New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: SONIA - Manmohan Singh Government Activities


Guru

Status: Offline
Posts: 9863
Date:
SONIA - Manmohan Singh Government Activities
Permalink  
 


 

Pay tax and convert your black money into white

Pradeep Thakur | TNN

New Delhi: An Income-Tax raid on a Delhibased infrastructure and power major,with a turnover of over $2.5 billion,led to a disclosure of unaccounted income worth Rs 212 crore.Assuming a profit rate of 10%,the disclosure also amounted to an admission that businessman had withheld disclosing turnover worth Rs 2,000 crore which,had it been accounted for,would have spelt big gains for other tax departments such as service tax,central excise,VAT,and others.
But with the departments failing to come together,and with the Income Tax department itself fighting shy of using stringent provisions in their armoury to deal with tax evaders,the businessman has gotten away simply by agreeing to pay income tax.
This is not an isolated instance.Last month,a steel manufacturer on the outskirts of Delhi made a bigger disclosure after an income tax raid.
Reluctance of the I-T department to use provisions designed to deal with such cases and lack of co-ordination among different tax departments is encouraging a new way of legalizing the income kept hidden from the government.Under Section 271(1)C and 271 AAA of the I-T Act,the I-T department has powers to levy a penalty of 100%-300 % on all such disclosures where the modus operandi is not revealed and the source of funds not fully explained.For every Rs 5 crore disclosed,I-T laws provide for a penalty of Rs 1.5 crore,in addition to a tax of Rs 1.5 crore and an interest of Rs 50,000.
However,rarely has any firm which discloses after an I-T raid been subjected to such penalty.If an entity can disclose unaccounted income of Rs 200 crore in one year,is it possible that the firm was fair in its dealings in all previous years of its existence, asked an official.


Pc0011300.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: SONIA - Manmohan Singh Sleep on Corruption.
Permalink  
 



Inherent flaws in the system make India a big tax haven

New Delhi: With the I-T department being reluctant to sternly deal with cases of undisclosed income,it seems a new way of legalizing the income kept hidden from the government is emerging.According to the finance ministry,during the financial year 2009-2010,upto December 2009,over 2,300 search and survey operations were conducted leading to seizure of cash and assets worth Rs 602 crore and a disclosure of Rs 1,832 crore of unaccounted income.
I-Ts Gujarat unit claimed to have unearthed Rs 2,877 crore as undisclosed income in 25 raids on industrialists and businessmen in the last one year.The figure for the previous year was Rs 1,000 crore.Every year since 2005,I-T raids lead to disclosures of thousands of crores which are estimated to amount to less than 10% of the actual evasion.This makes the country one of the biggest tax havens where a parallel unaccounted economy thrives.
Sources said the accused firm or individuals always manage to get away by paying a tax of 30% and cess on the disclosure.Seldom have they revealed the mode and manner in which such income had been earned or the entities where such unaccounted money had been reinvested,as mandated under the I-T Act.
The enormity of money laundering was revealed in data compiled by the I-T department in 2005-06.The information was packed in a CD that contained a list of over 6,000 individuals,many of them comprised the who's who of the country,and a copy was circulated among all chief commissioners for further action.The CD contained particulars of 20,000 bank accounts and details of transactions.
Simultaneously,the department,in a crackdown on hawala dealers,had unearthed transactions of over Rs 3,000 crore in the national capital alone.The entry operators issued cheques against cash deposits in their accounts and raised bogus bills for a commission of 1% of the total transaction.In one such case,I-T sleuths had unearthed transactions of Rs 1,540 crore at the Fatehpuri branch of Federal Bank in the Capital in 2005.During investigation,it was found that only three individuals had transacted the entire amount of Rs 1,540 crore.The earning of these agents was estimated to be anywhere between Rs 5-10 crore each annually.These operators provided cover for industrialists to launder their ill-gotten wealth.The story was the same in other metros and business hubs.
Customs and central excise authorities had in the last fiscal unearthed duty evasion of Rs 9,700 crore.The department also recovered duty of Rs 1,000 crore on the evasion.However,there has rarely been any coordinated action between customs & excise and the I-T departments.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Govt gagged CBI to save Lalu: Nitish

Faizan Ahmad | TNN

Patna: Bihar governments stand to go in ap p e a l against the acquittal of former CMs Lalu Prasad and Rabri Devi in a disproportionate assets case,is now vindicated with the CBI director admitting that the investigating agency had enough evidence but the Centre did not permit it to go in appeal against the trial court judgment.But now that the Supreme Court has said the state government was not competent to appeal against the acquittal,the chapter is closed, chief minister Nitish Kumar said on Saturday.
On Friday,CBI boss Ashwini Kumar in an interview to a news channel said the agency had sought permission to challenge the trial court order in 2006,but the UPA government denied the go-ahead.
When the trial court acquitted the couple,the state government waited for CBI to move a higher court against the acquittal.It didnt,and we challenged the acquittal in the Patna High Court after taking the advocate generals opinion, he said and added there can be no debate on the SC ruling.But one thing is crystal clear.The UPA government gagged CBI to save Lalu, Nitish said.

Nitish too sees red over robes


Patna: Bihar chief minister Nitish Kumar on Saturday supported Union minister of forest and environment Jairam Ramesh who has pleaded for ending the practice of wearing robe while giving away and receiving degrees.Although Kumar put it on at the first convocation of Chandragupt Institute of Management-Patna (CIMP),he said he favours a debate on this old tradition.
A way should be found out to replace the ceremonial gowns, he said.TNN

Pc0081600.jpg




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

எல்லாருக்கும் மலிவு விலையில் ரேஷன் தந்தால் தாங்க முடியாது:நிலைமையை சுட்டிக்காட்டி பவார் வெளிப்படை
மே 04,2010,00:00  IST

Latest indian and world political news information

புதுடில்லி:''பொது வினியோக திட்டத்தை பரவலாக்குவது என்பது நடக்காத காரியம். அனைத்து குடும்பங்களுக்கும் மலிவு விலையில் உணவு தானியங்களை வழங்குவதும் சாத்தியமில்லை. அப்படி வழங்கினால், தற்போதுள்ள 70 ஆயிரம் கோடி ரூபாய் உணவு மானியம் பல மடங்கு அதிகரிக்கும். அதை அரசால் தாங்க முடியாது,'' என மத்திய உணவு அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார்.உணவு அமைச்சகம் தொடர்பாக ராஜ்யசபாவில் நேற்று நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய மத்திய அமைச்சர் சரத் பவார் இதை தெரிவித்தார்.


அவர் மேலும் கூறியதாவது:பொது வினியோக திட்டத்தை பரவலாக்கினால் அரசு, ஏழு கோடி டன் உணவு தானியங்களை கொள்முதல் செய்ய நேரிடும். இதுவரை 5.4 கோடி டன் உணவு தானியம்தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதுவே பெரிய சாதனையாக கருதப்படுகிறது. மேலும், ஆரம்பத்தில் 18 ஆயிரம் கோடி முதல் 19 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த உணவு மானியம் இப்போது, 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.வறுமைக்கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவு தானியங்களின் விலையை உயர்த்தக் கூடாது என, கோரிக்கை விடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில், பொது வினியோக திட்டத்தை பரவலாக்கினால், மானியம் எங்கிருந்து கிடைக்கும்.


வறுமைக்கோட்டிற்கு மேலே உள்ளவர்கள் எல்லாம் 2002ம் ஆண்டு விலைக்கே, ரேஷன் பொருட்களை தற்போது பெறுகின்றனர். ஆனால், விவசாயிகளிடம் இருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்யும் போது வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையானது இரு மடங்கு அதிகரித்து விட்டது. ஆனால், ரேஷன் பொருட்கள் விலை உயர்த்தப்படவில்லை.


மாநில அரசுக்கு பொறுப்பு: உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறினால், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு கிலோ மூன்று ரூபாய் விலையில் அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். இருந்தாலும், இந்த மசோதா நிறைவேற்றப்படும் முன், மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும்.ஏனெனில், மாநில அரசுகளுக்கு இதில் நிறைய பொறுப்பு உள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்கள் எத்தனை என்பது குறித்து திட்டக் கமிஷனும் தெரிவிக்க வேண்டும்.


திட்டக் கமிஷன் தரும் தகவல்கள் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும். இந்த ஆரம்ப கட்ட வேலைகள் எல்லாம் முடிந்து விட்டால், மசோதா நிறைவேற்றப்படுவது எளிது.பொது வினியோக முறையில் முறைகேடுகள் நிகழ்வதைத் தடுக்க, வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு உணவு தானியங்களுக்குப் பதிலாக பணமாக வழங்கலாம் என, சில தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி விரிவான அளவில் விவாதிக்க வேண்டும். மேலும், பணம் வழங்கினால், அதைப் பெற்றுக் கொண்ட ஏழைகள், உணவு தானியங்களுக்குத்தான் அதை செலவிடுவர் என சொல்ல முடியாது. இந்தப் பிரச்னை பற்றியும் ஆலோசிக்க வேண்டும்.


ஸ்மார்ட் கார்டு மூலமாக உணவு தானியங்களை சப்ளை செய்யும் முன்னோடி திட்டம் சோதனை அடிப்படையில், இரண்டு மூன்று மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முறை வெற்றிகரமாக அமைந்தால், அதை நாடு முழுவதும் அமல்படுத்தத் தயார்.நாட்டில் உணவு தானிய கையிருப்பு திருப்திகரமாக உள்ளது. மக்களுக்கு குறிப்பாக நலிந்த பிரிவினருக்கு ஒரு ஆண்டுக்கு உணவு தானியங்களை தடையின்றி வழங்க முடியும். அதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. இருந்தாலும், உணவு தானியங்களை சேமித்து வைப்பதற்கான வசதிகளை அதிகரிக்க வேண்டும். அதற்கு நிறைய நவீன சேமிப்பு கிடங்குகளை உருவாக்க வேண்டும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டையும் திட்டக் கமிஷன் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு சரத் பவார் கூறினார்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Kalahasti Temple Gopura

ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இரண்டாக பிளந்தது

புதன்கிழமை, மே 26, 2010, 10:18[IST]

ஸ்ரீகாளஹஸ்தி: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் ராஜகோபுரம் இரண்டாக பிளந்துள்ளது. அது எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

ஸ்ரீகாளஹஸ்தி ஞானப்ரகசாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் ராஜகோபுரம் 122 அடி உயரம் கொண்டது.

இந்தக் கோவில் 1516ம் ஆண்டு கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. பஞ்சபூத தலங்களில் இக்கோவில் வாயு ஸ்தலமாக விளங்குகிறது. ராகு-கேது தோஷம் போக்குவதில் புகழ் பெற்ற கோவிலாகத் திகழ்கிறது.

இதன் ராஜகோபுரத்தில் கடந்த 1988ம் ஆண்டு விரிசல் ஏற்பட்டது. இதனால் கோபுர சிற்பங்கள் உடைந்து விழுந்தன. சேதமடைந்த ராஜகோபுரம் ரூ.15 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது.

இந் நிலையில் இப்போது மீண்டும் ராஜகோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு, அது விரிவடைந்து கொண்டே போய் கடந்த சில நாட்களில் இரண்டாக பிளந்து விட்டது.

சென்னை குழு விரைந்தது:

இது குறித்து தகவல் அறிந்த சித்தூர் மாவட்ட கலெக்டர் ராஜகோபுரத்தை பார்வையிட்டார்.
கோபுரத்தை சுற்றி 500 அடி பகுதி ஆபத்து பகுதியாக அறிவிக்கப்பட்டு கடைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் கோபுரத்தை சுற்றி கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த பேராசிரியர் நரசிம்ம ராவ் தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஸ்ரீகாளஹஸ்திக்கு வந்து ராஜகோபுரத்தை ஆய்வு செய்தனர். ராஜகோபுரத்தில் இருந்து விழுந்த சிற்பங்களின் பகுதிகளை பரிசோதனைக்காக சேகரித்தனர்.

இதுகுறித்து நரசிம்ம ராவ் கூறுகையில்,

ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தின் அடித்தளம் பலமாக உள்ளது. ஆனால், கோபுர கற்கள் பலவீனமாக உள்ளன. காற்று, மழை போன்ற இயற்கை பருவநிலை காரணமாக ராஜகோபுரம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலை உள்ளது.

ராஜகோபுரத்தின் கட்டுமான கற்களின் ஒரு சிறிய பகுதியை எடுத்துச்செல்கிறோம். அந்த கற்களை சோதனை செய்தபிறகு இன்னும் ஒரு வாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அன்னை தெரசா நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=8753

சென்னை: மிஷனரீஸ் ஆப் சாரிட்டிஎன்ற அமைப்பைத் துவக்கி சமூக சேவை செய்து வந்த அன்னை தெரசாவின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட,மத்திய அரசு முடிவு செய்துள்ளது.தெரசாவுக்கு ஏற்கனவே நோபல் பரிசு, பாரத ரத்னா விருது போன்ற பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் உருவம் பொறித்த நாணயத்தையும் வெளியிட வேண்டும் என, சென்னையில் இயங்கும் அன்னை தெரசா அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள்,பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை வைத்தன.இந்த கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, “தெரசாவின் நூற்றாண்டு தினமான ஆகஸ்ட் 26ம் தேதி,அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படும்என அறிவித்துள்ளது.இதற்கான நிகழ்ச்சி, அன்னை தெரசா நூற்றாண்டு விழாவாகவும், நாணய வெளியீட்டு விழாவாகவும் கோல்கட்டாவில் நடத்தப் படுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Rs 744cr dalit fund diverted for Games


5722314.cms
5778825.cms

NEW DELHI: The state government has over the past five years been systematically diverting funds meant for the development of Scheduled Caste communities to projects related to the Commonwealth Games, a reply to an RTI query has revealed. Since 2006, Rs 744 crore has been used up from the Scheduled Caste sub plan fund for Games-related projects of various departments. 

Releasing the findings on Thursday, an NGO Housing and Land Rights Network called for an inquiry by a parliamentary sub-committee into the diversion of the funds which it said violated all norms of governance. 

The RTI query was addressed to the city's department of social welfare the agency in charge of SC/ST/OBC/minorities which furnished the details. HRLN and the National Dalit Campaign for Human Rights said the funds were used for projects of MCD, NDMC, DJB and departments of urban development and sports and youth, among others. 

The RTI reply said that in 2006-07, Rs 1.97 crore was diverted from the special component fund and spent on Commonwealth Games-related projects. In 2007-08, Rs 15.58 crore was used from the fund. The amount rose to Rs 214.73 crore in 2008-09 and Rs 288.44 crore in 2009-10. In 2010-11 so far the amount diverted for CWG projects is Rs 233.64 crore. 

In another RTI application filed by HRLN with the Organizing Committee of the Commonwealth Games on the Agra trip being organized for the 8,000-odd athletes and delegates, the OC said the cost of the trip would be Rs 1.71 crore. 

HRLN said the diversion of money violated norms governing special component plan funds. The norms, put in place by the Planing Commission and the National Development Council, clearly state that the fund is meant for micro development works for the Scheduled Caste communities. Government of India rules have repeatedly emphasized that the funds allocated under the SCP have to be disbursed exclusively for the benefit of those belonging to the SC communities, HRLN activists said. Delhi has a Dalit population estimated at 2.34 million. 

HRLN has also written to the Comptroller and Auditor General seeking an audit into the exact expenditure on the Commonwealth Games to date and the diversion of funds from SC sub plan component.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் காமன்வெல்த் போட்டிகள் நடத்த திட்டம்

புதுடில்லி : தலித் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, விளையாட்டுத் துறைக்கு தாரை வார்க்கப்பட்ட விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.


தலித் மேம்பாட்டுக்காக, 2006ம் ஆண்டு முதல் ஒதுக்கப்பட்ட நிதி, 744 கோடி ரூபாயை காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடர்பான திட்டங்களுக்கென, டில்லி அரசு திருப்பிவிட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள, வீடு மற்றும் நில உரிமை அமைப்புக்கான தன்னார்வ இயக்கம், இந்த நிதி, அரசின் அனைத்து விதிமுறைகளையும் மீறி, விளையாட்டு துறைக்கு தாரை வார்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து பார்லிமென்ட் துணைக்குழு விசாரணை நடத்த வேண்டுமென்றும், கோரிக்கை விடுத்துள்ளது. தலித் மேம்பாட்டு நிதியை விளையாட்டு உள்ளிட்டவற்றுக்கு ஒதுக்கிய விவரம் குறித்து, தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்டது.


இதற்கு, டில்லி சமூக நலத்துறை பதில் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடத்த 2006-07ம் ஆண்டு தலித் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 1.97 கோடி ரூபாய் காமன்வெல்த் போட்டி மற்றும் அது தொடர்பான பணிகளுக்காக மாற்றப்பட்டது. 2007-08ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 15.58 கோடி ரூபாயும், 2008-09ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 214.73 கோடி ரூபாயும், 2009-10ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 288.44 கோடி ரூபாயும் காமன்வெல்த் போட்டிகளுக்கென மாற்றப்பட்டுள்ளது. 2010-11ம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட 233.64 கோடி ரூபாய் காமன்வெல்த் விளையாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சமூக நலத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காமன் வெல்த் விளையாட்டு போட்டிகளின் போது, விளையாட்டு 8,000 பேர் ஆக்ரா செல்வதற்கு, 1.71 கோடி ரூபாய் நிதி மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து தன்னார்வ இயக்கம் கூறியதாவது: டில்லியில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தலித்துக்கள் உள்ளனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்காக, பிரத்யேகமாக மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அதனை விளையாட்டு, நகர மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களுக்கு அரசின் விதிமுறைகள் அனைத்தையும் மீறி டில்லி அரசு மாற்றியுள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. இது குறித்து, பார்லிமென்ட் துணைக்குழு விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு தன்னார்வ இயக்கம் கூறியுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ரூ.750 கோடி வரி ஏய்ப்பு செய்த ஸ்டெர்லைட் தாமிர ஆலை நிர்வாகி கைது

தூத்துக்குடி : தூத்துக்குடியில், 750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த தனியார் தாமிர ஆலை துணைத்தலைவரை, கலால் வரித்துறையினர் கைது செய்தனர்.


தூத்துக்குடியில், மதுரை பை-பாஸ் ரோட்டில், சிப்காட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான"ஸ்டெர்லைட் தாமிர ஆலை' உள்ளது. இங்கு, வெளிநாடுகளிலிருந்து தாமிர தாதுவை இறக்குமதி செய்து, தாமிர தகடு, ஒயர்கள், கம்பிகள் உள்ளிட்ட பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆலை மீது வரி ஏய்ப்பு புகார் வந்ததன் அடிப்படையில், மத்திய சுங்கம் மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் பத்து பேர், நெல்லை மண்டல கமிஷனர் கண்ணன் தலைமையில், நேற்று முன்தினம் முதல் இரண்டு நாட்கள், இந்த ஆலையில் சோதனை நடத்தினர். இதில், 750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்தது.


அதுகுறித்து கலால்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த ஆலையில், தாமிர தாதுவை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து, அதை தாமிர கம்பிகள், தகடுகளாக மாற்றி, ஏற்கனவே உறுதியளித்தபடி மீண்டும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யாமல், உள்நாட்டில் விற்று மோசடி செய்துள்ளது. இவ்வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில், மத்திய அரசுக்கு 750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


இந்த வரி ஏய்ப்பு தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலையின் மறைமுகவரிபிரிவு துணைத்தலைவர் வரதராஜனை(48), கலால்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். தூத்துக்குடி ஜே.எம்., 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிபதி ராணி உத்தரவுப்படி ரிமாண்டில் வைக்கப்பட்டார். கோர்ட் வளாகத்தில் தள்ளுமுள்ளு: கோர்ட்டிலிருந்து வரதராஜனை, கலால்துறையினர் வெளியே கொண்டு வந்தபோது அவருக்கு எதிராகவும், ஆலைக்கு எதிராகவும், வக்கீல்கள் கோஷமிட்டனர். அவர் மீது செருப்பு வீசப்பட்டது. அவரை படமெடுக்க பத்திரிகை போட்டோகிராபர்கள் முயன்றனர். அப்போது தள்ளுமுள்ளு நடந்தது. போட்டோகிராபர்களை, அங்கிருந்த சிலர் கையால் தாக்கி படமெடுக்கவிடாமல் தடுத்தனர்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

13_08_2010_009_055-food.jpg?w=350&h=1128
14_08_2010_011_025grains4.jpg?w=624&h=739


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Give foodgrains free to millions of hungry: SC

Procure Only As Much As You Can Store

TIMES NEWS NETWORK

New Delhi: The Centre on Thursday agreed that food grains were rotting due to record procurement in the last three years without matching storage facility prompting the Supreme Court to suggest free distribution of food grains to millions of hungry instead of letting it rot in the open.
The remarks came from a Bench comprising Justices Dalveer Bhandari and Deepak Verma after additional solicitor general Mohan Parasaran read out food secretary Alka Sirohis affidavit virtually admitting shortage of storage facility.
The Bench said: If this is the position,then increase the storage facility by constructing godowns in every district.But not a single grain of food should be wasted.If due to lack of storage facility food grains are rotting and getting wasted,then distribute it free to those hungry.The government could also increase the allocation to families covered under BPL and AAY schemes.
The court also took a serious view of the Centres allegation that though it was releasing adequate quantity of food grains,the states were not giving the assured 35 kg of grains per family per month under the public distribution system (PDS).It asked the state governments to file an affidavit within a week on this anamoly.
Responding to the courts query for abolition of subsidised food grains to those above poverty line (APL) category under PDS,the Centre said that food grains at very cheap rate were first made available to BPL and Antyodaya Anna Yojana (AAY) category families.
Only when the requirement of BPL and AAY category were met,that the APL category families were provided food grains, Parasaran said.The Bench said if that was the position,then there was no need to abolish APL categroy which get grains at a price higher than BPL and AAY category.
The Centre also said that it would consider implementing the apex courts suggestion to allocate food grains to poor families on the basis of the size of the family rather than a fixed quota of 35 kg a month.The Food Secruity Act will take this as well as the National Advisory Committees suggestion to treat the entire population in half of the total number of districts in certain backward states as BPL and give food grains accordingly, it said.
The Centre also agreed with the courts suggestion for total computerisation of the PDS food grain supply mechanism to weed out rampant corruption and pilferage,as reported to the apex court by the Justice Wadhwa Commission.

Pc0110600.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ENCOUNTER WITH THE LAW
Dont doubt SC order,Jethmalani told

TIMES NEWS NETWORK

New Delhi: Ram Jethmalani spoke the unspeakable in the Supreme Court Juustice Tarun Chatterjee,while heading a Bench hearing the Sohrabuddin fake encounter killing case,should not have on January 12 ordered the CBI probe as he himself was under the CBI scanner in the PF scam case.
A stunned court room waited for a response from the Bench comprising Justices Aftab Alam and R M Lodha.But before it could react,Solicitor General Gopal Subramaniam admonishingly asked Jethmalani not to target the judges.
Justice Alam,part of the Bench headed by Justice Chatterjee,expressed his shock and anguish at the level of accusation that virtually struck at the root of propriety,which is the basis of public faith in the apex court.
Immediately after Justice Lodha said he detested the argument against a member of a Bench,Justice Alam said: Your statement has hurt me.It will hurt your reputation too.
Jethmalani responded: I have no reputation to lose.If I lose my reputation by doing my duty to point out the correct position of law,then so be it.
If Jethmalani had thought he would convince the Bench by using every possible argument to get some time to file documents which he claimed exhibited a conspiracy to destabilise the Narendra Modi government,then he was mistaken.Will the court not have a look at the documents which I want to put on record, he asked.Though the Bench said no,senior advocate Dushyant Dave could not take it any more and sharply told Jethmalani to keep his cheap politics out of the court room and went on to question the octogenarian lawyers ethics.This led to a stinging slanging duel between Dave and Jethmalani.

Pc0131900.jpg

Pc0131700.jpg 

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தோண்ட, தோண்ட ஊழல் : காமன்வெல்த் போட்டியில் பல ஆயிரம் கோடி ஏப்பம்

"தோண்ட, தோண்ட ஊழல்' என்ற வார்த்தை இந்தியாவுக்கு புதியது அல்ல. ஹர்ஷத் மேத்தாவில் துவங்கி, மதுகோடா, கேதன் தேசாய் என இந்த அவமானப் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே தான் செல்கிறது. ஊழல் செய்வதற்கு எந்த ஒரு துறையையும் விட்டு வைக்காத, நம்மவர்கள் தற்போது விளையாட்டு துறையின் மீதும் கை வைத்துள்ளனர். இந்தியாவின் விளையாட்டுத் திறமையையும், கட்டமைப்பு நிர்வாகத்தையும் உலக நாடுகளுக்கு உணர்த்தும் வகையில்  நடக்கவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் தான், கோடிக் கணக்கில் தற்போது ஊழல் நடந்துள்ளது.


சபாஷ் மணிசங்கர்  : போட்டிகளுக்காக ஸ்டேடியங்கள் கட்டுவது, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது போன்ற விஷயங்களில் முறைகேடு நடப்பதாக அரசல் புரசலாக அவ்வப் போது புகார்கள் கூறப்பட்டு வந்தாலும், இந்த விவகாரத்தை மீடியாக்களின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பெருமை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் எம்.பி.,யுமான மணிசங்கர் அய்யரைத் தான் சேரும். "காமன்வெல்த் போட்டிகள் தோல்வி அடைந்தால் மிகப் பெரிய அளவில் மகிழ்ச்சி அடைவேன். இதற்காக, செலவிடும் நிதியை, குழந்தைகளின் விளையாட்டு பயிற்சிக்கு செலவிட்டால் பயன் கிடைக்கும்'என்றார். இதைத் தொடர்ந்து தான், காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழல்கள், ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வெளிச்சத்துக்கு வந்தன.போதாக்குறைக்கு, பார்லிமென்டில் இந்த பிரச்னையை மையமாக வைத்து, எதிர்க்கட்சிகள் புயலை கிளப்பின. நூறு கோடி, 200 கோடி என்பதையெல்லாம் தாண்டி, தற்போது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுவதை பார்த்தால், அதிர்ச்சியில் தலை சுற்றிப் போகிறது.


காமன்வெல்த் போட்டி : சீனா ஒலிம்பிக் போட்டிகளை நடத்தப் போவதாக தகவல் வெளியானதும் தான், நாமும் இதுபோல் விளையாட்டு போட்டிகளை நடத்தி, சர்வதேச அரங்கில் பெயர் எடுக்க வேண்டும் என, இந்திய அரசு கருதியது. நமக்கு இருக்கும் பொருளாதார வசதியைக் கொண்டு, ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடியாது என்றாலும், குறைந்தபட்சம் காமன்வெல்த் போட்டிகளையாவது நடத்தலாம் என, முடிவு செய்தது மத்திய அரசு.கடந்த 2003ல் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசில் தான் இதற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. டில்லியில் 2010ல் காமன்வெல்த் போட்டிகளை நடத்த அனுமதி பெறப்பட்டது.  இந்த போட்டிகளை நடத்துவதற்காக 2005ல் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைவராக, காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் கல்மாடி நியமிக்கப்பட்டார். குழு அமைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு பின்னரே இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது இந்த போட்டி நடத்துவதற்காக 1,200 கோடி ரூபாய் ஒதுக்கினால் போதும் என, தெரிவிக்கப்பட்டது.


சிறிது, சிறிதாக பணிகள் துவங்கப்பட்டன. போட்டி நடப்பதற்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவான கால அவகாசமே உள்ளது. ஆனால், பெரும்பாலான பணிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அறைகுறையாகவே உள்ளன. போட்டிகளை நடத்தி முடிப்பதற்கான செலவு, ஏற்கனவே திட்டமிட்டதை விட பல மடங்கு அதிகரித்து, 45 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் என, கூறப்படுகிறது.


ஜோதியில் துவங்கிய ஊழல் : காமன்வெல்த் போட்டியின் துவக்க விழாவாக, கடந்தாண்டு லண்டனில் தொடர் ஜோதி ஓட்டத்தை பிரிட்டன் ராணி துவக்கி வைத்தார்.இந்த போட்டி ஏற்பாடுகளின் பின்னணியில் மிகப் பெரிய அளவுக்கு ஊழல் நடந்திருப்பது, முதல் முறையாக வெளிச்சத்துக்கு வந்தது.இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் பணி, லண்டனைச் சேர்ந்த ஏ.எம்.பிலிம்ஸ் என்ற நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக அந்த நிறுவனத்துக்கு 3.3 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. இதற்காக, முறையாக எந்தவித டெண்டரும் கோரப்படவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் நடந்த ஊழல் தொடர்பாக பிரிட்டன் வருவாய் துறை கேள்வி எழுப்பியதன் பின்னரே, இதில் நடந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரத் துவங்கின. இந்த விழாவுக்காக வாங்கப்பட்ட பொருட்கள், அதற்காக செலுத்தப்பட்ட வாடகை என, அனைத்து விஷயங்களிலுமே ஊழல் நடந்துள்ளது.இந்த விவகாரத்தில் பிரிட்டன் ராணியே தனது அதிருப்தியை தெரிவிக்கும் அளவுக்கு ஊழல் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் "ஏ.எம்.பிலிம்ஸ் நிறுவனத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது' என, சுரேஷ் கல்மாடி துவக்கத்தில் மறுத்து வந்தார். தற்போது நிதி விஷயங்களில் கல்மாடிக்கு தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


ஒளிபரப்பு உரிமை வழங்கியதிலும் ஊழல் : போட்டி ஏற்பாடுகள், பொருட்கள் வாங்கியது, துவக்க ஜோதி ஓட்டம் என, அனைத்து விவகாரங்களிலுமே ஊழல் நடந்து, பெரும் களேபரமான சூழல் நிலவிக் கொண்டிருக்கும் நிலையில், இது தொடர்பாக மத்திய தலைமை தணிக்கை கணக்கு அதிகாரி, ஒரு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் மேலும் பல ஊழல் நடந்திருப்பது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. முதலாவதாக, காமன்வெல்த் போட்டிகளை ஒளிரப்பும் உரிமை வழங்கப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை,"பாஸ்ட் டிராக் சேல்ஸ் லிட்.,'என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.  "இந்த நிறுவனம், தனது தொழில்நுட்ப வசதி குறித்த விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் கூட, இந்த நிறுவனத்துக்கு ஒளிபரப்பு உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், காமன்வெல்த் போட்டி நிர்வாக குழுவுக்கு 24.6 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது'என, தெரிவிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டு குழு தலைவர் சுரேஷ் கல்மாடி உள்ளிட்ட மூன்று பேரின் ஆலோசனைப்படி, பாஸ்ட் டிராக் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்ட்டுள்ளது.


விளம்பரதாரர் உரிமையில் ஊழல் : தலைமை தணிக்கை கணக்கு அதிகாரியின் அறிக்கையில், காமன்வெல்த் போட்டிகளுக்கான ஸ்பான்சர்ஷிப் தேர்வு செய்யப்பட்டதிலும் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த "ஸ்போர்ட்ஸ் அன்ட் மேனேஜ்மென்ட்'என்ற நிறுவனம், ஸ்பான்சர்ஷிப்புக்காக தேர்வு செய்யப்பட்டது. நான்கு நிறுவனங்கள் தரப்பில், ஸ்பான்சர்ஷிப்புக்காக விருப்பம் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், ஆஸ்திரேலிய நிறுவனத்துக்கு மிகவும் மலிவாக ஒப்பந்தம் தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைகள் எழுந்ததால், தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.அதேபோல், கடந்தாண்டு அக்டோபரில் லண்டனில் நடந்த துவக்க விழாவுக்கான ஆலோசனைக் குழுவுக்காக "மாக்சம்'என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் தரப்பட்டது. இதற்காக பெறப்பட்ட டெண்டரில் மிக குறைந்த விலையை குறிப்பிட்டிருந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் தரப்படாமல், அதை விட ஐந்து மடங்கு அதிகமாக விலை குறிப்பிட்டிருந்த "மாக்சம்'நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 6.61 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது'என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கல்மாடி குறிப்பிடுகையில்,"இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்ற நிறுவனங்களில், "மாக்சம்'நிறுவனத்துக்கு மட்டுமே, போதிய அனுபவம் உள்ளது. மற்ற நிறுவனங்களுக்கு போதிய அனுபவம் இல்லை. அதனால் தான்  அந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது'என, நியாயப்படுத்தியுள்ளார்.


தர்பாரி நீக்கம் : லண்டனில் நடந்த துவக்க விழாவில் ஊழல் நடந்ததாக தகவல் வெளியானதும், அதற்கு பொறுப்பாளராக இருந்த காமன்வெல்த் ஒருங்கிணைப்பு குழு இணை இயக்குனர் பொறுப்பில் இருந்த தர்பாரி என்பவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இருந்தாலும், இதில் முக்கிய பொறுப்பாளர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


தோண்ட, தோண்ட ஊழல் : காமன்வெல்த் போட்டிகளுக்கு "டிரெட்மில்' வாங்கியது, கம்ப்யூட்டர் வாடகைக்கு எடுத்தது, "ஏசி'மெஷின்கள் வாங்கியது, ஸ்டேடியங்கள் கட்டுமானப் பணி, மேம்பாட்டு பணிகள் என, அனைத்திலுமே ஊழல் நடந்துள்ளது, தற்போது வரிசையாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. காமன்வெல்த் போட்டியின் இன்றைய ஊழல் ஸ்பெஷல் என, கிண்டலடிக்கும் அளவுக்கு தினம் தோறும் அது தொடர்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.  போட்டிகளை நடத்தி முடிக்க 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப் படுகிறது என்றால்,  இதில் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய்க்கு 'ஊழல் நடந்திருப்பது என்பது கடவுளுக்கே வெளிச்சம்.


ஏழைகளின் தேசம் : சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில்,"இந்தியாவில் 40கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கின்றனர்'என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, ஆப்பிரிக்க நாடுகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பீகார் போன்ற மாநிலங்களில் ஒருவேளை உணவு கூட, கிடைக்காமல் பட்டினியால் சாவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது.பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைத்து மக்களுக்கும் உத்தரவாதம் இல்லை. போதிய சுகாதார வசதிகள் இல்லை. வசிப்பதற்கு வீடுகள் இல்லாமல், கழிவு நீர் கால்வாய்களின் ஓரம், ரயில்வே ஸ்டேஷன்கள் மற்றும் பிளாட்பாரங்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கை பல கோடியைத் தாண்டும். ஆனால், "இந்தியா வல்லரசு நாடு'என்ற "பில்டப்'களுக்கு இங்கு பஞ்சமே இல்லை. இதைக் கூறித் தான் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். தற்போது விளையாட்டு போட்டிகள் என்ற பெயரில் பல ஆயிரம் கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதோடு, அதில் தாங்களால் முடிந்த அளவு வாரிச் சுருட்டிக் கொண்டிருக்கின்றனர், ஊழல் பெருச்சாளிகள். இந்த நிதியை வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களின் மேம்பாட்டிற்காக செலவிடலாமே என, நேர்மையாளர்கள் கூறுவதில் நியாயம் இருக்கத் தானே செய்கிறது.


காமன்வெல்த் கூட்டமைப்பு கெடு : போட்டிகள் துவங்க இன்னும் இரண்டு மாதத்துக்கும் குறைவான கால அவகாசமே உள்ள நிலையில், போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காமன்வெல்த் விளையாட்டு  கூட்டமைப்பின் தலைவர் மைக்கேல் பெனல் கூறியுள்ளதாவது:காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் ஊழல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது கவலை அளிக்கிறது. வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் டில்லி வரவுள்ளேன். அப்போது போட்டி நடக்கும் மைதானங்கள் அதற்கு தயார் நிலையில் உள்ளனவா, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என,நேரடியாக ஆய்வு செய்யவுள்ளேன். இதுகுறித்து கல்மாடி 18ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு பெனல் கூறியுள்ளார்.போட்டிகள் நடக்கவுள்ள இன்னும் சில மைதானங்கள் முழுமையாக தயாராகவில்லை. குறிப்பாக, ஹாக்கி போட்டிகள் நடக்கவுள்ள ஸ்டேடியத்தில் பணிகள் முடிவடையவில்லை. மைதானங்களின் தரம் குறித்தும் விளையாட்டு துறை நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். "மைதானங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி, தற்போது தான் நடந்து வருகின்றன. மைதானங்களில் "கன்ட்ரோல்'அறைகள் இன்னும் ஏற்பாடு செய்யப்படவில்லை'என, ஆஸ்திரேலிய அதிகாரி ஜஸ்டின் பவுடன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.


யார் இந்த சுரேஷ் கல்மாடி : தன்மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் சரமாரியாக அள்ளி வீசினாலும், கொஞ்சம் கூட அசராமல் அத்தனையையும் துடைத்து தூர எறிந்து விட்டு, காமன்வெல்த் ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவர் பதவியில் பிடிவாதமாக அமர்ந்து கொண்டிருப்பவர், சுரேஷ் கல்மாடி. இவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது புனே லோக்சபா தொகுதியின் எம்.பி.,இவர் தான். காங்கிரஸ் கட்சி சார்பில் மூன்று முறை ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். மூன்று முறை லோக்சபா எம்.பி.,யாகவும் தேர்வு செய்யப்பட்ட பெருமை இவருக்கு உண்டு. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும் இவர் தான். இந்த பதவிக்கு இவர், நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பர்கத் சிங், சுரேஷ் கல்மாடியை"ஸ்போர்ட்ஸ் மாபியா'என, கடுமையான வார்த்தைகளால் தாக்கிய காலம் உண்டு.


வீணடிக்கப்பட்ட நிதி : *டில்லியில் உள்ள நேரு விளையாட்டரங்கம், காமன்வெல்த் போட்டிகளுக்காக புதுப்பிக்கப்படுகிறது. இதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதி 580 கோடி ரூபாய். தற்போது செலவிடப்பட்டது 890 கோடி ரூபாய்.
*யமுனா ஸ்போர்ட்ஸ் வளாகத்துக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதி 200 கோடி ரூபாய். தற்போது செலவிடப்பட்ட நிதி 300 கோடி ரூபாய்.
*மல்கோத்ரா ஸ்டேடியம் கட்டுவதற்காக ஏற்கனவே 85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கான செலவு 150 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
*தயான் சந்த் ஸ்டேடியத்துக்காக 212 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கு 262 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
*போட்டிகளின் துவக்க விழா, நிறைவு விழாவுக்காக 106 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதற்கான செலவு தற்போது 375 கோடி ரூபாயை எட்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
*உணவு தொடர்பான செலவுக்காக 85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கான செலவும் தற்போது 190 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


கரை கடந்த ஊழல் : *காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்கள் பயன்படுத்துவதற்காக, சாதாரண வகை டாய்லெட் பேப்பர்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த பேப்பர் ரோல் ஒவ்வொன்றும் தலா ரூ.4,138 ரூபாயில் வாங்கப்பட்டுள்ளன. ஆனால், லண்டனில் தயாராகும், மிகவும் தரம் வாய்ந்த டாய்லெட் பேப்பரின் விலை எவ்வளவு தெரியுமா? 160 ரூபாய் தான்.
*டிரெட்மில் மிஷின்கள், 45 நாட்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான வாடகைத் தொகை பத்து லட்ச ரூபாய் என, காமன்வெல்த் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், லண்டனில் விற்பனையாகும் தரமான டிரெட்மில்லின் விலை இரண்டு லட்சம் ரூபாய் தான்.
*அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக குளிர்சாதன பெட்டிகள், தலா 42 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் உள்ள ÷ஷாரூம்களில் குளிர்சாதன பெட்டிகள், 6,000 ரூபாய்க்கே கிடைக்கின்றன.
*காமன்வெல்த் போட்டிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாமல், எஸ்.சி., மற்றும் எஸ்.டி.,பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 244 கோடி ரூபாய், போட்டிகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.
*விளையாட்டு மற்றும் டில்லி நகர கட்டமைப்புகளை தரம் உயர்த்துவதற்காக 7,242 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாவும், இதில் 2,477 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாவும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள நிதி எங்கே போனது?
*காமன்வெல்த் போட்டிக்கான நிதி, முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக 300க்கும் மேற்பட்ட புகர்õர்கள் வந்துள்ளதாக, சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தலையங்கம்: எங்கே அந்த ஆவணங்கள்?

First Published : 10 Aug 2010 12:00:00 AM IST

Last Updated : 10 Aug 2010 03:42:33 AM IST
editorialimg.jpg
ஆங்கிலேயர்கள் நமக்கு விட்டுப்போன சொத்து என்று நாம் மார்தட்டிக் கொள்வதில் ஒன்று இந்திய அரசு நிர்வாகம். எதுவுமே இங்கே சட்டப்படிதான் நடக்கும். தகுந்த குறிப்புகளுடன் இன்ன சட்டப்பிரிவின்படி மட்டுமே எந்த ஒரு முடிவும் எடுக்கப்பட வேண்டும் என்கிற பிரிட்டிஷ் காலத்திய நிர்வாக முறையின் நம்பகத்தன்மையைப் பற்றிச் சிலாகித்துப் பேசாதவர்கள் யாரும் கிடையாது.

 

ஆனால், இந்த பிரிட்டிஷ் காலத்து நிர்வாக முறையையும் நமது சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்கள் தங்களது வசதிக்கேற்ப நீர்த்துப்போகச் செய்து விட்டிருக்கிறார்கள். அதுமட்டுமா? அரசு எடுக்கும் முக்கியமான முடிவுகள் சரித்திர ஆவணங்களாகப் பாதுகாக்கப்பட வேண்டியவை. அதற்காகத்தானே கோப்புகளும், குறிப்புகளும். ஆனால், சுதந்திர இந்திய சரித்திரத்தின் கரும்புள்ளி என்று கருதப்படும் அவசரநிலைச் சட்ட காலத்து ஆவணங்கள் எதுவுமே காணப்படவில்லை என்கிற தகவல் அதிர்ச்சி அளிக்கிறதே...

 

அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள், அமைச்சரவை எடுக்கும் தீர்மானங்கள், ஆணைகள் என்று எல்லா கோப்புகளும் அந்தந்தத் துறையில் 25 ஆண்டுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது விதி. சில முக்கியமான ஆவணங்கள் 25 ஆண்டுகளுக்கு வெளியில் தெரியாமல் ரகசியக் கோப்புகளாகப் பாதுகாக்கப்படும். ஆனால், 25 ஆண்டுகள் கழிந்தால் எல்லா கோப்புகளும் ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதை மக்கள் பார்வைக்கு உள்படுத்தப்பட வேண்டும்.

 

எம்.ஜி. தேவசகாயம் என்பவர் இந்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரி. இவர் அவசரநிலைச் சட்ட காலத்தில் சண்டீகரில் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். அவசரநிலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில விவரங்களைக் கேட்டிருந்தார்.

 

பிரதமரின் அலுவலகத்திடம் இவர் எழுப்பியிருந்த 15 கேள்விகள் அவசரநிலைச் சட்டப் பிரகடனம் பற்றியது. அவசரநிலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கு அரசுத் தரப்பில் கூறப்பட்ட காரணங்கள் என்ன? மத்திய அமைச்சரவையால் அவசரநிலைப் பிரகடனம் செய்வது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டபோது கூடிய அமைச்சரவை உறுப்பினர்கள் யார், அந்தப் பிரகடனத்தின் பரிந்துரை என்ன, யாரால், எப்படி, எப்போது அமைச்சரவையின் பரிந்துரைகள் குடியரசுத் தலைவராக இருந்த பக்ருதீன் அலி அகமதுவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது?

 

அவசரநிலைச் சட்டம் தொடர்பாகப் பிரதமர் அலுவலகத்தில் யார், யார் ஏனைய துறைகளுக்கும், மாநில அரசுகளுக்கும் எப்படிச் செயல்பட வேண்டும், இன்னின்னாரைக் கைது செய்ய வேண்டும் என்கிற ஆணைகளைப் பிறப்பித்தனர். பத்திரிகைத் தணிக்கையை மேற்பார்வை பார்த்தது யார்? "மிசா' தொடர்பான நடவடிக்கைகளை முடுக்கி விட்டது யார்? "மிசா'வில் கைது செய்யப்பட்ட நபர்கள் யார், யார்? எல்லாவற்றுக்கும் மேலாக, அவசரநிலைச் சட்டம் தொடர்பான அத்தனை கோப்புகளும், அந்தக் கோப்புகளில் இருக்கும் குறிப்புகளும் உள்ளிட்ட எல்லா விவரங்களின் நகலும் தேவசகாயத்தால் பிரதமர் அலுவலகத்திடம் கோரப்பட்டிருந்தது.

 

சம்பவம் நடந்து 30 ஆண்டுகளாகிவிட்டதால், அவசரநிலைச் சட்டம் பற்றிய தகவல்களை இனியும் அரசு ரகசியங்களாகக் கருதப்பட முடியாது என்பதும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், தேவசகாயம் கோரிய தகவல்கள் அளிக்கப்பட வேண்டும் என்பதும்தானே நியாயம்? அப்படி அளிப்பதுதானே அரசின் வெளிப்படைத் தன்மைக்கு அடையாளம்? அதற்காகத்தானே தகவல் பெறும் உரிமைச் சட்டமே இயற்றப்பட்டது?

 

பிரதமர் அலுவலகம் தன்னிடம் அவசரநிலைச் சட்டம் பற்றிய தகவல்கள் ஏதுமில்லை என்று கூறி, அவசரநிலைச் சட்டத்தை அமல்படுத்திய மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தேவசகாயம் கோரிய தகவல்களை அனுப்பியது. உள்துறை அமைச்சகமோ, தேவசகாயம் கோரியிருக்கும் தகவல்கள் 25 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், அதனால் தங்களிடம் அவசரநிலைச் சட்டம் தொடர்பான கோப்புகளோ, தகவல்களோ இல்லை என்றும் பதில் அனுப்பி இருக்கிறது. ""1997-ம் ஆண்டு பொது ஆவணச் சட்டத்தின் 5-வது பிரிவின்படி, கோரப்பட்ட தகவல்களும், ஆவணங்களும் தேசிய ஆவணக் காப்பகத்தில் காணப்படும்'' என்று கூறி, அந்தப் பதிலின் நகலை தேசிய ஆவணக் காப்பகத்துக்கும் அனுப்பிவிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.

 

தேசிய ஆவணக் காப்பகத்திலிருந்து தேவசகாயத்துக்குப் பதில் கிடைத்திருக்கிறது. ""முதற்கட்ட ஆய்வில் நீங்கள் கோரியிருக்கும் தகவல்கள் எதுவும் எங்களிடம் காணப்படும் ஆவணங்களில் இல்லை. ஏனென்றால், அவசரநிலைச் சட்டப் பிரகடனம் தொடர்பான  ஆவணங்கள் எதுவும் தேசிய ஆவணக் காப்பகத்துக்கு இதுவரை மாற்றப்படவில்லை'' என்பதுதான் பதில்.

 

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 6(3)-ன்படி எழுப்பப்பட்ட கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைக்காத தேவசகாயம், அதே சட்டத்தின் பிரிவு 18-ன் படி தலைமைத் தகவல் ஆணையருக்கு ஒரு புகார் அனுப்பியிருக்கிறார். என்ன பதில் வருகிறது, என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

 

அவசரநிலைச் சட்டப் பிரகடனம் தொடர்பான கோப்புகளும், ஆவணங்களும் எங்கே? அதை வெளியிட விரும்பாமல் அதிகார வர்க்கமும் அரசும் சாக்குப்போக்குக் காட்டி மறைக்கப் பார்க்கின்றனவா, இல்லை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தொடங்கிப் பல அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் மக்கள் மன்றத்தின் கேள்விகளுக்கு உள்ளாவார்கள் என்பதால் அந்த ஆவணங்களை அழித்தே விட்டார்களா? அழித்தது யார்?

 

ஆவணங்கள் பாதுகாக்கப்படுவதில்லை என்றால் எதற்காகக் கோப்புகளும், குறிப்புகளும்? தகவல் பெறும் உரிமைச் சட்டமே வெறும் கண்துடைப்புத்தானா? அரசு தேவசகாயத்தின் கேள்விகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தலையங்கம்: திசை மாறும் நிதிகள்...

First Published : 05 Aug 2010 12:00:00 AM IST

Last Updated : 05 Aug 2010 12:25:04 AM IST
edits.jpg
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காகச் செலவு செய்யப்பட்ட பணத்தில் ஊழல் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்து, அதை விசாரிக்க தனிக்குழுவும்கூட அமைக்கப்பட்டாலும், இப்போது புதிதாக எழுந்துள்ள இன்னொரு பிரச்னை - தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலவாழ்வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, விளையாட்டுப் போட்டிக்காக தில்லி அரசு திசை திருப்பிவிட்டது என்பதுதான்.

 

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் மாயாவதி இந்தப் பிரச்னையைத் தொடங்கிவைத்து, ரூ. 750 கோடி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காகத் திசை திருப்பிவிடப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார். இதற்கு தில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் மற்றும் தில்லி அரசின் பொதுப்பணித்துறை மற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ராஜ்குமார் சௌகான் இருவருமே "ஒரு ரூபாய்கூட திசை திருப்பப்படவில்லை' என்று மறுத்தார்கள்.

 

இதற்குப் பதிலடியாக, தலித்துகளுக்கான வீடு மற்றும் நில உரிமை இணையம் என்கிற  தன்னார்வ அமைப்பு,  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஏற்கெனவே பெற்றிருக்கும் தகவல்களை வெளிப்படுத்தியிருக்கிறது. இதனடிப்படையில் ரூ. 744.35 கோடி வரை, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான சிறப்பு ஒதுக்கீட்டு நிதி, திசை திருப்பப்பட்டுள்ளது என்பதை இந்த அமைப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது.

 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தில்லி அரசு அளித்துள்ள பதிலின் அடிப்படையில் பார்த்தோமேயானால், 2006-07 முதல் 2010-ம்  ஆண்டு வரை ரூ. 677 கோடி திசை திருப்பப்பட்டுள்ளது. எந்தச் செலவுக்காக என்ற  குறிப்புக்கூட இல்லாமல் ரூ. 66 கோடி சிறப்பு ஒதுக்கீட்டிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. போட்டிகள் தொடங்கும்போது, தில்லி மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ. 178 கோடி பொதுப்பணித் துறை மூலம் எடுத்துச் செலவிடப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறை, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இரண்டுக்கும் ஒரே அமைச்சர் என்பதால் இதில் சிக்கலே எழாமல் நிதி திசை மாறியுள்ளது. போட்டியின்போது குடிநீர்த் தட்டுப்பாடு இருக்கக்கூடாது என்பதற்காக ரூ.3.4 கோடி குடிநீர் வாரியத்துக்கு (இந்தப் பணிக்கும் பொதுப்பணித்துறை மூலம்தான்) பணம் தரப்பட்டுள்ளது.

 

இன்னும் எந்தெந்தப் பணிக்கு எவ்வளவு பணம், எந்தத் தேதியில் எடுக்கப்பட்டது என்கிற புள்ளிவிவரங்களை இந்தத் தன்னார்வ அமைப்பு, அரசு தந்த பதில்களைக் கொண்டே அரசின் மறுப்பை மறுக்கிறது.

 

இவ்வாறு ஒதுக்கீடுகளைச் செலவிடாமல் திருப்பித் தருதல் அல்லது வேறு திட்டங்களுக்குச் செலவிடுதல் போன்றவை நடப்பது புதியதல்ல. இதுஏதோ தில்லியில் மட்டுமே, காமன்வெல்த் போட்டிகளுக்காக மட்டுமே திசை திருப்பப்பட்டது என்று நினைக்க வேண்டியதில்லை. எல்லா மாநிலங்களிலும் மத்திய அரசு தரும் நிதி திசை திருப்பப்படுகிறது.

 

தலைமைக் கணக்குத் தணிக்கை குழுமம் தனது அறிக்கையில் அரசின்மீது குற்றம் கண்டு, கடிந்துகொள்ளும். ஆனால், அது வெளியுலகுக்குத் தெரியவராது. எதிர்க்கட்சிகளும் அதைப் பொருள்படுத்த மாட்டா. தணிக்கை அறிக்கைகளை யாரும் படிப்பதாகவும் தெரியவில்லை. இந்த அத்துமீறல்களுக்குத் தண்டனை உண்டா என்றால் யாரைத் தண்டிப்பது? அதிகாரியையா, அமைச்சரையா? அல்லது ஒட்டுமொத்த அமைச்சரவையையா?

 

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான தேசியக் குழுமம், அதன் தலைவர் பூடா சிங் தலைமையில் சென்ற ஆண்டு தமிழகம் வந்தபோது,தாழ்த்தப்பட்டோருக்கான நல்வாழ்வுப் பணிகளில் சுணக்கம் இருப்பதாக வெளிப்படையாகப் பேட்டியளிக்க, அதற்கு முதல்வரே பதில் அறிக்கை வெளியிடும் நிலைமையும் ஏற்பட்டது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகம் எவ்வளவோ பரவாயில்லை. இருப்பினும்கூட தமிழ்நாடும் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு விதிவிலக்கல்ல.

 

இது வெறும் தாழ்த்தப்பட்டோர் நலத்துறை நிதி என்பதில் மட்டும்தான் திசைமாற்றம் நடைபெறுகிறது என்று நினைக்க வேண்டாம். எல்லாத் துறைகளிலும் இத்தகைய திசை திருப்புதல் நடைபெறவே செய்கிறது.

 

சிக்குன் குனியா நோய்த் தடுப்புக்காக மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்ட பணம், எப்படி டாக்டர்களுக்கு நாற்காலி, மேஜை, மின்விசிறியாக மாறின என்பதுபற்றி ஏற்கெனவே தினமணியில் செய்திக்கட்டுரை வந்துள்ளது. இதுபோன்று, விவசாயத்துக்காக ஒதுக்கப்படும் நிதி, அதே துறையில் வேறு பணிகளுக்குத் திசை திருப்பப்படுவதும், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் அளிக்கப்படும் நிதிகூட பல இடங்களில் வேறு திட்டங்களுக்காக கல்வித்துறையால் பயன்படுத்தப்பட்டிருப்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

 

ஆதரவற்றோருக்குக் குறைந்தவிலையில் அரிசி வழங்க மத்திய அரசு தரும் நிதியை, கிலோ ஒரு ரூபாய் அரிசித் திட்டத்தில் சேர்த்தால், பரவாயில்லை, மன்னிக்கலாம். திசை திருப்பப்படும் பணம் குறைந்தபட்சம் யாருக்காவது பயன்பட்டால்கூட, சரி தொலைகிறது என்று சும்மா இருக்கலாம். ஆனால், அரசு விழாக்களுக்காக அபரிமிதமான செலவில் போடப்படும் மேடை, விருந்து இன்னபிற செலவினங்களை ஈடுகட்டவே பெரும்பாலும் இந்த நிதி திசைமாறுகிற நிலையும் இருக்கிறது என்பதை அறியும்போது, இதை எப்படிச் சகித்துக்கொள்வது?

 

அவ்வப்போது காங்கிரஸ்காரர்கள் மத்திய அரசின் நிதியில் தமிழக அரசு நல்வாழ்வுத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்று சன்னமான குரலில் முணுமுணுக்கிறார்களே தவிர, கூட்டணி தொடர்ந்தால் அடுத்த தேர்தலில் தான் தோற்கடிக்கப்பட்டு விடக்கூடாதே என்கிற பயம், அவர்களைத் துணிந்து இந்தப் பிரச்னை பற்றிப் பேசுவதைத் தடுக்கிறது.

 

மத்திய அரசு எந்த நலத்திட்டத்துக்காக நிதி வழங்குகிறதோ அதை மத்திய அரசின் பெயரில் தனியாகப் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டாமா? மத்திய அரசின் பங்கை மறைத்தாலோ, அல்லது திசைதிருப்பி வேறு அனாவசியச் செலவுக்குப் பயன்படுத்தினாலோ அந்த மாநிலத்துக்குத் திட்டக் கமிஷன் ஒதுக்கீடு செய்யும் தொகையில் பிடித்தம் செய்துகொள்ளும் உரிமையை மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்தால், இத்தகைய முறைகேடுகள் பெரும்பகுதி குறையும். அந்தத் துணிவு இன்றைய மத்திய அரசுக்கு இல்லாததால், கடைத்தேங்காய் வழிப்பிள்ளையாருக்கு உடைக்கப்படுகிறது, வேறென்ன


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

India 78th on Newsweeks Worlds Best Countries list

New York: India ranks 78th on the Worlds Best Countries list compiled by Newsweek magazine,which placed nations on the basis of health,education,economy and politics.
Among Indias neighbours,China is ranked 59th,Sri Lanka is placed at 66th position,while Bangladesh and Pakistan have been placed at 88th and 89th spots respectively.
Japan,South Korea and Singapore are the only three Asian countries in the top 20.
The top four positions go to Finland,Switzerland,Sweden and Australia while the United States comes in at 11th with Germany at 12th and the United Kingdom at 14th.
In Newsweeks first-ever Best Countries special issue,we set out to answer a question that is at once simple and incredibly complexif you were born today,which country would provide you the very best opportunity to live a healthy,safe,reasonably prosperous and upwardly mobile life, writes Rana Foorohar,deputy editor.India is described as a big country with 1.2 billion people with a small per capita income of $1,170 per capita.AGENCIES



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஊழல் நடப்பதைக் கண்காணிக்க ஒரு குழு:
கல்மாடிக்கு காங்கிரஸ் காட்டும் கரிசனம்!

Suresh%202.jpg



இன்னும் ஒரே மாதம்தான் இடையில். திருவிழா தொடங்கிவிடும். ஆனால் டெல்லி மாநகரம் முழுவதுமே ஓட்டை உடைசல்களாக கிடப்பதாக மீடியாக்கள் அலறுகின்றன. காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் கற்பனையில் அடங்காத அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்பதை பத்திரிகைகள் பத்தி பத்தியாக எழுதித் தீர்த்த பின்னர், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் தொண்டை வலிக்க கத்தோ கத்தென்று கத்தி முடித்தபிறகு கடந்த வாரம் பிரதமர் தலைமையில் ஒரு கூட்டம் நடந்தது.

விவகாரம் தலைக்கு மேல் போய்விட்டதை அடுத்து, முதல்நாள் காங்கிரஸ் தலைமை இதுகுறித்து கவலையுடன் ஆலோசனை செய்தபிறகு, அந்தக் கவலைக்கு மருந்து போடும் அக்கறையுடன் அடுத்தநாளன்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

காSuresh%205.jpgமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளை நினைத்து பிரதமர் இவ்வாறு கவலைப்பட்டு கூட்டம் போடுவது முதல் முறையல்ல. ஏற்கனவே 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் இதே கவலைக்காக ஒரு கூட்டம் போட்டு கலைந்தனர். போட்டிக்கான ஏற்பாடுகள் மிகவும் மந்தமாக உள்ளதாகவும், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் ஏற்பாடுகளை முடிப்பதற்காக நான்கு உயர் அதிகாரிகளை ஆர்கனைசிங் கமிட்டியில் நியமித்தும் அந்த கூட்டம் முடிவெடுத்தது. அப்படியெல்லாம் எடுக்கப்பட்ட முடிவால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதாலேயே இப்போது மீண்டும் ஒரு கூட்டம்.

அதைவிட கொடுமை. காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது என முடிவெடுத்தவுடன் கடந்த 2005-ம் ஆண்டு மார்ச் மாதம் 4-ம் தேதி அன்று காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் குழுவை கண்காணித்து ஆலோசனை வழங்குவதற்கு அப்போதைய அமைச்சர் அர்ஜுன்சிங் தலைமையில் 35 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. ராகுல்காந்தி, ரத்தன் டாடா, மல்லையா, பி.டி.உஷா உள்ளிட்ட பலரும் அடங்கிய அந்தக் குழு, ஒரு தடவை கூட இதுவரை கூடவும் இல்லை, ஆலோசிக்கவும் இல்லை. இந்தக் குழு ஒழுங்காக கூடி முறைப்படி ஆய்வுகளை மேற்கொண்டிருந்தால்கூட இத்தனை குளறுபடிகள் நடந்திருக்காது. இதில் விசேஷம் என்னவென்றால், அப்படி ஒரு குழு அமைக்கப்பட்டதே பலருக்கும் மறந்துவிட்டதாம்!

Suresh.jpgஇதெல்லாம் பழங்கதை. கடந்த வாரம் சனிக்கிழை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை விளக்கி பிரதமரின் அலுவலகம் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ‘தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த தண்டனை ஒரு முன்மாதிரியாக இருக்கும். இந்த போட்டிகளை நடத்தப்போகிறதா இல்லையா என உலகமே இந்தியாவை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் கௌரவம் இதில் அடங்கியுள்ளது. எனவே காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் குழுவை கண்காணிக்க அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் இந்தக் குழு துரிதமாக செயல்படுமாம். போட்டிகளை நடத்தி முடிக்க எல்லாவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது. 

காமன்வெல்த் போட்டி விவகாரம் கட்சிக்கும் ஆட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி இமேஜை டேமேஜ் செய்திருப்பதாக காங்கிரஸ் தலைமை கருதுகிறது. போட்டிகள் முடிவடைந்த பிறகு இரண்டு பேரது தலைகள் உருட்டப்படும் என்றும் தெரிகிறது. அந்த இருவரில் ஒருவர் கல்மாடி. மற்றொருவர் ஷீலா தீட்சித். டெல்லி மாநிலத்தின் முதல்வராக மூன்றாவது தடவையாக இருக்கும் ஷீலா, காங்கிரஸ் தலைமையின் குட் புக்ஸில் இருந்ததெல்லாம் அந்தக் காலம் ஆகிவிட்டது. ஷீலா வாங்கித்தரும் கெட்டபெயரைத் தாங்க முடியாமல், உள்துறை இணையமைச்சராக இருக்கும் அஜய் மக்கானை முதல்வராக்க வேண்டுமென குரல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டன.

போட்டிகளை நடத்தி முடித்த பின்னர், குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்களாம். வழக்கமாக எல்லா பிரச்னைகளிலுமே கையாளப்படும் ராஜதந்திர(!) முறையே இது. பிரச்னையை திசை திருப்புவதும், வீரியமான பிரச்னையை ஆறப்போடுவதுமான தந்திரம் இது. மொத்தத்தில் புழுத்து, அழுகிப்போய் இருக்கும் புண் மீது வெறும் புனுகு தடவும் முயற்சி இது.

போட்டி ஏற்பாடுகளில் மிகப்பெரிய தவறுகள் நடந்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. மீடியாக்கள் கிழிக்கின்றன. எதிர்க்கட்சிகள் எடுத்து வைக்கும் வாதங்களால் நாடாளுமன்ற இரு சபைகளும் நாறுகின்றன. கணக்கில் அடங்கா முடைநாற்றம் எடுக்கும் அளவுக்கான தவறுகள் கண்களுக்கு எதிரே தெரிகிறது. இன்றே நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? அதென்ன நாளை தண்டிப்பது? இதில் ஜனாதிபதி தனது பங்கிற்கு இந்த ஆண்டு சுதந்திர தின செய்தியில் ‘ஜீரோ டாலரன்ஸ் டுவேர்ட்ஸ் கரப்ஷன்’ என்கிறார்.

Suresh%204.jpgஇப்படித்தான் சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை எல்லாம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஏதாவது நடந்ததா? பிரச்னைகள் வரும்போதெல்லாம் ஒரு குழுவை அமைப்பது, அப்புறம் இழுத்தடிப்பது பிறகு வேறொரு பிரச்னை வந்தபிறகு அதை மறக்கடிப்பது... இதுதான் நடவடிக்கை போல. கல்மாடி மீது நடவடிக்கை எடுத்தால் கட்சிக்கும் ஆட்சிக்கும் கௌரவப் பிரச்னை ஆகிவிடுமென்றால், மக்களின் வரிப்பணம் கொள்ளை போவதைக் காட்டிலும் அரசாங்கத்தின், கட்சியின் கௌரவம் மிகவும் முக்கியம் என்றாகிவிட்டதா?

ஒட்டுமொத்த ஊழல் மைதானத்துக்குள்தான் காமன்வெல்த் போட்டிகளை இந்தியா நடத்தப்போகிறது என உலகமே கைகொட்டி சிரித்த பிறகும்கூட, கல்மாடி மீது கைவைக்க மனமில்லாமல் அவரை பதவியில் தொடர வைத்துவிட்டு அவரை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படுவது எந்த வகையில் சேர்த்தி?

இந்த நாட்டின் மானம் மரியாதை பற்றியெல்லாம் வாய் கிழிய பேசுபவர்கள் 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதியை மறந்துவிடக் கூடாது. அன்றைக்கு போகாத மானமா இன்னொருமுறை போய்விட போகிறது? இடதுசாரி கட்சிகள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றதால், நம்பிக்கை வாக்கெடுப்பை அன்றைக்கு நாடாளுமன்றம் சந்தித்தது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலருக்கும் விலை வைக்கப்பட்டது. ‘எம்.பி.க்களுக்கு அளிக்கப்பட்ட லஞ்ச பணம் இதுதான்’ என்று சபாநாயகர் முன்பாக கத்தை கத்தையாக கோடிக் கணக்கில் ரூபாய் நோட்டுகளை சபையின் மையத்தில் கொட்டி, மானமும் இன்ன பிறவும் பறக்கவிடப்பட்டது. அத்தனையும் எதற்கு? இதே மன்மோகன்சிங் தலைமையில் நடந்த முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை காப்பாற்றுவதற்கு. அப்படி லஞ்சம் கொடுத்து ஆட்சியில் நீடிக்க விரும்பிய இவர்களிடம் போய், ஊழலுக்கு எதிராக உருப்படியான நடவடிக்கையை எதிர்பார்த்தால்? அப்படி எதிர்பார்ப்பவர்தான் முட்டாள்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Idle ministers cost state 12 cr

Prafulla Marpakwar | TNN

Mumbai: What the central government can do,the state administration can overdo.
The pay bonanza for the nations members of parliament appears a paltry issue when considered that,closer home,the Maharashtra government has been spending Rs 12 crore of taxpayer money every year on its ministers of state without allotting them any work.
It is a fact that while the government has been spending at least Rs 1 crore on every MoS,we have absolutely no official work.No files are marked to us.All the 11 ministers of state had taken up the issue with chief minister Ashok Chavan,but there was no response from him, a minister of state said on condition of anonymity.
Each MoS in the state government gets a bevy of 22 aides and staffers at work and at home,including a private secretary,three personal assistants,two stenographers,eight peons,three telephone operators,two bodyguards and a driver.The staffers salaries range from a meagre Rs 1.8 lakh a year for the driver to a respectable Rs 4.8 lakh for the secretary.But put together,the remuneration bill to keep the 11 idle ministers lives cosy costs the exchequer Rs 5.61 crore a year.
Beyond the staffers,the 11 ministers of state get a host of hefty allowances and perks every year.Each MoS is given a conveyance allowance of Rs 4.8 lakh to keep his two official cars running and another Rs 1.8 lakh to keep his cell phones and landlines ringing.

Pc0011900.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

MONEY FOR NOTHING



Turf war at taxpayers expense



The minister also gets Rs 4.8 lakh as sumptuary allowance to serve visitors tea and snacks,and is put up in a 3,000-sq-ft house with a notional rent value of Rs 36 lakh a year in swish neighbourhoods like Malabar Hill and Nariman Point.
The ministers of state blame their cabinet colleagues for their idle state of affairs,claiming that more than a dozen cabinet ministers have given oral instructions to their department secretaries not to submit any file to the ministers of state.
After the formation of the government,we were expecting the cabinet members to give us some work,but so far,for obvious reasons,nothing has been done, an MoS said.Since there is no response from Chavan despite reminders,Congress ministers will meet the AICC general secretary and NCP members will meet Sharad Pawar. 
MoS Fauziya Khan,who holds eight sensitive portfolios including school education,women and child welfare,said that ministers of state should be involved in the governments decision-making process.
Work allocated to me by the cabinet minister for minorities is shocking.The minister has directed that proposals pertaining to the Sachar committee and 15-point PM programmes be submitted directly to the minister.Such an order is humiliating.I will take the issue up with the chief minister, Khan said.
Khans colleagues face the same slights everyday.Vijay Wadettiwar,the minister of state for finance and planning,was never involved in authoring the state budget.
A month ago,when Ramesh Bagwe (home) had hinted that Pune police commissioner Satyapal Singh would be removed,the minister of state knew that it was beyond his powers.
Bhaskar Jadhav,the MoS for urban development,too,was recently reminded of the limits to his authority when he declared that the state government would provide free houses to Mumbais mill workers.Soon after,the chief minister stepped in,declaring there was no such proposal before his government.
About a month ago,Varsha Gaikwad visited JJ hospital in her capacity as the minister of state for medical education,but was unable to pass any orders despite the presence of nearly 100 officials in the meeting.
Ministers said the skewed work distribution started after the Sena-BJP government came to power in 1995.There was a perennial power game being played between the coalition partners,and many in the government felt that the ministers of state would assume excessive power if allocated any work.The Congress-NCP alliance,in theory distributed work evenly after coming to power in 1999,but never implemented it.
We have absolutely no powers,but at the same time,we are made accountable when it comes to replying to the questions in the state legislature.We want Chavan to restore pre-1995 status, a minister of state said.

Pc0051000.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

போஸ்ட் ஆபீஸ்களில் உபசரிப்பு நிதி ஊழல்!
சாட்டையை சுழற்றுவாரா சிதம்பரம்?

Kishore.jpg



ஸ்பெக்ட்ரம் பூதமே இன்னும் அடங்காத நிலையில்... மத்திய அமைச்சரான ஆ.ராசாவின் தகவல், தொழில்நுட்பத் துறையில் அடுத்த பூகம்பம் கிளம்பியுள்ளது. இந்திய அஞ்சலகங்களில் நடந்துள்ள பலகோடி ரூபாய் உபசரிப்பு நிதி மோசடிதான் அந்த அடுத்த பூதம்.

இதுபற்றி அஞ்சல் அலுவலக வட்டாரங்களில் விசாரித்தோம்.
Kishore%201.jpg
‘‘நாடு முழுதும் 1 லட்சத்து 35 ஆயிரம் அஞ்சலகங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 111 தபால் நிலையங்களில் 702 அஞ்சலகங்களில் வெஸ்டர்ன் யூனியன் மணிலிங்க் அதாவது, இண்டர்நேஷனல் மணி ட்ரான்ஸ்பர் வசதியுள்ளது. மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்கள், தாலுகா, யூனியன் தலைநகர் போன்ற நகரங்களில் உள்ள அஞ்சலகங்களில் வெஸ்டர்ன் யூனியன் மணிலிங்க் என்ற திட்டம் சமீப காலமாக நடைமுறையில் உள்ளது.

நமது அன்னியச் செலவாணி ஹவாலா பரிமாற்றத்தால் சூறை-யாடப்படுவதை தடுக்கவே மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் உள்ள தங்களது உறவினர்களுக்கு அனுப்பும் பணம் அடுத்த நிமிஷமே பட்டுவாடா செய்யப்பட்டுவிடும்.

இத்திட்டத்தில் வாடிக்கையாளர்களை கவர, அஞ்சலகங்களுக்கு பணம் எடுக்க வரும் ஒவ்வொருவருக்கும் 10 ரூபாயை உபசரிப்பு நிதியாக செலவழிக்கலாம் என மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. இந்த பத்து ரூபாயில், டீ, காபி, பிஸ்கட், குளிர்பானம் இதில் ஏதாவது ஒன்றை வாங்கி கொடுத்து உபசரிக்கலாம் என்பதுதான் அரசு ஆணை. இதன்படி, இந்தியாவிலுள்ள ஒவ்வொரு வெஸ்டர்ன் யூனியன் மணிலிங்க் அஞ்சலகத்துக்கும் லட்சக்கணக்கான ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இந்த உபசரிப்பு நிதியைத்தான் தலைமை தபால்துறை அதிகாரிகள் வாடிக்கையாளர்களுக்கு உபசரிப்பு செய்யாமலேயே தங்களுக்குத் தாங்களே உபசரித்துக்கொண்டுள்ளனர்’’ என்றனர்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, சிவகங்கை தலைமை தபால் அலுவலகத்தில் நடந்த மோசடியை நம்மிடம் விவரிக்க ஆரம்பித்தார் காளக்கண்மாயைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்.

‘‘எனது சகோதரர் சிங்கப்பூரில் உள்ள பிரபல ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் எனக்கு அனுப்பிய பணத்தை பெறுவதற்காக சிவகங்கை தலைமை தபால் அலுவலகத்திற்கு சென்றேன். ரேஷன்கார்டு, எனது சகோதரர் சொன்ன ரகசிய குறியீட்டு எண்ணை எல்லாம் சொல்லியவுடன், கால் மணிநேரம் காத்திருக்க வைத்து பணத்தைக் கொடுத்தார்கள். உடனே எனது சகோதரருக்கு போன் போட்டு பணம் கிடைத்த விபரத்தை சொன்னேன். அவர்தான், போஸ்ட் ஆபீஸில் உனக்கு டீ, காபி, கூல்ட்ரிங் ஏதும் வாங்கி கொடுத்தார்களா எனக் கேட்டார். நான் இல்லை என்று சொன்னேன்.

Kishore%203.jpgஅதன் பிறகுதான், எனது சகோதரர் உபசரிப்புநிதி விஷயத்தை என்னிடம் கூறினார். இதே போல வெஸ்டர்ன் மணி லிங்க்கை பயன்படுத்தும் என் நண்பர்கள் 20&க்கும் அதிகமானோருக்கு உபசரிப்பு நடக்கவேயில்லை’’ என்றார். 

பாலகிருஷ்ணனின் நண்பர் சிவா மூலம் இந்தத் தகவல் தெரியவர ‘வெஸ்டர்ன் மணி லிங்க்’ உபசரிப்பு நிதி பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சில தகவல்களைப் பெற்றுள்ளார் வழக்கறிஞர் சரவணன். அவரிடம் பேசினோம்.

‘‘இந்த உபசரிப்பு நிதி பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 78 கேள்விகளை கேட்டு தபால்துறை தகவல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பினேன். அவர், ‘உபசரிப்பு நிதியை செலவு செய்யும் அதிகாரம் சம்மந்தப்பட்ட போஸ்ட் மாஸ்டர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குரிய சிறப்பு அதிகாரப்படி இதை செலவழிப்பார்கள்’ என மழுப்பலான பதிலை அனுப்பினார். சிறப்பு அதிகாரம் பயன்படுத்த போஸ்ட் மாஸ்டர்கள் ஒன்றும் நீதிபதிகள் அல்ல. எனவே, இதைப் பற்றி மேலும் சில விளக்கம் பெற சிவகங்கை தலைமை தபால் அதிகாரி உஷாவை சந்தித்தேன். அவர் வாயே திறக்க மறுத்துவிட்டார்.

இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி வெகு விரைவில் உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்போகிறேன்’’ என்ற சரவணன்,

Kishore%204.jpg‘இந்த உபசரிப்பு மோசடி விவகார ஊழல் தபால் துறையில் பணிபுரியும் எனது மனைவி நதியா மூலமாகத்தான் லீக் செய்யப்பட்டு விட்டதாக ஆத்திரமடைந்துள்ளார் தலைமை தபால் அதிகாரி உஷா. இதனால், உடனடியாக நதியாவை கர்ப்பிணி என்றும் பாராமல் டாய்லெட் வசதியே இல்லாத கீழ்பூங்குடி, மதகுபட்டி போன்ற இடங்களுக்கு டெபுடேஷன் என்ற பெயரில் அடுத்தடுத்து மாற்றி பழிவாங்கி-யுள்ளார்’’ என்று வேதனையுடன் கூறினார். 

நாம் தலைமை தபால் அதிகாரி உஷாவை நேரில் சந்தித்து, ‘உபசரிப்பு நிதி’ பற்றிக் கேட்டோம். 

‘‘இதெல்லாம் உங்களுக்கு சொல்லவேண்டும் என்ற அவசியம் ஒன்றுமில்லை. எதுவானாலும் சிவகங்கை மாவட்ட தபால்துறை தலைமை கண்காணிப்பாளர் குழந்தைசாமியிடம் கேளுங்கள்’’ என்றார். 

நாம் குழந்தைசாமியை தொடர்பு கொண்டு கேட்க, ‘‘இதைப் பற்றியெல்லாம் கேள்வி கேட்க உங்களுக்கு அதிகாரமில்லை. இங்கு அப்படி யாரும் சுருட்டவில்லை’’ என்று மறுத்தார்.

இந்த நிலையில், திருவாடானை தபால்நிலையத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 1 லட்ச ரூபாய் உபசரிப்பு நிதியில் ஊழல் நடந்துள்ளது என , தேசிய தபால்துறை ஊழியர்கள் கூட்டமைப்பில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்துக்கே மனு அனுப்பியுள்ளார்கள்.

சி.பி.ஐ.யை கையில் வைத்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனது தொகுதியில் நடந்துள்ள உபசரிப்பு நிதி ஊழல் மட்டுமின்றி இந்தியா முழுதும் விசாரித்தால்... ஸ்பெக்ட்ரம் ஊழலை போல் இந்த ‘உபசரிப்பு நிதி’ ஊழலும் சர்ச்சைகளைக் கிளப்பினால் ஆச்சர்யமில்லை!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Raja approved all contentious 2G spectrum decisions: CAG

Josy Joseph | TNN

New Delhi: The Comptroller and Auditor General (CAG) has submitted damning details of minister for communications and IT A Rajas involvement in the controversial 2G spectrum allocation of January 2008.It has found his approval and signatures in almost all key decisions that resulted in nine telecom companies being allotted spectrum without transparent procedures.
In a case where allegations have been levelled that spectrum was allocated at vastly undervalued prices and that some companies seemed to have an inside track on developments,CAGs draft report and key documents are now with Rajas ministry awaiting explanations before the audit report can be finalised.
The documents were sent to the communications ministry in the third week of July.The ministry,which was quick to respond to CAGs initial observations,has now sought six weeks from the audit agency.When the initial draft report reached the ministry,it offered standard explanations within a few days.
But now CAG has sent its entire set of key documents running into a few hundred pages that allegedly prove Rajas direct involvement in the decisions.The communications ministry,in the meanwhile,has obtained a law ministry opinion saying the CAG could not question policy decisions.
While issues like first-come,firstserve can be said to be policy decisions,this may not be enough for Raja to defend himself if details of the CAG audit accessed by TOI are anything to go by.Raja was not available for comments,despite calls and text messages to his phone from TOI.
The auditor has found that operators who benefited were able to arrange and submit high value demand drafts within 45 minutes of the press release being uploaded.

RINGING TROUBLE


According to CAGs draft report,Raja approved almost all controversial decisions of 2G spectrum allocation Approved issue of the now infamous press release on January 10,2008,on first-come,first serve basis for allocation of licences The minister himself cleared the noting for the allocation of 2G spectrum to all the nine companies Decided on various cut-off dates in 2007,and later in January 2008,which favoured select companies First-come,first-serve was never DoTs policy for granting licences,contrary to Rajas claims

Pc0012200.jpg
A Raja

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

RINGING TROUBLE 


2G allocation at 01 rates not justifiable

New Delhi: The 2008 2G spectrum allocation scam is unravelling.The Comptroller and Auditor General (CAG) has found communications and IT minister A Rajas involvement in virtually all key decisions on allocation.
Rajas approval to almost all controversial decisions of the 2G spectrum allocation include: 
Raja personally approved issue of the now infamous press release on January 10,2008,on first-come,first serve basis for allocation of licences,and giving operators just an hour's window to deposit demand drafts between 3.30 and 4.30 pm.The press release also advanced the cut-off date for submission of applications to September 25,2007.
Minister's instruction to issue the controversial press release was given on the same day,January 10.Raja approved and cleared the noting for the allocation of 2G spectrum to all the nine companies.
Raja personally decided on various cut-off dates in 2007,and later in January 2008,which favoured select companies.
First-come,first-serve was never DoT policy for granting licences,contrary to Raja's claims.It was policy only for release of spectrum after licences were granted.
Some of the drafts were made in Mumbai,showing that they seemed to have prior information about Raja making his ministry issue the controversial press release giving just an hour to potential bidders.In the normal course,they couldn't have arranged such high value drafts in such short time.
The CAG audit found the decision to alter 2007 TRAI recommendation that there be no cap on number of licences was never sent back to the regulator for approval.Member (finance) of Telecom Commission Manju Madhavan had raised serious objections on file about proposals mooted by Raja for 2G spectrum allocation.
She was endorsed by the then secretary telecom D S Mathur,according to CAG findings.Incidentally,both Mathur and Madhavan left the department on December 31,2007.In the next ten days,the entire allocation went through.
The CAG has also faulted Raja's contention that spectrum was allotted at 2001 rates.Allotting spectrum in 2008 at a price fixed in 2001 cannot be justifiable.In 2001,there were only 4 million mobile subscribers and it rose above 300 million in 2008,the audit said.
The draft report also raised serious questions about the arbitrariness in the allocation of pan-India dual technology licence to Reliance Communications.The audit found that Reliance was granted the licence a day before it was announced.

Pc0091500.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Fire at DRI secret room,phone tap records destroyed

Pradeep Thakur | TNN

New Delhi: A fire at the headquarters of Directorate of Revenue Intelligence (DRI) on Tuesday night might have destroyed sensitive electronic data on financial frauds and records pertaining to tapped-phone conversations,including some politically sensitive cases.
The fire broke out,according to sources,in the Interception Room also known as DRIs secret room at its 7th floor headquarters in the drum-shaped building at Indraprastha Estate in the Capital.
The fire brigade was informed at 10.28 pm and six fire tenders were d e s p at ch e d but the flames were doused using internal resources at the DRI office by 11.30 pm.No external fire safety measures was used,according to a fire brigade official.
But before the fire was doused,the blaze destroyed interception equipment and computers that stored sensitive data relating to money laundering,drug syndicates and foreign trade.
DRI has also been involved in investigation of politically sensitive cases and has provided inputs to other investigative agencies such as CBI and Enforcement Directorate.These have been part of the case files dealing with high net-worth individuals.
This may call for a fullfledged investigation by Intelligence Bureau as none of the other rooms seem to have suffered any impact while nothing of the stored intercepted data could be saved in the fire that damaged all the computers in the so-called secret room.
DRI is currently headless with a member of the Central Board of Excise and Customs holding additional charge 
s i n c e March.
Some of the corporate frauds DRI has pursued in the last few years ran into thousands of crores.
It had also recently provided inputs to the government on Dawood gang on latters operation in Pakistan and also its contacts in India.Besides financial frauds,the DRI closely monitors terrorist and narcotics activities and keeps a close watch on export oriented units that may be misused by these terror and anti-national outfits to channel funds for their sleeper cells operating in the country.
In the past few years it had successfully neutralized several such terrorist and narcotics syndicates having links with Pakistan,Bangladesh,UAE and Nepal.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20100904a_008101008-surangam.jpg?w=300&h=217

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மோடி, மஸ்தான்!

Carkodan.jpg

 



மோடி, மாடி என்று பெயர் வைத்திருப்பவருக்கொல்லாம் சனிதசை போலத்தெரிகிறது. முதலில் லலித்மோடி. ஐ.பி.எல். என்ற சர்வதேச சூதாட்டத்தின் சூத்திரதாரி. கிரிக்கெட் விளையாட்டின் மேல் உண்மையான ஈடுபாட்டுடன் கபில்தேவ் ஆரம்பித்து வைத்த ஐ.சி.எல். என்ற அமைப்பை முகர்ந்து பார்த்து அதில் பல்லாயிரக்கணக்கான கோடிகள் பண்ண முடியும் என்பதைப் புரிந்துகொண்டு ஐ.பி.எல். என்ற அமைப்பை உருவாக்கினார். ஒரிஜினலைப் போட்டுத்தள்ள வேண்டுமானால் பவர் சென்டர்களின் துணை வேண்டுமே என்று பவாரைப் பிடித்தார். 

Carkodan%201.jpgசரத்பவார் தலைமை வகித்த இந்திய கிரிக்கெட் வாரியம் லலித் மோடியின் பிடிக்குள் வந்தது. ஏற்கனவே கிரிக்கெட்டைப் பணங்காய்ச்சி மரமாக ஆக்கிவைத்திருந்ததால் மாநில கிரிக்கெட் வாரியங்களின் முக்கியப்புள்ளிகள் லலித்மோடியின் கோஷ்டி கானத்தில் சேர்ந்தனர். தயாராயிற்று யீஷீஷீறீ - ஜீக்ஷீஷீஷீயீ மாஸ்டர் பிளான். அதுதான் ரசிகர்களை யீஷீஷீறீ ஆக்கும் பிளான். மேற்கத்திய நாடுகளில் கால்பந்து விளையாட்டில் மட்டுமே இருந்த ஏலமுறை முதன் முதலாகக் கிரிக்கெட்டில் வந்தது. சரத்பவாரை வைத்து மத்திய அரசாங்கத்தை சரிக்கட்டினார் மோடி. இத்தனைக்கும் இவர் பி.ஜே.பி. தொடர்பு அதிகமிருப்பவர். பல்லாயிரக்கணக்கான கோடிகள் புழங்கும் மிறிலி சூதாட்டத்தில், மோடி மற்றும் அவரது முக்கியக் கூட்டாளிகளின் பாக்கெட்டில் வெவ்வேறு போலி நிறுவனங்களின் பெயர்களில் பல நூறு கோடிகள் மறைந்தன. தமிழ்நாட்டு நிறுவனம¢ உட்பட பல தனியார் தொழில் நிறுவனங்கள் இந்த ‘விளையாட்டுக்கு’த் துணை போயின. பல ஆண்டுகள் முறையாகத் தொழில் செய்து சிரமப்படாமல், குறுக்கு வழியில் சுலபமாகச் சம்பாதிக்கும் எண்ணம் வியாபார நிறுவனங்களுக்கு அமைந்தது மோடியின் பலம்.

Carkodan%204.jpgஆனால், இந்த பேராசைக் கூட்டணியில் வழக்கம்போல பிளவு ஏற்பட்டவுடன் மோடி ‘வெளுக்கப்பட்டார்’. என்ன ஆச்சர்யம்... தோளில் கைபோட்டு நின்ற அத்தனை தோழர்களும் மோடியை துரோகியாக்கி தங்களைப் புனிதப்படுத்திக்கொண்டனர். மோடியுடன் ஒரே தட்டில் பலகாரம் தின்ற பண்டாரங்கள் அத்தனை பேரும் தாங்கள் தப்பிப்பதற்காக மோடியை சிலுவையில் அறைந்தார்கள். பல்லாயிரக்கணக்கான ரெக்கார்டுகளை சி.பி.ஐ. முன் மோடி வைத்து வாதாடினாலும் கதவிடுக்கில் மாட்டிய எலியாகிவிட்டார். கதவைச் சாத்துவது, கூடவே உட்கார்ந்து கும்மியடித்த சக எலிகள் என்னும்போது மோடி பிழைப்பது கடினம். சரத்பவார் சார்ந்திருக்கும் சோனியா சர்க்கஸ் கூட்டணியும் மத்திய அரசும் தப்பிக்க வேண்டுமானால் லலித்மோடியைக் காவு கொடுத்தாக வேண்டும். இந்த அழகில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களை ஏலம் எடுத்ததில்(!) ஊழல் (யீவீஜ்வீஸீரீ) என்று தமிழ்நாட்டுத் தொழிலதிபரின் பேரில் மோடி சில ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுகிறார். பிறந்த வீட்டுப்பெருமை உடன் பிறந்தவனுக்குத்தானே தெரியும்! 

அதுசரி & தனியார் பணத்தையும் ரசிகர்கள் பணத்தையும் மிறிலி என்ற மெகா சூதாட்டத்தில் கபளீகரம் செய்த ‘மோடிக்கு’ இந்த ட்ரீட்மென்ட் என்றால் அரசாங்கத்தின் பணத்தை & மக்களின் பணத்தை நேரடியாக, அப்பட்டமாகக் கபளீகரம் செய்த ‘மாடி’யை என்ன செய்தார்கள்? அவர் நேரடி காங்கிரஸ்காரர் என்பதால் ஒன்றும் செய்யவில்லை. பல கோடிகளை வாரிச் சுருட்டிய சுரேஷ் கல்மாடி கையும் களவுமாகப் பிடிக்கப்பட்ட பின்னும் அவருக்கு பல்லக்குத்தூக்க பிரதமரே முன் வருகிறார். மோடியை சஸ்பெண்ட் செய்ய கிரிக்கெட் வாரியத்துக்கு இருக்கும் தைரியமும் ஆண்மையும் மத்திய அரசாங்கத்துக்கு இல்லை. கல்மாடி ஒன்றும் காங்கிரஸின் மூத்த தலைவரில்லை. பின்னே ஏன் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் முதல் அத்தனை மத்திய தலைவர்களும் கல்மாடி விஷயத்தில் கண்ணாமூச்சி விளையாடுகின்றனர்? காமன்வெல்த் விளையாட்டு துவக்கவிழா மண்டபம் கட்டுமானத் தரக்குறைவால் தரைமட்டமான பின்னும் கல்மாடியை மேல்மாடியில் உட்கார வைத்துவிட்டு பிரதமரே விளையாட்டு அரங்க வேலைகளை மேற்பார்வை செய்ய வேண்டிய கட்டாயமென்ன? இந்தியர்களுக்கு இப்-போது ஏற்பட்டுள்ள தலை-குனிவு காமன்வெல்த் விளையாட்டு முடிவதற்குள் இன்னும் எவ்வளவு கேவலப்படுமோ?

Carkodan%203.jpgலலித் மோடியை போட்டுத்தள்ளித் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள கிரிக்-கெட் வாரியக் கூட்டணி செயல்படுகிறது. கல்மாடியைக் காப்பாற்றித் தங்களையும் காத்துக்கொள்ள மத்திய அரசின் சில அங்கங்கள் முற்படுகின்றனவோ என்ற சந்தேகத்திற்கு இடமிருக்கிறது. கல்மாடியை சஸ்-பெண்ட் செய்துவிட்டு முழுதாக விசாரணை செய்வதுடன் மோடி, கல்மாடி மூலம் மக்கள் இழந்த பணத்தை இந்த மோசடிக் கூட்டணிகளிலிருந்து மீட்க அரசு முயற்சி செய்யாத வரையில் மத்திய அரசாங்கமே இந்த விவகாரங்களில் முழுக்குற்றவாளி.

இந்த லட்சணத்தில் தாழ்த்தப்பட்ட-வர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட சுமார் 700 கோடி ரூபாய், காமன்வெல்த் விளையாட்டிற்காகச் செலவிடப்பட்டதாம். உள்துறை மந்திரி ப.சி. தைரியமாகச் சொல்கிறார். காபினட், நாடாளு-மன்ற ஒப்புதல்கள் எதுவுமில்லாமல் தாழ்த்தப்பட்டவர்கள் பணம் இப்படி கபளீகரம் செய்யப்பட்டதற்குப் பிரதமர் பொறுப்பேற்க வேண்டும். அந்தச் சொரணை அவருக்கில்லாவிட்டால் இப்படிப்-பட்ட-வர்களை ஆட்சியில் வைத்ததற்கு நாம்தான் வெட்கப்படவேண்டும்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

SC free grain for poor advice may get govts snub

Dhananjay Mahapatra | TNN

New Delhi: The policy standoff between the Supreme Court and the Centre over food security is likely to deepen on Monday,with the latter set to either side-step or brush aside or openly disagree with the apex courts suggestions,especially the one for free distribution of foodgrain rotting in FCI and government godowns to the poorest of the poor.
A late evening meeting on Sunday to prepare the response to the SCs August 31 order on the working of public distribution system decided that the government should tiptoe around SCs suggestion to give foodgrain free to the poor and hungry rather than waste it.
In the response it is to give to the court,government will give details of the wastage of foodgrain in government godowns,and will attempt to rationalise it saying some wastage,given the huge procurement over the last three years,is inevitable.
The government,however,will avoid a direct response to the courts suggestion for free distribution of foodgrain.According to sources,it plans to tell the court that it has,at the courts instance,decided to release an additional 25 lakh tonnes of PDS foodgrain for BPL families for six months.A decision on the issue will have to wait till National Advisory Council has worked out the details of the proposed National Food Security Act.

Policy Standoff


SC on August 31 said foodgrain rotting in govt godowns should be distributed free to the poor The government on Monday is set to either sidestep or brush aside or openly disagree with the courts suggestions It is likely to say that some wastage,given the huge procurement over the last three years,is inevitable


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Foodgrain procurement: Centre not ok with SC order

New Delhi: The Centre,through additional solicitors general Mohan Parasaran and Harin Raval,plans to tell the SC that APL families were being given foodgrain only after meeting the needs of Antyodaya Anna Yojana (AAY) and BPL families.
Centre has also decided to make plain its disagreement with another suggestion of the court: not to procure foodgrain beyond storage capacity so that wastage could be avoided.
The Centre again said it was impossible to limit procurement as by doing this it will hurt the Centres policy to give attractive price to farmers and encourage them to grow more foodgrain.
If the procurement was limited to the storage capacity,then the farmers would be left to the mercy of traders who would not pay remunerative prices adversely affecting the cropping pattern in future,government is likely to argue.
It will stress that all attempts would be made to increase storage capacity rather than limit procurement of foodgrain.
On SCs suggestion to carry out a fresh survey to identify exact number of AAY,BPL and APL families to understand the requirement of foodgrain for these families,the Centre said survey was the responsibility of the state governments and they have already been asked to do so by the Planning Commission.
Importantly,the SC had asked ASG Parasaran on August 31 to take instructions from the highest level and not from bureaucrats while formulating answers to its suggestions in the order.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Did new CVC Thomas try to bar probe into 2G spectrum scam

Manoj Mitta | TNN

New Delhi: Less than a month before he became chief vigilance commissioner,P J Thomas had,in his earlier avatar as telecom secretary,signed a note seeking the law ministrys opinion on whether the CAG can audit the 2G spectrum scam on the ground that it was all about policy formulation.The note dated August 12,along with the response it evoked from the Law Ministry the very next day,exposes Thomass conflict of interest in his new office.For,his predecessor in the CVC,Pratyush Sinha,had referred the same scam last year to CBI for criminal investigation,evidently convinced that the spectrum allocation on first-come-firstserved basis involved more than just policy decisions.
In contrast,the note signed by Thomas said that telecom minister A Raja had asked for the Law Ministrys opinion on whether the proceedings initiated by the CAG to audit the licensing and allocation of 2G spectrum were `` legally in order.The burden of the twopage note,in possession of TOI,is that the draft performance audit report sent by the CAG in July had challenged several policy decisions taken by the government.
In its seven-page response on August 13,the law ministry implicitly accepted the telecom departments attempt to portray all questions about the 2G spectrum allocation as an interference with the governments prerogative to lay down the policy.As a corollary,the law ministry held that the 2G spectrum controversy was beyond the jurisdiction of not only the CAG but also the CVC.
Thus,when Thomas was its secretary,the telecom department questioned the legality of the CAG probe into the 2G spectrum scam on the basis of the law ministrys opinion that the CAG Act 1971 did not provide it with `` any duty or power to question the wisdom of the policy /law makers as policy decision may involve trial and error theory.Significantly,the exercise of consulting the law ministry has also prepared the ground for the telecom ministry to challenge the legality of the ongoing CBI investigation prompted by the CVCs recommendation.For,the law ministrys opinion made it clear that whatever it said about the limitations of CAGs powers in the context of the 2G spectrum allocation applied as much to the parallel probe by the CBI,which had been initiated at the instance of the CVC.
CAG,CVC and other watchdog (sic) no doubt play a very significant role in any democracy but they being constitutional /statutory functionaries cannot exceed the role assigned to them under the Constitution /law, said the law ministrys opinion.The opinion obtained by Thomas said that the CVC,empowered to probe corruption complaints against public servants,has not been assigned any functions or powers to issue directions relating to any policy matters.
If he retains this view as the new head of the CVC,it will put a question mark on the CBI probe in the course of which the headquarters of the telecom department had already been raided.

Pc0121200.jpg
NEW ROLE: President Pratibha Patil and P J Thomas during the oath taking ceremony of the latter as the Central Vigilance Commissioner at Rashtrapati Bhawan in New Delhi on Tuesday




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

"2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கும் தாமஸூக்கும் தொடர்பில்லை'

First Published : 09 Sep 2010 02:05:03 AM IST


புது தில்லி, செப்.8: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக (சிவிசி) நியமிக்கப்பட்டுள்ள பி.ஜே. தாமஸýக்கு 2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் தொடர்பு கிடையாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

 

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமிப்பது தொடர்பான மூவர் குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவில் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

 

இப்பதவிக்கு மூன்று பேர் பரிசீலிக்கப்பட்டனர். இதில் சுஷ்மா ஸ்வராஜ் பரிந்துரைத்த நபரை மத்திய அரசு ஏற்கவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இந்த பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னரே தாமஸ் குறித்து அனைத்து தகவல்களையும் அரசு திரட்டியுள்ளது. அப்போது அவர் மீது எவ்வித குற்றச்சாட்டும் கூறப்படவில்லை. எனவே இப்போது பாஜக கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

 

தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலராக தாமஸ் நியமிக்கப்பட்டபோது, 2-ஜி ஸ்பெக்டம் தொடர்பான குற்றச்சாட்டுகள் வெளியாயிருந்தன என அரசு தெரிவித்துள்ளது.

 

ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் தாமஸ் என்று சுஷ்மா ஸ்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

 

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு வரவேண்டிய வருமானம் குறைந்தது தொடர்பாக தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) குறை கூறியிருந்தார். அரசின் கொள்கை முடிவில் சிஏஜி தலையிட அதிகாரம் உண்டா? என தொலைத் தொடர்பு துறை தனது சட்ட ஆலோசகரிடம் கருத்து கேட்டிருந்தது. இத்தகைய கருத்தை அத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் கேட்டதால், செயலர் இதற்கான கடிதத்தை அனுப்பியிருப்பார் என்று தெரிகிறது.

 

"மெகா' போஃபர்ஸ்: 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டை பாஜக "மெகா போஃபர்ஸ்' என வர்ணித்துள்ளது. ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே. தாமûஸ நியமித்ததன் மூலம் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்க அரசு முயற்சிக்கிறது என்றும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி தொலைத் தொடர்புத்துறை ஒரு சுற்றறிக்கையை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளது. இதில் 2-ஜி ஒதுக்கீடு என்பது அரசின் கொள்கை முடிவாகும். இதில் தலையிட மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமோ அல்லது தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியோ தலையிட முடியாது என்று குறிப்பிட்டுள்ளதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

மேலும் மத்திய தொலைத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவோ அடிக்கடி தான் பிரதமரின் வழிகாட்டுதலின்பேரில் செயல்படுவதாக மிகவும் பாதுகாப்பாக தப்பித்துக் கொள்கிறார். இதன் மூலம் இந்த ஊழலில் பிரதமருக்கும் தொடர்புள்ளது என்பதை உறுதிப்படுத்தி வருகிறார்.

 

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை எனும்போது 3-ஜி ஒதுக்கீட்டுக்கு ஏலம் நடத்தியது ஏன்? என்றும் ஜவ்டேகர் கேள்வியெழுப்பினார்.

 

பி.ஜே. தாமஸ் பதவியேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடந்தது. அந்த நிகழ்ச்சியை சுஷ்மா ஸ்வராஜ் புறக்கணித்ததோடு, குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை நேரில் சந்தித்து தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

13_09_2010_001_043-cvc.jpg?w=116&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

13_09_2010_009_011-marana.jpg?w=300&h=156

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலம்: ஆ. ராசாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

First Published : 14 Sep 2010 12:37:38 AM IST

Last Updated : 14 Sep 2010 12:45:10 AM IST
raja.jpg
புதுதில்லி, செப். 13:  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விற்பனை ஊழல் வழக்கு தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. சிபிஐ, அமலாக்க இயக்குநரகம், வருமான வரித்துறை ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதற்கான உத்தரவை பிறப்பித்தது.  இந்த நோட்டீஸýக்கு 10 நாட்களுக்குள் பதில் தாக்கல் செய்யவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

பொது நல வழக்குகள் மையம் உள்ளிட்ட சில அமைப்புகள் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தன. அதன் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

2008ல் நடந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டு உரிம விற்பனையில் மத்திய அமைச்சர் ராசாவுக்கு உள்ள தொடர்பு பற்றி சிபிஐ விசாரிப்பதை கண்காணிக்க உத்தரவிடவேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் மே 25ம் தேதி தள்ளுபடி செய்தது சரியானதல்ல என மனுதாரர்கள் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

2008ல் தொலைத்தொடர்பு சேவை தொடர்பான உரிமம் வழங்கியதில் ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பான விசாரணையை குழிதோண்டி புதைக்க அரசு முயற்சி செய்வதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

பெயர் தெரியாத தொலைத் தொடர்பு அமைச்சக அதிகாரிகள் சிலர் மீது வழக்கு தொடுத்துள்ளதுடன், பல மாதங்களாக விசாரணை நடத்தப்பட்டுவரும் நிலையில் யாருக்கு எதிராக இந்த விசாரணை நடக்கிறது என்பதே தெரியவில்லை என சிபிஐ கூறுவது எப்படி என்பதை நீதிமன்றம் தெரிந்துகொள்ள விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

தொலைத்தொடர்பு சேவை உரிம அனுமதி வழங்கியதில் அரசு ஊழியர்களுக்கும் தனி நபர்களுக்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது. இது கிரிமினல் சதி என்று தான் கூறவேண்டும். இந்த விவகாரத்தில் இடைத்தரகர்களுக்கும் தொடர்பு உள்ளது என மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான விசாரணை சார்ந்த ஆவணங்களை சிபிஐ, அமலாக்க இயக்குநரகம் ஆகியவற்றிடம் இருந்து உச்ச நீதிமன்றம் கேட்டுப்பெறவேண்டும். மேலும் இந்த விசாரணை தொடர்பான அவ்வப்போதைய நிலவரம் பற்றி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடவேண்டும் என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

ராசாவுக்கும் வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் ராடியா என்பவருக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் உரையாடல் பதிவு அடங்கிய ஒலிப்பதிவையும் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

 

இந்த உரையாடல் பதிவு நாடா சிபிஐ வசம் 9 மாதங்களாக உள்ளது. ஆனால் விசாரணைக்காக ராடியா அழைக்கப்படவில்லை. அரசியல் செல்வாக்கு மிக்க சிலரை காப்பாற்றவே விசாரணை  தடுக்கப்படுகிறது என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

அமைச்சர் ராசா இலாகாவின் கீழ் உள்ள தொலைத்தொடர்புத்துறை, 2008ல் ரூ.1658 கோடி என்ற மிகக் குறைந்த விலையில் 122 ஆபரேட்டர்களுக்கு முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் அலைக் கற்றையை ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

2ஜி உரிமங்களை தொலைத்தொடர்பு சேவை வழங்குவோர்களுக்கு ஏல முறையில் ஒதுக்கீடு செய்ய அமைச்சர் ராசா முன்வருவார் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

 

மனுதாரர்கள் தரப்பில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகினார்.

 

அமைச்சர் ராசாவுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் இருந்தபோதிலும் இது பற்றி சிபிஐ விசாரிக்க ஆர்வம் காட்டவில்லை என பிரசாந்த் பூஷன் வாதிட்டார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை: சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி

First Published : 14 Sep 2010 12:00:00 AM IST

13veerappam.jpg
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநாட்டில் தேசிய தகவல் தலைமை ஆணையர் ஹபிபுல்லாவுடன் உரையாடுகிறார் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி.
புது தில்லி, செப். 13: தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

 

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய தகவல் ஆணையத்தின் ஆண்டு மாநாட்டில் பேசிய அவர் மேலும் கூறியதாவது:

 

லஞ்ச, ஊழல் விவகாரங்களை முன்கூட்டியே கண்டறிய முடியும். தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அலுவலகம் இதில் கவனம் செலுத்தினால் பல்வேறு முறைகேடுகளை தடுத்து நிறுத்த முடியும்.

 

எந்த நோக்கத்துக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறியதாகத் தெரியவில்லை. தனிப்பட்ட முறையில் எந்த ஊழல் விவகாரங்களையும் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அலுவலகம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

 

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறும் உயரதிகாரிகள் பலர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்கள், இந்தியாவின் பெருமையை சீர்குலைக்கும் வகையில் பேட்டியளிப்பது கண்டிக்கத்தக்கது.

 

அண்மையில் நான் வெளிநாடு சென்றிருந்தேன். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வு பெற்ற அதிகாரி, மூன்று இந்தியர்களில் ஒருவர் ஊழல்வாதியாக இருக்கிறார் என்று தாய்நாட்டைக் குறித்து தரக்குறைவாகப் பேசினார்.

 

இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க யாருக்கும் உரிமை கிடையாது. ஊழியர்கள் விவகார மற்றும் பயிற்சித் துறை இதுபோன்ற அதிகாரிகளை உன்னிப்பாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரிப்பது வருத்தமளிக்கிறது. இந்த சமூகவிரோத செயலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

 

குஜராத், மகாராஷ்டிரத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முறைகேடுகளை சுட்டிக் காட்டிய இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களில் அந்தந்த மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் இது தொடர்பாக புதிய சட்டம் இயற்றவும் தயார்.

 

ஆவணங்களை பாதுகாப்பதில் அரசு அதிகாரிகள் மெத்தனப் போக்கோடு செயல்படுகின்றனர். குறிப்பாக, நிலம் தொடர்பான ஆவணங்களை பாதுகாப்பதில் பலவீனமான நிலை உள்ளது.

 

அரசு அலுவலகங்களில் முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் அலுவலர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் "விசில்புளோவர்ஸ்' மசோதா, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றார் அமைச்சர் வீரப்ப மொய்லி


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

14_09_2010_002_015-binami.jpg?w=300&h=248

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இந்திய ஊழல் அரசியல்வாதிகளின் ரூ. 6.5 லட்சம் கோடி கறுப்புப் பணம்

First Published : 15 Sep 2010 03:09:31 AM IST


வாஷிங்டன், செப். 14: இந்திய ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளால் கடந்த 8 ஆண்டுகளில் ரூ. 6.5 லட்சம் கோடி சுரண்டப்பட்டு வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. 
வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பொருளாதார ஆய்வு நிறுவனமான "குளோபல் பைனான்சியல் இன்டகரிட்டி' அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.  இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு 8 சதவிகிதம் என்ற அடிப்படையில் வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த செழுமையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஊழல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கொண்டு சென்றுள்ளனர். 
குறிப்பாக, 2000-2008 வரையிலான காலத்தில் ரூ.6.5 லட்சம் கோடி கறுப்புப் பணம் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளது. 
நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால் இந்திய மக்கள் அனைவரின் வாழ்க்கைத்தரமும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஊழல் விவகாரங்களால் அந் நாட்டில் ஏழைகள், பரம ஏழையாகி கொண்டிருக்கின்றனர். ஊழல்வாதிகள் செழித்து வளர்ந்து வருகின்றனர். ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையேயான சமுதாய ஏற்றத் தாழ்வு அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் ஊழலுக்கு எதிராக செயல்படுபவர்கள் படுகொலை செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. 
சுரங்கத் தொழில், மின் வாரியம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த 11 பேர் இந்த ஆண்டில் கொலை செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. 
2009-ல் வெளியிடப்பட்ட ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 84-வது இடத்தில் உள்ளது. இதேநிலை தொடர்ந்தால் இந்தியாவில் ஏழைகளுக்கு எதுவுமே கிடைக்காத நிலை உருவாகி விடும்.
ஊழலுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். லஞ்ச முறைகேடுகளுக்கு எதிராக செயல்படுபவர்களின் நலனைப் பாதுகாக்க "விசில் புளோவர்ஸ்' மசோதாவை நிறைவேற்ற அந் நாட்டு அரசு முயற்சி மேற்கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. 
நிதி நடவடிக்கைகளில் வெளிப்படையானத் தன்மையை கடைப்பிடிப்பது உள்ளிட்ட சீர்திருத்த முயற்சிகளால் ஊழலைக் கட்டுப்படுத்தலாம் என்று அந்த அமைப்பு யோசனை தெரிவித்துள்ளது


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது-ஆ. ராசா

First Published : 15 Sep 2010 12:00:00 AM IST

raja.jpg

புதுதில்லி, செப். 14: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக தமக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.
தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் நிலவும் கடும் போட்டியே இதற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.
2008ல் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
பொது நல வழக்குகள் மையம் உள்ளிட்ட சில அமைப்புகள் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தன.
திங்கள்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அமைச்சர் ஆ.ராசாவுக்கு நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டது.
சிபிஐ, அமலாக்க இயக்குநரகம், வருமான வரித்துறை ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸýக்கு 10 நாட்களுக்குள் பதில் தாக்கல் செய்யவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் ஆ.ராசா, தில்லியில் செவ்வாய்க்கிழமை ஃபிக்கி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த போது உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த ஆ.ராசா, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது நூறு சதவீதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதில் சிறிதளவும் சந்தேகமில்லை என்றார்.
உரிமத்தை திருப்பித்தர விரும்புகிறார்களா? அலைக்கற்றை உரிமத்தைப் பெற்ற ஆபரேட்டர்களில் பலர் சேவையை அளிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும், இதனால் அவர்கள் உரிமத்தை அரசிடமே திருப்பித்தர விரும்புவதாகவும் கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, ஆபரேட்டர்களின் கடந்த கூட்டத்தில் இதற்கு முக்கியத்துவம் அளித்து விவாதிக்கப்பட்டது. அலைக்கற்றை உரிமத்தை பெற்றவர்களில் பலர் உரிமத்தைத் திருப்பித்தர விரும்புவது உண்மைதான். ஏனென்றால் சேவை வழங்குவதற்கான உள்கட்டமைப்பை ஏற்படுத்த அதிக நிதி தேவைப்படுகிறது. அந்தளவுக்கு முதலீடு செய்ய அவர்களிடம் நிதி இல்லை. ஆபரேட்டர்களின் விருப்பம் குறித்து தொலைத்தொடர்பு கமிஷனில் விவாதிக்கப்படும் என்றார் அமைச்சர் ஆ.ராசா.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Your PF will earn 9.5% this year

1% Increase Follows Discovery Of 1,700 Crore After Funds Review 

TIMES NEWS NETWORK

New Delhi: Diwali came early for salaried employees on Wednesday as the Employees Provident Fund Organisation (EPFO) on Wednesday raised the interest rate on retirement benefits by a full percentage point to 9.5% for 2010-11 from 8.5% for the previous year.This move will benefit 4.7 crore organised sector workers.Corporates which run their own PF trusts will also have to match the new rates.
In fact,while the official interest rate is 9.5%,the actual rate of return works out to 13.8% (assuming investment of Rs 70,000 for the year in the instrument).That is because tax is saved both on the principal invested as well as the interest,translating into a very healthy return post tax,which is almost double that provided by fixed deposits (see graphic).
Wednesdays increase took the EPF interest rate to a five-year high and was made possible due to the surprise discovery of nearly Rs 1,700 crore in the suspense account meant for unclaimed PF money.The windfall was discovered after the central board of trustees last year ordered a review of all EPF accounts since 1952.

Cabinet may consider DA hike for govt employees,pensioners 


Ahead of the festival season,the Union Cabinet on Thursday is likely to consider a proposal for a 10% hike in the dearness allowance (DA) for central government employees and pensioners,considering the high rate of inflation in the past six months.The proposal aims to extend relief to around 50 lakh employees and 38 lakh pensioners from the soaring prices as till recently the inflation rate was over 10% for many months.Official sources said that the 10% increase,if approved,would be released with effect from July 1 this year.The central staff already get 35% of their basic pay as DA.P 8

Pc0011500.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

1984 ANTI-SIKH RIOTS CASE 
Sufficient evidence to prove Sajjan role,says CBI

New Delhi: The CBI on Thursday pleaded before the Delhi High Court that it has got sufficient evidence to prove the involvement of senior Congress leader and former MP Sajjan Kumar in a 1984 anti-Sikh riots case in which six persons were killed.During investigation by the CBI,sufficient material establishing his involvement has come on record.
He had instigated the mob,armed with deadly weapons,by making highly provocative speeches, the agency said in its affidavit filed before the court.
Two cases were registered against the former outer Delhi MP for his alleged involvement in anti-Sikh riots in the aftermath of the assassination of former Prime Minister Indira Gandhi on October 31,1984.
The apex court had earlier stayed the proceedings against him in one of the cases in which five persons were killed in Delhi Cantonment area.
The trial court had on July 7 framed charges of murder,rioting and spreading enmity between two communities against Kumar and others relating to the killing of six persons in Delhis Sultanpuri locality.
Justifying the decision of the trial court,CBI,in its reply,pleaded that Kumars plea for quashing proceedings should be dismissed.
There are sufficient grounds that the incident was a consequence of the provocative speeches made by Sajjan Kumar and other accused. it said.AGENCIES





__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Centre overrules objection raised by ministry on Haj subsidy

TIMES NEWS NETWORK

New Delhi: An unusual opinion tendered by the ministry of minority affairs opposing Haj subsidy on the grounds that it was not consistent with Islam has been overruled with the government clearing this years programme at Thursdays Cabinet meeting.
While there is no likelihood of the Haj support programme being discontinued,the ministry of minority affairs view has certainly caught the attention of the government.Stating its opposition to the subsidy in religious terms is perhaps quite unprecedented even though the issue has otherwise been debated.
The injunction that a person should undertake a Haj pilgrimage only when he or she is financially capable of doing so is well known,but it is being argued that a grant or support might be seen as a legitimate addition to a persons income.This would not put the pilgrimage scheme at cross purposes with what is seen to be an Islamic viewpoint.
The ministry offered its controversial views during the inter-ministerial consultations that took place on the Haj scheme and pointed out the need for a reconsideration of the support which it said needed to be ended.The plea that such support was against Sharia is bound to give rise to conflicting views.
On the one hand,wedded as it is to minority schemes,UPA-2 can hardly discontinue the scheme.But then,the clergys response would also be of interest as the ministry has opposed Haj subsidy on explicitly Islamic grounds.Will the clergy rule that the ministrys interpretation of Islamic law is not correct 
The vexed question may well see some animated discussion even though the government itself is not likely to stir trouble for itself by even pruning the scheme that was not only not rolled back by NDA but even expanded.

1.7L pilgrims to go on Haj this year:


Approving various proposals concerning this years operations,govern-ment said approximately 1,70,000 pilgrims from India will be going to Saudi Arabia.Of these 1,25,000 pilgrims will go through Haj Committee of India.The number of pilgrims who perform Haj every year from a country is decided by the Saudi government.TNN

Pc0121400.jpg
A QUESTION OF FAITH




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

19_09_2010_002_012-kerala.jpg?w=300&h=173

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

19_09_2010_016_004-70-pension.jpg?w=300&h=81

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22_09_2010_009_041-cji-krish.jpg?w=300&h=190

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22_09_2010_017_026-cwg-bridge.jpg?w=300&h=252

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் சிபிஐ தொடர்ந்த வழக்குகள் முடக்கம்

First Published : 22 Sep 2010 01:45:45 AM IST

Last Updated : 22 Sep 2010 04:23:21 AM IST
cbi.jpg
சென்னை, செப். 21: லஞ்ச ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் அனுமதி அளிக்காததால் சிபிஐ பதிவு செய்த 127 வழக்குகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

இதில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் உள்ளிட்ட 38 அதிகாரிகள் மீதான வழக்குகளும் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

 

லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக சென்னை துறைமுகத்தில் சுகாதார அதிகாரியாக இருந்த டாக்டர் வி.வி. சாய்ராம் பாபு 2009-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டார்.

 

பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் தற்போது, செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் உயர் பொறுப்பில் பணி புரிந்து வருகிறார்.

 

சென்னையில் உள்ள சிபிஐ ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள், இவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் புலனாய்வு முடிவடைந்த நிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தற்போது தடைபட்டுள்ளது. 1988-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு சட்டப்படி மத்திய அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் முன்னர், அந்த குறிப்பிட்ட அதிகாரியை நியமிக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரியிடம் சிபிஐ அனுமதி பெற வேண்டும். இதன்படி சாய்ராம் பாபு மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் கடந்த ஜூன் 9-ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால், இதற்கு அனுமதி இதுவரை கிடைக்கவில்லை.

 

மண்டல பாஸ்போர்ட் அதிகாரி:

 

இதேபோல, சென்னை மண்டல பாஸ்போர்ட் துறை அதிகாரியாக இருந்த சுமதி ரவிச்சந்திரன் லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக 2009 ஏப்ரல் 24-ம் தேதி கைது செய்யப்பட்டார்.  அடுத்த சில மாதங்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் தற்போது அஞ்சல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

இவர் மீதான வழக்கில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அவரது நியமன அதிகாரம் கொண்ட வெளியுறவுத்துறை உயரதிகாரியின் அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் கடந்த மே 10-ம் தேதி கடிதம் அனுப்பினர்.

 

இந்தக் கடிதத்தின் மீது ஆய்வு செய்து உயரதிகாரிகள் அனுமதி அளிக்காததால் சுமதி ரவிச்சந்திரன் மீதான வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தடைபட்டுள்ளது.

 

இதனால் வழக்கு அடுத்த நிலைக்குச் செல்லாமல் புலனாய்வு முடிந்த நிலையிலேயே முடங்கியுள்ளது.

 

குடிபெயர்வோர் பாதுகாவல்

 

அதிகாரி:

 

வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்வோருக்கு உரிய அனுமதி அளிப்பதற்காக சென்னையில் உள்ள குடிபெயர்வோர் பாதுகாவல் அலுவலகத்தின் அதிகாரியாக இருந்த சேகர், அதே அலுவலகத்தைச் சேர்ந்த அஸ்வினி குமார், லூர்து ஜெயசீலன் ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

 

இவர்கள் மீதான வழக்கிலும் புலனாய்வு முடிந்த நிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களின் நியமன அதிகாரம் கொண்ட உயரதிகாரிகளுக்கு கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி கடிதம் அனுப்பினர்.

 

இதற்கும் இதுவரை மத்திய அரசிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை. இதனால் இந்த வழக்கும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையிலேயே முடங்கியுள்ளது.

 

127 வழக்குகள் முடக்கம்:

 

இந்த மூன்று வழக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 343 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி கோரி சிபிஐ அனுப்பிய கடிதங்களுக்கு இதுவரை எவ்வித பதிலும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. இதில் தமிழகத்தை சேர்ந்த 38 மத்திய அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் முடங்கியுள்ளது. இது தொடர்பான அனைத்து வழக்கு விவரங்களையும் சிபிஐ தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

 

தீர்வு எப்போது?

 

மத்திய அரசு பணியில் உள்ள அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி வரும் கடிதங்கள் நீண்ட காலமாக அனுமதி அளிக்கப்படாமல் வைக்கப்படுவதால் சிபிஐ தொடரும் லஞ்ச ஊழல் வழக்குகளின் நிலை கேள்விக்குறியாகிறது. இத்தகைய கடிதங்களுக்கு 3 மாதங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மத்திய அரசின் இத்தகைய போக்கு காரணமாக, சிபிஐ அதிகாரிகளின் பணிகள் மறைமுகமாக முடக்கப்படுவதாக கருதப்பட வேண்டியுள்ளது என லஞ்ச ஊழலுக்கு எதிரான சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_09_2010_001_086-cwg.jpg?w=269&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_09_2010_001_093-cwg.jpg?w=266&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_09_2010_009_023-child-abuse.jpg?w=300&h=206

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தேசத் துரோகிகள்!

இயற்கையின் சீற்றத்தாலோ, அந்நியர் படையெடுப்பாலோ, பாதிக்கப்பட்டிருந்தால் நாம் அதை இந்தியாவுக்கு ஏதோ சோதனைக் காலம் என்று சமாதானப்படலாம். ஆனால், தெரிந்தே தான் பிறந்த தாய் நாட்டை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்கள் ஏமாற்றினால் - அவமானத்துக்கு உள்படுத்தினால் அதை வேதனைக் காலம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, சோதனைக் காலம் என்று ஒதுக்கிவிட முடியாது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க சரியாக பத்து நாள்களே உள்ள நிலையில், ஒன்றன்பின் ஒன்றாக புற்றீசல்போல புறப்பட்டு வரும் ஊழல்களும், அரைகுறையாக முடிக்கப்பட்டுக் கிடக்கும் பணிகளும், வெளிநாட்டவர் முன்னால் இந்தியாவை ஏளனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கி இருக்கும் சுகாதாரக் குறைவான ஏற்பாடுகளும் அதிர்ச்சியில் உறையவைக்கின்றன. ஒன்றா இரண்டா, ஏறத்தாழ 70,000 கோடி விரயமாக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று யாரும் நம்மை கட்டாயப்படுத்தவில்லை. நாமேதான் வலியப்போய், எங்கள் நாட்டில் காமன்வெல்த் போட்டிகளைச் சிறப்பாக நடத்திக் காட்டுகிறோம் என்று கேட்டுப் பெற்றோம். அதற்காக நாம் என்னென்ன சலுகைகளைத் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறோம் என்று தெரியுமா? 

தில்லியில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கும் ஒவ்வொரு நாட்டுக் குழுவுக்கும் இலவச விமானப் போக்குவரத்துச் செலவு, தங்கும் வசதி, உள்ளூரில் பயணம் செய்ய இலவச வசதி, இவையெல்லாம் போதாதென்று பங்குபெறும் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக ஒவ்வொரு நாட்டுக்கும் தலா ஒரு லட்சம் டாலர் வழங்கவும் ஒத்துக்கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் நமது தகுதிக்கு மீறிய வாக்குறுதிகளை அள்ளி வீசியது மட்டுமல்லாமல், காமன்வெல்த் போட்டிகள் நடத்த அனுமதி கிடைத்தது முதல், இந்திய ஒலிம்பிக் கமிட்டி இஷ்டத்துக்குப் பணத்தை வாரி இறைக்கவும் தொடங்கியுள்ளது.

முதலில் 655 கோடி செலவாகும் என்று கருதப்பட்ட காமன்வெல்த் போட்டிகள் 11,490 கோடியாக செலவு கணக்கை அதிகரித்தது. இப்போது அது மேலும் அதிகரித்திருக்கிறது. இது போதாதென்று கட்டமைப்பு வசதிகள் என்கிற பெயரில் தில்லி அரசு செலவு செய்யும் தொகை சுமார் 17,000 கோடி. மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை, விளையாட்டு அமைச்சகம், மாநில அரசின் பொதுப்பணித்துறை இப்படி எல்லா துறைகளின் ஒட்டுமொத்த செலவுகளையும் - இதில் பெரும்பகுதி ஏப்பம் விடப்பட்டது என்பது வேறு கதை - சேர்த்துக் கணக்குப் பார்த்தால் ஏறத்தாழ 

70,000 கோடி வரை காமன்வெல்த் போட்டிகள் என்கிற பெயரில் மக்கள் வரிப்பணம் விரயமாக்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.

ஏற்கெனவே இருக்கும் விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில் கையாளப்பட்டிருக்கும் தொகையைக் கேட்டால் தலை சுற்றுகிறது. ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம் 961 கோடி, இந்திரா காந்தி ஸ்டேடியம் 669 கோடி, தயான்சந்த் ஹாக்கி ஸ்டேடியம் 

262 கோடி, கார்னிசிங் துப்பாக்கி சுடும் மைதானம் 149 கோடி என்று ஏறத்தாழ 44,459 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் மேம்பாட்டுக்கு 85 கோடியும், ஹைதராபாத் லால்பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்துக்கு 80 கோடியும்தான் செலவாகி இருக்கிறது என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊழலின் அளவு எத்தகையது என்பது புரியும்.

961 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள மேம்பாலம் உடைந்து விழுகிறது. தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், "அது ஒன்றும் பொது மக்களின் உபயோகத்துக்காகக் கட்டப்பட்டதல்ல' என்று சாக்குப் போக்கு கூறுகிறார். வெளிநாட்டு அணியைச் சேர்ந்தவர்கள் பார்வையிட வந்தபோது, விளையாட்டு வீரர்கள் தங்கும் அறைகளில் தெரு நாய்கள் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதையும், கழிவறைகளில் வேலையாள்கள் அசுத்தம் செய்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் சென்றிருப்பதையும் பார்த்து அதிர்ந்துவிட்டிருக்கிறார்கள்.

பன்னாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் "விளையாட்டு கிராமம்' அசுத்தமாக, சுகாதாரமற்று இருக்கிறதே என்கிற வெளிநாட்டு விருந்தாளிகளின் கேள்விக்கு நம்மவர்கள் தரும் பதில் என்ன தெரியுமா? ""சுத்தம், சுகாதாரம் என்பது ஒவ்வொரு நாட்டினருக்கு ஒவ்வொரு விதத்தில் அமையும்'' என்பது. அதாவது, இந்தியர்களின் சுகாதாரஅளவு இதுதான் என்கிறார்களா? அப்படியானால், இவர்கள் பன்னாட்டு விளையாட்டு வீரர்களை அழைத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்த முன்வந்திருக்கக் கூடாது.

விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கேள்விகள் கேட்டால், தனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னால்கூடப் பரவாயில்லை. உங்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதுபோல கேட்டும் கேட்காமலும் நகர்கிறார். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அதற்கும் ஒருபடி மேலே போய், "எல்லாம் இப்படித்தான் இருக்கும், நம்ம ஊர் கல்யாணங்களைப்போல, விளையாட்டுத் தொடங்கிவிட்டால் சரியாகிவிடும்' என்று விட்டேத்தியாக பதிலளிக்கிறார்.

ஒரு வருடத்துக்கு முன்பே காமன்வெல்த் போட்டி அமைப்பாளர் குழுத் தலைவர் இந்தியா வந்து பார்த்துவிட்டு இந்த நிலையில், போட்டிக்கு முன்பு அரங்கங்களும், கட்டமைப்பு வசதிகளும் தயாராகுமா என்பது சந்தேகம்தான் என்று கூறியபோதே, பிரதமர் முதல் அனைவரும் சுறுசுறுப்பாகி விழித்துக் கொண்டிருக்க வேண்டாமா? ஆனால், யாருமே சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அசிரத்தை, எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல், எல்லாம் நடந்துவிடும் என்கிற பொறுப்பின்மை.

அதையே சாக்காக்கி, இந்தியாவின் மானம் கப்பலேறிவிடும் என்று பயமுறுத்தி, செலவுக்கான பட்ஜெட்டை அதிகரித்துவிட்டார்கள் இந்திய ஒலிம்பிக் குழுவின் பாவிகள். கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. வேலையைத் துரிதப்படுத்த மீண்டும் கோடிக்கணக்கில் பணம் வாரி வழங்கப்பட்டது. இதை எல்லாம் சொல்லி என்ன பயன்?

விளையாட்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் பத்து நாள்கள்தான் இருக்கின்றன. இன்னும் 30 சதவிகித வேலைகள் முடிவடையவில்லை. கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களில் ஆங்காங்கே பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. ஸ்டேடியங்களின் கூரையிலிருந்து பதிக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உடைந்து விழுகிறது. சாலை வசதிகள், மின்சார வேலைகள் எல்லாமே அரைகுறை. தரக்குறைவான வேலைகள். அங்குலத்துக்கு அங்குலம் ஊழல் பல்லிளிக்கிறது.

வெளிநாட்டு வீரர்கள் பலர் தாங்கள் வருவதில்லை என்று கூறிவிட்டனர். ஏதாவது தீவிரவாதத் தாக்குதல் - நடக்க வேண்டாம், நடக்கக்கூடாது - நடந்தால், கேட்கவே வேண்டாம். இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் வரமாட்டார்கள். 

70,000 கோடியில் இந்தியாவிலுள்ள ஏறத்தாழ 500 மாவட்டங்களில், மாவட்டத்துக்கு 100 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக்கியிருந்தால், ஒலிம்பிக்கில் பல தங்கப்பதக்கங்களைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடியிருக்கலாமே! ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, உகாண்டா, தான்சானியா, ஜிம்பாப்வே போன்றவைக்கு இருக்கும் முன்யோசனைகூட ஹார்வர்ட் பட்டதாரிகளான நமது மன்மோகன் சிங் குழுவினருக்கு ஏன் இல்லாமல் போயிற்று? இவர்களுடைய அசிரத்தை இப்போது இந்தியாவுக்கு உலகளாவிய அளவில் "ஊழல்' பதக்கத்தை அல்லவா தேடித்தந்திருக்கிறது.

எல்லோரும் இந்திய ஒலிம்பிக் கழகத் தலைவர் சுரேஷ் கல்மாதியை குற்றம் சாட்டுகிறார்கள். அவர் மட்டுமா குற்றவாளி? தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி எல்லோரும்தான் குற்றவாளிகள். அணுசக்தி ஒப்பந்தம் தமது மானப்பிரச்னை என்று கருதிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, உலக அரங்கில் இந்தியாவின் கெளரவம் பறிபோவதைப் பற்றி அக்கறை இல்லாமல் போயிற்றே, அவர் குற்றவாளி இல்லையா? கடந்த ஒரு வருடமாகப் பத்திரிகைகள் எச்சரிக்கின்றன. நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுகின்றன. எதைப்பற்றியும் கவலைப்படாமல் 70,000 கோடி விரயமாவதையும், தேசத்தின் 

கௌரவம் கேள்விக்குறியாவதையும் வேடிக்கை பார்ப்பதற்காகவா நமக்கு ஒரு பிரதமர்? நமக்கு ஒரு மத்திய அரசு? நமக்கு ஒரு நிர்வாக இயந்திரம்? 

இன்னொரு தேசப்பற்று மிக்க நாடாக இருந்தால், மேலே குறிப்பிட்ட அனைவரும் தேசத்துரோகக் குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டிருப்பார்கள். என்ன செய்வது, இந்தியாவுக்கு அவமானங்களையும், தேசத் துரோகிகளையும் சுமப்பதே தலையெழுத்தாகிவிட்டது


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_09_2010_008_042-mining.jpg?w=300&h=151

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

CJI picks Justice Alam for bench on Ayodhya suit

Dhananjay Mahapatra | TNN

New Delhi: Chief Justice of India S H Kapadia heads the bench in Court Number 1 of the Supreme Court,also known as the Chief Justices Court,and Justices K S Radhakrishnan and Swatanter Kumar sit with him almost regularly.
But with the apex court due to hear the Ayodhya matter,which can have repercussions for Hindu-Muslim equations,the CJI appears to have put into practice the oft-recited adage Justice should not only be done,but also appear to be done and drafted in Justice Aftab Alam in place of Justice Kumar for the crucial hearing on Tuesday.
The petition of Ramesh Chandra Tripathi seeking deferment of the verdict had to be referred to the CJI to be put before a new bench after the bench of Justices R V Raveendran and H L Gokhale differed on entertaining the appeal even as they stopped the Allahabad HC from delivering the verdict on Thursday.
Significantly,amid tenacious opposition by many from the BJP/VHP combine to the All-India Shia Personal Law Board the number of parties to the title suits seeking a postponement of the verdict seems to be increasing in what can have a bearing on the hearing in the apex court on Tuesday.

Pc0011800.jpg
TOUGH CASE: Justice Kapadia (above) and Justice Aftab Alam

__________________
Page 1  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard