பாதிரியார்கள் பத்திரிக்கையாளர்களை தாக்கினர்!
ஆட்களை ஒளித்து வைக்கும், பிடித்துவைக்கும் பிஷப்: சாந்தோம் பிஷப்புகள் என்றாலே கோர்ட், வழக்கு, மோசடி, அடிதடி என்பதெல்லாம் சகஜம் போல இருக்கிறது. முன்பு, அருளாப்பாவைப் போலவே இந்த சின்னப்பாவும், தொடர்ந்து பல பிரச்சினைகளில் சிக்குவது வேடிக்கையாக உள்ளது, முன்பு, ஊட்டி பலான பாதிரி செக்ஸ் விஷயத்தில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று அமெரிக்க சபை புகார் கூறியது. அதுமட்டுமல்ல, அந்த பிஷப்பையே ஒளித்தவைத்ததாக புகார் கூறப்பட்டது. ஆக இப்படியெல்லாம், ஆட்களை ஒளித்து வைப்பது, பிடித்து வைப்பது போன்ற விஷயங்கள் எல்லாம், பிஷப்புகளுக்கு வாடிக்கையாகி விட்டன போலும்.
பிஷப்புக்கும் ஆசிரியைக்கும் சண்டை: மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவரின் பெற்றோர் இடையே தகராறு நடந்தது. இதுகுறித்து, மாணவனின் பெற்றோர் சார்பில் ஆசிரியர் மீது மயிலை மறைமாவட்ட பேராயர் சின்னப்பாவுக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. இதன்பேரில், பேராயர் விளக்கம் கேட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட ஆசிரியை, புகார் அனுப்பியவர் மீது எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சாட்சியாக பேராயரும் சாட்சியாக சேர்க்கப்பட்டார். பேராயர் கோர்ட்டில் ஆஜராக கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது[1].
சின்னப்பா பிஷப்புக்கு கோர்ட் சம்மன்: கோர்ட்டில் ஆஜராக கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டதும், சின்னப்பாவிற்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் பேராயர் வழக்கு தொடர்ந்தார். சம்மன் அனுப்பியதற்கு தடை விதித்த ஐகோர்ட், வக்கீல்கள் குழு அமைத்து பேராயரை நேரில் சந்தித்து விசாரித்து அறிக்கை அளிக்க பரிந்துரைத்தது. வக்கீல் ஜான் தலைமையில் விசாரணை நடத்த எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டது. வக்கீல்கள் குழு நேற்று காலை சாந்தோம் சர்ச் வளாகத்தில் உள்ள பேராயர் வீட்டுக்குச் சென்றது. இதையறிந்துதான், டைம்ஸ்-நௌ டிவிக்காரர்கள் அங்கு வந்தனர்.
உள்ளூர் ஊடகங்கள் மறக்கும் டில்லி செனல்காரர்கள் வந்தனராம்: முன்பே எடுத்துக் காட்டியுள்ளபடி, உள்ளூர் உடகக்காரர்கள் பெரும்பாலோர் கிருத்துவர்கள் அல்லது கிருத்துவ சார்புடையவர்கள், ஏனெனில், அவர்களுக்கு “கவர்கள்” முதல் எல்லாமே வாடிக்கையாகக் கொடுக்கப் பட்டுக் கவனிக்கப் படுகிறார்கள். ஆகையால், அவர்கள் இதைப் பற்றி கவலைப் படுதில்லை போலும். இந்நிலையில், இதை படம் எடுக்க தனியார் “டிவி’ நிறுவனத்தினர் உள்ளே நுழைந்தனர்.
பாதிரியாளர்கள் தாக்கு, சிறைபிடிப்பு: “டைம்ஸ் நெள” தொலைக்காட்சியின் செய்தியாளர் விக்ரம் கோபிநாத் மற்றும் கேமராமேன் மணிஷ் தணானி ஆகியோர் செய்தி சேகரிப்பதற்காக சாந்தோம் பேராயர் இல்லத்திற்கு இன்று காலை சென்றனர். அப்போது, அங்கிருந்த இரு பாதிரியார்களும் அலுவலக ஊழியர்களும் அவர்களை தாக்கினர். மேலும், அவர்களை சட்டவிரோதமாக பிடித்து வைத்துக்கொண்டனர்[2]. இன்னொரு செய்தியின்படி, சின்னப்பாவே பிடித்துவைத்தர் என்றுள்ளது: “சென்னையில் சாந்தோமில் உள்ளசர்ச் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சிபத்திரிக்கையாளர் ஒருவரை சாந்தோம் சர்ச் பிஷப் சின்னப்பாஉள்ளிட்ட பாதிரியார்கள் பிஷ்ப் ஹவுசில் அடைத்து வைத்துத்தாக்கினர்”[3].
சாலை மறியல் அடுத்து பத்திரிக்கையாளர்கள் விடுதலை: இதையடுத்து, தகவல் கேள்விபட்டு அங்கு ஏராளமான பத்திரிகையாளர்கள் திரண்டனர். பின்னர் சென்னை காவல்துறையின் கூடுதல் ஆணையர் ஷகீல் அக்தர் தலைமையிலான போலீஸார் மற்றும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலையீட்டின் பேரில் சுமார் 2 மணி நேரத்திற்கு பின்பு அடைத்து வைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.
தாக்கப் பட்டவர்கள், தாக்கிய பாதிரிகளை போலீஸரிடம் அடையாளங்காட்டினர்: இதையடுத்து மறியலை கைவிட்ட பத்திரிக்கையாளர்கள், தாக்குதல் நடத்திய பாதிரியாரை போலீசாருக்கு அடையாளம் காட்டினர். போலீசார் பாதிரியாரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவத்தினால் சாந்தோம் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல கிலோ மீட்டருக்கு வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது.
சின்னப்பா மன்னிப்பு கேட்டார்: வேறு வழியில்லாமல், சின்னப்பா வெளியே வந்து, நிலைமையை பார்த்தார். மேலும், இச்சம்பவத்திற்காக பேராயர் சின்னப்பா பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
[1] தினமலர், “டிவி‘ குழுவினர் மீது தாக்குதல்; சாலை மறியல், பதிவு செய்த நாள்: செப்டம்பர் 15, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=85561
[2] http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=73219434-2107-4564-a1ad-76a3fd10d362&CATEGORYNAME=TCHN