New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: NT -புதிய ஏற்பாடு


Guru

Status: Offline
Posts: 24601
Date:
NT -புதிய ஏற்பாடு
Permalink  
 


புதிய ஏற்பாடு

கிறிஸ்துவப் புராணங்கள் நாயகர் ஏசு பற்றிய கதைகள், பின்னர் அவர் பெயரால் கிரேக்கரிடையே எழும்பிய சர்ச் பிரச்சனைகள் தீர்க்க எழுதப்பட்ட கடிதங்கள் என 27 சிறு நுல்ல்கள் கொண்ட தொகுப்பே புதிய ஏற்பாடு.

#

ஏசு கதைகள் (சுவிசேஷங்கள்)

பவுல் பெயரில் கடிதங்கள்

பிற கடிதங்கள்

பிற நூல்கள்

1

மத்தேயு

ரோமன்

யாக்கோபு

அப்போஸ்தலர் நடபடிகள்

2

மாற்கு

1 கொரிந்தியர்

1பேதுரு

வெளிப்படுத்தின விசேஷம்

3

லூக்கா

2 கொரிந்தியர்

2பேதுரு

 

4

யோவான்

கலாத்தியர்

1யோவான்

 

5

 

1தெசலோனிக்கேயர்

2யோவான்

 

6

 

பிலிப்பியர்

3யோவான்

 

7

 

பிலமோன்

யூதா

 

 

 

பவுல் பெயரில் யாரோ எழுதியவை

 

 

8

 

2தெசலோனிக்கேயர்

 

 

9

 

எபேசியர்

 

 

10

 

கொலோசேயர்

 

 

11

 

1 திமோத்தேயு,

 

 

12

 

2 திமோத்தேயு,

 

 

13

 

தீத்து

 

 

14

 

எபிரேயர்

 

 

 

 

சுவிசேஷங்கள் முதலில் வைக்கப்பட்டாலும் முதலில் வரையப்பட்டவை பவுல் பெயரில் உள்ளவற்றில 7  மட்டுமே.  சுவிசேஷங்கள் எழுதிய ஆசிரியர் யார் என்பது தெரியாது, இரண்டாம் நூற்றாண்டு இறுதியில் அதற்கு ஏசு சீடர்/சீடர் துணைவர் பெயர்கள் திணிக்கப்பட்டன.  தற்போது எந்த ஒரு நூலின் மூலச் சுவடி கிடையாது. நாம் பைபிளியல் அறிஞர்கள் ஆய்வுகல் கூறுவதைப் பார்ப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

புதிய ஏற்பாடு 27ல் ஒன்றைக்கூட ஏசுவை பார்த்து பழகியவர் எழுதியது இல்லை, பவுல் பெயரில் உள்ள கடிதங்களில் 7 மட்டுமே சொல்லப்பட்ட ஆசிரியர் யார் எனத் தெரியும், மீதம் 20  பிற்காலத்தில் யாரஓ எழுதியவைஇறந்தவர் பெயகள் நம்பவைக்க திணிக்கப்பட்டது. கதைப்படி பவுல் ஏசுவை அறியாதவர். ஏசுவும் சீடர்களும் பேசிய மொழியான எபிரேயத்தில் ஒன்றுமே கிடையாது, எல்லாமே கிரேக்க மொழியில் தான், பயன்படுத்திய பழைய ஏற்பாடு வாக்கியங்கள் கிரேக்க செப்துவகின்ந்துவில் இருந்து தான், மூல எபிரேயத்தினது அல்ல.

சுவிசேஷங்கள்

ஏசுவின் கதை சொல்பவை, சுவிசேஷங்கள் எனில் நல்ல கதை கோட் Godd Spellee  எனப் பொருள். இவற்றின ஆசிர்யர்கள் யார் எனத் தெரியாது.

மாற்கு தான் முதலில் வரையப்பட்ட சுவி கதை ஆகும். இவர் சுவியில் ஏசு பிறப்பு கதைகள் இல்லை.5ம் நூற்றாண்டிற்கு முந்தைய கிரேக்க ஏடுகளில் ஏசு உயிர்த்து காட்சி அளிக்கும் கதைகளும் இல்லை.  மாற்கு சுவி 68- 75 இடையே முதல் வடிவம் பெற்றது. மாற்கு சுவி கதைய மற்ற மூவரும் அறிந்து மேலும் பல சேர்த்து எழுதினர். மத்தேயுவும் லூக்காவும் அந்த கதையமைப்பை மாற்றாமல் தருவதால் ஒத்த கதை சுவிகள்(Synoptic)எனப்படும்.

மத்தேயு சுவி 80 - 90 இடிஐயே முதல் வடிவு பெற்றது, இவர் ஏசு பிறப்பு கதைகள் மற்றும் போதனைகள் மற்றும் பல சேர்த்திருக்கிறார்..இவர் மாற்கின் 90% எடுத்து பயன் படுத்தி உள்ளார்.

லூக்கா சுவி 85 - 95 இடிஐயே முதல் வடிவு பெற்றது, இவர் ஏசு பிறப்பு கதைகள் மற்றும் போதனைகள் மற்றும் பல சேர்த்திருக்கிறார்..இவர் மாற்கின் 65% எடுத்து பயன் படுத்தி உள்ளார்.

ஒத்த கதை சுவிகள் மத்தேயு - லூக்காவில் மாற்கு கதை அமைப்பு தவிர போதனைகள் பெரும்பாலும் ஒரே மாதிரி இருப்பதால் அவை முன்பு வாய்மொழியிலிருந்த "Q" எனும் குறிப்பை பயன்படுத்தப் பட்டது என  பெரும்பாலன அறிஜர் கூறுவர்,ஆனால் சிலர் அப்படி  கிடையாது, மத்தேயுவை படித்து பிரச்சனை உள்ளவை மாற்றி லூக்கா உருவானது என்பர்.

நான்காவது யோவான் சுவி தனி நடை. இவர் மாற்கு சுவியை அறிந்து இருந்தாலும் முழுவதுமாய் மாற்றி அமைத்துள்ளார், ஏசுவின் தன்மை, இயங்கிய காலம், எங்கே இயங்கினார் என்பதைலேயே மாறுபாடுகள். பைபிளில்யல் அறிஞர்கள் பெரும்பாலும் யோவான் சுவியின் வரலாற்று தன்மையை ஏற்பதில்லை. 2ம் நூற்றாண்டு சர்ச் குறிப்புகள்படி ரோமன் அரசன் டிராஜன் காலத்தின் (பொகா 98- 117) போது வரையப்பட்டது.

மாற்கு சுவி தான் முதலில் வடிவம் பெற்றது, சர்ச் குறிப்புபடி முக்கிய சீடர் பேதுரி மரணம் பின்பு பொகா௬5. ஆனால் ஒரு குறிப்பு(மூலம் கிடையாது) மத்தேயு தான் முதல் அதுவும் எபிரேயத்தில் எழதப் பட்டது என்பதை இன்று அறிஞர்கள் ஏற்பதில்லை, அவரும் கிரேக பழைய ஏற்பாட்டை பயன்படுத்து உள்ளார், மாற்கினிலிருந்து  தான் எழுதப் பட்டது, மாற்கு போலவே எந்த சுவி கதாசிரியர்களும் இஸ்ரேலின் புவியிய்ல் அமைப்பை அறியவே இல்லை என அறிஞர்கள் காட்டுகின்றனர். `

விசேஷக் கதைகளின் வரலாற்றுத் தன்மை இல்லாதது ஏன்?

கிறிஸ்துவ தொன்ம நாயகர் பற்றிய கதைகள் செய்திகளுக்கு ஒரே தரவுகள் சுவிசேஷக் கதைகள் தான். சுவி கதாசிரியர்கள் இரந்த ஏசுவை அறியவில்லை.

மத்தேயு

விருப்பப்படியான சுவிசேஷம்

லூக்கா

 விருப்பப்படியான சுவிசேஷம்

தந்தை பெத்லஹேமில் தச்சராக  தொழில்  செய்த யாக்கோபு மகன்  ஜோசப், இவர் ஆபிரகாமிலிருந்து 40வது தலைமுறையினர்

தந்தை நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப், இவர் ஆபிரகாமிலிருந்து 56வது தலைமுறையினர்

 

மாற்கு மற்றும் மீதமுள்ள இரு ஒத்த கதை சுவிகளில் ஏசு சீடரோடு இயங்கியது 7 - 8 மாதங்கள் மட்டுமே, அதில் மாற்கில் உள்ளபடி ஏசு முதலில் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறவும், பிறகு பஸ்கா பண்டிகைக்காக ஆடு - கொலை பலி தரவுமே யூதேயா - ஜெருசலேம் வந்தார். ஏசு யோவான்ஸ்நானன் கைதிற்குப் பிறகு கலிலேயா சென்று இயக்கம் நடத்தியது முழுக்க கலிலேயாவில் தான். நான்காம் யோவான் சுவியில் 2 வருடம் ஒருசில நாட்கள் அதிகம் எனுமளவு இயக்கம், யோவான் கைது ஆகுமுன்பே இயேசு தனியாக இயக்கம், கலிலேயாவிற்கும் - யூதேயாவிற்கும் இடையே எஇறைய பயணங்கள், கடைசி எட்டு மாதங்கள் யூதேயாவில் தான்.

மாற்கு சுவியில் ஏசு தன் இயக்கத்தை ஒரு ரசிய இயக்கம், யாரும் தன்னை யூதக் கிறிஸ்து என சொல்ல வேண்டாம் என்பார், யோவான் சுவியில் ஒரு அரசியல் கட்சி தலைவர் பிரச்சாரம் போலக் காட்டும்.

ஒத்த கதை சுவிகளில் ஏசு அதிசயங்கள் பேய் ஓட்டும் வகையிலானவர், நான்காம் சுவியில் பேய் ஓட்டுதலே கிடையாது.

ஏசு மரணம் பின்பு மீண்டும் பழைய உடம்பில் காட்சி என்பதில் அத்தனை மாற்றங்கள்- குழப்பங்கள். அதே போல மாற்கினை ஒத்து எழுதியவகளும் தன்னிச்சையாய் பலவற்றை மாற்றி கதை செய்து உள்ளனர். சுவிசேஷக் கதாசிரியர்கள் நிச்சயமாய் ஏசு கதையை சீடர்களிடமோ அல்லது சீடர்கள் அறிந்தவர்கள் சொன்னதைதான் கதை ஆக்கியிருக்க வேண்டும், நாம் இரண்டு சீடர் பற்றிய கதைகளை பார்ப்போம். ஒன்று முக்கிய சீடர் பேதுரு, இன்னொருவர் ஏசுவினால் 12 சிம்மாசனத்தில் அமர தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆனால் ஏசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் ஸ்காரியோத்து.

லூக்கா 5ம் அத்தியாயத்தின் கதையில் கலிலேயா கடற்கரையில் மீன்பிடிக்கையில் ஏசு அதிக மீன் பிடிக்கச் செய்தபின் சேர்ந்தார் எனக் கதை. யோவான் 1ம் அத்தியாயத்தின் கதையில் பேதுருவும் அவர் சகோதரரும் யூதேயாவில் பெத்தானியா ஆற்றங்கரையில் யோவான்ஸ்நானர் சொல்ல சேர்ந்தனர்.

மத்தேயு சுவி கதையில் காட்டிக் கொடுக்க பெற்ற லஞ்சத்தை யூதாஸ் ஸ்காரியோத்து யூத ஆலயத்தில் வீசி எறிந்து ஏசுவின் மரணத்திற்கு முன்பே தூக்கு போட்டு இறந்தார், அந்தப் பணத்தில்  யூதப் பூசாரிகள் நிலம் வாங்கி யூதர் அல்லாதவர் மயானமாக (மத்தேயு 27:3௰), இங்கே சிலபல தீர்க்கம் நிறைவேறியதாகக் கதை. லுக்கா கதாசிரியரின் 2வது நூல் அப்போஸ்தலர் நடபடிகள், இதில் ஏசு மரணமாகிய பின்பாக, காட்டிக் கொடுக்க பெற்ற பணத்தில் யூதாசே ஒரு நிலம் வாங்கி அதில் நடந்தபோது வயிறு பலூன் போலே ஊதி வெடித்து இறக்க, யூதர் அல்லாதவர் மயானம ஆக அந்நிலம் ஆனதாம், இங்கேயும் சிலபல தீர்க்கம் நிறைவேறியதாகக் கதை.

யூதாசு மரணம் ஏசுவின் மரணம் ஒட்டியே, ஆனால் அந்நாள் சம்பவம் பற்றியே இருவேறு கதை, ஒருவர் ஒரு முறை தான் சாக முடியும்.

ஒத்த கதை சுவி கதாசிரியர்கள் மாற்கினை அப்படியே பயன்படுத்தாமல் தேவைக்கு ஏற்ப மாற்றியுள்ளனர். அதே போல "Q" பயன்பாட்டில் மத்தேயு மலை மேல் பிரசங்கம் எனக் காட்டுவதை மலை மேல் வெறும் பிரார்த்தனை செய்துவிட்டு அதே ப்ரிஅசங்கத்தை பல்வேறு முறை செய்தார் என லூக்கா மாற்றுவார். ஏசு தீவீர யூதர் என உள்ளவற்றை நீக்கி லூக்கா சில கதைகளை இடையில் சேர்ப்பார்.

முதலில் புனைந்த மாற்கு சுவியில் மிக முக்கியமாக் இரண்டு பிரதானமாய் இருக்கும், ஒன்று பின் பாதி முழுது ஏசு கைது மரணம், மிதமுள்ள கதைகளில் ஏசு அதிசயங்கள் செய்தார் எனப் புனைக் கதைகள்.

ஆனால் மாற்கிற்கு 2 வருடம் முன்பு எழுதிய பவுல் கடிதம் தெளிவாய் அதிசயம் ஏதும் கிடையாது எனச் சான்று தருகிறது.

அப்போஸ்தலர் எனும் சீடர்களுள் இருவர் யாக்கோபு, யூதா - இவர்கள் பெயரில் கடிதங்களும் உண்டு. இந்த இருவரை சர்ச் மரபுக் கதைகள்படி ஏசுவின் சகோதரர்கள், ஆனால் யோவான் சுவி வசனம் 7:5படி ஏசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் ஏசுவை தெய்வீகர் என ஏற்கவில்லை. மேலும் சீடர் பட்டியலில் மூன்று யூதாசுகள், யூதா ததேயு, யூதாஸ் ஸ்காரியோத்து  மற்றும் யூதா தோமோ மூவரும் ஒருவரே தான் எனும்படியாக பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

 நாம் மேலே பார்த்தவரை ஏசு சுவிசேஷக் கதை எழுதியவர்கள்  யார் எனத் தெரியாது, ஏசு யார்? எங்கே இயங்கினார்? - குழப்பம்; சீடர்கள் யார் என்பதிலேயே குழப்பம், ஏசு பழைய உடம்பில் உயிரோடு வந்தார் கதை குழப்பம் நாம் விரிவாக காண்போம்.

“In the four Gopels, therefore, the main documents to which we must go if we are to fill-out at all that bare sketch which we can Put together from other sources, we find material of widely-differing quality as regards credibility. So far-reaching is the element of ucertainly that it is temptig to ‘down tools’ at once, and to declare the task hopeless. The historical inconsistencies and impobabilities in parts of the Gospels form some of arguments advanced in favour of the Christ-myth theory. These are, however, entirely outweighed as we have shown-by ther considerations. Still, thediscrepancies and uncertainties that remain are serious and consequently many moderns, who have no doubt whatever of Jesus’ real existence, regard as hopeless any attempt to dissolve out the historically- true from the legendary or mythical matter which the Gospels contain, and to recostruct the story of Jesus’ mission out of the more historical residue.”

-----------------------------1. C.J. Cadoux: The Life of Jesus, pp.16,17.

"The speeches in the Fourth Gospel (even apart from the early messianic claim) are so different from those in the Syoptics, and so like the comments of the Fourth Evangelist both cannot be equally reliable as records of what Jesus said : Literary veracity in ancient times did forbid, as it does now, the assingment of fictitious speeches to historical characters: the best ancient historians made a practice of and assigning such speeches in this way."

Rev. T.G. Tucker writes:

"Thus Gospels were produced which clearly reflect the conception of the practical needs of the community for which they were written. In them the traditional material was used, but there was no hesitation in altering it or making additions to it, or in leaving out what did not suit the writer’s purpose"   C.J. Cadoux: The Life of Jesus, pp.16

The four Gospels included in the Bible were not the only Gospels written in the early centuries of Christianity.------- T.G. Tucker : The History of the Christians in the Light of Modern Knowledge, p.320



-- Edited by Admin on Wednesday 12th of October 2016 10:39:04 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பவுல் கடிதங்கள்

ஏசுவின் மரணத்திற்கு சில ஆண்டுபின், சீடர்களை துன்புறித்திய ரோம் குடிமகனான பவுல் என்பவர் கிறிஸ்துவராகி - யூதர் அல்லாத மக்களிடம் மதம் பரப்பி தனக்கு அதற்காக பணமும் பெற்றுக் கொண்டார் என்கிறது அவர் கடிதஙகள். இவர் தன்னால் மதம் மாற்றப்பட்ட கூட்டத்தினருக்கு எழுதியவையே இக்கடிதங்கள்.

ஏசு சீடரோடு இயங்கிய காலக் கதையில் யூதர் அல்லாதவரிடம் செல்லவே இல்லை, ஆனால் இறந்தபின் பழைய உடம்பில் வந்த கதையின் பகுதியில் ஏசு எல்லோரிடமும் செல் என சொன்னதாக கதை, ஆனால் பவுல் இப்படி யூதர் அல்லாத மக்களிடம் செவதடி அபோஸ்தலர் ஏற்கவில்லை என பவுல் அவர்களை கேவலமாய் இகழ்வார்.

2 கொரி 11: 5 மகாபிரதான அப்போஸ்தலரைவிட நான் ஒன்றிலும் குறைவு உள்ளவன் அல்லன் என எண்ணுகிறேன். 12:11...“அந்த மகா பிரதான அப்போஸ்தலர்களோடுஒப்பிடும்போது நான் குறைந்தவன் அல்லன்

கலாத்தியர் 1:17 எருசலேமில் உள்ள அப்போஸ்தலர்களையும் நான் போய்ப் பார்க்கவில்லை.  2:7  தேவன் பேதுருவிடம், யூதர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி ஆணையிட்டிருந்தார். ஆனால் எனக்கோ, யூதர் அல்லாதவர்களுக்குப் போதிக்கும்படி தேவன் ஆணையிட்டிருந்தார். 11 அந்தியோகியாவுக்குப் பேதுரு வந்தார். அவர் செய்தவற்றுள் சில சரியானவை அல்ல. அவர் தவறு செய்தார். அதனால் அவரோடு நேருக்கு நேராக எதிர்த்தேன்.

உண்மையில் பவுலின் நம்பிக்கை என்ன, அப்போஸ்தலர் நம்பிக்கை என்ன, அதற்குள்ளும் பிரச்சனைகள்

1 கொரி 1:  12 நான் கூற விரும்புவது இது தான்: உங்களில் ஒருவர் நான் பவுலைப் பின்பற்றுகிறேன்என்கிறார். மற்றொருவர் அப்பொல்லோவைப் பின்பற்றுகிறேன்என்கிறார். இன்னொருவர் நான் கேபாவைப் பின்பற்றுகிறேன்என்கிறார். இன்னும் ஒருவர் நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறேன்என்கிறார். 13 கிறிஸ்துவைப் பலவகைக் குழுக்களாகப் பிரித்துப் பார்க்கமுடியாது!

ஏசுவிடம் அதிசயம் ஏதும் கிடையாது

1 கொரி 1:  22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் போதிப்பது இதுவே. கிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார். இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும்.

பவுலின் அடிப்படை நம்பிக்கை

ஏசு தன் வாழ்நாளில் உலகம் அழியும் என நம்பினார், யுகமுடிவிற்கு முன் கதையின் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு இஸ்ரேலை யூதர்களிடம் மீட்க தாவிது ராஜா வாரிசு தான் என நம்பினார், ஆனால் அவர் வாழ்நாளில் உலகம் அழியவில்லை.

பவுல் இந்த நம்பிக்கையில் சிறுது மாற்றம், ஏசு இறந்த பின் மீண்டும் பழைய உடம்பில் காட்சி தந்தாய் புரளி, அதை வளர்த்து, ஏசு மீண்டும் வருவார்- அட்தோடு உலகம் அழியும் இதுவே பவுலின் பிரச்சாரம்.

1 கொரி 15: 51 ஆனால் நான் கூறும் இரகசியத்தைக் கேளுங்கள். நாம் எல்லாரும் மரணம்  அடையப் போவதில்லை.. நாம் மாற்றமுறுவோம். 52 கணத்தில் அது நிகழும். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நமது மாற்றம் நிகழும். கடைசி எக்காளம் முழங்கும்போது இது நடக்கும். எக்காளம் முழங்கும், மரித்த விசுவாசிகள் எப்போதும் வாழும்படியாய் எழுப்பப்படுவார்கள். நாமும் கூட முழுமையாய் மாற்றம் அடைவோம்.

 உலகம் அழியப் போகிறது அதனால் திருமணம் செய்யதவர்கள் இனிமேல் திருமணம் செய்துகொள்ளத் தேவையில்லை என்பார்.

1 கொரி 7 :1ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது. 26மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது. இப்போதுள்ள இடர் நிலையை முன்னிட்டு இவ்வாறு இருப்பதே நல்லதென எண்ணுகிறேன்.31 ...இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது.

பவுல் பிரச்சாரத்தில் உலகம் அழிவினை எதிர்பார்த்தபோது யாரோ உலக முடிவு கணக்கெடுப்பு நாள் முடிந்தது என்றதை

2 தெசலோனிக்கேயர் 2: 2 கர்த்தர் வரும் நாள் ஏற்கெனவே வந்து முடிந்து விட்டதென கேள்விப்பட்டால், மனக் கலக்கமோ, பயமோ அடைந்து விடாதீர்கள். சிலர் இதனைத் தீர்க்கதரிசனமாகவோ, செய்தியாகவோ சொல்லலாம், அல்லது ஒருவன் எங்களிடத்தில் இருந்து கூட ஒரு கடிதம் வந்ததாகக் கூறி உங்களை ஏமாற்றப் பார்க்கலாம்.

 

பைபிளியல் அறிஞர்கள் கூறுவது பவுல் உலகம் விரைவில் அழியப் போகிறது என்றதை புரிந்துகொள்ளவில்லை என்றால் நீங்கள் பவுல் கடிதங்களில் ஏதும் புரிந்து கொள்ளவில்லை எனப் பொருள்.தங்கள் வாழ்நாளில் உலகம் விரைவில் அழியப் போகிறது  பவுல் கடிதங்கள், இயேசு சொன்னதாக ஏன் மற்ற கடிதங்களில் என்றது இங்கே



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அபோஸ்தலர்கள் யார்

மாற்கு3:13-19

 மத்தேயு 10:2-4

 லூக்கா 6:12 -16

 பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன்

 பேதுரு என்னும் சீமோன் 

 பேதுரு என்று அவர் யரிட்ட  சீமோன் 

 செபதேயுவின் மகன் யாக்கோபு

 சீமோன் சகோதரர் அந்திரேயா

 சீமோன் சகோதரர் அந்திரேயா

 யாக்கோபின் சகோதரரான யோவான்

 செபதேயுவின் மகன் யாக்கோபு

 யாக்கோபு

 அந்திரேயா 

 யாக்கோபுசகோதரர் யோவான்

 யோவான்

 பிலிப்பு 

 பிலிப்பு

 பிலிப்பு

 பர்த்தலமேயு 

 பர்த்தலமேயு

 பர்த்தலமேயு

 மத்தேயு 

 தோமா

 மத்தேயு

 தோமா

  வரி தண்டினவராகிய மத்தேயு

 தோமா

 அல்பேயுவின் மகன் யாக்கோபு

 அல்பேயுவின் மகன் யாக்கோபு

 அல்பேயுவின் மகன் யாக்கோபு,

 ததேயு

 ததேயு

  தீவிரவாதி எனப்பட்ட சீமோன்

 தீவிரவாதியாய் இருந்த சீமோன்

 தீவிரவாதியாய் இருந்த சீமோன்

 யாக்கோபின் மகன் யூதா

காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து

காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து

 துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து

 

யோவான் சுவி  1:47 -49நத்தனியேல் என ஒரு சீஷர். -இவர் பெயரே மீதம் மூன்றில் கிடையாது.

 

லுக்கா சுவி கதையில் இறந்தபின் பழைய உடம்பில் வந்த கதையில் எம்மாவு எனும் ஊற் செல்லும் வழியில் 2 சீடர்களுக்கு ஏசு காட்சி கதையில் ஒரு சீடர் பெயர் கிலேயோபாஸ். இவர் இந்த ஒரு இடம் தவிர வேறு எங்கும் வரமாட்டார்.

 

 யூதா என்னும் பெயரில் மூவர் உள்ளனர். 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அப்போஸ்தலர் யாக்கோபு யார்- ஏசுவின் சகோதரர் யார்- தெரியாது?

 சர்ச் மரபுக் கதைகளின்படி ஏசுவிற்குப் பின்பான ஜெருசலேம் அப்போஸ்தலக் குழுவை தலைமை ஏற்று நடத்தியது யாக்கோபு, இவர் ஏசுவின் சகோதரர் எனவும் சொல்லப்படுவார். இவர் பெயரில் ஒரு கடிதமும் உண்டு.

பவுல் கடிதமங்களிலும் ஏசுவின் சகோதரர் - ஜெருசலேம் குழுவின் தலைவர் எனவும் இவை காட்டுகிறது. 

கலாத்திய1:19ஆண்டவரின் சகோதரரான யாக்கோபைத் தவிர அப்போஸ்தலர் வேறு எவரையும் நான் போய்ப் பார்க்கவில்லை.

கலாத்திய2:9 அந்த அருள்பணி எனக்கு அளிக்கப்பட்டதை உணர்ந்து திருச்சபையின்தூண்கள் எனக் கருதப்பட்ட யாக்கோபு, கேபா, யோவான் ஆகியோர் ..12அதாவது யாக்கோபின் ஆள்கள் சிலர் வருமுன் கேபா பிற இனத்தாருடன் உண்டு வந்தார்: ஆனால் யாக்கோபின் ஆள்கள் வந்தபின் அவர்களுக்கு அஞ்சி அவ்வாறு உண்பதை விட்டுவிட்டார்.

 1கொரிந்திய9:5 மற்றத் திருத்தூதரும் ஆண்டவருடைய சகோதரரும் கேபாவும்செய்வது போல நம்பிக்கை கொண்டுள்ள மனைவியரை எங்களோடு அழைத்துச் செல்ல எங்களுக்கு உரிமை இல்லையா?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஏசுவின் குடும்பம் சகோதரர்கள் பற்றி காண்பது

மாற்கு6: 1 அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர். 3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ' என்றார்கள். 

சர்ச் மரபுக் கதைகள்படி ஏசுவின் தாய் மேரி கன்னி என்பதால் இங்கு சகோதரர் என்றால் ஒன்றுவிட்ட எனவும் சில சர்ச் பிரிவு சாதிக்கும். நாம் கத்தோலிக கலைகளஞ்சிஅய்ம் சொல்வதைக் காண்போம்

 The Greek word in Mark 6:3 for brothers and sisters that are used to designate the relationship between and the relatives have meaning of full blood brothers and sisters in the Greek speaking world at the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this Sense. -New Catholic Encyclopedia, Vol-9 Page-337; fom Catholic University America

  சகோதரர்கள் எழுதியதாக கடிதம் புதிய ஏற்பாட்டில் உள்ளது. 

யாக்கோபு 1 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியனான யாக்கோபு, உலகமெங்கும் பரவியுள்ள பன்னிரண்டு குடிகளுக்கும் வாழ்த்துக்களோடு எழுதிக்கொள்வது:

யூதா 1 யாக்கோபின் சகோதரனும், இயேசு கிறிஸ்துவின் பணியாளுமாகிய யூதாவிடமிருந்து, தேவனால் அழைக்கப்பட்டிருக்கிற எல்லா மக்களுக்கும் எழுதப்படுவது: 

ப்ரோட்டஸ்டண்ட் கிளர்ச்சியின் முன்னிலைப் பாதிரியாரான மார்டின் லூதர் - புதிய ஏற்பாட்டில் யாக்கோபு, யூதா, எபிரேயர் & வெளிப்படுத்திய விசேஷங்கள் இவை நான்கும் நீக்க வேண்டும் எனக் கருதினார். மற்றவர் தடுக்க முயற்சி கைவிடப்பட்டது.

http://en.wikipedia.org/wiki/Luther's_canon



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 https://en.wikipedia.org/wiki/James,_brother_of_Jesus padiyaa ஜெருசலேம் சர்ச்சை ஏசுவிற்குப்பின் தலைமை ஏற்று அப்போஸ்தலர்களையும் வழி நடத்தியதான யாக்கோபு(ஆங்கில ஜேம்ஸ்)69ல் இறந்திருக்கலாம். இவர் கடைசிவரை யூத நம்பிக்கை கொண்டு, ஜெருசலேம் நோக்கி தொழுகை செய்து வாழ்ந்தவர் எனக் குறிப்புகள் கூறுகிறது.

சர்ச் மரபுக் கதைகள்படி ஒன்றுவிட்ட சகோதரர்கள் என்பதற்கு அல்பேயுவின் மகன் என உள்ளதைக் காட்டுவார்கள். ஆனல இங்கே உள்ள யோவான் சுவி வசனம்

 யோவான்7:1 இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழிதேடிக் கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.2 யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது.3 இயேசுவின் சகோதரர்கள் அவரை நோக்கி, ' நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும். அப்போது உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காணமுடியும்.4ஏனெனில், பொது வாழ்வில் ஈடுபட விரும்பும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை. நீர் இவற்றையெல்லாம் செய்வதால் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே! ' என்றனர்.5ஏனெனில் இயேசுவின் சகோதரர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.

 ஏசுவின் சகோதரர் இருவர் அப்போஸ்தலர் என்றால் யோவான் சுவி தவறு. இந்தசுவி சரி எனில் அப்போஸ்தலர்கள் யார் என்பதே தெரியாது, அல்லது ஏசு- சீடர்கள் பற்றி சர்ச் ஏதுமே தெரியாது, பிற்காலத்தில் தன்னிச்சையாய் புனைந்து வருகிறது என்ப்பது தெளிவாக புரியும்.

சரி யாக்கோபு பெயரில் உள்ள கடிதம் பற்றி பைபிளியல் அறிஞர் கூறுவது காண்போமா?

Oxford  Dictionary of Christian Church : Even if the Epistle is not the work of St.James, it seems likely that it was composed by A.D.95, At any rate it is not later than A.D.150. // Page 712

OXFORD Dictionary of Saints -1978 - JAMES THE LESS: The sons of Alphaues is often but not certainly, identified with the James whose mother stood by Christ on the cross and also with James, the brother of the Lord, who saw the risen Christ and is often called the first Bishop of Jerusalem, He is also sometimes identified with Author of the Epistle of the St.James. If None of this identification is correct, we know Practically nothing about James the Less.// Page - 208.

இவரைப் பற்றி சொல்வது எல்லாமே ஆதாரமில்லா நம்பிக்கை- செவிவழிக் கதைகள் என பரப்பப் பட்டவையே.

30 - 40 வருடம் ஜெருசலேம் ஆதிசர்ச் தலைமை தாங்கியவர் பற்றி நம்பிக்கைக்கு உரிய தகாவல்கள் ஏதும் இல்லை, எனில் ஏசு கதை - அதற்கு 30 வருடம் ஒரு சில மாதங்கள் மட்டுமே இயங்கிய ஏசு பற்றிய சுவி கதைகள் சற்றும் வரலாற்று ஆசிரியர் ஏற்கத் தக்கது அல்ல.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

   ஏசு சகோதரர் யூதா ஒருவரா- மூவரா?

1.யூதாசு இஸ்காரியோத்து  - சிரியா - அரேபிய பாரம்பரியத்தில் யூதாசு இஸ்காரியோத்து பார்க்க இயேசு போலவே தோற்றம் உள்ளவர். முஸ்லிம்கள் இவர் தான் சிலுவையில் கொல்லப்பட்டவர் எனவும் சொல்கிறது.

http://www.answering-christianity.com/abdullah_smith/crucifixion_of_judas.htm  இஸ்லாமியர்படி யூதாசு இஸ்காரியோத்து இயேசு போல தோற்றம் உள்ளவர். இவர் தான் சிலுவையில் அறையப்பட்டார். இயேசு இல்லை.

2. யூதா ததேயு – ததேயு எனும் பெயர் மாற்கு- மத்தேயுவில் யூதா எனமட்டுமே லூக்காவில் உள்ளது, இவர் தான் அவர் என்பதற்கு NTயில் ஆதாரம் கிடையாது.

யூதா இவரை சர்ச் மரபு ஏசுவின் சகோதரர் என்கிறது, இவரும் பார்க்க இயேசுவைப் போலவே இருப்பாராம்

http://en.wikipedia.org/wiki/Jude_the_Apostle

sometimes identified with Jude, “brother of Jesus”

http://www.catholiccompany.com/blog/saint-jude-thaddeus-surprisingly-popular-saint

As you know Saint Jude Thaddeus, according to tradition, looked like Jesus Christ! 

3. தோமா   - இதில் தோமாவின் பெயரில் யூதா என்பது சுவி கதையில் கிடையாது, தோமா நடபடிகள் எனும் நூல்படி ஏசுவோடு ஒட்டிப் பிறந்த இரட்டையர், பார்க்க ஏசு போலவே இருப்பார்.

சுவி கதையில் யோவான் சுவியில்  யோவான் 11:16 16திதிமு என்னும் தோமா என்பது மூல கிரேக்க ஏடுகளில் இல்லாதது KJV மொழி பெயர்ப்பில் நுழைக்கப் பட்டது என்கிறது சில நூல்கள். அரேமிய மொழியில் தோமா என்றால்  இரட்டையர், கிரேக்கத்தில் திதுமு எனில் இரட்டையராம், அப்படி எனில் அவர் பெயரே தரப்படவில்லை. (தமிழ் ERVயில் திதிமு சேர்க்கப்படவில்லை)

இதை பைபிள் அறிஞர் //..The Very name of the Apostle who is known as Thomas remains obscure. Thomas is the Greek form of the Aramic Teoma whose Greek Translation is Didymus, meaning – “Twin”, most probably his original name was Judas, and the Parentheses and the version variants could have been scribal clarification.How could an Apostle be known by an Epithet or adjective such as “Twin”-// ”PERSON AND FAITH OF Apostle Thomas in the Gospels, Fr.George Kaniarakath,CMI

 சர்ச் மரபுக் கதைகள்படி ஒன்றுவிட்ட ஏசு சகோதரர்களுள் ஒருவர் தான் யூதா, உடன் பிறந்க சகோதரர் முகம் ஏசுவோடு ஒத்து இருத்தல் சாத்தியமே. ஆனால் சர்ச் மரபுக் கதைகளில் மூவர் முகத்திற்கும் இக்கதை. 12 சீடர் எனக் கணக்கு சேர்க்க ஒரே நபரை மூன்று பேர் ஆக்கிவிட்டு இருக்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 சீடர் தோமா பற்றிய கட்டுரையில் வாடிகன் போப்பரசரின் பதிப்பகம் வெளியீடான "படலர்'ஸ் புனிதர்கள் வாழ்வு" நூலின் ஆரம்பமே 12 அப்போஸ்தலர் எவர் பற்றியுமே நம்பிக்கைக்கு உரிய தகவல்கள் இல்லையோ அதே நிலைமை தான் தோமாவிற்கும் எனவே தொடங்கி உள்ளது. 40 வருடங்கள் இணைந்து வாழ்ந்து மதம் துவங்கினர் எனில் ஒருவர் பற்றியும் தெரியாது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கிறிஸ்துவம் வளர்ந்த வேகம் என்ன??

ரோட்னீ ஸ்டோர்க் ஆய்வுபடி  40 வாக்கில் 500 முதல் 1000 பேர் மட்டுமே கிறிஸ்துவர், இது ஆண்டிற்கு 4% என்ற விகிதத்தில், ஏசு மரணத்திற்கு 100 வருடம் பின்பு தான் 10000 கிறிஸ்துவர்கள் என்ற நிலை வந்தது, இந்த வேகத்தில் சென்றால் 4ம் நூற்றாண்டு தொடக்கத்தில்ட 60 லட்சம் எனவும், 320 வாக்கில் 60 லடசம் அதாவது ரோமன் மக்கள் தொகையில் 10% வரை இருக்ககு கூடும் என்றார். ஆனால் இதற்கு வாடிகன் சார்பான அறிஞர் ப்ரூசு மலினா எனும் சர்ச் வரலாற்று ஆசிரியர் -கத்தோலிக பைபிள் இதழில் 1997ல்  இந்த நூலை ஆராய்ந்து 325 நிசின் கூட்டத்தில் சர்ச் பிஷப்கள், இரு பிழ்ஷப் கீழ் இத்தனை பேர் எனக் கணக்கீடு 9லட்சம் மக்களே 325ல் கிறிஸ்துவர்கள், அதாவது பொகா40- 1000 என்பது ஆண்டிற்கு 2.5% எனும் வேகத்தில் தான் வளர்ந்தது எனத் தெளிவாய் பதிலளித்தார்.

 Bruce Malina, who has argued that Stark's estimated growth rate is too high:

220 bishops (so Henry Chadwick) attended the Council of Nicea called by Constantine in A.D. 325. These bishops functioned in a face-to-face society. Now in a face-to-face society the maximum number of persons with whom one can interact is ca. 4,000 (so the anthropologist, Jeremy Boissevain); hence, "scientifically" speaking (that is, mathematically), the number of Christians at the time of the Council of Nicea was ca. 880,000, the result of a growth rate of ca. 2.5 percent per year [hence Stark] postulates a growth rate that is exaggeratedly high. 

-- Bruce Malina, Book Review of Rodney Stark's The Rise of Christianity, in The Catholic Biblical Quarterly 59 (1997): pp. 593-595.

சமூகத்தில் கல்வி அறிவு இல்லாத, விஷயங்களை சரி பார்க்க வசதியில்லாத ஏழை எளியோரை மட்டுமே தங்கள் மதமாற்ற இலக்கு என பவுலும் சொல்கிறார்.

1கொரிந்தியர்1:26 எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர்.

பொ.கா.100 வாக்கில்வரலாற்று ஏசு மரணத்திற்கு 70 ஆண்டு பின்பு 3000 மக்கள் மட்டுமே கிறிஸ்துவர்கள்- 6 கோடியில். இருபதாயிரம் மக்களுக்கு ஒருவர் கூட இல்லை. ரோமன் ஆட்சிக் கத்தி பலமே கிறிஸ்துவம் வளரக் காரணம்- வரலாற்று பின்பலம் இல்லை

In 313, the most severe of all the persecution was ended when Emperor Constantine became Christian.  The big minority rapidly swelled into big majority and 80 years later it had became practically illegal for a Citizen of Roman empire not to be Christian. One Hundred years after that the words Roman and Christian seems to have become inter-challengable.  Page-531; Vol-3; Chambers Encyclopedia



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 பவுல் பிற கடிதங்கள்

பவுல் பெயரில் 14ல் 7 மட்டுமே அவரே எழுதியதாம், மீதம் யாரோ எழுதியவை, இதில் பாதிரி மடல்கள் (1 திமோத்தேயு,  2 திமோத்தேயு, தீத்து), இவை மார்சியன் என்பவர் கிளரிச்சிக்கு பதிலாக 2ம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையாம்.

கொலோசையர், எபேசியர், 2தெசலோனிக்ர்கேயர் 3ம் யாரோ முதல்  நூற்றாண்டில் எழுதியவை, எபிரேயர் தனி நடை - இதை பவுல் பெயரில் சொல்வதைக் கூட பல அறிஞர்கள் நிறுத்தி விட்டனர். 

மற்ற கடிதங்கள்.

1யோவான், 2யோவான் & 3யோவான் மற்றும் 1பேதுரு யாரோ முதல்  நூற்றாண்டில் எழுதியவை,  யாக்கோபு, யூதா & 2பேதுரு 2ம் நூற்றாண்டில் பிற்பலுதியில் வரையப்பட்டவை என அறிஞர்கள் கூறுகின்றனர்.

வெளிப்படுத்தின விசேஷம் என்பது முதல் நூற்றாண்டின் இறுதியில் ஒரு குழுவில் வெவ்வேறு ஆசிரியர்களால் புனையப் பட்டது. இது சர்ச்சில் சேர்ந்து பலர் வெளியேறுவதைத் தடுக்க உலகம்  கணக்கெடுப்பு நாளில் கிறிஸ்துவர்களுக்கு மட்டும் பரலோகம் மற்றவருக்கு நரகம் எனும் புனைய்ல்

அப்போஸ்தலர் நடபடிகள் நூலை லுக்கா சுவி கதாசிரியரே எழுதியதாம், இது பவுல் கடிதங்களுக்கும் சுவிசேஷ ஏxஉவிற்கும் தொஅடர்பு ஏற்படுத்த 2ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புனையப்பட்டது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

புதிய ஏற்பாடு பைபிள் ஏடுகள் நம்பிக்கை தருகிறதா?

ஏசு பற்றி நாம் தெரிந்து கொள்ளும் புதிய ஏற்பாடு, அதிலும் ஏசு கதை சொல்லும் சுவிசேஷங்கள் நம்பகத்தன்மை உள்ளதா எனப் பார்க்கலாம்.

 இதற்கு 3 சோதனை மூலம் அறியலாம், என கிறிஸ்துவ மழுப்பலாளர்கள் தந்து, ஆனால் சோதனையின் போது முறையாக செய்யது மேலோட்டமாக காட்டிகின்றனர். நாம் விரிவாகக் காணலாம்.

1. BIBILOGRAPHICAL TEST : பைபிளொகிராபி சோதனை  நம்மிடம் எத்தனை சுவடிகள், சொல்லப்படும் நபர்க்கும் சுவடிகளுக்கும் உள்ள இடைவெளி, இதை வைத்து புஏ கதைகள் நம்பிக்கைக்கு உரியதாக புனைகின்றனர். அதாவது   புஏ ஏடுகள் ஏசு மரணத்திலிருந்து 100 வருடத்திலிருந்து தெளிவான ஏடுகள் உள்ளதாம், 25000 மேலான சுவடிகள் உள்ளதாம். மழுப்பலாளர் சொல்வது திருவள்ளுவரோ, அசோகரோ இவர்கள் பற்றி உள்ள ஏடுகள் அவர்கள் மரணத்திற்கு 1000 வருடம் பின்பு மிகச் சில ஏடுகள் மட்டுமே கொண்டு அவர்களை வரலாற்று நபர் என ஏற்கிறீர்கள். ஆனால் ஏசு பொ.கா.30 வாக்கில் மரணம், 130ஐ சேர்ந்த் பைபிள் ஏடுகள் உள்ளது என்கின்றனர்.

பழமையான ஏடுகள் 127:  நாம் புஏ- வின் பெரும்பாலன ஏடுகள் 127, மிகபபழமையானவை, இவை எங்கே உள்ளது எனும் இணையப் பக்கத்தைத் தருகிறோம் . இவை 2ம் நூற்றண்டின் இறுதியில் இருந்து 8ம் நூற்றாண்டு வரையிலானது எனப் பட்டியல் உள்ளது, இந்த ஏடுகளில், எந்த் பூஏ புத்தகத்தில் எந்த அதிகாரம் உள்ளது என உள்ளது.இவற்றில் ஒரு ஏடு கூட 27 புத்தகங்களின் ஒரு புத்தகத்தின் முழு ஏடு கிடையாது.

http://en.wikipedia.org/wiki/List_of_New_Testament_papyri

இதில் மிகப் பழமையானது ஏடு பி.52 ஜான் ரைலேண்ட் ஏடாம்- 125 ஆனது என்கிறது. ஆனால் எழுத்து ரீதியிலான ஆய்வு மேலும் 50 ஆண்டு பின் தள்ளுகிறது.இந்த ஏடின் படம் கீழே ; அது பற்றிய இணைப்பும் தருகிறோம்.

200px-P52_recto.jpg250px-Papyrus_90_(John_19.1-7).jpg 250px-POxy_v0064_n4404_a_01_hires.jpg

http://en.wikipedia.org/wiki/Rylands_Library_Papyrus_P52

  ஒரு கடன் அட்டையினை குறுக்கில் கிழித்த அளவு, முழுமையாக ஒரு வசனம் கூடக் கிடையாது. இந்த ஏட்டின் காலம் பற்றி கருத்து ஒற்றுமை இல்லையாம், தற்போதைய எழுத்தியல் ஆய்வு 150 வரை தள்ளி செல்கிறதாம்

Although Rylands \mathfrak{P}52 is generally accepted as the earliest extant record of a canonical New Testament text, the dating of the papyrus is by no means the subject of consensus among scholars. The style of the script is Hadrianic,which would suggest a most probable date somewhere between 117 CE and 138 CE. But the difficulty of fixing the date of a fragment based solely onpaleographic evidence allows a much wider range, potentially extending from before 100 CE past 150 CE.//

 

இதற்கு அடுத்தது ஆக்ஸ்ரைன்கஸ் ஏடு –

 

http://en.wikipedia.org/wiki/Papyrus_90     http://en.wikipedia.org/wiki/Papyrus_104

 

 இதன் காலம் 150 – 200 எனப் படுகிறது. இவை தான் 2ம் நூற்றாண்டின் மிக முக்கிய ஏடுகள்

இந்த ஏடுகள் பைபிளிற்கு என்பதால் இப்படி பிரபலமாகச் சொல்லப் படுகிறது, வேறு புத்தகமாக இருந்தால் இவை நிராகரிக்கப்பட்டு இருக்கும். இந்த ஏடுகள் எந்த விதத்திலும் பைபிளிற்கு நம்பகத்தன்மை தரவில்லை. இவை பைபிள் பிரதி எடுத்ததின் தான் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. 

அடுத்த இரண்டு சோதனைகள்

2. INTERNAL EVIDENCE TEST : உள்ளே சொல்லபட்டவையின் சோதனை 

“One must to the claims of the document under analysis, and not assume fraud or error unless the author disqualified himself by contradictions or known factual inaccuracies”. John W. Montegomery

 ஆய்வுக்கு உள்ள பழைய புத்தகம் நேர்மையானது என்பதை ஏற்றே ஆக வேண்டும்- அந்த புத்தகத்தில் முரணான மாறுபாடுகளோ, தெரிந்தபடியான தவறுகள் இருக்கக் கூடாது.

 ஏசு சீடரோடு இயங்கிய காலம் எத்தனை நாட்கள்-  தெரியாது.

 3 சுவிகள் ஒரு வருடம் என்கிறது, மேலும் ஏசுவின் மரணத்திற்கு 40 வருடம் பின்பு முதலில் புனையப்பட்ட மாற்கு சுவி ஏசு கதைப்படி, கலிலேயாவை சேர்ந்த ஏசு, யூதேயாவின் எல்லையோர வனாந்திரப் பகுதியில் யோவன் ஞானஸ்நானகரிடம் பாவமன்னிப்பு பெற்ற உடன், யோவான் கைதாகிட  பாவமன்னிப்பு -ஞானஸ்நானம் யோவானிடம் பெற்றார், யோவான் கைதாகிட ஏசு கலிலேயா வந்து அங்கே தன் சீடர்களை சேர்த்து இயங்கி கடைசி வாரம், யூத மதப் புராணக் கதைப்படி, அப்பாவி எகிப்தியரின் முதல் குழந்தகளை கொன்றதற்கு நன்றியாக வருடாவருடம், யூதர்களின் சிறு கடவுள் கர்த்தர் இருக்கும் ஒரேஒரு இடமான ஜெருசலேம் ஆலயத்தில் ஆடு கொலை செய்து பலி தர வந்தபோது கைது செய்யப்பட விசாரணைக்குபின் மரணம். அதாவது ஏசு பிறப்பிலிருந்து மரணம் வரை யூதர் தான்.

யோவான் சுவி ஏசு சீடரோடு இயங்கிய காலம் 2 வருடமும் மேலும் சில நாட்களும் என்கிறது. மேலும் ஏசு யூதேயாவிலேயே தான் மூன்று பண்டிகைகள் கூடாரப் பண்டிகை (செப்டம்பர்), மறு அர்ப்பணிப்பு பண்டிகை (டிசம்பர்) பின் பஸ்கா (ஏப்ரல்)  எனக் கடைசி எட்டு மாதங்கள் யூதேயாவில் கழிந்தது.ஏசு சீடரோடு இயங்கும் போது ஒரு முறை  யோவன் ஞானஸ்நானகர் வழியில் வருவதாக ஒரு சம்பவம். அதாவது ஏசு சீடர் சேர்த்து இயக்கம் ஆரம்பித்தபின்பு தான் யோவான் கைது ஆனார் என்கிறது.

இதை பைபிள் அறிஞர் தெளிவாக உறுதி செய்கிறார்.

If we had only Mark’s Gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galilean ministry began after John the Baptist was imprisoned.

The IVth Gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first 6 chapters. From Chapter-7 onwards the scene is laid wholly in Judea and Jerusalem. Moreover, St.John explicitly states that Jesus was active in Judea and Jerusalem before the Baptist was imprisoned, for John was not yet cast in Prison (Jn 3:24) 

Page-45, Words and Works of Jesus, A.M.Hunter.

மாற்கு ஏசு இயங்கிய காலம் முழுதும் கலிலெயாவில் என்றும், பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறவும், கடைசி ஒருவார்ம் மட்டும் யூதேயாவில் என மாற்கு சொல்லியுள்ளார். நான்காவது சுவிசேஷத்தில், காட்சி கலிலெயா – யூதேயா என மாற்றி மாற்றி முதல் 6 அத்தியாயங்களும், 7ம் அத்தியாயத்திலுருந்து முழுதும் யூதேயாவில்- ஜெருசலேமில் என்கிறார். ஞானஸ்நான யோவான் கைதிற்கு முன்பே ஏசு சீடர் சேர்த்து இயங்கினார் எனவும் காட்டுகிறது.-என பைபிளியல் அறிஞர் ஹன்டர் உறிதியாய் சொல்கிறார்.

பேராசிரியர் F F புரூஸ் அவர்கள் “The Real Jesus”  என்ற தன் நூலில் பின் வருமாறு சொல்லுகிறார், “Where as Synoptic   record most of Jesus ministry is located in Galilee,John place most of it in Jerusalem and its neighbourhood.” – Page-27 – THE REAL JESUS.

கலிலேயாவை  ஆண்டது ஏரோது, யூதேயாவை ஆண்டது ரோமன் ஆட்சியில், எதற்காக மாற்கு – மத்தேயூ – லூக்கா மூன்று சுவிகளும் கடைசி 7 – 8 மாதங்கள் யூதேயவில் உள்ளதை சொல்லவில்லை. வேறு அரசியல் காரணம் உண்டா தெரியாது. ஆனால் ஏசு படி

லூக்கா 16:10 10 சிறிய காரியங்களில் நம்பிக்கைக்கு உகந்த மனிதன் பெரிய காரியங்களிலும் நம்பிக்கைக்கு ஏற்றவனாயிருப்பான். சிறிய காரியங்களில் நம்பிக்கைக்குத் தகாதவனாக இருப்பவன் பெரிய காரியங்களிலும் அவ்வாறே   இருப்பான்.

மத்தேயுவின்படி ஏசுவின் தந்தை பெதெலஹேமை சேர்ந்த யாக்கோபு மகன் ஜோசப் (ஆபிரகாமிலிருந்து 40வது தலைமுறை)

லூக்காவின் சுவி கதைப்படி ஏசுவின் தந்தை நாசரேத்தை சேர்ந்த ஏலி மகன் ஜோசப் (ஆபிரகாமிலிருந்து 56வது தலைமுறை)

மத்தேயுவின் ஏசு பெரிய ஏரோதின் மரணத்திற்கு 2 வருடம் முன்பு, அதாவது பொ.மு. 6ல் பிறந்திறக்கலாம்.

லூக்காவின் சுவி கதைப்படி ஏசு, ரோமன் ஆட்சியின் கீழாக சிரியா கவர்னர் கிரேனியூ கீழ் யூதேயா வந்த போது மக்கள் திகை கணக்கெடுப்பின்போது அதாவது, பொ.கா. 8ல் பிறந்திருக்கலாம்.

ஏசுவின் மரணம் முதல் சுவி மாற்கின்படி, பஸ்கா பலியை முதல் நாள் தந்திட பண்டிகை அன்று, 4வது சுவிபடி, பஸ்காவிற்கு முந்தைய நாள் அதாவது பலி தரும் நாள். இந்தக் குழப்பத்தால் இன்று வரை ஏசு இறந்த வருடம் எது, பிறந்த வருடம் எது எதிலும் தெளிவு கிடையாது. இது போலே மேலும் 50க்கும் அதிகமான முரண்பாடுகள், இவற்றை அடுத்தக் கட்டுரையில் (சுவிசேஷம் உருவான கதை) காணலாம்

 

3. EXTERNAL EVIDENCE TEST: வெளியே ஆய்வின் சோதனை

 இது இஸ்ரேலின் நாடு அமைப்பு, புதை பொருள் ஆய்வு முடிவுகள் இவை புதிய ஏற்பாட்டோடு பொருந்துகிறதா எனப் பார்ப்பதாம்.

நாசரேத்தில் இயேசு புறக்கணிக்கப்படுதல் (மத் 13:53 – 58; மாற் 6:1 – 6)

லூக்கா 4:16 16 தான் வளர்ந்த இடமாகிய நாசரேத்திற்கு இயேசு பயணம் செய்தார். யூதர்களின் ஓய்வு நாளில் அவர் வழக்கம் போல் ஜெப ஆலயத்திற்குச் சென்று வாசிப்பதற்காக எழுந்து நின்றார். 28 ஜெப ஆலயத்தில் உள்ள அனைவரும் இவ்வார்த்தைகளைக் கேட்டனர். அவர்கள் மிகமிகக் கோபம் அடைந்தனர். 29 அம்மக்கள் எழுந்து இயேசுவை நகரத்தில் இருந்து வெளியேறும்படியாகக் கட்டாயப்படுத்தினர். அவர்கள் நகரம் ஒரு மலையின்மேல் நிர்மாணிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் இயேசுவை மலையின் விளிம்புக்குக் கொண்டு வந்தனர். விளிம்பிலிருந்து அவரைத் தள்ளிவிட அவர்கள் முனைந்தார்கள். 30 ஆனால் இயேசு அவர்களுக்கு நடுவே நடந்து, அங்கிருந்து சென்றுவிட்டார்.

Nazareth http://en.wikipedia.org/wiki/Nazareth 

 Nazareth is not mentioned in pre-Christian texts and appears in many different Greek forms in the New Testament. There is no consensus regarding the origin of the name.

James F. Strange, an American archaeologist, notes: “Nazareth is not mentioned in ancient Jewish sources earlier than the third century AD. This likely reflects its lack of prominence both in Galilee and in Judaea.”[39] Strange originally calculated the population of Nazareth at the time of Christ to be “roughly 1,600 to 2,000 people” but, in a subsequent publication, revised this figure down to “a maximum of about 480.”[40] In 2009 Israeli archaeologist Yardenna Alexandre excavated archaeological remains in Nazareth that might date to the time of Jesus in the early Roman period. Alexandre told reporters, “The discovery is of the utmost importance since it reveals for the very first time a house from the Jewish village of Nazareth.”[41]

From the following [42] verse in the Gospel of Luke:[And they led Jesus] to the brow of the hill on which their city was built, that they might throw him down headlong.[Lk. 4:29]

The Gospel of Luke suggests that ancient Nazareth was built on the hillside. Historic Nazareth was essentially constructed in the valley; the windy hilltops in the vicinity have only been occupied since the construction of Nazareth Illit in 1957. From the ninth century CE tradition associated Christ’s evasion of the attempt on his life to the ‘Hill of the Leap’ (Jabal al-Qafza) overlooking the Jezreel Plain, some 3 km (2 mi) south of Nazareth.[43]

நாசரேத் கதை முழுதும் கட்டுக் கதை. நாசரேத்தி அகழ்வு ஆய்வ்களை சரியானபடி விஞ்ஞான ஆய்வு பற்றிய ஒரு வலை இதோ மத்தேயு சுவியில் கண்டால்

மத்தேயு 2:21 எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.22 ஆனால் யூதேயாவில் ஏரோது  அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.  23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, ‘ ″நசரேயன்″ என அழைக்கப்படுவார் ‘ என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.

இப்படி ஒரு வசனம் – ஏன் நாசரேத் என்னும் சொல்லே பழைய ஏற்பாட்டில் கிடையாது. தீர்க்கம் நிறைவேறியதாம்.

The nature of Matthew’s Pesher is best illustrated by 2:23, which states that Jesus settled down in Nazareth  “that what was spoken by the Prophets might be fulfilled, ” namely “HE” SHOULD BE CALLED A NAZARENE”; now here is the Old Testament we do not have such a statement.

Page -16; K.Luke; Companion to New Testament.

 ஏசுவிற்கு குறைந்தபட்ச ஆதாரம் என முதல் நூற்றாண்டின் கடைசி காலத்தில் எழுதப்பட்டனதான யோசிபஸ் என்பவர் நூலாம், அதன்படி யோவான் ஞானஸ்நானகர் மரணம் பொ.கா.36ல் என்கிறது.

 According to the Jewish historian, Josephus (Antiquities of the Jews), John was executed because he had criticised the marriage of Herod Antipas to his own brother’s wife, who divorced her husband in order to marry him. Since the marriage took place in 34 CE, it appears that Josephus is giving John’s death as occurring no earlier than approximately 36 CE, which was later than the crucifixion of Jesus.

Josephus places the marriage of Antipas to his brother’s former wife, Herodias, at the same time as, or shortly after, the death of Philip II, who he says died in the twentieth year of the reign of Tiberius (34 CE). John was highly critical of this marriage, causing Antipas to fear that he would cause an insurrection:

Herod, who feared lest the great influence John had over the people might put it into his power and inclination to raise a rebellion, (for they seemed ready to do any thing he should advise) thought it best, by putting him to death, to prevent any mischief he might cause, and not bring himself into difficulties, by sparing a man who might make him repent of it when it would be too late. Accordingly he was sent a prisoner, out of Herod’s suspicious temper, to Macherus, the castle I before mentioned, and was there put to death.

Josephus makes it clear that Antipas intended to execute John, and it seems most improbable that he would long delay the execution if he feared an insurrection by John’s supporters. The execution would have quickly followed the imprisonment.

Additionally, King Aretas attacked and defeated Antipas in 36 CE in revenge for the slight to his daughter, whom Antipas divorced in order to marry Herodias. We can expect a one or two year delay during which the news reached Aretas and he considered a diplomatic solution or demanded compensation, then raised an army, but an angry father is not likely to have waited ten years to take action.

Some of the Jews believed that Antipas’ defeat was divine retribution for his execution of John:

Now the Jews had an opinion that the destruction of this army was sent as a punishment upon Herod, and a mark of God’s displeasure to him.

This association makes it most likely that John’s death was a quite recent event at the time of the defeat – closer in time to the battle than to the wedding, and certainly not something that occurred 8 or 10 years earlier.  

http://wiki.answers.com/Q/Did_John_The_Baptist_die_before_Jesus_died

 சீசருக்கு வரி செலுத்துதல்- ஏசு சொன்னதும் (மத் 22:15 – 22; லூக் 20:20 – 26) 

மாற்கு12:13 பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்கவைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர்.14 அவர்கள் அவரிடம் வந்து, ‘ போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தவா, வேண்டாமா? ‘ என்று கேட்டார்கள்.15 அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்து கொண்டு, ‘ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டுவாருங்கள். நான் பார்க்க வேண்டும்’ என்றார்.16அவர்கள் அதைக் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், ‘ இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை? ‘ என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ‘ சீசருடையவை ‘ என்றார்கள்.17 அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ‘ சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்‘ என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.

 தெனாரியம் காசு ஏசு காலத்தில் யூதேயாவில்  புழக்கத்தில்  வரவே இல்லை (இணைப்பு)

A denarius featuring Tiberius. The inscription on a denarius of the period reads Ti[berivs] Caesar Divi Avg[vsti] F[ilivs] Avgvstvs (“Caesar Augustus Tiberius, son of the Divine Augustus“).

The coin   Main article: Tribute penny

The text identifies the coin as a δηνάριον dēnarion,[1] and it is usually thought that the coin was a Roman denarius with the head of Tiberius. The coin is also called the “tribute penny.” The inscription reads “Ti[berivs] Caesar Divi Avg[vsti] F[ilivs] Avgvstvs” (“Caesar Augustus Tiberius, son of the Divine Augustus”). The reverse shows a seated female, usually identified as Livia depicted as Pax.[2]

However, it has been suggested that denarii were not in common circulation in Judaea during Jesus’ lifetime and that the coin may have instead been an Antiochan tetradrachm bearing the head of Tiberius, with Augustus on the reverse.

 அ) சுவிசேஷக் கதாசிரியர்களுக்கு வரலாற்றுஞானம் இல்லை. 

ஆ) இயேசு வாழ்ந்த பகுதிகளைக் குறித்த ஞானம் சுவிசேஷக் கதாசிரியர்களுக்கு  இல்லை

 

நடு நிலையாக தேடுவோருக்கு பைபிளின் பழைய ஏடுகளோ, இருக்கும் முரண்பாடுகளும் வரலாற்று பிழைகளும் புதிய ஏற்பாடு சிறிதும் நம்பிக்கைக்கும் உரியது இல்லை எனபது தெளிவாகிறது.  



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 புதியஏற்பாட்டுநூல்கள்கிபி 50 முதல், கிபி 200 வரையிலானகாலகட்டத்தில்புனையப் பட்டவைகள். கிறிஸ்துவமதப்புராணக்கதைநாயகர்ஏசு, இந்தஏசுபற்றிநடுநிலையாளர்ஏற்கும்படிஒருஆதாரமும்இல்லை, இத்தைபிரிட்டானிகாகலைக்களஞ்சியம்கூறுவது “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.

அமெரிக்கநூயுயார்க்பைபிளியல்பேராசிரியர்ரெஜினால்ட்புல்லர்தன்நூலில்உறிதிசெய்கிறார்.“ஏசுவுடன்பழகியோர்ஏதும்எழுதிவைக்கவில்லை; புதியஏற்பாட்டுநூல்கள் 27ல்ஒன்றுகூடவரலாற்றுஏசுவினோடுபழகியயாரும்எழுதியதுஇல்லை”- The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork .

மான்செஸ்டர்பழ்கலைக்கழகத்தில்வேதாகமவிமர்சனம்மற்றும்விவாதத்திற்கானரைல்ண்ட்ஸ்பேராசிரியராகஇருந்த, காலம்சென்றபேராசிரியர் F F புரூஸ்அவர்கள் தன்நூல் “The Real Jesus”பின்வருமாறுசொல்லுகிறார்-

“ The Conclusion usually(and I think rightly) drawn from their comparative study is that the Gospel of Mark (or something like it) served as a source for the Gospels of Matthew and Luke, and that these two also had access to a collection of sayings of Jesus(conveninently called ‘Q’), which may have been complied as a handbook  for the Gentile mission around AD50.- P-25.

 

பெரும்பாலனா ஆராய்ச்சியாளர்கள் கூறுவது, (என் கருத்தும்-அது சரி)  மாற்கு சுவி(அல்லது அது போன்றது) கதையைக் கொண்டு, இத்தோடு இயேசு சொன்னவை எனப்படும் ஒரு 50 வாக்கில் எழுந்த குறிப்புகளும் கொண்டே மத்தேயு லூக்கா சுவி கதைகள் வளர்ந்தன



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

"There is no evidence of a United Monarchy, no evidence of a capital in Jerusalem or of any coherent, unified political force that dominated western Palestine, let alone an empire of the size the legends describe. We do not have evidence for the existence of kings named Saul, David or Solomon; nor do we have evidence for any temple at Jerusalem in this early period. What we do know of Israel and Judah of the tenth century does not allow us to interpret this lack of evidence as a gap in our knowledge and information about the past, a result merely of the accidental nature of archaeology. There is neither room nor context, no artifact or archive that points to such historical realities in Palestine's tenth century. One cannot speak historically of a state without a population. Nor can one speak of a capital without a town. Stories are not enough."



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard