New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ‘டிவி சீரியல் ‘ பார்க்காதீர்கள் : கனிமொழி!


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: ‘டிவி சீரியல் ‘ பார்க்காதீர்கள் : கனிமொழி!
Permalink  
 


27_04_2011_002_017-kalaognar.jpg?w=640&h=343



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

28_04_2011_001_004-2g-pac.jpg?w=640&h=1009



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

28_04_2011_016_011-katchi-mk.jpg?w=640&h=258



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

31550156-save-kani.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஆ.ராசா அமைச்சராகக் காரணமே கனிமொழிதான்..!

 

 

30-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எத்தனையோ திருப்புமுனைகளைக் கடந்து வந்த 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், இப்போது  கனிமொழி அத்தி​யாயத்தில் நிற்கிறது. இனி, வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்புகள் குறித்து அமலாக்கப் பிரிவு தகவல்களை வெளிக்கொண்டு வர வேண்டியதுதான் பாக்கி.
   kanimozhi-2.jpg
சி.ஏ.ஜி. அறிக்கையையும் 2-ஜி ஊழலையும் ஆளும் கட்சியைத் தவிர்த்து சில எதிர்க்கட்சிகளும் இணைந்து மிகைப்படுத்திப் பேசினாலும், இந்த ஊழலை இதயமே இல்லாதவர்களின் செயல் என்றுதான் வர்ணிக்க வேண்டும். 

2008-ன் நடுவிலேயே பத்திரிகைகளும், எதிர்க் கட்சிகளும், போட்டித் தனியார் நிறுவனங்களும், '2-ஜி விவகாரத்தில் அரசுக்கு என்னென்ன நஷ்டம்? ஆ.ராசா என்னென்ன தவறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்..? அவரும் தி.மு.க. குடும்பமும் என்ன பலன் அடைந்தனர்...? அரசு இந்த ஒதுக்கீடுகளை ரத்து செய்ய வேண்டாமா..?’ என்று கண்டனங்களும் கேள்விகளும் எழுப்பின. 

இத்தனை எதிர்ப்புகள் இருந்த நேரத்தில்தான், அதாவது 2008 டிசம்பர் முதல் 2009 ஆகஸ்ட்வரை 2-ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து கலைஞர் டி.வி. 200 கோடியைப் பெற்று உள்ளது. இதைத்தான் ஆதாரபூர்வமாகக் கண்டறிந்து, கடந்த 25-ம் தேதி கூடுதல் குற்றப் பத்திரிகையில் வெளியிட்டது சி.பி.ஐ.!

இந்தக் குற்றப் பத்திரிகைகளில் இடம் பெற்றுள்ள குற்றச்சாட்டுகள், ஏற்கெனவே வெளியான தகவல்கள்தான் என்றாலும், சி.பி.ஐ. இப்போதுதான் ஆதாரப்பூர்வமான சாட்சியங்களோடு உறுதி செய்துள்ளது.

'கடந்த ஏப்ரல் 13-ம் தேதி தமிழக சட்ட​மன்றத்துக்குத் தேர்தல் நடைபெற்றது. அதனால், கனிமொழியைப் பற்றியும் கலைஞர் டி.வி-யைப் ​பற்றியும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றால், தேர்தல் பிரசாரத்தில் வீணான சர்ச்சைகள் கிளம்பும் என்று தி.மு.க-வினர் காங்கிரஸிடம் மன்றாடினர். அவர்​கள் கோரிக்கைக்கு, மத்தியில் உள்ளவர்களும் அப்போது செவிசாய்த்தார்கள். அதனால்தான், குற்றப் பத்திரிகையை இரண்டு கட்டங்களாகப் பிரித்து தாக்கல் செய்ய வேண்டிய சூழலுக்கு சி.பி.ஐ. ஆளானது’ என்கிறார்கள்.  

முதல் குற்றப் பத்திரிகையில், தனியார் கம்பெனி​களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில், ஆ.ராசா மேற்கொண்ட தில்லுமுல்லுகளை சி.பி.ஐ. வெளியே கொண்டுவந்தது. ஆனால், இந்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் 2-ஜி ஊழலின் முக்கியக் கருவை எடுத்து ​வைத்திருக்கிறது.  இதில்தான் கனிமொழியை சி.பி.ஐ. இறக்கியுள்ளது. 

இதில், ஆ.ராசா, ஸ்வான் டெலிகாம் ஷாகித் பால்வா மற்றும் வினோத் கோயங்கா, ஷாகித் பால்வா​வின் சகோதரரும் குஸேகான் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் ரியாலிட்டி நிறுவனத்தின் இயக்குநருமான ஆசிப் பால்வா, இதே நிறுவனத்தின் மற்றொரு இயக்குநர் ராஜீவ் பி.அகர்வால், சினியுக் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவன இயக்குநர் கரீம் முரானி, கலைஞர் டி.வி. இயக்குநர் சரத்குமார் ஆகியோரோடு கனிமொழியும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில், கனிமொழி, சரத்குமார், கரீம் முரானி ஆகியோர்தான் இன்னும் கைது செய்யப்படவில்லை. மற்றவர்கள் கைதாகி சிறையில் உள்ளனர். 

சம்மன் அனுப்பப்பட்ட மேற்கண்ட மூவரும் வரும் மே 6-ம் தேதி டெல்லியில் ஆஜராகும்போது, சிறைக்கு அனுப்பப்படலாம். இதில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் முடிவே இறுதியானது. மற்ற நிறுவனங்களின் இயக்குநர்கள் எல்லாம் சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில், கனிமொழிக்கும் இதே நிலை வரலாம்.

2007-ல் சன் டி.வி. நிறுவனத்துக்கும், தி.மு.க-வுக்கும், பிரச்னை ஏற்படவே, கலைஞர் டி.வி. தொடங்கும் ஆயத்தப் பணிகளில் மற்றவர்களுடன் சேர்ந்து கனிமொழி தீவிரமாக இருந்ததாகச் சொல்லும் சி.பி.ஐ., 'இந்த விவகாரங்களில் ஆ.ராசாவை அவ்வப்போது தொடர்பு கொண்டு தொலைக்காட்சிக்கான அனுமதி பெற முயற்சி செய்தார்’ என்கிறது.
 
raja-3.jpg
'மத்தியத் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் பதிவு பெற முயற்சித்தது, டாடா ஸ்கை பிளாட்ஃபாரத்தின் மூலம் கலைஞர் டி.வி-யை ஒளிபரப்ப அனுமதி கேட்டது  போன்ற விவகாரங்களில், எந்தவிதமான தாமதமும் ஏற்படாமல் இருக்க ஆ.ராசா உதவியுள்ளார். இதற்காக, கனிமொழி அடிக்கடி ஆ.ராசாவைத் தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளார்’ என்கிற சி.பி.ஐ., ''கனிமொழி, கலைஞர் டி.வி. பங்குதாரர் மட்டும் அல்ல... அவர் ஓர் இயக்குநராகவும் இருந்தார். ஆனால், இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி கொடுப்பதில் தாமதம் ஆனது. அதனால், கலைஞர் டி.வி. தொடங்குவதில் கால தாமதம் ஆகக் கூடாது என்கிற காரணத்தால் கனிமொழி பதவியில் இருந்து விலகினார். ஆனால், அந்த டி.வி-யின் மூளையே கனிமொழிதான். அதன் செய்திகளில்கூட இவருக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது!'' என்கிறது சி.பி.ஐ.  

''ஆ.ராசா மீண்டும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆவதற்குக் காரணமாக இருந்ததே கனிமொழிதான். ஆ.ராசாவுக்காக தி.மு.க-வின் தலைமை​யகத்தில் இவரே பேசினார்'' என்றும் குற்றம் சாட்டி, 2-ஜி ஊழல் வழக்கில் 17-வது குற்றவாளியாக  கனிமொழியை சேர்த்துள்ளது.

கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்​களாக இருப்பவை, இரண்டு சாட்சியங்கள். ஒன்று, ஆ.ராசாவின் கூடுதல் தனிச் செயலாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரி கொடுத்துள்ள வாக்குமூலம். இது குறித்து ஜூனியர் விகடன் 20.4.11 இதழில் விரிவாக வெளியிட்டு இருக்கிறோம். மற்றொருவர், நீரா ராடியா.

neeraraadia-1.jpg
ஆ.ராசாவை சந்தித்து கலைஞர் டி.வி. தொடங்க முயற்சி செய்தது, நீரா ராடியாவுடன் நேரடியாகவும் தொலைபேசியிலும் பேசி லீக் ஆன விவகாரங்கள் எல்லாம் கனிமொழிக்கு எதிரான சாட்சியங்களாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் சி.பி.ஐ. வைக்கும் முக்கியத் தகவலே, கலைஞர் டி.வி-க்கு 200 கோடி வந்த விவகாரம்தான். இது ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் பெற்ற நிறுவனங்கள் லஞ்சமாகக் கொடுத்த பணம் என்கிறார்கள்.

'ஒரிஜினலாக, ஸ்வான் நிறுவனத்தைத் தொடங்கியது ரிலையன்ஸ் நிறுவனம். மறைமுகமாக இந்த நிறுவனத்தின் மூலம் ஜி.எஸ்.எம். மொபைல் உரிமங்களைப் பெற ரிலையன்ஸ் முயற்சி செய்தது. பின்னர் இரட்டை உரிமத்தின் அடிப்படையில் ரிலையன்ஸுக்கு நேரடியாகவே முறைப்படி ஜி.எஸ்.எம் உரிமங்கள் கிடைத்தன. இப்படிக் கிடைத்தும், ஸ்வான் நிறுவனத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை ரிலையன்ஸ் வாபஸ் வாங்கவில்லை. 

ஸ்வான் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய டிபி ரியாலிட்டி குரூப் நிறுவனத்தினர் ஷாகித் உஸ்மான் பால்வாவும் வினோத் கோயங்காவும் திட்டமிட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர்’ என்று சொல்லும் சி.பி.ஐ., 'ஸ்வானுக்கும் யுனிடெக் வயர்லெஸ் நிறுவனத்துக்கும் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெறும் தகுதி இல்லை. 2005-ம் ஆண்டு ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைகளுக்கான உரிம வழிகாட்டி விதிமுறைகளின்படி ஸ்வான் மற்றும் யுனிடெக் விண்ணப்பங்களைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். 

தகுதி இல்லாத சான்றிதழ்களை வைத்துக் ​கொண்டு உரிமங்களைப் பெற முயற்சித்த இவர்களிடம், ஊழல் பணத்தைப் பெற்றுக் கொண்டு தொலைத் தொடர்புத் துறை உரிமங்களைக் கொடுக்க முயற்சிக்கப்பட்டது’ என்றும் சி.பி.ஐ. சொல்கிறது.  இதன்படி, வந்த ஊழல் பணம் கறுப்புப் பணமாக இருக்க... இதை வெள்ளையாக மாற்றம் செய்ய மேற்கொண்ட முயற்சிகளையும் இரண்டாவது குற்றப் பத்திரிகை வெளிப்படுத்துகிறது.

'இதன் முதல் சுற்று, க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் நடந்துள்ளது. 2004-ல் சுற்றுச்சூழல் அமைச்சரானவுடன் ஆ.ராசா தொடங்கிய பினாமி நிறுவனம் இது.  சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சாதிக் பட்சாவின் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், ஆ.ராசாவின் சகோதரர் கலியபெருமாள் மற்றும் சாதிக் பாட்சாவின் மனைவி போன்ற வேறு சிலரை இயக்குநர்களாக ஆக்கினார். இந்த நிறுவனத்தில் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி இயக்குநராக ஆரம்பத்தில் இருந்து, பின்னர் விலகினார். 

2-ஜி கறுப்புப் பணத்தை இந்த நிறுவனத்தின் மூலம் கொண்டுவரும் முயற்சியில் ஆரம்பத்தில் ஈடுபட்டு, பின்னர் அது கைவிடப்பட்டது’ என்றும் சி.பி.ஐ. கூறுகிறது. 'ஆனால், இந்த நிறுவனத்துக்கு சில கோடிகள் பணம் வந்துள்ளது. ரியல் எஸ்டேட்டுக்கு நிலங்களை வாங்க டிபி ரியாலிட்டி சில கோடிகளை க்ரீன் ஹவுஸுக்கு கொடுத்துள்ளது. பின்னர் இதே பணத்தை க்ரீன் ஹவுஸ் திருப்பிக் கொடுத்தது...’ என்று சொல்லும் சி.பி.ஐ., 'க்ரீன் ஹவுஸ் நிறுவனத்துக்குப் பணம் எப்படி வந்தது? ஏன் வந்தது? எப்படி எல்லாம் பணம் புழங்கியது..?’ என்பதற்கு சில ஆதாரங்களையும் சாட்சியங்களையும் சொல்கிறது.

'ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வாங்கிய ஸ்வான் டெலிகாம் சம்பந்தப்பட்ட டி.பி. ரியாலிட்டி, க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் மூலம் தமிழ்நாட்டில் பெரும் அளவில் நிலங்களை வாங்கிக் குவிக்கத் திட்டமிட்டது. ஆனால், அது வெற்றிகரமாக நடக்கவில்லை. இதனால் கொடுக்கப்பட்ட பணத்தையும் க்ரீன் ஹவுஸ் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும், 'இதற்குக் காரணம் க்ரீன் ஹவுஸ் விவகாரங்கள் பத்திரிகைகளில் வெளியானதுதான்’ என்று, சி.பி.ஐ. கருதுகிறது. 

ஆனால், 2-ஜி கறுப்புப் பணத்தை கலைஞர் டி.வி. மூலமாக வெள்ளையாக்கும் முயற்சிகள் பின்னர் நடந்துள்ளன. சுமார் 200 கோடி ஸ்வான் டெலிகாம் பணம், கலைஞர் டி.வி-க்கு வந்துள்ளது. அதிலும், இந்த ஊழல் விவகாரம் உச்சக்கட்டமாக வெடித்துக்கொண்டு இருந்த சமயத்தில்தான், பணப் பரிவர்த்தனைகள் எந்தவிதத் தயக்கமும் இன்றி நடந்துள்ளது. இதில்தான் கருணாநிதி குடும்பத்தினரின் மனோதைரியம் குறித்து ஆச்சர்யத்தோடுதான் பேசிக்  கொள்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்!

லாபம் 1.36 கோடி... கடன் 214  கோடி... எப்படி?!

ஸ்பெக்ட்ரம் ஊழலில், ஆ.ராசாவுடன் சேர்ந்து கூட்டுச் சதி செய்ததாக கனிமொழி பெயர் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டதும், முதல்வர் கருணாநிதி ஆலிவர் சாலையில் ஆலோசனை நடத்தினார்.
 
dayaluammal.jpg
நீண்ட நேர ஆலோசனைக்குப் பின், தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் பெயரில்,  '2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில், கலைஞர் டி.வி. வாங்கிய கடன்  214 கோடி திருப்பித் தரப்பட்டுவிட்டது.  அதற்கான ஆவணங்களை சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்த பிறகும், குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயரை சேர்த்து உள்ளது சி.பி.ஐ. இதைப் பற்றி விவாதிக்க தி.மு.க-வின் உயர் நிலைக் குழு கூடுகிறது’  என்று ஓர் அறிக்கை வெளியானது. ஆனால், உண்மை நிலையோ வேடிக்கையானது!  

கலைஞர் டி.வி-யின் 20 சதவிகிதப் பங்குகள் கனிமொழிக்கும், 20 சதவிகிதப் பங்குகள் சரத் குமார் ரெட்டிக்கும், 60 சதவிகிதப் பங்குகள் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கும் உள்ளது.  'டிபி ரியாலிட்டி மூலம் ஊழல் பணம் 214.8 கோடி கை மாறியதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டில் இருந்து, தயாளு அம்மாளை விடுவிக்க வேண்டும்’ என்று 27.7.07-ல் கலைஞர் டி.வி. போர்டு மீட்டிங் நடந்ததுபோல மினிட்ஸ் ரெடியானது என்கிறது சி.பி.ஐ. தரப்பு.

sarathkumarreddy.jpg
'தயாளு அம்மாளுக்கு, தமிழ் தவிர வேறு மொழி தெரியாது, மேலும் வயதாகிவிட்டது. எனவே, அவருடைய பங்குக்கு உள்ள அதிகாரத்தைக் கவனிக்கும் பொறுப்பு சரத்குமார் ரெட்டிக்குக் கொடுக்கும் முடிவு எடுக்கப்பட்டது’ என்று உள்ள அந்த மினிட்ஸ் நகலை, டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் நடந்த விசாரணையின்போது, சரத்குமார் ரெட்டி கொடுத்தாராம். அந்த மினிட்ஸின் அடிப்படையில்தான் 60 சதவிகிதப் பங்குகள் இருந்தும், குற்றப் பத்திரிகையில் தயாளு அம்மாளைச் சேர்க்கவில்லை என்கிறார்கள்.

கலைஞர் டி.வி. ஒப்படைத்த வரவு - செலவுக் கணக்கில், 'டிபி ரியாலிட்டியின் இணை நிறுவனம் மூலம் பெறப்பட்ட 214.8 கோடி, எந்த ஆவணமும் இல்லாமல் பெறப்பட்ட கடன்’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந்தத் தகவல்படி, கலைஞர் டி.வி-யின் ஆண்டு வரவு  63.12 கோடி. செலவு  61.47 கோடி.

நிகர லாபம் வரி செலுத்தும் முன்பு 1.65 கோடி. வரி செலுத்திய பின் லாபம் 1.36 கோடி மட்டும்தான். ஆனால், இப்படி இருக்கும் நிறுவனத்துக்கு ஆவணம் இல்லாமல், 214.8 கோடியை எப்படிக் கடனாகக் கொடுக்க முன் வந்தது டி.பி. ரியாலிட்டி நிறுவனம்?

கடன் கொடுத்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். பிறகு அந்த நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், வட்டியுடன் ஏழு மாதங்களில் திருப்பிக் கொடுக்கப்பட்டதாக சி.பி.ஐ-யிடம் கூறப்பட்டு உள்ளது. ஏழு மாதங்களில்  214.8 கோடியை வட்டியுடன் கொடுக்க, கலைஞர் டி.வி-க்கு பணம் எப்படி வந்தது? மீண்டும் யார் கடன் கொடுத்தார்கள்?  

மேலும், கலைஞர் டி.வி-யின் வரவு - செலவுக் கணக்கில், 'கண்ணுக்குப் புலப்படாத சொத்துக் கணக்கில் 2008-09-ல் 123.25 கோடி என்றும் அது 2009-10-ல் 159.16 கோடி’ என்றும் காட்டப்பட்டு உள்ளது. ''கண்ணுக்குத் தெரியாத சொத்தின் மதிப்பு மட்டும் எப்படி ஆண்டுக்கு ஆண்டு உயரும்? அதை எப்படிக் கண்டுபிடித்தார்கள்?'' என்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், கலைஞர் டி.வி-யின் சரத்குமார் ரெட்டியிடம் கேட்டு வருகிறார்கள்.

என்ன பதில் சொல்லப் போகிறார் சார்..?

நன்றி : ஜூனியர்விகடன்-04-05-2011

 

 



Read more: http://truetamilans.blogspot.com/#ixzz1L5iauY3e



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கலைஞர் டி.விக்குள் வந்த பணம் கடனா...? ஊழலா...? பங்கா...?

 

 

27-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஆ.ராசாவின் தயவில், ஏர்​டெல், பி.எஸ்.​என்.எல். தவிர, கிட்டத்தட்ட மற்ற அனைத்துத் தொலைபேசி நிறுவன அதிகாரிகளும் திகார் ஜெயில் நோக்கிப் பயணமாகிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தக் கட்டக் காட்சிகள் பரபரப்பாக அரங்கேறி வருகின்றன!
 
raja-6.jpg
கடந்த 2-ம் தேதி, சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் யுனிடெக் வயர்​லெஸ் (தமிழ்நாடு) லிமி​டெட், ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம் ஆகிய மூன்று நிறுவனங்கள் உட்பட 12 நபர்களைக் குற்றவாளி​களாக அறிவித்தது. 

இந்த விவகாரத்தில் கைதான ஷாகித் பால்வா மட்டுமே, டெலிகாம் நிறுவனம் சம்பந்தப்​பட்டவர். மற்ற டெலிகாம் நிறுவன உரிமையாளர்களை சி.பி.ஐ. அழைத்து விசாரித்ததே தவிர, யாரையும் கைது செய்ய​வில்லை. ஆனால், சி.பி.ஐ. அவர்களின் பெயர்களை நேரடியாகக் குற்றப் பத்திரிகையில் சேர்த்தது. 

இந்த டெலிகாம் நிறுவன உரிமையாளர்களும், நிர்வாகிகளும், பலமிக்க தொழில் அதிபர்களின் பின்புலத்தில் இருந்த காரணத்தால், நேரடியாக நீதிமன்றத்தின் மூலம் சி.பி.ஐ. நினைத்ததை சாதித்தது.

குற்றப் பத்திரிகையில் இடம் பெற்று இருந்த மூன்று நிறுவனங்களுக்கும் பயம் தொற்றிக்கொண்டது. 'இவர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, சி.பி.ஐ. நீதிமன்றக் காவலில் வைக்க அனுமதி கோரும்’ என்று தகவல் வரவே, இந்த டெலிகாம் நிர்வாகிகள் கடந்த 13-ம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.

ஷாகித் பால்வாவின் கூட்டாளியும் ஸ்வான் டெலிகாம் இயக்குநர் மற்றும் டி.பி. ரியாலிட்டி எம்.டி. ஆகிய பொறுப்பில் உள்ள வினோத் கோயங்கா, மற்றும் யுனிடெக் டெலிகாம் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த கௌதம் தோஸி, ஏ.டி.ஏ.ஜி. தலைவர் சுரேந்தர பைப்பாரா, இதே நிறுவனத்தின் உதவித் தலைவர் ஹரி நாயர் ஆகிய ஐந்து பேரும் முன் ஜாமீன் மனுவை சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இவர்களுக்காக, முகுல் ரோத்தாக், கே.டி.எஸ்.துள்சி போன்ற பிரபல வழக்கறிஞர்கள் ஆஜாரானார்கள்.

''இவர்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு​களுக்கு, ஆயுள் தண்டனையோ, தூக்கு தண்டனை​யோ கிடைக்கப்போவது இல்லை. ஒரு வேளை, குற்றச்சாட்டு நிரூபணம் ஆனாலும், அதிகபட்சம் ஒரு வருடம் முதல் ஏழு வருடங்கள் வரை தண்டனை கொடுக்கப்படும். சி.பி.ஐ. புலன் விசாரணை மேற்கொண்ட சமயத்தில், அல்லது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, இவர்களைக் கைது செய்யவில்லை. சி.பி.ஐ. அழைத்த நேரத்தில் எல்லாம் விசாரணைக்கு ஒத்துழைத்தனர். இப்போது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பின்னர், இவர்களைக் கைது செய்ய வேண்டியது இல்லை. அப்படிக் கைது செய்தால், ஜாமீனில் விடுவிக்க வேண்டும்!'' என்று வாதாடினார்கள்.

இவர்களது மனுவுக்குப் பதில் அளித்த சி.பி.ஐ., ''இவர்களை வெளியேவிட்டால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சியங்களைக் கலைத்து​ விடுவார்கள்!'' என்றது. மூன்று நாட்கள் தொடர்ந்து வாதங்கள் நடந்தன. இறுதியில், கடந்த 20-ம் தேதி, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.சைனி, இவர்களது முன் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தததோடு, ஐந்து பேர்களையும் நீதிமன்றக் காவலில், திகார் ஜெயிலிலுக்கு அனுப்பினார்.  

ஸ்வான் டெலிகாம் டைரக்டர் வினோத் கோயங்கா கதறி அழ, ஆ.ராசாவும் ஷாகித் பால்வாவும் அவரைத் தேற்றினார்கள். ரிலையன்ஸ் நிர்வாகிகளின் குடும்பத்தினரும் கண்ணீர்விட்டனர்.
 
p37.jpg
ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத் தலைவர் சுரேந்திர பைப்பாரா, தனக்கு உள்ள இருதய நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளைச் சொல்ல, சி.பி.ஐ. வழக்கறிஞர் லலித், 'அவருக்கு முன் ஜாமீன் வழங்குவதில் தடை இல்லை’ என்றார். ஆனால் நீதிபதி அதை ஏற்றுக் கொள்ள​வில்லை. 'அவரது உடல்​நிலை அவ்வளவு மோசம் இல்லை’ என்றும், 'இந்த சமயத்தில் இவர்கள் வெளி​யே இருந்தால், விசாரணை பாதிக்கும்’ என்று கூறி முன் ஜாமீன் தர மறுத்தார்.

இதன் எதிரொலியாக இந்த மூன்று டெலிகாம் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பும் சந்தையில் மளமளவென இறங்கின. டி.பி. ரியாலிட்டி நிறுவனம் 2-ஜி ஊழலுக்குப் பின்னர் 77 சதவிகிதம்வரை பங்கு மார்க்கெட்டில் வீழ்ச்சி அடைந்தது. இதே மாதிரி, யுனிடெக் நிறுவனத்துக்கும் 5,000 கோடிவரை நஷ்டமாம். அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் ஒட்டு மொத்தமாக சுமார்  26,000 கோடிவரை இழந்து உள்ளது.

கைதாகியுள்ள வினோத் கோயங்காவின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. ஷாகித் பால்வாவைப் போன்று கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, தனது தந்தையின் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் முதலில் குதித்தார்.
 
p38.jpg
குறுகிய காலத்தில் ரியல் எஸ்டேட், ஹோட்டல், பால் என்று 30 விதமான தொழில்​களில் முத்திரை பதித்தவர். சரத்பவார் குடும்பத்தினரோடு பல தொழில்களில் சம்பந்தப்பட்டவர். அதுவும், ஆ.ராசா சுற்றுச்சூழல் அமைச்சரான பின்னர், வினோத் கோயங்காவின் ரியல் எஸ்டேட் தொழில் கிடுகிடுவென வளர்ந்தது. பின்னர், ஷாகித் பால்வாவுடன் சேர்ந்து, டி.பி. ரியாலிட்டி நிறுவனத்​தை உருவாக்கி, டெலிகாம் பிசின​ஸில் ஈடுபட்டார்.

அனுபவ ரீதியில் வினோத் கோயங்காவின் ரியாலிட்டி ரியல் எஸ்டேட் பிசினஸ் வளர்ந்தது என்றால், சஞ்சய் சந்திராவும் அவரது தந்தையும் யுனிடெக் நிறுவனத்தை முறைப்படி தொழில் நுட்பத்தைப் படித்து வந்து உயர்த்தினார்கள். 

சஞ்சய் சந்திராவின் தந்தை ரமேஷ் சந்திரா, ஐ.ஐ.டி. காரக்பூரில் படித்து, ரூர்க்கி அரசு ஆய்வுக் கூடத்தில் பணியாற்றியவர். தந்தை வழியிலேயே மண்ணியல் சம்பந்தப்பட்ட தொழில்​ நுட்பப் படிப்பைப் படித்து, அமெரிக்காவில் எம்.பி.ஏ. முடித்து, அங்கேயே பணியாற்றினார் சஞ்சய். 

பின்னர் 1965-ல் தந்தையும் மகனும், மண்ணியல் சம்பந்தப்பட்ட ஆய்வுக் கூடங்களைத் தொடங்கி, ரியல் எஸ்டேட்டில் இறங்கினார்கள். அதன் பின்னர் மின்சாரம், ஹோட்டல், சிறப்புப் பொருளாதார மண்டலம் என்று ஒவ்வொன்றாகக் கால் பதிக்க, இவர்களின் சொத்து மதிப்பு  40,000 கோடி வரை உயர்ந்தது.  

ஷாகித் பால்வாவின் டி.பி. ரியாலிட்டி மற்றும் டைன​மிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து வந்த பணம், குஸேகான் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் ரியாலிட்டி நிறுவனத்துக்கு வந்து, பின்னர் சினியுக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளது. அதன் பிறகு, சினியுக் நிறுவனம் அதை, கலைஞர் டி.வி-க்கு கொடுத்து இருக்கிறது.  டி.பி. ரியாலிட்டி, குஸேகான், சினியுக் ஃபிலிம்ஸ் என்று வெவ்வேறு பெயர்களில் இருந்தாலும், இயக்குநர்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவர்கள். 

கலைஞர் டி.வி-க்குக் கொடுக்கப்பட்ட பணம் தங்களுக்குத் திரும்பிவிட்டது என்று இவர்கள் கணக்கு சொல்ல, சி.பி.ஐ. சந்தேகித்துக் கைது செய்துள்ளது. சினியுக் நிறுவனத்தின் இயக்குநர் கரீம் முரானி, பணத்தை கலைஞர் டி.வி-க்கு முன் பணமாகக் கொடுத்தாகக் குறிப்பிட்டார். தங்களுக்கு இந்தப் பணத்தைக் கொடுத்த குஸேகான் நிறுவனம், இதை கலைஞர் டி.வி-க்கு கொடுக்கக் கூறியதாக முரானி குறிப்பிட்டார்.

குஸேகான் நிறுவனம், பணத்தைக் கடனாகக் கொடுத்ததாகவும், பின்னர் கலைஞர் டி.வி. பங்குகளை வாங்கத் திட்டம் இட்டதாகவும், ஆனால் விலை வித்தியாசத்தில் பணத்தைத் திரும்பப் பெற்றதாகவும் குறிப்பிட்டது. ஆனால், ஆதாரங்​களை சரியாகக் கொடுக்கத் தவறியதற்காக, குஸேகான் நிறு​வனத்தின் இயக்குநர்கள் ஆசிப் பால்வாவையும், ராஜீவ் பி.அகர்வாலையும், சி.பி.ஐ. கைது செய்து சிறையில் அடைத்தது.


p38a.jpg 

இந்த விவகாரத்தில் கருணாநிதி குடும்பத்தில் தயாளு அம்மாள் மற்றும் கனிமொழி போன்றோர் சிக்குவார்களா அல்லது சரத்குமார் மட்டும் சிக்குவாரா என்று கேள்​விகள் எழுந்த்துள்ள நிலையில், இரண்டாவது குற்றப் பத்திரிகையில் சரத்குமார், கனிமொழி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் கொடுக்கப்பட்டதற்காகவே, ஆ.ராசா சம்பந்தப்பட்ட கட்சியின் தொ​லைக்காட்சிக்கு இந்தப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று சி.பி.ஐ. கருதுகிறது. ஆனால் சரத்குமாரோ, ''கடனாக வாங்கினோம், பின்னர் வட்டியோடு சேர்த்து திருப்பிக் கொடுத்துவிட்டோம்!'' என்று கூறியுள்ளார். 

கடன் கொடுத்த காரணத்தை சி.பி.ஐ. கேட்டபோது, குஸேகான் நிறுவனத்தினர், 'போர்டு மீட்டிங்கில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக’ சொன்னது. அந்த மீட்டிங்கின் மினிட்ஸ் குறிப்பு என ஒரு நகலை மட்டும் சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்தனர். ஒரிஜினல் மினிட்ஸ், கலைஞர் டி.வி-க்கு அனுப்பியதாகச் சொல்கிறார்கள். ஆனால் சரத்குமார், 'எங்களுக்கு தகவல்தான் கொடுத்தார்களே தவிர, குறிப்பு அனுப்பவில்லை’ என்று பதில் கொடுத்தார். 

ஒரிஜினல் மினிட்ஸ் கொடுக்காத குஸேகான் நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் ஆசிப் பால்வாவும் ராஜீவ் பி. அகர்வாலும் கைது செய்யப்​பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த கைதுகள் இனி தொடரலாம்!

நன்றி : ஜூனியர்விகடன்-01-05-2011



Read more: http://truetamilans.blogspot.com/search?updated-max=2011-04-28T11%3A50%3A00-07%3A00&max-results=1#ixzz1L5jucICB



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ராசாவுக்கு எதிராக செவன் ஸ்டார்ஸ்களின் வாக்குமூலம்...!

 

 

 
22-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2-ஜி அலைவரிசை ஊழலில், ஆ.ராசாவிடம் 1999-ம் ஆண்டு முதல் 2008வரை கூடுதல் செயலாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரி​யின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, மேலும் ஆறு நபர்களின் வாக்குமூலங்கள் அடுத்த முக்கியத்​துவத்தைப் பெற்று உள்ளதாக டெல்லி​யில் உள்ள சி.பி.ஐ. கருதுகிறது!
 
raja-5.jpg
ஆர்.பி.அகர்வால் (வயர்லெஸ் ஆலோசகர்), அசோக்வதா (தலைமை நிர்வாக அதிகாரி, அம்பித் ஹோல்டிங் நிறுவனம்), அசிஸ் காரயாக்கர் (பொது மேலாளர், ரிலையன்ஸ்), ஏ.கே. ஸ்ரீவஸ்தவா, ராம்ஜிசிங் குஸ்வா (இணை வயர்லெஸ் ஆலோசகர்), தேடாட்டா பண்டிட் (முன்னாள் கம்பெனி செயலாளர், ரிலையன்ஸ்) ஆகிய ஆறு பேர் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் 164 பிரிவின்படி வாக்குமூலம் கொடுத்து உள்ளனர். ஆசீர்வாதத்தையும் சேர்த்து இந்த ஏழு பேரையும் 'ஸ்டார் சாட்சிகள்’ என்று சி.பி.ஐ. வர்ணிக்கிறது. இவர்களுக்கு இப்போது  பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர மேலும் சில சாட்சிகள் இருப்பதாக, சி.பி.ஐ-யின் குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது. இந்த சாட்சிகள், 2-ஜி அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள்.

எஸ் டெல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சியாமிக்தாஸ், லூப் மொபைல் இந்தியா லிமிடெட் துணைப் பொது மேலாளர் சௌமியா நாராயணன், ஐடியா செல்லு​லார் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராகுல் வாட்ஸ், ஸ்பைஸ் குளோபல் துணைத் தலைவர் அகிலேஷ் குமார் சக்ஸேனா, டாடா டெலி சர்வீஸ் லிமிடெட் துணைத் தலைவர் ஆனந்த் தலால் மற்றும் ராகேஷ் மகோத்ரா ஆகியோர் தங்களது நிறுவனத்துக்கும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குமான தொடர்புகளைச் சொல்லி இருக்கிறார்கள்.

யுனிடெக் லிமிடெட் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மொகிட் குப்தா மற்றும் முன்னாள் ஆலோசகர் அருண் குமார் டால்மியா, சிஸ்டாமா ஸ்யாம் டெலி சர்வீஸ் லிமிடெட் துணைத் தலைமை அதிகாரி டி.நரசிம்மன், ரிலையன்ஸ் (எடிஎஜி) குரூப் தலைவர் சேதுராமன், ரிலையன்ஸ் கேபிட்டல் லிமிடெட் துணைத் தலைவர் ஆனந்த் சுப்ரமணியன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பொது மேலாளர் (வணிகம்) ராஜேந்தர் சிங்கி, ரிலையன்ஸ் (எடிஎஜி) பொது மேலாளர் அசிஸ் காரையாக்கர், மூத்த துணைத் தலைவர் அசிஸ்தாம்பவாலா, கூடுதல் துணைத் தலைவர் பாரத் அம்பர்க்கர் ஆகியோர் அந்தக் காலகட்டத்தில் நடந்த பரிவர்த்தனைகள், ஆவணங்​களை சமர்ப்பித்து உள்ளனர். 
 
இவை அனைத்துமே திகார் சிறையில் இருக்கும் ஆ.ராசாவுக்கு எதிராக அமையும் என்று சி.பி.ஐ. தரப்பில் கூறப்படுகிறது.

2-ஜி அலைவரிசையில் முறைகேடாக ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களைக் காப்பாற்றிக் கொள்ள, ஆ.ராசாவுக்கு  எதிராக, செயல்பாடுகளை வாக்குமூலமாகக் கொடுக்க சி.பி.ஐ-யிடம் எழுத்து மூலம் உறுதி அளித்துள்​ளார்கள்.

ஸ்டார் சாட்சிகளின் வாக்குமூலங்கள்...

ஏ.கே.ஸ்ரீவஸ்தவா : ''ஆ.ராசாவின் பெர்சனல் உதவியாளர் சந்தோலியா 24.9.2007 அன்று என்னை அழைத்தார். 'யுனிடெக் நிறுவனத்தின் விண்ணப்பம் இப்போதுதான் என் கைக்கு வந்துள்ளது. உடனே அந்த விண்ணப்பத்தை யு.ஏ.எஸ். லைசென்ஸ் கொடுக்கும் பட்டியலில் சேர்க்கவும், இனி எந்த நிறுவனத்தின் விண்ணப்பம் வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்’ என்றும் சொன்னார்.

'அலைவரிசை ஒதுக்கீட்டுக்கு முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற புதிய கொள்கையைச் செயல்படுத்துங்கள்’ என்றும் சொன்னார். 'சந்தோலியா சொல்வது போல் செயல்படவும்’ என்று ஆ.ராசாவும் அறிவுறுத்தி​னார். தொலைத் தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த்த பெஹுரா, 'ஸ்வான் நிறுவனத்தின் விண்ணப்பங்களில் சில மாற்றங்கள் செய்யுங்கள்’ என்று சொன்னார். அவ்வப்போது, அமைச்சர் ஆ.ராசா என் செல்போனில் வந்து சில உத்தரவுகளைப் போட்டார். ஸ்வான் மற்றும் யுனிடெக் ஆகிய இரு நிறுவனங்களின் விண்ணப்பங்கள் விதிமுறையை மீறி ஏற்றுக்கொள்ளப்பட்டு முன்னுரிமை வழங்கப்பட்டது உண்மைதான்!''

ஆர்.பி.அகர்வால் : ''அமைச்சர் ராசாவும், சந்தோலியாவும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படச் சொல்லி என்னை மிரட்டினார்கள். ஸ்வான் டெலிகாம் நிறுவன விண்ணப்பம் மிகவும் தாமதமாக வந்தது. ஆனால், அந்த விண்ணப்பத்தை முன்னதாகவே வந்ததுபோல், முன்னுரிமைப் பட்டியலில் முதலில் கொண்டுவர, கோப்புகளில் மாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தினார்கள். அதன்படி கோப்புகளில் மாற்றம் செய்யப்பட்டது!''

ராம்ஜி சிங்குஸ்வா :  ''சந்தோலியா, பெஹுரா இருவரின் ஆலோசனைப்படி செயல்​​பட வேண்டும் என்று அமைச்சர் ராசா என்னிடம் கூறினார். ஸ்வான் டெலிகாமை முன்னுரிமைப் பட்டியலில் முதலில் கொண்டுவர அவர்கள் கட்டாயப்படுத்தியபோது, சில அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அப்படிப்பட்ட அதி​காரிகளை மாற்றினார்கள். அதனால்​தான், நான் சந்தோலியா, பெஹுரா சொன்னதை அப்படியே செய்தேன்!''

அசிஸ் காராயக்கர் : ''ரிலையன்ஸ் நிறுவனத்தின் பினாமி நிறுவனமாக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் முன் நிறுத்தப்பட்டது. பிப்ரவரி 25, 2007 ரிலையன்ஸ் போர்டு மீட்டிங்கில் சில முடிவுகள் எடுக்கப்பட்டதுபோல் போலியான மினிட்ஸ் தயாரிக்கப்​பட்டது. இதன் பின்னணியில் கிராப்பி கன்சல்டன்சி இருந்தது. இந்த கன்சல்டன்சி, டிபி ரியாலிட்டியின் இணை நிறுவனமாகும்!''

தேடாட்டா பண்டிட் :  ''ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்காக போலியான ஆவணங்கள், ரிலையன்ஸில் அக்டோபர் 2007-ல் தயாரிக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூன்று போர்டு கூட்டம் நடத்தப்பட்டதாகவும், ஸ்வான் டெலிகாம் தொடர்பாக அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்​டதாகவும் போலியான மினிட்ஸ் தயாரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஸ்வான் டெலிகாமுக்கு அலைவரிசை ஒதுக்கீடு கிடைத்தது. போலியான போர்டு மீட்டிங் மினிட்ஸில் என்ன இருக்க வேண்டும் என்பதை சந்தோலியா, பெஹுரா, அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் டிக்டேட் செய்தனர்!''

அசோக்வதா :  ''ஸ்வான் டெலிகாம், டைகர் டிரேடர்ஸ் பிரை​வேட் லிமிட்டட் ஆகிய நிறுவனங்​களுக்கு, 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு கிடைப்பதற்கான நிதி உதவி செய்தும் அந்த நிறுவனங்களில் முதலீடு இருப்பதுபோல் ஆவணங்கள் தயாரித்தும் கொடுத்தேன்!''

கடந்த இதழில் நாம் குறிப்​பிட்ட ஆசீர்வாதம் ஆச்​சாரி​​​யின் வாக்குமூலத்துடன் இந்த ஆறு வாக்குமூலங்களும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவர்களின் வாக்குமூலங்​களை அடிப்படையாக வைத்தும், கார்ப்பரேட் நிறுவனங்களின் சாட்சிகளை அடிப்​படையாகக்கொண்டும்  'ஆ.ராசா... குற்றவாளிதான்’ என்று நீதிமன்றத்தில் உறுதியாகச் சொல்லக் காத்திருக்​கிறது சி.பி.ஐ.!

''லைசென்ஸ் பெறவே நீரா ராடியாவும் ராசாவும் பேசினர்...''

வருமான வரித் துறை இணை இயக்குநர் ஆஷிஷ் அப்ரால், நீரா ராடியா பற்றி டெல்லி போலீஸ் அதிகாரி வினீத் அகர்வாலுக்கு நவம்பர் 20, 2009-ல் எழுதிய கடிதத்தில், 'நீரா ராடியா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் தொலைபேசி இணைப்புகள் எங்களுக்கு வந்திருக்கும் புகார்களின் அடிப்படையில் உள்துறை செயலாளரின் அனுமதி பெற்றுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 

நீரா ராடியா வைஷ்ணவி கார்ப்பரேட் கன்சல்டன்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவராக உள்ளார். இந்த நிறுவனங்கள் தொலைத் தொடர்பு, மின்சாரம், விமானப் போக்குவரத்து மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆலோசகராக உள்ளன. 

இந்த நிறுவனங்கள் வெறும் ஊடக மேலாண்மை செய்வது மட்டுமல்ல, அவர்கள் உரையாடல் அடிப்படையில், தங்களின் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்பக் கொள்கை முடிவுகளில் மாற்றம் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளில் ஆதிக்கம் செலுத்துவது போன்றவற்றை செய்து வருகின்றன.

அவர்களின் உரையாடலைப் பார்க்கையில், நீரா ராடியாவுக்கு தொலைத் தொடர்பு உரிமம் பெற்றுக் கொடுப்பதில் பங்கு இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்கள் உரையாடலில், புதிய தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு நீரா ராடியா ஆலோசனை வழங்குகிறார். இந்த லைசென்ஸ் பெறுவதால் அவர்களுக்கு உடனடி ஆதாயம் எதுவும் வந்துவிடாது என்று அரசாங்கத்தை நம்பும்படி செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து பெறும் பணத்தை காலம் தாழ்த்தி பெறும்படியும் அவர் அறிவுரை கூறுகிறார்.

நீரா ராடியாவுக்கும், தொலைத் தொடர்புத் துறை அமைச்சருக்கும் இடையே நேரடி தொலைபேசி உரையாடல்கள் நிகழ்ந்து உள்ளன. சில உரையாடல்கள், சில தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் லைசென்ஸ் பெற உதவும் வகையில் உள்ளன. நீரா ராடியா சந்தோலியாவுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இவை தேவைப்பட்டால் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்...’ என்று கூறப்பட்டு உள்ளது!

(தொடரும்)

நன்றி : ஜூனியர்விகடன்-24-04-2011



Read more: http://truetamilans.blogspot.com/search?updated-max=2011-04-25T11%3A41%3A00-07%3A00&max-results=1#ixzz1L5kGJjQr



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பத்திரமே இல்லாத இடத்தில் சன் டிவி அலுவலகம்..!

 

 

 
10-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'நக்கீரன் அன்பு' என்றால் தெரியாத பத்திரிகையாளர்களே இருக்க முடியாது. 'நக்கீரன்' பத்திரிகையில் மிக நீண்ட காலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். 2007-ம் ஆண்டு நக்கீரனில் இருந்து வெளியேறிவிட்டார். தற்போது 'நம் தினமதி' நாளிதழிலும். 'புதிய தமிழகம்' பத்திரிகையிலும்  எழுதி வருகிறார்.
 
அன்பு சமீபத்தில் 'மக்கள் ஏமாந்தார்களா? ஏமாற்றப்பட்டார்களா?' என்கிற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். இதில் 2006 முதல் நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சியின்  17 விதமான ஊழல்களை, முறைகேடுகளை ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகளுக்கான ஆதாரங்களைத் தேடியெடுத்து அவற்றினை ஸ்கேன் செய்தும் வெளியிட்டிருக்கிறார். நிச்சயம் இது மிகப் பெரிய விஷயம்தான்.. இதற்காக சகோதரர் அன்புவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..!!!

இந்தப் புத்தகத்தி்ன் விலை வெறும் 25 ரூபாய்தான்..! தமிழகத்து மக்கள் அனைவரும் அவசியம் இப்புத்தகத்தைப் படித்து தி.மு.க. ஊழல் ஆட்சியின் லட்சணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். 

இப்புத்தகம் கிடைக்குமிடம் 

புதிய தமிழகம் வார இதழ்
½-ஏ, வி.கங்காதரன் தெரு
ஜோசியர் தெரு அருகில்
நுங்கம்பாக்கம்
சென்னை-600034.

தி.மு.க. ஆட்சிக்குக் கொடி பிடிக்கும் உடன்பிறப்புக்களும், ஆதரவாளர்களும் இப்புத்தகத்தை வாசித்து இதில் இருக்கும் ஊழல்களைப் படித்துத் தெளிந்து தங்களது கொள்கையை மறுபரிசீலனை செய்யட்டும். இப்போதும் அவர்கள் தி.மு.க.வினர் ஊழல்களே செய்ததில்லை. இவைகளெல்லாம் ஊழல்களே இல்லை.. என்று சொல்வார்களேயானால் இதில் இருக்கும் ஊழல்கள் அனைத்தும் புனைந்து எழுதப்பட்டவை என்பதை ஆதாரங்களோடு அவர்களும் சொல்லட்டும். தெரிந்து கொள்வோம்..!

இந்தப் புத்தகம் கொஞ்சம் முன்கூட்டியே கையில் கிடைத்திருந்தால் அனைத்தையும் சிரமம் பார்க்காமல் தட்டச்சு செய்து பதிவில் ஏற்றியிருப்பேன். நேற்றுதான் கைக்கு கிடைத்தது.. கால அவகாசமில்லை. நானும் 5 மாத காத்திருப்பிற்குப் பின் இப்போதுதான் ஒரு வேலையில் சேர்ந்துள்ளேன். தட்டச்சு செய்ய நேரம் அதிகமில்லை.. ஆகவே தேர்தல் அவசரத்திற்காக இதில் நாம் அதிகம் அறிந்திருக்காத சில ஊழல்களை மட்டும் உடனுக்குடன் வெளியிடலாம் என்று நினைத்துள்ளேன்.

சென்னையில் இருக்கும் பதிவர்கள் வாய்ப்பு கிடைத்தால் புதிய தமிழகம் வார இதழ் அலுவலகத்திற்கு நேரில் சென்று இப்புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த அரிய, ஆதாரமான புத்தகத்தை முதன்முதலாக என்னிடம் கொடுத்து படிக்கச் சொல்லி, இதனை வலையில் ஏற்ற ஆக்கமும், ஊக்கமும் வழங்கி உற்சாகப்படுத்திய அருமைத் தம்பி பாலபாரதிக்கு வலையுலகத்தின் சார்பாக கோடானு கோடி நன்றிகள்..!

இனி.. இந்தப் புத்தகத்தில் 13-வது முறைகேடாகப் பட்டியலிடப்பட்டிருக்கும் கட்டுரை இது :

பத்திரம் இல்லாத கட்டிடத்தில் சன் டிவி அலுவலகம்

சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் ராஜா அண்ணாமலைபுரத்தில் வாங்கிய 30 கிரவுண்ட் இடம் தொடர்பான பத்திரம், தனித் துணை ஆட்சியர்(ஸ்டாம்ப்ஸ்) அலுவலகத்திலேயே கடந்த 12 ஆண்டுகளாக கிடக்கிறது. ஆனால், இந்த இடத்தில்தான் சன் டிவிக்கென தனி அலுவலகம் 10 மாடிக் கட்டிடமாக உருவாகியுள்ளது.

அது எப்படி பத்திரமே இல்லாத இடத்தில், 10 மாடி கட்டிடம் கட்ட சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி கொடுத்தது..?

சென்னை, மைலாப்பூர் ராஜா அண்ணாமலைபுரத்தில் சென்னை ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்திற்குச் சொந்தமான 40 கிரவுண்ட் காலி மனை இருந்தது. இதை ஏலம்விட அந்த நிறுவனம் முடிவு செய்தது. அப்போது வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறன் அந்த இடத்தை ஏலத்திற்கு விடாமல், அடிமாட்டு விலைக்கு சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு வாங்கிக் கொடுத்தார்.

Dayanidhi_Kalanidhi_Maran.jpg
சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன், ஒரு கிரவுண்ட் விலை 39 இலட்சம் என்ற விலையில் 30 கிரவுண்டு காலி மனைக்கு 11 கோடியே 70 லட்சத்திற்கு கிரையம் செய்யப்பட்டு, அதற்கான பத்திரம் 1999-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ம் தேதி மயிலாப்பூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தார்.

பத்திரப் பதிவு செய்யப்படும்போது வழி காட்டி மதிப்பீட்டின்படிதான் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது அரசு ஆணை.

பத்திரப் பதிவு நடந்தபோது, மயிலாப்பூர் பத்திரப் பதிவு அதிகாரி, "ராஜா அண்ணாமலை நகரில் ஒரு சதுர அடி மனையின் விலை 2346 ஆக வழிகாட்டி மதிப்பீடு உள்ளது. அதன்படி 30 கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு 16 கோடியே 87 இலட்சத்து 71 ஆயிரத்து 240 ரூபாய். இதற்கு 13 சதவிகிதம் முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணமாக 2 கோடியே 19 லட்சத்து 40 ஆயிரத்து 261 ரூபாயை செலுத்த வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

ஆனால் சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிர்வாகமோ, பத்திரப் பதிவுத் துறை அதிகாரி கூறிய வழிகாட்டி மதிப்பீட்டு விலைக்கு நிலத்தைப் பதிவு செய்ய முடியாது என்று கூறிவிட்டு, ரூபாய் 11.70 கோடிக்கு உரிய 13 சதவிகிதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணமாக ரூபாய் 1 கோடியே 71 லட்சத்து 13 ஆயிரத்து 772 மட்டுமே  செலுத்தியது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூபாய் 48 லட்சத்து 26 ஆயிரத்து 489 ரூபாய்களாகும்.

ஜெயலலிதா டான்சி நிலத்தை வழிகாட்டு மதி்பபிட்டீற்கு குறைவாக பத்திரப் பதிவு மற்றும் முத்திரைக் கட்டணத்தில் மோசடி செய்ததாக அவர் மீது தி.மு.க. அரசு வழக்குப் பதிவு செய்தது. தனி கோர்ட் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு காலம் சிறைத் தண்டனை வழங்கியது. 

இதைக் காரணம் காட்டி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த ஜெயலலிதாவின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பிறகு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அந்த நிலம் அரசிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

அப்படியென்றால் ஜெயலலிதாவுக்கு ஒரு நீதி.. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனுக்கு ஒரு நீதியா..? 

மயிலாப்பூர் பத்திரப் பதிவு அதிகாரி, வழிகாட்டு மதிப்புப்படி முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் அரசுக்கு 48 லட்சத்து 26 ஆயிரத்து 489 இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறி சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் பத்திரத்தை இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47(அ)(1)-ன் கீழ் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருக்கும் தனித்துணை ஆட்சியருக்கு(ஸ்டாம்ப்ஸ்) அனுப்பி வைத்தார்.

பிறகு அந்த நிலத்திற்கு விலை மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டதா? அந்தப் பத்திரத்தை பதிவு அலுவலகத்தில் இருந்து உரியக் கட்டணத்தைச் செலுத்தி சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் திரும்பப் பெற்றதா என்று தெரியவில்லை.

ஆனால் இதே இடத்தில் வெற்றிகரமாக சன் டிவியின் 10 மாடிக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. சென்ற ஆண்டு புதிய தலைமைச் செயலகத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த சோனியாகாந்தி, சன் டிவி கட்டிடத்தைத் திறக்கப் போவதாக பரபரப்பாக பேச்சு நிலவியது. ஆனால் அந்தக் கட்டிடம் திறக்கப்படவில்லை.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு சன் டிவியின் கட்டிடத்திற்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு சன் டிவியின் அலுவலகம் திறக்கப்பட்டுவிட்டது. இப்போது சன் டிவி அங்கிருந்துதான் செயல்பட்டு வருகிறது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மயிலாப்பூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் வழிகாட்டி மதிப்பீட்டைவிட குறைவான மதிப்புக்கு பத்திரப்பதிவு செய்த ஆவணம் தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டோம்.

எமது தகவலுக்கு பதில் அளித்த மயிலாப்பூர் சார் பதிவாளர், 1999-ல் வழிகாட்டி மதிப்பீட்டைவிட குறைவான மதிப்பில் ஆவணம் பதிவு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் அந்த சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் பதிவு ஆவணத்தை தனித்துணை ஆட்சியருக்கு(ஸ்டாம்ப்ஸ்) அனுப்பி வைத்தோம். இதுவரை மதிப்பு நிர்ணயிக்கப்பட்ட ஆவணம் அங்கிருந்து மயிலாப்பூர் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.

அப்படியென்றால் கடந்த 12 ஆண்டு காலமாக தனித்துறை ஆட்சியர் அலுவலகத்தில் சன் டிவி பத்திரப் பதிவு விவகாரம் முடங்கிக் கிடக்கிறது..

பதிவு ஆவணமே இல்லாத ஒரு இடத்தில் கட்டிடம் கட்ட சென்னை பெரு நகர வளர்ச்சிக் கழகத்தின அனுமதி எப்படி கிடைத்தது..?

அரசுக்கு ரூ.48.26 லட்சம் அளவுக்கு இழப்பினை ஏற்படுத்திய சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிர்வாக நியக்குநர் மீது ஏன் வழக்குத் தொடரவில்லை..?

நன்றி : திரு.அன்பு 

இனி நாம் பேசுவோம்..!

இதில் எனக்குப் புரியாத ஒரு விஷயம், 12 ஆண்டுகளாக இது தனித்துறை ஆட்சியர் அலுவலகத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது என்றால், 2001 முதல் ஆட்சி செய்த ஜெயலலிதாவின் ஆட்சியில் இது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்..? ஒருவேளை ஆத்தாகிட்ட யாரும் சொல்லலையா..? இல்லை மறைத்துவிட்டார்களா..? எதுவும் புரியவில்லை. காரணம் என்னவெனில், நானே இப்போதுதான், இந்தப் புத்தகத்தைப் படித்துதான் இந்த விஷயத்தையே தெரிந்து கொண்டேன்..! அவ்வளவு ரகசியமாக வைத்திருந்திருக்கிறார்களே பாவிகள்..!

பொதுவாக நாம் ஓரிடத்தை சொந்தப் பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கிய பின்பு நம் பெயருக்கு பத்திரத்தை எழுதி பதிவு செய்து கொடுப்பார்கள். இதன் பின்பு, இந்தப் பத்திரத்தை காண்பித்துதான் குறிப்பிட்ட அந்த இடத்தில் நாம் வீடு கட்டவோ, அல்லது பில்டிங் கட்டவோ விண்ணப்பிக்கவே முடியும்.

ஒருவேளை அந்த இடம் நமக்குச் சொந்தமானதாக இல்லை என்றால் உரிமையாளருக்கும், நமக்கும் இது தொடர்பாக இருக்கும் தனி ஒப்பந்தங்களைக் காட்டினால்தான் கட்டிடம் கட்டவே அனுமதி கிடைக்கும்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடத்தில் வீடுகள் கட்டவோ, பில்டிங் கட்டவோ சென்னை பெருநகர வளர்ச்சி மன்றத்திற்கு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அங்கேயும் இந்தப் பத்திரம் இல்லாமல் எந்தக் கதையும் நடக்காது..!

ஆனாலும் உரிமையாளர் பத்திரமே இல்லாமல் சன் டிவி அந்த இடத்தில் 10 மாடி கட்டிடம் கட்டி முடித்திருக்கிறது எனில் இதில் எந்த முறைகேடும் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா..?

சென்னை பெருநகர வளர்ச்சி மன்றத்தின் அனுமதியில்லாமலும் சன் டிவி இதனைக் கட்டி முடித்திருக்க முடியாது. ஆக.. சென்னை பெருநகர வளர்ச்சி மன்றம் எதை வாங்கிக் கொண்டு, என்ன சமரசம் செய்து இந்த முறைகேட்டுக்கு ஒத்துக் கொண்டது என்பதும் விசாரிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்..!

சாதாரணமாக ஒரு வீடு கட்ட அனுமதி கேட்டு மாநகராட்சிக்குச் சென்றாலே எத்தனை எத்தனை பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது என்பதை வீடு கட்டிய சென்னைவாழ் தமிழர்களிடம் கேட்டுப் பாருங்கள்.. கண்ணீர் விடுவார்கள்.

நாம் சமர்ப்பிக்கும் அனைத்து ஆதாரங்களும் உண்மையானதாக இருந்தாலும், அது சரியில்லை.. இது சரியில்லை என்றெல்லாம் நொட்டை, நொள்ளை சொல்லிவிட்டு நாம் சில காந்தி தாத்தா உள்ள நோட்டுக்களை வீசியெறிந்தால் மட்டுமே நமக்கான அனுமதி கிடைக்கும். இதனை வாங்குவதற்குள் ஒவ்வொரு வீட்டுக்காரனும், பில்டர்ஸும் 10, 15 முறை இந்தியன் தாத்தாவாக ஆகிவிடலாமா என்றுகூட யோசிப்பார்கள். அந்த அளவுக்கு லஞ்ச லாவண்யம் இத்துறையில் விளையாடுகிறது..

தெருவில் தனது வீட்டு முன்பாக 500 செங்கற்களை குவித்துவைத்தால்கூட வட்ட கவுன்சிலரும், வட்டத்தின் ஆளும்கட்சி அடிப்பொடிகளும் ஓடோடி வருவார்கள். அவர்களுக்கு வெட்ட வேண்டியதை வெட்டினால்தான் அந்த செங்கற்கள் நாளை கட்டிடமாக உருவாகும். இல்லையெனில் இரவோடு இரவாக ஏதாவது ஒரு காரணம் சொல்லப்பட்டு அந்த உரிமையாளரின் அனுமதி ரத்து செய்யப்படும். அல்லது நிறுத்தி வைக்கப்படும். இது சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் நடக்கின்ற விஷயம்.

ஆனால் இங்கே ஒரு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாக.. பத்திரமே இல்லாத இடத்தில் 10 மாடி கட்டி முடித்து குடியேறியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு இந்த விஷயத்தில் முறைகேட்டை செய்திருக்க வேண்டும் என்பதை யோசித்துப் பாருங்கள்..

இதில் சன் டிவி தனது அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தித்தான் இந்த முறைகேட்டை செய்திருக்கும் என்பதை தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் அதிகம் தெரியாத சிறுவர்கள்கூட சொல்லிவிடுவார்கள்..!

இப்படி சொத்து, சுகத்துக்காக ஆட்சி,  அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் இந்தக் கொள்ளைக்காரர்களை மனதில் வைத்து ஏப்ரல் 13 அன்று வாக்களியுங்கள்..!
Read more: http://truetamilans.blogspot.com/2011/04/blog-post_10.html#ixzz1L5lAiFaZ


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

2933562-kanimozi-summon.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

04_05_2011_001_007-mk-lawyers.jpg?w=355&h=356



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 


Worried MK discusses implications of 2G case chargesheet with senior lawyers 

Chennai: After being named in the CBI chargesheet in connection with the 2G case,Rajya Sabha MP Kanimozhi has been summoned to appear in court and could even be arrested.Tamil Nadu chief minister M Karunanidhi is likely to accompany Kanimozhi when she appears before the CBI special court in New Delhi in the 2G spectrum case on May 6.
On April 25,the CBI had named Kanimozhi a co-conspirator in the case along with former telecom minister A Raja.
The sources told TOI that Ram Jethmalani,known to take on high-profile and controversial cases,had agreed to represent Kanimozhi.Incidentally,Jethmalani had appeared for Unitech chief Sanjay Chandra,who was arrested by the CBI,before the Delhi high court.
Jethmalani,DMK sources said,had declined to represent Raja.But the former DMK MP and senior advocate,Shanmugasundaram,DMK parliamentary party leader T R Baalu and state law minister Duraimurugan had prevailed on him to defend Kanimozhi.Duraimurugan and Union minister Jagathratchagan were in Delhi on Monday to discuss the legal implications of the spectrum case with some retired judges.
Worried by the turn of events,Karunanidhi has been in discussions with senior lawyers,who have explained to him the allegations listed in the 43-page CBI chargesheet against Kanimozhi and their legal ramifications.The advocates tried to assure Karunanidhi that since the CBI had already filed its chargesheet,there would be no need for the investigating agency to arrest her.
 




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21710796.jpg?w=640&h=266



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

06_05_2011_001_043-kani.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

14956171-kani.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

07_05_2011_001_016-kani-court.jpg?w=640&h=1187



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

07_05_2011_002_009-jail-kani.jpg?w=640&h=677



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

07_05_2011_001_013-kani-raja.jpg?w=640&h=412



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

07_05_2011_002_037-dmk-drama.jpg?w=640&h=362



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

2485493-mk-hhom.jpg?w=640&h=421



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

08_05_2011_001_005-kani-on-14th.jpg?w=640&h=77808_05_2011_001_005-kani-on-14th.jpg?w=640&h=7782545968-kani.jpg?w=640&h=694

2134262-rajathi-in-court.jpg?w=640&h=146220110508a_010101008-kani.jpg?w=464&h=747



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

08_05_2011_011_034-kani-future.jpg?w=640&h=357



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

08_05_2011_005_002-kasni-raja.jpg?w=640&h=417



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

3513875-kani.jpg?w=640&h=864



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

10_05_2011_009_014-kani-in-ed-probe.jpg?w=544&h=52110_05_2011_009_013-kani-in-court.jpg?w=640&h=254



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22516359-kani-in-chennai.jpg?w=423&h=20972252625-kani1.jpg?w=640&h=379

12_05_2011_009_008-kani-back.jpg?w=640&h=443

2252625-kani.jpg?w=640&h=379



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

11_05_2011_009_014-pac.jpg?w=640&h=370



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

14_05_2011_010_003-dayalu.jpg?w=352&h=570



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

16_05_2011_005_015-theater.jpg?w=640&h=672



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23820718-kani.jpg?w=640&h=1312



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25052859-rajathi-lands.jpg?w=640&h=845



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 2043218-kani-in-thikar.jpg?w=640&h=785



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21_05_2011_013_005-2g-till-now.jpg?w=355&h=841



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21727781-kani.jpg?w=640&h=464



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21_05_2011_013_008-mk-on-arrest.jpg?w=640&h=353



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21_05_2011_013_003-witness.jpg?w=640&h=189



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

296578-nk-in-cit-nagar.jpg?w=640&h=420



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

pc0081400-kani-incourt.jpg?w=330&h=345images?q=tbn:ANd9GcQmATCbHkoW1ojyYA6YER2EZtqNUe5e6IMZVSgf-BC9QhYRDyvMHA images?q=tbn:ANd9GcRhZwnWsToCUuLjWZPHj23L99AJx_qdMUh7d3P5EDXWh1H6GXCj images?q=tbn:ANd9GcSUJMJrCWJJ5yxJhfvLq_EAAm9XNCTuFeTHOVrjiYmukmKRAJVlXg images?q=tbn:ANd9GcSWIakMSVC2GG97fZ7bYHPj_A6xbjfLT6azFXgWMNLmIkAfr9c5  



-- Edited by devapriyaji on Saturday 21st of May 2011 06:49:42 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

images?q=tbn:ANd9GcSBXTU0p6og2_-6fTYLvRyukoi2jD3wVmybqjg3mxMF1acvufnKzQ images?q=tbn:ANd9GcRXx1fnTrrX5yBj29pDsCwN5KyZ8I5arFSVTl69iKq7bR8Fed1Ybw



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஞாநியின் வேதனை கேள்வி 

கனிமொழியின் வக்கீல் ராம்ஜெத்மலானி, ராசாவை வேண்டுமானால் ஸ்பெக்ட்ரம் சதிகாரர் என்று சொல்லலாமே தவிர தன் கட்சிக்காரருக்கு ஒரு தொடர்பும் இல்லை என்று நீதிமன்றத்தில் வாதிட்ட அதே நாளில் அதே மன்றத்தில் ராசா, கருணாநிதியின் மகள் கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாளின் காலைத் தொட்டு வணங்கிய செய்தி படிக்க வேதனையாக இருந்தது. ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் ஒரு முறைகேடும் நடக்கவில்லை என்று வாதிடும் தி.மு.க கட்சி சார்பில் கனிமொழி, ராசா இரு வருக்காகவும் வாதாட ஒரே வக்கீலாக ராம்ஜெத்மலானியை நியமித்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை?

தொடர் ராஜினாமாக்கள் 
கலைஞர், தங்கபாலு ராஜினாமாக்கள் சரி, ஏன் இவர்கள் ராஜினாமா செய்தார்கள் ?

1. சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து குஷ்பு
2. பெப்ஸி தலைவர் குகநாதன் ராஜினாமா
3. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராம.நாராயணன்
இவர்கள் சொன்ன காரணம் தான் சூப்பர் 'பர்சனல் வேலை, புதிய படபிடிப்பு..." ஒருவரும் திமுக தோல்வியினால் என்று சொல்லவில்லை. நல்லா நடிக்கிறாங்கப்பா


கொசு தொல்லை

1. பா.ஜ., தமிழக துணைத் தலைவர் பதவியில் இருந்து, எச்.ராஜா ராஜினாமா செய்தார் - தேர்தல் தோல்வி எதிரொலியாம்.

2. 'தி.மு.க.வின் சாதனைகளுக்கு வாக்காளர்களிடமிருந்து கிடைத்த பரிசுதான் தேர்தல் தோல்வி' கி.வீரமணி அறிக்கை

ஓபன் டாக் 

1. யார் வேண்டுமானாலும் திரைப்படம் தயாரிக்கும் நிலை வர வேண்டும்
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தங்கர்பச்சான் கோரிக்கை.

2. புதிய தலைமை செயலகத்தை மாற்றக்கூடாது - டாக்டர் ராமதாஸ் அறிக்கை


அப்படியா ? 
முன்னாள் அமைச்சர் ஒருவரின் தொகுதியில் ஏறத்தாழ 10,000 வாக்காளர்களுக்கு, அதுவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை வாக்காளர்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டு மாவட்டத் தலைநகரிலுள்ள ஷோரூமிலிருந்து டிவிஎஸ் 50 இலவசமாக எடுத்துச் செல்லும்படி பணித்தார்கள். எட்டே எட்டுபேர் மட்டும்தான், டிவிஎஸ் 50 எடுத்துச் சென்றார்கள். ஏனையோர் அந்த டோக்கனைக் கிழித்துப் போட்டுவிட்டு வாக்களித்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா மண்டபத்தில் பதவியேற்கும் விழாவில் கந்துக்கொண்ட பிரவீன் குமாரை பல அதிமுக தொண்டர்கள் காலில் விழுந்து வணங்கினார்கள். இதை தடுத்த அவரது மனைவியை "சும்மா இருங்க" என்று கடிந்துக்கொண்டு பிறகு அவர் மனைவி என்று தெரிந்த பின்னர் அவர் காலிலும் விழுந்தாகளாம் !



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அழகிரி மற்றும் தி.மு.க. கட்சியினரின் சுருட்டல் விவகாரங்கள் ..!

 

 

21-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தி.மு.க.வை இந்தத் தேர்தலில் வீட்டுக்கு அனுப்பியதற்கான காரணிகளில் ஒன்றான அக்கட்சியினர் மற்றும் கலைஞரின் குடும்பத்து உறுப்பினர்கள் சிலரின் அராஜகம் பற்றிய பல செய்திகளை முன்பே நீங்கள் படித்திருப்பீர்கள்..!

முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளருமான என்.கே.கே.பி.ராஜா, தான் கேட்டும் தனக்கு நிலத்தை விற்க மறுத்த கோபத்தினால் இரவோடு இரவாக வாழைத்தோப்பையும், பண்ணை வீட்டையும் புல்டோசர் வைத்து அழித்தது தமிழ் நாட்டு மக்களால் மறக்க முடியாதது..!

அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த சிவபாலன் என்பவரை தனது வீட்டு முன்னால் இருந்த போஸ்ட் கம்பத்தில் கட்டி வைத்து, விடிய விடிய சவுக்கால் தனது சின்ன வீட்டம்மாவுடன் சேர்ந்து அடித்துத் துவைத்த கதையையும் கேட்டு தமிழகமே பதறியதும் இந்த தி.மு.க.வின் பொற்கால ஆட்சியில்தான் நடந்தது..!

அதேபோல் சேலத்து இளவரசர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனான பாரப்பட்டி சுரேஷ்குமார் என்பவர் ஒரு நில விவகாரத்தில் தலையிட்டு தன் பேச்சைக் கேட்கவில்லையே என்கிற ஆவேசத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புசாமி என்பவரின் குடும்பத்தில் 7 பேரை வெட்டிச் சாய்த்ததாக தி.மு.க. ஆட்சியிலேயே சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அவரைக் கைது செய்தது. தி.மு.க. நேர்மையாக ஆட்சி செய்திருக்கிறது என்று அவர்கள் சொல்கின்றபோது இந்தக் கைதும் நியாயமானதாகத்தான் இருக்க வேண்டும்..! ஸோ.. இந்தப் படுகொலைகளுக்கு பின்னால் இருந்தது அரசியல் அராஜகங்கள்தான்..!

ஆனாலும் வெகு எளிதாக என்.கே.கே.பி.ராஜா சாட்சிகளே இல்லை என்ற நிலையில், வழக்கில் இருந்து விடுதலையானார். சுரேஷ்குமார் ஜாமீன் கேட்டபோது அரசுத் தரப்பு அதிகம் எதிர்க்காமல் இருக்க.. சுலபத்தில் அவரும் ஜாமீனில் வந்துவிட்டார்..! இதையெல்லாம் பார்த்தும் மக்கள் பயந்துபோய்தான் இருந்தனர். தங்களுக்கொரு  வாய்ப்பு வரும்போது பார்த்துக் கொள்வோமென்று அமைதியாக இருந்தனர். கடைசியில் தங்கள் கோபத்தை வாக்குப் பெட்டியில் காண்பித்துவிட்டனர்..!

இந்தக் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்த இடங்களே இந்த லட்சணத்தில் என்றால் பட்டத்து இளவரசர் ஆட்சி செய்யும் மாமதுரையில் நிலைமை என்ன லட்சணத்தில் இருந்திருக்கும்..?

கடந்த இரண்டு நாட்களாக கூகிள் பஸ்ஸிலும், பேஸ்புக்கிலும் பகிர்ந்து கொண்ட சில சம்பவங்களை சில ஆயிரம் பேர் படித்துத் தெரிந்து கொள்வதற்காக இங்கே பதிவு செய்கிறேன்..!

mk-family.jpg
சம்பவம்-1 :

“..........திடுதிப்பென்று ஒருநாள் மதுரையில் இருந்து போன்.. “அண்னன் அ’னாதான் உங்ககிட்ட பேசச் சொன்னார். நீங்க என்ன பண்றிங்கன்னா.. உடனே ஒரு இருபது லட்ச ரூபாயை மதுரை ஐ.என்.ஜி.வைஸ்யா பேங்க்ல ஃபிக்சட் டெபாசிட் பண்ணிடுங்க.. என்ன புரியுதா?” என்று மிரட்டியது  ஒரு  கைத்தடி...!

ஃபிக்சட் டெபாசிட் மேட்டர் என்னடா விவரம் என விசாரித்தால்.. ஐ.என்.ஜி. வைஸ்யா வங்கியின் மதுரை கிளைக்கு ஒரே மாதத்தில் 30 கோடி ரூபாய் டெபாசிட் வாங்கித் தருவதாக அண்ணன் அ’னா உறுதி கூறி, அதற்கான கமிஷன் தொகையாக பல கோடி ரூபாயை முன் கூட்டியே வாங்கிக் கொண்டாராம்! உள்ளூரில் தொழில் செய்யும் எல்லோரையும் அதட்டி - உருட்டி - மிரட்டியே அந்த 30 கோடி ரூபாயை டெபாசிட் பண்ண வைத்தார்கள். கடனை, உடனை வாங்கி ஃபிக்சட் டெபாசிட் செய்தார்கள் அப்பாவிகள்  பலரும்.

அந்த அளவுக்கு அராஜகம் தலைவிரித்து ஆட்டம் ஆடிய மதுரையில் உதிக்காத சூரியன் ஒரு சீட்டைக்கூட பிடிக்காமல் மண்ணைக் கவ்வியது என் போன்ற சொந்தத்  தொழில் செய்பவர்களுக்கெல்லாம் தவுசன்வாலா  பட்டாசு  வெடித்துக்  கொண்டாட வேண்டிய சந்தோஷம்.

தி.மு.க. மீண்டும் ஆறாவது முறையாக ஆட்சிக்கு வரவேண்டும் என அடம் பிடித்துக் குரல் கொடுத்த - ப்ரஃபைல் படத்திலேயே உதயசூரியனைப் போட்டுக் கொண்டு வடம் பிடித்த இணைய நண்பர்களுக்கெல்லாம் அன்போடு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்.. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான்யா தெரியும்! இந்த முறையும் அவனுக ஆட்சிக்கு வந்திருந்தானுங்கன்னா தமிழ் நாட்டை அந்த ஆண்டவானால மட்டுமில்லை.. எவனாலயும் காப்பாத்தியிருக்க முடியாது..!”

- இப்படி பாதிக்கப்பட்டவர் சொல்லியிருந்த சில கோடிகள் என்பதை மட்டுமே குறி வைத்து பல உடன்பிறப்புகளும், தி.மு.க. ஆதரவாளர்களும் சிலம்பமெடுத்து ஆடினார்களே ஒழிய.. மதுரை அண்ணன் செய்யச் சொன்ன அந்த பிக்ஸட் டெபாசிட் விஷயத்தை மட்டும் கவனமாக கண்டு கொள்ளாமல் போனார்கள்..!

ஆனால் சம்பவம் நடந்ததென்னவோ உண்மை..! மதுரையில் ஆரம்பித்து தென் தமிழகத்தின் பல மாவட்டங்களும் அழகிரியின் புதிய தொழில் சாம்ராஜ்யத்துக்குள் அடங்கிப் போனது.. அதாவது அடக்கப்பட்டது! 

’அண்ணாச்சியிடம் சில பஞ்சாயத்துக்களுக்காக சென்று வந்து கொண்டிருந்த பல தொழிலதிபர்களிடமும் இப்படித்தான் அந்தக் குறிப்பிட்ட வங்கிக்காக பணம் வசூலிக்கப்பட்டது..!’ என்பதை மட்டும் இன்று ஒப்புக்கொள்ளும் இணைய உடன்பிறப்புகள், சும்மா சிவனே என இருக்கும் தொழிலதிபர்களையும் வலியச் சென்று வம்பிழுத்து மாமூல் வசூலித்து வந்த அடிதடியாளர்களைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை.   

‘நான் எந்த தப்புத்தண்டாவும் செய்யவில்லை.. உங்கள் கட்டப் பஞ்சாயத்தும், பாதுகாப்பும், பக்கபலமும் எனக்குத் தேவையில்லை’ என யாரும் சொல்லிவிட்டு, ஒதுங்கிப் போக முடியாது. அந்த ஏரியாவுக்கெல்லாம் தாங்கள்தான் குறுநில மன்னர்களாக எண்ணிக் கொண்டு செயல்பட்ட கரை வேட்டிக்காரர்கள் கேட்டால் கேட்பதைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும். 

‘வரி வட்டி கிஸ்தி’ என வீர வசனம் பேசிக்கொண்டிருந்தால் போன் மிரட்டல்களிலேயே உயிரைப் பிடுங்கி விடுவார்கள். இதனைப் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு சின்னப் பெட்டிச் செய்தியை மட்டுமே போட்டிருந்தது நக்கீரன். இதுவே சசிகலாவின் ஆட்களாக இருந்திருந்தால் அட்டையில் போட்டிருப்பார்கள்..!  

சம்பவம்-2

“அ..லை யுனிவர்சிடில மூணு மெடிக்கல் காலேஜ் சீட்டை அண்ணன் எனக்கு கொடுத்திருக்காரு.. அந்த வருமானம் எனக்குத்தான். யாராச்சும் உங்களுக்குத் தெரிஞ்ச பார்ட்டியைக் காட்டுங்க.. எனக்கு 18 லட்சம் கொடுத்தா போதும்.. எவ்வளவு வேணும்னாலும் கூட்டி வச்சு நீங்க வாங்கிக்கங்க..” என  என்னையே  ஏஜெண்ட்  ஆக்கப் பார்த்தது.

- இப்படியொரு வாக்குமூலமும் வெளியாகியுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம் என்றில்லை.. தமிழகத்தில் இருக்கும் அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் ஆளும் கட்சியின் தலைமைக்கென்று சில சீட்டுக்கள் உண்டு. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை கூல் செய்வதற்காகவே இதனைக் கொடுத்துவிடுவார்கள்..! இந்த இடங்களில் பணத்தைப் பெற்றுக் கொண்டு மாணவர்களின் பெயரை டிக் செய்து அனுப்பி வைப்பார்கள் சீட்டை பெற்றவர்கள்..! சுகாதாரத் துறை அமைச்சர், முதலமைச்சர், கவர்னர் என்று மூவருக்குமே இந்தப் பிரிவில் சீட்டுக்கள் ஒதுக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே..!

சம்பவம்-3

தென் மாவட்டங்களில் கேபிள் தொழில் செய்துவருபவர்கள் எப்போதுமே குரூப், குரூப்பாகத்தான் இருப்பார்கள். அ.தி.மு.க. ஆதரவாளர்கள், எஸ்.சி.வி. ஆதரவாளர்கள், யார் பக்கமும் சேராதவர்கள், லோக்கல் தாதாக்கள் பக்கம் ஒதுங்கியவர்கள்.. என எப்போதுமே தமிழக காங்கிரஸ்போல நிறைய கோஷ்டிகள் இருக்கும். அந்த கோஷ்டி குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட 'அண்ணன் அண்ட் கோ'வினர் எல்லா ஏரியாக்களிலும் தங்கள் தும்பிக்கையை நுழைத்தார்கள்.  

ஒரு சில ஏரியாக்களில்.. உள்ளூர் கலவரத்தையும் குறிப்பாக எஸ்.சி.வி.யின் ஆதிக்கத்தையும் அடக்குவதற்காக உள்ளூர்க்காரர்களே அண்ணாச்சியின் உதவிக்கு ஓடினார்கள்.

நானிருக்க பயமேன் என நைச்சியமாகவும் – "நாளைல இருந்து நம்ம கண்ட்ரோல் ரூம்ல இருந்துதான் சிக்னல் எடுத்துக்கணும் என்ன புரியுதா..?" என அதட்டி உருட்டியும் களமிறங்கினார்கள். வேறு வழியில்லாமல் அண்ணனிடம் சரண்டனார்கள் கிட்டத்தட்ட ஆறேழு மாவட்டத்தைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர்கள்! அத்தனை பேரும் ஒரே நாள் இரவில் இரண்டாம் நிலை தொழில் செய்பவர்களாக மாறிப் போனார்கள்..! 

முதல் மூன்று மாதங்கள் ஒழுங்காகப் போய்க் கொண்டிருப்பதாக பாவ்லா காட்டிய அ-னாவின் கேபிள் சாம்ராஜ்யம் 4-வது மாதமே எகிறத் தொடங்கியது. அனைத்து கேபிள்காரர்களும் அநியாய டெபாஸிட் கட்ட வேண்டும் என்ற உத்தரவு பாய்ந்தது. அதே போல அண்ணனின் ஆளுகையின் கீழ் வந்துவிட்ட அத்தனை கேபிள் இணைப்புகளில் செயல்படும் லோக்கல் டிவிக்களுக்கும் அதிரடி ஆப்பு பறந்து வந்தது.

யாராலும் அவர்களை எதிர்க்க முடியவில்லை. மீறியும் செய்ய முடியவில்லை. மீறினால் கேபிள் வயர்கள் வெட்டப்படும். இவர்களை வெளியில் நடமாட முடியாது. போலீஸ் வழக்குகள் பாயும் என்பதெல்லாம் இவர்களுக்கும் தெரியும்.. கேட்டதைக் கொடுத்தார்கள்..! 

“என்னடா இவனுக.. இவ்ளோ நல்லவங்களாக இருக்கானுக..!” என்று நினைத்த மதுரைக் கூட்டம், அடுத்தடுத்த மாதத்திலேயே வசூல் தொகையைத் தாறுமாறாகக் கூட்டிக் கொண்டே போனது.

அடுத்தக்கட்டமாக அத்தனை மாவட்டங்களிலும் சிறு தொழில் செய்துவரும் பிசினஸ்மேன்கள் டார்கெட் செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கும் லாபத்தை ஆடிட்டர்கள் போல அச்சு அசலாகக் கணக்குப் போட்டுக்கொண்டு, அவர்கள் முன்னால் கை நீட்டினார்கள். ‘எதிர்காலத்துலயும் நம்ம ஆட்சிதான்.. உங்களுக்கும் உங்க தொழிலுக்கும் நாங்கதானே பாதுகாப்பு கொடுக்கணும்’ என ‘சம்பளமா’க ஆயிரத்தில் இருந்து லட்சம்வரை வசூல் பண்ண ஆரம்பித்தார்கள்.

கொடுக்க மாட்டேன் என அடம் பிடித்து, கோர்ட் – கேஸ் என போக விரும்பும் நபர்களுக்கு அவரவர் குடும்பத்திலேயே கடும் எதிர்ப்பு. "ஆரம்பிச்ச தொழிலை நிறுத்தினா வெளியே இருக்கும் கடனை வசூல் பண்ண முடியாது, ஊருக்குள்ளயும் அவமானமா போயிடும், என்ன எழவையோ அழுதுட்டு நாம பொழைப்பைப் பார்ப்போம்’ என குடும்பத்துக்குள்ளேயே சண்டை நடந்தது, அதனால் உறவு ரீதியாகவும் இழப்புதான் ஏற்பட்டது என புலம்புகிறார் நண்பர் ஒருவர்.

சம்பவம்-4

இது  திருச்சி மண்டல இளவரசர் கே.என்.நேரு சம்பந்தப்பட்ட மேட்டர்..

திருச்சியில பாழடைஞ்ச நிலையில இருந்த ஒரு ஹோட்டல் பேங்க் ஏலத்துக்கு வந்தது. விஷயம் கேள்விப்பட்ட ஒரு நாமக்கல் பிசினஸ்மேன் ஹோட்டலுக்கு சொந்தக்காரங்களைச் சந்திச்சார்.

ஏலத்துக்குப் போயிடுச்சுன்னா.. சொந்தக்காரங்களுக்கு பெப்பேதான் கிடைக்கும். ஆனால் அவர் அவங்களுக்கும் ஒரு பெரிய தொகையைக் கொடுத்து, பேங்க் கடனையும் அடைச்சு, ஹோட்டலை மீட்டார். ப்ராத்தலுக்கு மட்டுமே புகழ் பெற்றிருந்த அந்த ஹோட்டலை, பல கோடி செலவு செஞ்சு, புதுப்பிச்சார்.

தன்னோட ஹோட்டல் என்றாலும், முந்தைய முதலாளி (அவர் இறந்து போயிருந்தார்) ஆசை ஆசையா கட்டினதுங்குறதுக்காக, அவரோட போட்டாவை அப்படியே ரிசப்ஷன்ல இருக்கட்டும்னு சொல்லிட்டார். அந்த போட்டோவுக்கு தினமும் பூப்போட்டு மரியாதையும் செய்யச் சொன்னார்.

அடுத்த சில வருடங்களில் ஹோட்டலை சூப்பரா மாத்தி, லாபகரமானதாக்கினார். இந்த நேரத்தில் நேருவின் அடிப்பொடிகள் அவரது உடன்பிறப்பு ஒருவரின் தலைமையில் பழைய முதலாளிகளின் வாரிசுகளை அட்டாக் பண்ணி, இன்னும் அக்ரிமெண்ட் ரிஜிஸ்டர் பண்ணப்படலை.. பவர்லதான் இருக்கு அப்படிங்கிறதைக் கண்டு பிடிச்சது.

இப்படி வங்கி ஏலத்துக்கு வர்ற ஹோட்டல்களை - தொழிற்சாலைகளை வாங்கி அதை வருமானத்துக்குரியதா மாத்தி, லாபத்தோட விற்பனை செய்வது நாமக்கல்காரரின் தொழில். பொதுவா இப்படி வாங்கி விற்பவர்கள் ரிஜிஸ்டர் செய்வது கிடையாது, பவர் ஆஃப் அட்டர்னியிலேயே வைத்திருந்து, விற்கும்போது ரிஜிஸ்டர் செய்து கொடுப்பார்கள்.

அந்த ஓட்டையை கரெக்டாக கவ்விக் கொண்ட அமைச்சரின் ஆட்கள் பழைய முதலாளியின் வாரிசுகளை மிரட்டி, பழைய தேதியிட்டு ஸ்டாம்ப் பேப்பரில்  சொத்தை  எழுதி  வாங்கினார்கள்.

இந்த விஷயம் கேள்விப்பட்ட நாமக்கல்காரர், போலீஸ்ல ஒரு கம்ப்ளெய்ண்ட் கொடுத்தார். ‘என் ஹோட்டலை அமுக்க - என்னைத் தாக்க திட்டம் போடுறாங்க’ன்னு அவர் எந்த இன்ஸ்பெக்டர்கிட்ட கம்ப்ளெயிண்ட் கொடுத்தாரோ.. அதே இன்ஸ்பெக்டர் தலைமையில அடுத்த நாள் ஒரு கும்பல்  வந்தது  ஹோட்டலுக்கு!

ஹோட்டல் பணியாளர்கள்போல பக்காவாக யூனிஃபார்ம் போட்டிருந்த பலர், நேரா போய் ஹோட்டல் அறை ஒவ்வொன்றின் வாசலில் நின்னுகிட்டாங்க...! அடுத்து இறங்கிய உருட்டுக்கட்டை கும்பல் ரிஷப்ஷனுக்குப் போய், ‘இது எங்க ஓட்டலு.. எழுந்து ஓடிப் போங்கடா’ன்னது. வெளியூர்ல இருந்த நாமக்கல்காரருக்கு போன் போட்டாங்க ஊழியர்கள். ‘பிரச்னை வேணாம்.. அப்படியே விட்டுட்டு வந்துருங்க.. நாம லீகலா பார்த்துக்கலாம்’னு சொல்லிட்டார் அவர்.

மறுநாள்.. அதே போலீஸ் ஸ்டேஷனுக்குப்போய் நடந்ததையெல்லாம் விளக்கமா எழுதி, எனக்கும் எங்க ஊழியர்களுக்கும் பாதுகாப்பு கொடுங்கன்னு புகார் கொடுத்தார்.

அந்த மகாராசன் இன்ஸ்பெக்டர் என்ன செய்தாரென்றால், நாமக்கல்காரர் கொடுத்த இரண்டு(இப்போது + முதலில்) புகார்களையும் தூக்கிக் குப்பைத் தொட்டில போட்டுட்டு, நேருவின் ஆட்கள் தங்கள் சொத்தைப் பாதுகாக்கவும்(?!) உயிருக்கு பாதுகாப்பு கேட்டும் கொடுத்ததா ஒரு கம்ப்ளெயிண்டைத் தூக்கிக்கிட்டு நாமக்கல்காரரையே அரஸ்ட் பண்ணுவேன்னு மிரட்டிட்டாரு .

கோர்ட் - கேஸ்னு நடையா நடந்து சின்னாபின்னமாகிக்கிட்டிருந்தார் நாமக்கல்காரர். திடீர்னு இதே ஸ்டைல்ல அவரோட திருப்பூர் ஹோட்டல் ஒண்ணையும் தூக்கினாங்க. திருப்பூர் ஹோட்டலைத் தூக்கியது கதர்ச் சட்டை ப’னா ஒருத்தரோட மனைவியோட தங்கச்சியோட மகன். அவருக்கு தொழில் ரீதியான பார்ட்னர் நம்ம திருச்சி த’னா! எப்படி இருக்கு பாருங்க இவங்க லிங்க்!?

எல்லா ஆதாரத்தையும் எடுத்துகிட்டு ஒவ்வொரு பத்திரிகையா ஏறி இறங்கினார் சொத்துகளைப் பறி கொடுத்த நாமக்கல்காரர். அதைக் கொடு - இதைக் கொடு - அதுக்கென்ன ஆதாரம் - இதுக்கென்ன ஆதாரம் என்றெல்லாம் சாட்சியை உட்கார வச்சு சடுகுடு ஆடிய பல பத்திரிகையாளர்கள், ‘எதிர்த் தரப்பில் என்ன சொல்கிறார்கள்னு கேட்டுட்டு வர்றோம்னு  சொல்லிட்டு போயே போயிட்டாங்க!

ஒரே ஒரு தினசரி பத்திரிகை மட்டும் தங்களது பத்திரிகையின் முதல் பக்கத்தில் இந்தச் செய்தியைப் போடுறதா சொன்னாங்க.. அச்சுக்கு ஏறும்வரை அவர்களின் அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வச்சுட்டு படுக்கப் போன நாமக்கல்காரர் மறுநாள் காலையில் பேப்பரை வாங்கிப் பார்த்தா.. அவர் சம்பந்தப்பட்ட நியூஸையே காணோம்!! பத்திரிகை முதலாளி ஃபாரின்ல இருந்து பேசினார்.. நியூஸைக் கீப்ல வைக்கச் சொன்னார்னாராம்  தற்போதைய எடிட்டர்!!!

கீழ் கோர்ட்ல கேஸ் சிக்கி சீரழிஞ்சு (பாதகமா தீர்ப்பு வரும்ங்குற சூழல்ல 3 தடவை பென்ச்சை - அதாவது நீதிபதியையே மாத்தினாங்கன்னு சொன்னா நம்பவா போறீங்க..? நீதி செத்துடுச்சு எசமான்!) மேல் கோர்ட்டுக்குப் போய் இப்பவும் சும்மா கின்னுன்னு போய்ட்டிருக்கு!

இதற்கிடையில் ஜூ.வி.யில மட்டும் ஒரே ஒரு பக்கத்துக்கு ஸ்ப்ளிட் எடிஷன்ல (அதாவது ஆல் எடிஷன்ல அந்த நியூஸ் வராது, சம்பந்தப்பட்ட ஏரியாவுக்கு மட்டும் ரகசியமா பப்ளிஷ் ஆகும்) நியூஸ் வெளியானது.

இந்த நேரத்துல சென்னைல இருந்து கார்ல ஊருக்குப் போய்க்கிட்டிருந்த நாமக்கல்காரருக்கு ‘திடீர்’ ஆக்சிடண்ட்...! 3 மாசம் படுத்த படுக்கையா கிடந்து, செத்துப் பிழைச்சு எழுந்து வந்து இப்போது வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துவிட்டு தவம் கிடக்கிறார்.  சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளே திகைச்சுப் போய் இருக்காங்க! விரைவில் தீர்ப்போட வரும்டியோவ் ஆப்பு!

இன்னிக்கு கடைகளில் ஆதாரமா தொங்குது அந்த நாமக்கல்காரர் ஆரம்பிச்சிருக்கும் பத்திரிகை.. பெயர் சூரியக்கதிர்! தன் நியாயத்தை எந்த பத்திரிகையிலும் வெளியிட முடியாத விரக்தியில அவரே இந்த பத்திரிகையை ஆரம்பிச்சிருக்கார்…”

- இந்த விஷயமும் எனக்கு முன்பே தெரியும்..! 'சூரியக்கதிர்' பத்திரிகை தொடர்பான நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஒரு பத்திரிகையாளனாக இருக்கின்றபோது புதிய பத்திரிகைகளைத் துவக்குபவர்கள் யார் என்று அதன் பின்னணியைக் கேட்டுத் தெரிந்து கொள்வது எனது வழக்கம். அப்படி கேட்கும்போதுதான் இந்த நாமக்கல்காரரின் ஜாதகமும் எனக்குக் கிடைத்தது. அந்த நாமக்கல்காரரின் பெயர் டாக்டர் கை.கதிர்வேல்.

தன்னுடைய சொத்துக்கள் முறைகேடாக சுருட்டப்பட்டதை எதிர்த்து மீடியாவில்கூட முறையாக வெளியிடப்பட முடியாத அளவுக்கு நாட்டில் ஜனநாயகம் ஓஹோவென்று இருந்ததைக் கண்டவர், அந்தக் கோபத்தில்தான் தானே ஒரு பத்திரிகை ஆரம்பித்தால் என்ன என்று நினைத்துதான் இந்த 'சூரியக்கதிர்' பத்திரிகையைத் துவக்கியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஒரு முன்னணி அரசியல்வியாதியை பகைத்துக் கொண்டு எவனும் வாழ முடியாது என்கிற யதார்த்தத்தை உணர்ந்து கொண்ட கதிர்வேல், 2 மாதங்களுக்கு முன்பாகத்தான் வேறு வழியில்லாமல் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார்.

அவர் அ.தி.மு.க.வில் இணைந்த பின்பு வெளிவந்த 'சூரியக்கதிர்' பத்திரிகையின் தலையங்கத்தில்தான் தன்னுடைய ஹோட்டல் நேருவின் அடியாட்களால் அடாவடியாகச் சுருட்டப்பட்டது என்கிற விவரத்தையே வெளியிட்டார். இப்போது வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருந்தாலும், அம்மா ஆட்சி வந்திருப்பதாலும் தனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்..!

சம்பவம்-5

இது கோயம்புத்தூர் கதை.

கோயமுத்தூருக்கு வெளியே நண்பருக்குச் சொந்தமான ஒரு இடம் இருந்திருக்கிறது. ஒரு நாள் அந்த இடத்தை கடந்து சென்ற பொழுது நான்கைந்து பேர் அந்த இடத்தில் அளந்து கொண்டிருந்திருக்கிறார்கள். இவரும் வண்டியை நிப்பாட்டிவிட்டு “என்ன  விஷயம்? இங்க என்ன செய்றீங்க?” என்று கேட்டிருக்கிறார். “அண்ணனிடம் பேசுங்கள்… அவர்தான் அளக்கச் சொன்னார்..” என்று சொல்லியிருக்கிறார்கள்.

“அண்ணன்..” என்றால் யாரென்று புரிந்து கொள்ள முடியாத அப்பாவியான இவர், தன்னுடைய சொந்த அண்ணனுக்கு போன் போட்டுக் கேட்டிருக்கிறார். அவர் “நான் அப்படி யாரையும் அனுப்பவில்லை..” என்று சொல்லியிருக்கிறார். அவர்களிடம் இதை சொன்ன பொழுது அவர்களே அழகிரிக்கு போன் போட்டு கொடுத்திருக்கிறார்கள்.. அவர், “தொழிற்சாலை ஒன்று கட்டலாம்னு  இருக்கேன்.. நீங்க நேரில் வாங்க பேசிக்கலாம்..” என்று சொல்லியிருக்கிறார்.

இவரும் மத்திய மந்திரி ஆச்சேன்னு வேகமா மறுநாள் மதுரைக்கு போய் அண்ணனை அவரது வீட்டில் சந்தித்து பேசியிருக்கிறார். வந்தவரை உட்காரச் சொல்லிவிட்டு “அந்த இடத்தை விட்டுவிடுங்கள். அங்கு நான் தொழிற்சாலை கட்டப் போகிறேன்”னு சொல்லிட்டு வீட்டுக்குள் யாரையோ கூட்டியிருக்கிறார். ஒரு பெண் வந்திருக்கிறார்.. அந்த பெண்ணிடம் “நீ பென்ஸ் கார் கேட்டீல்ல.. இந்த அங்கிள்ட்ட கேளு.. வாங்கி கொடுப்பார்..” என்று சொல்லியிருக்கிறார். அந்தப் பெண்ணும், “எனக்கு சி கிளாஸ் பென்ஸ் வேணும் அங்கிள்.. எப்ப வரும்?” என்று கேட்டிருக்கிறார்.. அப்படி சிரித்து மழுப்பிட்டு கோவைக்கு ஓடி வந்து அவரின் சொந்தங்களிடம் பேசியிருக்கிறார், அவர்கள் கையை விரிக்க வேறு வழியில்லாமல் ஒரு குறைந்த தொகைக்கு அந்த இடம் மதுரை அண்ணனின் கைக்கு மாறியிருக்கிறது..

சம்பவம்-6

கோவையில் பழைய ப்ரூக்-பாண்ட், என்டைஸ், அதன் அருகில் இருக்கும் சிதைந்து போன மில் என்று வரிசையாக பேரம் பேசி வாங்கியது தி.மு.க.வின் வருங்காலத் தலைவரின் குடும்பத்தினராம். 

கோவை கொடிசியா அரங்கிற்கு அருகில் உள்ள பிஎஸ்ஜி குழுமத்தினரின் பல ஏக்கர் ட்ரஸ்ட் நிலத்தை கையகப்படுத்தியதும் அவர்கள்தான்.. இடத்தின் உரிமையாளர்கள் விற்பனைக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றவுடன் 20 ஆண்டு காலமாக நான்-ப்ராபிட் வரிச் சலுகை அனுபவித்து வந்த பல நாயுடுகாரர்களின் ட்ரஸ்ட்களை குறி வைத்து இன்கம்டாக்ஸ் பூச்சாண்டி காட்டிதான் பிடுங்கியிருக்கிறார்கள்.. பீளமேடுக்கு அடுத்துள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பை மிரட்டி வாங்க பார்த்து மத்திய மந்திரி தலையிட்ட பின்தான் நிறுத்தினார்கள்.

பல ஆண்டு காலம் யூனியன் தகறாறினால் கோர்டில் முடங்கி கிடந்த ப்ரூக்-பாண்ட் நிலம் திடீரென 2 மாசத்தில் அவுட் - ஆஃப் கோர்ட் செட்டில்மெண்ட்டாகி கைட்-லைன் வேல்யூவில் 10% மட்டுமே கொடுத்து வாங்கியதாக பேச்சு.  

இப்போது கட்டப்பட்டிருக்கும் ப்ரூக்-ஃபீல்ட் மால் கட்டட ஏரியா மட்டுமே சுமார் 6 லட்சம் சதுரடி. அவர் வாங்கிய போது அந்த இடத்து கைட்லைன் வேல்யூ மட்டுமே 2500 ரூ / சதுரடி. இப்போது 5000 ரூ. வரை இருக்கலாம்.

ட்ரஸ்ட் சம்பந்தப்பட்ட சொத்துகள் அனைத்தும் அடாவடியாக தி.மு.க. தலைமைக்கு நெருக்கமானவர்களால் பிடுங்கப்பட்டுள்ளது. சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் அவினாசி ரோடு, திருப்பூர் ரோடு ஆகிய பகுதிகளில் கபளீகரம் செய்யப்பட்டதாக கோவை நண்பர்கள் சொல்கிறார்கள். பீளமேடு ஏர்போர்ட் போகும் வழியில் உள்ள லக்சுரி அப்பார்ட்மெண்ட்ஸும் சுருட்டப்பட்ட இடங்களில் ஒன்றாம்.. இதன் அன்றைய விலையே 50+ கோடி, இப்போது கண்டிப்பாய் 75-80 கோடி இருக்கும்.

சம்பவம்-7

“Thank God the DMK has gone.. I am from salem and i knew two of my fiends has beed abducted by goons of D...MK men and demanded a ransom of 2 lakhs.. Both has paid the same and then they returned them before threatened them of torture if they inform to police.. There are atleast 15 cases pending against one of the secretary. He is not even district level.. ward level, still these people threaten the businessmen and demand money... Undoubtedly the DMK regime has done lot of good things to people, but never ever control the evil elements in the society.. Six murders in a family in salem , and the main accused is the sister's son of the Agriculture minister.. the atrocity has erased all the good work and development work done by the DMK regime.. NO Doubt there is a progress in development work in the state.. unfortunately the development of evil elements has also gone up rapidly and wildly..”

- இப்படி பேஸ்புக்கில் நண்பர் ஒருவர் எழுதியிருந்தார்..!

சம்பவம்-8

சென்னையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் ஒரு மாதத்திற்கு முன்பு கலைஞரின் குடும்பத்துப் பேரன் ஒருவர் பொன்னேரி அருகே 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை ஒரே நாளில் வாங்கினார். பொன்னேரி அருகேயிருந்த ஒரு கல்யாண மண்டபத்தில் காலையில் ஆரம்பித்த பத்திரப் பதிவு, இரவுவரையிலும் நீடித்துள்ளது. பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகளே நேரில் அந்த மண்டபத்துக்கு வந்திருந்து அங்கேயே அனைத்து வேலைகளையும் செய்து நிலங்களைப் பதிவு செய்து கொடுத்துள்ளார்கள். தர மாட்டேன் என்பவர்களை அன்போடு தட்டிக் கொடுத்து, சிலரின் மீது நிலுவையில் இருக்கும் போலீஸ் வழக்குகளைப் பற்றி எடுத்துச் சொல்லி மிரட்டித்தான் பணிய வைத்திருக்கிறார்கள்..!

- இந்தக் கதையை பத்திரிகையில் பணியாற்றும் நண்பரொருவர் நேற்று இரவு என்னிடம் கூறினார்.

நான் முன்பே ஒரு முறை சென்னையில் நடந்த உடன்பிறப்பு ஒருவரின் வீடு அபகரிப்பு பற்றி இந்தப் பதிவில் எழுதியிருந்தேன். படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..!

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி தற்போது திஹார் ஜெயிலில் தவம் கிடக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, எம்.ஆர்.எஃப். டயர் நிறுவனத்துக்காக தனது பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட இடங்களில் அப்பாவி மக்களிடமிருந்து எப்படி சொத்துக்களைப் பறித்தார் என்பது இந்தப் பதிவில் முன்பே எழுதப்பட்டிருந்தது. படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.!

கலைஞர் கருணாநிதி இத்தனை நல்லது செய்தார்.. மக்களுக்காக உழைத்தார்.. அள்ளிக் கொடுத்தார் வள்ளல்தனமாக.. என்பதெல்லாம் இப்போது ஒரு பேச்சே இல்லை.. அவருடைய கட்சிக்காரர்களும், அவர்தம் குடும்பத்தினரும் இந்த நாட்டு மக்களுக்கு இந்த ஐந்தாண்டு காலத்தில் என்ன செய்தார்கள் என்பதைத்தான் ஒரு சிறு துளியாக இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது..!

இன்றும்கூட கட்சிக்காரர்களாலும், தி.மு.க. தலைமையின் குடும்பத்தாராலும் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படையாக புகார் கொடுக்கக்கூட முன் வராமல் இருக்கிறார்கள். இந்தப் புகார்களை எழுப்பியவர்கள்கூட தங்களது பெயர்களை கூற முடியாத நிலைமைதான் இப்போதும் உள்ளது..! நானாக இருந்தாலும் அதைத்தானே செய்வேன். அனைவருக்கும் குடும்பம், குழந்தைகள் இருக்கின்றதே.. குப்புராஜின் குடும்பத்துக்கு நேர்ந்த கதியைப் பார்த்தே பலரும் ஆடிப் போய்விட்டார்கள்..!

சூரியக்கதிர் பத்திரிகையின் நிறுவனரே தான்தான் அந்தப் பாதிக்கப்பட்டவன் என்பதை தேர்தலுக்கு முன்புவரையிலும் வெளிப்படையாகச் சொல்லவே இல்லை. ஒரு பத்திரிகை நடத்துபவரே இப்படி இருக்கும் சூழலில் மற்ற சாதாரண பொதுமக்களை நினைத்துப் பாருங்கள்..!

இந்தத் தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைக்க வேண்டிய மரியாதைதான் கிடைத்திருக்கிறது. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை..! கலைஞரி்ன் வயதும், அவரது அரசியல் அனுபவமும், 20 மணி நேர உழைப்பும் கடைசியில் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமே செலவானது, பலனளித்தது என்பதுதான் அவர் இப்போதுவரையிலும் உணர்ந்து கொள்ளாத கசப்பான உண்மை..!

இனியாவது புரிந்து கொள்ள முயற்சிக்கட்டும்..!

புகைப்படம் உதவிக்கு தோழர் சவுக்கு அவர்களுக்கு நன்றி..!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

15524468-kani-arajathi.jpg?w=640&h=419



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22_05_2011_010_003-ksni-jail.jpg?w=640&h=394

22_05_2011_010_009-kani-in-thihar.jpg?w=640&h=575



-- Edited by devapriyaji on Monday 23rd of May 2011 05:44:30 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21051609-vanjam-mk.jpg?w=640&h=1584



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24_05_2011_001_010-mk-kani.jpg?w=640&h=293



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24_05_2011_004_026-kani-denied-dry-fruits.jpg?w=375&h=635



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24_05_2011_013_027-kani-school-going-kid.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மக்களை திசை திருப்ப ஈழப் பிரச்சினையில் கருணாநிதி போட்ட 'டிராமா'-தயாநிதி மாறன் அம்பலம்!

Karunanidhi's Fast in Marina Beach
Ads by Google
www.flipkart.com 
Huge Selection and Amazing Prices. Free Home Delivery - Above Rs.100
www.flipkart.com
Ads by Google
Chennai Interior Designer  IN.88DB.Com/Chennai/Interior-Decors
Interior Design and Home Decorating Ideas for Every Room in the Home

சென்னை: ஈழத்தில் போரை நிறுத்தக் கோரி திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, மக்களை திசை திருப்புவதற்காக போட்ட நாடகம் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.

விக்கிலீக்ஸிடமிருந்து தி ஹிந்து நாளிதழ் பெற்ற தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் தமிழக மக்களை பல்வேறு பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதற்காக அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியதாக அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தயாநிதி மாறன் பேசுகையில், கூறியதாக பரபரப்புத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

இதுதொடர்பாக தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி:

2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு, அமெரிக்க துணைத் தூதர்ஆண்ட்ரூ சிம்கின் பெயரில் ஒரு கடிதம் போனது. அதில் தயாநிதி மாறனுடன், அமெரிக்க அதிகாரிகள் பேசிய விவரத்தை குறிப்பிட்டுள்ளார். அதில், தயாநிதி மாறன் மற்றும் காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருடன் பேசியதை குறிப்பிட்டுள்ளார் சிம்கின்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தனது கட்சி மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப் போவதாக கருணாநிதி அறிவித்திருப்பது ஒரு நாடகம் என்று தயாநிதி மாறன் அப்போது தெரிவித்தார். மின் வெட்டுப் பிரச்சினை, அதனால் ஏற்பட்டுள்ள மக்களின் கடும் கோபம் ஆகியவற்றிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே கருணாநிதி இவ்வாறு அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செயலுக்கும், தனக்கும் தொடர்பு இல்லை என்பதாக காட்டிக் கொள்ளும் நாடகமே இது. தானும் இதில் பங்கேற்று ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும் அவர் கூறினார். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை விட தமிழக மக்களை பல்வேறு பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் நோக்கமே கருணாநிதியிடம் இருந்தது.

மேலும் கருணாநிதி அரசு இதுவரை எந்த அரசு மீதும் இல்லாத அளவுக்கு மக்கள் மிகவும் கோபமாக இருப்பதாகவும் தயாநிதி மாறன் கூறினார்.

ஆனால் கருணாநிதி நடத்திய நாடகத்தால், திமுகவிடமிருந்து காங்கிரஸ் குறிப்பாக சோனியா காந்தி விலகத் தொடங்கினார். கருணாநிதியின் இந்த செயலுக்கு காங்கிரஸ் சரியான பதிலடியை பொருத்தமான நேரத்தில் கொடுக்கும். அது உறுதி.

பிரபாகரனைக் கொல்லத் துடித்த ராகுல் காந்தி

கருணாநிதியின் மகள் கனிமொழியை சமீபத்தில் சந்திக்க மறுத்தார் சோனியா. இதற்கு திமுக மீதான சோனியா காந்தியின் அதிருப்தி அதிகரித்ததே காரணம்.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்குப் பழி வாங்க வேண்டும், பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக உறுதியாக உள்ளனர் என்றும் தயாநிதி மாறன் கூறியிருந்தார்.

திமுக தோற்கும்-தயாநிதி மாறன்

அதேபோல திமுக மீது ஊழல் கறை படிந்து விட்டது. இதை அகற்றாவிட்டால் திமுக பெரும் சரிவைச் சந்திக்கும் என்றும் அப்போது கூறியுள்ளார் தயாநிதி மாறன்.

இதன் மூலம் சட்டசபைத் தேர்தலில் திமுகவின் தோல்வியை அன்றே கணித்துள்ளார் தயாநிதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்.கைவிட்டால் திமுகவுக்கு வழியில்லை-பீட்டர்

பீ்ட்டர் அல்போன்ஸ் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து தனது எம்.பிக்களை வாபஸ் பெற மாட்டார் கருணாநிதி என்று உறுதிபடக் கூறியிருந்தார். தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக, தான் வலுவாக இருப்பதாக காட்டிக் கொள்ளவே இவ்வாறு அறிவித்தார் (எம்.பிக்கள் ராஜினாமா செய்வதாக) கருணாநிதி. மற்றபடி, அனைத்துக் கட்சிக் கூட்டம், தீர்மானம் என்பதெல்லாம் சப்பைக் கட்டுதான்.

காங்கிரஸுடனும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடனும் இணைந்து இருப்பது ஒன்றுதான் திமுகவுக்கு உள்ள ஒரே வழி என்று கூறியிருந்தார் பீட்டர்.

ஆனால் தாங்கள் ராஜினாமா செய்யப் போவதாக திமுக கூறியது காங்கிரஸ் மேலிடத்தை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியது உண்மை. மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பாதையில் திமுக திரும்புகிறதோ என்று காங்கிரஸ் கருதியது என்று கூறியுள்ளார் பீட்டர்.

'திமுக, காங்கிரஸின் சுய நல உறவு'

இந்த இருவரின் பேச்சுக்களையும் வைத்துப் பார்க்கும்போது இரு கட்சிகளுமே ஒரு சுயநலத்தோடுதான் உறவு வைத்துள்ளன என்பது தெரிய வருகிறது. முதல்வர் பதவியில் நீடிக்க காங்கிரஸின் தயவு கருணாநிதிக்குத் தேவை. அதேபோல ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு டெல்லியில் நீடிக்க கருணாநிதியின் தயவு காங்கிரஸுக்குத் தேவை.

இதன் விளைவாகவே இந்த அரசியல் நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றியிருப்பதாக தெரிகிறது.

  Read:  In English 

கருணாநிதியின் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் போதிய அவகாசம் கொடுத்ததால் தனது நாடகங்களை முடித்துக் கொண்டார் கருணாநிதி என்று அந்த கேபிளில் சிம்கின் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது.

ஈழப் பிரச்சினையை வைத்து கருணாநிதி நாடகமாடினார் என்று தயாநிதி மாறனே அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_05_2011_001_032-sonia-kani1.jpg?w=640&h=597



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21343890v-kani-drama.jpg?w=640&h=405



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_05_2011_006_028-smiling-kani.jpg?w=640&h=388



__________________
« First  <  Page 6  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard