New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க இலக்கியத்தில் சிவ பெருமான்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
சங்க இலக்கியத்தில் சிவ பெருமான்
Permalink  
 


Dev Raj
3 hrs · 
 

தமிழ்த் தேசியவாதியர்தம் தனிப்பட்ட கவனத்துக்கு.....

”ஸங்க₄ ஸாஹித்யே ஸதா₃ஶிவ மாஹாத்ம்யம்”

முது முதல்வன், முக்கண்ணான், ஈர்ஞ்சடை அந்தணன், காரியுண்டிக் கடவுள், கறை மிடற்றண்ணல், ஆலமர் செல்வன், ஆல்கெழு கடவுள் - இவை இலக்கியம் சொல்லும் இறைவனின் பெயர்கள்.

தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலா
அடங்காதார் மிடல்சாய அமரர் வந்திரத்தலின்
மடங்கல்போற் சினைஇ மாயஞ்செய் அவுணரைக் 
கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின்.....
(கலித்தொகை 2)

ஓங்குமலைப் பெருவிற்பாம்பு ஞாண் கொளீ இ
யொருகணை கொண்டு மூவெயிலுடற்றிப்
பெருவிறலமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கு மொருகண் போல 
(புறம் 55)

ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்ச்சி மணிமிடற்றோனும்...
(புறம் 56)

பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணிமிடற் றொருவன்......
(புறம் :91)

நன்றாய்ந்த நீணிமிர்சடை 
முது முதல்வன் .....
(புறம் :166)

நீலநாகம் நல்கிய கலிங்கம் 
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த ....
(சிறுபாணாற்றுப்படை, 96-97)

நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பேரிசை நவிர மேஎ யுறையும்
காரிஉண்டிக் கடவுளது இயற்கையும்.......
( மலைபடுகடாம்)

இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன் 
உமை யமர்ந் துயர்மலை இருந்தனனாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை 
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல........ 
(கலித்தொகை 6)

இக்கலித்தொகைப் பாடல் சிவபிரான் உமாதேவியாரோடு 
இமயத்தில் வீற்றிருந்ததையும், மலை பெயர்த்த 
இராவணனின் கரங்கள் சிக்குண்டதையும்
தெரிவிக்கிறது.

ஞாலநாறு நலங்கெழு நல்லிசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்
ஆலமுற்றம் ...... (அகம் 181)

உலகம் எல்லாம் பரவும் புகழுடைய நான்கு வேதங்களான 
பழைய நூலை அருளிய சிவபெருமானின் ஆலமுற்றம்! - பரணர்

உருத்திரனார், இறையனார் என்ற பெயர்களில் புலவர்கள் இருந்தனர்.

[ஆலமர் செல்வன்- தென்முகக் கடவுள் - தக்ஷிணா மூர்த்தி, பவுத்தரின் அவலோஹிதர் பார்த்துக் காப்பியடித்து உருவாக்கிய வடிவம் என ரீல் சுற்றிக்கொண்டிருந்தார் ஓர் அமெரிக்கத் தமிழ் நண்பர்; மேற்கத்திய ‘ஆய்’வாளர் முடிவாகச் சொல்லி விட்டார்களாம்]



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard