New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Continuing Christian Conversion Tactics


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: Continuing Christian Conversion Frauds.
Permalink  
 


கடத்தல் கும்பலிடம் மீட்கப்பட்ட 5 குழந்தைகளின் பெற்றோர் யார்? கைதான 5 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

aPlus.gif
கடத்தல் கும்பலிடம் மீட்கப்பட்ட    5 குழந்தைகளின்    பெற்றோர் யார்?    கைதான 5 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
சென்னை, ஜூன். 5-
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தனலட்சுமி என்ற பெண் அரசு ஆஸ்பத்திரிகளில் நோட்டமிட்டு குழந்தைகளை கடத்திச் சென்று விற்பனை செய்தது தெரிய வந்தது. இவரிடம் இருந்து சென்னை பெரம்பூரைச் சேர்ந்த கிரிஜா, ராணி ஆகிய 2 பெண்கள் சில ஆயிரம் ரூபாய்க்கு குழந்தைகளை விலைக்கு வாங்கி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து தனலட்சுமி, கிரிஜா, ராணி ஆகிய 3 பேரும் முதலில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், கிரிஜாவின் கணவர் சிவா, பாதிரியார்கள் அல்போன்ஸ் சேவியர், செல்வம் ஆகியோருக்கும் குழந்தை கடத்தலில் தொடர்பு இருப்பது தெரிந்தது. இவர்களும் கைது செய்யப்பட்டனர். புதுவையைச் சேர்ந்த லலிதா என்ற பெண்ணும் சிக்கினார்.
இவர்கள் அனைவரும் தனி நெட்வொர்க் அமைத்து குழந்தை கடத்தலை தொழில்போல செய்து வந்துள்ளனர். இவர்களிடம் இருந்து இதுவரை 8 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
குழந்தை கடத்தல் கும்பலின் பின்னணி குறித்து விரிவாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஏ.ஜி. பாபு உத்தரவின் பேரில் புதுவை மற்றும் சென்னையில் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை கடத்தல் கும்பலின் தலைவியாக செயல்பட்ட கிரிஜா மற்றும் ராணி, தனலட்சுமி, பாதிரியார்கள் அல்போன்ஸ் சேவியர், செல்வம் ஆகிய 5 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடத்தல் கும்பலிடம் இருந்து இதுவரை 8 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 3 குழந்தைகளின் பெற்றோர் மட்டுமே அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பேரிகையை சேர்ந்த ரமேஷ்- ராமக்கா ஆகியோரது 3 வயது பெண்குழந்தை, கிருஷ்ணகிரியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது 3 வயது மகன் தேவா, காவேரி பட்டணம் அருகே உள்ள மலையாண்ட அள்ளியை சேர்ந்த பெருமாள்- ஈஸ்வரி ஆகியோரின் 42 நாள் பெண் குழந்தை ஆகிய 3 குழந்தைகள் மட்டும் ஒப்படைக்கப்பட்டது.
காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த பெருமாள்- ஈஸ்வரி தம்பதிகளின் 3 மாத பெண் குழந்தையும் கடத்தப்பட்டிருந்தது. இக்குழந்தையை மீட்டு போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆனால் பெருமாளும், ஈஸ்வரியும் அந்த குழந்தையை எங்களால் வளர்க்க முடியாது என்று கூறிவிட்டனர். எங்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அக்குழந்தைகளை வளர்ப்பதற்கே நாங்கள் சிரமப்படுகிறோம். எனவே மீட்கப்பட்ட 3 மாத பெண் குழந்தையை தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்க அனுமதி வழங்க வேண்டும் என்று இருவரும் கிருஷ்ணகிரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இக்குழந்தைகள் தவிர மற்ற 5 குழந்தைகளின் பெற்றோர் யார் என்பது தெரியவில்லை. இவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
அதுவரை 5 குழந்தைகளும், வளர்ப்பு பெற்றோரிடம் இருக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி 1/2 வயது கலைப்பிரியா, புதுச்சேரியை சேர்ந்த ஆரோக்கிம்மாவிடமும் பிறந்து 40 நாளே ஆன ரேகாபிரியா கடலூர் மாவட்டம் வரகால்பட்டி பரிமளாவிடமும், விஜய்கிருஷ்ணன் என்ற 2 1/2 வயது குழந்தை புதுச்சேரி அரியாங்குப்பம் அம்சவதியிடமும், 2 1/2 வயது சிவா பண்ருட்டி பாளையம் லதாவிடமும், ஒரு வயது அஜய் சென்னை பெரம்பூர் சங்கீதாவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (7-ந்தேதி) இப்பெற்றோர்கள் வளர்ப்பு குழந்தைகளுடன் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குழந்தை கடத்தல் தொடர்பாக தமிழகம் முழுவதும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே போலீஸ் காவலில் இருந்த கிரிஜா, நேற்று மாலையில் கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீஸ் ஜீப்பில் இருந்து குதித்து வேகமாக கோர்ட்டுக்குள் ஓடிய கிரிஜா, என்னை போட்டோ எடுத்தால், நிர்வாணமாக நிற்பேன் என்று கூறி மிரட்டல் விடுத்தார்.
பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சில ஏட்டுகளுக்கும், எனக்கும் முன்விரோதம் இருந்தது. அவர்கள்தான் என்னை சிக்க வைத்து விட்டனர் என்று புகார் கூறினார்.
இதற்கு பதில் அளித்த நீதிபதி, உங்களது குறைகளை மனுவாக எழுதி வக்கீல் மூலமாக கோர்ட்டில் தாக்கல் செய்யுங்கள் என்று கூறினார். பின்னர் கிரிஜா வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கிருஷ்ணகிரியில் மீட்கப்பட்ட மேலும் 2 குழந்தைகள், வளர்ப்பு பெற்றோர், பெற்றோர் கோர்ட்டில் இன்று ஆஜர்; இருதரப்பிலும் மனுதாக்கல் செய்கிறார்கள்
கிருஷ்ணகிரி, ஜூன். 22-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை கடத்தல் தொடர்பா புதுவையை சேர்ந்த கும்பல் தலைவி லலிதா உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 11 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளது.
இதில் 5 குழந்தைகளின் பெற்றோர் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மற்ற 6 குழந்தைகளின் பெற்றோர் யார்? என தெரியாத நிலை நீடிக்கிறது. இதற்கிடையே கடத்தல் கும்பலிடம் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேலும் 2 ஆண் குழந்தைகள் மீட்கப்பட்டது.
பின்னர் அந்த குழந்தைகளை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மீண்டும் குழந்தைகளையும், அவர்களது பெற்றோர், மற்றும் வளர்ப்பு பெற்றோர் ஆகியோர் இன்று ஆஜர்ஆக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று அவர்கள் ஆஜராகின்றனர்.
வளர்ப்பு பெற்றோர்கள் தாங்களே குழந்தைகளை வளர்த்துக் கொள்கிறோம் என்று மனு தாக்கல் செய்ய உள்ளனர். குழந்தையை பறிகொடுத்த பெற்றோர் குழந்தைகளை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்கிறார்கள்.

நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரே குழந்தைகள் யாரிடம் அனுப்பப்படும் என்று தெரியவரும்.

aPlus.gif


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஆண் குழந்தை ரூ.1 லட்சம்: பெண் குழந்தை ரூ.20 ஆயிரத்துக்கும் விற்ற கும்பல்: திடுக்கிடும் தகவல்

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட முக்கிய புள்ளியான சென்னை கிரிஜா உள்ளிட்ட 7 பேரிடம் இருந்து இதுவரை 8 குழந்தைகளை போலீசார் மீட்டுள்ளனர். ஆண் குழந்தைகளை ரூ. 1 லட்சத்துக்கம், பெண் குழந்தைகளை ரூ. 20 ஆயிரத்துக்கும் விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது. 

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சிகிச்சை பெவிற்பனை செய்துள்ளனர்.


 

சென்னை பெரம்பூரில் 2 குழந்தைகளும், பாண்டிச்சேரியில் 3 குழந்தைகளும், பண்ருட்டியில் 2 குழந்தைகளும், செஞ்சியில் ஒரு குழந்தையும் விற்கப்பட்டுள்ளது. இதில் 5 ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகளும் அடங்கும்.

ஆண் குழந்தைகளை ரூ. 1 லட்சத்துக்கம், பெண் குழந்தைகளை ரூ. 20 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது. குழந்தை கடத்தலில் ஈடுபட்ட முக்கிய புள்ளியனா சென்னை கிரிஜா உள்ளிட்ட 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

கிரிஜா காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் அவர் கிருஷ்ணகிரி நீதிமன்றதில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். குழந்தை கடத்தலில் மேலும் பெரிய கும்பல் இருப்பதாக போலீசார் சந்தேகம் அடைந்து உள்ளனர். இதனால் கிருஷ்ணகிரி தனலெட்சுமியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இராம.கி. போன்றோர், கா.சு.பிள்ளை , மறைமலை அடிகள் பாவணர் போலே தன்னுடைய கருத்தை பல தவறான வழிகளில் ஆய்வு என்ற பெயரில் எழுதி வருகிறார். தமிழக பிராமணர்களை மற்ற தமிழர்கள் வெறுக்க வேண்டும் என இது தொடர்கிறது.

இம்முயற்சி பற்றி கம்யூனிச அறிஞர்கள் நூல் கூறுவது.

தமிழகத்தின் அண்மைக் கால வரலாற்றில் பிராமணர்- பிராமணர் அல்லாதார் இயக்கத்திற்குப் பெரும் பங்கு உண்டு. இதன் தொடக்கத்தைச் சோழர் காலம் தொட்டு காணுதல் கூடும். அக்காலத்தில் பிராமணர்களைப் போன்றே வேளாளர்களும் சமுதாயத்தின் மேல்தட்டில், சாதி ஏணிப்படியில் மேல் இடத்தைப் பெற்று இருந்தனர். 

பிரமதேயம் எனப்படும் நிலங்கள் எவ்வாறு பிராமணர்களுக்கு நிவந்தங்கள் அளிக்கப் பட்டனவோ அவ்வாறே வேளாளர்களுக்கு வெள்ளான் வகை நிலங்கள் மன்னர்களால் அளிக்கப் பட்டன. இது இவ்விரு வகுப்பினரின் மேலாண்மையைக் காட்டுகிறது. இத்தகைய சமூக, பொருளாதார நிலை இவ்விரு சமூகத்தின் இடையே கலாச்சாரப் போட்டியையும் கருத்துப் போராட்டத்தையும் உருவாக்கியது. தத்துவத்துறையிலும் இப்போராட்டம் வெளியாயிற்று. நிலவ்ய்டமை முறைவலுப் பெற்றுவிட்ட பிற்காலத்தில் சைவ நூல்களும் அதனடியாக சைவசித்தாந்தம் தோன்ற்லாயின. 

பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் தத்துவ விசாரணை என்பது பிராமணரின் ஏகபோகமாகத் திகழ்ந்தபோது தமிழகத்தில் வேளாளர்களும் தத்துவ விசாரணையில் ஈடுபட்டனர். அதன் விளைவாகவே தமிழில் சைவசித்தாந்தம் உருவாக்கப் பட்டது. 

ஆங்கிலேயர் வருகைக்குப் பின் இவ்விரு வகுப்பினரிடையே முரண்பாடு மேலும் முற்றியது. அறிவு ஜீவிகளான இம்மேல்தட்டு வகுப்பினரிடையே ஆங்கிலேய அரசுப் பதவிகளில் அமர்வதில் கடும் போட்டி ஏற்பட்டது. இம் முரண்பாடு பிராமணர் எதிர்ப்பௌ இயக்கமாக உருவெடுத்தது, நீதிக்கட்சியில் சங்கமம் அயிற்று. பின்னர் ஆரிய-திராவிட இனப் பாகுபாடாகப் பரிணாமம் பெற்றது. 

இவ்வியக்கத்தின் கொள்கைகளை கலாச்சார, சமய மட்டத்தில் பிரச்சார்ம் செய்யும் பணியில் பல பிராமணர் அல்லாத அறிஞர்கள்- குறிப்பாக வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். அவர்களில் கா.சு.பிள்ளை, மறைமலை அடிகள், சிவராச பிள்ளை போன்றோர் தத்துவத் துறைகளில் பிராமண ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கோடு தமது ஆய்வுகளை இவர்கள் நடத்தினர். 

ஆனால் சைவ சமய குரவர்களாகிய அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் வாசகர் ஆகியோரின் தேவாரம், திருவாசகம் ஆகிய நூல்களில் வேதங்களையும் அந்தணர்களையும் போற்றியிருந்தும், நெடுங்காலாமாகவே அவ்வேதங்களே, தத்துவங்களின் மூல நூல்கள் எனக் கருதப் பட்டு வரும் மரபும் இவ்வறிஞர்களது பணிக்கு இடைஞ்சல் ஆயிற்று. 
" வேறு விதமாக சொல்வதானால் ரிக், யஜுர், ஸாமம், அதர்வணம் அகிய நான்கு வேதங்களும் ஆரியர்களின் படைப்புகளே என்ற உண்மையும், பிராமண்ர்களே காப்பாளர்கள் என்ற யதார்த நிலையும் அவர்களது நோக்கிற்கு இடையுறாக வந்தது. 

இந்த இடையூறை கடக்க முன்பு எப்போதும் இல்லாத புது கொள்கைகளை நீதிக்கட்சியின் கருத்துக்காவலர்களாகிய இந்த அறிஞர்கள் (கா.சு.பிள்ளை, மறைமலைஅடிகள், சிவராசபிள்ளை) உருவாக்கினர். அதாவது வேதங்கள் என்றும் மறை நூல்கள் என்றும், சைவ குரவர்களால் குறிப்பிடப்படுபவை வடமொழி வேதங்கள் அல்லவென்றும், வடமொழி வேதங்கள் தோன்றுவதற்கு முன்பே தமிழில் வேதங்கள் தோன்றி விட்டன என்றும் அவற்றை கண்ட வடமொழியார், தெளிவாக சொல்வதானால் பிராமணர்கள் அவற்றை வடமொழியில் பெயர்த்துக் கொண்டார்கள் என்றும் கூறத் தலைப் பட்டனர். அவ்வாறாயின் அத்தமிழ் வேதங்கள் இன்று உள்ளனவா என்ற வினாவிற்கு அவை கடல்கோளால் அழிந்துபோயின என்றும் அவர்கள் கூறினர். எக்கூற்றுக்கள் முற்றிலும் வரலாற்று விரோதமானவை; விஞ்ஞானபூர்வ மற்றவை என அறிஞர்களால் தள்ளப் பட்டன, என்றாலும், அவற்றின் தாக்கம் இன்று வரை தமிழக மக்களிடையே நீடித்திருக்கிறது எனின் மிகையாகாது. – பக் 52-53; ஆய்வு வட்டக் கட்டுரைகள்.;வெ.கிருஷ்ணமூர்த்?ி 


தமிழில் எழுதப்பட்ட வேதங்கள் அல்லது நான்மறை நூல் (ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் தமிழ் மூல நூல்கள்) கடல் கோளில் அழிந்து போயின என்றாலும் அவற்றின் பெயர்கள் முறையே தைத்திரீயம்; பௌடிகம்,தலவகரம்; அதர்வணம் ஆகும் என கா.சு.பிள்ளை, தனது நூல்களில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நான்மறைகள் எவை என விளக்கத் “திரு நான்மறை விளக்கம்” என்ற நூலையே கா.சு.பிள்ளை எழுதியிருக்கிறார். தமது கூற்றை நிருபிக்க தொல்காப்பியத்தில் பாயிர உரையில் நச்சினார்க்கினியர் கூறியுள்ள விளக்கத்தை ஆதாரமாகக் காட்டுகிறார். 

இது குறித்து “கா.சு. பிள்ளையின் ஆய்வுமுறை” என்ற எனது கட்டுரையில் ஏற்கனவே நான் ஆராய்ந்துள்ளேன். இக்கட்டுரையில் தமிழ் வேதங்கள் எனக் 
கா.சு. பிள்ளையால் குறிப்பிடப்பட்டுள்ள பவுடிகம் தைத்திரீயம்; தலவகரம் ஆகியவை யாவை என்றும் இவைகள் உண்மையில் தமிழ்வேதங்கள் தானா என்றும் ஆராய்வோம்.( இப்பெயர்களே தமிழ்ச் சொற்கள்தானா என்பது வேறு விஷயம்). 

Finally Concludes- எல்லாவற்றிற்கும் மேலாக தமிழில் நான்கு வேதங்கள் வடமொழி வேதங்களுக்கு முன்னரே இருந்தன எண்றும் அவை முறையே பவுடிகம், தலவாகரம், தைத்ரேயம் மற்றும் அதர்வணம் எண்றும் கா.சு.பிள்ளை போன்ற தமிழ் வேத ஆர்வாளர்கள் கூற்று அர்த்தமற்றது எனவும் துணியலாம். THIS ARTICLE COMES IN Page 51-65. 

Comments on this book
வெ.கிருஷ்ணமூர்த்தி அவர்களை தொகுப்பாசிரியராகக் கொண்டு "ஆய்வு வட்டக் கட்டுரைகள் "என்ற வரலாற்று நூல் தமிழ் சமுதாயத்தின் நமது சமகாலப் பிரச்சினைகள் சிலவற்றின் மீதான வரலாற்று தேடலை நடத்தியிருக்கிறது. 
பேராசிரியர் நா.வா.வின் நேரடி வாரிசாக மார்க்ஸீய முகாமின் இன்றைய போராளியாக வெ.கி. வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகள் அவரை அடையாளம் காட்டுகின்றன. 
நூலின் முதல் பகுதியில் அடங்கியுள்ள ஏழு கட்டுரைகளும் ஏதாவது ஒரு வகயில் நமது காலத்து சமூக பிரச்சினைகள் மீதான ஆய்வை நடத்துகின்றன. 
மார்க்சிய முகாமில் இருந்து வளமான வரலாற்று ஆய்வு தமிழகத்துக்கு அளிக்கப் பட்டு இருக்கிறது. - ஜனசக்தி 23-7-1995Marxist magazine 

வெ.கிருஷ்ணமூர்த்தி அவர்களை தொகுப்பாசிரியராகக் கொண்டு ஆய்வு வட்டக் கட்டுரைகள் என்னும் நூல் வெளி வந்து ஆய்வாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 
தகிக்கும் சமகாலப் பிரச்சினைகளை மிகுந்த தரியத்துடன் இந்தப் பகுதிகளில் உள்ள கட்டுரைகள் விவாதிக்கின்றன. 
தோழர் வெ.கியுடன் ஒருங்கிணைந்து செயல்படும் ஆய்வு வட்டம் மேலும் பல முயற்சிகளை செய்து, தமிழின ஆய்வுத்துறை வளர்ச்சிக்கு உதவது காலத்தின் நிர்பந்தமாகும். – தாமரை ஜூன் 95. cpi magazine 
ஆய்வு வட்டக் கட்டுரைகள் நூலின் தொகுப்பாசிரியர் வெ.கிருஷ்ணமூர்த்தி பேராசிரியர் நா.வானமாமலையின் மாணவர்களில் ஒருவர்.... . இன்னூல் உள்ளடக்க ஆராய்ச்சி நூலாக திகழ்கிறது.. 
மொத்தத்தில் இத்தொகுப்பு பாரட்டப் பட வேண்டிய ஒன்றாகும். – தினமணி கதிர். 
The Book under Review is a collection of different types of articles most of which are presented by the active members of the Madras Study circle and hence the Title.... 
On the whole, the book is a good anthology of research papers providing fresh thoughts and new perspective. The Hindu, Aug-1, 1995. 
The book also has தோழர்.செ.யோகநாதன், who is from Srilanka who had several awards in Lanka and having won 3 prizes in Tamilnadu for his Tamil Literary works in his அணிந்துரை: 
தமிழ் மொழி பண்பாடு, வரலாறு மற்றும் பிற துறைகள் பற்றி ஆய்வு நெறியற்ற கத்தைகத்தையான புத்தகங்களும், கட்டுரைகளும் நிறைய வெளியாகியுள்ளன என்பதைக் குறிப்பிடுவதில் தவறு ஒன்றுமில்லை.... . 
இவற்றை மீறி எழுந்த நியாயமும் உண்மையும் ஆய்வு மனோபாவமும் கொண்ட குரல்களை ஒடுக்குவதில் மிக இழிந்த போக்குகள் கையாளப்பட்டு வந்திருக்கின்றன. ஆனாலும் இந்த மீறற்குரல்களே தமிழையும் தழிழியலையும் எல்லாத் துறைகளையும் ஆரோக்கியமாக வளர்ப்பதில் பெரும் பங்காற்றியுள்ளன. இன்றும் அவ்வழியைஅத் தொடர்கின்றன. 
தமிழ் ஆய்வை ஒரு திருவிழாவாகவும் ஆதாரம் ஏதுமற்ற ஆய்வுகளின் புகழ் பாடலாகவும் மாற்றிய காரணத்தால் நமது முன்னேற்றம் எப்போதோ முடமாக்கப்பட்டு விட்டது. இதே வேளையில் வேற்று மொழி பேசும் அறிஞர்கள் தமிழ் கற்று, அதன் பல்வேறு துறைகளையும் ஆய்வு செய்யும் போக்கும் உருவாயிற்று. சர்வதேச அள்விலான ஆய்வுநெறிகள் இவ்விதம் தமிழ் ஆய்வாளர்களில் வெகுசிலரையும் கவர்ந்து கொண்டது. 
ஆய்வுநெறியின் ஆதாரமே விஞ்ஞான பூர்வமானது. எவ்விதம் விஞ்ஞானம் உண்மையை ஆதாரபூர்வமாக ஆய்ந்து நிருபிக்கிறதோ, அப்படியே செம்மையான ஆய்வு நெறியும் உண்மையைத் தேடி அதை உறிதிப் படுத்துகிறது; நிறுவிகிறது. 
உணர்ச்சி வசப்பட்டு வழிபாட்டு மனோபாவத்துடன் ஆய்வுத்துறையில் நின்றவர்கள், விஞ்னான அடிப்படையில் செம்மையுற ஆய்வு செய்தவர்களை, எவ்விதம் புறந்தள்ளி தடைகளை உண்டாக்கி, இருட்டடிப்புகள் செய்தனர் என்பது இன்னமும் பூரணமாக வெளிவராத வரலாறு. 

செம்மையான, கற்றுத்தேறிய இத்தகைய ஆய்வாளர்களுக்கு எதிராக இன்றளவும்-மேலே காட்டிய வெற்றுத்தனங்கள் உடையோர் கடுமையான இடையூறுகளை விளைவித்து வருகிறார்கள். இதனாலேயே தமிழும் தமிழியலும் பிற துறைகளும் முன்னேற முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன. பக்கம்-ii,iii


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பேராசிரியர். இரா.மதிவாணன் இராம.கி. போன்றோர் சொல் ஆராய்ச்சி என்ற பெயரில் அ=ஆ=இ=ஈ= ஔ=ன என்ற வகையில் எழுதி வருகின்றனர்.

உதாரணமாக "ச" எழுத்தில் தமிழ் சொல் வாராது என்பது தொல்காப்பியர் இலக்கணம். ஆனால் தேவைப்படும் பொழுது விதிகளை மாறுவர். 

நீங்கள் ஒரே நாளில் பல தலைப்பில் இராம.கி. கட்டுரை கொடுத்துள்ளீர். ஆனால் எல்லாமே அடிப்படை பிராமண எதிர்ப்பு- மக்கள் பிராமண வேறுப்பு தொடர வேண்டும் என்பதெ.

பாவணர் கருத்தை இங்கு தருகிறேன்.

நால்வேதம் அல்லது நால்மறை, ஆரங்கம் ஆகமம் என்பன எல்லாம் ஆரிய நூல்களே என்பதும், திருக்குறள் தவிர இப்போதுள்ள பண்டை நூல்களெல்லாம் அந்தணர் என்பதும் பிரமணரையே குறிக்கும் என்பது சரியே. 
பக்க- 102 தமிழர் மதம்.தேவநேயன்.

இதில் பாவணர் திருக்குறள் தவிர என்பதும் உளரலெ


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கிறுஸ்துவம் வீழ்த்திய தமிழ் -திராவிட உணர்வு

2008112457530101.jpg


http://img.dinamalar.com/data/images_news/tblArasiyalnews_17290461064.jpgSee full size image


stthomas_kalaignar.jpg

தமிழின் வேர் உலக மொழிகளில் படர்ந்துள்ளது : அமைச்சர் அன்பழகன் பேச்சு
ஆகஸ்ட் 13,2009,00:00  IST

Latest indian and world political news information

சென்னை: “”உலக செம்மொழிகளில் ஒன்றான தமிழின் வேர்களும், விழுதுகளும் உலக மொழிகள் பலவற்றில் படர்ந்துள்ளன,” என நிதியமைச்சர் அன்பழகன் பேசினார்.ஆசியவியல் கல்வி மையத்தின் சார்பில், கொரிய மொழி, இலக்கியம் தொடர்பாக மூன்று நாள் பயிற்சி முகாம், சென்னையில் நேற்று துவங்கியது. மிசோரம் மாநில முன்னாள் கவர்னர் பத்மநாபன் தலைமையில் நடந்த விழாவில், நிதியமைச்சர் அன்பழகன் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:உலக செம்மொழிகளில் ஒன்றான தமிழின் வேர்களும், விழுதுகளும் உலக மொழிகள் பலவற்றில் படர்ந்துள்ளன. கிரேக்கம், எபிரேயம், அராமைக், ஏலாமைட், அராபிக் பர்சியன் போன்ற ஆசிய மொழிகளில், தமிழின் தாக்கம் பற்றிய ஆய்வு முடிவுகள், தகுந்த சான்றுகளுடன் நிரூபிக்கப்பட்டு வருகின்றன.

திராவிடத்தின் தொன்மைக்கு சான்றாக உள்ள தமிழ், இன்றும் அதன் அடிப்படைக் கூறுகளை, சிறப்புகளை இழக்காமல் தொடர்வதும், பேச்சு வழக்கில் நிலவுவதும் அதன் மேன்மைக்கு சான்று. செந்தமிழ் என அழைக்கப்படுவதிலிருந்தே, அது செம்மொழி தகுதியுடையதாக வளர்க்கப்பட வேண்டும் என்ற தமிழ்ப் புலவர்களின் ஆர்வம் தெரிகிறது.

வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, தரப்படுத்தப்பட்ட இலக்கண மரபிலும், இலக்கிய கோட்பாடுகளிலும் பிற பண்பாட்டுத் தாக்கங்களின் ஊடுருவலை, முடிந்த அளவு தமிழ்ப் புலவர்கள் தவிர்த்தது, தமிழை தொடக்க காலம் முதல் செம்மொழியாகத் திட்டமிட்டு வளர்க்க முயன்றதற்குச் சான்று.

தமிழின் சீரிய ஒலியமைப்பு, சொல்லமைப்பு, தொடரமைப்பு, செவ்வியல் தன்மைக்கு எடுத்துக்காட்டாக அமைகின்றன. அறிவியல்பூர்வமாக அமைக்கப்பட்ட இந்த இலக்கண வரைமுறைகள், இன்றைய மொழியியல் வல்லுனர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. அல்டாயிக் குடும்ப மொழிகளில் ஒன்றான கொரிய மொழிக்கும், தமிழுக்குமான உறவு வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது.சென்னையில் 100க்கும் மேற்பட்ட பெரிய, சிறு கொரிய தொழில் நிறுவனங்கள் உள்ளன; பல கொரிய குடும்பங்களும் வசிக்கின்றன. தமிழர்களுக்கு கொரிய மொழியின் வரலாற்றுப் பின்னணி, அம்மொழியுடன் தமிழ் பின்னிப் பிணைந்துள்ள நிலை, கொரிய பண்பாட்டுப் பெருமை, கலைத் துறை சாதனைகளைத் தெரிந்து கொள்ளவும், கொரிய தமிழ் இந்தியா உறவு, கொரிய தமிழ்நாடு தொடர்பு வளரவும் இப்பயிற்சி முகாம் உதவும். இவ்வாறு அன்பழகன் பேசினார்.

மிசோரம் முன்னாள் கவர்னர் பத்மநாபன் பேசுகையில், “”உலகளவில் மற்ற நாகரிகங்களில் உள்ள சிறந்த விஷயங்களை எடுத்துக் கொண்டதால், இந்திய கலாசாரம் பிரபலமடைந்துள்ளது. உலகளவில் கலவரங்கள், சண்டைகள், அச்சங்கள் அதிகரித்து வருகின்றன. 21ம் நூற்றாண்டு, சவால்களும், வாய்ப்புகளும் நிறைந்தது. மனித நாகரிகம் வளர சர்வதேச அளவில் நாடுகள் இடையேயான உறவுகள் மேம்பட வேண்டும்,” என்றார்.

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மோகன் பேசுகையில், “”மற்ற நாடுகளை விட கொரியா, போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. கொரிய கலாசாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, கொரிய மையம் மேலும் பல்வேறு பணிகளில் ஈடுபட வேண்டும்; அதிகளவில் கொரிய கலை, இலக்கியம், மொழி கண்காட்சிகளை நடத்த வேண்டும். உலகளவில் மற்ற மொழிகளை விட, ஆங்கிலத்தை விட தமிழ் சிறந்தது,” என்றார்.

வரவேற்புரையாற்றிய ஆசியவியல் கல்வி மையத்தின் இயக்குனர் ஜான் சாமுவேல், “”அறிவியல், தொழில் நுட்ப புரட்சி காலத்தில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல் பொருட்களுக்கு கொரியா பிரபலமாகப் பேசப்படுகிறது. இப்பயிற்சி முகாம், கொரியா கலை, இலக்கியம், மொழி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த நடத்தப்படுகிறது,” என்றார்.டில்லி பல்கலைக் கழக கொரிய மொழிப்புலத் தலைவர் கிம் டோ யங், “இன்கோ’ மைய இயக்குனர் ரதி ஜாபர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

செபாஸ்டியன்-தெய்வநாயகம்-எஸ்ரா

//கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧-73

வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர்.பக்௧31

தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்

http://jeyamohan.in/?p=600

இது ஒரு தனிநபரின் ஆய்வோ, அல்லது சிறு குழுவின் கருத்துக்களோ அல்ல. இதற்கு தமிழகத்தின் செல்வாக்குள்ள எல்லா கிறித்தவ சபைகளும் வெளிப்படையான ஆதரவை தெரிவித்திருக்கின்றன என்பதைக் கண்டோம். சென்ற பத்து வருடங்களில் இக்கருத்தை பிரச்சாரம்செய்யும் ஏராளமான ஆங்கில தமிழ் நூல்கள் வெளியாகியிருக்கின்றன. பலநூறு துண்டுப்பிரசுரங்கள் வெளியாகி கிறித்தவ ஆலயங்களில் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. தமிழகக் கிறித்தவர்களில் உயர்கல்வி கற்றவர்கள் பழந்தமிழ் ஆய்வுசெய்தவர்கள் உட்பட பெரும்பாலானவர்கள் இந்தக் கோட்பாட்டை ஒரு நிரூபிக்கப்பட்ட வரலாற்று உண்மை என்றே எண்ணுகிறார்கள். உதாரணமாக குமரிமாட்டத்தின் பிரபல அறிவுஜீவியும் நவின இலக்கிய வாசகருமான பேராசிரியர் ஜேம்ஸ் ஆர் டேனியல் இக்கருத்தை ஒரு நூலில் வழிமொழிகிறார்! கிறித்தவப் பள்ளிகளில் இந்த வரலாற்றை அதிகாரபூர்வமற்ற வகையில் சொல்லியும் கொடுக்கிறார்கள்.

இந்த நூல்களை முழுக்க எனக்கு திரட்டி அளித்தவர் தக்கலையைச் சேர்ந்த லுத்தரன் சபையைச் சேர்ந்த கிறித்தவ ஊழியர் ஒருவர். நான் இவற்றைப் படித்தால் என்னுடைய வரலாற்றுப் பார்வையே மாறிவிடும் என்று சொன்னார். ஆனால் நான் படிக்க மாட்டேன் என்று சவால் விட்டார். படிப்பேன் என்று அவருக்கு உறுதி அளித்தேன். அவர் எனக்கு அளித்த பிற நூல்கள் இவை:

1. India is a Christian Nation- By. M.Sunder Yesuvadian [a] M.S.Mankad. [ Published by Anaryan Publications , Indian Anarya Samaj Trust, 16A, Chidambara Nathan Street, Ramavarma puram. Nagercoil 629001] இந்நூலுக்கும் முக்கியமான எல்லா கிறித்தவ திருச்சபை தலைவர்களும் முழுமையான ஆசியுரை வழங்கியிருக்கிறார்கள்.

2. Hindu Religion is the offshoot of St.ThomaS Dravidian Christianity- By Dr.Devakala [ Meypporul Publications 278, Konnur High Road,ayanapuram Chennai 600023]

3.Love Hindus. By M.Christopher MA LLB, Beniah Kallukatti, Kuzhithurai K K dist Tamilnadu 629163

4 தமிழர் சமயத்தை விடுவிக்கப்போவது யார்? பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம் எம் ஏ.பி எச் டி [மெய்ப்பொருள் அச்சகம், 278, கொன்னூர் கைரோடு, அயனாவரம் சென்னை 600023 ]

மற்றும் பத்து துண்டுபிரசுரங்கள். பெரும்பாலும் ஒரே ஆதாரங்கள் ஒரே வரிகளினால் ஆனவை இவை. இந்நூல்களின் பின்னட்டைகளில் ஏராளமான பிற நூல்களைப்பற்றிய தகவல்கள் உள்ளன.
***
பேராசிரியர் ஜேசுதாசன் இந்தக் கருத்தமைவின் முக்கியமான தொடக்கப்புள்ளி. எஸ்.வையாபுரிப்பிள்ளை வழிவந்தவரான ஜேசுதாசனுக்கு பைபிளிலும் கம்பராமாயணத்திலும் இணையான ஈடுபாடு உண்டு. தமிழிலக்கியம் சார்ந்த வையாபுரிப்பிள்ளையின் காலக்கணக்குகளை பெரிதும் ஏற்றுக் கொண்டவர் அவர்.பேராசிரியர் தமிழிலக்கிய வரலாறு ஒன்றை ஆரம்பகாலத்தில் எழுதினார். பின்னர் அவரது முதியவயதில் அவரது உதவியுடன் ஹெப்ஸிபா ஜேசுதாசன் அந்த தமிழிலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் மூன்றுபாகங்களாக விரிவாக எழுதினார்.

அந்த தமிழிலக்கிய வரலாற்றின் பெயர் ‘Count Down From Solomon’ அந்நூலின் தலைப்¨ப்பபற்றிச் சொல்லும்போது தமிழிலக்கியம் பற்றிய ஆகப்பழைய குறிப்பு சாலமோனின் பாடல்களில் வருகிறது என்பதனால் அந்த தலைப்பை வைத்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.பேராசிரியரின் நூலில் தாமஸ் இந்தியாவுக்கு வந்ததாகச் சொல்லப்படும் நம்பிக்கையை ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். அத்துடன் தமிழின் சிறந்த இலக்கியங்களில், குறிப்பாக திருக்குறளிலும் ஆழ்வார்பாடல்களிலும் உள்ள அறம் அன்பு பற்றிய தரிசனங்கள் கிறித்தவ விழுமியங்களுடன் ஒத்திசைந்து போகின்றன என்று சொல்லியிருக்கிறார். இது அவருடைய நோக்கில் இலக்கியத்தின் உச்சங்கள் இயல்பாகவே உயரிய மானுடவிழுமியங்களைச் சார்ந்து இருக்கும் என்பதன் வெளிப்பாடே.

இந்நூல்களை பேராசிரியர் ஜி.ஜான் சாமுவெல் வெளியிட்டார். அவர் அப்போது சென்னை ஆசியவியல் நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்தார். கடைசிக்காலத்தில் ஹெப்சிபா ஜேசுதாசன் இந்தியாவில் சிந்தனைகளை கிறித்தவம்தான் கொண்டு வந்தது என்று வாதிட ஆரம்பித்தார். அன்பு, பண்பு, அறம் போன்ற விழுமியங்கள் தமிழிலக்கியத்தில் உள்ளன , அவை சாத்தானால் ஆட்சி செய்யப்பட்ட தமிழ்நாட்டு பழங்குடி மனதில் உருவாக வாய்ப்பில்லை என்பது அவரது தர்க்க முறை.

ஜான்சாமுவேல் இங்கிருந்து ஆரம்பிக்கிறார். 2003ல் ‘தமிழகம் வந்த தூய தோமா’ என்ற நூலை அவர் எழுதினார். இந்தியச் சிந்தனைகள் அனைத்துமே தமிழகம் வந்த தோமஸால் உருவாக்கப்பட்ட¨வையே என்று அதில் வாதிடுகிறார். [ ஹோம் லேண்ட் பதிப்பகம். 23, திருமலைநகர் இணைப்பு, பெருங்குடி,சென்னை 600096 ]

இந்த கருத்தை ஜான்சாமுவேல் மற்றும் தெய்வநாயகம் இருவரும் வெற்றிகரமாக அமெரிக்க இவாஞ்சலிஸ்டுகளுக்கு கொடுத்து ஏற்கச்செய்தனர். பொதுவாகவே மதப்பரப்புதலுக்கு உள்ளாக்கப்படும் நாடுகளின் வரலாற்றை முழுமையாக மாற்றி எழுதுவது கிறித்தவ மரபு. அந்த மாற்றப்பட்ட வரலாற்றை அம்மக்களை ஏற்கசெய்யும்போதுதான் மதமாற்றம் நிரந்தரமாகும் என்று எண்ணுகிறார்கள்..

ஜான்சாமுவேல்-தெய்வநாயகம் உருவாக்கிய இந்த வரலாற்று உருவகம் இவ்விரு அம்சங்களையும் தெளிவாகவே கொண்டிருப்பதைக் காணலாம். தமிழகத்தில் திராவிட இயக்கம் ஆரிய வெறுப்பை கால்டுவெல்லில் இருந்து கண்டெடுத்து முன்வைத்தது. அது தமிழகத்தில் புதிதல்ல என்றாலும் இந்நூல்களில் காணப்படும் அப்பட்டமான உக்கிரமான வெறுப்பு பீதியூட்டுகிறது. ஆரியர்களையும் பிராமணர்களையும் கிட்டத்தட்ட  ரத்தவெறிகொண்ட பேய்களைப்போல சித்தரிக்கின்றன இந்த நூல்கள். இரண்டாவதாக இந்தியாவில் உள்ள அனைத்துச் சிந்தனைகளையும் கிறித்தவமே கொண்டுவந்தது என்று வாதிடுகின்றன.

ஆகவே இந்தக் கருதுகோள் ஏற்கப்பட்டது. பெரும் நிதியுதவியுடன்  ‘இந்தியாவில் ஆதி கிறித்தவம்’ என்ற தலைப்பில் முதல் சர்வதேச கருத்தரங்கு ஜான்சாமுவேலை முதன்மை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தெய்வநாயகம் மற்றும் தேவகலா ஆகியோர் முக்கியப்பங்காற்ற  2005 ல் நியூயார்க் நகரில் நடத்தப்பட்டது. நியூயார்க்கில் மதப்பரப்பு நிறுவனம் ஒன்றின் தலைவரான டாக்டர் சுந்தர் தேவப்பிரசாத் அதற்கான அமெரிக்க தொடர்பாளர்

கருத்தரங்க மலரில் ஆர்ச் பிஷப் ஆ·ப் காண்டர்பரியின் வாழ்த்துச்செய்தி உள்ளது. செனெட்டர் ஹிலாரி கிளிண்டனின் வாழ்த்துச்செய்தி, ஹெலென் மார்ஷல், பரோ ஆ·ப் குயீன்ஸ் நியூயார்க் அவர்களின் வாழ்த்துச்செய்தி, நியூயார்க் மேயரின் வாழ்த்துச்செய்தி, கவர்னர் ஜார்ஜ் படாகியின் வாழ்த்துச்செய்தி ஆகியவை உள்ளன.ஹிலாரி கிளிண்டன் நேரில்வந்து பங்கெடுத்தார். வழக்கம்போல இந்தியாவின் முக்கியமான எல்லா கிறித்தவ திருச்சபையில் இருந்தும் வாழ்த்துச்செய்திகள் உள்ளன. மலபார் சர்ச்சின் ஆர்ச் பிஷப், சிரியன் மலங்கர திருச்சபை ஆர்ச் பிஷப்,சி.எஸ்.ஐ பேராயத்தின் ஆயரின் வாழ்த்துச்செய்தி போன்றவை உள்ளன

அத்துடன் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் வாழ்த்துச்செய்தியும் உள்ளது. தமிழக கிறித்தவத்தின் இருபது நூற்றாண்டுப்பழமையில் பெருமைகொள்வதாக சொல்லும் முதல்வர் அது ஒரு மிக அறிவார்ந்த நிகழ்வாக இருக்கும் என்று வாழ்த்துகிறார்.

மாநாட்டின் நோக்கம் முதலிலேயே ஜான் சாமுவேலால் தெளிவுறச் சொல்லப்பட்டுவிடுகிறது. தாமஸ்கிறித்தவமே இந்துமதம் என்றும் அதை ஆரியபிராமணர் அழித்தார்கள் என்பதும்தான் அது. தாமஸ் பற்றிய ஒரு துதியுடன் மலர் ஆரம்பிக்கிறது. குடுமி வைத்து பூணூல் போட்டு அரைநிர்வாணமாக தோன்றும் கொடூரமான ஒரு பிராமணன் காவி உடை அணிந்து முழந்தாளிட்டு ஜெபம்செய்யும் தாமஸை  பின்னாலிருந்து ஈட்டியால் குத்திக்கொல்லும் வண்ணச்¢த்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் சைவசித்தாந்தம் இந்துமதம் போன்ற தலைப்புகளில் மீண்டும் மீண்டும் தெய்வநயகமும் தேவகலாவும் கட்டுரைகள் சமர்ப்ப்பித்திருப்பதைக் காணலாம். அத்துடன் பெரும்பாலான கட்டுரைகள் ஒரே குழுவினரால் உருவாக்கப்பட்டவைபோல ஒரேவகையான திரிப்புகள் ஒரேவகையான சொற்றொடர்கள் மையக்கருத்துக்களுடன் காணப்படுகின்றன.

இந்த மாநாட்டில் ஹெப்ஸிபா ஜேசுதாசன் ‘Early Christianity in Tamil Nadu’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார். அதில் தமிழின் எல்லா பண்டைய இலக்கியங்களும் கிறித்தவ தாக்கத்தால் உருவானவையே என்று அவர் வாதிட்டிருக்கிறார்.

இரண்டாவது சர்வதேசக் கருத்தரங்கு ஜான் சாமுவேலை தலைமையாகக் கொண்டு ஜனவரி 2007ல் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதற்கு குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார். ஆர்ச் பிஷப் மயிலை-சென்னை ஏ.எம்.சின்னப்பா தொடங்கி ஏறத்தாழ எல்லா சபைத்தலைவர்களும் ஆசியுரை வழங்கியிருக்கிறார்கள். முதல் கருத்தரங்கு பெரும் வெற்றிபெற்று இந்தியவரலாற்றைப்பற்றிய மறுக்க முடியாத கருத்துக்களை நிறுவி விட்டது என்று சொல்லும் ஜான் சாமுவேல் அதை மேலும் விரிவுபடுத்தவே இந்த கருத்தரங்கு என்று குறிப்பிடுகிறார்.

டி.தயானந்தன் ·ப்ரான்ஸிஸ், எஸ்ரா சற்குணம், ஹெப்ஸிபா ஜேசுதாசன் போல தமிழில்பரவலாக அறியப்படும் கிறித்தவ சிந்தனையாளர்கள் அனேகமாக அனைவருமே இந்த அரங்கில் கருத்துக்களை முன்வைத்திருப்பதைக் காணமுடிகிறது. எல்லா கருத்துக்களும் ஒரே சாரம் கொண்டவை. ஹெப்ஸிபா கம்பராமாயணம் கிறித்தவ சாரம் கொண்ட நூல் என்கிறார்.

இப்போது இந்த கருத்தரங்குகளின் நீட்சியாக ‘தமிழர் சமய உலக முதல் மாநாடு’ 2008 ஆகஸ்டு 14 முதல் 17 வரை சென்னை- மயிலை உயர் மறைமாவட்ட அருட்பணி மையத்தில் [ரோஸரி சர்ச் சாலை சாந்தோம், சென்னை 600004] நடக்கவிருக்கிறது. மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பேராயர் முனைவர் எ.எம்.சின்னப்பா [சென்னை மயிலை கத்தோலிக்க பேராயம். சாந்தோம்.சென்னை] முனைவர் மு.தெய்வநாயகம் நிறுவனர் உலக தமிழர் ஆன்மவியல் இயக்கம் சென்னை. துணைஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ், முனைவர் தெ.தேவகலா அமைப்பாளர் உலகத்தமிழர் ஆன்மவியல் இயக்கம்.

இவ்வரங்கின் கோஷமாக முன்வைக்கப்படுவதை அதன் அறிவிப்பு இதழில் காண முடிகிறது. ‘ஓவ்வொருவரும் தன்மான உணர்வுடன் பிறப்பால் ஏற்றதாழ்வு கற்பிக்கும் இந்துத்துவாவின் பிடியில் இருக்கும் இந்து மதத்தைச் சார்ந்தவனாக தன்னைக் கூறாமல் தான் தமிழர் சமயத்தைச் சேர்ந்தவன் என்று அறிவித்து இந்துத்துவாவின் பிடியில் இருந்து விடுபட்டு தன்னுடைய பழைய சிறப்பு நிலைக்கு திரும்ப வேண்டும்’

அழைப்பிதழின் அட்டையில் உலக உருண்டைக்கு மேல் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரியும் ‘ஒன்றேகுலம் ஒருவனே தேவன் ‘என்ற வரியும் கொடுக்கப்பட்டுள்ளன. அழைப்பிதழிலேயே மாநாட்டில் பேசுபொருட்கள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. தமிழர் சமயம் என்பது தோமாகிறித்தவமே என்பதுதான் அது.

இந்த மாநாட்டுக்குப் பின் ஏறத்தாழ 100 கோடி ரூபாய் செலவில் தாமஸ் இந்தியாவந்தது, வாழ்ந்தது பற்றி ஒரு ஆங்கில-தமிழ் திரைப்படம் எடுக்கப்போவதாகவும் அதில் ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட முக்கிய நடிகர்களை நடிக்கவைக்கப்போவதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.//

Sir- It is 100% church  funded ARCHDIOCESAN CHRISTIAN STUDIESat Christian Tamil Studies of Madras University gave that P.Hd.  to Deivanaygam and not just that  Many more Such P.hd. were issued by Madras Arch Bishop

Viviliam, Thirukkural Saiva Siddhantam Oppaivu-(Tamil) Comparative Study of the Bible, Thirukkural and Saiva Siddhanta)-Ph. D. Thesis by Dr.M.Deivanayagam-University of Madras-1985

Tamil Bhakti Iyakkathin Thotramum Valarchiyum – Vivilia Oliyil (Tamil) (The Origin and Development of Tamil Bhakti Movement (in the Light of the Bible) by Dr.D.Devakala – Ph.D. Thesis –University of Madras - 1993

Ilakkiyangalil Moovorumai Kotpadu(Tamil) (Trinity Concept In Tamil Literature)–Ph.D. Thesis  by Dr. A. Johnson Thankiah – University of Madras-2003

Siddhar Padalkalum Viviliyamum (Tamil)(Songs of Tamil Siddhars and the Bible) Ph.D. Thesis by Dr. Moses Michael Farradey – University of Madras.-1999

Aru Vagai Darisanangalum Tamilar Samayamum – Viviliya Oliyil (Tamil)- (Six Darshanas and the Religion of Tamils – in the Light of the Bible)by Dr .J. D. Baskara Doss- Ph.D. Thesis – University of Madras -1998.

IAS_69.jpgFile?id=dcnjmj8m_46gstkxxtp_b

title-page.300.gif

No Saint.Thomas, No – influence seen on Thirukural From Bible. But Our Tamilnadu Politicians could not say so.

The Truth is

TRUTH FROM A CATHOLIC JESUIT

திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J. கத்தோலிக்க லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் இயேசு சபையாளருமான Rev. S.J.Rajamanikam was the H.O.D of Tamil Dept Loyala College, and he was asked to present a Paper on –Presence of Christianity in ThiruKural, at Venkateshwara University – Thirupathi in Tamil; here Learned Scholar explains the ideals of Valluvar and how it varies with the important ideals of Christianity- and finally comes to Deivanayagam and I quote-
“ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.

இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar

from PROTESTANT SIDE

ப.ச.ஏசுதாசன், முன்னாள் திருச்சி பிஷப். ஹீபர் கல்லூரி துணை முதல்வரும், தமிழ்த் துறைத் தலைவர்-பேராசிரியர் எழுதியதைப் பாருங்கள்.

“திருவிவிலியக் கருத்துக்களைத்தான் திருக்குறள் கூறியுள்ளது என்று நிறவும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. அது தேவையற்ற, பயனற்ற ஒன்று. அதனாலே அழுக்காறு தான் தோன்றும். ஒத்த சிந்தனைகள், நன்நெறிக் கருத்துக்கள் நற்சிந்தனையாளர்களிடையே நாடு கடந்தும், மொழி கடந்தும், இனம் கடந்தும், சமயம் கடந்தும் தோன்றுவது இயல்பே. எனவே இதிலிருந்து தான் இது தோன்றியது என வாதிடுவது நல்லதல்ல. ஒரு மொழியில் தோன்றிய ஒரு நூலின் செல்வாக்கு, பதிவு, அம்மொழியில் தோன்றும், பிற இலக்கியங்களிடையே இடம் பெறப் பல நூற்றாண்டுகள் ஆகும். அவ்வாறாயின், தகவல் சாதனங்கள் வளர்ச்சி பெற்றிறாத, போக்குவரத்து சாதனங்கள் பெரிதும் அற்ற காலத்தில் இனத்தாலும், மொழியாலும் சமய நிலையாலும் வேறான திரு விவிலியமும், பொது மறையாம் ஒன்றையொன்று தழுவியன எனக் கூறல் ஏற்புடையதன்று.”
பக்கம் -5,6. திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்

முடிவாக -
திரு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியோடு தான் திருக்குறள் செய்திகளைப் பெரிதும் ஒப்பிட முடிகிறது.”
பக்கம் -167திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்


founder.jpg

ஜான் சாமுவேல் ஆசியவியல் கழக ஊழல்-பல லட்சங்கள் கையாடல்

ஜான் சாமுவேல்ஆசியவியல் கழகத்தின் (Institute of Asian studies) இயக்குனராக நியமிக்கப்பட்டபோது, பல லட்சங்கள் (இப்பொழுதைய மதிப்பு கோடிகள்) கையாடல் செய்த ஊழல் குற்றத்திற்காக, ஜஸ்டிஸ் கிருஷ்ணா ஐயர் – ஒரு மனிதர் விசாரணைக் குழு (One-Man enquiry Committee) ஏற்படுததப்பட்டு, விசாரிக்கப்பட்டு, நிரூபிக்கப் பட்டு, பதவி நீக்கம் செய்யப் பட்டது.

விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, கொடுமுடி சண்முகம் என்பவர் இயக்குனராக இருக்கும்போது, இந்த ஜான் சாமுவேல் ரவுடிகளுடன் உள்ளே நுழைந்து ஆசியவியல் வளாகத்தை ஆக்கிரமித்துக் கொண்டதால், போலீஸ் புகார் கொடுக்கப்பட்டு, துரைப்பாக்கம் போலீஸார் கைது செய்து கொண்டு போயினர்.

முன்பு, 2000ல், மொரிஸியசில் ஒரு மாநாடு நடந்தபோது, உள்ள குற்றப்பின்னணியை மறைத்து மஹாத்மா காந்தி, மோகா மையத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கியபோது, விஷயம் அறிந்தவுடன் வெளியேற்றப்பட்டார். பிறகு, அங்கேயே, வி.ஜி. சந்தோஷத்துடன் கோவிலில்பைபிள் பட்டுவாடா செய்தபோது, இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அமுக்கி வாசித்தனர். குற்றத்தை மறைக்க, ஞானப்பழம் போன்று விபூதி பூசிக்கொண்டு வந்தது, வேடிக்கையாக இருந்தது.

ஆனால், இதே ஜான் சாமுவேல், பிறகு முருகனை அம்போ என்று விட்டுவிட்டு, ஏசுவைப் பிடித்துக் கொண்டு விட்டது, பணத்திற்க்ககத்தான்.

தெய்வநாயகத்தையும் மிஞ்சும் வகையில், ஆராய்ச்சியை தொடங்கி விட்டான் இந்த மோசடி பேர்வழி. பாவம், அந்த பௌத்த சந்நியாசி, மறுபடியும் ஏமாந்து விட்டார்.-vedaprakash//

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்

ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் சி.ஜான்சாமுவேலால் தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கை பரிசீலிக்கப்பட்டு, ஒரு சிலமாற்றங்களுடன் ஏற்கப்பட்டு, மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கலாம்என முடிவெடுக்கப்பட்டதோடு; தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுக்களின் பரிந்துரைகளையும் பெறலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது

Still Church and MK goes Togther till Date. Tamilnadu Government money is given to Santhome Church’s Tamil Mayyam ofcourse that was the Launch Pad for Kanimozhi



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கிறிஸ்துவ சர்ச்சின் வைப்பாட்டிகளா சென்னை பத்திரிக்கைகள்?

http://www.deccanchronicle.com/supplementary/legendary-bleeding-cross-st-thomas’-church-983

Deccan Chronicle feature, Chennai, 1 September 2008

Town of Thomas

Deccan Chronicle feature, Chennai, 24 November 2008

Serene Mount beckons

http://www.hinduonnet.com/mp/2004/01/07/stories/2004010700090300.htm

The Mount of Thomas

S. MUTHIAH

Today, the church tells no stories of the Nestorians, Portuguese or Armenians. Instead, on one side is a convent, on another, a well-kept cemetery of the Franciscan nuns

2004010700090301.jpg
In this Article Muthaiah says

SEVERAL YEARS ago, there was an American (?) turned Hindu ascetic who was never happy whenever I wrote of Thomas Dydimus, the Apostle of India. In fact, he wrote a book, I recall, devoting a considerable and angry part of it to my unhistorical approach to the legend of Thomas in particular. I don’t know whether he’s still around, but if he is, I wish he’d realise that articles of faith, like his own, are not disputable, calling, instead, for tolerance. And that a little unhistoric storytelling, like today’s, does no one any harm.

Sir YOU ARE Church FUNDED AUTHOR AND YOUR CO-Friends Activities here

http://saintthomasfables.wordpress.com/2010/06/14/santhome-church-stooges-at-mylai-temple/

thomas-myth-dinamalar-2009.jpg?w=300&h=260&h=260DINAMALAR

toi-thomas.jpg?w=300&h=187&h=187TIMES OF iNIDA

28_02_2010_436.jpg?w=80&h=123&h=123 New Indian Express

dhimmedia.jpg?w=450&h=276

http://devapriyaji.wordpress.com/2010/02/27/christian-convent-girl-stripped/

Now Chennai Newspapers are working like Prostitutes for Churches.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஆர்ச் பிஷப் – சின்னப்பா தமிழர் விரோத போக்கு

Santhome Church Stooges at Mylai Temple

chennai-new-news-1023.jpg?w=250&h=250தன் புத்தகங்களில் தெய்வநாயகம் தெளிவாக பணம் மற்றும் ஆய்வு விஷயங்களில் சந்தோம் சர்ச் உதவுகிறது என தெளிவாக கூறியுள்ளார்.
தெய்வநாயகம் சொல்வது- கிடைத்துள்ள புதைபொருள் ஆய்வுப்படி இன்றைய சாந்தோம் சர்ச் முன்பு கபாலீஸ்வரர் கோயிலை இடித்துக் கட்டியது எனத் தெளிவாகக் கூறுகிறார்.
திருஞானசம்பந்தரும் அப்பரும் வழிபட்ட அந்த மயிலைக் கோயிலை அங்கே மீண்டும் அமைக்க ஆர்ச் பிஷப் தூண்டுகிறாரா?

தன் புத்தகங்களில் தெய்வநாயகம் தெளிவாக பணம் மற்றும் ஆய்வு விஷயங்களில் சந்தோம் சர்ச் உதவுகிறது என தெளிவாக கூறியுள்ளார்.
தெய்வநாயகம் சொல்வது- கிடைத்துள்ள புதைபொருள் ஆய்வுப்படி இன்றைய சாந்தோம் சர்ச் முன்பு கபாலீஸ்வரர் கோயிலை இடித்துக் கட்டியது எனத் தெளிவாகக் கூறுகிறார்.
திருஞானசம்பந்தரும் அப்பரும் வழிபட்ட அந்த மயிலைக் கோயிலை அங்கே மீண்டும் அமைக்க ஆர்ச் பிஷப் தூண்டுகிறாரா?

14_06_2010_004_068-deivanayagam-galatta2.jpg?w=550&h=778



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஐம்பது குடும்பத்தை மதம் மாற்றினால் ஒரு வீடு இலவசம்!
விருதுநகரில் திரளும் கலவர மேகம்

Viruthu.jpg


நான்கு வாரங்களுக்கு முன் வேப்பங்குளம் கிராம சாதிக் கலவரப் பிரச்னை தொடர்பான வழக்கு, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நடந்தபோது... ‘விருதுநகர் மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமை இருப்பது உண்மைதான்’ என அந்த மாவட்ட கலெக்டரான சிஜிதாமஸ் ஒப்புக்கொண்டார்.

இப்போது அதே விருதுநகர் மாவட்டத்தில் கட்டாய மதமாற்ற சர்ச்சை வெடித்திருக்கிறது.

Viruthu%201.jpgவிருது நகரிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சந்திரகிரிபுரம். இந்தக் கிராமத்தில் கடந்த நவம்பர் 15-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை, ‘செவன்த் டே ஆராதனை கிறிஸ்துவ சபை’ சார்பில் வருகையின் எழுப்புதல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம்தான் மதமாற்ற சர்ச்சையையும் எழுப்பிவிட்டிருக்கிறது. 

இந்த ஜெபக் கூட்டத்துக்கு... சந்திரகிரிபுரம் மக்கள் மட்டுமின்றி அருகேயுள்ள சொக்கலிங்கபுரம், நமச்சிவாயபுரம், எல்கைபட்டி, பாவாலி, மத்தியசேனை, செங்குன்றாபுரம், அம்மாபட்டி, அழகாபுரி என மாவட்டத்திலுள்ள பல கிராம மக்களும் பேருந்தில் அழைத்துவரப்பட்டிருக்கிறார்கள். கமகமக்கும் பிரியாணி விருந்தும் பரிமாறப்பட்ட இந்தக் கூட்டத்தின் வழியாகத்தான் கட்டாய மதமாற்றம் நடக்கிறது என இந்து அமைப்புகளும், பொது மக்களும் வெடிக்கிறார்கள்.

இது தொடர்பாக சந்திரகிரிபுரத்தில் வசிக்கும் நம்மகோடியைச் சந்தித்தோம்.

“எங்க கிராமத்துக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடி ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்றவுங்க மாதிரிதான் வந்தாங்க இந்த செவன்த் டே காரங்க. விலையப் பற்றி கவலைப்படாம இடங்களை வாங்கி பன்னிரண்டு வீடுகளைக் கட்டினாங்க. சரி, வீடுகட்டி விக்கப் போறாங்கன்னு நினைச்சோம். ஆனா, போனமாசம் எங்க ஏரியாவுக்கு வீடு வீடா வந்தவங்க... ‘புதுவீடுகள்ல ஜெபக் கூட்டம் நடக்குது. அதுல கலந்துக்கிட்டா உங்க கஷ்டமெல்லாம் தீரும். அதோட தினமும் கறி பிரியாணி விருந்தும் இருக்கு. வந்துடுங்க’ன்னு கூப்பிட்டாங்க. 

Viruthu%203.jpgகூட்டத்துல என்னதான் நடக்குதுன்னு தெரிஞ்சுக்க, நாங்களும் போனோம். அங்க பேசினவங்க, ‘நீங்க இப்ப கும்பிடற சாமியெல்லாம் சாத்தான். அதையெல்லாம் கும்பிட்டா நல்லது நடக்காது. ஏசப்பாவ மட்டும் கும்பிடுங்க. எல்லாம் நல்லதா நடக்கும்’னு திரும்பத் திரும்பச் சத்தமா சொன்னாங்க. நாங்க எல்லாம் ஜக்கம்மா சாமி கும்பிடுறவுங்க. எங்க சாமிய சாத்தான்னு சொன்னா பொறுத்துக்குவோமா? மதக் கலவரம் வரக் கூடாதுன்னு நினைச்சு கொஞ்சம் சத்தம் போட்டுட்டு வந்துட்டோம். ஆனா இந்த கிறிஸ்தவக்காரங்களுக்குத் துணையா எங்க ஊரு பஞ்சாயத்துத் தலைவர் புலிநாயக்கரு இருக்காராம். அவங்களுக்காக மறைமுகமாக ஆளை சேர்த்து விடுறதாகவும் சொல்லிக்கிறாங்க. இந்த சபையில ஐம்பது குடும்பத்துக்கு மேல கிறிஸ்தவ மதத்துக்குச் சேர்த்துவிட்டா ஒரு வீடு கட்டித் தர்றாங்களாம். இதுக்காகவே பக்கத்து கிராமத்துல போட்டி போட்டுக்கிட்டு ஆள சேர்த்துக்கிட்டு இருக்காங்க” என்றார் ஆதங்கம் குறையாமல். 

இதைத் தொடர்ந்து சந்திரகிரிபுரம் அருகேயுள்ள பாவாலி கிராமத்திற்குச் சென்று விசாரித்தோம். ஊர்க்காரரான மணிமாறன் நம்மிடம், 

“எங்க ஊர் மக்கள் சாமான்யமா ஏமாறமாட்டாங்க. ஆனா, இந்த செவன்த் டே காரங்க என்ன சொக்குப்பொடி போட்டாங்களோ தெரியல. ஊருல ஜெபக் கூட்டம் முடிஞ்ச உடனே முப்பது குடும்பத்துக்கு மேல கிறிஸ்தவ மதத்துல சேர்ந்துட்டாங்க” என்றார். 

இதைத் தொடர்ந்து சந்திரகிரிபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் புலிநாயக்கரைச் சந்தித்து அவர் மீதான புகார் பற்றி கேட்டோம்.

“ஊர்க்காரங்க சொல்றதெல்லாம் பொய். நான் அந்தக் கிறிஸ்தவ சபைக்கு கல், மண், ஜல்லி வாங்கிக் கொடுக்குறேன். அவ்வளவுதான். ஜனங்களை கிறிஸ்தவ மதத்துல சேருங்கன்னு நான் சொல்லல. அவங்க விருப்பப்பட்டு போறாங்க. இதுல எனக்கு எந்தச் சம்பந்தமும் இல்ல” என மறுத்தார். 

இப்பகுதியில் கட்டாய மதமாற்றம் நடப்பதாகச் சொல்லி போராட்டத்தில் இறங்கியிருக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாண்டியராஜனை சந்தித்தோம்.

“இந்த மதமாற்றத்துக்குக் காரணமே செவன்த் டே ஆராதனை சபையில் இருக்கிற பாபு என்பவர்தான். இவர் கூடுதல் டி.ஜி.பி. ஒருவரின் தம்பியாம். அந்த அதிகாரியின் சொந்த ஊரான சந்திரகிரிபுரத்தை மையமாக வைத்துதான் கட்டாய மதமாற்றம் நடக்கிறது. அண்ணன் போலீஸ் உயரதிகாரியாக இருக்கிற தைரியத்தில், தன்னை சட்டம் எதுவும் செய்யாது என இப்படிச் செயல்படுகிறார். 

பன்னிரண்டு வீடுகள் எதற்கு? என கேட்டால், மருத்துவ மையம் அமைக்க எனப் பொய் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் மருத்துவச் சேவை என்ற போர்வையில் மதமாற்றம் செய்கிறார்கள். பக்கத்தில் இருக்கிற கேரள உயர்நீதிமன்றம், மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்தச் சொல்லியிருக்கிறது. அதேபோல தமிழ்நாட்டிலும் மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்தவேண்டும். இல்லையென்றால் மதக் கலவரம் தலைவிரித்து ஆட ஆரம்பித்துவிடும். தீண்டாமை விவகாரத்தில் நீதிமன்றம் வரை சென்ற விருதுநகர் கலெக்டரம்மா, இந்த விஷயத்தில் கவனமாகச் செயல்படவேண்டும். இல்லையென்றால், இந்தப் பிரச்னையிலும் நீதிமன்றத்துக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அரசு இந்தப் பிரச்னையில் உடனடி கவனம் செலுத்தவில்லை என்றால், மதமாற்றத்துக்கு எதிரான எங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்” என்றார் ஆவேசமாக.

Viruthu%202.jpgகட்டாய மதமாற்றக் குற்றச்சாட்டுகள் குறித்து ‘செவன்த் டே’ ஆராதனை சபையைச் சேர்ந்த பாபுவைச் சந்திக்க பலமுறை சென்றோம். சந்திக்க முடியாது என சொல்லிவிட்டனர். அவரை போனில் தொடர்பு கொண்டபோதும் நம்மிடம் பேசவில்லை. பதிலாக அந்த சபையிலிருந்து குமார் என அறிமுகப்படுத்திக்கொண்டு நம்மிடம் பேசியவர், “பத்திரிகைகெல்லாம் எங்க அய்யா பதில் சொல்ல மாட்டாரு. அதுக்கு அவசியமும் இல்லை” என்றார். இந்தப் பிரச்னை பற்றி விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிஜிதாமஸ் கவனத்துக்குக் கொண்டு போனோம். 

“விருதுநகர் மாவட்டத்தில் கட்டாய மதமாற்றம் செய்கிறார்களா? நான் இப்போது டெல்லியில் இருக்கிறேன். டிசம்பர் 27-ம் தேதி விருதுநகர் வருகிறேன். வந்தவுடன் என் முதல் வேலையே இதுபற்றிய நடவடிக்கைகளில் இறங்குவதுதான்” என்றார் பொறுப்போடு.

படங்கள்-: எம்.எஸ்.கணேஷ்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

திருச்சி சி.இ. பள்ளி நிர்வாகம் செய்த மோசடி:
கர்த்தரே இப்பள்ளியை ரட்சியும்!

Trichy.jpg



அரசு வேலைக்காக 55 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் காத்திருக்கையில் 13 வருடங்கள் வேலைக்கே வராமல் அரசாங்க சம்பளத்தைப் பெற முடியுமா? முடியும். அதற்கு நீங்கள் திருச்சியில் உள்ள சி.இ. மேல்நிலைப்பள்ளியில் பணியாற்ற வேண்டும். பள்ளி நிர்வாகத்தினருக்கு உறவினராக இருந்தால்தான் இது சாத்தியம். 

திருச்சி வண்ணாரப்பேட்டையில் அரசு நிதி உதவியோடு சி.இ. மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 13 வருடங்களாக கிளார்க் ஒருவர் வேலைக்கே வராமல் சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதாக மாவட்டக் கல்வித்துறையில் இருந்து தகவல் கசிந்தது. அத்தகவலை வெளிக் கொண்டு வந்தவர் அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர் என்பது கூடுதல் தகவல்.

Trichy%204.jpgஇத்தனை ஆண்டுகளாக அமைதியாக இருந்த அந்தத் தமிழ் ஆசிரியர் பன்னீர் செல்வத்தைச் சந்தித்தோம். நடந்தது என்ன என்பதை அவரே சொல்கிறார். “இந்தப் பள்ளியில் கடந்த 1991--ம் ஆண்டு முதல் பட்டதாரி தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். நான் பணிபுரிந்த காலத்தில் இந்தப் பள்ளியில் நடந்த பல்வேறு முறைகேடுகளை தட்டிக்கேட்டேன். இதனால், கடந்த 2001--ம் ஆண்டு பள்ளியின் நிர்வாக விதிகளுக்கு முரணாக நான் நடந்துகொண்டேன் என்று கூறி, பள்ளி நிர்வாகம் என்னை வேலை நீக்கம் செய்தது.

இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு 2007--ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை ஐகோர்ட், ‘அவரை பணியிலிருந்து நீக்கியது செல்லாது. அவருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்தது. மேலும், என்னை பணியிலிருந்து நீக்கிய இடைப்பட்ட ஏழு ஆண்டு காலத்திற்கான சம்பளப் பணத்தை, பள்ளி நிர்வாகமே தர வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து பள்ளி நிர்வாகம் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை ஐகோர்ட் மட்டுமல்ல சுப்ரீம் கோர்ட்டும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் 2008--ம் ஆண்டு ஜூலை மாதம் பணியில் சேர அனுமதி அளித்தது. ஆனால், எனக்கான சம்பளப் பணத்தைப் பள்ளிக்கல்வித்துறையிடமிருந்து பெற்றுத் தரவில்லை. ஒவ்வொரு மாதமும் பள்ளியில் இருந்து அனுப்பப்படும் அரசு சம்பளம் பெறுவோர்க்கான பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை. 

இப்படிப் பல வகைகளிலும் என்னை பழிவாங்கிய பள்ளி நிர்வாகம், ஒருவழியாக கடந்த செப்டம்பர் மாத சம்பளத்திற்குரிய பட்டியலில், எனது பெயரை எழுதி அனுப்பியது. அதுவும் எப்படி 2001--ம் ஆண்டு என்னை பணியில் இருந்து நீக்கியபோது என்ன சம்பளம் வாங்கினேனோ அந்தச் சம்பளத்தை 2008--ம் வருடத்தில் எழுதி அனுப்பியது.

இந்நிலையில் கடந்த ஜூலை 28--ம் தேதி பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் கல்வி ஆய்வு அலுவலர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, “பள்ளியில் பணிபுரியும் எனக்கு முறையான சம்பளம் பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்யாத பள்ளி நிர்வாகம், 1996 ஏப்ரல் முதல் பணிக்கே வராத பள்ளியின் ரெக்கார்டு கிளார்க் பியூலா சேகருக்கு(பள்ளி நிர்வாகியின் மகள்) மட்டும் எப்படிச் சம்பளம் வாங்கிக் கொடுக்கிறது?” என்று கேட்டேன்.

Trichy%203.jpgTrichy%202.jpgஎனது கேள்வியை பொறுமையாகக் கேட்ட முதன்மை கல்வி அதிகாரி, அதுகுறித்த விவரங்களை கேட்டார். “பள்ளி மேலாளராக ஜேம்ஸ் ஆப்ரகாம் செயல்பட்டு வருகிறார். அவரது மகன் பிராங்க்ளின்தான் பள்ளியின் தாளாளர். மகள் பியூலா சேகர், ரெக்கார்டு கிளார்க் பணியில் இருக்கிறார். பியூலா சேகர் கடந்த 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பணிக்கு வராமல். தூத்துக்குடியில் உள்ள ‘மிஸ்பா ஜெப வீடு’ என்னும் சர்ச்சில் அவரது கணவருடன் இணைந்து கிறிஸ்தவ ஊழியத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் பள்ளியின் ரெக்கார்டு கிளார்க்காக அவர் பணிபுரிவதாக அவருக்கு அரசு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளியின் அலுவலக உதவியாளரான பெரியசாமிதான் வருகைப் பதிவேட்டில் பியூலாவுக்காகக் கையெழுத்துப்போடுகிறார்” என்பதை விளக்கினேன்.

இதில் பள்ளி நிர்வாகி என்மீது மிகுந்த கோபத்தில் இருந்தார். இந்த நிலையில் எனக்கு ஆதரவாக இருந்தவர் ஆசிரியர் லாமெக். சி.இ. தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஸ்டெல்லா (பியூலா சேகர் நாத்தனார்) ஆசிரியர் லாமெக்கைத் தரக்குறைவாகத் திட்டினார். அதைத் தட்டிக்கேட்ட அவரை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் கன்னத்தில் அறைந்து விட்டார்” என்று சோகத்துடன் விவரித்தார் பன்னீர் செல்வம்.

பெண் ஆசிரியரிடம் அடி வாங்கி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த லாமெக்கைச் சந்தித்தபோது, “பள்ளியில் தற்போதுள்ள பணிமூப்பு அடிப்படையின் படி நான்தான் தலைமை ஆசிரியராக இருக்க வேண்டும். நான் தலைமை ஆசிரியர் பதவி கேட்காததால் எனக்கு அடுத்த இடத்தில், பணிமூப்பின் அடிப்படையில் இருக்கும் தமிழாசிரியர் பன்னீர்செல்வம்தான் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட வேண்டும். ஆனால் பள்ளி நிர்வாகம், மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பணிபுரிந்த நிர்மலா கிறிஸ்டி என்பவரை தலைமை ஆசிரியராக நியமித்தது. இதை எதிர்த்து பன்னீர் செல்வம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். 

Trichy%201.jpgஇதனால் நிர்மலா கிறிஸ்டியின் தலைமை ஆசிரியர் நியமனத்திற்குக் கல்வித்துறை ஒப்புதல் அளிக்கவில்லை. மேற்கண்ட சம்பவங்களில் ஆசிரியர் பன்னீர்செல்வத்திற்கு நான் உடந்தையாக இருப்பதாக நினைத்த ஸ்டெல்லா, சம்பவத்தன்று என்னை தரக்குறைவாகத் திட்டியதோடு கன்னத்திலும் அறைந்தார். தடுக்க வந்த பன்னீர்செல்வத்தையும் செருப்பால் அடித்தார். இதைத் தடுக்க வந்த மாணவர்களையும் குச்சியால் ஸ்டெல்லாவும் அவரது கணவர் ஜேம்சும் தாக்கினர்’ என்றார்.

பள்ளி ரெக்கார்டு கிளார்க் பியூலா சேகர் மீதான புகார் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதனிடம் கேட்டபோது, “இந்தப் புகார் உண்மைதான். பள்ளி நிர்வாகத்தின் வற்புறுத்தல் காரணமாக, பள்ளி அலுவலக உதவியாளர் பியூலாவிற்காக வருகைப் பதிவேட்டில் கையெழுத்துபோட்டிருக்கிறார். அவர் இப்படிச் சொன்னதை அவர் கைப்பட எழுதி வாங்கி இருக்கிறோம். அரசை ஏமாற்றி பியூலா பெற்ற சம்பளப் பணத்தைத் திரும்பச் செலுத்த பள்ளி நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது” என்றார். 

இது தொடர்பாக பள்ளி மேலாளர் ஜேம்ஸ் ஆப்ரகாமிடம் கேட்க தொடர்பு கொண்டோம். அவர் நம்மிடம் பேசிய வார்த்தைகள் அச்சில் ஏற்றமுடியாதவை. நம்மிடம் அவர் பேசிய பேச்சிலிருந்தே பள்ளியில் அவரது நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் எப்படி நடந்து கொண்டிருப்பார் என்பது புரிந்தது. கர்த்தரே... இப்பள்ளியை ரட்சியும்!

படங்கள்: ஆர்.பி.

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மத மாற்ற முயற்சி புகார் [^]: 2 கிறிஸ்தவ மத போதகர்கள் கைது

சனிக்கிழமை, அக்டோபர் 4, 2008, 14:09[IST]


http://thatstamil.oneindia.in/news/2008/10/04/tn-two-pastors-arrested-for-conversion.html
திருப்பூர்: திருப்பூர் அருகே மத மாற்றம் செய்ய முயன்ற கிறிஸ்தவ மத போதகர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் ஓட்டகவுண்டம் பாளையத்தைச்  சேர்ந்தவர் காட்வின் (33). கிறிஸ்தவ மதபோதகர். தனது தங்கையின் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கும் தனது பங்கு பாதிரியாருக்கும் கொடுப்பதறாக நேற்று முன் தினம் திருப்பூர் வந்தார்.

அப்போது, திருப்பூர் அருகே, அனுப்பர்பாளையம் புதூர், திலகர் நகர், புதுக் காலனி பகுதிகளில் கிறிஸ்துவ மத பிச்சார நோட்டீஸ்களை வினியோகம் செய்தார். அப்போது புதுக்காலனி அரும்புக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரதீஷ் (23) என்பவரிடம் மத பிரசார நோட்டீஸ்களை கொடுத்த காட்வின், மதம் மாறும்படி கூறியுள்ளார்.

அதற்கு ரதீஷ் மறுக்கவே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த காட்வின், ரதீஷை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரதீஷூக்கு மூக்கில் ரத்தம் வந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் காட்வினை  அனுப்பர்பாளையம் போலீஸில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் [^] குறித்து ரதீஷ் போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் போலீஸார் நடவடிக்கை [^] எடுக்கவில்லை என்று கூறி இந்து முன்னணியினரும், அப்பகுதி மக்களும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் [^] நடத்தினர்.

இதையடுத்து போலீஸார் காட்வினைக் கைது செய்தனர். ரதீஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இன்னொரு போதகரும் கைது:

அவரை இந்து முன்னணியில் பார்க்க வந்தனர். அப்போது அங்கு வந்த ஜோசப் என்ற இன்னொரு போதகர், கிறிஸ்தவ மதம் தொடர்பான நோட்டீஸ்களை விநியோகித்து மதமாற்றம் குறித்து பேசியுள்ளார்.

இதனால், ஏற்கனவே கோபத்தில் இருந்த இந்து முன்னணியினர் மேலும் ஆத்திரமடைந்தார்கள். இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜோசப்பையும் கைது செய்தனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ரூ. 1 லட்சம் மோசடி: மதபோதகர்-மனைவி தலைமறைவு

[IST]
பாவூர்சத்திரம்: வாலிபரின் நோயை குணப்படுத்துவதாக கூறி அவரது பெற்றோரிடம் ரூ. 1 லட்சம் மோசடி செய்துவிட்டு தலைமறைவான மதபோதகர் தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூரை சேர்ந்த சுப்பிரமணியன்-ராஜபொன்னம்மாள் தம்பதியின் மகன் முருகனுக்கு சில ஆண்டுகளுக்கு முன் காலில் புண் ஏற்பட்டது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை.

இதற்கிடையில் இவர்கள் வீட்டு அருகில் வசித்து வந்த மத போதகர் ஜெயராஜ் நெல்லையில் எனக்கு தெரிந்த பிரபல டாக்டர் ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் காட்டினால் நோய் குணமாகும் என்றும் பணம் அதிகம் செலவாகும் என்றும் கூறினார்.

அவரின் பேச்சை நம்பிய முருகனின் பெற்றோர் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 130 கிராம் தங்கச் செயின் மற்றும் ரூ.1,000 பணத்தையும் கொடுத்துள்ளனர்.

அதன்பிறகு ஜெயராஜ் தனது மனைவியுடன், சுப்பிரமணியன் குடும்பத்தினரை நெல்லைக்கு அழைத்து வந்தார். நெல்லை ஜங்ஷனில் உள்ள ஒரு கோவிலில் உட்கார வைத்துவிட்டு நகையை அடகுவைத்து பணத்தை வாங்கி வருவதாக சென்ற ஜெயராஜூம், அவரது மனைவியும் திரும்பி வராமல் தலைமறைவாகி விட்டனர்.

நகையுடன் தலைமறைவான மதபோதகர் தம்பதியினரை சுப்பிரமணியன் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அவரைப் பற்றிய எந்த துப்பும் கிடைக்காததால் சுப்பிரமணியன் குடும்பத்தினர் நெல்லை டிஐஜி கண்ணப்பனை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

இந்த மனு குறித்து விசாரணை நடத்தும்படி பாவூர்சத்திரம் போலீசுககு உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் ஜமால் விசாரணை நடத்தி ரூ.1 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக உள்ள மதபோதகர் தம்பதியினரை தேடி வருகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மாணவியுடன் தலைமறைவான மதபோதகர்

[IST]

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே மதபோதகர் ஒருவர் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் தலைமறைவாகிவிட்டார்.

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரிய கோவிலான்குளத்தை சேர்ந்த கந்தசாமியின் மகன் கலைச்செல்வன். இவர் மதுரையில் மதபோதகர் கல்வி பயின்று வருகிறார்.

கலைச்செல்வனும் மாரியப்பன்-ராமலெட்சுமி தம்பதியின் மகள் செல்வியும் 16)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்து வந்துள்ளனர். மாரியப்பன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்தக் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு நிலவியது. இந் நிலையில் கலைச்செல்வன் பள்ளிக்கு சென்று திரும்பிய செல்வியை அழைத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.

பள்ளிக்கு சென்ற மகள் திரும்பி வராததால் தாய் ராமலட்சுமி உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இந்நிலையில் கலைசெல்வன்தான் அவரை கடத்தி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

இதனால் கலைசெல்வனின் வீட்டிற்கு ராமலட்சுமி புகார் கூறவே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

எனவே கடந்த 10ம் தேதி அவர் சின்னகோவிலான்குளம் போலீசில் ராமலட்சுமி புகார் செய்தார். ஆனால் போலீசார் புகாரை வாங்காமல் அலை கழித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த செல்வியின் உறவினர்கள் சின்னகோவிலான்குளம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கலைச்செல்வனிடம் இருந்து செல்வியை மீட்டு தரும்படி கூறினர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யபோவதாகவும் தெரிவித்துள்ளனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

4 பெண்களை ஏமாற்றி 5வது திருமணம் [^]செய்ய முயன்ற மதபோதகர் கைது

புதன்கிழமை, மே 9, 2007, 5:30[IST]

சென்னை:4 பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி 5வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற மதபோதகர் கைது செய்யப்பட்டார்.

சென்னை கொடுங்கை யூரைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் என்ற ஜெய் மார்ட்டின் லூதர் (40). இவர் புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் ஜெபக் கூடம் நடத்தி வருகிறார். மதபோதகரான இவர் மற்ற ஜெபக் கூடங்களுக்குக்கும் சென்று பிரசங்கம் செய்வதுண்டு.

இவர் கொடுங்கையூர் சீதாராம் நகர் முதல் தெருவைச் சேர்ந்த பிரேமிபியூலா என்பவரை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பியூலா தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பியூலா சமீபத்தில் ஜெய் மார்ட்டின் லூதர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் புகார் மீது எந்த நடவடிக்கை [^]யும் எடுக்கப்படவில்லை. இதனால் சென்னை [^] உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில்,

ஜெய்மார்ட்ன் லூதர் நடத்தி வரும் ஜெபக்கூடத்துக்கு நான் அடிக்கடி ஜெபம் செய்ய செல்வேன். அப்போது எனக்கும், ஜெய்மார்ட்டின் லூதருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

பின்னர் இருவரும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தோம். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெய் மார்ட்டின் லூதருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரியவந்தது. மேலும் மேரி, பரிமளம், சலோமியா ஆகிய 3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி இருப்பதும் தெரிந்தது. அவர்கள் மூவருக்கும் குழந்தைகள் உள்ளனர்.

இதில் மேரியை மனநிலை சரி இல்லாதவர் என்று ஒதுக்கி வைத்து விட்டார். மற்ற இரண்டு பெண்களையும் அது போல விரட்டி விட்டார். என்னையும் சில காலமாக சித்ரவதை செய்து வருகிறார். மேலும் என்னை விபச்சாரத்தில் தள்ள ஏற்பாடு செய்து வருகிறார்.

மேலும் வரதட்சணை வாங்கி வர சொல்லி தினமும் என்னை அடித்து துன்புறுத்தினர். சில வாரங்களுக்கு முன் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி என்னை வீட்டை விட்டு விட்டிவிட்டார்.

இந்நிலையில் அவர் 5வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வருகிறார். இதை தடுத்து நிறுத்தி ஜெய்மார்ட்டின் லூதர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணை [^]க்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜெய் மார்ட்டின் லூதர் மீது நடவடிக்கை எடுக்க மகாகவி பாரதி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.

அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி ஜெய் மார்ட்டின் லூதரை இன்று போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

செ‌ன்னையை அடு‌த்த செ‌ம்ம‌ஞ்சே‌ரி‌யி‌ல் ம‌ணி‌ப்பூ‌ர் ‌சிறுவ‌ர்களை ‌சி‌த்ரவதை செ‌ய்ததாக வ‌ந்த புகாரையடு‌த்து மதபோதகரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

செ‌ம்ம‌ஞ்சே‌ரி‌யி‌ல் அனாதை இ‌ல்லம் நட‌த்‌தி வ‌ருபவ‌ர் ‌மதபோதக‌ர் கி‌றி‌ஸ்டோப‌ர். இவ‌ர் ‌மீது ‌சிறுவ‌ர்களு‌க்கு க‌‌ல்‌வி அ‌ளி‌ப்பதாக கூ‌றி ‌‌மோசடி செ‌ய்ததாக புகா‌ர் கூற‌ப்ப‌ட்டது.

இதையடு‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் நட‌த்‌தி ‌விசாரணை‌யி‌ல் போதக‌ர் ‌கி‌றி‌ஸ்டோப‌ர் மோசடி செ‌ய்தது தெ‌‌ரியவ‌ந்தது. இதை‌த் தொட‌ர்‌ந்து அவரை காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று கைது செ‌ய்தன‌ர்.

இதே புகா‌ரி‌ன் பே‌‌ரி‌ல் பா‌தி‌ரியா‌ர் இ‌ம்மானுவே‌ல் உ‌ள்பட 4 பே‌ரு‌ம், க‌ளிய‌க்கா‌விளை‌யி‌ல் அனாதை இ‌ல்ல‌‌ம் நட‌த்‌‌தி மோசடி செ‌ய்த மதபோதக‌ர் ஒருவ‌ரு‌ம் ஏ‌ற்கனவே கைது செ‌ய்ய‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர் எ‌ன்பது ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

500ரூ நோட்டில் கிறிஸ்தவ மதப் பிரசாரம்large_34628.jpgராமநாதபுரம் : ராமநாதபுரம் கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் நடந்து வருகிறது. கடலோர கிராமங்களில், சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது.

மாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன. மொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை. தற்போது, கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன. பணத்தின் இருபுறமும் பிரசார வாசகங்களை அச்சிட்டு, வினியோகிப்பதாகவும் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக , இதன் ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன. பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளில் தான், இந்த பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், நபர் ஒருவருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது புதிராக இருந்து வருகிறது. பெரிய அளவில் பணம் வினியோகித்து, குறிப்பிட்ட சிலரை மதமாற்றம் செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது. இதன் காரணமாக, பணப்புழக்கம் ஜரூராக இருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே பல கடலோர கிராமங்கள் களை கட்டி வருகின்றன. பணத்தை பெற்றவர்கள், தேவைகளுக்காக அவற்றை புழக்கத்தில் விட்டதால், மறைமுகமாக நடந்து வந்த குட்டு, தற்போது அம்பலமாகி உள்ளது. ஏழ்மை நிலையில் வாடுவோரை குறிவைத்து மதமாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருவதாக வந்த புகாரும் இதன் மூலம் உறுதிசெய்யப் பட்டுள்ளது.
கிருத்துவ-மதப்பிரச்சாரம்-ரூ.500ரூபாய் நோட்டு மத பிரசாரத்துக்கு எதிர்ப்பு:நடவடிக்கைக்கு பாதிரியார்கள் வலியுறுத்தல்
ராமநாதபுரம்:ரூபாய் நோட்டில், மத பிரசாரம் செய்வதற்கு பாதிரியார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.கடலோர பகுதிகளில், மதமாற்றும் விதமாக, 500 ரூபாய் நோட்டுகளில் பிரசாரங்களை அச்சிட்டு வினியோகம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.இந்நிலையில்,மீனவர்களுக்கு வழங்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்தது குறித்து, “தினமலர்’ நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. ரூபாய் வினியோகம் செய்து மதமாற்றம் செய்வதற்கு பாதிரியார்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட பெந்தகோஸ்தே ஊழியர்கள் செயலர் ஜான்சான் கூறியதாவது:ரூபாய் நோட்டில் அச்சிடுவது, ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது. அதிலும், மதமாற்றத்துக்கான வாசகங்களை அச்சிட்டு வினியோகிப்பது கண்டிக்கதக்கது. இயேசுவின் உண்மையான ஊழியன் யாரும், இது போன்ற செயலில் ஈடுபட மாட்டார். இது போன்ற செயலில் ஈடுபடுபவர்களை அரசு கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற செயலை பெந்தகோஸ்தே ஊழியர்கள் ஏற்கமாட்டோம்.இவ்வாறு ஜான்சான் கூறினார்.இதே போல் கிறிஸ்தவ பாதிரியார்கள் பலரும், ரூபாய் நோட்டு பிரசாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதமாற்றத்துக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டது குறித்து, கடலோர பகுதியில் போலீசாரும் தீவிர விசாரணைநடத்தி வருகின்றன
ர்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24_07_2010_003_004.jpg
24_07_2010_003_012.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Myth of Christian contribution to Tamil - 1
22/07/2010 00:39:14



Thamizhchelvan




The case



In the recently concluded “World Classical Tamil Conference”, and also in columns, articles and reports about it, there was a fresh attempt to project the myth that the Tamil language would have died but for the contribution of Christian Missionaries. There was also an immense propaganda that the “prose” style of writing was a gift from Christian Missionaries to the Tamil language.

Indeed, such a misinformation campaign has been sustained for years since the Dravidian Movement was started, and fully supported by the Church. Dravidian racists who conducted the conference, and the crowd which rushed there to wash the feet of Dravidian racists for personal benefits, may blow trumpets in support of this misinformation campaign. But true lovers of Tamil and true nationalists who value the importance of national integration and adore the magnificent cultural bond between the various Bharatiya languages and linguistic groups would undoubtedly reject this misinformation.

(http://expressbuzz.com/biography/the-europeans-who-shaped-a-dravidian-language/182657.html

and

http://www.hindu.com/2010/06/25/stories/2010062554000700.htm

and

http://www.cathnewsindia.com/2010/06/29/priests-honored-for-saving-tamil-language/



Misinformation campaigners project missionaries such as G.U. Pope, Constantine Joseph Beschi, Robert Caldwell, Barthalomaus Ziegenbalg, Francis Whyte Ellis and Dr. Samuel Green et al as great champions of Tamil and magnificent contributors to its development, including the introduction of “prose” writing. Of these, Francis Whyte Ellis or ‘Ellis Durai’ in Tamil, was a Madras-based civil servant in the British government and Samuel Green a doctor in Sri Lanka; both supported missionaries in evangelical causes.

All the above mentioned missionaries landed in Tamil Nadu with one ‘holy’ aim of converting Tamil Hindus and Christianising Tamil Nadu. Ironically, the writer Dr. K. Meenakshisundaram termed the era of these evangelists as the “Golden Period” of Tamil in his book, “The contribution of European scholars to Tamil”, originally presented as the author’s thesis at the University of Madras, 1966. So it is all the more imperative for us to demolish this myth of Christian contribution to the development of Tamil and bring out the truth.

Missionaries and their Mission


After landing in Tamil Nadu, the padris understood the need to learn the local language to converse with the populace for effective evangelization. They soon realized that the local populace, rooted in a centuries-old civilization, was culturally and religiously strong; hence they focused on Tamil literature to understand the cultural heritage and religious traditions, so they could devise different strategies for conversion. It needs to be understood clearly that these priests learnt Tamil language and literature with an agenda and not out of love or passion or with an intention of contributing to the growth of the language.

Moreover, it would not have been enough if these padris alone understood the cultural heritage and religious tradition of India; it had to be understood by the Church establishments which sent these missionaries on “holy” assignments. Only then could the masters realise the extent of manpower, money power and political power needed to destroy the 5000 year old culture and convert a spiritually strong India. That was why the priests learnt Tamil and translated the main literatures and wrote similar Christian works.

Abrahamic religions are political in nature; they are intrinsically political concepts more than religions, and aim to bring the entire world under their rule. They gain political power, capture territories and convert people. This was also the agenda of the Christian missionaries and the motive for them to learn our languages and literatures.

The Establishments

Starting from the 16th century, Christian aggression slowly spread to many parts of India. The Portuguese, Dutch, French, German and British establishments landed in places such as Goa, Kerala, Tamil Nadu, Bengal and the North-East, etc., in the guise of trade and missions, and started encroaching fast and armed invasions followed suit. The Portuguese Inquisition in Goa was a bloody and terrible chapter in Indian History and the British oppression started with the advent of East India Company.

After capturing power and establishing Crown rule in 1858, the British government gifted vast stretches of lands to the Churches and supported them with other infrastructures. They knew that the combined onslaught of political and religious power would produce quick results. It is pertinent to note that Indians have not woken up to this threat even after Independence, hence the government is being run by an Italian Catholic via a puppet Prime Minister, and many policy decisions are being taken in deference to the US Administration.

Journalist Subbu in Dravidian Maya (Tamil) says that the Christian priests who landed in Tamil Nadu from foreign lands laid the foundation for Dravidianisation in Tamil Nadu as they knew Indians could not be subjugated as long as Hindu Dharma prevails. Speaking about the beginning of Christian encroachment, Subbu says, “The Dutch established their trade centers in Pulicat (Pazhaverkaadu) in 1609, Sadras (Sadurangapattinam) in 1647, Nagapattinam in 1660; the British set up shops in Masulipatnam in 1622, Madras in 1639, Cuddalore in 1683 and also in Calcutta; the French got Pondicherry in 1674 and the Danish settled in Tranquebar (Tharangampaadi) in 1620.”

He adds, “On one hand the Padires straight away indulged in conversions and on the other hand they started creating rift among the Hindus to divide them.” In the chapter “Caldwell’s Cousins”, he explains vividly the various methods of conversion used by the Padires and how they divided Hindu society (Dravida Maayai, Trisakthi Publications, Chennai, 2010; pp. 20-28).

As part of the agenda of grabbing political power and converting the population, the Christian missionaries, to destroy the native culture, also indulged in “Inculturation”. (‘Inculturation’ - A danger to communal amity!

http://www.newstodaynet.com/col.php?section=20&catid=29&id=8512


Roman Brahmin!


The man who laid the foundation of inculturation was the Italian priest Robert de Nobili (1577-1656). He learnt Sanskrit and Tamil, wore saffron robes, sacred thread (attached with a small Cross!), sandal mark on forehead and called himself a ‘Roman Brahmin’. He set up an “Ashram” in Madurai, became a vegetarian and used “Pathukas” (wooden footwear). He claimed the Bible was the “Lost Veda”, the “Jesuit Veda” revealed by God, and was considerably successful in harvesting souls. Fortunately for Tamil Nadu, his European masters were not happy with his inculturation methods and subjected him to an enquiry which forced him to shift to other places like Trichy and Salem. Finally he settled in a small house in Santhome, Madras, and died in 1656. (“The Portuguese in India”, Orient Longman, Hyderabad, 1990, & “Christianity in India: A critical study,” Vivekananda Kendra Prakasham).   

Nobili is supposed to have written some 15 books apart from preparing a Portuguese-Tamil Dictionary. He is credited with the insertion of many Biblical terms in Tamil and no wonder Christianity was developed rather than the Tamil language!

Approving Untouchability, he said in 1650, “A person need not disown his caste, creed and culture to become a Christian. Those who say that these would get spoilt if one becomes a Christian are ‘Saathaans’. This teaching is the main obstacle in spreading Christianity”. [A. Sivasubramanian, “Kiruththvamum Saathiyum” (Christianity and Caste), Kaalachuvadu Publishers; cited in Dravida Maayai, p. 19).

Italian Munivar!


The next Italian missionary, Constantine Joseph Beschi (1680-1746), called himself Veeramaamunivar (Veer-Maha-Munivar) to pretend he was a great lover of Tamil. Outwardly conducting himself like a Hindu Sanyasi, he took care of the conversion business in the districts of Madurai and Thanjavur. His work on a biography of St. Joseph, Thembaavani, was hyped as a great work and projected as equivalent to Kambar’s Ramayana!

Even now it is propagated that impressed with the beauty and richness of Kamba Ramayana, Beschi wanted to create a similar Christian work and hence came out with Thembaavani. It benefited Christianity by establishing St. Joseph in Tamil Nadu. But it contributed nothing to the development of the Tamil language. How could the biography of a Christian saint help the growth of Tamil? He then came out with another work, Paramartha Guruvum avarin Seedarkalum (Paramartha Guru and his Disciples), to ridicule our centuries old ‘Guru-Sishya Parampara.’ This “Munivar”, who denigrated our Guru-Sishya Parampara, was honoured by Dravidian racists who installed a statue of him on Marina Beach.

German Iyer!


In the same period, a German missionary Barthalomaus Ziegenbalg (1683-1719) also worked in Tamil Nadu and called himself Ziegenbalg Iyer. This Protestant priest landed in Tranquebar (Tharangampaadi) in 1706 and worked with a Danish company which was the first to bring German printing machines to Tamil Nadu. He printed the first Tamil Bible (New Testament). Even while indulging in conversions, he often quarrelled with the Danish authorities who put him in jail for some time. He was the first to stoke anti-Brahmanism by creating a hatred for Brahmins among other communities. As he fell sick often, he died at the age of 36 in 1719, leaving behind two Churches, a training institute for converted Indian priests, and 250 converts in Tranquebar.

When the Lutheran Church, which grew in size over the years, celebrated the 300th anniversary of his arrival in Chennai in July 2006, Tamil Nadu Governor Surijit Singh Barnala eulogized Ziegenbalg for his “services” to the Tamil language and Tamil people. A commemorative Stamp was also released.

http://en.wikipedia.org/wiki/Bartholom%C3%A4us_Ziegenbalg

Ironically, even the British government didn’t bother to celebrate the second century of his arrival in 1906! It is truly unfortunate that a constitutional head of an Indian state eulogised a person who was instrumental in creating caste animosities among the natives in order to convert them and destroy the native culture.

The critical question is, did Tamil grow because of his Tamil Bible and other Tamil Christian works? Of course not! Only Christianity grew.

Italian Iyer and Thiruvaachakam distortion


Next in the list of Christian Priests who “served” the cause of Tamil was another ‘Iyer’ - G.U. Pope (1820-1907) or ‘Pope Iyer.’ He translated a few Tamil literary works such as Thiruvaachakam, Thirukkural and Naaladiyaar, and said he could find the teachings of Apostle St. Paul and St. Francis of Assisi in Sri Maanickavaachakar’s Thiruvaachakam; innocent Tamil scholars felt elated at his ‘graciousness’.

Even some Tamil Saivite Mutts felt proud at G.U. Pope’s statement. Tamil scholar Dr. Muthukumaraswamy, who has in-depth knowledge on Saiva Siddhanta, demolishes this myth, citing Pope’s own statement, “In the whole legendary history of this sage … there stands out a real historical character, which seems to be a mixture of that of St. Paul and of St. Francis of Assisi. Under other circumstances what an apostle of the East might have become,” as evidence of Pope’s sarcasm and disdain. He exposes the mindset of G.U. Pope who states that a Religious Guru from the East would not have attained a spiritual level beyond this in order to undermine the spiritual greatness of Sage Maanickavaachakar.  

Supporters and admirers of G.U. Pope in general and the Dravidian-Christian combo in particular have spread the following story for years:

G.U. Pope has the habit of beginning with a Thiruvaachakam hymn every time he writes a letter to his acquaintances in Tamil Nadu. One such time, he was so moved by the sacred hymn that the tears rolling down from his eyes fell down and erased a few words. As he thought that the tears (due to the sanctity of the hymn) too were sacred, he decided not to rewrite those words and sent the letter without adding them.

– The story was circulated to show that Pope was a lover of Thiruvaachakam, and a great admirer of Tamil Savant Sri Maanickavaachakar.

Dr. Muthukumaraswamy asks, “Who was the recipient of that letter? Which hymn was written in that letter? What happened to that letter? Is there any record of either Pope or the recipient or the recipient’s relatives and friends mentioning about that letter? Had this been a true story G.U. Pope would have certainly included it in the reprints of his translation. But why he had not done so? Even well-known Tamil Scholar ‘Thiruvaachakamani’ K.M. Balasubramaniam, who has great admiration for G.U. Pope, has not recorded that story in any of his works. Why?”

‘Thiruvaachakamani’ K.M. Balasubramaniam says, “….the genuine and gigantic efforts of Dr. Pope in uttering ‘Open Sesame’ to throw open the doors of the Treasure-cave of Thiruvachakam to the cultured Savants of the West stung the Tamils of their callousness and startled them into an awakening and appreciation of their past”. What more need be said about the innocence (or ignorance?) of Tamil Hindu scholars? Balasubramaniam has translated Thiruvaachakam in English! 

In the course of an article in www.tamilhindu.com,  demolishing the myth about G.U. Pope, Dr. Muthukumaraswamy exposes how Pope deliberately distorted the hymns titled ‘Neeththal Vinnappam’ (Praying for Mukti), which becomes an insult to Sage Maanickavaachakar. He explains:

Bhagwan Shiva presents himself before Sage Maanickavaachakar in the Temple at Thruthuraipoondi, blesses him and tells, “You embark on a yatra and finally come to my abode Kailash. Wherever you go, I will present myself before you as your Guru”. The Sage embarks on his yatra and one day reaches the temple at Uttarakosamangai near Ramanathapuram. As he didn’t get the darshan of Bhagwan Shiva, he feels let down and unable to bear this parting, with mounting sorrow and emotion sings a hymn earnestly praying for Bhagwan’s appearance.

Explaining the above context, G.U. Pope infers, “The serene and beautiful environment prevailing in Uttarakosamangai Temple was too ‘testing’ for Maanickavaachakar to continue his Sanyas. He also remembers his family life in Madurai married to a beautiful woman, and the patronizing which he got from the Pandya King. His retrospection of married life leads him to keep contact with the Deva Dasis serving the Temple. As he lost his control and crashed down from the higher level of Sanyas, he developed a sort of complex, which created a guilty consciousness forcing him to sing this hymn.”

To quote Pope, “From the evidence of these verses, we conclude that there were two things from which he suffered. One of these was the allurements of the female attendants who in bands pertained to the temple. We have noticed this elsewhere, Hindu commentators will often find mystic meaning, which are harmless, - if unfounded. Again and again in this and other poems he deplores the way in which he has been led to violate his vow. The other difficulty often referred to was the way in which mere ceremonial acts had to be performed, affording no relief to his conscience.” By giving such a blasphemous introduction to this divine hymn, G.U. Pope not only insulted Sage Maanickavaachakar and denigrated Thiruvaachakam, but shocked the Hindu majority and hurt their religious sentiments.

Dr. Muthukumaraswamy explains:

It is a norm in Bhakti Literature for the authors to take the sins committed by the people upon themselves... Maanickavaachakar takes upon himself all the sins continuously committed by the people without making any attempts to seek Mukti, and sings the said hymn praying for Bhagwan’s appearance and His blessings for Mukti. Does the distortion made by G.U. Pope add any value to the beauty and sanctity of Thiruvaachakam? Does it add value to the greatness of Sage Maanickavaachakar? Has it helped the development of Tamil? Will any self-respecting Tamil Hindu appreciate and eulogise G.U. Pope and thereby insult Maanickavaachakar?

http://www.tamilhindu.com/2009/10/gu_pope_and_thiruvasagam/

It is also a norm in Bhakti literature for poets to talk about ‘Sitrinbam’ (Kama) and later surrender at the lotus feet of Bhagwan praying for ‘Paerinbam’ (Mukti). Many Sages and poets have written such hymns and poems considering the presiding deity as their ‘Nayaka’ or ‘Nayaki’. The poets employ the entire range of ‘Nava Rasas’ in order to create a ‘Kaavya.’ 

In this case, Sage Maanickavaachakar’s hymn was not a confession, but a prayer for Mukti by taking upon himself all the sins committed by the people. He ultimately surrenders to Bhagwan requesting Him to liberate him from this Maya called Prapancha and bless him with Mukti. Pope’s interpretation is a nothing but an expression of Christian fundamentalism.

Dr. Muthukumaraswamy quotes another instance where G.U. Pope ridicules murti worship or vigraha aradana: “G.U. Pope says that a person who attains a higher level of spiritualism also indulges in Murti worship and rustic rituals, which go totally against his level of spiritualism.” To quote Pope’s own words, “There is in them a strange combination of lofty feeling and spirituality with what we must pronounce to be the grossest idolatory. And this leads to the thought that in Saiva system of today two things that would appear to be mutually destructive are found to flourish, and even to strengthen one another. The more philosophical and refined the Saivite becomes the more enthusiastic does he often appears to be in the performance of the incongruous rites of the popular worship”.

Pope exhibits the typical Christian hatred for murti puja by terming it an act of stupidity. Dr. Muthukumaraswamy rightly asks, “When Thiruvaachakam is full of Guru Stuti (Invoking the Guru), how come G.U. Pope ridicules murthi worship? Was it fair on his part to criticize such a divine act of Bhakti?”

Dr. Muthukumaraswamy cites yet another instance where Pope deliberately insults Maanickavaachakar, “All must be aware of the specific incidence (mentioned in Thiruvilaiyaadal Puranam – Purana on Bhagwan’s plays) that Bhagwan Shiva takes the blows from Pandya King’s flog for the sake of Maanickavaachakar, after which the King realizes the Sage’s greatness and appeals for pardon and later allows Maanickavaachakar to leave Madurai for Thiiruthuraippoondi. But G.U. Pope distorts this incident as follows:

As there was a conflict between Madurai and Chidambaram Temples, Maanickavaachakar left Madurai for Chidambaram and never returned to Madurai. He was afraid of going back to the Pandya King, who had not pardoned him for misappropriating the money given by the King for the purchase of Horses. So, he never got back to Madurai.

To quote Pope, “It does not appear indeed, that Maanickavaachakar ever revisited Madura after his formal renunciation of his position there. It may almost be inferred that he was never heartily forgiven by the king for the misappropriation of the cost of horses.” So much for G.U. Pope’s love for Thiruvaachakam!

Dr. Muthukumaraswamy says, “G.U. Pope wrote the translation of major portion of Thiruvaachakam staying in a town called Lugano in Italy, wherein he used to regularly visit the St. Maria degili Angioli Church to have the needed diversion, relaxation and a sort of rejuvenation by seeing the paintings of Bernardinao Luini. He has also recorded that he always used to feel the presence of Sage Maanickavaachakar beside him kneeling down and praying to Jesus. Pope avers that the Sage must have been a follower of Jesus until the time of his (Jesus) going to Heaven, which must be the only reason behind the feeling of great devotion found in his work. He also says that, he believed Maanickavaachakar, Mylapore’s Handloom worker (weaver - Thiruvalluvar) who wrote Thirukkural and the Nomad Gnanis (Jain Sages) who wrote Naaladiyar and others who have freed themselves from the flesh must have certainly visited this Church and realized themselves through the history of Jesus and Christian thoughts.”

http://www.tamilhindu.com/2009/10/gu_pope_and_thiruvasagam/

There is another concocted story about G.U. Pope in Tamil Nadu which says that Pope wanted the statement, “Ingu oru Thamizh Maanavan urangukiraan” (A Tamil student is sleeping here) sculpted on his cemetery and that the statement is still present there on his cemetery. But those who have gone to the cemetery have confirmed that there was no such statement written on his cemetery except the ones from the Bible. G.U. Pope’s cemetery can be seen in this link: http://www.flickr.com/photos/93039296@N00/759184087/

Motivated lies on Thiruvaluvar and Thirukkural

G.U. Pope translated and published Sage Thiruvalluvar’s Thirukkural in 1886. There is an ancient folklore that Thiruvalluvar was friends with a captain of a ship and used to meet him often at the beaches of Mylapore. G.U. Pope took this as a true story. As a true Christian, he also believed the myth of St. Thomas and relied on the concoction that Thomas converted a large number of families in and around Mylapore. He then gave an introduction to the Thirukkural as follows:

“Thiruvalluvar worked hard to acquire knowledge by all means. Whenever a ship anchors in Mylapore coast, Valluvar’s ‘Captain’ friend would send him message about the arrival of new visitors including foreigners. Many foreigners could have travelled in his friend’s vessel and landed in Mylapore via Sri Lanka. Within me I see the picture of Thiruvalluvar talking with the Christians gathering information and knowledge. He has gathered a lot of Christian theories in general and the minute details of Alexandrian principles in particular and incorporated them in his Thirukkural. The philosophy of Christian theories from the Church situated near Valluvar’s place is present clearly in Thirukkural. Thiruvalluvar lived between 800 AD and 1000 AD. The Christian Biblical works were certainly an evidence for Valluvar’s Thirukkural. He was certainly inspired by the Bible.”

(Dr. T.N. Ramachandran, Thamizhaga Andhanar Varalaaru, (History of Tamil Brahmins), Vol. II, LKM Publications, Chennai, 2nd pub. 2005, pp. 641 to 643).     

This sordid introduction to his translated work shows G.U. Pope’s fanatic mindset and the ulterior motive behind his “love” for Tamil language and literature! Dravidian racists have installed a statue of this Christian missionary on Marina Beach, an inexplicable honour for a man who denigrated the sacred hymns of Thiruvaachakam and insulted Sage Maanickavaachakar and Sage Thiruvalluvar.

No wonder they blithely ignore Saivite and Vaisnavite literary works, the great Nayanmars and Alwars, and sing paeans on Christian missionaries during the so-called Classical Tamil Conference!!! The irony is that Thiruvalluvar’s picture was the emblem of the conference!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Myth of Christian contribution to Tamil - 2
24/07/2010 06:23:18  Thamizhchelvan


Caldwell the Racist!
Another missionary who inflicted massive damage on Tamil Hindus was the Scot Robert Caldwell (1814-1891) who, along with his wife Elissa Mault, resided in Tirunelvelli and made huge conversions. While he focused on the male population, she converted the womenfolk.

He sowed the poisonous seed called Dravidian Racism. He fully utilised the Aryan-Dravidian theories concocted by German linguist Max Mueller and imposed them on Tamil Hindus as true history. He abused the word ‘Dravida’ to the hilt and projected Tamil Hindus as a separate Dravidian Race. His book, Dravida Mozhikalin Oppilakkanam (A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages, Harrison: London, 1856), which gave him the reputation of a great champion of Tamil, spewed venom on Brahmins and accused them of spreading lies. If Ziegenbalg was the founder of anti-Brahmanism, Robert Caldwell was responsible for spreading it throughout the region, giving a stimulus to the radicalization of the Non-Brahmin movement.

(http://en.wikipedia.org/wiki/Robert_Caldwell

Ironically, ‘A comparative grammar of the Dravidian or South Indian family of languages’ cannot be termed his own work as he allegedly took lots of passages from Francis Whyte Ellis, who wrote “Dravidian Language Hypotheses”. To understand why Caldwell resorted to ‘research’ South Indian languages, one should read Dr. K. Muthaia’s article, Caldwell Oppilakkanaththin Arasiyal Pinnani (The Politics Behind Caldwell’s Comparative Grammar), published in the April 1997 issue of the Tamil monthly magazine Kanaiyaazhi.


Muthaia states, “Many research conclusions found in Caldwell’s book on comparative grammar of Dravidian languages have political reasons and undertones. The motive behind his arrival was to convert the South Indians and Christianise the southern region. He was also considerably successful in his religious mission… A detailed and in-depth study of his work would make us understand that he had had Sanskrit hatred, anti-Brahminism and denigration of Hinduism as objectives, but not establishing the antiquity of Tamil and the individuality of Tamil people… Knowing pretty well that he would not be able to spread Christianity among Tamil people unless their mindset on Hindu culture and Sanskrit language was changed, he indulged in creating hatred for North Indians in the minds of the Tamil Hindus. As a first step in that direction, he created the concept of ‘Dravidian Language Family’ ” (Dravida Maayai, Subbu, op. cit., pp. 26-28).

Caldwell’s infamous book Tinnevelly Shanars (Printed by ‘Reuben Twigg’ at ‘The Christian Knowledge Society’s Press’, Church Street, Vepery, Madras – 1849)  proved to be his nemesis. Though his focus for conversion was mainly on Shanars (Nadars), the dominant community in Tirunelvelli, he literally denigrated them and their lifestyle in the said book. The outraged and agitated community allegedly decided to punish him which forced him to shift base from Tirunelvelli to Ootacamund, where he breathed his last.  

Robert Caldwell was instrumental in creating anti-Brahmin, anti-North, anti-Sanskrit and anti-Hindu feelings among the Tamil people and dividing them through Aryan-Dravidian racial theories. His activities laid the foundation for Tamil separatism, which badly affected the national integration. His Comparative Grammar of Dravidian Languages also played an ugly role in creating racial differences between Sinhalese and Tamils in Sri Lanka, for he argued in that book that “there was no direct affinity between the Sinhalese and Tamil languages”. There is not even an iota of truth in the propaganda that he was a lover of Tamil and helped the development of Tamil. That is a misinformation campaign floated by the Church and supported by Dravidian racist parties.  

At a seminar on the last day of the recent Classical Tamil Conference, Prof. Parveen Sultana said, “Protecting our Mother Tongue is very important. We have come across many instances in world history where nations are conquered by capturing and dominating their languages. For example, a famous quote doing rounds in Africa says, ‘When they came here, they had the Bible and we had our lands. Now we have the Bible and they have our lands’! This has happened wherever Christianity has landed”.

That she spoke this truth in a conference where the likes of Caldwell were eulogised shows her courage! Delving into the great culture of this land, the learned professor spoke about the construction of temples and their greatness. Parveen Sultana’s speech was one of the rare highlights of the conference which was otherwise dominated by Christianity, Dravidian racism and eulogies for Kalaignar Karunanidhi. 

More on Padires’ love for Tamil!
The history of Tamil Nadu has many more evidences of the ‘divide and dominate’ policy of the White Church. During the reign of ‘Kizhavan Sethupathi’ in the kingdom of Ramanathapuram, a Portuguese Padire by name John-De-Britto indulged in heavy harvesting of souls. He even converted the close kin of Sethupathi Raja, but was finally punished by the King. V. Gopalan has written a detailed essay on this missionary and his activities: 

http://www.tamilhindu.com/2010/06/truth-behind-john-de-britto-history/

.
Sri Thyagaraja Chettiar was a great exponent of Tamil literature and had great love for the language. Once a European missionary who claimed to have mastered Tamil Grammar came and showed some changes he had made to a few verses of Thirukkural. Outraged by the audacity of the Padire to change verses of such a great work, adored as a Tamil Veda, Sri Thyagaraja Chettiar scolded him and literally drove him away. This incident is mentioned in “Dr. Vu. Ve. Swaminatah Iyer Urainadai Noolkal” (Dr. U.V. Swaminatha Iyer’s Prose Works, Vol.-3, pp. 520-523).   

Sri Pandithurai Thevar of Madurai, another great exponent of Tamil language and literary works, learned that a British missionary had made changes to the very first verse of Thirukkural and printed the same. He immediately purchased the entire lot and burnt them! (Dravida Maayai, op. cit., pp. 21-22).

Baptising Thiruvalluvar and Blaspheming Thirukkural

Christians who had the temerity to lay their hands on Thirukkural then, have now gone to the extent of baptising Thiruvalluvar!!! Taking a cue from G.U. Pope’s atrocious introduction to Thirukkural, a fanatical evangelist called Deivanayagam, supported by the Madras Catholic Diocese, has been on a relentless campaign that, “Thiruvalluvar was a disciple of St. Thomas and most of the teachings in Thirukkural have been either taken from Bible or from the preaching of St. Thomas.”

The Roman Catholic Dioceses of Kerala and Tamil Nadu had announced in 2008 that they would be producing a film on the life and times of St. Thomas, wherein they would depict Thiruvalluvar as a disciple of St. Thomas. 

Later, as confirmation of the unholy Christian-Dravidian nexus, Tamil Nadu Chief Minister Karunanidhi graced the occasion of the said film’s inaugural function as Chief Guest. Though himself an expert on the Thirukkural, the Chief Minister chose to participate in the inauguration of a film falsely portraying Thiruvalluvar as a disciple of St. Thomas, a complete concoction and an audacious expression of extremist evangelism.

(http://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=1221

and

http://www.newstodaynet.com/col.php?section=20&catid=29&id=8961

)


Tamil prose and Christian farce!
An oft repeated propaganda is that Christian missionaries introduced “Prose” writing in Tamil. A blatant lie! When Tamil Hindus have been adept at art, literature, music, architecture and theatre, wouldn’t they have been good in prose too? Is it not outrageous and insulting to say that people from Europe came and introduced prose writing to Tamil Hindus?

Tamil as a language is at the least 2000 years old. Starting from the Sangam Era, Tamil tradition has been a literate tradition with written records, preserved down the centuries by late classical and early medieval Tamil Brahmin and Saivite Hindu scholars. It was not an ‘oral’ legacy as alleged by Christians and Dravidian racists.

We have had commentaries on almost all ancient literary works, Sangam and post-Sangam, in prose, by learned scholars such as Ilampooranaar, Senavaraayar, Peraasiriyar, Parimelazhagar, Nachinaarkkiniyaar and Deivachchilaiyaar. Saivite Hindu Adheenams have helped preserve the Classical Tamil literary tradition down the centuries. The important fact to be noted is that the continuance and preservation of written Tamil literary heritage happened despite repeated invasions and unsettled political conditions. 

The rich tradition continued in more modern times by devout Hindus such as U.V. Swaminatha Iyer, Ramachandra Dikshidhar, Neelakanda Shastri, P. Narayanaswami Iyer and Raghava Iyengar, etc in Tamil Nadu and staunch Hindu activists such as Arumuka Navalar, C.W. Thamotharam Pillai and Swami Vipulananda in Sri Lanka. 

The so-called contribution of Christian missionaries comes nowhere near the contribution of these devout Hindus to Tamil scholarship in recent times. That is mainly because these devout Hindus had Bhakti, involvement in the growth of Tamil language, passion towards the culture of the soil and the mind to sacrifice everything for the development of the language, continuance of the culture and preservation of the tradition. The missionaries focused destructively on the Christianisation of the native culture. They had ulterior motives unlinked to the Tamil language - consolidation of European rule in India and conversion of the natives to the religion of Europe.

The Lexicon story!


The website www.cathnewsindia.com
says, “The task of setting down on paper the alphabet, grammar, rules and vocabulary of the Tamil lexicon began in Christian schools, towards the end of the 19th century. It was pioneered by Father Swamy Gnanapragasam, who transcribed hundreds of ancient scripts into print. A statue in his honor can be seen in Jaffna city. His work was continued by Father Hyacinth Singarayer David, a master in Indo-Aryan languages and doctor in linguistics, who published six volumes of the lexicon...”

(http://www.cathnewsindia.com/2010/06/29/priests-honored-for-saving-tamil-language/

)
This is an inappropriate claim - the alphabet, vocabulary and rules of Tamil lexicon by far precede the Christian colonial missionary era. It seems Tamil Scholars in Sri Lanka are divided over the acceptance of Father Gnanapragasam as a scholar and historian. Some say he had made claims on history and linguistics that were not backed by historical evidences. For example, he said Tamil was the mother of all languages in the world! They also say that none of his works were peer reviewed by well known academics on the subject or published in reputed journals of history; he lacked post-graduate training in the historical method and was hardly a scholar of note.

Long before the arrival of Christian missionaries we had “Nigandus” or dictionaries. Tamil scholar/poet  and Maha Vidwan Dandapani Desikar’s direct student Sri Maniyan, who had written lexicons for many ancient Tamil literary works, says, “Nigandus were in the form of poetic verses, which made the students, teachers and research scholars to remember them easily. These Nigandus have been there since 11 century CE. But, the dictionary of alphabetical order was introduced by Foreigners”. (Interview in Rasanai monthly magazine, July 2010, Chennai)

But to claim that “Prose” writing itself was introduced by Christian missionaries and only because of their contribution Tamil got a second life in the 18th century and survived is outrageous. The motive behind making such a claim is quite obvious! For the great scholars who have written commentaries in prose for ancient literary works, and for the scholars who have produced ‘Nigandus’, would it have been difficult to come out with a lexicon of alphabetical order in due course of time?

Padires; Proselytisers; Printers!

The fact of the matter is that the white Christians imported ‘printing machines’ from their countries and introduced printing technology here. What for? To help them in proselytisation works and to speed up the process of conversion!

Before the introduction of paper and printing, valuable books in Tamil language were written on both sides of “palm leaves” and committed to memory. Writing on the palm leaf, a common practice in those days, was a difficult work which only a trained person could do (so also writing on stone, copper plates etc). Several written leaves were bound together with wooden or brass boards at each end and tied up into a book. For referring to anything in a book, it had to be untied, the relevant page spotted, and the matter read. This laborious process was quite easy to Tamil Hindus.

But the missionary found it extremely difficult. So he transported the printing machine, the paper and the techniques, from his native west. Another great handicap with the palm leaf was that only one copy could be written at a time; it could be duplicated only by hand copying one at a time. Every pupil under a teacher copied his own book in manuscript. But for the proselytizing missionary, many copies had to be taken at a time for distribution among prospective converts. Hence the printing machine was essential for them.

We may note that printing for the first time in India was in the Tamil language. Printing machines were imported by Jesuit priests and the first books in Tamil Nadu were printed in Tirunelvelli. The books printed through German collaboration for Danish Protestant missionaries were in vogue in the east coast around Tranquebar in Thanjavur district. (We have already seen that the German Protestant Padire Barthalomaus Ziegenbalg printed the Tamil Bible through a German machine owned by Danish Church in Tranquebar).

Similarly, the British established a printing press at Vepery in Madras for their own missionaries. The East India Company had a law which prohibited natives from opening any printing press or from printing any book. Only foreigners and missionaries (including native Christians) were permitted printing. The admirers among native Christians say the missionaries did great service to Tamil by introducing printing. But, it was done with an ulterior motive. In the matter of printing, only missionaries were encouraged by the Company. Printing in local languages helped the missionaries in their conversion work and the Company wanted proselytisation. The history of printing in India, as of any other progressive enterprise like education, shipping or even medicine, is the history of suppression of Indian activities.

Ellis, who was a civilian, and Munroe, who was governor of Madras, both took great trouble to get the Press Law annulled, but this was done only in 1835. But for this ban, printing of Tamil books by eminent Tamil Hindu scholars of the day would have commenced even in the 18th century, and a great volume of classical Tamil literature could have been preserved through print.

The Company positively helped only in the loss of a vast literary wealth in the whole of India. The loss is said to be the greatest in Tamil, because Tamil had the largest heritage of ancient classical literature in the whole of India, barring perhaps Sanskrit. (‘History of Early Printing’ from “Christianity in India – A Critical study” by Vivekananda Kendra Prakashan) 

This being the truth, the claim by Christians and Dravidian racists that Christian missionaries helped the development of the Tamil language is outrageous, atrocious, and simply fallacious. It is evident that the Christian establishment in fact destroyed the Tamil language and culture to a great extent by not allowing natives to own printing presses and print books by promulgating a law to this end. Ergo, this is the “great Christian service” to Tamil!!!
(To be concluded…)


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Behind every Dravidian act a Christian push
05/07/2010 14:24:43



Tamizhchelvan




In the just concluded DMK jamboree on Classical Tamil, Finnish Indologist Asko Parpola was presented the Kalaignar Karunanidhi Classical Tamil Award by President of India Smt. Pratibha Patil. The award carries a cash prize of Rs. one million, a Thiruvalluvar statue made of panchalokha and a citation.

Asko Parpola is an exponent of the Aryan Invasion/Migration Theory, which has been demolished by various scholars by all means including DNA studies. At a time when even Marxist historians have understood the stupidity behind the Aryan Invasion Theory and stopped peddling it, the Dravidian parties of Tamil Nadu continue to harp on it to divide the masses and alienate the Tamil people from the Hindu fold.

Despite his scholarship and exemplary work on the Indus (Sindhu-Saraswati) Valley civilisation, Iravatham Mahadevan is also an exponent of the Aryan Invasion/Migration Theory. Though his findings after painstaking researches have been remarkable, they are sullied by his connecting them to support the so-called Dravidian civilisation, which knowingly or unknowingly helps the Dravidian racist parties. This year he was duly honoured with the Thiruvalluvar Award by the DMK government for his great contribution in the fields of Epigraphy and Indus Script studies.  

As Iravatham Mahadevan has a long acquaintance with Asko Parpola and was Vice President in the supreme committee constituted for the Classical Tamil Meet, there is a strong possibility that he may have recommended Parpola’s name for the Classical Tamil Award, which the DMK government would have accepted as Parpola’s claims support the cause of Dravidianism. Incidentally and significantly, in his acceptance speech at the Conference, Parpola said, “When the Chief Minister of Tamil Nadu’s award is given to me for a Dravidian solution of the Indus enigma, this award will inevitably be interpreted by many people as politically motivated”.

Even after the demolition of the dubious Aryan-Dravidian Theory, if a scholar sticks to it, and a government which benefits from that theory awards that scholar, it would certainly be interpreted as politically motivated. Parpola has only confirmed the interpretation!
Let us not forget that the word “Dravidian” was first coined by Christian padre Robert Caldwell who came to Tamil Nadu with a single purpose of evangelisation. Nowhere in ancient Tamil literature does the word ‘Dravidian’ exist; there was a Christian agenda of dividing the native people behind Caldwell’s coining the term ‘Dravidian’. While the British Government used the Aryan-Dravidian theory to divide and rule the nation, the Church used it to conquer the languages and destroy the culture in order to Christianise the nation.
To fully capture a nation or a state, the Church adopted three strategies. First, ‘conquer the native language’, second, ‘destroy the native culture’ and third, ‘capture political power’. Indeed, Christianity is more a political concept than a religion, which is why it moved hand in hand with Empire. The main job of the missionaries was to learn the native language, study the native literature to understand the culture and tradition in order to destroy it slowly, and create an atmosphere for the political establishment to invade and capture power.

All missionaries including Caldwell, who landed in Tamil Nadu, projected themselves as great lovers of Tamil and the gullible masses and unassuming native intellectuals believed that projection. By the time the Scottish missionary Robert Caldwell landed in Madras (8 January 1838), Rev. John Anderson, a Missionary from the Church of Scotland, had already established the ‘General Assembly School’ (3 April 1837) with 59 boys, in a rented building in the Armenian street in the ‘Black’ Town of Madras. Anderson soon opened branch schools in neighbouring towns like Conjeevaram, Chingleput, Nellore, and other places in Madras like Triplicane.

While Anderson’s colleagues Rev Robert Johnston and Rev John Braidwood helped him to run the schools, they also converted some of the educated elite in Madras to serve as teachers. One such example was Rev P Rajagopaul, who ably assisted in running these schools. This ‘General Assembly School’ later became the ‘Madras Christian College’. (http://www.mcc.edu.in/index.php?option=com_content&task=view&id=30&Itemid=56).
Naturally due to political patronage, Madras Christian College emerged as an institute of excellence and students from elite families considered it to be a privilege to study there. When Robert Caldwell was at his peak, young Tamil scholars like V.G. Surya Narayana Sastri and Swami Vedachalam joined the Tamil Department of Madras Christian College as teachers. Both later headed the Tamil Department. Possibly due to exposure to the Christian environment and its influence, Surya Narayana Sastri, a Brahmin, changed his name to ‘ParithiMaar Kalaignar’ (Parithi=Suryan/Sun; Maal=Narayanan/Thirumal; Sastri= Kalaignar/ Pandit), developed a sort of hatred for Sanskrit and started the “Pure Tamil Movement” with the aim of ‘de-Sanskritising’ Tamil.

Swami Vedachalam, a staunch Saivite, followed suit and changed his name to “Maraimalai Adigal” (Marai=Veda; Malai=Chalam; Adigal=Swami). Surya Narayana Sastri, also known as ‘Dravida Sastri’ died at a young age of 33. Maraimalai Adigal carried on with the ‘Pure Tamil Movement.’

Though he was a Saivite and hated the atheistic principles of the “Self-Respect Movement” started by E.V. Ramasami, Maraimalai Adigal worked with them on the ‘anti-Sanskrit’ and ‘anti-Brahmin’ platforms. As Christian Missionaries always believed in “Racial Theories”, they cleverly created the concept of anti-Brahminism by classifying Brahmins as “Aryans & outsiders”. As we know, the Self-respect Movement later became the Dravidian Movement and led to the formation of DK, DMK, etc. The founder of Dravidar Kazahagam, EVR, was a supporter of the British and never welcomed Indian independence. In fact he pleaded with the British government to continue their regime in Tamil Nadu alone.

For all Dravidian racist leaders like EVR, Annadurai and Karunanidhi, Robert Caldwell was (and is) a “God;” they utilized his Dravidian theories to the hilt and called for a separate Tamil Nation. Make no mistake, “Tamil Separatism” is a Christian agenda and the Church has a long term plan of forming a ‘Tamil Christian Nation’ with Tamil Nadu and North and East Sri Lanka. With this objective, the Church supported the LTTE and its Tamil Eelam demand. Dravidian racist leaders’ chauvinistic campaign against “Aryan-Brahmins”, well supported by the Church, helped them to capture power in Tamil Nadu in 1967 and till date no nationalist party could dislodge them from the seat of power.

And now, the main national party Indian National Congress, which was the culprit in bringing the Dravidian parties to power in Tamil Nadu, is under the firm clutches of an Italian woman who maintains a close and mutually beneficial relationship with the racist DMK headed by Karunanidhi. Ergo, the Church is on a very strong wicket in the center as well as the state!
Little wonder a Christian scholar got an award for giving a second life to the dubious concept of Dravidian civilisation. This is not the first time Iravatham Mahadevan has used his influence. Last July (2009), he brought a German “scholar” called Michael Witzel from the Sanskrit Department of Harvard University to give a lecture on the Rig Veda at the sacred seat of Sanskrit, the Sanskrit College, Chennai.

Witzel, well known for his anti-Hindu stance, received a lot of brickbats and could not answer many questions posed by the audience after the lectures at the Sanskrit College and Madras University. A fast growing web portal - www.tamilhindu.com - sent Witzel five questions regarding his dubious theories and he failed to answer despite acknowledging the mail and committing to answer them! In spite of repeated reminders, he pretended to be too busy and till date has not answered, or could not answer, even one question. 

(http://www.tamilhindu.com/2009/07/questions-to-michael-witzel/ Though the article is in Tamil, the questions are given in English as well).

Iravatham Mahadevan also took Michael Witzel to Roja Muthiah Research Library, founded by the University of Chicago Library in the name of a person (Roja Muthiah) from whom it purchased a massive collection of books and palm leaf manuscripts, as he sold his entire collection on being unable to maintain it due to financial constraints. The library is now focusing on collecting more study materials in all fields in Tamil to facilitate research scholars and students in Tamil studies. (Ref: - (http://www.lib.uchicago.edu/e/su/southasia/rmrl.html and http://www.visvacomplex.com/RojaMuthiah1.html)

Incidentally, after the DMK jamboree in Coimbatore, Iravatham Mahadevan arranged a lecture by Asko Parpola on ‘Indus Script and the Wild Ass’ on 28 June 2010 at the Roja Muthiah Library. This was the first lecture in memory of the Christian Professor Late Mr. Gift Shiromani, who taught Humanities at the Madras Christian College, which sponsored the event. Mrs. Rani Shiromani presided over the function and the Principal of MCC also spoke on the occasion. But Iravatham Mahadevan restricted the number of questions after the lecture, and research scholars who came prepared with a number of questions were totally disappointed.

While the DMK jamboree was going on, well known scholar, Indologist and Director of Saraswati Sindhu Research Center, Dr. S. Kalyanaraman gave an interview to Rediff.com in which he contested the findings of Asko Parpola, saying he did not agree with Parpola’s unproven ‘decipherment’ of the Indus script on the premise that old Tamil was the underlying language. He pointed out that Parpola’s was simply a belief system, not premised on evidence of the corpus of inscriptions and the underlying cultural foundations of the civilization of 4000 years ago. He appreciated Parpola’s contribution in preparing the corpus of Indus script inscriptions in a logically organized set of concordances, but refuted his claims of decipherment. (Ref: - http://news.rediff.com/interview/2010/jun/24/interview-no-proof-of-tamil-script-in-indus-civilization.htm)

Responding to the interview, Parpola said with a tinge of arrogance, “Dr. Kalyanaraman has no linguistic training. He has not heeded my advice of taking a university course in linguistics. He is a supporter of Hindutva ideology and hence I have chosen to ignore his writings and opinions”. The dismissal of a native scholar on grounds of religion shows the Christian fundamentalism at work. Yet Dr. Kalyanaraman is not the only native scholar to question the decipherment claims of Parpola, who has also failed to answer the critique of Prof BB Lal, the iconic archaeologist, regarding his decipherment claims. (Ref: -http://www.docstoc.com/docs/45231738/bblalindusscript2 )

Parpola’s short interview to The New Indian Express (29 June 2010) on the sidelines of the lecture at Roja Muthiah Library, exposes the renewed attempt to resurrect the defunct Aryan Invasion Theory. Says Asko Parpola, “Dravidians were originally the inhabitants of the Indus Valley in Gujarat. They were not driven south by the Aryans; instead, they gradually moved there in search of greener pastures and more fertile soil for grazing and farming – and this was before the invading Aryans even came to town. There is evidence that this move was much before the invading Aryan hordes came to India. The Dravidian community that remained near the Indus River was conquered over many years later by the Aryans”.

Then Parpola makes a stunning revelation, “Just like when the British took over India, they made the Brahmins learn their language and work under them to administer the country before they conquered the whole nation, likewise, these Aryans too made the local village chieftains learn the Indo-Aryan language. An elite layer of Dravidians would have initially learnt Indo-Aryan first. The northern Dravidians then over time took completely to speaking Indo-Aryan with only traces of the original proto-Dravidian language still remaining”.
Parpola adds, “Dravidian languages flourished in the south because the Aryans could never conquer the south. Even the north could have taken centuries to conquer”. (Ref: - http://epaper.expressbuzz.com/NE/NE/2010/06/29/INDEX.SHTML )

These statements are self-explanatory and readers can draw their own conclusions. As an exponent of the Aryan-Dravidian Theory, he was chosen for the award by the Dravidian government possibly on the recommendation of Iravatham Mahadevan, one of the four vice presidents of the supreme committee headed by Chief Minister Karunanidhi. The other vice presidents were Deputy CM Stalin, Finance Minister Anbazhagan and former Vice Chancellor of Anna University Prof. V.C. Kulandaiswamy.  

Karunanidhi, by organizing this party jamboree in the name of classical Tamil by spending taxpayers’ money to the tune of Rs. 400 crore, has tried to achieve the following objectives:

-        To anoint himself as sole protector of the Tamil language and supreme leader of the Tamil people and to appropriate authority to conduct future Classical Tamil conferences.
-        To proclaim Tamil as the oldest language, older than and supreme to Sanskrit.
-        To resurrect the now defunct Aryan-Dravidian Theory.
-        To forcefully emphasise Tamil identity, thereby alienating Tamil people from the Hindu fold and the national mainstream.
-        To give a fresh impetus to Tamil separatism.
On the grand finale of the jamboree, he made many announcements, including:
-        World Tolkappiyar Classical Tamil Sangam (WTCTS) will be set up in Madurai to hold Classical Tamil Conferences at reasonable intervals.
-        Tamil must be made the official language of the government of India.
-        Tamil must be officially declared as the language of usage at all levels at Madras High Court. 
-        Law will be enacted to give preference in government employment to persons who have studied in Tamil medium.


Dr. Vijaya Rajiva, a political scientist who taught at a Canadian University feels that, “What should trouble Tamils and Indians in general is Karunanidhi’s ongoing sponsorship of Tamil as a language that is not connected to the rest of Bharat. And followers of the Tamil Tigers have taken to organising themselves as anti India. This expresses itself unfortunately in the world of academia where noted individuals such as Iravatham Mahadevan (a former civil servant turned self taught Tamil scholar) and Asko Parpola a Finnish scholar of Tamil, are seemingly engaged in using the Tamil stick with which to beat a pan Indian identity. Mahadevan is reported to have said: I am not a Hindu. Parpola, of course, is Finnish and most likely does not identify with the word ‘Hindu’.” (http://www.haindavakeralam.com/HkPage.aspx?PAGEID=11445&SKIN=B ).

At first Karunanidhi had no idea of holding a ‘World Classical Tamil Conference’. Since the International Association of Tamil Research (IATR) refused permission to hold the “Ninth World Tamil Conference” without understanding Karunanidhi’s urge to hold it before the elections while he was in power, Karunanidhi took it as a challenge and cleverly named the meet as “First World Classical Tamil Conference”.

As he has announced the formation of the World Tolkappiyar Classical Tamil Sangam (WTCTS), the fate of the International Association of Tamil Research (IATR) remains to be seen. There is a possibility of WTCTS becoming dysfunctional if Karunanidhi loses power. As of now, the community of Tamil scholars worldwide is divided between IATR and WTCTS. Some reputed scholars say if Karunanidhi wins the 2011 elections, he would transform WTCTS into the ‘Fourth Tamil Sangam’!

If Tamil is made an official language of India, other states will demand official status for their languages. They will also demand permission to use their languages in their respective state High Courts if the Centre allows Tamil to be used in the Madras High Court. This would necessitate that the Chief Justices (and other judges) must be natives of the particular state and speak the particular language.

The enactment of a law to give preference to persons who have studied in Tamil medium for government employment is another dangerous move. Other states would follow suit, and considering the inter-state rivalry which already exists for water and power, national integration will become impossible. Nehru’s huge blunder of agreeing to the linguistic demarcation of states will be felt severely now …

This is what the Church and the Christian world wanted. Splintered India will be easier to Christianise than a culturally united India. As far as Tamil Nadu is concerned, the first step is ‘Dravidianisation’, which is synonymous with ‘separatism’; the second and final step will be Christianisation.     

All the above announcements were made with an objective to Dravidianise Tamil Nadu in the name of Tamil. Karunanidhi started by changing the Tamil New Year. The future course of Dravidianisation has been underlined in the Coimbatore Conference. Max Mueller, Robert Caldwell, et al will rise from their grave to have a barbaric laugh.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Mangalore: Weeds within - Seven Arrested for Damaging Church Property

Pics: Dayanand Kukkaje
Daijiworld Media Network - Mangalore (SP)

Mangalore, Mar 19: In connection with indulging in rampage in a banana plantation belonging to Babbukatte Nityadhar Church and trying to disrupt peace in the region, Ullal policemen arrested seven persons on Wednesday March 18.

They are Jayson Verghese (23), Vijit Sunny Rozario (21), Araki Alfred (20), Roshan Cutinho (26), all from Nityadhar Nagar and Ronald Roshan (22), a resident of Kuttar Prakash Nagar. They were produced in the court on Wednesday.

daya_031909_nithyad1.jpg

On Monday morning, the banana plantation was found to have been damaged heavily to look as if people belonging to a particular community had barged into the plantation, and a saffron flag had been planted there, signifying that Hindu outfits had been involved with the destruction. The incident took place at a time when Hindu Samajotsav was being organized in the city.

The policemen said that during interrogation, the arrested persons revealed, they wanted to disturb the peace in the region by projecting the incident as a handiwork of a particular community.

daya_160309_ullal1.jpg

daya_160309_ullal2.jpg

daya_160309_ullal3.jpg

daya_160309_ullal4.jpg
Banana Plantation that was damaged

While making inquiries about those who inflicted the above damage, the policemen could by chance, lay their hands on the two accused, who had burnt down a motor bike on November 30 near Pandit House. Joy D'Souza (20) and Calvin Johnson D'Souza, from Nityadhar Nagar, accused of this act, were arrested and produced in the court on Wednesday. The policemen are also looking at the possibility of these two having been also involved with the destruction of the banana plantation.

Under the guidance of the city rural inspector Lingappa Poojary, Ullal sub-inspector of police Shivprakash has been conducting investigation



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தற்கொலை அங்கிகளை கடத்திய பாதிரியார் கைது!

February 2nd, 2008Save & Share

இன்றையதினம் வத்தளை பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ள தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிபொருட்களை ஆர்.நகுலராஜா என்ற பாதிரியாரே எடுத்து வந்துள்ளதாக தெரியவருகின்றது. மன்னார் சென் செபஸ்ரியர் வீதியை சேர்ந்த மேற்படி பாதிரியார் ஒருவர் ஜந்து தற்கொலை அங்கிகளை மன்னாரில் இருந்து எடுத்துவந்து வத்தளையில் உள்ள சிலரிடம் கையளித்துவிட்டு திரும்பியுள்ளார்.

பாதிரியாரால் கையளிக்கப்பட்ட ஜவரில் ஒருவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிபொருட்களை வழங்கிவிட்டு “வெள்ளைநிற டொல்பின்” ரக வானில் திரும்பி கொண்டிருந்த பாதிரியார் தலவாய் என்ற இடத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.

விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பாதிரியார் வழங்கியுள்ள தகவலில். தான் எடுத்து கொண்டுவந்த பொருட்கள் என்னவென்று எனக்கே தெரியாது என்றும், இதனை வத்தளையில் உள்ள நபர்கள் சிலரிடம் கொண்டு சென்று கையளிக்குமாறு ஆஜர் ராசப்பு ஜோசப் அவர்கள் தெரிவித்த அறிவுரையின் பிரகாரமே எடுத்து வந்துள்ளதாக நகுலராஜா என்ற பாதிரியார் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து அறியவருகின்றது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Oneindia Mobile
சர்ச் அனாதை இல்லத்தில் 2 பெண்கள் கற்பழிப்பு- பாதிரியார் கைது
ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 6, 2009, 10:37 [IST]

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே சர்ச் வளாகத்தில் உள்ள அனாதை இல்லத்தில் தங்கியிருந்த இரண்டு பெண்களை கற்பழித்த குற்றத்திற்காக பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீஞ்சூரை அடுத்த வேலூர் கிராமத்தில் சத்யம் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற அனாதை இல்லம் உள்ளது. இதை சாது இமானுவேல் என்ற பாதிரியார் நடத்தி வந்தார். 1988-ம் ஆண்டு முதல் இந்த அனாதை இல்லம் செயல்பட்டு வருகிறது.

இந்த இல்லத்தில் முன்பு வசித்து வந்தவர் கீதா. இவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த இல்லத்தை விட்டு வெளியேறினார். பாதிரியார் சாது இமானுவேல் பாலியல் சேஷ்டைகளில் ஈடுபட்டதால் கீதா வெளியேறியதாக தெரிகிறது.

இருப்பினும் அவ்வப்போது இங்கு வந்து இல்லத்தில் தங்கியிருப்பவர்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்குவது கீதாவின் வழக்கம்.

அதுபோல சமீபத்தில் அவர் வந்தபோது அவரை அணுகிய இரண்டு பெண்கள், தங்களை பாதிரியார் இமானுவேல் பாலியல் ரீதியாக மிகுந்த தொந்தரவுகள் செய்து வருவதாகவும், இருவரையும் அவர் கற்பழித்து விட்டதாகவும் கூறி கதறியுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கீதா, உடனடியாக ஜஸ்ட் டிரஸ்ட் என்ற என்ஜிஓ அமைப்பைத் தொடர்பு கொண்டார். 

அவர்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர்.

மாவட்ட எஸ்.பி. சாரங்கனிடம் புகார் சென்றது. அவரது உத்தரவின் பேரில் கோட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இல்லத்திற்கு விரைந்து வந்த போலீஸார் பாதிரியாரைக் கைது செய்தனர்.

மேலும் இல்லத்தில் தங்கியிருந்தவர்களும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

இதுகுறித்து திருவள்ளூர் எஸ்.பி. சாரங்கன் கூறுகையில், சாது இமானுவேல் இரண்டு பெண்களை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

மேலும் அதில் ஒரு பெண்ணை ஆறு மாதங்களுக்கு முன்பு செங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவைக் கலைத்துள்ளார்.

தனது குடும்பத்தினர் வீட்டில் இல்லாத போது வீட்டை சுத்தம் செய்யும் பணியில் இல்லத்தில் உள்ள பெண்களை ஈடுபடுத்தி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்வது அவரது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

சர்ச்சுக்குள்ளும் கூட இந்த மாதிரியான வேலைகளை அவர் செய்து வந்துள்ளார். 

அந்த இல்லத்தில் தங்கியிருந்த எட்டு இளம் பெண்கள் மற்றும் 2 சிறுவர்களை மீட்டுள்ளோம்.

கடந்த 25 ஆண்டுகளாக இந்த சர்ச்சையும், அறக்கட்டளையையும் அவர் நடத்தி வருகிறார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.

கற்பழிப்புப் புகார் கொடுத்த இரு பெண்களும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அனாதை இல்லம் சீல் வைக்கப்பட்டுள்ளது.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பாசியில் தெரிந்தது இயேசுவா - வீரப்பனா? கடவுள் பூமியில் காட்சி தருவதற்கு என்னென்ன வழிகளில் வருகிறார் தெரியுமா?

கடவுள் பூமியில் காட்சி தருவதற்கு என்னென்ன வழிகளில் வருகிறார் தெரியுமா?
JESUS+VEERAPPAN.jpgமுன்பு போலெல்லாம் நேரடியாக கடவுள் மனித உருவெடுத்து வந்துவிட்டார். இவர் இறைவன், இறைத் தூதர் என்று கிளப்பிவிட்டால், பகுத்தறிவாளர்களின் கேள்விக்குப் பதில் சொல்வது யார்?

அதனால் இப்போதெல்லாம் பாசி படிந்த சுவற்றில், வியர்வை பூத்த சட்டையில், சிறுநீர் கழித்து ஊறிப்போன உப்புச் சுவற்றில், கழிவு நீர் தேங்கிய குட்டையில் என்று பரவலாகக் காட்சி தருகிறார் கடவுள்.

எளிய மக்களை இப்படித்தானே சென்றடைய முடியும் என்று கருதுகிறார் போலும்.

தாறுமாறாக வளர்ந்த கிளையில், சுவரில் விழுந்த கிளையின் நிழலில், மாட்டுத் தோளில், பிரண்டைச் செடியில், மேகத்தில் என்று பல்வேறு பொருட்களிலும் கடவுளின் உருவம் தெரிவதாகக் கிளப்பிவிடப்படும் மூடநம்பிக்கைகள் இங்கு மட்டுமல்ல, உலமெங்கும் இருக்கின்றன.

கந்தசாமி படப்பிடிப்பின்போது அங்கிருந்த வேப்ப மரத்தில் பால் வடிவதாய் வந்த செய்தியை அடுத்து அங்கு குவிந்த அப்பகுதி மக்கள் மரத்திற்கு மஞ்சளாடை சுற்றி, குங்குமம், சந்தனம் பூசி, கடவுளாக்கி விட்டார்கள்.

கந்தசாமி படக் குழுவிரும் படத்திற்கு கிடைத்த திடீர் விளம்பரத்தின் பயனை பத்திரிகைகளில் வெளிப்படுத்தி பெற்றுக் கொண்டார்கள். துணைநடிகை ஒருவரும் ஒரு ஆட்டம் ஆடி சான்ஸ் பெற்றுக் கொண்டார். வேப்ப மரத்தில் பால் வடிவது ஏன் என்பது அறிவியல் பூர்வமாக சிந்திக்க வேண்டியது (பெட்டிச் செய்தி காண்க).
J+V+2.jpg
வேப்ப மரத்தில் பால் வடியும் கதை இருக்கட்டும். எருக்கஞ்செடியில் எப்போதுமே வடிகிறதே அதைக் கொஞ்சம் பக்தியோடு பருகுவதுதானே?

பால் வடிந்த கதையைப்-போலவே பால் குடித்த கதையும் பிரபலம் இந்தியாவில்! 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென பிள்ளையார் சிலை பால் குடிப்பதாக ஸ்பூனும் கையுமாக வரிசையாக நின்றார்கள்.
J+V+3.jpg
காய்ந்த, நீர்ப்பசை தேவைப்-படுகின்ற எந்த பொருளில் திரவத்தை வைத்தாலும் உள்ளிழுத்துக் கொள்ளும் என்பது சாதாரண அறிவு உள்ளவர்களுக்கும் தெரியும். பக்தி வந்தால் புத்தி போய்விடுமல்லவா?
நாய் பொம்மையில் ஸ்பூன் வைத்தாலும் பால் குடிக்கும் என்று செய்து காட்டி புரட்டைப் போட்டு உடைத்தார்கள்- பகுத்தறிவாளர்கள்.

ஒருபடி மேலேபோய் அன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளரும், இன்றைய தலைவருமான கி. வீரமணி அவர்கள் சென்னை - அண்ணா சாலையில் தமுக்கடித்து சவால் விட்டார்.

பிள்ளையார் பால் குடிப்பதாக நிரூபித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்றார். பால் குடிப்பதை சடாரென நிறுத்திக் கொண்டாரே பிள்ளையார். தனக்குப் பிடித்த மோதகத்தையும், கொழுக்கட்டையையும் அடுத்து சாப்பிடப் போகிறார் என்று ஆவலாய் இருந்த நமக்கு ஏமாற்றமல்லவா மிஞ்சியது.

பிள்ளையாருக்கு மட்டுமல்ல, சிவன், காளி இன்னும் பல்வேறு சிலைகளுக்கும் பால் கொடுத்து பசுமாட்டின் வயிற்றெரிச்சலைக் கட்டிக் கொண்டார்கள் பக்தர்கள். இடத்தை அபகரிக்க திடீர் பிள்ளையார் முளைத்து, பின் ஓடிய கதையும் கூட தமிழ்நாட்டில் உண்டு.

கடவுள் படத்திலிருந்து விபூதி கொட்டுவதாக கிளம்பிய வதந்திக்கு பதிலடியாக நாய் படத்திலிருந்து விபூதி கொட்டச் செய்து, குட்டை உடைத்தார்கள் நாத்திகர்கள்.
ஏதோ இந்து மதத்தில் மட்டும் இந்த பிசினஸ் நடப்பதில்லை.

இயேசு சிலையின் கண்ணில் இரத்தம் வடிவதாகவும், மாதா கண்ணில் கண்ணீர் வருவதாகவும் செய்த மோசடிகளெல்லாம் வந்த தடம் தெரியாமல் போயிருக்கின்றன.

கண்ணாடியில் படர்ந்த பனியில், ரோஸ்ட் செய்யப்பட்ட ரொட்டியில்(Bread), கருகிப் போன சப்பாத்தியில் கூட கடவுளைக் கற்பனை செய்து பார்த்துப் பரவசப்படுகிறார்கள் - மூடமக்கள்.

சிகாகோவின் சாலையோரத்தில் சுவற்றிலிருந்த கறையில் மாதா உருவப்படம் தெரிவதாக கூட்டம் கூடி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை பி.பி.சி. செய்தி எள்ளலுடன் கூறுகிறது.

குட்டிக் குட்டியாய் எழுந்து அடங்கும் இந்த பரவசங்கள்தான் மக்களுக்கு அவர்கள் தரும் மயக்கப் பிஸ்கட்டுகள். அதைக் கச்சிதமாக கவ்விக் கொண்டு மயங்கிவிடுகிறார்கள் மக்கள்.

எதேச்சையாய்த் தெரியும் இந்த உருவங்கள் கடவுள் உருவங்களில் மட்டுமல்ல, நாம் எந்த வடிவத்தில் கற்பனை செய்து பார்க்கிறோமோ அப்படியெல்லாம் தெரியும்.

மேகத்தில் எத்தனை உருவங்களைப் பார்க்கிறோம் - நம் கற்பனைக்கேற்ப!
பாசியில் தெரிந்த உருவங்களில்கூட மான் உருவம் தெரிந்ததும், எம்.ஜி.-ஆர். உருவம் தெரிந்ததும், இயேசு தெரிந்ததாக சொல்லப்பட்ட அதே படத்தைப் பக்கவாட்டில் பார்க்கும்போது, கடைவாய் பல் போன்று தெரிந்ததாய் சொன்னதும் அவரவர் கற்பனையின் பாற்பட்டதே.
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப்போல, நாம் நினைப்பதே நம் கண்ணுக்குத் தெரிகிறது என்கிற சாதாரண அறிவைப் பெறாத இந்த மக்களுக்கு திராவிடர் கழகத் தோழர்கள் செய்தது போன்று பிரச்சாரம்தான் அறிவுக்கண் திறக்க செய்த அருமருந்தாகும். - ஜீனியர் சர்ச்லைட் - உடுமலை
மக்கள் கருத்து----
1. கண்ணதாசன் நகர் ஆறாவது பிளாக்கில் வசிக்கும் சீனிவாசன் என்பவர் தன்னை இந்து என்று அறிமுகப்படுத்தி கொண்டார். இவர் சாஃப்ட்வேர் படித்துவிட்டு, தமா ஜூவல்லரி (International Airport)-ல் கணினிப் பொறியாளராக பணிபுரிபவர். முதலில் பக்கத்து பில்லரில் ஜீசஸ் வந்தார். இன்று அதற்கு பக்கத்து பில்லரில் மாதா வந்தது. அதற்குமேலே ப்ளஸ் வந்தது. நாளைக்கு என்ன வருமென்று தெரியாது. ஒவ்வொன்றும் மெல்ல, மெல்ல உருவாகிக் கொண்டு வருகிறது. அரசாங்கம் ஒன்னே ஒன்னு செய்யணும்

2. அந்தப் பகுதியில் வசிக்கும் மற்றொரு இளைஞர் புஷ்பராஜ். இவரும் தன்னை ஒரு இந்துதான் என்று அறிமுகப்படுத்தி கொண்டார். அதை ஒரு கலையா பார்க்கவேண்டும். எனக்குப் பக்கத்தில் இருந்த ஒருவர் தனக்கு மான் ஒன்று தெரிகிறது என்று சொன்னார்.
(நான்தான் சொன்னேன் என்று ரவிக்குமார் என்ற இளைஞர் குறுக்கிட, புஷ்பராஜ் அவரை ஆமோதிக்கிறார்.) நானும் உற்றுப் பார்த்தேன். எனக்கும் மானின் கண்கள் போன்று தெரிந்தது. அந்தத் தூணில் ஈரம் இருக்கிற வரையிலும் அந்த உருவம் இருக்கும். காஞ்சு போச்சுன்னா இருக்காது.

அதுமட்டுமல்ல, விநாயகர் பால் குடிச்சாருன்னு எல்லோரும் சொன்னாங்க. அதையே நாங்க நம்பல. கிருத்துவர்கள் யாரும் நம்பல. நாங்க இத நம்பிடுவோமா?
புஷ்பராஜை - சீனிவாசன் என்பவர் மறுத்துப் பேச புஷ்பராஜ் நானொன்றும் பூணூல் போடவில்லை என்று கூறி அனைவரையும் கலகலக்க வைத்தார்.
அந்த தேவலாயத்தின் பாதிரியார் சவுரிமுத்து சொல்லும்போது, கடவுள் அப்பப்போ வந்து காட்சி தருவாரு. அந்த மாதிரித்தான் இதுவும் - என்று முடித்துக் கொண்டார்.

3. இராயபுரத்தில் வசிக்கும் கண்ணன் என்கிற கூலித்தொழிலாளி இன்னும் ஒரு படிமேலே போய் விட்டார். சார், நான் அம்மன் சாமியை கும்பிடுகிறவன். இதை பார்ப்பதற்காக இராயபுரத்தில் இருந்து வந்தேன்.
நான் என்ன சொல்றேன்னா, அல்லாவ விட, இந்து சாமிகளைவிட, இயேசுக்கு பவர் ஜாஸ்தின்னு சீனுவாசன் சொன்னாரு.
நாளைக்கே அந்த மணிக்-கூண்டுக்கு பெயிண்ட் அடிச்சிடலாம், பிறகு காலையில் பார்க்கலாம். அதுக்கப்புறமும் இயேசு தெரிஞ்சாருன்னா, நாம் எல்லோரும் கிறுத்துவ மதத்திற்கு மாறிடலாம் என்று ஒரே போடாக போட்டார்.
4. செந்தமிழ் சேகுவேரா என்கிற ஆட்டோ ஓட்டுநர் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவுஎன்று திருக்குறளைச் சொல்ல கூடியிருந்த மக்கள் கைதட்டி அசத்தினர்.
5.தன்னைப்பற்றி எதையும் சொல்லிக் கொள்ள விரும்பாத ஒருவர் நான் எம்.ஜி.ஆர். ரசிகன். எனக்கு அது எம்.ஜி.ஆர். மாதிரியே தெரிகிறது என்று கூறி அனைவரது கவனத்தையும் கவர்ந்தார்.
6. பெரம்பூரில் வசிக்கும் அதிகம் படிக்காத ஆட்டோ ஓட்டுநர் அய்யாக் குட்டி, டேங்குல மழைத் தண்ணிபட்டு நனைஞ்சு கறை புடிச்சி ஏதோ ஒரு உருவம் மாதிரி தெரியுது. வேற ஒன்றும் இல்ல என்று பொட்டில் அறைந்ததுபோல கூறினார்.UNMAI.ONLINE


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பலே !! பலே !! அஞ்சாமல் பாவம் செய்யுங்கள். அஞ்சல் , இணைய தள வழி கிறித்துவ பாவ மன்னிப்பு ஏற்பாடுகள்.பாவங்கள் பஞ்சாய்ப் பறந்தோட.

குறைந்த முதலீடு - கொள்ளை லாபம்.

ஆம், என்க! .கிறித்துவ மதத்தில் பாவ மன்னிப்பு - இப்படியாக ஒவ்வொரு மதத்திலும் பாவங்களை மன்னிப்பதற்காக ஏற்பாடுகள் உண்டு.

கிறித்துவ மதத்தில் ஞாயிறு தோறும் பாவ மன்னிப்புச் சீட்டு தயாராகவேயிருக்கும் திங்கள் தொடங்கி சனிவரை பாவங்களைக் குவித்து விட்டு, ஞாயிற்றுக்கிழமையன்று தேவாலயப் பாதிரியாரிடம் அவற்றை ஒப்படைத்து விட்டு, புண்ணியத்தைத் தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள்.

மறுபடியும் அதே பக்தர் திங்கள்கிழமை முதல் சனிக் கிழமை வரை பாவங்களைச் செய்வதில் தயக்கம் கிடையாது. இது ஒரு தொடர் ஓட்டம் போல (Relay Race).

குறைந்த முதலீடு - கொள்ளை லாபம் என்றால் கேட்கவா வேண்டும்.

இப்பொழுது அதிலும் ஒரு தலை கீழ்ப் `புரட்சி தேவாலயத்துக்கு மெனக் கட்டுப் போய், நேரத்தையும் காலத்தையும் செலவழிக்க வேண்டாம்.

இதுதான் கணினி காலமாயிற்றே! பாவ மன்னிப்புக் கடிதங்களைத் தயாராகவே கணினி படுத்தி வைத்துள்ளனர். அதற்கான இணைய தளங்கள் (website) இப்பொழுது வந்து விட்டனவாம்.

`டெய்லி கன்பெஷன் டாட்காம், மை சீக்ரெட் டாட்காம் என்று போட்டிப் போட்டுக் கொண்டு பாவ மன்னிப்புக் கடைகள் திறக்கப்பட்டு விட்டன.

இணைய தளங்களில் தாங்கள் செய்த பாவங்களைப் பட்டியல் போட்டு, அவற்றிற்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து கையெழுத்திட்டுப் பதிவு செய்ய வேண்டியதுதான் பக்தர்களின் வேலை.

உடனே மின் அஞ்சலில் (இ-மெயில்) பாதிரியாரிடமிருந்து பாவ மன்னிப்புக் கடிதம் கிடைத்து விடும்.

கண்மூடி கண் திறப்பதற்குள் பாவங்கள் பஞ்சாய்ப் பறந்தோடி விடும்.

ஆமாம்! கடவுளையும், மதங்களையும் இனிமேல் இப்படிதான் காப்பாற்றியாக வேண்டும். கஷ்டப்பட்டு,

உடலை வருத்தி பட்டினி கிடந்து, மவுன விரதம் அனுசரித்து,

இரவு முழுவதும் கண் விழித்து - பகவானிடம் தங்கள் பக்தியின் சிரத்தையைக் காட்ட வேண்டும் என்று இக்காலத்தில் வற்புறுத்தினால்,

`அட, போப்பா, உனக்கும் வேலையில்லை; உன் கடவுளுக்கும் வேலையில்ல.`கடவுளாவது, கத்திரிக்காயாவது! என்று பொரிந்து தள்ளி மாட்டார்களா?

மத வியாபாரிகள் மிகவும் கெட்டிக்காரர்களாயிற் - மக்கள் போக்குக்கும், மனப்பான்மைக்கும், தகுந்தாற்போல் தொழிலின் பாணியை மாற்றிக் கொள்ள மாட்டார்களா?


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தலித் பிராமணன்

 

 

பிரான்சியாஸ் கட்டியார் - தமிழில் மணி 


 

 

 

மேற்கத்திய அறிஞர்களின் கைவரிசையால் இந்து சமூகத்தின் சாதி என்கிற அமைப்பு திரிக்கப்பட்டது. எந்த இந்தியனும், அதுவும் ஒரு மேற்கத்தியரோடு பேசும் எந்த இந்தியனும் சாதி என்கிற அமைப்பை பற்றி வெட்கப்படாமல் இருக்கவே மாட்டான். அந்த வெட்க உணர்வு இந்திய தேசத்தின் பெருமையை குறையச்செய்வதில் நிறைய பங்கு கொண்டது. இந்த வெட்க உணர்வு ஆரியர்களால் சாதி கண்டுபிடிக்கப்பட்டது என்கிற கருத்துருவாக்கத்திலிருந்து ஆரம்பமாகிறது. ஆங்கில மிஸினரிகளும் பின்னர் அமெரிக்க அறிஞர்களும் இந்திய மக்களை நோக்கி “ ஆதிவாசிகளான, ஹிரிஜனங்களான நீங்கள் மட்டுமே பூர்வகுடிகள். ஆரியர்கள் குடியேறிகள். ஆரியர்களின் மதமான இந்து மதத்தை விடுத்து உண்மையின் மதமான கிறிஸ்துவ மதத்தை தழுவ வேண்டும் “ என்று கூறி மதமாற்றம் செய்ய முடிந்தது.

 

இப்படியாகத்தான் ’ஆரிய குடியேறி; கருத்துருவாக்கம் உருவாகி, உயர் சாதி ஆரியர், தாழ்ந்த சாதி திராவிடர் என்று இருவரையும் மோதவிட்டு பிரித்தாண்ட சூழ்ச்சி, இன்றுவரை ஒரு சில இந்திய அரசியல் தலைவர்களால், அவர்களது பேச்சால் அது நீடிக்கிறது. ஆரிய குடியேற்றம் என்ற ஓன்று நிகழவேயில்லை என்பது தற்போதய மொழி, செயற்கைகோள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்தாலும் மேற்குலக சரித்திர புத்தகங்களும் துரதிர்ஸடவசாமாய் சில இந்திய வரலாற்று அறிஞர்களும் “ஆரிய குடியேற்றம்” என்கிற கருத்துருவாக்கத்தை புனிதமாய் பாவிக்கின்றன. இந்த குடியேறி தத்துவம், தங்களது கடந்த கால மற்றும் நிகழ்கால இந்திய சாதனைகளின் பற்றி பெருமிதம் அடைவதற்குப்பதிலாக, அதற்கு மாறான ஒரு மேற்கத்திய பார்வையை இந்தியர்களை சுமக்கவைக்கிறது.

 

 

ஐரோப்பாவின் வர்க்கப்பிரிவைப்போலவே, ஒரு காலத்தில் இந்தியாவின் சாதி அமைப்பும் சமுதாயத்திற்கு தேவையான வேலைப்பகிர்வின் அடிப்படையில் உருவான ஒரு தனிப்பட்ட அடிப்படை கொள்கையே. ஆனால் சாதி அதன் அடிப்படை உண்மையும், தேவையும் பிறழ்ந்து சுரண்டலையும், மன்னிக்கவே முடியாத அளவிற்கு மானுடநேயத்திற்கு எதிரான, மிக மோசமாக நடத்தைகளுக்கும் காரணமியிருந்திருக்கிறது. ஆனால் இன்றைய நிலமையில், பிராமணர்களே இந்தியாவின் தலித்களாக ஆகிவிட்டார்கள். 60 முதல் 65 சதவீதம் தலித்கள் வாழும் உபி கிராமங்களில் பிராமணர்களே சிறுபான்மையினர்; அறிவார்ந்த பிராமணர்கள் தமிழகத்தைவிட்டு புலம்பெயர்ந்து விட்டனர்; ஒரு சாதாரண பிராமணனின் சராசரி வருமானம் ஒரு அபிராமணனின் வருமானத்தைவிட குறைவே ; 75 சதவீத ஆந்திர பிராமணர்கள் சமையல் மற்றும் வீட்டு வேலைத்தொழிலும் ஈடுபடுகிறார்கள்; பெரும்பாலான டில்லி கழிவறைகள் பிராமணர்களாலே சுத்தம் செய்யப்படுகிறது ; ( இந்திய பிராமணர்கள் : ஜெ ராதாகிருஸ்ணா, செளக் பதிப்பகம் 2007).

 

கடந்த 60 வருடங்களாக இந்திய சாதி அமைப்பை துறந்துவிட துடிக்கிறது. ஒரு சில வெற்றித்துளிகளும் இருக்கத்தான் செய்கின்றன. விமானத்தில், உணவகத்தில், பல்பொருள் அங்காடியில் உயர்சாதிக்காரனையும் தாழ்ந்த சாதிக்காரனையும் பிரித்துப் பார்க்க முடியாது. அரசாங்கம் தங்களது நிறைய திட்டங்கள் மூலம் தாழ்த்தப்பட்டோரை சமூக, கல்வி தளங்களில் வெற்றிகரமாக பலப்படுத்தியிருக்கிறது, சிலசமயம் அத்தகைய திட்டங்கள் விருப்பமற்ற விழைவை உருவாக்கியிருந்தாலும். ஆனால் இன்று சாதிவாரியான கணக்கெடுப்பு வேண்டும் என்று வாதிடுபவர்கள், சாதியை ஓழிப்பதற்கோ, வறுமையை துடைப்பதற்கோ இதை கேட்கவில்லை. தாங்கள் ஆட்சிபீடத்தில் அமர்வதற்கு மூஸ்லீம் மற்றும் தலித்துகளுக்கு குரல் கொடுத்தாலே போதும் என்று நினைக்கிறார்கள். இது ஆங்கிலேயர்கள் விருப்பபடி இந்தியாவை மேலும் மேலும் பிரித்தாளும் ஒரு மோசமான சுயநலமான செயலேயாகும்.

 

சாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும் பட்சத்தில் அத்னால் இந்து சமூகத்தில் 40% அங்கம் வகிக்கும் தலித்தில்லாத மற்ற இந்துக்களே பெரும்பாலும் அதீத பாதிப்படைவர். இப்போதய் இந்தியாவில் பெரும்பான்மையான இந்துக்கள் கொஞ்சம் கூடாத முக்கியத்துவமில்லாத சிறுபான்மையினர் போல நடத்தப்படுகின்றனர். இந்தியாவில் 26/11 மும்பை தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததற்காக கைதான இரு முஸ்லீம்களை விடுதலை செய்வது இலகுவானதாகவும், சரியானதாகவும் இருக்கிறது, ஒரு மேஜரான சுவாமி நித்தாயனந்தா இன்னொரு மேஜரான பெண்ணுடன் அவருடைய சம்மதத்தின் பெயரில் உடலறவு கொண்டதற்காக சிறையில் தள்ளப்படுகிறார். வேக வேகமாய் மாலோகான், அஜ்மீர் வழக்குகளில் இந்து தீவிரவாதிகள் என்று குற்றம்சாற்றப்பட்டு சிறையில் எந்த வழக்கு விசாரணையுமின்றி நாட்கணக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தள்ளப்படும் அதே வேளையில் புனே ஜெர்மன் பேக்கரி வழக்கில் ஈடுபட்டவர்கள் (இவ்வளவு நாளாய்) கைது செய்யப்படாததற்கு அரசியல் துணிவின்மையைத் தவிர வேறென்ன காரணமிருக்கமுடியும்.

 

இந்தியாவின் இப்போதய அரசால் ஏராளமான நிறுவனங்கள் அழியவோ, பாதிப்படையவோ செய்யப்பட்டிருக்கின்றன. அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்ததற்காக மாயாவதியின் மீது சுமத்தப்பட்ட எல்லா சிபிஐ வழக்குகளும் தூக்கியெறியப்பட்டுள்ளது. உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், தொலைபேசி ஒட்டு கேட்கப்படுகிறது, ஆயிரமாயிர கோடிகள் லஞ்சம் வாங்கிய அரசியல்வாதி ஏய்த்தி பிழைத்து, தப்பி ஓடுகிறார் மற்றும் தங்களது குரலை எழுப்பவே மக்கள் அஞ்சுகிறார்கள். இந்தியாவில் ( Hindutva, Sex & Adventures எழுதிய) சர் மார்க் தூலிதான் நடுநிலை இதழியலின் கதாநாயகன். பின்பற்ற படவேண்டிய பிம்பம். அவர் பிபிசியில் தெற்காசியவில் நிருபராக இருந்தபோது கடைபிடித்த நெறிமுறைகள்தான்,(சொல்லரசியல்கள்தான்) இன்னும் இந்தியா பற்றிய கருத்தை களங்கப்படுத்திக்கொண்டிருக்கிறது.

 

மத்திய 80களில் பண, ஆயுத, ஆள் உதவிகள் மூலம் பாகிஸ்தான் காஸ்மீர பிரிவினைக்காக ஊக்கப்படுத்திக்கொண்டிருந்த காலங்களில் துலி சொன்னார் : “ இந்தியா பாகிஸ்தான் பிரிவினை தூண்டுவதாக குற்றம் சாட்டுகிறது “ அல்லது “ இந்தியா ஆக்கிரமித்திருக்கிற காஸ்மீரில் தேர்தல் நடக்கிறது : அல்லது “ காஸ்மீர் போராளிகள் எல்லைப்புற ராணுவத்தால் தாக்கப்பட்டார்கள். ( அவர்கள் தீவிரவாதிகள் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும்) அதற்குப்பிறகு எல்லா வெளிநாட்டு நிருபர்களும் அன்றைக்கும், இன்றைக்கும் பிபிசி ஏற்படுத்திய சொல்லதிகாரத்தையே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

 

பிபிசியால் வார்க்கப்பட்ட இந்த வெறுப்பு உணர்வு அமெரிக்க ஜனாதிபதி பிரசிடெண்ட் ஓபாமா தனது தெற்காசிய கொள்கையை வடிவமைக்கும்போது பாதித்திருக்கலாம். அதனாலே உலக தீவிரவாதத்தின் முக்கால் பாகம் தன்னகத்தே ஊக்குவிக்கும் திருநாட்டின் தீவிரவாதத்தை ஓழிப்பதன் மூலம் எல்லாம் சாத்தியாமாகும் என நினைக்கிறார். ஆகவே காஸ்மீர் இறையாண்மை, பிரச்சனையை தாண்டி(மறந்து) இந்தியாவை பாகிஸ்தானோடு சமாதானம் பேசும்படி கட்டாயப்படுத்துகிறார். பக்கத்து நாடான சீனாவின் அணு ஆயுத வளர்ச்சிக்கு பின்னரும், பாகிஸ்தானை கருத்தில் கொண்டு இந்திய இராணுவ அணு ஆயுத திட்டங்களை ஓடப்பில் போட மன்மோகன் சிங்கை நிர்பந்திக்கிறார். இதுபற்றி அமெரிக்க ராணுவத்துடன் ஒரு ரகசிய முடிவுக்கு இந்தியா வந்திருக்கலாம் என தோன்றுகிறது. சாதி கணக்கெடுப்பு என்பது ஜனநாயகத்தின் பெயரை சொல்லி ஜனநாயத்தை அழிக்கும் மற்றொரு சொல் சுழலே.

(Brahmins have become the Dalits)



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கால்டுவெல் + திராவிடம் > இனவரைவியல்

 

 

புதியமாதவி, மும்பை. 


 

-------------------------------------------------

 

கால்டுவெல் திராவிடம் , திராவிடர் என்ற சொல்லை தன் ஆய்வு நூலில் பயன்படுத்துவதற்கான

காரணங்களை USE OF THE COMMON TERM 'DRAVIDIAN' என்ற தலைப்பில் பக்கம் 4 முதல் 9 வரை

பட்டியலிடுகிறார்.

அந்தப் பக்கத்திலிருந்து சில வரிகளை உங்கள் வாசிப்புக்காக தருகிறேன்.

 

* I have designed the languages now to be subjected to comparision by a common term, because of the essential

and distinctive grammatical characteristics which they all posses in common.

 

*One of the earliest terms used in sanskrit to designate the family seems to have been that of "Andhra-Dravida-bhasha',

'the telegu-tamil language or rather , perhaps 'the language of the telegu and tamil countries. this term is used

by kumarila bhatta, the controversail brahmin writer of eminence, who is supposed to have live at the end of

7th century A.D.

 

*Varaha -mihira (A.D 404) regarded the term dravida as generic or specific.

he mentioned the pandya king, the king of kalinga & c but mentions the "dravida Kings' in the plural.

 

 

*The more distinctively philological writers of a later period used tjhe term Dravida in what appaears to be substantially the

same sense as that in which I propse that it should be used.

இக்கருத்துக்கும் பிராகிருதி, பைசாச்சி- அரக்கர்களின் மொழி என்று வட இந்திய அறிஞர்களின்

கருத்துகளைத் தொகுத்து தருகிறார்.

 

*

 

 

*The word I have chosen is "Dravidian" from Dravida , the adjectival form of Dravida. This term , it is true,

has sometimes been used, and is still sometimes used, in almost as restricted a sense as that of Tamil

itself, so that though on the whole it is the best term i can find, I admit that is is not perfectly free from

ambiguity. It is term, however, which has already been used more or less distinctively by sanskrit philoligists,

as generic appellation for the sount indian peoples and their languages, and it is the only single term they seem

ever to have used in this manner. I HAVE THEREFORE , NO DOUBT OF THE PROPRIETY OF

ADOPTING IT.

 

*ஆதாரமாக சான்றுகளை அடுக்கித் தருகிறார்.

மனு - ( X 43, 44), மகாபாரதம், பாகவத புராணம், விஷ்ணுபுராணம்

 

இனவரைவியலின் ஆரம்பம்

----------------------------

 

மாந்த இனத்தை வகைபாடு செய்தல்’ என்பதே ஐரோப்பியர் பல பகுதிகளைத் தம் காலனிய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த

காலக்கட்டத்தில் தான் ஆரம்பமானது. ஐரோப்பியரின் குடியேற்றப் பகுதிகளில் உள்ள மனிதர்களைப் படிப்பது என்பதில் இந்த ஆய்வு தொடங்கியது. தம் ஆளுகைக்குக் கீழ் வந்த புதிய நிலப்பரப்பின் தாவர வர்க்கத்தையும், விலங்கினங்களையும் படிப்பது போன்றே அங்குள்ள மனிதர்கள், மொழி, பண்பாடு, அம்மக்களின் கைக்கருவிகள், கைவினைப் பொருட்கள் ஆகியனவும் படிக்கப்பட்டன

 

 

பதினெட்டாம் நூற்றாண்டும், பத்தொன்பதாம் நூற்றாண்டும் மாந்தவியல் ஆய்வுகளைப் பொறுத்தவரை மிக முக்கியமானவை. உலக மானிட இனத்தைப் பெரும் பிரிவுகளாக, தனித் தனி இனங்களாகப் (Race) பிரித்தறிந்து, மாந்தவியல் (Anthropology) என்ற துறையை உருவாக்கியவர் ஜொஹான் பிரெடரிக் ப்ளூமென்பாக் (Johann Ferederich Blumenach கி.பி.1752- 1840) என்ற ஜெர்மானிய மருத்துவர் மற்றும் அறிவியலாளர்.

 

 

 

அவருக்கு முன்னமே சிலர் இனம் பற்றி ஆய்வு செய்திருந்தாலும், அவர் எழுதிய ’de genesis humani varities native (the natural varities of mankind) - மனித வர்க்கத்தின் இயற்கையான வகைகள் என்ற நூல்தான் (1776) உடல் சார்மாந்தவியலின் (Physical Anthropology) முதல் நூல் ஆகும்.இந்நூல் ஐரோப்பாவில் பெரும் ஆர்வத்தைக் கிளறிவிட்டது. இதுவே 19 ஆம் நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட ‘இனங்கள்’ பற்றிய பிற ஆய்வுகளுக்கு வழி வகுத்தது.

புளூமென்பாக் 60 மண்டை யோடுகளைச் சேகரித்து அவற்றை ஆய்வு செய்தார். பல இனங்களுக்கிடையில் மண்டை யோட்டின் அளவிலும் அமைப்பிலும் வேறுபாடுகள் இருப்பதாகக் கருதினார்.அவருடைய மண்டை யோட்டுத் தகவல்கள் தொகுக்கப்பெற்று Collectio Craniorum Diversarum Gentium’ என்ற பெயரில் (1790-1828) நூலாக வெளிவந்தது.

புளூமென்பாக்கின் ஆய்வில் ஒரு மனிதத் தொகுப்பின் தோலின் நிறம், மண்டையோட்டின் அளவு ஆகியவை அந்த இனத்தின் பண்புகளுடன் தொடர்பு படுத்தப்பட்டது. இவ்வாறு உடல்சார் கூறுகளின் அடிப்படையில் இனங்கள் பிரிக்கப்பட்டன. புளூமென் பாகுக்கு முன்பும் இனம் சார் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. பிரெஞ்சு மருத்துவரான பிராங்காய் பெர்னியர் (Francois Bernier) 1684 ஆம் ஆண்டு தமது நூலை ( (A New Division Of The Earth, According To The Different Species Or Races Of Man Who Inhabit It -- பிரெஞ்சு மொழி நூலின் பெயர் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது) வெளியிட்டார்.

 

இந்த நூலில்தான் முதல் முதலாக Race எனும் சொல் பயன்படுத்தப்பட்டது. பெர்னியர் மனித இனத்தை வகை பிரிக்க தோலின் நிறம் போன்றவற்றையே எடுத்துக்கொண்டார்.

 

அமெரிக்கக் கண்டம் கண்டு பிடிக்கப்பட்ட போது செவ்விந்திய மக்களை விலங்கினமாகவே ஐரோப்பியர் கருதினர். 1537 ஆம் ஆண்டு போப் மூன்றாம் பால் ‘எல்லை கடந்த கடவுள்’ (The Transcendent God) என்ற பெயரில் தம் ஆணையைப் பிறப்பித்தார். அதன்படி செவ்விந்தியர்கள் மனிதர்கள் என்றும் அவர்களுக்கு உயிர் உண்டு என்றும் அவர்கள் கிறித்துவத்துக்குள் கொண்டு வரப்படலாம் என்றும் அறிவித்தார்.

 

 

1774 ல் இங்கிலாந்தில் எட்வர்ட் லாங் (Edward Long) தமது ‘ஜமாய்க்கா வரலாறு’ என்ற நூலை வெளியிட்டார். இதில் கருப்பினத்தவரை ஐரோப்பியர் களுக்கும் மனிதக் குரங்குக்கும் இடையில் வைத்தார். குரங்குகளுக்கும் ஐரோப்பியருக்கும் இடையிலான இணைப்பாகக் கருப்பினத்தை கருதினார். இது இனப்பாகுபாட்டு உணர்வின் வெளிப்பாடாகும்.

 

ஒருபுறம் மாந்தவியல் ஆய்வு என்ற பெயரில் இன ஒடுக்குமுறைக் கருத்தியல் வளர்த்தெடுக்கப் பட்டபோது, மறுபுறம் இன அடிமைத்தனத்திற்கு எதிரான கருத்துகளும் வளர்ந்து கொண்டிருந்தன. அவை இனவியல் ஆய்வுகளில் வெளிப்பட்டன.

இந்த இரண்டாவது வகை மாந்தவியல் ஆய்வாகத்தான் கால்டுவெல்லின் ஆய்வுகளும் சமூக தளத்தில் அவர்

நிறுவிய உண்மைகளும்.

 

கால்டுவெல் ஆய்வுக்கு இந்தியாவில் அவருக்கு சமகாலத்தில் நடந்த ஆய்வுகளும் தளம் அமைத்துக் கொடுத்தன.

அவை:

கி.பி. 16ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் போர்ச்சிக்கீஸ் அறிஞர் ஒருவர் (Fernao Lape de Castanteda) தென்னிந்திய மொழிகள் பற்றித் தம்முடைய குறிப்பொன்றில் குறிப்பிட்டுள்ளமை காணலாம். (Grierson 1906. ல்ல்,350. 366)1 தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு தென்னிந்திய இலக்கிய மொழிகளும் மேனாட்டு அறிஞர்கள் பலருடைய கவனத்தையும் கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாம்.

 

1801இல் கல்கத்தாவில் வில்லியம், கல்லூரி (Fort Williams College) தோன்றியபோது இந்திய மொழிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. இதன் தலைவராக இருந்த வில்லியம் கரே என்பார் இந்திய மொழிகள் பற்றிய செய்திகளைச் சேகரித்து ஆராய முற்பட்டார். 1816இல் தாம் எழுதிய கடிதம் ஒன்றில் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் சமஸ்கிருத மொழி யிலிருந்து உருவானவை என்று கூறியுள்ளார்.இதற்குக் காரணம் இம்மொழிகளில் ஏராளமான வடமொழிச் சொற்கள் காணப்படுவதே. மேலும் கி.பி. 18ஆம் நூற்றாண் டிலும் 19ஆம் நூற்றாண்டிலும் வாழ்ந்த அறிஞர்கள் பலர் இவ்வெண்ணத்தையே கொண்டிருந்தனர். ஸ்டீவன்சன், கோல் புரூக் , வில்கின்ஸ், ஜி.யு. போப் போன்ற பல மேனாட்டறிஞர்களும் ஞானப் பிரகாசர், சேஷகிரி போன்ற பல கீழை நாட்டு அறிஞர்களும் இக்கருத்தினைக் கொண்டிருந்தனர்.

 

ஆனால் பிரான்சிஸ் எல்லிஸ் என்பார் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆராய்ந்தபோது இம் மொழிகள் தங்களுக்கிடையே இன உறவினைக் கொண் டிருக்கின்றன எனக் கண்ட நிலையில் இம்மொழிகள் ஒரே இனத்தைச் சார்ந்தன எனக் கூறியதுடன் இவற்றை ஒன்றாக இணைத்துத் 'தென்னிந்திய மொழிகள்” எனப் பெயரிட்டார்.மேலும் ,ராபர்ட்ஸ் என்பார் எழுதிய மால்தோ பற்றிய குறிப்பினைக் கொண்டு தென்னிந்தியாவில் காணப்படும் மொழிகளும் மால்தோ மொழியும் தம்முள் ஒற்றுமையுடையனவாக இருக்கலாம் எனவும் எண்ணினார். இன்றையத் திராவிட மொழி ஆராய்ச்சிக்கு வித்திட்ட பெருமை அவரைச் சாரும்.

 

 

 

>, M,B, Emeneau. Brahui and Dravidian Comparative Grammar

 

>, Henry Harkness. A Description of a singular Aboriginal Race inhabiting the Summit of the Neilgherry Hills (1832) Bernhard Sebmid, On the Dialect of the Todavars. the Aborigines of the Neelgherries (Madras Journal of letters and science. V,1837. )

 

>, Friedrich Metz. A Vocabulary of the Dialect Spoken by the Todas of the Nilagiri Mountains. in Madras Journal of Letters and Science. N,S,I, 1856-57,

 

 

>, Vosysey. Vocabulary of Goand and Cole words. Journal of the Asiatic Society of Bengal. XIII [1844],

 

> J,G, Driberg. H,J, Harrison. Narrative of the Second visit to the Gonds of the Nurbudda Territory [with a Grammar & Vocabulary of their language] Calcutta. 1849,

 

 

 

>, J,P, Fyre. A Grammar and progressive reading lessons in the Kondh language [1851]

 

 

 

> Lingum Letchmajee. An Introduction to the Grammar of the Kui or Kondh language [1853]

 

>J, Stevenson. An Essay on the languages of the aboriginal Hindus. The Journal of the Bombay Branch of the Royal Asiatic Society,

 

>, B,H, Hodgson. Aborigines of Eastern Ghats. JASB [1848]

 

>B,H, Hodgson. Aborigines of the Nilgiris. JASB [1856]

 

இப்படியாக கால்டுவெல் திராவிட மொழிகள் ஆய்வுக்கு பலர் பாதைப் போட்டிருந்தார்கள்.

 

 

அடுத்த வாரம் கால்டுவெல்லின் தனித்துவம் குறித்து பேசலாம்.

 

------------------------------------------------------------------------------



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை - 2

 

 

தமிழ்ச்செல்வன் 


 

 

இத்தாலிய ஐயரும் அவரின் திருவாசக/மாணிக்கவாசக இழிவுரைகளும்

இவருக்கு அடுத்தபடியாக ஜி.யு.போப் என்கிற போப்பையர் (1820-1907). இவர் திருவாசகம், திருக்குறள், நாலடியார் போன்றவற்றை மொழிபெயர்த்தவர். இவர் திருவாசகத்தில், கிறுத்துவ இறைத்தூதர் செயிண்ட் பால் மற்றும் அசிசி நாட்டுத் துறவி ”புனித” பிரான்சிஸ் ஆகியோரின் கருத்துக்களைக் கண்டதாகவும், மாணிக்கவாசகப் பெருமானிடம் இவ்விருவரையும் காண்பதாகவும் கூறியுள்ளார். இந்தக் கூற்றை ஆராய்ந்து பார்க்காமல் மேலோட்டமாக எடுத்துக்கொண்டு சில அப்பாவித் தமிழறிஞர்கள் பூரித்துப் போகிறார்கள். துரதிர்ஷ்ட வசமாகச் சில சைவ மடங்கள் கூட இதைப் பெருமையாக நினைக்கின்றன.

சைவ சித்தாந்தத்தில் மிகவும் ஈடுபாடும் புலமையும் கொண்ட ஆராய்ச்சியாளர், தமிழறிஞர் முனைவர் திரு முத்துக்குமாரசுவாமி அவர்கள் ஜி.யு.போப்பின் மறுமுகத்தை தோலுரித்துக் காட்டுகிறார். ஜி.யு.போப் பின்வருமாறு கூறியுள்ளார்: “In the whole legendary history of this sage … … … there stands out a real historical character, which seems to be a mixture of that of St.Paul and of St.Francis of Assisi. Under other circumstances what an apostle of the East might had become”. இதை சுட்டிக்காட்டிய முனைவர் அவர்கள், “தடித்த எழுத்தில் உள்ள கடைசிவரி போப்பின் மனநிலையைச் சுட்டுகின்றது. அந்த சூழ்நிலையில் ஒரு கீழ்த்திசை சமயகுரு இதைக்காட்டிலும் என்ன மேனிலையை அடைந்துவிடக் கூடும் என்ற கூற்றில் மணிவாசகப்பெருமான் எய்திய சிவமாம் தன்மையைப் போப் சரிவர உணர்ந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது” என்று விளக்குகிறார்.

முனைவர் முத்துக்குமாரசுவாமி அவர்கள் போப்பையரைப் பற்றிப் பின்வருமாறு கூறி, “ஜி.யு.போப்பைப் பற்றி ஒரு கதை திருவாசகப் பேச்சாளர்களால் கூறப்படுகிறது. அவர் தமிழகத்தில் ஒருவருக்குக் கடிதம் எழுதியபோது, தன் வழக்கப்படி திருவாசகப் பாடல் ஒன்றினை எழுதும்போது உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகி கடிதத்தின் மீது விழுந்து சில எழுத்துக்களை அழித்து விட்டதென்றும், திருவாசகத்தால் ஏற்பட்ட புனிதக் கண்ணீர் என்பதால் அழிபட்ட எழுத்துக்கள் மேல் மீண்டும் அவற்றை எழுதாமலேயே கடிதத்தை அனுப்பினார் என்றும் கூறுவர். ஆனால் இன்று வரை, அதில் எழுதப்பட்ட திருவாசகப்பாடல் யாது, அந்தக் கடிதம் என்ன ஆனது, அந்தக் கடிதத்தைப் பற்றி எழுதிய போப் அவர்களோ, கடிதம் எழுதப் பெற்றவரோ, அவருக்குத் தொடர்பானவர்களோ இந்நிகழ்ச்சியைப் பற்றி எங்காவது குறிப்பிட்டுள்ளனரா? இந்த நிகழ்ச்சி உண்மையாயின் போப் அவர்கள் தம் திருவாசக மொழிபெயர்ப்பின் மறுபதிப்பிலாவது வெளியிட்டிருப்பாரே! ஏன் அவ்வாறு செய்யவில்லை? அவரை மிகப்பாராட்டும் திருவாசகமணி கே.எம்.பாலசுப்பிரமணியம் அவர்களாவது தம் நூலில் ஆதாரத்துடன் வெளியிட்டிருப்பாரே! அவரும் ஏன் செய்யவில்லை?” என்ற கேள்விகளையும் எழுப்புகிறார்.

இவ்விட்த்தில் கே.எம்.பாலசுப்பிரமணியம் அவர்கள் ஜி.யு.போப்பின் மொழிபெயர்ப்பைப் பற்றிச் சிலாகித்துக் கூறியதையும் முனைவர் குறிப்பிடுகிறார். கே.எம்.பாலசுப்பிரமணியம் அவர்கள், “போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மேலைநாட்டுத் தத்துவ அறிஞர்களுக்கு பொக்கிஷங்கள் அடங்கிய திருவாசகத்தின் குகைக்கதவுகளைத் திறந்து விட்டது சொரணை கெட்ட தமிழர்களை வெட்கம் அடையச் செய்த்தோடு மட்டுமல்லாமல் தங்களுடைய பழமை குறித்துப் பெருமை கொள்ளுமாறு அவர்களைத் திடுக்கிடவும் செய்தது” என்று கூறியதை நோக்கும்போது, அன்றைய தமிழறிஞர்களின் அப்பாவித்தனமும், ஐரோப்பிய மிஷனரிகளின் உண்மையான நோக்கத்தை அறியாத வெகுளித்தனமும் தெரிகிறது. திரு பாலசுப்ரமணியம் அவர்களும் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளவர் என்பதும், மேற்கண்ட ஜி.யு.போப்பின் கடிதக்கதையைப் பற்றி அவர் எந்தவிதமான குறிப்பையும் தரவில்லை என்பதும் இங்கே குறிப்பிட்த்தக்கது.

முனைவர் முத்துக்குமாரசுவாமி அவர்கள் ஆதாரங்களுடன் “தமிழ்ஹிந்து” இணையதளத்தில் எழுதிய கட்டுரையில், மானிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் எழுதிய பதிகத்துள் ஒன்றான ”நீத்தல் விண்ணப்பம்” என்கிற பதிகத்தை ஜி.யு.போப் எப்படி திரித்து எழுதி அதற்கு அபாண்டமான ஒரு விளக்கமும் கொடுத்து மாணிக்கவாசகப் பெருமானை அவமதித்துள்ளார் என்பதையும் பின்வருமாரு விளக்குகிறார்:

“மாணிக்கவாசகப்பெருமானை திருத்துறைப்பூண்டியில் ஆட்கொண்ட இறைவன் சிவபெருமான், ‘யாத்திரை செய்து திருக்கயிலாயம் வந்தடையுங்கள்; நீங்கள் போய் வழிபடும் இடங்களிலெல்லாம் நான் குருவடிவாய் காட்சி தருவேன்’ என்று சொல்லிய பின்னர், யாத்திரை தொடங்கி உத்தரகோசமங்கை வந்தடைந்த மாணிக்கவாசகர் இறைவனின் காட்சியைப் பெறாமல் பிரிவாற்றாமையால் வருந்தி ‘நீத்தல் விண்ணப்பம்’ என்கிற பதிகத்தைப் பாடுகிறார். இக்கட்டத்தை ஜி.யு.போப், ‘உத்தரகோசமங்கையில் நிலவிய சூழல் மாணிக்கவாசகரின் தவவாழ்க்கைக்குச் சோதனையாக இருந்தது. அவர் இளமையுடன் மதுரையில் வசித்து வந்த போது பாண்டிய மன்னனின் பேரன்பைப் பெற்றும் மகிழ்ச்சியான நிலையில் இல்லற வாழ்வில் ஈடுபட்டதும் அவருக்கு நினைவு வந்ததால், கோவிலில் இருந்த தேவரடியார்களுடன் தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்டார். அவருடைய இச்சையைத் தூண்டி அவருடைய ஒழுக்கக் கேட்டிற்குக் காரணமாக இருந்த சூழலில், மனமயக்கத்தினாலும் துறவு வாழ்க்கை மேற்கொள்ள இயலாததாலும் கழிவிரக்கம் கொண்டு பாடிய ஒப்புதல் வாக்குமூலமே நீத்தல் விண்ணப்பம் எனும் பதிகம்’ என்று அப்பதிகத்தின் அறிமுகவுரையில் எழுதி தமிழ் இந்துக்களுக்கு பேரதிர்ச்சி தருமாறு மாணிக்கவாசகப் பெருமானை அவதூறு செய்துள்ளார்”.

ஜி.யு.போப் கூறியதாவது: “From the evidence of these verses, we conclude that there were two things from which he suffered. One of these was the allurements of the female attendants who in bands pertained to the temple. We have noticed this elsewhere, Hindu commentators will often find mystic meaning, which are harmless, - if unfounded. Again and again in this and other poems he deplores the way in which he has been led to violate his vow. The other difficulty often referred to was the way in which mere ceremonial acts had to be performed, affording no relief to his conscience.”

முனைவர் மேலும், “உலகத்தார் பிழைகளைத் தம்மேல் ஏற்றிக் கூறி அவர்களுக்காக இறைவனிடம் மனமுருகி வேண்டுதல் இந்து மத்த்தின் பக்தி இலக்கிய மரபு. அதன்படியே, வினைக்கு ஈடாகப் பிறந்து உழலும் உலக மக்கள் பிறவிப் பயனைப் பெறாது இன்பத்தில் திளைத்து மேலும் வினைகளை ஈட்டிக்கொள்ளும் இயல்பைத் தன் மேல் ஏற்றிக்கொண்டு இறைவனிடம் மன்றாடுகிறார் மாணிக்கவாசகர். அதைத் திரித்து ஜி.யு.போப் கூறும் இந்த வரலாறு மாணிக்க வாசகப் பெருமானுக்குப் பெருமை சேர்ப்பதா? தன்மானம் உள்ள தமிழ் பற்றாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் அறிஞர்களும் போப்புக்குப் புகழ்மாலை சூட்டி மாணிக்கவாசகரை ஒழுக்கக்கேடர் என்னும் இழிவுக்கு உட்படுத்துவரோ?” என்று கேட்கிறார்.

இவ்விட்த்தில், திருவாசகமணி அவர்கள் போப்பின் தூஷணைத் தெரிந்திருந்தும் பெருந்தன்மையுடன் நடந்துகொண்ட்தைக் காடும் விதமாக, “போப் மணிவாசகருக்குச் செய்த இந்த இழிவைப் பிறர் அறியாதொழியினும், தம்முடைய திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பைப் போப்புக்குக் காணிக்கையாக்கி மகிழ்ந்த திருவாசகமணி நன்குஅறிந்தே இருந்தார். ஆயினும் இதைப்பற்றிய ஆய்வு இப்பொழுது வேண்டா எனக் கூறி , இந்துக் கோயில்களில் சில காலங்களுக்கு முன் நிலவி வந்த தேவதாசி முறையின் இழிவு குறித்துத் தம் கருத்தை மொழிந்து ஒதுங்கினார்” என்று விளக்குகிறார் முனைவர். (Ref: - http://www.tamilhindu.com/2009/10/gu_pope_and_thiruvasagam/)

பக்தி இலக்கியங்களைப் பொறுத்தவரை ஆழ்வார்களும், நாயன்மார்களும், மற்ற இலக்கிய கர்த்தாக்களும், தங்கள் மனதிற்குகந்த தெய்வங்களை நாயகனாகவும், நாயகியாகவும் பாவித்து ஆங்காங்கே சிற்றின்பச் சுவையுடனும் நவரசங்களுடனும் காவியங்களை வடித்து அதன் மூலம் பேரின்ப நிலையை வேண்டி காவியங்களைப் படைக்கும் வழக்கமும் இருந்த்து.

இங்கே திருவாசகத்தைப் பொறுத்தவரை மாணிக்கவாசகரின் நீத்தல் விண்ணப்பமானது ஜி.யு.போப் சொன்னது போல ஒப்புதல் வாக்குமூலம் அன்று. முனைவர் சுட்டிக் காட்டியதைப்போல உலகத்தார் செய்த பாவங்களைத் தன் மேல் ஏற்றிக்கொண்டு, பேரின்ப நிலையாகிய முக்தி வேண்டிப் பாடும் பாடலாகத்தான் இருக்கிறது. இறுதியில் மாணிக்கவாசகர் மாயையான இப்பிரபஞ்சத்திலிருந்து தன்னை விடுவித்து வீடுபேறு தருமாறு விண்ணப்பிக்கிறார்.

அடிப்படையில் ஒரு படைப்பை எப்படிப் புரிந்துகொள்ளுகிறோம், எவ்வாறு அர்த்தம் கொள்ளுகிறோம் என்பது முக்கியமான விஷயம். இங்கே ஜி.யு.போப் செய்துள்ளது அப்பட்டமான கிறுத்துவ அடிப்படைவாதம் அன்றி வேறில்லை.

சைவசித்தாந்தத்தைப் போற்றுமிடத்து உருவ வழிபாட்டைக் குறையும் கூறியுள்ளார் ஜி.யு.போப். சைவன் ஒருவன் ஆன்மீகநெறியில் எவ்வளவுக்கெவ்வளவு முன்னேறி செம்மை பெற்றுள்ளானோ அவ்வளவிற்கு ஆன்மநெறிக்குப் பொருத்தமற்ற உருவவழிபாடாகிய பாமர வழிபாட்டுச் சடங்குகளிலும் தீவிரமாக ஈடுபடுகின்றான் என்றும் போப் கூறுகிறார். அவர் கூறியதாவது: “There is in them (Saiva Saints) a strange combination of lofty feeling and spirituality with what we must pronounce to be the grossest idolatory. And this leads to the thought that in Saiva system of today two things that would appear to be mutually destructive are found to flourish, and even to strengthen one another. The more philosophical and refined the Saivite becomes the more enthusiastic does he often appears to be in the performance of the incongruous rites of the popular worship”.

இங்கு உருவ வழிபாட்டை முட்டாள் தனமான செயல் என்று தூஷணை செய்வதன் மூலம் ஜி.யு.போப் மீண்டும் தன்னுடைய கிறுத்துவ தீவிரவாத்த்தைத்தான் முன்நிறுத்துகிறார். “குரு ஸ்துதியே முழுவதுமாக இருக்கும் திருவாசகத்தில் உருவ வழிபாட்டைக் கொச்சை படுத்துகின்ற போப்பின் செயல் சரி தானா” என்றும் கேட்கிறார் முனைவர்.

தன்னுடைய திருவாசக மொழிபெயர்ப்பில் ஜி.யு.போப் மீண்டும் ஒரு இட்த்தில் மாணிக்கவாச்கரை அவதூறு செய்வதைச் சுட்டிக்காட்டுகின்ற முனைவர் முத்துக்குமாரசுவாமி அவர்கள், “மாணிக்கவாசகருக்காக இறைவன் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட வரலாறு எல்லோருக்கும் தெரியும். இறைவனின் திருவிளையாடலைப் பின்னர் அறிந்துகொண்ட மன்னன் மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு கேட்டு அவர் விருப்பப்படி அவர் பாண்டிய நாட்டை விட்டு வெளியேற அனுமதியளிக்கிறான். ஆனால் இவ்வரலாறை, ‘மதுரைக்கோவிலுக்கும் தில்லைக்கோவிலுக்கும் பிரச்சனை இருந்தது. மதுரையை விட்டுத் தில்லைக்குச் சென்ற மாணிக்கவாசகர், பின்னர் மதுரைக்குத் திரும்பவே இல்லை. குதிரை வாங்குவதற்காக மன்னன் அளித்த பொருளை மாணிக்கவாசகர் கவர்ந்து கொண்டதால் மன்னன் அவரை மன்னிக்கவேயில்லை என்பதனால் அவர் மதுரைக்குத் திரும்பவில்லை’ என்று திரித்துக் கூறியுள்ளார் போப்” என்று கூறுகிறார்.

ஜி.யு.போப் அவர்களின் கூற்று: “It does not appear indeed, that Maanikkavaachagar ever revisited Madura after his formal renunciation of his position there. It may almost be inferred that he was never heartily forgiven by the king for the misappropriation of the cost of horses.” திருவாசகத்தின் மீதான போப்பின் பற்றும் மாணிக்கவாசகரின் மீதான அவருடைய அன்பும் என்னவென்று சொல்வது!

முனைவர் மேலும் சொல்கிறார், “போப் திருவாசகத்தின் மொழிபெயர்ப்பின் பெரும் பகுதியை இத்தாலியில் உள்ள Lugano என்னும் நகரில் செய்ததாகவும், Bernardinao Luini என்னும் ஓவியரின் வண்ண ஓவியங்களைக் கண்டு தன்னுடைய களைப்பைத் தீர்த்துக் கொள்ளுவதற்கும் புத்துணர்வு பெறுவதற்கும் அந்த ஓவியங்கள் உள்ள S.Maria degili Angioli என்னும் சர்ச்சுக்கு அடிக்கடி சென்றதாகவும் அப்பொழுதெல்லாம் இறையைத் தேடும் இந்தத் தமிழ்த் துறவி(மணிவாசகர்) தம் அருகில் நிற்பது போன்றும் முழந்தாளிட்டு வழிபாடு செய்வது போலவும் கருதாமல் இருக்க முடியவில்லை எனவும் கூறுகின்றார். இந்த Great Master (இயேசு) கெத்சமனே யிலிருந்து விண்ணுலக சொர்க்கபூமிக்குச் செல்லும்வரை மாணிக்கவாசகர் அவருடைய அடிச்சுவட்டைக் கண்டு பின்பற்றியிருப்பார், இல்லாத போனால் இவரிடம் எவ்வாறு இவ்வளவு உருக்கம் இருக்க முடியும்? ஆச்சரியமாக இருக்கின்றது. இவரும் மயிலாப்பூரில் வாழ்ந்த நெசவாளி(திருவள்ளுவர்)யும் நாலடியார் இயற்றிய நாடோடிஞானிகளும் மற்றும் உடல் நீங்கியஞானிகளும்(freed from flesh) இந்தத் தலத்தைக் தரிசித்திருப்பார்கள்; உறுதியாக அந்த வரலாறுகளை (இயேசுவின் சரிதத்தை) அறிந்துதான் இருப்பார்கள் (கிறித்து மார்க்கத்தினால்தான் மெய்யுணர்வு பெற்றார்கள்) எனப் போப் திட்டவட்டமாகக் கூறுகிறார். (Ref: http://www.tamilhindu.com/2009/10/gu_pope_and_thiruvasagam/)

இத்தாலிய ஐயரின் திருக்குறள்/திருவள்ளுவ இழிவுரைகள்

ஜி.யு.போப் அவர்கள் 1886-ஆம் ஆண்டு திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட்டார். போப் வாழ்ந்த காலத்தில் வள்ளுவர் பற்றி, “அவருக்குக் கப்பல் தலைவன் ஒருவர் நண்பராக இருந்தார்” என்கிற ஒரு கர்ண பரம்பரைக் கதை நிலவி வந்த்து. இதை அப்படியே ஏற்றுக்கொண்டார் போப். அதோடு மட்டுமல்லாமல், வள்ளுவர் காலத்திலேயே மைலாபூரிலும் அதைச் சுற்றியும் பல குடும்பங்களை புனித தாமஸ் கிறுத்துவ மத்த்திற்கு மாற்றியுள்ளார் என்றும் நம்பியவர் போப். இந்த விஷயங்களை வைத்துக்கொண்டு, தன்னுடைய திருக்குறள் மொழிபெயற்பிற்கு பின்வருமாறு முன்னுரை வரைந்துள்ளார் ஜி.யு.போப்:

“வள்ளுவர் எல்லா வகைகளிலும் அறிவைச் சேகரிப்பதில் முனைந்து வந்தார். அவருடைய ஊருக்குப் புதிதாக யார் வந்தாலும், அவர் நண்பரும் கப்பல் தலைவருமான அவர் அன்பர் வள்ளுவருக்குச் செய்தி அனுப்புவார். பல வெளிநாட்டார் அக்கப்பல் தலைவர் தோணியிலேயே ஸ்ரீலங்கா மூலம் மயிலைக்கு வந்திருக்கலாம். அப்படி வந்த கிறுத்துவர்களிடமிருந்து அவர்களோடு கடற்கரையில் உலாவி வந்த வள்ளுவர் செய்திகளைச் சேகரித்த்தை நான் என் மனக்கண் முன்னால் காண்கிறேன். கிறுத்துவக் கோட்பாடுகளை அதிலும் அலெக்சாந்திரியக் கோட்பாடுகளையும் நுணுக்கங்களையும் நாளும் நாளும் வள்ளுவர் உசாவி அறிந்து வந்திருக்கிறார். அவற்றைத் தம் திருக்குறளில் வடித்து வைத்திருக்கிறார். வள்ளுவர் வாழ்ந்து வந்த இட்த்திற்குப் பக்கத்தில் நிலவி வந்த கிறுத்துவக் கோட்பாட்டுத் த்த்துவம் குறளில் தெளிவாகத் தெரிகிறது. வள்ளுவர் கி.பி.800க்கும் கி.பி.1000க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்து வந்தவர். கிறுத்துவ மறை நூல்கள் நிச்சயமாக அவர் வரைந்த குறளுக்கான ஆதாரங்களில் ஒன்று. கிறுத்துவ வேத்த்திலிருந்தே வள்ளுவர் உத்வேகம் பெற்றிருக்கிறார்”. (சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் டி.என்.ராமச்சந்திரன் எழுதிய ‘வியத்தகு ஆரிய நாகரிகம்’ என்ற கட்டுரை – “தமிழக அந்தணர் வரலாறு” தொகுதி-2 பக்கம் 641-643. – எல்.கே.எம். ப்ப்ளிகேஷன், சென்னை, ஜூன்2005)

ஜி.யு.போப் திருக்குறளுக்கு அளித்துள்ள இந்த அருவருக்கத் தக்க முன்னுரையானது, அவருடைய கிறுத்துவத் தீவிரவாத மனப்போக்கையும், அவருடைய தமிழ் பற்றின் பின்னால் இருந்த தீய நோக்கத்தையும் வெளிக்காட்டுவதாக உள்ளது.

தமிழ் மாணவன் கதை

மேலும் ஜி.யு.போப் பற்றி தமிழகத்தில் மற்றொரு கட்டுக்கதைப் பரப்பப் பட்டுள்ளது. ‘இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்’ என்று போப் தனது கல்லறையில் எழுதச்சொல்ல, அவ்வாறு எழுதியது இன்றும் உள்ளது என்பது தான் அந்தக் கதை.

“சில ஆர்வக்கோளாறு கொண்ட தமிழறிஞர்கள் தங்கள் லண்டன் விஜயத்தின் போது ஜி.யு போப்பின் கல்லறையைச் சல்லடை போட்டுத் தேடி, எப்படியோ கண்டுபிடித்துப் போய்ப்பார்த்து அப்படி ஒன்றும் இல்லை, அதச் சாதாரணக் கல்லறையில் வழக்கமான பாதிரி கல்லறைகள் போல சிலுவையும் பைபிள் வாசகமும் மட்டுமே இருந்தது என்பதைக் கண்டு ஏமாற்றம் அடைந்ததாக மதிப்பிற்குறிய ஒரு தமிழறிஞர் வாயிலாக நான் நேரடியாகக் கேட்டறிந்த விஷயம் இது” என்று கூறுகிறார் ஜடாயு என்கிற தமிழ் வலைப்பதிவர் (jataayu.blogspot.com ) – மேலும் ஜி.யு.போப்பின் கல்லறைப்படங்களை இங்கே காணலாம். http://www.flickr.com/photos/93039296@N00/759184087/

மேற்கண்டவாறு மாணிக்க வாசகப் பெருமானையும், தெய்வப்புலவர் திருவள்ளுவரையும், அவதூறும் அவமரியாதையும் செய்து, அவர்களது அற்புதப் படைப்புகளையும் கொச்சைப் படுத்திய போப்பிற்கு சென்னைக் கடற்கரையில் சிலை வைத்துக் கொண்டாடியுள்ள திராவிட இனவாதக் கூட்டம் தாங்கள் நடத்திய செம்மொழி மாநாட்டில் சைவ வைணவ இலக்கியங்களையும் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளாமல் நாயன்மார்களையும் ஆழ்வார்களையும் புறந்தள்ளியதோடு மட்டுமல்லாமல் கிறுத்துவப் பாதிரிமார்களுக்குப் புகழாரம் சூட்டியதிலும் ஒன்றும் ஆச்சரியமில்லையே! இந்த லட்சணத்தில் மாநாட்டின் இலச்சினையில் திருவள்ளுவர் சிலை வேறு!

(தொடரும்...)



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை 1

By தமிழ்ச்செல்வன்

கட்டுரைத் தொடரின் பொருள்

நடந்து முடிந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலும், அதன் தொடர்பாகப் பத்திரிகைகளில் வெளிவந்துகொண்டிருக்கும் கட்டுரைகள் வாயிலாகவும், கிறுத்துவப் பாதிரிமார்கள் வந்து தமிழுக்கு உயிர் கொடுத்திருக்காவிட்டால் தமிழ் மொழி இறந்து போயிருக்கும் என்பது போலவும் ‘தமிழ் உரைநடை’ என்பதே கிறுத்துவப் பாதிரிமார்கள் தமிழ் மொழிக்குக் கொடுத்த கொடை என்பது போலவும் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. இந்தப் பிரசாரத்திற்கு, மாநாட்டை நடத்திய திராவிட இனவாதக் கூட்டமும், மாநாட்டிற்கு உள்ளிருந்தும் வெளியிருந்தும் பங்காற்றிக் கொண்டு, அக்கூட்டதிற்கு ஜால்ரா போட்ட கூட்டமும், பூரண ஆதரவு அளித்தன. ஆனால் உண்மையான தமிழ்பற்று கொண்டவர்களும், நடுநிலையாளர்களும், பாரத மொழிகளுக்கிடையே உள்ள உறவும் அவ்வுறவினால் பின்னிப் பிணையப்பட்டுள்ள மகோன்னதமான பாரத கலாசாரத்தின் பெருமையை உணர்ந்தவர்களும், தேசிய ஒருமைப்பாட்டை விரும்புகிறவர்களும், இப்பிரசாரத்தை பொய்யென அடியோடு வெறுத்துப் புறந்தள்ளுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. (cathnewsindia மற்றும் Hindu மற்றும் expressbuzz ).

 

இந்தப் பொய்ப்பிரசாரத்தைப் பரப்புபவர்கள் தமிழ் மொழிக்கு உயிர்கொடுத்தவர்களாக முன் நிறுத்துபவர்கள் ஜி.யு.போப், கான்ஸ்டண்டைன் ஜோஸப் பெஸ்கி, ராபர்ட் கால்டுவெல், பார்த்தலோமியோ ஸீகன் பால்கு, டாக்டர் சாமுவேல் கிரீன், இரேனியஸ் மற்றும் பிரான்ஸிஸ் ஒயிட் எல்லிஸ் ஆகியவர்கள்தான். மேற்சொன்னவர்களில் பிரான்ஸிஸ் ஒயிட் எல்லிஸ் என்பவர் எல்லிஸ் துரை என்று வழங்கப்பட்ட ஆங்கிலேய அரசு அதிகாரியாக இந்தியாவிலும், சாமுவேல் கிரீன் மருத்துவராக இலங்கையிலும் பணியாற்றி பாதிரிமார்களின் மதமாற்றத்திற்குத் துணை நின்றவர்கள். மற்றவர்கள் அனைவரும் பெருமளவில் மதமாற்றம் புரிந்து இந்தியாவை, குறிப்பாகத் தமிழகத்தை கிறுத்துவ தேசமாக ஆக்கவேண்டும் என்கிற “புனித” நோக்கத்தோடு இங்கே காலூன்றியவர்கள் தான். எழுத்தாளர் முனைவர் கே. மீனாட்சி சுந்தரம் அவர்கள் தன்னுடைய “ஐரோப்பிய அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய பங்கு” (The contribution of European scholars to Tamil- K. Meenakshisundaram) என்ற புத்தகத்தில் கிறுத்துவ மிஷனரிகள் காலத்தைப் ”பொற்காலம்” என்று வேறு போற்றுகிறார்! இந்தப் புத்தகமானது அவர் 1966-ஆம் ஆண்டு மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டத்திற்காகத் தன்னுடைய வியாசமாக (Thesis) அளித்தகட்டுரைதான் இது. (http://www.hindu.com/2010/06/25/stories/2010062554000700.htm ) எனவே இந்தப் பிரசாரம் உண்மைதானா என்று ஆராய்ந்து நோக்குவது தமிழ் கூறும் நல்லுலகிற்கு நன்மை பயக்கும்.

 

மிஷனரிகளும் அவர்கள் நோக்கமும்

 

இம்மண்ணின் மைந்தர்களான தமிழ் இந்துக்களிடம் உரையாட இயலாததாலும், பேச்சுத் தொடர்பும் கருத்துப் பரிமாற்றமும் வைத்துக்கொள்ள முடியாததாலும், தங்களின் முக்கியக் குறிக்கோளான மதமாற்றத்திற்குப் பெரிதும் இடையூராக இருப்பது மொழிப்பிரச்சனை தான் என்று உணர்ந்தனர் பாதிரிமார்கள். தமிழர்களிடம் பேசாமலும், கருத்துக்களைப் பரிமாற்றாமலும் அவர்களை மதமாற்றம் செய்ய முடியாது என்கிற ஒரே காரணத்தால்தான் தமிழ் மொழியைக் கற்றனர். ஆயினும், இயல், இசை, நாடகம் என்று அனைத்தும் ஊறிய ஆன்மீக மற்றும் காலசாரப் பாரம்பரியம் மிக்க தமிழ் இந்துக்களை வெறுமனே தமிழ் மொழியில் பேசி மதமாற்றம் செய்ய முடியாது என்பதை விரைவில் புரிந்துகொண்ட காரணத்தால் தான், தமிழ் இலக்கியத்தின் பால் அவர்கள் கவனம் சென்றது.

 

ஒரு தேசத்தின் மொழிகளில் உள்ள இலக்கியங்களைப் படித்தால் தான் அத்தேசத்தின் பண்பாடும், கலாசாரமும், ஆன்மீகப் பாரம்பரியமும் புரிபடும். அப்போது தான் அதற்கு ஏற்றாற் போல் தங்களுடைய மதமாற்றத் தந்திரங்களை மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்கிற களவு மனப்பான்மையுடன் தான் இவர்கள் தமிழ் இலக்கியங்களைக் கற்றார்களே தவிர, தமிழின் பால் கொண்ட ஈர்ப்போ, ஈடுபாடோ, பற்றோ, பாசமோ அல்ல.

 

மேலும், இந்த நாட்டின் பண்பாடும், கலாசாரமும், பாரம்பரியமும் எப்பேர்பட்டன, எவ்வாறு இருக்கின்றன என்பதை இவர்கள் மட்டும் தெரிந்து கொண்டால் போதாது, இவர்களை ‘மதமாற்றம்’ எனும் “புனித” ஊழியத்திற்கு அனுப்பிய நிறுவனங்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான் அவற்றைத் தங்கள் மொழிகளில் மொழிபெயற்பும் செய்தார்கள். தலைமை நிறுவனங்களுக்கு, இந்நாட்டின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால கலாசாரமும் பாரம்பரியமும் புரிந்தால் தான், அவற்றை உடைத்து மதமாற்றம் செய்வதென்பது எவ்வளவு கடினம் என்று உணர்வர். அதற்கு ஏராளமான நிதியும், அரசியல் சக்தியும், ஆள்பலமும் தேவை என்பதையும் புரிந்து கொள்வர். அப்போது தான் தாம் வந்த வேலை முடிவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடையும் என்கிற நோக்கிலும் இப்பாதிரியர்கள் செயல்பட்டுள்ளனர்.

ஆப்பிரஹாமிய மதங்கள் “அரசியல் மதங்கள்”; உலகம் முழுவதும் அவர்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவருவதே அவர்களின் முதன்மையான நோக்கம்; மதத்தைப் பரப்புவதற்காக அரசியல் சக்தி பெற்று ஆட்சியமைக்க முற்படுவார்கள்; என்கிற உண்மைகளைப் புரிந்துகொண்டோமானால், மேற்கண்ட மத போதகர்கள் எதற்காக நம் மண்ணில் இறங்கினார்கள் (இறக்கப்பட்டார்கள்), எதற்காக நம் மொழியைக் கற்று நம் இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தார்கள் என்பதை உணர முடியும்.

ஐரோப்பிய நிறுவனங்கள்

16-ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்த கிறுத்துவ ஆக்கிரமிப்பு மெதுவாகப் பரவியது. போர்சுகீசிய, டச்சு, பிரெஞ்சு, ஜெர்மானிய மற்றும் ஆங்கிலேய கிறுத்துவ மத நிறுவனங்கள், வியாபார நோக்கிலும், மத ஊழிய நோக்கிலும் கோவா, கேரளம், தமிழகம், வட கிழக்கு, வங்காளம் என்று இந்தியாவின் பல இடங்களில் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடங்கினார்கள். இவர்கள் பின்னே அந்நாடுகளின் படையெடுப்பும் தொடர்ந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியாரின் காலத்திலிருந்தே அடக்குமுறை ஆரம்பமாகிவிட்டது. 1858-ஆம் ஆண்டு அரசியல் சக்தி பெற்று ஆங்கிலேயர் ஆட்சி அமைத்தனர். அரசியல் சக்தி அடைந்தவுடன் மத நிறுவனங்களுக்கு ஏராளமான நிலங்களும், மற்ற வசதிகளும் செய்து கொடுத்தது ஆங்கிலேய அரசாங்கம். அரசு நிறுவனங்களும், மத நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டால் விரைவில் பலன் கிட்டும் என்பது நன்றாகவே அவர்களுக்குத் தெரியும். சுதந்திரம் பெற்ற பின்னும் இந்தியர்கள் விழித்துக் கொள்ளவில்லையாதலால், அரசியல் சக்தியும், ஆட்சி பலமும் அவர்கள் கையிலேயே தொடர்கின்றது என்பதை, சோனியாவின் தலைமையின் கீழும், அமெரிக்காவின் ஆலோசனையின் பேரிலும் ஆட்சி நடப்பதை வைத்துப் புரிந்து கொள்ளலாம்.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் திராவிட மாயையில் கட்டுண்டு கிடப்பதற்கு அடித்தளம் இட்டவர்கள் அன்னிய தேசங்களிலிருந்து வந்த பாதிரிமார்கள் தான் என்றும், ஹிந்து மதம் உயிரோட்டத்துடன் இருக்கும் வரை இந்தியரை அடிமைப் படுத்த முடியாது என்பதே கிறுத்துவ மிஷனரிகளின் நோக்கம் என்றும் பத்திரிகையாளர்/எழுத்தாளர் சுப்பு அவர்கள் தன் “திராவிட மாயை” புத்தகத்தில் கூறுகிறார். “டச்சுக்காரர்கள் பழவேற்காட்டிலும் (1609), சதுரங்கப்பட்டினத்திலும் (1647), நாகைப் பட்டினத்திலும் (1660) தங்களது வணிக மையங்களைத் தொடங்கினர். ஆங்கிலேயர்கள் மசூலிப்பட்டினத்திலும் (1622), சென்னையிலும் (1639), கடலூரிலும் (1683), கல்கத்தாவிலும் தளம் அமைத்தனர். பிரெஞ்சுக்காரர்களுக்கு கிடைத்தது (1674) பாண்டிச்சேரி. டேனிஷ்காரர்கள் தரங்கம்பாடியில் (1620) தங்கள் முகாமை ஏற்படுத்தினர்.” என்று கிறுத்துவ ஆக்கிரமிப்பின் ஆரம்பத்தைச் சுட்டிக்காட்டிய சுப்பு அவர்கள், “ஒரு பக்கம் நேரடியான நடவடிக்கையில் கிறுத்துவப் பாதிரிமார்கள் இறங்கிய போது, இன்னொரு பக்கம் கிறுத்துவத்தை முன்னிலைப் படுத்தாமல் இந்துக்களைப் பிளவு படுத்தும் முயற்சியும் தொடங்கியது” என்று கூறி, “கால்டுவெல்லின் தாயாதிகள்” என்கிற அத்தியாயத்தில் தமிழகத்தில் கிறுத்துவப் பாதிரிகள் மேற்கொண்ட மதமாற்ற நடவடிக்கைகளையும், ஹிந்துக்களைப் பிளவு படுத்த அவர்கள் கையாண்ட யுக்திகளையும் விளக்குகிறார். [திராவிட மாயை (இரண்டாம் அத்தியாயம்; பக்கம் 20-28) – சுப்பு – திரிசக்தி பதிப்பகம். மார்ச்சு 2010]

ஆகவே, 16-ஆம் நூற்றாண்டில் தமிழ் மண்ணில் கால் வைத்த பாதிரிமார்கள் மதம் வளர்க்க வந்தவர்கள், அரசியல் சக்தி பெறுவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வந்தவர்கள், அதற்காகத் தான் நம் மொழியைக் கற்றார்கள் என்பதற்கு மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. மேலும் இவர்களுக்கே உரிய களவு மனப்பான்மையினால், மதமாற்றம் செய்வதற்காகக் “கலாசாரக் களவு” (Inculturation) முறையும் செய்தார்கள். (Ref: ‘Inculturation’ - A danger to communal amity! – http://www.newstodaynet.com/col.php?section=20&catid=29&id=8512 )

ரோமானிய பிராம்மணர் நொபிலி

இவர்களுக்கு முன்னோடியாக இருந்தவர் இத்தாலி நாட்டில் இருந்து வந்த ராபர்ட்-டி-நொபிலி (1577-1656) என்கிற கிறுத்துவப் பாதிரியார். இவர் நம் மக்களைச் சுலபமாக மதமாற்றம் செய்யவேண்டும் என்பதற்காக சமஸ்க்ருதம்/தமிழ் இரண்டு மொழிகளையும் கற்றுக்கொண்டு தன்னை ’ரோமாபுரி பிராம்மணர்’ என்றும் சொல்லிக்கொண்டார். காவியுடை தரித்து, சிறிய சிலுவை இணைத்த ஒரு பூணூலையும் அணிந்துகொண்டு, நெற்றியில் சந்தனம் இட்டுக்கொண்டு, மதுரையில் ஒரு ஆசிரமத்தையும் அமைத்துக் கொண்டார். உணவுப் பழக்கத்தில் சுத்த சைவராகவும் மாறினார். நடப்பதற்குக் கால்களில் மரத்தாலான பாதுகைகளே உபயோகித்தார். பல நூற்றண்டுகளுக்கு முன்னால் மறைந்து போன, கர்த்தர் எனும் கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட, வேதம்தான் பைபிள் என்று சாதித்தார். காவியுடை தரித்து, பூணூல் அணிந்து, குடில் ஒன்றில் ஆசிரமம் அமைத்து போதனை செய்ததால் ஓரளவிற்கு மதமாற்றம் செய்வதில் வெற்றியும் கண்டார். ஆனால் இவருடைய கலாசாரக் களவு முறை ஐரோப்பிய ஆசான்களுக்கு அந்தச் சமயத்தில் ஒப்புடைமை இல்லையாதலால் இவருடைய முயற்சிகள் பாதியில் நின்று போயின. இவருடைய மதமாற்ற வழிமுறைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதால், மதுரையிலிருந்து வெளியேறி, திருச்சி, சேலம் முதலிய ஊர்களுக்குச் சென்று இறுதியில் சென்னை சாந்தோம் அருகே ஒரு சிறிய வீட்டில் 1656-ஆம் ஆண்டு இறந்து போனார். (Ref: - “The Portuguese in India”, Orient Longman, Hyderabad, 1990 and “Christianity in India-A critical study” – Vivekananda Kendra Prakasham).

இவர், 15 புத்தகங்கள் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. அவை மட்டுமல்லாமல் போர்சுகீசிய-தமிழ் அகராதி ஒன்றையும் தயாரித்துள்ளார். மேலும் தமிழில் பல விவிலிய வார்த்தைகளையும் புகுத்தியிருக்கிறார். இதனால் ‘தமிழ்’ வளர்ச்சி அடைந்ததா அல்லது ‘கிறுத்துவம்’ வளர்ச்சி அடைந்ததா என்று பார்த்தால் கிறுத்துவம் தான் என்பது தெளிவாக விளங்கும்.

தீண்டாமையைக் கடுமையாக ஆதரித்த இவர், “கிறுத்துவனாவதில் ஒருவன் தனது சாதி, குடிப்பிறப்பு, பழக்க வழக்கம் முதலானவைகளைத் துறக்க வேண்டியதில்லை, கிறுத்துவ சமயத்தைத் தழுவினால் இவை கெட்டுப்போகும் என்ற போதனையைப் புகட்டியவன் சாத்தான். கிறுத்துவ சமயம் பரவுவதற்கு இடையூராக இருப்பது இப்போதனையே” என்று 1650-ல் தான் எழுதிய ஒரு கடிதத்தில் தன் குறிக்கோளைத் தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார் நொபிலி என்று காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ‘கிறுத்துவமும் சாதியும்’ என்கிற புத்தகத்தில் எழுத்தாளர் ஆ.சிவசுப்பிரமணியன் கூறியுள்ளார். [திராவிட மாயை (முதல் அத்தியாயம்; பக்கம் 19) – சுப்பு – திரிசக்தி பதிப்பகம். மார்ச்சு 2010]

இத்தாலிய முனிவர் பெஸ்கி

இவருக்கு அடுத்தவர் கான்ஸ்டண்டைன் ஜோசெஃப் பெஸ்கி (1680-1746) என்கிற வீரமாமுனிவர். ராபர்ட்-டி-நொபிலி தன்னைப் பிராம்மணர் என்று சொல்லிக் கொண்டதைப்போல் இவர் தன்னை முனிவராக்கிக் கொண்டார். அதுவும் வீரமுள்ள மாமுனிவராக! அவரைப்போலவே, இவரும் தன்னை ஒரு ஹிந்து சன்யாஸியைப் போலக் காட்டிக்கொண்டார். மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் மதமாற்றங்களில் ஈடுபட்டார். இவர் தமிழுக்குச் செய்த தொண்டு “தேம்பாவணி” என்னும் உரைநடையில் எழுதப்பட்ட புனித ஜோசப்பின் வாழ்க்கை வரலாறு. கம்ப ராமாயணத்தின் பெருமையை உணர்ந்து அதைப்போல் கிறுத்துவத்திலும் ஒரு காப்பியம் வேண்டும் என்று எண்ணி தேம்பாவணியை இயற்றினாராம். தேம்பாவணியால் தமிழ் வளர்ந்ததா அல்லது கிறுத்துவம் வளர்ந்ததா என்று பார்த்தால், கிறுத்துவம் வளர்ந்து, புனித ஜோசப் பெயரும் தமிழகத்தில் நிலைநாட்டப் பட்டது, என்பதுதான் உண்மை. இந்தத் தேம்பாவணியால் தமிழுக்கு எதுவும் பிரயோசனம் இருந்ததாகத் தெரியவில்லை. இவர் அதோடு நிறுத்தவில்லை தன் தமிழ்ப் பணியை! நம் பாரத தேசத்தில் வேத காலத்திலிருந்து பாரம்பரியமாக இருந்து வந்த குரு-சிஷ்ய பரம்பரை என்று போற்றப்பட்ட கல்வி முறையைக் கிண்டல் செய்யும் விதமாக, ‘பரமார்த்த குருவும் அவரின் சீடர்களும்’ என்ற நூலையும் எழுதினார். முனிவர் என்று பெயர் வைத்துக்கொண்டு குரு-சிஷ்ய பரம்பரையைக் கிண்டல் செய்தவரைத் தமிழுக்குச் சேவை புரிந்துள்ளார் என்று கொண்டாடிய திராவிட இனவெறியாளர்கள், இவருக்குச் சென்னைக் கடற்கரையில் சிலையும் எடுத்தனர்.

ஜெர்மானிய ஐயர் ஸீகன்பால்கு

ஜோஸஃப் பெஸ்கி காலத்தைச் சேர்ந்த, தமிழகத்தில் இருந்த, மற்றொரு பாதிரி பார்த்தலோமியோ ஸீகன் பால்கு (1683-1719) என்கிற ஸீகன் பால்கு ஐயர். ஆம், பிராம்மணர், முனிவர் வரிசையில் அடுத்ததாக ஐயர்! இவர் ஜெர்மனியிலிருந்து வந்த பிராடஸ்டண்டு பாதிரியார். 1706-ல் தரங்கம்பாடியில் வந்து இறங்கிய ஸீகன்பால்கு, அங்கு ஏற்கனவே இருந்த ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்த அச்சு இயந்திரங்களை வைத்து அச்சகம் நட்த்திக்கொண்டிருந்த ஒரு டேனிஷ் கத்தோலிக்க நிறுவனம் சார்பாக, விவிலியத்தின் புதிய ஏற்பாடை தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்டார். பெருமளவில் மதமாற்றம் செய்யும் எண்ணத்துடன் வந்திறங்கிய இவருக்கு டேனிஷ் (Danish) கத்தோலிக்கர்களுடன் சண்டை போடுவதிலேயே பாதி நாட்கள் கழிந்தது. டேனிஷ் நிறுவனம் இவரைச் சிறையிலும் அடைத்தது.

பிராம்மணர்களிடம் மற்ற சமூகத்தவர்கள் வெறுப்பு கொள்ளுமாறு பிராம்மண துவேஷத்தை முதன் முதலில் தமிழகத்தில் உண்டாக்கியவர் என்கிற “பெருமை” உடையவர் இந்தப் பாதிரி. அடிக்கடி நோய்களினால் பாதிக்கப்பட்ட இவர் 1719-ல் தன்னுடைய 36-வது வயதில் இறந்து போனபோது, தரங்கம்பாடியில் இரண்டு சர்ச்சுகளும், இந்தியப் பாதிரிமார்களுக்கான பயிற்சி மையத்தையும், தன்னால் மதமாற்றம் செய்யப்பட்ட 250 இந்தியக் கிறுத்துவர்களையும் விட்டுச் சென்றார். இவர் சார்ந்திருந்த “லுதெரன் சர்ச்சு” பெருமளவு வளர்ந்து ஜூலை 2006-ல் இவர் வரவின் 300-வது ஆண்டு விழாவை சென்னையில் விமரிசையாக்க் கொண்டாடியபோது, தமிழக கவர்னர் சுருஜித் சிங் பர்னாலா இவருடைய “சேவையை” பாராட்டிப் பேசினார். இவர் நினைவாகத் தபால் தலையும் வெளியிடப்பட்டது. (http://en.wikipedia.org/wiki/Bartholom%C3%A4us_Ziegenbalg )

1906-ல் ஆட்சி புரிந்துகொண்டிருந்த ஆங்கிலேய அரசு கூட இவர் வரவின் 200-வது ஆண்டைக் கொண்டாடவில்லை. ஆனால் இந்திய மண்ணிற்கு வந்து, இந்திய மக்களிடையே ஜாதித் துவேஷங்களை வளர்த்து, மதமாற்றம் செய்து, இம்மண்ணின் கலாசாரத்திற்குப் பாதகம் செய்த ஒருவருக்கு லுதெரன் சர்ச்சு நிறுவனம் இந்திய மண்ணில் விழா எடுக்க அதில் இந்திய அரசியல் பதவி வகிக்கின்ற ஒரு தலைவரே கலந்து கொள்வதென்பது எவ்வளவு வேதனையான விஷயம்! மற்றபடி இவர் தமிழில் மொழி பெயர்த்த விவிலியத்தால் தமிழ் வளரவில்லை, கிறுத்துவம் மட்டுமே வளர்ந்தது!

(தொடரும்...)



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

திராவிட என்ற சொல்லை தமிழ்ச்செல்வன் இந்தப் பொருளில்தான் சொல்கிறார் என்பதை

சொல்லப்படும் சூழலின் அடிப்படையில் எளிதில் புரிந்து கொண்டவர்களுக்கு

என் எதிர்வினையில் "கால்டுவெல் செய்ததெல்லாம் திராவிடம் என்ற சொல்லை தமிழர்களுடன்

இணைத்தது தான். அது சரியோ தவறோ விமர்சனத்திற்கு உரியதுதான்" என்று சொல்வதை

மட்டும் எளிதில் புரிந்து கொள்ள முடியாமல் தடுப்பது எது? என்பது தான் புரியவில்லை.

 

 

<2> "கால்டுவெல் ஆதிதிராவிடர்களே இந்த மண்ணின் மைந்தர்கள் என்று சொன்னார் என்பது வேண்டுமென்றே தற்போது செய்யப்படுகிற ஒரு பிரச்சாரம்." என்று குற்றம் சாட்டுவது இன்னும் அதிர்ச்சி தந்த விசயம் எனக்கு.

 

ஜன-பிப் 2006 கவிதாசரண் இதழில் தமிழகம் கண்டறியாத கால்டுவெல்லின் பின்னிணைப்புகள் என்று

அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது இருவர் எழுதிய கட்டுரைகள்.

பொ.வேல்சாமி எழுதிய கட்டுரை கால்டுவெல் நூலின் பதிப்புக் குளறுபடிகள் பற்றிய தகவல்களை திரட்டித்

தந்திருந்தது. வேதசகாயகுமாரின் கட்டுரை அக்குளறுபடிகளுக்கான சாதி அரசியலை வெகு நுட்பமாக

துலாம்பரப்படுத்தியிருந்தது.

இராபர்ட் கால்டுவெல் 1875இல் இரண்டாம் பதிப்பாகத் திருத்தி வெளியிட்ட "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" (A comparative Grammer of the Dravidian or South Indian Languages) என்னும் நூல் 1913இல் பல்வேறு விடுபடல்களுடன் மூன்றாம் பதிப்பாக வெளியிடப்பட்டது. மூல நூல் மொழியியல், வரலாற்றியல், சமூகவியல் என முப்பரிமாணம் கொண்டது. அவற்றில் மொழியியலை மாத்திரம் தக்க வைத்துக்கொண்டதே மூன்றாம் பதிப்பு - ஆகவே, குறை பதிப்பு. இப்போது கால்டுவெல்லின் 1875ஆம் ஆண்டின் முழுமையான ஆங்கிலப் பதிப்பு கவிதாசரண் பதிப்பகம் 2008ல் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

கால்டுவெல் நூலின் மூன்றாம் பதிப்பும் தற்போது கவிதாசரண் வெளியிட்டிருக்கும் இரண்டாம் பதிப்பின்

மறுபதிப்பும் இரண்டுமே என் வாசிப்புக்கு கிடைத்தது. இக்காலக்கட்டத்தில் இதுதொடர்பாக நான் கவிதாசரண்

அவர்களை சென்னையில் அவருடைய இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து பேசியிருக்கிறேன்.

தலித்தியத்தையும் திராவிடத்தையும் தங்கள் சுயலாபங்களுக்காக விற்றுப் பிழைக்கும் தலைவர்கள்

மலிந்த தமிழ்மண்ணில் தான் குடியிருக்கும் வீட்டை அடமானம் வைத்து கடன்பட்டுத்தான்

கவிதாசரண் அவர்கள் கால்டுவெல் நூலைப் பதிப்பித்தார் என்பதையும் நானறிவேன்.

 

இந்த உண்மைகளை நான் எழுதும் நோக்கம் உங்கள் குற்றச்சாட்டுக்குப் பதிலாக இருக்க முடியுமா?

தெரியவில்லை. ஆனால் இந்த உண்மையின் சாட்சியாக நானும் இருக்கிறேன் என்பதால்

இதை எழுத உங்க:ள் குற்றச்சாட்டே வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது.

அதற்காகவே உங்களுக்கு என் நன்றி.

 

<3> போரிடும் இனம் - மகர்கள் வெள்ளையர் இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டதையும்

மராட்டிய மண்ணில் ஒலித்த கோபால்நக் விதல்நக் வலன்க்கர் (Gopaknak vithalnak walangkar)

போராட்டங்களையும் அவருக்குப் பின் வந்த சிவராம் ஜான்பா காம்ப்ளேயின் போராட்டங்களையும்

இந்தப் போராட்டங்களே மகர் இன - தலித்திய போராட்டங்களாக வளர்ந்தது என்பதும்

மராத்திய வரலாறு. என் ஆதாரங்களைப் புறம்தள்ளிவிட்டு

"சாதியின் நெகிழ்ச்சித்தன்மையை இல்லாமல் ஆக்கியதில் பிரிட்டிஷாரின் பங்கு முக்கியமானது.

பிரிட்டிஷ் கல்வி முறையினால் தாழ்த்தப்பட்ட சாதியினரிடையே கல்வியின்மை பரவியது

என சொல்கிறார் ஒரு நவீன பிரிட்டிஷ் கல்வி ஆராய்ச்சியாளர்" என்று புதிதாக ஒரு முழுப்பூசணிக்காயை

சோத்துக்கவளத்தில் மறைப்பது போல எழுதியிருக்கிறீர்கள்.

 

எனக்கு ஒரு பயணக்குறிப்பு நினைவுக்கு வருகிறது.

ஜேம்ஸ் மாசே, கட்டுரையில் இடம் பெற்றுள்ளது..

 

"பார்ப்பனர்கள் தாம் எழுதிய வேதங்களை சத்திரியர்களுக்கு கற்பித்தனர். சத்திரியன் அதை கற்றுக் கொள்ளலாம். ஆனால், கற்பிக்கக் கூடாது. ஒரு பார்ப்பனனுக்கே கூட அவ்விதம் செய்யக் கூடாது. வைசியர்களும், சூத்திரர்களும் அதை கேட்கவோ, உச்சரிக்கவோ கூடாது. அப்படி ஒரு செயல் நிரூபிக்கப்படுமானால், பார்ப்பனன் அந்த சூத்திரனை நீதிபதியின் முன்னால் இழுத்துக் கொண்டு போய் நிற்க வைத்து, அக்குற்றவாளியின் நாக்கினை துண்டித்திடும் தண்டனையைப் பெற்றுத் தருவான்.''



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Kerala poll panel asks for report on bishop council letter
THIRUVANANTHAPURAM: Kerala's state election commissioner has asked for a report on a letter by the Kerala Catholic Bishops Council (KCBC) asking people not to vote for independent candidates who are atheists in the upcoming local bodies poll. 

State Election Commissioner (SEC) P Kamalkutty has asked the Ernakulam district collector for a report on the KCBC letter read out in all churches after Sunday mass on July 18. 

The letter asked the faithful not to vote for independent candidates who are atheists in the local bodies poll due to be held in September. 

The SEC decided to write to the collector to make inquiries following complaints from Ernakulam. 

"We had come out with a similar letter during the last Lok Sabha elections as well," said KCBC spokesperson Stephen Alathara. 

Catholics account for more than half of the 23 percent Christians in the 3.20 crore population of the state.

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ம‌த‌ம்மாற்ற‌ செய்ய‌ மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

hindu-jesus-from-christ-the-yogi-book-1986.jpg
இந்தியாவில் இந்து இயேசு.
புயலை எழுப்பும் புதிய பைபிள்.

இந்தியாவில் கிறித்துவத்தைப் பரப்பஏசுவை கண்ணணாகவும் பைபிளை கீதையாகவும் ஆக்கும் முயற்ச்சிகளில் தோல்வியும் தளர்ச்சியும் அடையப் பெற்று இப்பொழுது நடப்பில் ஏசு " அல்லா " ஆக ஆக்கப்பட்டு "பைபிள்" "ஈஸா குர் ஆன் " ஆக ஆக்கப்படும் முயற்ச்சி உலக முழுவதிலும் மலிந்து வருகிற‌து.. 

இதை இணைய தளங்களிலும் கண்கூடாக காண‌லாம்

கிறித்துவத்தைப் பரப்ப ஹிந்துகளிடம் ஏசு=“கிருஷ்ணன்" !!பைபிள்=”கீதை” !! என்றும் முஸ்லிம்களிடம் “அல்லா " = "கர்த்தர்" "இயேசு" “பைபிள் ="ஈஸா குர் ஆன் “ என்றும் த‌ங்க‌ள் ம‌த‌த்தை பற்றி சரியாக‌ அறிந்திராத பாம‌ர‌ ஹிந்து முஸ்லீம்க‌ளை மூளைச்ச‌ல‌வை செய்து கிறிஸ்துவ‌ர்க‌ளாக‌ ம‌த‌ மாற்ற‌ம் செய்து வ‌ருகிறார்க‌ள்.

கிறிஸ்துவ‌ த‌லைமை பீட‌மான‌ வ‌ட்டிக‌னிலிருந்தே போப்பாண்டவரின் ஆசியோடு  மாற்று பைபிளை த‌யாரித்து இந்துக்க‌ளை ம‌த‌ம் மாற்ற‌ ஆவ‌ண‌ செய்து வ‌ருகின்றார்க‌ள் என்றால் புரிந்து கொள்ளுங்க‌ள்.
NEW_BIBLE.jpg
PICTURE FROM KUMUDAM REPORTER 31.02.2008
புயலை எழுப்பும் புதிய பைபிள்.கொந்தளிக்கும் கிறிஸ்துவ அமைப்புகள்

சிவன், கிருஷ்ணர் சிலைகளை தேவாலயத்தில் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

கத்தோலிக்க கிறிஸ்துவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது போப்பாண்டவரின் ஆசியோடு வெளியிடப்பட்டிருக்கும் புதிய பைபிள் ஒன்று.

இந்த ஒரு புத்தகத்தால் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களிடையே மதக் கலவரம் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாக, அவர்கள் அபயக் குரல் எழுப்புவது ஒட்டுமொத்த அதிர்வலையைக் கிளப்பியிருக்கிறது.

புதிய பைபிள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பின் தலைவர் ரபேலை சந்தித்துப் பேசினோம்.

"இந்து, முஸ்லிம் மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களை எடுத்துக் கொண்டு, நமது சமூகம் ஒற்றுமையாக இருக்கும் வகையில் அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்என ரோமாபுரியில் நடந்த இரண்டாம் வாடிகன் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதையொட்டி வெளியான இந்தப் புதிய பைபிள், கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மனதைப் பெரிதும் புண்படுத்தியிருக்கிறது. இதனை இந்து மதப் பெரியவர்கள் படித்தால் கொதித்துப் போவார்கள்'' என்றார் அவர்.

`மேலும் விளக்கமாகக் கூறுங்கள்' என்றோம் நாம்.

"வாடிகனில் உள்ள போப் 16-ம் பெனடிக்ட், இந்த ஆண்டை இயேசுவின் புனித சீடர்களில் ஒருவரான புனித பவுல் ஆண்டாக அறிவித்துள்ளார்.

இதையொட்டி, கடந்த ஜூன் மாதம் மும்பை பேராயர் ஆஸ்வால் கிரேசியஸ் என்பவர், மிகப் பெரிய பதிப்பக நிறுவனமான செயிண்ட் பால் மூலம், `தி கம்யூனிட்டி பைபிள்' என்ற தலைப்பில் 2,271 பக்கமுள்ள புதிய பைபிள் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுமார் முப்பதாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்ட இந்தப் புத்தகம் தற்போது தேவாலயங்களில் விறுவிறுப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

இதன் தமிழ்ப் பதிப்பை அச்சிடும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தபோது மிகவும் நொந்து போய்விட்டோம்.

அதேபோல, பல மாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு தங்களது மனவருத்தத்தையும் தெரிவித்தனர்'' என்றார் ரபேல்.

"இந்தப் புதிய பைபிள் முழுக்க, முழுக்க இந்து மத வேத நூல்கள் மற்றும் இந்து மதக் கடவுள்களை மேற்கோள்காட்டி எழுதப்பட்டுள்ளது. இந்திய கலாசாரத்தைத் தழுவி இது எழுதப்பட்டுள்ளதாக இதன் ஆசிரியர் அருட்தந்தை அகஸ்தீன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்திய வேதநூல் என்ற பெயரில் இந்துக்களையும், கிறிஸ்துவர்களையும் குழப்பி இந்த கம்யூனிட்டி பைபிள் வெளிவந்துள்ளது.

பைபிளில் உபநிடதம், ரிக் வேதம், மகாபாரதம், யோக சூத்ரா, பாகவத புராணம், நாரத பக்தி சூத்திரம், பகவத் கீதை ஆகியவை மேற்கோள்காட்டப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, பைபிளின் தொடக்க நூல் என்ற பகுதியில் 32-வது அதிகாரத்தில் யாக்கோபு கடவுளிடம் சண்டையிடுதல் என்ற பகுதியில், அந்த சம்பவத்தை மகாபாரதத்தில் அர்ஜுனன் கடவுளிடம் சண்டையிடுவதற்கு ஒப்பிட்டுள்ளனர். இந்துக் கடவுளை கிறிஸ்துவ கடவுளுடன் ஒப்பிட்டுள்ளனர்.

குரானின்படி ஆபிரகாம் (இப்ராஹீம்), யாக்கோபு (யாகூப்) ஆகியோரை இறைத்தூதர்களாக கருதும் முஸ்லிம்களின் மனதை இது புண்படுத்தாதா?

அதேபோல், எகிப்தில் பத்து பெருந்துன்பங்கள் என்ற பகுதியில் மன்னன் பாரவோன், அடிமைகளாக இருந்த இஸ்ரேல் மக்களை விடுதலை செய்ய மறுக்கிறான். மூர்க்க குணம் கொண்ட மனிதனாக பாரவோன் இருந்ததைத் துரியோதனனோடு ஒப்பிட்டுள்ளனர்.

பைபிளில் செங்கடல் இரண்டாகப் பிளந்து கடலின் நடுவே, பாதை ஏற்பட்டு இஸ்ரேல் மக்கள் கடந்து செல்வதை இந்து மதநூலான நாரத பக்த சூத்ராவுடன் ஒப்பிட்டு இதுதான் மறுபிறவி எடுப்பது, முக்தி அல்லது மோட்சம் என்றும் புதிய கண்டுபிடிப்பாக புதிய பைபிளில் எழுதியுள்ளனர்

மறுபிறவி, அவதாரம் ஆகியவற்றில் நம்பிக்கையில்லாத கிறிஸ்துவர்களுக்கு இது அதிர்ச்சியளிக்கிறது.

இந்த பைபிளில் ஓர் இடத்தில் கடவுளுக்குரிய மனிதர்கள் உயர்ந்தவர்களாகவும், மற்றைய கடவுள் பற்றுள்ளவர்கள் சாதாரண மனிதர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது சரியானதுதானா?

சிவன், கிருஷ்ணர் சிலைகளை தேவாலயத்தில் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் இயேசுவின் வார்த்தைகள் என்று நியூ கம்யூனிட்டி பைபிளில் எழுதியவர்கள் சொந்தம் கொண்டாடுவதை இந்துக்கள் எப்படி ஏற்பார்கள்?

பைபிளில் திருப்பாடல்கள் ஐந்தாம் அதிகாரத்தில், `பாதுகாப்பிற்காக மன்றாடல்' என்ற தலைப்பில் உள்ள பகுதியை காயத்ரி மந்திரத்துடன் ஒப்பிட்டுள்ளனர்

பைபிளில் மத்தேயு எழுதிய நற்செய்தி 13_வது அதிகாரத்தில், இயேசு உவமை வழியாகப் பேசியதை சக்தி வாய்ந்ததாகவும்,

இந்த உவமைகளை ராமகிருஷ்ண பரமஹம்சரின் போதனையுடன் ஒப்பிட்டும், பரமஹம்சரின் போதனைக் கதைகள் சாதாரண கதைகள் என்றும் இயேசு குறிப்பிட்டுள்ளது சக்தி வாய்ந்தவை என்றும் எழுதியுள்ளனர். இது நியாயமா?

இதையெல்லாம்விட, கம்யூனிட்டி பைபிளின் 1645-ம் பக்கத்தில் இந்திய உடையில் மேரி மாதாவையும் அவரது கணவர் சூசையப்பரை வேட்டி கட்டிய ஓர் இந்திய விவசாயி போலவும் படம் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படம் மேரிமாதா குழந்தை இயேசுவுடன் எகிப்துக்கு ஓடிச் செல்வதை சித்திரிக்கும் படம். இந்தப் படத்தால் இந்தச் சம்பவம் ஏதோ இந்தியாவில் நடந்ததைப் போல் ஓர் எண்ணத்தைத் தோற்றுவிக்கும்.

ஆனால், இதே பைபிளில் இதற்கு இரண்டு பக்கம் தள்ளி, இயேசு காஷ்மீரில் வாழ்ந்தார், அவருக்கு கல்லறை உண்டு என்ற வாதத்தை மறுத்துள்ளனர். இந்திய உடையில் இவர்களைப் பார்த்த மக்களுக்கு காஷ்மீர் பற்றிய தகவல் குழப்பத்தை ஏற்படுத்தாதா?

இப்படி புதிய பைபிள் முழுவதும் கிறிஸ்துவ மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கும் வகையிலான கருத்துக்கள் பரவியுள்ளன.

இப்படியொரு குழப்பத்தோடு இதை ஏன் வெளியிட வேண்டும்? 

இந்து மதக் கருத்துக்களை ஏற்று பைபிளை வெளியிட்டுள்ளதாகக் கூறும் பாதிரியார்கள், இந்து சன்னியாசிகள் போல் காவிநிற உடைகளை அணிய வேண்டியதுதானே?

இந்துத் துறவிகள் போல், சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டியதுதானே?'' எனக் கொந்தளிப்போடு முடித்தார் ரபேல்.

இதே சங்கத்தின் செயலாளர் கிளமண்ட் செல்வராஜ் நம்மிடம், ``
கடந்த 60 ஆண்டுகளாகவே சிறிதுசிறிதாக இந்து மதத்தோடு, கிறிஸ்துவ மதத்தைப் பொருத்தி மதத்தைப் பரப்பும் வேலையில் பாதிரியார்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இது தேவையில்லாதது. அவரவர் மதங்களில் உள்ள கருத்துக்களை அந்தந்த மதத்தினர் புனிதமாக வழிபட்டு வருகின்றனர்.

அதில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம். கடந்த 1948-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டு கத்தோலிக்க பாதிரியார் ஆஞ்சலோ பெனடிக்ட், சுவாமி சுபானந்தா என்று பெயரை மாற்றிக் கொண்டு, குஜராத்தில் இந்து முறைப்படி பூஜை செய்து, இயேசுவின் வசனங்களை இந்து முறைப்படி பரப்பினார்.

இவருடன் இருந்த பாதிரியார் பீட்டர் ஜூலியா, சுவாமி சில்லானந்தா என்று பெயரை மாற்றிக் கொண்டு, மராட்டியத்தில் சஞ்சீவன் ஆசிரமம் நடத்தி வந்தார். இவரது ஆசிரமத்தில் சிவலிங்கத்தில் சிலுவையைப் பதித்திருந்தார். இது குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்.

இதுபோன்ற புதிய பைபிள், பாதிரியார்களின் விசுவாசமற்ற செயல்பாடுகள் இந்தியா முழுவதும் உள்ள பதினைந்து கோடி கத்தோலிக்க மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளன.

இந்த கம்யூனிட்டி பைபிளைத் தயாரிக்க யாரிடமும், இவர்கள் கருத்துக் கேட்கவில்லை. இந்தப் புத்தகம் தேவையற்றது என்று அனைத்து ஆயர்களுக்கும் நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம்.

இன்னும் பதில் வரவில்லை. எனவே, இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களின் மனதைப் புண்படுத்தும் இந்தப் புத்தகத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விரைவில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளோம்'' என்றார் உறுதியாக.

கம்யூனிட்டி பைபிள் ஏற்படுத்தப்போகும் கலகம் என்னவென்பது போகப்போகத்தான் தெரியும்.

குமுதம் ரிப்போர்ட்டர் 31.08.2008. இதழிலிருந்து
ஆதாரம்: குமுதம் ரிப்போர்ட்டர் 31.08.2008.
................................................
கிறிஸ்துவ‌ த‌லைமை பீட‌மான‌ வ‌ட்டிக‌னிலிருந்தே போப்பாண்டவரின் ஆசியோடு மாற்று பைபிளை த‌யாரித்து இந்துக்க‌ளை ம‌த‌ம் மாற்ற‌ ஆவ‌ண‌ செய்து வ‌ருகின்றார்க‌ள் என்றால் புரிந்து கொள்ளுங்க‌ள்.
..........................................................
கிறிஸ்தவ மதக்கு மாற்றும் தொழில் இரகசியம்.
நோய் நொடியினால் பாதிக்கபட்டிருப்பவர்கள், சிறையில் வாடுபவர்கள், தொழிலில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், கடன் தொல்லை, வீட்டில் வசிப்பவரின் கொடுமை, கணவன் தொல்லை, மனைவி தொல்லை, அண்ணன் தொல்லை, மாமியார் தொல்லை, போன்று தொல்லையில் இருப்பவர்கள் யார் எதைக் கூறினாலும் கேட்கும் மன நிலையில் இருப்பார்கள். 

ஆகையினால் இவர்களை குறி வைத்து பைபிளில் இருக்கும் சில வசனங்களில் தேன் தமிழை கலந்து பேசி கவர்வது..

ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்
currency.jpg

ராமநாதபுரம் கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் நடந்து வருகிறது. கடலோர கிராமங்களில், சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது. 

மாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன.

மொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை. 

தற்போது, கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன. 

பணத்தின் இருபுறமும் பிரசார வாசகங்களை அச்சிட்டு, வினியோகிப்பதாகவும் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக , இதன் ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன. 

பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளில் தான், இந்த பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், நபர் ஒருவருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது புதிராக இருந்து வருகிறது. 

பெரிய அளவில் பணம் வினியோகித்து, குறிப்பிட்ட சிலரை மதமாற்றம் செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது.

மறைமுகமாக நடந்து வந்த குட்டு, தற்போது அம்பலமாகி உள்ளது. ஏழ்மை நிலையில் வாடுவோரை குறிவைத்து மதமாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருவதாக வந்த புகாரும் இதன் மூலம் உறுதிசெய்யப் பட்டுள்ளது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=34628
....................................

எங்கே மக்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று அலையும் கிறிஸ்துவ மிஷனரிகள் அங்கே சென்று அவர்களுடைய துயரமான நிலையை சாதகமாக பயன்படுத்துக்கொண்டு மதம் மாற்றும் வேலையில் இறங்குவது தெரிந்ததே.

ஆப்கானிஸ்தானையும் ஆக்கிரமித்து சுரண்டி ஓட்டாண்டியாக்கிய வெள்ளையர்கள் அங்கே கிறிஸ்துவ மதம் மாற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருகிறேன் என்று இறங்கி அங்குள்ள குழந்தைகளுக்கு இயேசு கிறிஸ்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். 
Christian Missionairies in Afghanistan Brainwashing Children to Convert Religions
குழந்தைகளை மதம் மாற்றும் மூளைச்சலவை.
Christian Missionaries In Afghanistan
மூளைச்சலவை.ஆப்கானிஸ்தானிகள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்கள் பெறப்போவதாக வாக்களிக்கப்பட்டு காட்டப்படும் நவீன வீடுகளின் மாதிரிகள்.
................................
அதே சமயத்தில்......
பிறமத‌த்தை திணிப்பவர்களை கொல்லுங்கள். ‍‍‍பைபிள் உத்தரவு

கிறிஸ்தவ மிஷனரிகள் தொன்று தொட்டு இன்று வரை உலகெங்கும் கிறிஸ்துவத்தை பரப்பி மற்ற மதத்தினரை கிறிஸ்துவத்துக்கு மாற்றிக் கொண்டிருக்கின்றார்களே. இவர்களுக்கு மாற்று மதங்களின் வேதங்கள் ஏதாவது தண்டனை கூறுகிறதா? இல்லையே !!!!

பிறமதத்தின் பக்கம் அழைப்பவனுக்கு பைபிள் என்ன‌ கூறுகிற‌து என்ப‌தை பாருங்க‌ள்

பைபிள்: உபாகமம். அதிகாரம் 13 . ஸ்லோகம் 6 - 9
BIBLE: DEUTRONOMY. CHAPTER 13 VERSE 6 - 9
_______________________________________

6. உன் தாய்க்குப் பிறந்த உன் சகோதரனாகிலும், உன் குமாரனாகிலும், உன் குமாரத்தியாகிலும், உன் மார்பிலுள்ள உன் மனைவியாகிலும், உன் பிராணனைப்போலிருக்கிற உன் சிநேகிதனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே தேவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி,

If thy brother, the son of thy mother, or thy son, or thy daughter, or the wife of thy bosom, or thy friend, which is as thine own soul, entice thee secretly, saying, Let us go and serve other gods, which thou hast not known, thou, nor thy fathers;

7. உன்னைச் சுற்றிலும் உனக்குச் சமீபத்திலாகிலும் உனக்குத் தூரத்திலாகிலும், தேசத்தின் ஒருமுனை தொடங்கி மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களில்நீயும் உன் பிதாக்களும் அறியாத அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி இரகசியமாய் உன்னை ஏவிவிட்டால்,

Namely, of the gods of the people which are round about you, nigh unto thee, or far off from thee, from the one end of the earth even unto the other end of the earth;

8.. நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கங்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்து வைக்காமலும்,

Thou shalt not consent unto him, nor hearken unto him; neither shall thine eye pity him, neither shalt thou spare, neither shalt thou conceal him:

9. அவனைக் கொலை செய்துபோடவேண்டும்; அவனைக் கொலை செய்வதற்கு, முதல் உன் கையும் பின்பு சகல ஜனத்தின் கையும் அவன்மேல் இருக்கக்கடவது.

But thou shalt surely kill him; thine hand shall be first upon him to put him to death, and afterwards the hand of all the people.

ஆதாரம்http://www.tamil-bible.com/lookup.php?Book=Deuteronomy&Chapter=13&Verse=6+-+9&Kjv=2




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

13_08_2010_009_007aphonsa.jpg?w=344&h=624

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

எங்கள் வீட்டுக்கு வந்த அன்னை தெரஸா'' -சிலிர்க்கும் ஐ.ஏ.எஸ். தேவசகாயம்!

1.jpg
நள்ளிரவு பதினோரு மணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயத்தின் மனைவி திருமதி அஸ்டில்தான் அந்த குரலை கேட்டார்.

சண்டிகரின் கலெக்டராக இருப்பவரின் மனைவிக்கு வழக்கமான பஞ்சாபி மொழி குரல்களும் ஹிந்தி குரல்களும் அவர் வளர்ந்த பகுதியான கேரளத்தின் மலையாள குரல்களும் தாய்மொழியான தமிழ் குரல்களும் தெரியும். அந்த நள்ளிரவில் ஒலித்த குரல் ஒரு வெள்ளைக்கார குரல். ரஷ்ய நாட்டை சேர்ந்தவர்கள் பேசுவதை போல கிழக்கு ஐரோப்பிய உச்சரிப்புடன் முதிர்ந்த வயதுடைய பெண்ணின் குரல்.

""சார்... மிஸ்டர் தேவசகாயம்'' என நான்கு முறை ஒலித்த அந்த குரலுக்கு சொந்தக்காரர் அன்னை தெரஸா என அறிந்தபோது தேவ சகாயமும் அஸ்டிலும் அதிர்ந்து போனார்கள்.

""காலையில் உங்களை பார்க்க வந்தேன். நீங்கள் வேலை விஷயமாக வெளியே சென்று விட்டதாக சொன்னார்கள். அதனால் இந்த நேரம் வந்தால் உங்களை பார்க்க முடியும் என்பதால்தான் வந்தேன்'' என அன்னை மெதுவாக சொன்னபோது அவர்கள் வாயடைத்துப் போனார்கள்.

இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு முழங்காலிட்டு ஜெபிக்கும்போது கூட கட்டாந்தரையில் தான் தனது கால்மூட்டை பதிய வைப்பார். உடுக் கின்ற துணியாக இருந்தா லும் ஒரு துணிக்கு மேல் வைத்திருக்க மாட்டார். அந்த துணி கிழிந்தாலும் தன் கையாலேயே ஊசி நூல் கொண்டு கோணல் மாணலாக தைத்தாலும் கவலைப்படாமல் போட்டுக் கொள்வார்.

தனிப்பட்ட யார் வீட்டிற்கும் போக மாட்டார். யாரிடமிருந்தும் பச்சை தண்ணீர் வாங்கி பருக மாட்டார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்த அஸ்டி லும் தேவசகாயமும் "ஏழைகளுக்கு உதவ வேண்டுமென்றால் காலம், நேரம் எதையும் பார்க்க மாட்டார். அதற்காக யார் வீட்டு கதவையும் எந்த நேரத்திலும் தட்டுவார்' என்ற அன்னை தெரஸாவின் மற்றொரு முகத்தை அப்பொழுதுதான் பார்த்தார்கள்.

1.jpg

""அன்னை இதுபோல் ஆறுமுறை வந்தார்கள். நாங்கள் கொடுத்த உணவு பொருட்களையும் சாப்பிட்டார்கள். எனது மகன்களுடன் பாசமாக பழகினார்கள். அவர்களை ஆசீர்வதித்தார்கள்'' என பரவசத்துடன் நினைவுகூரும் தேவசகாயம், ஹரியானா மாநிலத்தின் தலைமை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

""பிரிட்டிஷ் அறிஞர் ஜான் கெப்பிள், "உண்மை யான மனித நேயத்தில் யார் தன்னைத் தானே மூழ் கடித்துக் கொள்கிறானோ அவனைத்தான் உயரத்திற்கு கடவுள் இட்டுச் செல்வார்' என்று சொல்லியிருக்கிறார். அன்னை தெரஸா அதையே மிக எளிதாக "நீங்கள் எதை பெற விரும்பினாலும் அதை முதலில் மற்றவர்களுக்குக் கொடுங்கள்' என சொல்வார். அவர் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட நோயாளிகள், அனாதைகள், முதியோர் என இனி வாழ்வில் எங்களுக்கென என்ன இருக்கிறது என்று மரணத்தை எதிர்நோக்கி அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு அதிலும் -குறிப்பாக ஏழை மக்களுக்கு சேவை செய்வதையே வாழ்க்கையாக ஏற்றவர்.

அவர் மரணமடைந்து சொர்க்கத்துக்குப் போனபோது, அங்கிருந்த ஏசுவின் முக்கிய சீடர் புனித பீட்டர் அன்னையைப் பார்த்து "இங்கே உங்களுக்கு வேலையே இல்லை. ஏனென்றால் இங்கே ஏழைகளும், குடிசைகளும் இல்லையே. ஆகவே உடனடியாக நீங்கள் பூமிக்கு செல்லுங்கள்' என சொல்லி சிரித்ததாக ஒரு கதை உண்டு.

அப்படிப்பட்ட சொர்க்கங்களில் ஒன்றாகத்தான் சண்டிகர் நகரை அன்னை தெரஸா நினைத்திருந்தார். "சண்டிகர் பணக்காரர்களின் நகரம் அங்கு நான் வரமாட்டேன்' என சொன்னவரை நாங்கள் அழைத்து வந்து பணக்கார வேஷத்துடன் நிற்கும் அந்த மகா நகரத்தில், தொழிலாளர் குடியிருப்புகள் என்றழைக்கப் பட்ட ஏழைகளின் வீடுகளில், கேன்சர் கட்டிகளால் ஆதரவற்ற மக்கள் அவதியுறுவதை காட்டினோம். அவர்களின் கண்ணீரை கண்ட பிறகுதான் சண்டிகர் நகரில் தனது "நிர்மல இதயம்' என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை துவக்க ஒத்துக் கொண்டார்.

கேரளாவைச் சேர்ந்த சகோதரி ஜோயா தலை மையில் ஐந்து சகோதரிகளை அனுப்பி வைத்தார். ஹரி யானா நகரின் பிரதான பகுதியான 23-வது செக்டரில் 2 ஏக்கர் நிலத்தை வருடத்திற்கு 5ரூ வாடகை என 99 வருட குத்தகைக்கு என நிலம் கொடுத்தது அரசு.

அந்த இல்லத்தில் அவர் அனாதை குழந்தைகளை தொட்டிலில் போடும் தொட்டில் குழந்தை திட்டத் திற்கான தொட்டிலை முதன்முதலில் அமைத்தார்.

முதல் குழந்தை ஒரு கிறிஸ்துமஸ் நன்னாளில் வந்து விழ, அதற்கு கிறிஸ்து என்றே பெயரிட்டார். ஆரம்பித்த புதிதில் அந்த இல்லத்திற்காக 4 லட்சம் திரட்டி தருவோம் என நாங்கள் சொன் னோம். ஆனால் எங்களால் ஒன்றரை லட்சம்தான் திரட்ட முடிந்தது. நாங்கள் நிதி வசூல் செய்து கொண்டிருந்த நேரத்தில் அன்னைக்கு நோபல் பரிசு என அறிவிப்பு வந்தது. அதன் பரிசுத் தொகை யை வாங்கிய அன்னை "இனிமேல் எனக்கும் எனது நிறுவனங்களுக்கும் எந்த நன்கொடையும் தரவேண்டாம்' என வெளிப்படையாகவே அறிவித்தார். ஆனால் நாங்கள் கொடுத்த தொகையை அன்புடன் ஏற்றுக் கொண்டார்.

இவ்வளவும் நடந்து முடிந்த காலம் 1975-ம் ஆண்டு எமர்ஜென்சி காலம். எமர்ஜென்சி கொடுமைகள் பற்றிய செய்திகள் அன்னை மனதையும் பாதித் திருந்தது. அந்த கொடுமைகளை எதிர்த்த இயக்கங்களும் பெருமளவில் அன்னை உட்பட அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

ஆனால் இவையெல்லாம் வாழ் வதற்கு எதுவுமேயில்லாத ஏழைகளை தொடவில்லை. அவர்களுக்கு சேவை செய்த அன்னை இந்த அரசியல் குழப்பங்களையெல்லாம் கடந்து ஆகஸ்ட் 26-ம் தேதி நூறு வயதை கடந்து நூற்றாண்டு விழா காணும் அன்னை தெரஸா அன்றும் இன்றும் என்றும் துருவ நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

திரு.ராபர்ட் ஸ்டான்லி (திருநாவுக்கரசு)அவர்களே, தங்கள் பெயரைக் குறிப்பிட்டதிலேயே தெரிகிறது; தாங்கள் பெயரை மாற்றிய பிறகும் ஏன் பழைய உதவாத கிறித்தவ பெயர் உங்களுக்கு..?

நானும் இயேசுவை வணங்குகிறேன்,பிணமாக அல்ல, உயிர்த்தெழுந்த இரட்சகராக;

அதன் ஆதாரத் தத்துவம் எந்த உயிர்க்குமே மரணம் என்பதில்லை,அது ஒரு மறுஜனனம்(ஜன்மம் அல்ல…)அவனவனுக்குரிய பலனையடைய நித்திரையிலிருந்து எழும்புவதுபோல எழும்பவேண்டும் என்பதே;

இந்த மேலான நம்பிக்கை எனக்குள் இருப்பதால் என்னைச் சுற்றி நடக்கும் எதுவும் என்னை பாதிப்பதுமில்லை;அதற்கு நான் இறைவனைக் குற்றவாளியாக்குவதுமில்லை;

அவனவன் தத்தமது சுய இச்சையினால் இழுப்புண்டு சோதனையில் சிக்கிக் கொள்ளுவதாலேயே துன்பம் ஏற்படுகிறது என்று வேதம் சொல்லுகிறது;ஒருவருடைய தவறு மற்றும் துன்பம் அவரைச் சார்ந்தவரையும் பாதிப்பது மனித இயல்பு;இதற்கும் தெய்வ நம்பிக்கை மற்றும் தொழுதலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை;



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Mr.Trichikkaaran,
In what way the comment of SaintThomalFables is related to this article? And doesn’t it look completely against what you said in this article? Why such a Hypocrasy from you? What are the proofs given by the one who submitted this comment?

Mr. SaintThomasFables,
In what way this Prof.Reginald H.F Fuller, prooves that the new testament is not written by the eyewitnesses?
Who are those Bible Scholars (???) those are agreeing that Old Testament has influences of Mahabaratham?
Most of these questions are nothing but pervertness of the questioner.

Ashok

  • If jesus that Sinner is known to all the gospel writers why confusions as said in this Encyclopedia

    http://en.wikipedia.org/wiki/Chronology_of_Jesus
    There were many speculations in the 2nd century about the date of Jesus’ birth. Clement of Alexandria, towards its close, mentions several such, and condemns them as superstitions. Some chronologists, he says, alleged the birth to have occurred in the twenty-eighth year of Augustus, on the 25th of Pachon, the Egyptian month (May 20). These were probably the Basilideans. Others set it on the 24th or 25th of Pharmuthi (19th or 20 April). Clement himself sets it on November 17, 3 BC.

    Jesus’ ministry lasted around one year, according to the Synoptic Gospels,[citation needed] or three years according to the Gospel of John;[4]

    As per Mark except last few days from Late Tuesday evening to Friday when Jesus was executed for Jesus’ Sins he was in Judea, otherwise he was only in Galilee. Fourth Gospel says last 8 months Jesus was is Judea?

    Fourth Gospel never tells of any Miracle with Goasts -Why?

    Which IS True?

    When TWO Do not MATCH- Either One is telling lie or both could be wrong?

    Now pleaSE Clarify.

    The Birth Stories of Moses has lot of resemblances of Karna, and it is widely accepted.

    You want to trust all Frauds but not truths.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Kids homes still outside govt radar

Govt Misses Deadline For Inspection;Only 60 Of Over 2,000 Homes Registered 

Arun Ram | TNN

Chennai: A day after the Supreme Court asked several states to respond to the National Commission for Protection of Child Rights report on trafficking of children,Tamil Nadu,one of the major hubs of child trafficking,is at sea trying to inspect and register childrens homes whose exact number remains unknown.
An estimated 3.5 lakh children are housed in 2,054 enumerated childrens homes in the state,of which only 60 have been registered under the Juvenile Justice Act.Another 282,which are yet to fulfil all the requirements,have been given conditional registration.Some NGOs,meanwhile,have questioned the method of enumeration,which they fear,may allow a large number of homes to remain out of government purview and thereby unaccountable.
A high-level committee chaired by then chief secretary KS Sripathi on August 16 had set August 31 as the deadline for completing inspection of childrens homes and October 31 for getting all of them registered under the Juvenile Justice Act.Now,with one deadline having passed and the other just two months away,the social welfare department has inspected only about 15% of the homes and registered less than 3% of them.The enumeration itself is being questioned by the NGOs which say there could be hundreds,if not thousands of homes,outside the government radar.
While there are no answers why the inspections and registration were not completed even four years after the JJ Act was amended in 2006 to make registrations mandatory,officials say there are bureaucratic hurdles which make the October 31 deadline also appear tough.There are some inherent problems, said social welfare director R Vasuki.The mandatory structural stability certificate for the homes is proving to be an impediment.While the public works department insists that the homes should pay 2% of the building cost to issue the certificate,the homes say they cant afford the money.This is delaying the registration process, Vasuki told TOI.
This argument,it is learnt,was shot down at the August 16 meeting by the chief secretary who said,Those homes which cannot afford about Rs 10,000 are not fit to take care of children. And so,the deadline was set.
Social defence commissioner N Mathivanan,meanwhile,is confident that the registration process could be completed by October 31.Teams have been formed at the district-level,with officials of social welfare,social defence departments and the police,to inspect the homes, he said.But how does the government plan to register all the homes when it does not know how many are there We are issuing press releases and advertisements asking all homes to get registered.Those who dont get registered by October 31 will be closed down, said Mathivanan.

Pc0051200.jpg
NOBODYS CHILDREN: A file picture of the rescued Manipuri children at the Chennai Central railway station


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

04_09_2010_009_022-virgin-mary-girdle.jpg?w=107&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கூடுதல் கட்டணம் வசூல் மாதவரம் பள்ளி முற்றுகை பெற்றோர்கள் போராட்டம்

கூடுதல் கட்டணம் வசூல் மாதவரம் பள்ளி முற்றுகை    பெற்றோர்கள் போராட்டம்மாதவரத்தில் போஸ்கோ அகாடமி மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை வகுப்புகள் இருக்கின்றன. இங்கு சுமார் 2,400 மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். இவர்கள் பள்ளியில் சேரும் போது அரசு ஏற்கனவே நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தி உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
இதை கண்டித்து பெற்றோர்கள் இன்று காலை 10 மணி அளவில் பள்ளி முன்பு குவிந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் “அரசு நிர்ணயித்த கட்டணத்தை ஏற்கனவே செலுத்தி விட்டோம். இப்போது மீண்டும் 35 சதவீத கட்டணம் கட்ட வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் கூறுகிறது. இதை கண்டிக்கிறோம்” என்று கூறினார்கள்.
பெற்றோரை பள்ளிக்குள் செல்ல காவலாளிகள் அனுமதிக்கவில்லை. இத னால் கூடி நின்றவர்கள் பள்ளிக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். தகவல் அறிந்ததும் மாதவரம் உதவி கமிஷனர் லாய் சந்திரா மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அவர்களிடம் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் பெற்றோருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நீண்ட நேரத்துக்கு பிறகே பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்துடன் பேச அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இது குறித்து முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்கள் கூறியதாவது:-
அரசு நிர்ணயித்த கட்டணத்தை ஏற்கனவே செலுத்தி விட்டோம்.
மீண்டும் கூடுதல் கட்டணம் செலுத்தச் சொல்லி சில பெற்றோர் பணம் கட்டி இருக்கிறார்கள். அதற்கு ரசீது கொடுக்காமல், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டச்சொல்வது ஏன் என்று நியாயம் கேட்க வந்தோம். ஆனால் போலீசார் எங்களை தடுத்தனர். ஒருவரை அடித்து உதைத்து விட்டனர்.
நியாயம் கிடைக்காமல் நாங்கள் போகமாட்டோம். கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. வசூலித்தவர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கூடுதல் கட்டணம் - பள்ளி முதல்வர் மீது வழக்கு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் உள்ள தனியார் பள்ளியில், மாணவர்களிடம் கூடுதல்  கட்டணம் வசூல் செய்த பள்ளி முதல்வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ளது சாலைகிராமம். இங்கு ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பரவலான புகார் எழுந்தது.

இதனையடுத்து சிவகங்கை  தொடக்க கல்வி அலுவலர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

இதனையடுத்து பள்ளி தாளாளர் இக்னேஷியஸ் சேவியர், முதல்வர் ஏஞ்சல் மேரி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கூடுதல் கட்டணம் வசூல்: பள்ளிக்கூடம் முன்
கீழ்ப்பாக்கம் ஆம்ஸ் ரோட்டில் சி.எஸ்.ஐ. பெயின் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இங்கு தமிழக அரசு நியமித்த கோவிந்தசாமி கமிட்டி சிபாரிசுப்படி கட்டணம் வசூலிக்காமல் கூடுதல் கட்டணம் வசூலித்ததாகவும், கட்டிய பணத்தை திரும்ப கேட்டும் பள்ளியின் முன் பெற்றோர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

300-க்கும் மேற்பட்டவர்கள் காலை 8 மணிக்கு மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் உதவி கமிஷனர்கள் விஜயராகவன், அசோக் குமார், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், சுப்பாராஜ், ராயப்பன் ஆகியோர் சென்று சமாதானப்பேச்சு நடத்தினார்கள்.

பள்ளி தரப்பில் உறுதி அளித்தால்தான் மறியலை கைவிடுவோம் என்றனர். இதையடுத்து பள்ளி முதல்வர் ஜெனோரா ஜேம்ஸ் வந்து பேசினார். அவர் கூறுகையில், இந்த விஷயத்தில் தன்னால் எதுவும் செய்ய முடி யாது. பிஷப்தான் முடிவு எடுக்க வேண்டும். எனவே செவ்வாய்க்கிழமை வரை நேரம் தருகிறேன். அதுவரை நீங்கள் பணம் கட்ட வேண்டாம் என்றார். இதையடுத்து காலை 10 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது.

செவ்வாய்க்கிழமை நல்ல பதில் கிடைக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று பெற்றோர்கள் அறி வித்தனர். மறியல் காரணமாக அந்த ரோட்டில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன.

கல்வி கட்டணம் குறித்து வக்கீல் முனுசாமி கூறியதா வது:-

இந்த பள்ளியில் எனது மகன் எல்.கே.ஜி. படிக்கிறான். எல்.கே.ஜி.க்கு ஆண்டுக்கு ரூ.3,500 கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அரசு அறிவித்து உள்ளது. ஆனால் நான் என் மகனை சேர்க்கும்போது ரூ.22,624 கட்டினேன். 2 முறை 5,110 வீதம் காலாண்டு, அரையாண்டு கட்டணம் செலுத்தி விட்டேன். ஆண்டு முடிவில் ரூ.40 ஆயிரம் வரை கட்ட வேண்டியது வரும்.

வகுப்பு கூட கூட கட்டண மும்கூடும். பிளஸ்-2 மாணவன் ரூ.1 லட்சம் கட்ட வேண்டியது வரும். இங்கு பெற்றோர், ஆசிரியர் கூட்டத்தை கூட்டுவது இல்லை. குறைகளை முறையிட்டால் ஏற்றுக்கொள்வது இல்லை. வேறு பள்ளியில் பிள்ளை யைச்சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். எனவே இதில் அரசு தலையிட்டு பெற்றோர்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

04_09_2010_002_048-uma.jpg?w=300&h=247

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மும்பை, செப்.4-

மும்பை ஆலயத்தில்   மேரிமாதாவின்    “இடுப்பு கச்சை”     கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடுமும்பை ஆலயத்தில் மேரிமாதாவின் இடுப்பு கச்சை பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏசு கிறிஸ்துவின் தாயார் மேரிமாதா மரணம் அடைந்த பிறகு, உடலோடு விண்ணுலகத்துக்கு கடவுளால் எடுத்துக் கொள்ளப்பட்டார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. மேரிமாதாவை ஏசுவின் சீடர்கள் மிகவும் நேசித்தார்கள்.

ஏசுவின் சீடர்களில் ஒருவரான தோமையார், மேரி மாதா மீது அளவு கடந்த பக்தி வைத்திருந்தார். இந்திய நாட்டுக்கு சிறிஸ்தவ மதத்தை போதிக்க அவர் வந்தபோது மேரிமாதா இறந்த செய்தி அவருக்கு கிடைத்தது. இந்தியாவில் இருந்து அவர் திரும்பி ஜெருசேலம் நகருக்கு செல்வதற்குள் மேரிமாதா உடலை அடக்கம் செய்து விட்டனர்.

கல்லறைக்கு சென்று பார்த்தார். அங்கு உடல் இல்லை. மேரிமாதாவின் உடலை கடவுள் விண்ணுலகத்துக்கு எடுத்துக் கொண்டார் என்று கூறினார்கள். உடனே தோமையார் மனம் உருகி ஜெபித்தார். அப்போது மேரிமாதா தோன்றி அவரது இடுப்பு கச்சை துணியை தோமையாரிடம் கொடுத்து தைரியமாக இருக்கும்படி கூறினார் என்பது வரலாறு.

அந்த இடுப்பு கச்சையை தோமையார் வைத்திருந்தார். அதன்மூலம் பல்வேறு அற்புதங்களை செய்தார். சென்னையில் ஈட்டியால் குத்தி கொலை செய்யப்பட்ட தோமையாரின் உடல் சாந்தோமில் அடக்கம் செய்யப்பட்டது. கி.பி. 400-ல் கல்லறை தோண்டப்பட்டது.

அதில் தோமையாரின் எலும்பு கூடு, அவரை குத்தி கொன்ற ஈட்டி, மேரிமாதா அவருக்கு கொடுத்த இடுப்பு கச்சை ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. பின்னர் இடுப்பு கச்சை துருக்கியில் உள்ள எடிசா நகருக்கு கொண்டு போகப்பட்டது. அந்த கச்சையின் முன்பு வேண்டினால் பல்வேறு அற்புதங்கள் நடக்கிறது என்பது காலம் காலமாக கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

மேரிமாதாவின் பிறந்த தின விழா வருகிற 8-ந் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மும்பையில் உள்ள “ஆர்த்தோபஸ்” பிரிவு கிறிஸ்தவர்களின் ஜேக்கோபிட் ஆலயத்திற்கு துருக்கியில் இருந்து மேரிமாதாவின் இடுப்பு கச்சை துணியின் ஒருபகுதி கொண்டு வந்து பொதுமக்கள் பார்வைக்காக ஒருவாரம் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தில் மேரிமாதாவின் “இடுப்பு கச்சை” முன்பு கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார்கள். மும்பை மலாட்டில் உள்ள புனித பீட்டர் ஜேக்கோபிட் ஆலயத்தில் இந்த கச்சை பொது மக்கள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் இங்கு வந்து பக்தியுடன் வழிபடுகிறார்கள். அற்புதங்கள் நடப்பதாகவும் பரவசத்துடன் தெரிவிக்கிறார்கள்.

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

There is a scientist by name Stephen Hawking who wrote the book on "The Brief History of time" The sad part of this scientist is he has a disorder in the nervous system which made him paralysed throughout his life, he confines himself to a chair and can't speak with his own voice he uses a machine to speak as he types whatever he wants to speak.
This gentleman is considered to be a great genius who was given the honour of appointment of Sir Isaac Newton's chair. An avowed atheist or agnostic he had always denied God. Recently he had said that
" the idea of God or a divine being was not incompatible with a scientific understanding of the Universe. The Universe can and will create itself and will create from nothing. It is not necessary to invoke God to light the blue touch paper and set the universe going"
He means to say that Universe came to existence from nothing and had evolved simultaneously, in this way seconding what Charles Darwin had said in the past. The western world seeks every thing in the scientific light and lose themselves in the sea of agnosticism. For Science itself is not perfect in finding solutions to every problem and that's the reason why it has not found a solution of stephen hawking's problem. The west is very eager in everyone of its attempt to hurl abuse to God and try to be overt secularistic. The end result what we see is moral corruption and losing family values is rampant.
Mr Hawking says that he believed in Aliens and warned that humans in the earth by no means should be in touch with the aliens in a way to know their existence. If humans are able to contact aliens, then aliens would come and invade us. What an intelligent thought. He BELIEVES aliens who never had appeared to anyone but DENIES God for the same reason that he had not seen him. The Bible clearly says that " A fool says in his heart that there is no God" Yes a fool never wants to be accountable for his sins and never acknowledges that there is a supreme being watching over them. God will laugh at them.
We christians believe God in faith and for that reason we walk in faith and not by sight. God is not that ordinary to explain each and everything to humans. He is in control of everything and not a single thing that happens does so without his knowledge. He does not cease to exist just because of Hawking's comments. He is graceful enough to touch even hawking. So go on Mr.Hawking and the disillusioned west on your spree to deny God, for soon a day will come and you people will rush to the mountains and hills and ask them to cover you up as the sign of the Son of man appears in the sky.

அறிவியலாலார்கள் பலர் கடவுளின் இருப்பை எப்படியாவது மறுக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் கட்டுக்கதைகளை புகுத்த ஆரம்பித்துவிட்டனர். இதுவரை எந்த வேற்றுக் கிரகத்திலும் உயிரினங்கள் இருப்பதை கண்டுபிடிக்க முடியவில்லை


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இந்த மனிதர் சொன்னதைக்குறித்து நானும் படித்தேன், அவர் கற்பனையிலேயே வாழ்கிறவர், அவர் சொல்லும் சில கருத்துக்கள் ஏற்புடையவைகள்,

அவை காலம் குறித்த கருத்து அதற்கு வேத ஆதாரங்கள் உள்ளன. அது குறித்து நான் தியானித்து வருகிறேன் விரைவில் அது குறித்து கர்த்தருக்குச் சித்தமானால் எழுதலாம் என்றிருக்கிறேன்.

ஆனால் ஒன்றும் இல்லாமையிலிருந்து இந்த மொத்த அண்டமும் உண்டானது என்று ஆதாரமற்ற அவரது கருத்து முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பானது

நவீன சூப்பர் கணினி வாயிலாக அண்டத்தைப் பார்த்த போது அவை பல பால்வீதி மண்டலங்கள் அனுக்களாகவும், அதைச் சுற்றிலும் இருக்கும் வெற்றிடங்களின் இடைவெளிகளையும் வைத்துப் பார்க்கும் போது ஒரு ஸ்பாஞ்ச் போல இந்த அண்டம் இருக்கும் என்று கற்பனை செய்திருக்கிறார். மேலும் இந்த அண்டத்தில் உள்ள எல்லா நட்சத்திரங்களையும் கோள்களையும் ஒரு புள்ளியில் அடக்கிவிடமுடியும் என்றும், ஆகவே இந்த அண்டம் ஒன்றும் இல்லாமையில் இருந்து உண்டானது என்று நிச்சயமாய் அறியலாம் என்று தன் கதையை நீட்டிக்கொண்டே செல்கிறார்...


ஆனால் மனிதர்கள் ஒன்றுமில்லாமையிலிருந்து உண்டாகவில்லை என்பது இவர் கருத்து, அதாவது அழியும் நட்சத்திரங்கள் நெபுலா என்ற நிலையில் சிதறடித்த அனுக்கள் மிகச் சரியான விதத்தில் ஒன்றினைந்து மனிதர்களையும் மற்றவைகளும் உண்டானது என்று சொல்லுகிறார்

அவர் வழியிலேயே நாம் நம்முடைய கற்பனை சிறகை விரியச் செய்து யோசித்தோமானால் இந்த அண்டத்தில் சிறு புள்ளியை ஒத்த அளவுடைய பூமியில் உள்ள உயிர்களும் தனிமங்களும் தோன்றுவதற்கு நெபுலாக்களின் மூலக்கூறுகள் தேவைப்படும் போது

பல பால்வெளி மண்டலங்களை ஒரு வினாடியில் விழுங்கிப் போடும் நெபுலாக்களின் மூலக்கூடுகளும், நெபுலாவின் இறப்புக்குப் பின் தோண்றும் நியூட்ரான் நட்சத்திரத்தின் ( 1 கிராம் அளவுள்ள அதன் மண் பூமியின் எடையில் 10 இலட்சம் டன் இருக்குமாம் ) மூலக்கூறுகள் ஒன்றுமில்லாமையிலிருந்து உண்டானது என்று சொன்னால் சாமான்யன் கூட நம்பமாட்டான்.


மேலும் இந்த நெபுலாக்கள் எப்படி உண்டாகிறது என்று அவர் சொல்லும் போது நட்சத்திரங்கள் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கலால் உண்டாயிருக்கிறது என்றும் அவைகள் பெருமளவில் அழுத்தப்படும் போது வெப்பமும் ஒளியும் உண்டாகிறது என்றும், இப்படி கோடி கோடி ஆண்டுகள் பிரகாசிக்கும் நட்சத்திரம் இரும்பை உண்டாக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே வெடித்து அழிந்து சிதறி அழிந்து விடுவது தான் நெபுலா என்கிறார்கள்

இவைகள் நிகழ்வதற்கான‌ தொழில் நுட்ப கோட்பாடுகள் குறித்த கேள்விகளுக்கு தற்போதைய இயற்பியல் மற்றும் வேதியல் கோட்பாடுகளை வைத்து மணிக்கணக்கில் விவரிக்கிறார். இப்படி தன் மணம் போன போக்கில் பேசிக்கொண்டிருக்கும் அந்த நபர் தான் இன்றைய அறிவியல் உலகின் ஹீரோ,

அவரது அறிவை எல்லோருமே மெச்சிக்கொள்கிறார்கள், இனி மனிதன் எதை வேண்டுமானாலும் உண்டாக்கலாம், பொருளாதாரமும் மனிதனின் ஆயுளுமே இவைகளைச் சாதிப்பதற்கான தடை அதை நாம் முறியடித்து விட்டால் நமக்கு எதுவுமே தடையில்லை என்று ஏசாயா 14:13,14‍ல் இந்த உலகத்தின் அதிபதி சொன்னது போல சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்,

ஆனால் ஒன்றுமில்லாமையிலிருந்து ஒரு தூசியைக் கூட உண்டாக்க முடியாது என்றும், சூரியனின் மூலக்கூறுகளின் அளவிலோ, அல்லது மிகப் பெரிய நட்சத்திரங்கள், பிளாக் ஹோல் என்று அழைக்கப்படும் கருந்துளைகள் ஆகியவைகள் பூமியிலிருந்து ஏற்ற தொலைவில் இருப்பதால் தான் பூமியில் உயிர்கள் வாழ முடிகிறது என்றும் இந்த ஸ்டீஃபன் ஆக்கின்சே தான் சொல்லுகிறார்.

அண்டத்தில் மாத்திரமல்ல, பூமியில் ஒரு சாதாரண விசயமான உணவுச்சங்கிலியை எடுத்துக் கொண்டோமானால் பாக்டீரியா தொடங்கி யானைவரை எரும்பு தொடங்கி நீலத் திமிங்கலம் வரை மிகவும் நேர்த்தியான சம நிலையில் உண்டாக்கப்பட்டிருக்கிறது அதில் ஒன்று அழிந்தாலும் மற்ற அனைத்தும் பாதித்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்." (யோவான்.1:12)

அதாவது அதரிசனமான தேவனுடைய தற்சொரூபமான இயேசுவானவரை ஏற்றுக்கொண்டோரே தேவனுடைய பிள்ளைகள்; ஏனையோர் உலக மக்கள் என்பது இதனால் விளங்குகிறது...


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கிருஷ்ணரும் கிறிஷ்துவும் ஒன்று தானே (ஒரு ஒப்பீடு)...

சில காலம் ஒய்ந்திருந்த மதப்போர் மீண்டும் இணைய வழியில் புது உருப்பெற்று தலை எடுக்க அரம்பித்துள்ளது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை தானே
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"

இவை எப்போதோ நான் கேட்ட ஒரு சில தகவல்களை வைத்து மிகுதியை தொடர்ந்திருக்கிறேன். இன்றைய ஞாயிற்றுக் கிழமை நாளில் இதை வெளியிடுவது சிறப்பாக இருக்குமென்பதால் எனது இவ்வார ஆன்மீகப் பதிவாக இடுகிறேன்.
christhu+%283%29.jpgchristhu+%281%29.gif
கிருஷ்ணர் கிறிஸ்து இரண்டு பேயரையும் ஒப்பிட்டுப் பாருங்கள் இரண்டையும் திருப்ப திருப்ப சொல்லும் போது ஒன்று போல் தான் தெரியும். இருவரும் வாழ்ந்த காலப்பகுதி வேறென்று சொன்னாலும் வரலாறு ஒன்றாகத்தான் தெரிகிறது..
கிறிஸ்துவின் பிறப்பால் ஏரோதுவிற்கு ஆபத்தென்று முன்னமே தெரிவிக்கப்பட்டது. அதே போல் தான் கிருஸ்ணரின் பிறப்பால் கம்சனுக்கு ஆபத்தென்று முன்னமே தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இருவரின் கர்ப்பத்தரிப்பம் ஒரே விதமானது தான்.
christhu.jpg
இருவரின் தாயார்களும் தம் பிள்ளைகளைப் பெற்றெடுக்க படாத பாடு பட்டார்கள். கடைசியில் மாட்டுத் தொழுவம் தான் இருவருக்கும் பொது இடமாகப் போனது. இருவருக்காகவும் தந்தையர் பட்ட பாடு இருக்கிறதே அதுவும் மிகவும் கடுமையானது.
இது மட்டுமல்ல முக்கியமாக ஒரு விடயம் இருவரின் ஜனன முடிவும் இரத்த இழப்பால் தான் ஏற்பட்டது. கிறிஸ்து சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டார். கிருஷ்ணருக்கு வேடன் விட்ட அம்பு அடிப் பாதத்தில் துளைத்தது.
இருவரையும் பொதுவாக எந்த நாளில் வணங்குகின்றோம் இன்றைய ஞாயிற்று கிழமை தானே
Copy+%286%29+of+GODS+%286%29.jpg
இவை எனக்கு தெரிந்தவை இன்னும் பல இருக்கலாம். நான் கூறியவை சில வேளை பல முரண்பாட்டை தோற்றவித்திருக்கலாம். அப்படி இருந்தால் வெளிப்படையாகவே சுட்டிக்காட்டுங்கள். மத நல்லிணக்கம் கொண்டோர் யாராவது இருந்தால் முடிந்த வரை இதை தொடருங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மனிதன் உயிரோடிருக்கிறானா..?


இது போர் வேண்டுமென்று யாருடமோ பணம் வாங்கி அறிக்கை விட்டிருக்கும் இருக்கும் தமிழகத்தின் பிரபல கவிஞருக்கும், இம்புட்டு நாள் போர் நடக்கையில் கம்மண்ணு இருந்திட்டு இப்ப மட்டும் வீர வசனம் பேசும் அமெரிக்க குடியுரிமையாளிக்கும், தன் அகதிக் குடியுரிமை பறி போய்விடும் என்று அந்நிய நாட்டில் இருந்து சொந்த நாட்டு உறவுகளுக்கு குழிபறிக்கும் கோடாரிக்காம்புகளுக்கும் சமர்ப்பணம்...
humen.jpg
நீரும் மனிதரா

இனவாதவ பெயர் கொண்டு

சிசுக்களின் உயிர் கொன்று

உமக்கோர் சீர் தேடும் நீரும் மனிதரா....


காகிதக்கப்பல் கட்ட ஆசையானால்

மழை நேரமே முடித்துக் கொள்ளும்

இனங்களைத் தூண்டி


ஏன் செவ்வாறு காண்கிறீர்


பல் தீட்ட குச்சி போதும்


ஏன் என்பதனை தேடி அலைகிறீர்


உன் துணைக்கு முடியில்லையெனில்


முடிமயிர் வேண்டிக் கொடும்


ஏன் பேதைகளின் கூந்தல் அறுக்குறீர்


உம்முடைய உடலில்


நுளம்பு குத்தினால் அதனைக் கொல்லும்


அதை கலைக்க


எம் உடலில்


ஏன் ரயர் போட்டுக் கொழுத்துகிறீர்


நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்
மனிதன் எங்காவது இருக்கிறானா..?



humen1.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

த்தோலிக்கம் ஜெயமோகனுக்கு கடிதம்

ஜெ.மோ பதிவு கத்தோலிக்கமதம் பெண்ணுரிமை-ஒரு கடிதம்

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,
பெண்ணியம் குறித்த உங்கள் பதிவுக்கு, பதிலுக்கு நன்றி.

//பெண்ணுரிமை பேசப்படும் மேலைநாட்டில் கத்தோலிக்கமதம் இன்றும் பெண்ணடிமைக்கருத்துகளின்தொகையாகவே உள்ளது.//

இது நீங்கள் முன்பு கேள்விபதில் ஒன்றில் எழுதியிருப்பது. கத்தோலிக்கம் (பைபிளில்) பெண்ணுக்கு இரண்டாம் இடம் தரப்பட்டுள்ளது எனும் உங்கள் பதிலில் எனக்கு ஒப்புதலே. ஆதாம் ஏவாளின் கதையிலிருந்தும் அதிலிருந்து பெறப்படும் பிந்தைய புரிதல்களிலிருந்தும் (1 Corinthians 11:9) இது தெளிவாகிறது. இதில் எந்த பிரச்சனையுமில்லை.

ஆனால் கத்தோலிக்கம் பெண்ணடிமைத்தனத்தின் தொகுப்பாக இன்றும் இருக்கிறதென்பதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. உங்கள் கூற்றில் எனது ஆச்சரியமும், கேள்வியும் மூன்று வார்த்தைகளை முன்வத்தது.
1. இன்றும்
2. பெண்ணடிமைத்தனம்
3. தொகையாக
(மொத்தமே பெண்ணடிமைத்தனத்தை முன்வைத்ததாக)

வெறும் semantics என விட்டுவிட இயலவில்லை எனவே இது குறித்து என் கருத்துக்கள்.

என் பார்வையில் பெண்ணடிமைத்தனம் என்பது பல அடுக்குகளைக் கொண்டது. வெறும் தத்துவ நிலையிலேயே அது நின்று விடவில்லை. அதன் படிமங்கள் வேதாந்த சித்தாந்தங்களில்(அல்லது சமூக சித்தாந்தங்களில் துவங்கி) நடைமுறை வாழ்க்கையில் ஆணுக்கும் பெண்ணுக்கும், சமூகத்திற்கும் பெண்ணுக்குமான உறவுகளில் பெண்ணை இழிநிலைக்குத் (வெறும் இரண்டாம் நிலைக்கல்ல) தள்ளும்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அப்படி ஒரு ஒருங்கிணைந்த தாக்கத்தை கத்தோலிக்க மதம் இன்றும் ஏற்படுத்திக்கொண்டிருந்தால் அதை பெண்ணடிமைத்தனத்தின் தொகையாக ஏற்றுக்கொள்ளலாம்.

பெண்ணியம் என்பது ஒரு தத்துவார்த்த நிலைப்பாடு. அது பெண்ணடிமைத் தனத்தை எதிர்ப்பதோடு நின்றுவிடவில்லை மாறாக மேலே சென்று ஆணும் பெண்ணும் சமம் என நிறுவ முயல்கிறது. கத்தோலிக்க இறையியலில் அதற்கு (தற்போது) இடமில்லை.

முதலில், கத்தோலிக்கத்தின்(கிறீத்துவத்தின்) துவக்கம் இயேசுவில்தான். இயேசுவுக்கு முந்தைய வரலாறு மனித இனத்தின் பாவத்தின் வரலாறாகவும், இயேசுவை முன்னறிவிக்கும் வரலாறாகவும் பார்க்கப்படுகிறது.

மனித குலத்தின் பாவ வரலாறு என்பது ஆதாம் ஏவாளில் துவங்குகிறது என்பதில் சந்தேகமில்லை. இதில் பெண், வலுவானவளாயில்லாததால், சாத்தானால் ஏமாற்றப்படுகிறாள் என்கிற ஒரு ஆரம்பம் நிச்சயம் பெண்ணியத்துக்கு எதிரானதாய் பார்க்கப்படக்கூடிய ஒன்று. ஆனால் ஆதாம் ஏவாளின் கதையிலிருந்து கத்தோலிக்கம் பெற்றுக்கொள்வது பெண் அடிமைப்படுத்தப்படவேண்டும் எனும் கருத்தல்ல மாறாக மனிதன் பாவச் சூழலில் பிறக்கிறான் எனும் அர்த்தமே. ஏனெனில் ஆதாம் ஏவாள் கதைக்குத் தொடர்ச்சியாக பழைய ஏற்பாடு சொல்லும் காயின், ஏபெல், நோவா, சோதம் கொமொரா எனும் கதைகள் (வரலாறுகள்) மனிதனின் பாவச் சூழலையும், அவன் கடவுளை விட்டு விலகிய தருணங்களையும் மீண்டும் மீண்டும் கடவுளின் இரக்கம் அல்லது கோபம் அவர்கள் மீது எப்படி செயல்பட்டது என்பதையும் காண்பித்து இறுதியாக இயேசுவில் பாவ மன்னிப்பிற்கான புதிய உடன்படிக்கையில் நிறைவேறுகிறது என்பதை நிறுவுகின்றன.

கத்தோலிக்கத்தில் பெண்ணின் இரண்டாம் இடம் நீங்கள் குறிப்பிட்ட படைப்பின் விவரிப்பிலிருந்து மட்டுமே பெறப்படுகிறது. ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் பெறப்பட்டாள் என்பதை விட ஆதாமுக்குத் துணையாக அவள் ஏற்படுத்தப்பட்டாள் என்பதுவே அவளுக்கான இரண்டாமிடத்தை சுட்டுகிறது. இந்தப் படிமம் நீங்கள் குறிப்பிட்டதுபோல எல்லா தொன்மையான மதங்களிலும் உண்டு. அதாவது ஆண் முதலில் தோன்றினான் என்பதுவும் பின்னர் பெண் உருவாக்கப்பட்டாள் என்பதுவும். இந்து மதத்தில் ஆண் தெய்வம்(ங்கள்) முதலில் தோன்றி பின்னர் பெண் தெய்வங்களை உருவாக்கி வைக்கின்றனர். அதாவது தெய்வமாயிருப்பினும் பெண் இரண்டாமிடத்திலிருக்கிறாள்.

பெண்ணின் படைப்பு குறித்த ஆதியாகம வசனங்களைப் பார்ப்போம்.

ஆதியாகமம்(Genesis) 2: 18. “பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.”

இவ்வளவுதான் பெண்ணின் இரண்டாம் நிலையைச் சொல்வது. ஆதாமுக்குத் துணையாக, இரண்டாவதாக படைக்கப்பட்டவள் ஏவாள். கடவுள் மற்ற உயிர்களை இருபாலோடும் படைத்துவிட்டு ஆதாமை மட்டும் தனியாகப் படைத்து, பின் பெண்ணை அவனிடமிருந்து படைத்திருப்பதில் ஆணிய சூழ்சி வெளியாகிறது என்றே கொள்ளலாம். மிக நீண்ட யூத பாரம்பரியத்தின் மரபு அது. கத்தோலிக்கத்தின் மரபும் கூட ஆனால் கத்தோலிக்கம் இதை பெண்களுக்கெதிரான வாதமாய் பயன்படுத்தியதா? அதுவும் பெண்ணடிமைத்தனத்தின் தொகையாக இன்றும் செயல்படுகிறது எனக் கூறும் அளவுக்கு பயன்படுத்தியதா என்பதற்கு ஆதாரமே இல்லை.

அடுத்து அதே அதிகாரத்தில் பெண்ணை படைத்ததும் அதற்குப் பின்னான சில வசனங்களையும் படித்தால் பைபிள் சொல்லும் பெண்ணின் இரண்டாம் நிலை அத்தனை மோசமானதாயில்லை எனப் புரியும்.

21. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.

22. தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார். (இந்த இடத்தில் அவளை கடவுளின் பரிசாக எண்ணிப் புழங்காகிதம் அடையவும் வாய்ப்புண்டு)

23. அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். (நீ என்னடா எனக்குப் ஏரு வைக்கிறது நாயே என இங்கே பெண்ணியம் பேசலாம்)

24. இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்;அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்(இங்கே பெண்ணியம் பேசுவது கடினமாகிறது)

அந்த கடைசி வரியை கூர்ந்து கவனியுங்கள் ‘அவர்கள் ஒரே சதையாயிருப்பார்கள்.’ ‘ஈருயிர் ஓருடல்.’

இந்த வசனங்கள் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன என்றால் பொதுவாக திருமணத்தை ஒட்டிய மதச் சடங்குகளில் பெண்ணடிமைத்தனம் பரவலாக வெளிப்படுவதை உணர முடியும். கத்தோலிக்க திருச்சபையில் நடத்தப்படும் ஒவ்வொரு திருமணத்தின் போதும் மேற்கண்ட வாசகம்தான் முதலாம் வாசகமாய் வாசிக்கப்படும். ஆனால் அதற்குப் பின்னான பிரசங்கத்தில் ‘ஓருடல் ஈருயிர்’ என்கிற வார்த்தைகளை உச்சரிக்காத சாமியாரே இல்லை. ஆக பெண் இரண்டாவதாக, துணையாளாக படைக்கப்பட்டாள் என்பது அவளுக்கெதிரான வாதமாகவோ அவளை அடிமைப் படுத்த முகாந்திரமாகவோ ஒருபோதும் பார்க்கப்படவில்லை.

கத்தோலிக்க திருமணத்தின் போது ஆணும் பெண்ணும் ஒரே வார்த்தைப்பாடுதான்(சத்தியப்பிரமாணம்) எடுத்துக் கொள்கிறார்கள், என்றால் எங்கிருக்கிறது பெண்ணடிமைத்தனம்? XYZ ஆகிய நான் ABC ஆகிய உன்னை கணவனாக/மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும் நோயிலும் சுகத்திலும் உனக்கு என்றும் பிரமாணிக்கமாயிருப்பேன் (Not exact words). இதுதான் இருவருமே எடுத்துக்கொள்ளும் சத்தியப் பிரமாணம்.

(இதில் பெண்ணியத்திற்க்கெதிரான பாயிண்டை சொல்லணும்னா பொதுவாக பெண் இந்த வார்த்தைப்பாட்டை(Oath/commitment) படிக்கும்போது ‘உங்களை‘ ஏற்றுக்கொள்கிறேன் என்பாள், ஆணோ ‘உன்னை‘ ஏற்றுக் கொள்கிறேன் என்பான். :) இது மரியாதை நிமித்தமானதாயும் இருக்கலாம். நம்மூரில் வயதுக்கும் மரியாதை உண்டே?)

ஆதியாகமத்தில் 3:20ல் இன்னொரு வசனம் பெண்ணின் நிலையை சொல்கிறது.

20. ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.

ஏவாள் எனும் பெயருக்கு உயிர்வாழ்வது(To live – Verb) எனும் பொருள். பெண்ணை அடிமைப்படுத்தப் பட வேண்டியவளாய் குறிப்பிட வேண்டுமென்றால் அவளை உயிருள்ளவற்றிற்கெல்லாம் தாய் எனச் சொல்வானேன்? அதுவும் அவள் இரண்டாமவள் எனச் சொல்லிய அதே புத்தகத்தில் (Genesis) அடுத்த அதிகாரத்தில் (சில வரிகளுக்குள்ளாலேயே). இது தர்க்க ரீதியாக பைபிளை இண்டர்பிரெட் செய்து எடுக்கப்பட்டதல்ல பைபிளில் இருக்கும் நேரடியான செய்தி. ஆனால் பைபிளில் பெண்ணின் இரண்டாமிடம் உள்ளூர இருக்கும் செய்தி (it can be known only through interpretation.) வெளிப்படையாகத் தெரிந்தாலும் பெண் இரண்டாமவள் என்கிற வார்த்தைகள் அதில் இல்லை ஆனால் வெளிப்படையாக உயிருள்ளவைக்கெல்லாம் அவள் தாயாகிறாள் எனச் சொல்லப்படுகிறது.

//இந்த அடிப்படைப் படிமத்தை எப்படி மதம் கடந்து செல்ல முடியும்? ஒன்று அதற்கு மாற்றாக பெண்சமத்துவத் தன்மை கொண்ட வேறு ஒரு அடிப்படைப் படிமம் முன்வைக்கப்படலாம்.//

உண்மை. பெண் ஆணுக்கு சமமானவள் என்பதை நிறுவ கத்தோலிக்கம் முன்வரப் போவதில்லை ஏனெனில் பெண்ணுக்கும் ஆணுக்குமான ஏற்றத் தாழ்வு அவள் ஆணுக்குத் துணையாய், இரண்டாவதாய் படைக்கப்பட்டாள் என்கிறதிலேயே முடிந்து போகிறது. இதன் நீட்சியாக அவள் ஆன்மாவற்றவளென்றோ, பெண்களெல்லோரும் மட்டும் பாவிகள் என்றோ, அவளுக்கு மோட்சத்தில் இடமில்லை என்றோ, அவள் ‘அடிமை’யாய் நடத்தப்பட வேண்டும் என்றோ கத்தோலிக்கம் போதிக்கவில்லை.

நிலமை அதற்கு எதிரானது. பெண்ணால் ஏற்பட்ட பாவச் சூழல் அவளாலேயே முறியடிக்கப்படும் என்பதுவும் ஆதாம் ஏவாளின் கதையிலேயே சொல்லப்படுகிறது. ஆதாம் ஏவாள் விலக்கப்பட்ட கனியை உண்டபின் கடவுள் என்ன நடந்தது என விசாரித்துவிட்டு கனியை உண்ணத் தூண்டிய பாம்பை(சாத்தான்) கீழ்கண்டவாறு சபிக்கிறார்.

ஆதியாகமம்(Genesis) 3:

14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப்பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;

15. உனக்கும் ஸ்திரீக்கும்(பெண்ணுக்கும்), உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

இங்கே குறிப்பிடப் பட்டிருக்கும் பெண் இயேசுவின் தாய் மரியாள். மாதாவின் சிற்பங்கள் பலவற்றில் காலின் கீழே ஒரு பாம்பு, வாயில் ஆப்பிளைக் கடித்தபடி இருப்பதை பார்த்திருக்கலாம். அந்த வடிவமைப்பு இந்த கருத்தை முன்வைத்ததே. பெண்ணால் ஏற்பட்ட பாவச் சூழல் பெண்ணாலேயே விடுவிக்கப்பட்டது.

ஏவாள் எனும் கன்னி கடவுளுக்கு கீழ்படியவில்லை அதனால் மனிதனுக்குப் பாவமும் மரணமும் வந்தது, மரியாள் எனும் கன்னி கடவுளின் திட்டத்திற்கு கீழ்படிந்தாள் அதனால் பாவ மன்னிப்பும் முடிவில்லா வாழ்வும் வந்தது, என்பதுதான் கத்தோலிக்க இறையியல் சிந்தனை. இதனாலேயே கத்தோலிக்கம் மரியாளுக்கு ஒரு சிறப்பிடம் தருகிறது. அவளின் சம்மதமின்றி மனிதருக்கு மீட்பு வந்திருக்காது. அவள் ஏவாளின் வழி வந்த பாவத்திலிருந்து விடுவிக்கும் புதிய ஏவாளாகப் பார்க்கப்படுகிறாள்.

இது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே கத்தோலிக்கம் எடுத்துக் கொண்ட நிலை. நமது நூற்றாண்டில் போப் பயஸ் XII இவ்வாறு எழுதுகிறார்,”மரியாள், கடவுளின் விருப்பத்தால், மீட்பின் செயல்பாட்டில் மீட்புக்கு காரணியான இயேசுவோடு இணைந்தார், ஏவாள் சாவின் காரணியான ஆதாமுடன் (பாவத்தில்) இணைந்ததுபோல.”
[Pope Pius XII is responsible for the principle papal contributions on this theme. In the Encyclical, AD CAELI REGINAM. dated 11 Oct. 1954, he wrote: "Mary, in the work of Redemption was by God's will, joined with Jesus Christ, the cause of salvation, in much the same way as Eve was joined with Adam. the cause of death. - Read here ]

இதில் தெளிவாக ஆதாம் பாவத்தின் காரணியாகவும் இயேசு(புதிய ஆதாம்) மீட்பின் காரணியாகவும், ஏவாள் பாவத்தில் இணைந்த (joined) பெண்ணாகவும் மரியாள் மீட்பில் இணைந்த பெண்ணாகவும் பார்க்கப்படுகிறார்கள். இதையே இரண்டாம் வத்திக்கான் (இன்றைய கத்தோலிக்கத்தின் ஆணிவேர்) மறுமொழிகிறது.

பெண் இயற்கையிலேயே, பலமற்றவளாக, இரண்டாமிடம் பெறுகிறாள் எனும் (ஆணியவாதக்?) கொள்கையை ஏவாளின் ‘இரண்டாம்’ நிலைக்கு ஒப்பிடலாம். இது பெண்ணியத்துக்கு எதிரானதே (பெண்ணியம் ஆணும் பெண்ணும் அனைத்திலும் சமம் என வாதிடுவதாய்க் கொள்ளுகையில்). ஆயினும் இதை பெண்ணடிமைத் தனத்தின் ஊற்றாய் கத்தோலிக்கம் பயன்படுத்தியது எனவும், ஏவாளின் இரண்டாமிடத்தைக் முன்வைத்து அவள் கீழ்த்தரமாக நடத்தப்பட்ட வேண்டும் என கத்தோலிக்கம் போதித்தது எனவும், கத்தோலிக்கம் (கிறீத்துவம்) பெண்ணடிமைத்தனத்தின் தொகுப்பு எனவும் கூறவும் எந்த முகாந்திரமும் இல்லை. இதுதான் என்னுடைய வாதம்.

உங்கள் பதிவில் கீழ்கண்டதை இணைத்துள்ளீர்கள்…
“ஆனால் அடிப்படையான படிம தளத்தில் மிக மெல்ல நூற்றாண்டுகளாகத்தான் மாற்றம் நிகழ முடியும். பல்வேறுவகை படிமங்களின் உரையாடலுக்கு வாய்ப்புள்ள இந்துமதங்களில் இந்த மாற்றம் ஒப்புநோக்க மேலும் எளிதானது.

நீங்கள் எந்த இந்து மதத்தை முன்வைத்து இந்தக் கூற்றை சொல்கிறீர்கள் எனவும் சொல்லியிருக்கலாம். இந்துமதத்தின் அடிப்படை நம்பிக்கை இதுதான், இவைதான் என எந்தக் கட்டுக் கோப்புமில்லாத நிலையில். இந்தியாவில், இந்துமதம் எனத் தன்னை அழைக்காத எந்தமதத்திற்கும் அப்பால் இருக்கும் எல்லா ஆன்மீகத் தத்துவங்களும் இந்து தத்துவம் எனக் கொள்ளும் நிலையில் நீங்கள் சொல்வதுபோல எந்த ஒரு மாற்றத்தையும் இந்துமதம் மொத்தத்துக்குமாக அடைந்துவிட முடியாது. பெண் ஆணுக்கு சமமானவள் என ஒரு முடிவை இந்துமதம் (மொத்தமாக) அடைய விரும்புகிறது என வைத்துக் கொள்வோம். இது எப்படி சாத்தியமாகும்? கட்டுமானமே அற்றதாகக் கருதப்படும்(இதில் எனக்கு முழுவதுமாக உடன்பாடில்லை) இந்து மதத்தில் ஆன்மிகத்தின் அடிப்படையில் எப்படி இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துவது? தத்துவங்களை, கொள்கைகளை அவை தரும் வாழ்க்கை நெறிகளை மொத்த மதத்திற்குமாய் அலசி ஆராய்ந்து முடிவுகளை, மாற்றங்களை எட்டும் ஒரு அமைப்பு இல்லாத ஒரு மதத்தில் எப்படி ஒட்டுமொத்த மாற்றங்களை உருவாக்க முடியும்?

அப்படியானால் இந்து மதத்தில் மாற்றங்களே நடைபெறவில்லையா எனக் கேட்கலாம். எனக்கு தெரிந்த வகையில் இந்துமதம் மொத்தத்துக்குமாய் நிகழ்ந்த இறையியல் ரீதியான மாற்றங்கள் என அதிகமில்லை. சிறுதெய்வங்களை பெருந்தெய்வங்களின் வடிவங்களாய் பொருத்தியதைத் தவிர வேறொரு இறையியல் மாற்றத்தையும் இந்துமதம் மொத்தமாகப் பெறவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்துமதம் மொத்தத்திற்குமான சமூக சீர்திருத்த மாற்றங்கள் எதுவும் மத ரீதியாய் எழுந்ததாக எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிப்பு போன்ற மாற்றங்களில் சமூக மாற்றக் கூறுகளே அதிகம். இதில் ஆன்மிக நோக்கம் குறைவு. ஏனென்றால் சதி என்பதே ஒரு சமூகப் பழக்கம். ஆன்மிகப் பழக்கமல்ல என நான் கருதுகிறேன். அதாவது சதி என்பதை அங்கீகரிக்கப்பட்ட இந்து முறையாக ஏற்றுக்கொள்வதை விட ஒரு சமூக அவலமாகவே பார்க்க விரும்புகிறேன். 1. சதி இந்து மதம் முழுவதுமாய் பின்பற்றப்பட்டதல்ல, 2. இந்துமதத்தின் தொன்மங்கள் என நான் நினைக்கும் வேதங்களிலோ அல்லது பிற மத நூல்களிலோ சதி எனும் பழக்கத்திற்கு இடமிருப்பதாய் (எனக்குத்) தெரியவில்லை. அது தொன்மம் முதல் இருக்கும் பழக்கமும் அல்ல. எனவே சதி ஒழிப்பு ஒரு ஆன்மீக முனைப்பல்ல மாறாக ஒரு சமூக முனைப்பே.

ஆக ஒரு ஒருங்கிணைந்த வடிவமைப்பைப் பெறாத, வேறுபட்ட (சில நேரங்களில் முற்றிலும் வேறுபட்ட) தொன்மங்களிலிருந்து ஊற்றெடுக்கும் வெவ்வேறு இந்து தத்துவ ஞான மரபுகளில் ஒருங்கிணைந்த மாற்றம் எதற்கும் இடமில்லை. அப்படி இருந்திருந்தால் இன்று இந்து மதத்தின் மீது வைக்கப்படும் எண்ணற்ற குற்றச்சாட்டுகளை சமூக நோக்கில் அலசி, ஆன்மீகம் வழியாக, தொன்மங்களை சீர்தூக்கிப் பார்த்து மாற்றியமைக்க முடியும். அப்படி செய்ய இயலாமல் தொன்மங்களில் சிக்கி நிற்கிறது. (இப்படி ஒரு மாற்றத்தை ஏற்கும் அமைப்போ சீர்திருத்தமோ வரும்வரை, இந்த நூற்றாண்டுக்கும் வரும் நூற்றாண்டுகளுக்குமாய் தன்னை பொருத்திக் கொள்ளாததுவரை அல்லேலூயாக் கூடங்கள் அதிகரிக்க வாய்ப்புக்கள் நிச்சயம் உள்ளன என்பது என் தாழ்மையான கருத்து.)

இந்துமதத்தின் பல கிளைகளில்/அங்கங்களில் ஆன்மீகத்தின் அடிப்படையில் மாற்றங்கள் நிச்சயமாய் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக உங்கள் எழுத்திலிருந்தே தெரியப்படும் நாராயண குரு, அய்யன் காளி போன்ற குருக்களின் ஆன்மீக வழியிலான சமூகப் பங்களிப்புக்கள். இவை இந்து மதம் மொத்தத்திற்குமானதல்ல. இந்துமதம் மாற்றங்களுக்கு ஏதுவானது, இங்கு மாற்றம் செய்வது எளிது என பொதுவாக நீங்கள் சொல்வது ஏற்க இயலாத வாதம். மாறாக இந்துமதத்தின் சில கிளைகளில் (தரிசனங்களில்?) இது எளிதில் சாத்தியமாகிறது என்றிருக்கலாம் (Another issue with semantics may be)

தொடர்ந்து நீங்கள்..”இறுக்கமான கட்டுமானம் கொண்ட தீர்க்கதரிசி மதங்களில் அது மிக மிக அரிதாகவே நிகழ முடியும்” எனச் சொல்கிறீர்கள்.

இங்கே கத்தோலிக்கம் ஆபிரகாமிய, தீர்க்கதரிசன மதமாயிருந்தபோதும் மற்ற இரு மதங்களிலிருந்தும்(யூத, இஸ்லாம்) மாறுபட்டே உள்ளது. (மற்ற மதங்களைப் பற்றிய என் கருத்துக்கள் மேலோட்டமான தகவல்களை முன்வைத்தே எழுதுகிறேன் ஆழமான ஆராய்ச்சி எதுவும் நான் செய்யவில்லை – இந்து மதம் குறித்த குறிப்புக்களுக்கும் இது பொருந்தும்).

கத்தோலிக்கம் இறைதூதர் (இங்கே இறைவன் அவரே (God himself)) சொல்வதை வைத்துக்கொண்டு மட்டும் செயல்படும் மதம் அல்ல. கத்தோலிக்க திருச்சபை (church) தனக்கென பல உரிமைகளைக் கொண்டுள்ளது. அதாவது இயேசுவின் போதனைகளை (தூய ஆவியின் துணையோடு) மறு ஆய்வு செய்வதற்கும், புதிய அர்த்தங்களை உருவாக்குவதற்குமான அதிகாரம் திருசபைக்கு (சற்று மிகையாகவே) இருக்கிறது. Infallibility என்பது (இறைவனின் அருளால்) திருச்சபை தவறிழைக்க சாத்தியமே இல்லை என்கிறது.(எல்லா நேரங்களிலும் இந்த அதிகாரம் வழங்கப்படவில்லை அதற்கென கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்).

இந்த அடிப்படையிலேதான் உலகம் தட்டை எனும் நம்பிக்கை மாறியது (பைபிளின் விவரிப்பில் உலகம் தட்டையானது, சூரியன் உலகைச் சுற்றிவருகிறது), பரிணாமக் கொள்கை ஆன்மீக நோக்கில் (விலங்கிலிருந்து மனிதன் உருவாக இறைவன் காரணியாயிருந்தார்) ஏற்றுக்கொள்ளப்படுகிறது, ரெனேசான்ஸ், Protestant Reformation போன்ற புரட்சிகளுக்குப் பின் ஒவ்வொரு முறையும் திருச்சபை தன்னை புதிப்புத்துக்கொண்டது, பல மாற்றங்களுடன்.

இரண்டாம் வத்திகான் கவுன்சில்(1962-1965) தற்போதைய கத்தோலிக்கக் கொள்கைகள் பலவற்றையும் உருவாக்கிய முக்கிய நிகழ்வு. இதில் மாற்றியமைக்கப்பட்ட இறையியல் கொள்கைகளும், தத்துவங்களும், வழிபாட்டு முறைகளும், வாழ்வியல் கொள்கைகளும் பல. முதன் முதலாய் கத்தோலிக்க திருச்சபைக்கு வெளியேயும் மீட்பு உண்டு என அறிவித்தது(எல்லோருக்கும் இல்லை). இது திருச்சபைக்குள்ளேயே எதிர்ப்பலைகளை ஏற்படுத்திய முடிவாகும்.

திருச்சபை தன்னை மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறது. மாற்றம் இங்கே எளிதாய் நடப்பதில்லை எனும் வாதம் அடிப்படையற்றது, இதற்கு மாறாக மாற்றங்களை எளிதில் மேற்கொள்ள வசதியான கட்டமைப்பை கொண்டது கத்தோலிக்கம். இப்படி ஒரு கட்டமைப்பை வேறு எந்த மதங்களிலும் நான் காணவில்லை. கிட்டத்தட்ட ஒரு ஜனநாயக நாட்டின் செயல்பாட்டிற்கு ஒத்தது இந்தக் கட்டமைப்பு (பொதுத் தேர்தலை தவிர) .

அண்மையில் ஏற்பட்ட சில மாற்றங்களாக ஞானஸ்னானம் பெறாமல் இறந்து போன குழந்தைகளுக்காக (திரிசங்கு சொர்க்கம் போல) லிம்போ என ஒரு இடம் இருப்பதாக கத்தோலிக்க மதம் முன்பு சொல்லி வந்தது. லிம்போ என்பது இல்லை எனவும் அவர்கள் சொர்கத்துக்கே செல்வார்கல் எனவும் அண்மையில், தற்போதைய போப் அறிவித்தார். திருச்சபை முழுவதற்குமான மாற்றம். அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றான சொர்க்கம் குறித்த மாற்றம்.

அமெரிக்காவில் பாலியல் கொடுமை செய்த பாதிரியார்களுக்கெதிராக திருச்சபையின் செயலின்மையை (அவர்கள் திர்ச்சபையால் க(த)ண்ட்டிக்கப்படவோ, விலக்கிவைக்கப்படவோ, அல்லது சட்டத்தின் முன் திருச்சபையால் நிறுத்தப்படவோ இல்லை) ஆராய்ந்து இனிமேல் பாலியல் கொடுமை செய்வதாகத் தெரிந்தால் அந்த பாதிரியாரை விலக்கி வைக்கும் முடிவொன்றை திருச்சபை எடுத்துள்ளது. சமூக நோக்கிலான ஒரு முடிவு.

இறுக்கமான கட்டுமானத்துடன் இருப்பதாலேயே ஒரு அமைப்பு மாற்றத்திற்கு இசையாது என்பது சரியானதா அல்லது ஒருங்கிணைந்த மாற்றங்கள் நிகழ்த்தப்பட, ஒட்டு மொத்த முடிவுகள் எடுக்கப்பட அப்படி ஒரு கட்டுமானம் தேவை என்பது சரியானதா?

பெண்ணும் ஆணும் சரி நிகர் எனும் முடிவை திருச்சபை எடுக்க விரும்பினால் அதற்குத் தடை ஒன்றும் இருக்கப் போவதில்லை. ஆனால் அதற்கான அவசியம் எதுவுமே இல்லை. ஒரு மதக் கோட்பாடு அல்லது நம்பிக்கை பெண்ணை இரண்டாம் இடத்தில் வைத்துள்ளது என்பதைக் கொண்டு மட்டும் அது பெண்ணடிமைத் தனத்தின் தொகுப்பு மதம் என்று சொல்லிவிட முடியாது, மாறாக அப்படிப் பட்ட நம்பிக்கையிலிருந்து தன் மதத்தின் அங்கத்தினருக்கு பெண்ணைப் பற்றிய இழி போதனைகளை அது செய்யுமானால், அல்லது பெண்ணை இழிவு செய்யும் சடங்குகளையும் ஆன்மீக முயற்சிகளையும் அது பரவலாக்கியிருக்குமானால், தனி மனித, குடும்ப வாழ்வில் பெண்ணுக்கு சரி சமமான இடமில்லை என கட்டுப்பாடுகளை விதிக்குமானால் அந்த மதம் பெண்ணடிமைத்தனத்தின் தொகை எனச் சொல்லிவிட முடியும்.

கத்தோலிக்கம் ஒரு உயிரோட்டமுள்ள மதம் (Lively, living எனப் பொருள் கொள்ளவும்) அதாவது தொன்மங்களைப் பின்பற்றி அது நின்றுவிடவில்லை. தொடர்ந்து தொன்மங்களை ஆராய்கிறது, அறிவியலோடு இசைய முயல்கிறது(அப்படி இல்லாத கறுத்த காலம் இன்றும் இல்லை). பின்நவீனத்துவ நோக்கில் படிக்கப்படும் பைபிள் கதைகள் ஏராளம். (அவை மீண்டும் பைபிளின் வேறொரு பரிமாணத்தை தொட்டுச் செல்வதாகவே இருந்தபோதும்).

உதாரணத்திற்கு இயேசு ஐந்து அப்பத்தையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்தளித்ததாக ஒரு புதுமை( Miracle) பைபிளில் சொல்லப்படுகிறது. இதை பின்னவீனத்துவப் பார்வையில் அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் பலரிடமும் உணவு இருந்ததென்றும் இயேசு தன் சீடர்களிடமிருந்து உணவு வாங்கி பகிர்ந்த போது அனைவரும் தங்கள் உணவைப் பகிர ஆரம்பித்ததாகவும் அதன் மூலம் எல்லோரும் பசி ஆற முடிந்ததாகவும் மறுவாசிப்பு செய்யப்படுகிறது. இயெசு புதுமையாக (மாயாஜால டைப் மிராக்கிள்) இதைச் செய்யாமல் மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறார். இதுவும் மிராக்கிள்தான். ஒரு சமூக மிராக்கிள். தனிப்பட்ட முறையில் நான் ஏற்றுக்கொள்ளும் இயேசுவும் இத்தகைய சமூக மிராக்கிள் செய்ய வல்லவரே. அந்த சமூக மிராக்கிள்தான் அவரது முக்கியப் பணி. மற்றதெல்லாம் வெறும் காற்றில் உலவும் தத்துவங்கள் என ஒதுக்கி விட்டுவிடலாம்.

கத்தோலிக்கம் உயிரோட்டமானது என்பதை இன்னொரு கருத்தைக் கொண்டும் சொல்லலாம். பல மதப் புத்தகங்களோடு ஒப்பிடுகையில் பைபிள் உள்ளடக்கத்தில் மிகச் சிறியது. இயேசுவின் படிப்பினைகளை மட்டும் எடுத்துக்கொண்டால் அவை சில பக்கங்களே. ஆனால் இந்த சில பக்கங்களின் அடிப்படையில் பல்வேறு கருத்துக்களை திருச்சபை தினமும் உருவாக்குகிறது. சாமியாரின் பிரசங்கம் துவங்கி, பல பதிப்புக்கள் வழியாகவும் பல புதிய கருத்துக்களை வெளியிட்டு வருகிறது. லட்சக்கணக்கான புத்தகங்கள், வெளியீடுகள் கருத்துப் பரிமாற்றங்கள் கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் நிகழ்கின்றன. இவை எவற்றிலேனும் பெண்ணடிமைக்கு ஆதரவான கருத்துக்கள் (பெண்ணியத்துக்கு எதிரான அல்ல) இருக்குமேயானால் கத்தோலிக்கம் இன்றும் பெண்ணடிமைத்தனத்தின் தொகையாக இருப்பதாக ஏற்றுக்கொள்ளலாம்.

அப்ப ஏன் பெண்கள் பாதிரியார்கள்போல பூசை செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது அல்லது கருக்கலைப்புக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்கிற கேள்விகள் எழலாம்.

பெண்ணுக்கு இந்த உரிமைகள் மறுக்கப்படுவது நீங்கள் சொல்லும் “பெண்ணின் இரண்டாமிடத்தை” முன்வைத்தல்ல, இந்தத் தடைகளுக்குப் பின்னிருப்பது ஏவாளின் பலவீனமும் அல்ல மாறாக இவற்றிற்கு வேறு காரணங்களே முன்வைக்கப்படுகிறது.

கருக்கலைப்புக்கான உரிமை மறுக்கப்படுவது (கரு) உயிர் வாழ்வதற்கான உரிமையை அது பறிக்கிறது என்பதாலேயே. பெண் அடிமை என்பதால் அல்ல. [The Holy See continues to insist that no human right to abortion exists because it contradicts the human right to life. The human right to life is the basic human right: all others stem from it. Human life deserves respect in any circumstance. - Holy See's position at Beijing Conference on Women - ]

பெண்கள் பாதிரியாராக ஏன் இருக்கக் கூடாது? பாதிரியார் பட்டம் என்பது இயேசுவின் 12 அப்போஸ்தலர்களின் மரபில் வரும் பட்டம். இயேசுவின் சீடர்கள் எல்லோரும் ஆண்கள் என்பதாலேயே இந்தப் பட்டம் பெண்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் ஒரு பூசைக்கான ஆயத்தங்களிலும், பூசையின் செயல்பாடுகளிலும் ஒரு பாதிரியாரின் பங்கு 20% என்றே கணக்கிடப்படுகிறது மீதமுள்ள எண்பது சதவீத நடவடிக்கையில் பெண்கள் கலந்துகொள்ளலாம். கத்தோலிக்கத்தின் மற்ற வழிபாட்டு முறைகளில் (நற்கருணை ஆராதனை தவிர்த்து) பெண்கள் தாராளமாய் முன்னின்று நடத்தலாம். கன்னியாஸ்திரிகள் பிரசங்கம் செய்யும் பூசைகளில் பங்கேற்றிருக்கிறேன், இப்போது கிட்டத்தட்ட அனைத்து கோவில்களிலும் கன்னியாஸ்திரிகள் (அமெரிக்காவில் திருமணமானவர்கள் கூட) நன்மை வழங்குவதற்கு அனுமதி உண்டு, பெண்கள் பைபிளை வாசிக்கலாம் சாதாரண, பாதிரியாரில்லாத ஒரு ஆண் என்னென்ன செய்யலாமோ அத்தனையும் கத்தோலிக்க சடங்குகளில் பெண் செய்யலாம். அசாதாராண சமயங்களில் பெண்களும் சாமான்யர்களும் ஞானஸ்னானம் வழங்கலாம், பாவ மன்னிப்பு வழங்கலாம்.

கத்தோலிக்கம் இன்றும் பெண்ணடிமைத்தனத்தின் தொகையாக உள்ளதா அல்லது கலாச்சாரச் சூழலில் எழும் பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்துப் போராடும் ஒரு சக்தியாக விளங்குகிறதா என்பதை பீஜிங்கில் நாலாவது உலக மகளிர் மாநாட்டில் போப் ஜான்பால் IIன் சார்பில் படிக்கப்பட்ட அறிக்கையை படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதன் சுருக்கம் இங்கே.

(இதே மாநாட்டில் அப்போதைய பாக்கிஸ்தான் பிரதமரின் அறிக்கை இங்கே. Interesting to read )

இதுபோன்ற அதிகாரபூர்வமான, உலகப் பார்வைகொண்ட, பெண்ணுக்கு ஆதரவான ஆக்கச் செயலுக்கு உலக அளவில் அறைகூவல் விடுக்க “இன்றும் பெண்ணடிமைத்தனத்தின் தொகையாக” இருக்கிற கத்தோலிக்க கிறீத்துவத்தால் எப்படி சாத்தியமாகும்?

இன்னும் விவாதங்களை வெவ்வேறு வழிகளில் கொண்டு செல்லலாம். கத்தோலிக்கத்தின் கறுப்பு நாட்களிலிருந்து உதாரணங்களை எடுத்துச் சொல்லலாம் ஆயினும் இன்று, இன்றளவில் கத்தோலிக்கம் தன் போதனைகளில், செயல்பாட்டில் பெண்ணடிமைத்தனத்தை நிலைநிறுத்துகிறது என்பது மிக மிக மிகைப்படுத்தப்பட்ட ஒரு கூற்று.

அன்புடன்

சிறில் அலெக்ஸ்



-- Edited by devapriyaji on Monday 6th of September 2010 06:56:08 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சேவியர் சொல்கிறார்: 

மிக ஆழமான தெளிவான அலசல். குறிப்பாக இன்றைய திருச்சபையை எடுத்துக் கொண்டால் பெண்களின் விடுதலைக்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் கத்தோலிக்க மதம் முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகள் ஏராளம் ஏராளம்.

ஒரு மதம் குறித்த பார்வையை மத நூலிலும், பழக்கங்களிலும் ஆழமான அறிவு அற்றவர்கள் பொதுப்படையாய் சொல்லிச் செல்வது சரியல்ல. ஜெயமோகன் அதைச் செய்திருக்கிறார்.

அவருக்குத் தெரிந்த இறையியலும், விவிலியமும் மேலோட்டமான சில தகவல்கள் மட்டுமே.

குறிப்பாக பழைய சட்டங்கள், வழிமுறைகள், கட்டளைகள் போன்றவை இயேசுவினால் மாற்றப்பட்டது எனவும், திருத்தி போதிக்கப்பட்டது எனவும் “ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை, அடிமை என்றும் உரிமைக் குடிமகன் என்றும் இல்லை” எனவும் புதிய ஏற்பாடு கிறிஸ்தவ வாழ்க்கையை நெறிப்படுத்துகிறது என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை.



__________________
«First  <  1 2 3 414  >  Last»  | Page of 14  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard