New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாலியல் புகார்களால் கறைபடிந்த தேவாலயங்கள்!


Guru

Status: Offline
Posts: 9863
Date:
பாலியல் புகார்களால் கறைபடிந்த தேவாலயங்கள்!
Permalink  
 


பாலியல் புகார்களால் கறைபடிந்த தேவாலயங்கள்!

March 24, 2010 by envazhi
Filed under கட்டுரைகள்

சுனாமியாய் எழும் சிறுவர் பாலியல் புகார்கள்… மன்னிப்பு கேட்ட போப்!


PopeBenedictXVI_Getty__uig_16-9_340x191.jpg

ரோமானிய ஆட்சிக் காலத்திலிருந்தே கத்தோலிக்க தேவாலயங்களுக்கு கட்டற்ற அதிகாரத்தையும் யாரும் ஏன் என்ற கேள்வி எழுப்ப முடியாத புனிதத் தன்மையையும் கொடுத்துவிட்டார்கள். காரணம் அவர்களை இறைவனின் நேரடிப் பிரதிநிதிகளாகவும் அவர்களுக்கு இறைத்தன்மை முழுமையாக இருப்பதாகவும் மன்னர்கள் நம்பினார்கள்.

அன்றைக்கு ஆட்சி முறையே தேவாலயங்கள் – அரண்மனை – படைகள் – மக்கள் என்றுதான் இருந்தது. அதாவது மன்னனுக்கும் மேல் குருமார்களை வைத்திருந்தார்கள். எனவே தேவாலய குருமார்களின் தவறுகள் எக்காலத்திலும் முன்னிறுத்தப்பட்டதே இல்லை.

கத்தோலிக்க கிறிஸ்தவ சமூகம் வாடிகன் போப்பின் ஆட்சி அதிகாரத்துக்குள் வருகிறது. இதுவரை எந்த போப் ஆண்டவரும், தங்கள் அதிகாரத்துக்குக் கீழ் வரும் பிஷப்கள், பாதிரிமார்களின் தவறுகளை கண்டித்தோ தண்டித்தோ யாரும் பார்த்திருக்க – கேள்விப்பட்டிருக்க முடியாது. சிறுவர்களை சில பாதியார்கள் தொடர்ந்து செக்ஸ் தொந்தரவுக்கு உட்படுத்துவதாக அமெரிக்கா, ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. ஆனால் மதத்தின் போர்வையில் இவை மூடி மறைக்கப்பட்டே வந்தன.

காரணம் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களை விட, அந்த துயரத்தை விளைவித்த பாதிரியார்களைக் காப்பதிலேயே வாடிகன் குறியாக இருந்தது என்பார்கள்.

இப்போது முதல் முறையாக ஒரு பெரும் குற்றத்தை, கிறிஸ்தவம் மட்டுமல்ல.. வேறு எந்த மதமும் சட்டமும் மக்களும் ஒப்புக் கொள்ள முடியாத சிறுவர் பாலியல் குற்றச்சாட்டை வாடிகன் ஒப்புக் கொண்டுள்ளது. தனது கட்டுப்பாட்டிலுள்ள சில நாடுகளின் தேவாலயங்களில் சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது உண்மைதான் என்பதை போப் 16வது பெனடிக்ட் இப்போது ஒப்புக் கொண்டுள்ளார்.

காரணம், பாதிக்கப்பட்டவர்களின் ஓலம், தேவாலய காம்பவுண்டுகளையும் மீறி சட்டத்தின் வாசலுக்கு சென்றுவிட்டதுதான். நாளும் ஒரு நாட்டிலிருந்து, பாதிரிமார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு மோசடி தொடர்ந்த வண்ணம் உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு கூட சென்னை படப்பையில் ஒரு பாதிரியார் 25 சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்ப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.

‘எனவே இந்த செக்ஸ் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக, ஒளிவு மறைவின்றி விவாதித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கொடுக்க வேண்டும்; தேவாலயங்கள் என்பவை ஆண்டவரும் உண்மையும் மட்டுமே குடிகொண்டுள்ள இடங்கள் என்பதை மக்கள் நம்பும்படி செய்ய வேண்டும்’ என பல நாடுகளின் பிஷப்கள் குரல் உயர்த்தியுள்ளனர். இவர்களில் சிலர் போப்புக்கு எதிராகவே சற்று உரக்கப் பேசி வருகின்றனர்.

இதுவரை 300க்கும் மேற்பட்ட சிறுவர் பாலியல் புகார்கள் ஜெர்மனியிலிருந்து மட்டுமே வந்துள்ளன. அயர்லாந்து நாட்டில் ஏராளமான சிறுவர்களை இம்மாதிரி பாலியல் தொந்தரவுக்கு பாதிரியார்கள் உள்ளாக்கி வந்தது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த சிறுவர்கள் அந்தந்த தேவாலய தலைமைப் பீடத்தால் நடத்தப்படும் பள்ளிகளில் படிப்பவர்கள்.. தேவாலய விடுதிகளிலேயே தங்குபவர்கள். அயர்லாந்து நாட்டின் சார்பில், இது குறித்து ஒரு கமிஷன் விசாரித்து அறிக்கை கூட தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒரு பாதிரியார் மட்டும் நூற்றுக்கும் அதிகமான சிறுவர்களுடன் தகாத உறவு கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளார். மற்றொரு பாதிரியார், இரண்டு வாரத்துக்கு ஒரு முறை சிறுவர்களுடன் உறவு கொள்வதை, 25 ஆண்டுகளாக செய்து வந்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்.

இன்னும் ஆஸ்திரியா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் கத்தோலிக்க பாதிரியார்கள், பல ஆண்டுகளாக சிறுவர்களுடன் தகாத உறவு வைத்துள்ளது இப்போது ஒரு சுனாமி மாதிரி சமூகத்தின் பார்வைக்கு வந்துள்ளது.

போப் பெனடிக்ட், ஜெர்மனியில் உள்ள முனிச் நகர பிஷப்பாக, 1977ம் ஆண்டு முதல் 1981ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். அவர், பிஷப்பாக இருந்த கால கட்டத்திலும் வேறு சில பாதிரியார்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள்.

எனவே, “போப் பெனடிக்ட் இச்சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, ஜெர்மனி பார்லிமென்ட் கீழ் சபையின் துணை தலைவர் உல்ப்கேங் தியர்ஸ், பெனடிக்ட்டை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

சர்ச்சையைக் கிளப்பியுள்ள மன்னிப்புக் கடிதம்…

நாளுக்கு நாள் புகார்கள் அதிகரித்து வந்ததால் இதற்கு தீர்வு காண்பதற்காக கடந்த வாரம் போப் பெனடிக்ட், வாடிகன் தேவாலயத்தின் உயர்மட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து பாதிரியார்களின் தகாத உறவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தேவாலய நிர்வாகிகளுக்கும் அவர் சமீபத்தில் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “பாதிரியார்கள் தாங்கள் செய்த செயலை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த செயல்கள் உங்கள் மதிப்பின் தரத்தை தாழ்த்தக்கூடியது. இந்த தகாத செயலால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

பாதிக்கப்பட்ட உங்களுக்கு நேர்ந்த இந்த துயரம் குறித்து வெட்கமும் வேதனையும் அடைகிறோம். அயர்லாந்து நாட்டு பாதிரியார்கள் செய்த துரோக செயல் குறித்து விசாரிக்கப்படும். அயர்லாந்து மக்கள், தேவாலயங்கள் மீது மீண்டும் நம்பிக்கை கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

நேற்று முன்தினம் அயர்லாந்தில் நடந்த கூட்டத்தில் கார்டினல் சீன் பிராடி, போப்பின் கடிதத்தை படித்துக் காண்பித்தார். அப்போது அவர் குறிப்பிடுகையில், “போப்பின் கடிதம் வரவேற்கத்தக்கது. அவர் குறிப்பிட்டுள்ளது போல், நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்.தேவைப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” , என்றார்.

ஆனால் இந்தக் கடிதம் சமாதானத்துக்கு பதில் சில புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.   இந்தக் கடிதம் அயர்லாந்துக்குதானே… மற்ற நாடுகளில் நடந்த பாலியல் கொடுமைக்கு என்ன தீர்வு? வெறும் மன்னிப்பு என்ன நிவாரணத்தைத் தரும்?

இந்த தீச்செயல்களைச் செய்த பாதிரிமார்களுக்கு என்ன சட்ட தண்டனை..? தவறு செய்த பாதிரியார்களை பதவி விலக வற்புறுத்தும்படி போப் இந்த கடிதத்தில் தெரிவிக்காதது ஏன்?

மதம் மற்றும் புனிதத்தின் பெயரால்,  இழிவான செயலைச் செய்துவிட்டு தேவாலயத்தின் பின்னால் ஒளிந்து கொள்வோரை எப்படி தண்டிக்கப் போகிறார் போப் என்று ஜெர்மனி மற்றும் சுவிட்ஸர்லாந்து நாடுகளின் கத்தோலிக்க குருமார்கள் சிலரே திருப்பிக் கேட்கிறார்கள்.

அதற்கு இதுவரை போப் தரப்பிலிருந்து பதில் இல்லை.. சொல்வாரா என்பதும் தெரியவில்லை!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
பாதிரியார்களின் செயலுக்காக வெட்கம்
Permalink  
 


பாதிக்கப்பட்டவர்களிடம் போப் பெனடிக்ட் மன்னிப்பு கேட்டார்
GTBCFM1669271675.jpg

ஜெர்மனி, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில், கத்தோலிக்க பாதிரியார்கள், சிறுவர்களுடன் தகாத உறவு வைத்து கொண்டதற்காக, போப் பெனடிக்ட் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஜெர்மனி, அயர்லாந்து, ஆஸ்திரியா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் கத்தோலிக்க பாதிரியார்கள், பல ஆண்டுகளாக சிறுவர்களுடன் தகாத உறவு வைத்துள்ளனர். இது தொடர்பாக வாடிகன் நகரில் உள்ள போப் பெனடிக்ட்டுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

குறிப்பாக, அயர்லாந்தில் இந்த புகார்கள் அதிகம் காணப்பட்டது. அயர்லாந்து நாட்டின் சார்பில், இது குறித்து ஒரு கமிஷன் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது.ஒரு பாதிரியார் நூற்றுக்கும் அதிகமான சிறுவர்களுடன் உறவு கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளார். மற்றொரு பாதிரியார், இரண்டு வாரத்துக்கு ஒரு முறை சிறுவர்களுடன் உறவு கொள்வதை, 25 ஆண்டுகளாக செய்து வந்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்.

போப் பெனிடிக்ட், ஜெர்மனியில் உள்ள முனிச் நகர பிஷப்பாக, 1977ம் ஆண்டு முதல் 1981ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். அவர், பிஷப்பாக இருந்த கால கட்டத்திலும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

எனவே, " "போப் பெனிடிக்ட் இச்சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" " என, ஜெர்மனி பார்லிமென்ட் கீழ் சபையின் துணை தலைவர் உல்ப்கேங் தியர்ஸ், பெனிடிக்ட்டை சந்தித்து கோரினார்.

நாளுக்கு நாள் பாதிரியார்கள் மீதான புகார்கள் அதிகரித்து வந்ததால் இதற்கு தீர்வு காண்பதற்காக கடந்த வாரம் போப் பெனிடிக்ட் வாடிகன் தேவாலயத்தின் உயர்மட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பாதிரியார்களின் தகாத உறவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தேவாலய நிர்வாகிகளுக்கும் அவர் சமீபத்தில் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.

போப் தனது கடிதத்தில் குறிப்பிடுகையில், " "பாதிரியார்கள் தாங்கள் செய்த செயலை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த செயல்கள் உங்கள் மதிப்பின் தரத்தை தாழ்த்தக்கூடியது. இந்த தகாத செயலால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

" "உங்களுக்கு நேர்ந்த இந்த துயரம் குறித்து வெட்கமும் வேதனையும் அடைகிறோம். அயர்லாந்து நாட்டு பாதிரியார்கள் செய்த துரோக செயல் குறித்து விசாரிக்கப்படும். அயர்லாந்து மக்கள், தேவாலயங்கள் மீது மீண்டும் நம்பிக்கை கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்" " என்றார்.

போப்பின் இந்த எட்டு பக்க கடிதத்தால் மற்ற நாட்டு கத்தோலிக்கர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அயர்லாந்து நாட்டு சம்பவங்களை தான் போப் கண்டித்திருக்கிறார். அனைத்து நாடுகளுக்கும் இவரது மன்னிப்பு கடிதம் பொருந்தவில்லை என, அமெரிக்க கத்தோலிக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

தவறு செய்த பாதிரியார்களை பதவி விலக வற்புறுத்தும்படி போப் இந்த கடிதத்தில் தெரிவிக்காததற்கு சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் அயர்லாந்தில் நடந்த கூட்டத்தில் கார்டினல் சீன் பிராடி, போப்பின் கடிதத்தை படித்து காண்பித்தார். அப்போது அவர் குறிப்பிடுகையில், " "போப்பின் கடிதம் வரவேற்கத்தக்கது. அவர் குறிப்பிட்டுள்ளது போல், நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்.தேவைப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" " என்றார்.

More News



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Pope apologise for sex crimes
Permalink  
 


ஆஸ்திரேலியாவிடம் போப் மன்னிப்பு

சிட்னி
போப்பாண்டவர் 16 வது பெனடிக்ட், ஆஸ்திரேலியர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் சில பாதிரியார்கள் சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக போப்பாண்டவர் கூறினார். ஆஸ்திரேலியா வந்துள்ள போப்பாண்டவர், கிறிஸ்துவ பாதிரியார்கள் பலர் கூடியிருந்த கூட்டத்தில் பேசினார். அந்த குற்றத்தைச் செய்தவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் போப் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Church sex crimes
Permalink  
 


தகாத உறவு பாதிரியார்கள் போப் பெனிடிக்ட் மன்னிப்பு

 

photo19.jpg

ஜெர்மனி, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில், கத்தோலிக்க பாதிரியார்கள், சிறுவர்களுடன் தகாத உறவு வைத்துக் கொண்டதற்காக, போப் பெனிடிக்ட் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஜெர்மனி, அயர்லாந்து, ஆஸ்திரியா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் கத்தோலிக்க பாதிரியார்கள், பல ஆண்டுகளாக சிறுவர்களுடன் தகாத உறவு வைத்துள்ளனர். இது தொடர்பாக வாடிகன் நகரில் உள்ள போப் பெனிடிக்ட்டுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. குறிப்பாக, அயர்லாந்தில் இந்த புகார்கள் அதிகம் காணப்பட்டது. அயர்லாந்து நாட்டின் சார்பில், இது குறித்து ஒரு ஆணையம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஒரு பாதிரியார் நூற்றுக்கும் அதிகமான சிறுவர்களுடன் உறவு கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளார். மற்றொரு பாதிரியார், இரண்டு வாரத்துக்கு ஒரு முறை சிறுவர்களுடன் உறவு கொள்வதை, 25 ஆண்டுகளாக செய்து வந்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்.

போப் பெனிடிக்ட், ஜெர்மனியில் உள்ள முனிச் நகர பிஷப்பாக, 1977ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். அவர், பிஷப்பாக இருந்த கால கட்டத்திலும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.எனவே, போப் பெனிடிக்ட் இச்சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஜெர்மனி பார்லிமென்ட் கீழ் சபையின் துணைத் தலைவர் உல்ப்கேங் தியர்ஸ், பெனிடிக்ட்டை சந்தித்து கோரினார்.

நாளுக்கு நாள் பாதிரியார்கள் மீதான புகார்கள் அதிகரித்து வந்ததால் இதற்கு தீர்வு காண்பதற்காக கடந்த வாரம் போப் பெனிடிக்ட் வாடிகன் தேவாலயத்தின் உயர்மட்ட நிருவாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பாதிரியார்களின் தகாத உறவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தேவாலய நிர்வாகிகளுக்கும் அவர் சமீபத்தில் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். போப் தனது கடிதத்தில் குறிப்பிடுகையில், பாதிரியார்கள் தாங்கள் செய்த தவறான செயலை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த செயல்கள் உங்கள் மதிப்பின் தரத்தை தாழ்த்தக்கூடியது. இந்த தகாத செயலால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். உங்களுக்கு நேர்ந்த இந்த துயரம் குறித்து வெட்கமும் வேதனையும் அடைகிறோம். அயர்லாந்து நாட்டு பாதிரியார்கள் செய்த துரோகச் செயல் குறித்து விசாரிக்கப்படும். அயர்லாந்து மக்கள், தேவாலயங்கள் மீது மீண்டும் நம்பிக்கை கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.போப்பின் இந்த எட்டு பக்க கடிதத்தால் மற்ற நாட்டு கத்தோலிக்கர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அயர்லாந்து நாட்டு சம்பவங்களைத் தான் போப் கண்டித்திருக்கிறார். அனைத்து நாடுகளுக்கும் இவரது மன்னிப்பு கடிதம் பொருந்தவில்லை என, அமெரிக்க கத்தோலிக்கர்கள் தெரிவித்துள்ளனர். தவறு செய்த பாதிரியார்களை பதவி விலக வற்புறுத்தும்படி போப் இந்த கடிதத்தில் தெரிவிக்காததற்கு சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Pope- Sex Crimes
Permalink  
 


கற்பழிப்பு-செக்ஸ் தொல்லைத் தாங்காமல் போப் ஆடிவிட்டாராம்!

மார்ச் 18, 2010 by vedaprakash

கற்பழிப்பு-செக்ஸ் தொல்லைத் தாங்காமல் போப் ஆடிவிட்டாராம்!

போப் கத்தோலிக்க செக்ஸ் என்ற மர்ஃபி அறிக்கையைப் பற்றி விவாதிக்கிறாராம்! போப் பெனிடிக் செயின்ட் பேட்ரிக் நாளை காரணமாக வைத்துக் கொண்டு ஐரிஸ் மக்களை ஆசுவாசப் படுத்த ஒரு மன்னிப்புக் கடிதத்தை எழுதி அதனைப் படித்துப் பார்க்குமாறு வேண்டினார். தான் “ஃபிடோஃபைல்” கத்தோலிக்க கற்பழிப்புப் பாதிரியார்கள், குருக்கள் முதலியோரைக் கண்டு ஆடிப்போய்விட்டதாகவும், கவலைப்படுவதாகவும் கூறுகிறார்!

மர்ஃபி அறிக்கை என்றால் என்ன? அயர்லாந்திலிலுள்ள டப்ளின் நகரத்தில் ஆர்ச்-பிஷப் வளாகத்தில் மற்றும் அதன் அதிகாரத்தில் வரும் பள்ளிகளில் 1975ம் ஆண்டு முதல் 2004 வரை, 42 பாதிரிகளால் 320ற்கும் மேலான சிறுவர்-சிறுமியர் கற்பழிப்பு, பாலியல் வன்முறைகளுக்குட்படுத்தப்பட்டதாகவும், ஆனால் அத்தகைய குற்றங்களை சர்ச் மறைத்துவிட்டதாகவும் அறிக்கைக் கூறுகிறது. 700 பக்கங்கள் கொண்ட அறிக்கை வெளியிடப் பட்டாலும் பாதிக்கப் பட்டவர்களின் பாதுகாப்பைப் பற்றி ஒன்றும் கண்டு கொள்ளவில்லை.  அப்படியென்றால் அந்த “சிறுவர்-சிறுமியர்” கதியென்ன என்பதனைப் பார்த்துக் கொள்ளலாம். அதாவது 30 ஆண்டுகள் கழித்து வெளியிடப்படும் அவ்வறிக்கையில், பாதிக்கப்படவர்கள் இன்று 40 முதல் 50 வரை இருப்பர் என்றாகிறது! அவர்கள் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிறது! [வில் ஹியூம் மற்ற கிருத்துவர்கள் இந்தியாவில் செய்த காமக்களரிகளை நினைவு கூரவும்]

The pope greets Cardinal Sean Brady of IrelandBenedict XVI met the head of the Irish Catholic church, Cardinal Sean Brady, at the Vatican to discuss a response to the Murphy report on clerical sex abuse. Photograph: Alessandra Tarantino/AP

 

ஸ்மித் என்பவனின் செக்ஸ் தொல்லை தாங்கமுடியவில்லையாம். அவனுடைய அட்டூழியங்கள் 1994ல் வெளிவந்த போதுதான்,  அவன் 12 வருடங்களாக 74 செக்ஸ் தாக்குதல்களை “டீன் ஏஜ்” சிறுவர்கள் மீது நடத்தியிருக்கிறான் என்ற உண்மை தெரிந்தது. [இதே மாதிரிதான் 30 ஆண்டுகளாக வில் ஹியூம் தொல்லைக் கொடுத்துக் கொண்டிருக்கிறான், ஆனால் அவனுக்குத் தண்டனைக் கொடுப்பதாகத் தெரியவில்லை. சென்னையில் ஜாலியாக சுகவாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறான்!]
German Chancellor Angela Merkel makes a point during her speech at the German lower house of parliament Bundestag in Berlin, March 17, 2010. REUTERS/Tobias Schwarz

 

German Chancellor Angela Merkel makes a point during her speech at the German lower house of parliament Bundestag in Berlin, March 17, 2010.   Credit: Reuters/Tobias Schwarz

பலான பாதிரிகளின் செக்ஸ் கொடுமைகள் ஜெர்மனியிலும் தாங்கவில்லை: ஜெர்மனியிலும் இதே மாதிரியான கிருத்துவப் பாதிரிகளின் செக்ஸ் தொல்லைத் தாங்காமையால், சேன்ஸலர் ஏன்ஜிலா மெரெல் இதைப் பற்றியும் உண்மையும், தெளிவான விளக்கங்களும் தேவை என்று பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். ஜெர்மானியக் கத்தோலிக்க தலைமை ஆர்ச் பிஷப் ராபர்ட் ஜோலிட்ஸ்ச் என்பார் பாதிரிகள் சிறுவர்-சிறுமிகளை செக்ஸுக்குட்படுத்தியதற்கு கடந்த வாரம் மன்னிப்புக் கேட்டார். ஆனால் இப்படி கேவலமாக வயது வந்த சிறுமியர்களிடம் செக்ஸ் வைத்துக் கொள்வது, சிறுவர்களைப் பாலியல் ரீதியில் கொடுமைப் படுத்துவது போன்ற மிருகத் தனமான வேலைகளை செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால், அந்த அசிங்கமான, ஆபாசமான, கொடூரமான செயல்கள் சரியாகி விடுமா? உடல்-மனம் ரீதியில் பாதிக்கப் பட்டவர்களுக்கு என்ன செய்ய முடியும்? அவர்களுடையக் கன்னித்தன்மைய மீட்டுத் தர முடியுமா?

ஜெர்மனியில் பிறந்த பெனிடிக் என்ன சொல்லப் போகிறார்? இந்த போப் பெனிடிக் ஜெர்மனியில் பிறந்ததாலும், ஜெர்மனியில் கத்தோலிக்கப் பாதிரிகள்-குருமார்கள் முதலியோரின் செக்ஸ் தொல்லைகள், மீறல்கள் அதிகரித்துள்ளதாலும், இந்த செல்ஸ் விஷயம் பெரிதாகிவிட்டது. ஏனெனில் ஆங்கிலத்தில் தர்மமேயாகிலும் வீட்டிலிருந்து வரவேண்டும் என்பார்கள். அதாவது ஒழுக்கம் வீட்ட்லிருந்துதான் ஓம்பப்பட்டு வழிவழியாக வரும்! ஒழுக்கமற்ற அவர்களின் நடத்தைக் கேலிக்கூத்தாகி விட்டதுடன், கிருத்துவ நம்பிக்கையே கேள்விக்குள்ளாகி விட்டது.

உலகமே கிருத்துவப் பாதிரிகளின் செக்ஸ்-உலகமயமாகிவிட்டது: கடந்த 20 வருடங்களில் ஜெர்மனியில் கத்தோலிக்கர் நடத்தும் பள்ளிகளில் 250க்கும் மேற்பட்டவர்கள் அத்தகைய செக்ஸ் கொடூரங்களுக்குட்படுத்தப் பட்டிருக்கிறார்கள், என்று ஜெர்மானிய செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. உலகமுழுவதிலும் இத்தகைய செக்ஸ்-பாலியல் கொடுமைகள் கிருத்துவர்களால் நடத்தப் பட்டு வந்துள்ளது.  குறிப்பாக அமெரிக்கா, அயர்லாந்து, ஆஸ்ட்ரியா போன்ற நாடுகளில் அதிகமான மீறல்கள் பதிவாகியுள்ளன.  நெதர்லாந்திலும் 200ற்க்கும் மேற்பட்ட அத்தகைய கத்தோலிக்க செக்ஸ்-பாதிரிகள் பற்றிய விவரங்களைக் கொடுக்க முன்வந்துள்ளார்கள்.

கிருதுவர்களினால் ஏன் பிரம்மச்சரியம் காக்கமுடியவில்லை?இப்படி பாதிரிகள் ஒரு பக்கமும், மறுபுறம் கன்னியாஸ்திரீகள் அடுத்தப் பக்கமும் செக்ஸில் ஈடுபடுவது கிருத்துவர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது:

  • ஏன் அவர்களால் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்கமுடிவதில்லை?
  • கிருத்துவத்தில் நம்பிக்கையற்றத் தன்மையின் மீது ஆதாரமாக தீட்சை அளிக்கப் படுகிறதா?
  • நம்பிக்கையில்லாமல், ஏன் அவர்கள் இத்தகைய காமத்தில் ஈடுபட்டு உழல்கிறர்கள்?
  • கிருத்துவ அடிப்படை நம்பிக்கைகளே கேள்விக்குள்ளாகிறதா?
  • கன்னித்தன்மை ஏன் கேவலப்படுத்தப் படுகிறது?
  • கிருத்துவப் பெண்கள் ஏன் சீரழிகிறார்கள்?
  • கிருத்துவ ஆண்கள் காரணமா?
  • எங்கு தவறு நடக்கிறது?

12ம் நூற்றாண்டு திருமணத்தடை நீக்க வேண்டும்: இதனால், அந்த பழைய விவாதங்கள் மறுபடியும் ஆரம்பித்து விட்டது. ஸ்விஸ்நாட்டு இறையியல் வல்லுனர் கத்தோலிக்கர்கள் – அதாவது கடவுள் சேவையில் தீட்சைப் பெற்று வந்தள்ள கார்டினல், பிஷப், கன்னியாஸ்திரீ, கான்வென்ட், போர்டிங் ஸ்கூல் நிர்வாகி, முதலியோர் உட்பட-  திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற 12ம் நூற்றாண்டு தடை இன்றும் அமூலில் உள்ளதால் தான் இத்தகைய செக்ஸ்-ஊழல்கள் ஆபாசங்கள் ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, நெதர்லாந்து, அயர்லாந்து முதலிய நாடுகளில் பெருகியுள்ளன என்று எடுத்துக் காட்டியுள்ளார்.  அத்தகைய பிரமச்சரியம் கடைபிடிக்க இயலாத நிலை மற்றும் இத்தகைய செக்ஸ்-விவகரங்கள் அதிகரிப்பு முதலியவற்றிற்குள்ள சம்பந்தத்தையும் எடுத்துக் காட்டினார். ஆகையால், அத்தடை நீக்கப் படவெண்டும் என்றும் பரிந்துரைத்தார்.

பிரம்மச்சரியம்தான் இத்தகைய செக்ஸ்-குற்றங்களுக்குக் காரணம்: ஜாஸ்கெ என்பவர், “பிரம்மச்சரியம்  இந்த செக்ஸ் விவகாரங்களுக்கு காரணம் இல்லை, இருப்பினும் மனத்தைக் கட்டுப்படுத்த முடியாத வாழ்க்கைநிலை கொண்டவர்கள் இத்தகைய நிலையில் சரியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மனத்தில் ஆசை / காமத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கையில் துறந்தவர் போல நடிக்க முடியாது. இங்குதான் ஆபத்து வருகின்றது”, என்று விளக்கம் அளிக்கிறார். பேராசிரியர் கிளாஸ் பேயர், பாலியல் மற்றும் பாலியல் மருத்துவம் பிரிவின் தலைமை, சார்டி மருத்தவமனை, பெர்லின் கூருவதாவது, “இத்தகைய செக்ஸ் எண்ணங்கள் வயதுக்கு வரும்போது வருகின்றன. வளர்கின்றன. ஆகவே இதற்கும் பிரம்மச்சரியத்திர்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், அத்தகைய பிரம்மச்சரியம்தான் ஃபெடோஃபல்களைக் கத்தோலிக்கச் சர்ச்சுகள் இழுகின்றன”, என்கிறார்! அதாவது, அங்கு டீன்-ஏஜ் சிறுவர்-சிறுமியர்கள் இருப்பதால், தம்முடைய இச்சைகளை அங்கு சுலபமாகப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்ற குரூரக் காமம் மனத்தில் ஒளிந்து கொண்டிருப்பதால், அவர்கள் அந்த கத்தோலிக்கச் சர்ச்சுகள் பக்கம் இழுக்கப் படுகிறார்கள்! ஆகையால் ஜாஸ்கி சொல்வதவது, “ஒன்று மெய்ப்பிக்கப் பட்டவர்கள் துறவிகள் ஆக வேண்டும், இல்லை அவர்கள் மனந்து கொண்டு அந்த வேலைக்கு வரவேண்டும்”. கிழக்கத்தைய சடங்கு முறையினர் (The Eastern Rites of the Catholic Church) மற்றும் ஆசாரமுறை சர்ச்சுகள் ( the Orthodox churches) கல்யாணம் செய்து கொண்டு துறவிகளாக இருக்கலாம், ஆனால் பிஷப் ஆக முடியாது.  ஆங்கிலிகன் மற்றும் ப்ரொடஸ்ட ன் ட் கிருத்துவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப் படுகிறார்கள், ஆனால் பிஷப் ஆக முடியாது. சில பெண்கள் மட்டும் துறவியாக தீட்சைக் கொடுக்கப் படுகிறது.

போப் முடியாது என்கிறார்: ஆனால் போப்போ 12ம் நூற்றாண்டு அம்முறையை மாற்றமுடியாது என்கிறார். அது மட்டுமல்ல, அம்முறை மாற்றினால் கிருத்துவமே அழிந்துவிடும் என்று மற்ற ஆசாரமிக்க துறவிகள் கூருகின்றனராம். ஆகவே, இனியும் அதே மாதிரி பாதிரிகள் கற்பழித்துக் கொண்டே இருப்பார்கள் போலும்! கன்னியாஸ்தீரிகளும் அதுபோலவே கலவியில் ஈடுபட்டு ஜாலியாக இருப்பார்கள் போலும்! பிறகு என்ன நடக்கும் என்று பயமாக இருக்கிறது. ஏற்கெனவே மேனாட்டுக் கலாச்சாரம் செக்ஸை வெலிப்படையாக்கி அதற்கு விடுதலையும் கொடுத்துள்ளார்கள். அந்நிலையில் இப்ப்டி கிருத்துவமும் அதர்கு துணைபோனால் என்னாவது? ஆகவே, இந்தியாதான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஏனெனில், இந்தியாவிலிருந்துதான் பெரும்பாலான கன்னியாஸ்தீரிகளும், பாதிரிகளும் ஏற்றுமதி செய்யப் படுகின்றனராம்!

இந்தியாவிற்கு எச்சரிக்கை: இந்தியா இத்தகைய செக்ஸ்-பாதிரிகளால் அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ளார்கள். ஆனால், முடிந்த வரையில் சர்ச்-மேலிடங்கள் விஷயங்களை அமுக்கி விடுகிறார்கள். இந்தியாவில் “மர்ஃபி அறிக்கை” போன்று விசாரித்தால் 1947 லிருந்து 2010 வரை, ஒருவேளை ஆயிரக்கணக்கான கிருத்துவ பாதிரிகள்-பாஸ்டர்கள் சிக்குவார்கள் மற்றும் பாதிக்கப் பட்டுள்ள சிறுவர்-சிறுமியர்கள் மற்றும் இன்று வளர்ந்து விட்ட மற்றவர்களும் லட்சக்கணக்கா இருப்பர்! ஏற்கெனவே வில் ஹியூம், ஜோ, ஷாஜி, பால், பினு, முதலியோர் இதில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் அல்லது வழக்கில் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்ற நிலையில் பார்க்கும்போது, இந்தியா ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Pope and Church Sex Crimes
Permalink  
 


  1. சிறுவர்களுடன் பாதிரியார்கள் தகாத உறவு: போப் தலைகுனிவு!

    வாடிகன், மார்ச் 18-_ அமெரிக்கா, அய்ரோப்பா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பாதிரியார்கள், சிறுவர்களுடன் தகாத உறவு வைத்து கொண்டது தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதால், இது தொடர்பாக அனைத்து தேவாலய பாதிரியார்களுக்கும் எச்சரிக்கை கடிதத்தை அனுப்ப உள்ளதாக போப் பெனிடிக்ட் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா, அயர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள், சிறுவர்களிடம் தகாத உறவு வைத்துக் கொள்வதாக நூற்றுக்கணக்கான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால், வாடிகன் நகரில் உள்ள போப் பெனிடிக்ட் வருத்தமடைந்துள்ளார்.

    போப் பெனிடிக்ட் ஜெர்மனியில் பிறந்தவர். முனிச் நகர பிஷப்பாக 77ஆம் ஆண்டு முதல் 81ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர். ஜெர்மனியில் உள்ள பாதிரியார்கள், சிறுவர்களுடன் செக்ஸ் வைத்து கொண்டது தொடர்பான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த புகார்களுக்கு தீர்வு காண்பது குறித்து வாடிகன் நகரில் போப் பெனிடிக்ட் உயர் மட்ட ஆலோசனை நடத்தினார்.

    சிறுவர்களிடம் செக்ஸ் வைத்து கொண்டதாக புகார் வந்த தேவாலயங்-களுக்கு அவர் எச்சரிக்கை கடிதத்தை அனுப்ப உள்ளார். இந்த கடிதம் செய்த தவறுக்கு பாவ மன்னிப்பு கேட்பதாகவும், இந்த விஷயத்தால் ஏற்பட்ட மனப்பாதிப்பை அமைதிப்படுத்த உதவும் வகையில் அமையும் என்று கோடிட்டு காட்டினார். இதற்கிடையே அயர்லாந்தைச் சேர்ந்த கத்தோ-லிக்க தலைவர்கள் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளனர். அயர்லாந்தில் தந்தை பிரன்டன் ஸ்மித் என்பவர் இக்குற்றச்சாற்றிற்குஅதிகம் ஆளானவர். அவர் வெளிப்படையாக, என்னால் பாதிக்கப்பட்டதாக கருதுபவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என்று கூறினார். அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் மலை போல வந்ததற்கு வருத்தம் தெரிவித்தார்.

    இன்றைய நிலையில், ஜெர்மன் தேவாலயங்களில் உள்ள பாதிரியார்கள் மீதான சிறுவர் பாலியல் புகார்கள் ஏராளமாக வாடிகனில் வந்து குவிந்திருப்பதாகவும், அவற்றை பரிசீலிப்பதில் பத்து பேர் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.




__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard