மையங்களை உடனடியாக மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


ஐகோர்ட்டில் பழனிசெல்வன், அசோக்குமார் தாக்கல் செய்த மனுக்களில், "தமிழகத்தில் போதை மீட்பு மையங்கள் பல இயங்கி வருகின்றன. சிகிச்சைக்காக இங்கு வருபவர்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். பணம் பறிக்கும் நோக்கத்தில் பல மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களை ஒழுங்குபடுத்த உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த அக்கரை கிராமத்தில் இயங்கி வரும் மான்ஸ்ரீ நெட்ஒர்க் இந்தியா டிரஸ்ட், சோழிங்கநல்லூரில் உள்ள சாதனை நெட்ஒர்க் இந்தியா டிரஸ்ட் குறித்தும் புகார்கள் கூறப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட், இப்பிரச்னை குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த இரண்டு மையங்கள் குறித்து எந்த புகாரும் இல்லை என போலீஸ் கமிஷனர் மனு தாக்கல் செய்தார்.


கடந்த 12ம் தேதி இந்த மனுக்கள் நீதிபதிகள் தர்மாராவ், சசிதரன் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அக்கரை கிராமத்தில் மான்ஸ்ரீ நெட்ஒர்க் இந்தியா டிரஸ்ட், பதிவு பெறாமல் இயங்கி வருகிறது என்பதால் 5ம் தேதி மூடப்பட்டு விட்டது என்றும் சாதனை நெட்ஒர்க் பற்றி கருத்து தெரிவிக்க இயலாத நிலையில் இருப்பதாக சிறப்பு அரசு பிளீடர் தெரிவித்தார். அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சமூக பாதுகாப்பு கமிஷனர் கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பிய கடிதத்தின் நகலையும் சிறப்பு அரசு பிளீடர் தேசிங்கு தாக்கல் செய்தார். அதில், "மாவட்டங்களில் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் போதை மீட்பு மையங்களை மூட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.


இதையடுத்து, நீதிபதிகள் தர்மாராவ், சசிதரன் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: மத்திய சமூக நீதி அமைச்சகம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை, போதை மீட்பு மையங்கள் பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் போதை மீட்பு மையங்கள் அதிக அளவில் செயல்படுவதாக சமூக நீதி கமிஷனர் தெரிவித்துள்ளார். மையங்கள் செயல்படுவதற்கான விதிமுறைகளை அரசு வகுத்துள்ள போது, அதை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். அங்கீகாரம் இன்றி செயல்படும் மையங்களை மாவட்ட கலெக்டர்கள், போலீசார் நேரில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காளான் முளைப்பது போல் போதை மீட்பு மையங்கள் வருவது, மாநில நலனுக்கு உகந்தது அல்ல. ரிட் மனுவில் கூறியுள்ள விவரங்கள், போதை மீட்பு மையங்களின் நிலையை வெளிப்படுத்துகிறது. இத்தகைய அங்கீகாரம் இல்லாத மையங்கள் செயல்படாமல் இருப்பதை பார்த்துக் கொள்ள, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்கரையில் உள்ள மான்ஸ்ரீ நெட்ஒர்க் மையம் மூடப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெறாமல் இந்த மையம் மீண்டும் திறக்காதவாறு போலீஸ் கமிஷனர் பார்த்துக் கொள்ள வேண்டும்.


சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரியில் இயங்கும் சாதனை நெட்ஒர்க் குறித்து போலீசின் அறிக்கை மவுனமாக உள்ளது. எனவே, இந்த மையத்தை ஆய்வு செய்ய அதிகாரிகளை போலீஸ் கமிஷனர் அனுப்ப வேண்டும். மையம் செயல்படுவதற்கு முறையான அனுமதி பெற்றிருக்கவில்லை என்றால், அதை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் உள்ள சமூக பாதுகாப்பு கமிஷனர், அங்கீகாரமற்ற மையங்கள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் அனைத்து போதை மீட்பு மையங்களையும் உடனடியாக மூடுவதற்கு தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், சென்னை மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

And CPM says 'We are Secular' - A Photo feature
17/06/2010 16:16:06


01slid2_thumb%5B1%5D.jpg?imgmax=800

The Day Pinarai Vijayan compared this terrorist with Mohandas Karamchand Gandhi
MA%20Baby%20PDP%20Function_thumb%5B4%5D.jpg
Note the PDP - Terrorist organisations badge on M A Baby -Education and Cultural Minister of Kerala
Madhani%20Welcome%20MA%20Baby%20and%20N%20k%20Premachandran_thumb%5B3%5D.jpg
Redcarpet welcome to Madani by Communist ministers MA Baby-CPM and N.K.Premachandran RSP(Revolutionary Socialist Party)
Madhani_thumb%5B5%5D.jpg
Begging votes in the name of a Terrorist

Courtesy:
http://nomadmolouges.blogspot.com/2008/12/where-do-their-loyalties-lie.html
http://jokesfromindianleft.blogspot.com/2009/04/secular-cpm.html


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

செக்ஸ் புகார்: பேராசிரியர் சஸ்பெண்ட்
சென்னை : பிஎச்.டி., மாணவிக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்த புகாரில் சிக்கிய சென்னை பல்கலைக் கழக போராசிரியர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். சென்னை பல்கலைக் கழக தமிழ் மொழியியல் போராசிரியர் பொன்னுசாமி. இவர் செக்ஸ் தொந்தரவு கொடுப்பதாக, 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பிஎச்.டி., மாணவி ஒருவர் புகார் கொடுத்தார்.
இப்புகாரை விசாரித்த பல்கலைக் கழக கமிட்டி, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அறிக்கை தாக்கல் செய்தது. நேற்று நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையில், பொன்னுசாமி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், அவரை சஸ்பெண்ட் செய்ய சிண்டிகேட்டில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், தக்க ஆலோசனை பெற்று, குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் திருவாசகம், நிருபர்களிடம் கூறியதாவது: கணித மேதை ராமானுஜம் கைப்பட எழுதிய புத்தகம், "மைக்ரோ பிலிமிங்' முறையில் அச்சிடப்பட்டு, ஐதராபாத்தில் நடக்கும் சர்வதேச கணித அறிஞர்கள் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. "டிஸ்லெக்சியா' மாணவர்களுக்கு முதுநிலை படிப்பில் தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும். அடுத்த கல்வியாண்டு முதல், இளநிலை அறிவியல் படிப்பில் 40 மாணவர்களையும், இளநிலை கலை படிப்பில் 60 மாணவர்களையும் மட்டுமே சேர்ப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மதுராந்தகத்தில் உள்ள மாலோலன் கல்லூரிக்கு தமிழக அரசு, நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட இடம் அக்கல்லூரிக்குச் சொந்தமானது அல்ல என கோர்ட் தீர்ப்பு வழங்கினால். கல்லூரிக்கான அனுமதி திரும்பப் பெறப்படும். அதே நிபந்தனையுடன் அக்கல்லூரிக்கு, சென்னை பல்கலைக் கழகமும் அனுமதி வழங்கி உள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!

Title.jpg
நன்றி: ஜூனியர் விகடன்


குற்றத்துக்கு ஆதாரம்... அதுவே, கூசவைக்கும் வியாபாரம்... அது எது?

இப்படி யாராவது விடுகதை போட்டால்,தயங்காமல் சொல்லலாம் 'கேமரா செல்போன்' என்று!

ஆம்... ஆந்திர ஆளுநர் மாளிகைக்குள் எடுக்கப் பட்டதாக 'திவாரி - சவாரி' வீடியோ காட்சிகள் வெளியான மறுநாள் நம் அலுவலகத்துக்கு வந்த பார்சல், மேற்சொன்னபடிதான் நம்மை மருள வைத்தது!

'இன்னும் பல பெண்களின் வாழ்க்கை பாழாவதற்கு முன்னால் இதுபற்றித் தீர
விசாரித்து ஜூ.வி-யில் எச்சரிக்கை ரிப்போர்ட் எழுதுங்கள்' என்று இறைஞ்சியது, அந்த சி.டி-யுடன் இருந்த ஒரு கடிதம்!

சி.டி-யை ஓடவிட்டதுமே அதில் விரிந்த ஆபாசக் காட்சிகளை நம்மால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. அதேசமயம், அந்த ஒரே சி.டி-க்குள் அடுத்தடுத்து பதிவாகி இருந்தவை, வெவ்வேறு ஜோடிகள் சம்பந்தப்பட்ட காட்சி என்பதை உணர முடிந்தது. உணருவதென்ன... எந்த ஒளிவுமறைவோ, இருட்டு நிழலோ இல்லாமல் தெள்ளத் தெளிவாக ஓடின காட்சிகள்.

சி.டி-யுடன் இணைத்திருந்த கடிதம், ''இதில் உள்ள எல்லா ஜோடிகளுமே கணவன் - மனைவியர்தான். அவரவர் வீட்டுப் படுக்கையறையில் அரங்கேறிய அந்தரங்கங்கள்தான் இவை. காதோடு வைத்து ரசிக்க வேண்டிய தாம்பத்யம் என்ற சங்கீதத்தை, செல்போன் கேமரா கொண்டு விளையாட்டாகப் பதிவு செய்ததன்மூலம், இப்படி ஊரறிய அலறும் லவுட் ஸ்பீக்கராக மாற்றி விட்டார்கள். காஞ்சி காம குருக்கள் தேவநாதன் விஷயத்தில் நடந்ததுபோலவே, இவர்களின் செல்போனை சர்வீஸுக்குக் கொடுத்தபோதோ... எக்ஸ்சேஞ்சாக விற்றபோதோ இவர்கள் 'டெலிட்' செய்திருந்தும், 'ரெட்ரீவ்' செய்யப்பட்ட காட்சிகள்தான் இவை.



இத்தனையும் கூறுகிற நானும் ஒரு செல்போன் சர்வீஸ் சென்டரில் வேலை பார்ப்பவன்தான். அடுத்தவர்களின் அந்தரங்கத்தை வெறியோடு தோண்டியெடுத்து, அதை மொத்தமாக சி.டி. போட்டு விற்கிற வக்கிரம், சில செல்போன் சர்வீஸ் பாய்களின் மூலமாக நடக்கிறது. அதிலும், கள்ள உறவுகளை இதுபோன்ற பதிவுகளாகப் பார்த்து அலுத்துவிட்ட ஒரு வக்கிர கும்பலுக்கு... இதுபோன்ற 'நல்ல உறவுகளை'ப் பார்க்கிற ஆசை வந்து... அதுவே இப்படி செட் செட்டாக மார்க்கெட்டில் விற்கிறது!'' என்று கிட்டத்தட்ட கதறியிருந்தது.

சைபர் கிரைம் பிரிவில் உள்ள நமது நட்பு போலீஸாரிடம் இதுபற்றி தமிழகம் முழுவதும் விசாரித்தபோது... கடிதத்தின் வார்த்தைகள் எத்தனை சத்தியமும் வீரியமும் மிக்கவை என்று புரிந்தோம்... மொத்தமாக அதிர்ந்தோம்! ''ரியாலிட்டி கிளிப் பிங்ஸ் என்று இதற்குப் பேர் வைத்து விற்கிறார்கள்.

சர்வீஸுக்கு ஒரு செல்போன் வருதுன்னாலே 'டெலிட்' செய்யப்பட்ட பிறகும் அதில் பதுங்கியிருக்கிற விஷயங்கள் என்னென்ன என்பதை ஆராய்வது, பல கடைகளில் உள்ள வயசுப் பையன்களின் வேலையாக இருக்கிறது. அதிலும் கண்ணுக்கு லட்சணமான பெண்கள் வந்து சர்வீஸுக்குக் கொடுத்தால், தேடல் ரொம்ப பலமாகிவிடும்.

மனைவியைவிட்டுப் பிரிந்து வெகு தூரத்தில் வேலை பார்க்கிற ஒருசில கணவர்கள்தான் இப்படி தங்கள் அந்தரங்கத்தை மனைவிக்குத் தெரிந்தே பதிவு செய்து வைத்துக் கொள்கிற தவறை முதலில் அரங்கேற்ற ஆரம்பித்தார்கள்.

பிரிவுத் துயரத்தின்போது, பர்ஸுக்குள் இருக்கிற போட்டோவை எடுத்துப் பார்க்கிற மாதிரி இதுவும் அவர்களுக்கு சர்வ சாதாரணமாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான், இந்த வீடியோவின் காட்சிகளில் வருகிற மனைவியர் முதலில் ஏகத்துக்கும் வெட்கப்படுவதும், பிறகு கள்ளங்கபடமேயில்லாமல் காஷுவலாக இருப்பதுமாக சில ஒற்றுமைகள் தெரியும்.

எங்களுக்குத் தெரிந்து செல்போன் சர்வீஸ் நிலையங்களில் வேலை பார்க்கும் சில இளைஞர்கள் பெரிய நகரங்களில் தங்களுக்குள் சங்கம் அமைக்காத குறையாக இதுபோன்ற காட்சிகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.

இன்னும் சில புத்திசாலிகள்தான், இவற்றையெல்லாம் தொகுத்து சி.டி-யாக்கி அதன் மாஸ்டர் காப்பியை பல ஆயிரம் ரூபாய்கள் வரை விற்கிறார்கள். சென்னையில் அப்படிப்பட்ட நான்கைந்து பேருக்கு நாங்கள் பொறி வைத்திருக்கிறோம்'' என்றவர்கள்,

''தன் மனைவியை இப்படி வற்புறுத்தி பதிவு செய்துவிட்டு, அதையே தன் நண்பர்கள் கண்ணுக்கு தீனியாக்கிய ஒரு கணவனை லேட்டஸ்டாகப் பிடித்திருக்கிறோம்'' என்று சொல்லி, நம்மை மாதவரம் போலீஸாரிடம் அனுப்பி வைத்தார்கள். அந்த ஏரியாவைச் சேர்ந்த ஆன்னெல்லா டால்மியா என்ற பெண்மணியின் பரிதாபக் கதையைச் நம்மிடம் சொன்னார் மாதவரம் இன்ஸ்பெக்டர் குமரன்.

ஏடாகூட எரல் எல்லீஸ்!

''டால்மியாவின் கணவர் எரல் எல்லீஸ் தனியார் கார் கம்பெனி ஒன்றில் லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கும் பொறுப்புள்ள அதிகாரி. போன ஜனவரி மாதம்தான் ரெண்டு பேருக்கும் திருமணம் நடந்திருக்கு. மணமான நாளில் இருந்தே எரல் எல்லீஸ் புளூ ஃபிலிம் பார்க்கச் சொல்லி ஆனெல்லாவை வற்புறுத்தி இருக்கார்.

இன்றைய காலகட்டத்தில் பல தம்பதிகள் இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்த்து, அதன்படியே உறவு வச்சுக்க விரும்புறாங்க. டால்மியாவிடமும் இதை வலியுறுத்தி இருக்கார் எரல் எல்லீஸ். இதனையெல்லாம் தாண்டி உச்சகட்டமாக மனைவியுடன் தனிமையிலிருந்த தருணத்தை அப்படியே செல்போனில் படம் பிடிக்கவும் செய்திருக்கிறார்.

'கணவர்தானே படம் எடுக்கிறார்' என்று வேறு வழியில்லாமல் டால்மியாவும் பொறுத்துக் கொண்டார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே எரல் - டால்மியா உறவுக் காட்சிகள் மாதவரம் ஏரியாவில் பலருடைய செல்போன்களுக்கும் பரவத் தொடங்கிவிட்டது.

ஒருகட்டத்தில், குடும்ப நண்பர் ஒருவர் மூலம் டால்மியாவுக்கே இது தெரியவர... நடுங்கிப் போனவராகக் கணவரிடம் அதுபற்றி விசாரித்திருக்கிறார். அப்போதுதான் அந்த தாம்பத்திய காட்சிகளை நண்பர்கள் சிலருக்கு எரல் எல்லீஸ் போட்டுக் காட்டிய உண்மை தெரிந்திருக்கிறது.

ப்ளூடூத் மூலம் அதை வாங்கிக்கொண்ட ஒரு நண்பர் மூலமாகவே அந்தக் காட்சிகள் ஒரு செல்போன் சர்வீஸ் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து வியாபாரமாகிவிட்டது. டால்மியா கொடுத்த புகாரின் பேரில் இப்போது எரல் எல்லீஸை சிறையில் அடைத்திருக்கிறோம்...'' எனச் சொன் னார் இன்ஸ்பெக்டர் குமரன்.

பூகம்ப புவனேஸ்வரன்!

கோவை போலீஸாரிடமிருந்து நமக்கு வந்துசேர்ந்த விவரம் அடுத்தகட்ட பயங்கரம்!

இவர்களிடம் சிக்கி இருக்கும் புவனேஸ்வரன் என்பவனோ, பல பெண்களோடு பாச நேசமாகப் பழகி, நெருக்கமான காட்சிகளைப் பதிவு செய்து, அதனை சந்தைக்குக் கொண்டுவந்து, இப்போது போலீஸில் சிக்கி இருக்கிறான். ''ஓரளவுக்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் இவன். 10-ம் வகுப்புக்கு மேல படிப்பு ஏறாததால, ஊர் சுத்த ஆரம்பிச்சிருக்கான். 20 வயசுலயே லவ் பண்ணி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான். அந்தப் பொண்ணைக் கொஞ்ச நாள்ல துரத்தி விட்டுட்டு, காலேஜ் பொண்ணுங்களை குறிவச்சு கவர் பண்ண ஆரம்பிச்சு இருக்கான்.

அவன்கூட ஸ்கூல்ல படிச்ச பசங்க, இப்போ காலேஜ் படிச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்களோட மொபைல்ல இருக்கிற பொண்ணுங்க நம்பரை மட்டும் நோட் பண்ணிட்டு, தினமும் ராத்திரி நேரத்துல அவங்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஆரம்பிச்சிருக்கான்.

புது நம்பர்ல இருந்து எஸ்.எம்.எஸ். வருதேன்னு, விவரம் புரியாம கூப்பிட்டுப் பேசுற பொண்ணுங்ககிட்ட நைஸா பேச்சை வளர்த்திருக்கான். தொடர்ந்து பேசியவர்களுக்கு அடுத்த கட்டமாக ஆபாச எஸ்.எம்.எஸ், வீடியோ கிளிப்பிங்க்ஸ் அனுப்பி வச்சு கொஞ்சம் கொஞ்சமா... தன்னோட வலைக்குள்ள விழ வச்சிருக்கான். 'கல்யாணம் பண்ணிக்கிறேன்' என நம்பிக்கை வார்த்து அதன் மூலமாகவே அவர்களை வலையில் வீழ்த்தியிருக்கான். அதை அப்படியே செல்போன்ல படம் பிடிக்கவும் செஞ்சிருக்கான்.

செல்போன் பதிவுக்கு மறுக்கும் பெண்களிடம், 'நீ இல்லாத நேரத்தில இதைப் பார்த்தாவது என் மனசை ஆத்திக்கிடுவேன்டா செல்லம்' என்றெல்லாம் அவர்கள் ரூட்டிலேயே பேசி மசிய வைத்திருக்கிறான்.

இவனோட வலையில கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்கள், உயர் அதிகாரிகளோட குடும்ப வாரிசுகளும் சிக்கி இருக்காங்க. பத்திரிகைத் துறையில இருக்குற ஒருத்தரோட பொண்ணையும் அவன் விட்டு வைக்கலை.

யார் யாரோடெல்லாம் சகவாசம் வச்சிருந்தேன்னு காட்டுவதற்காக நண்பர்கள் பலருக்கும் புளுடூத் வழியாகவும், எம்.எம்.எஸ். மூலமாகவும் உறவுக் காட்சிகளை புவனேஸ்வரன் அனுப்பி இருக்கான்.

நண்பர்கள் சிலர் மூலமா இதை மோப்பம் பிடிச்ச செல்போன் கடைக்காரங்க, அதை 'செட்'டா சி.டி. போட்டு தமிழகத்தின் பல திசைகளுக்கும் பரப்பி, காசு பார்த்திருக்காங்க. சமீபத்தில புவனேஸ்வரன் சம்பந்தப்பட்ட கிளிப்பிங்க்ஸ் காட்சியைப் பார்த்த கோவை உயரதிகாரி ஒருத்தர் குலை நடுங்கிப் போயிட்டார்.

புவனேஸ்வரனோட இணைஞ்சிருந்ததில் ஒரு பொண்ணு, அவரோட பொண்ணு! 'சார், இந்தப் பையனை எங்க ஏரியாவிலேயே நான் பார்த்திருக்கேன்' அப்படினு கலங்கிப்போய் அந்த அதிகாரி சொல்ல... அப்படித்தான் புவனேஸ்வரன் எங்க கவனத்துக்கே வந்தான். புவனேஸ்வரனோட செல்போன் நம்பரை ஃபாலோ செஞ்சு, அவனை வசமா அமுக்கிப் பிடிச்சோம்.

அவன்கிட்ட இருந்து மூணு மொபைல் போன், எட்டு சிம் கார்டுகளை பறிமுதல் செஞ்சோம். போன் மூலம் பெண்களை வளைக்கிறதுக்கும், அவங்களை கூட்டிட்டுப் போறதுக்கும் தன்னோட மோட்டார் பைக்கையே அடமானம் வெச்சிருக்கான். ஆனா, அவன் மூலமாக கிடைச்ச காட்சிகளை சி.டி. போட்டு பல ஆயிரங்களை சிலர் சம்பாதிச்சிருக்காங்க. அவங்க யார் யார் என்பதற்கான ஆதாரங்களைத் தேடிக் காத்திருக்கிறோம்.

'பல பொண்ணுங்க வாழ்க்கை உன்னால சீரழிஞ்சு போச்சேடா...'ன்னு நாங்க கேட்டதுக்கு, 'என்னைப் பத்தி எந்தப் பொண்ணும் புகார் கொடுக்க மாட்டா. ஏன்னா, நான் அவங்க ஒவ்வொருத்திக்கும் உயிருக்கு உயிரான காதலன்'னு தெனாவெட்டா சொல்றான்!'' என்று சொல்லித் திகைக்க வைக்கிறார்கள் அவனை வளைத்த போலீஸார்.

புவனேஸ்வரனிடம் விசாரணை நடத்திய கோவை மாநகர நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகனிடம் பேசியபோது, ''எழுத்துப்பூர்வமா அவன் மேல புகார் கொடுக்க யாருமே முன்வரல.

அந்தக் காட்சிகளை காட்டி சிலர்கிட்ட மிரட்டிப் பணம் பறிக்கவும் செஞ்சிருக்கான். அது சம்பந்தமான புகாரை வெச்சு அவன் மேல செக்ஷன் 384-ன் கீழ் வழக்குப் பதிவு செஞ்சிருக்கோம். அவனோட நண்பர்கள்கிட்டேயும் விசாரணை நடந்துகிட்டு இருக்கு. அவன்கிட்ட ஏமாந்த பெண்கள் எழுத்துப்பூர்வமா தைரியமா புகார் தரலாம். அவங்களைப் பத்தின தகவலை வெளியில கசிய விடமாட்டோம்!'' என்றார்.

'பள்ளியறை' செல்வராஜ்!

சென்னை மணலியைச் சேர்ந்த எம்.ஏ. பட்ட தாரியான செல்வராஜ் செய்ததும் உச்சகட்ட அயோக்கியத்தனம். மனைவி, குழந்தைகள் என்று அழகான குடும்பம். மணலியில் ட்யூஷன் சென்டர் நடத்தி வந்த செல்வராஜிடம் பள்ளிப்பாடம் படிக்க வந்திருக்கிறாள், ப்ளஸ் ஒன் மாணவியான சுஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பருவத்தின் வாசலில் நின்றிருந்த சுஜாவைப் பார்த்துக் கிறங்கிப் போன செல்வராஜ்... நைஸாகக் காய் நகர்த்தியதில், அறியாப் பருவத்து சுஜா வலையில் விழுந்துவிட்டாள். அவர்களுக்கிடையே 'அத்தனையும்' நடந்திருக்கிறது.

சுஜாவோடு தான் இருந்த தனிமைத் தருணங்களை யெல்லாம் மறக்காமல், தனது செல்போன் கேமராவில் படமாக்கிய செல்வராஜ், தனது சாகசத்தை நண்பர்களுக்குக் காட்டி மகிழ... அந்தக் காட்சிகளும் பலருடைய செல்போன்களுக்கும் பரவியது.

இப்போது செல்வராஜ் கைதாகிவிட... சுஜா தனது பள்ளிக்கூடத்துக்குக்கூடப் போக முடியாத இக்கட்டில் சிக்கித் தவிக்கிறார். காரணம், பல மூலைகளுக்கும் அந்தக் காட்சிகள் பரவி... குடும்பத்தைக் குத்திக் கிழிக்கும் வகையில் கேள்விகளும் பார்வைகளும் வரத் தொடங்கியதுதான்.


எனக்கே எனக்கா... எச்சரிக்கை ப்ளீஸ்!


'எனக்கே எனக்காக என் செல்போனில்தானே பதிவு செய்கிறேன். நானே பார்த்து ரசித்துவிட்டு ஃபைலையும் அழித்துவிடுவேன். யாருக்கும் எதுவும் தெரியாது!' என்ற எண்ணத்தோடுதான் சில தம்பதிகள் இப்படி எல்லை தாண்டுகிறார்கள்.

செல்போன் மெமரி கார்டு, கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகளில் இருந்தெல்லாம் அழிக்கப்பட்ட பிறகும், அந்த ஃபைல்களை எடுக்க ஏராளமான 'ரெக்கவரி சாஃப்ட்வேர்'கள் இப்போது வந்து விட்டன என்பதை இவர்கள் மறந்துவிடவே கூடாது. 'அதை'யெல்லாம் படம் எடுப்பது என்ற எண்ணத்தையே ஒழித்துவிட்டால் தொல்லையே கிடையாது!'' என்று எச்சரிக்கை வாசிக்கிறார்கள் சைபர் கிரைம் போலீஸார்.

இப்படி எதிர்பாராத விதமாக செல்போன் காட்சிகள் வெளியே பரவியதன் மூலம், வட மாவட்டத்தின் ஒரு கடையில் வேலை பார்த்த சேல்ஸ் கேர்ள் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும், கோவை மாவட்டத்தில் ஒரு குடும்பத் தலைவி விவாகரத்து வரை போன விவகாரமும் போலீஸாரின் ரகசிய ஃபைலில் இருக்கிறது!

SOURCE: JUNIOR VIKATAN. COURTSEY TO :neetheinkural.blogspot.icon18_email.gif


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஆட்டுக்கறி! அதிரடி ஆபரேஷன்!

1.jpg
இரவு 10.00 மணி. சேலம் வ.உ.சி. மார்க்கெட்டை ஒட்டிச் சென்றுகொண்டிருந்தது அந்த மினி வேன். 

""மேடம்... நீங்க சொன்ன மாதிரி இந்த இடம்தான் பப்ளிக்கிற்கு டிஸ்டர்பன்ஸ் இல்லாத இடம்... வேனை மடக்கிடலாமா?'' -சேலம் மாநகராட்சி நகர் நல அலுவலர் பொற்கொடியிடம், செல்போனில் பர்மிஷன் கேட்டனர், அந்த வேனை பின்தொடர்ந்துகொண்டிருந்த நகர்நலத்துறை பணியாளர்களான மணிகண்டனும் சந்திரனும் சரவணனும் ஞானப்பிரகாசமும். ""ஓ.கே. கேட்ச் இட்'' என்றார் அதிகாரி.

புயல் வேகத்தில் மினி வேனை சுற்றி வளைக்கிறது நால்வர் டீம். பதறிப்போய் வேன் டிரைவர் இறங்க, ""நாங்க மாநகராட்சி நகர்நல துறையிலிருந்து வர்றோம்'' என்றபடியே வண்டியை சீஸ் செய்தார்கள். 

ஒன்றரைமணி நேர டெர்ரர் ஃபாலோ-அப் செய்து அதிரடியாக சீஸ் செய்யும் அளவுக்கு அப்படி அந்த வேனில் என்ன இருக்கிறது? என்றபடியே பின் கதவைத் திறந்து பார்த்தால் குப் பென்று நாற்றமடித்து நம் குடலைப் புரட்டியது. நூற்றுக் கணக் கான செம்மறி ஆட்டுத் தலைகளும், புழு வைத்து நாறிப்போன 1000 கிலோவிற்கும் மேலான ஆட் டுக் குடல், நுரையீரல்களும் நிரம்பியிருந்தன.

""என்னடா ஆட்டுக் கறியை பிடிச்சதுக்கு இவ்ளோ பில்ட்-அப்னு நினைக்கிறீங்களா சார்'' என கவனத்தைத் திருப்பிய நால்வர் டீம் ""ஆனா இவை எல்லாம் ஹோட்டலுக்குப் போயிருந்தா சாப்பிடுற எல்லோரும் காலிதான்... ""ஆமாங்க... அத்தனையும் விஷம்'' என்றபடியே விரிவாய் பேசத் தொடங்கினர்.

""இங்க சேலத்துல கூலி வேலைக்குப் போய் பொழப்பு நடத்துற அன்றாடம் காய்ச்சிகள்தான் அதிகம். இவங்க அதிகம் உபயோகப்படுத்துறது கையேந்தி பவன்கள், சின்னச் சின்ன ஹோட்டல்களைத்தான். ஏற்கனவே ஒன்றரை மாதம் முன் ரோட்டோர சில்லி சிக்கன், மீன் கடைகளை ரெய்டு செய்து பழைய எண்ணெய்யை உபயோகப்படுத்தக் கூடாதுன்னு எச்சரிக்கை செய்து வந்தாங்க எங்க மேடம். அப்படி யிருக்க அதன்பின் மக்கள் பலர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டு வர்றதா தகவல் வந்துக்கிட்டு இருந் தது. குறிப்பா இந்த 15 நாட்கள்ல பல மருத்துவமனை டாக்டர்ஸ் மூலம் நிறைய பேஷன்ட்ஸ் வாந்தி, பேதியால ட்ரீட்மென்ட்டிற்கு வர் றாங்க என தகவல் வந்தது. இந்த பிரச்சினைக்கு மூல காரணம் உணவுதான் என தெரிந்த மேடம் விசாரணையில் இறங்கிய போது தான் கெட்டுப்போன பழைய கறிகளை ஹோட்டல்களில் கலந்து விநியோகித்துவிடுகின்றனர் என அதிர்ச்சி ரிப்போர்ட் கிடைச்சது. 

மேலும் துருவியபோதுதான்... ஞாயிற்றுக்கிழமை அன்று பெரும் பாலானவர்கள் கறி சாப்பிடுவதால் சனிக்கிழமை தோறும் இரவுகளில் பெங்களூரிலிருந்து மினி வேன் களில் காலாவதியான கறிகள் சேலத்திலுள்ள முக்கிய ஹோட் டல்களுக்கு விநியோகிக்கப்படு கிறது உறுதியா தெரிஞ்சது. சரா சரியா ஆட்டுக்கறி கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்படுது. பெங்களூர், ஹைதராபாத் போன்ற பெரு நக ரங்கள்ல, பெரிய ஹோட்டல்கள்ல டேமேஜ் ஆகி வேஸ்ட் ஆகுற கறியிலயும் லாபம் பார்க்க... அந்த கறிகளை பாதி ரேட்டுக்கு வித்துடுவாங்க. அதை வாங் குற சின்னச் சின்ன ரோட்டோர ஹோட்டல்கள் பிரி யாணியில கலந்து வழக்கமான விலையிலயே பொதுமக்களுக்கு தருவாங்க. பொதுமக்களால இது புது கறியா, பழைய கறியானு பார்க்க முடியாது. டேஸ்ட்டா இருந்தா ஓ.கே.னு போயிடுவாங்க. இந்த நெட்வொர்க் ஒரு சோர்ஸ் மூலம் தெரியவந்துதான் ஸ்கெட்ச் போட்டு இன்னிக்கு கையும் களவுமாக பிடிச்சிருக்கோம்'' என்றனர் பெருமிதமாக. 

"வாழ்த்துக்கள் மேடம்' என்றபடியே பொற்கொடியிடம் பேசினோம்.

""பொதுவா உடனே அறுத்து சமைக்கப்படும் கறிதான் உடலுக்கு நல்லது. காலாவதியான பழைய கறிகளை சாப் பிட்டால் அமீபியாஸ் வரும், கல்லீரல் பாதிக்கப்படும். பேக் டீரியாஸ் ஃபார்ம் ஆனா வாந்தி, பேதி வரும். பழைய கறி களால் கல்லீரல் பாதிக்கப்பட்டு டைபாய்டு, காமாலை போன்ற நோய்கள் வரும். இப்போ நாங்க பிடிச்ச கறிகளை பார்த்தீங்கன்னா 2 வாரத்திற்கு முன்பு அறுக்கப்பட்டதுன்னு ஆய்வுல தெரியவரும். ரெண்டாவது, புழுக்களெல்லாம் ஃபார்ம் ஆகிடுச்சி. இதை சின்னச் சின்ன கடைக்காரர்கள், குறைந்த விலைக்கு கிடைப்பதால் வாங்கி புழுக்களை அப்புறப் படுத்திவிட்டு பிரியாணியில, மற்ற உணவுல கலந்துடுறாங்க. பெரும்பாலும் ஃபாஸ்ட் ஃபுட் கடைகள்ல இது நடக்குது. ஒரு கடைக்கு 1000 பேர் சாப்பிட வர்றாங்கன்னா இப்படிப் பட்ட கறிகளால அத்தனை பேரும் ஃபுட் பாய்ஸனாகி பாதிக்கப்படுவாங்க. சேலம் சிட்டியில மட்டும் 500-க்கும் மேற்பட்ட சிறு சிறு நான்-வெஜ் ஹோட்டல்கள் இருக்கு. யோசிச்சுப் பாருங்க... எத்தனை பேர் பாதிக்கப்படுவாங்கன்னு. இதைத் தடுக்க மாநகராட்சி கமிஷனர் பழனிச்சாமி சார்கிட்ட தகவல் கொண்டுபோய் டீம் வொர்க்கா இந்த அதிரடியை நடத்தினோம். இது தொடரும்'' என்றார் அக்கறையோடு.

""பெங்களூர் சிவாஜி நகர்ல இருந்து சேலம் மட்டுமல்ல, தமிழகம் முழுக்க பழைய கறிகள் விநியோகம் நடக்குது. செவ்வாய், சனி இரண்டு இரவுகளில் சேலம் சிட்டிக்கு மட்டும் 2000 கிலோ பழைய கறி வருதுன்னா தமிழகம் முழுக்க யசிச்சுப் பாருங்க. இதுல பல கோடி லாபம் கிடைக்குது. பெங்க ளூர், மைசூர்லதான் இந்த பிசினஸ் அதிகம். சேலத்திலுள்ள அனைத்து ஹோட்டல்களிலும் திடீரென அதிரடி ரெய்டு நடத்தி சீல் வைக்கவும் போறாங்க. குறிப்பா "பெண்பாலை' குறிக்கும் பெயரில் நகரத்துல பல இடத்துல வச்சிருக்கிற மெஸ்தான் அடுத்த டார்கெட். சத்தமில்லாமல் செய்யப் போறாங்க மேடம்'' என்கின்றனர் மாநகராட்சி வட்டாரத்தினர்.
உடைந்துபோன சுகாதாரமற்ற முட்டைகளை பாதையோர கடைகள் பயன்படுத்துவதை அறிந்து ரெய்டு நடத்தி அவைகளை அழித்துள்ளார் பொற்கொடி.

மாங்கனி மாநகரில் தொடங்கிய இந்த அதிரடி அனைத்து மாநகரங்களிலும் பரவினால் தமிழகம் "சுகாதார மான தமிழகமாய்' காட்சி தருமே


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தீக்குளித்த ஒன்பது வயது மாணவி: 
பள்ளிக் கூடங்களா? பலி பீடங்களா?

Cudaloore%201.jpg

கடலூர் மாவட்டம் அத்தப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் 9 வயது சிறுமி அபினா தோட்டப்பட்டு நடுநிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். எப்போதும் பள்ளியிலிருந்து துள்ளிக் குதித்து வீடு வரும் அபினா, ஜூலை 13-ம் தேதி துவண்டுபோய் வீட்டுக்கு வந்திருக்கிறாள்.


மறுநாள் 14-ம் தேதி அபினா பக்கத்து வீட்டு கேட்டை ஏறிக் குதித்து உள்ளே சென்று தான் எடுத்துச் சென்றிருந்த மண்ணெண்ணெயை மேலே ஊற்றி தீவைத்துக் கொண்டாள். துடிக்கத் துடிக்க அந்த சிறுமியின் தசையைப் பிய்த்து உயிரைத் தின்றுவிட்டது தீ! 

கடலூர் மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகள் மீதான வன்கொடுமைச் சம்பவங்கள் கடந்த வாரத்தில் மட்டும் 6-க்கும் மேல் நடந்துள்ளன. இதில் உச்சம்தான் அபினாவுக்கு நேர்ந்த கொடுமை.

சோகத்தில் இருந்த அபினாவின் தந்தை கண்ணனுக்கு ஆறுதல் கூறிவிட்டு அவருடன் பேசினோம். 

Cudaloore.jpg“ஜூலை 13-ம் தேதி காலையில பள்ளிக்குச் சென்ற என் மகள் வீடு திரும்பிய பிறகு யாரிடமும் பேசலை. உடம்பு சரியில்லைனு நினைச்சோம். ஆனா, இப்படி அவளே தீய வச்சிக்கிட்ட பிறகுதான் அவ கூடப் படிச்ச-வங்கக்கிட்ட விசாரிச்சோம். அப்போது, ‘சாந்தி மிஸ் ‘ஊஞ்சல்’ என்று உச்சரிக்கச் சொன்னாங்க. ஆனா அபினா வாயில வரல. அதனால ஆத்திரமடைஞ்ச அந்த சாந்தி டீச்சர், ‘படிக்கத் தெரியாம ஏன் எங்க உசுர வாங்குற?’ன்னு சொல்லி அடிச்சிட்டு 5-&ம் வகுப்பிலிருந்த அபினாவை, ‘1-வது வகுப்புல போய் உட்காரு. இனிமே அதுதான் உன் வகுப்பு’னு சொல்லிட்டாங்க. அபினா போகாததால இரண்டு பையன்களை அனுப்பி தூக்கிக் கொண்டுபோய் விடச் சொன்னார்’ என்று சொன்னார்கள். 

இப்படி தன்னை 5-வதிலேர்ந்து 1-வதுக்கு மாத்தினதால பயந்துபோயிருக்கா அபினா. அதனாலதான் இப்படி பண்ணிக்கிட்டா. கடலூர் மருத்துவமனைக்கு தூக்கிட்டுப் போனோம். மேல் சிகிச்சைக்கு புதுவைக்கு அனுப்பினாங்க. எந்த பலனும் இல்லை. இவ்வளவு நடந்தும், காவல்துறையினரோ என் பெண்ணுக்கு வயிற்று வலி காரணமாக இறந்துவிட்டதாக வழக்குப் பதிவு செஞ்சிருக்காங்க. என் பெண்ணுக்கு இதுவரை வயிற்றுவலி வந்ததே இல்லை. கல்வித் துறை அதிகாரிகளும், போலீஸாரும் அந்த டீச்சரை தப்பிக்க வைக்கிறதுக்காக இப்படி பண்ணியிருக்காங்க’’ என்று தலையில் அடித்தபடி அழுதார் கண்ணன். 

இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து புகார்கள் அனுப்பி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த பாபுவிடம் பேசினோம். 

“கடலூர் மாவட்டத்தைப் பொறுத்த-வரை குழந்தைகள் மீதான சித்திரவதை தொடர்ந்து கொண்டே வருகிறது. பண்ருட்டியைச் சேர்ந்த தான்சீரா பெல்லா என்ற மூன்று வயது சிறுமி இரண்டு ஆசிரியர்களால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். இதே போல பரங்கிப்பேட்டை மேல்நிலைப் பள்ளியில் ரஹ்மான் என்ற மாணவனை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த கொடுமை நடந்திருக்கிறது. இதில் கணேசன் என்ற ஆசிரியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் மீது நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று திருமாணிக்குழி விஜயா, காராமாணிகுப்பம் மல்லிகா, சிங்காரத்தோப்பு வதனா என 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் சித்திரவதைக்கு ஆளாகியுள்ளனர். பெற்றோர்கள் இதுபற்றியெல்லாம் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் கொடுக்கலாம். ஆனால், அவர்களுக்கு இதுபற்றிய விழிப்புணர்வு இல்லை.

அதன் விளைவுதான் இன்று, இந்த சிறிய வயதில் மனஅழுத்தம் ஏற்பட்டு அபினா தற்கொலை செய்து-கொண்டுள்ளார். ஆனால் காவல்துறையினரும், கல்வித்துறையினரும் இந்த சிறுமிக்கு வயிற்றுவலி உள்ளதாக பொய்யான வழக்கு பதிவு செய்து வழக்கையே முடித்துவிட்டனர். எங்களின் முயற்சியின் பேரில் உண்மையை வெளிக்கொண்டு வருவோம். அதன் முதல்படிதான் அபினாவை அடித்த ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்’’ என்றார்.

கடலூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அமுதவள்ளியிடம் பேசினோம். “இதுபோன்று புகார்களில் சிக்கக்கூடிய ஆசிரியர்களை கண்காணித்து வருகிறோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவருகிறோம். அதன்பேரில் கடந்த மாதத்தில் மட்டும் ஏழு ஆசிரியர்களை இடமாற்றமும் தற்காலிக பணிநீக்கமும் செய்துள்ளோம். மேலும் இவர்களைக் கண்காணித்தும் வருகிறோம். குழந்தைகளை வளர்ப்பது மட்டுமே பெற்றோர்களின் கடமை அல்ல. அவர்களைப் புரிந்துகொண்டு, அவர்கள் மனதையும் பாதுகாக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காதவாறு கடுமையான நடவடிக்கையை கல்வித்துறை நிர்வாகம் எடுக்கும்” என்றார். 

கடலூர் மாவட்ட எஸ்.பி.யான அஸ்வின் கோட்னீசிடம் இதுபற்றிக் கேட்டபோது, “இது சம்பந்தமான புகார்கள் எங்களுக்கு வருவதே இல்லை. எங்கே நமது குழந்தையின் எதிர்காலம் வீணாகிவிடுமோ என்ற அச்சம்தான் இதற்குக் காரணம்.

தைரியமாக புகார்கள் கொடுக்கலாம். கண்டிப்பாக தனிப்பட்ட முறையில் பாதுகாப்பான விசாரணையை நாங்கள் மேற்கொள்வோம்’’ என்றார். 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘‘நாங்கள்தான் ஒரிஜினல் பிராமணர் சங்கம்!’’
‘தாம்ப்ராஸு’க்குள் இரண்டு குரல்கள்

bramin%201.jpg

பொதுவாகவே பிராமணர்களில் சைவம், வைணவம் என்றும்... வைணவ பிராமணர்களில் வடகலை, தென்கலை என்றும் கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் பிளவுகள் ஏற்பட்டு பிரச்னை ஆவதுண்டு. ஆனால், பிராமணர்களை ஒருங்கிணைப்பதற்காக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் பிராமணர் சங்கத்திலேயே (தாம்ப்ராஸ்) இப்போது பிளவு ஏற்பட்டுவிட்டது.


bramin%202.jpg‘‘திருவொற்றியூர் நாராயணன் தலைமையிலான பிராமணர் சங்க நிர்வாகிகளை முற்றாக நீக்கிவிட்டு, சேலம் ஆடிட்டர் ஸ்ரீராமன் தலைமையில் தமிழ்நாடு பிரமாணர் சங்கத்தை முறையாக பதிவு செய்திருக்கிறோம். நாங்கள்தான் இனி ஒரிஜினல் பிராமணர் சங்கம்’’ என அறிவித்திருக்கிறார் இந்த சங்கத்தின் பொதுச் செயலாளரான பம்மல் ராமகிருஷ்ணன். இந்த அறிவிப்புக் கூட்டத்தில் மகளிரணி செயலாளர் லலிதா சுப்ரமணியன், கொளத்தூர் ஜெயராமன், மந்தைவெளி பிரபா ராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

என்னதான் தடதடப்பு தாம்ப்ராஸுக்குள்? பம்மல் ராமகிருஷ்ணனிடமே கேட்டோம்.

bramin%204.jpg‘‘பல ஆண்டுகளாக தமிழகத்தின் ஏறக்குறைய எல்லா மாவட்டங்களிலும் இயங்கி வரும் தமிழ்நாடு பிராமணர் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் அறிவித்தார் திருவொற்றியூர் நாராயணன். வழக்கமாக ஒரு கிளையின் நிர்வாகிகள் ஓட்டு போட்டு மாவட்ட நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். பிறகு கிளை, மாவட்ட நிர்வாகிகள் ஓட்டுப் போட்டு மாநில நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். இதுதான் சங்கத்தின் வழக்கம். 

சமீபத்தில் நடந்த தேர்தலில் தனக்கு எதிர்ப்பு வலுக்கும் என்பதைத் தெரிந்துகொண்ட நாராயணன், பல தில்லுமுல்லுகளில் இறங்கினார். அதாவது நெல்லை மாவட்டத்தில் 25 கிளைகளாக இருந்த பிராமணர் சங்கத்துக்கு திடீரென ஒரு மாத காலத்துக்குள் 75 கிளைகள் முளைத்தன. தனது ஆதரவாளர்களைக் கொண்டு போலியான கிளைகளை உருவாக்கி தனது ஓட்டுகளை அதிகப்படுத்துவதற்காக நாராயணனே செய்துகொண்ட ஏற்பாடு இது. 

இதை நாங்கள் வீடு வீடாகப் போய் விசாரித்து உறுதி செய்தோம். மேலும் ஒரே குடும்பத்தில் கணவன் கிளைத்தலைவர், மனைவி மகளிரணி செயலாளர், அவர்களது மகன், மகள் ஆகியோர் துணைத் தலைவர், செயலாளர்கள் என புதுப் புது போலிக் கிளைகளை உருவாக்கியிருக்கிறார் நாராயணன். இதுமட்டுமல்ல... போலி வாக்காளர்களையும் உருவாக்கியிருக்கிறார்.

உதாரணத்துக்கு நெல்லை மாவட்டத்தில் ஒரு கிளையில் சீனிவாச வாத்யார் என்பவர் ஓட்டு போட்டிருக்கிறார். இன்னொரு கிளையில் வாத்யார் சீனிவாசன் என்ற பெயரில் அவரையே வாக்காளராக சேர்த்திருக்கிறார். இதைக் கண்டுபிடித்து அவரிடமே நாங்கள் கேட்டதற்கு,‘ஓட்டை நாங்க போட்டுக்கறோம். பேரை மட்டும் கொடுங்கோன்னு நாராயணனின் ஆட்கள் சொன்னார்கள். அதனால்தான் கொடுத்தேன்’ என ஓப்பனாகச் சொல்கிறார் அவர். இப்படி தனக்கென சுமார் நானூறு வரையிலான கள்ள ஓட்டுக்களைப் பெற்று தேர்தலை சந்தித்தார் நாராயணன். 

bramin%203.jpgஅதனால்தான் நாங்கள் நிறுத்திய சேலம் ஆடிட்டர் ஸ்ரீராமனை விட மிக குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து நாங்கள் நீதிமன்றம் செல்ல முயன்றபோதுதான்... ‘பிராமணர் சங்கத்தை இதுவரை முறையாக பதிவு செய்யவே இல்லை’ என்பது எங்களுக்குத் தெரிந்தது. சட்டப்படி பதிவு செய்திருந்தால்தான் நீதிமன்றத்துக்கு போகலாம் என்பதால் இப்போதுதான் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தை முறையாக பதிவு செய்திருக்கிறோம். இதுவரை பதிவு செய்யாமல் தனது இஷ்டப்படி, சங்கத்தை தனது சுய பலன்களுக்கு பயன்படுத்திக் கொண்ட நாராயணனிடமிருந்து சங்கத்தைக் காப்பாற்றியுள்ளோம். அண்மையில் மயிலாடுதுறையில் நடந்த எங்கள் மாநில சிறப்புப் பொதுக்குழுவில் சேலம் ஆடிட்டர் ஸ்ரீராமன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்’’ என விளக்கி முடித்தார்.

பதிவு செய்யப்பட்ட பிராமணர் சங்கத்தின் மாநிலப் பொருளாளரான ஆலங்குடி வெங்கட்ராமன் நம்மிடம், 

‘‘பிராமணர்களுக்காக மட்டுமன்றி சமூகத்தின் பலதரப்பு மக்களுக்காகவும் பாடுபடும் தமிழ்நாடு பிராமணர் சங்கத்துக்கு சென்னை மடிப்பாகத்தில் திருமண மண்டபம் உள்ளது. மேலும் பல கட்டட சொத்துக்களும், பல கிளைகளில் வங்கிக் கையிருப்புகளும் உள்ளன. இவற்றையெல்லாம் நாராயணன் கையிலிருந்து காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். உண்மையிலேயே பிராமணர்களின் நலனுக்காக செயல்பட வைராக்கியம் பூண்டிருக்கிறோம்’’ என்றார். இவர்களின் புகார் பற்றியெல்லாம் நாராயணனிடமே கேட்டோம்.

‘‘என் மீது குற்றம் சாட்டியிருக்கும் பம்மல் ராமகிருஷ்ணன், ஆலங்குடி வெங்கட்ராமன் உள்ளிட்ட பலரை சங்க விரோத நடவடிக்கைக்காக சங்கத்திலிருந்து நீக்கிவிட்டேன். எனவே அவர்கள் இப்போது தனி நபர்கள்தானே தவிர சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். மேலும், பிராமணர் சங்கத்தில் அரசியல் தலையீடுகளைத் தவிர்ப்பதற்காக அதை பதிவு செய்வதில்லை என்பது எங்கள் கொள்கை முடிவு. நேர்மையாக நடந்து முடிந்த தேர்தலில் நான் மாநிலத் தலைவராக வெற்றி பெற்றுள்ளேன். அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு சட்டரீதியான தடை வாங்கியிருக்கிறேன். வழக்கம் போல எங்கள் சேவையை தொடர்ந்து செய்வோம்’’ என்றார் பதட்டமில்லாமல். 

‘பொதுவாகவே இந்த அரசியல்... கோஷ்டி... மோதல்... போன்ற விஷயங்களில் இருந்து கொஞ்சம் தள்ளியே நிற்கும் வழக்கம் கொண்ட இன்றைய பிராமணர்களை, ஒருங்கிணைக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட இந்த சங்கத்திலேயே இப்படி அரசியல் புகுந்ததை பிராமணர்களில் பெரும்பகுதியினர் விரும்பவில்லை. ‘எங்களின் இந்த உணர்வை இரண்டு தரப்பும் புரிந்துகொள்வது நல்லது’ என்று ஆதங்கம் கலந்த கோரிக்கை வைக்கிறார்கள் இந்த கோஷ்டி அரசியலை விரும்பாத பெரும்பாலான பிராமணர்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

குற்றவாளி பெற்றோர்கள்... தண்டனை பெறும் மாணவர்கள்!

Raja.jpg



மாணவர்களால்தான் இந்தியா வல்லரசாகப் போகிறது’’ என்று விஞ் ஞானியும், மேதகு முன்னாள் இந்திய குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் செல்லுமிடமெல்லாம் நம்பிக்கை விதைத்து வரும் நிலையில்...

போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர முயன்ற மாணவர்கள் பற்றிய அதிர்ச்சிச் செய்தி வெளியாகியுள்ளது. 

எந்த ஒரு துறையிலும் ஊழல் மற்றும் மோசடி புகார்கள் எழும்போதெல்லாம், தத்தம் துறையினருக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை எனும் கோணத்தி-லேயே அரசு தனது நடவடிக்கைகளை மேற்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில், தமிழக தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். 

பொதுவாக, ‘முதல் தகவல் அறிக்கை’ (எஃப்.ஐ.ஆர்.) எனப்படுவது ஒரு குற்றம் நிகழ்ந்த உடனேயே புகாராக தாக்கல் செய்யப்பட்டு காவல்துறையினரால் பதிவு செய்யப்படுவது ஆகும். ஆனால், சட்டத்தை இயற்றும் அரசோ மேற்படி நடைமுறையை கடைபிடிப்பதே இல்லை. போலிச் சான்றிதழ் மோசடி சட்ட விரோதம் என தெரிய-வந்தாலும், உடனடியாக அரசின் சம்பந்தப்பட்ட துறையினர் ஆட்சியின் உயர்-மட்டம் வரை கூடிப் பேசி, புகாரின் வரையறை, அரசு மற்றும் அரசுத் துறைக்கு குந்தகம் ஏற்படா வண்ணம் எல்லைகள் வகுக்கப்பட்டு புகாரைத் தயார் செய்கின்றனர். அதன் பேரில் முதல் தகவல் அறிக்கையாக காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்படுவதே வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது. என்ன நியாயம் இது? இடையூறு இல்லாத, குறுக்கீடு அல்லாத விசாரணையால் மட்டுமே, குற்றங்களின் உண்மையான பின்னணியை அம்பலப்-படுத்த முடியும், சம்பந்தப்பட்ட-வர்களுக்கு கடும் தண்டனை-கள் பெற்றுத்தர முடியும். மேலும் எதிர்காலத்தில் அது போன்ற குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். ஆனால் இதற்கு எல்லா முட்டுக்-கட்டைகளையும் அரசே போடுகிறது. 

இப்போது இந்த போலிச் சான்றிதழ் விவகாரத்தில் கல்வித் துறை கொடுத்த புகாரைப் பார்த்தாலே இதெல்லாம் சரி என தெரியும்.

‘‘நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவம் படிக்க விண்ணப்பித்த மாணவ மாணவிகளின் பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல் பற்றி போன மாதமே மருத்துவக் கல்வி இயக்ககம் சந்தேகம் எழுப்பி அந்த மதிப்பெண் பட்டியல்களை ஆய்வு செய்தது. அப்போது போலி என தெரிய வந்தது. அதைத் தயாரித்து கொடுத்தவர்களை பிடிக்க வியூகம் அமைக்கப்பட்டது. கவுன்சிலிங்கில் சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளை அழைத்து, அவர்களை விசாரித்தபோது தேர்வுத் துறை பணியாளர்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்படவில்லை என தெரியவந்தது. சென்னை மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த நபர்கள்தான் போலி மதிப்பெண் பட்டியல் தயாரித்து கொடுத்திருக்கிறார்கள் என தெரியவருகிறது. அதன் பேரில் சென்னை மாநகர காவல்துறையிடம், அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் புகார் கொடுத்திருக்கிறது’’ என்கிறது கல்வித் துறை. அதாவது, ‘என் கை சுத்தம்’ என்று ‘ஊருக்கு முன்னாடியே’ உரக்கச் சொல்கிறது தேர்வுத் துறை இயக்குனரகம். 

மாணவர்கள் மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்-பித்தபோது, பல ஏஜென்ட்டுகள், மறு மதிப்பீட்டில் அதிக மதிப்பெண் பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை காட்டி, போலி சான்றிதழ்களை கொடுத்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து-வருகிறார்களாம். இதை, இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ள உண்மைக் குற்றவாளிகளான மாணவர்களின் பெற்றோர்களை வழக்கிலிருந்து விடுவிக்க அரசு எடுக்கும் முயற்சியாகத்தான் கருத வேண்டி உள்ளது. இது கடுமையாக படித்து, தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்றவர்களிடையே எவ்வளவு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதையும் அரசு மனதில் இருத்தி செயல்பட வேண்டும். 

இது தொடர்பாக தமிழக முதல்வர், “ஒரு குழு போடப்-பட்டிருக்கிறது. அந்தக் குழு விசாரித்து நடவடிக்கை எடுக்கும், முக்கியமாக ஏமாறுகிறவர்கள் இருந்தால் ஏமாற்றுபவர்களால் செயல்பட முடியும். எனவே ஏமாறுகிறவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என பதில் அளித்துள்ளார். 

போலிச் சான்றிதழ்கள் தயாரித்து பணத்துக்காக அதை மாணவர்களிடம் விற்பனை செய்தவர்கள், கடந்த கல்வி ஆண்டுகளில் எத்தனை பேருக்கு இம்மாதிரி போலி சான்றிதழ்கள் கொடுத்துள்ளனர் என்பதை பற்றி தமிழக அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் மூச்சுக்கூட விடவில்லை. 

போலிச் சான்றிதழ் மோசடி பின்புலத்தை ஆராய்ந்தால், இந்த மோசடியில் ஈடுபட்ட மாணவர்களில் பெரும்பாலானோர், 80 சதவிகித மதிப்பெண்கள் பெற்றும், மருத்துவ படிப்புக்கு அது போதாததாலும், பிரபலமான பொறியியல் கல்லூரிகளில் விரும்பிய பாடப்பிரிவில் சேரவுமே போலிச் சான்றிதழ்கள் பெற்றுள்ளதாக தெரியவருகிறது. உயர்கல்வியைப் பொறுத்த மட்டில் பெரும்பாலும் மாணவனின் லட்சியத்தில், பெற்றோரே பெரும்பங்கு வகிக்கின்றனர். மதிப்பெண் குறைந்தால் தங்கள் பிள்ளைகளுக்கு நினைத்த படிப்பு, இடம் கிடைக்காமல் போய்விடுமோ என பயந்து... பெற்றோர்களே போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் ஏஜன்ட்டுகளோடு கூட்டு வைத்துதான் இந்த செயல்களை செய்திருக்க முடியும். ஏனென்றால் சில மதிப்பெண்களுக்காக பல ஆயிரம் செலவு செய்ய, ப்ளஸ் டூ படிக்கும் மாணவனால் முடியாது. மாணவன் கூட நட்பு வழியில் பணம் புரட்டினாலும் குறிப்பாக மாணவிகளால் இவ்வளவு பெரிய தொகையை வீட்டுக்குத் தெரியாமல் புரட்ட முடியாது. எனவே, சில மதிப்பெண்கள் அதிகம் வாங்கி தங்கள் பிள்ளைகளை நல்ல கோர்ஸில் சேர்த்துவிடவேண்டும் என்ற வெறியுடன் தவறான பாதையில் பயணித்திருப்பவர்கள் பெற்றோர்கள்தான். இதற்கு தண்டனையாக அந்த அப்பாவி மாணவிகளின் எதிர்காலம் பாழடிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த பிரச்னையை வெறும் குற்ற நடவடிக்கை-யாக பார்ப்பது மட்டுமன்றி உளவியல் பார்வை-யோடு அணுகுவதும் அவசியமாகிறது. மாணவப் பருவத்திலேயே பணம் கொடுத்து, போலிச் சான்றிதழ்கள் பெறும் ஒரு மாணவர், எதிர்காலத்தில் தமது பணியில் எப்படி நேர்மையாக செயல்படுவார்? லஞ்ச லாவண்யத்தை ஒடுக்க எப்படி எதிர்காலத்தில் உடன்படுவார்?

இதையெல்லாம் விட முக்கியமாக... “கஷ்டப்பட்டு படித்தால் மட்டும் போதாது, பணம் இருந்தால்தான் எல்லாம் சாத்தியம்” என்றபடி கல்வி கரன்சிமயமானதே இப்படிப்பட்ட மோசடிகளுக்கு மூலக் காரணம். 

மோசமான கல்விக் கொள்கைதான் இதுபோன்ற மோசடி-யாளர்க¬ளையும் உரு-வாக்குகிறது. எனவே அரசு இதை வெறும் குற்ற நட-வடிக்கையாகப் பார்க்காமல் எதிர்கால சந்ததியினரின் பிரச்னையாக தொலை நோக்குப் பார்வையோடு அணுக வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நந்தனார் சுவர் :
கடுப்பேற்றிய கலைஞர்... இடிக்கத் தயாராகும் கம்யூனிஸ்டுகள்!

Ragavan%203.jpg

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நந்தனார் வழிபட்டதாகக் கூறப்படும் மூன்றாவது மதில்சுவர் பிரகாரத்தில் அடைத்து வைக்கப்பட்ட வழியை, திறந்துவிடக் கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற பெயரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.


தெற்குவாசல் வழியாக ஊர்வலமாக வந்தவர்கள் கோயிலில் நுழைய முயன்றபோது 472 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டம் குறித்து முதல்வர் கலைஞர் அடித்த கமென்ட்தான் தற்போது பெரும் சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.

Ragavan%203.jpg‘‘சிதம்பரம் கோயிலுக்குள் நந்தனார் நடந்து வந்த பாதை இது. அந்தப் பாதையை மதில் வைத்து அடைத்துள்ளார்கள். அதை திறக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்கள். நந்தனார் இருந்தாரா இல்லையா என்பது வேறு விவகாரம். நந்தனாரை கோயில் உள்ளே போகவே விடவில்லை. அப்படி இருக்க அவர் எப்படி இப்பாதையில் போயிருக்க முடியும்? இவர் உள்ளே வந்தபோது நந்தி மறைத்தது. வழி மறைத்திருக்கிறதே நந்தி என்று பாடிய பாட்டெல்லாம் இருக்கிறது. நந்தி மறைத்தது. ஆகவே நந்தனார் உள்ளே போகவில்லை. நந்தி மறைத்தால் நந்தனைக் காண்பதற்காக உள்ளேயிருந்த சாமி, நந்தா நீ விலகி வா என்று சொன்னாரே தவிர, நந்தா உள்ளே வா என்று சாமியும் சொல்லவில்லை, நந்தனும் போகவில்லை இதுதான் கதை. 

இந்த கதையை மாற்றி இந்த வழியாகதான் நந்தனார் போனார். போகும்போது, நான் பார்த்தேன். என்னிடம் வெற்றிலை பாக்கு வாங்கிப் போட்டுக்கொண்டு போனார் என்றெல்லாம் சொல்லி, நந்தன் பாதையை அடைக்கக்கூடாது, அது தீண்டாமைச் சுவராக ஆகிவிடும் என்று கூறி போராடுகிறார்கள். எதற்கு நந்தனுக்காகவா? அல்ல இந்த ஆட்சியின் நல்ல திட்டங்களுக்கு நந்தியாக இருந்து கெடுக்க வேண்டும் என்பதற்காக’’ -என்பதுதான் கலைஞர் பேசிய பேச்சு. 

இதுபற்றி சிதம்பரம் வெங்கடேச தீட்சிதரிடம் கேட்டோம். ‘‘நந்தனார் வாழ்ந்த காலம் 5 அல்லது 6-ம் நூற்றாண்டு. இவரைப் பற்றி 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் எழுதிய திருத்தொண்டர் தொகையில் ‘செம்மையே திருநாளைப் போவார்க்கு மடியேன்’ என்ற வரியாலும், அவருக்குப் பின் 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதியில் ‘நாவார் புகழ்த்தில்லை’ என்ற பதிகத்தாலும் அறியலாம். 

வைத்தீஸ்வரன்கோயில் அருகே-உள்ள ஆதனூரில் நந்தனார் வாழ்ந்தார் என்றும், கோயில்களுக்குத் தேவையான தோல் கருவிகள் செய்து தரும் தொழில் செய்தார் என்றும் செய்திகள் உண்டு. 12&ம் நூற்றாண்டில் சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் ‘திருநாளைப் போவார்’ புராணத்திலுள்ள 37 பாடல்களில் நந்தனார் பற்றிய செய்திகள் வந்துள்ளன. 

Ragavan%202.jpgஆனால் நந்தனார் நுழைவுவாயில் என, தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிற மூன்றாம் மதில் பிரகாரம் கி.பி.1178 முதல் 1218 வரை ஆட்சிபுரிந்த குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. இதற்கு ஆதாரமாக இந்திய தொல்பொருள் கல்வெட்டு ஆராய்ச்சி குறிப்பு (80/1928) உள்ளது. இதுபற்றிய வடமொழி கல்வெட்டு கும்பகோணம் அருகேயுள்ள திரிபுவன வீரேச்சுரத் திருக்கோயிலில் இன்றும் உள்ளது. 

ஆக 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நந்தனார் எப்படி 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மதில் சுவர் வழியாகச் சென்றிருக்க முடியும்? 1937 முதல் 1987 வரை நடந்த 4 குடமுழுக்கு திருப்பணி நடந்த காலங்களில் மட்டும் கருங்கல் மற்றும் இதர கட்டுமானப் பொருட்கள் எளிதில் கொண்டு செல்ல ஏதுவாக அந்த மதில்சுவர் திறக்கப்பட்டு பின்பு மூடப்பட்டுவிடும். 

அதே நேரத்தில் இறைவன் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்த நந்தனார் ஹோமகுளத்தில் இறங்கி தெற்கு கோபுரத்தை தரிசனம் செய்து கொண்டே இறைவனுடன் ஐக்கியமானார் என்பதும் புராணத்துச் செய்தி. 

அதனால்தான் இன்றும் சேக்கிழார் குருபூஜையன்று நந்தனார் உள்பட அறுபத்துமூவர் வீதியுலாவும், நந்தனார் குரு பூஜையை புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று மிகச் சிறப்பாக நடத்தி வருகிறோம். இந்நிலையில் நந்தனார் நடராஜரை தரிசிக்க வந்தவழி மூடப்பட்டுவிட்டது என்பது பொய்’’ என்று கூறியவர், 

‘‘அதே நேரம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால்தான் சுவர் இடிக்க முடியாத சூழல் உள்ளது என்று தமிழக அரசு கூறுவதும் தவறு’’ என்று முடித்தார். 

இந்த சர்ச்சை பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ராமச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினரான நடராஜன் ஆகியோர் நம்மிடம், 

Ragavan%201.jpg‘‘சிதம்பரத்தை சுற்றியுள்ள நான்கு மாவட்ட தலித் மக்களிடையே நந்தனார் தெருக்கூத்து நாடகங்கள் எல்லாம் இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது. ஆதிக்க சக்திகளால் நந்தனாருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அதில் விளக்குவார்கள். கிழக்கு அல்லது மேற்கு கோபுர வாசல் வழியே நடராஜரை தரிசிப்பதைவிட தெற்கு கோபுர வாசல் வழியே வந்து அடைப்பட்டுக் கிடக்கிற சுவரை திறந்துவிட்டால் தரிசனம் செய்வது மிகவும் எளிது. அதனைச் செய்வதில் என்ன தவறு? நந்தனார் சென்று வழிபட்ட ஒரே காரணத்துக்காக சுவர் வைத்திருக்கிறார்கள். அது தீண்டாமைச் சுவராக தலித் மக்கள் மனதில் ஆறாத சுவடாக இருக்கிறது. தமிழக அரசு வசம் கோயில் இருப்பதால், அந்தத் தீண்டாமைச் சுவரை அகற்றுங்கள் என்று போராட்டம் நடத்தினால், முதல்வர் நக்கலடிக்கிறார். விரைவில் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் அந்தச் சுவரை இடிப்போம். இது உறுதி’’ என்றனர். இதற்கிடையில் வரும் ஆகஸ்ட் 11&ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், தா.பாண்டியன் தலைமையில் இதே காரணத்துக்காக கண்டனப் போராட்டம் நடத்துகிறது.

வரும் செப்டம்பரில் நந்தனாரின் குருபூஜை நடக்க இருப்பதால் அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டிருக்கிறது சிதம்பரத்தில்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘‘எலுமபுத் துணிடுக்கு வாலாட்டும் நாய்களா காங்கிரஸ்காரர்கள்?’’
இளங்கோவன் ஆவேசம்

EVKS.jpg


அவ்வப்போது தனது அனல் பேச்சுகளால் கொளுத்திப்போடுவதும் பின் அதற்கு பக்குவமான பதில் சொல்லி மழுப்புவதும் காங்கிரஸ் தலைவரான இ.வி.கே.எஸ். இளங்கோவனின் அரசியல் பாணி. 

அந்த வகையில் ஜூலை 15-ம் தேதி சென்னை பெரம்பூரில் நடந்த காமராஜர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு... கலைஞரின் சீடர்கள் என்று காங்கிரஸில் அழைக்கப்படக் கூடிய தங்கபாலு, வாசன் போன்றோரை வைத்துக்கொண்டு மீண்டும் ஒருமுறை கலைஞரைத் தாக்கியிருக்கிறார் இ.வி.கே.எஸ்.

‘‘தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொண்டால் மக்களுக்கு தொண்டாற்ற முடியாமல் போய்விடும் என்பதற்காக காமராஜர் திருமணம் செய்துகொள்ளவில்லை. காமராஜர் பயந்தது இன்று உண்மையாகியுள்ளது. நான் யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. 

நாங்களும் காமராஜர் ஆட்சிதான் நடத்திக்-கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். ஆனால் சாமானியனாகப் பிறந்து குபேரனாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் சிலர் காமராஜரோடு தங்களை ஒப்பிட்டுக்கொள்கிறார்கள்’’

என்பதுதான் இந்த தடவை இ.வி.கே.எஸ். இளங்கோவன் விட்ட மேடை ராக்கெட்! கூட்டணிக் குளத்தில் கல்லெறிந்துவிட்டு சென்னையை அடுத்த மணப்பாக்கம் வீட்டில் அமைதியாக அமர்ந்திருந்தவரிடம் சில கேள்விகளை வீசினோம். 

தமிழ்நாட்டில் நடைபெறுவது காமராஜர் ஆட்சி என்று சொல்கிறாரே கலைஞர்?
EVKS%201.jpg
தமிழகத்தில் ஆள்வது, காங்கிரஸ் எந்த பயனையும் எதிர்பார்க்காமல் ஆதரிக்கின்ற தி.மு.க.வின் ஆட்சி. இது எப்படி காமராஜர் ஆட்சியாகும்?

கூட்டணி என்று வந்தால் பழைய விஷயங்களை கிளறாமல் இருப்பதுதானே நடைமுறை. ஆனால், காமராஜர் ஹைதராபாத் வங்கியில் கோடிக்கணக்கில் குவித்து வைத்திருப்பதாக தி.மு.க. குற்றஞ்சாட்டியதை இப்போது கூறி சூட்டை கிளப்பிவிட்டது ஏன்?

காமராஜர் ஆட்சியின் சாதனைகளை, அவர் தியாகங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொரு காங்கிரஸ்காரனின் கடமை. அதே சமயம் அவர் அப்போது எந்த அளவுக்கு எதிர்க்-கட்சிகளால் கீழ்த்தரமாக விமர்சிக்கப்பட்டார் என்பதை நாட்டு மக்களுக்கு சொல்வது தவறல்ல. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டுவதற்கு காரணம், ஆட்சியாளர்கள் தங்களை முழுவதும் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

தான் ஒரு காமராஜர் என்று சொல்லிக் கொண்டு குபேரர் ஒருவர் இருக்கிறார் என்று சொல்கிறீர்களே. யார் அந்த குபேரன்? 

நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. இப்போது இருக்கிற அரசியல்வாதிகளை பொதுவாக குறிப்-பிடுகிறேன். பல சாதனைகளை செய்தவர் காமராஜர். அவர் சாமான்யனாக இருந்தார். சாமான்யனாக வாழ்ந்தார். சாமான்யனாக இறந்தார் என்றுதான் சொன்னேனே தவிர, யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. 

உங்களால்தான் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி உடையப்-போகிறது என்று பரவலாக பேசப்படுகிறதே?

அது தவறு. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஏற்பட நான்தான் காரணம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. வரலாற்று ஏடுகளில் அதை மறைக்கவும் முடியாது. இந்த நிலையில் தி.மு.க.வுடனான கூட்டணியை உடைக்க நான் எந்த முயற்சியும் செய்யவில்லை. மக்களின் கோரிக்கைகளை எடுத்துப் பேசுகிறேன். எந்த குறிப்பிட்ட நபருக்கு எதிராகவும் நான் எதையும் சொல்லவோ, செயல்படவோ இல்லை. 

உங்களால்தான் கூட்டணி ஏற்பட்டது என்கிறீர்கள். ஆனால் தி.மு.க.வை அதிகம் விமர்சிப்பதும் நீங்களாகவே இருக்கிறீர்கள். ஏன்?

தமிழகத்தில் ஒன்றிரண்டு காங்கிரஸ் தலைவர்கள் அளவுக்கு அதிகமாக தி.மு.க.வை புகழ்கின்றனர். இது தி.மு.க.வுக்கு ஆபத்து-. இதே தலைவர்கள்தான் முன்பு ஜெயலலிதாவையும் புகழ்ந்தார்கள். அ.தி.மு.க.வுடன் இருந்த போது, காங்கிரஸ்காரர்கள், தங்களை குங்குமம் சுமக்கும் கழுதைகள் என்று சொல்லிக்கொண்டார்கள். இன்று எலும்புத் துண்டுக்கு வாலாட்டும் நாய்கள் என்று சில காங்கிரஸ் தலைவர்களைப் பார்த்து தொண்டர்கள் கிண்டலடிக்கிறார்கள். இந்த அவப்பெயர் காங்கிரஸுக்குத் தேவையா? இந்தப் பின்னணியில்தான் நான் நியாயமான விமர்சனங்களை முன்வைக்கிறேன்.

பெரம்பூரில் நீங்கள் பேசிய பிறகு ராதாபுரம் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதனால், தி.மு.க. மீதான உங்கள் தாக்குதல் குறையுமா?

முதலில் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயரை வைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அதற்காக பாடுபட்ட சுடலை முத்து, சிவாஜி முத்துக்குமார் ஆகியோரை முதல்வரிடம் நேரில் அழைத்துச் சென்று நன்றி தெரிவிக்க உள்ளேன். அதற்காக முதல்வரிடம் அப்பாயின்மென்ட் கேட்டுள்ளேன். 

இரண்டாவது, இதை வெற்றி தோல்வி என்றெல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. மக்களின் கோரிக்கையை நான் எடுத்து வைத்தேன். அதில் நியாயம் இருந்ததால் முதல்வர் அதை செய்திருக்கிறார். விமர்சனம் குறையுமா கூடுமா என்றெல்லாம் சொல்ல முடியாது. வழக்கம்போல என் பணி (?!) தொடரும். 

மீண்டும் தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை காங்கிரஸால் கொண்டு வரமுடியுமா?

ராகுல் காந்தியின் உழைப்பு, எண்ண ஓட்டம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது தமிழகத்தில் நிச்சயம் காங்கிரஸ் ஆட்சி அமையும்.

மேடையில் அனல் பறக்கப் பேசுகிறீர்கள். ஆனால், கட்சியை வளர்க்க சூடுபறக்க எப்போது களத்தில் பணியாற்றுவீர்கள்?-

தோழமை கட்சியான தி.மு.க.வின் குறைகளை காங்கிரஸ் சுட்டிக்காட்டினால் திருந்திவிடும் என்ற நம்பிக்கையில் சொல்கிறோம். அது முடியாத பட்சத்தில் அடுத்து என்ன செய்வது என்று மேலிடத்தில் பேசி நடவடிக்கை எடுப்பேன். அப்போது களத்தில் நானே நேரடியாக குதிப்பேன்.

கோவையில் அ.தி.மு.க.வுக்கு கூடிய கூட்டத்தைப் பார்த்தீர்களா? 

அவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டிய ஜெயலலிதாவே தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். இனியாவது அவர் தன் ஜனநாயகக் கடமையை சரிவர செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தலித் நிதியில் ஸ்டேடியம்!
-தரம் தாழ்ந்த மனித உரிமை ஆணையம்

Madurai%201.jpg



மனித உரிமை என்ற சொல்லை தனியார் அமைப்புகள் பயன்படுத்தக் கூடாது என சமீபத்தில் தடை விதித்தது அரசு. ஆனால், அதே இந்திய அரசின், தேசிய மனித உரிமை ஆணையத்தின் யோக்கியதை எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறது மதுரையில் நடந்த கருத்தரங்கம். 

‘தேசிய மனித உரிமை ஆணையம் இன்று சந்திக்கும் சவால்கள்’ என்ற தலைப்பில் மதுரையில் கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது மக்கள் கண்காணிப்பகம். 

இதில் கருத்துரையாற்றிய பிரதமருக்கான முன்னாள் செயலர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு நிபுணர் கே.ஆர். வேணுகோபால், ‘‘குஜராத் மதக் கலவர விவகாரம், டர்பன் நகரில் நடந்த மாநாட்டில் இந்தியாவில் சாதிய ரீதியான மோதல்கள் நடக்கிறது என்பதை அறிவித்தது ஆகிய இரு விஷயங்களைத் தவிர வேறு எந்த விவகாரத்திலும் தேசிய மனித உரிமை ஆணையம் சரிவர செயல்படவில்லை. 

Madurai.jpgமனித உரிமை மீறல் சம்பவங்களில் புகார்கள் ஏதும் வந்தால், ஆணையம் அதை சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு அனுப்பி வைக்கிறது. பின் அது, மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அல்லது மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்புகார்களின் மனுவை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.

அந்த காவல் நிலைய பொறுப்பில் உள்ள ஏட்டையா, அப்புகாருக்கு அறிக்கை எழுதி மேலே அனுப்பி வைப்பார். ஆனால் அந்த அறிக்கையில் நடவடிக்கை மேற்கொண்டது பற்றி எந்த விபரமும் இருக்காது. இது போன்ற நிலை இருந்தால் பாதிப்படைந்தவர்களுக்கு எப்படி கிடைக்கும் நீதி? 

வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் மாவோயிஸ்ட் பிரச்னைகளின் பின்னணியாக, அங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை உரிமைகளும் வழங்கப்படவில்லை. உரிமைக்காக போராடுபவர்களை அரசு கொன்று குவிக்கிறது. இந்தப் பிரச்னை பற்றி பேசினாலே நான் வீடு போவதற்குள் சிதம்பரம் என்னை கைது செய்யச் சொன்னாலும் சொல்லி விடுவார். இதுதான் இன்றைய மனித உரிமையின் நிலைமை’’ என்று வேதனைப்பட்டார் வேணுகோபால்.

இந்தக் கருத்தரங்கில் பேசிய இந்தியாவில் ஐ.நா.வின் மனித உரிமைக்காக செயல்படும் குழு உறுப்பினர் மிலூன் கோத்தாரி, ‘‘இந்திய மனித உரிமை ஆணையங்கள் அனைத்தும் சுதந்திரமாக செயல்பட முடியாமல் அரசின் ஒரு துறையாகவே செயல்படுவதைப் பார்க்க முடிகிறது. தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட 720 கோடி ரூபாய் பணத்தை புதுடெல்லி காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்துவதற்கான ஸ்டேடியம் கட்டுவதற்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 

ஏழைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து, செல்வந்தர்களுக்கு அதிநவீன வசதிகள் கொண்ட நிறைய விளையாட்டு மைதானங்களை கட்டித் தருகிறது அரசு. இதுவே மிக கொடிய மனித உரிமை மீறல்தான். கென்யா நாட்டில் உள்ள மனித உரிமை ஆணையம் அரசுக்கு எதிரான உண்மையான குற்றச்சாட்டுகளை சுதந்திரமாக முன் வைக்கிறது. இந்தியாவில் உள்ள மனித உரிமை ஆணையம் அரசின் பிடியில் உள்ளதால் அப்படி செய்ய முடியவில்லை.

இச்சூழலில் தேசிய மனித உரிமை ஆணையம் எதுவும் செய்யாததால் சர்வதேச ஒருங்கிணைப்பு குழு இந்தியாவின் தரத்தை ‘ஏ’ கிரேடிலிருந்து ‘சி’ கிரேடுக்கு தரம் தாழ்த்தும் நிலை உள்ளது. இங்கே மனித உரிமை ஆணையங்களின் செயல்பாடுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டிய வாய்ப்பு மட்டுமல்ல கட்டாயமும் நமக்கு ஏற்பட்டிருக்கிறது’’ என பேசி முடித்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_07_2010_001_002.jpg

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வாடகை மனைவி! பாகம்2 - நடுங்கவைக்கும் விஷக்கலாச்சாரம்..

வாடகை மனைவி!
நடுங்கவைக்கும் விஷக்கலாச்சாரம்!!
தமிழகத்தின் குடும்பயியலை குழிதோண்டி புதைக்கும் இழிகலாச்சாரத்தை தடுத்து நிறுத்துமா தமிழக அரசு??
சமூக நலன் கருதி தட்டிக் கேட்க சமுதாய அமைப்புகள் முன் வருமா???
Front-page.jpgநன்றி ஜூவி

வாயில் குதப்பிய வெற்றிலை, சாயம் போன ஜிப்பா, அக்குளில் ஒரு தோல் பை, அதற்குள் கசங்கிய ஆல்பம்..! இப்படித்தான் சில தமிழ் சினிமாக்களில் நாம் அந்தத் தொழிலின் 'புரோக்கர்'களைப் பார்த்திருப்போம்.

வாடகை மனைவிகளைப் பேசி அமர்த்தும் ஓர் இடைத்தரகரைப் பார்த்தபோது அசந்தே நின்றுவிட்டோம். அவருடைய காரும், பேரும், ஊருமெல்லாம் வேண்டாம். ஆனால், அவர் மீது வீசியது ஹைகிளாஸான வெளிநாட்டு பர்ஃபியூம். அவரே பார்ப்பதற்கு சினிமா ஹீரோ கணக்காக இருந்தார். அவர் கையோடு கொண்டுவந்த 'லேப்-டாப்'பை க்ளிக் செய்தபோது, 'பவர் பாயின்ட் பிரஸன்டேஷன்' பாணியில் அடுத்தடுத்து சில குடும்பத் தலைவிகளின் புகைப்படம் மற்றும் விவரங்கள்.

''நமக்குத் தெரிஞ்ச இன்னொருத்தர், ஃபேமிலி கேர்ள்ஸை அப்படியே வெப் கேமரா முன்னாடி பேசச் சொல்லி, இப்படி அப்படி நடக்கச் சொல்லி, அவங்களோட வீட்டில் ஒரு குடும்பத் தலைவியாக வளைய வர்ற காட்சிகளையும் அப்படியே பதிவு செஞ்சு வெச்சுருவாரு. கஸ்டமர்களுக்கு போட்டுக் காட்டும்போதே ஒருவித 'கிக்' ஆயிடும். வரிசையா பொண்ணு பார்க்கிற மாதிரி வீடு வீடா கூட்டிட்டுப் போயி காட்ட வேண்டாம் பாருங்க. லேப்-டாப் வீடியோவைப் பார்த்து நேரடியா ஒருத்தரை செலக்ட் பண்ணிக்கிட்டா... ஜோலி முடிஞ்சுது, இல்லையா?" என்றார், நாம் சந்தித்த 'லேப்-டாப்'பர்!

எப்படியோ போராடி அப்படியரு லேப்-டாப் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றோம். நம்மையும் ஒரு தொழிலதிபராகவே கூறியிருந்ததால், குறிப்பிட்ட அந்த இடைத்தரகர் வரிசையாக, ஆர்வ மாகப் போட்டுக் காட்ட ஆரம்பித்தார்.

எடுத்த எடுப்பிலேயே கம்பீரமாக காட்டன் புடவை உடுத்தியபடி எதிரில் இருந்த யாரிடமோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்மணியைக் காட்டினார். வீட்டுக்கு வந்திருக்கும் யாரோ ஒரு விருந்தினரிடம் பேசுவதும், இடையில் எழுந்துபோய் அவருக்கு ஒரு தட்டில் பிஸ்கட்கள் கொடுப்பதும் அதில் தெரிந்தது. இன்னொரு அறையிலிருந்து டீக்காக உடுத்தியபடி வெளியில் வந்த மனிதர்40-களில் இருந்தார். ''மேடத்தோட ஹஸ்பெண்ட்..." என்றார் இடைத்தரகர். வெளியில் கிளம்புவதாகச் சொல்லி விட்டுப் புறப்படுகிறார் அந்தக் கணவர். அதோடு காட்சி முடிகிறது.

''இந்த மேடம் ரொம்ப ஹோம்லி, சாஃப்ட்டான டைப்! டெலிகாம்ல நல்ல வேலை. பொதுவா, நார்த் இந்தியாவுல இருந்து வர்றவங்களை மட்டும் மாசக் கணக்குல ரேட் பேசி புக் பண்ணிப்பாங்க. மேடம் ரெகுலரா வேலைக்கும் போய்க்கிட்டு இருப்பாங்க. பிசினஸ் புள்ளிகளுக்கும் இங்கே பகல் நேரத்துல அவங்க வந்த வேலை சரியா இருக்கும்தானே... தினமும் சாயங்காலம் ஆனா தன்னோட சொந்த வீட்டுக்கு வர்ற மாதிரியே மேடம் வீட்டுக்குப் போயிடுவாரு!" என்று விவரித்துக்கொண்டே போனார் இடைத்தரகர்.

யார் பார்த்தாலும் சட்டென்று தப்பாகவே தெரியாத வண்ணம் அந்த சாம்பிளை எடுத்திருப்பது புரிந்தது. அந்த வீட்டையும் தனி க்ளிப்பிங்காக வைத்திருந்தார். ''தங்குறவங்களுக்கு வீடும் புடிக்கணுமில்லையா?" என்று கேட்டு அயர வைத்தார் நம்மை!

வீடியோ காட்சியில் விரிந்த அந்த வீட்டின் வாசலில்... குட்டை குட்டையான குரோட்டன்ஸ் செடிகள் அழகாய் வெட்டப்பட்டிருக்க, பெயர் தெரியாத ஏதோ ஒரு பூச்செடிகள் நீல நிறத்தில் அந்த வீட்டின் சுற்றுப்புறத்தை அழகாக்கி வைத்திருந்தன. கேமரா அப்படியே உள்ளே நுழைய, வீட்டு ஹாலின் நடுநாயகமாக ஒரு உருளியில் அழகான ரோஸ் நிற செம்பருத்திப் பூக்கள் நீரில் பரப்பப்பட்டிருக்க, உருளிக்கு அருகில் கலைநயமிக்க சின்ன டேபிளில் மரத்தாலான நர்த்தன விநாயகர் சிலை!

இப்படிப் போகிற அந்தக் காட்சியிலும் வக்கிரமாக எதுவுமே இல்லை.

''இந்த மேடத்தோட ஹஸ்பெண்ட் பார்த்தீங்களே... அவரும் கோவை பக்கத்துல ஒரு காலேஜ்ல லெக்சரரா இருக்கார். கல்யாணமாகி பத்து வருஷமாச்சு. இன்னும் குழந்தை இல்லை. முதல்ல இவங்க டிபார்ட்மென்ட்ல ஒரு சின்னப் பையனோட பழக்கம் வந்துச்சு. ஹஸ்பெண்ட் கண்டிச்சாரு போல. பெரிசா சண்டை ஆயிடுச்சு. மேடம் பிரிஞ்சு போயிட்டாங்க. ஊர் உலகத்துக்கு பயந்து லெக்சரரே போயி மேடத்தைத் திரும்பவும் கூட்டிவந்து வச்சுக்கிட்டாரு. அதுக்கப்புறம்தான் மெதுமெதுவா இன்னொரு லேடி மூலமாக நமக்கு அறிமுகம் ஆனாங்க. புருஷன்-பொண்டாட்டி ரெண்டு பேருமே சீக்கிரமா ஒரு அண்டர்ஸ்டாண்டிங்குக்கு வந்துட்டாங்க. சும்மாங்களா... போன வருஷம்கூட ரெண்டு பேருக்கும் ஃபுல்லா யூரோப் டூருக்கு நம்ம கஸ்டமர் ஒருத்தரே ஏற்பாடு பண்ணாருங்களே..!" என்று சிரித்தார் இடைத்தரகர்.

நமக்குத் தடதடவென்று உடம்பு உலுக்கிப் போட்டது. அப்படியரு முகம்... அப்படியரு நடை உடை பாவனையில்... 'இவர்களா இப்படி!' என்ற படுகௌரவத் தோற்றத்தில் இருந்தார்கள் அந்தப் பெண்மணியும் கணவரும்.

இதே போன்ற பிசினஸில் சில மாதங்கள் இருந்து விட்டு, தற்போது அது பிடிக்காமல் ஒதுங்க நினைக்கும் ராஜன் என்பவரையும் நாம் இதே லிங்க்கை வைத்து சந்தித்தோம்.

கரூர் காந்தி கிராமத்தில் உள்ள ஒரு பெண்மணியின் கதையை அவர் சொன்னபோது, வேதனையாக இருந்தது.

''கரூர் பக்கத்துலதான் அதோட ஊர். அப்பா கிடையாது, அம்மா மட்டும்தான். அம்மாவும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இறந்துபோகவும் சித்தி வீட்டுல இருந்துதான் டிகிரி முடிச்சிது. அப்பத்தான் பஸ்ல போறப்ப, வர்றப்ப ஒரு பையனை பார்த்து லவ் பண்ணியிருக்கு. வீட்டை விட்டு வெளியே வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. பனியன் கம்பெனியில சூபர்வைஸரா மாசம் நாலாயிரம் சம்பளம் வந்துச்சு அந்தப் பையனுக்கு. அதை வெச்சு எதுவுமே செய்யமுடியாத நிலையில்தான் தன்கூடப் படிச்ச கோயம்புத்தூர் பொண்ணு ஒருத்தி மூலமா இந்த விஷயம் தெரிஞ்சுகிட்டு, அப்ரோச் பண்ணுச்சு. இப்ப அது ரேஞ்சுக்கு மாசம் குறைஞ்சது இருபதாயிரம் ரூபாயாச்சும் கிடைக்குது!" என்றவரிடம், ''காதல் கணவர் எப்படி இதை சகித்துக் கொள்கிறார்?" என்றோம்.

''காதல் - கத்தரிக்காயெல்லாம் கல்யாணம் ஆன கொஞ்ச காலத்துக்குதான் சார். அதுக்கப்புறம் ஒவ் வொரு ஆம்பளைக்குள்ளே இருக்கிற ஒவ்வொரு மைனஸா வெளியில வருது. இந்த பையன் செமத்தியா குடிப்பான் போல. காசு கிடைக்குதுன்னதும் மெதுமெதுவா புரிஞ்சு, அமைதியாயிட்டான்! கான்ட் ராக்ட்ல தங்குற ஆளுங்க வீட்டுக்குள்ள இருக்கிற நேரத்துல, தண்ணியடிச்சிட்டு வந்து தகராறு பண்ணக் கூடாது... அது மட்டும்தான் அவனுக்கு கண்டிஷன்!" என்றார் ராஜன் சாதாரணமாக!

இந்த விவகாரம் குறித்து நமக்கு முதல் க்ளூ கொடுத்த, கடந்த இதழில் கட்டுரையின் ஆரம்பத்தில் நம்மோடு பேசிய கோவிந்தன் என்ன சொல்கிறார்?
''எங்க டிரஸ்ட் சார்பா நாங்க கள ஆய்வு செஞ்சப்ப -காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய நகரங்களில்தான் இந்த 'வாடகை மனைவி' கலாசாரம் படுவேகமாகப் பரவுவது புரிந்தது. இந்த நகரங்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தொழில்துறை வளர்ச்சியோடு சம்பந்தப்பட்டவை. வெளி மாநில ஆட்கள் வந்து வாரக்கணக்கில், மாதக்கணக்கில் தங்கி தங்கள் பிசினஸை கவனிக்கும் இடங்கள். இந்த நகரங்களில் வசிக்கும் ஒரு சில வில்லங்க விபசார புரோக்கர் களின் புத்தியில் உதித்ததுதான் இந்த 'வாடகை மனைவி' கான்செப்ட். இந்த ஊர்களில் இருக்கும் விபசார புரோக்கர்கள் பணத் தேவையிலோ, பணத்தாசையிலோ உள்ள தம்பதியை வெகு அழகாகப் பேசி இதற்கு வளைக்கிறார்கள்.

பெரும்பாலும், பெண்களை மட்டுமே முதலில் சந்திக்கும் இந்த கும்பல், தங்களது ஆசை வலையை பக்குவமாக விரிக்கும். சிக்குபவர்கள் முதலில் கணவருக்குத் தெரியாமல்தான் இதில் இறங்குகிறார்கள். ஒரு கட்டத்தில் விஷயம் தெரியும்போது, குடும்ப மானத்துக்கு பயந்து சகித்துக்கொள்ளும் முடிவுக்கு வரும் கணவர்கள், காலப்போக்கில் இதை வருமான வழியாகவே பார்க்க ஆரம்பித்து, முற்றிலுமாக சும்மா இருந்துவிடுகிறார்கள். சம்பந்தப்பட்ட பெண் மட்டுமின்றி, அவருடைய கணவரும் பிசினஸ் புள்ளியை நேரில் பார்த்துப் பேசி சம்மதித்தால்தான் 'கான்ட்ராக்ட்' ஓகே ஆகும் என்கிற இடங்கள்கூட உண்டு!" என்ற கோவிந்தன்,

''இரண்டு காரணங்கள்தான் இந்த கலாசாரச் சீரழிவுக்கான காரணிகள். ஒன்று... மாறிவிட்ட நமது கலாசாரப் பழக்கவழக்கம். எதற்கெடுத்தாலும் மேற்கத்திய பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ளும் நம்மில் பலர், குடும்ப தாம்பத்ய விஷயத்திலும் மெள்ள மெள்ள மேற்கத்திய நாகரிகத்துக்கு மாறத் தொடங்கியிருக்கிறோம் என்பதுதான் வேதனையான உண்மை.

இன்னொரு காரணம்... அளவுக்கதிகமான பணத்தாசை. முன்பெல்லாம் வீடுகளில் ஒரு டி.வி. இருப்பதே அதிசயமாக இருக்கும். இப்போது ரூமுக்கு ஒரு டி.வி. என்றும் சின்ன கார் - பெரிய கார் என்று இரண்டு கார் இருக்க வேண்டும் என்றும் நடுத்தரக் குடும்பங்களே ஆசைப்படுகிற நிலைமை வந்துவிட்டது. அஞ்சாமல் கடன் வாங்குவது... அடைக்க முடியாமல் சிக்கித் தவிப்பது என்று பாடாய்ப் படும் குடும்பங்களைத்தான் இடைத்தரகர்கள் சுலபமாக இனம் கண்டு வளைக் கிறார்கள்.

இதெல்லாம் போக, 'பாதுகாப்பான உறவு' என்று சொல்லித்தான் பிசினஸ் புள்ளிகளை இந்த கான்ட்ராக்ட் விவகாரத்தில் வீழ்த்துகிறார்கள். ஆனால், ஹெச்.ஐ.வி. வராது என்ற உத்தரவாதம் இங்கும் கிடையாது. இவர்களுக்கெல்லாம் இதன் பாதிப்பு இப்போது தெரியாததால், விஷயம் பெரிதாக வெளியே வரவில்லை. இன்னும் நாலைந்து வருடங்கள் கழித்து இந்த பாதிப்பை உணர்ந்து, அப்போது அலறுவார்கள்.

இதன் விபரீதங்களை உணர்ந்து, இந்த மாதிரியான 'வாடகை மனைவி' கலாசாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், அவர்களாகவே அதை விட்டு விலக வேண்டும். அரசாங்கமும் இந்த விபரீதத்தைக் கண்டுபிடித்து, தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் கவுன்சிலிங்குகளை வழங்க வேண்டும். பாலியல் தொழில் செய்வோருக்குத் தரப்படுகிற எல்லாவிதமான விழிப்பு உணர்வையும் இது போன்ற பெண்களுக்கும் தந்தாக வேண்டும். இந்தக் கலாசாரச் சீரழிவை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால்... அது நினைத்துப் பார்க்கமுடியாத விபரீதங்களில் போய் முடியும்!" என்றார் கோவிந்தன்.
நன்றி: ஜூனியர் விகடன்
-மு. தாமரைக்கண்ணன்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வாடகை மனைவி! தமிழகத்தில் தொடங்கியிருக்கும் ஒரு விபரீத விஷக் கலாசாரம்.

வாடகை மனைவி! இதயத்தை நொறுக்கும் ஒளிப்பதிவு ஆதாரங்களுடன்....
பதறச் செய்யும் ஒரு விஷக் கலாச்சாரம்.

Rent-wife-title.jpgநன்றி: ஜூனியர் விகடன்

ஜனவரி... 3-ம் தேதி....

திருச்சி, உறையூரில் குறுக லான தெருவில் இருக்கிறது, அந்த பழங்காலத்து வீடு..!

துருப்பிடித்த இரும்பு கிரில் கதவு... திறக்கும்போதே கிறீச்சிடுகிறது. அதைக் கேட்டதுமே உள் வாசல் கதவு மெதுவாய் திறக்கிறது.

ஏற்கெனவே சொல்லி வைத்திருந் ததால் அதிகம் அறிமுகப் பேச்சு இல்லை!

''வாங்க, வணக்கம்!'' என நம்மையும், நம்மை கூட்டிச் சென்ற தொழிலதிபரையும் கைகூப்பி வரவேற்கிறார், அந்தக் குடும்பத் தலைவி. வீட்டுக்குள் நுழைந்த சில மைக்ரோ செகண்டுகளில் நம் கண்கள் உள்ளே அளவெடுக்கின்றன.

எப்போதோ அடித்த டிஸ்டம்பர் பெயின்ட் பாதிக்குமேல் உதிர்ந்து வெளிறிய சுவர்கள்... ஒரு ஹால், இரண்டு படுக்கையறை, சமையலறை..! ஹாலில் நான்கு ஃபைபர் சேர்கள் கிடக்க, புத்தம் புது எல்.ஜி. டி.வி--யில் ஏதோ பாடல் காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

டி.வி.டி. பிளேயர், ஃபிரிஜ், வாஷிங் மெஷின் என்று மேல்நடுத்தர வர்க்கத்துக்கான வசதிகளைக் கொண் டிருந்தாலும், அது ஒரு வாடகை வீடு என்பதை முன்கூட்டியே நாம் அறிந்திருக்கிறோம். 'வீடு மட்டு மல்ல... நம்மை வரவேற்கும் அந்தக் குடும்பத் தலைவியே ஒரு வாடகை மனைவிதான்...' எனும்போது வாசகர்களுக்கு எப்படி தீயை மிதித்தாற்போல் இருக்கும் என்று புரிகிறது. விவகாரத்தை முதலில் கேள்விப்பட்டபோது அதே உணர்வு தான் நமக்கும்.

'மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறுவதாக நாம் இதுவரை கேள்விப்பட்டிருந்த அதே விபரீத கலாசாரம், தமிழ்நாட்டுக் குள் காலடி வைத்துவிட்டது' என்று கோவிந்தன் சொன்னபோது, முதலில் நாம் நம்பவில்லை. ஆனால், துளிகூட ஜீரணிக்க முடியாவிட்டாலும் உண்மை அதுதான்!

''ஒரு மாதம், இரண்டு மாதம் என்று தொழில் நிமித்தமாக ஊர் மாறி, மாநிலம் மாறி தமிழகம் வரும் பல தொழிலதிபர்களுக்கு 'விழிப்பு உணர்வு' கூடிப் போயிருக்கிறது. ஹெச்.ஐ.வி-க்கு இரையாவதற்கோ, தினம் தினம் ஒரு பெண்ணைத் தேடிப் போய்க் கொண்டிருக்கவோ அவர்களில் பலருக்கு இஷ்டமில்லை. அதுவும் தவிர, அழகான ஒரு குடும்பத்துக்குத் தலைவியா இருக்கிற பெண்களை - கௌரவமான ஒரு உத்தியோகம் பார்க்கிற நடுத்தர வயது இல்லத்தரசிகளை - மொத்தமாக சில நாட்கள் தங்களுக்கே தங்களுக்கு என்று வைத்துக் கொள்வதில் அவர்களுக்குத் தனியாக ஒரு கிக் இருக்கிறது. பேசிய அமவுன்ட்டை கொடுத்துவிடுகிறார்கள். இவர்களைச் 'சேர்த்து'விடுபவர்களையும் 'புரோக் கர்' என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது...'' என்று கோவிந்தன் கொடுத்த அறிமுகத் திலேயே, நம் தலை தட்டா மாலை சுற்றியது.

Kovinthan.jpg
கோவிந்தன்..?

திருச்சியில் 'லைட் டிரஸ்ட்' என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் இவர்.

''மலைப்பகுதிகளில் வாழும் ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கான வேலைத் திட்டங்களில் ஈடுபடுவதுதான் எனது டிரஸ்டின் வேலை. இதற்காக வேலூர் மலைப் பகுதிகளில், சத்தியமங்கலம் மலைப் பகுதிகளில் என தமிழகத்தின் பல்வேறு மலைப்பிரதேசங்களிலும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி களுக்கு அடிக்கடி சென்று வருவது என் வழக்கம். அப்படி ஒருமுறை காஞ்சிபுரத்துக்கு சென்றபோதுதான் 'வாடகை மனைவி' என்ற பயங்கரத்தை முதலில் கேள்விப்பட்டேன். கணவர், குழந்தைகள், மற்றும் புகுந்த வீட்டுச் சொந்தங்களுடன் ஒரு சராசரி இல்லத்தரசியாகவே வாழும் சில பெண்கள், மாதக் கணக்கில் வேறொருவருக்கு மனைவி யாகப் போய் வாழ்ந்துவிட்டு, கான்ட்ராக்ட்(?) காலம் முடிந்தவுடன் பழையபடி தங்கள் வீட்டுக்கே வந்து சேர்ந்து, வழக்கமான குடும்ப வாழ்க்கையைத் தொடர்கிறார்கள் என்பதை சாட்சிகளுடன் உறுதி செய்துகொண்டபோது, கிட்டத்தட்ட நடுங்கிப் போய்விட்டேன்!

இந்த பயங்கரத்தின் அடி ஆழம் வரைக்கும் சென்று பார்க்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் எனது டிரஸ்ட் ஊழியர்கள் சிலருடன் களத்தில் இறங்கினேன். முதலில் காஞ்சிபுரத்தில் ஒரு புரோக்கரின் உதவியுடன் ஒரு வாடகை மனைவியை சந்தித்தோம். அந்தப் பெண்

காஞ்சிபுரம் பக்கமுள்ள ஒரு டீச்சர் டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டில் லெக்சரராக இருந்தார். புரோக்கர், அந்தப் பெண்ணின் வீட்டுக்கே நேரடியாக என்னை அழைத்துச் சென்றார். குடும்பப்பாங்கான அழகும், அடக்கமும், லேசான மிரட்சியும் கொண்டிருந்த அந்தப் பெண்ணை அவர் வீட்டிலேயே போய், அவருடைய புகுந்த வீட்டு சொந்தங்களுக்கு மத்தியில் 'கான்ட் ராக்ட்'டுக்குப் பேச முடிந்தது.

வறுமைக்காக வழி தவறிப் போகிற பெண்களை நாம் பார்த் திருக்கிறோம். ஆனால், இந்தப் பெண்ணின் வீட்டு சூழலைப் பார்த்தபோது, நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தை நடத்துவதற்கு அங்கே எந்தக் குறையும் இருக்கிற மாதிரி தெரியவில்லை. என்னை அந்தப் பெண்ணிடம் அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு புரோக்கர் கிளம்பி விட்டார். காபி கொண்டுவந்து கொடுத்தவர், எடுத்த எடுப்பிலேயே 'என்னைப் பிடிச்சிருக்கா?' என்று ஏதோ பெண் பார்க்க வந்தவரிடம் கேட்பதுபோல் விசாரிக்கவும்... தூக்கி வாரிப் போட்டது. மேற்கொண்டு பேசப் பேசத்தான் இந்த பகீர் கலாசாரத்தின் நெட்வொர்க் தமிழ் நாட்டில் எந்தளவுக்கு விரியத் தொடங்கியுள்ளது என்று புரிந்தது...'' -சொல்லி நிறுத்திய கோவிந்தன்...

''அதையெல்லாம் உங்களுக்கு விளக்கமாகச் சொல்கிறேன். அதற்கு முன், ஒரு கான்ட்ராக்ட் எப்படி முடிவாகிறது என்பதை நீங்களே கண்ணால் பார்த்துவிட்டு வாருங்கள். அப்போதுதான் இதன் முழுப் பரிமா ணத்தைப் புரிந்துகொள்ள முடியும்!'' என்று, சில ஏற்பாடுகள் செய்து நம்மை அனுப்பி வைத்தார்.

வாடகை மனைவிக்கான 'தேடலு டன்' திருச்சிக்கு வந்திருந்த ஒரு சென்னைத் தொழிலதிபருடன் ஏதோ 'மாப்பிள்ளைத் தோழன்' ரேஞ்சுக்கு நம்மையும் கோத்துவிட்டார் அவர். நம் வசம் உள்ள ரகசிய கேமராவில், ஒவ்வொரு நொடியும் காட்சிகளோடு சேர்ந்து பதிவாகிறது என்பது தொழில திபருக்குத் தெரியாது. முப்பது வயது மதிக்கத்தக்க அந்த குடும்பத் தலை வியும் அதை அறியார்!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தலையெடுக்கத் தொடங்கியிருக்கும் ஒரு விபரீத விஷக் கலாசாரத்தின் சாட்சியாக அந்த வீட்டுக்குள் நடப் பதை வாசகர்கள் நம்மோடு சேர்ந்து அமைதியாகக் கவனிக்கவும். இன்னும் அதிர்ச்சிகரமான ஆதாரங்களுடன், பின்னணிகளை பிறகு பார்ப்போம் -

குடும்பத் தலைவி: (மெல்லிய குரலில்) வாங்க....உக்காருங்க....

தொழில் அதிபர்: வணக்கங்க!

குடும்பத் தலைவி: தண்ணீ குடிக்கிறீங் களா?

தொழில் அதிபர்: ம்....குடுங்க...

கு.த: இந்தாங்க.... (சமையலறைக்குச் சென்று தண்ணீர் கொண்டு வந்து தருகிறார்).

தொ.அ: தாங்க்ஸ்ங்க... நீங்களும் உக்கா ருங்க!

கு.த: இப்பதான் வர்றீங்களா?

தொ.அ: ஆமாம்... (ஒரு பெயரைச் சொல்லி) உள்ள வரமாட்டேன் னுட்டார். வாசல்லயே அப்படியே கிளம்பிட்டார்.

கு.த: ஆமாம்.... எப்பவுமே அவரு போயிடுவாரு....

தொ.அ: சொந்த வீடா இது...

கு.த: இல்லீங்க, வாடகை வீடு.

தொ.அ: உங்க பேருங்க..?

கு.த: (பெயரைச் சொல்கிறார்).

தொ.அ: நான் யாருன்னு சொன் னாரா?

கு.த: ம்....ஒண்ணும் சொல்லலை.

தொ.அ: என் பேரு ...... (சொல்கிறார்!). நான் சென்னை. மெடிக்கல் லைனுல இருக்கறேன். அடிக்கடி திருச்சி வருவேன்.

கு.த: ஓ, அப்படியா...

தொ.அ: மேரேஜ் ஆயிடுச்சா, உங்களுக்கு?

கு.த: ம்....ஆயிருச்சு.

தொ.அ: அப்படியா, ஹஸ்பெண்ட் என்ன பண்றாங்க?

கு.த: ஒரு பிரைவேட் கம்பெனியில ஒர்க் பண்றாங்க.

தொ.அ: என்னவா..?

கு.த: சும்மா... கம்பெனியில ஒர்க் பண்றார்...

தொ.அ: சரி, சரி.. குழந்தைங்க இருக் குதா..?

கு.த: ஒரு பையன்... ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறான்.

தொ.அ: எத்தனை வருஷம் ஆச்சு கல்யாணமாகி?

கு.த: ஏழு, எட்டு வருஷம் ஆச்சு

தொ.அ: அவரு உங்களோட சொந்தக்கார பையனா?

கு.த: ஆமாம்...

தொ.அ: நீங்க வேற எங்கயும் ஒர்க் பண்றீங்களா?

கு.த: இல்லீங்க... நான் ஹவுஸ் ஒய்ஃப்தான்.

தொ.அ: வீட்டுலதான் இருக்கீங்க.... ம்... என்ன படிச்சிருக்கீங்க?

கு.த: (சின்ன தயக்கத்துடன்) டுவெல்த் வரைக்குந்தான்....

தொ.அ: ஏன்.... டிகிரி போக லையா?

கு.த: ம்ஹ§ம்... படிக்கலை!

தொ.அ: ............தான் சொன்னாரு, எனக்கு எல்லா மேட்டரும்...

கு.த: ம்ம்ம்ம்...

தொ.அ: நான் எப்ப திருச்சி வந்தா லும் எங்கயாவது போறதுண்டு! அதான் அவர்கிட்ட(?)கேட்டேன். அவர் சொன்னாரு... இந்த மாதிரி இருக்காங்கன்னு! உங்களுக்கும் ஒண்ணும் பிரச்னை இருக்கா துன்னு சொன்னார்! அதான் பார்க் கலாம்ன்னு வந்தேன். ஆல்ரெடி நாலஞ்சு டைம் அவரு ஆபீஸுக்கு நீங்க வந்துருக்கீங்க. அப்ப நான் அறிமுகப்படுத்திக்கலை. பேசலை... ஆனா உங்களைப் பார்த்திருக்கேன்.

கு.த: ஓ... அங்கேயே பார்த் திருக்கீங்களா..!

தொ.அ: ஆமாங்க. நீங்க எவ்ளோ வாங்கறீங்க?

கு.த: 25,000 ரூபாய்.

தொ.அ: மாசத்துக்கு தானே?

கு.த: ம்.. மாசத்துக்குதான்.

தொ.அ: ஓ.. நான் இப்ப 25,000 ரூபாய் குடுத்துட்டா, நான் சொல்ற அந்த ஒன்மன்த்துக்கு வேற எங்கயும் போக மாட்டீங்க தானே...?

கு.த: வேற எங்கயும் போக மாட்டேன்.

தொ.அ: எப்படிங்க.... நான் வீட்டுக்கு வரணுமா? இல்லாட்டி நீங்க வெளியே வருவீங்களா?

கு.த: வெளியவும் வருவேன். நீங்க வீட்டுக்கும் வரலாம். ஒண்ணும் பிரச் னையில்லை.

தொ.அ: வீட்டுக்குன்னா? வீட்டுல குழந்தை..?

கு.த: என்னைப் பொறுத்தவரைக்கும் குழந்தை இல்லாத நேரத்துலதான் வரமுடியும். ஏன்னா, பையன் ஸ்கூலுக்கு போயிடுவான். எயிட் டு ஃபோர் ஓ கிளாக் அவன் போயிடு வான். டியூஷனுக்கும் இடையில போயிடுவான். 4 மணிக்கு மேல, அந்த நேரத்துல ஆள் இல்லாத நேரத்துலயும் நீங்க வந்து போய்க்கலாம்.

தொ.அ: (நீண்ட மௌனத்துக்குப் பிறகு) ஓ!

கு.த: குழந்தை இல்லாத நேரம் போக, மத்தபடி வீட்டுக்காரர் இருக் கறப்பகூட வரலாம்.

தொ.அ: அப்படியா... வரலாமா? அவருக்குத் தெரியுமாங்க எல்லாம்?

கு.த: அவருக்குத் தெரி யுங்க.

தொ.அ: அவரு ஒண்ணும் சொல்ல மாட்டாரா?

கு.த: எல்லாம் அவருக்குத் தெரியும். ஒண்ணும் சொல்ல மாட்டாரு.

தொ.அ: என்னங்க சொல்றீங்க..? பிரச்னை எதுவும் வந்துறாதா? நான் இங்க இருக்கற நேரம் அவரு வந்து ஏதாவது ரசாபாசம் ஆகிடப் போகுது...

கு.த: இல்லை... இல்லை... அந்த ஒரு மாசத்துக்கு நீங்க 'பே' பண்ணிடறீங்க, இல்லையா...

தொ.அ: இந்த மாசத்துல ஆல்ரெடி யாரும் இருக்காங்களா?

கு.த: ம்.... இருக்காங்க.

தொ.அ: யாருன்னு தெரிஞ்சுக்க லாமா?

கு.த: அவரும் ஒரு கம்பெனி ஓனர்.

தொ.அ: திருச்சியா அல்லது வெளி யூரா?

கு.த: உள்ளூர்க்காரங்க எப்படி? வெளியூர்தாங்க.

தொ.அ: ஓஹோ... நான் வர்றப்பலாம் ஊட்டி, கொடைக்கானல்னு வேற ஊர்களுக்கும் போறதுண்டு. அங்கெல் லாம்கூட வருவீங்களா....?

கு.த: போலாங்க. எங்க ஃபேமிலியைப் பொறுத்தவரைக்கும் சனி, ஞாயிறு மட்டும்தான் வெளியூர் வருவேன். அந்த சமயத்துல பையனை வீட்டுக் காரர் பார்த்துப்பாரு...

தொ.அ: அப்படியே பண்ணிக்கலாம். ஒண்ணும் பிரச்னையில்லை. உங்களுக் குத் தெரிஞ்ச ஃபிரெண்ட்ஸ் வேற யாரும் இதேமாதிரி இருக்காங்களா?

கு.த: இருக்காங்க! அவங்க எல்.ஐ.சி-ல ஒர்க் பண்றாங்க. லெக்சரரா ஒர்க் பண்றவங்களும் இருக்காங்க. இ.பி-யில ஒர்க் பண்றவங்களும் இருக்காங்க. சொன்னாக்கா, பண்ணித் தரலாம்.

தொ.அ: அவங்கள்லாம் எவ்வளவு?

கு.த: எல்லாம் கொஞ்சம் பெரிய ஃபேமிலி பாருங்க. நல்லா இருப் பாங்க. ஐம்பதாயிரம் வரைக்கும் வாங்கறாங்க.

தொ.அ: அவங்க வீட்டுக்குல்லாம்கூட தெரியுமா?

கு.த: அதுங்களா... .ஒரு சிலர் வீட்டுல தெரியலாம். ஆனா, அவங்க ஹஸ்பெண்டுக்கு எந்த அளவுக்கு தெரியும்னு எனக்கு சரியாத் தெரியலை!

தொ.அ: ஆனா, வருவாங்கள்ல?

கு.த: ம்...

தொ.அ: எப்படி? வேலைக்குப் போனா எப்படி வருவாங்க?.

கு.த: எத்தனை நாள் வேணுமோ லீவு எடுத்துட்டு வருவாங்க!

தொ.அ: ஓ... ஓ... வேற பிரச்னை எதுவும் இருக்காதுல்ல?

கு.த: ஒரு பிரச்னையும் இருக்காது. நீங்க என்ன பிரச்னையைக் கேட் கறீங்க?

தொ.அ: இந்த ஹெச்.ஐ.வி... எய்ட்ஸ் அந்த மாதிரின்னு சொல்றாங்களே... ஒரே பயமா இருக்கு (சிரிக்கிறார்!).

கு.த: (பதிலுக்கு மெலிதாகச் சிரித்து) நாங்க ஃபேமிலி கேர்ள்ஸ்தானேங்க! அதனால ஒண்ணும் வராது! அதுமாதிரி கேக்கறாங்கனுதான், ஒருத்தர்கிட்டே அக்ரிமென்ட் தொடங்குறதுக்கு முன்னாடி நாங் களும்கூட ஃபிரெஷ்ஷா மெடிக்கல் டெஸ்ட் எடுத்துத் தந்துடறோம்.

தொ.அ: அதான்... அடுத்த மாசத்துக்கு இது பண்ணிக்கலாம்னுதான்... அன்னிக்கு ............கிட்ட 5,000 பணம் கொடுத்திருந்தேன், கொடுத் துட்டாரா?

கு.த: கொடுத்துட்டாரு.

தொ.அ: இதே வருஷத்துல மறுபடி வருவேங்க. அப்ப உங்க ஃபிரெண்ட் யாராவது அரேஞ்ச் பண்ணிக்கலாம்... (சிரிக்கிறார்).

கு.த: பார்த்துக்கலாம்ங்க. இல்லாட்டி அவர்கிட்டயே(?)கூட கேட்கலாம்.

தொ.அ: இந்த லெக்சரர் வேலை பாக்குறவங்க... (சட்டென்று) அது மாதிரி இல்லாட்டியும் காலேஜ் பொண்ணுங்க யாராவது இருக் காங்களா?

கு.த: காலேஜ் பொண்ணுங்களா? எனக்குத் தெரிஞ்சு காலேஜ் லெக் சரர்தான் இருக்காங்க....

தொ.அ: (மறுபடி) இந்த மாதிரி சின்னப் பொண்ணுங்க இல்லைன்றீங்க... ஆனா, இதுல பிரச்னை எதுவும் இருக்காதுல்ல..?

கு.த: இல்லீங்க... திருச்சியில அம்பது அறுபது பேர் இருக்காங்க....

தொ.அ: அவ்வளவு பேருங்களா?! எப்படி..? இவங்க எல்லாருக்குமே பேசி முடிக்கிறதுக்கு ஆள் இருக் காங்களா?

கு.த: ம்... இருக்காங்க. இப்ப உங்களை அறிமுகப்படுத்தி வெச்சாங்கள்ல... அவங்கள மாதிரி நிறைய பேர் இருக்காங்க.

தொ.அ: இவங்களுக்கு நீங்க ஏதாச்சும் பணம் தரணுமுங்களா...

கு.த: அவங்களே கமிஷன் மாதிரி எடுத்துப்பாங்க...

தொ.அ: பட்.. என்னிக்காவது இதெல்லாம் பிரச்சனைஆயிடாதா?

கு.த: அப்படி ஆகறதுக்கு சான்ஸ் இல்லை, ஏன்னா நாங்க எல்லாம் ஃபேமிலீல இருக்கோம் பாருங்க... அதனால யாருக்கும் இப்படினு தெரியாது. அதுவும் வீட்டுக்காரருக்குத் தெரிஞ்சு பண்றதால ஒண்ணும் பிரச்னையில்லை.

தொ.அ: அவரு எப்படிங்க அக்செப்ட் பண்றாரு, ஆச்சர்யமா இருக்கு!

கு.த: இல்லை.... தெரிஞ்சுதான், நாங்க ரெண்டு பேரும் பேசி முடிவு பண்ணித்தான் இப்படி பண்றது.

தொ.அ: ஃபேமிலியில ஏதாச்சும் பெரிசா பணப் பிரச்னைங்களா?

கு.த: பிரச்னை இருக்கு. அவரு வாங்கற சம்பளம் எங்களுக்குப் பத்தாது. அதனால இந்த மாதிரி!

தொ.அ: அடுத்த குழந்தை எதுவும் பெத்துக்கலையா.....

கு.த: இல்லைங்க... பார்க்கலாம்.

தொ.அ: (சில நொடி அமைதி நிலவ) சரி... அதான் அடுத்த மாசத்துக்கு கன்ஃபார்ம் பண்ணிடலாம்னு...

கு.த: கண்டிப்பா வாங்க.

தொ.அ: இன்னும் 20,000 ரூபாய் தரணும், சரிங்களா?

கு.த: வரும்போது தாங்க!

தொ.அ: சரிங்க. அப்ப அடுத்த மாசத்துக்கு நீங்க வேற யாரையும் எடுத்துக்க வேணாம்.

கு.த: இல்லீங்க... பணம் வாங்கிட்டா அப்படிஎங்க குடும்பத்துல செய்ய மாட்டோம்!

தொ.அ: ஓகே, நான் கிளம் புறேன்...

கு.த: போய்ட்டு வாங்க..!

விக்கித்துப் போன நிலையிலேயே நாம் வெளியில் வருகிறோம். அடுத்தடுத்து நாம் சந்தித்த இன்னும் சில முகங்கள், அவர்களின் சுற்றுச் சூழல்கள்... தோரணைகள்...

அது ஒரு விசாரணை வெடி குண்டு!
- தொடர்வோம் அடுத்த இதழில்...


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சாதி - குற்றணர்வு தவிர்

 

 

ஜனார்த்தன் - தமிழில் மணி 


 

 

2011 மக்கட்தொகை கணக்கெடுப்பில் சாதியை சேர்க்க வேண்டும் என்ற மத்திய அரசின் தீர்மானத்தை ஓட்டி முற்போக்காளர்கள் மத்தியில் ஒரு சலசலப்பும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. இது சாதிவாரியான பிரிவை அதிகப்படுத்தும் என்ற வாதம் தவறானது ஏனெனில் அது குறிப்பிடப்படாமல் இருந்துவிட்டால்மட்டும் சமூகம் சாதியற்ற சமூகமாக மலர்ந்துவிடுவதில்லை. ஓவ்வொரு சாதியும் மொத்த சதவீத்த்தில் தோராயமாக எத்தனை சதவீதம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது அவர்களின் நிலையை தெரிந்துகொள்ள உதவும்.

உண்மையில் எந்த சாதிவாரி கணக்கெடுப்பும் சரியானதாக அமையப்போவதில்லை. 1931ல் எல்லா சாதி தொகுதிகளும் சமூக சாதி அடுக்கின் மேல் நோக்கி நகர முனைவதாக ஆங்கிலேயர்கள் கண்டறிந்தனர். இந்தமுறை அதற்கு நேர்மாறான விளைவுகள் ஏற்படலாம். குற்றணர்வு பெற்ற உயர்சாதி இந்துக்கள் தங்களது சாதியை குறிக்காமல் விடும் அதே நேரம் மற்ற சாதிகள் அதிக ஓதுக்கிட்டு பலனுக்காக தங்களது எண்ணிக்கை கூட்டும் முயற்சியில் இறங்கலாம். எப்படியாயினும் சாதியின் பிடிப்பு மாறாது அதே அளவில் நம்மீது இறுகித்தான் இருக்கப்போகிறது.

முற்போக்காளார்கள் சாதிபற்றிய பார்வைதான் ஒரு உண்மையான பிரச்சனையாய் முன் நிற்கிறது. இந்திய முற்போக்காளார்கள், பொதுவாக இந்திய உயர் சாதி இந்துக்கள் சாதி நிறுவனத்திலிருக்கிற அதீத சமச்சீரன்மையால் அடைகிற பெரும்குற்றவுணர்வின் காரணமாக – சாதி நிறுவனத்தோடு எந்த சமனும் செய்து கொள்ளத்தயாராயில்லை. இதனால் சமச்சீரான மற்றும் அனைத்து சாதியினரையும் உள்ளடக்கிய மாற்றங்கள் என்ற போர்வையில் பேசும் சாதிப்பற்று அரசியல்வாதிகளின் வாதங்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றனர்.

 

சாதியைப்பற்றிய மாபெரும் குற்றவுணர்வை இந்துக்கள் இறக்கிவைக்க வேண்டிய நேரமிது. சாதி சமூகம் இப்போது இந்து மதம் என்று அழைக்கப்படக்கூடிய ஒரு மத நாகரீக காலத்தில் ஒரு தேவைக்காக தோன்றியிருந்தாலும் அது அனைத்து இந்தியராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட்துதான். இன்னும் சொல்லப்போனால் தங்கள் மதரீதியில் எந்த அங்கீகாரம் சாதிக்கு இல்லாதபோதும் இஸ்லாமும், கிறித்துவமும் இந்த மண்ணில் சாதியை சுவீகரித்துக்கொண்டவைதான். சுருங்க்கூறின், சாதி ஒரு இந்து பிரச்சனையல்ல, அது ஒரு இந்திய நடைமுறை.

சாதி யாராலும் உட்கார்ந்து யோசித்து கண்டுபிடிக்கப்பட்ட முறையாகயிருக்க முடியாது. அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட்தாலேயே அது வளர்ந்திருக்க முடியும். அது இந்த் மண்ணிலே மேலும் கீழும் வளர்ந்து வியாபித்து, அடிவேர் வரை ஊடுறுவ அதுவே காரணமாய் அமைந்திருக்க முடியும். ஓவ்வொரு அந்நிய படையெடுப்பின் போதும், புரட்சியாளர்கள் அதற்கு எதிராக தாக்கியபோதும் அது மேலும் மேலும் பெருகி அதன் வேர்களை பலப்படுத்திகொண்ட்து. சாதி வெறும் மத சம்பந்தப்பட்ட விசயமாக மட்டுமின்றி இந்திய யதார்த்த்தில் தேவையான ஒரு கூட்டு பாதுகாப்பு மனப்பான்மை உணர்வை கொடுப்பதான ஒரு அமைப்பாய் நிருபணமாயிருக்கிறது.

நமது சில முற்போக்காளர்கள் நம்புவது போல சாதியின் மீதான பெரும் தாக்குதல்கள் இஸ்லாமிய படையெடுப்பினாலோ, பாதிரியார் படையினாலோ நிகழவில்லை. புத்தர் சாதியின் மீது தாக்குதல் நட்த்தி தோற்றுப்போனார். அதுபோல விவேகானந்தர், கபீர், குருநானக், ராம் மோகன் ராய், தயானந்த சரஸ்வதி, ராமானுஜம், ஏன் காந்தியும், அம்பேத்காரும் கூட. சாதியின் மீதான் எந்த தாக்குதல் உடனடியான எதிர் தாக்குதலை கொடுத்திருக்கிறது. அம்பேத்காருக்குப்பிறகு, குறிப்பாய் கன்சிராமும், மாயாவதியும் ஒரு பழி எதிர்வினையாய் சாதியை எதிர்த்தனர். அதற்காக அவர்களை தலித்துக்களையும் மற்ற தாழ்த்தப்பட்டவர்களையும் ஒரு குடையின் கீழ் தொகுக்க முயற்சித்தனர். பிற்படுத்தப்பட்ட் மக்களும் சாதிவாரியாக தொகுக்கப்பட்டு அதனால் பெரும்பயன் அடைந்து – அது தெற்கே துவங்கி வடக்கி நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாய் தமிழகத்தில் சாதி அடக்குமுறை என்பது ஆதிக்க ஜாதிகள் தாழ்த்தப்பட்ட சாதிகளின் மீது செலுத்தும் சாதி ஆதிக்கத்தை குறிக்கும்.

சாதியின் சூட்சுமத்தை தெரிந்து கொள்ள அதை ஆதியோடு அந்தமாக அறிந்து கொள்வது அத்தியாவசியமான ஒன்று. ஒரு தனிமனிதனுக்கு அது பிரிக்கும் நடைமுறையல்ல,. தன் குழுவோடு ஒன்றிணையும் ஒரு தளம் அது. அதில் தாயதித்தனம் அந்த சமூகத்தை இணைக்கிறது. கடினமான புயலடிக்கிற நேரங்களில் அது அவனை அணைந்துவிடாமல் காக்கிறது. த்த்தளிக்கும் படகிற்கு கலங்கரை விளக்கமாய், உடுக்கை இழந்தவனுக்கு இடுக்கண் களையும் கரமாய் அவனை அணைக்கிறது. ஒரு மனிதன் தன் தற்கால, எதிர்கால கவலைகள் எதுவுமின்றி பாதுகாப்பாய் உணரும் போதும் சாதி தன் இறுக்கமான கண்ணிகளை தளர்த்தி கொள்கிறது. ஒரு அரசாங்கம் தனது தனிமனித உரிமையை தனது சமூக உரிமைகளோடு சமரசம் செய்யாமல் பாதுகாக்கிற பொழுது தானகவே சாதி கரைந்து போகும்.

பன்முகத்தன்மையோடு இருக்க நாம் பழகியதால் சாதி இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. மேற்கத்திய உலகத்தில் வேற்றுமையும்,பன்முகத்தன்மையும் அச்சமூட்டும் சமூக பலவீன்ங்களாக கருதப்பட்டு முழுமையாக வன்முறையாய் அழித்தொழிக்கப்பட்ட்து. அமெரிக்கர் செவ்விந்தியர்களையும், ஆஸ்திரேலியர்கள் தங்களது பூர்வ குடிகளையும் அவ்வாறே செய்தனர். ஒருமுகத்தன்மை நோக்கி நகரும் சமூகம் அதை அடைய செய்யும் அதிபயங்கர வன்முறை கொண்டு அழித்தொழிக்கும் வேலையில் ஈடுபடும் என்று 19 நூற்றாண்டு பிரஞ்சு அறிஞர் இர்னெஸ்ட் ரெனான் கூற்றை அம்பேத்கார் நினைவு கூர்கிறார். “ ஓற்றுமை எப்போது வன்முறையினால் வழி நட்த்தப்படுவதில்லை. அவ்வாறு நிகழ்ந்து கொஞ்ச காலமே உயிரோடிருந்த தெற்கு, வடக்கு பிரான்சின் இணைப்புகள் நீர்மூலமாக்குதல் மூலம் நிகழ்ந்து வன்முறையே ஆட்சி செலுத்தியது “

இந்தியாவில் வேற்றுமை, பன்முகத்தன்மை பலவீனமாகவோ, ஒரு அச்சுறுத்தலாகவோ கருதப்படவேயில்லை. எல்லா இனத்தையும், வகுப்பையும் மிக குறைந்த உராய்வுகளோடு வன்முறைகளோடு அவர்களின் நிலைமை பலவீனப்படாமல் ஒரே தளத்தில் கொண்டு வரும் வழியே பெரும்பாலும் கடைபிடிக்கப்ப்ட்ட்து இவ்வாறே ஓவ்வொரு படையெடுப்பின் போதும் ஓவ்வொரு இந்து பொருளாத முன்னேற்ற மாற்றத்திலும் சாதிகள் வள்ர்ந்தன. அதற்கு மாறாக வன்முறையோடு சாதியற்ற சமூகத்தை அடைய நாம் முயற்சித்திருக்கலாம். ஆனால் அமைதி மற்றும் சமரசமான ஒரு வழியை நாம் தேர்ந்தெடுத்தோம்.

அப்படியென்றால் சாதியும் அதன் எதிர்மறை விளைவுகளும் எல்லா காலத்திலும் இருக்கப்போகிறது என்ற அர்த்தமா ? கண்டிப்பாய் இல்லை. திறந்த பொருளாதர சந்தை, நகர் பொருளாதாரம், உலகமயாமாக்கம் போன்றவை சாதி என்கிற பெரிய மாளிகை அசைத்து, இடிக்கிறது. கொஞ்ச காலத்தில் அது தூள் தூளாக்கப்பட்டு விடும். சமூக அளவில் சாதிகள் மறைவதற்கான ஒரு சில மாற்றங்களை செய்வது மேலும் அதன் அழிவை துரிதமாக்கும். சாதி வெறும் பிறப்பு சார்ந்த விசயமாகவே மட்டும் இருக்க கூடாது. அது ஒரு சஙகம்(கிளப்) போல அதற்கான நுழைவு, வெளியேற்ற விதிகள் கொண்ட நிறுவனமாக மாற்றப்படும் போது அதனது எதிர்மறை விளைவுகள் தானாகவே தன் பலம் இழக்கும். நமது சந்தை விதிகளும், மக்கட்தொகுப்பும் சாதியை அழிக்கும் வேலையை தொடர நாம் அனுமதிக்கலாம்.

முற்போக்காளர்கள் சாதி பற்றிய குற்றவுணர்வில் உழன்று கொண்டிருக்க வேண்டாம். அவர்கள் அதோடு சண்டை போடுவதற்கு பதிலாக அநிர்நியம் அடைய செய்யவேண்டும்




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தமிழ்ப் பெண்களை மிரட்டி கற்பழித்தோம்

1.jpg
நெல்லை செங்கோட்டையை ஒட்டிய கேரள கும்பாவுருட்டி அருவிக்குச் சுற்றுலாச் செல்லும் தமி ழகப் பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரத்தை அதிர்ச்சி சி.டி. ஆதாரத்தோடு "அடர்ந்த வனம்! கொட்டும் அருவி! இளம்பெண்களை வேட்டையாடிய வனக்கும் பல்' என்ற தலைப்பில் 17.7.10 இதழில் வெளியிட்டி ருந்தோம். கேரள காவல்துறை உடனடியாக களத்தில் இறங்கியது.

கேரள வனத்துறையின் உளவுப் பிரிவு விசாரணை நடத்துமென்றார்கள் வனத்துறை அமைச்சர் பினோய் விஸ்வமும் வன அதிகாரி வர்க்கீசும்.

கேரள உள்துறை அமைச்சரான கொடியேறி பால கிருஷ்ணன், எதையும் தட்டிக்கழிக்கும் தென்மலைக் காவல்நிலையம் மீது நம்பிக்கை இல்லை என்பதால் கொல்லம் டி.எஸ்.பி. வரதராஜனிடம் பொறுப்பை ஒப்படைத்தார். குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக குளத்துப்புழா இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையில் ஸ்பெஷல் டீம் அமைக்கப்பட்டது.

கொல்லத்தில் பதுங்கியிருந்த மணிகண்டனும் சாகுல்ஹமீதும் உன்னிகிருஷ்ணனும் கைது செய்யப் பட்டு, கும்பாவுருட்டிக்கு கொண்டுவரப்பட்டார்கள்.

இந்த மூவரும் கேரள அச்சன்கோயிலைச் சேர்ந்தவர்கள். கேரள வனத்துறை யால் அமைக்கப்பட்ட வனப்பாது காப்புக் குழுவில் உறுப்பினர்கள்.

ஏற்கனவே "சிறப்பு'க் கவனிப் பால் கிறங்கிப் போயிருந்த அவர்கள் மறுபடியும் உடம்பை புண்ணாக்கிக் கொள்ள விரும்பவில்லை.

""சொல்லுங்கடா...?'' -இன்ஸ் பெக்டர் சந்தோஷ்குமார் விசாரித்தார்.

""மலையாளிகள் யாரும் இங்கே வருவதில்லை. தென்காசி, செங் கோட்டை, இலத்தூர் பகுதி தமிழர் கள்தான் வருவார்கள். குழந்தை, குட்டிகளோடு வருபவர்களை நாங்கள் ஒன்றும் செய்வதில்லை. நல்ல மனிதர்களாக நடந்துகொள் வோம். இளம் தம்பதிகள்... காதல் ஜோடிகள் இப்படிப்பட்டவர்களிடம் தான் தப்பு செய்தோம்.''

""எவ்வளவு காலமாக இப்படிச் செய்கிறீர்கள்?''

""இப்பதான் ஒண்ணரை வருஷ மாக.''

""எத்தனை கொலை செய்திருக் கிறீர்கள்?''

""சார்... அதைச் செய்யவே யில்லை சார்!''

""ஆண்களை என்ன செய்வீர்கள்?''

""அடிச்சு விரட்டிவிடுவோம் சார்... எதிர்த்தான்னா மரத்தில் கட்டிப் போடுவோம்.''

""இவனுங்க சொல்றானுங்க... நீ மட்டும் ரவுடி மாதிரி நிக்கிறே... சொல்டா... சொல்லுடா...'' 43 வயது உன்னிகிருஷ்ணன் கன்னத்தில் பளாரென விழுந்தது உபசரிப்பு.

""வர்ற டூரிஸ்ட்ல பெண்களா பார்த்து... "கும்பாவுருட்டி சாதாரண அருவிதான்... அந்தப் பாறைகளைக் கடந்து போனால் மணலாறு காணலாம் சூப்பரா யிட்டிருக்கும்'னு இரக்கமா, பணிவா பேசுவோம். தமிழ்ப் பொண்ணுங்க நம்பிடுவாங்க. பட்டப்பகல்தானேன்னு நம்பி எங்க பின்னாடி வருவாங்க. பாறையிடுக்குக்குப் போனதும் கத்தியைக் காட்டி, திமிர விடாம நெனைச்சதை முடிச்சிக்குவோம்.''

""யாரும் போலீஸ்ல புகார் கொடுக்க லையா?''

""இது அசிங்கமா யிருக்குல்ல... கொடுக்க மாட்டாங்க சார்...''

""இப்ப வெப்சைட்ல நக்கீரன்ல வந்த படம் எல்லாம் எப்ப எடுத்தது? யார் எடுத்ததுடா?''

""என்சனங்கில்... எங்க ஆசை, சல்லாபம் எல்லாம் முடிஞ்சதும் அவங்களை நிர்வாணமா... விதம் விதமா செல்கேமராவில் படம் புடிச்சி... அதை புளூஃபிலிம் சி.டி.யாக்கி கேரளாவுல உள்ள முக்கிய நகரங்கள்ல எங்களுக்கு நம்பிக்கையான கடைகளில் விற்பனை செய்தோம். இதுல எங்களுக்கு தொடர்ந்து நல்ல வருமானம் கிடைச்சது. அப்படி விற்பனை செஞ்ச ஒரு சி.டி.தான் எப்படியோ அந்த நெட்காரங்களுக்கு கிடைச்சு... எங்களை மாட்ட வச்சிருக்கு சார். இந்த தாயும் மகளும் சி.டி.யும் எங்களோடதுதான். ஆனால் எப்ப எடுத்ததுனு ஞாபகம் இல்லை சார்.''

ஸ்பாட் என்கொயரியை முடித்துக் கொண்டு சாலைக்கு வந்த இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமாரை சந்தித்து விசா ரணையின் போக்கு பற்றி கேட்டோம்.

""பாதிக்கப் பட்ட யாராவது ஒருத்தர், எங்கா வது புகார் கொடுத் திருந்தாலும், ஆரம்பத்திலேயே இந்தக் கொடூரத்தை தடுத்திருக்கலாம். புகார் கொடுக்காததால் ஒன்றரை வருடமா ஆட்டம் போட்டிருக்கிறார்கள். 

இந்த 3 பேரையும் இப்போது ரிமாண்ட் செய்து விட்டு பிறகு போலீஸ் கஸ்டடியில் எடுத்து தனித் தனியே விசாரிக்க வேண்டும். இவர்கள் மட்டும்தான் செய்தார்களா? இவர்கள் பின்னால் வனத் துறையினர் யாராவது இருக்கிறார்களா என்பதை அடுத்தகட்ட விசாரணை மூலம்தான் தெரிந்துகொள்ள முடியும்'' என்றார் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார்.

ஆனால்... நம்மைத் தொ டர்புகொண்ட கொல்லம், குளத்துப்புழா பகுதி மீடியா நண்பர்களோ... ""நோ கம்ப்ளைண்ட்ஸ்... அதனால... இந்த அளவோட விசா ரணையை முடித் துக் கொண்டுவிடப் போகிறார்கள். பாதிக் கப்பட்டவர்கள் யாராவது புகார் கொடுத்தால் மட்டுமே... விசாரணையும் நடவடிக்கையும் தீவிரமாகும்'' என்றார்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அரசாங்கத்தை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்வதற்காக தாங்கள் சம்பாதித்த பணத்தை பல வழிகளில் மறைத்து வருவதை கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் வரிஏய்ப்பு செய்த பணத்தை தனது அத்தையின் கல்லறையில் மறைத்து இருந்த தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் லண்டனை சேர்ந்த வியாபாரி ஒருவர் வரிஏய்ப்பு செய்தது வருமானவரி துறையினருக்கு தெரிய வந்தது. எனவே அந்த நபரிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, அவர் தான் வரி ஏய்ப்பு மோசடி செய்த 1 கோடி ரூபாயை தனது அத்தையின் கல்லறையில் புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். அந்த கல்லறை அங்குள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ளது.

எனவே தேவாலயத்தின் பாதிரியாரின் அனுமதி பெற்று அந்த கல்லறையை வருமானவரித்துறை இன்ஸ் பெக்டர்கள் தோண்டினர். அங்கு அவர் வரி ஏய்ப்பு செய்த பணம் இருந்தது. அத்துடன் அவர் மறைத்து வைத்திருந்த ரூ.35 லட்சம் மதிப்பு பங்கு சந்தை ஆவணங்களும் சிக்கியது.

விசாரணை நடத்தியதில் 20 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த பணத்தை அவர் கல்லறையில் புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இங்கிலாந்தில் வரி ஏய்ப்பு செய்வது பெரிய குற்றம். இது கண்டுபிடிக்கப்பட்டதால் கூடுதலாக அபராத பணம் செலுத்த வேண்டியது இருக்கும் என வருமான வரித்துறை அதிகாரி டாவ்ஹார்னெட் தெரிவித்துள்ளார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பேஸ்புக்‌கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த கொடுமை

Post by ரபீக் on Wed Jul 28, 2010 1:30 pm

பேஸ்புக்கில் புகுந்து விளையாடுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பேஸ்புக் பற்றிய அதிர்ச்சித் தகவல்களும் சம அளவில் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன.
பலர் தங்கள் பணிகளை மறந்து கூட பேஸ்புக்கில் மூழ்கி விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. மும்பையில் கல்லூரி மாணவி ஒருவர் பேஸ்புக்கில் விரிக்கப்பட்ட வலையில் சிக்கி கற்பிழந்து கண்ணீருடன் தவித்து நிற்கிறாள்.

மும்பை கிழக்கு செம்பூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி, சும்மா பேஸ்புக்கில் நட்பு வளர்த்துள்ளார். எதிரே வலை விரித்த இளைஞனுக்கோ எண்ணம் வேறாக இருந்தது. தினமும் பேஸ்புக்கில் சாட் செய்த இருவரும், ஒரு நாள் பாட விஷயமாக கருத்துக்களை பறிமாறிக்கொள்ள நேரில் சந்தித்தனர். அதன் விளைவு, ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அந்த இளைஞன், இளம் பெண்ணை கற்பழித்தான்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெற்றோரும், உற்றாரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த இளைஞர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்டெர்நெட் வசதிகளை தவறாக பயன்படுத்துவதால் இன்றைய இளசுகள் இடம் தெரியாமல் போகிறார்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Bangalore school’s circular raises controversy
BANGALORE: Trigerring a fresh controversy over some provisions of the Right to Education (RTE) Act, a Bangalore school’s circular to parents virtually warns them of what could be in store once the act comes into force. 

Bethany High School, in a circular dated July 26, a copy of which is with TOI, said: "Under this Act, all private unaided schools will have to accommodate 25% of their strength of children around the neighbourhood without any screening. This means that any child will have to be allowed into school and share the classroom with your child. Eminent psychologists have said that this will be detrimental to the psyche of all children, yours and the others, and the school has to sit back and admit indiscriminately and cannot refuse admission." 

It goes on: "Not only can the school not reject anybody, the school cannot even expel them or give them a TC even if they cause disciplinary problems in the school. Once this act is enforced, another child could beat up your child, smoke on the campus, misbehave with a girl or a teacher, and the school will have to watch helplessly." 

School principal Akash Ryall’s defence was: "I have said all this in the circular. But it was not meant for only 25% of the children, but to all." He added: "I’m the principal of a private school and have every right to send a circular to the parents. I have to inform them about what will happen one year from now when RTE comes into force. I’m not against the 25% quota. At Bethany, we’re giving free education and supporting 20 families. How can we be called an elitist school? I am not discriminating. I was only questioning as to how we will discipline children and this includes every child, not just the 25 % who will come in." 

Ryall went on: "Once the RTE comes into effect, we cannot fail or expel any child irrespective of whatever they do. The school will have to just sit back and watch. I was only quoting from the rules of RTE. I never used the word ‘criminal’. In fact, we welcome the 25% quota. Bethany has children of autorickshaw drivers and gardeners." Headmaster Robert Khin said: "If certain sections have been hurt by the circular, it was unintentional." 

Natarajan R said: "My child has been studying for 10 years. The school is not against the 25%. The reason the circular was sent is to keep parents informed. We were asked to filed objections before July 30, 2010. The circular has been misread."

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு

இந்தியா முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் (2006-2008) சுமார் 23,883 பேர் வரதட்சனை கொடுமையால் இறந்துள்ளதாக ராஜ்ய சபையில் இன்று தெரிவிக்கப்பட்டது. பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மகன், 2006 ஆண்டில் 7618 பேரும், 2007 ஆண்டில் 8093 பேரும், 2008 ஆண்டில் 8172 பேரும் இறந்துள்ளதாக தெரிவித்தார்.


பெண்கள் பாதுகாப்பிற்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டுவருவதாகவும், பெண்கள் பாதுகாப்பு கருதி மத்திய அரசு பல்வேறு சட்டங்கள் இயற்றினாலும், இவ்வாறான சாவுகளை அச்சட்டங்கள் மூலம் தவிர்க்க வேண்டிய கடமை மாநில அரசுகளுக்கு தான் உள்ளது எனவும் தெரிவித்தார். 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு

இப்போது செல்போன் இல்லாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. ஆனால் செல்போனை “நடமாடும் நோய்க்கூடம்” என்று விஞ்ஞானிகள் வர்ணித்து உள்ளனர்.


செல்போனில் உள்ள அசுத்தங்கள் தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆய்வு நடத்தியது.

அதில் கழிவறை கோப்பையில் உள்ள கிருமிகளை விட செல்போனில் அதிக அளவு கிருமிகள் இருப்பது தெரிந்தது.

அதாவது கழிவறை கோப்பையை விட 18 மடங்கு அதிகமாக செல்போனில் கிருமிகள் இருந்தன. ஒரு பொருளில் குறிப்பிட்ட அளவு வரை பேக்டீரியாக்கள் இருந்தால் அது ஆபத்து இல்லாததாக கருதப்படுகிறது. ஆனால் செல்போனில் குறிப்பிட்ட அளவை விட 10 மடங்கு அதிகமாக பேக்டீரியா உள்ளது.

மிகவும் அசுத்தமாக உள்ள செல்போனில் 39 மடங்கு அதிக பேக்டீரியாக்கள் உள்ளன.

அசுத்தமான செல்போன்களை பயன்படுத்தும்போது அதன்மூலம் கிருமிகள் நமது உடலில் புகுந்து வயிற்று உபாதை, மூச்சு கோளாறு போன்ற பல்வேறு நோய்களும் தாக்குகின்றன

_______________________________________________


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெண் தாசில்தாரை ஆபாசமாக திட்டியதாக புகார்-கிருஷ்ண பறையனார் கைது

புதன்கிழமை, ஜூலை 28, 2010, 11:55[IST]

சென்னை: பெண் தாசில்தாரை ஆபாசமாக பேசி திட்டியதாக வந்த புகாரைத் தொடர்ந்து சமூக சமத்துவப் படை அமைப்பின் பொதுச் செயலாளரான கிருஷ்ண பறையானார் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியைத் தலைவராக கொண்ட தலித் அமைப்புதான் சமூக சமத்துவப் படை. இதன் பொதுச் செயலாளராக இருப்பவர் கிருஷ்ண பறையனார். சென்னை [^]யில் வசித்து வருகிறார்.

நேற்று அதிகாலை மதுராந்தகம் டி.எஸ்.பி. தணிகைவேல் தலைமையில்போலீஸ் [^] படையினர் கிருஷ்ண பறையனார் வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர் தூங்கிக் கொண்டு இருந்தார். அவர் மீது மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் கிருஷ்ண பறையனாரை கைது செய்ய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் கிருஷ்ண பறையனார் கைது செய்யப்பட்டார். அவரை போலீஸ் வேனில் ஏற்றி மதுராந்தகம் கொண்டு சென்றனர்.

மதுராந்தகம் அருகே உள்ள சரவம்பாக்கம் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் கிருஷ்ண பறையனார் நேற்று முன்தினம் மதுராந்தகம் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் [^]நடத்தினார்.

இந்த போராட்டத்தின் போது அவர் மதுராந்தகம் பெண் தாசில்தார் ஆனந்தியை ஆபாச வார்த்தைகளால் தரக்குறைவாக திட்டியதாகவும் இதை தட்டிக்கேட்ட பெருவழி கிராம நிர்வாக அதிகாரி குமரேசன், தாலுகா அலுவலக ஊழியர் ஜேம்ஸ் ஆகியோரையும் கிருஷ்ண பறையனாரும் அவரது ஆதரவாளர்களும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தாலுகா அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். கிருஷ்ண பறையனாரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து போலீஸார் நடவடிக்கையில் இறங்கி வழக்குப் பதிவு செய்து கிருஷ்ண பறையனாரைக் கைது செய்தனர்.

கிருஷ்ண பறையனார் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், ஆபாச வார்த்தைகளால் பேசி மிரட்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Mumbai mill land sold for 474crTNN, Aug 1, 2010, 01.46am IST
MUMBAI: The National Textiles Corporation (NTC), which has reaped a windfall by selling off its properties in Mumbai since 2005, got another Rs 474 crore in its kitty on Saturday after Indiabulls Real Estate bagged the 2.3-acre Poddar mill at Worli Naka. The reserve price was fixed at Rs 250 crore. 

For the first time ever, the NTC carried out an e-auction spread over three days which ended on Saturday evening. "By 5 pm, the bid had reached Rs 434 crore. But within the next one hour, it shot up by another Rs 40 crore," said NTC chairman Ramachandran Pillai. "The property facing the Bandra-Worli Sea link was expected to fetch a good price," he added. 

The offer works out to more than Rs 200 crore per acre or more than Rs 25,000 per sq ft of saleable area. According to Knight Frank (India) chairman Pranay Vakil, the developer will probably set up a residential building and sell at the rate of between Rs 40,000 to Rs 50,000 a sq ft. "Real estate continues to be crazy in Mumbai. With this kind of pricing, the flat will not be below Rs 5 crore for a two BHK and Rs 7-8 crore for a three BHK. Clearly, this is outside the affordability of someone who is making Rs one crore per year," he said. 

Indiabulls might get more construction rights on this land if the state government were to approve a public parking lot on it. The developer will get get extra floor space index (FSI) — the ratio of the total buildable area vis-a-vis the size of the plot — if it agrees to construct a parking lot and hand it over to the BMC. 

There were eight bidders for this mill. However, during the final hours only three contenders remained in the fray. The Runwal Group was the second highest bidder at Rs 472 crore while Peninsula Land (Piramal Group) stretched its offer till Rs 451 crore. 

"The NTC has a revival scheme of expansion and diversification. Spinning and weaving activities will be doubled. We also plan to set up processing and garmenting plants and diversify into technical textiles," said Pillai, when asked how this money would be used. 

On August 4, NTC will sell another of its defunct mill, the eight-acre Bharat Textiles Mill, through the e-auction route which will end on August 6. A reserve price of Rs 750 crore has been fixed by the NTC. This mill is expected to fetch double the reserve price.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ICSE schools try to rope in parents now



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

முற்பட்ட வகுப்பு ஏழைகளுக்கும் இட ஒதுக்கீடு

large_51870.jpgபுதுடில்லி : "உயர் வகுப்பை சேர்ந்த ஏழைகளுக்கும் கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கலாம்' என, பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளோருக்கான ஆணையம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.


பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு, தற்போது அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வியிலும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும், தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதவீதமும், பழங்குடியினருக்கு 7.5 சதவீதமும், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மத்திய அரசு சார்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக, அவர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய, 2006ல், மத்திய அரசு சார்பில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சின்கோ தலைமையிலான இந்த ஆணையம், பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளோருக்கான ஆணையம் (இ.பி.சி.,) என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது அறிக்கையை மத்திய சமூக நீதித் துறை அமைச்சகத்திடம் சமீபத்தில் அளித்தது.


அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பொதுப் பிரிவில் அங்கம் வகிக்கும், உயர் வகுப்பை சேர்ந்த ஏராளமானோர், பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியுள்ளனர். இவர்கள் பரம ஏழைகளாக உள்ளனர். இவர்களுக்கும், மத்திய அரசு சார்பில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு வழங்கலாம். இட ஒதுக்கீட்டுக்கான அளவு 50 சதவீதமாக இருக்க வேண்டுமென, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதனால், உயர் வகுப்பிலுள்ள ஏழைகளுக்கு ஒதுக்கீடு அளிப்பதில் சட்ட சிக்கல்கள் ஏற்படலாம். எனவே, இதற்காக சட்ட திருத்தம் கொண்டு வரலாம்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பிரான்ஸ்: தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய்

தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளைக் கொலை செய்த வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நர்ஸ் கைது செய்யப்பட்டு்ள்ளார்.

டோமினிக் கார்டேஸ் என்ற இந்த நர்சின் வில்லேஸ் ஆவ் டெர்ட்ரே நகர் அருகே உள்ள லில்லே கிராமப்புற வீட்டிலிருந்து 6 சிசுக்களின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மிக உடல் பருமன் கொண்ட இந்த 40 வயதுப் பெண்ணுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் 20 வயதுக்கு மேலானவர்கள்.

முதல் முறையாக இவருக்கு பிரசவம் நடந்தபோது உடல் பருமன் காரணமாக பெரும் வலியையும் வேதனையையும் இவர் அனுபவித்தாராம். இந்த வேதனையால் மனரீதியில் பாதிக்கப்பட்ட அவர் தனக்கு அடுத்துப் பிறந்த 8 குழந்தைகளையும் கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்துள்ளார்.

இந்த வீட்டை சமீபத்தில் இந்தத் தம்பதி விற்றது. இதையடுத்து புதிதாக வாங்கியவர்கள் வீட்டு வளாகத்தில் செடிகளை நட தோண்டியபோது இரு குழந்தைகளின் எலும்புக் கூடுகள் சிக்கின. இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் தந்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் டோனிமிக் கார்டேஸ் அடுத்தடுத்து 8 குழந்தைகளை கழுததை நெரித்துக் கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.

இதில் 6 குழந்தைகளின் உடல்கள் இந்தத் தம்பதி இப்போது வசிக்கும் சென்டியர் டி ப்ரூ வீட்டு வளாகத்தி்ல் மீட்கப்பட்டன. இந்த உடல்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி வீட்டின் தரைப்பகுதி கிட்டங்கியில் போட்டு வைத்திருந்தார் கார்டேஸ். இந்த உடல்களும் எலும்புக் கூடுகளாகிவிடடன.

இந்தக் கொலைகளுக்கும் தனது கணவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று போலீசாரிடம் கார்டேஸ் தெரிவித்துள்ளார். மேலும் தான் கர்ப்பமானது கூட அவருக்குத் தெரியாது, குழந்தைகள் பிறந்ததும் தெரியாது என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து கணவர் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளார். கார்டேஸ் தொடர்ந்து சிறையில் உள்ளார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிகிறது.

ஒரு நர்ஸ் என்ற வகையில் கருத்தரிக்காமல் இருக்கவாவது முயன்றிருக்கலாமே என்று போலீசார் கேட்டதற்கு, இதற்காக நான் டாக்டரைப் பார்க்க விரும்பவில்லை என்று கார்டேஸ் பதிலளித்துள்ளார்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

'புர்ஹா': கட்டாயப்படு்த்தும் மாணவர்கள் ஆசிரியை விலகல்!

கொல்கத்தா: புர்ஹா அணிந்து தான் தங்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்று
மாணவர்களால் கட்டாயப்படுத்தப்பட்ட ஆசிரியை தனது வேலையை விட்டு
விலகியுள்ளார்.

கொல்கத்தா ஆலியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்கள்
சங்கம், தங்களது ஆசிரியைகள் கட்டாயம் புர்ஹா அணிய வேண்டும் என்று
கட்டாயப்படுத்தியதால் 7 ஆசிரியைகள் அதை அணிய ஆரம்பித்துள்ளனர்.

ஆனால்,
ஷீரின் மத்யா என்ற 24 வயது இலக்கிய ஆசிரியை புர்ஹா அணிய மறுத்துவிட்டார்.
மேலும் தனது பதவியை விட்டு விலகிவிட்ட அவர் அந்தப் பல்கலைக்கழகத்தின்
இன்னொரு கேம்சில் பணிக்குச் சேர்ந்துள்ளார்.

இது குறித்து ஷீரின்
கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதம் மாணவர்கள் சங்கத்தினர் 8 ஆசிரியைகளை
அழைத்து புர்ஹா அணிந்து தான் பல்கலைக்கழகத்துக்குள் வர வேண்டும் என்று
உத்தரவு போட்டனர். இது குறித்து ஆலோசனைகள் எல்லாம் தேவையில்லை என்றும்
சொல்வதை மட்டும் கேட்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வேலையை விட்டுவிட
வேண்டும் என்றும் கூறினர்.

யாராவது புர்ஹா அணிய விரும்பினால் அது
சரி தான். ஆனால் அதை எப்படி அடுத்தவர் மீது கட்டாயப்படுத்த முடியும்?.
நான் விரும்பினால் அதை நிச்சயம் அணிவேன். இவர்கள்
கட்டாயப்படுத்துகிறார்கள் என்பதற்காக அதை என்னால் அணிய முடியாது என்றார்.

இது
குறித்து மாணவர்கள் சங்க பொதுச் செயலாளர் முகம்மத் அதிகுர் ரஹ்மான்
கூறுகையில், இந்தப் பல்கலைக்கழகம் மதரஸாவில் அமைந்துள்ளது. இந்த வளாகமே
மதரஸா தான். இங்கு பெண்கள் புர்ஹா அணிவது அவசியம் என்றனர்.

இது குறித்து மேற்கு வங்க சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துஸ் சத்தார் கூறுகையி்ல், இது மிகவும் சீரியசான விஷயம். ஒரு தனி மனித
உரிமையைப் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. ஆசிரியைகளை மிரட்டியவர்கள் மீது
நடவடிக்கைபல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Prez dedicates Parnasala at Santhigiri to nation

TIMES NEWS NETWORK

Thiruvananthapuram: President Pratibha Patil on Friday dedicated to humanity the magnificent Lotus-shaped Parnasala at the Santhigiri Ashram here.The 91-foot high monument built of pristine white Makrana marble is the final resting place of the Ashrams founder Navajyothisree Karunakara Guru.
Describing the Guru as a great visionary who believed in a casteless society based on strong family values,the President said the Parnasala symbolised the Gurus message of universal peace and fraternity.The lotus-shaped Parnasala is a befitting tribute to Navajyothisree Karunakara Guru,who always said that the religion he believed is that of love,tolerance and fraternity.
Throughout his life,he spread the message of goodwill and sought to build a society in which people could live peacefully,performing their duties with sincerity.He believed that between human beings,there can be no discrimination on grounds of caste,religion or class.He taught his followers the importance of working together for peace,family welfare and spiritual growth, the President said.
She noted that a critical aspect of his teachings was that these addressed the concerns of the less privileged and disadvantaged sections of society,so as to build a society which is more equitable,and,hence,sustainable.Earlier on her arrival at Santhigiri,the President was received by the Ashrams Sanyasi Sangh and other inmates.She then went around the serene premises,decorated with white flowers,glimmering brass lamps,lotus ponds and rosewood sculptures.After a stopover at the Prayer Hall,the President offered floral tributes at the Parnasala.She also visited the lotus bud-shaped Sahakarana Mandiram (shrine of togetherness ) before meeting the Ashrams current head,Sishyapoojitha Amritha Jnana Thapaswini.
Later,formally inaugurating the month-long Parnasala dedication celebrations,Patil expressed confidence that the teachings of the Guru will continue to provide guidance and inspiration to all.The Parnasala would be a reminder to all,that life based on truth and compassion will bring peace and prosperity in the world, she said.

Pc0091300.jpg
IN MEMORY OF A SAINT: President Pratibha Patil dedicates Parnasala to the nation at the Santhigiri ashram near Thiruvananthapuram on Friday.To her left are Kerala home minister Kodiyeri Balakrishnan,MP Shashi Tharoor and KPCC president Ramesh Chennithala



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் விநாயகர் கோவிலை இடிப்பதாக வதந்தி: பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு

ராயபுரம், ஆக.14-

 
சென்னை தங்கசாலையில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு விநாயகர் கோவிலும், தர்காவும் உள்ளது. ஆஸ்பத்திரி வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டு மான பணி நடந்து வருகிறது.
 
இந்த நிலையில் அங்குள்ள விநாயகர் கோவிலை இடித்து விட்டு அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்ட போவதாக செய்தி பரவியது.
 
இதைத் தொடர்ந்து இன்று காலை 7 மணி அளவில் இந்து முன்னணி அமைப்பினரும், பக்தர்களும் ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். பின்னர் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் பிரியாவை சந்தித்து மனு கொடுத்தனர்.
 
அதில், புதிய கட்டிடம் கட்டுவதற்காக ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலை இடிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்டடாக்டர் பிரியா, கட்டிடம் கட்டுவது உண்மைதான். அதற்காக விநாயகர் கோவி லையோ தர்காவையோ இடிக்கும் திட்டம் எதுவும் இல்லை என உறுதி அளித்தார்.
 
அதை ஏற்றுக் கொண்ட பக்தர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் ஸ்டான்லி ஆஸ்பத்தியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 


சென்னை அருகே அம்மன் சிலைகள் பால் குடித்ததாக பரபரப்பு

சனிக்கிழமை, ஆகஸ்ட் 14, 2010, 9:40[IST]

சென்னை : சென்னை அருகே கோவில்களில் இருந்த அம்மன் சிலைகள் பால் குடித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திரண்டு வந்த பெண்களும், ஆண்களும், சிறுமிகளும் அம்மன் சிலைகளுக்குப் பால் கொடுத்து பரவசமடைந்தனர்.

இது ஆடி மாதம். தமிழகம் முழுவதும், சென்னையிலிருந்து குமரிவரை அனைத்து அம்மன் கோவில்களிலும் விழாக் கோலம் பூண்டுள்ளது. கூழ் காய்ச்சுவது, தீ மிதிப்பது என விசேஷமாக உள்ளது.


சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் ஆடித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று ஆடி கடைசி வெள்ளி என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் பூந்தமல்லி பகுதியில் 3 கோவில்களில் அம்மன் சிலை பால் குடித்த தாக பரபரப்பான தகவல் பரவியது.

நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில், பூந்தமல்லி பாணவேடு தோட்டத்தில் உள்ள மாத்தம்மன் கோவிலில் அம்மன் சிலைக்கு பக்தர் ஒருவர் பால் கொடுத்தார். ஒரு சிறிய ஸ்பூனில் பாலை எடுத்து அம்மன் வாயில் வைத்தார். சிறிது நேரத்தில் அந்த பாலை சிலை உறிஞ்சியது.

இதையடுத்து நூற்றுக்கணக்கான பெண்கள் படையெடுத்து வந்தனர். நீண்ட கியூ வரிசையில் நின்று அம்மனுக்கு பால் கொடுத்து பரவசமடைந்தனர்.

இதேபோல பாரிவாக்கம் கிராமத்தில் கொல்லாபுரி மாரியம்மன் கோவில், கெங்கையம்மன் கோவில் ஆகிய 2 கோவில்களில் உள்ள அம்மன் சிலைகளிலும் பால் குடிப்பதாக தகவல் பரவியது. இங்கும் மக்கள் படையெடுத்தனர்.

3 அம்மன் கோவில்களிலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் திரண்டது. விடிய விடிய 3 கோவில்களுக்கும் பக்தர்கள் வந்து கொண்டே இருந்தனர்.

நேற்றும் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை. பல பெண்கள் ஆவேசமாக சாமியாடி குறி சொன்னார்கள்



-- Edited by devapriyaji on Saturday 14th of August 2010 05:22:05 PM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

யார் பற்ற வைத்தாலும் தீ பற்றும்: கனிமொழி
விருதுநகரில் தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த கல்லூரி திறப்பு விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்குமாறு கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் கல்லூரி நிர்வாகி சாவி. நாகராஜன் மெழுகுவர்த்தியை கொடுத்தார். இது பெண்கள் விவகாரம் என கே.கே.எஸ்.எஸ்.ஆர். விலகி கொண்டதுடன், இதை பெருமையாக மேடையில் சொன்னார்.

பின்னர் விழாவில் பேசிய கனிமொழி, அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேச்சை நான் எப்போதும் மதிப்பேன். ஆனால் இன்று அவரது பேச்சை கண்டிக்கிறேன். கல்லூரி நிர்வாகி சாவி நாகராஜன் குத்துவிளக்கேற்ற சொன்னதற்கு, இது பெண்கள் விவகாரம் என்று ஒதுக்கிக்கொண்டீர்கள்.

யார் பற்ற வைத்தாலும் தீ பற்றும். இதில் ஆண், பெண் என்ற பேதம் கிடையாது. குத்துவிளக்கை பெண்கள் பற்ற வைத்தால்தான் பற்றுமா? அதுவும் சிவகாசி அருகில் இருந்து கொண்டு அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இப்படி பேசலாமா என்று கனிமொழி நகைச்சுவையுடன் பேச, கூட்டத்தில் இருந்து கே.கே.எஸ்.ஆர். உள்பட அனைவரும் கைதட்டி சிரித்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஜூனியர் விகடன் ஆசிரியர், நிருபர்கள் முன்ஜாமீன் மனு

ஆகஸ்ட் 13,2010,00:06 IST

மதுரை: ஜூனியர் விகடன் வார இதழ் ஆசிரியர், நிருபர் குழுவை சேர்ந்த ஐந்து பேர் முன்ஜாமீன் கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு செய்துள்ளனர். கடந்த 8ம் தேதி வெளியான  ஜூனியர் விகடன் இதழில், மதுரையை சேர்ந்த அரசியல் பிரமுகர் குறித்து செய்தி வெளியானது. இதற்காக அரசியல் பிரமுகருக்கு ஆதரவாகவும், வார இதழை கண்டித்தும், மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


ஜூனியர் விகடன் நிருபர், ஆசிரியர் குழுவை சேர்ந்தவர்களுக்கு எதிராக அரசியல் பிரமுகர் ஒருவர், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், ஜூனியர் விகடன் இயக்குனர் சீனிவாசன், உதவி ஆசிரியர் சண்முகசுந்தரம், ஆசிரியர் அசோகன், சேர்மன் பாலசுப்ரமணியன், துணை தலைமை நிருபர் சரவணன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி, ஐகோர்ட் கிளையில் மனு செய்துள்ளனர். மனுவில், வார இதழில் வெளியான செய்தி குறித்து மதுரையில் எங்களுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எங்களுக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வாய்ப்புகள் உள்ளன. எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆஜராக சம்மன்: தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு. இவர், மதுரை நான்காவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று முன்தினம் தாக்கல் செய்த அவதூறு வழக்கு:  நான், நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்ததாரராகவும், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினராகவும் உள்ளேன். 20 ஆண்டுகளாக மக்கள் சேவை செய்து வருகிறேன். இதனால், அரசியல் மற்றும் மக்களிடம் நன்கு அறிமுகமானேன். எனக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. என் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், கடந்த ஆக., 8ம் தேதி வெளியான ஜூனியர் விகடன் இதழில், மிஸ்டர் கழுகு பகுதியில் "மடக்கப்பட்ட மதுரை திலகம்' என்று அவதூறு பரப்பும் பொய் செய்தி வெளியாகி உள்ளது. இச்செய்தியால் என் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, இச்செய்தியை வெளியிட்ட ஜூனியர் விகடன் நிறுவனர், ஆசிரியர், தலைமை செய்தி ஆசிரியர், பொறுப்பாசிரியர், நிருபர் மற்றும் வாசன் பப்ளிகேஷன் பிரைவேட் லிமிடெட் ஆகியோர் மீது, இந்திய தண்டனை சட்டம் 500ன் கீழ் (அவதூறு பரப்புதல்) நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.


இம்மனு, நான்காவது ஜுடிசியல் கோர்ட் மாஜிஸ்திரேட் ஜெயக்குமாரி ஜெமி ரத்னா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பிரேம்ராஜ் அம்புரோஸ் ஆஜரானார். மனுதாரர் குறிப்பிட்டுள்ள அனைவரும், வரும்  செப்., 13ல் கோர்ட்டில் ஆஜராகும்படி, சம்மன் அனுப்ப  மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அஞ்ச மாட்டோம் -ஜூனியர் விகடன் அதிரடி



vikatanlogo.jpg
சென்ற இதழில் கழுகார் செய்தியில் மதுரை திலகம் வைத்த பிரமுகரை சென்னைக்கு வரவழைத்து கும்மி எடுத்து விட்டார்கள்.என செய்தி வெளியிட்டது ஜுனியர் விகடன்.இதைக்கண்டு பொங்கி எழுந்த மதுரை தரப்பு,மதுரையில் உள்ள அனைத்து சாதி சங்கங்கள் மூலமாக மதுரையே அதிருமளவு போஸ்டர் அடித்து ஒட்டினார்கள்..தினமலரில் கால்பக்கத்துக்கு ஒரு விளம்பரம் கொடுத்தனர்.ஜூனியர் விகடன் பொய் செய்தியை கண்டித்து ‘’சட்டம் ஒழுங்கு க்கு சவால் விடும் வகையில் ‘’ முற்றுகையிடுவோம் என வந்தது,இதைக்கண்டு ஜூனியர் விகடன் கடும் அதிர்ச்சி அடைந்தது.
இன்றைய ஜுனியர் விகடன் இதழில் மதுரை பிரமுகர் சுரேஷ் ராஜன் படத்தை போட்டு ,இவர் வக்கீல் நோட்டிஸ் அனுப்பி உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஜூனியர் விகடன் தனது கருத்தாக சொல்வது;

ஆட்சிகள் மாறினாலும் அதையோட்டி செல்வாக்கு கொண்ட மனிதர்களின் பட்டியல் மாறினாலும் மக்கள் நலனை மட்டுமே கருத்தாக கொண்டு அவர்கள் அறிய விரும்பும் தகவல்களை அச்சமின்றி கொடுப்பது மட்டுமே நமது நோக்கமாக இருந்திருக்கிறது.தற்போது ஜூவியில் வெளியாகி உள்ள செய்தி குறித்து நம்முடைய நிலைப்பட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்கத்தான் போகிறோம்.ஆனால் நிதிமன்றம் இல்லாத வேறு எந்த வகையிலாவது ஜூ.வி மீதும் அதன் நிருபர்கள் மீதும் தங்கள் கோபத்தை யாரேனும் காட்ட முயற்சித்தால் ...அதற்கு ஒட்டுமொத்த பத்திரிகை உலகமும் நம்மோடு சேர்ந்து பதில் கொடுக்கத் தயாராக இருக்கிறது.ஜூ.வியின் பல லட்சக்கணக்கான வாசகர்களும் சேர்ந்து நிற்பார்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21jvlsls.jpg?w=300&h=137

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Dispute over management of Tamil weekly resolved
15 Aug 2010 10:25:30 PM IST






CHENNAI: Well known Tamil magazine group Kumudam is to be split into two.

 

N Ram, Editor in Chief of the Hindu, who acted as a mediator to settle the dispute over the management of the publication group between Dr A Jawahar Palaniappan and its managing director P Varadarajan, said the two sides have reached an "amicable settlement".

 

The separation process would now go ahead on the basis of independent professional assessment and result in a final settlement, Ram said in a statement.

 

Palaniappan is the grandson of S A P Annamali, founder editor of Kumudum weekly, founded in 1947, while Varadaran is the son of P V Parthasarathy, who was associated with the group from its early days as manager.

 

Palaniappan had two months ago lodged a police complaint alleging irregularities in the management of the group after which Varadarajan was arrested. He was later released.

 

According to the agreement which came after several mediated meetings over a four-month period, two magazines, which are currently part of the Kumudam group, would go to Varadarajan and to his brother Dr P Srinivasan.

 

The remaining seven publications of the group will be with Palaniappan and his mother Kothai Annamalai.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

16_08_2010_010_003-cj.jpg?w=300&h=279

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

16_08_2010_007_033-sc-act.jpg?w=300&h=258

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

[Previous] Times City [Next]


Print Maximize

2 launch firms with forged cheques for 54 lakh,arrested

A Selvaraj | TNN

Chennai: Central crime branch sleuths on Saturday arrested two persons for forging cheques worth Rs 54 lakh and using the money to float three new companies.Police are hunting for a third person involved in the scam.
Police picked up Satish Kumar,32,of Pammal and Arun Kumar,29,of Perambur for questioning and later arrested them.Police have launched a hunt for Madhava Prakash,the prime accused in the case.
Initial inquiries revealed that they set up three companies Sun Homes and Gardens,Sun Marketing and Moon Marketing in a month.Prakash was chief executive officer of the three companies,Satish Kumar the marketing manager and Arun Kumar the accounting manager.
Police said Gold Quest International,a multi-level marketing company,had lodged a complaint last month,stating that two cheques were missing from its office.
Madhava Prakash had got the cheques and planned to start companies with his two friends.Prakash forged the signature of the Gold Quest company managing director.Arun Kumar presented one of the cheques worth Rs 7.70 lakh in a bank and the money was credited to his account.Satish Kumar started a new bank account in the name of Dinesh Kumar and presented another cheque for the value of Rs 46.23 lakh.The money was credited and the three started the new companies.
Once we nab Prakash,we will find out how he got the cheques from the Gold Quest office.On Monday,we are planning to approach the court to seek police custody for Satish Kumar and Arun Kumar, police said.
Based on the complaint of Gold Quest senior executive Pushpendra Shukla,CCB police have registered a case.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Sand thieves strike ancient idol

Statue Unearthed While Mining;May Be 1,000 Years Old,Says Official 

D Madhavan | TNN
Pc0051200.jpg
ACCIDENTAL FIND: The Perumal statue found on the bed of Vegavathi river in Thirupukali village
Kancheepuram: Sand thieves unwittingly became excavators as they stumbled onto a Perumal (Vishnu) statue on the bed of Vegavathi river in Thirupukuli village,about 20km from Kancheepuram,along the Bangalore Highway.The statue is said to be 1,000 years old.
Early on Saturday morning,a few persons came on a tractor to the river bed and started digging.One of them heard an unusual sound made by his implement and he realised he had hit a stone object.
The men swifty removed the sand and pulled out the object,which turned out to be a beautiful Perumal statue made of sandstone.Immediately they rushed to the nearby village and informed the residents,who in turn informed village administrative officer H Kumar.
Hundreds of villagers followed Kumar to the spot.This is the first time such an ancient idol has been found in our village, Kumar told TOI.
By the time he informed officials of the Kancheepuram district administration about the discovery,women had begun garlanding the idol and worshippng it by burning camphor.
Revenue divisional officer (Kancheepuram) S Palani,along with other district officials,came to the spot and took the idol to the Kancheepuram taluk office,where it is on display.The idol is about 5ft tall and weighs over 100kg.The stone is similar to the one used in the Kailasanath temple in Kancheepuram.We have informed Archaeological Survey of India officials in Chennai.They are supposed come tomorrow, Kancheepuram tasildar P Varadarajan told The Times Of India on Sunday.
A state government archaelogical official who inspected the idol on Saturday evening said it must be at least 1,000 years old belonging to the Pallava era.The Kailasanath temple was built by the Pallava king Narasimhavarman II in the early eight century and subsequently Chola king Rajaraja Chola I visited it.The temple is now maintained by the ASI.
According to officials of the HR&CE department in the district,an ancient Perumal temple was found in the village many decades ago but was washed away in floods.But the temple well is still in existence.Saturdays finding could be related to the washed-away temple,the officials felt.
madhavan.d@timesgroup.com



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

CBI raids architects apex body,seizes documents

Rahul Tripathi | TNN

New Delhi: The CBI has tightened the noose around the Council of Architecture (CoA) an apex body of professional architects which has been accused of granting affiliations to institutions and courses without any authority.On Friday,the agency conducted raids in Goa and Delhi and seized documents related to unauthorized affiliations granted to several courses and institutes in India.
The raid in Goa was carried out at Vidya Vardhans Institute of Design,Environment and Architecture,whose director V S Sohoni is also the president of CoA.Sohoni is alleged to have violated various guidelines of the central government in running CoA,a national level autonomous body recognized by the Union government.CBI had last year received a letter from the HRD ministry,after which a preliminary investigation was launched.
COA is similar to the Institute of Chartered Accountants of India where professionals need to register themselves.It has no right to give recognition to courses or colleges.We have found several such cases where CoAs name was used to grant recognition.Sohonis college in Goa is also one of the institutes where students were given false representation, said a CBI official.
We are probing all such colleges and institutions which have been given affiliation during the tenure of Sohoni,who has been the head of COA since 2004.The documents seized have been sent for forensic examination.The role of other officials of COA is also under scanner and nationwide raids are being carried out to unearth the entire scam.Weve come to know during investigation that in many cases,the council did not even seek approval of the ministry in decision-making, the official added.
When contacted by TOI,Sohoni refused to comment,saying that the matter was sub-judice.The power to recognize a course or institute is vested with the University Grants Commission (UGC) and the All India Council for Technical Education (AICTE) only.
This is not first time that an apex institution has come under the radar of CBI.Last year,it had arrested the top brass of AICTE for allegedly demanding bribe to give recognition to institutes.More recently,Medical Council of India (MCI) chief Ketan Desai was arrested on similar charges by the CBI and an FIR was registered against him.



__________________
« First  <  Page 2  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard