போப் வருகையால் பெருகியது விபச்சாரம்.பகிரங்க மன்னிப்பு கேட்ட போப்
நெசந்தானுங்க. போப் வருகையால் பெருகியது விபச்சாரம்
குஷி மூடில் ஆஸ்திரேலிய பாலியல் தொழிலாளிகள்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற உலக இளைஞர்கள் தினத்துக்கு வருகை தந்தார் போப் பெனடிக்ட்
சுமார் 1,25,000 பன்னாட்டுப் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வுக்காக சிறப்புச் சலுகைகளையும், புதிய தொகுப்புத் திட்டங்களையும், அறிவித்திருக்கிறார்கள்.
பன்னாட்டு மக்கள் கலந்து கொள்வதால் அவர்களுக்கேற்ப பல மொழியிலிருந்து பாலியல் பணியாளர்களை இறக்குமதி செய்திருக்கும் இவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் அடையாள அட்டையும் வருவோருக்கு 10 விழுக்காடு சிறப்புக் கழிவும் அறிவித்ததாம்,
இதேபோல 1990-இல் உலக சர்ச்சுகளின் கவுன் சில் கூடிய போதும் நல்ல வசூல் இருந்தது; அதைப்போல பன்மடங்கு எதிர்பார்க்கிறோம் என்று பாலியல் தொழில் செய்வோரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
2000-இல் போப் அன்றைய இரண்டாம் ஜான் பால் தலைமையில் ரோமில் நடைபெற்ற இதேபோன்ற நிகழ்ச்சி முடிந்தபிறகு அவ்விடத்தைத் தூய்மை செய்த பணியாளர்கள் ஆயிரக்கணக்கான பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளைக் கண்டெடுத்தார்களாம்.
பரமண்டலத்தில் இருக்கும் பரமபிதாவே உம்முடைய இரட்சகத்தினால் ஆஸ்திரேலிய மண்ணில் எம் தொழில் பெருகுவதாக… நின் கிருபையினால் இவ்வாண்டு எங்களுடைய வருமானம் உயருவதாக… ஆமென்… என்று அவர்களும் இயேசுவின் புனித ஆசியைக் கோரி நிற்கிறார்கள் போலும்.
ஏனெனில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பாதிரிகள் உட்பட பலருக்கு ஆடி மாத சிறப்புக் கழிவு அறிவித்து ளுடிவஉம ஊடநயசயஉந ளுயடந நடத்துவதைப் போல ஒட்டுமொத்தமாக பாவ மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கிறதல்லவா அண்மையில்…
அந்த வரிசையில் ஆங்காங்கே (ஏ.டி.எம்.) தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் போல, தானியங்கி பாவ மன்னிப்பு வழங்கும் இயந்திரச் சேவையும் அறிமுகப்படுத்தப்படலாம். அச்சூழலில் இந்த பாவங்களையெல்லாம் கார்டைச் செருகி கணநேரத்தில் காணாமல் செய்துவிடலாம். ஆ….மென்…!
-பவானந்தி http://www.unmaionline.com/20080801/page18.html
பகிரங்க மன்னிப்பு கேட்ட போப்
அண்மையில், ஜூலை 15 முதல் 20 வரை நடந்த உலக இளைஞர் தின நிகழ்வுக்காக போப் 16ஆவது பெனடிக் ஆஸ்திரேலியா சென்றிருந்தார்.
அங்கு சிட்டி நகரில் உள்ள புனித மேரி ஆலயத்தில் பிரார்த்தனை நடந்தது.
அதில் கலந்து கொண்ட போப், சிறுமிகளை கத்தோலிக்க பாதிரியார்கள் பாலியர் வன்கொடுமை செய்ததற்காக பாதிரியார்கள் சார்பில் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
சிட்னி நகரின் தேவாலயங்கள் பள்ளிகள் உள்ளிட்ட 250க்கும் அதிகமான இடங்களில் பாவமன்னிப்பு அளிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
போப் பெனடிக் மற்றும் 4 ஆயிரம் பாதிரியார்கள் பங்கேற்று பாவமன்னிப்பு அளித்தனர்.பாதிரியார்களில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 2 சிறுவர்களையும் 2 சிறுமியர்களையும் சிட்னி நகரில் சந்தித்துப் பேசிய போப், அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்தாராம்.
http://www.unmaionline.com/20080801/page20.html button=”vert”; submit_url =”http://idhuthanunmai.blogspot.com/2008/09/blog-post_6437.html”