New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள்-ஜாதி-வேதம்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
திருக்குறள்-ஜாதி-வேதம்
Permalink  
 


திருக்குறள்-ஜாதி-வேதம் 

http://www.karikkuruvi.com/2015/01/blog-post_30.html

 

 
வள்ளுவர் ஜாதிகளுக்கு எதிரானவர் போன்று பலவாறு திராவிட சித்தாந்திகள் அவரை உரிமை கொண்டாடி திரிக்கிறார்கள். உண்மையில், திருக்குறளில் வள்ளுவர் குடிச்சிறப்பு பற்றியும், நற்குடிப்பிறப்போர் தம் இயல்பிலேயே நல்லொழுக்கம் வாய்க்கப்பெற்றிருப்பர் என்பதையும் பல குறள்கள் மூலம் வலியுறுத்துகிறார். அதோடு நற்குடியிலும் அரிதாக குடி ஒழுக்கத்துக்கு கேடாக நடப்பவரும் பிறப்பது இயல்பேன்பதையும் சுட்டுகிறார். 

10917420_872765636077696_230519033944633


குணமும் குடிமையும் குற்றமும் குன்றா 
இனனும் அறிந்தியாக்க நட்பு.
ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.சாலமன் பாப்பையா
குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்.கலைஞர்
ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.மு.வரதராசன்
 
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் 
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.சாலமன் பாப்பையா
பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்.கலைஞர்
உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.மு.வரதராசன்
 
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு 
இனத்தியல்ப தாகும் அறிவு
தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடம்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.சாலமன் பாப்பையா
சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.கலைஞர்
சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.மு.வரதராசன்
 சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.
குற்றம் இல்லாமல் வரும் தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச் செய்யமாட்டார்.சாலமன் பாப்பையா
மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்.கலைஞர்
மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.மு.வரதராசன்
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் 
இன்னான் எனப்படுஞ் சொல்
மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.சாலமன் பாப்பையா
ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும். அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்.கலைஞர்
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.மு.வரதராசன்
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு 
இனத்துள தாகும் அறிவு.
அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.சாலமன் பாப்பையா
ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.கலைஞர்
ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நேக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.மு.வரதராசன் 
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசம் சொல் காட்டும்.சாலமன் பாப்பையா
விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.கலைஞர்
இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.மு.வரதராசன்

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் 
இனந்தூய்மை தூவா வரும்
மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.சாலமன் பாப்பையா
ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்.கலைஞர்
மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.மு.வரதராசன்
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.சாலமன் பாப்பையா
மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்.கலைஞர்
மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்க்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.மு.வரதராசன்

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.

நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும்.சாலமன் பாப்பையா
என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்.கலைஞர்
ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.மு.வரதராசன் 
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்ததைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.சாலமன் பாப்பையா
நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை.கலைஞர்
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.மு.வரதராசன்

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார்.சாலமன் பாப்பையா
பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்.கலைஞர்
பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.மு.வரதராசன்
thiruvalluvar-statue.jpg


இதைப்போன்ற ஏராளமான குறள்களைக் காட்டலாம். மேலே சொன்னவை உதாரணங்களுக்கு மட்டும். இதன்மூலம் சொல்லவருவது, பண்டைய பாரதம் ஜாதிகளை சமூக அமைப்பாக அங்கீகரித்தது என்பதையும், அந்த ஜாதிகள் அனைவருக்கும் ஒழுக்கத்தையும், நன்மையையும் ஏற்படுத்தியது என்பதையுமே. மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நல்லொழுக்கங்களையும் எல்லா காலத்துக்கும் பொருந்துமாறு உரைத்து தமிழ் வேதம் என்ற பெயர் பெற்ற வள்ளுவர் ஜாதிகள், குடி, குலம் போன்றவற்றை அங்கீகரித்துள்ளார் என்றால் அதில் நன்மை இல்லாமலா, என்பது சிந்திக்க வேண்டியதாகும். ஜாதி அமைப்பால் பாரதம் சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக, கலாசார ரீதியாக, இயற்கை பாதுகாப்பு ரீதியாக ஏராளமான நன்மைகளை அடைந்துள்ளது. அன்நன்மைகளை ஒழித்து பாரதத்தை சுரண்டிக் கொழுக்க நினைக்கும் அந்நிய மதமாற்ற மற்றும் சூழ்ச்சிக்கார சக்திகள் கடந்த நூற்றாண்டு முழுக்கவே பல்வேறு துரோகிகளை வளர்த்து விட்டு அவர்கள் மூலம் அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து சிந்தனா ரீதியாக தேசத்தை தவறான பாதைக்கு திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு விசிமுங்க, வள்ளுவரு வேதத்த எதுத்தவரு... அவரு சமண மதத்துக்காரரு னு நெறையா பேரு புளுகுரானுங்க.. திருக்குறளு ல இருக்கற வேத-வேதாந்த செய்திகள இந்த லிங்க் ல இருக்கற கட்டுரைகள் ல படிச்சிக்கோங்க மாப்ளைகளா...


இறுதியாக, ஜாதி எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லும் திருவள்ளுரின் குறள்.
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மெய்யுணர்தல் எனில் உண்மையான் உணர்தல். 

இது எவ்விடத்தும் எக்காலத்தும் அழியாது நிற்பதை உணர்தலாகும். 

இதனைத் "தத்துவஞானம்" என வடநூலார் குறிப்பிடுவர். 

உலகம் பொறியுணர்வால் உணரப்படுவது. 

இறைவன் மன உணர்வால் உணரப்படுகின்றவன். 

இருவகை உணர்வுகளாலும் உலகையும், இறைவனையும் உணரும் தன்மையது உயிர். 

இம்முப்பொருள் உண்மையினை மன உணர்வால் உணர்தல் மெய்யுணர்தலாகும் என்கின்றனர் 
சான்றோர் பெருமக்கள்.

மெய்யுணர்தலில் மனமே அடிப்படை. 

மனம் ஒருபொருட்கண் 

  1. மன்னியிருத்தலும்
  2. மன்னாதிருத்தலுமாக 

இரு நிலைகளிலும் விளங்குகிறது. 

உயிரையும், உடம்பையும் அலைப்பது மனமே. 

தானிருந்த இடத்திலிருந்தவாறே ஆட்டுவிக்கிறபொருள் மனதைத் தவிர வேறில்லை. 

மனதைப் பொறுத்தே அது உடையானுக்குப் பெருமையும், சிறுமையும் உண்டாவதாகும். 

இத்தகைய மனம் செம்மையுற்றால் உயிர்கள் நன்மை பெறும் என்பதை 

"மனமது செம்மையுற்றால் மந்திரம் செபிக்க வேண்டா" எனும் தொடரால் 

அகத்தியர் வலியுறுத்துகிறார்.

கடலலையாய் அலையாது, தெளிவான நிலையில், பன்நூலறிவால் நிறைந்து, குற்றமற்றதாய் விளங்கும் 
மனம் முக்தியுலகிற்கு வழிகாட்டும் என்கிறது திரிகடுகம். 

"கண்டதே காட்சி, கொண்டதே கோலம்" என்றில்லாமல் 

  • எது உள்ளது
  • எது இல்லது
  • எது உண்மை
  • எது பொய்மை 

எனக் கண்டறிதலுக்குச் சிறப்புப் பண்புகள் அமையப்பெற்றிருக்க வேண்டும். 

  • நடுநிலைமை
  • பற்றற்ற தன்மை
  • தூயமனம்
  • அருளுள்ளம் 

உடைய சான்றோர்க்கே அது சாலும்.

அனைத்துப் பொருள்களுக்கும், நிகழ்வுகளுக்கும் தோற்றத்தாலன்றி உள்ளமைந்த மெய்ப்பொருள் 
என்பதொன்று உண்மை. 

இதை உணர்தலில் ஏற்படும் தடையே முரண்பாடுகளின் தோற்றம். 

விழுமிய எண்ணமுடையோர் தம் அறிவாற்றலால் காணும் பொருள்களில் செம்பொருளை உணர்ந்து 
நல்வழி காட்டுவர். 

மெய்யுணர்தல் என்பதற்கு,

எப்பொருள் எத்தன்மைத் தாயினும்; அப்பொருள்,
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (குறள் - 355)


எனும் குறட்பாவில் திருவள்ளுவர் விளக்கம் தருகிறார். 

http://www.dinamani.com/Images/article/2010/1/3/valluvar.jpg

எப்பொருள் எத்தன்மை உடையதாகத் தோன்றினாலும் அந்தத் தோற்றத்தை உண்மையெனக் கொள்ளாமல், 
அதன் மெய்த்தன்மையைக் காண்பதே மெய்யுணர்தலாமென்பது இக்குறட்பாவின் கருத்து. 

உலகோர் ஒவ்வொரு பொருளுக்கும் கற்பித்து வழங்கும் கற்பனைகளை விட்டுவிட்டு, அதன்கண் உள்ள 
உண்மையைக் காண முயல வேண்டும். 

இதை ஒரு சொற்றொடர் மூலம் பரிமேலழகர் தெளிவாக்குகிறார்.

கோச்சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை எனக்கூறுமிடத்து, 

  • அரசன் என்பதோர் ஜாதியும்
  • சேரமான் என்பதொரு குடியும்
  • வேழ நோக்கினை உடையான் என்பதொரு வடிவும்
  • சேய் என்பதொரு இயற்பெயரும்
  • மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பதொரு சிறப்புப் பெயரும் 

ஒரு பொருளின்கண் கற்பனையாகலின், அவ்வாறுணராது, நிலம் முதல் உயிரீறாகிய தத்துவங்களின் தொகுதி 
என உணர்ந்து அவற்றை நிலம் முதலா தத்தம் காரணங்கள் ஒடுக்கிக்கொண்டு சென்றால், காரண, காரியங்கள் 
இரண்டுமின்றி முடிவாய் நிற்பதனை உணரலாம் என்கிறார். 

இதுவே மெய்யுணர்தலின் இலக்கணமாகும்.

மெய்யுணர்தலுக்கு மனம் அடிப்படையாதல் போல், அறியாமை அகற்றலும் அவசியத் தேவையாகும். 

அறிவுக்கு முரணானது அறியாமை. 

அதுவே துன்பகரமான பிறப்பிற்கும் முதல் காரணமாகிறது. 

எனவே, பிறப்பிலிருந்து விடுபட அறியாமையை நீக்க வேண்டும். 

அப்போதுதான் பொருள்கண்ணுள்ள உண்மை நிலை தெரியலாகும். 

அத்தெரிதலே அறிவாகும். 

இதனால் தான் வள்ளுவர் 

  • பிறப்பை பேதமை என்றும்
  • பிறவாமையை சிறப்பென்றும் 

குறிப்பிட்டுள்ளார்.

பிறப்பென்னும் பேதமை நீங்கச்; சிறப்பென்னும்,
செம்பொருள் காண்ப தறிவு (குறள் - 358)


பிறப்புக்கு முதற்காரணமாகிய அவிச்சை (அறியாமை) கெட, வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளைக் 
காண்பதே ஒருவர்க்கு மெய்யுணர்வாவது என விளக்குகிறார் பரிமேலழகர்.

அறியாமையை நீக்குவதால் உணரப்படும் மெய்யுணர்தல் பிறப்பறுக்கிறது. 

அறிவுடையோர் தோற்றத்தாலன்றி பொருளின் மெய்த்தன்மை காணவே விழைவர். 

இதனால் அவர்கள் வீடுபேற்று நிலையடைவர். 

நூல்களைக் கசடறக்கற்று மெய்ப்பொருளைக் கண்டோர் பிறவாமை பெறுவர். 

ஒருவனுள்ளம் பொருளை ஆய்ந்தறிந்து அதன் முதற்பொருளை உணருமாயின் அவர் பின்னைப் பிறப்புண்டு 
என நினைக்க வேண்டா. 

இக்கருத்தை,

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார்; தலைப்படுவர்,
மற்றீண்டு வாரா நெறி (குறள் - 356)


ஓர்த்துள்ளம் உள்ளது உணரின்; ஒருதலையாப்,
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (குறள் - 357)


என்னும் குறட்பாக்கள் விளக்குகின்றன.

"அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என மானிடப் பிறப்பின் உயர்வை ஒளவையார் போற்றியுரைப்பார். 

பிறப்புக்குப் பெருமை தருவது அறிவே. 

அறிவினால் ஏற்படும் மெய்யுணர்வு இல்லையேல், மனிதப் பிறப்பும் மதிப்பற்றதாகிவிடும் என்பதை,

பொருளல் லவற்றைப் பொருளென்று; உணரும்,
மருளான்ஆம் மாணாப் பிறப்பு (குறள் - 351)


எனும் குறளால் திருவள்ளுவர் உறுதிபடக் கூறுகிறார்.

பிறப்பிலும் வருத்தும் நோய்கள் பல உள்ளன. 

அவை வினைப்பயன்களாலும் பிறப்பாலும் தொடர்பவை. 

இவை ஐவகையாயினும் முதன்மையாகக் கருதத்தக்கவை 

  1. அறியாமை
  2. ஆசை
  3. சினம்

எனும் மூன்றே, ஒருவரிடத்து இம்முப்பெரும் குற்றங்களும் இல்லாது போயின், அவரைத் துன்பம் 
அணுகாது.

காமம் வெகுளி மயக்கம்; இம்மூன்றன்,
நாமம் கெடக்கெடும் நோய் (குறள் - 360)


எனும் குறள், இம்மூன்றினது நாமம் போக வினைபோம் என்கிறது.

எவ்வகையில் நோக்கினும் வள்ளுவர் காட்டும் மெய்யுணர்தல் அறியாமையை நீக்கி, அறிவால் 
செம்பொருள் காண வழிகாட்டுகிறது. 

அதன் நிமித்தமாய் துன்ப மயமான பிறப்பினின்று நீங்கி, பிறவாமை அடைய உதவுகிறது.

தமிழ்ப் பெரியசாமி

நன்றி:- தினமணி 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard