New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: BOOK


Guru

Status: Offline
Posts: 24601
Date:
BOOK
Permalink  
 


 Entry  -நுழைவாயில்

பைபிள் எனும் கிறிஸ்துவ சமயத்தின் புராணக் கதை தொகுப்பு நூல், உலகின் பெரும்பாலான மொழிகளில் பெரும் பொருட்செலவில் மொழிபெயர்க்கப்பட்டு, மேலும் ஒவ்வொரு நாட்டிலும் ஆண்டிற்கு பல்லாயிரம் கோடிகள் செலவில் உலகெங்கும் பரப்பப்படும் கதைகளும் ஆகும்.

மின்னணுப் புரட்சியும் கைப்பேசியில் வலையுலகமும் உலகை ஒரு சிறு கிராமமாக சுருக்கிவிட்டது. உலகின் பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்களின் பல முக்கிய பதவிகளில் இந்தியர் உள்ளனர். நம்மிடையேயும் பல்வேறு சமய மக்கள் வாழ்கின்றனர். தங்கள் சமயமே உயர்ந்தது என திணிக்கபட்ட புனையலை கேட்டு அதே ஊகத்தில் பாரத இறை வரலாற்றை -வழிபாட்டையை அறியாது பேசுவோர் காண்கிறோம்.

சமுதாயத்தில் நல்லிணக்கம் தோன்ற அனைத்து மக்க்ளிடையே உரையாடல்கள் அவசியம், அந்த நிலையில் பிற சமயங்களைப் பற்றிய வரலாற்றுப் புரிதல் அவசியம். கிறிஸ்துவம் பற்றிய தற்போதைய பன்னாட்டு பல்கலைக்கழக ஆய்வுகளின் இன்றைய நிலையினை-உண்மைகளை இந்நூலில் தருகிறோம்.

கிறிஸ்துவ சமயத்தின் தொன்மக் கதைகளைப் பற்றிய ஆய்வுகள் 1970க்குப் பின்பாக, தொல்லியல் ஆய்வுகளின் உண்மை அடிப்படையில் என்ற நோக்கம் மேலோங்கத் தொடங்கியது. அமெரிக்க ஐரோப்பா நாடுகளில் எழும்பிய கருத்துச் சுதந்திரம், விஞ்ஞானப் புரட்சி, சர்ச் உண்மையினைத் தடுக்கும் சக்தி குறைந்திட பல்கலைக் கழகங்களின் ஆய்வ்களும் மேம்படத் தொடங்கின.

விவிலியத்தின் முற்பகுதியான எபிரேய பைபிளினை வரலாறு எனக் கொண்டு எழுந்த தொல்லியல் அகழ்வாய்வுகள் அனைத்தும் பொய் எனக் காட்டிட, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பல்கலைக் கழக தொல்லியதுறை இயக்குனர்  இஸ்ரேல் பின்கல்ஸ்டீன் தன் நூலின்(The Bible Unearthed) முன்னுரையில் கூறுவது

//விவிலிய உலகம் இஸ்ரேல் ஒரு மிகச் சிறிய வளர்ச்சியற்ற ஒரு சாதாரண பகுதியில் மக்கள் எதிர்காலம் பற்றிய பயங்கள் வருமை, போர் , வியாதிகள், அநியாயங்கள், பஞ்சம் போன்றவையில் தவித்த மக்கள் பகுதி தான், பைபிள் கதைகள் - கூறப்பட்டுள்ள புனையல்கள் - ஆபிரகாமை கடவுள் தேந்தெடுத்தார், பின் பாபிலோனிலிருந்து அவர் கானான் வந்தார் என்பது, எகிப்திலிருந்து மோசே மூலம் மக்களை அடிமைப்பாட்டிலிருந்து மீட்டு, பின் யூதேயா -இஸ்ரேல் நாடுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் இவை ஏதும் ஒரு இறை வெளிப்பாடு இல்லை, மனிதச் சிந்தனையின் கற்பனை வளம்  மிக்கக் கதைகள்.//-

அமெரிக்க தொல்லியல் பேராசிரியர் வில்லியம் டேவர் கூறுவது கடந்த 150 ஆண்டுகளில் எகிப்தில்  எபிரேயர்கள் வாழ்ந்தார்கள், பாலைவனத்தில் 40 வருடம் அலைந்து இஸ்ரேல் வந்தனர் என்பதற்கு ஒரு சிறு ஆதாரமும் கிடைக்கவில்லை, பைபிள் கதைகளைக் காப்பாற்ற பல அறிஞர்களும் பல்வேறு ஊகக் கோட்பாடு கூறு மழுப்பினர்.[ii]

 உலகின் மூன்று பெருமதங்களில் ஒன்றாய் விளங்கும் கிறிஸ்துவத்தின் துவக்கம் மிகவும் மெதுவானது. கிறிஸ்துவ சமயத் தொடக்க வளர்ச்சியிஅனி ஆய்வு செத நூல்கள், அதனை சர்ச் வரலாற்றாசிரியர்களின் விமர்சன அடிப்படையில் காணும்போது, ஏசு பொகா 30 வாக்கில் இறந்தார் எனில், 40 வாக்கில் 1000 பேர் சர்ச் உறுப்பினராய் கிறிஸ்துவரானர், இது ஆண்டிற்கு 2.5% எனும் வேகத்தில் வளர்ந்தது.[iii]  கிறிஸ்துவ சர்ச்சின் ரோம் ஆட்சியின் கீழிருந்த 6 கோடி மக்களுள் பத்தாயிரம் என்ற நிலை எட்ட ஏசுவின் மரணத்திற்கு 100 ஆண்டு பின்பு தான் ஆனது, ஆனால் 10 லட்சம் பேர் எனும் நிலையில் 320 வாக்கில் இருந்த கிறிஸ்துவ மக்கல் தொகை, ரோமன் ஆட்சியில் அதிகார அங்கிகாரம் பெற்றிட அடுத்த 50 ஆண்டினும் 5.5 கோடியைத் தாண்டியது. கிறிஸ்துவம் பெருமதமாய் உரு பெறக் காரணம் ரோமன் ஆட்சியின் ஆதரவே அன்றி வரலாற்று ஏசுவோ, அதிசயங்களோ இல்லை என்பது வரலாற்று உண்மை

இயேசு கதைகளை சொல்லும் புதிய ஏற்பாடு எனும் 27 நூல் தொகுப்பு, மிகப் பழைய ஏடுகள்  என்பவை ஒரு சிறு புத்தகம் முழுதும் எனில் கூட 4ம் நூற்றாண்டு இறுதி அல்லது பிற்பாடு தான், புதிய ஏற்பாடு முழுமைக்கும் எனில் 6ம் நூற்றாண்டு ஏடுகள் அதிலும் பிற்கால திருத்தங்கள் என உள்ளதுஉள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் மாற்றாக வேறு இரு சொற்களாவது உள்ளது, எனவே உள்ள 6000 கிரேக்க ஏடுகள் எவ்விதத்திலும் நம்மை மூல ஏட்டிற்கு அழைத்துச் செல்ல இயலாது.[iv]

எபிரேய மொழி மொழிரீதியில் வளர்ச்சியற்றது, , உயிர் எழுத்துக்கள், ஏசுவிற்கு 800 ஆண்டு பின்பு தான் உருவாயிற்று, உயிர் எழுத்து சேர்த்து எழுதப்பட்ட மெசொடரிக் 10ம் நூற்றான்டு ஏடு தான் நம்மிடம் உள்ள எபிரேய பழைய ஏற்பாடு ஏடுகள்.(பழைய ஏடுகள் அழிக்கப்பட நம்மிடம் பழைய ஏடுகளே கிடையாது) 1947ல்  கிடைத்த சாக்கடல் சுருள்கள் ஏசுவிற்கு ஒரு நூற்றாண்டு முன் தான் இவற்றை மாற்றி இக்கதைகள் இன்றைய  வடிவில் இயற்றப்பட்டன என நிருபிக்கிறது.

யூத கிறிஸ்துவ தொன்மக் கதைகளில் சற்றும் வரலாற்று உண்மைகள் கிடையாது என்பது மிகத் தெளிவாய் தொல்லியல் ஆய்வுகள், பைபிளியல் ஏடுகள் நூலின் அமைப்பு ஆய்வுகள், மிகத் தெளிவாய் நிருபித்துவிட்டது. பைபிள் முழுமையும் பிற்காலத்தில் இஸ்ரேலின் ஆட்சி உரிமை எங்களுக்கு எனக் காட்ட மனிதக் கரங்களால் புனையப்பட்ட தொன்மக் கதைகளே.

வரலாற்று ரீதியில் இயேசு எனும் கிறிஸ்துவ கதை நாயகர் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரம் ஏதும் கிடையாது, இஸ்ரேல் - ரோம் நாடுகளில் முதல் நூற்றாண்டில் வாழ்ந்து நூல்கள் எழுதிய பல ஆசிரியர் எவரும் ஏசுபற்றி எழுதவில்லை. ஆயினும் பிற்கால சர்ச் இறந்த ஆசிரியர் சிலர் நூல்களில் நுழைத்த இடைச்செருகள் இன்று ஆய்வாளர்களால் நிராகரிக்கப்பட்டன.

இந்நூலில் நாம் வரலாற்றை பன்னாட்டு பல்கலை கழகங்கள் குறிக்கும்படிக்கு பொகா - பொமு என்றே (பழைய தவறான கிபி-கிமு தூக்கி எரியப்பட்டது, விவிலியக் கதைகளிலேயே ஏசு பிறந்த - இறந்த வருடங்களில் குழப்பம் உண்டு) பயன்படுத்துகிறோம். நாம் பெரும்பாலும் தமிழ் ERV அல்லது கத்தோலிக்க இன்றைய தமிழ் மொழி பெயர்ப்பை உபயோகித்தாலும் தேவை எனில் மூல எபிரேய- கிரேக்க சொற்களின் சரியான பொருளை எடுத்து கொண்டுள்ளோம்.

 



The Bible Unearthed  //The world in which the Bible was created was not a mythic realm of great cities and saintly heroes,but a tiny, down-to-earth kingdom where people struggled for their future against the all-too-human

fears of war, poverty, injustice, disease, famine, and drought. The historical saga contained in the

Bible—from Abraham’s encounter with God and his journey to Canaan, to Moses’ deliverance of the

children of Israel from bondage, to the rise and fall of the kingdoms of Israel and Judah—was not a

miraculous revelation, but a brilliant product of the human imagination.// 

[ii] Dever, William G. (2001), What Did the Biblical Writers Know and When Did They Know It? What Archaeology Can Tell Us about the Reality of Ancient Israel As archaeological evidence mounted, however, in the heyday of “biblical archaeology” between the 1930s and the 1950s, the question of Israelite origins grew more intractable. To everyone’sfrustration, new data brought more questions than answers. In fact, no one had ever found anyarchaeological evidence for the Exodus from Egypt. But in order to try to reconstruct the conquest andsettlement of Canaan, three competing theories or “models” eventually emerged, to which we shallturn presently.

[iii] Rodney Stark, The Rise of Christianity (1996)  ; W.V. Harris, ed., The Spread of Christianity in the First Four Centuries: Essays in Explanation (2005).’ Ramsey MacMullen, Christianizing the Roman Empire 

 [iv] Bart Ehrman, Helmet Koester

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

PREFACE முன்னுரை

இயேசு கதையில் ஒரு சம்பவம் -யோவான்4: 20 . சமாரியப் பெண் இயேசுவிடம்-  'நமது முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால்  யூதராகிய நீங்களோ, எருசலேம்தான் வழிபாட்டுக்குரிய இடம் என்று கூறுகிறீர்கள்' ..... 22 இயேசு - யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் யூதர்கள் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது.

 

யூதா-ஜெருசலேமில் வாழ்ந்தவர்கள் எமோரியர்கள், வென்றது யோசுவா. 

யோசுவா 10 :எருசலேமின் அரசனாகிய, அதோனிசேதேக், எபிரோனின் அரசனாகிய, ஓகாமுடனும் யர்மூத்தின் அரசனாகிய பீராமுடனும், லாகீசின் அரசனாகிய யப்பியாவுடனும், எக்லோனின் அரசனாகிய தெபீருடனும் பேச்சு வார்த்தை நடத்தினான். எருசலேமின் அரசன் இவர்களிடம், “என்னோடு வந்து கிபியோனைத் தாக்குவதற்கு உதவுங்கள். யோசுவாவோடும் இஸ்ரவேல் ஜனங்களோடும் கிபியோனியர் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துள்ளனர்!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். இந்த ஐந்து எமோரிய அரசர்களும் படை திரட்டினர். (அவர்கள் எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகிய நாட்டு மன்னர்கள் ஆவார்கள்.)அப்படைகள் கிபியோனை நோக்கிச் சென்று நகரைச் சூழ்ந்து கொண்டு, போர் செய்ய ஆரம்பித்தன. கர்த்தர் யோசுவாவிடம், “அப்படைகளைக் கண்டு அஞ்சாதீர்கள். நீங்கள் அவர்களைத் தோற்கடிக்கச் செய்வேன். அப்படைகளில் ஒன்றும் உங்களைத் தோற்கடிக்க இயலாது” என்றார். யோசுவாவும், அவனது படையும் கிபியோனுக்கு இரவு முழுவதும் அணிவகுத்துச் சென்றனர். யோசுவா வருவதைப் பகைவர்கள் அறியவில்லை. எனவே அவன் திடீரென்று தாக்கியபோது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.10 இஸ்ரவேலர் தாக்கியபோது அவர்கள் மிகுந்த குழப்பமடையும்படியாக கர்த்தர் செய்தார். எனவே இஸ்ரவேலர் அவர்களைத் தோற்கடித்துப் பெரும் வெற்றி பெற்றனர். பெத்தொரோனுக்கு போகிற வழிவரைக்கும் இஸ்ரவேலர் பகைவர்களைக் கிபியோனிலிருந்து துரத்தினர். அசெக்கா, மக்கெதா வரைக்கும் இஸ்ரவேலர் அவர்களைக் கொன்றனர்.

 

ஜெருசலேமில் வாழ்ந்தவர் கானானியர்கள், வென்றது   யூதா கோத்திர மனிதர்கள்.  நியாயாதிபதிகள் 1 :5பேசேக்கில் யூதா ஜனங்கள் பேசேக்கின் அரசனைக் கண்டு, அவனோடு போரிட்டார்கள். யூதா ஜனங்கள் கானானியரையும் பெரிசியரையும் வென்றார்கள்.பேசேக்கின் அரசன் தப்பிச்செல்ல முயன்றான். ஆனால் யூதா ஜனங்கள் அவனைத் துரத்திப் பிடித்தனர். அவனைப் பிடித்தபின் அவனது கை, கால் பெருவிரல்களைத் துண்டித்தனர். அப்போது பெசேக்கின் அரசன், “70 அரசர்களின் கை, கால் பெருவிரல்களை நான் துண்டித்தேன். எனது மேசையிலிருந்து விழுந்த உணவுத் துணிக்கைகளை அந்த அரசர்கள் புசித்தார்கள். நான் அந்த அரசர்களுக்குச் செய்தவற்றிற்கான தண்டனையை தேவன் எனக்குத் தந்தார்” என்றான். யூதா மனிதர்கள் பேசேக்கின் அரசனை எருசலேமிற்குக் கொண்டு சென்றார்கள். அவன் அங்கு மரித்தான்.யூதா மனிதர்கள் எருசேலேமுக்கு எதிராகப் போரிட்டு அதனைப் பிடித்தார்கள். எருசலேம் ஜனங்களைக் கொல்ல யூதா மனிதர்கள் தங்கள் வாள்களைப் பயன்படுத்தினார்கள். பின்பு நகரை எரித்தார்கள். பின்னர் யூதா மனிதர்கள் கானானியர் சிலரை எதிர்த்துப் போரிடச் சென்றார்கள். அந்தக் கானானியர்கள் பாலைவனப்பகுதியிலும், மலை நாட்டிலும், மேற்கு மலையடிவாரங்களிலும் வசித்தார்கள்.10 பின்பு யூதா மனிதர்கள் எபிரோன் நகரில் வாழ்ந்த கானானியரோடு போரிடச் சென்றார்கள் (எபிரோன், ”கீரியாத்அர்பா” என்றும் அழைக்கப்பட்டது.) சேசாய், அகிமான், தல்மாய் ஆகிய மனிதர்களையும் யூதாவின் ஜனங்கள் தோற்கடித்தனர்.

ஜெருசலேமில் வாழ்ந்தவர் எபூசியர்கள் வென்றது   தாவீது ராஜா.  

 

2 சாமுவேல் 5:தாவீது அரசாள ஆரம்பித்தபோது அவனுக்கு 30 வயது. அவன் 40 ஆண்டுகள் அரசாண்டான். எப்ரோனில் 7 ஆண்டு 6 மாதங்கள் அவன் யூதர்களுக்கு அரசனாக இருந்தான். எருசலேமில் இஸ்ரவேலுக்கும், யூதாவுக்கும் 33 ஆண்டுகள் அரசனாக இருந்தான்.அரசனும் அவனது வீரர்களும் எருசலேமில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற எபூசியரை எதிர்த்துப் போரிடுவதற்குச் சென்றனர். எபூசியர்கள் தாவீதிடம், “எங்கள் நகரத்திற்குள் உங்களால் வரமுடியாது. [b] எங்களில் குருடர்களும் முடவர்களுங்கூட உங்களைத் தடுத்து நிறுத்தமுடியும்” என்றனர். (தாவீது, அவர்கள் நகரத்திற்குள் நுழையமாட்டான் என்று அவர்கள் நினைத்ததால் இவ்வாறு கூறினார்கள். ஆனால் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான். இக்கோட்டை பின்பு தாவீதின் நகரமாயிற்று.)

 

1நாளாகமம்11: 4 பின்பு தாவீதும் இஸ்ரயேலர் அனைவரும் எருசலேமுக்குச் சென்றனர். அது அந்நாட்களில் எபூசு என்று அழைக்கப்பட்டது: எபூசியர் அங்கே அப்பகுதியில் வாழ்ந்து வந்தனர்.5 எபூசுவாழ் மக்கள் தாவீதை நோக்கி: நீர் இங்கு நுழையவே முடியாது என்றனர்: ஆயினும் தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினார். அதுவே 'தாவீதின் நகர்' ஆயிற்று.6 தாவீது, எபூசியரை முதலில் வெட்டி வீழ்த்துபவன் படைத்தலைவனும் தளபதியுமாய் இருப்பான் என்று அறிவித்திருந்தார். செரூயாவின் மகன் யோவாபு முதலில் உட்புகுந்தார். எனவே, அவர் படைத்தலைவர் ஆனார்.7 தாவீது அக்கோட்டைக்குள் வாழ்ந்ததன் காரணமாக அது 'தாவீதின் நகர்' என்று அழைக்கப்பட்டது.8 அவர் கிழக்கிலிருந்த பள்ளத்தை நிரப்பி நகரைச் சற்றிலும் மதில் எழுப்பினார்: யோவாபு நகரின் ஏனைய பகுதிகளைப் பழுது பார்த்தார்.9 படைகளின் ஆண்டவர் தாவீதோடு இருந்ததால், தாவீதின் புகழ் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே வந்தது.

யோசுவா காலம் - நியாயாதிபதிகள் காலம்- தாவீது காலம் இடையே சில நூற்றாண்டு இடைவெளி உண்டு. 

வாழ்ந்தவர் எமோரியரா? கானானியரா? எபூசியரா?

நாம் இக்கதையின் மூலம் விவிலியக் கதைகளுள் செல்லப் பார்ப்போம், இங்கே ஏசு இஸ்ரேல் பகுதியிலிருந்து யூதேயா செல்ல வழியில் உள்ள சமாரிய கெர்சிம் மலையருகே பெண்ணிடம் பேசியதாகக் கதை. சீடர்களை முதலில் அனுப்பும்போதே சமாரியர் பற்றியும் சொல்கிறார்.

மத்தேயு 10:1 இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார்

இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம்,, “யூதர்களல்லாதவர்களிடம்செல்லாதீர்கள். மேலும்சமாரியமக்கள்வசிக்கும்நகரங்களுக்கும்செல்லாதீர்கள். ஆனால்இஸ்ரவேல்மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள்காணாமல்போனஆடுகளைப்போன்றவர்கள். நீங்கள் சென்று, ‘பரலோகஇராஜ்யம்விரைவில்வரஇருக்கிறதுஎன்றுபோதியுங்கள். 

23… உங்களுக்கு நான்உண்மையைச்சொல்லுகிறேன், மனிதகுமாரன்வருகிறவரைக்கும், நீங்கள்எல்லாயூதர்களின்நகரங்களுக்கும்செல்லமுடியாது.

சமாரிய பெண் முன்னோர் வழியில் கெர்சிம் மலையில் வழிபாடு என்றிட ஒரு யூதத் தொன்ம நம்பிக்கை உயர்ந்தது எனும் நம்பிக்கிகையில் - யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் யூதர்கள் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம் என்பதாய் உள்ளது

யூதேயா - இஸ்ரேல் இடையே உள்ள பகுதி சமாரியா, இந்த சமாரியரும் இஸ்ரேலின் 12 கோத்திரங்களினர் தான், அதே விவிலியக் கடவுளை வழிபடுபவர்கள். தான்.

சமாரியர் யூதரில் ஒரு பிரிவினர். ஆனால் போரில் கிரேக்கரோடு இணைந்தனர் என அரசியல் ரீதியில் ஒதுக்கினர். அவர்கள் யூதரிடமிருந்து பிரிந்தபோது, (பொமு-122) பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணங்கள் எனப்படும் முதல் 5 நூல்கள் மட்டுமே உருவாகியிருந்தமையால், சட்டங்கள் எனும் டோரா(தௌராத்) மட்டுமே சமாரிய விவிலியம்.

 அத்தோட்டங்களை நீங்கள் நாட்டவில்லை.’”



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

பழைய ஏற்பாடு எனும் யூதர் தொன்மங்களில் மொத்தம் 46 நூல்கள், அது 4 பிரிவாகும், இவற்றில் 7 நூல்கள் ப்ரோட்டஸ்டண்ட் பைபிள்களில் இல்லாதவை துணை நூல்கள் அல்லது சேர்க்கப் படாதது எனும்படி அப்போக்ரிபா எனப்படும் மீதமுள்ள 39 மூன்று பிர்வாகும்,

1.சட்டங்கள் அல்லது நியாயப் பிரமாணங்கள் 2. நபிகள் அல்லது தீர்க்கர்கள் &  

3. எழுத்துக்கள் (டோரா, நபியம் கேதுபிம்) இதன் முதல் எழுத்து கொண்டு டானாக் என அழைப்பர். பொமு-122 வாக்கில் சட்டங்கள் மட்டுமே இயற்றப்பட்டு இருந்தது என்பது சமாரிய விவிலியம் மூலம் உணரலாம்

 

யூத விவிலியம் 3 பகுதிகள் (டனாக்-"Tanakh" )என்பதில் தோரா, தீர்க்கர், எழுத்துக்கள் (கேதுபிம்)  இதில் சமாரியர் பிரிவின்போது தோரா  மட்டுமே உருவாகியிருந்தது.

மத்தேயு11:13 எல்லாத் தீர்க்கதரிசனங்களும் மோசேயின் நியாயப்பிரமாணமும் யோவானின் வருகை வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தன.-  ஏசு சொன்னதாக உள்ளது.  இது போலே மேலும் சில இடங்களில் காணலாம். சுவிசேசக்க் கதைகள் எழுத்தில் இயற்றப் பட்ட போதும் கேதுபிம் பழைய ஏற்பாடு பைபிளில் இணைக்கப்படவில்லை.

 

மோசே சட்டங்களில் நீங்கள் செல்லும் நாட்டில் நான் தேர்ந்தெடுக்கும் இடத்தில் என அது ஜெருசலேமில் எனவும் பொமு 10ம் நூற்றாண்டில் சாலமோன் ஜெருசலேமில் ஆலயம் கட்டியதாகக் கதை, அதன்பின் யூதர்கள் பலி, வழிபாடு எல்லாமே அங்கே மட்டுமே எனச் சட்டம், ஆனால் அதன் பின்னும் பல நபிமார் உட்பட பலர் பல்வேறு இடங்களில் வழிபாடு எனவும் ,அதை சில நபி குறை கூறுவதாகவும் விவிலிய வசனங்கள் காட்டும், இங்கே சமாரியர் கெர்சிம் மலை என்பர். மோசே சட்டங்கள் என இயற்றப்பட்டது எப்போது, சமாரிய டோராவில் ஆபிரகாம் பலி கொடுக்க சென்றதும், ஆலய இடம் என்பதும் கெர்சிம் மலை என்றே உள்ளது, "நான் தேர்ந்தெடுக்கும் இடத்தில் " இல்லை, எபிரேயர்களிடம் மூல ஏடுகள் கிடையாது சாக்கடல் சுருள்கள் கிடைக்கும்வரை, பொமு 120ல் ஜெருசலேம் நுழையத் தடை செய்தபின் சமாரியர் டோராவை திரித்துக் கதை செதனர் என கிறிஸ்துவ -யூதர்கள் பரப்பினர், ஆனால் பொமு 1ம் நூற்றாண்டு சாக்கடல் சுருள்கள் சமாரிய பைபிளில் உள்ள்படி தான் உள்ளது. மேலும் இன்றைய பைபிள் முழுதுமே ஜெருசலேமை - சீயோன் என போற்றும் தன்மையை காண்கிறோம், ஜெருசலேம் தான் தனி ஒரு ஆலயம் எனும் நிலையைக் காண்கிறோம், இது எல்லாமே ஏசுவிற்கு 50- 100 ஆண்டு முன்பு இன்றைய வடிவில் மாற்றி உருவானவை.

 

ஏசு இதை அறியாது சமாரியப் பெண்ணிடம் "யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் யூதர்கள் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம்" கூறுவதன் உளறல் தெளிவாகும்.

 

நாம் ஏசு சீடர்களை முதலில் அனுப்பும் போது “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள்....நான் உண்மையைச் சொல்லுகிறேன், மனிதகுமாரன் வருகிறவரைக்கும், நீங்கள் எல்லா யூதர்களின் நகரங்களுக்கும் செல்ல முடியாது."  என்பதைப் பார்த்தோம்.

மாற்கு 13:24 “அந்நாட்களில் அத்துன்பங்கள் நடந்த பிறகு,“‘சூரியன் இருளாகும். சந்திரன் ஒளி தராது.25 நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும். வானிலுள்ள அத்தனையும் மாறிப்போகும்26 “பிறகு மேகங்களுக்கு மேல் மனித குமாரன் மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும் வருவதைக் காண்பார்கள்... 30. நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். இப்பொழுது உள்ள மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே நான் சொன்னவை எல்லாம் நிகழும்31 இந்த முழு உலகமும் பூமியும் வானமும் அழிந்துவிடும். ஆனால் நான் சொன்ன வார்த்தைகள் மாத்திரம் அழியாது.

ஏசு தன்வாழ்நாளில் உலக அழிவை எதிர்பார்த்தார். கடைசியில் ரோம் கவர்னர் கைது செய்ய மரணதண்டனையில் இறந்தார். கடைசியாய் தூக்குமரத்தில் சொன்னது

மாற்கு 15: 34 மூன்று மணிக்கு இயேசு மிக உரத்த குரலில், “ஏலி! ஏலி! லாமா சபக்தானி என்று கதறினார். இதற்கு “தேவனே, தேவனே என்னைக் ஏன்  கைவிட்டீர்?” என்று பொருள். உலகம் அழியும் ,அதற்கு முன் கதைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் ஆட்சியை தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா(கிறிஸ்து) தாவீது பரம்பரை தனக்கு கிடைக்கும் என முயல கடவுல் செயல் ஏதுமின்றி முழுஅவ நம்பிக்கயில் இறந்தார்.

யூதராகப் பிறந்து யூதக் கதைகளின்படி இஸ்ரேலின் கடவுளின் ஒரே இடமான ஜேருசலேம் ஆலயத்தில் ஆடு கொலைப்பலி தரவந்த போது கொல்லப் பட்டார். அவர் எவ்வித மதமும் ஆரம்பிக்கவில்லை. யூதரல்லாதோரோடு பழகவே இல்லை. ஆனால் கிறிஸ்துவம் இறாந்த மனிதன் ஏசுவை தெய்வீகராக்கி, மத நிறுவனராக்கி உள்ளது. ஆனால் பைபிளியல் அறிஞர்கள் இதை ஏற்பதில்லை. பைபிளியல் அறிஞர்கள் சொலவது

Biblical Theologians summarised by American Scholar

Professor John Hick, sums up the current position of Theological research as follows:

Quote:

“The weight and extent of the strain under which Christian Belief has come can be indicated by listing aspects of Traditional Theology which are, which are in the opinion of many Theologians today [including myself], either untenable ot open to Serious Doubts.

1. There are divinely revealed truths [such as the doctrines of Trinity or the two natures of Christ]

2. God Created the physical Universe out of nothing “n’ years ago.

3. Man was created originally brought into the existence as a finitely perfect being, but rebelled against God, and the human condition has ever since been that of creatures who have fallen from grace.

4. Christ come to rescue man from his fallen plight, buying man’ [or some men’s] restoration to grace by his death on the cross.

5. Jesus was born of a Virgin mother, without human Patenity.

6. He performed miracles in which the regularities of the natural order were suspended by Divine Power.

7. His Dead Body rose from the Grave and Returned to Earthy Life.

8. All men must respond to God through Jesus Christ in order to be saved.

9. AT Death a person’s relationship to God is irrevocably fixed.

10. There are two human destinies, traditionally referred to under the symbols of Heaven and Hell. ”

“God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.

கிறிஸ்துவ மத நம்பிக்கைகள் பெருமளவில் சிக்கலைடந்துள்ளது என்பதை பழைமைவாதிளின் அடிபடை மத உணர்வுகள் பெரும்பாலும், இன்றைய பைபிளியல் அறிஞர்கள் ஆய்வுக்குப்பின் ஏற்கமுடியாதது, சந்தேகத்துக்கு உரியவை என நான் உட்பட பெருமளவு பைபிளியல் அறிஞர்கள் சொலவதை பட்டியல் இடுவோம்.

1. ஏதோ தெய்வீக உண்மைகள் அடிப்படையில் இருந்தது- (அதாவது மூன்று கடவுள்; மூன்றும் ஒன்றே மற்றும் ஏசு மனிதன் – தெய்வம் என்னும் கற்பனைகள்.)

2. கடவுள் இத்தனை ஆண்டுகட்கு முன் வெறுமையிலுருந்து இவ்வுலகைப் படைத்தார்.

3. மனிதன் முதலில் இறப்பே இன்றி தொடர்ந்து வாழ படைக்கப்பட்டு, பின்னர் கடவுள் சொல்லை மீறியதற்காக மனிதன் அதன்பின் இந்நிலைக்கு வந்து ம்ரணமடைகிறான்.

4. கிறிஸ்து மனிடர்களின் பாவத்தை மீட்க வந்தார், தன் சிலுவை மரணம் மூலம் மனிதர்களை (அல்லது சில மனிதர்களை) மீட்டார்.

5. இயேசு ஒரு கன்னிப் பெண்ணிடம், மனித உடலுறவின்றி பிறந்தார்.

6. இயேசு பல மேஜிக்குகள் செய்தார் என்றும் அதில் இயற்கையின் ஆற்றலை இறை சக்தியில் கட்டுப் படுத்தினார்.

7. இயேசுவின் மரணத்திற்குப்பின் இயேசுவுடைய பிணவுடல் சவக்குழியிலிருந்து மீண்டும் உயிர் பெற்று வந்தது.

8. உலக மாந்தர்கள் அனைவரும் தாங்கள் காப்பாற்றப்பட இயேசு கிறிஸ்து மூலமே ஆகும்.

9. ஒரு மனிதன் மரணத்தில் அவனுக்கும் கடவுளிற்கும் ஆன உறவு மாற்றமுடியாதபடி இறுதியாகிறது.

10. மனிதன் பெரும் இரு முடிவுகள், எனகூறப்படும் சொற்கம்-நரகம் என்பவை

எனகடவுளும் உலகின் மத நம்பிக்கைகளும் என இன்கிலாந்து பினிங்காம் பல்கலைக் கழகப் பேராசிரியர் கூறுகிறார். “God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.

கிறிஸ்துவ மதம் விவிலியக் கதைகளை வரலாற்று வெளிப்பாடு என்றதை தொல்லியல் அகழ்வாய்கள் முறியடித்தன, பைபிளை முழுமையாய் படித்து நேர்மையாய் ஆர்ராய்ந்தால் கிறிஸ்துவ சமயம் சொல்லும் அனைத்து கோட்பாடுகளும் உண்மையல்ல என்பதும் தெளிவாகிறது.

 

பைபிளியல் பேராசிரியர்கள் மூலமொழிகளில்  ஆய்வு செய்தோர், இஸ்ரேல் எகிப்து என முழுமையாய் தொல்லியல் அகழ்வாய்வுகளில் அன்றாடம் உள்ளோர் இம்முடிவிற்கு ஏன் வருகின்றனர் எனப் பார்க்கும் முன் விவிலியம் பற்றிய ஒருமுழு அறிமுகமும் தேவை.

 

வந்தேறி அன்னியர்களை குடி வைத்து மண்ணின் மைந்தர்களை இனப் படுகொலை செய்தார் எனவும் பின்னரான ஆட்சி எனவும் கதைக்கிறது.

 

புதிய ஏற்பாடோ இறந்த மனிதன் இயேசுவை தெய்வீகமாக்கிட புனைந்த கதைகளைக் கொண்டது. இறந்த ஏசுவின் மரணம் மூலமாக மனிதன் பூமியில் இறக்கக் காரணமான ஆதாமின் பாவம் விலகியதாகவும், ஏசுவை ஏற்போருக்கு மரணமே கிடையாது எனவும் சொல்கிறது. இவற்றை ஏசு சொன்னதாகவும் கதைகள் சொல்கிறது.

 

ஏசு சீடரோடு இயங்கியப்பொது யூதரோடு மட்டுமே பழகினார், யூதர் அல்லாத பெண்ணை நாய் எனவும், பிரிதொரு இடத்தில் யூதரல்லாதோர் பன்றி எனவும் கீழ்த்தரமாய் பேசியதாகவும் உள்ளது, ஆனால் ஏசுவின் சீடர் அல்லாத, ஏசுவை நேரில் பார்த்து பழகியே இராத பவுல் என்பவர் யூதரல்லாத மக்களிடம் சென்று கிறிஸ்துவ மதம் ஸ்தாபித்தார் எனக் கதை.

பைபிளியல் அறிஞர்கள் கூற்றுகளைக் காணுமுன் பைபிள் பற்றி அறிவோம்

 

 

11] சுவிசேஷக் கதைகளின் ஏசு யுகம் அழியப் போகிறது தன் வாழ்நாளில் என நம்பினார். மத்தேயு11:13 எல்லாத் தீர்க்கதரிசனங்களும் மோசேயின் நியாயப்பிரமாணமும் யோவானின் வருகை வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தன.-  ஏசு சொன்னதாக உள்ளது, அதாவது பொ.கா.80 -90 வாக்கில் தோரா, தீர்க்கர் உருவாயிருந்தது.  டனாக் என்பதில் கேதுபிம் எனும் எழுத்துக்கள் உருவாகிடவில்லை. 2ம் நூற்றாண்டில் உருவான லூக்கா சுவியில் ஏசு உயிர்த்து பழைய உடம்பில் மீண்டு வந்து பேசிய போது மற்றும் சங்கீதம்  லூக்கா24:44 பின்பு ஏசு சீடர்களைப் பார்த்து, ' மோசேயின் சட்டத்திலும் தீர்க்கர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி ......  கேதுபிம் - எழுத்துக்கள்:   பொ.கா. 135 வாக்கில் அதாவது கிறிஸ்துவ புராணக் கதை நாயகர் ஏசு இறந்து 100 ஆண்டுகட்குப் பின் இன்றைய வடிவில் புனையல் பெற்றது. கேதுபிம் - எழுத்துக்கள் உள்ள நூல்கள் - 1. 1 நாளாகமம், 2. 2 நாளாகமம், 3. எஸ்றா, 4. நெகேமியா ,5. எஸ்தர் ,6. யோபு, 7. தானியேல்,  8. சங்கீதம், 9. நீதிமொழிகள், 10. உன்னதப்பாட்டு, 11. புலம்பல், 12. ரூத், & 13. பிரசங்கி பழைய ஏற்பாடு பெருமளவில் - ஏன் முழுமையாக உருவாக்கப்பட்டது பொ.மு.300 மற்றும் பொ.கா.100 இடையே தான்.   http://en.wikipedia.org/wiki/History_of_ancient_Israel_and_Judah .  The Torah contains "sagas, heroic epics, oral traditions, annals, biographies, narrative histories, novellae, belles lettres, proverbs and wisdom-sayings, poetry, prophecy, apocalyptic, and much more ... the whole finally woven into a composite, highly complex literary fabric sometime in the Hellenistic era.

 

 

 



 Others believe that the real schism between the peoples did not take place until Hasmonean times when the Gerizim temple was destroyed in 128 BCE by John Hyrcanus.[10] The script of the Samaritan Pentateuch, its close connections at many points with the Septuagint, and its even closer agreements with the present Hebrew text, all suggest a date about 122 BCE.[  உபாகமம் 24:16 “பிள்ளைகள் செய்தக் காரியத்திற்காகப் பெற்றோர்கள் கொலைசெய்யப்படக் கூடாதுஅதுபோன்று பெற்றோர்கள் செய்த காரியங்களுக்காகப் பிள்ளைகள் கொலை செய்யப்படக் கூடாதுஅவனவன் செய்த பாவச் செயல்களுக்கு ஏற்ப அவனவன் கொலைசெய்யப்பட வேண்டும்.

யோபு 25:4 அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன் நேரியவராய் இருக்க முடியும்? அல்லது பெண்ணிடம் பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்?

5இதோ! வெண்ணிலவும் ஒளி குன்றியதே! விண்மீனும் அவர்தம் பார்வையில் தூய்மையற்றதே! 

6அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்! பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்!

 யோசுவா 2413 ‘கர்த்தராகிய, நான் அத்தேசத்தை உங்களுக்குக் கொடுத்தேன்! நீங்கள் அத்தேசத்தைப் பெறுவதற்கென்று உழைக்கவில்லை! நீங்கள் அந்நகரங்களை கட்டவில்லை! ஆனால் இப்போது அத்தேசத்திலும், அந்நகரங்களிலும் சுகமாக வாழ்கிறீர்கள். திராட்சை செடிகளும், ஒலிவ மரங்களுமுள்ள தோட்டங்கள் உங்களுக்கு இருக்கின்றன. ஆனால் 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 நாகரீகமற்ற ஆடு-மாடு மேய்க்கும் காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்த காலத்தில் நகரமே ஏதும் அங்கு இல்லை, எல்லாமெ கிரேக்கர் காலத்தில் தான் வந்தவை, அப்போது புனையப்பட்ட கதைகள். நீங்கள் விசுவாசம் எனும் போய்க் கண்ணாடியை விலக்கிவிட்டு உண்மையைத் தேடுங்கள்.

 

 இறை நம்பிக்கை இது மனித சமுதாய நாகரீக வாழ்வின் துணையாய் உள்ளது, என்பதை சிந்து- சரஸ்வதி நாகரீக அகழ்வாராய்ச்சிகள் காட்டுகின்றன. வரலாற்று ரீதியில் 10000 வருட்ங்களாக இறைவனை உணர்ந்து அவரோடு வாழ்ந்து வரும் கடவுளின் புணிணிய பூமி பாரதம். 

 

அன்னிய நாட்டு மதங்களின் வேர் விசுவாசம் எனும் தளத்தில் சாத்தான் பிசாசு எனும் மூடநம்பிக்கைகளைப் பரப்பி அதில் புராணக் கதைகளால் மீடபர் - கிறிஸ்து எனக் கதைகளாத்தில் தான் மையம் கிறிஸ்துவ கொண்டிருக்கிறது.

யோசுவா 24:17 தேவனாகிய கர்த்தர் தான் எகிப்திலிருந்து வெளியேற்றி நம் ஜனங்களை அழைத்து வந்தார் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அத்தேசத்தில் அடிமைகளாக இருந்தோம். ஆனால் அங்கு பெரிய காரியங்களை கர்த்தர் எங்களுக்காகச் செய்தார். அவர் எங்களை அத்தேசத்திலிருந்து அழைத்து வந்து, பிற தேசங்கள் வழியாக நாங்கள் பிரயாணம் செய்யும்போது எங்களைப் பாதுகாத்து வந்தார். 18 அத்தேசங்களில் வசித்த ஜனங்களைத் தோற்கடிக்க கர்த்தர் எங்களுக்கு உதவினார். நாங்கள் இப்போதிருக்கிற தேசத்தில் வாழ்ந்த எமோரிய ஜனங்களை வெல்லவும் கர்த்தர் எங்களுக்கு உதவினார். கர்த்தருக்குத் தொடர்ந்து நாங்கள் சேவை செய்வோம். ஏனெனில் அவரே எங்கள் தேவன்” என்றார்கள்.

 இயேசு யார் என்பது பைபிளின் ஒருசில வசனங்களினை மிகைப் படுத்தியும்; விவிலியக் கதைகள் உருவாக்கப்பட்ட விதம் போன்றவை கூறாமல்  பெரிதாக் கல்வி அறியாத மக்களிடையே இறந்த மனிதனை தெய்வீகமாகப் புனையும் தன்மையை விடுத்து நேர்மையாய் ஏசு யார் என்ற வரலாற்று அலசலே இந்தப் படைப்பு உருவாகக் காரணம்.

கிறிஸ்தவம் அது நுழைந்த இடங்களில் எல்லாம் மக்களின் வேர்களை அழித்து விவிலியக் கதைகள் மட்டுமே நம்பிக்கைக்கு உரியவை எனப் பரப்பி மக்களை சர்ச்சினை சார்ந்தே வேதனையோடு வாழவைக்கும். சர்ச்சின் ஆக்கிரமிப்பு அரசியல் சமுதாய்ச் சூழல், விஞ்ஞானத்திற்கு எதிராக அதிகமாகிட,  ஐரோப்பாவின் மதச் சார்பினமை வளர்ச்சி பெற்றது. உலகமெங்கும் இனவெறியை வளர்த்தது, சர்ச்ச் விவிலிய நோவா கதையைச் சொல்லி வெள்ளையர்களுக்கு கருப்பர்களும் திராவிடர்களும் அடிமை எனக் காட்டி ஆப்பிரிக்க மக்களை அடிமை வியாபாரம் செய்தௌ கொடுமை செய்தது. காகிதம், அச்சு, அறிவியல் புரட்சி எழும்ப இன்று ஐரோப்பாவில் 40% மக்கள் தாங்கள் மதமற்றவர் என அன்னாட்டு கணக்கெடுப்பில் பதிவு செய்துள்ளனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆர்ய என்ற சொல் அய்ரிய என்ற இரானிய மொழிச் சொல்லுடன் உறவுடைய சொல்லாகும். இது சான்றோரையும், சான்றாண்மை என்ற பண்பையும் குறிக்கும் சொல்லாக ரிக் வேதத்தில் காணப்படுகிறது. ஆனால் இது தற்காலத்தில் மேன்மையான,புனிதமான போன்ற இன மேன்மையைக் குறிக்கும் ஒரு சொல்லாக மாற்றப்பட்டது. ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது நாசிகளின்இனவாதத்தை அடுத்து இது ஒரு வெறுப்புக்குரிய சொல்லாகவும் மாறியது. நாசிகள் போரில் தோல்வியுற்றபோது ஆரியர் பற்றிய கருத்து ஐரோப்பாவில்கண்டனத்துக்கு இலக்காகி கைவிடப்படும் நிலை ஏற்பட்டது. 

 

http://writerxavier.com/2016/03/01/history_of_christianity-2/



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நாடே இல்லாத நாடோடி கூட்டமாகிய ஆரியர்கள் வந்தேறிகளே !!

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ஆர்யர் என்ற சொல்லுக்கு பழைய ஈரான் மற்றும் வட இந்திய துணைக்கண்டத்தில் இருந்தவர்கள் என்றுதான் பொருள் கொள்ளப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் தான் ஆர்யர் என்னும் சொல்லுக்கு மொழியியல் ரீதியான அர்த்தம் கொடுக்கப்பட்டது – encyclopediyaa britanica வில் தெளிவாக பதியப்பட்டுள்ளது .

ஸ்ரீ கிறிஸ்ன சைதன்யர் , மற்றும் மொழியியல் வல்லுனர்கள் கருத்துப்படியும் ஈரானிய மொழியும், சமஸ்கிருத மொழியும் ஒரே மொழிக்குடும்பத்தை சார்ந்தவை . ‘ஈரன்‘ என்ற சமஸ்கிருத சொல்லுக்கு ‘பாலை நிலம்‘ என அர்த்தம். துருக்கியின் ஒரு பகுதியான ‘அனடோலியா‘ என்ற இடத்தின் வழிவந்த ‘ஈரண்‘ மக்கள் இந்திய மண்ணில் ‘ஆரண்‘ என்றாகி ‘ஆர்யன்‘ என மருவியிருக்கக்கூடும், ( துருக்கியில் வேதகால நாகரீகம்)

சமஸ்கிருதம் என்பது இந்தோ இரானிய மொழிகுடும்பத்தை சார்ந்த ஒரு மொழி
வில்லியம் ஜோன்ஸ் கல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்தார். இவர் அய்ரோப்பிய மொழிகள், ஈராணிய மொழிகள், இந்திய மொழிகள் ஆகியவற்றை ஒப்பிட்டு அவைகளை வகைப்படுத்தினார். அதன்படி பாரசீக மொழியும் சமஸ்கிருதமும் இந்தோஇராணிய மொழிக்குடும்பத்தை சார்ந்தவை என்று தெளிவாய் பறைசாற்றினார் .

ஆடு மாடு மேய்த்து வந்த நாடோடி கூட்டமாகிய ஆரியர்கள் இங்கே வாழ்ந்த திராவிடர்களுடன் போரிட வேண்டிய நிர்பந்தத்தால் போரிட்டு திராவிடர்களை அடிமையாக்கினர்.
தங்களுடன் போர் தொடுத்த திராவிடர்களை திட்டி , கேவலபடுத்தி , பழித்து தங்கள் வேதங்களில் எழுதி வைத்தனர் .-ரோமேஷ் மஜும்தார் (பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும் 22 ஆம் பக்கம் )

ஆரியர் அல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் எனவும் தஸ்யுக்கள் , அசுரர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன .-Dr. ராதாகுமுத முகர்ஜி Phd (இந்து நாகரீகம் பக்கம் 69)
இன்னும்  இதே  கருத்துகள்  ரிக் வேத கால இந்தியா பக்கம் 151 , இந்திய சரித்திரம் பக்கம் 16 , இந்திய மக்கள் சரித்திரம் பக்கம் 41 , புராதன இந்தியாவும் இந்தியாவின் நாகரிகமும் பக்கம் 19 , ஆகிய பக்கங்களில் வரலாற்று நிபுணர்களால் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது .

ஒ இந்திரனே அந்த அசுரகூட்டத்தை துரோகிகளை தீமையே உருவானவர்களை அக்னி குண்டத்தில்  வைத்து நீர்பானையில் வேகவைத்து கொல். பிராமண துரோகிகளான அந்த பச்சை மாமிசம் தின்னும் அரக்கர்களை மீளா நரகத்தில் தள்ளி இம்சிப்பாயாக –ரிக் வேதம் 7 வது மண்டலம் 104 வது மந்திரம் , சுலோகம் 2

வழிப்போக்கர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் திருடனைப்போல், தெய்வமற்ற தாசர்களுடைய தமிழர்களுடைய செல்வங்களைத் திருடி இந்திரனைப்போற்றும் ஆரியர்களுக்கு அளிக்க வேண்டும். ஆரியர்களின் புகழையும் பலத்தையும் சிறப்பிக்க வேண்டும்”
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 103, பாடல் (சுலோகம்) 3,6

4. இந்திரா! ஆந்தையைப்போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் தமிழர்களை கொல்லவும். நாயைப் போலும் கழுகைப்போலும் உள்ள தஸ்யூக்களைக் (சமணத்தமிழர்களை) நசுக்கி ஒழிக்கவும்.
மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22

இந்திரன் ஆரியனுக்காக, மோசமானவர்களையும், கொடூரமானவர்களையும், ஒளி இழந்த நிறம் உடையவர்களையும் விரட்டி அடித்தான். கருப்பு நிறத்தை வெற்றி கொண்டதைப் பற்றி ரிக் -I-130-8 கூறுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

உபாகமம் 7:1 “உங்கள் விருப்பத்திற்கேற்ப சுதந்திரமாக வாழப்போகின்ற இந்த தேசத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வழிநடத்திச் செல்வார். உங்களுக்காக உங்களைவிடப் பெரியவர்களும், பலசாலிகளுமான ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய ஏழு நாட்டினர்களையும் உங்களுக்கு முன்பாகவே துரத்துவார். உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்த ஏழு நாட்டினரையும் உங்களுக்குக் கீழே கட்டுப்பட வைப்பார். அவர்களை நீங்கள் தோற்கடிப்பீர்கள். அவர்களை முழுவதுமாக நீங்கள் அழித்துவிட வேண்டும். அவர்களிடம் எவ்வித ஒப்பந்தமும் செய்யாதீர்கள். அவர்களிடம் இரக்கம் காட்டாதீர்கள். அவர்களில் எவரையும் மணந்துகொள்ளாதீர்கள். நீங்கள் மட்டுமின்றி உங்கள் மகன்களையோ மகள்களையோ அந்த ஜனங்களைச் சார்ந்தவர்களில் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்கக் கூடாது.

1நீ உரிமையாக்கிக் கொள்ளைப்போகும் நாட்டில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச்செய்து, உன்னைவிட வலிமையிலும் எண்ணிக்கையிலும் மிகுந்த மக்களாகிய இத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் எனும் ஏழு மக்களினங்களையும் உன்கண்முன்னே விரட்டியடித்து,

 

2உன் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உன்னிடம் கையளிக்கும்போது, நீ அவர்களை முறியடித்து முற்றிலும் அழிப்பாய். அவர்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளவோ அவர்களுக்கு இரங்கவோ வேண்டாம். 
3நீ அவர்களோடு திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளாதே. உன் மகளை அவர்கள் மகனுக்குக் கொடுக்காதே. உன் மகனுக்கு அவர்கள் மகளைக் கொள்ளாதே.
 
 
5மாறாக, நீ அவர்களுக்கு இவ்வாறு செய்; அவர்களின் பலிபீடங்களை இடித்து, அவர்களின் சிலைத் தூண்களை உடைத்து, அவர்களின் அசேராக் கம்பங்களை வெட்டி, அவர்களின் கைவினையான சிலைகளைத் தீயில் எரித்துவிடு.
 

“நீங்கள் அந்தப் பகைவர்களுக்குச் செய்ய வேண்டியது என்னவென்றால், அவர்களின் பலிபீடங்களை இடித்து, அவர்களுடைய ஞாபகார்த்தக் கற்களை உடைத்துவிடுங்கள். அவர்களது அஷெரா கோவில் கம்பங்களை வெட்டி வீழ்த்தி, அவர்களது சிலைகளைத் தீயிலிட்டு அழித்துவிடுங்கள்!

16 உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உதவியோடு தோற்கடித்த எல்லா எதிரிகளையும் அழித்துவிட வேண்டும். அவர்களுக்காக வருத்தப்படாதீர்கள். 

17 “‘நம்மைவிட நம் எதிரிகள் பெரியவர்கள். நாம் எப்படி அவர்களைத் துரத்திவிடுவது’ என்று உங்கள் மனதிற்குள் நீங்களே சொல்லிக்கொள்ளாதீர்கள். 18 நீங்கள் அவர்களைக் கண்டு சிறிதும் பயப்படத் தேவையில்லை. அன்று எகிப்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் பார்வோனுக்கும் எகிப்தின் அனைத்து ஜனங்களுக்கும் செய்ததை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். 

16உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களிடம் கையளிக்கவிருக்கும் எல்லா மக்களையும் முற்றிலும் அழித்துவிடுங்கள். உங்கள் கண்கள் அவர்களுக்கு இரங்காதிருக்கட்டும். அவர்களின் தெய்வங்களுக்கு நீங்கள் பணிய வேண்டாம். அது உங்களுக்குக் கண்ணியாக ஆகிவிடும்.

 

17இந்த மக்களினங்கள் எல்லாம் எங்களைவிடத் திரளானவர்களாய் உள்ளதால், அவர்களை விரட்டியடிக்க எங்களால் எப்படி முடியும் என்று உங்கள் உள்ளத்தில் நீங்கள் உரையாடும்போது,
 
18அவர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம். மாறாக, பார்வோனுக்கும் எகிப்தியர் அனைவருக்கும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் செய்ததை நினைவில் நிறுத்துங்க
 

உபாகமம் 9:1 “இஸ்ரவேல் ஜனங்களே கவனியுங்கள்! நீங்கள் இன்று யோர்தான் நதியைக் கடந்து செல்லப் போகிறீர்கள். அந்த நிலத்தில் உங்களைவிடப் பெரிய பலம் வாய்ந்த உங்களின் எதிரிகளை வெளியே துரத்துவீர்கள். அவர்களது நகரங்கள் வானத்தைத் தொடும் உயர்ந்த மதில்களைக் கொண்ட பெரிய நகரங்களாகும்! அங்குள்ள ஜனங்கள் உயரமாகவும் பருமனாகவும் இருக்கிறார்கள். அவர்கள் ஏனாக்கின் வம்சத்தினர். நீங்கள் அவர்களைப்பற்றி அறிந்திருக்கிறீர்கள். ‘ஏனாக்கியர்களை எவராலும் எதிர்த்து வெல்லமுடியாது’ என்று நம் ஒற்றர்கள் கூறியதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்த ஆற்றினைக் கடந்து செல்பவராயிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். எனவே உங்களால் ஏனாக்கியர்களை எதிர்க்க முடியும். தேவன் அக்கினியைப் போல் அவர்களை அழித்துவிடுவார்! 

1இஸ்ரயேலரே, செவிகொடுங்கள்! நீங்கள் இன்று யோர்தானைக் கடந்து, உங்களைவிட எண்ணிக்கையும் வலிமையும் மிகுந்த நாடுகளையும், வானளாவிய மதில்கள் கொண்ட மாபெரும் நகர்களையும் கைப்பற்றுவீர்கள்.

 

2அந்த மக்கள், எண்ணிக்கையிலும் உயரத்திலும் மிகுந்த ஏனாக்கின் வழிமரபினர். அவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ‘ஏனாக்கின் புதல்வரை எதிர்த்து நிற்கக் கூடியவன் எவன்?’ என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பது அவர்களைப்பற்றியே.
ட்டெரிக்கும் நெருப்பைப் போன்று உங்களை வழி நடத்திச் செல்பவர் உங்கள் கடவுளாகிய ஆண்டவரே என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர் அவர்களை முறியடித்து உங்கள் முன் வீழ்ச்சியுறச் செய்வார். அதனால், ஆண்டவர் வாக்களித்தபடி, நீங்கள் அவர்களைத் துரத்தி விரைவில் அழிப்பீர்கள்.
 
உபாகமம் 10:
15 கர்த்தர் உங்கள் முற்பிதாக்களின் மீது அன்பு வைத்திருந்தார். அவர்கள்மீது அதிகமாக அன்பு வைத்ததினாலேயே உங்களையும், உங்கள் சந்ததியினரையும் கர்த்தர் தன்னுடைய ஜனங்களாக இன்றும் கருதி அன்பு காட்டுகிறார். மற்ற எல்லா ஜனங்களும் இருந்தாலும் உங்களை தேவன் பிரித்தெடுத்தார். இன்றளவும் நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களாய் இருக்கிறீர்கள்.16 “உங்களின் பிடிவாத குணத்தை விட்டுவிடுங்கள். உங்களின் உள்ளங்களை கர்த்தருக்குக் கொடுங்கள்.17 ஏனென்றால், உங்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர் கர்த்தாதி கர்த்தரும், தேவாதி தேவனும் ஆவார். நமது கர்த்தரே மகத்துவமும், வல்லமையும், பயங்கரமும் உடைய தேவனாவார். கர்த்தர் பாரபட்சம் காட்டுபவர் அல்ல. கர்த்தர் தன் மனதை மாற்றிக்கொள்ள பணத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார். 
15இருப்பினும், உங்கள் மூதாதையரின்மீது பற்றுவைத்து அன்பு கூர்ந்தார். அவர்களுக்குப்பின் அவர்களுடைய வழிமரபினராகிய உங்களை எல்லா மக்களினங்களினின்றும், இந்நாளில் இருப்பதுபோலத் தெரிந்துகொண்டார்.
 
16ஆகவே, உங்கள் உள்ளத்தை விருத்த சேதனம் செய்யுங்கள். வணங்காக் கழுத்தினராய் இராதீர்கள்.
 
17ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரே, தெய்வங்களுக்கெல்லாம் கடவுள், இறைவர்க்கெல்லாம் இறைவன். மாட்சியும் ஆற்றலும் உள்ள அஞ்சுதற்குரிய கடவுள் அவரே. அவர் ஓர வஞ்சனை செய்வதில்லை; கையூட்டு வாங்குவதும் இல்லை.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

உபாகமம் 12: இப்போது வசிக்கின்ற உங்கள் எதிர் இன ஜனங்களிடமிருந்து அந்த தேசத்தை நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள். அந்த ஜனங்கள் எங்கெல்லாம் அவர்களது தெய்வங்களை தொழுது கொண்டார்களோ, அந்த இடங்களையெல்லாம், முழுவதுமாக நீங்கள் அழித்துவிட வேண்டும். அந்த இடங்களெல்லாம் மலைகள் மீதும், மேடுகள் மீதும், பசுமையான மரங்களுக்குக் கீழும் உள்ளன. நீங்கள் அவர்களது பலிபீடங்களை இடித்து, அவர்கள் ஞாபகார்த்த கற்களையும் தூள் தூளாக தகர்த்திட வேண்டும். அவர்களது அஷேரா என்ற ஸ்தம்பத்தையும், பொய்த் தெய்வங்களின் சிலைகளையும் வெட்டி. இவ்வாறு அந்த இடத்திலிருந்து அவைகளின் பெயரை நிர்மூலமாக்க வேண்டும்.

2நீங்கள் விரட்டியடிக்கப்போகும் மக்களினங்கள் தங்கள் தெய்வங்களுக்கு, உயர்ந்த மலைகளின்மீதும், குன்றுகளின் மீதும், பசுமையான மரங்களின் மீதும், ஊழியம் செய்த எல்லா இடங்களையும் முற்றிலும் அழித்து விடுங்கள்.
3அவர்களின் பலிபீடங்களை இடித்து, அவர்களின் சிலைத்தூண்களை நொறுக்கி, அவர்களின் அசேராக் கம்பங்களைத் தீயில் சுட்டெரித்து, அவர்களின் கைவினையான தெய்வங்களின் சிலைகளை உடைத்து, அவர்களின் பெயர் அவ்விடங்களில் இல்லாது ஒழியுங்கள்.
4ஆனால் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அவ்விதம் செய்யாதீர்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

உபாகமம் 12: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் சகல கோத்திரங்களின் நடுவில் ஒரு சிறந்த இடத்தை தேர்ந்தெடுத்துத் தருவார். கர்த்தர் அவரது நாமத்தை அவ்விடத்திற்கு வைப்பார். அந்த விசேஷ இருப்பிடம் தேவனுடையதாகும். நீங்கள் எல்லோரும் அந்த இடத்திற்குச் சென்றே கர்த்தரை ஆராதிக்க வேண்டும். அங்கே நீங்கள் வரும்போது நெருப்பினால் வேகவைத்த தகனபலியையும், உங்கள் காணிக்கைகளையும். உங்கள் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கையும், ஆடு, மாடுளையும், உங்களின் காணிக்கைகளையும், கர்த்தருக்குக் காணிக்கைகளாக வாக்கு கொடுத்த பொருட்களையும், கர்த்தருக்குக் கொடுக்க விரும்பும் பொருட்களையும் உங்கள் மந்தைகளில் உள்ள ஆடு, மாடுகளில் தலைஈற்றுகளையும் கொண்டு வரவேண்டும். நீங்களும், உங்கள் குடும்பத்தினரும், அந்த இடத்திற்கு வந்து உண்டு மகிழவேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருந்து மகிழ்ச்சியைத் தருவார். அந்த இடத்தில் நீங்கள் எல்லோரும் உங்களது மகிழ்ச்சியையும், உங்கள் கைகளால் செய்த பொருட்களையும், ஒருவருக்கொருவர் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஆசீர்வாதங்களையும், நீங்கள் பெற்றுள்ள எல்லாப் பொருட்களையும், அவர் உங்களுக்குத் தந்ததையும் நினைத்துப் பார்பீர்களாக.

“ஆனால் நாம் அனைவரும் தொழுது வந்தது போல் நீங்கள் தொழுதுகொள்வதைத் தொடரக் கூடாது. இதுவரையிலும் ஒவ்வொருவரும் தேவனை தாங்கள் விரும்பின வழியில் தொழுது கொண்டு வந்தீர்கள்.

11 பின் கர்த்தர் அவருக்கான சிறந்த வீட்டினை அமைப்பதற்கான இடத்தை தேர்ந்தெடுப்பார். அவ்விடத்திற்கு கர்த்தர் அவரது பெயரை வைப்பார். அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்துப் பொருட்களையும், கொண்டுவர வேண்டும். நெருப்பினால் வேகவைத்த தகனபலிகளையும், உங்கள் காணிக்கைகளையும், உங்கள் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கையும், ஆடு, மாடுகளையும், உங்கள் காணிக்கைகளையும், கர்த்தருக்கு வாக்குப் பண்ணின பொருட்களையும், உங்கள் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளின் தலைஈற்றுகளையும், கொண்டுவர வேண்டும். 

12 கர்த்தருடைய ஆலயத்திற்கு நீங்களும், உங்கள் பிள்ளைகளும், வேலைக்காரர் அனைவரும் வந்து, உங்கள் நகரங்களில் வசிக்கும் எந்தவொரு சொத்தும் சுதந்திரமும் இல்லாத லேவியருடன்கூடி, வந்திருந்து ஒருவொருக்கொருவர் உங்கள் தேவனாகிய கர்த்தரோடு மகிழ்ச்சியாக இருங்கள். 13 நீங்கள் கண்ட இடங்களில் எல்லாம் உங்கள் விருப்பப்படி தகனபலிகளை செலுத்தாமல் இருக்க கவனமாக இருங்கள். 14 உங்கள் கோத்திரங்கள் நடுவில் அவரது விசேஷ இடத்தினை கர்த்தர் தேர்ந்தெடுத்துக் கொடுப்பார். அந்த இடத்தில் மட்டுமே நீங்கள் உங்கள் பலிகளைச் செலுத்தி, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் நீங்கள் அங்கேயே செய்யவேண்டும்.

 

5ஆண்டவராகிய கடவுள் தம் பெயர் விளங்கவும், அங்கே குடியமரவும், உங்கள் எல்லாக் குலங்களிலிருந்து தெரிந்தெடுக்கும் இடத்தையே நீங்களும் நாடி அங்கே செல்லுங்கள்.
6உங்கள் எரி பலிகளையும், மற்றப் பலிகளையும், பத்திலொரு பங்கையும், அர்ப்பணக் காணிக்கைகளையும், நேர்ச்சைக் காணிக்கைகளையும் தன்னார்வப் பலிகளையும், ஆடுமாடுகளின் தலையீற்றையும் அங்கே கொண்டு வாருங்கள்.

 

7அங்கே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உண்பீர்கள். உங்கள் உழைப்பின் பயனும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரால் ஆசி பெற்றதுமாகிய எல்லாவற்றுக்காகவும் நீங்களும் உங்கள் வீட்டார் அனைவரும் மகிழ்வீர்கள்.
 
8இந்த நாள்களில் இங்கே நாம் செய்வது போல ஒவ்வொருவரும் தம் பார்வையில் சரியெனத் தோன்றுவதைச் செய்ய வேண்டாம்.
9ஏனெனில், உங்கள் ஆண்டவராகிய கடவுள் கொடுக்கப்போகும் உரிமைச் சொத்துக்கும் ஓய்வுக்கும் இன்னும் நீங்கள் போகவில்லை.
 
1அவர்தம் பெயர் விளங்குமாறு அவர் தெரிந்தெடுக்கும் இடத்திற்கு நான் உங்களுக்குக் கட்டளையிடும் எல்லாவற்றையும் கொண்டு செல்வீர்கள். உங்கள் எரி பலிகளையும், மற்றப் பலிகளையும், பத்திலொரு பங்கையும், அர்ப்பணக் காணிக்கைகளையும், ஆண்டவருக்கு நேர்ந்துகொண்ட சிறந்த நேர்ச்சைக் காணிக்கைகள் அனைத்தையும் கொண்டு செல்வீர்கள்.
 
12நீங்களும், உங்கள் புதல்வரும், உங்கள் புதல்வியரும், அடிமைகளும், அடிமைப் பெண்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன் அகமகிழ்வீர்களாக! தங்களுக்கெனத் தனிப்பங்கோ உரிமைச் சொத்தோ இல்லாவிடில், உங்கள் நகர்களில் உள்ள லேவியரும் அவ்விதமே மகிழ்வார்களாக!
 
13கண்ட இடமெல்லாம் உங்கள் எரி பலிகளைச் செலுத்தாதபடி கவனமாய் இருங்கள்.
 
14ஆனால், உங்கள் குலங்களுள் ஒன்றிலிருந்து ஆண்டவர் ஓர் இடத்தைத் தெரிந்தெடுப்பார். அங்கே நீங்கள் உங்கள் எரி பலிகளைச் செலுத்துங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிடும் எல்லாவற்றையும் அங்கே நிறைவேற்றுங்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

யோசுவா 24: 13 ‘கர்த்தராகிய, நான் அத்தேசத்தை உங்களுக்குக் கொடுத்தேன்! நீங்கள் அத்தேசத்தைப் பெறுவதற்கென்று உழைக்கவில்லை! நீங்கள் அந்நகரங்களை கட்டவில்லை! ஆனால் இப்போது அத்தேசத்திலும், அந்நகரங்களிலும் சுகமாக வாழ்கிறீர்கள். திராட்சை செடிகளும், ஒலிவ மரங்களுமுள்ள தோட்டங்கள் உங்களுக்கு இருக்கின்றன. ஆனால் அத்தோட்டங்களை நீங்கள் நாட்டவில்லை.’”

13நீங்கள் உழுது பயிரிடாத நிலத்தில் அறுவடை செய்தீர்கள். நீங்கள் கட்டாத நகர்களில் நீங்கள் வாழ்கின்றீகள். நீங்கள் நடாத திராட்சை, ஒலிவத் தோட்டங்களின் பயனை நீங்கள் நுகர்கின்றீர்கள். இவை அனைத்தும் நான் உங்களுக்குக் கொடுத்தவையே.’



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வரலாற்று ஆய்வாளர்கள் ஒரு நிகழ்வை குறிக்க் மூன்றுவத்மான சான்றுகள்,குறிப்புகள் இருப்பது இன்றியமையாதது என்கின்றர்.
1).அருகாமை கால,2)பல் தரப்ப்ட்ட 3) ஒன்றை ஒன்று சாராத‌ சான்றுகள்,குறிப்புகள்.
Earliest,Multiple and independendent sources
இப்படிப்பட்ட குறிப்புகள் முகமதும் இருப்பை உறுதி செய்ய இல்லை.

ஹதிதுகளின் படி குரான் உத்மானல்[CE 660+] தொகுக்கப்படுகிறது,

நலவிதாமக் முகமது குரான்,ஹதிதுகள் ,சிராவில் சித்தரிக்கப்படவில்லை என்பது அபோது நடந்தவற்றை இபோதைய கண்ணோட்டத்தில் பார்ப்பதால் வரும் முடிவு ஆகும்.

சர்ச்சைக்குறிய விடயங்களாக் சிதரிக்கப்படுபவை அபோதைய காலகட்டத்தில் மிக இயல்பாக எடுத்துக் கொள்ளப்பட்ட இருக்கும்.
இப்போது 99% விடயத்தை முஸ்லிம்கள் ,தாவாதிகள் இவற்றை சரி என்றே நியாயப்படுத்துவதால் இது உறுதியாகிறது.
சாதானின் வசனம் தவிர மற்றவற்றை தாவாதிகள் நியாயப்படுத்துவது அனைவரும் அறிவோம்.

யூதர்களை கெட்டவர்களாக் உருவகப்படுத்துவது புதிய இஸ்லாம் ம்தத்தை வளர்க்க.போட்டி மதத்தவர்களன கிறித்தவர்கள்,யூதர்களை விமர்சிப்பதின் நோக்கம் இதுதான்.

ஹிஜ்ரி முத்ல் நூற்றாண்டு அரசியலில் மூன்று குழுக்கள் அரசுரிமைக்காக போட்டி போடுகின்றன, ஷியா( அலி வம்சம்)),உம்மையாது(அபு சுஃபியான் வம்சம்),அப்பாசித்துகள்(இபின் அபாஸ் வம்சம்).

இவர்கள் மூவருமே மத‌த்தை தங்கள்க்கு சாதக்மாக் காட்ட நினைத்ததால் பல் முரண்பாடுகள் ,சர்ச்சைக்குறிய விடயம்,அதற்கு நியாப்படுத்தல் என பல் விவரங்கள் வந்துவிட்டன.ஆட்சி மாறினாலும் ஒரேயடியாக மத புத்டக்ங்களில் கை வைப்பது ஆபத்து என்பதல் அவர்கள் புதிதாக ஏதாவது சேர்த்து தங்களின் இருப்பை நியாயப் படுத்திக் கொண்டார்கள்.

ஷியா அப்பாசித்துகள் இணைந்து உம்மையாதுகளை அழிக்கின்றனர்,பிறகு ஷியாக்களுக்கு அல்வா கொடுத்து அப்பாசித்துகள் ஆட்சியை கைப்பற்றுகின்றனர்[பொ.ஆ 751].

உம்மையாதுக்கள் முற்றுமுழுதாக் அழிக்கப்பட்டதல் அவர்களின் மதப்பிரிவு கருத்துகள் தெரியவில்லை.மீதம் இருக்கும் ஷியா,சுன்னி இருவரின் ஹதிதுகள் குரான் விள்க்கஙகள் இபோதும் மாறுபடுவதும் ஒரு சான்றே.

சுன்னி பிரிவினர் குரானை மாற்றி விட்டதாக் ஷியா பிரிவினர கூறுகின்றனர்.

இதகைஅய சூழலில் இப்படிப்பட்ட சர்ர்சைக்குறிய விடயங்கள் இஸ்லாமிய தரவுகளில் இடம் பெற்றது வியப்பில்லை.

ஆகவே சர்ர்சைக்குறிய விடயங்கள் முகமதுவின் இருப்பை உறுதி செய்யாது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஸலாம் இ.சா
அருமையான் விவாதம்.100 கோடி மூமின்கள் செய்யாத ஒரு விடயத்தை டேவிட் வுட் விவாதித்தது அருமை.
எனினும் சென்ற பதிவுகளில் அலசிய விடயங்களையே பேசினர்
முகம்து,குரான்,முஸ்லிம் என்பவைகளை குறித்த வர்லாற்று குறிப்புகள் முதல் ஹிஜ்ரி நூற்றாண்டில் மிக குறைவு.அதுவும் முதல் 50 வருடங்களுக்கு குறிப்பிட்டு சொல்லவே முடியவில்லை.என்பதை இருவருமே ஒத்துக் கொள்கின்றனர்.
ஆயினும் டேவிட் வுட் தனது வாதத்தை இப்படி தொடங்குகிறார்..
டேவிட் வுட் என்ன சொல்கிறார்?

1.முகமது(சல்) பற்ரிய குரான்,ஹதிது கூறும் விடயங்கள் அவரை நல்ல விதத்தில் சித்தரிக்கவில்லை.
அ) முதல் இறைச் செய்தி தந்தது யார் என தெரியாமை,தற்கொலை முயற்சி,கிறித்தவர் ஒருவரின் வழிகாட்டலில் நபி என அறிந்தது.

ஆ) [4க்குக்கு அதிகமாக‌]பல தாரமணம் ( ஆறில் இருந்து அறுபது வரை),வளர்ப்பு மகனின் மனைவியை மணம் புரிவது.

இ) போர் வன்முறை,கொள்ளை பொருள் 1/5 பங்கு.

ஈ) அவருக்கு சூனியம் வைக்கப்பட்டது.

உ) சாத்தானின் வசனங்கள் என்ற வசனம் யார் கூறியது என் அறியாமல் பிறகு மாற்றுதல்.

ஊ) அடிமைமுறை,அடிமைப்பெண்கள் உறவு போன்றவற்ரைஅங்கீகரித்தது

எ) அவரின் மரணம் யூதப்பெண் கொடுத்த விஷம்

பெரும்பாலான தாவாவாதிகளுக்கு முகமது(சல்) அவர்களின் இச்செயல்களை நியாயப்படுத்தவே தாவு தீர்ந்து விடுகிரது.ஆகவேதான் தவுகீத் அண்ணன் இதுவரை முகமது சிறந்தவரா அல்லது ஏதோ ஒருவர் என்று ஒரு விவாதம் கூட செய்ய முயற்சி செய்யவில்லை.செய்தால் கதை கந்தலாகி விடும் என்பது நன்கு அனைவரும் அறிவர்.

மேலே கூறியவற்றில் சில்வற்றை ஆதரபூர்வ ஹதிது என்றாலும் அண்ணன் தவறு என் கூறுவதில் இருந்தே முகமது நல்லவிதத்தில் சிதரிக்கப் படவில்லை என்பது உறுதி ஆகிறது.

இல்லாத ஒருவரை பற்றி கதை எழுதுபவர்கள் ஏன் இப்படி சர்ச்சைக்குறிய விதத்தில் ,எளிதில் விமர்சிக்கப் படும்படி எழுத வேண்டும்?

ஆகவே உண்மையாக நடந்து இருந்தால் மட்டுமே இப்படி எழுதி இருபார்கள் .ஆகவே முகமது(சல்) வரலாற்றில் வாழ்ந்த ஒரு ம‌னிதர்
இது டேவிட்டின் வாதம்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard