New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எஸ்.வி.ராஜதுரை


Guru

Status: Offline
Posts: 24601
Date:
எஸ்.வி.ராஜதுரை
Permalink  
 


 

எஸ்.வி.ராஜதுரையும் – அறம்சார் சில கேள்விகளும்! : அசோக் யோகன்

progovஇலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஜெர்மனியை தளமாகக் கொண்ட இயங்கும் ஐ.என்.எஸ்.டி எனும் தன்னார்வ அரசு சாரா நிறுவனத்தின் அனுசரணையில் திருவனந்தபுரத்தில் நடந்த மாநாட்டில் தாங்கள் சிறப்புரை ஆற்றினீர்கள் (எதுவரை – செப்டம்பர்-அக்டோபர் – 2009) என்பதைக் கேட்டு நான் அதிர்ந்து போனேன்.
இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை எனச் சொல்கிற சுசீந்திரனின் முன்முயற்சியில் நடைபெற்ற நிகழ்வுதான் திருவனந்தபுரம் கூட்டம் என்பதைத் தாங்கள் அறிவீர்கள் என நான் நம்புகிறேன்.
இந்து பத்திரிக்கையின் என்.ராமினாலும், சிங்கள இனவாதக் கட்சியான ஜே.வி.பியினாலும் தகவமைக்கப்பட்ட இலங்கை குறித்த அரசியல் பார்வை கொண்ட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளர்களான ச.தமிழ்ச் செல்வன், ஆதவன் தீட்சண்யா போன்றவர்களோடு திருவனந்தபுரம் கூட்டத் தளத்தை நீங்கள் பயன்படுத்தியிருந்தீர்கள் என அறிந்தபோது மேலும் அதிர்ந்து போனேன்.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலங்கை சார்ந்த நிலைபாட்டுக்கு ஆதரவாக, சுசீந்திரன் போன்றவர்களை முன்வைத்து, இவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதையும் நீங்கள் அறியாதவரல்ல என நினைக்கிறேன்.

 இலங்கை அரசின்பாலான ஒரு மென்மையான நிலைபாட்டுடன் விடுதலைப் புலிகளை மட்டுமே நடந்து முடிந்த கொலைகளுக்குக் காரணமாக நிறுத்துகின்ற அரசியலை சுசீந்திரன் போன்றவர்கள் முன்வைத்து வருகிறார்கள். இந்த அரசியலைத் தமிழகத்தில் முன்னெடுத்து வருகிறவர் அ.மார்க்ஸ் என்பதையும் தாங்கள் அறியாதிருக்க வாய்ப்பில்லை.

இலங்கை பற்றிய, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலுக்குகந்த வகையிலான சுசீந்திரன் போன்றவர்களின் நேர்முகங்களையும், இவர்களுக்கு ஆதரவாக அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினது ஆதவன் தீட்சண்யா அங்கம் வகிக்கிற புதுவிசையில் அவர்தம் கட்சியினது அரசியல் பிரச்சாரத்தின் பகுதியாக வெளியிட்டார்கள் என்பதனையும் தாங்கள் அறிந்தே இருப்பீர்கள்.
சுசீந்திரன் தனது தன்னார்வ நிறுவன அரசியலுக்கும், தனது இலங்கை அரசின்சார்பு அரசியலுக்கும் ஒரே தளத்தில் தங்களையும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இணைத்திருக்கிறார் என்பதுதான் இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அன்புள்ள எஸ்.வி.ஆர் அவர்களே, இனப்படுகொலை நடக்கவில்லை என்று சொல்கிற சுசீந்திரன் கூட்டிய திருவனந்தபுரம் மாநாட்டில் தாங்கள் ஏன் கலந்து கொண்டீர்கள் எனச் சொல்வீர்களா?
அன்று முதல் இன்று வரை இலங்கை அரசு சார்பான இந்து என்.ராமினதும், சிங்கள இனவாதக் கட்சியான ஜே.வி.பியினதும் அரசியலையுமே முன்னெடுக்கும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினது எழுத்தாளர்களுக்கும் தங்களுக்குமான, அக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான, பொதுக் காரணிகள் என்ன எனச் சொல்வீர்களா?
தன்னார்வ மற்றும் அரசு சாரா அமைப்புகளின் அரசியல் பற்றித் தாங்கள் அறியாதிருப்பீர்கள் என நான் நம்பவில்லை. உலகெங்கிலும் புரட்சிகர அரசியல் முன்னெடுக்கப்படாது முடக்குவதும், அமெரிக்க ஐரோப்பிய பாணியிலான ஜனநாயகத்தையும் சிவில் சமூகத்தையும் அமைப்பதுமே அவர்களது அரசியல் என்பதையும் தாங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.

ஐ.என்.எஸ்.டி எனும் அமைப்பு ஜெர்மனியைத் தளமாகக் கொண்ட ஒரு தன்னார்வ அரசு சாரா அமைப்பு. இந்த அமைப்பு இலங்கை அரசியலும் இனப்பிரச்சினையும் தொடர்பான கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. கருத்தரங்குகள் ஜெர்மனியின் பேட் போல் நகரில் அமைந்துள்ள பிராதஸ்தாந்து கிறித்தவ அமைப்பான எவாஞ்ஜலிக் அகாதமி துணையுடன் நடத்தப்பட்டு வருகிறது.
ஐ.என்.எஸ்.டி அமைப்புக்காக சலுகையில் இக்கருத்தரங்குகளை இந்த அமைப்பு நடத்துகிறது. இக்கருத்தரங்கு தொடர்பு முகவரியாகவும் இந்த அமைப்பினது முகவரியே இக்கருத்தரங்க அழைப்பிதழில் உள்ளது.
உலக தேவாலயக் கூட்டமைப்பிலும் எவாஞ்ஜலிக்கா அகாதமி அங்கம் வகிக்கிறது. ஜெர்மானிய அரசு, இலங்கை அரசு, அரசு சாரா அமைப்புக்கள், பிற ஈடுபாடுள்ள குழுக்கள் போன்றவற்றுக்கு இடையில் புரிந்துணர்வுக்காகவும் ஒத்துழைப்புக்காகவும் இக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. ஜெர்மனியிருந்தும், இலங்கையிலிருந்தும், உலகெங்கிலுமிருந்தும் ஐரோப்பியர்களும் ஆசியர்களும் இக்கருத்தரங்ககளில் பங்கு பெறுகிறார்கள்.
மேலும் ஜெர்மனியிலும் உலகெங்கிலும் பிராதஸ்தாந்து அறத்தைப் பரப்புவதன் ஒரு பகுதியாகவே இந்தக் கருத்தரங்குகளை இவ்வமைப்பு நடத்தி வருகிறது.
மார்க்ஸியர்களும் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவர்களும் தன்னார்வ அமைப்புக்களின் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் போது எழுப்பப்படும் கேள்விகளையே தங்கள் முன்பாகவும், தங்களோடு அக்கூட்டத்தில் பங்கு பற்றிய, தன்னார்வ நிறுவனங்கள் குறித்து புரட்சிகரமான அறம் பேசுகிற மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளர்களான ச.தமிழ்ச்செல்வன் மற்றும் ஆதவன் தீட்சண்யா முன்பாகவும் முன் வைக்கிறேன்.
தன்னார்வ நிறுவனங்கள் என்கிறபோது அதனது நிதியாதாரம் பற்றிய கேள்விகளை இடதுசாரிகளும் மார்க்சியர்களும் எழுப்புவது தவிர்க்க இயலாதது. பெருமளவிலான நிதிச்செலவுகளோடுவும் பயணச் செலவுகளோடும் உலகெங்கிலும் கருத்தரங்குகளை நடத்தும் ஐ.என்.எஸ்.டியின் நிதியாதாரம் குறித்த ஒரு ஆர்வலரின் கேள்விக்கு ஐ.என்.எஸ்.டி தளத்தில் பதில் சொல்லப் பட்டிருக்கிறது. இலங்கை அரசின் நிதியாதாரத்தில் ஐ.என்.எஸ்.டி இயங்குகிறது என்பது குற்றச்சாட்டு.

இலங்கை அரசின் பணத்திலோ அல்லது விடுதலைப் புலிகள் பணத்திலோ ஐ.என்.எஸ்.டி இயங்கவில்லை எனப் பதில் தரப்பட்டிருக்கிறது. திட்டவட்டமாக இதில் ஐ.என்.எஸ்.டியின் நிதியாதாரம் குறித்த பதில் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

எவாஞ்ஜலிகல் அகாதமியாவின் உறவு, நிதி தொடர்பாக எழுந்திருக்கும் கேள்விகள், தமிழர்கள் மீதான இனப்படுகொலை எனச் சிக்கலானதொரு சூழ்நிலையில் தன்னார்வ மற்றும் அரசு சாரா நிறுவனமான ஐ.என்.எஸ்.டி நடத்திய கருத்தரங்கில், மார்க்சியராகத் தம்மை முன்னிறுத்தும் தாங்கள் கலந்து கொண்டதற்கான நிதி ஆதாரம் குறித்த தெளிவுறுத்தலையும், நியாயப்பாட்டையும் அன்புள்ள எஸ்.வி.ஆர் அவர்களே, தாங்கள் முன்வைக்க வேண்டும்.
உலகெங்கிலும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் தமது உரிமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள். இவ்வாறான மக்கள் இயக்கங்களை வழிநடத்துகிறவர்கள், நிறைய அரசியல் தவறுகளும் செய்கிறார்கள்.
மதவழி நின்று இதனை அணுகுகிறவர்கள் இருக்கிறார்கள். வஹாபிசத்தையும் பிராதஸ்தாந்து அணுகுமுறையையும் இந்துத்துவ அணுகுமுறையையும் தீர்வாக முன்வைக்கிற அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். மார்க்சியர்கள் எனத் தம்மைக் கருதிக் கொள்கிறவர்கள் இவ்வழிகளில் பிரச்சினைக்கான தீர்வுகளை முயல்வதில்லை .
அப்படி எனில், அன்புள்ள எஸ்.வி. ஆர். அவர்களே, தன்னார்வ மற்றும் அரசு சாரா நிறுவனமான ஐ.என்.எஸ்.டி நடத்திய இலங்கைத் தமிழர் தொடர்பான திருவனந்தபுரக் கூட்டப் பங்கேற்பை மார்க்சியர்களாகத் தம்மைக் கருதிக்கொள்ளும் தாங்களோ, தங்களோடு கூட்டத்தில் கலந்துகொண்ட ச.தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா போன்றவர்கள் எவ்வகையில் நியாயப்படுத்த முடியும் எனக் கருதுகிறீர்கள்?
தமிழ்செல்வனுக்கும், ஆதவன் தீட்சண்யாவுக்கும் ஒரு கேள்வியை இங்கே முன்வைக்கிறேன். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உலக தன்னார்வ அரசு சாரா நிறுவனங்களின் எதிர்ப்புரட்சி அரசியல் பற்றி ஒரு நூலையே எழுதியிருக்கிறார்.
ரட்சியாளர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் ச.தமிழ்ச்செல்வனும் ஆதவன் தீட்சண்யாவும், இலங்கை அரசு சார்பான, தன்னார்வ அரசு சாரா நிறுவனக் கருத்தரங்கில் கலந்து கொண்ட தங்கள் நடத்தைக்கு என்ன காரணத்தை முன்வைக்கிறீர்கள்?
அன்புள்ள எஸ்.வி.ஆர் அவர்களே, இறுதியாக ஒரு முக்கியமான கேள்வி. தாங்கள் இலங்கை அரசைக் கடுமையாக எதிர்த்து வருகிறீர்கள். ஐ.என்.எஸ்.டி நடத்தி வரும் இலங்கை தொடர்பான கருத்தரங்குகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வரும் பத்திரிக்கையாளர் பௌஸர் என்பவர் யார் எனத் தங்களுக்குத் தெரியுமா?
அவர் இலங்கை அரசுடன் செயல்பட்டு வரும் ஈ.பி.டி.பி செயலர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஐரோப்பியப் பிரதிநிதிகளில் ஒருவர் என்பது தங்களுக்குத் தெரியுமா?
பௌஸர் ஆசிரியராக இருந்து நடத்தும் “எதுவரை” இதழில்தான் உங்கள் திருவனந்தபுரச் சிறப்புரை பற்றிய செய்தி வந்ததும், வேறு எந்த இலங்கைத்தமிழ் பத்திரிக்கைகளிலும், ஐ.என்.எஸ்.டி தளம் உள்பட படத்துடன் அந்தச் செய்தி வரவில்லை என்பதும் தங்களுக்குத் தெரியுமா?
பௌஸர் பெயரிலோ, சுசீந்திரன் பெயரிலோ அக்கட்டுரை வராமல் தாஸ் எனும் அநாமதேயத்தின் பெயரில் அக்கட்டுரை வெளியாகி இருக்கிறது என்பதனையும் தாங்கள் அறிவீர்களா?
தோழர் எஸ்.வி.ஆர். அவர்களே, இலங்கை அரசு சார்பான கொள்கையுடைய தன்னார்வ அரசு சாரா நிறுவனமொன்று இலங்கை அரசியல் தொடர்பாக நடத்தியிருக்கிற திருவனந்தபுரம் கருத்தரங்கில் நீங்கள் கலந்து கொண்டிருப்பதானது தாங்கள் இதுவரை பேசி வந்திருக்கிற புரட்சிகர மார்க்சியத்துக்கு ஒரு களங்கம் என்றே நான் நினைக்கிறேன்.
இது பற்றி எங்களுக்குச் சொல்ல நீங்கள் என்ன பதிலை வைத்திருக்கிறீர்கள்?
மற்றபடி என்றும் போல அன்புடன்,
அசோக் யோகன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சவுக்கடி

*****தோழர் எஸ்.வி.ஆர். அவர்களே, இலங்கை அரசு சார்பான கொள்கையுடைய தன்னார்வ அரசு சாரா நிறுவனமொன்று இலங்கை அரசியல் தொடர்பாக நடத்தியிருக்கிற திருவனந்தபுரம் கருத்தரங்கில் நீங்கள் கலந்து கொண்டிருப்பதானது தாங்கள் இதுவரை பேசி வந்திருக்கிற புரட்சிகர மார்க்சியத்துக்கு ஒரு களங்கம் என்றே நான் நினைக்கிறேன்.
இது பற்றி எங்களுக்குச் சொல்ல நீங்கள் என்ன பதிலை வைத்திருக்கிறீர்கள்?****

இந்து, இந்தி, இந்தியா மற்றும் பெரியார் தொடர்பாக நீங்கள் எழுதிய நூல்களைப் படித்து உங்களைப் பற்றிய நல்லதொரு மதிப்பீட்டைக் கொண்டவர்கள், நீங்கள் திருவனந்தபுரம் மாநாட்டில் கலந்து கொண்ட காரணம் அறிய விரும்புகிறோம்.

விடை சொல்வீர்கள் விளக்குவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

ச.தமிழ்ச்செல்வனுடைய பதிலை படிக்கும் யாருக்கும் அய்யோ பாவம் ரொம்ப அப்பாவி போலிருக்கு என்று தான் தோன்றும்.அப்படி எழுதியிருக்கிறார். ஆனால் அது உண்மையா ? இல்லை. குழப்பமான சூழல் நிலவும் நேரத்தில் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் சென்றதை ஒரு பழியாக மாற்றுவது சரியா என்று கேட்கிறார்.என்ன குழப்பம் நிலவுகிறது தமிழ‌கத்தில் ? இங்கு எல்லாம் ‘தெளிவாக’த்தான் இருக்கிறது. நீங்களும் (இந்திய அரசின் நிலையிலிருந்து புலியை எதிர்க்கும் நீங்களும்) தெளிவாக இருக்கிறீர்கள், புலி ஆட்களும் தெளிவாகத் தான் இருக்கிறார்கள்.அனைத்திலும் தான சொல்கிறேன்.

உங்களுக்கு யாருடைய பின்புலமும் தெரியாதா ? சுசீந்திரன் நடராசாவின் பின்புலம் தெரியாமல் தான் அவர் பின்னால் போனீர்கள்,அதை நாங்கள் எல்லாம் நம்ப வேண்டும் என்கிறீர்கள். ஏன் அவரைப் பற்றி உங்கள் கட்சியின் பின்நவீனத்துவ சூப்பர் ஸ்டார் ஆதவன் தீட்சன்யாவிடம் கேட்டிருக்க வேண்டியது தானே, நன்றாகவே அவரின் பின் புலத்தை உங்களுக்கு புரிய வைத்திருப்பார்.

மார்க்சிஸ்ட் கட்சி என்றால் என்ன வேணாலும் பேசலாம் என்று இங்கே யார் உங்களைப் பற்றி பேசுகிறார்கள். உங்களுடைய அரசியலைப் பற்றித்தானே விமர்சிக்கிறோம்.அதை விடுத்து ஆதவன் தீட்சன்யா தன்னியடித்துவிட்டு சுற்றுகிறார். சென்னைக்கலைக்குழு பிரளயன் எப்போதும் புல் மப்பில் தான் இருக்கிறார், அப்புறம் உங்கள் கட்சியின் கள்ளக்காதல் தொடர்புகள் பற்றியெல்லாமா நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம்.?

ஈழத்துக்காக நீங்கள் என்ன லட்சனத்தில் போராட்டங்கள் நடத்துகிறீர்கள் என்பது தான் தெரியுமே ?

நீங்கள் புலியை என்ன நிலையிலிருந்து விமர்சிக்கிறீர்கள். இந்திய அரசு,சுப்பிரமணிய சாமி,இந்து ராம் நிலைப்பாட்டிற்கும் உங்கள் மார்சிஸ்ட் கட்சி நிலைப்பாட்டிற்கும் ஒரு நாலு வேறுபாடு மட்டுமாவது சொல்லுங்களேன் பார்ப்போம்.

http://www.vinavu.com/2009/08/20/tmaks/

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

“புதுவிசை” அரசியலும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் -தமிழ் செல்வனுக்கு ஒரு பதில் : அசோக் யோகன்

visaiஎஸ்.வி.ஆர் இற்கான எனது  திறந்த மடலுக்கான தங்களது வருத்தம் படர்ந்த எதிர்வினையைக் காண நேர்ந்த நெகிழ்ச்சியுடனும், தங்களுக்கு எனது தரப்பு சார்ந்த நியாங்களை விளக்குவதற்குமாகவே இதனை எழுதுகிறேன்.

தாங்களும், தாங்கள் சார்ந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்புக்களான தொழிற்சங்கம், இலக்கிய அமைப்பு, வாலிபர் அமைப்பு என அனைத்திலும் செயல்படும் ஆதவன் தீட்சண்யாவினதும் பிரச்சினையின் வேர்களில் இருந்து எனது இந்த பிரதியை துவங்கலாம் என நினைக்கிறேன்.

ஆதவன் தீட்சண்யாவும் நீங்களும் தனிநபர்கள் அல்ல.மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அதனது வெகுஜன அமைப்புக்களிலும் பொறுப்பிலுள்ளவர்கள்.

பொதுவாழ்வு சார்ந்த உங்களது நடத்தைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மாரக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சார்ந்து நீங்களும் பொறுப்புடன் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.

”கட்சியின் அதிகாரபூர்வமான தீக்கதிர், செம்மலர் போன்ற பத்திரிக்கைகளில் வருவதைத்தான் நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் “என நீங்கள் சொல்வது அடிப்படையான அரசியல் பிழை என்றே நான் கருதுகினறேன்.

ஆதவன் தீட்சண்யாவும் நீங்களும் ஆசிரியர் குழுவிலிருந்து வழிநடத்தும் புதுவிசை சஞ்சிகைகக்கும், உங்களுக்கும், நீங்கள் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கருத்தளவில் சம்பந்தமில்லை என்கின்ற மாதிரி நீங்கள் பேசுகின்றீர்கள்.

இது ஒப்ப முடியாத ஒரு வாதம் என நான் நினைக்கின்றேன்.

ஆதவன் தீட்சண்யா ஒரு அப்பாவி அல்ல. அவர் இலங்கைப் பிரச்சினை தொடர்பாகத் தமிழகத்தில் செய்து கொண்டிருப்பது சர்வதேசிய அரசு சாரா தன்னார்வ வலைப்பின்னலின் தொடர் அரசியல்.

அவர்தான் சுசீந்திரனைத் தேடிச் சென்று நேர்காணல் செய்து புதுவிசையில் வெளியிட்டவர்.

அவர்தான் சோபாசக்தியின் நேர்காணலை, சுகனின் நேர்காணலை hinduramவெளியிட்டவர். அ.மார்க்ஸின் கட்டுரையை வெளியிட்டவர்.
அந்த நேர்காணல்களில் தான் இலங்கையில் இனப் படுகொலை நடக்கவில்லை எனும் விடயம் சொல்லப்பட்டது.

இலங்கை இடதுசாரிகளின் சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் கொச்சைப்படுத்தபட்டன. கோவை ராணுவ வாகனங்கள் எதிர்ப்புப் போராட்டம் கொச்சைப்படுத்தப்பட்டது.

புலிகள் எதிர்ப்பை மட்டுமே முனைப்பாகக் கொண்டு அரசு சார்பு நிலைபாடுகளை முன்வைப்பவர்கள் இந்த நால்வர் குழுதான்.

இதனது உச்சம் இலங்கை இனவாத அரசுக்கும்,இலங்கை பௌத்தக் கருத்தியலுக்கும் சம்பந்தமில்லை எனும் சுகனின் உளறல்கள்.

புதுவிசையின் இந்த அரசியலுடன் உடன்பாடு கொண்டு, நீங்கள் சொல்கிற வகையிலான இலங்கை அரசுக்கு எதிரான ‘ஒற்றுமை’ அரசியலை முன்னெடுக்க முடியும் என நீங்கள் கருதுகிறீர்களா?

நீங்கள் மாறுபட்ட கருத்து உள்ளவர்களின் ஒற்றுமை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆதவன் தீட்சண்யா திட்டமிட்ட வகையில் அதனைக் குலைப்பதற்கான அரசியலை, முனைப்பாக முன்னெடுத்துக் கொண்டு இருக்கிறார்.

ஆதவன் தீட்சண்யா அப்பாவி அல்ல.

இலங்கை அரசு ஆதரவுக் குழுவினரின் அழைப்பின் பேரில்தான் அவர் லண்டன் கூட்டத்திற்கு வந்து சென்றார்.

இந்த  இலங்கைக் ஆதரவு    குழுவினர்  தமிழகத்திற்கு வரும்போது அவர்தான் அவர்களை வரவேற்று, ஈழப் பிரச்சினை தொடர்பாக நக்கல் நளினமாகக் கேள்விகளும் கேட்டு புதுவிசை சஞ்சிகையில் தொடர்ந்து நேர்காணல்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

இதனைத் தனிநபர் உறவுகள் எனச் சொல்கிறீர்களா அல்லது அரசியல் பரிமாணம் கொண்ட உறவு எனச் சொல்கிறீர்களா?

புதுவிசை மேலெடுத்து வருகிற அரசியலுக்கும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதில் அங்கம் வகிக்கும் உங்களுக்கும் தொடர்பற்ற ‘சுதந்திர’ அரசியல் எனச் சொல்கிறீர்களா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பான முழுநேர ஊழியரான உங்கள் பதில் இவ்விடயத்தில் ஒப்ப முடியாததாகவே இருக்கிறது.

இலங்கை குறித்த என்.ராமின் நிலைபாடுகளும் ஆதவன் தீட்சண்யாவின் நிலைபாடுகளும் தங்களது கட்சியின் நிலைபாடுகளுக்கு விரோதமானது எனத் தாங்கள் கருதுவீர்களானால்-

நிலவி வரும் ஒரு குழப்பத்திற்கு நீங்கள் திட்டவட்டமாக முடிவு கட்டமுடியும்.

 தங்களது கட்சியின் அதிகாரபூர்வமான தீக்கதிர் பத்திரிக்கையில், “பலர் நினைக்கிறமாதிரி, என்.ராமின் அரசியலுக்கும், ஆதவன் தீட்சண்யா முன்னெடுக்கும் அரசியலுக்கும், இலங்கைப் பிரச்சினை தொடர்பாக புதுவிசை முன்னெடுக்கும் அரசியலுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலுக்கும் சம்பந்தமில்லை” என நீங்கள் அறிவிக்கலாம் இல்லையா?

அறம் சார்ந்த கருத்துப் போராட்டத்தில் எமக்கு நம்பிக்கையுண்டு.
நாம் நடத்திக் கொண்டிருப்பதும் கருத்துப் போராட்டம்தான்mahintha100என்பதில் நாங்கள் உறுதியான நிலைபாடு கொண்டிருக்கிறோம்.

தங்கள் மீது இப்போதும் நான் பெறுமதிப்புக் கொண்டிருக்கிறேன். இலங்கை அரசைப் பாசிச அரசு எனத் தாங்கள் விமர்சித்திருப்பதை நான் அறிவேன். இலங்கை அரசுக்கு எதிராக, கருத்து மாறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனத் தாங்கள் அறைகூவி வருவதையும் நாங்கள் அறிவோம். அதனையே நாங்களும் வழிமொழிகிறோம்.

துரதிருஷ்டவசமாக திருவனந்தபுரம் மாநாடு குறித்து தாங்கள் முழுமையாக அறியாமல், தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்தான் நீங்கள் சென்றீர்கள் என்று நீங்கள் சொல்வதை எம்மால் ஒப்ப முடியாததாக இருக்கிறது.

ஆதவன் தீட்சண்யாவின் நிலைபாடுகளும் தொடர்புகளும் அறியாமையிலும் அப்பாவித்தனத்திலும் நடக்கிற காரியங்கள் அல்ல. அவரோடுதான் நீங்கள் திருவனந்தபுரம் மாநாட்டில் பங்கு கொண்டிருக்கிறீர்கள்.

தன்னார்வ அரசு சாரா நிறுவனங்களின் எதிர்ப் புரட்சி அரசியல் குறித்து அதிஅவதானம் கொண்டிருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராகத் தங்களது பதிலை எம்மால் ஒப்ப முடியவில்லை.

நான் தங்களது வலைத்தள வாசகன் எனும் அளவில் எமது நண்பர் டி.அருள் எழிலனது கருத்துக்கள் தொடர்பான தங்களது பதிவில், ஆதவன் தீட்சண்யாவினது வழமையான நக்கல் நடையுடனான ஒரு பின்னூட்டம் பார்த்தேன்.

”டி.அருள் எழிலனதும் அவரொத்தவர்களினதும் கருத்துக்களுக்கு வார்த்தைக்கு வார்த்தை தன்னால் பதில் எழுத முடியும்” என எக்களிப்புச் செய்துவிட்டு, “ஆனாலும் தான் எழுதக் கூடாது என அமைதி காப்பதாக “ புத்த பகவானின் மறு அவதாரம் போல ஆதவன் தீட்சண்யா பேசுகிறார்.

அவரை வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்லச் சொல்லுங்கள்.
வெறும் வாய்வீச்சு வேண்டாம். நாங்கள் அதனை ஒரு சவாலாகவே ஏற்கிறோம்.

மற்றபடி, தங்களது வருத்தம் படர்ந்த எதிர்விணையைக் காண நேர்ந்த நெகிழ்ச்சியுடனும்,தங்களுக்கு எனது தரப்பு சார்ந்த நியாங்களை விளக்குவதற்குமாகவே இதனை எழுதுகின்றேன்.

அன்புடனும் தோழமையுடனும்
அசோக் யோகன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 எஸ்.வி.ராஜதுரை – பொய்கள், மறுபடி மறுபடி பொய்கள்!:அசோக் யோகன்

lie10கோட்பாடு சார்ந்த அறம் பேசிய காலமெல்லாம் காற்றோடு போய்விட்டது. எஸ்.வி.ராஜதுரை நமக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகத் தந்துகொண்டிருக்கிறார் .

இலங்கைப் பிரச்சினையில் ஐஎன்எஸ்டி எனும் ஜெர்மானிய தன்னர்வ நிறுவனத்தின் நிலைபாடு, ஜெர்மானிய பிராதஸ்தாந்து நிறுவனமான எவாஞ்ஜலிகா அகாதமியாவினுடன் அதனது நிதி சார்ந்த உறவு, அந்த அமைப்பின் இலங்கை அரசு ஆதரவு நிலைபாடு பற்றி எனது முன்னைய கட்டுரையொன்றில் கேள்வி எழுப்பியிருந்தேன். ஏகாதிபத்திய நிதி மூலதனம் பற்றியும் தன்னார்வ நிறுவனங்களது எதிர்ப்புரட்சி அரசியல் பற்றியும் வாய்கிழியப் பேசும் ‘புரட்சிகர’ மார்க்சியரான எஸ்.வி.ராஜதுரையும், ‘புரட்சிகர’ எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனும், ஐஎன்எஸ்டி நிறுவனம் திருவனந்தபுரத்தில் நடத்திய கருத்தரங்கில் என்ன அடிப்படையில் கலந்து கொண்டீர்கள் எனக் கேட்டிருந்தேன்.

தமிழ்ச்செல்வனின் பதில் நகைச்சுவை தவிர வேறில்லை. ‘ஐஎன்எஸ்டி அமைப்பாளர்களில் ஒருவரான சுசீந்திரனையும் அவரது துணைவியான இன்பாவையும் அவருக்குப் பல ஆண்டுகள் தெரியும். தமிழ்ச்செல்வனின் வீட்டுக்கு எல்லாம் அவர்கள் வந்திருக்கிறார்கள். அதனால் சுசீந்திரன் கூப்பிட்டார். நான் போனேன்’ என்கிறார் தமிழ்ச்செல்வன்.

2222பிராஸ்தஸ்தாந்து நிறுவனம், தன்னார்வ நிறுவனத்திற்கான நிதி போன்றவை குறித்த கேள்விகளுக்கான தமிழ்ச்செல்வனது பதில் இது. கருத்தரங்கிற்கு வந்தவர்கள் எல்லாம் இலங்கை அரசை எதிர்ப்பவர்கள் என்கிறார் தமிழ்ச்செல்வன். பச்சைப் பொய். தமிழ்ச்செல்வன் இலங்கை அரசை பாசிச அரசு என்கிறார். ஐஎன்எஸ்டி அமைப்பாளர்களான ரஞ்சித்தோ அல்லது சுசீந்திரனோ அப்படியா சொல்கிறார்கள்?

தமிழ்ச்செல்வனுக்காக மறுபடியும் ஒரு தகவல் சொல்கிறேன். 2009 அக்டோபரில் ஜெர்மனியில் இலங்கை தொடர்பாக நடந்த கருத்தரங்கிற்கு ஜெர்மானிய அரசின் பெடரல் ஏஜன்ஸி நிதி வழங்கியிருக்கிறது. அக்கருத்தரங்கில் ஜெர்மனியில் இருக்கும் இலங்கைத் தூதுவரும், ஜெர்மனி அரசின் தூதுவரும் பங்குபற்றியிருக்கிறார்கள்.

தமிழ்ச்செல்வன் கதை எழுதுகிறவர் என்பது மறுபடி ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

திருவனந்தபுரம் கருத்தரங்கு ஏழு நாட்கள் நடைபெற்றது என டக்கிளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி கட்சியைச் சேர்ந்த எம் பௌசரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘எதுவரை’ என்ற சஞ்சிகையில் தாஸ் என்பவர் எழுதியுள்ளார். ஆனால் ஒரு நாள் நிகழ்ச்சியோடு இந்திய உளவுத்துறை அதனைக் கலைத்துவிட்டது என்கிறார் தமிழ்ச்செல்வன். இந்த ‘எதுவரை’ சஞ்சிகையின் ஆசிரியரான எம் பௌசர் திருவனந்தபுரம் கூட்டத்திற்கு லண்டனலிருந்து சென்று கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியானால் எது உண்மை, எது பொய்?

இதுவாவது பரவாயில்லை. எஸ்.வி.ராஜதுரையின் சாட்சியங்கள் அருவறுப்பானவையாக இருக்கிறது. எஸ்.வி.ராஜதுரை திருவனந்தபுரம் கருத்தரங்கம் என ஒரு இடத்திலும் குறிப்பிடாமல், போகிற போக்கில் பத்துப் பக்கக் கட்டுரையொன்றில் (உயிர் எழுத்து : அக்டோபர் 2009) இரண்டு பத்திகளில் தனது அரசியல் ‘திருவிளையாடலை’ நிகழ்த்தியிருக்கிறார்.

ஐஎன்எஸ்டி, தன்னார்வ அமைப்புக்கள், ஏகாதிபத்திய நிதி, இலங்கை அரசு ஆதரவு பற்றி கேள்வி எழுப்புபவர்கள், புலி எதிர்ப்பு-புலி ஆதரவு என கறுப்பு வெள்ளை அரசியல் நடத்துகிறார்களாம். கருத்துக்களை ‘ஜனநாயகபூர்வமாக’ எதிர்கொள்கிற ‘ஆன்மபலம்’ இல்லாமல் அவதூறு செய்கிறார்களாம். எஸ்.வி.ஆர். சொல்கிறார்.

ranjt7ஐஎன்எஸ்டி அமைப்பாளர்களில் ஒருவரான ரஞ்ஜித் முன்னாள் ஜேவிபி இயக்கத்தில் ஆயுதம் ஏந்திப் போராடி, அதனது இனவாதத்தினால் வெளியேறியவராம். ஜனநாயகத்திற்கான இலங்கை ஊடகவியலாளர்கள் வெளியிட்ட, இலங்கை ராணுவத்தினர் விடுதலைப் புலிகளைக் கொலைசெய்யும் ஒளிநாடாவை வெளியிட்டார் என இலங்கை அரசினால் குற்றம் சாட்டப்படுகிறவராம் – சிறி டெலோ இணையத்தள ஆதாரம் தருகிறார் எஸ்வி.ஆர் – இதுவெல்லாம் எஸ்.வி.ராஜதுரையின் நகைச்சுவைக்குச் சான்றுகள்.

ரஞ்ஜித்தை ஒரு புரட்சிக்காரராகவும், இலங்கை அரசுக்குத் ‘தண்ணி காட்டுகிறவராகவும்’ சித்தரிக்க முயல்கிற எஸ்.வி.ராஜதுரையை நினைக்க எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவத்தினர் கொல்வதாக வந்த ஒளிநாடாவை ரஞ்ஜித் வெளியிட்டதாக இலங்கை அரசு குற்றம் சாட்டுவதாகச் சுட்டிக் காண்பிப்பதன் மூலம் எஸ்.வி.ராஜதுரை என்ன சொல்ல வருகிறார்?

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை எதிர்த்துப் போர் புரிகிற நெஞ்சுரம் படைத்தவர் என, ரஞ்ஜித்தையும் அவர் சார்ந்த ஐஎன்எஸ்டியையும் சொல்கின்றாரா? என்ன கொடுமை!

மற்றவர்களுக்காகப் ‘பொய்’ பேசுகிற அவலநிலை எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு வந்திருப்பதற்காக உண்மையாகவே நான் வருத்தப்படுகிறேன்.

80011அந்த ஒளிநாடாவுக்கும் ஐஎன்எஸ்டிக்கும் சம்பந்தம் இல்லை என அது பற்றி ஒரு விசாரணை நாடகம் ஆடிய பின்னர் இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அந்த ஒளிநாடாவுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என ரஞ்ஜித் இலங்கை அரசுக்குக் தன்னிலை விளக்கமளித்து மன்னிப்புகோரும் பாணியில் கடிதம் எழுதியிருக்கிறார். இலங்கை ஜனநாயக ஊடகவியலாளர்களுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என ரஞ்ஜித் தனது அரசுக்கான கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். அத்தோடு 2009 அக்டோபரில் ஜேர்மனியில் தங்களுடைய ஐஎன்எஸ்டி நடாத்திய கருத்தரங்குக்கு இலங்கை அரச தூதுவர் கலந்துகொண்டு சிறப்பித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறி டெலோ இணையதளத்தைப் பார்த்துப் “புரட்சிகரமான” தகவல் தந்த எஸ்.வி. ராஜதுரை அவர்கள் சமகாலத்தில் வெளியான இந்தத் தகவல்களையும் குளோபல் தமிழ் இணையத்தள வழியிலோ அல்லது லங்காவெப்நியூஸ் இணையத் தள வழியிலோ அறிந்திருக்கவேண்டும்.

நாம் கேட்ட கேள்விகள் எதற்கும் ஐஎன்எஸ்டி இதுவரை மூச்சுவிடவில்லை. தமிழ்ச்செல்வனும் இதுவரை உருப்படியாக எதுவும் சொல்லவில்லை. எஸ்.வி.ராஜதுரைக்கு மட்டும் என்ன நேர்ந்தது? ‘அவர்களுக்காக’ப் பேசவேண்டிய அவசியம் ‘இவருக்கு’ ஏன் வந்தது? எஸ்.வி.ராஜதுரை சுசீந்திரனுக்காகவும் ரஞ்ஜித்துக்காகவும் “பேசுகிறவராக” வெளிவந்திருப்பதால் நேரடியாகவே நாம் இப்போது எஸ்.வி.ராஜதுரையிடம் கேட்க வேண்டியிருக்கிறது.

478ஐஎன்எஸ்டிக்கும் உங்களுக்கும் என்ன உறவு?

ஐஎன்எஸ்டி எவாஞ்ஜலிக்கா அக்காதமியாவுடன் என்ன உறவுகளை வைத்திருக்கிறது?

ஐஎன்எஸ்டி ஜெர்மனி பெடரல் ஏஜன்சியுடன் என்னவிதமான நிதி சார்ந்த உறவு கொண்டிருக்கிறது?

இலங்கை அரசு பாசிச அரசு என ஐஎன்எஸ்டி கருதுமானால் எவ்வாறு அவர்கள் நடத்திய கருத்தரங்கில் இலங்கை அரசின் தூதவர் கலந்து கொள்வார்?

‘ஆன்மபலம்’ பற்றிப் பேசுகிற எஸ்.வி.ராஜதுரை அவர்களே நேர்மையாக நெஞ்சின் மீது கைவைத்து இதற்குப் பதில் சொல்லுங்கள்.

எஸ்.வி. ராஜதுரை அவர்களின் தகவலில் அல்லது ஆதாரத்தில் என்னவிதமான ‘ஆன்மபலம்’ இருக்கிறது என அவர் கருதுகின்றார்? எது அவதூறு? எது பொய்? எது நேர்மை? எது ஆன்ம பலம்?

எஸ்.வி. ராஜதுரை தரப்பில் இவைகளில் எதுவொன்றும் இல்லாததால்தான் ஆளுக்கு ஆள் ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் சொல்லுகிற இவற்றில் எது அவதூறு என எமக்கு நிரூபித்துக் காண்பியுங்கள். மொன்னைத்தனமாக எழுதிக் கொண்டிருக்காமல் மனத் திண்மையிருந்தால் நேரடியாக எழுதுங்கள்.

இதனோடு தொடர்புடைய இடுகைகள்:
http://inioru.com/?p=6163
http://inioru.com/?p=6337



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எஸ்.வி.ராஜதுரை- கடிதங்கள் 

அன்புள்ள ஜெ

எஸ்.வி.ராஜதுரைக்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருப்பவர் புகழ்பெற்ற வக்கீலான கே.விஜயன் அவர்களா?

சண்முகம்

அன்புள்ள சண்முகம்

இப்படிப்பட்ட நோட்டீஸை கே.விஜயன் அனுப்பியிருப்பாரென நினைக்கிறீர்களா? இவர் ஊட்டியைச்சேர்ந்த ஒரு ‘இளம்’ வழக்குரைஞர். எஸ்.வி.ராஜதுரை அவரைப் பயன்படுத்த்க்கொண்டிருக்கிறார்.

ஜெ

அன்புக்குரிய ஜெயமோகனுக்கு,

வணக்கம்.

எதேச்சையாய் அ.ராமசாமி முகநூலில் எழுதிய குறிப்பை வைத்தே ராஜதுரை நோட்டீஸ் குறித்து அறிந்தேன்.

இன்றைய நாள் முழுக்க இந்த வலியில் இருந்து என்னால் விடுபடமுடியாது என்றே தோணுகிறது

எவ்வளவோ விஷயங்களை பொல்லாப்புகளை பொச்சரிப்புகளை அவதூறுகளை வன்மங்களைப் பார்த்து சலித்த நீங்கள் இதை எதிர்கொள்ள நிச்சமாய் திகைத்துப் போயிருப்பீர்கள்.

நாம் அறிஞர் என்று மதிக்கும் ஒருவர் செய்த இந்தக் கீழ்த்தரமான காரியம் நெஞ்சை அறுக்கிறது.

எப்போதும் போல் இப்போதும் ஆண்டவன் உங்களுக்கு இதைஎதிர்கொள்ளும் தெம்பையும் தளும்பாத நிதானத்தையும் மறுபடியும் நீங்கள் எல்லோர்க்கும் பகிர்ந்து தரும் அன்பையும் இன்னும் ஆவேசமாய் மேழும் படைப்பூக்கத்தையும் உங்களுக்குத் தர பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

அருள்மொழி அஜிதன் சைதன்யாவுக்கு என் பணிவான வணக்கங்களும் அன்பான விசாரிப்புகளும்.

என் கரங்களால் உங்கள் கரத்தை இப்போது மானசீகமாய் சில நிமிஷங்கள் பற்றிக் கொள்கிறேன் ஜெயமோகன்.

அன்பாக
ரவிசுப்பிரமணியன்

அன்புள்ள ரவி

நீண்டநாட்களாயிற்று.நலம்தானே?

ஆம், இந்தத் தருணத்தில் நிதானத்துடனிருப்பதே முக்கியமென உணர்கிறேன்.

இப்போதுகூட இதை ஒட்டி எஸ்.வி.ராஜதுரை மேல் எந்தக் காழ்ப்பையும் வளர்த்துக்கொள்ளலாகாதென்றே நினைக்கிறேன். என்னுடைய முரண்பாடும் ஐயமும் அவரது கருத்துக்களுடன் மட்டுமே

எஸ்.வி.ஆர் அவரது காலம்கடந்தும் வாழப்போகும் இரு நூல்களை – அன்னியமாதல்,ருஷ்யப்புரட்சி இலக்கிய சாட்சியம்- இந்த அறிவிக்கை வழியாக இழிவுசெய்துவிட்டார் என்பதே என் வருத்தம்

ஜெ

ஜெயமோகனுக்கு
எனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள ஒரு குறிப்பை இங்கே அனுப்பியுள்ளேன். நீங்கள் அங்கு வருவதில்லை என்பதால்
அ.ரா.

ஜெயமோகனுக்கு எஸ்.வி.ராஜதுரை அனுப்பியுள்ள வழக்குரைஞர் கவனக் கடிதம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. நேர்ச் சந்திப்புகள் மிகக் குறைவு என்றாலும் மதிக்கப் பட வேண்டிய ஆளுமையாகவும் பின்பற்றப் பட வேண்டிய அறிவாளியாகவும் நினைக்கப்பட்டவர். அவரது நூல்கள் வழியாக அவர் எனக்கு ஆசிரியர். அவரது கையொப்பங்களுடன் இப்படியொரு கடிதம் என்பதை மனம் தாங்கவில்லை. கண்டிக்க வேண்டும் என நினைப்பதைவிட வருத்தப்படவே தோன்றுகிறது. எனது கண்டனங்களை விட என்னைப் போன்றவர்கள் படும் வேதனையும் வருத்தமும் ஜெயமோகனுக்கு ஆறுதல் அளிக்கும் என்பதால் என் வருத்தங்களை இங்கே பதிவு செய்கிறேன்

அ.ராமசாமி

அன்புள்ள அ.ராமசாமி,

நன்றி.

சிற்றிதழ்ச்சூழலில் சட்டென்று மிகையான சொல்லாட்சிகள் வருவது சாதாரணமானது. நான் அத்தகைய சொல்லாட்சிகளை பேச்சில் பயன்படுத்துவதில்லை என்பதனால் எழுத்திலும் பயன்படுத்துவதில்லை. ஆனால் அப்படி நிகழ்வதைப் பெரிதுபடுத்தலாகாது என்று பலமுறை எழுதியிருக்கிறேன். இப்போதும் அதுவே என் எண்ணம்.

ஆனால் இது சட்டபூர்வ ஆவணமாக நிரந்தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மனநிலை மிக ஆபத்தான முன்னுதாரணம். அதை எஸ்.வி.ராஜதுரை செய்தது என்பது மிகுந்த வேதனை அளிக்கக்கூடியது.

ஜெ

அன்புள்ள ஜெய,

மன்னிக்கவும். இது குறித்து எழுதுவதற்கு.. ராஜதுரை அவர்களின்
சட்டஅறிக்கையை முழுமையாகப் படித்ததும் மனம் கொண்ட எழுச்சி இன்னும்
அடங்கவில்லை. இதை அவர் எழுதும்போது கைகள் நடுங்காமல் இருக்கலாம் ஆனால்,
இதைப் படிப்பவரின் மனம் தொடர்ந்து நடுங்கும்.

தொடர்ந்து உங்களின் கதைகளில்,கட்டுரைகளில் கவனம் கொள்ளும் அறம் இவர்
போன்றவர்களின் வாழ்க்கையில் நாம் எதிர்பார்ப்பது நமது பிழை தான் போலும்.

–ஹாரூன்
சிங்கப்பூர்.

அன்புள்ள ஹாரூன்

நன்றி.

இந்த மொழியையும் இந்த மனநிலையையும் முன்வைக்க சமநிலை கொண்ட எவரும் அஞ்சவேண்டும் என்றே நினைக்கிறேன். அஞ்சாவிட்டால் இழப்பு அவருக்குத்தான். அவரது ஒழுக்கம் சார்ந்த, மொழிசார்ந்த நுண்ணுணர்வை அவர் இழக்கிறார். அது பெரிய இழப்பு

ஜெ

*

அன்புள்ள ஜெ,

இருபது வருடங்களுக்கு முன், எஸ்.வி.ராஜதுரையும், வ.கீதாவும் இணைந்து எழுதிய புத்தகமொன்றை (பெயர் நினைவிலில்லை) வாசிக்க முயற்சி செய்தேன். மிகவும் கஷ்டப்பட்டு பாதி புத்தகம் தாண்டி பிறகு ‘இது நமக்கு வேண்டாத வேலை” என்று விட்டுவிட்டேன். இடது, வலது, அரசியல் இது எதுவுமே என்னை என்றும் கவர்ந்ததில்லை என்பதால் இருக்கலாம். ஆனாலும், அப்புத்தகம் நேர்மையோடு எழுதப்படவில்லையோ என்ற சிறு சந்தேகம் அப்போதே தோன்றியதும் காரணமாக இருக்கலாம். (நான் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி பாருங்கள்!)

“எஸ்.வி.ராஜதுரையின் முக்கியமான பங்களிப்பை”ப் பற்றி நீங்கள் ஒரு இடத்தில் சொல்லியிருந்ததைப் படித்தபோது என் ‘prejudiced mind’-ஐ நினைத்து வருத்தப்பட்டேன். எப்படியானாலும் எனக்கு உவப்பளிக்காத விஷயம் பற்றியது என்பதால் ராஜதுரையின் எழுத்துக்களைப் படிக்க நான் விழையவேயில்லை.

அன்னிய நிதி பற்றி சொல்லும்போது அவர் பெயரையும் நீங்கள் குறிப்பிட்டிருந்தபோது, ‘நான் அப்பவே நினைச்சேன்’ என்று எண்ணி இறுமாந்தேன் :) அதற்கு மேல் அதில் எனக்குக் கருத்தில்லை.

மனித மனத்தின் வக்கிரங்களையும் உன்னதங்களையும் உங்களைவிட அழுத்தமாக அழகாக சொன்னவர்கள் இல்லை என்றே நினைக்கிறேன். (லலிதாங்கி திருவடியைப் பற்றி, அவன் வாழ்வு தன்னால் பாழாகக் கூடாது என்று எண்ணுவதை, இரண்டு நாட்களுக்கு முன் படித்தேன்!)

மனத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று துழாவி நுண்ணியவற்றை எல்லாம் சுரண்டி எடுத்து வெளியே போடும் உங்களை இந்த ‘நோட்டீஸ்’ இவ்வளவு பாதித்திருக்கும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை ஜெ!

நீங்கள் எழுதிய கடிதத்தைப் படித்தபோதே நொந்து போனேன். உங்கள் கலக்கத்துக்கான நியாயத்தை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். நியாயம்தான்! ஆனால், மனித மனம் இதைவிடக் கேவலமானது என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே?

ஸ்ரீனிவாசன்

அன்புள்ள ஸ்ரீனிவாசன்,

என்னுடைய வருத்தம் இந்த வசைகளைக் கண்டு உருவானது அல்ல. இது எனக்குச் சாதாரணம். இந்த வழக்கம் தொடரும் என்றால் என்னாகும் என்ற பதற்றம். அதைவிட இளமையில் நான் வாசித்தறிந்த ஓர் எழுத்தாளனின் வீழ்ச்சியைக் கண்ட வருத்தம்….

அது எளிதில் அழியாது

ஜெ

*

அன்புள்ள ஜெயமோகன்

அவர்களுக்கு வணக்கம் . நலமா ? .

எஸ் வி ராஜதுரையின் வக்கீல் கடிதம் பார்த்தேன். இது உங்கள் இருவருக்கும் ஆன கருத்து சண்டையாக இருக்கலாம் . இதில் கருத்து கூறுவது சரியா என்று கூடத் தெரிய வில்லை .

அவருடைய புத்தகத்தையும் என் தந்தை மூலம் படித்து வளர்ந்திருகிரேன் . உங்களுடைய புத்தகத்தையும் படித்து வளர்ந்திருக்கிறேன். ஒரு மூன்றாவது மனிதனாக இந்த வக்கீல் நோட்டிசைப் பார்த்தால் கோபமும் , அவர் மொழியில் சொல்வதானால் சின்னப்புள்ளத்தனமா இருக்கு. இந்த வக்கீல் நோட்டிசை அப்படியே என் மாமாவுக்கு அனுப்பி வைத்தேன் . அவர் பல காலம் கோர்ட் கேஸ் என்று அலைந்தவர் . என் வக்கீல் நண்பனுக்கும் அனுப்பி வைத்தேன் . இருவரும் சொன்ன கருத்து என்ன வென்றால் இந்த வக்கீல் நோட்டிசே தனிமனித அத்து மீறல் என்றும் , உங்களுக்கு இந்த வக்கீல் நோட்டீஸ் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்று நீங்கள் கேஸ் போடலாம் .

ஜெ இன்னொரு கருத்து . நாங்கள் அலுவலகப் பணிக்கு email அனுப்புவது வழக்கம் . நாங்கள் trainee ஆக முதல் நிறுவனத்தில் join பண்ணிய பொது . மூன்றாவது நாளாக communication and response என்ற training session நடந்தது . அதில் நாகராஜன் என்ற HR Head training கொடுத்தார் . அதில் email ஐ வைத்து அவர்களுடைய character ஐ தெரிந்து கொள்ளலாம் . அதை அப்படியே மாற்றி உங்கள் email அனுப்பும் contents மற்றும் context மாற்றினால் உங்கள் character ஐயும் மாற்றிக் கொள்ளலாம் என்று சொன்னார் . இன்றும் என் மனதில் email அனுப்பும் போது அது ஞாபகத்துக்கு வரும். இதை வைத்து என் character ஐ நான் மாற்றி கொண்டிருகிறேன் . ஒரு கிரிடிகல் response mail அனுப்பும் முன் type செய்து draft ஆக save பண்ணி , பின் அரை மணி நேரம் கழித்து அதை படித்து பார்த்து பின் அனுப்ப வேண்டும் என்று சொன்னார் . இதை அப்படியே நான் இந்த வக்கில் நோடிசுகும் பொருத்தி பார்க்கிறேன் .

ஜெ இந்த வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது தவறா அல்லது சரியா என்பது அவர் அவர்கள் தங்கள் மனசாட்சியைக் கேட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் இதைப் பகிர்ந்ததற்கு நன்றி . ஏன் என்றால் எங்களைப் போல் வளரும் தலைமுறைக்கு அறம் சார்ந்த , தனி மனிதக் கோபத்தை விட , அறமே முக்கியம் என்று எங்களுக்கு உணர்த்துகிறது .

நான் எந்த எழுத்தாளரையும் ஆதர்சமான எழுத்தாளராகக் கொண்டதில்லை . இந்தக் கடிதம் எழுதக் காரணம் இதை நான் ஒரு குடும்பப் பெண்ணுக்கு நடத்தப்பட்ட உளவியல் தாக்குதலாக நினைகிறேன் . இதே நிலை நாளை என் தங்கைகோ , வரப்போகும் மனைவிக்கோ ஏற்படலாம் . அபோது என் மன நிலை எப்படி இருக்குமோ அதில் இருந்து தான் இதை எழுதுகிறேன் .

அன்புடன்

பன்னீர் செல்வம்

அன்புள்ள பன்னீர்செல்வம்,

ஆம், இந்த வக்கீல் நோட்டீஸ் ஒரு மிரட்டல். உன் மனைவி உட்பட அனைவரையும் சந்திக்கு இழுப்பேன் என்ற வகையிலான ஒரு மனநிலை இது.

இந்தவகையான ஒரு கீழ்மையை முதல்முறையாகச் சந்திக்கிறேன். பார்ப்போம். இதையும் சமநிலையுடன் கடந்துபோக முடிகிறதா என்று

ஜெ

அன்புள்ள ஜெ,

தங்களுக்கெதிரான எஸ்.வி ராஜதுரையின் வழக்கு விவரங்கள் எரிச்சலூட்டுபவையாகவே இருந்துவந்துள்ளன. அவரது நோடீஸ் இன்னும் எரிச்சலை உருவாகியது.

ஆனால் இன்று தளத்தில் வெளியான உங்கள் கடிதம் மிகுந்த நிறைவான ஒன்றாக இருக்கிறது.
(எஸ்.வி.ராஜதுரைக்கு அன்புடன்…) உங்களை ஏற்கனவே தெரிந்திருந்தாலும், இந்தக் கடிதம் அந்த மதிப்பை இன்னும் உயர்த்துகிறது. தங்கள் வாசகனாக இருக்க, உங்களோடு தொடர்பில் இருப்பவனாக இருக்க மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

எனது சில பிரச்சனைகளை உங்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். உங்கள் செயல்களே மிகப்பெரிய முன்னுதாரணமாக இருக்கின்றன. எவ்வளவு பெரிய கீழ்மை உங்கள் மீது உமிழப்பட்டாலும், அதைத் தங்கள் நேர்மையால் எதிர்கொள்ளும் திறம் எனக்கு மிகவும் நம்பிக்கை தருகிறது.

“கீழோர்க்கு அஞ்சேல்” அர்த்தம் புரிந்துகொள்கிறேன்.

அன்புடன்,

சுரேஷ் பாபு

அன்புள்ள சுரேஷ்பாபு

உங்களிடம் நேரில் விரிவாகவே பேசவேண்டும் என நினைத்திருந்தேன். உங்கள் பிரச்சினைகளைப்பற்றி.

ஆம், கீழ்மையை எதிர்கொள்வது ஒரு பெரிய சவால். அதில்தான் நாம் யார் என்பது வெளிப்படுகிறது

ஜெ



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எஸ்.வி.ராஜதுரைக்கு அன்புடன்….

எஸ்.வி.ராஜதுரை ஆழ்ந்த அறவேதனை தொனிக்க எழுதிய குறிப்புகளை அவரது ஆதவாளர்கள் ஊடகங்களில் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். முதியவர், இடதுசாரி, நோயாளி,திராவிடச்சிந்தனையாளர் என எல்லா அடையாளங்களையும் அவர் பயன்படுத்திக்கொள்கிறார். உண்மையில் பயன்படும் அடையாளம் எது என அனைவருக்கும் தெரியும்.

1.jpg  2.jpg

ஆனால் அதுதானா எஸ்.வி.ராஜதுரை? அதுவா அவரது மனம், அதுதானா அவரது மொழி?

அவர் எனக்களித்த வக்கீல்நோட்டீசின் பக்கங்கள் இதோ உள்ளன. [தனியாக அதன் தட்டச்சு வடிவம் உள்ளது]

இந்த மொழிநடையைப் பாருங்கள். இதில் பக்கம்பக்கமாக வெளிப்படும் வசைச்சொற்கள். [கேனையன்,மலத்தில் மொய்த்த ஈ]

அப்பட்டமான அவதூறுகள் சம்பந்தமே இல்லாமல் மனைவிமக்களை இழுத்துப்பேசும் கீழ்த்தரமான குறிப்புகள். [பொண்டாட்டி பேரிலான களவாணித்தனத்திற்கு’ சொந்தக்காரர்]

சினிமாவிலிருந்து பொறுக்கியெடுத்த வசைகள் , உவமைகள்.[வின்னர் வடிவேல், லார்டு லபக்கு]

என்னை அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால் நான் பெண் பொறுக்கி என்கிறார் [“பிடிக்கிலேனா விட்டிருங்கோ…” வசனம் மூலம் உம்மைப் புல்லரிக்க வைத்த உமது ‘பாஷை’யில் சொன்னால் அதிகம் அறிவில்லாத ‘அவளுக்கோ’]

என்னைக் குடிகாரன் என்று குற்றம்சாட்டுகிறார். [‘ஃபுல்’ தடுக்கி (புல் தடுக்கி அல்ல) பயில்வானாக]

சாதிசார்ந்த வசைகள்தான் எவ்வளவு. [ நீர், ஒரு சனாதனப் பார்ப்பார் – பெரு சாதிவெறியர் , பிறரை சுரண்டுகிற அறிவு மட்டுமே உடைய ‘அவாளுக்கோ’ ]

என் பிறப்பை வசைபாடுகிறார் [பிறப்பின் பிறழ்வு]

என்ன நினைக்கிறார் எஸ்.வி.ராஜதுரை? இதே போல ஒரு வக்கீல் நோட்டீஸை நான் அவருக்கு அனுப்புவேன் என்றா? அது என்னால் முடியுமென நினைக்கிறாரா என்ன? என் குடும்பத்தையே அழிக்கும் செயலை எஸ்.வி.ராஜதுரை செய்திருந்தால்கூட அவர் என் மனைவியை சம்பந்தபப்டுத்தி எழுதியிருப்பதுபோன்ற ஒரு வரியை நான் சொல்லிவிடுவேனா என்ன? எனக்கு மகள் இருக்கிறாள். உலகமெங்கும் வாசகியர் இருக்கிறார்கள். அவர்கள் முகத்தில் அதன்பின் என்னால் விழிக்கமுடியுமா?

ஆம், நான் வாழும் உலகமும் சிந்திக்கும் தளமும் வேறு. அதை எஸ்.வி.ராஜதுரை ஒருபோதும் உணரமுடியாது.

*

இந்த வக்கீல்நோட்டீஸை வழக்கறிஞர் விஜயன் அவரே எழுதியிருக்க வாய்ப்ப்பில்லை. சட்டப்படி வழக்கறிஞர் கட்சிக்காரரின் குரலாகவே ஒலிக்கிறார். இதன் எல்லாப் பக்கங்களிலும் எஸ்.வி.ராஜதுரை கையெழுத்திட்டிருக்கிறார்.

மேலும் இந்த வக்கீல் நோட்டீஸில் திரித்தும், நக்கலடித்தும், ஆபாசமான உட்குறிப்புகள் கொண்டும் குறிப்பிடப்பட்டிருக்கும் பலவிஷயங்கள் நெடுநாள் சிற்றிதழ்ச்சூழலில் புழங்குபவர்களுக்கு மட்டுமே தெரிந்தவை. இந்த மொழிநடை நெடுங்காலமாக நம் இடதுசாரி தீவிர இதழ்களில் சிலர் எழுதிவந்த அழுகல்நடை. எஸ்.வி.ராஜதுரை உருவாகிவந்த நாற்றங்கால் அது.

இதுதான் உண்மையான எஸ்.வி.ராஜதுரை என அவரிடம் பேசியவர்களும், கடிதம் பெற்றவர்களும் சொல்லிக் கேட்டிருந்தாலும் இது எனக்கு முதல் அனுபவம்.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் நான் மனம் உடைந்துபோனேன். எஸ்.வி.ராஜதுரைக்கே தெரியும், நான் அவர் நூல்களை வாசித்து வளர்ந்தவன். அதைப் பலமுறை எழுதியவன். இன்று அவரது திரிபுநிலைகளைக் கண்டு கருத்தியல் ரீதியாக முரண்படும்போதும் உள்ளூர அவர்மேல் ஆழ்ந்த மதிப்பு கொண்டவன். இந்த மொழியும் இந்த அவதூறும்தான் எஸ்.வி.ஆர் என்றால் என் மனதுக்குள் நான் கொண்டிருக்கும் அந்த பிம்பம் எவருடையது?

இருபதையொட்டிய வயதுகளில் பிம்பங்கள் உடைவது சாதாரணமான விஷயம். ஐம்பதில் உடைவது மிகமிக வலி அளிப்பது. இந்த வக்கீல் நோட்டீஸை நான் என் மனைவியிடமோ நண்பர்களிடமோ கூட காட்டவில்லை. இது ஒரு சட்ட ஆவணமாக இல்லை என்றால் அப்போதே கிழித்துப்போட்டிருப்பேன். இதை இன்னொரு கண் வாசிக்கலாகாதென்றே எண்ணினேன். இரண்டுமாதங்களுக்கும் மேலாக இதைப்பற்றி நான் எவரிடமும் பேசியதில்லை.

‘அன்னியமாதல்’ ‘ரஷ்யப்புரட்சி இலக்கிய சாட்சியம்’ போன்ற நூல்களின் ஆசிரியரை இந்த வண்ணத்தில் இந்தக் கோலத்தில் வெளிக்காட்ட நான் விரும்பவில்லை. ஆனால் வழக்கு நீதிமன்றம் சென்றபின் இதை வாசிக்க நேர்ந்த நண்பர்கள் அனைவரும் இது பொதுப்பார்வைக்கு வந்தாகவேண்டும் என்றார்கள். ஏன் என்றால் இதிலுள்ளது ஓர் அறப்பிரச்சினை.

ஒரு வக்கீல்நோட்டீஸ் என்பது தனிப்பட்ட கடிதமல்ல. அது ஒரு பொது ஆவணம். அழிக்கவோ மறைக்கவோ முடியாத ஒன்று. அதில் இவ்வளவு ஆபாச வசைகளையும் அவதூறுகளையும் எழுதிச்சேர்ப்பதென்பது மிகமிக மோசமான முன்னுதாரணம். யோசித்துப்பாருங்கள் இத்தகைய ஒரு வக்கீல்நோட்டீஸ் வழியாக ஒரு எளிய மனிதரை உளவியல் ரீதியாக உடைத்துப்போட்டுவிட முடியும். ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கையையே நாசம் செய்துவிடமுடியும்.

நம் சூழலில் பெரும்பாலானவர்கள் தங்கள் சாதி, மதம் சார்ந்தும் கருத்துநிலைப்பாடுகள் சார்ந்தும் மட்டுமே ஒவ்வொன்றையும் புரிந்துகொள்கிறார்கள். பொதுவான ஓர் அறம்பற்றிப் பேசுபவர்கள் மிகக்குறைவு. எஸ்.வி.ராஜதுரை விஷயத்தில் ஆதரித்து நியாயங்கள் பேசியவர்கள் ஒவ்வொருவரும் அந்தரங்கமாகவேனும் இந்த வழக்கறிஞர் அறிக்கையைப்பற்றி யோசிக்கவேண்டும்.

சட்டத்தின் பெயரால் இத்தகைய உளவியல் வன்முறையை நாம் அனுமதிக்கலாமா? இது ஒரு முன்னுதாரணமாக ஆனால் இந்தியாவில் எவரேனும் மானமாக வாழமுடியுமா? மானமிகு என எஸ்.வி.ராஜதுரை போட்டுக்கொள்ளும் சொல்லுக்கான அர்த்தம் அதன் பின் இருக்குமா?

இதை வாசிக்க நேர்ந்த ஒவ்வொரு வழக்கறிஞரும் அதிர்ச்சியடைகிறார்கள். ஏனென்றால் இந்த மொழியில் ஒரு வக்கீல்நோட்டீஸ் அனுப்பப்படுவது தமிழகத்தில் இதுவே முதல்முறை. இதன் நகலைப் பல்வேறு மூத்த வழக்கறிஞர்கள் கேட்டுப்பெற்றிருக்கிறார்கள். ஓர் ஆவணமாக.

சிற்றிதழ்ப்பண்பாடு என்று சொல்கிறோமே அதிலிருந்து சென்று நாம் சட்டத்தின் உலகுக்கு அளிக்கும் பங்களிப்பு இதுதானா?

அவரே குறிப்பிட்டதும் பொதுவெளியில் பேசப்பட்டதுமான ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுவதை அவதூறு என்றும் தாக்குதல் என்றும் சொல்லி கண்ணைக்கசக்கும் எஸ்.வி.ராஜதுரை இந்த வக்கீல்நோட்டீஸில் உள்ள ஆபாசத்தை எப்படி எனக்கு அனுப்பினார்? எப்படி அவர் கை நடுங்காமலிருந்தது?

அவரை ஒரு இடதுசாரித் தியாகி என்று முன் நிறுத்திய ஜூனியர்விகடன் போன்ற இதழ்கள் இதைப்பற்றி என்ன சொல்லப்போகின்றன?

அவரை ஓர் இடதுசாரிச் சிந்தனையாளர் என நினைப்பவர்கள் இந்த செயலைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்? இதுவா இடதுசாரி ஒழுக்கம்? இதுவா இடதுசாரி கருத்தியல் நாகரீகம்?

வசதியான மௌனம் மூலம் இதை அவர்கள் அங்கீகரிக்கவா போகிறார்கள்?

சரி, நாளை அவர் எழுதிய ஒவ்வொரு எழுத்துடனும் இந்த நோட்டீசின் மொழியும் நினைவுகூரப்படுமென்றாவது எஸ்.வி.ராஜதுரை யோசித்தாரா?

எஸ்.வி.ராஜதுரையை நேரில் கண்டால் அவர் கைகளைப் பற்றிக்கொண்டு நான் சொல்ல விரும்புவது இதைத்தான். ‘எஸ்.வி. ஆர், இதைப்போல கீழிறங்காதீர்கள். தயவுசெய்து…. தமிழ்ச்சிந்தனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உங்களை முன்வைத்து இத்தகைய கீழ்த்தரமான ஒரு வழக்கம் நம் சட்டச்சூழலில் உருவாக வேண்டாம். என்றோ ஒருநாள் உங்கள் நூலை வாசித்து மன எழுச்சியடைந்தவன் என்பதனால் நானும் உங்கள் மாணவனே. இந்தக் கீழ்த்தர மொழியாக உங்களை வாசிக்கையில் நான் அடைவது மரணத்துக்கிணையான ஓர் அனுபவம்… தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்….’

வக்கீல் நோட்டீஸ் ஸ்கான் பக்கங்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


 

எஸ்.வி.ராஜதுரையின் வக்கீல் நோட்டீஸ்

வழக்குரைஞர் கே.விஜயன்

சட்ட அறிவிக்கை
பதிவஞ்சலில்
(அஞ்சல் ஒப்புகையுடன்)
உதகமண்டலம் 06-07-2012

பெறுகை
திரு ஜெயமோகன்
(தந்தையார் பெயர் தெரியவில்லை)
கதவு எண்.93, 5-வது குறுக்குத் தெரு
சாரதா நகர்
பார்வதிபுரம்
நாகர்கோவில்

அய்யன்மீர்,
பொருள்த் தெரிவு – தெளிவு – செறிவு – குறிப்பு

எமது கட்சிக்காரர் காலஞ்சென்ற திருமிகு.காளியப்பா மகன் மானமிகு எஸ்.வி.ராஜதுரை (எ) கே.மனோகரன் (வயது 72) அவர்கள் குறித்த உமது அவதூறு செய்தி, தகவல் – வெளியீடு பரப்பல் – தொடர்தல் – அவமதிப்பு, சமூக தகுதி குறைப்பு, மானநட்டம், மன உளைச்சல் ஏற்படுத்தியது – ரூ.20,00,000/- (இருபது இலட்சம் ரூபாய்) இழப்பீடு வேண்டல் – நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்து அறிவிப்பு வெளியிட அறிவுறுத்த, எமது கட்சிக்காரர் குறித்த உமது செய்தி மறுத்தல் – உண்மை நிலை சுட்டல் – உமது பாசாங்கு, அறமற்ற முகமூடி கிழித்தல் – உம் தீய உட்கிடக்கையுடன் கூடிய சட்டத்திற்குப் புறம்பான வெளிப்படுத்துதல்களை திருத்திக் கொள்ள வாய்ப்பளித்தல் – விவரணைகள், விளக்கங்கள், எச்சரிக்கை, வினைமுன்சொல் – தொடர் சிறப்புரிமை தக்க வைப்பு – ஆள்வரை சிறப்புரிமை – இட ஆள்வரை தொடர்பமை குறிப்பு – குறித்து.
…..

எமது கட்சிக்காரர் நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, அணையட்டி சாலை, கார்சிலி தோட்டம், கதவு எண். 5/43 ஜே வில் வசிக்கும் காலஞ்சென்ற திருமிகு. காளியப்பா மகன் மானமிகு எஸ்.வி.ராஜதுரை என்றழைக்கப்படும் கே.மனோகரன் அவர்கள் சார்பாக, அவர் எம்கை அளித்துள்ள ஆவணங்கள் கண்ணுற்றும் சர்வதேசீய, இந்திய, திராவிட, தமிழ், தத்துவ, பத்திரிகை, ஊடகவியல் கோட்பாடு, சித்தாந்த, தொழிற்சங்க, சமூக, அரசியல், பொருளாதார ஆய்வு சாட்சிகள் கேட்டும், ஆய்ந்தும், சட்டத்தின்முன் செல்லத்தக்க நியாயம் சொல்லத்தக்கவை வழி நின்றும் எம் கட்சிக்காரர் தம் கூற்றினைக் கூரையாய்க் கொண்டு அவர்தம் உரையினை உறையாய்க் கட்டியும் அவர்தம் மொழிவழி சென்றும் அவர்தம் நீள் நெடிப் பணிச் சான்றுகள், கலை, இலக்கிய, தத்துவ, அரசியல், பொருளாதார களங்கள் நிர்ணயத்துற்றும், அவர்தம் மேன்மை நெடி பணி முடிவுகள் திரிபற அறிந்தும் எமது கட்சிக்காரரின் நிலைபாட்டை சட்ட, கருத்து வெளியீட்டு நியதி, நீதி, கோட்பாடு சார்ந்து பகுத்தும் வகுத்தும் தொகுத்தும் மெத்தப்படிப்பிடை மேனி நெடிப்பிடை முழுதும் அறிவார்ந்ததாய் வெளிக்காட்டப்படும் உமது கருத்து வெளியீட்டு பசப்புகள், உம்மொழியில் சொல்லின் ‘கேனத்தனங்களாய் புறந்தள்ளப்பட வேண்டுபவையாய் நடிப்பிடைத்துலங்கும் குப்பைகள் தவறிடை முளைத்த கசடுகளாய் கருத்துதுலகில் ‘கருப்பு’ கட்டி வரும் அபத்தம் சுட்டியும் பொறுப்புடை பொதியவெற்பனின் புத்தகம் விமர்சிக்கும் புத்தகன் மொழியில் சொல்லின் “குற்றம் சொல்லிப் பெயர் வாங்கும் இக்கால புலவர் வகையறாக்களில் ஒருவராய் நின்று, தான் அறிந்ததை மட்டுமல்ல, அறியாதது, தெரியாதது, புரியாததைக்கூட பக்கம் பக்கமாய் எழுதிப் பிரித்து மேய்ந்து தன்னுடைய உள்நோக்கங்களை உலகியல் நெறிகளாக மாற்றிச் சொல்லி…” தீய உட்கிடக்கையுடன் சட்டத்திற்குப் புறம்பாக கேவலப் புகழ் இலாபம் பார்க்கும் நோக்கில் _ ‘பிறரை இழிவுபடுத்தி தான் மேன்மைப்படும் முயற்சியில்’ சேறு வாரியிறைத்து எழுதியும் பேசியும் பரப்பியும் மேன் மக்களை – மென்மக்களை அவர்தம் சமூகத் தகுதியிலிருந்து கீழிறக்கி அவமானப்படுத்தி கடும் மன உளைச்சலும் மான நட்டமும் பொருளாதார நட்டமும் உண்டாக்கும் உம் ஈன செயல் சுட்டி அதைத் தொடர்வதை நிறுத்திட அறிவுறுத்தி உம்மால் உமது தவறான கருத்துப் பரப்பலால் எமது கட்சிக்காரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், அவமானம், சமூகத் தகுதிக் குறைப்பு மாற்றிடப்பட வேண்டியும், ஈடுசெய்ய முடியாததெனினும் சட்ட நெறிகளுக்காக குறிப்பிட்ட வரையறைக்குள் அடக்கப்பட்டு, ரூ.20,00,000/- (இருபது இலட்சம் ரூபாய்) என எட்டப்பட்ட தொகையினை இழப்பீடாய் வேண்டியும் இந்த சட்ட அறிவிக்கை நீ கைபெற்று மனங்கொண்டு சட்டப்படி தீர்வு தந்திட வேண்டி உமக்கு அனுப்பப்படுகிறது.

எமது கட்சிக்காரர் கொங்கு மண்டலத்தின் ஆரமாம் தாராபுரத்தின் காந்தி பொதுநல மன்றம் கண்ட காந்தீயவாதியும் கல்வி போதகருமான காளியப்பருக்கும் கருணையும் ஈகையும் கணவர் கொள்கையால் கொண்ட ஈர்ப்புமாய் இயங்கிய சரிநிகர் வாழ்க்கைக்கும் வாழ்க்கைப்பட்ட அங்கம்மாளுக்கும் அருமை மகனாய்ப் பிறந்து – கருத்துரிமையும் நட்பும் பாராட்டிய தந்தை, “அம்மா அடுக்கி வைத்த சாமியில் எந்த சாமியை வணங்கறது?” என்று கேட்க “ஈரோடு இராமசாமியை வணங்குங்கள்” என்று சொல்லுகிற வன்மையும் தன்மையும் வாய்த்திருந்த கே.மனோகரன் தனது 12ஆம் வயதில் எட்டிய பகுத்தறிவு கொள்கையிலும் ‘நூல் நூற்றல்’ கட்டாயம் என கால் நூற்றாண்டு காலம் வாழ்ந்த வீட்டினில் ‘நூல் கற்றல் விருப்பம்’ என மேல் நூற்றாண்டுக்கு அழைத்து வளர்ந்தவர் அவர் படித்தது பள்ளி இறுதி ஆண்டென்றாலும் தனது அரசியல், இலக்கிய, கலை, திரை, சமூகவியல், மானுடவியல், சூழலியல் உள்ளிட்ட துறைதோறும் ஆழ்ந்து தேடிய அறிவால் தேர்ந்து எழுதிய எழுத்தால், மெத்த படித்தோர் கரைத்து குடித்தோர் ‘கப்பம் கட்டி’ கடைத்தேறியவர் என பலரும் காத்திருக்க அறிவால், ஆழ்ந்த கொள்கை கொண்டிலங்கிய திறனாய்வு திறனால் பாரதிதாசன் பல்கலையில் பெரியார் உயர் ஆய்வு மய்யத் தலைவராய் இலங்கினார். அரசியலுக்காய் படிப்பை விட்டது போல் கொள்கை கருத்துவேறுபாட்டால் பல்கலை பொறுப்பையும் விடுத்தார் அடுத்து வந்த விருதுகளை எல்லாம் கொள்கைத் தோரணை காரணமாகவே தன் தோளில் தொங்கவிடாமல் தவிர்த்தவர் மனித உரிமைப் போராளிகளை பொது அங்கமாய்க் கொண்டிருக்கும் மக்கள் சிவில் உரிமைக்கழகம் (PUCL) அமைப்பின் தமிழ்நாட்டுத் தலைவர், பொதுச்செயலர், தேசீய துணைத்தலைவர் என பல்வேறு பொறுப்புகள் வகித்தவர்; எங்கெல்லாம் மனிதம் மிதிபடுகிறதோ உரிமை அடிபடுகிறதோ அங்கெல்லாம் சென்று உண்மை அறியும் குழுக்கள் மூலம் வேணவா பணிகளாற்றியவர் தூக்குக்கயிறுகளை முத்தமிட விதிக்கப்பட்டிருந்த கழுத்துகளுக்கு விடுதலை பெற்றுத்தந்தவர் ‘புதிய தலைமுறை’ ‘இனி’ எனும் கலை இலக்கிய இதழ்கள் மூலம் சமூகப் பணியாற்றியவர் சுதேசிப் போராளி ஜெயபிரகாஷ் நாராயணனின் தலைமையில் இருந்த, பேராசிரியர் ரஜினி கோத்தாரி, நீதியரசர் வி.எம்.தார்க்குண்டே உள்ளிட்டவர்களோடு இணைந்தும் இயைந்தும் பணியாற்றிய காலங்களில் ‘எக்கனாமிக் & பொலிடிக்கல் வீக்லி”, ‘செமினார்’, ‘தி இந்து’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ‘மன்த்லி ரிவியூ’ போன்ற ஆங்கில பத்திரிகைகளில் தனித்தும் போற்றுதலுக்குரிய ஆய்வறிஞர் தோழர். வ.கீதாவோடு இணைந்தும் ஆக்கங்கள் அளித்தவர் அரசியல், சாதீயம், சமூகவியல் துறைகளில் பெருஞானமுற்றும் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ண அய்யரின் மனிதநேய சித்தாந்தங்களை மனமேல் சுமந்து எழுத்திலிறக்கி களமிறங்கி போராடி வெற்றி பெற்றவர் மார்க்சிய, பெரியாரிய பொதுவுடைமை அமைப்புகள் அளித்த நிதிக்கொடையுடன் கூடிய விருதுகளைக் கூட தன் துணைவியார் நோயுற்று நலிவுற்று பார்வையற்று பரிதவித்திருந்த நிலைபோக்க நிதி உதவி தேவைப்பட்ட நேரத்திலும் மறுதளித்த மகத்துவத்துக்கு சொந்தக்காரர் மாண்பமை உயர்நீதி மன்ற நீதிமான்கள் தம் தீர்ப்பில் எடுத்தாளும் சிறப்பு பெற்ற கருத்துரைகள் அடங்கிய நூல்கள் ஆக்கியவர் தனித்த எந்த இயக்கத்தையும் கட்சியையும் சாராத சுதந்திரமான பெரியாரிய, அம்பேத்காரிய சிந்தனையாளராக தன்னை வெளிக்காட்டும் எம் கட்சிக்காரர் தன்னை ஒரு ‘சர்வதேசீய வாதி’ என்கிற முழு மனிதம் சார்ந்த வெளிப்படுத்துதலில் பெரு விருப்புடையவர் அதற்கான செயல்பாட்டு தளத்தில் இயங்குபவர்.

மேற்கண்ட விவரணைகள் எமது கட்சிக்காரரின் பத்திலொரு பங்கு மேன்மையையே விளக்குமாயினும் அத்தகு பண்புடை – பகுத்தறிவுடை – மாண்புடை மனிதரை, ஏற்கெனவே மார்க்ஸ், பெரியார், அம்பேத்கார், அருந்ததிராய்… என தொடரும் பட்டியலில் இடம் பெறும் பெரும் மாமனிதர்களை இழிவுபடுத்துவதன் மூலம் உம் இருப்பை உறுதிபடுத்திக் கொள்கிற கேவலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில ‘ஜந்து’க்களின் கூட்ட்த்தைச் சேர்ந்தவர்கள் போல நீர், ஒரு சனாதன பார்ப்பார் –பெரு சாதிவெறியர் – மேலும் கீழும் இரண்டும் கெட்ட செளுக்கைகளின் முழு உறவினர் போல் உள் குமையும் வெக்கையால் எமது கட்சிக்காரரையும் வீண் சண்டைக்கு இழுக்கிற வேலையைச் செய்துள்ளீர். மானுடப்பார்வை, மானசீகப்பார்வை, அறவியல், உள்ளுணர்ந்து பார்ப்பது … என்னும் வார்த்தைகள் பயன்படுத்தி ஆகப்பெரும் எழுத்தச்சனாக காட்டிக்கொள்ளும் சிலர் போல் நீர் ‘கவிதாசரண்’ சுட்டிக்காட்டிய பொண்டாட்டி பேரிலான களவாணித்தனத்திற்கு’ சொந்தக்காரர் ‘என்பதும் “நடைமுறை விஷயங்களை விட கற்பனை உலகமே எனக்கு பிடித்திருக்கிறது” “…பொறுப்புகளற்று அலைந்து திரிகிற” “…உலகம் சார்ந்த பொறுப்புகளை கூடுமானவரை தவிர்த்து வருபவன்” என்கிற பொறுப்பற்ற ‘லும்பன்’த்தன இயல்பாலன் என்பது உம் மொழியிலேயே வெளிப்பட “…தமிழில் என்னளவுக்கு தீவிரமாக பாதிக்கக்கூடிய மொழி கொண்ட படைப்பாளி இல்லை என்பதை…” என்னும் அகங்கார பீற்றலுக்கும் நீர் சொந்தக்காரர் என்பது தெரிந்தும் உம்முடைய வார்த்தைகளால் சொன்னால் பல நேரங்களில் நீர் ஒரு ‘கேனயன்’ என்று விளங்கிக் கொண்டும் கூட விலகிக் கொள்ள முடியாமல் கொண்ட கொள்கைக்காய் அவசியத் தேவைகளுக்கு கிடைக்கிற ஆதாரங்களைக் கூட பற்றிக் கொள்ளாமல் அல்லாடிக் கொண்டிருக்கிற எமது கட்சிக்காரர் மீது நீர் தெளித்திருக்கிற சேறு உம்மாலே கழுவப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் உமக்கு இந்த சட்ட அறிவிக்கை என்பதை நினைவில் கொள்க.

உமது 20.06.2012 தேதியிட்ட ஜெயமோகன்.இன் வளைத்தளத்தில்

“ஃபோர்டு பவுண்டேஷனின் பெருநிதிக் கிழவரான எம்.டி.முத்துக்குமாரசாமி காலச்சுவடுக்கு நிதியளித்த ஒரு நிறுவனத்தின் மூலநிதி ஃபோர்டு பவுண்டேஷன் அளித்ததே என வெளிப்படுத்தியிருக்கிறார். மாறி மாறி இவ்வாறு வெளிப்படுத்துவார்கள் என்றால் நல்லது தான் என்றே நான் நினைக்கிறேன். தமிழில் க்ரியாவும் காலச்சுவடும் எஸ்.வி.ராஜதுரையும் எல்லாம் பெற்ற பணத்தின் அளவு சராசரி வாசகனுக்கு கொஞ்சம் பிரமிப்பைத்தான் அளிக்கும். நாம் சாதாரணமாக வாசித்துச் செல்லும் கருத்துகளுக்கு இவ்வளவு பணமதிப்பா என நாம் வியப்போம். அடுத்தமுறை கொஞ்சம் கவனமாக புத்தகங்களை புரட்டிப் பார்ப்போம்”

உமது 23.06.2012 தியதி வெளியீட்டில்

“நான் அக்கட்டுரையிலேயே சுட்டிகாட்டியபடி நிதியுதவிகள் பெரும்பாலும் பலவகையான அறிவார்ந்த நோக்கங்கள் சொல்லப்பட்டு விதவிதமான பண்பாட்டு அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழியாகவே அளிக்கப்ப்படுகின்றன. எம்.டி.முத்துக்குமாரசாமி போல உள்ளிருந்தே ஒருவர் சுட்டிக்காட்டும்போதே நமக்கு உண்மை தெரிகிறது இல்லையேல் வாய்பே இல்லை”

“…அந்த பிற நிதியுதவிகளைச் சுட்டிக்காட்டும்போது காலச்சுவடு, க்ரியா, நீங்கள் என மூன்று பெயர்களையும் எடுத்துச்சொல்லி நான் பேசியமைக்குக் காரணம் நீங்கள் மூன்று தரப்பும்தான் உங்கள் நூல்களிலேயே பெற்றுக்கொண்ட நிதியைப்பற்றிய குறிப்புகளை அளித்திருக்கிறீர்கள் என்பதுதான்.”

“…உங்களுடைய பெரியார் சுயமரியாதை சமதர்ம்ம் என்ற நூலின் முதற்பதிப்பின் நான்காம் பக்கத்தில் சிறிய எழுத்துக்களில் அதன் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுக்காக நிதியுதவி செய்த அமைப்பின் பெயர் அதிகாரபூர்வமாகவே குறிப்பிடப்பட்டிருந்தது என்பது என் நினைவு இதைப் புதியதாகவும் நான் சொல்லவில்லை”

மேற்படி உமது விவரிப்புகளின் அனைத்து சொல், தொடர், வாக்கியம் ஆகியன தனித்தனியாயும் ஒன்று கூடியும் கொண்டு கூட்டியும் தரும் பொருளனைத்தும் நீர் உமது ‘அதி அறிவு மேன்மைத்தனம்!’ காட்டி அறத்தால் கழுவப்படாது புறத்தே மூன்றாம் தர திரவியம் தடவி அதற்கு வசீகரமொழியான சுயதம்பட்ட பட்டம் சூட்டி அதில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் சமுக்காளத்தில் வடிகட்டப்பட்ட, இட்டுகட்டப்பட்ட, கட்டி சமைக்கப்பட்ட, உற்றுப்பார்த்து உதறிவீசின் சுற்றமெல்லா அசிங்க மணமேற்றும் நெடிமிக்கப் பொய்கள், புனையப்பட்ட செய்திகள் எமது கட்சிக்காரரின் புகழ் குலைத்து மான நட்டமேற்படுத்தி எமது கட்சிக்காரருக்கு மன உளைச்சல் உண்டாக்கும் உருப்படிகள் ஆகும்.

உம்முடைய மேற்படி அவதூறுக்கு ‘விடியல்’ பதிப்பகத்தின் நேரிய பதிப்பாளர் மரணப்படுக்கையிலும் மகத்தான புத்தகங்களை மனதுக்குள் கனாக்கண்டு வடிவம் கொடுக்க தன் இறுதி மூச்சையும் பிடித்துக்கொண்டிருக்கும் புனிதர் விடியல் சிவா எதிர்வினை ஆற்றியவுடன் உமது ‘பல்டி அடிப்பு’ உத்தி தொடங்குகிறது. மீண்டுமே சொரணை கெட்ட ஜந்துக்கள் தமக்கே உரித்தான மொகரக்கட்டை வார்த்தைகளில் முகமூடி பூட்டிக்கொண்டு முகமன் கூறும் முகமாக சிவாவின் உடல்நிலை… இத்யாதி விஷயங்களைப் பேசி சட்ட நடவடிக்கை என்றவுடன் சந்துக்குள் புகுந்து கொண்டு மன்னிப்பு சித்தாந்தம் பேசி ஓடிப்போனீர்.

மீண்டுமே உலகளாவிய ஆய்வமைப்பான டபுள்யூ.எ.சி.சி. (W.A.C.C.) குறித்த கேரள, நைஜீரிய புளுகுகளிலும் உமது அப்பட்ட, கற்பனை உப்பிட்ட கூறல்களும் அவதூறு பரப்புதல்களுமே முன்னின்றுள்ளனவே யன்றி வேறொன்றுமில்லை.

“…அவர் சொன்னார்” “…இவர் சொன்னார்”, “…அந்த நண்பர்” “…அய்ந்தாண்டு” போன்ற சொல்லாடல்கள் உம்முடைய ஆதாரமற்ற அவதூறு பரப்பும் நோக்கம் மட்டுமே ஆன செயல்களை வெளிப்படுத்தி எமது கட்சிக்காரருக்கு கடும் மன உளைச்சலையும் சமூகத்தகுதிக் குறைப்பும் ஏற்படுத்தி இருக்கிறதே அன்றி வேறொன்றும் சாதிக்கவில்லை.

டபுள்யூ.எ.சி.சி. மீது உமக்கிருக்கும் ‘ஏதோ இழந்த’ கடுப்பும் அனாமத்து முத்துகிருஷ்ணன், உமது அங்காடி ரசிகன் பாண்டியன் உள்ளிட்ட உமது பலவீன முகமூடிகள், நீர் விரித்துள்ள சர்வதேச நிதிவலை… போன்றவை எதுவுமே எமது கட்சிக்காரரை ஆதாரப்பூர்வமாக நல்ல நோக்கோடு விமர்சனம் செய்வதாக அமையாமல் உமது வக்கிரத்தை நேர்மையும் நற்சிந்தனையும் சமூக அக்கறையும் பன்முக ஆளுமையும் கொண்ட எமது கட்சிக்காரர் தம் தோளில் தேய்த்து அதில் கொஞ்சத்தில் நீர் தோய்ந்தொழுகும் ஆர்வம் காட்டும் சபலமாகவும் வெளிப்பட்டு எமது கட்சிக்காரரை மன உளைச்சலுக்கும் அவரது சமூக தகுதி குறைப்புக்கும் ஆட்படுத்தி உள்ளது.

அடுத்து, 24.06.2012 தியதி உமது வெளியீட்டில்

“உங்கள் நிதியாதாரங்களைப்பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். இன்னொரு தருணத்தில் விரிவாகவே எழுதுகிறேன். ஒன்று உங்களுக்காக வ. கீதா நிதி பெற்றிருக்கிறாரா? என்ற கோணத்தில் இரண்டு பாரதிதாசன் பல்கலையில் பெரியாரியலாய்வு இருக்கையில் கெளரவப்பேராசிரியராக நீங்கள் பணியாற்றியதை ஒட்டி அந்த இருக்கையின் நிதியாதாரம் என்ன என்று கோணத்தில்…”

மற்றும்

“எஸ்.வி.ராஜதுரை பற்றிய உங்கள் கருத்துகளை நான் ஏற்கவில்லை. அவர் நீங்கள் சொல்ல நினைக்கும் பொருளியல் நிலையிலும் இல்லை என்பதை நான் அறிவேன். எண்பதுகளின் இறுதியில் அவரது பொருளியல்நிலை எப்படி இருந்த்து? இப்போது எப்படி இருக்கிறது என அறியாதவனல்ல நான்! விருதுகளை ஏற்பதில் அவருக்கு பல தோரணைகள் தேவையாக இருக்கலாம்”.

“இந்த சின்ன்ஞ்சிறு விருதுகளுக்கும் சர்வதேசக் கவனத்தைப் பெற்றுத்தரும் பிரம்மாண்டமான கிறித்துவ நிதிவலைப் பின்னல்களின் உதவிகள் மற்றும் பிரச்சாரத்துக்குமான வேறுபாடு உங்களைவிட எஸ்.வி.ராஜதுரைக்குத் தெரிந்திருக்கிறது”.

“வ.கீதா நடத்திவரும் தன்னார்வக்குழு பற்றி ஒரு முழுமையான பொதுவிவாதம் தமிழில் தேவையாகிறது. நம் அறிவு ஜீவிகளுக்கும் தன்னார்வக் குழுக்களுக்கும் இடையேயான உறவுகள் பற்றி தன்னார்வக்குழு நடத்தும் எழுத்தாளர்களைப்பற்றி வெளிப்படையான பேச்சு உருவாகவேண்டும்”.

“எஸ்.வி.ராஜதுரை எனக்கு ‘பிரச்சனைகள்’ வந்திருக்கும் என ஊகிப்பதற்குக் காரணம் உண்டு”.

“உயிர்எழுத்து மாத இதழில் நான் இந்திய அமைதிப்படை பற்றி எழுதிய குறிப்பின் முன்பகுதி மட்டும் எடுத்துப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. கூடவே அதற்கு பதிலாக முறிந்தபனை நூலில் இருந்து சில பகுதிகளும் அதனுடன் அவ்விதழின் ஆசிரியர் சுதீர் செந்தில் என்னை கடுமையாக வசைபாடி எழுதிய ஒரு குறிப்பும் இருந்தது”.

“இதழ் வந்த சில நாட்களுக்குள் எனக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. செல்பேசியை எடுத்ததுமே காது கூசும் வசைகள். வேறு வேலையில் இல்லை என்றால் வசைபாடுபவர்கள் அனைவரிடமும் நான் பேசினேன். முக்கால்வாசிப் பேருக்கு நான் யாரென்றே தெரியவில்லை. என்னை இதழாளர் என்று நினைத்தார்கள். பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. என்றுகூட ஒருவர் சொன்னார்”.

“என்னுடைய எண் எப்படிக் கிடைத்தது என்று கேட்டேன் “எஸ்.எம்.எஸ். வந்திச்சி. கூப்பிட்டு கண்டியுங்கன்னு சொன்னாங்க அதான்” என்றார்கள். அவர்களுக்கு உயிரெழுத்து இதழோ எஸ்.வி.ராஜதுரையோ சுதீர்செந்திலோ கூட யாரென்று தெரிந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் உள்ள எல்லா தமிழ் அமைப்புகளுக்கும் என்னுடைய செல்பேசி எண்ணை குறுஞ்செய்தியாக அனுப்பியிருக்கிறார்கள் எஸ்.வி.ராஜதுரையும் சுதீர் செந்திலும், கண்டிக்கும்படி கோரி தொலைபேசியில் மன்றாடியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு வாரம் இருநூறு அழைப்புகள் வரை வந்தன. வசைகளை கேட்பதை ஒரு பயிற்சியாகவே வைத்திருக்கிறேன் என்பதனால் நான் அதை ஒரு பெரிய விஷயமாக நினைக்கவில்லை”.

எமது கட்சிக்காரர் மீதான மேற்கண்ட உமது தொடர் அவதூறுகள் உம்மை நீர் பெரிய ‘லார்டு லபக்’கென உமது அடிப்பொடிகளுக்கு காட்டிக்கொள்வதற்கும் உமது அசிங்க பலவீனங்கள் புரிந்தவர்களுக்கு உம்மை ‘வின்னர் வடிவேலாக’ பார்ப்பதற்கும் வழக்கம்போல் பயன்பட்டிருந்தால் எம் கட்சிக்காரர் தன் பழைய கோட்டில் அமர்ந்த மலம் மொய்த்த ஈ – நீ! ச்சீ! போ! என உம்மை அருவெருத்து விரட்டி ஒதுங்கி இருப்பார். ஆனால் உமது அவதூறு பரப்பலின் பின்னாக, அடிநாதமாக உமது வக்கிரமும், மூன்றாந்தர முட்டாள்தனமும், அறிவுகெட்ட – அற நெறிசாரா ‘உம்பாஷை ஹம்பக்கு’களும் மீறி எமது கட்சிக்காரரின் மனமொடிக்கும், தகுதி குறைக்கும், உமது தீய உட்கிடக்கையின் மேலெழுந்த அவதூறு பரப்பும் நோக்கமும் இருப்பதாலே எமது கட்சிக்காரர் இந்த சட்ட அறிவிக்கை மூலம் உம்மை நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவும், இழப்பீடு வழங்கவும், எச்சரிக்கிறார் என்பதறிக.

எமது கட்சிக்காரரின் புரிதல்படி ஆகப்பெரிய ஒரு கொம்பனாகவோ உலகளாவிய மேன்மை தாங்கிய நிறுவனங்களின் அளப்பறிய சேவை தொடர்ச்சியை இடையிட்டு தடுக்க முடிகிற ‘பயில்வானாகவோ’ எந்த கேனத்தனத்தின் தொடர்ச்சியாகவோ பல கோணத்திலும் பல்வேறு அமைப்புகளின் பல்கலை கழகங்களின் ஆய்வு இருக்கைகளின் நிதியாதாரங்களை ஆய்கிற வீர்ர், உளவாளியாகவோ ஆன எவராகவோ நீர் இல்லை எனும்போதும் நீர் உம்மை ஒரு ஆகப்பெரிய கொம்பனாக, ‘ஃபுல்’ தடுக்கி (புல் தடுக்கி அல்ல) பயில்வானாக, ‘007 ஜேம்ஸ்பாண்டாக’ “பிடிக்கிலேனா விட்டிருங்கோ…” வசனம் மூலம் உம்மை புல்லரிக்க வைத்த உமது ‘பாஷை’யில் சொன்னால் அதிகம் அறிவில்லாத ‘அவளுக்கோ’ பிறரை சுரண்டுகிற அறிவு மட்டுமே உடைய ‘அவாளுக்கோ’ காட்டிக்கொள்வதற்காகவோ அதன்மூலம் எதையோ இறுக்கி கட்டிக்கொள்வதற்காகவோ ‘எங்கேயோ போற ஆத்தா எம்மேல ஏறும்’ சடங்கு பிடிக்காது உம்மை கண்டிக்கிறார் உம் செயலை சட்டத்தின்முன் அம்பலப்படுத்திட இந்த சட்ட அறிவிக்கை மூலம் முனைப்பு முன்னெடுக்கிறார்.

உமது அவதூறு செய்திகளுக்கெதிராய் சட்டப்படி நடவடிக்கைகள் தொடரும் என அறிவித்தவுடன் ஏதோ ஒரு முட்டாளின் பேச்சு கேட்டு மிரட்டும் தொனியில் உமது மரபியல்பின் தொடர் வரியில் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தோன்றுயரா அளவு அறஞ்சார்ந்த மனமும் ஆய்வு சார்ந்த அறிவும் அர்ப்பணிப்பு உணர்வும் உம்மைப் போன்ற வகையறாக்களால் அசைத்துக்கூடப் பார்க்க முடியாத துணிவும் நேர்மைத்திறமும் தனித்தியங்கும் தகுதியும் கொண்டிலங்கும் – இன்றைய காலகட்டத்தின் தனிப்பெரும் ஆய்வுலக நாயகி தோழர் வ.கீதாவை எல்லாம் வம்பிக்கிழுப்பது உமது தோன்றலின் பிறழ்வை யும் உமது அடிப்படை மனச்சான்று இன்மையையுமே காட்டுவதென்று புறந்தள்ளி மேல் செல்லினும் உமது “…ஆராய்வேன்” … “அவரது பொருளாதார நிலை அறியாதவனல்ல” “…விருதுகளை ஏற்பதில்… தோரணை” “…பொது விவாதம் தேவை….” “…உயிர் எழுத்து சுதீர் செந்தில் வசை”, “எஸ்.எம்.எஸ்.” ‘இத்யாதி… ‘இத்யாதி’ மிரட்டல் தொனி ‘கெக்கே பிக்கேக்கள்’ வெறுமனே உமது மன வக்கிர வடிகாலகவும் பெரியவர்கள் மீதான சேறு தெளிப்பின் மூலம் அந்தரங்கமாய் சொறிந்து கொள்வதற்கும் மட்டுமே பயன்பட்டு உமக்கு சிலிர்ப்பேற்படுத்தி அடங்கிவிடும் என நீர் நினைக்க – தம் கடமையே கண்ணாகக் கொண்டு மனிதநேயப் பணிகளுக்காக தம்மையே ஈகைச் சுடர்களாய் ஈந்து வாழ்பவர்களை தேவையில்லாமல் சீண்டி ‘பெரிய ஆளாக’ நினைக்கும் உம்மைப் போன்றவர்களுக்கும் சட்டம் தகுந்த சாட்டையடி கொடுக்கும் என்பதை உணர்த்திடும் முகமனே இந்த சட்ட அறிவிக்கை என அறிக.

 மேற்படி செய்திகள் உம்மால் சட்டத்திற்கு புறம்பாக தீய உட்கிடக்கையுடன் கூடிய நோக்கில் ஊடக நெறிக்கு எதிரான போக்கில் வெளியிடப்பட்டு பரப்பப்பட்டு எமது கட்சிக்காரரின் சமூகத்தகுதி குறைக்கப்பட்டு உள்ளது.
 எமது கட்சிக்காரர் உமது மேற்கண்ட செயலால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.
 எமது கட்சிக்காரரின் பல்லாண்டு கால அரசியல், சமூக, மாண்புகள் உம்மால் கீழ்நிலைப்படுத்தப்பட்டுள்ளன.
 எமது கட்சிக்காரர் உம்மால் தாங்கொணா துயரத்திற்கு ஆட்பட்டுள்ளார் அலைகழிப்பிற்கு உள்ளாகி உள்ளார்.
 எமது கட்சிக்காரருக்கு உம்மால் ஏற்பட்டுள்ள அவமானம் அவருக்கு ஈடு செய்யமுடியா இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
 மேற்குறிப்பிட்ட வெளியீடு பரப்புதல் எமது கட்சிக்காரருக்கு மான நட்டம் ஏற்படுத்தி உள்ளது.
 மேற்படி தகவல் பரப்புதல் மூலம் நீர் எமது கட்சிக்காரரை தகுதியிறக்கம் செய்துள்ளீர்.
 உமது வெளியீடு எமது கட்சிக்காரரை கொச்சைப்படுத்தி இழிவுபடுத்துகிறது.
 உமது மேற்படி செய்தி வெளியீடு அனைத்து நிலைகளிலும் எமது கட்சிக்காரருக்கு எதிரானதாக நிற்கிறது. எமது கட்சிக்காரரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ள உமது மேற்படி அவதூறு செய்தி பரப்புதல் எம் கட்சிக்காரர் உம்மீது குற்றவியல், உரிமையியல் பிரிவுகளில் மான நட்ட ஈடு வழக்கு தொடர வழக்கெழுமூலம் எழுப்பி உள்ளது.
 உமது செயல் உம்மீது குறைந்தபட்சமாக குறிப்பிடினும் ரூ.20,00,000 (இருபது இலட்ச ரூபாய்) நட்ட ஈடு வழங்கிடக் கோரி வழக்கு தொடர ஏதுவாக உள்ளது.
 உமது செயல் உம்மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 499, 500-ன் கீழ் வழக்கு தொடர காரணியாகி நிற்கிறது.
 உம்மீது சட்டம் சுட்டுகிற, எமது கட்சிக்காரர் உகந்ததெனவும் உசிதமெனவும் கருதும் பிற வகைகளிலும் நடவடிக்கைத் தொடர உமது அவதூறு பரப்பு தகவல் ஆதாரமாகிறது.

காலக்கெடு / வினைச்சொல் / எச்சரிக்கை

மேற்படி எமது கட்சிக்காரரை அவர் மீது அவதூறு கிளப்பி அவரது சமூக தகுதி குறைத்திட உமது வளைத்தளத்தின் மூலம் தகவல் பரப்பி அவரையும் அவர் குடும்பத்தைச் சார்ந்தோரையும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்கு 15 தினங்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவும் ரூ.20,00,000/- (இருபது இலட்ச ரூபாய்) இழப்பீடு வழங்கிடவும் நீர் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறீர்.

இல்லையேல்…..

நீர்

“தன் தலையில் தானே மண் வாரியிட்டுக் கொள்ளும் யானை போல்” நீரே உமது முகத்திரை கிழித்து வெளிபட்டு உமது சித்து வேலைகளுக்கு உலைவைக்கப்படும் சூழலுக்கு ஆளாவீர்! பல்முனை வழக்கு சந்திப்பீர்!!

ரூ.20,00,000/- (ரூபாய் இருபது இலட்சம்) நட்ட ஈட்டு தொகையுடன் கூடி இந்த சட்ட அறிவிக்கை கட்டணம் ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம்) சேர்த்து அளித்திட வேண்டியவராவீர்.

சிறப்புரிமை தக்கவைப்பு

உமது பொறுப்பற்ற, அசட்டையான, அபத்தமான பிறர் வாழ்வின் உள்ளுறை அறியா, உண்மை நிலை காணா தீய உட்கிடக்கையுடன், கடும் மன உளைச்சலும் ஈடு செய்ய முடியாத இழப்பும் ஏற்படுத்திய எம் கட்சிக்காரருக்கு எதிரான உமது குற்றவியல், உரிமையியல் செயல்பாடுகளை வேண்டும் வேளைகளில் சமூக, அரசியல், பத்திரிகைசார் களங்களில் முன்வைக்கும் உரிமையும் உமக்கு இணை அறிவிக்கை, விவரக்குறிப்பு, விவரணை, தொடர்பமை விளக்கம் அளித்திடும் உரிமைகளும் சிறப்புரிமைகளாக எம்மால் தக்க வைத்துக் கொள்ளப்படுகின்றன.

இந்த சட்ட அறிவிக்கையின் உள்ளடக்க உள்ளுறைக் கூற்றுக்களில் சுட்டப்பட்டுள்ளவை எமக்கு எதிரான உமது அவதூறுகளுக்கு மோசடிகளுக்கு எதிராக தொடுக்கப்படும் சட்ட முன்வைப்புகளுக்கு ஒரு முன் ஆவணமெனவும் கொள்க.

இந்த சட்ட அறிவிக்கை உமக்கு எதிராக தொடரப்படும் அனைத்து உரிமையியல், குற்றவியல், இழப்பு கேட்பீடு வழக்குகளுக்கும் ஆனது என்பதறிக!

வழக்கு இட ஆள்வரை பாதிக்கப்பட்டோர் வசிப்பிடமும், உமது வெளியீடு எம்மால் படிக்கப்பட்ட, உமது வெளியீடு உம்மால் பரப்பப்பட்ட எமது கட்சிக்காரரின் தகுதி தாழ்த்தப்பட்ட, எம் கட்சிக்காரரின் மானம் நட்டப்பட்ட, எமது கட்சிக்காரருக்கு சட்டப்படி வாய்ப்பிருக்கிற இடமாகவே அமையும் என்பதறிக!

வினைகளுக்கும் விளைவுகளுக்கும் விளையும் செலவுகளுக்கும் நீரே பொறுப்பு! நியாயம் எதிர்கொள்க!!

என படித்தேன் – கேட்டேன் – சரி

(கே.விஜயன், வழக்குரஞர்) எஸ்.வி.ராஜதுரை (எ) கே.மனோகரன்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எஸ்.வி.ஆர்,விடியல் சிவா, புதிய ஜனநாயகம்

ஜெயமோகன்,

தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோரால் எழுதப்பட்டதும் விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டதுமான ‘பெரியார்:சுயமரியாதை’ நூல் -முன்விலைத் திட்டத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட நூல், அன்னிய நிதி உதவியைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று நீங்கள் உங்கள் வளைத் தளத்தில் எழுதிய அபாண்டமான பொய்க்கு வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால் “நான் சொன்ன கருத்து நூலாசிரியர்களைப் பற்றியது மட்டுமே தவிர பதிப்பகம் பற்றியது அல்ல” என்று கூறியுள்ளீர்கள். எனது நேர்மையை நீங்கள் சந்தேகிக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

“பெரியார்;சுயமரியாதை சமதர்மம்’ பற்றிய அந்தக் கருத்து ஒரு பிழையான நினைவில் இருந்து எழுதப்பட்டது” என்று கூறுகிறீர்கள். உங்களது’ பிழையான நினவு’ க்கு ஆயுள் எவ்வளவு என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் இந்தக் கருத்தை கடந்த ஒரு வார காலமாக தோழர் எஸ்.வி.ராஜதுரைக்கும் உங்களுக்கும் நடந்து வரும் விவாதங்களூடாக மட்டும் நீங்கள் வைக்கவில்லை என்பதையும் நீண்டகாலமாகவே இந்தக் கருத்தைச் சொல்லி வருகிறீர்கள் என்பதையும் நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். அதாவது, இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1996இல் வெளிவந்தபோதே, இந்தக் கருத்தை நீங்கள் சொல்லிவந்ததாக நீங்களே கூறியுள்ளீர்கள்.

அதாவது உங்கள் ‘ நினைவுப் பிழை’, ஏறத்தாழ பதினாறு ஆண்டுகாலமாக இருந்து வருகிறது என்பதுதானே இதற்கு அர்த்தம்?

மேலும், அன்னிய நிதியைக் கொண்டு ஆராய்ச்சி செய்து எழுதுவர்கள் என்று 1996இலேயே உங்களுக்குத் தெரிந்திருக்குமானால், அப்படிப்பட்டவர்களின் நூலை வெளியிடக்கூடாது என்று என் மீது இவ்வளவு மரியாதை வைத்திருக்கும் நீங்கள் எப்போதாவது என்னிடம் சொல்லியிருக்கலாம் அல்லவா?

உங்களது அப்பட்டமான,அபாண்டமான பொய் அம்பலப்பட்ட பிறகே, என்னிடம் வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள்.

தோழர்கள் எஸ்விஆரும் வ.கீதாவும் எழுதிய ‘Towards a Non-Brahmin Movement:From Periyar to Iyoothee Thass’ என்னும் நூல், அவர்கள் இருவரும் தமிழில் எழுதிய நூலின் ஆங்கில மொழியாக்கமே தவிர வேறு அல்ல என்று கூறியுள்ளதன் மூலம், அந்த ஆங்கிலப் புத்தகத்தில் ஒரு பக்கத்தைக்கூட நீங்கள் படித்ததில்லை என்பதை அம்பலப்படுத்திக் கொண்டீrர்கள்.

தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோர் பற்றிய எனது மதிப்பீடுகளை நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்று கூறியிருக்கிறீர்கள். அது உங்கள் சொந்த விஷயம்.

ஆனால், விடியல் பதிப்பகத்தின் செயல்பாடுகளிலிருந்தும் அதன் நோக்கங்களிலிருந்தும் இந்த இருவரையும் பிரித்துப் பார்க்க நான் மறுக்கிறேன். இது என் உரிமை; கடமை.

பெரியாரியம்,அம்பேத்கரிய,பெண்ணிய, மார்க்ஸியம் பேசும், எழுதும் சிந்தனையாளர்களையும் எழுத்தாளர்களையும் கருத்துநிலைரீதியாக எதிர்கொள்ளத் திராணியற்று, அவர்கள் மீது அவதூறுகளைப் பரப்புவதன் மூலம்,அவர்களது செயல்பாடுகளை முடக்க நினைக்கும் ஆர்எஸ்எஸ்- சங் பரிவாரக் கூட்டத்தின் முகவராகவே நீங்கள் செயல்படுகிறீர்கள். ஏகாதிபத்தியத்தின் கள்ளக்கூட்டாளிகளாக உள்ள இந்த சங் பரிவாரத்தைச் சேர்ந்த அமைப்புகள் எத்தனை அன்னிய நிதியில் திளைக்கின்றன என்பதைப் பற்றி நீங்கள் ஏதேனும் ‘ஆராய்ச்சி’ செய்ததுண்டா?

உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூடப் பார்க்கக்கூடாது.

பெ.சிவஞானம் (விடியல் சிவா)

கோவை,24.06.2012

பெருமதிப்புக்குரிய விடியல் சிவா,

எஸ்.வி.ராஜதுரையின் நூல்களால் அல்ல விடியல் நினைக்கப்படப்போவது. அவை உள்நோக்கம் கொண்ட, திரிபுகள் கொண்ட நூல்கள். இந்தியவரலாற்றின்மீதும் இந்தியவரலாற்றுநாயகர்கள் மீதும் ஏகாதிபத்திய வரலாற்றுத்திரிப்பாளர்களின் அரசியல் நோக்கத்துக்கேற்ப பொய்களைச் சுமத்தக்கூடியவை

விடியலின் வலிமை அது வெளியிட்ட முக்கியமான மொழியாக்கங்கள்தான் . தேபிபிரசாத் சட்டோபாத்யாயவின் ‘இந்திய தத்துவமரபில் நிலைத்திருப்பவையும் அழிந்தவையும்’ முதல் சமீபத்தில் வந்த டிராட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு வரையிலான ஆக்கங்களால் விடியல் தமிழ்ச்சிந்தனை மரபில் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நிலைத்திருக்கும்.அதற்காகவே நீங்கள் பெருமைகொள்ளவேண்டும். இதை விடியலின் நூல்களை எல்லாம் வாங்கிய வாசகனாக நான் சொல்லலாமில்லையா?

எஸ்.வி.ராஜதுரையின் நூல் வெளிவந்தபோது நான் எழுதிய குறிப்புக்குப் பின்னர் கிட்டத்தட்ட பதினைந்தாண்டுகள் ஓடிவிட்டன. ஆகவே நூலை நினைவுகூர்வதில் பிழை ஏற்பட்டுவிட்டது. அதற்கான காரணத்தையும் சொல்லிவிட்டேன். ஆகவே தான் உங்களை வருத்தம்கொள்ளவைக்க நேர்ந்தது. உடனடியாக நான் பதிவை திருத்தியும் விட்டேன். இதை தெளிவாகவே விளக்கியிருக்கிறேன்.

பெரியார் ’பெரியார்;சுயமரியாதை சமதர்மம்’ நூலின் மொழியாக்கம்தான் ஆங்கில நூல் என்று சொன்னதாக புரிந்துகொண்டுவிட்டிருக்கிறீர்கள். அந்த நூலுக்குச் செய்த அதே ஆய்வுத்தரவுகளைக் கொண்டு எழுதிய நூல் Towards a Non-Brahmin Movement:From Periyar to Iyoothee Thass. ஆனால் ஆங்கிலநூலுக்கு WACC ஆய்வுக்கு உதவியதாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதே நான் சொன்னது.

இந்தவகை குறுக்குக்கேள்வி விவாதங்களால் எந்த பயனும் இல்லை. நான் என் தரப்பை தெளிவுபடுத்திவிட்டேன்.

நிற்க, எஸ்.வி.ராஜதுரை அவர்களின் தன்னார்வக்குழு தொடர்புகளைப்பற்றியும் அவர் அங்கே நிதிபெற்று எழுதுகிறார் என்றும் நான் சொல்ல ஆரம்பிக்கவில்லை. நீங்கள் காட்டவிரும்புவதுபோல இந்துத்துவ அமைப்புகளும் சொல்லவில்லை. அந்தக்குற்றச்சாட்டை மிக வலுவாக முன்வைத்தவர்கள் நீங்கள் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த இடதுசாரிக்குழுக்கள்தான்.

குறிப்பாக புதியஜனநாயகம் குழு. புதியஜனநாயகம் மிகத்திட்டவட்டமாக, தெளிவான வார்த்தைகளில், எஸ்.வி.ராஜதுரையின் படத்துடன், அவர் தன்னார்வக்குழுக்களின் நிதியுதவியுடன் செயல்படுவதாக குற்றம்சாட்டி குறைந்தபட்சம் இரு கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. நான் வாசித்திருக்கிறேன்.புதியஜனநாயகம் அக்கட்டுரையை நான் எழுதவந்த அக்காலகட்டத்திலேயே வெளியிட்டுவிட்டது. எஸ்.வி.ராஜதுரையைப்பற்றி இன்று மார்க்ஸியனல்லாத நான் பெருமதிப்பு கொண்டிருந்த அக்காலகட்டத்தில் எனக்கு மிகுந்த சங்கடத்தை அளித்தது அச்செய்தி

நண்பர் ஒருவரிடம் தொலைபேசியில் கேட்டுத்தெளிவுபடுத்தினேன். புதியஜனநாயகம் 1988 ஜூலை 16-31 இதழில் ஆர்.கெ என்பவர் எழுதிய கட்டுரை அது. அதில் எஸ்.வி.ராஜதுரையின் .சிந்தனைகளை அவருக்கு நிதியளிக்கும் தன்னார்வக்குழுக்கள் எப்படி வடிவமைக்கின்றன என்று எழுதியிருந்தார். எஸ்.வி.ராஜதுரையின் புகைப்படமும் இருந்தது. இதழை அனுப்பும்படி கோரியிருக்கிறேன். எஸ்.வி.ராஜதுரை, இங்குலாப் ஆகிய இருவரைப்பற்றியும் இக்குற்றச்சாட்டு அக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

அந்தக்கட்டுரைக்கு எஸ்.வி.ராஜதுரை எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. மானநஷ்டவழக்கு ஏதும் போடவுமில்லை. ஆனால் இன்னொரு நூலில் தான் தன்னார்வக்குழுக்களுக்காக வேலைசெய்ததை ஒப்புக்கொண்டு தன்னார்வக்குழுவின் பெயரையும் சொல்கிறார். மீண்டும் நினைவுப்பிழையாகச் சொல்லி மாட்டிக்கொள்ளவிரும்பவில்லை. புலவர் கலியபெருமாள் அவர்களைப்பற்றிய ஒரு நூலின் முன்னுரையில் என நினைக்கிறேன். கோவை ஈஸ்வரனின் முன்னுரையும் அந்நூலில் உண்டு.

அந்நூலையும் தேடி எடுக்கச் சொல்லியிருக்கிறேன். அந்த கட்டுரையை தேடி எடுத்து அந்த அமைப்பின் பின்னணியை முடிந்தவரை விசாரித்து எழுதுகிறேன்.இதையெல்லாம் வைத்திருந்து தேவைப்பட்டபோது சட்டென்று எடுத்துப்போடுவதெல்லாம் ஆய்வாளர்களால்தான் முடியும். என்னைப்போன்றவர்கள் இதைச்செய்ய ஆரம்பித்தால் புனைகதை எழுதமுடியாது. நான் என் சொந்தச்சிறுகதைகளையே ஊர் ஊராக கடிதமெழுதி அனுப்பி சேர்த்து தொகுப்பாக்குபவன். ஆகவே மன்னிக்கவும்.

நீங்கள் எஸ்.வி.ராஜதுரையின் நூல்களை வெளியிட ஆரம்பித்தபோதே இக்குற்றச்சாட்டு மிக வலுவாக நீங்கள் நன்கறிந்த இதழ்களில் எழுதப்பட்டிருந்தது. அதை நான் சொல்லி நீங்கள் அறியவேண்டியதில்லை. ஆகவே தயவுசெய்து நான் ஏதோ புதியதாக அவதூறுசெய்ய ஆரம்பித்திருப்பதாகச் சொல்லாதீர்கள். அது எப்போதுமுள்ள ஆதாரபூர்வக் குற்றச்சாட்டு மட்டுமே.

தன்னார்வக்குழுக்களின் நிதி பெற்று எழுதியவர் எஸ்.வி.ராஜதுரை என முதலில் குற்றம்சாட்டியவர்கள் இடதுசாரிக்குழுக்களே. ஆனால்கூட அதை நான் பொருட்படுத்தவில்லை. அவரது சொந்த நூலிலேயே அக்குறிப்பை அவர் கொடுத்தபோது கூட பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் WACC யின் உள்ளே உள்ள ஒருவர் சொன்னபின்னர்தான் அதை கணக்கில் கொள்ள ஆரம்பித்தேன்.

ஆனால் தொண்ணூற்றிஏழில் அந்த அமைப்பின் பெயரைக்கூட நினைவில் வைக்கத் தோன்றவில்லை. ஏனென்றால் அன்று உலகமயமாக்கல் ஆரம்பித்திருந்தது. அதைப்பற்றிய புளகாங்கிதங்கள் மட்டுமே எனக்கிருந்தன. கீழைநாடுகளின் பண்பாட்டாய்வில், வரலாற்றாய்வில், ஊடகங்களில் ஊடுருவும் பிரம்மாண்டமான ஏகாதிபத்திய – மதப்பரப்பு நிறுவனங்களைப்பற்றி எந்த பிரக்ஞையும் என்னிடமில்லை. அதைப்பற்றி எவரேனும் சொல்லியிருந்தால்கூட வெறும் சதிக்கதை என்றே சொல்லியிருப்பேன்

இந்த விழிப்புணர்வு வந்ததே இணையம் வந்தபின்னர்தான். இணையம் எங்கோ எவரோ சொல்லும் உதிரித்தகவல்களை கூட நமக்கு அளிக்கிறது. சம்பந்தமில்லாத செய்திகளை நாம் இணைத்துக்கொள்ள வழிவகைசெய்கிறது. தொண்ணூறுகளில் ஒருவர் இந்த அமைப்புகளுக்குள் உளவாளியாக நுழைந்தாலன்றி ஒரு துளி தகவலைக்கூட அறியமுடியாது. இன்று உதிரியாகவேனும் தகவல்கள் கிடைக்கின்றன

மிகச்சில மேலோட்டமான தகவல்கள்தான். ஆனால் இவை பனிமலையின் நுனியை நமக்குக் காட்டித்தருகின்றன. ஆகவேதான் போகிறபோக்கில் அன்று எஸ்.வி.ராஜதுரையின் பெரியாரிய ஆய்வுகள் கிறித்தவத் தன்னார்வக்குழுக்களின் திட்டங்களை ஒட்டியவை என்று எழுதிச்சென்றவன் இப்போது இத்தனை தீவிரமாக எழுதுகிறேன்.

நான் சொல்வது அப்பட்டமான சில தகவல்கள். உண்மையில் எதுவுமே புதியவை அல்ல. நான் அவற்றை இணைத்துக்காட்டுகிறேன், அவ்வளவுதான். இந்தியப் பண்பாட்டையும் அரசியலையும் மார்க்ஸிய நோக்கில் விளக்க எதற்காக ஏகாதிபத்திய கிறித்தவ அமைப்புகளின் ‘உதவி’? என்பதே கேள்வி. என் கேள்வி அல்ல, இடதுசாரிக்குழுக்களால் எழுப்பப்பட்ட கேள்வி. நான் அதை வழிமொழிகிறேன்

அதை மழுப்பிக்கொள்ள இந்துத்துவ குற்றச்சாட்டை மட்டுமே உங்களால் முன்வைக்கமுடியும் என்று நானும் அறிவேன். எஸ்.வி.ராஜதுரையும் அதைத்தான் சொல்வார். அப்படிச் சொல்வதே பதிலேதும் இல்லை என்ற வாக்குமூலம்தான்

ஜெ

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திரு.ராஜதுரை அவர்களுக்கு உதவும் கரங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

திரு.எஸ்.வி.ராஜதுரை அவர்கள் தங்களால் அவர் வெளிநாட்டு அமைப்புகளிலிருந்து நிதி உதவி பெற்றமையை நிரூபிக்க முடியுமா என கேட்டிருக்கிறார். இதற்கான ஆதாரங்கள், தடய பாதைகள் பொதுவாக வெகு சாமர்த்தியமாக மறைக்கப்பட்டிருக்கும். அதனை கண்டறிய முழுநேர புலனாய்வில் ஒருவர் நிறுவன ஆதரவுடன் இயங்கினால் மட்டுமே கண்டறிய இயலும். அத்தகைய ஆய்வில் ஈடுபாடுடைய இந்திய நிறுவனங்கள் எதுவுமில. இந்த நம்பிக்கைதான் திரு.எஸ்.வி.ராஜதுரை அவர்களை இத்தனை கோபாவேசத்துடன் ஆதாரத்தை கேட்டு அறைகூவலிட வைத்திருக்கிறது.

இந்நிலையில் வி.கீதாவும், எஸ்.வி.ராஜதுரையும் எழுதி வெளியிட்ட நூலான “Towards a Non-Brahmin Millennium: From Iyothee Thass to Periyar” (Samya, 1998, கல்கத்தா, பக்.vii) எனும் நூலில் நன்றிகள் கூறுகையில் சொல்கிறார், “None of this would have been possible without the support of Pradip Thomas and World Association for Christian Communication who were there at the very beginning, and who enabled us to begin work” யார் இந்த பிரதீப் தாமஸ் இந்த அமைப்பு World Association for Christian Communication எது? பிரதீப் நினன் தாமஸ் ஒருவேளை தலித்திய வாதியா அல்லது தலித் அறிஞரா? அல்லது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைப்பவரா?

அவர் குறித்த ஒரு சிறிய கூகிள் தேடலே சொல்கிறது: “Pradip was Associate Professor at the Tamilnadu Theological Seminary, Madurai, India (1987-90), where he taught communication theory and practice for an MTh course. He also helped with a post-graduate diploma course in communication offered by the Kamaraj University in Madurai.” 1990கள் வரை தலித் விசயங்களில் எவ்வித ஈடுபாடும் இல்லாத ஒரு ஊடகத்துறை இறையியல் துறை பேராசிரியர் பிரதீப். ஆனால் 1998களில் அவர் இருந்த இடம் முக்கியமானது “In 1990 he joined the WACC staff at its international headquarters in London as the person responsible for coordinating communication projects in WACC’s Asia Region. In 1995 he was appointed Director of Studies and Publications, an extensive area of work that in 2003 became the Global Studies Programme” இந்த பதவிகளில் பிரதீப் தாமஸ் இருந்த போதுதான் அவரது உதவிக்காக ராஜதுரை அவருக்கு நன்றி சொல்கிறார். ஆக எதற்கு நன்றி சொல்கிறார் என்பது தெளிவாகத்தான் இருக்கிறது. இதில் எழும் ஐயப்பாட்டை விளக்க வேண்டிய நிலையில் இருப்பவர் திரு.ராஜதுரை அவர்கள்தான் ஜெயமோகனல்ல. இது தெளிவாகவே ஜெயமோகன் கூறியுள்ள தரவை உண்மையென நிரூபிக்கும் விதமாகவே உள்ளது.

உலகமயமாகுதலுடன் கூடவே இங்குள்ள தலித் அடையாள அரசியலில் பன்னாட்டு அமைப்புகள் தூண்டில்கள் போடத் தொடங்குகின்றன. தாம் விரும்பிய விதத்தில் இந்திய எதிர்ப்புடன் இணைந்த ஒரு தலித் அடையாள அரசியலை உருவாக்கும் செயல்திட்டங்கள் உருவாகின்றன. அதன் ஒரு அடவாகவே திரு.எஸ்.வி.ராஜதுரையின் செயல்பாடும் தொடங்குகிறதாகவே கொள்ள வேண்டியுள்ளது. ஒருவித கருத்தியல்-அடையாள அரசியல் முதலிறக்குவதில் venture-capitalist களாக WACC செயல்பட்டுள்ளது. அதன் மூலம் பயனடைந்தவர் திரு.எஸ்.வி.ராஜதுரை. இனியும் திரு.எஸ்.வி.ராஜதுரை பல சமாதானங்களை முன்வைக்க முடியும். ”the support of Pradip Thomas and World Association for Christian Communication ” என்பது பண உதவியை குறித்ததே அல்ல என வாதிட முடியும். ஆனால் லண்டனில் உள்ள WACC இல் இணைந்த திரு.பிரதீப் தாமஸும் WACCயும் எப்படி நூல் வெளிவர ஆதார சாத்தியமானார்கள்? 2+2 என்பது தெளிவாகவே உள்ளது அது நான்கு என்று சொல்வதை முற்போக்கு கண்கட்டுகளை அணிந்து நிராகரிக்க நம்மில் பலருக்கு உரிமையும் உள்ளது.

அன்புடன்

பாஸ்கர்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 எஸ்.வி.ஆர் சொல்லும் ‘சிக்கல்கள்’ என்ன?

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

எஸ் வி ராஜதுரையின் எதிர்வினையும் உங்கள் பதிலும் படித்தேன். நீங்கள் அவரை அவதூறு செய்வதற்காகவே அக்கட்டுரையை எழுதியிருப்பதைப் போல பேசுகிறார். முதலில் உங்களைப் பற்றிய subjective judgement, “காந்தியவாதி என்னும் வேடத்தை அவ்வப்போது அணிந்து கொள்கிற, ஆனா……..” அவருடைய எதிர்வினைக்கு இந்த வரிகள் எப்படிப் பொருந்துகின்றன என்று புரியவில்லை. அவர் சொல்வது உண்மை என்று நிரூபிக்க உதவியாக இருக்கும் என நினைக்கிறாரா? ( இதை நீங்கள் வலைதளத்தில் வெளியிட்டால் நானும் உங்கள் ‘உபாசகர்’ ஆகி விடுவேன் இல்லையா?)

இந்திய அமைதிப் படை இலங்கையில் நடத்திய அராஜகங்களைப் பற்றிய கட்டுரையும் அதன் பின் நடந்த இணைய விவாதங்களாலும் உங்களுக்கு ஏதாவது “பிரச்சினை” வந்ததா என்ன? இவர் மிக நிச்சயமாக, நீங்கள் அந்தப் பிரச்சினையை திசை திருப்புவதற்காக இந்தக் கட்டுரையை எழுதி இருப்பதாகக் கூறுகிறார். அவ்வளவு தூரம் உங்கள் கட்டுரையின் ரிஷி மூலத்தை தெரிந்து வைத்திருப்பவர், ஒரு வருடம் முன்பே உங்கள் வலை தளத்தில் இட போதாமை காரணமாக எல்லோருக்கும் அறிவித்துவிட்டு பின்னூட்டங்கள் (comments) நிறுத்தப்பட்டதை எப்படி தெரிந்து கொள்ளாமல் போனார் என்று புரியவில்லை.

“தொடர்புடைய பதிவுகள்” எதுவும் இல்லாதது உங்கள் உள்நோக்கத்தைக் காட்டுவதாகக் கூறுகிறார். இறுதியில் அவதூறுக்காக உங்கள் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று முத்தாய்ப்பாக முடித்திருக்கிறார்.

ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது…..
(நிச்சயமாக premium pass வைத்துள்ள உபாசகன் தான் நான்!!!!!)

முத்துகிருஷ்ணன்.

அன்புள்ள முத்துகிருஷ்ணன்,

உபாசகர்களும் கொஞ்சம் தேவைதானே?

எஸ்.வி.ராஜதுரை எனக்கு ‘பிரச்சினைகள்’ வந்திருக்கும் என ஊகிப்பதற்குக் காரணம் உண்டு.

அவர் வழிநடத்தி வெளியாகும் ‘உயிர்எழுத்து’ மாத இதழில் நான் இந்திய அமைதிப்படை பற்றி எழுதிய குறிப்பின் முன்பகுதி மட்டும் எடுத்துப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. கூடவே அதற்கு பதிலாக முறிந்தபனை நூலில் இருந்து சில பகுதிகளும். அதனுடன் அவ்விதழின் ஆசிரியர் சுதீர் செந்தில் என்னை கடுமையாக வசைபாடி எழுதிய ஒரு குறிப்பும் இருந்தது.

இதழ் வந்த சிலநாட்களுக்குள் எனக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. செல்பேசியை எடுத்ததுமே காது கூசும் வசைகள். வேறுவேலையில் இல்லை என்றால் வசைபாடுபவர்கள் அனைவரிடமும் நான் பேசினேன். முக்கால்வாசிப்பேருக்கு நான் யாரென்றே தெரியவில்லை. என்னை இதழாளர் என்று நினைத்தார்கள். பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. என்றுகூட ஒருவர் சொன்னார்.

என்னுடைய எண் எப்படிக் கிடைத்தது என்று கேட்டேன். ‘எஸ்.எம்.எஸ். வந்திச்சி. கூப்பிட்டு கண்டியுங்கன்ன்னு சொன்னாங்க…அதான்’ என்றார்கள். அவர்களுக்கு உயிரெழுத்து இதழோ எஸ்.வி.ராஜதுரையோ சுதீர்செந்திலோ கூட யாரென்று தெரிந்திருக்கவில்லை.

கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் உள்ள எல்லா தமிழ் அமைப்புகளுக்கும் என்னுடைய செல்பேசி எண்ணை குறுஞ்செய்தியாக அனுப்பியிருக்கிறார்கள் எஸ்.வி.ராஜதுரையும் சுதீர் செந்திலும். கண்டிக்கும்படி கோரி தொலைபேசியில் மன்றாடியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டுவாரம் இருநூறு அழைப்புகள் வரை வந்தன. வசைகளை கேட்பதை ஒரு பயிற்சியாகவே வைத்திருக்கிறேன் என்பதனால் நான் அதை பெரிய விஷயமாக நினைக்கவில்லை.

மேலும் அப்படி அழைத்தவர்கள் பலருடைய உணர்ச்சிகள் நேர்மையானவை. அவர்கள் அறிந்த தகவல்களைக்கொண்டு அவர்கள் மிகையுணர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஒருவர் ஒரு பொதுவிஷயத்துக்காக உண்மையிலேயே கோபம் கொள்கிறார் என்றால் அது என்னவாக இருந்தாலும் மரியாதைக்குரியதே. அதிலும் இலங்கை அழிவுக்கு எதிராக தமிழகம் கொண்டிருந்த ஆழமான புறக்கணிப்பை ஒப்பிடும்போது இந்த தனிக்குரல்களில் உள்ள உணர்ச்சிவேகம் எனக்கு நிறைவையே அளித்தது.

இரண்டுவாரம் கழித்து அப்படி அழைத்தவர்களில் கணிசமானவர்கள் என்னை அவர்கள் அமைப்புகளில் உரையாற்ற அழைத்தார்கள். எல்லாருமே என் இணையதளத்தில் திருக்குறள் பற்றிய கட்டுரையை மட்டுமே படித்திருந்தார்கள். திருக்குறள் ஒரு சனாதனநூல் அல்ல என்று நான் பேசி நிரூபிக்கவேண்டும் என்று கோரிக்கைகள். பேசுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

என்னுடைய எண் சுதீர் செந்திலுக்கு நான் நட்பு முறையில் கொடுத்தது. அவரது சிந்தனைகள் எதுவாக இருந்தாலும் நான் அவரை நட்புடன் மட்டுமே நினைத்திருந்தேன். பலவருடங்களுக்கு முன்னர் அவரே முன்வந்து சொல்புதிதுக்கு உதவுவதாகச் சொன்னார். ’மனுஷ்யபுத்திரனை நான் உருவாக்கினேன். அவன் இப்ப காலச்சுவடோட சேந்துட்டான். காலச்சுவடுக்கு போட்டியா நாம சொல்புதிதை கொண்டு வரணும்’ என்றார். அவரது முதிரா உணர்ச்சிகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை, அப்போதும் நான் மனுஷ்யபுத்திரனுக்கு நண்பனாகவே இருந்தேன். ஆனால் எனக்கு உதவிகள் தேவைப்பட்டன.

மருதம் என்ற இணைய இதழை ஆரம்பிப்பதாகவும் அதற்கான எல்லா செலவுகளையும் அவரே ஏற்றுக்கொள்வதாகவும் சொன்னார். மருதத்தின் செலவில் சொல்புதிதையும் நடத்துவதாக திட்டம். மருதத்துக்கு அவர் ஒரு டொமெய்ன் பதிவுசெய்து கொடுத்தார். உண்மையில் அவர் தன் கட்டுமானத் தொழிலுக்காக உருவாக்கியிருந்த டொமெய்னில் ஒரு சிறுபகுதியையே மருதத்துக்காக ஒதுக்கினார். அது எனக்கு அன்று தெரியாது.

அவர் கொடுத்த வாக்குறுதியை நம்பி மருதத்தை பெரிய அளவில் ஆரம்பித்தோம். அன்றைய காலகட்டத்தில் மருதம் அளவுக்கு பெரிய இணைய இதழ் ஏதும் இருக்கவில்லை. அன்று எனக்கு கணிப்பொறி இல்லை என்பதனால் அதிலுள்ள பெரும்பாலான கட்டுரைகள் நாகர்கோயில் சரோஜினி கம்ப்யூட்டர்ஸ் என்ற நிறுவனத்தில் பக்கம் ஒன்றுக்கு இருபதுரூபாய் செலவில் தட்டச்சு செய்யப்பட்டன. ஒரு முழுநேர ஊழியரும் நியமிக்கப்பட்டார். ஆனால் அதன்பின் சுதீர் செந்தில் வாக்களித்தபடி ஒரு பைசாகூட தரவில்லை. நான் அவர் தருவார் என நம்பி என் செலவில் மருதத்தை ஓருசில இதழ்கள் நடத்தியபடி சென்றேன்.

சுதீர் செந்தில் மருதம் அடங்கிய தன் டொமெய்னுக்கு ஆறுமாதம் மட்டுமே பணம் கட்டியிருந்தார். மேற்கொண்டு பணம் கட்டவில்லை. ஆகவே ஒருநாள் காலையில் திடீரென்று மருதம் நின்றுவிட்டது. எனக்கோ அந்த ஊழியருக்கோ இதைப்பற்றி ஒன்றும் தெரியாது. ஆகவே எந்த உள்ளடக்கத்துக்கும் ஃபீட்பேக் எடுத்து வைத்துக்கொள்ளவில்லை.

அவ்விதழில் மிகமுக்கியமான பல கட்டுரைகள் இருந்தன. என் நண்பர் சோதிப்பிரகாசம் இந்திய அரசியல் சட்டம் பற்றி, ஓநிக்ஸ் துப்புரவு இயக்கம் பற்றி, ஹெகல்-குரோச்சே பற்றி, மார்க்ஸிய மெய்யியல் பற்றி நிறைய எழுதியிருந்தார்.

அதேபோல குமரிமைந்தன் தமிழ்த்தேசியம் பற்றி மிகவிரிவான கட்டுரைகள் எழுதியிருந்தார். எல்லா கட்டுரைகளும் அழிந்தன. அவர்கள் பிரதி வைத்துக்கொள்பவர்கள் அல்ல. நான் எனக்களிப்பக்கப்பட்ட கைப்பிரதிகளை பாதுகாக்கவுமில்லை. ‘சரிதான் போகட்டும் தோழர்’ என்று அவர்கள் சொன்னாலும் இழப்பு என்னை இன்றும் உறுத்திக்கொண்டே இருக்கிறது.

விசாரித்தபோது சுதீர் செந்தில் உண்மையில் கட்டுமானத்தொழிலில் பெரும் நிதிச்சிக்கலில் இருப்பதாகத் தெரிந்தது. ஆகவே அதை நான் பெரிதுபடுத்தவில்லை. அந்த ஊழியரிடம் பேசி அவரது ஊதியத்தை பாதியாகக் குறைத்து சொல்புதிதின் நிதியிலிருந்து சமன்செய்து மீண்டேன். சொல்புதிது கொஞ்சநாள் நின்றபின் நண்பர் சதக்கத்துல்லா ஹசனீ அவர்கள் உதவியுடன் மீண்டும் வந்தது.

பின்னரும் சுதீர் செந்தில் என்னுடைய நண்பராகவே இருந்தார். மனுஷ்யபுத்திரனிடம் சண்டை போட்டு அவர் விலகி உயிரெழுத்து ஆரம்பித்தபோது அதில் தொடர்ந்து எழுதும்படி என்னைக்கோரினார். நான் அச்சு இதழ்களில் எழுதும் மனநிலையிலேயே இருக்கவில்லை. ஆனால் அவ்விதழை அறிமுகம் செய்தும் அதில் எனக்கு முக்கியம் என்று பட்ட படைப்புகள் வெளிவந்தபோது பாராட்டியும் எழுதினேன். அதில் மனுஷ்யபுத்திரன் கடுமையான வருத்தம் கொண்டார் என்றாலும் நான் என் சமநிலைக்கே விசுவாசமாக இருந்தேன்.

ஆக, ஒரு நீண்ட நட்பின் அடிப்படையில் அளிக்கப்பட்ட தொலைபேசி எண் அது. அதை இப்படி பரப்புவதென்பது மிகமிக அறமில்லாத ஒரு செயல். தன் கருத்தை அவர் எழுதியதில் பிழையில்லை, சரி வசைபாடியதுகூட ஒரு உணர்ச்சியின்பாற்பட்டதாக இருக்கலாம். ஆனால் பிறர் வசைபாட ஏற்பாடு செய்வதென்பது எந்த நியாயத்தின் பெயரிலானாலும் கீழ்மை. இதையே நான் அவருக்கும் செய்யமுடியும். நான் ஒருபோதும் செய்யப் போவதில்லை.

எஸ்.வி.ஆர். தன் கடிதத்தில் எனக்கு அவர் ‘சிக்கல்களை’ உருவாக்கியதாக கொக்கரிப்பது சுதீர் செந்தில் வழியாக அவர் செய்த இந்த சில்மிஷங்களை மட்டுமே. இதைச்செய்வதன் வழியாக எனக்கு என்னதான் ஆகப்போகிறது? வசை விழலாம். சரி, நாலைந்து அடிகூட விழலாம். அதனால் என்ன?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எஸ்.வி.ராஜதுரையின் கடிதமும் பதிலும்

ஜெயமோகன்

எனது எதிர்வினையைப் பிரசுரித்து விட்டு, மிக சாதுரியமான வார்த்தைகளால் என் மீது உங்கள் வளைத் தலத்தில் 20.6.2012 அன்று நீங்கள் செய்துள்ள அவதூறை மறைக்கவும் மறுக்கவும் முயற்சி செய்திருக்கிறீர்கள்.

23.06.2012 அன்று உங்கள் வளைத் தளத்தில் எழுதுகிறீர்கள்:

“நான் ‘எஸ்.வி.ராஜதுரை ஃபோர்டு பவுண்டேஷனில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு எழுதினார்’ என்று எழுதியிருக்கிறேனா என்ன? அந்த வரி, அல்லது அப்படிப் பொருள் அளிக்கும் வரி என் கட்டுரையில் எங்கே உள்ளது?”

“நான் அக்கட்டுரையிலேயே சுட்டிக்காட்டியபடி நிதியுதவிகள் பெரும்பாலும் பலவகையான அறிவார்ந்த நோக்கங்கள் சொல்லப்பட்டு விதவிதமான பண்பாட்டுஅமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழியாகவே அளிக்கப்படுகின்றன. எம்.டி.முத்துக்குமாரசாமி போல உள்ளிருந்தே ஒருவர் சுட்டிக்காட்டும்போதே நமக்கு உண்மை தெரிகிறது. இல்லையேல் வாய்ப்பே இல்லை.

“அந்த பிற நிதியுதவிகளைச் சுட்டிக்காட்டும்போது காலச்சுவடு, கிரியா, நீங்கள் என மூன்று பெயர்களையும் எடுத்துச்சொல்லி நான் பேசியமைக்குக் காரணம் நீங்கள் மூன்று தரப்பும்தான் உங்கள் நூல்களிலேயே பெற்றுக்கொண்ட நிதியைப்பற்றிய குறிப்புகளை அளித்திருக்கிறீர்கள் என்பதுதான்.

“உங்களுடைய ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலின் முதற்பதிப்பின் நான்காம் பக்கத்தில் சிறிய எழுத்துக்களில் அதன் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுக்காக நிதியுதவி செய்த அமைப்பின் பெயர் அதிகாரபூர்வமாகவே குறிப்பிடப்பட்டிருந்தது.”

இப்போது,ஜெயமோகன், உங்கள் வளைத்தளத்தில் 20.6.2012 அன்று நீங்கள் எழுதிய வரிகளை இங்கே மேற்கோள் காட்ட விரும்புகிறேன்:

“ஃபோர்டு பவுண்டேஷனின் பெருநிதிக் கிழவரான எம்.டி.முத்துக்குமாரசாமி காலச்சுவடுக்கு நிதியளித்த ஒரு நிறுவனத்தின் மூலநிதி ஃபோர்டு பவுண்டேஷன் அளித்ததே என வெளிப்படுத்தியிருக்கிறார்.மாறிமாறி இவ்வாறு வெளிப்படுத்துவார்கள் என்றால் நல்லதுதான் என்றே நான் நினைக்கிறேன். தமிழில் க்ரியாவும் காலச்சுவடும் எஸ்.வி.ராஜதுரையும் எல்லாம் பெற்ற பணத்தின் அளவு சராசரி வாசகனுக்கு கொஞ்சம் பிரமிப்பைத்தான் அளிக்கும்.நாம் சாதாரணமாக வாசித்துச்செல்லும் கருத்துக்களுக்கு இவ்வளவு பணமதிப்பா என நாம் வியப்போம். அடுத்தமுறை கொஞ்சம் கவனமாகவே புத்தகங்களை புரட்டிப் பார்ப்போம்”.

லீனா மணிமேகலைக்கும் காலச்சுவடு கண்ணனுக்கும் நடக்கும் சர்ச்சைகள் குறித்து நீங்கள் எழுதியுள்ளவற்றின் பகுதியாக அமைந்துள்ள இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம்? ·போர்ட் ·பவுண்டேஷனிடமிருந்தோ அல்லது இது போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்களிலிருந்தோ நான் பணம் பெற்றுள்ளேன்,அதுவும் ‘சராசரி வாசகனுக்கு கொஞ்சம் பிரமிப்பை அளிக்கும் அளவு’க்கு பெற்றுள்ளேன் என்பதுதானே நீங்கள் எழுதியுள்ள வரிகளுக்கு அர்த்தம்?

இது என் மீது செய்யப்பட்ட அவதூறு அல்ல என்று கூறுகிறீர்கள். “நான் ‘எஸ்.வி.ராஜதுரை ஃபோர்டு பவுண்டேஷனில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு எழுதினார்’ என்று எழுதியிருக்கிறேனா என்ன? அந்த வரி, அல்லது அப்படிப் பொருள் அளிக்கும் வரி என் கட்டுரையில் எங்கே உள்ளது?” என்று கேட்கிறீர்கள்.

எனது எதிர்வினையில் நான் எழுப்பிய கேள்வி இதுதான்: “அவருக்கு (ஜெயமோகனுக்கு) நேர்மை இருக்குமானால்,நான் எழுதுபவற்றுக்கு ·போர்ட் ·பவுண்§டேஷனிலிருந்தோ,வேறு எந்த நிறுவனத்திலிருந்தோ எப்போது, எவ்வளவு பணம் தரப்பட்டது என்பதையோ, அந்தப் பணத்திற்குக் கைமாறாக எனது எழுத்துகளின் உள்ளடக்கம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதையோ தக்க சான்றுகளுடன் மெய்ப்பிக்க வேண்டும். அவருக்கு இன்னும் ஒரு வார கால அவகாசம் தர விரும்புகிறேன்”.

வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்டு பெரியார் பற்றிய நூலை நானும் வ.கீதாவும் எழுதிய பிறகுதான் இந்திய தேசி¢யம், இந்துப் பண்பாடு, நேரு, காந்தி போன்றோரை இழிவுபடுத்தும் ‘இந்து இந்தி இந்தியா’போன்ற நூல்களை நான் எழுதத் தொடங்கியதாகக் கூறுகிறீர்கள். இந்த்துத்துவ எதிர்ப்பை வெளிப்படுத்துகிறவர்களுக்கு வெளிநாட்டு நிதி உதவிகள் கிடைக்கின்றன என சங் பரிவாரம் கூறி வரும் கருத்தை ஒத்ததுதான் இது. உண்மையில் ‘இந்து இந்து இந்தியா’ நூல் வெளிவந்ததோ 1993இல். பெரியார் குறித்து நான் தனியாகவோ,வ.கீதாவுடன் இணைந்தோ எழுதிய நூல்கள் 1996இல் இருந்துதான் வெளியாகின.அதற்கு முன்பு, அயோத்திதாசர் குறித்தும் திராவிட இயக்கங்கள் குறித்தும் இந்துத்துவம் குறித்தும் நாங்கள் ஆங்கிலத்தில் சில கட்டுரைகள் எழுதியுள்ளோம்.

எனது புத்தகங்களைப் பற்றியோ, கருத்துகளைப் பற்றியோ நீங்கள் கொண்டிருக்கும் கருத்துகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அவற்றைக் குப்பைக்கட்டு எனத் தூக்கியெறிவது உங்கள் கருத்துச் சுதந்திரம்.

ஆனால்,’சராசரி வாசகர்களுக்குக் கொஞ்சம் பிரமிப்பை அளிக்கும் அளவுக்கு’ நான் ஏதேனும் ஒரு நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுள்ளதாக நீங்கள் சொல்லும் ‘அவதூறுக்கு’ (உங்களைப் பொருத்தவரை இது வெறும் தகவலோ,கருத்தோ மட்டுமதான்) நிரூபணமாக நீங்கள் கீழ்க்கண்டவற்றைச் சொல்கிறீர்கள்:

“உங்களுடைய ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலின் முதற்பதிப்பின் நான்காம் பக்கத்தில் சிறிய எழுத்துக்களில் அதன் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுக்காக நிதியுதவி செய்த அமைப்பின் பெயர் அதிகாரபூர்வமாகவே குறிப்பிடப்பட்டிருந்தது.”

என் மீது நீங்கள் சுமத்தியுள்ளது அவதூறு அல்ல, தக்க சான்றாதாரங்களின் அடிபபடையில் முன் வைக்கப்படும் தகவல் மட்டுமே என்று எனது எதிர்வினைக்குப் பிறகே மேற்சொன்ன வரிகளை எழுதியுள்ளீர்கள். இதை உங்கள் சொந்த அறிவைக் கொண்டு அல்ல, வேறு யாரோ தந்த தகவலின் அடிப்படையில்தான் எழுதியிருக்கிறீர்கள். ஏனெனில் ‘விடியல் பதிப்பகம்’ 1996இல் வெளியிட்ட ‘பெரியார்:சுயமரியாதை சமதர்மம்’ நூலின் முதல் பதிப்பில் உள்ள எங்கள் முன்னுரையின் ix-xiஆம் பக்கங்களில் எங்கள் நூலின் ஆக்கத்திற்குப் பல்வேறு வகைகளில் உதவிய நண்பர்கள், சமூக செயலார்வலர்கள் ஆகியோரின் பெயர்களைப் பதிவு செய்துள்ளோம். இந்தப் பெயர்களில் எந்த உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரும் இல்லை. உங்களால் ‘குப்பைக் கட்டு’ என்று கருதப்படும் இந்த முதல் பதிப்பைத் தேடிக் கண்டுபிடிப்பது உங்களைப் போன்ற சாமர்த்தியசாலிகளுக்குக் கடினமானதல்ல.

இருப்பினும், நான் இந்த விடயத்தை இத்துடன் முடித்துக் கொண்டு தப்பி ஓட விரும்பவில்லை. துப்பறியும் பணியில் ஈடுபட வைத்து உங்களை சிரமப்படுத்த விரும்பாததாலும் நீங்கள் எல்லோரிடமிருந்தும் எதிர்பார்க்கும் ஒளிவுமறைவற்ற தன்மையை நானும் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதாலும், உங்களுக்குக்கு நானே ஒரு தகவலைத் தர விரும்புகிறேன். வ.கீதாவும் நானும் Towards a Non-Brahmin Milennium:From Iyothee Thass to Periyar’ என்னும் நூலின் முதல் பதிப்பின் (1998இல் கல்கத்தாவிலுள்ள ‘சாம்யா’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது) viiஆம் பக்கத்தில் அந்த நூலை எழுதுவதற்கான எங்களது ஆராய்ச்சிக்கும் ஆக்கத்திற்கும் உதவியவர்கள் என்ரு ஒரு பெரிய பட்டியலையே தந்திருக்கிறோம். அதில் உள்ள வரிகளிலொன்று: “None of this would have been possible without the support of Pradip Thomas and World Association for Christian Communication who were there at the very beginning, and who enabled us to begin work”.

ஜெயமோகன், இந்தத் தகவலுக்கு உங்கள் கற்பனை வளத்துக்கேற்ப விளக்கம் தந்து கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு. எனினும், எனது முதல் எதிர்வினையில் நான் கேட்ட கேள்வியை நான் மாற்றிக் கொள்ளவில்லை: “ஜெயமோகனுக்கு நேர்மை இருக்குமானால்,நான் எழுதுபவற்றுக்கு ·போர்ட் ·பவுண்§டேஷனிலிருந்தோ,வேறு எந்த நிறுவனத்திலிருந்தோ எப்போது, எவ்வளவு பணம் தரப்பட்டது என்பதையோ, அந்தப் பணத்திற்குக் கைமாறாக எனது எழுத்துகளின் உள்ளடக்கம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதையோ தக்க சான்றுகளுடன் மெய்ப்பிக்க வேண்டும்.”

உங்களது அவதூறை சட்டரீதியாக எதிர்கொள்ள எனக்கு இன்னும் வாய்ப்பி¢ருக்கிறது

எஸ்.வி.ராஜதுரை

எஸ்.வி.ஆர் அவர்களுக்கு,

சாமர்த்தியமான எதிர்வினை என்கிறீர்கள். நீங்கள் என் மீது சுமத்திய கூடங்குளம் பற்றிய அவதூறை அப்படியே தாண்டிச்சென்றதையே நான் சாமர்த்தியம் என்கிறேன். அதை உங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ளமுடியவில்லை. ஏனென்றால் என்னிடம் ஒளிக்க ஏதுமில்லை.

உண்மையில் என்னைப்போன்ற ஒருவர் செய்யக்கூடாத பணியை ஒரு உந்துதலின் விளைவாக காமா சோமாவென்றுசெய்துகொண்டிருக்கிறேன். முறையான ஆய்வோ தகவல்சரிபார்ப்போ இல்லாமல் என்னுடைய நினைவுகளையும் மனப்பதிவுகளையும் கொண்டு கருத்துச் சொல்கிறேன். இதிலுள்ள அபாயங்கள் தெரியும். பிழை வந்தால் வரட்டும், ஆனால் மனமறிந்த உண்மையை சொல்லிப்பார்ப்போமே என்ற துணிவுதான் என்னுடையது. எந்நிலையிலும் என்னுடைய சொந்த நேர்மையை மட்டுமே நான் ஆதாரமாக கொள்கிறேன். எந்த மேடையிலும் அதையே முன்வைக்கிறேன்.

ஏனென்றால் நான் நன்றாக அறிந்த ஒரு உண்மையை பொது விவாதத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். இந்தியாவில் இன்று புழங்கும் கருத்துக்கள் பலவற்றுக்குப்பின்னால் பல்வேறு நிதியுதவிகள் இருக்கின்றன. அவற்றை விவாதிக்காமல் கருத்துக்களை விவாதிப்பது வீண்வேலை. அவ்வாறு நிதியூட்டப்பட்ட கருத்துக்கள் பெரும்பாலும் இந்தியாவில் ஏதேனும் வகையில் பிரிவினையை, பிளவுகளை உருவாக்கக்கூடியவை. நீண்டகால அளவில் பெரும் வன்முறைக்கும் மானுட அழிவுக்கும் வழிவகுக்கக்கூடியவை.

அவை மானுட உரிமைகள், சமூகநீதி என பல்வேறு போலி முற்போக்கு வேடங்களில் வருகின்றன. அவற்றைப்பற்றிய எச்சரிக்கை நம் சமூகத்துக்கு அவசியம். உண்மையான மானுட உரிமைகள் ,சமூகநீதி ஆகியவற்றுக்கான போராட்டங்களில் இருந்து அவற்றை நாம் பிரித்துக்காண வேண்டும். அவற்றின் லேபிள்களை மட்டும் கவனித்தோமென்றால் அவை நம்மை மாபெரும் மானுட அழிவை நோக்கியே கொண்டுசெல்லும். அந்த அழிவில் குளிர்காய நினைக்கும் ஏகாதிபத்திய சக்திகளால் அவை இங்கே வளர்க்கப்படுகின்றன.

அவை பற்றிய தகவல்கள் மிகமிகக் குறைவே. நிரூபிக்கப்படத்தக்க தகவல்கள் அபூர்வம். ஏனென்றால் இந்த மாபெரும் சர்வதேச நிதிவலைப்பின்னலை நம் அரசுகள் கூட இன்னும் ஊடுருவவில்லை. ஆனாலும் அவற்றைப்பற்றி பேசுவதன் மூலம் நான் உருவாக்க விரும்பும் விளைவுகள் இரண்டு. ஒன்று, இப்படி ஒரு விஷயம் நிகழ்கிறதென்றே தெரியாமல் , தெரிந்தும் நம்பாமல் இருக்கும் பெரும்பான்மை வாசகர்களிடம் இதைப்பற்றி ஒரு விவாதத்தை உருவாக்குகிறேன். இரண்டு, சம்பந்தப்பட்டவர்கள் சிலரேனும் சுயவிளக்கமளிக்கும் கட்டாயத்தை உருவாக்குகிறேன்.

ஆகவேதான் இவற்றைப்பற்றி பேசுகிறேன். போதாத தகவல்களுடன். பெரும்பாலும் ஊகங்களுடன். ஆனால் இது ஒரு தொடக்கமே. இது தொடங்கிவிட்டால் ஆராய்ச்சித்திறனும் அதற்கான வாய்ப்புகளும் உடையவர்கள் உள்ளே வருவார்கள்.

*

நேற்று உங்களுக்கான எதிர்வினையை வைத்ததுமே நள்ளிரவிலேயே நண்பர்கள் சொன்னார்கள் பெரியார் பற்றிய அந்த நூலில் -ஆம் அந்த குப்பைக்கட்டில் – நான் சொன்ன தகவல் இல்லை என. ஆனால் என் நினைவில் தகவல் இருந்தது, நான் அதற்கு எதிர்வினையும் ஆற்றியிருக்கிறேன். அதை திடமாகவே நம்பினேன். ஆனால் மூளையிலிருந்து வெளியே எடுக்கமுடியவில்லை.

ஆகவே முதன்முதலில் என்னிடம் இந்த விவகாரத்தைப்பற்றிப் பேசிய நண்பரிடமே கேட்டேன். அவர் இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். WACC யுடன் தொடர்பு கொண்டிருந்த இறையியலாளராக இருந்தவர். இன்று நாத்திகர். அவர்தான் உங்கள் நூலைச் சுட்டிக்காட்டினார். ஆம் நீங்கள் குறிப்பிட்ட நூலேதான். Towards a Non-Brahmin Milennium:From Iyothee Thass to Periyar.

என்னுடைய நினைவுக்குழப்பத்துக்கு முக்கியமான காரணம் இந்த அமைப்பின் உதவி உங்களுக்கு பெரியார் பற்றிய நூலுக்காகவே அளிக்கப்பட்டது என்றும் அதற்கும் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக உங்களுக்கு அவ்வமைப்புடன் தொடர்பிருந்தது என்றும் அந்நண்பர் முன்பு எனக்கு சொல்லியிருந்ததுதான்.. ஆங்கிலத்தில் நீங்கள் எழுதிய Towards a Non-Brahmin Milennium:From Iyothee Thass to Periyar. என்ற நூல் தமிழில் எழுதிய நூல்களை மறுஆக்கம் செய்தது என்ற நிலையில் அது இப்போதும் தர்க்கபூர்வமாகச் சரிதான்.

கிட்டத்தட்ட ஒரே விஷயங்களைப் பேசும் நூல்களில் ஆங்கிலநூலில் நீங்கள் WACC யை குறிப்பிட்டாகவேண்டிய கட்டாயமிருந்தது. அந்தக்குறிப்புதான் அந்நூலை மேலைநாட்டு பல்கலைகளுக்கு கொண்டுசென்று சேர்க்கும்.

இனிமேல் உங்களைப்பற்றி முடிவெடுக்கவேண்டியது உங்கள் முற்போக்குமுகத்தை நம்பும் உங்கள் வாசகர்களின் மனசாட்சிதான். மிக எளிதாக வார்த்தைகளைப்போட்டு எல்லாவற்றையும் நியாயபடுத்திவிடமுடியும்தான். அப்படி இல்லை இப்படி என்றெல்லாம் வாதிடலாம்தான். ஆனால் தன் மக்கள் மீதும் தன்னுடைய கொள்கைமீதும் நம்பிக்கை கொண்ட ஒரு இடதுசாரி உதவிபெறவேண்டிய தகுதிகொண்ட நிறுவனம்தானா WACC என அவர்கள் அந்தரங்கமாக முடிவுசெய்யட்டும்.

மிகமிக மென்மையாக அவர்களாலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் சொற்களை மேற்கோள்காட்டியே சொல்வதென்றால் The World Association for Christian Communication (WACC) என்பது ஒரு சர்வதேச தன்னார்வ நிறுவனம். அதன் தலைமையகம் கனடாவிலும் பிரிட்டனிலும் இருக்கிறது. நிதியாதாரங்கள் அமெரிக்காவிலும் பரந்து கிடக்கின்றன. உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழைநாடுகளில் மதப்பரப்ப்புவேலைகளில் ஈடுபட்டுள்ள இந்த அமைப்பு 1500 க்கும் மேற்பட்ட துணை அமைப்புகளைகொண்ட ஒரு குட்டி அரசாங்கம். அதன் ஒட்டுமொத்த ஊழியர்கள் கிட்டத்தட்ட லட்சம்பேர்.

எந்தத் தன்னார்வ நிறுவனத்தைப்போலவும் WACC யின் அறிவிக்கப்பட்ட இலக்கு என்பது மானுட உரிமைகளுக்காக குரல்கொடுப்பதும் சமூகநீதியை உருவாக்குவதும்தான். ஆனால் தெளிவாகவே அவற்றை கிறித்தவ விழுமியங்களாக அவ்வமைப்பு கருதுகிறது. அதற்காக மட்டுமே அது போராடுகிறது. வறுமையும் உள்நாட்டுப்போரும் ஓங்கிய, ஆனால் கனிவளம் மிக்க, ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் லத்தீனமேரிக்காவிலும் தன் கிளைகளை விரித்துக்கொண்டு செயல்படும் WACC அளவுக்கு செல்வமும் செல்வாக்கும் கொண்ட அமைப்புகள் உலகில் மிகக்குறைவே

1950களில் இடதுசாரி கருத்துக்கள் உலகமெங்கும் பரவியபோது அதற்கு எதிராக கிறித்தவ மதக்கருத்துக்களைப் பிரச்சாரம்செய்யும்பொருட்டு உருவான அமைப்பு WACC . ஏற்கனவே தனித்தனியாகச் செயல்பட்டுவந்த பல்வேறு கிறித்தவ மதப்பிரச்சார அமைப்புகள் இந்த பொதுக்குடைக்கீழ் இணைந்தன. World Council of Churches போன்ற மாபெரும் தேவாலயக்கூட்டமைப்புகள் இந்த அமைப்புக்கு துணைச்சக்தியாகச் செயல்பட்டன. பின்னர் அவை இவ்வமைப்பில் இணைந்துகொண்டன.

1959ல் கேரளத்தின் முதல் கம்யூனிஸ்டு அரசைக் கலைத்ததில் இந்த அமைப்பின் பெரும்நிதியுதவி இருந்தது என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் வடகிழக்குப்பகுதிகளில் பிரிவினைவாத, இனவாத இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணிச்சக்தியாகவும் இந்த அமைப்பு குறிப்பிடப்படுகிறது. இந்த அமைப்பு உலக அளவில் பல்வேறு வகையான பதற்றங்களையும் வன்முறைகளையும் உருவாக்கியிருக்கிறது என்கிறார்கள்.

ஆப்ரிக்காவின் பலநாடுகளில் கிறித்தவதேசியவாதம் முளைத்தெழவும் அவை இஸ்லாமியதேசியங்களுடன் மோதி வன்முறைகள் வெடிக்கவும் இவ்வமைப்பு காரணமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக நைஜீரியாவில் பயாஃப்ரா என்ற கிறித்தவதேசிய இயக்கம் உருவாகி உலகின் மாபெரும் மானுட அழிவுகளில் ஒன்று நிகழ இவ்வமைப்பின் நிதி மற்றும் கருத்தியல் பின்னணி உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது

[உங்களுக்கும் தெரிந்திருக்கும். இன்று நைஜீரியா உள்நாட்டுப்பிரச்சினைகளை ஓரளவு தீர்த்துக்கொண்டு தன்னுடைய பெட்ரோலியத்தை கொள்ளையிட்டுச்செல்லும் ஐரோப்பியநாடுகளுடன் முரண்பட்டு வினவ முனைகிறது. அதற்கு பதிலடியாக பயாஃப்ரா கிறித்தவக் குடியரசை உயிர்த்தெழச்செய்ய முயல்கின்றன ஐரோப்பியநாடுகள். பயாஃப்ரா குடியரசுக்கான போராட்டத்தின் புண்களை கிளறும் நோக்கமுடைய சிமொண்டா அடிச்சியின் நாவலை [Half of a Yellow Sun ,Chimamanda Adichie] அவை விருதுக்குமேல் விருதாகக் கொடுத்து உலகமெங்கும் தூக்கிப்பிடிக்கின்றன. அந்தக்குப்பையை ஒரு மாபெரும் மானுட ஆவணம் என்று விசுவாசமாக புகழ்ந்து நீங்களும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறீர்கள்]

லத்தீனமேரிக்காவில் இடதுசாரி இயக்கங்கள் உருவானபோது அவற்றுக்கு எதிராக கிறித்தவ பிரச்சாரம்செய்ய WACC பெரும் நிதியையும் முயற்சியையும் செலவிட்டது. அதற்காக உருவாக்கப்பட்ட போலி புரட்சிச் சிந்தனையான விடுதலை இறையியல் அதன் சிருஷ்டி என்று சொல்லப்படுகிறது. இன்று அதைப்பற்றி மிகவிரிவான தக்வல்கள் வெளிவந்துள்ளன.

ஒட்டுமொத்தமாக WACC யின் செயல்பாடுகள் என்ன? அவர்களே அறிவித்துக்கொள்ளும் செயல்திட்டங்கள் இவை. முக்கியமாக ஊடகங்களைக் கைப்பற்றுதல். அவற்றில் கிறித்தவக்கொள்கைகளை ஊடுருவச்செய்தல். பல்வேறு பண்பாடுகளை கிறித்தவப்பிரச்சாரத்துக்கு உகந்தவகையில் மாற்றி எழுதுவதற்கு ஊக்கமளித்தல். அப்பண்பாட்டுத்தகவல்களை தொகுத்து சர்வதேசத்தன்மை கொண்ட ஒரு தகவல்களஞ்சியத்தை உருவாக்குதல். அவற்றைக்கொண்டு கிறித்தவ மதப்பரப்பலுக்கு உகந்த கொள்கைகளை வடிவமைத்தல்.

அதை இப்படிச் சொல்லலாம். இந்தியா போன்ற நாடுகளில் உள்ள ஒட்டுமொத்த பொதுச்சிந்தனைகளையும் ஊடுருவுதல். செய்திகளில், வரலாற்று ஆய்வுகளில், அரசியல் சொல்லாடல்களில், கல்விப்புலங்களில் தங்கள் கருத்துக்களை நுழைத்தல். தங்களுடைய நீண்டகால திட்டங்களுக்கு ஏற்ப பண்பாட்டாய்வுகளையும் அரசியலாய்வுகளையும் திரித்து வடிவமைத்தல்.

அதற்காக எல்லா இடங்களிலும் அவர்கள் ஆட்களைக் கண்டடைகிறார்கள். அவர்களுக்கிருக்கும் செல்வவளம் என்பது நினைத்துப்பார்ப்பதற்கரியது. ஒருவேளை இந்திய அரசின் வரவ்செலவு கணக்கைவிடப்பெரியது அது. அந்தப்பணத்தை பல்வேறு வழிகளில் அவர்கள் பகிர்ந்தளிக்கிறார்கள். நூலாய்வுகளுக்கு நூலாக்கங்களுக்கான நிதியுதவிகள், கருத்தரங்குகளில் கட்டுரை படிப்பதற்கான அழைப்புகள். அவற்றின் நிதியளிக்கைகள் ஒருபோதும் பொதுப்பார்வைக்கு வைக்கப்படுவதில்லை. இந்தியா போன்ற அரசுகள் எளிதில் அவற்றை பெறுவதும் சாத்தியமல்ல.

எஸ்.வி.ஆர் சொல்லுங்கள், WACC யின் மேலே சொன்ன எந்த நோக்கங்களுடன் நீங்கள் ஒத்துழைத்தீர்கள்? அப்படி ஒத்துழைக்காவிட்டால் எதற்காக அவர்கள் உங்களுக்கு உதவினார்கள்? ஒரு ’மார்க்ஸிய களப்போராளி’ ஒத்துழைக்கவேண்டிய, உதவிபெற்றுக்கொள்ளவேண்டிய அமைப்புதானா அது?

உலகமெங்கும் WACC செய்வதென்ன என்பதை மிக எளிதாக ஒருவர் இணையம் மூலமே வாசித்து மேலே ஊகிக்க முடியும். ஒன்று நிதியுதவிகள் மூலம் தங்கள் ஆதிக்கத்தை பரப்பத்திட்டமிட்டுள்ள நாடுகளின் பண்பாட்டாய்வுகளை எழுதச்செய்கிறார்கள். பின்னர் அந்நூல்களை அப்பண்பாடுகளுக்கான ஆவணமாக, ஆதாரநூல்களாக எடுத்துக்கொள்கிறார்கள். அந்நூல்களை மேற்கோள்காட்டி அப்பண்பாடுகளைப்பற்றிய தங்கள் ஊடகப்பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்கள்.

அதாவது நைஜீரியாவின் மதச்சூழல் பற்றி பற்றி என்ன எழுதவேண்டும் என்பதற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. அதன் பின் அந்நூல் ஐரோப்பாவெங்கும் பல்கலைகழகங்களில் மூலநூலாக அங்கீகரிக்க வைக்கப்படுகிறது. அதன்பின் அந்நூலை மேற்கோளாக்கி நைஜீரியாவின் மதச்சூழல் பற்றிய இதழியல்கட்டுரைகள், செய்திகள் எழுதப்படுகின்றன. தொலைக்காட்சிச்செய்திகள் உருவாக்கப்படுகின்றன. விளைவாக அவர்கள் விரும்பினால் பயாப்ராவை எழுப்பலாம், அணைக்கலாம்.

உங்கள் நூல் இன்று உலகின் பல பல்கலைகளில் மூலநூலாக அங்கீகரிக்க வைக்கப்பட்டிருக்கும் சூழலில் அந்நூல் பெற்ற உதவிகள் என்ன என்று பார்ப்பது இந்திய வாசகனாக என் கடமை அல்லவா? அந்நூலை மேற்கோளாக்கி இன்று ஆங்கில ஊடகங்களில் எழுதப்படும் பல்வேறுசெய்திக்கட்டுரைகளை காணும்போது, அந்த ஆங்கிலக் கட்டுரைகளை ஒட்டி வட்டாரமொழிகளில் வரும் கட்டுரைகளை காணும்போது அவற்றின் பின்னணி என்ன என்று ஏன் நான் யோசிக்கக்கூடாது?

கடைசியாக எந்த ஒரு பொதுவாசகனும் கேட்கும் கேள்வி. இத்தனை பிரம்மாண்டமான ஓர் அமைப்பு, உலகம் முழுக்க பரவியிருக்கும் ஓர் அரசாங்கம், எப்படி உருவாகிறது? ஐரோப்பாவில் தேய்ந்துகொண்டிருக்கும் கிறித்தவத்துக்கு இத்தனை நிதி பக்தர்களின் நன்கொடையாக குவிகிறதா என்ன?

மார்க்ஸிய அரிச்சுவடி தெரிந்த எவருக்கும் தெரியும், இது ஏகாதிபத்தியத்தின் கைத்தடி என. மதம் அதன் வாகனம் மட்டுமே. அல்லது முகமூடி. நைஜீரிய அரசு எண்ணைக்கு நியாய விலை கோருவதை கைவிட்டால் பயாப்ரா கிறித்தவக்குடியரசு அப்படியே அணைந்து போகும். உலகமெங்கும் பரவும் ஐரோப்பிய வணிகநிறுவனங்களின் மீசைமுறுக்கல்தான் இந்த வகை அமைப்புகள். அதற்காகவே நிதி வந்து குவிகிறது.

உங்கள் நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிரதாப் நைனான் தாமஸ் பற்றி இன்னும் விரிவாகவே சொல்லமுடியும். இங்கே WACC யின் உச்சநிலை தொடர்பாளராக இருந்து பண்பாட்டாய்வுகளையும் அரசியலாய்வுகளையும் வழிநடத்தியவர் அவர். இந்திய ஊடகங்களை ஊடுருவுவதலை விரிவாகவே ஆவணப்படுத்திய ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பின்னர் WACC யில் இருந்து விலகி அதைப்பற்றி நிறையவே எழுதியிருக்கிறார்.

அரவிந்தன்நீலகண்டன் -ராஜீவ் மல்ஹோத்ரா எழுதிய உடையும் இந்தியா என்ற நூலில் கூட அவரது நூலைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. உலகமெங்கும் உள்ள கிறித்தவ செய்தி அமைப்புகள், பிரச்சார அமைப்புகள், ஆய்வு அமைப்புகள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு ‘கிறித்தவ உம்மாவை’ உருவாக்கியிருப்பதை இவர் பெருமையுடன் அறிவிக்கிறார். இந்நூலில் இந்தியாவில் செயல்படும் இத்தகைய அமைப்புகளின் செயல்பாடுகள் அவர்களின் அறிக்கைகளில் இருந்தே விரிவாக எடுத்துக்கொடுக்கப்பட்டிருக்கின்றன.

நீங்கள் உங்கள் கடிதத்திலேயே முன்ஜாமீன் எடுத்துவிட்டீர்கள். எளிதாக இந்துத்துவ பிரச்சாரம் என்று சொல்லி தாண்டிச்சென்று விடுவீர்கள். மதசார்பற்ற தன்மைக்காகத்தான் எல்லாம் என்று சொல்லிவிட்டால் இங்கே எதையும் செய்யமுடியுமே. ஆனால் நான் பேசுவது மார்க்ஸியத்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் உங்கள் வாசகர் சிலருக்காகத்தான்.

உங்கள் நிதியாதாரங்களைப்பற்றி ஆராய்ந்துகொண்டிருக்கிறேன், இன்னொரு தருணத்தில் விரிவாகவே எழுதுகிறேன். ஒன்று உங்களுக்காக வ.கீதா நிதி பெற்றிருக்கிறாரா என்ற கோணத்தில். இரண்டு, பாரதிதாசன் பற்கலையில் பெரியாரியலாய்வு இருக்கையில் கௌரவப்பேராசிரியராக நீங்கள் பணியாற்றியதை ஒட்டி. அந்த இருக்கையின் நிதியாதாரம் என்ன என்ற கோணத்தில்.

கடைசியாக, நீங்கள் வழக்கு தொடுப்பதைப்பற்றி. நீங்கள் அதைச்செய்யலாம். நான் அது அவசியமான ஒரு தொடக்கமாக இருக்கும் என்று இப்போது நினைக்கிறேன். பல காரணங்கள். ஒன்று, இந்த விஷயம் நீதிமன்றம் சென்றதென்றால் முறையாகவே ஒரு வழக்கறிஞரை அமைத்து பல விஷயங்களை ஆராயச்செய்யலாம். தகவலறியும் சட்டத்தைக்கொண்டு தகவல்களை பெறலாம்.

இது என்னைப்போன்ற ஒரு சாமானியன் எதிர்கொள்ளவேண்டிய விஷயமல்ல. கடல். ஒன்றும் உருப்படியாக சிக்காமல் போகலாம். அப்போது நான் தண்டிக்கப்படலாம். பரவாயில்லை. ஒரு பொதுவிவாதத்தை பிரபல ஊடகங்கள் வழியாக உருவாக்க அது எனக்கு உதவும். இனி இவ்விவாதம் அந்த தளத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டும்

உண்மையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒருநாள் மதுரையில் இந்த நிறுவனத்துடன் உங்கள் உறவைப்பற்றி கேள்விப்பட்டபோது நான் இவ்வளவு பெரிதாக நினைக்கவில்லை. நம்மூர் கலைக்காவேரி போல கிறித்தவர்களின் ஒரு சில்லறை கலாச்சார நிதியுதவி அமைப்பு என்றே எண்ணினேன். மேலே சென்று யோசிக்கவுமில்லை. இன்று இணையம் வழியாக WACC பற்றி அறிய வரும்போது பதற்றமும் துயரமும் ஏற்படுகிறது. எஸ்.வி.ஆர், என்னதான் சொல்லுங்கள், நீங்கள் இதைச்செய்யலாமா? உங்கள் மனசாட்சியுடன் ஒரு கணமாவது இந்தச்சொற்கள் பேசாதா என ஏங்குகிறேன்.

ஜெ

 

 

WACC இணையதளம்

WACC லண்டன் இணையதளம்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எஸ்.வி.ராஜதுரை வழக்கின் முடிவு

எஸ்.வி.ராஜதுரை கடிதம்

எஸ்.வி.ராஜதுரையின் கடிதமும் பதிலும்

எஸ்.வி.ராஜதுரை கடிதம்

எஸ்.வி.ராஜதுரை வழக்கு

எஸ்.வி.ராஜதுரைக்கு அன்புடன்….

எஸ்.வி.ராஜதுரையின் பங்களிப்பு…

பழைய கதைகள் சிலவற்றைச் சொல்லிவிட்டு தொடங்கவேண்டும். ஏனென்றால் இந்த ஆண்டுகளில் முற்றிலும் புதிய ஒரு தலைமுறை வாசிப்புக்கு வந்துவிட்டது. என் புதுவாசகர் சந்திப்புகளுக்கும் விஷ்ணுபுரம் விழாவுக்கும் வருபவர்கள் பலர் அப்போது ஆரம்பப்பள்ளியில் இருந்திருப்பார்கள்.

2012 ல் நான் இந்தியச் சிந்தனையில் ஆய்வுக்கு என வந்தமையும் நிதியுதவிகள் அளிக்கும் பங்கைப் பற்றி நீண்ட கட்டுரைத்தொடர் ஒன்றை எழுதினேன். இன்று அதைப்பற்றிய என் கருத்து மேலும் கூர்மையடைந்துள்ளது. மேலைநாடுகளின் ஆதிக்க ஆற்றல் இருப்பது அவர்களின் பல்கலைக் கழகங்களில்தான். அவை கீழைநாடுகளால் இன்னும் ஒருநூறாண்டுக்காவது வெல்லப்பட இயலாதவை. அவை கீழைநாடுகள் எப்படி, எதைச் சிந்திக்கவேண்டும் என வடிவமைக்கின்றன.

உடனே அவை இங்குள்ள வலதுசாரிகளை கட்டுப்படுத்துகின்றன, இடதுசாரிகள் அவற்றை எதிர்க்கிறார்கள் என ஓர் எளிய ‘டெம்ப்ளேட்’ புரிதலை தொடக்கநிலை வாசகர்கள் அடைவார்கள். அது பொய். இங்குள்ள இடதுசாரிகளின் சிந்தனைகளிலேயே முக்கியமான பகுதிகளை அவைதான் வடிவமைக்கின்றன. மறுபக்கம் க்ரியா போன்ற பதிப்பகங்களே அந்நிதியில் நடந்தவைதான்.

அதற்கு அவை கல்வியாளர்கள், சமூகச்செயல்பாட்டாளர்கள் இருசாராரையும் பயன்படுத்திக் கொள்கின்றன. அவ்விரு தரப்பையும் கவர அவை நிதிக்கொடைகளை கருவியாக்கிக் கொள்கின்றன. உடனே, இங்கே பேசுபவர்கள் ,செயல்படுபவர்கள் அனைவரும் பணம் பெற்றுக்கொண்டு பேசுபவர்கள் என நான் சொல்கிறேன் என்று பொருள் வரவில்லை. இதெல்லாம் செயல்படும் விதங்கள் மிகச்சிக்கலானவை.

இந்தியக் கல்வியாளர்கள் எண்ணி ஏங்கும் வாய்ப்புகள் என்பவை மேலைநாட்டு கல்விநிலையங்களில் ஆசிரியர் பணிதான். துணைவேந்தர் உள்ளிட்ட பதவிகளுக்கு செல்ல அதுவே நம்பகமான எளிய வழி. இங்குள்ள பல்கலைகள், தனியார் ஆய்வுநிறுவனங்கள் ஆகியவற்றுக்கு  மேலைநாட்டுப் பல்கலைகள் நிதியளிக்கின்றன. தனிப்பட்ட முறையில் ஆய்வாளர்களுக்கும், ஆய்வு அமைப்புகளுக்கும் நிதி வருகிறது. உள்ளூர் நிறுவனங்களுக்கு வரும் நிதி பல்கலைகழகங்களுக்கு அளிக்கப்படுகிறது.

இந்நிதியால் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. கூட்டங்களும் ஆய்வுகளும் நடத்தப்படுகின்றன. மேலைநாட்டில் பயின்றவர்கள் அவற்றை வழிநடத்துகிறார்கள். அவற்றினூடாக நாம் சிந்திக்கவேண்டிய கோணம், அடிப்படையான ‘டெம்ப்ளேட்’டுகள் நம் சிந்தனைக்குள் நம்மையறியாமலேயே பதிக்கப்படுகின்றன. இச்செயல்களிலுள்ள மாபெரும் வலையை உணர்ந்தவர் சிலர். மிகப்பெரும்பாலானவர்கள் அதை ‘நவீனப் பார்வை’ என எடுத்துக்கொள்கிறார்கள். அதற்குரிய எல்லா அரசியல் தர்க்கங்களும், சமூகத்தர்க்கங்களும் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. மிகமிக விரிவாக. தனிப்பட்ட நபர்கள் அதை கடப்பது கடினம்.

நான் சொல்லவந்தது நாம் சிந்திக்கவேண்டிய வகை, வழி எல்லாம் வெளியே இருந்து வரும் நிதியால் வடிவமைக்கப் படுகின்றன என்பது மட்டும்தான். பொதுசூழலில் புழங்கும் பல அடிப்படை சிந்தனைப்போக்குகள் இப்படி உருவானவை. அவற்றை எதிர்த்து நிற்பது கடினம்.ஓர் இடதுசாரிக்கு அவருடைய அரசியலுக்கு உதவும் ஒரு சிந்தனைப்போக்கு கையில் கிடைத்தால் அவர் அதை நம்பி சொல்லிக்கொண்டிருப்பார். அது அமெரிக்காவால், ஐரோப்பாவால் உருவாக்கப்பட்டது என்பதை அவர் அறியமாட்டார், அறிந்தாலும் பொருட்படுத்த மாட்டார்.

இன்றும் நம் கல்வித்துறையில் மேலைநாட்டுச் சிந்தனைப்போக்கின் பேராற்றலுக்கு எதிராக எதைப்பற்றிப் பேசுவதும் ஆபத்தானதே. அப்படிப்பேசுபவர்கள் எங்கும் எந்நிலையிலும் கவனம் பெறாமல் அப்படியே மறைந்துவிடுவார்கள்.

இடதுசாரிகளை மட்டும் சொல்லவில்லை. சென்ற பத்தாண்டுகளாகக் கண்டு வருவதென்ன என்றால் வலதுசாரி- இந்துத்துவ அரசியலைச் சார்ந்தவர்களும் அதே நிதியுதவி வலைக்குள், அதே கருத்தியல் வளையத்திற்குள் சென்றிருக்கிறார்கள் என்பதைத்தான். இன்றைய டெம்ப்ளேட்டுகள் பல. இரண்டு முக்கியமானவை

ஒன்று, அதீத வைதிகப் பார்வை. எந்த பன்முகத்தன்மையையையும் ஏற்காத மூர்க்கமான பழமைவாதம். இரண்டு, வட்டாரவாதம். அதாவது, இந்தியாவிலுள்ள இந்து மதமே வட்டாரத்துக்கு ஒன்று,மையமே இல்லை என்னும் பார்வை. தமிழ்ச்சைவம் வேறு கன்னட சைவம் வேறு,அத்வைதம் வேறு நாராயணகுருவின் அத்வைதம் வேறு, தாந்த்ரீகம் வேறு வங்காள தாந்த்ரீகம் வேறு என்கிறார்கள். இந்தியவியல் ஆய்வாளர்களின் பார்வைகள் சுவிட்ச் போட்டதுபோல இந்தியா முழுக்க ஒரேபோல வெறும் பத்தாண்டுகளுக்குள் மாறிவிட்டன. இரண்டு எல்லைகள், ஆனால் ஒரே டெம்ப்ளேட். ஒரேவகையான சொற்கள், ஒரேவகை உணர்ச்சிகள். இரண்டுக்குமே ஒரே வகை நிதித்தொடர்பு.

ஒரு சிந்தனைச்சூழலில் இந்த கூறை நாம் கவனிக்கவேண்டும் என்று நான் சொன்னேன். சுதந்திரசிந்தனைக்கு இந்த கவனிப்பு அவசியமானது. இதை இன்றைய சூழலில் முற்றிலும் சுதந்திரமாக, முழுக்கமுழுக்க வாசகர் பலத்தால்  நின்றிருக்கும் என்னைப்போன்ற ஒருவனே சொல்லமுடியும். ஒற்றைச்சொல்லில் ‘காசுவாங்கிட்டு பேசுறான்’ என்பதல்ல என் தரப்பு. இந்த வலையின் மேலாதிக்கத்தையே சுட்டிக்காட்டினேன். ( கட்டுரைகள் அன்னியநிதி ஒரு வரைபடம்.)

அதை நான் எழுதியபோது எஸ்.வி.ராஜதுரையின் பெயரை சுட்டியிருந்தேன். ஏனென்றால் ராஜதுரையும் வ.கீதாவும் இணைந்து எழுதிய பெரியார் பற்றிய நூலில் நிதிக்கொடை பற்றிய நன்றிக் குறிப்பு இருந்தது. அவர் பெரியாரியம் நோக்கித் திரும்பிய போது அவருடைய பழைய தீவிரஇடதுசாரித் தோழர்கள் அதைச் சுட்டிக்காட்டி எழுதிய பல கட்டுரைகள் வெளியாயின.அவற்றை எல்லாம் நானே விரிவாக பின்னர் வந்த கட்டுரைகளில் சுட்டி கொடுத்திருக்கிறேன்.

(இன்று பெரியாரியம் என்று புழங்கும் மொத்த பார்வையையும் உருவாக்கியது எஸ்.வி.ராஜதுரை- வ.கீதா எழுதிய அந்நூல்தான். அது ஆயிரம் குட்டி போட்டிருப்பதை புத்தகக் கண்காட்சிகளில் காணலாம். அதை எதிர்த்த தோழர்களே பின்னர் பெரியாரியம் பேச ஆரம்பித்தனர் என்பது ஊகிக்கக்கூடிய நகர்வே.)

என் அக்கருத்துக்கு எதிராக எஸ்.வி.ராஜதுரை வழக்கறிஞர் அறிவிக்கை அனுப்பினார். அது ஒரு ஆபாச வசை அறிவிக்கை. அதை ஒட்டி என் மேல் அவர் அவதூறு வழக்கு தொடுத்தார். ஊட்டி நீதிமன்றத்தில் அவ்வழக்கு சென்ற பத்து ஆண்டுகளாக நடைபெற்றது. அவ்வழக்கை எஸ்.வி.ராஜதுரை திரும்பப்பெற்றிருக்கிறார். என்மேல் குற்றம் பதியப்படாமலேயே, அதாவது வழக்கு தொடங்காமலேயே வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது.

என்ன நடந்தது? நானறிந்தது இதுவே. முதலில் எஸ்.வி.ராஜதுரை இவ்வழக்கை தொடுத்து நடத்த எண்ணவில்லை. அதற்கான நிதியோ நேரமோ உடல்நலமோ அவருக்கு இல்லை. அந்த வழக்கறிஞர் ஓர் ஆரம்பகட்ட வழக்கறிஞர். அவருடைய வற்புறுத்தலால் வக்காலத்தில் எஸ்.வி.ராஜதுரை கையெழுத்து போட்டிருக்கிறார். அப்போது ஒரு நீதிமன்ற வழக்கு எப்படி நடக்கும் என்றெல்லாம் அவருக்குச் சொல்லப்படவில்லை, வழக்கு தொடுத்த செய்தியை அந்த வழக்கறிஞர் ஜூனியர் விகடனுக்கு செய்திகொடுத்து விளம்பரம் தேடிக்கொண்டார். அவருடைய நோக்கம் அதுதான்.

2012ல் வழக்கு தொடங்கியதுமே நான் நீதிமன்றம் சென்று வழக்கை நான் நடத்துவதாகச் சொன்னேன். உடனே எஸ்.வி.ராஜதுரையின் வழக்கறிஞர் என்னை குறுக்குவிசாரணை செய்யவேண்டும் என சொன்னார். என் வழக்கறிஞர் அதை எதிர்த்தார். எஸ்.வி.ராஜதுரை நேரில் நீதிமன்றம் வந்து என்மேல் குற்றச்சாட்டை பதிவுசெய்யவேண்டும், அதன்பின்னரே வழக்கு ஆரம்பிக்கும் என்றார் எனக்காக ஆஜரான நண்பர் கிருஷ்ணன். ஏனென்றால் எஸ்.வி.ராஜதுரை என்ற பெயரில் எழுதுபவர்தான் மனோகரன் என்பதே முதலில் நீதிமன்றத்தில் நிறுவப்படவேண்டும்.

எஸ்.வி.ராஜதுரை அதை எதிர்பார்க்கவில்லை .இப்போது வழக்கை வாபஸ் பெறும்வரை அவர் நீதிமன்றம் வருவதை தவிர்த்தே வந்திருக்கிறார். பத்தாண்டுகளில் மாதம்தோறும் நீதிமன்றம் அவருக்கு அழைப்பு அனுப்பியது. கடுமையான நீதிமன்றக் கண்டனம் வந்தபின் ஒரே ஒருமுறை அவர் நீதிமன்றம் வந்தார். ஆனால் போதிய ஆவணங்கள் இல்லை. நீதிமன்ற நடைமுறையை உடல்நலம் குன்றிய அவரால் தாளமுடியவில்லை. அதன்பின் நீதிமன்றமே வரவில்லை. இப்போது வழக்கை திரும்பப்பெற்றுவிட்டார். ஆகவே என்மேல் வழக்கு நீதிமன்றத்தில் புனையப்படவே இல்லை. வெறும் குற்றச்சாட்டுடன் வழக்கு அப்படியே நீதிமன்றத்தால் தள்ளுபடி ஆகியிருக்கிறது

எஸ்.வி.ராஜதுரை மேல் பெருமதிப்பு கொண்டவர் என் நண்பர் நிர்மால்யா (மணி) அவர் எஸ்.வி.ராஜதுரை உடல்நலம் குன்றியிருக்கிறார் என்றும், சமாதானம் பேசி வழக்கை முடிவுக்கு கொண்டுவருவதுதான் நல்லது என்றும் என்னிடம் சொன்னார். ”நாம் நேரில் போய் அவரிடம் பேசுவோம். அருகே தான் இருக்கிறார். ஒரு மன்னிப்பு கேட்பதில் நீங்கள் குறைந்துவிட மாட்டீர்கள்” என்றார்

நான் சொன்னேன். ”எஸ்.வி.ராஜதுரை என் ஆசிரியர். அவர் நூல்களை படித்து உருவானவன் நான். அவ்வாறன்றி ஒரு முறைகூட அவரைப்பற்றி நான் எழுதியதில்லை. நான் சொன்னது இங்குள்ள பொதுப்போக்கு பற்றி. அவருடைய பணிகளை ஒட்டுமொத்தமாக நான் அடையாளப்படுத்தவில்லை. அவர் அதை அப்படி தீவிரமாக எடுத்துக்கொள்வார் என்றும் அதைச் சொல்லும்போது எனக்கு தெரியாது. அது ஓரு பொதுவெளி உண்மை என்றே நினைத்தேன். அவரைச் சந்தித்து மன்னிப்பு கேட்பதில் எனக்கு எந்த தடையும் இல்லை. அவர் வருந்தும்படி நடந்ததில் எனக்கு வருத்தம்தான்” என்றேன்

நிர்மால்யா எஸ்.வி.ராஜதுரையிடம் பேசிவிட்டு என்னிடம் சொன்னார். ”எஸ்.வி.ராஜதுரை நெகிழ்ந்திட்டார். நான் அவனை சந்திச்சா கட்டிப்புடிச்சுக்குவேன். அவன் நம்ம காலத்தோட பெரிய எழுத்தாளன்ன்னு  சொன்னார்” என்றார்.

நான் கோவை ஞானியை ஃபோனில் அழைத்து எஸ்.வி.ராஜதுரையை சந்திக்கப்போவதைச் சொன்னேன். ”அப்டியே காலைத் தொட்டு கும்பிடுங்க. உங்க மரபிலே அப்டித்தானே செய்வீங்க. எஸ்.வி.ஆரோட வாழ்த்து உங்களுக்கு வேணும்” என்றார் ஞானி. ஏற்கனவே எஸ்.வி.ஆரை நான் புண்படுத்திவிட்டேன் என என்னை ஞானி கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார். (ஞானி நூல்)

ஆனால் எஸ்.வி.ராஜதுரையின் வழக்கறிஞர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. நான் எழுத்துபூர்வமாக மன்னிப்புக்கடிதம் தரவேண்டும், அதையும் அந்த வழக்கறிஞரிடம் தரவேண்டும், அதில் என்னென்ன சொல்லப்பட்டிருக்கவேண்டும் என்று அவர் முடிவெடுப்பார் என்றெல்லாம் நிர்மால்யாவிடம் சொன்னார். அவரே எஸ்.வி.ராஜதுரையிடமும் பேசி விலகச் செய்தார். நான் வழக்கு பற்றிய ‘பயத்தால்’ சமாதானம் பேச வருவதாக எஸ்.வி.ராஜதுரையை நம்பவைத்தார்,.

என் வழக்கறிஞர் விஸ்வநாதன் ஊட்டியின் முதன்மை வழக்கறிஞர். திருமாவளவன் மீது ஊட்டியில் நடந்த அவதூறுவழக்கு போன்றவற்றை திறம்பட நடத்தியவர். அவருக்கு துணையாக வழக்கை கவனித்துக்கொண்டவர் வழக்கறிஞர் ஈரோடு கிருஷ்ணன். உயர்நீதிமன்ற வழக்கறிஞர்க்ளாகிய நண்பர்களும் அவ்வழக்கை கவனித்துக்கொண்டிருந்தனர். அது அவர்களுக்கு பொருட்படுத்தும்படியான ஒரு வழக்கே அல்ல.

இந்த வழக்கில் ஆவணங்கள் எவையுமே நீதிமன்றம் முன்னால் தாக்கல் செய்யப்படவில்லை. எஸ்.வி.ராஜதுரை சார்பில் தாக்கல்செய்யப்படவேண்டிய ஆவணங்கள் என்னுடைய இணையப்பதிவுகள். அவற்றை நீதிமன்றம் ஆவணங்களாக கொள்ள நிறைய சான்றுகள் வேண்டும். ஆனால் என் சார்பில் எஸ்.வி.ராஜதுரை நிதி வாங்கினார் என வெவ்வேறு நபர்களால் அச்சில் எழுதப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் இருந்தன. அவரே பதிவு செய்த WAC ஆவணமும் அதில் உண்டு. அவை அனைத்துமே நீதிமன்றத்தில் பதிவாகும். என்றென்றைக்குமான நீதிமன்ற ஆவணமாக இருக்கும். அதை சுட்டி எவர் வேண்டுமென்றாலும் மேலதிக வழக்கை தொடுக்கமுடியும். வ.கீதா நீதிமன்றம் வரவேண்டியிருக்கும். பல்வேறு தொடர்புள்ளவர்கள் நீதிமன்றத்துக்கு இழுக்கப்படுவார்கள்.

மேலும் எஸ்.வி.ராஜதுரை அவர் வாங்கிய நிதியின் கணக்கை, அவற்றை அரசுகளுக்கு தெரியப்படுத்தியமைக்கான சான்றுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். அனைத்துக்கும் மேலாக அவருடைய வழக்கறிஞர் அறிவிக்கை நீதிமன்றத்தில் பதிவானால் மறுகணமே அது அவமதிப்பு வழக்குக்கு ஆதாரமாக ஆகிவிடும்– அது அப்படிப்பட்ட லட்சணம் கொண்டது. அதில் இந்திய அரசியல்சட்டப்படி சாதி இழிவு படுத்தல் போன்ற தண்டனைக்குரிய குற்றங்களே உள்ளன. (பார்க்க எஸ்.வி.ராஜதுரைக்கு அன்புடன்….)ஆகவே நீதிமன்றத்தில் வழக்கின் முதல் கட்டமான ஆவணப்பதிவே நடைபெறவில்லை. அவரது வழக்கறிஞர் இதையெல்லாம் யோசிக்கவே இல்லை.

எஸ்.வி.ராஜதுரைக்கு இந்த வழக்கின் உண்மைச்சூழலைச் சொல்ல அணுக்கமானவர்கள் இல்லை. என்னை சிக்கவைக்கும் நோக்கத்துடன் வயதான அவரை தூண்டிவிடவே அவரது ‘நண்பர்கள்’ முயன்றனர். ஆனால் குறைந்தபட்சம் நீதிமன்றம் வரை காரோட்டி வரக்கூட அவருக்கு எவருமில்லை. நேர்மாறாக என்னிடம் இந்த வழக்கின் உள்ளீடற்ற தன்மையை விளக்கிய என் நண்பர் வழக்கறிஞர்  கிருஷ்ணன் “இது ஒரு கேஸே இல்லை‘சார். ஆனா, அப்பப்ப எஸ்.வி.ராஜதுரை மேற்கோள் சொல்லிட்டே இருக்கீங்க. அப்டி அவர் உங்களுக்கு முக்கியம்னா பேசாம மன்னிப்பு கேட்டுடுங்க” என்றே அறிவுறுத்தினர். ஆனால் எஸ்.வி.ராஜதுரை தரப்பு வழக்கறிஞருக்கு உண்மைச்சூழல் புரியவில்லை.

ஆகவே நான் வழக்கை அதன்போக்கில் விட்டுவிட்டேன். பின்னர் பவா செல்லத்துரை ஒரு முறை சொன்னார்.  “ஜெயமோகன் நீங்க நிபந்தனையில்லாம எஸ்.வி.ஆர் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கணும். நீங்க சொல்றது சரியா இல்லியாங்கிறதே பேச்சு இல்ல. அவர் நம் காலகட்டத்தோட நாயகன். நாம அவர் காலடியிலே இருந்து வந்தவங்க.”

நான் சொன்னேன் “அதிலே மாற்றே இல்லை. எனக்கு ஒரு தயக்கமும் இல்லை” பவா சொன்னார் “எஸ்.வி.ராஜதுரை இப்ப இங்கதான் இருக்கார். நான் அவர் கிட்ட சொன்னேன். அவர் உங்கமேலே பெரிய மரியாதை வச்சிருக்கார். நீங்க சந்திக்க நான் ஏற்பாடு பண்றேன்” ஆனால் பின்னர் பவா சொன்னார், “அதெல்லாம் நடக்காது. அந்த வக்கீல் ரொம்ப பிடிவாதமா இருக்கார். அவர் முன்னாடி நீங்க மன்னிப்பு கேக்கணும்னு சொல்றார்…”

நான் அவ்வழக்கை விட்டு மனம்நகர்ந்துவிட்டேன். வெண்முரசு எழுத ஆரம்பித்தபின் இவை எவையுமே என் அகத்தில் இல்லை. வழக்கு இழுத்துக்கொண்டே இருந்தது. எஸ்.வி.ராஜதுரை நீதிமன்றம் வருவதை முற்றாக தவிர்த்தார். பலமுறை நீதிபதிகள் சீற்றத்துடன் அதைச் சுட்டிக்காட்டி  கண்டித்துச் சொல்லியிருக்கிறார்கள். என் வழக்கறிஞர்கள் அவர் நீதிமன்றம் வராமல் இருப்பதைச் சுட்டிக்காட்டியே வழக்கு தள்ளுபடி செய்யும்படிக் கோரலாம் என்றனர். வேண்டாம் என்று நான் சொன்னேன். அவர் வழக்கை நடத்தட்டும் என்றேன். கடைசிவரை நாங்கள் அப்படிக் கோரவில்லை.

எஸ்.வி.ராஜதுரை தன் வீட்டில் இருந்தே வாக்குமூலம் அளிக்க அனுமதிக்குமாறு கோரினார். தனக்கு உடல்நிலை சரியில்லை என்றார். ஆனால் அதே வாரம் அவர் மதுரையில் தீக்கதிர் அலுவலக நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார். அச்செய்தி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. ஆகவே நீதிபதி அனுமதி மறுத்துவிட்டார்.

பின்னர் கோவிட் காலத்தில் இணையம் வழியாக வாக்குமூலம் அளிப்பதாகச் சொன்னார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் என என் வழக்கறிஞர்கள் சொன்னார்கள். ஏனென்றால் எஸ்.வி.ராஜதுரை அளிப்பது சாட்சியம் அல்ல, அது முதல் குற்றச்சாட்டு வாக்குமூலம். அதில் அப்படி ஒரு மனிதரை நீதிமன்றம் நேரில் பார்ப்பது அவசியம். ஆனால் நான் அதற்கு உடன்படவில்லை. கோவிட் சூழலில் அவரை நீதிமன்றம் வரவழைக்கவேண்டாம், அவர் இணையத்திலேயே வாக்குமூலம் வழங்கட்டும் என்றேன்.

அடுத்த கட்டம் ஆவணப்பதிவுதான். இச்சூழலில் எஸ்.வி.ராஜதுரை வழக்கை திரும்பப்பெற்றுவிட்டார் என்னும் செய்தியை என் வழக்கறிஞர் எனக்கு தெரிவித்தார். இம்முடிவை அவர்கள் எடுத்ததும், நீதிமன்றத்திற்கு தெரிவித்து வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்ததும் நீதிமன்ற அறிவிப்பின் வழியாகவே 10-3-2022 அன்று எங்களுக்குத் தெரியவந்தது. இதுதான் நிகழ்ந்ததன் சுருக்கம்.

இதில் கவனிக்கவேண்டியது ஒன்றே. பொதுவாக எதற்கெடுத்தாலும் மானநஷ்ட வழக்கு என்று பேசுவது ஒரு வழக்கமாக உள்ளது. எந்த வழக்கிலும் வழக்கு தொடுத்தவரே அலையவேண்டும். அவர்தான் பணம் செலவிடவேண்டும். கடைசியில் தண்டனை சில ஆயிரம் ரூபாய்தான். ஆனால் வழக்கு தொடுப்பவர் சில லட்சங்கள் வரை செலவிடவேண்டியிருக்கும். சில ஆண்டுகளை இழக்கவேண்டியிருக்கும். ஏனென்றால் அவர்தான் குற்றச்சாட்டை நிரூபிக்கவேண்டும்.

குற்றம்சாட்டப்பட்ட நான் இரண்டு முறை ஊட்டி நீதிமன்றம் சென்றேன். அதுவும்கூட என் விருப்பப்படித்தான். ஒரே ஒருமுறை நான் சென்றால் போதுமானது. அதன்பின் என் வழக்கறிஞர்கள் செல்வார்கள். ஆனால் எஸ்.வி.ராஜதுரை அழைக்கும் போதெல்லாம் வந்தாகவேண்டும். விசாரணைக்கு உட்படவேண்டும். சான்றுகளை கொண்டுவரவேண்டும்.

இவ்வகை வழக்குகளில் அலையவைக்கலாம் என்பது மட்டுமே ஒரே லாபம். ஏனென்றால் குற்றம் சாட்டப்பட்டவர் ஒன்றை சொன்னார் என நிரூபித்தால் மட்டும் போதாது, அதனால் இழப்பு ஏற்பட்டது என நிரூபிக்கவேண்டும். அதைவிட அவ்விழப்பை உண்டுபண்ணும் நோக்கம் குற்றம்சாட்டப்பட்டவருக்கு இருந்தது என நிரூபிக்கவேண்டும். வழக்குகள் இல்லாத சிறிய வழக்கறிஞர்களே இவ்வகை வழக்குகளை போட ஊக்குவிப்பார்கள். அல்லது வேண்டுமென்றே தொல்லைகொடுப்பதற்காக அமைப்புகளைக்கொண்டு தனிநபர் மேல் போடுவார்கள். ஒன்றும் அறியாத நண்பர்கள் ‘வழக்குபோடுங்க தோழர்’ என ஊக்குவிப்பார்கள்.

இவ்வகை வழக்குகளில் அனைவரும் உடனே செய்வது இன்னொரு வழக்கை குற்றம்சாட்டியவர் மேல் தொடுப்பதுதான். அதற்கான எல்லா காரணங்களும், ஆதாரங்களும் இருக்கும். எஸ்.வி.ராஜதுரை மேல் நாகர்கோயில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க என்னிடம் ஆலோசனை சொன்னார்கள். அதற்கு சாதகமான மனநிலைக்கும் வந்தேன். ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் பின்வாங்கிவிட்டேன். இது எப்படியானாலும் ஒரு வரலாற்று நிகழ்வு. நான் அவர்மேல் வழக்கு தொடுத்தேன் என வரவேண்டாம். ஏனென்றால் அவர் சாமானியர் அல்ல, என் பெருமதிப்புக்குரிய எஸ்.வி.ராஜதுரை. இன்னொருவர் என்றால் விட்டிருக்க மாட்டேன். (இப்போதுகூட  என் மேல் வழக்குபோட்டு இழப்பு ஏற்படுத்தியமைக்காக எஸ்.வி.ராஜதுரைமேல் நான் சிவில் வழக்கு தொடுக்கலாம். உறுதியாக வெல்லும் வழக்கு அது)

எஸ்.வி.ராஜதுரையின் வழக்கறிஞர் எனக்கு அனுப்பிய வழக்கறிஞர் அறிவிக்கையை வைத்து வழக்கு தொடுக்கலாம் என பல வழக்கறிஞர்கள் சொன்னார்கள் (படித்துப் பாருங்கள்:எஸ்.வி.ராஜதுரையின் வக்கீல் நோட்டீஸ்) அது ஒரு அப்பட்டமான வசை, மற்றும் அவதூறு. உயர்நீதிமன்ற வழக்கறிஞரான ஒருவர் அவரே வழக்கை இலவசமாக நடத்துவதாகச் சொன்னார். எனக்குச் சம்பந்தமே இல்லாதவர் அவர். அந்த வழக்கறிஞர் அறிவிக்கையின் மொழிநடை வழக்கறிஞர் சமூகத்துக்கே அவமானம் என்றார்.வெகுவாகச் சீண்டப்பட்டிருந்தார். சாதி,மதச் சீண்டல்கள் கொண்ட நேரடியான எழுத்துவடிவக் குற்றம் அது. மிக எளிதில் வெல்லும் வழக்கு.

நான் விசாரித்தபோது அந்த வழக்கறிஞர் அறிவிக்கையில் கையெழுத்திட்டவர் எஸ்.வி.ராஜதுரை என்பதனால் அவர்தான் முதன்மைக் குற்றவாளியாக சேர்க்கப்படவேண்டும் என தெரியவந்தது. அதைச் செய்யவேண்டாம் என உறுதியாகச் சொல்லிவிட்டேன். அற்புதமான நடையுடன் மகத்தான நூல்கள் சிலவற்றை எழுதிய ஒரு பேரறிஞரை அந்த ஆபாசமான வசைக்கடிதம் எழுதியவர் என நீதிமன்றத்தில் நான் பதிவுசெய்யக்கூடாது. அது அநீதி. அது அல்ல அவர் வரலாற்றில் நின்றிருக்கவேண்டிய முகம்.

இப்போது வழக்கு முடிந்துவிட்டது. நான் அஞ்சினேன் என எந்த வழக்கறிஞரும் இனி சொல்ல மாட்டார். ஆகவே இப்போது சொல்கிறேன். எஸ்.வி.ஆர் சார், நான் உங்கள் முன் எளியவன். உங்கள் சொற்களில் இருந்து கற்றுக்கொண்டவன். நான் எழுதியபோது அது உங்களை இப்படி பாதிக்கும் என உணர்ந்திருக்கவில்லை. கருத்தியல் விவாதம் என்றே எண்ணினேன். க.நா.சு உள்ளிட்ட பலபேர் மீது நீங்களும் அதைப்போல கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளீர்களே என்றே நினைத்தேன். ஆனால் எதன்பொருட்டென்றாலும் ஆசிரியர் நிலையில் உள்ள ஒருவரின் உளம் வருந்தச் செய்தது பெரும்பிழை. அதன்பொருட்டு மன்னிப்பு கோருகிறேன்.

சுந்தர ராமசாமி உட்பட எல்லா ஆசிரியர்களிடமும் ஏதோ சில  மனவருத்தங்களை ஈட்டியிருக்கிறேன். என் மரபுப்படி என் தலை உங்கள் பாதங்களில் பட நிலம்படிய வணங்குகிறேன். மன்னித்துவிடுங்கள்.

ஜெ

எஸ்.வி.ஆர் சொல்லும் ‘சிக்கல்கள்’ என்ன?

எஸ்.வி.ஆர்,விடியல் சிவா, புதிய ஜனநாயகம்

எஸ்.வி.ராஜதுரை- கடிதங்கள்

எஸ்.வி.ராஜதுரை-கடிதங்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அன்னியநிதி – ஒரு வரைபடம் [மறுபிரசுரம்]

Trojan-

[டிரோஜன் குதிரை. டிராய் நகருக்குள்]

இந்த இணையதளத்தில் கருத்துலகில் வரும் அன்னிய நிதியையும் அதன் பாதிப்பையும் பற்றி நான் எழுதி சர்ச்சைக்குள்ளான விஷயங்களை ஒருவாறு தொகுத்து முடித்துக்கொள்ள விரும்புகிறேன். ஓர் எல்லைக்கு மேல் இதைப்பற்றிப்பேசினால் வெறும் வம்புகளே எஞ்சும் என்பதனால்.

சோவியத் ருஷ்யாவின் உடைவுக்குப்பின், உலகமயமாதல் தொடங்கியபின், தொண்ணூறுகளின் நடுவில் தமிழ்ச் சிற்றிதழ்ச்சூழலிலும் இலக்கிய-அரசியல் கோட்பாட்டுச்சூழலிலும் ஒரு திட்டவட்டமான மாற்றம் தென்பட ஆரம்பித்தது. பல சிற்றிதழ்சார் எழுத்தாளர்கள் கருத்தியல் தளத்தில் சடாரென்று ஒரு ‘யூ டர்ன்’ அடித்தார்கள். இதை பழைய இதழ்களின் தொடர்ச்சியை கவனிப்பவர்கள் காண முடியும்.

அதன் பின்னணி இதுதான். ருஷ்ய அமெரிக்க கெடுபிடிப்போர் காலத்தில் தமிழ் கருத்தியல்சூழலில் இரு அணிகள் இருந்தன. ஒன்று சோவியத்சார்பு அணி. இரண்டு அதை ஏற்காதவர்களின் அணி. இரு தரப்பிலும் நிதி வந்துகொண்டிருந்தது. அவை அவ்வளவு ரகசியமாகவும் இல்லை. நிதியுதவியும்கூட பெரிய அளவிலும் இல்லை.

சோவியத் அணி இஸ்கஸ் போன்ற அமைப்புகள் வழியாகவும் இங்குள்ள இடதுசாரிகளின் அமைப்புகள் வழியாகவும் எழுத்தாளர்களைத் திரட்டியது. சாதாரணமாக அவர்களிடமிருந்து எழுத்தாளர்கள் பெற்றது இடதுசாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பல்கலைக் கழகங்களின் கருத்தரங்குகளில் பங்கெடுக்கும் வாய்ப்பு. இடதுசாரி நூல்களை மொழியாக்கம் செய்வதன் ஊதியம். இவை கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். தி.க.சிவசங்கரன் போன்ற சிலர் ருஷ்ய அமைப்புகளில் பெரும் சம்பளத்துடன் பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றனர்.

இத்தரப்பின் உச்சகட்ட லாபம் என்பது சோவியத் ருஷ்யாவுக்கு ஒரு பயணம். ஆனால் இதெல்லாம் மிக வெளிப்படையானவை. ஜெயகாந்தன் போன்றவர்கள் வெளிப்படையாகவே அன்றுமின்றும் அதில் ஈடுபட்டார்கள். அதை ஒரு பெருமையாகவே முன்வைத்தார்கள், வைக்கிறார்கள். அது கொள்கைசார்பானது என்றே கருதப்பட்டது.

வலதுசாரித்தளத்தில் இந்த அளவுக்கு வெளிப்படைத்தன்மை இருக்கவில்லை. ஆனால் இடதுசாரிக் கருத்துக்களுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் பணம் அளித்தன என்பது உண்மை என்றே நான் நினைக்கிறேன். பேர்ல் பப்ளிகேஷன் மூலம் செய்யப்பட்ட மொழியாக்கங்கள் வழியாக பணம் அளிக்கப்பட்டிருக்கிறது . பல்வேறு மொழியாக்க வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இவை எவையும் பெரிய தொகை அல்ல. ஆனால் அதற்கொரு பங்களிப்பு இருந்திருக்கலாம்.

இந்தியாவின் சில இதழ்களுக்கும் சில அமைப்புகளுக்கும் அமெரிக்கக் கலாசார அமைப்புகளிடமிருந்து பணம் வந்திருக்கிறது. அந்தக் கலாசார அமைப்புகளுக்கு அமெரிக்க உளவுத்துறை பணம் கொடுத்த தகவல்கள் பின்னர் வெளிவந்தன. ஆனால் எழுத்தாளர்களுக்கு அனேகமாக பணம் ஏதும் வந்ததில்லை என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர்கள் அமெரிக்கர்களால் பெரிதாகக் கருதப்படவில்லை.

ஆனால் நான் விசாரித்தவரை அன்று தீவிரமாக கம்யூனிச எதிர்ப்பு பேசிய இதழாளர்களுக்கு பணம் வந்திருக்கிறது. அவர்களின் கட்டுரைகள் ஆங்கில இதழ்களில் மறுபிரசுரம் செய்யப்படுவதன் வழியாக. வரும் பணம் கணிசமானதே. வெளிநாட்டுப்பயண அழைப்புகள் அமெரிக்காவின் மிகப்பெரிய தூண்டிலாக இருந்திருக்கின்றன. ஆனால் பல்கலை அழைப்புகளை இதில் சேர்க்கமுடியுமா என்பதெல்லாம் சிக்கலான கேள்விகள்.

ஃபோர்டு ஃபவுண்டேஷன், ராக்ஃபெல்லர் ஃபவுண்டேஷன் போன்ற பல அமைப்புகள் ஐம்பதுகள் முதலே இந்தியாவில் பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு தொடக்கமிட்டிருந்தன. பல்வேறு ஆக்கபூர்வப் பணிகளுக்கு அவை உதவியிருக்கின்றன. அவற்றிடமிருந்து படைப்பாளிகள் பலர் சிறிய நிதியுதவிகள் பெற்றிருக்கின்றார்கள். அவற்றின் நடவடிக்கைகள் பெரும்பாலும் வெளிப்படையானவையாகவே இருந்தன.

இடதுசாரிகள் இந்த அமெரிக்கநிதியை எப்போதுமே பூதாகரமாகச் சொல்லி வந்திருக்கிறார்கள். திட்டவட்டமான ஆதாரமேதும் சொல்லப்படாமலேயே தொடர் அவதூறாக இந்தக் குற்றச்சாட்டை நிலைநிறுத்தியிருக்கிறார்கள். க.நா.சு., வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் பற்பல வருடங்கள் தொடர்ந்து இந்த அவதூறின் நிழலில் வாழ்ந்தனர். கிட்டத்தட்ட நிராதரவாக பிறர் கொடைகளில் வாழ்ந்த க.நா.சு. ‘சிஐஏ சீமான்’ என்று இடதுசாரிகளால் சொல்லப்பட்டார். அவர் சொந்தமாக ஒரு போர்டபிள் டைப்ரைட்டர் வைத்திருந்தது ஆதாரமாகக் கொள்ளப்பட்டது.

அது கடைசிவரைக்கும்கூட அவருக்கு கடுமையான மனவருத்தம் அளிப்பதாக இருந்தது. நான் முதன்முதலாக அவரைச் சென்னையில் சந்தித்தபோது ஒருவர் அவரை காபி சாப்பிட அழைத்தார். ‘பில்லை நீங்கதான் குடுக்கணும்…எனக்கு சிஐஏ மணியார்டர் இன்னும் வரலை’ என்று வருத்தமான சிரிப்புடன் சொன்னார். எனக்கு பாவமாக இருந்தது. இன்று தங்கள்மீது திட்டவட்டமான குற்றச்சாட்டு வரும்போது மிகையுணர்ச்சிகொள்ளும் இதே இடதுசாரிகள்தான் க.நா.சு. போன்ற மேதைகளை திட்டமிட்டு அவமதித்தனர்.

தமிழில் வெளிவந்த சிற்றிதழ்கள் எல்லாமே இடதுசாரிகளால் இவ்வாறு அவதூறு செய்யப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளன. காகிதப்பொம்மைகள் செய்து விற்று வாழ்ந்த சி.சு.செல்லப்பா நடத்திய எழுத்து சி.ஐ.ஏ.யின் நிதியால் நடப்பது என்றார்கள். கணையாழி சி.ஐ.ஏ. இதழ் என்றார்கள்.

கெடுபிடிப்போர் காலகட்டத்தில் இந்தியாவுக்கான அமெரிக்க நிதியை பெருமளவுக்குப் பெற்றவர்கள் இந்துத்துவ அமைப்புகள் என்று என்னிடம் இந்துத்துவ இயக்கத்தில் முன்பிருந்த ஓர் இதழாளர் சொல்லியிருக்கிறார். டி.பி.டெங்கடியின் பாரதிய மஸ்தூர் சங்க் நிதி பெற்று உருவானது என ஒரு பரவலான பேச்சு அன்று இருந்தது. அது உண்மையாக இருக்கலாம். இடதுசாரி ‘அபாயத்துக்கு’ எதிரான ஒரு கொள்கை நடவடிக்கையாக அது பெறப்பட்டிருக்கலாம்.

தொண்ணூறுகளிலேயே இந்தியாவுக்கான இடதுசாரி நிதி நின்றுவிட்டது. சோவியத் கலாசார மையங்கள் பல இடங்களில் மூடப்பட்டன. கெடுபிடிப்போர் மறைந்ததும் அமெரிக்க நிதியும் இல்லாமலாகியது. ஆகவே இந்திய சிந்தனைச்சூழலில் ஒரு பெரிய ’வெற்றிடம்’ ஏற்பட்டது. அந்த இடத்தை பல்வேறு தன்னார்வக்குழுக்கள் ஆக்ரமிக்க ஆரம்பித்தன.

எண்பதுகள் முதலே தன்னார்வக்குழுக்கள் இந்தியாவில் செயல்பட்டுவந்தாலும்கூட தொண்ணூறுகளில்தான் அவை காளான்போலப் பரவின. தொண்ணூறுகளுக்கு முன்னர் இந்தியாவில் தன்னார்வக்குழுக்கள் நேரடியாகவே கிறித்தவ அடையாளம் கொண்டவையாக, கிறித்தவ சபைகளின் கண்காணிப்பில் உள்ளவையாக இருந்தன. இவற்றை WACC போன்ற அமைப்புகள் ஒருங்கிணைத்தன. கேரளத்தில் இடதுசாரிகளின் முதல் ஆட்சிக்கு எதிரான இவர்களின் போராட்டத்திற்குப்பின் இடதுசாரிகள் இவர்களை எப்போதும் கண்காணிப்பின் நிழலிலேயே வைத்திருந்தனர். ஆனால் தமிழகத்தில் அப்படி இருக்கவில்லை.

அப்போதே தமிழகத்தின் சில எழுத்தாளர்கள் இவ்வமைப்புகளுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். இவ்வமைப்புகள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் சேவைகள் செய்வது, அதையொட்டி மதமாற்றப்பணிகளில் ஈடுபடுவது ஆகியவற்றையே செய்துவந்தார்கள். அவற்றுடன் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் சிறு ஊதியம் பெறுவது இயல்பான ஒன்றாகவே இருந்தது. உண்மையான சமூகசேவைகளையும் இவர்கள் செய்துவந்தார்கள்.

தொண்ணூறுகளின் வெற்றிடத்தை இந்த தன்னார்வக்குழுக்கள் விஸ்வரூபம் எடுத்து நிரப்பினர். இப்போது தன்னார்வக்குழுக்களின் முகம் மாறிவிட்டிருந்தது. அவை முற்போக்குப் பாவனைகள் கொண்டவையாக, மக்கள் பிரச்சினைகளுக்கு நேரடியாக போராடக்கூடியனவாக உருவம் கொண்டன. அதாவது அவை இடதுசாரி முகமூடியை அணிந்துகொண்டன. தன்னார்வக்குழு என்பதற்குப் பதிலாக செயலார்வக்குழு என்று தங்களைச் சொல்லிக்கொண்டார்கள். மனிதஉரிமை, கிராமமறுமலர்ச்சி போன்ற திட்டங்களை முன்வைத்தார்கள்.

WACC போன்ற அமைப்புகள் இங்கே பிரம்மாண்டமாக வலைவிரிக்க ஆரம்பித்தது இக்காலகட்டத்திலேயே. அவற்றின் பணிகளுக்கு பெரும்நிதி வர ஆரம்பித்தது. அவற்றின் நிர்வாகிகள் மாபெரும் வணிகநிறுவனத் தலைவர்களின் வாழ்க்கையை மேற்கொள்ள ஆரம்பித்தனர். சக்கரவர்த்திகளைப்போல அவர்கள் உலாவர தொழுதுண்டுபின்செல்லும் கூட்டம் ஒன்று உருவானது. அவர்களின் நேரடித்தலையீடு எழுத்தில், சிந்தனையில் நிகழ்ந்தது. ஒருபோதும் அப்படி ஒரு நிலை முன்பிருந்ததில்லை.

அது ஓர் ஆச்சரியமான திருப்பம்.. அதுவரை வலதுசாரிநிதி இடதுசாரிநிதி என்றிருந்த பிரிவினை மறைந்தது. வலதுசாரி ஏகாதிபத்தியத் தரப்பு இடதுசாரித்திட்டங்களும் இடதுசாரி கோஷங்களும் கொண்ட அமைப்புகளை உருவாக்கி அவர்களுக்கு நிதி வழங்கியது. அந்த அமைப்புகளுக்கு இடதுசாரிகள் சாரிசாரியாகச் சென்றார்கள். ‘இடதுமுகம் கொண்ட ஏகாதிபத்தியக் கருவிகள்’ என இந்தத் தன்னார்வக்குழுக்களைச் சொல்லலாம்.

இந்தத் தன்னார்வக்குழுக்கள் எல்லா தளங்களிலும் இலக்கியம் மற்றும் அரசியல் சிந்தனைச்சூழல்களில் செல்வாக்கைச் செலுத்தின. பல கருத்தரங்குகள் அவற்றின் ஆதரவில் நடத்தப்பட்டன. அவ்வாறு அவை ஒருங்கிணைத்த அரங்குகளில் பேசப்பட்ட விஷயங்கள் சில மாதங்களிலேயே சிற்றிதழ்களில் பேசுபொருட்களாக ஆனதை எவரும் சிற்றிதழ்களின் உள்ளடக்கத்தில் காணலாம். இவை எதுவும் ரகசியங்கள் அல்ல.

இவற்றின் இரட்டைநிலைபாட்டை நம்மால் இன்று தெளிவாகப் புரிந்துகொள்வது கடினம். எண்பதுகள் வரை அமெரிக்கநிதி பல்வேறு கல்வி-பண்பாட்டு அமைப்புகள் மூலம் இந்தியாவுக்கு வரும்போது அது இந்துத்துவ அமைப்புகளுக்கு சாதகமானதாக இருந்தது. அதே அமெரிக்க நிதி அன்று WACC போன்ற கிறித்தவ அமைப்புகள் மூலம் வடகிழக்குக்கு வந்துசேரும்போது இந்தியதேசியத்துக்கு எதிரான போராட்டங்களை உருவாக்கியது. ஆனால் இடதுசாரி நிதி என்பது முழுக்கமுழுக்க இந்தியதேசிய ஒற்றுமைக்குச் சாதகமானதாகவே இருந்தது. ஏனென்றால் சோவியத் ருஷ்யா இந்தியா சிதிலமாவதை விரும்பவில்லை.

ஆனால் கெடுபிடிப்போர் முடிந்தபின் இடதும் வலதும் ஒன்றாயின. இடதுசாரிகள் ஏகாதிபத்தியத்தின் ஆயுதங்களான தன்னார்வக்குழுக்களுடனும் பல்வேறு கிறித்தவ மதமாற்ற நிதியமைப்புகளுடனும் சேர்ந்து செயல்படுவது பரவலாக ஆகியது. அந்த அமைப்புகள் அதற்கான வெளிமுகத்தை உருவாக்கிக்கொண்டன.

இந்த அமைப்புகள் நேரடியாகவே இந்திய அரசியல்சிந்தனைகளை வடிவமைக்க ஆரம்பித்த காலம் இதுதான். ஏகாதிபத்தியம் அதுவரை வடகிழக்கில் மட்டும் கடைப்பிடித்த கொள்கைகளை தெற்கிலும் ஆரம்பித்தது. இந்திய தேசியத்துக்கு எதிரான திரிபுகளும் அவதூறுகளும் வெறுப்புகளும் ஆய்வுகள் என்ற பேரில் ஊக்குவிக்கப்பட்டன. அந்த ஆய்வுநூல்கள் அவர்களால் இந்தியாவின் குரல்களாக உலகமெங்கும் கொண்டுசெல்லப்பட்டன. அந்த நூல்கள் அதன்பின் இங்குள்ள செய்தி ஊடகங்களில் மேற்கோள்களாகத் திரும்பிவந்தன. அவை நம் நாளிதழ்களையும் சிற்றிதழ்களையும் நிரப்பின.

இந்திய எதிர்ப்புப் பிரச்சாரம் இன்று இந்திய ஊடகங்களில் ஒரு முக்கியமான ‘அஜெண்டா’வாக விளங்குகிறது. இந்திய அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக, இந்திய முதலாளிவர்க்கத்தின் ஆதிக்கத்துக்கு எதிராக இப்பிரச்சாரங்கள் செய்யப்பட்டால் அதை இடதுசாரி நோக்கு என்று புரிந்துகொள்ளலாம். அது என்றும் இருந்தது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மாறாக இவை இந்தியாவை ஒருங்கிணைத்துள்ள அடிப்படை தேசிய விழுமியங்களுக்கு எதிரான அவதூறுகளாகவும் திரிபுகளாகவும் இருந்தன. இந்திய தேசியம் என்பது இந்துதேசியம் மட்டுமே, அதில் பிற சிறுபான்மையினர் எல்லாருமே அன்னியர்கள், அடக்கப்படுபவர்கள் என்பது இவர்களின் தரப்பு. இந்துமதம் என்பது பிராமண, உயர்சாதியினரின் மதநம்பிக்கை மட்டுமே, பிற அத்தனைபேரும் இந்துமதத்தால் ஆக்ரமிக்கப்பட்டவர்கள், அடிமைப்படுத்தப்பட்டவர்கள் என்பது இரண்டாவது தரப்பு.

ஆக, இந்தியாவின் தேசியம் என்பது ஒரு உயர்சாதிக்குழுவால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆதிக்கமுறை மட்டுமே என்றும் இந்தியாவின் பெரும்பான்மையினரான மக்கள் அதை எதிர்த்துப் போராடவேண்டும் என்றும் தொண்ணூறுகளுக்குப்பின் உருவாகி வந்த இந்தப் புதிய கருத்தியல்தரப்பினர் அறைகூவுகிறார்கள். இந்துமதமே இந்தியா, ஆகவே இந்துமதமும் இந்தியாவும் அழிக்கப்படவேண்டியவை என்கிறார்கள். ‘இந்து இந்தி இந்தியா’ என்ற நூல் வழியாக எஸ்.வி.ராஜதுரை இந்த வெறுப்புக்குரலை, பிரிவினைக்குரலை தமிழகத்தில் கோட்பாடாக முன்வைத்தார். இன்று பல்வேறு வாய்கள் வழியாக ஒலிப்பது இந்த முன்னோடிக்குரல்தான்.

முழுக்கமுழுக்க மதமாற்ற நோக்கம் கொண்ட நிதியமைப்புகளின் தரப்பு இது. அவர்கள் உருவாக்க விரும்பும் நம்பிக்கையே இதுதான். இந்திய தேசியமும் இந்துமதமும் தங்களுக்கு எதிரானவை என்ற வெறுப்பை அடித்தள மக்களிடையே உருவாக்குவது. அக்குரல்களை முன்வைத்தவர்கள் அன்றுவரை தமிழகத்துக்குள் செயல்பட்ட சிறிய குரல்களாகவே இருந்தார்கள். நிதியமைப்புகள் அவர்களை உலகமெங்கும் கொண்டுசென்றன.இந்திய அரசியலில் பிற்படுத்தப்பட்டோர் பெரும் சக்தியாக எழுந்த காலகட்டத்தில் இந்தத் திரிபு நிகழ்த்தப்பட்டது என்ற யதார்த்தம் இவர்களின் பிரச்சாரத்துக்குத் தடையாக அமையவில்லை.

இந்துமதம் இந்து தேசியத்துக்கு எதிரான குரலுக்கு இந்திய சிந்தனையில் இடமில்லையா என்ன? கண்டிப்பாக உண்டு. நான் இந்துமதத்துக்கு எதிரான அயோத்திதாசரின் தாக்குதல்களை மிகமுக்கியமான கருத்துத்தரப்பாகவே காண்கிறேன். அத்தகைய மாற்றுக்குரல்கள் வழியாகவே ஒரு தேசியம் தன்னை சமநிலையில் வைத்துக்கொள்ளமுடியும். மாற்றிக்கொள்ளமுடியும். இந்தியா எல்லா மாற்றுக்குரல்களுக்கும் இடமளிக்கும் ஒரு விவாதவெளியாகவே இருக்கவேண்டும்.

அந்த மாற்றுக்குரல் உண்மையான தரவுகளின் அடிப்படையில் இருக்கவேண்டும். உண்மையான கொள்கையிலிருந்து பிறக்கவேண்டும். அந்த மாற்றுக்குரல்களுக்குப் பின்னால் ஏகாதிபத்தியத்தின் நோக்கங்கள் இருக்குமென்றால் அது மிக மிக கவனத்துக்குரியது. அந்நூல்களை அந்த ஏகாதிபத்திய நிறுவனங்களின் பின்னணியையும் கருத்தில்கொண்டே அணுகவேண்டும். நான் சொல்ல விரும்புவது அதை மட்டுமே.

இக்காலகட்டத்தில் தமிழகத்தின் இடதுசாரிக் குழுக்களிடையே உள்மோதல்கள் வலுத்தன. இந்த உள் மோதல்கள் மேற்குறிப்பிட்ட தன்னார்வக்குழுக்களின் செல்வாக்கால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை என அவர்கள் இதழ்களிலேயெ சொல்லப்பட்டுள்ளது. அவர்களில் ஒருசாரார் தமிழ்த்தேசியம் நோக்கி நகர்ந்தனர். இந்தச் சிக்கல்களில் இடதுசாரிக்குழுக்களில் இருந்து விலகியவர்களை இந்தத் தன்னார்வக்குழுக்கள் உள்ளே இழுத்துக்கொண்டன. ஆகவே தன்னார்வக்குழுக்களைப்பற்றி இடதுசாரி இதழ்கள் கடுமையாக எதிர்வினையாற்றின.

இன்னொருபக்கம் ஃபோர்டு ஃபவுண்டேஷன் போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள். அவற்றையும் ஒற்றைப்படையாகச் சொல்வது கடினம். இந்திய அரசின் ஆதரவுடன் வெளிப்படையாகவே ஃபோர்டு ஃபவுண்டேஷன் இங்கே கலாச்சாரப்பணிகளில் ஈடுபட்டது. பல பணிகள் மதிக்கத்தக்கவை, முக்கியமானவை. குறிப்பாக நாட்டாரியல் போன்ற தளங்களில் அவர்கள் தகவல்சேகரிப்பு, நாட்டார் கலைகள் மீட்பு போன்ற பணிகளையே செய்கிறார்கள். உதாரணமாக, ஃபோர்டு ஃபவுண்டேஷன் இல்லாவிட்டால் ந.முத்துசாமி செயல்பட்டிருக்கமுடியாது. தெருகூத்துக்கு அவர் புத்துயிரளித்தார் என்பதை நாம் மறுக்கமுடியாது.

ஆனால் அதே ஃபோர்டு ஃபவுண்டேஷனின் நிதியால்தான் பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியின் நாட்டாரியல்துறை சனங்களின் சாமிகள் போன்ற கருத்தரங்குகளை பெரும் செலவில் நடத்தியது. இந்து மதத்தில் இருந்து பல்லாயிரம் வருடங்களாக பிரிக்கமுடியாமலிருந்துவரும் சிறுதெய்வங்கள் அனைத்தும் இந்துமதத்துக்கு வெளியே உள்ளவை, அவை இந்துமேலாதிக்கத்தால் அடிமைப்படுத்தப்பட்டவை என்ற கருத்தை இடதுசாரிகள் மனதில் திட்டவட்டமாக விதைத்தது. அந்தத் தெய்வங்களை வழிபடுபவர்கள் எவரும் இந்துக்களல்ல என்ற பெரும்பிரச்சாரத்தை முன்னெடுத்தது.

ஆரம்பத்தில் கல்வியாளர்களாலும் சிற்றிதழாளார்களாலும் ஆய்வரங்குகளில் கூறப்பட்ட இந்தக்கருத்து எளிய வடிவில் அடுத்து மதப்பிரச்சாரகர்களுக்குச் சென்று சேர்ந்தது. மோகன் சி லாஸரஸ் அல்லது சாது அப்பாத்துரை உரைகளில் இன்று அது பேசப்படுகிறது. மதமாற்றத்துக்கான இரைகளாக உள்ள அடித்தள மக்கள் மீதான உளவியல்தாக்குதலின் ஆயுதமாக அது உள்ளது.

ஃபோர்டு ஃபவுண்டேஷன் வடகிழக்குப்பகுதிகளில் இந்திய எதிர்ப்பரசியலின் அடித்தளங்களை உருவாக்கியது. அங்கே பழங்குடிப்பண்பாடுகள் நாட்டார் பண்பாடுகளை ஆராயும் பாவனையில் அவர்களிடம் அவர்களைப்பற்றிய திரிபுபட்ட சித்திரங்களை உருவாக்கினார்கள் என்று சொல்லப்படுகிறது. உலகின் பலநாடுகளில் அவர்கள் பெரும் பண்பாட்டுத்திரிபு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது இன்று பொதுவாகவே கருதப்படுகிறது.

தொண்ணூறுகள் வரை ஃபோர்டுஃபவுண்டேஷன் என்பது பொதுவாக கம்யூனிச எதிர்ப்பையே தன் முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது. இன்று அதன் செயல்கள் மிகச்சிக்கலான ஒரு வலைப்பின்னலாக உள்ளன. அதன் ஒட்டுமொத்த எதிர்மறைப்பங்களிப்பைப் பற்றி குற்றம்சாட்டப்பட்டால் உடனே அதன் நல்ல பங்களிப்புகள் பதிலாகச் சுட்டப்படும்.

ஆனால் பொதுவாகத் துறைசார்ந்தவர்கள் ஃபோர்ட் ஃபவுண்டேஷனை எப்போதும் ஐயத்துடன் பார்ப்பதை கவனித்திருக்கிறேன். அதிலும் சென்ற ஐந்தாண்டு காலமாகவே ஃபோர்டு ஃபவுண்டேஷனைப்பற்றிய ஆழமான விமர்சனங்கள் கண்ணுக்குப்படுகின்றன.அதன் பண்பாட்டு நடவடிக்கைகளில் சாதாரணமாகப் பங்களிப்பாற்றும் சேவையாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் கலையார்வலர்களுக்கும் அந்தப் பின்னணியே புரியாமலிருக்கலாம்.

இந்த நிதியுதவிகளை ஐந்தாம்படைகள் மட்டுமே பெறுகின்றன என்று நான் சொல்லவரவில்லை. இதெல்லாம் எந்த அடிப்படையில் கொடுக்கப்படுகின்றன, இவற்றுக்குப் பிரதியுபகாரமாக என்ன செய்யப்படுகிறது, இவை ஏன் இத்தனை பூடகமாக கொடுக்கப்படுகின்றன, இந்தத் தொடர்புவலை எப்படிச் செயல்படுகிறது என்பதை நாம் கவனிக்கவேண்டும் என்று மட்டுமே சொல்கிறேன். ஃபோர்டு ஃபவுண்டேஷன் அமெரிக்காவில் மிக முக்கியமான ஒரு நலம்நாடும் நிறுவனம் என்கிறார்கள். அது பிறநாடுகளில் செய்யும் செயல்களுக்கு வேறு பின்னணி உண்டா?

உதாரணமாக, காலச்சுவடு நிறுவனம் புதுமைப்பித்தன் ஆவணக்காப்பகத்தை ஓர் அன்னிய பண்பாட்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஆரம்பித்தது. ஆனால் அந்நிறுவனத்தின் பின்னணி ஃபோர்டு ஃபவுண்டேஷன் என்னும்போது காலச்சுவடு எடுக்கும் இந்திய எதிர்ப்பரசியல் நிலைபாடுகளை அதையும் கணக்கில்கொண்டே யோசிக்கவேண்டும், நான் சொல்ல வருவது அதைப்பற்றி மட்டுமே.

நிதியுதவிகளின் பின்னணி வெளிப்படையாக பேசப்படவேண்டும். நிதியுதவிகளையும் கணக்கில்கொண்டே அவை உருவாக்கும் கருத்துக்களை விவாதிக்கவேண்டும்.

*

நான் இந்த நிதிப்பின்னணியை இந்த விஷயத்தை கவனப்படுத்த மட்டுமே சொல்கிறேன். இங்கே கருத்துக்கள் உருவாவதன் பின்னணியைப் பார்க்காமல் விவாதிப்பதில் பொருளில்லை என்பதையும் கண்ணுக்குத்தெரியாத ஒரு பெரும் சக்தி இந்த கருத்தியல் விவாதங்களுக்குள் காய்நகர்த்துகிறது என்பதையும்தான். இப்போது மிகமிகக் குறைவான தகவல்களுடன் வெற்று ஊகங்களுடன் இதை நான் சொல்லலாம். ஆனால் இந்தக் கவனம் வரும்காலங்களில் அதிகரிக்கும். இன்னும் அதிக தகவல்கள் வெளிவரும். என்னுடையது ஒரு முன்னோடிக்குரல்.

இந்தக்குரல் எதிர்கொள்ளப்பட்ட விதம் நான் எதிர்பார்த்தது போலத்தான். நான் தமிழில் கருத்துருவாக்கத்தின் பின்னணியில் நிதியுதவிகள் உள்ளன\ என்று வெளிப்படையாக ஏற்கனவே பேசப்பட்ட தகவலைச் சொல்லி கருத்துக்களுடன் சேர்த்து அதைப் பற்றி யோசிக்கவேண்டும் என்கிறேன். நான் அப்படி ஊகிப்பதற்கான முதற்கட்ட ஆதாரத்தையும் அவ்வமைப்புகளையும் சுட்டிக்காட்டுகிறேன். அந்தக்குற்றச்சாட்டை எனக்கு முன்னால் முப்பதாண்டுகளாகவே எப்படி இடதுசாரிகளே சொல்லிவந்திருக்கிறார்கள் என்கிறேன். அப்போதுகூட இந்தத் தெளிவற்ற ஆதாரமென்பது ஒரு ஊகத்துக்கான முகாந்திரமே என்றும், இந்த விஷயத்தில் இப்போது உறுதியான ஆதாரங்கள் முன்வைக்கப்படமுடியாதென்றும் சொல்கிறேன்.

அதற்குப்பதிலாக என்னிடம் உறுதியான ஆதாரங்களையே கேட்கிறார்கள். எப்படிப்பட்ட ஆதாரங்கள்? நிதி பெற்றமைக்கு ஆவணச்சான்றுகள். அப்படி ஆவணச்சான்று கிடைத்தால்கூடப் போதாது, இந்த நிதியினால்தான் இந்தக் கருத்து எழுதப்பட்டது என்று புறவயமாக நிரூபிக்கவும் வேண்டும். இல்லையேல் அது அவதூறு!

நான் முன்வைத்த மையமான விஷயத்தை அப்படியே தாண்டிச்சென்று ஏன் முதலில் நினைவுப்பிழையாகச் சொன்னாய் என்கிறார்கள். நீ மட்டும் அரசாங்க ஊதியம் பெறவில்லையா என்கிறார்கள். ஃபோர்டு ஃபவுண்டேஷன் நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறதே என்கிறார்கள். ஃபோர்டு ஃபவுண்டேஷன் நிதி பெற்ற அத்தனைபேரையும் தனித்தனியாக கட்டுரை எழுதி கண்டித்துவிட்டு பேசு என்கிறார்கள். மொத்தத்தில் பிற பிரச்சினைகளில் ஆழ ஆழச்சென்று வேரைத் தேடுபவர்கள் இதில் மட்டும் வைக்கோல் போர்களை மேலே மேலே அள்ளிப்போட்டு மூட முயல்கிறார்கள்.

கட்டக்கடைசியாக எனக்குச் சொல்லப்படும் பதில் 1992-இல் எனக்கு அளிக்கப்பட்ட கதா விருது தந்த அமைப்பு ஃபோர்ட் ஃபவுண்டேஷனின் நிதியை எப்போதோ பெற்றிருக்கிறது என்பது மட்டுமே. கதா விருது மத்திய அரசு உயரதிகாரியாக இருந்த தர்மராஜன் அவர்களின் மனைவி கீதா தர்மராஜனின் அமைப்பு. மத்திய அரசின் சில சமூகநலத்துறை நிதிகளால் அமைக்கப்பட்டது. அந்த விருது இந்தியாவின் பதினெட்டு மொழிகளிலும் உள்ள எழுத்தாளர்களுக்கு ஐந்தாறுவருடம் வழங்கப்பட்டது.

முதல்விருது சுந்தர ராமசாமிக்கு. அடுத்தவிருது எனக்கு. என்னுடன் எம்.டி.வாசுதேவன் நாயர் உட்பட பல ‘முற்போக்கு’க் கலைஞர்களும் பரிசுபெற்றனர். விருதுடன் ரூ 2000 அளிக்கப்பட்டது. போக்குவரத்துச்செலவு இந்திய ரயில்வே இலவசமாக அளிக்க தமிழ்நாடு அரசு மாளிகை தங்கும் வசதி அளிக்க இந்திய ஜனாதிபதியால் அவ்விருது வழங்கப்பட்டது. ஏதோ ஒரு திட்டத்துக்காக ஃபோர்டு ஃபவுண்டேஷனின் நிதியுதவியை கதா பெற்றிருப்பது இருபது வருடம் கழித்து இன்று தெரியவருவதனால் நானும் ஃபோர்டு ஃபவுண்டேஷனின் உள்ளூர் முகவர்களும் நிகரானவர்கள் என்று ஒருவர் சொல்வாரென்றால், மாபெரும் மதமாற்ற தன்னார்வக்குழுக்களின் நிதி பெறுவதை அதைக்கொண்டு நியாயப்படுத்துவாரென்றால், அது மட்டுமே அவர்களின் தரப்பு பதில் என்றால் என்ன சொல்ல?

ஒருவர் அவர் தொடர்புகொள்ளும் ஓர் அமைப்பு, அல்லது மனிதர் ஃபோர்டு ஃபவுண்டேஷனுடைய அல்லது வேறு தன்னார்வக் குழுக்களுடைய ஆதரவைப் பெற்றிருக்கிறார் என்பதை எப்படி அறியமுடியும்? ஒரு கட்டத்தில் அறிந்தபின் என்ன செய்யமுடியும்? ஆச்சரியப்படலாம். வருத்தப்படலாம். ஃபோர்டு ஃபௌண்டேஷன் ஆதரவில் எம்.டி.முத்துக்குமாரசாமி நடத்திய நாட்டார்கலைகள் பற்றிய ஒரு திருவிழாவில்கூட நான் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டிருக்கிறேன் – சொந்தச்செலவில். அவர் மீதான நம்பிக்கையும் அந்தப்பணி மீதான ஈடுபாடுமே காரணம். அவ்வமைப்பின் பின்னணி பின்னர் தெரியவந்தால் என்ன செய்யமுடியும்? அந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டதனால் நானும் ஃபோர்டு ஃபவுண்டேஷனின் ஆதரவாளர் என்றா அர்த்தம்?

ஆனால் சொந்தச்செலவில் நாட்டார்கலைகளை மீட்கப்போராடும் ஹரிகிருஷ்ணன் தான் எனக்கு முக்கியமானவர். அவருக்கே நான் என்றும் என்னுடைய அதிக கவனத்தைக்கொடுப்பேன். எம்.டி.எம்மின் கருத்துக்களை நான் இப்போதும் கவனிப்பேன், ஆராய்வேன். கொஞ்சம் எச்சரிக்கையுடன். அவ்வளவுதான்.

அப்படி ஓர் ‘உதவிபெற்ற’ ஒரு அமைப்புடன் ஒருவர் தொடர்பு கொள்வதும், அந்த அமைப்பு மனிதர்கள் நேரடியாக பிராஜக்ட் சமர்ப்பித்து அலைந்துதிரிந்து நிதிபெற்று அதன் விதிகளுக்குட்பட்டு ‘ஆராய்ச்சி’ செய்வதும் சமம்தான் என வாதிடும் புத்திசாலித்தனங்கள் ஒருபோதும் வாசகனின் மனதுக்குள் செல்லாது. முன்னரே ஒரு தரப்பை எடுத்துக்கொண்டவர்களுக்கு மட்டுமே சால்ஜாப்புகளுக்குப் பயன்படும்.

என்னதான் ஆதாரத்துடன் எவ்வளவுதான் முக்கியமான விஷயங்களைச் சொன்னாலும் தங்கள் நிலைபாடுகளில் உறுதியாக இருப்பவர்கள் அதை கவனிக்கப்போவதில்லை. தங்கள் சொந்த காழ்ப்புகள் மற்றும் கருத்துக்களுடன் வேண்டியவர்களை காக்கவும் வேண்டாதவர்களை வசைபாடவும் மட்டுமே முயல்வார்கள். இவர்கள் எவருக்கும் இதில் ஏதாவது உண்மை இருக்குமா என்றே தோன்றவில்லை. உண்மையாக இருந்தால் என்னாகும் என மனம் பதைக்கவில்லை.

மாறாக என்னை என் சொற்களைக்கொண்டு எப்படி மடக்குவது, என்ன எதிர்வாதங்களை கண்டுபிடிப்பது, எதை எதனுடன் முடிச்சுப்போடுவது என்ற பதற்றம் மட்டுமே இருக்கிறது. வாதிட்டு சமாளிக்கும் முனைப்பு மட்டுமே வெளிப்படுகிறது. இதுவே இவர்கள் யாரெனக் காட்டுகிறது. இவர்களுக்காக அல்ல, இதை பொதுவாசகர்களுக்காக எழுதியிருக்கிறேன்.

இந்தத் திரிபுவாதம் அல்லாமல் இந்த அடிப்படையான வினாவுக்கு மனசாட்சியின் குரலில் அமைந்த ஒரேயொரு பதில்கூட எழவில்லை என்பதே நான் சொன்னவற்றில் உள்ள உண்மைக்கான சான்று.

இது ஒரு அபாயகரமான புள்ளி. இதைத் தொட்டுவிட்டேன் என்பதனால் நான் அவதூறுகளை திரிப்புகளை தொடர்ந்து சந்திக்கவேண்டியிருக்கும். வசைகளையும் நக்கல்களையும் கேட்கவேண்டியிருக்கும். அது இன்னும் கொஞ்சநாள் இணையத்திலும் சிற்றிதழ்களிலும் நிகழும். நடக்கட்டும். அது தெரிந்தே இதில் இறங்கினேன்.

சரிதான், என்னைப்பற்றி இனி என்ன புதியதாகச் சொல்லமுடியும்? வலதுசாரி, இந்துத்துவ, தேசியவெறிகொண்ட, பிற்போக்கான,சாதியவாதியான, மனக்கோளாறுகொண்ட, தனிமனித அறமே இல்லாத, காப்பியடித்து கதைகளை எழுதக்கூடிய, ஆணவமும் தன்முனைப்பும் கொண்ட, விவாதங்கள்மூலமே நிலைநிற்கக்கூடிய, பொய்களை மட்டுமே சொல்லக்கூடிய, சுயமோகம் கொண்ட, தமிழ்விரோதி –அவ்வளவுதானே, அப்படியே வைத்துக்கொண்டு இந்த விஷயத்தை மேலே பேசுவோம்.

இப்போதைக்கு நிறுத்திக்கொள்கிறேன். நான் முன்வைத்த இந்தப்பிரச்சினை மட்டும் முச்சந்தியில் ஒரு பாறாங்கல் மாதிரி கிடக்கும். அது கேள்விகளை உருவாக்கிக்கொண்டே இருக்கும்.

ஜெ

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் July 2, 2012

குறிப்பிடப்படும் கட்டுரைகள்

நிதிப்பிள்ளைகளைப்பற்றி…

அன்னியநிதி ஒரு வரைபடம்

பழைய கட்டுரைகள்

அன்னியநிதி பற்றி…


போர்டு பவுண்டேஷனும் சி ஐ ஏவும் ஜேம்ஸ் பெட்ராஸ்

சிஐஏவும் ஃபோர்ட் பவுண்டேஷனும் மாற்று ஊடகங்களில் – இன்னொரு கட்டுரை

[ இக்கட்டுரையை கூகிள் மொழியாக்கத்தில் தமிழிலும் வாசிக்கலாம்]

இந்திய அரசும் ஃபோர்டு பவுண்டேஷனும்

அன்னியந்தி கடைசியாக

ஆய்வுலகின் அன்னியக்கரங்கள்

அந்நியநிதி ஓர் அறிக்கை



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard