New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஏசு கிறிஸ்து: ஓர் ஏகபோக ஏமாற்று வியாபாரம்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
ஏசு கிறிஸ்து: ஓர் ஏகபோக ஏமாற்று வியாபாரம்
Permalink  
 


ஏசு கிறிஸ்து: ஓர் ஏகபோக ஏமாற்று வியாபாரம்

 

பேசமுடியாதவர்கள் பாடுகிறார்கள், கேட்க முடியாதவர்கள் ரசிக்கிறார்கள். பிறவிக் குருடர்கள் கண்பார்வை பெற்று ஓவியம் வரைகிறார்கள். ஊனமுற்றோருக்குக் கை, கால் முளைக்கிறது. இவை அனைத்தும் நடப்பது மருத்துவமனைகளில் அல்ல. மண்டபங்களில் பட்டால் படாடோபமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் மேடைகளில். உங்களைப் பரிபூரணப்படுத்தும் அற்புத சுகமளிக்கும் ஆன்மிக ஜெபக்கூட்டங்களில்தான் இத்தனை களேபரங்களும். சிறப்பு ஆவி அழைப்புப் பொதுக்கூட்டங்கள், எழுப்புதல் கூட்டங்கள், சொஸ்த சபைகள், யேசு அழைக்கிறார், யேசு விடுவிக்கிறார், பரிசுத்த ஆவியின் தூய எழுப்புதல் கூட்டங்கள் என்று விதவிதமான பெயர்களில் அப்பாவி மக்களை மதிமயக்கி காசுகளைக் கொள்ளையடிக்கும், மதச்சாயத்தில் முக்கி எடுக்கப்பட்ட மல்டி லெவல் மார்கெட்டிங் மாயைகளை கொஞ்சம் விரிவாகவும் இதை நடத்தும் பிரசங்கிகளின் வருமானத்தையும் இன்னபிற வசதிகளையும் தெரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்.

 

அறிவுச்சலவை செய்யப்பட்ட பாவிகளே இங்கே வாருங்கள்!

நோயில்லாத மனிதனும்,கவலைகள் இல்லாத மனிதனும் இந்த உலகில் நிச்சயம் இல்லை. ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் நிலைக்குத் தகுந்தாற்போல் கவலைகளும் பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதையே விற்கப்படும் பொருளாக மாற்றி தங்களின் மல்டி லெவல் மார்கெட்டிங்கிற்கு விபரீத கனம் ஏற்றி அப்பாவிகளின் உழைப்பையும் சேமிப்பையும் அவர்களின் ஒப்புதலோடு கொள்ளையடிப்பதற்கு ஒரு திட்டம் வகுக்கப்பட்டு, அவை கார்ப்பரேட் கலர் ஏற்றப்பட்டு, அப்பாவி மக்கள்முன் காட்சிக்கு வைக்கப்படுகிறது. அதன் வண்ணங்களிலும் அதன் விற்பனை உத்திகளிலும் மனதைப் பறிகொடுப்பவன் பின்னர் தன் சொத்து, மனைவி, மகள் ஆகியவற்றையும் தன் ஆதார சேமிப்பையும் இறுதியாக ஆன்மாவையுமே இழக்கிறான். இப்படி ஒரு சாமனிய மனிதன் ஏமாற, மனோதத்துவ ரீதியாக மனிதர்கள் திட்டமிட்டு குற்ற உணர்ச்சியில் திளைத்து மாசோக்கியர்களாக மாறி அதில் இன்பமும் கண்டு சுயம் இழந்து அற்ப மானுடனாகவும், அவர்களால் பாவிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்களை இலக்காக கொண்டு கூட்டப்படும் இந்த வகைத் திட்டமிடப்பட்ட ஆபாச, மோசடிக் கூட்டங்கள், நிச்சயம் அதை நடத்துபவர்களை பல கோடிகளுக்கு அதிபர்களாக்கி இருக்கின்றன. அவர்களுக்குத் தேவை குற்ற உணர்ச்சியும் நோய்மையும் நிரம்பிய பலியாடுகள்; எனவேதான் அவர்கள் தங்களுக்கு வருமானத்தை வாரிக் கொடுக்கும் எஜமானர்களை பாவிகளே இங்கே வாருங்கள் என்கிறார்கள். பணத்துடன் பலியாடுகள் வரிசையாகவும் கூட்டமாகவும் இந்த நவீன மோஸ்தர் பொன்ஸீக்கள் முன் மாலையும் கழுத்துமாக நிற்கின்றன.

 

வியாபார உத்திகள்

1. ரெஃபரல் மார்கெட்டிங்

இந்த உத்தியில் ஏதோ ஒரு சகோதரரோ, சகோதரியோ உங்களிடம் வந்து, யதேச்சையாகப் பேசுவது போல பிரசங்கியின் ஆண்மை, வலிமைகளைப் பற்றியும் தாங்கள் மீள முடியாத பிரச்சினையிலும் நோயிலும் இருந்ததாகவும், அந்த X அல்லது XX அல்லது XXX அவர்களுடைய ஜப வலிமையால் தங்கள் பிரச்சினை எப்படி இன்ஸ்டண்ட் முறையில் மறைந்தது என்பதையும் விளக்குவார். கல்லும் கரையும் அந்த உருக்கமான குரலிலும், அந்த அக்கறையிலும் உங்களின் அறிவு திரையிடப்பட்டு மறைக்கப்படும். அதை அவர் சொல்வது உங்கள் மீதான அக்கறையினாலும் அன்பினாலுமே அன்றி அந்த பிரசங்கியை மறைமுகமாக மார்கெட்டிங் செய்வதற்காக அல்ல என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாக உங்களுக்கு “விளங்க” வைக்கப்படும்.

 

2. செய்தி, ஊடகக் கட்டுரை உத்தி

அனைவரும் படிக்கும் நாளிதழ்கள், வார இதழ்களில் வரும் கோகோ கோலா, மெக்டவல் சோடா, பான் பராக் வகை விளம்பரங்கள் நேரடியானவை. இன்ன நோக்கத்திற்காக செய்கிறோம் என அறிவித்துவிட்டு செய்வது. அதற்கு விளம்பரம் என்று பெயர். கருணாநிதி ஊழல் செய்தாரா?, இந்தியாவில் ஏழைகள் இருக்கிறார்களா? மன்மோகன் ஆச்சர்யம்! என்பதெல்லாம் செய்தி வகையைச் சேர்ந்தவை. இந்தியாவின் எல்லாப் பெரிய மோசடிகளிலும் இத்தாலிய சோனியா ஆதாயம் அடைந்திருக்கலாம் என்பது ஊகம் போல சொல்லப்படும் உண்மை செய்தி. திறமையும், செயல்திறனும் இல்லாத மன்மோகன் அரசு ஆட்சியில் நீடிக்கத் தார்மிக உரிமை உள்ளதா என்பன போன்றதெல்லாம் தலையங்கம் (அ) எடிட்டோரியல் வகையில் அடங்கும். இவை எவற்றுள்ளும் இல்லாத ஒரு வகை இருக்கிறது; அதற்குப் பெயர் அட்வர்ட்டோரியல் என்ற பணம் பெற்றுக்கொண்டு செய்தி போலவே போடப்படும் சுய விளம்பரங்களும், பொய்களும். ”ராகுல் காந்தி ஏழை வீட்டில் சாப்பிட்டார்”. ’மண் சட்டி சுமந்தார்’ என்பவையெல்லாம் இந்த வகையில் சேரும். அது போன்ற அட்விட்டோரியலாக, பிரசங்கியின் பெருமைகள்(?!) ஊருக்கு உரத்துச் சொல்லப்படும். இப்படிச் செய்திகளைத் திரிப்பதற்கென்றே தனியாக மீடியா செல்லும், கத்தோலிக்கப் பெருமத நிறுவனங்களால் நடத்தப்படும் நாளிதழ்கள், வார இதழ்கள், தொலைகாட்சி ஊடகங்களும் மிக அதிகமாக உள்ளன.

 

3. திரை நட்சத்திரங்கள் வருகை

திரைத்துறையிலும் அண்டர் கிரவுண்ட் உலகத்திலும் தொடர்புடைய நட்சத்திரங்கள், மின்னும் தாரகைகள். திரைப்படக் கவர்ச்சியினால் பெற்ற புகழை ஆயுதமாகவும் முதலீடாகவும் கொண்ட நட்சத்திரங்களை அழைப்பதன் மூலம் பாமர மனங்களை வீழத்த இந்த உத்தி பயன்படுத்தப்படும். நக்மாக்கள், நமீதாக்கள் வரும் சுவிஷேசங்கள் இந்த வகையானதுதான்.

நமீதாவுடன் நாசரேத் ஆயர்

 

4. P2P எனப்படும் நேரடி விளம்பர உத்தி

தங்களின் மதிப்புக்குள்ளான மதபீடத்தில் உள்ளவர்களை வைத்து செய்யப்படும் விளம்பரங்கள். பாஸ்டர்கள், ஜெப ஊழியர்கள் மூலம் செய்யப்படும் விளம்பரங்கள். வால்போஸ்டர் மூலம் ,ஃப்லெக்ஸ்  பேனர் மூலம், நோட்டீஸ் மூலம் செய்யப்படும் விளம்பரங்களின் உத்தி பற்றி குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமில்லை.

 

5. ஒப்புதல் வாக்குமூலங்கள்

பிரசங்க மேடையிலேயே அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்கள், நேரடிக் காட்சிகள் மூலம் கவர்தல்.

 

இப்படியெல்லாம் சகலவித வியாபார நுணுக்கங்களோடு செய்யப்படும் இந்த வியாபாரத்தின் லாபமாக எப்படியும் ஒரு 10 கோடியை சம்பாதித்து இருப்பார்களா என்று, ஒரு அப்பாவி நண்பரிடம் கேட்டேன். அவர் சொல்லிய கணக்குகள் அனைத்தையும் சேர்த்தால் மொத்த தமிழக பட்ஜெட்டுக்கு அருகில் வந்து விடுகிறது.

ஒரு சோற்றுப் பதமாக சிலரைப் பற்றிப் பார்க்கலாம்…

 

டி.ஜி.எஸ்.தினகரன்

மாபெரும் மோசடியாக, திறமையாக வடிவமைக்கப்பட்ட புத்தம் புதிய வியாபார உத்தியுடன் கிறிஸ்துவ மதத்தின் பெயரால் பல கள்ளப் பிரசங்கிகள் தோன்றி, ”எங்கள் ஜெபத்தால் முடவன் நடப்பான், குருடன் பார்ப்பான், செவிடன் கேட்பான், ஊமை பேசுவான்,” என்று ஏராளமான பொய்களைச் சொல்லி, அப்பாவி மக்களின் மூளையைக் கெடுத்து, அவர்களை மனநோயாளிகளாக்கி, அவர்களிடமுள்ள பணத்தையும், பொருளையும் கோடிகோடியாகக் கொள்ளையடித்து வருகிறார்கள். இந்தக் கொள்ளைக்காரர்களில் தமிழ்நாட்டில் பிரபலமான கொள்ளையர்களாக இருந்து, பல்லாயிரம் கோடிப் பணம் சம்பாதித்து, இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் இடம் பிடித்திருப்பவர்கள் டி.ஜி.எஸ். தினகரன், அவர் மகன் பால் தினகரன்.

1935-இல் சாதாரண குடும்பத்தில் சுரண்டையில் பிறந்த தினகரன், 1972-இல் வங்கி கிளர்க் வேலையை உதறிவிட்டு அதை விடப் பல மடங்கு லாபம் தரக்கூடிய “யேசு அழைக்கிறார்!” என்ற பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தத் தொடங்குகிறார் எனக் குறிக்கப்பட்டாலும் 1980-க்குப் பிறகே இவர் தனியான ஜெப நிறுவனத்தை துவங்குகிறார். அதன் மூலம் அனைவருக்குமான ஜெபக் கூட்டங்களை நடத்தத் தலைப்படும் தினகரனுக்கு அயல்நாட்டு நிதி வர வர, 1984-லிருந்து தொடர்ந்து வாங்கிய குறைந்த விலை நிலத்தில் காருண்யா கல்வி அறக்கட்டளை சார்பாக பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டு, அதிலும் மிக அதிகமான பணம் வெளுக்கத் தொடங்கிய பிறகு, தமிழகம் முழுக்க பரவலாக நிலம் வாங்கிக் குவிக்கப்பட்டது. 2006-ஆம் ஆண்டு காருண்யா கல்லூரி நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாறிய பிறகு, அவர்களின் மதிப்பு தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. 2008-இல் தீவிர நோய்க்கு ஆட்பட்டு இறக்கும்போது அவரின் சொத்து மதிப்பு சுமாராக 15,000 கோடி ருபாய்கள்.

 

பால் தினகரனின் (டி.ஜி.எஸ்.தினகரனின் மகன்) சாம்ராஜ்யம்

மேலாண்மைக் கல்வியில் பட்டம் பெற்றுவர் பால் தினகரன். தன் தந்தையின் வியாபாரத்தில் புதிய மார்க்கெட்டிங் உத்திகளைப் பயன்படுத்தி மேலும் அதன் வீச்சைப் பிரபலப்படுத்தவும் அதன் மூலமாக மேலும் பணம், நிலம், அதிகாரம் இவற்றைப் பெறவும், தொடர்ந்து தான் பெற்ற வியாபாரக் கல்வியின் நுணுக்கங்களைச் செயல்படுத்துகிறார். ரெயின்போ டிவி 8 மாநில மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது. மாதம் 1800-க்கும் மேற்பட்ட விளம்பரதாரர்கள் நிகழ்ச்சியை வழங்குகிறது. 750 ஏக்கருக்கு மேல் கோவையில் காருண்யா கல்வி சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார்கள். 5000 கோடிக்கு மேல் சொத்து மதிப்புள்ள காருண்யா கல்வி அறக்கட்டளையின் அதிபர். பாரதியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக, தொடர்ந்து இருமுறை பதவி வகித்தவர். அந்தப் பதவியின் மூலம் ஏகப்பட்ட கிறித்தவர்களை வேலையில் அமர்த்த மறைமுகமாக லாபி செய்து வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு. டாக்டர் பட்டம் போட்டுக்கொள்ளும் தினகரனுக்கு அந்தப் பட்டத்தை வழங்கியது ஜெர்மனியைச் சேர்ந்த ‘மார நாதா ஜெப சபை’ என்ற மத நிறுவனம். மத்திய அரசின் சிறுபான்மையின அமைச்சகத்தின் கண்காணிப்புக் குழுவில் இவர் இருக்கிறார். ‘அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் ஆட்சி அதிகாரக் குழுவிலும் இவர் இடம்பெற்றிருக்கிறார். இவை அனைத்தும் மத்திய அரசின் கல்வித் துறையால் நேரடியாக நியமிக்கப்படுவது.

மத்திய காங்கிரஸ் அரசில் இவரின் செல்வாக்கு எந்தளவுக்கு உள்ளது என்றால், மத்திய அமைச்சர் பல்லா, இவரிடம் நாடாளுமன்றம் நன்றாக நடக்க நீங்கள் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள் என்கிறார். நிதி மோசடியில் ஈடுபட்டு கோர்ட்டில் பொய்ப் பிரமாண பத்திரம் கொடுத்த வசந்தி ஸ்டான்லி 2010-இல் எழுதிய கடிதத்தில் அவரின் தலைவரின் தேர்தல் வெற்றிக்குப் பிரார்த்தித்துக் கொள்ளச் சொல்கிறார். காங்கிரஸின் ராம்சுப்பு எம்.பியும் சில கோரிக்கைகளை பிரார்த்தனைகளாக்க முன்வைக்கிறார்.

 

 

மோசடி நபர்களிடம் ஏமாறவும், பணம், மானம் மரியாதையை இழக்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் இந்த நபர்கள் தன் அலுவலக லெட்டர்பேடில் மோசடியான பிரசங்கிக்கு அங்கீகாரம் செய்து அனுப்பும் கடிதத்தை அவர் பெருமையாக வெளியிட்டு அதன்மூலம் தன் வணிகச் சந்தையைப் பெரிதாக்கிக் கொள்கிறார். தனக்கு இவர்களுடன் அந்தரங்கமாகத் தொடர்பு உண்டு என்று சொல்லி அவர்களின் மூலம் அரசின் திட்டங்களில் ஆதிக்கம் செலுத்த தன் சர்வதேசத் தொடர்புகளை இவர் உபயோகிப்பார் என நம்ப இடமிருக்கிறது. வின்செண்ட் H பல்லா-, சிறுபான்மையின நலத்துறை அமைச்சர், தன்னுடைய 23-ஆம் தேதியிட்ட 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதக் கடிதத்தில் நாடாளுமன்றம் அமைதியாக நடக்க உறுப்பினர்களுடனான பிரார்த்தனையில் வேண்டிக்கொண்டு, அந்த வேண்டுதலால் பட்ஜெட் கூட்டத்தொடர் அமைதியாக நடந்ததற்கு அவருக்கு நன்றி தெரிவிக்கிறார். மேலும் இது போன்ற கூட்டங்களை நடத்தி நாடு சிறக்க அவர் வழிசெய்ய வேண்டுமாம். இந்தக் கேவலமான கடிதத்திற்காகவே அவர் மீது உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பலாம். நான் கேள்வி கேட்பது அவரின் மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளைப் பற்றியோ, பால் தினகரனைப் போன்ற கள்ளப் பிரசங்கிகளை நம்பி மோசம் போவதைப் பற்றியோ அல்ல. தன்னை மதச்சார்பற்றது (இந்துமதச் சார்பற்றது) என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படும் சோனியா காங்கிரஸ் அரசு– அது தரும் பதவியை அனுபவித்துக்கொண்டு அதன் லெட்டர்ஹெட்டில் போலிப் பிரசங்கிகளை அங்கீகரித்துக் கடிதம் எழுதுவதில் உள்ள தார்மிக நெறியைப் பற்றியே.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வின்செண்ட் பல்லாவோ, வசந்தி ஸ்டான்லியோ அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் என்ன விதமான மூடபழக்கத்திற்கும் முறைகேடான வாழ்க்கை நெறிகளுக்கும் பழகிக்கொண்டிருக்கட்டும். யாரும் அவர்களைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கவில்லை. ஆனால் கவலை, இந்த தேச மக்களின் ஓட்டைப் பெற்றுக்கொண்டு மக்கள் பிரதிநிதி என்ற ஹோதாவோடு யாரையும் அங்கீகரிக்கவோ, நிராகரிக்கவோ இவர்களுக்கு உள்ள உரிமை பற்றியதே? சுனாமி வந்தபோதும் அதன்பின்பும், ‘பாவிகளை அழிப்பதற்காக கர்த்தரின் கோபமே சுனாமி’ என்ற பால் தினகரனை அங்கீகரிக்க, மக்களின் பிரதிநிதியாக அதை வழிமொழிந்து மக்கள் மீது திணிக்க என்ன உரிமை இருக்கிறது இவர்களுக்கு? இறந்து போன அப்பாவி ஏழை இந்து, இசுலாமிய மீனவர்களும் மக்களும் பாவிகள் என்று சொல்ல இந்த படுபாவிகளுக்கும், பரம அயோக்கியர்களுக்கும் என்ன உரிமை இருக்கிறது? கிறிஸ்தவப் பாதிரிமார்களையும் ஏமாந்த ஏழை கிறிஸ்தவர்களையும் வேண்டுமானால் பால் தினகரன் போன்ற பாவிகள்– பரமபிதாவால் தண்டனை அளிக்கப்பட்ட பாவிகள் என்று சொல்ல உரிமை இருக்கிறது. இன்னபிற மக்களைப் பாவிகள் என்று சொல்ல இவர் யார்? செத்துப்போன யாரும் பால் தினகரன் போல சென்னையிலும் டெல்லியிலும் முக்கியமான இடங்களில் அடிமாட்டு விலையில் அடுத்தவர் சொத்தை வம்படியாய் வாங்கியவர்கள் அல்ல. மத்தியக் கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பாவிலும் ரெயின்போ டிவி என்ற பெயரில் தொலைக்காட்சி நடத்தி 300 அமெரிக்க டாலருக்கும், 3000 அமெரிக்க டாலருக்கும் இறை பக்தியை, நம்பிக்கையைக் காசாக்கியவர்கள் அல்ல. 3 fm ரேடியோக்கள் மூலமும் 36,000 நபர்களிடமிருந்தும் தினமும் எந்த மீனவருக்கும் காசு கொட்ட வில்லை. அவர்கள் கடலிலே கஷ்டப்பட்டு உயிரைப் பணயம் வைத்து மீன் பிடித்து தன் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்கள். அவர்கள் எல்லாம் பாவிகள் என்றால் பால் தினகரன்கள், மோகன் சி லாசரஸ்கள் எல்லாம் யார்? குழந்தைகளை பேய், பிசாசுகள் அண்டாமல் காப்பற்றுமாறு கடவுள் 2008-இல் தன்னிடம் நேரடியாகச் சொன்னதாகச் சொல்லும் தினகரன், ஏன் 3000 டாலருக்குக் கீழ் பணம் கொடுக்கும் குழந்தைகளை பரிசுத்த ஆவிகள், பிசாசுகளிடமிருந்து காப்பாற்ற வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அப்படிச் சொல்லியிருந்தால் அந்த ஆவி உண்மையான ஆவியா? அல்லது துர்ஆவியா? கிறிஸ்தவக் கடவுளுக்கு ஏஜெண்ட் ஆவதன் மூலம் நீங்கள் பெருமளவு காசை உழைக்காமல் கொள்ளையடிக்கலாம் என்று யேசு கிறிஸ்து கூறினாரா?

ஒரு தொழிலும் செய்யாமல், வேலையும் செய்யாமல் ”அற்புதசுகக்” கூட்டங்கள், ”ஆசீர்வாதக்” கூட்டங்கள்…. என்று நடத்தி, லட்சக்கணக்கான அப்பாவி மக்களை ஏமாற்றி – மூளைச்சலவை செய்து, மூட மன நோயாளிகளாக்கியே பல கோடிகளைச் சம்பாதித்து, சுகபோக பணக்காரர்களாகி விட்டார்கள், இவர்கள்.

பால் தினகரன் குறித்த 30 உண்மைகள்

மேலும் சில சுட்டிகள்: சுட்டி 1 | சுட்டி 2 | சுட்டி 3 | சுட்டி 4

 

இது போன்ற மோசடிக் கூட்டங்களில் ஆளை மயக்கும் வண்ணங்களில் உடையணிந்து கொண்டும், உச்ச ஸ்தாயியில் கத்திக்கொண்டும் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் மக்களின் கவனத்தை திசைதிருப்பியும், சினிமா கவர்ச்சி நடிகைகளை ஊழியம் செய்ய வைத்தும், அப்பாவி மலைவாழ் மக்களை பெருமளவு மதமாற்ற இவர்களைப் போன்ற மோடி மஸ்தான் சாகசங்கள் தேவைப்படுவதால் கிறிஸ்தவ மல்டி லெவல் மார்கெட்டிங் மத நிறுவனம் இந்தக் குட்டித் திருடர்களை 5000 கோடி,10,000 கோடிகளில் மட்டும் திருடும் அப்போல்ஸ்தர்களைக் கொள்ளையடிக்க அனுமதிக்கிறது. இதன் மூலம் கள்ளத்தனமாக வரும் மதமாற்ற அறுவடைகளை பெரிய கூடாரமான மேலிடம் பார்த்துக்கொள்ளும். இங்கிலாந்தில் இது போன்ற மோசடி மதமாற்ற பிரார்த்தனைக் கூட்டங்கள், ஆவி வருது, உலகம் அழியுது, குழந்தையை சாத்தன் தூக்கும்- போன்ற உளறல்களைப் பொது இடங்களில் நடத்தககூடாது என்று சமீபத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

தங்களின் மத வியாபாரம் பாதிக்கிறது என்றவுடனே இங்கிலாந்தில் அனைத்து மத வியாபாரப் பெருங்குடி மக்களும், அரசுக்கெதிரான போராட்டங்களை ஆரம்பித்தனர். ஆனால் பிரயோஜனமில்லை. இந்தியாவிலும் பாஜகவின் உமா பாரதி பால் தினகரனைப் பற்றி குற்றம் சொன்னவுடன் கிறிஸ்தவ திருச்சபைகளும், அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு செய்தி போடும் மீடியாக்களும், போலி மதச்சார்பற்ற அரசியல்வாதிகளும் அலறித் துடித்துப் பிரச்சினை பண்ணினார்கள்.

 

மோகன் சி.லாசரஸ்

தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடி என்ற சிற்றூரைச் சேர்ந்த, சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்த, திருச்சபையில் குறைவான சம்பளத்திற்கு மணி அடித்து ஊழியம் செய்து சாதாரண வாழ்க்கை வாழ்ந்த சி.லாரன்ஸ் பற்றியும் அவரின் இன்றைய நிலையைப் பற்றியும் பார்க்கலாம். லாரன்ஸ் என்ற பெயர் கவர்ச்சியாக இல்லை என நினத்ததால் அவர் மோகன் சி.லாசரஸாக மாறுகிறார்.. இவர் தினகரன் கூட்டங்களுக்கு அடிக்கடி போய்வந்ததன் விளைவு, இவரும் தினகரனைப் போல் ஒரு ‘கம்பெனி’ தொடங்கக் காரணமாயிற்று! தினகரன் “இயேசு அழைக்கிறார்” என்ற பெயரில் ஏமாற்றியதுபோல, நாலுமாவடி சி.லாசரஸ் என்பவரும் “இயேசு விடுவிக்கிறார்” என்ற பெயரில் தன் தொழிலை ஆரம்பித்தார்! உண்மையில் இந்த மோகனின் தாய்-தந்தை வழி முன்னோர்கள் அனைவரும் இந்து மதத்தவர்கள். ‘பெத்தலேகமி’லிருந்து வந்த கிறிஸ்துவே இவரின் நடிப்பை கண்டு இவர்தான் உண்மையான பெத்லகேம்வாசியோ என நினைக்குமளவு உலக நடிப்பு நடிப்பார். சோனியா காந்தி, கருணாநிதி எல்லாம் இவரிடம் நடிப்புப் பிச்சை வாங்க வேண்டிய அளவு பெரிய நடிகர். இவரது நடிப்பாற்றல் மூலம் மிகக் குறுகிய காலத்துக்குள்ளேயே கோடீஸ்வரனாகி விட்டார்! இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரும் பணக்காரர்களில் இவரும் ஒருவர் என்ற பட்டியலுக்கு வந்து விட்டார்!

தூத்துக்குடி என்.பெரியசாமி குடும்பம்தான் தென் மாவட்டங்களிலேயே, ஒரு தொழிலும் செய்யாமல் முதல் பணக்காரர்களான குடும்பம்! இன்று பெரியசாமியைத் தோற்கடிக்கும் மாபெரும் பணக்காரனாகிவிட்டார், “இயேசு விடுவிக்கிறார்” அதிபர் மோகன் சி.லாசரஸ்! நாலுமாவடி கிராமத்தையே விலைபேசி வாங்கிக் கொண்டிருக்கிறார், இயேசுவின் பெயரால்! “என்னைப் பின்பற்றி வருகிறவன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வரக்கடவன்”– என்றார் இயேசு. ஆனால், இந்த நாலுமாவடி இயேசுவோ, “எல்லாக் கிறிஸ்துவனும் என்னிடம் தந்துவிட்டுப் போங்கள்” என்று ஊழியம்(?) செய்கிறார். மற்ற கொள்ளையர்களைப் போலவே லாசரஸும் மற்றவர்களுக்கு சுகம் அளிக்கிறார். முடவர்களை நடக்க வைக்கிறார். குருடர்களைக் கேட்க வைக்கிறார். செவிடர்களை பார்க்க வைக்கிறார். பாமர மக்களிடம் திருடும் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, நடிகை நக்மாவை வைத்து நடுநடுவே தன் பிரசங்க வியாபாரமும் செய்து சொத்து சேர்க்கிறார். கூடும் கூட்டத்தை வீடியோ படம் எடுத்து, வெளிநாடுகளில் கொண்டு போய் கிறிஸ்துமதப் பிரசாரம் செய்வதாகச் சொல்லி, அங்கிருந்தும் பெரும் தொகையைப் பெற்றுக் கொள்கிறார், மோகன் சி.லாசரஸ்.

இவர் அண்மையில் சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பெரும் பணக்காரர்களுக்கென்று, அற்புத சுகமளிக்கும் ஜெபக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்தக் கூட்டத்திற்கு சினிமா நடிகை நக்மா என்பவரையும் அழைத்து வந்திருந்தார். நடிகை நக்மா அரபு நாடுகளுக்குப் போய் பணம் சம்பாதித்து வருவார். இந்தியாவில் குற்றம் செய்து விட்டு, அரபுநாடுகளில் பதுங்கிக்கொண்டிருக்கும் பலரோடு, நடிகை நக்மா தொடர்புள்ளவர் என்றெல்லாம் கூடப் பத்திரிகைச் செய்திகள் வந்ததுண்டு. அத்தகைய நடிகை நக்மாவோடுதான், “இயேசு ஊழியம்” செய்வதாகச் சொல்லி, கிறிஸ்துவர்களை ஏமாற்றும் மோகன் சி.லாசரஸ் தொடர்பு கொண்டு, நட்சத்திர ஓட்டலில் “ஊழியம்” செய்திருக்கிறார்கள். நாலுமாவடி கிராமத்துக்கும் இருவரும் போய் “அல்லேலூயா” பிரசாரம் செய்திருக்கிறார்கள். சினிமா நடிகைகளை நேரில் காண்பதில் பாமர ஆசை கொண்ட கிராமத்து மக்கள், ஆயிரக்கணக்கில் கூடி, நடிகை நக்மாவின் ‘அல்லேலூயா’ ஆட்டத்தைக் கண்டுகளித்திருக்கிறார்கள். எல்லா வகையான வியாபார விளம்பரத்திற்கும் நடிகைகள் தேவை என்று நினைக்கிறார்கள். நடிகைகளின் கவர்ச்சியை இதற்கும் உபயோகப்படுத்திகொள்ள மத நிறுவனங்களுக்கு என்ன தடை? காசு வரும் என்றால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது தானே அவர்களின் மதக்கொள்கை.

தன் சொந்த நடிப்புத் திறமையாலும், நடிகைகளின் தொண்டு ஊழியத்தாலும் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் 150 மிஷனரிகளை இந்தியா முழுக்க தொண்டு செய்ய அனுப்பி இருக்கிறார். “17 லட்சத்திற்கும் மேற்பட்ட காட்டுமிராண்டி பாவிகளை (கேவலமான வார்த்தை பிரயோகங்கள் மோகன் சி. லாசரஸுடையது) மதம்மாற்றும் அரிய பணியில் இருப்பதால் அயல் நாட்டில் உள்ள வியாபாரக் கனவான்களே, சீமான்களே, சீமாட்டிகளே மனமுவந்து எனக்கு 500 டாலரோ, 5000 டாலரோ போடுங்கள். பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவிடத்தில் ஒரு செண்ட் இடத்தை உங்களுக்குத் தர சிபாரிசு செய்கிறேன்” என்கிறார். குறுகிய காலத்தில் 1 லட்சம் மக்கள் தன் ஏமாற்று வேலைகளால் கிறிஸ்துவைக் கடவுளாக ஏற்றுக்கொண்டார்கள் என்கிறார். கோயிலில் மணியடித்துக்கொண்டிருந்த லாசரஸின் தற்போதைய சொத்து மதிப்பு எப்படியும் 2000 கோடியைத் தாண்டும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

 

வின்செண்ட் செல்வகுமார்

‘வாய்ஸ் ஆஃப் ஜீசஸ்’ மற்றும் ‘ஏஞ்சல் டீவி’ வைத்து ஏமாற்றும் வின்செண்ட் செல்வகுமார் பற்றிய தகவல்கள்–

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வின்செண்ட் செல்வகுமார் கல்லூரிக் காலங்களில் தான் இறை மறுப்பாளராக இருந்ததாகவும், பின்னர் பரிசுத்த ஆவி தன்னை ஒரு நாள் ஆரத்தழுவி உண்மை இன்பத்தை உணர்த்தியதாகவும், அதன் பின்னர் தான் இறை வியாபாரத்திற்கு வந்ததாகவும் வாக்குமூலம் தருகிறார். வெள்ள பெருக்கு, பருவ மழை தவறுவது, பேருந்து விபத்து, சிலிண்டர் வெடிப்பது, நில நடுக்கம், வாந்தி, பேதி முதலான எந்த நிகழ்வுமே கர்த்தரின் இறுதிக்கால எச்சரிக்கையாகவே சொல்லி, அந்த பயத்தை வியாபாரம் செய்வதில் பெருமளவு வெற்றி அடைந்திருக்கிறார். அதில் திருடிய பணத்தில் சுமார் 15 கோடி முதலீட்டில் ஏஞ்சல் டீவி என்ற முழுக்க பொய்யையும், புனைசுருட்டையும் மட்டுமே பரப்பும் டீவியைத் தொடங்கி நடத்தி வருகிறார். பரலோகத்தில் இருப்பதாக சிலரால் சொல்லப்படும் பரம்பிதாவே இவர்களின் தீர்க்கதரிசனங்களைக் கண்டு அஞ்சி நடுங்கி தனக்காகவும் பிரார்த்திக்கொள்ளும்படி 1000 யூரோ கொடுத்துக் கேட்டதாக சிலர் சொல்கிறார்கள். அந்த அளவு துல்லியமாகவும், குரூரமாகவும் சாபம் கொடுக்கவும், பயத்தை ஏற்படுத்தவும் தனிப்பட்ட மனோதத்துவப் பயிற்சி எடுத்திருப்பதாக இவரின் அபரிமிதமான பாலியல் இச்சைகளால் விலகி போன சொந்த மகன் ஜாய்ஸ்டன் நக்கீரனில் தெரிவித்து இருக்கிறார். தான் சிறிது சிறிதாக பெண்ணாக மாறிக்கொண்டிருப்பதாகச் சொல்லி தன் பக்த ஆடுகளின் மனைவிகளுக்கு பரிசுத்த ஆவியை காண்பிக்க இவர் செய்த பாதி முயற்சிகள் தோற்றுப்போய் காவல் நிலையப் பஞ்சாயத்துகள் மூலம் முடிவுக்கு வந்ததை நக்கீரன் புண்ணியத்தில் அனைவரும் அறிந்திருப்பீர்கள். வலுவான ஊடக பலம் கொண்டு மாபெரும் சாம்ராஜ்யம் கட்டியிருக்கும் வின்செண்ட் செல்வகுமாரின் சொத்துகள் பற்றிய விபரம் பெரும் மறைபொருளாகவே இருக்கிறது.

அடுத்த நித்தி என்ற பெயரில் வின்செண்ட் செல்வகுமார் பற்றிய நக்கீரன் கட்டுரை.

சத்யம் டீவியின் சமாளிப்பும் பிரசாரமும்

சகோதரி நக்மா பிரசாரம்

முன்னறிவிப்பு என்னும் மோசடி

 

ஜான் பிரபாகரன்

கிறிஸ்தவ சேவை நிறுவனங்களின் சமீபத்தில் வெளிப்பட்ட மோசடி. பேராயர்.ஜான் பிரபாகரன் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஹிம் ட்ரஸ்ட் என்ற இன்னுமொரு கிறிஸ்தவ மோசடி நிறுவனத்தின் மீது 20-க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் மற்றும் அகில இந்திய கிறிஸ்தவ உரிமை இயக்கக் தலைவர் பாதிரியார் சாம் ஏசுதாஸ், போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் இந்தப் புகாரைக் கொடுத்துள்ளார். தங்களுக்கு மேற்படி ஜான் பிரபாகரன் கமிஷனாகத் தர வேண்டிய 50 கோடி ரூபாயை ஏமாற்றி விட்டார் என்பதே புகார். விபரம் என்னவென்றால் ஹிம் என்ற ஹெவன்லி இண்டர்டினாமினல் மிஷன் (Heavenly Interdenominal Mission Trust)  என்ற மோசடி மிஷனரிக்கு தங்கள் சர்ச் மக்களிடமிருந்து பணம் வசூல்செய்து கொடுத்தால் 10 சதவீதம்  கமிஷன் தருவதாகவும் ,அதை நம்பி மக்களிடம் மிஷனரி மதமாற்றக் காரணங்களுக்காக என்று கூறி வசூல் செய்து மோசடி கிறிஸ்தவ போலி மிஷனரியிடம் கொடுத்ததாகவும் ஆனால் அவர்கள் தாங்கள் உறுதியளித்தபடி கமிஷன் தொகை 50 கோடியை கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும் அதை போலீஸ் கமிஷனர் வசூல் செய்து தரவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.  கமிஷனரிடம் புகார் கொடுத்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த பாதிரியார், ஜான் பிரபாகரன் கூறியதை நம்பி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பாதிரியார்கள் பலரும் ஆலயத்துக்கு வரும் பொதுமக்கள், தெரிந்தவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூல் செய்து கொடுத்தனர். அந்த வகையில், இதுவரை சுமார் ரூ.500 கோடி வரை வசூல் செய்து கொடுத்தனர். இதனால் பணத்தை வசூல்செய்து கொடுத்த சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். போலீஸ் கமிஷனர் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும்” என்று கூறியுள்ளார். வசூல் செய்த 500 கோடியுடன் தலைமறைவான மோசடி கிறிஸ்தவ பாதிரியாரை காவல்துறை வழக்கம்போல வலைவீசித் தேடுகிறது.

இந்தியாவில் உள்ள மோசடி மிஷனரிகள், மினிஸ்டரி என்ற பெயருடன்…

இந்திய மோசடி அறக்கட்டளை பற்றிய செய்தி 

 

சார்லஸ் & ஃபேமிலி

கிறிஸ்துவக் கள்ளப் பிரசங்கிகளின் மூளைச்சலவை– முட்டாள் மோசடிப் பிரசாரம் எந்த அளவுக்குக் கிறிஸ்துவ சமூகத்தைப் பாதித்துள்ளது என்பதற்கு, அண்மையில் கோவை மாநகரத்திலிருந்து வெளிவந்த ஒரு பத்திரிகைச் செய்தியே சான்று. திருச்சியை அடுத்த துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் சார்லஸ் (வயது 43), மத போதகர். இவர் கோவை பாப்பநாயக்கன் பாளையம் அன்னை இந்திரா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது தம்பி செல்வக்குமார் மன அமைதியற்று தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் செல்வக்குமாரை உயிர்ப்பிப்பதாகக் கூறி, அவரது பிணத்தை வைத்து சார்லஸ் 53 நாட்களாக ஜெபம் செய்து வந்தார். இரண்டு மாத காலம் பிணம் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்ததால் அழுகி – புழுப்புழுத்து நாற்றமெடுத்தது. இந்த நாற்றம் அந்த வட்டாரமெல்லாம் பரவ, அப்பகுதி மக்கள் திரண்டார்கள். பிணத்தை உயிர்ப்பிக்க 2 மாதமாக ஜெபம் நடக்கிறது என்கிற உண்மையை அறிந்ததும், மக்கள் ஆத்திரமடைந்து பிரசங்கி சார்லஸ் வீட்டு மீது கல் வீசித் தாக்கினார்கள். கல் வீச்சால் வீட்டுக்கதவு – ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிகள் உடைந்து நொறுங்க, பெரும் பதட்டம் ஏற்பட்டது. இது பற்றிய தகவல்கள் போலீசாருக்குத் தெரிந்ததும், அவர்கள் சென்று செத்துப்போன செல்வக்குமாரின் பிணத்தைக் கைப்பற்றி, மத போதகர் சார்லசை அழைத்துப் போய் விசாரணை செய்தார்கள். செல்வக்குமாரின் பிணம் இருந்த அறைக் கதவை ராஜேந்திரன் என்பவரும் மற்றவர்களும் உடைத்துத் திறந்தபோது, ஆட்கள் வருவது கூட தெரியாமல் சார்லசும், மனைவி குழந்தைகளும் ஜெபம் செய்து கொண்டு இருந்தனர்.

கதவைத் திறந்தவுடன் தாங்க முடியாத துர்நாற்றம் வீசியது. அங்கு மரக்கட்டிலில் செல்வக்குமாரின் பிணம் படுக்க வைக்கப்பட்டு இருந்தது. இறந்து 53 நாட்கள் ஆனதால் பிரேதம் அழுகிப்போய் இருந்தது. அறையின் தரையிலும், சுவரிலும் புழுக்கள் ஓடின. சார்லஸ் குடும்பத்தினர் இந்த அறையில் தினமும் 10 மணி நேரம் முழு இரவு ஜெபம் என்று விடிய விடிய ”உயிர்ப்பித்தல் பிரார்த்தனை” செய்து வந்துள்ளனர்.

சார்லஸ் மூடநம்பிக்கை கொண்டு மனநோயாளியாகி இது போல் செயல்பட்டுள்ளார். இதற்கு உதவியாக மனைவி மற்றும் குழந்தைகளையும் பயன்படுத்தி உள்ளார். சைகோ போல் சார்லஸ் நடந்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் விசாரணையில் மனநோயாளி சார்லஸ் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:

என்னுடைய ஜெபத்தின் மகிமையால் பல அற்புதங்களை நிகழ்த்தி உள்ளேன். குருடர்களுக்குப் பார்வை கிடைத்துள்ளது. முடமானவர்களை நடக்க வைத்துள்ளேன். புற்றுநோயில் இருந்தும் பலரைக் குணப்படுத்தி உள்ளேன். எதற்கெடுத்தாலும் பயப்படும் என்னுடைய தம்பியை ஜெபத்தில் குணப்படுத்த கோவையில் எனது வீட்டுக்கு அழைத்து வந்து பிரார்த்தனை செய்தோம்.

கடந்த ஏப்ரல் 6-ந்தேதி தம்பி செல்வக்குமார், மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக என்னுடைய மனைவி சாந்தி போனில் கூறினார். அப்போது நான் நாகர்கோவிலில் இருந்தேன். இது பற்றி யாரிடமும் சொல்லாதே, ஜெபம் செய்து மீண்டும் தம்பிக்கு உயிரூட்டலாம் என்று என்னுடைய மனைவியிடம் கூறினேன்.

அது போல் அவளும் யாரிடமும் கூறாமல் அறையைப் பூட்டி வைத்தாள். கீழ் வீட்டில் இருக்கும வின்சென்ட் குடும்பத்தினருக்கு மட்டும் இந்த விஷயம் தெரியும். இறந்த என்னுடைய தம்பியை மீண்டும் உயிர்ப்பிக்க ஜெபம் செய்தோம். 90 நாட்களில் தம்பியை உயிர்ப்பிக்க முடியும் என்று நம்பினோம். தம்பி மீண்டும் உயிர்த்தெழுவதற்கான காலகட்டம் வந்த நிலையில் போலீசாரும், பொது மக்களும் கெடுத்து விட்டனர். தம்பியின் ஆவியுடன் பேசினேன். அவனுடைய கை, கால்களில் அசைவு தெரிய தொடங்கியது. அதற்குள் அவனை உயிர்ப்பிக்க முடியாமல் சாகடித்து விட்டனர்.”

— இவ்வாறு போலீசாரிடம் சார்லஸ் திரும்பத் திரும்ப கூறி வருகிறார். இது பத்திரகைச் செய்தி.

கள்ளப் பிரசங்கிகள்,  “அற்புதசுகம்”, “ஆசீர்வாதக் கூட்டம்” என்ற பெயரால் மோசடிப் பிரசங்கம் செய்து ‘காணிக்கை’ என்ற பெயரால் கோடிக் கோடியாகக் கொள்ளையடிப்பதோடு அவர்களது மூளைச்சலவைப் பிரசாரம், எப்படி மனிதர்களை மனநோயாளிகளாக்கியுள்ளது என்பதையும் பார்க்கிறோம்!

-0-

“ஏசுநாதர் முடவர்களை நடக்க வைத்து, குருடர்களைப் பார்க்க வைத்து, தொழுநோயாளிகளைக் குணப்படுத்தி, அப்பங்களைப் பல்லாயிரமாகப் பெருக வைத்து அற்புதங்களைச் செய்தார் என்பதுதான் இன்றும் கிறித்தவத்தின் அடிப்படை நம்பிக்கையாக இருக்கின்றது. உண்மையில் ஏசுநாதர் அவர் காலத்தில் இப்படி சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரின் மேல் அன்பு காட்டினார் என்பதைத் தாண்டி அவர் எந்த அற்புதங்களும் செய்யவில்லை. அப்படி யாரும் செய்யவும் முடியாது. இன்றைக்கு கிறித்தவ நற்செய்திக் கூட்டங்களில் அந்த அற்புதங்களுக்கான (பொய்)சாட்சிகள் செட்டப் செய்யப்பட்டு மேடையேற்றப்படுகின்றனர். இப்படித்தான் மதத்தின் மூடநம்பிக்கை நசிந்து போகாமல் காப்பாற்றப்படுகின்றது. அந்த அற்புதங்கள் உண்மை என்றால் இன்று கிறித்தவ மிசினரிகள் நடத்தும் எண்ணிலடங்கா மருத்துவமனைகளுக்கு என்ன காரணம்? அதற்குப் பதில் தேவ செய்தியாளர்களை வைத்து எல்லா நோயாளிகளையும் சடுதியில் குணமாக்கி விடலாமே? மேலும் ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்புப் போரினால் உறுப்புக்களை இழக்கும் ஈராக், ஆப்கான் நாடுகளைச் சேர்ந்த அப்பாவிகளுக்கும் அந்த உறுப்புக்களை மீண்டும் தருவிக்கலாமே? இப்படி கலப்படமில்லாத பொய்மையின் வலிமை கொண்டுதான் கிறிஸ்த்தவ மத நிறுவனங்கள் இயங்குகின்றன.” என்கிறார் திக-வின் நாத்திகம் ராமசாமி. இத்தனைக்கும் பிறகும் அப்பாவி மக்கள் ஆட்டு மந்தை போல் இந்தக் கள்ள தீர்க்கதரிசிகளின் பின்னே செல்கிறார்கள். பரமபிதாவின் பெயரால் நடக்கும் இத்தனை குற்றங்களையும் கண்டு பரம பிதாவோ, அபரிசுத்த ஆவியோ இவர்களைத் தண்டிக்கட்டும்.

மடமையைப் பரப்பி மக்களை மனநோயாளிகளாக்கி ஏமாற்றுகிற இவர்களின் திருட்டை, பொய்-மோசடியை, ஏமாற்றைத் தடுத்து, மக்களை இந்த மோசடிக்காரர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் நாட்டை ஆளும் அரசுக்கே உண்டு. கள்ளநோட்டு அடிப்பவன், பித்தளையைத் தங்கம் என்று ஏமாற்றுபவன், ரூபாய் நோட்டை இரட்டித்துத் தருவதாக ஏமாற்றுகிறவன், கள்ள லாட்டரிச் சீட்டு விற்பவன், திருட்டு வி.சி.டி. எடுத்து விற்பவன், போலி ஆவணங்களைக் கொடுத்து வங்கிகளில் கடன் பெற்று ஏமாற்றுகிறவன்…. என்று மக்கள் சமூகத்தை ஏமாற்றும் மோசடிக் கொள்ளளைக்காரர்கள் போன்றவர்கள்தான், இந்தக் கள்ளப் பிரசங்கிகளும். ஆனால், அந்த மோசக்காரர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதைப் போல இந்தக் கள்ளப் பிரசங்கிகள்– ஏமாற்றி மோசடி செய்யும் மோசடிக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தன் கடமையை செய்யத் தவறி வருகிறது அரசு.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கோ. ஆலாசியம் on September 3, 2012 at 9:53 am

மிகவும் வருத்தமளிக்கும் செய்திகள் இவை… கடவுளின் பெயரைச் சொல்லி ஏழைகளின் நிலைமையை சாதகமாக்கி கொள்ளையடிக்கும் அவலம். கலியுகம் இது இன்னும் என்ன என்ன அலங்கோலங்கள் அரங்கேறுமோ!

இது அத்தனையும் இந்தியாவில் தான் சாத்தியமாகும். மதத்தின் பெயரில் கொள்ளையடிக்கும் காவிகளையும், ஆவிகளைப் பற்றிப் பேசும் பாவிகளையும். அரசு சிறை என்னும் வேள்வித் தீயில் இட்டால் நாட்டில் பலக் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.

இது போன்ற தீமைகளை சரி செய்ய வேண்டியது அரசின் கடமையே! ஆனால், அங்கே கூடி இருக்கும் பதர்களின் பக்குவம் தான் உலகம் அறியுமே! பிரச்சனை எங்கே ஆரம்பிக்கிறது என்று நோக்கினால்!…

சட்டமன்ற பாராளுமன்ற பிரதிநிதிகளை கட்சிகள் தேர்ந்தெடுக்கும் போது அக்கறை செலுத்தினால் இது போன்ற அநீதிகளை பற்றிய தெளிவானப் பார்வை கொண்ட மன்ற உறுப்பினர்கள் மன்றத்திலே இருப்பார்கள். அதை செய்ய அரசியல் கட்சிகள் துணிவதில்லை காரணம் எப்படியாவது வெற்றிப் பெற்று விட வேண்டும் என்பதே அதன் நோக்கம்.

சரி எங்கிருந்து நல்ல உறுப்பினர்களையும், ஆட்சியாளர்களையும் பெறுவது என்றால் அது தேர்தல் ஆணையத்தின் கையிலே இருக்கிறது. இந்தியாவில் பிறந்த யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற ஒரு வரையறையை மாத்திரமே கொண்டு வேட்பாளர்களை அனுமதிக்காமல் சரியான இன்னும் பல அளவு கோள்களைக் கொண்டு (தகுதிகளைக் கொண்டு) தேர்தல் காலத்திற்கு முன்னமே போட்டி இடுவோருக்கான தகுதி சான்றிதழை வேட்பாளர்களாக நிற்க நினைப்பவர்கள் தேர்தல் ஆணையத்திடம் பெற வேண்டும் அப்படிப் பட்டவர்களைத் தான் அரசியல் கட்சிகளும் நிறுத்த வேண்டும் என்ற ஒரு ஒழுங்கான வரை முறை வருமாயின்..

நல்ல உறுப்பினர்களும், நாட்டைப் பற்றிய அதன் நலனை எப்படியெல்லாம் உழைப்பில் செயலில் சட்டத் திருத்த நடைமுறையில் சரி செய்யலாம் என்ற நல்லோழுங்கு பிறக்கும் அதற்கான நல்ல தூர நோக்குடைய சிறந்த மனிதர்கள் மண்ட உறுப்பினர்களாகவும் வழி பிறக்கும். ஆக கோளாறு எங்கே என்றால் அரசியல் சாசனத்தில்… ஜனநாயக தேர்தல் முறையில் சரியான தேவைக்கு ஏற்ற மாற்று சட்டங்களைக் கொண்டுவராத நிலையிலே…

அப்படி இருக்க இப்படிக் கொள்ளையர்கள் அதிகாரத்திற்கு வருவதை யாரும் தடுக்கமுடியாது… அப்படியே அரசில் இருக்கும் கொள்ளையர்களும் இது போன்ற கொள்ளையர்களின் அடிவருடிகளாகவும் தான் இருப்பார்கள் அதைத் தவிர்க்க இயலாது. அரசு அதன் தூண்களும் சரியில்லாதவரை இது போன்ற ஏமாற்றுக் கார்களின் கைகளின் பாவைகள் தாம் இந்த ஏழை மக்கள்.

பாவம் ஏழை மக்களே… யாவும் ஈசனான ஏசுவிற்கே வெளிச்சம்.

vedamgopal on September 3, 2012 at 12:39 pm

பலசாலியே வெல்லவேண்டும் என்ற மேற்கத்திய விலங்கு உள்ளுணர்வு

மதமாற்றம் என்பது

குயபுத்தியுடன் செயல் படுவது
வன்முறையை தூண்டுவது
கலாசார சீர் அழிவை தூண்டுவது
வலுசண்டையை தூண்டுவது
தனி மனித மத சுதந்திரத்தை பறிப்பது
சமூகத்தில் பிரிவினையை தூண்டுவது
பிறர் நாட்டை ஆக்கிரமிப்பது
மத நல்லிணக்கத்தை அழிப்பது
பயங்கரவாதத்தை தூண்டுவது
பிற மதத்தவர் மேல் ஆதிக்கம் செய்வது
விபசார தொழிலைவிட கேவலமானது

எனவே மதமாற்றம் கட்டாயம் தடைசெய்யப்பட வேண்டும்

கோவி.கண்ணன் on September 5, 2012 at 6:36 am

கட்டுரை நன்றாக இருக்கிறது, இரா.மணி ஐயரும், ஆர் சுசிலா மாமி ரகுநாதன் ஆகியோர் கட்டுரையில் இடம் பெறாதது சற்று ஏமாற்றம் அளிக்கிறது, ஒருவேளை அவர்கள் இந்தக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தால் ‘ஏசு பிரானுக்கு நாங்க என்ன பாவம் செய்தோம், எங்கள் சேவையெல்லாம் பெருசாக வெளியே தெரியவில்லையே’ என்று நொந்து கொள்ளக் கூடும்.

மணி ஐயர் மற்றும் சுசிலா மாமி யாரா ? இங்கே வெவரமாக இருக்கு
http://www.athishaonline.com/2011/08/blog-post_24.html

சக்திவேல் on September 5, 2012 at 7:04 am

கோவி.கண்ணன்,

நீங்கள் குறிப்பிடும் மோசடி கும்பலைப் பற்றி தமிழ்ஹிந்து முன்பு ஏற்கனவே விலாவாரியாக கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் – http://www.tamilhindu.com/2009/08/saadhu-chellappa/

அரசன் on September 5, 2012 at 1:21 pm

வின்சென்ட் சத்தியக்குமார் பற்றிய செய்திக்கு நக்கீரன் லிங்க் கொடுத்திருந்தீர்கள். அந்தத் தளத்திற்குச் சென்று கீழே உள்ள மறுமொழிகளைப் படியுங்கள். ஒருவரும் அந்தச் செய்தியை உண்மை என்று ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. ஒருவர் கூட அந்த மனுஷன் கேடிதான் என்று கமென்ட் செய்யவில்லை. ஒரு வேளை நக்கீரன் தளமே அந்தமாதிரி கமென்டுகளை மட்டும் பில்டர் செய்து போடுகிறதோ என்னவோ.

வின்சென்ட் செல்வக்குமார் இயேசுவின் பிள்ளை என்றே பல மறுமொழிகள் உள்ளன. அப்படியே அவர் இயேசுவின் மைந்தனாக இருந்தால் மதமாற்றத்திற்காக அவர் செய்யும் செலவில் 10%-ஐ தேச நிர்மாணத்திற்காக செலவு செய்யலாமே. அல்லது ஒரு கிராமத்தை தத்து எடுத்து அங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தால் அவர்கள் உண்மையில் இறைமைந்தனாக இருக்கலாம். ரொம்ப போர் அடிக்கிறதென்றால் அவர் நடத்தும் ஏஞ்சல் டிவியைப் பாருங்கள், சரியான காமெடியாக இருக்கும். அதில் சாது என்று ஒருவர் வருகிறார். அவர் எனக்குத் தெரியவில்லை. எவ்வளவு வயதில் மூத்தவராக இருந்தாலும் அவரை “என்னப்பா தம்பி! நான் சொல்றது புரியுதா?” என்றுதான் கேட்கிறார்.

அவ்வளவு கடுமையான ஒரு தியேரிக்கு பி.எச்.டி வகுப்பு எடுப்பதைப் போல, ஏதோ வானத்தில் இருந்து குதித்துவிட்டதைப் போலத்தான் அவர் பேச்செல்லாம் இருக்கும்.

ஓரளவு இந்து இலக்கியங்களில் ஞானமுள்ளோர் இவர் பேச்சைக் கேட்டால் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். தயவு செய்து எல்லோரு ஒரு நாளைக்கு ஒரு அரை மணிநேரமாவது ஏஞ்செல் டிவியைப் பாருங்கள். அவர்கள் செய்யும் பித்துக்குளித்தனங்களைப் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அப்போதுதான் நாளைய சமுதாய இது போன்ற மூடர்களிடம் மாட்டிக்கொள்ளாது. இவர்களுக்குப் பின்னால் நல்ல படித்த மேதாவிகளும் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது.

இப்படி வியாபாரம் செய்யும் பாதிரிகள் எல்லோரும் தங்கள் பின்னாலோ அல்லது முன்னாலோ இருக்கும் இந்து பெயரை ஏன் எடுக்கமாட்டேன் என்கிறார்கள் என்பது புரியவில்லை.(தினகரன், பால் தினகரன், மோகன் சி.லாசரஸ், வின்சென்ட் செல்வக்குமார், சாது, ஜான் பிரபாகரன்,), அந்நிய தேசத்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் ஒன்று முழுமையாக இந்திய பெயரை வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் முழுமையாக அந்நியப் பெயரை வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டுங்கெட்டானாக ஏன் இருக்கிறார்கள். மக்களையுமல்லவா இரண்டுங்கெட்டானாக்குகிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வெறுமனே பிரபலமானோரை மட்டும் சொல்லியுள்ளீரே?
திருவள்ளுவரையும் ம்ஹாத்மா காந்தியையும் மதம் மாற்றும் பாவிகள்.
http://devapriyaji.wordpress.com/2012/09/04/3970/
மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் கிறிஸ்துவத் தமிழ்த் துறை என சாந்தோம் சர்ச் 100% பணத்தில் பி.ஹெ.டி. உளறல்கள் தொடர்கிறது.
http://saintthomasfables.wordpress.com/2010/06/24/christians-and-dravidians/
ஜப்பானியர் புத்தர் பற்றிய ஆய்வுகளுக்கு தந்த பணத்தில் மோசடி செய்த ஜான் சாமுவேல்
http://saintthomasfables.wordpress.com/2010/06/27/john-samuel/
ஜான் சாமுவேல் ஆசியவியல் கழக ஊழல்-பல லட்சங்கள் கையாடல்
கிறுஸ்துவம் வீழ்த்திய தமிழ் -திராவிட உணர்வு

உண்மையில் வரலாற்றில் இயேசு என ஒருவர் வாழ்ந்தாரா- ஆதாரம் இருந்தால் தேவப்ரியா சாலமனுக்குத் தரவும்.
http://pagadhu.blogspot.in/2012/06/blog-post_24.html
http://pagadhu.blogspot.in/2012/08/blog-post_4.html
கிறிஸ்துவின் மரணம் ஆதாம் பாவத்தைப் போக்கியதா?
http://pagadhu.blogspot.in/2012/07/blog-post_25.html

அனாதை இல்லம், பள்ளிகூடம் நட்த்துகிறேன் எனக் கூறி குழந்தைகளை கற்பழிக்கும் பாதிரியார்கள் நடத்தி மாட்டியவர்கள் மட்டுமே இங்கு
கே.ஏ.பால் , பி.பி.ஜாப்
பாதிரியார்- மதபோதகர் பலான விதம் -http://newindian.activeboard.com/t34454994/topic-34454994/?page=14



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அத்விகா on September 11, 2012 at 8:41 pm

சுவிசேஷ மதமாற்ற கும்பல், 1999 -ஆம் ஆண்டில் பிரச்சாரம் செய்து, 2000 – ஆண்டிலேயே உலகம் அழிந்துவிடும் – எனவே அதற்கு முன்னதாக கர்த்தருக்குள் ஐக்கியம் ஆகி பரமபிதாவின் அருளை பெற்று மோட்சம் செல்லுங்கள் என்று புரட்டி தள்ளினார்கள். ஆனால் உலகம் ஒன்றும் ஆகவில்லை. கர்த்தர் இவர்களை வேடிக்கை பார்த்து எள்ளி நகையாடினார். இப்போது மாயன் கலாசாரம் அளித்துள்ள கண்டுபிடிப்புக்களின்படி , 2012 – டிசம்பர் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரங்களில் உலகம் அழிந்துவிடும் என்று , மதமாற்ற ஆபிரகாமிய கும்பல் மீண்டும் கர்த்தருக்குள் அடைக்கலம் ஆகிவிடுங்கள் என்று பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்கள். ஒரே சிரிப்பாக இருக்கிறது. இந்த வருட இறுதிக்குள் , அமெரிக்காவின் சில பகுதிகள் பாதிக்கப்படலாம். அதற்காக , உலகமே அழிந்துவிடும் என்று பொய் சொல்லி , மதமாற்ற வேலைகளில் ஈடுபடும் இவர்களை நினைத்தால் ஒரே நகைச்சுவை ஆக உள்ளது. 2012 – முடிவில் சிறு பாதிப்புக்கள் ஏற்படலாம்.ஆனால் உலகம் அழியாது. 2013 – லும் உலகம் இருக்கும். இந்த மதமாற்ற பிரச்சாரம் செய்யும் ஏஜெண்டுகளும் உயிருடன் இருப்பார்கள். மதமாற்ற கும்பல்கள் அழிந்தால் உலகுக்கு நல்லது.மனித இனம் அமைதியாக வாழும். இந்த ஆண்டில் மத மாற்ற ஆபிரகாமிய மத ஏஜெண்டுகள் அழிய இறைவன் அருளட்டும்.

மு.நாட்ராயன் on September 15, 2012 at 8:27 pm

அமெரிக்காவில் அறிவியல் வளர்ந்து வருவதாக கூறிக்கொண்டு இந்தியாவில் முட்டாள்தனத்தை வளர்க்கிறார்கள். மூடநம்பிக்கை கிருத்துவ பாதிரிகலால்தான் வளர்கிறது. கன்னியாஸ்திரிகள் பலரை உருவாக்கி வெளிநாட்டிலிருந்து வரும் பாதிரிகளுக்கு விருந்து வைக்கிறார்கள். என்ன கொடுமை பாருங்கள். பாதிரிகளை நாட்டைவிட்டு விரட்டியடித்து நமது பண்பாட்டை பேணி காக்கவேண்டும்.

GEROLD on June 10, 2013 at 10:23 am

இதை எழுதியவன் நிச்சயம் ஒரு கூமுட்டை , இன்று சாமியார்கள் என்ற போர்வையில் ஏராளமான காம கோட்டிகள் உலா வருகிறார்கள் , இவர்கள் செய்யும் காம பித்தலாட்டங்களை இந்த நாடே அறியும் , ஒரு மதத்தை குற்றம் சொல்லும்முன் உன்னுடைய மதத்தை எண்ணிப்பார்,
எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதைவிட , எழுத்தறிவித்தவன் கிறிஸ்தவன் என்றால் மிகையாகாது , இந்த நாட்டிற்க்கு கிறிஸ்தவர்கள் செய்த கல்வி சேவை , மற்றும் நாகரீகத்தை கற்று கொடுத்தது இதையெல்லாம் எண்ணிப்பார்

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

June 10, 2013 at 3:07 pm

Con evangelists in TN
Friday, Aug 4, 2006, 22:40 IST
Arun Ram
Even as religious conversions through enticement continue to be a matter of debate across the country, some self-proclaimed evangelists have swindled crores of rupees after “converting” thousands of Hindus in several villages in Tamil Nadu, promising free houses that were never built.
They escape with crores after fake conversions

CHENNAI: Even as religious conversions through enticement continue to be a matter of debate across the country, some self-proclaimed evangelists have swindled crores of rupees after “converting” thousands of Hindus in several villages in Tamil Nadu, promising free houses that were never built.

The conversions that took place in 2004- 2005 came to light only recently, when complaints were filed with the Madurai police that D Dhinakaran, who called himself the founder president of the Asian Evangelical Church and Union Society, disappeared with at least Rs1.65 crore collected from villagers.

Dhinakaran and his brothers Stephen, Mosses, Joseph and Satyamurthy collected Rs 10,000 to a few lakhs of rupees each from more than 1,000 people as “seed money” for constructing “free houses” to the neo-converts. Many villagers pledged their gold to borrow money for paying the tricksters. (D Dhinakaran is not to be confused with well-known father-son duo of evangelists Paul Dinakaran and DGS Dinakaran.)

“We have registered a case of cheating and have arrested Stephen, who has confessed to the crime. We believe Dhinakaran has escaped to some foreign country. The racket is spread beyond the state borders (the society had another office in Bangalore) and we are planning to hand over the case to the Crime Branch – Criminal Investigation Department (CB-CID),” deputy commissioner (crime) P Nagaraj told DNA.

Nagaraj said the complaint and the case are against financial fraud and not religious conversion. The case has angered Christian community leaders.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அத்விகா on June 10, 2013 at 9:07 pm

இந்து மதம் ஒரு தனி நபரால் உருவாக்கப்பட்டதல்ல. இங்கு இறைவனே தலைவன். மற்றபடி பீடாதிபதிகள் அனைவரும் ஒரு சிறு ஆசிரியர் போலத்தான். ஒரு பள்ளியில் ஓர் ஆசிரியர் தவறு செய்தார் என்பதற்காக பள்ளியையே மூடிவிடமாட்டார்கள். தவறு செய்த ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை சட்டபூர்வமாக எடுக்கப்படும். ஆனால் அரசியல் வாதிகள் போபர்சு பணத்தை கொள்ளை அடித்து வெளிநாடுகளுக்கு கொண்டுபொஇவிட்டனர். டூ ஜி பணமும் அப்படித்தான் போனது. நண்பர் ஜெரால்ட் அவர்களே, தவறு எங்கு நடந்தாலும் சுட்டிக்காட்டி , திருந்த வைக்க வேண்டும் என்பதே நம் எண்ணம். மூடி மறைப்பது உங்கள் எண்ணமா ? மேலும் இந்துமதம் ஒரு மடாதிபரை மட்டும் வைத்து இயங்குவது அல்ல. இங்கு ஆயிரம் மடாதிபதிகள் உள்ளனர்.

டிசம்பர் 2012-லே உலகம் அழியப்போகிறது என்று சொல்லி கூக்குரல் இட்டு, மோசடி செய்த இவர்கள் இனியாவது திருந்துவார்களா ? ஜெரால்ட் அவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள். இதுபோன்ற மோசடிக்காரர்களுக்கு இனியாவது சப்போர்ட் செய்யாதீர்கள்.

Mr. Gerald கூமுட்டை கோழிமுட்டை என்ற உளரல் இங்கு அவசியமில்லை. ஸ்ரீ வீர. ராஜமாணிக்கம் ஆதாரப்பூர்வமாகவே எழுதியுள்ளார். ஆதாரங்களோடு மறுக்க முடியுமா உங்களால். பல பின்னூட்டங்களும் திரு ராஜமாணிக்கத்தின் கருத்துக்களுக்கு ஆதாரங்களை கொடுத்து வலு சேர்த்துள்ளன.
மிஸ்டர் ஜெரால்டு
“எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதைவிட , எழுத்தறிவித்தவன் கிறிஸ்தவன் என்றால் மிகையாகாது , இந்த நாட்டிற்க்கு கிறிஸ்தவர்கள் செய்த கல்வி சேவை , மற்றும் நாகரீகத்தை கற்று கொடுத்தது இதையெல்லாம் எண்ணிப்பார்”. எழுத்தறிவித்தவன் கிறிஸ்தவனா? எதற்கு பைபிள் படிக்கவா? இல்லை அறிவியல் படிக்கவா? அறிவியலே தவறு என்பது கிறிஸ்தவமே.
சேவை என்பது எதிர்பார்ப்போடு செய்யப்படுவதல்ல. ஆக மதமாற்றத்திற்காக செய்யப்படும் எந்த ஒரு செயலும் சேவையல்ல. எந்த நாகரிகம் பாலைவன கிறிஸ்தவத்திற்கு சொந்தமானது கிரேக்க நாகரீகமா? ரோம நாகரீகமா? இல்லை மெசபடோமிய நாகரீமா? ஏன் என்றால் சிந்து சமவெளி நாகரீகம் தான் எங்களுடையதாயிற்றே. நாகரீகம் என்றால் என்ன? என்று பாலைவனத்து மதங்கள் எங்களுக்கு சொல்வதா? நாகரீகங்களை அழித்த பண்பாடுகளை அழித்தொழித்தவர்கள் சொல்வதா?

வீர. ராஜமாணிக்கம் on June 11, 2013 at 2:39 pm

திரு .ஜெரால்டு அவர்களே கிறிஸ்த்தவம் தான் கல்வியை கொடுத்தது என்று உளறிக்கொட்ட உங்களுக்கு மனசாட்சி தேவைப்படாது. ஏனெனில் வரலாறு தெரியாத முழு நிர்மூடர்கள் தான் இப்படி உளறுவார்கள். இந்த தேசம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய நாடு.ஒவ்வொரு துறையிலும் பல்லாயிரக்கணக்கான முன்னோடிகள் இருந்த பெருமை மிகு தேசம். உலகிற்கே முன்னோடியாக ஆதிகவியின் மொழிகளில் உள்ள வேத ஸ்ருதிகளை கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? ராமாயண, மகாபாரத காப்பியங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? வேத , வேதாந்த நூல்களின் எண்ணிக்கை தெரியுமா? உங்களுக்கு , மருத்துவம், வான சாஸ்த்திரம் , தத்துவம், வாழ்க்கை முறை, பிரபஞ்ச அறிவியல் என இந்திய ஞானிகளின் பார்வை படாத இடமே இல்லை . ஏசு கிறிஸ்து என்று ஒருவர் இருந்ததாக நீங்கள் நம்பும் 2000 வருடத்தில் இந்த பாரத தேசத்தின் கல்வி நிலை பற்றி தரம் பால் எழுதிய a beautiful tree என்ற நூலை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வாய்ப்பும் , அறிவும் இருந்தால் அதை படித்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்: கிறிஸ்த்தவ கைக்கூலிகள் வரும்முன்னர் இந்தியர்கள் என்ன படிக்காமல் ஆடு, மாடு மேய்த்து கொண்டிருந்ததாகவா நினைத்து கொண்டிருக்கிறீர்கள். பாலைவனத்தில் ஒட்டகம் மேய்த்து கொண்டும், பன்றி பிடித்துக்கொண்டும் நீங்கள் இருந்த போது இங்கே மிகப்பெரிய நாகரீகம் இருந்து வந்திருக்கிறது.

வீர. ராஜமாணிக்கம் on June 11, 2013 at 2:44 pm

எழுத்தறிவித்தவன் கிறிஸ்த்தவனா என்ன கேடு கெட்ட கேவலமான வார்த்தையை சொல்கிறீர்கள், மதம் மாற்றுவதற்காக எங்கள் மக்களை பிரிவினைவாத முறையில் பிரித்து மதம் மாற்றி மனித அறுவடை செய்யும் கயமைத்தனம் மிகுந்த கீழ்த்தரமான அக்றிணைகளான கிறிஸ்த்தவ மதம் மாற்றிகளுக்கு என்ன தகுதி இருந்தது. கல்வி அறிவை கேள்விப்பட்டிராத நீங்கள், 5000 ஆண்டுகளுக்கு முன்பே காவியம் படைத்த எங்கள் இந்து சமூகத்திற்கு கல்வி கொடுத்தீர்களா? வரலாறு தெரியாமல் உளறுவதற்கு ஒரு வரையறை வேண்டாமா? ஆர்யபட்டா, பாஸ்கரா,முதல் வராகமிகிரர்,முதல் அரிய கண்டுபிடிப்புகளையும் , பூஜ்யத்தையும் கொடுத்த என் தேசத்திற்கு கல்வி கொடுத்தது, பாலைவனத்தில் ஒட்டகம் மேய்த்து கொண்டிருந்த பாலைவன அடிமைகளான கிறிஸ்த்தவர்களா ? கொஞ்சம் நிதானமாக உளறுங்கள்.

வீர. ராஜமாணிக்கம் on June 18, 2013 at 9:43 am

“இதோ யேசு வந்துக் கொண்டிருக்கிறார்”. “வந்து விட்டார்”. “அடுத்த வருடம் வருகிறார்”. “தீர்ப்பு நாள் வந்துவிட்டது”. என்று இப்படி பல வருடங்களை குறிப்பிட்டு, பல பிரச்சாரங்கள் நடப்பதை கேட்டு கேட்டு, நாம் கிட்டத்தட்ட அலுத்தே போய் விட்டோம்.

நமக்கு தெரிந்து 2000ல் யேசு நிச்சயம் வருவார் என்று ஒரு பெரும் பிரச்சாரம் நடந்தது. அவர் வந்ததும் நல்லவர்களை மட்டும் உயிர்தெழ‌ (அழுகி போன, மக்கி போன, எலும்புகள் கூட கரைந்து போன‌ பிணங்கள் எல்லாம் சவப் பெட்டிகளில் உயிர்தெழுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றன) வைத்து, கூட்டிக் கொண்டு போய் விடுவார் என்று பயமுறுத்தினார்கள். எதுவுமே நடக்கவில்லை.

என்ன நடந்தது ? இந்த பயமுறுத்தலால், உலகமெங்கும் பல அப்பாவிகள் கிறிஸ்துவத்திற்கு மாறினார்கள்.

அடுத்து இப்போது 2012ம் ஆண்டு மீண்டும் வருவார் என்று பல இவாண்ஜிலிஸ்டுகள் சொல்லத் தொடங்கினர், விளைவு பலர் மாறினர்.

இதற்கு முன்னும் இப்படித்தான் பல ஆண்டுகளை அறிவித்துக் கொண்டே வந்துள்ளனர், பல பிரிவுகள்.

இப்படித்தான் ஆப்ரிக்காவின் உகாண்டாவில், 1980 களில் கன்ணி மேரியின் தரிசனம் கிடைத்தது என்று தொடங்கப்பட்ட ஒரு கத்தோலிக்க பிரிவு, தீர்ப்பு நாள் என்று ஒரு நாளை அறிவித்தது. அந்த நாள் உறுதியாக வந்து விடும் என்கிற நம்பிக்கையில் தங்களுக்குள் உடலுறவு வைத்துக் கொள்வதை கூட நிறுத்தியது. கி.பி. 2000ல் அந்த குறிப்பிட்ட தீர்ப்பு நாளில் ஒன்றும் நடக்காததால் பலர் போதகர்களிடம் கேள்வி எழுப்ப தொடங்கினார்கள். அதனால் மற்றோரு தீர்ப்புநாள் அறிவிக்கப்பட்டது. அந்த நாளில் (மார்ச் 17ம் தேதி) அனைவரும் ஒன்று கூடி தங்கள் (கிட்டத்தட்ட ஆயிரம் பேர்) ஆண்மாவின் விடுதலையை கொண்டாடுவதாக மூளை சலவை செய்யப்பட்டு, அதன் உச்சக்கட்டமாக தங்களை தாங்களே எரியூட்டிக் கொண்டும், விஷம் அருந்தியும் இறந்தனர். (சிலர் இதை திட்டமிட்ட படுகொலை என்றும் சொல்கிறார்கள்)

யூதர்களோ யேசு என்பவரே ஒரு போலி தூதர், அவர் யூத அறிவிப்புகளிள் குறிப்பிட்டது போல் இல்லை. ஆகையால் அவர் ஆண்டவனின் தூதரும் இல்லை அவர் வரப்போவதும் இல்லை என்கிறார்கள்.

கிறிஸ்துவத்தில் 41000 பிரிவுகள் இருப்பதாக சொல்கிறார்கள். ஒவ்வொரு பிரிவும் தங்களுடையதுதான் உண்மையான கிறிஸ்துவம் என்றும், தங்கள் பிரிவே யேசுவின் உண்மையான வழிகாட்டிகள் என்றும் சொல்லி கொள்கிறார்கள்.
இப்படி இந்த 41000 பிரிவுகளும், யேசுவின் இரண்டாம் வருகையை குறித்து ஆளுக்கொன்றாய் அடித்து விட்டு கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் செயின்ட் பால் என்பவரின் கூற்றுப்படி (கி பி இரண்டாம் நூற்றாண்டு) யேசு உங்கள் வாழ்நாள் முடிவதற்குள்ளேயே வருவார் என்று அக்கால கிறிஸ்துவர்களிடம் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் 2013 ஆண்டுகள் கழிந்தும் எந்த சுவடும் தெரியவில்லை. பைபிளிலும் அத்தகைய வசனங்களை பார்க்கலாம்.
[“Remember that all these things will happen before the people now living have all died.” (Matthew 24:34 TEV)]

ஜெகோவா போன்ற ஒரு சில பிரிவுகள், யேசு உருவமில்லாமல் வந்து சென்றுவிட்டார் என்று அடித்து விடுகின்றன.
பெந்தகோஸ்டு போன்ற சில பிரிவுகள், நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு ஜெபிக்க தொடங்குங்கள் உங்கள் ஹிருதயத்தில் யேசு வருவார் என்று சொல்லி பல கோடி சம்பாத்தித்து விட்டன.

ஆக இப்படி கத்தோலிக்கத்தின் பல பிரிவுகளும், ஈஸ்டர்ன் ஆர்த்தடாக்ஸின் பிரிவுகளும், ஓரியன்டல் ஆர்தடாக்ஸ், கிழக்கு சபைகள், எஸோடரிக் சபைகள், செவந்த் டே, ஜெகோபைட், ப்ராட்டஸ்டன்ட் மற்றும் அதன் பல்வேறு பிரிவுகள் என்று பல விதமான யேசு திரும்புதல் குறித்த கதைகளையும், தேதிகளையும், முறைகளையும் அள்ளி விடுகின்றன. அப்பாவி மக்களிடம், “வருகிறார், வருகிறார்” என்று சொல்லி மதவியாபாரத்தை பெருக்கி, சம்பாதிக்கின்றன.

சுவர்கத்தில், பிதாவின் வலப்புறத்தில் அமர்ந்திருக்க கூடிய அவரின் மகன், கூடிய விரைவில் தேவதை கூட்டங்களுடன், பெரும் மேளத் தாளத்துடன் வந்திறங்கும் வரை, இவர்கள் வியாபாரம் நிற்கப்போவதில்லை. ஆனால் அவர் வருவாரா ?

வீர. ராஜமாணிக்கம் on June 18, 2013 at 9:46 am

யேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார் ? முதலில் அவர் யார் ? அவர் இருந்தாரா இல்லையா என்பதை குறித்து பேசுவோம் வாருங்கள்.

யேசுநாதர் என்று ஒருவர் இருந்தார் என்று வெள்ளையர்களின் கதைகள் சொல்கின்றன. மேத்யு, மார்க், ஜான், லூக் ஆகிய நால்வர் தந்த செய்திகளை வைத்தே யேசு என்று ஒருவர் இருந்தார் எனும் புதிய ஏற்பாடு இந்த‌ உலகத்துக்கு தெரிய வந்தன.. அந்த நால்வரை குறித்த விவரங்கள் ஏதும் இல்லை. இந்த உலகத்தில் உள்ள எந்த மனிதருக்கும், இவர்கள் யார் ? எப்போது ? எங்கே ? இதை எழுதினார்கள் என்று தெரியாது.

இந்த நால்வரின் மூலமாக உலகுக்கு தெரிய வந்த செய்திகள் (அதாவது நற்செய்தி எனும் காஸ்பெல்) ஒன்றோடு ஒன்று முரன்படுகின்றன. இருப்பதிலேயே மார்க் அவர்களின் செய்திதான் பழமையானது என பைபிள் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், அது சிறியதாகவும், எளிமையாகவும் இருக்கிறது என்பதுதான். மேத்யு, மற்றும் லூக்கின் செய்திகள் இந்த “மார்க்” அவர்களின் செய்தியின் விரிவாக்கமே என்றும், அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால் மார்க்கின் செய்தியில், கன்னி மேரியின் பிறப்பை குறித்தோ, யேசுவின் மலை பிரசங்கம் குறித்தோ, மற்றும் யேசு என்பவர் வாழ்ந்தார் என்பதற்கான‌ முக்கியமான தகவல்களோ இல்லை. இந்த தகவல்கள் மேத்யு மற்றும் லூக்கின் செய்திகளிலேயே சேர்க்கப்பட்டுள்ளன.

அடுத்து இந்த அடிப்படையான மார்க்கின் செய்திகள், அதற்கு முன் இருந்த “ஒரிஜினல் மார்க்” எனும் ஆவனத்தில் இருந்து விரிவுபடுத்தப்பட்டவை. அந்த உண்மையான “ஒரிஜினல் மார்க்” எனும் ஆவனம் சர்சுகள் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே அழிந்துவிட்டது என்பது உண்மை. ஆக அனைத்துக்கும் ஆதாரமாய் இருக்கும் அந்த “ஒரிஜினல் மார்க்” யாரால், எப்போது, எதைப் பற்றி, என்ன தகவலோடு எழுதப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது.

ஜானின் செய்திகளோ சரித்திர முக்கியத்துவம் இல்லாத ஆவனங்கள் என்று கிறிஸ்துவ அறிஞர்களால் ஒத்துக் கொள்ளப்பட்டவை. அது யேசு என்பவருக்கு கிரேக்க தத்துவங்களின் தன்மைகளை கலந்து, இறைத்தன்மையோடு அவர் இருந்திருக்க கூடிய புரிவுகளை கொண்ட அறிக்கை மட்டுமே என்கிறார்கள். ஆக மேத்யு, மார்க் மற்றும் லூக்கின் செய்திகள் வெறும் தோராயமாக‌ எழுதப்பட்ட (Synoptic Gospels) என்று சொல்கிறார்கள். இந்த மூவரின் செய்திகளுக்கும், ஜானின் செய்திகளும் எண்ண ரீதியில் எதிர்மறையாய் உள்ளன.

ஆக இந்த முதல் மூன்று செய்திகளுக்கும் மற்றும் நான்காவது செய்திகளுக்கும் இடையே. இரு வேறு விதமான யேசு காணப்படுவதை எல்லா விமர்சகர்களும் ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் இவை இரண்டு முரண்பாடுகள் மட்டும் அல்ல, உண்மையில் மூன்று உள்ளன. மார்க்கின் கூற்றுப்படி யேசு ஒரு மனிதர். மேத்யு மற்றும் லூக்கின் கூற்றுப்படி அவர் ஒரு தேவன். ஜானின் கூற்றுப்படி அவர் ஒரு இறைவன்.

யேசு எனும் ஒருவர் இருந்தார் என்பதற்கு சாட்சியாய், ஆதாரமாய் உள்ள இந்த செய்திகள் அவர் இறந்ததாய் சொல்லப்படுகிற காலத்தில் இருந்து, கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு இருந்ததாய் எந்த விதமான சிறு ஆதாரங்களும் இல்லை. கிறிஸ்துவ ஆய்வாளர்களுக்கு இந்த செய்திகள், எப்போது, எங்கே புனையப்பட்டன, என்பதை சொல்ல முடியவில்லை. கிறிஸ்துவ அறிஞர்கள் சில‌ அனுமானங்களோடு, மார்க்கின் முதல் செய்தி யேசு பிறந்ததாய் சொல்லப்படுவதற்கு பின் எழுபது ஆண்டுகள் கழித்து எழுதப்பட்டது என்றும், லூக்கின் செய்திகள் 110 ஆண்டுகள் கழித்து என்றும், மேத்யுவின் செய்திகள் 130 ஆண்டுகள் கழித்து என்றும், ஜானின் செய்திகள் 140 ஆண்டுகள் கழித்து என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் முதல் முதலில் “இரினியஸ்” என்கிற கிறிஸ்துவ பாதிரியார் ஆதார பூர்வமாக இந்த மேத்யு, மார்க், மற்றும் லூக்கின் செய்திகளை மேற்கோள் காட்டியது கி.பி 190 ஆம் ஆண்டில்.

வால்டர் ஆர் கேஸ்ஸல்ஸ் (Walter R. Cassels) எனும் அறிஞர் குறிப்பிடுகிறார். “யேசு என்பவர் வாழ்ந்தார் என்பதற்கு அவர் இறந்த பிறகு கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு எந்தவிதமான செய்திகளும் இல்லை. ஒருவர் உயிரோடு இருக்கும் போது எழுதப்படாமல், கிட்டதட்ட நூற்று ஐம்பது ஆண்டுகள் கழித்து அவரை குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளதை எப்படி ஆதாரமாக கொள்ள முடியும் ? இன்று ஒரு மனிதன் நூற்றி ஐம்பது வருடம் முன்பு வாழ்ந்தான் என்பதை எந்த ஆவண‌ங்களும், ஆதாரமும் இல்லாமல் எழுதினால் அது கற்பனையா ? சரித்திரமா ?”

யேசுநாதர் என்று சொல்லப்படுபவர் கதைப்படி யூதர். அவரின் சீடர்கள் யூத மீணவர்கள். அவரின் மொழி அன்றைய பாலஸ்தீனத்தில் பேசப்பட்ட “அராமைக்” மொழியாக‌தான் இருக்க வேண்டும். ஆனால் அவரின் செய்திகள் (காஸ்பெல்கள்) கிரேக்கத்தில் எழுதப்பட்டுள்ளன. அவைகள் எந்த மொழியிலிருந்தும் மொழிப்பெயர்க்க பட்டவையும் அல்ல. ஆக அயல்நாட்டு மொழியில், அயல்நாட்டு செய்தியாளர்களால், அறியப்படாத மனிதர்களால், அவர் இறந்ததாக சொல்லப்படுகிற காலத்தில் இருந்து பல தலைமுறைகள் கழித்து எழுதப்பட்டவைதான் யேசு என்பவர் இருந்தார் என்பதற்கு ஆதாரமாய் இருக்கிறது.

அத்தனை ஆதாரங்களும் உள்ள மகாபாரத்தை “மித்” (myth ) என்கிறார்கள். இந்த ஆதாரமில்லாத யேசு கதையை சரித்திரம் என்கிறார்கள், வெள்ளைக்கார துரைமார்களும் அவரின் உள்ளூர் ஏஜண்ட்களும். கோடிக்கணக்கில் செலவழித்து பிரச்சாரம் செய்வதாலும், திரும்ப திரும்ப ஒன்றை சொல்வதாலும், எந்த கட்டுக் கதையையும் நம்ப வைத்து விடலாம் என்பதற்கு இது ஒரு சான்று.

வீர. ராஜமாணிக்கம் on June 18, 2013 at 9:50 am

சில கருத்தாக்கங்கள், சிந்தனைகள் உலகையே அழிக்க வல்லவை, சிந்தனைகளால் எப்படி ஆக்கபூர்வமான விளைவுகள் ஏற்படுகிறதோ, அப்படி எதிர்மறையான விளைவுகளும் ஏற்படும். அப்படியான ஒரு சிந்தனை தான் பாலை வன மதங்கள்,கிறிஸ்த்தவம் . இந்த சிந்தனையால் அழிந்தவர்கள் பல்லாயிரம் கோடி பேர். பூமியின் பாரத்தை குறைத்தது என்ற அளவில் மட்டுமே நான் கிறிஸ்த்தவத்தை வரவேற்பேன்

நண்பர் ஸ்ரீ வீர. ராஜமாணிக்கம் பைபிள் மற்றும் இயேசு கிறிஸ்து ஆகியவற்றின் வரலாற்றுத்தன்மையை ஆணித்தனமாக மறுத்திருக்கிறார். பாராட்டுக்கள். இது குறித்து இன்னும் ஆழ்ந்து விரிவாக ஒன்றிரண்டு கட்டுரை எழுதும் படி அவரை வேண்டுகிறேன்.
ஸ்ரீமதி அத்விகா அவர்கள் ஏசு தேவகுமாரன் என்பதை ஹிந்துக்கள் ஏற்பதாகக்கூறியுள்ளார். அதனை ஸ்ரீ வீர.ரா மறுத்துள்ளார். உண்மையாகவே ஹிந்துக்களில் பெரும்பாலானோர் இறைவனுக்கும் ஆன்மாக்களுக்கும் உள்ள உறவு பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள உறவென்று நம்புகின்றோம். கிறிஸ்தவத்தை ஒரு சமயமாக ஏற்கும் அண்ணல் காந்தியடிகள் கூட இயேசு நாதர் தேவகுமாரன் என்பதையோ. அந்த தேவகுமாரனை பலிகொடுத்ததை நம்பினால் நமது பாவங்கள் கழுவப்படும் என்பதையோ நிராகரிக்கிறார். நாம் எல்லோரும் தேவ குமாரர்கள் குமாரத்திகள் என்பதே ஹிந்துசமயத்தின் கருத்து.

viswanathan on June 18, 2013 at 6:41 pm

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் (அல்லது தற்போதைய science இன் அசுரத்தனமான வளர்ச்சியின்படி விந்துவும் கருமுட்டையும் செயற்கை முறையில்) சேர்ந்தால் மட்டும் சிசு உருவாகும் என்பது அறிவியல் உண்மை ஆனால் கன்னி மேரி யின் womb ல் பரிசுத்த ஆவி (ஆவியா? அது எப்படிய்ருக்கும்?) புகுந்ததால் அவள் pregnant ஆனாள் என்றால் அறிவுள்ள யாராவது ஏற்பார்களா? சரி போகட்டும். ஒரு சிசு வளர 300 நாட்கள் தேவை. ஆனால தேவமாதா கருவுற்ற நாள் டிசம்பர் 8 என்கிறார்கள். “கிறிஸ்துமஸ்” (அதாவது இயேசுவின் birthday ) டிசம்பர் 25 என்று கூறுகிறார்கள். 17 நாட்களுக்குள்ளாக அவர் பிறந்துவிட்டார? அல்லது 1 வருடம் 17 நாட்களுக்கு (அதாவது 382 நாட்கள்) பிறகு பிறந்தாரா? இதற்கு எந்த தேவகுழந்தையாகிலும்(=கிறிஸ்தவர்) பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.
இயேசு என்ன பாம்புக்கும் கீரிபிள்ளைக்கும் சண்டைவிட்டு வேடிக்கை காட்டும் ஒரு மோடி மஸ்தானா? (1) “காப்பர் நகூம்” என்ற ஊரை சேர்ந்த “ரைஜஸ்” என்பவரின் மகள் இறந்துவிட்டாளாம் . அந்த பிணத்தை பார்த்து இயேசு “பெண்ணே எழுந்திரு” என்றாராம்! அந்த பிணமும் எழுந்து உட்கார்ந்துகொண்டதாம்! (2) 12 ஆண்டுகள் உதிரபோக்கால் அவதிஉற்ற ஒரு பெண் ஏசுவின் ஆடை தொட்ட மாத்திரத்தில் முழு குணமடைந்து விட்டாளாம்!
(3) “கானா” என்ற ஊரில் ஒரு வீட்டில் திருமணம். இயேசு அங்கு சென்றார். திருமணத்தில் திராட்சி ரசம் பரிமாறப்பட்டது. ஆனால அது தீர்ந்துபோகவே அடுத்த பந்திக்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தனர். அப்போது இயேசு ” காலியாக உள்ள ஜாடிகளில் நீரை நிரப்புங்க” என்றாராம்! பிறகு அதை முகர்ந்து பார்த்து விட்டு போய் பரிமாறுங்கள் என்றாராம் தண்ணீர் ஆனது திராட்சை ரசமாகிவிட்டதாம்! (4) ஒரு நாள் உணவு உண்ண கை கழுவாமலே உட்கார்ந்தனராம்! இதனை யூதகுருமார்களின் ஒற்றர்கள் கேட்டதற்கு இயேசு “சட்டி பானைகளை கழுவதும் கை கால்களை கழுவதும் ஆச்சாரமல்ல” என்றாராம்! சுத்தம் சோறு போடும் என்ற பழமொழி தவறா? நமது அரசு Hand Wash பற்றி விளம்பரம் செய்வதும் தப்பா? இனிமேல் நாமும் ஆச்சரமில்லாத ஒரு செயலை சையகூடாது என்று முடிவெடுப்போம். கை கழுவாமல் சாப்பிடும் அளவிற்கு ஏசுவிற்கு அகோர பசி போலும்!
“போயினிசியா” என்ற ஊரில் யூத குலத்தை சேராத ஒருபெண் யேசுவிடம் “பேய் பிடித்து துன்பப்படும் என் மகளை காப்பாற்று” என்றாள். அதற்கு இயேசு “நான் யூதர் களுக்கு மட்டும் பணி புரிய வந்திருப்பவன்” என்றாராம்! அப்படியானால் இவர் உலக மக்களின் கடவுள் இல்லை போலும்.
ஜோர்தான் நதி தீரத்தில் இயேசு இருந்தபோது லாசரஸ் என்ற வாலிபன் பெத்தனி என்ற ஊரில் மரண படுக்கையில் இருந்தானாம்! அவனது sisters மார்த்தாவும் மேரியும் ஏசுவுக்கு செய்தி அனுப்பினார்களாம்! ஆனாள் அவர் பெத்தனி பக்கமே போகவில்லை. (காரணம் அங்கு யூதர்களால் அவருக்கு ஆபத்தாம்! இவர் என்ன கடவுளா அல்லது திரைப்படத்தில் வரும் வில்லனா? நீரை திராச்சை ரசமாக மாற்றி ஒரு கலியாண பந்தியினை சமாளிக்க தெரிந்தவருக்கு யூதர்களை சமாளிக்க முடியாதா?புரியாத புதிராக இருக்கிறதே!ஏதாவது அங்கே மோடி மஸ்தான் வேலை செய்யவேண்டியதுதானே!) இவர் அங்கு போகாததால் லாசரஸ் இறந்துவிட்டான் ஆனால பின்னர் மனம் மாறி இயேசு தனது சீடர்களுடன் “பெத்தனி” சென்று சகோதரிகளிடம் “அவனை எந்த இடத்தில புதைதீர்கள்” என்றாராம். அவர்களும் இடைத்தை காட்டினர். ” கல்லறையினை மூடி இருக்கும் கல்லை அப்புற படுத்துங்கள்” என்றார் இயேசு. “ஹே லாசரஸ் எழுந்துவெளியே வா”என்றாராம். அவனும் வந்து விட்டானாம்! ஒரு சூப்பர் விட்டலாச்சாரியார் படம் பார்ப்பது போல் இருக்கிறதா?
ஒரு கழுதை மீது இயேசுவை உட்காரவைத்து ஊர்வலமாக ஜெஸ்ருசலம் நகர் நோக்கி சென்றனராம். இயேசுவை பின் தொடர்ந்த மக்கள் குருத்துக்களை ஒடித்து கையில் பிடித்துகொண்டு ஆரவாரத்துடன் “ஆண்டவன் பெயரால் வருகிறவர் வாழ்க” “தாவீதுவின் மகன் வாழ்க” என்று கோஷமிட்டு சென்றபோது அந்த நகர அதிகாரிகளும் பிரமுகர்களும் இயேசுவை பார்த்து “உமது சீடர்களை அடக்கி வையும் ஆரவாரத்தை நிறுத்தி அமைதியுடன் போக சொல்லுங்கள் என்று கூறியதற்கு (அவர்கள் கூறியதில் என்ன தவறு இருக்கிறது?) இயேசு “இவர்களை நான் அடக்கினால் இங்கே கிடக்கிற கற்கள் எல்லாம் ஆர்பரிக்க தொடங்கும்” என்றாராம். இதன் பொருள் என்ன? கற்களை வீசி கலாட்டா செய்வார்கள் என்றுதானே பொருள்! இவர் ஒரு கடவுளா? இல்லை கலாட்ட கும்பல் தலைவனா? பிறகு இன்னும் எழுதுவேன்..

ஸ்ரீ விஸ்வனாதன்
“போயினிசியா” என்ற ஊரில் யூத குலத்தை சேராத ஒருபெண் யேசுவிடம் “பேய் பிடித்து துன்பப்படும் என் மகளை காப்பாற்று” என்றாள். அதற்கு இயேசு “நான் யூதர் களுக்கு மட்டும் பணி புரிய வந்திருப்பவன்” என்றாராம்! அப்படியானால் இவர் உலக மக்களின் கடவுள் இல்லை போலும்”.
இந்த ஒரே பைபிள் கூறும் நிகழ்வு போதும் ஏசு உலக ரட்சகர் அல்லர். அவர் உலக மக்களின் பாவங்களை கழுவ வரவில்லை, பரமபாவிகளான யூதர்களை ரட்சிக்கவந்தார் என்பதை நிலை நாட்ட. யூதர்கள் அவரை ஏற்காததால் ரோமர்களுக்கு பால் கூட்ட்டத்தினரால் இயேசு மார்கெட்டிங் செய்யப்பட்டார். ரோமானிய அரசு மதமான கிறித்தவம் ஐரோப்பாவை பீடித்தது. உலகை ஆளவெறிகொண்ட ஐரோப்பியர்கள் தம் அதிகாரத்தினை நிலை நிறுத்த உல்கெங்கும் மிச நரிகள் மூலம் அதனைத்திணித்தனர் என்பதே உண்மை.
சிவஸ்ரீ.

வீர. ராஜமாணிக்கம் on June 19, 2013 at 9:27 am

http://timesofindia.indiatimes.com/india/Mother-Mary-statue-in-tribal-attire-stirs-row-in-Jharkhand/articleshow/20655458.cms ஜார்க்கண்டில் பழங்குடியினரை பெருமளவு மதம் மாற்றி ஆன்மா அறுவடை செய்வதற்காக கிறிஸ்த்தவ மதம் மாற்றிகள் “கன்னி” மேரியையும், அவர் கன்னித்தன்மையுடன் பெற்றெடுத்த குழந்தையையும் பழங்குடித்தன்மையோடு சித்தரித்து பழங்குடி மக்களை ஆன்ம அறுவடைக்கு தயாராக்கும் ஈன வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.உலகம் முழுக்க ஏசு கிறிஸ்து எப்படி டிசைன் டிசைனாக ஆளை மாற்றி ஆன்ம அறுவடை செய்கிறார்கள் என்று பாருங்கள். ஆப்ரிக்க யேசுவிற்கும் , அமெரிக்க ஏசுவிற்கும், கன்னிமையோடு இருக்கின்ற மேரிக்கும் இருக்க கூடிய வித்யாசங்களை கண் இருக்கிறவர்கள் எல்லாம் பாருங்கள். பின்பு இந்த மதம் என்று சொல்லப்படக்கூடிய பாலை நில கிறிஸ்த்தவம் எப்படி போலியானது என்று மக்களுக்கு சொல்லுங்கள்.
ஐரோப்பிய ஏசு :http://www.google.co.in/search?q=mother+mary+in+tribal+look&bav=on.2,or.r_qf.&bvm=bv.47883778,d.bmk&biw=1600&bih=837&um=1&ie=UTF-8&hl=en&tbm=isch&source=og&sa=N&tab=wi&ei=eifBUeaFDYnzrQf0oIDQBA#um=1&hl=en&tbm=isch&sa=1&q=jesus+in+europe&oq=jesus+in+europe&gs_l=img.3..0i24.7259.16643.0.17348.43.26.0.3.3.6.236.2428.7j14j1.22.0…0.0.0..1c.1.17.img.XXecHajbC_Y&bav=on.2,or.r_qf.&bvm=bv.47883778,d.bmk&fp=cea45e3f778f3db4&biw=1600&bih=837
ஆப்ரிக்க ஏசு : http://www.google.co.in/search?q=mother+mary+in+tribal+look&bav=on.2,or.r_qf.&bvm=bv.47883778,d.bmk&biw=1600&bih=837&um=1&ie=UTF-8&hl=en&tbm=isch&source=og&sa=N&tab=wi&ei=eifBUeaFDYnzrQf0oIDQBA#um=1&hl=en&tbm=isch&sa=1&q=jesus+in+africa&oq=jesus+in+africa&gs_l=img.1.0.0j0i24l3.40435.53861.2.55192.38.25.9.2.2.3.233.3424.1j20j4.25.0…0.0.0..1c.1.17.img.HQAMwhvog28&bav=on.2,or.r_qf.&bvm=bv.47883778,d.bmk&fp=cea45e3f778f3db4&biw=1600&bih=837
ஆசியாவில் உள்ள ஏசு : http://www.google.co.in/search?q=mother+mary+in+tribal+look&bav=on.2,or.r_qf.&bvm=bv.47883778,d.bmk&biw=1600&bih=837&um=1&ie=UTF-8&hl=en&tbm=isch&source=og&sa=N&tab=wi&ei=eifBUeaFDYnzrQf0oIDQBA#um=1&hl=en&tbm=isch&sa=1&q=jesus+in+asia&oq=jesus+in+asia&gs_l=img.1.0.0i24.25284.28276.8.29826.11.5.0.6.6.0.134.649.0j5.5.0…0.0.0..1c.1.17.img.cNpBHvACHGI&bav=on.2,or.r_qf.&bvm=bv.47883778,d.bmk&fp=cea45e3f778f3db4&biw=1600&bih=837



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

sarang on July 16, 2013 at 1:25 pm

வீர புத்திரரே

கிறிஸ்தவத்தின் இயல்பான வடிவம் என்றால் என்ன? கிறிஸ்தவத்தை பற்றி உங்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது?

சும்மா கைய தூக்கி நிறுத்திக்கிட்டு எங்கள் கரங்களை பிடித்துகொல்லுங்கள் என்று கூவுவதும், பைபிளில் ஏதாவது ஒரு பக்கத்த பொரட்டி எதையாவது ஒன்ன படிச்சு எதாவது புரிஞ்சிகிட்டு புள்ளரிப்பதும், கண்டபடி கார் பின்னாடி எழுவைத்துகொல்வதும், கர்ண கொடூரமான பாட்டுக்களை பாடுவதும் தான் கிறிஸ்தவம் என்று நினைக்கிறீர்களா.

கிறிஸ்தவத்தின் அடிப்படையே ஓட்டை வாய்ந்தது. ஒரு ஆசாமி எங்கேயோ ஒக்காந்திகினு எல்லாரையும் ஆட்டிப் படைப்பது போலவும், அவரை கும்பிட்டா சொர்க்கம் இல்லாங்காட்டி நரகம் என்ற ஓட்டையான ஒரு தகர தப்பா தத்துவத்தை வைத்துக் கொண்டு ஆள் பலத்தினாலும் பண பலத்தினாலும் வஞ்சகத்தாலும் காலம் தள்ளுகிறது கிறிஸ்தவம்.

இதை மட்ட மதத்தோடு எப்படி ஒத்துப் பார்ப்பீர்கள் – உங்களது சகோதர மதத்தோடு மட்டும் தான் ஒப்பிட முடியும். இஸ்லாத்தை விட, ஜுடாஇசத்தை விட கிறிஸ்தவம் மேலா என்று மட்டும் அலசிக் கொள்ளலாம். மற்றபடி கிழக்கத்திய மதங்களுடன் கிறிஸ்தவத்தை ஒப்பிடவே முடியாது. கிறிஸ்தவம் அடிப்படயில் ஜைன மதத்தின் முன்பே கூட தோற்று மண்டியிடும் (தத்துவத்தில்). பொய் புறத்தில் உங்களை விஞ்ச இஸ்லாமியர்களை தவிர வேறு ஆறும் இல்லை.

உங்களுக்கு இஷ்டம் இருந்தால் தத்துவ அடிப்படையில் கிறிஸ்தவம் மற்றும் பிற .மதங்கள் என்ற அடிப்படையில் ஒரு விவாதம் தொடங்கலாமா ?
தைரியம் இருந்தால் வாருங்கள் 🙂

nesamani on July 17, 2013 at 5:48 pm

நண்பர் பேராயிரம் பரவி கூறுவது உண்மை. பைபிள் என்பது மனிதன் செய்த நூலே. இயேசு என்ற மனிதன் தான் கடவுள் என்றோ கடவுளின் ஒரே புதல்வன் என்றோ தன் தாய் கன்னி என்றோ எங்கும் தானே ஒரு போதும் சொல்லவில்லை. மாறாக எல்லோரும் கடவுள் புத்திரர் என்றும் கூறியதே உண்மை. இயேசு கடவுளின் ஒரே புத்திரன் என்று கதை விட்டது பவுல் என்ற வித்தைக்காரன். ஆதலால் இதை பாலியானிடி என்றே கூறவேண்டும்!
மேலும் இயேசு பல கிறுக்குத்தனமான பேச்சுக்கள் பைபிலிலேயே இருக்கின்றன. தன்னை நம்பாதவனை என்முன் கொண்டு வந்து கொல் என்றான் (லூக்கா 19-27). மேலும் தன்னை நம்புபவன் கொடிய பாம்பையும் கையாளலாமாம். விஷம் குடிக்கலாமாம் (மார்க்கு 16). இந்த மாதிரி போப் செய்ய முடியுமா? கிறித்துவர் ஏன் இதை செய்வதில்லை? சட்டையை விற்றாவது இரு வாள்கள் வாங்க வேண்டுமாம் ( போர் செய்ய)- லூக்கா 22-36. ஆக்ட்ஸ் 3-23 ல் கிறுத்துவரை நம்பாதவரை கொல்ல வேண்டும் என்கிறது.
இயேசு சிலுவையில் சாகவேயில்லை. பைபிளில் ராணுவ வீரருக்கு பயந்து ஒடியதாவும் உண்பதாயும் குடிப்பதாயும் உள்ளது. ஆவிக்கு பயம் நீர் உணவு ஏன்? தான் ஆவி இல்லை என்று இயேசுவே கூறுகிறான். இயேசு அமைதியை விரும்பியவன் வள‌ர்த்தவன் என்பது அப்பட்டமான பொய். ஏன் சிறு பிள்ளைகள் பெற்றோரை பழித்தால் அவர்களை கொல்ல‌ வேண்டுமாம்!
மேலும் அவன் தாய் கன்னி என்பதே பொய்! அவள் எப்படி கருவுற்றாள்? கடவுள் என்றாவது ஒரு 13 வயது பெண்ணை அதுவும் ஒருவனுக்கு வாழ்க்கைப் பட ஒப்ப‌ந்தம் அளித்த பெண்ணை வற்புறுத்தி கருவுருக்க செய்வானா? யூதர் மதப் படி திருமண ஒப்பந்தம் ஆன பிறகு அவள் அவனுக்கே சொந்தம்! இது பெரிய பொய். அவள் கருவுற்றது பற்றி பல சரித்திர ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ளனர்.பென் டிபேரியஸ் பந்தெரா என்ர ஒரு ரோம ராணுவ வீரனால் கரு தரித்தவள். ஆதலால்தான் ஜோசெப் அவளை நிராகரிக்க முற்பட்டான். மேலும் அவள் ஆறு மாதம் ஊரை விட்டே ஒடி விட்டாள்! இதெல்லாம் பைபிளிலேயே இருக்கிறது. கண் திறந்து பார்த்து ஆராயவும்!
கிறித்துவ மதம் என்பது அன்று முதல் இன்று வரை ஒரு போலி மதம். அதில் உண்மை என்பது இல்லை. கிறித்துவர்கள் பைபிளை தானே படித்து ஆராய மாட்டார்கள். மூட நம்பிக்கையாளர்கள். அவர்கள் சர்ச் என்ன கூறுகிறதோ அதையே நம்புவார்கள். ஆதலால் அவர்கள் மதம் சர்ச்சியானிடி கிரிஸ்டியனிடி அல்ல. மேலும் இயேசு கூறியது மிக குறைவு. பவுல் (பால்) என்றே தொடர் கொலைக்காரன் கூறியதே 13 அத்தியாயங்கள் அதில்!
இந்த பொய்யான மதம் வேற்று நாடுகளை பிடித்து அவர்கள் சொத்தை சூறையாடும் எத்தர் மதம். ஐரோப்பியருக்கும் பலருக்கும் கொள்ளைக்காரனுக்கும் உதவும் மதம். இசுலாம் போலவே இது. பொய்யான மதம்
இதை உணர்ந்து நம் இந்திய சகோதரர்கள் இதை விட்டொழித்து உய்ய‌ வேண்டும் என்று இறைவனை பிரர்த்திக்கிறேன்
இந்தியர்களை தேச துரோகிகள் ஆக்கும் மதம். இயேசு எல்லோரையும் அவர் பெற்றோரை வெறுக்க வேண்டும் என்கிறான் கிறுக்கன். நம் நாட்டை தாய் நாட்டை ஆதரிப்பார்களா? இல்லை. நம் நாட்டு பண்பாட்டுக்கு முற்றிலும் முரண்பாடு. போதும் இதை பொறுத்தது
யாராவது மானம் உள்ள கிறித்துவன் இதௌ பொய் என்றால் பதில் அளிக்கட்டுமே

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

"HONEST MAN" on May 28, 2015 at 5:57 pm

திரு சபரி சென்ற வருடம் ஜனவரி மாதம் எழுதிய மறுமொழிக்கு எதிர்வினையாக இப்போது ப்ரியா ராணி எழுதுகிறார். ரொம்ப பிசி.யா? பிரியாவிற்கு free time இல்லைபோலும். Argument க்கு ரெடியா என்று கேட்கிறார்? சரி எனது கீழ்கண்ட சில கேள்விகளுக்கு நீர் பதில் சொல்லும். அப்புறம் argument ஐ வைத்து கொள்ளலாம்.

1. உங்கள் பைபிள் உலகம் தட்டை என்கிறது. பூமி உருண்டை எனும் கோபர்நிகஸ் என்ற விஞ்ஞானியின் கருத்தை ஆதரித்து பேசிய புருனே (1548-1660) என்பவர் ஐரோப்பாவில் ””””பாதிரிகளால்”” உயிரோடு எரிக்கபட்டார். இப்போது சொல்லுங்கள் பூமி உருண்டையா தட்டையா? நீங்கள் ஆதரிப்பது விஞானியையா அல்லது பாதிரியையா?

2. இயேசு தனது சீடர்களில் சிலர் உயிருடன் இருக்கும்போதே “‘பூமிக்கு மீண்டும் வருவதாக” சொன்னார், (ஆதாரம் Mathew 16:28) ஆனால் 2015 வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் வந்தபாடில்லை. ஏன் அவர் வந்த பஸ் break down ஆகிவிட்டதா? மந்திரவாதி “”கீரிக்கும் பாம்புக்கும் சண்டை விட போகிறேன்” என்று கூறி கடைசி வரை விடாதது போல “வருகிறார் வருகிறார்” என்று எத்தனை நாளைக்கு சொல்லி ஏமாற்றி கொண்டிருப்பீர்கள்?

3. Elisha வின் bald head ஐ கேலி செய்த 42 சிறு குழந்தைகளை உங்க பைபிள் கடவுள் அனுப்பிய கரடிகள் கொன்றன. (ஆதாரம் 2 kings 2 : 23-24) இப்படி ஒரு கடவுள் நமக்கு தேவையா?

4. Santa Claus : இவரது முழு பெயர்:– “”செயின்ட் நிக்கோலஸ் of myra “” என்பதாகும். 270-343ல் Lycia வில் வாழ்ந்தவர். இவர் பறக்கும் (?!?!) மான் இழுக்கும் ஓர் sleigh யில் உலகம் பூராவும் சுற்றிவந்தாராம்! ஒரே இரவில் பல லட்சம் வீடுகளுக்கு விசிட் அடித்து கதவு ஜன்னல் எதையும் திறக்காமலேயே குழந்தைகளுக்கு பரிசு பொருட்களை வைத்துவிட்டு வந்துவிடுவாராம். (இதையெல்லாம் நீங்கள் அப்படியே நம்புவீர்கள். ஆனால் ஒரு அணில் ஆற்றில் மூழ்கி பின்னர் மணலில் உருண்டு அதன் உடலில் ஒட்டிய அந்த கொஞ்சம் மணலை கொடுத்து அணை கட்டுவதற்கு தன்னால் ஆன் உதவியை செய்தது என்று சொன்னால் அதை உம்மால் நம்பமுடியவில்லை. ஜீரணிக்கமுடியவில்லை. அப்படிதானே!)

5. Bible God made the sun STAND STILL to allow the Jews more time to slaughter their neighbours (ஆதாரம் Joshua 10:12-14) அந்த பைபிள் கடவுளுக்கு சூரியன் (பூமியை பொருத்தவரை) நகராமல் ஒரே இடத்தில் உள்ளது என்ற விஷயம் தெரியுமா தெரியாதா? அப்புறம் எப்படி சூரியனை ”’அசையாமல் நிற்க”’ வைத்தார் என்று கூறுவது?

6. When the Bible God wanted to kill Moses. Moses’ wife throw the fresh FORESKIN of the infant son at the Bible God’s feet. (ஆதாரம் வேண்டுமா” இதோ தருகிறேன். Exodus 4:24-26)

அம்மா பிரியா ராணி!(உமக்கு ஒரு கிறிஸ்டியன் பெயர் கிடைக்கவில்லையா?) நாளைக்கு சர்ச் (=church ) க்கு போய் உங்க பைபிள் முழுக்க சர்ச் (=search ) பண்ணி மேலே சொன்ன ஆறு விஷயத்தை ஆற அமர ஆராய்ச்சி செய்து எனக்கு பதில் சொல்றியா? அப்புறம் மறுபடியும் வரேன்."HONEST MAN" on May 29, 2015 at 2:46 pm

//////////////Jesus is the real savior//////////

மண்ணாங்கட்டி! நம்ம தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் திருச்சபை (=Church ) கட்டும்பணியில் ஈடுபட்டிருந்த எடிசன் (40), ஜஸ்டின் (50), மைகேல் ஜஸ்டின் (30) ஆகிய 3 பேரும் புதன்கிழமை (27-5-2015) அன்று திருச்சபையின் கூரை (=roof ) இடிந்து விழுந்து பரிதாபமாக இறந்தனர். தனது உன்னத ரட்சகருக்கு (=Savior ) ஆலயம் கட்டும் நற்பணியில் அந்த ஏழை கூலி தொழிலாளிகள் ஈடுபட்டுள்ளனர்.. அவர்களை அந்த இறப்பிலிருந்து காப்பாற்ற உங்க கடவுளுக்கு துப்பில்லை. வக்கில்லை. ஆனால் இவர் அவருதான் எங்களுக்கு real savior என்கிறார். (குறிப்பு:- மேற்படி மூவரும் இந்துக்கள் அல்ல. மூவருமே கிறிஸ்தவர்கள் ஆவார்கள். ஏனென்றால் அந்த ஓரவஞ்சனை பிடித்த கடவுள் இந்துக்கள் என்றால் காபாற்றாமல்கூட விட்டுவிடுவான் என்று இவர் (=பிரியா ராணி) சொன்னாலும் சொல்லுவார் )

////////////////This is not answer for my question.///////////////
இது உமது கேள்விக்கு பதிலாக இல்லாமல் இருக்கலாம். நான் 28-5-2015 அன்று 5.57 பிற்பகல் எனது மறுமொழியில் 6 கேள்விகளை தொடுத்துள்ளேன். இவர் மறுநாள் காலை 6.07க்கு திரு ரங்கனின் மறுமொழிக்கு எதிர்வினை எழுதுகிறார். என்னுடைய மறுமொழியை படிக்காமலா போயிருப்பார்? Ms பிரியா ராணி அப்போது பிரியாணி சாப்பிட்டுகொண்டிருந்தாரா? அந்த ருசியில் என் மறுமொழியை படிக்க மறந்துவிட்டாரா? சரி போகட்டும். இவரது கேள்விக்கு திரு ரங்கன் சரியான பதிலை அளிக்கவில்லை என்று குறை கூறுகிற இவர் எனது ஆறு கேள்விகளை இன்னும் பதிலளிக்கவில்லையே! அதற்கு என்ன செய்ய? அவர் இவருக்கு சரியாக பதில் அளிக்கவில்லையாம் . ஆனாலும் keep it up என்று அவருக்கு வாழ்த்து வேறு.

ஒரு சில அப்பங்களும் சில மீன் துண்டுகளையும் வைத்து சுமார் 5000 மனிதர்களுக்கு உணவளித்தபின்னரும் கூட கூடை கூடையாக அப்பங்களும் மீன் துண்டுகளும் மீந்து போயின என்று பைபிளில் கூறினால் நாம் எல்லாரும் நம்பி ஆகவேண்டும். ஆனால் ஹனுமான் ஒரு குன்றை தூக்கினான் என்று கூறினால் அதை நம்ப கூடாதாம்.

கிருஷ்ணர் பல பேரை போரில் கொன்றார் என கூறும் சகோதரியே நான் 28ம் தேதி மறுமொழியில் 3 வது பத்தியில் சொன்ன குற்றசாட்டிற்கு பதில் சொல்லமுடியுமா? காதலிலும் போரிலும் நியாயம் பார்க்க கூடாது என்பார்கள். போரில் கிருஷ்ணர் கொன்றார் என்பது உண்மைதான். ஆனால் 42 சின்ன குழந்தைகளை கொன்றது எந்தவிதத்தில் நியாயமாகும்? அதுவும் என்ன காரணத்திற்காக?

//////Sabari and Co. Please answer me ////// அவர்கள் சார்பில் நான் உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்ததோடு அல்லாமல் நான் உமக்கு 6 கேள்விகளை கேட்டுள்ளேன். ஆகவே அந்த 6 கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்க. இப்படித்தான் ஒருவர் இங்கே ரொம்ப தொந்திரவு கொடுத்துகொண்டிருந்தார். அவருக்கு நான் சில கேள்விகளை தொடுத்தேன். அவரை மரியாதயோடுதான் அலிஜனாப் அல்ஹாஜ் என்று அடைமொழிகளை போட்டு விளித்தேன். இருந்தும் என்ன காரணமோ தெரியவில்லை. அந்த பாய் (=சகோதரர்) எனது கேள்விகளுக்கு பதிலே இதுவரை தரவில்லை. எங்கே போய் ஒளிந்துகொண்டார் என்றே தெரியவில்லை. அது போல இந்த sister (=சகோதரி) யும் பயந்து எங்காவது போய் ஒளிந்து கொள்ளமாட்டார் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. priya rani on June 1, 2015 at 3:19 pm

    //////////////Jesus is the real savior//////////
    மண்ணாங்கட்டி! ////

    This is ur mariyathai. OK I did not mention any hard sentence like this to indicate ur god or u. This is the reality difference between christian and other religion. god bless u my child honest man.

    //நம்ம தமிழ்நாட்டில்
    திருநெல்வேலியில் திருச்சபை
    (=Church ) கட்டும்பணியில் ஈடுபட்டிருந்த
    எடிசன் (40), ஜஸ்டின் (50), மைகேல்
    ஜஸ்டின் (30) ஆகிய 3 பேரும்
    புதன்கிழமை (27-5-2015) அன்று
    திருச்சபையின் கூரை (=roof )
    இடிந்து விழுந்து பரிதாபமாக
    இறந்தனர். தனது உன்னத ரட்சகருக்கு
    (=Savior ) ஆலயம் கட்டும் நற்பணியில் அந்த
    ஏழை கூலி தொழிலாளிகள்
    ஈடுபட்டுள்ளனர்.. அவர்களை அந்த
    இறப்பிலிருந்து காப்பாற்ற உங்க
    கடவுளுக்கு துப்பில்லை.
    வக்கில்லை. ஆனால் இவர் அவருதான்
    எங்களுக்கு real savior என்கிறார்.
    (குறிப்பு:- மேற்படி மூவரும்
    இந்துக்கள் அல்ல. மூவருமே
    கிறிஸ்தவர்கள் ஆவார்கள். ஏனென்றால்
    அந்த ஓரவஞ்சனை பிடித்த கடவுள்
    இந்துக்கள் என்றால் காபாற்றாமல்கூட
    விட்டுவிடுவான் என்று இவர்
    (=பிரியா ராணி) சொன்னாலும்
    சொல்லுவார் )//

    OK accepted. Then wat happened to kedarnath people. why Siva didn’t resume them. pls think

    //அது போல இந்த sister
    (=சகோதரி) யும் பயந்து எங்காவது
    போய் ஒளிந்து கொள்ளமாட்டார் என்று
    நிச்சயமாக நம்புகிறேன்.///

    I will not hide any where. I will not shame to tell any historical truth.

    //ஒரு சில அப்பங்களும் சில மீன்
    துண்டுகளையும் வைத்து சுமார்
    5000 மனிதர்களுக்கு
    உணவளித்தபின்னரும் கூட கூடை
    கூடையாக அப்பங்களும் மீன்
    துண்டுகளும் மீந்து போயின என்று
    பைபிளில் கூறினால் நாம்
    எல்லாரும் நம்பி ஆகவேண்டும். ஆனால்
    ஹனுமான் ஒரு குன்றை
    தூக்கினான் என்று கூறினால் அதை
    நம்ப கூடாதாம்.//

    So faith is only for u people not for us? Ithu enna nyayam. Let be in ur faith and we will be in our faith. pls don’t disturb our faith and I will not too disturb ur faith.

    The reply from krihna kumar is very reality. I like the reply. If u people will not panic our faith, we don’t need to argue this. well done krishna kumar let ur faith should be succeful.

     
  2. priya rani on June 1, 2015 at 3:51 pm

    //1. உங்கள் பைபிள் உலகம் தட்டை
    என்கிறது. பூமி உருண்டை எனும்
    கோபர்நிகஸ் என்ற விஞ்ஞானியின்
    கருத்தை ஆதரித்து பேசிய புருனே
    (1548-1660) என்பவர் ஐரோப்பாவில்
    ””””பாதிரிகளால்”” உயிரோடு
    எரிக்கபட்டார். இப்போது சொல்லுங்கள்
    பூமி உருண்டையா தட்டையா? நீங்கள்
    ஆதரிப்பது விஞானியையா அல்லது
    பாதிரியையா?//

    Where it is mentioned exactly. If people (paathiriyar) done the mistakes in the name of god means they will get punished by god. That people done wrong I admitted

    //2. இயேசு தனது சீடர்களில் சிலர்
    உயிருடன் இருக்கும்போதே
    “‘பூமிக்கு மீண்டும் வருவதாக”
    சொன்னார், (ஆதாரம் Mathew 16:28)
    ஆனால் 2015 வருடங்கள் கடந்துவிட்டன.
    இன்னும் வந்தபாடில்லை. ஏன் அவர் வந்த
    பஸ் break down ஆகிவிட்டதா?
    மந்திரவாதி “”கீரிக்கும் பாம்புக்கும்
    சண்டை விட போகிறேன்” என்று
    கூறி கடைசி வரை விடாதது போல
    “வருகிறார் வருகிறார்” என்று
    எத்தனை நாளைக்கு சொல்லி
    ஏமாற்றி கொண்டிருப்பீர்கள்?//

    Here where Jesus mentioned about seedargal. He is pointing ‘Inge iruppavarul silar’ the meaning of that one is who have faith in Jesus. that people still in earth only.

    ///3. Elisha வின் bald head ஐ கேலி செய்த 42
    சிறு குழந்தைகளை உங்க பைபிள்
    கடவுள் அனுப்பிய கரடிகள் கொன்றன.
    (ஆதாரம் 2 kings 2 : 23-24) இப்படி ஒரு
    கடவுள் நமக்கு தேவையா?////

    Pala perai poril konta krishnar namakku thevaiya. That is thrmam means this is also tharmam

    //4. Santa Claus : இவரது முழு பெயர்:–
    “”செயின்ட் நிக்கோலஸ் of myra “”
    என்பதாகும். 270-343ல் Lycia வில்
    வாழ்ந்தவர். இவர் பறக்கும் (?!?!) மான்
    இழுக்கும் ஓர் sleigh யில் உலகம்
    பூராவும் சுற்றிவந்தாராம்! ஒரே
    இரவில் பல லட்சம் வீடுகளுக்கு விசிட்
    அடித்து கதவு ஜன்னல் எதையும்
    திறக்காமலேயே குழந்தைகளுக்கு
    பரிசு பொருட்களை வைத்துவிட்டு
    வந்துவிடுவாராம். (இதையெல்லாம்
    நீங்கள் அப்படியே நம்புவீர்கள். ஆனால்
    ஒரு அணில் ஆற்றில் மூழ்கி பின்னர்
    மணலில் உருண்டு அதன் உடலில் ஒட்டிய
    அந்த கொஞ்சம் மணலை கொடுத்து
    அணை கட்டுவதற்கு தன்னால் ஆன்
    உதவியை செய்தது என்று சொன்னால்
    அதை உம்மால் நம்பமுடியவில்லை.
    ஜீரணிக்கமுடியவில்லை.
    அப்படிதானே!)//

    Where this is in bible.

    //5. Bible God made the sun STAND STILL to
    allow the Jews more time to slaughter their
    neighbours (ஆதாரம் Joshua 10:12-14) அந்த
    பைபிள் கடவுளுக்கு சூரியன்
    (பூமியை பொருத்தவரை) நகராமல்
    ஒரே இடத்தில் உள்ளது என்ற விஷயம்
    தெரியுமா தெரியாதா? அப்புறம்
    எப்படி சூரியனை ”’அசையாமல் நிற்க”’
    வைத்தார் என்று கூறுவது?//

    What is the meaning of ‘stand still’ . It means it will be in working condition. so wat is the issue here

    //6. When the Bible God wanted to kill Moses.
    Moses’ wife throw the fresh FORESKIN of the
    infant son at the Bible God’s feet. (ஆதாரம்
    வேண்டுமா” இதோ தருகிறேன். Exodus
    4:24-26)///

    To break this only due to Adam, Jesus came here and rescue us.

    If u have faith u accept it otherwise please leave this



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

priya rani on May 29, 2015 at 9:19 pm

//Tacitus (A.D. 55-120) was
considered the greatest historian of ancient Rome.
He wrote of Nero who “punished with the most
exquisite tortures, the persons commonly called
Christians, who were hated for their enormities.
Christus [Christ], the founder of the name, was put
to death by Pontius Pilate, procurator of Judea in
the reign of Tiberius: but the pernicious superstition,
repressed for a time, broke out again, not only
through Judea, where the mischief originiated, but
through the city of Rome also.” 1
Also, Flavius Josephus, a Jewish historian, (A.D.
38-100+) wrote about Jesus in his Jewish
Antiquities, saying that Jesus was a wise man who
did surprising feats, taught many, won over
followers from among Jews and Greeks, that Jesus
was believed to be the Messiah, was accused by
the Jewish leaders, was condemned to be crucified
by Pilate, and was considered to be resurrected. 2
The existence of Jesus Christ is recorded not only
by Josephus and Tacitus, but also by ancient
writers such as Suetonius, Thallus, Pliny the
Younger, and Lucian. And from the Jewish Talmud,
“we learn that Jesus was conceived out of wedlock,
gathered disciples, made blasphemous claims
about himself, and worked miracles, but these
miracles are attributed to sorcery and not to God.” 3
Thus, historians both favorable and unfavorable
regarding Jesus did write about him. Also there
were many historical writings about the early
Christians.
For more historical sources, please see http://
http://www.everystudent.com/features/bible.html#4
Note: Many people also have an internal source of
confirmation that Jesus existed, and still exists
today. The Bible says that God by His Spirit bears
witness of Christ (John 15:26) and convinces the
world concerning Him (John 16:8-11). So it’s
possible for someone without access to ancient
historical writings or the Bible to believe that Jesus
was real. A person can hear about Jesus from
another source, and God can confirm it by His
Spirit.
For more on Jesus’ life, please see this feature
article: Beyond Blind Faith .//

This is the reference Jesus existence from outside bible sources. read in patient.

Now tell me there is any such kind of historical evidence for krishna and ram outside mahabratha or Ramayana. at least 1% evidence plz

க்ருஷ்ணகுமார் on May 29, 2015 at 4:44 pm

ப்ரியாராணி அம்மணி

\\ Among all how can you build a bridge with the help of squirrel \\

Nobody claims that the bridge was built by squirrel. The point to be noted is that even the smallest help in the form of placing small stones by the squirrel in the construction of the bridge was appreciated.

Participation in a noble task by everyone to the best of his / its capacity.

\\ And how can hanman lift himalaya mountain. \\

When moses can do wonders, why not Hanuman?

\\ Krishna helped to kill so many peoples in war \\

So what? Would you swear that biblical gods were not blood thirsty?

\\ Tell me historical evident of Krishna, Rama and hanuman etc. Ramayana and Mahabartham written by god or men or imaginay stories. \\

Honestly, I do not know about the historicity of Krishna, Rama and Hanuman. Would heavens fall if they were only celestial beings and not historical. To me they are god. It does not matter to me if they were not human beings.

To worship Rama, Krishna and Hanuman, there is no prerequisite for me that they should be human beings.

On the other hand, Whereas you say that Jesus to be a celestial being, I have no qualms about it. But when you say, he was a human being, there is no historical proof to that effect. Why your Holy bible is bundle of contradictions with respect to the life and times of Jesus. Is it not?

written by god…………by men……….

Well …………….Nalayiram, thevaram and thiruppugazh…………. simply because they were written by human beings…………are not considered as something of a lesser order………… they are considered as ***veda***…………. mind you

Imaginery stories……………… you mean your Holy Bible…………

\\ Ore comedy thaan. \\

We as Hindus respect christians and moslems worshipping their gods. No issues. Have honesty and decency in describing the religious treasures of other faiths.

Sure, we have n number of questions about Bible and Qoran. Points specific. By your yardstick, Bible can also be dubbed as comedy

\\ God bless u all once again \\

u too.

\\ Jesus is the real savior and bless u all people. \\

Jesus may be whatever to christians. No issues.

Do not indulge in marketing of this biblical character to Hindus.

To us Hindus, He is nothing more than an imaginery character described in a holy book of a videsi faith. Described as a corpse.

A corpse can not be a saviour. And ……………. a corpse which do not have chaitanya blessing living beings can only be treated as comedy by us.

We would suggest you to leave your illogical / belief based proselitised faith and absorb any one of the reason based / logic based schools like vedanta, shaiva, vaishnava, jaina, boudha school of Hinduism.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. Girija on October 4, 2016 at 11:26 am

    வேதக்காரன் கொண்டு வந்த ஆங்கிலத்தை உங்களால வேண்டானு சொல்ல முடியல, உன் கையில உள்ள மொபைல் முதல் எல்லாம் அவன் கண்டுபிடித்ததுதான், நீ அடிக்கிற அச்சு அவன் கொண்டுவந்ததுதான் வேதச்சாமியை வேணும்சாமி இல்லனா வேதனைதான் சாமி! அன்புடன்

     
  2. ரங்கன் on October 6, 2016 at 12:38 pm

    செல்வி கிரிஜா

    வேதக்காரன் வேதசாமியை மாத்திரம் கொண்டு வரவில்லை – கண்டதே வழக்கை கொண்டதே கோலம் என்ற தத்துவத்தையும் கொண்டி வந்தான்.

    அவன் கொண்டு வந்த ஆங்கிலம் வேண்டுமா – பல்வேறு மொழிகளைக் கொண்டுள்ள பாரத நாட்டிற்கு அது தேவையான மொழியே. நீங்கள் சொல்கின்ற மற்ற விஷயங்களால் நம்முடைய கலாச்சாரம் பாதிக்கப் படவேண்டும் என்று அர்த்தமில்லை. இங்கிருந்து செல்கின்ற பாஸ்மதி அரிசியால் வேதக்காரன் என்ன இந்துவாக மாறிவிட்டானா ?

    (edited and published)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Girija on October 4, 2016 at 11:26 am
“வேதக்காரன் கொண்டு வந்த ஆங்கிலத்தை உங்களால வேண்டானு சொல்ல முடியல”
வேதமா? வேதம் என்பதன் பொருள் என்ன? அதைப்புரியாமல் பைபிளை வேதம் என்பது அபத்தம். ஆங்கிலத்தை கிறிஸ்தவன் தான் கொண்டுவந்தான். அவன் தான் நம் நாட்டைக்கொள்ளையடித்தான். சுரண்டினான். நம்மை அடிமைப்படுத்தினான். அவன் ஆங்கிலத்தை ஆட்சிமொழி செய்தான். நாமும் ஆங்கிலத்தைக்கற்றுக்கொண்டோம். அதற்காக அவன் கொண்டுவந்த எல்லாத்தையும் ஏற்கணூமா? ஒட்டுமொத்தவியாபாரம்தானா? அப்படியெல்லாம் எந்தக்கட்டாயமும் இல்லை. ஆங்கிலத்திலேயே அவர்களோடு விவாதம் செய்வோம். கிறித்தவத்தை நிராகரிப்போம்.
“உன் கையில உள்ள மொபைல் முதல் எல்லாம் அவன் கண்டுபிடித்ததுதான்”,
மொபைல் போன் அவன் கண்டுபிடித்தானா? அதற்கு மூலமான கணிதத்தையே கண்டுபிடிதோம் நாங்கள். எதுவேண்டும் எதுவேண்டாம் என்று பயனைப்பார்த்து முடிவு செய்வோம்.கொள்ளைக்காரன் கொலைகாரன் கொண்டுவந்த எல்லாமே நல்லதுண்ணு சொல்லமுடியாது.
“நீ அடிக்கிற அச்சு அவன் கொண்டுவந்ததுதான்” அச்சு வெள்ளைக்காரன் கண்டுபிடிக்கலை சைனாக்காரன் கண்டுபிடிச்சான். அதைக்காப்பியடித்தான் வெள்ளைக்காரன்.
“வேதச்சாமியை வேணும்சாமி இல்லனா வேதனைதான் சாமி!” யார் சாமி? சாமி சாகுமா? வேதனையால் அலறுமா? தன்னையே காத்துக்கொள்ள வக்கில்லாத மனிதரெல்லாம் சாமி ஆகமுடியாது! மரணம் வந்தப்பிறகு அதை வெல்லமுடியாது! மரணமில்லாமல் தடுக்கமுடியாதவரெல்லாம் சாமி ஆகிவிட முடியாது.
கன்னி பெற்றாள் பிள்ளை என்பது ஒரு பொய்! செத்ததவன் மூன்று நாள் கழித்து உயிர்த்தெழுந்து வானத்துக்குப்போனான் என்பது மஹாப்பொய்! இதையெல்லாம் எத்தனை நாள் சொல்லி ஏமாத்துவீங்க அம்மணீ கிரிஜா!

George on October 6, 2016 at 3:05 pm

// வேதக்காரன் கொண்டு வந்த ஆங்கிலத்தை உங்களால வேண்டானு சொல்ல முடியல // – Girija

“India is the cradle of the human race,
THE BIRTHPLACE OF HUMAN SPEECH,
the mother of history,
the grandmother of legend and
the great grand mother of tradition.”

– Samuel Langhorne Clemens (alias) Mark Twain (1835 – 1910), United States of America.

George on October 6, 2016 at 4:28 pm

1. அச்சு “பை ஷெக்” என்ற சீனரால் 11ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
2. அவர்களிடமிருந்து 14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் கற்றுக்கொண்டனர்.
3. 1377 CE இல் கொரியர்கள் முதல் உலோக புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டனர்.
4. 15ஆம் நூற்றாண்டில் “ஜொஹான்னெஸ் குட்டன்பெர்க்” என்ற ஜெர்மானியர் “mass production movable type printing” கை கண்டுபிடித்தார்.
5. 19ஆம் நூற்றாண்டில் “ரிச்சர்ட் மார்ச் ஹோய்”, “வில்லியம் புல்லக்” என்ற அமெரிக்கர்கள், முறையே “rotary printing press”, மற்றும் “rotary drum printing” கை கண்டுபிடித்தனர்.
6. 1875இல் “offset press”ஐ இங்கிலாந்தை சேர்ந்த “ராபர்ட் பர்களே”வும், 1904இல் அமெரிக்காவை சேர்ந்த “வாஷிங்டன் ரூபெல்”லும் கண்டுபிடித்தனர்.
7. 1953 இல் ரெமிங்டன்-ரேண்ட் என்ற அமெரிக்கர் முதல் “computer printer”ஐ கண்டுபிடித்தார்.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard