ராகுல் காந்தி இரண்டு லட்சம் டாலர்களுடன்
அமெரிக்காவில் மடக்கப்பட்ட செய்தி ………
அண்மையில், அமெரிக்காவில்,
பாஸ்டன் விமான நிலையத்தில்
சோதனையின்போது – ராகுல் காந்தி
கணக்கு காட்டப்பட முடியாத
சுமார் இரண்டு லட்சம் டாலர்களுடன்
(இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி ரூபாய் !)
சோதனை செய்யும் அதிகாரிகளால்
நிறுத்தி வைக்கப்பட்டார் என்றும் - பின்பு
புது டெல்லி தலையிட்ட பின்பு தான்
வெளியேற அனுமதிக்கப்பட்டார் என்றும இன்று
நம்பகத்தன்மை உள்ள ஒரு பத்திரிகை தகவல்
வெளியிட்டிருக்கிறது !
இந்த தகவல் என்னை போலவே பலருக்கும்
ஆச்சரியமாக இருக்கலாம் !
இதில் கவலை தரக்கூடிய சில விஷயங்களும்
இருக்கின்றன -
அவர் கையில் வைத்திருந்த பணத்திற்கு கணக்கு
காட்ட முடியவில்லை என்பதும்
இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று கருதப்படும்
இந்த இளைஞர்
அமெரிக்காவில் தன்னந்தனியே இப்படி
சுற்றிக்கொண்டு இருக்க வேண்டிய அளவிற்கு
ரகசியமான காரணம் என்ன என்பதும்
சாதாரணமான விஷயங்கள் அல்ல .
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு,
இன்டர்நெட் பாங்கிங் ,மொபைல் பாங்கிங்
என்று பலவித மிகச்சுலபமான வழிகள்
நடைமுறையில் இருக்கும்போது
கோடிக்கணக்கில்
- அதுவும் அந்நிய செலாவணியில் – டாலராக
ஒருவர் எடுத்து செல்வது ஒரு வித மர்ம பின்னணியை
தோற்றுவிக்கிரதே !
ராகுல் காந்தி தனிப்பட்ட மனிதர் அல்ல.
இந்தியாவில் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள
மிக முக்கியமான
மனிதர்களுள் ஒருவர்.
எனவே இதன் பின்னணியை தெரிந்து கொள்ள
மக்களுக்கு
உரிமை இருக்கிறது..
சம்பந்தப்பட்டவர்கள் விளக்குவார்களா ?