New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்து யார்? கடைசி காலம்- இரண்டாவது வருகை கட்டுக்கதைகள்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
கிறிஸ்து யார்? கடைசி காலம்- இரண்டாவது வருகை கட்டுக்கதைகள்
Permalink  
 


 

கிறிஸ்து யார்? கடைசி காலம்- இரண்டாவது வருகை கட்டுக்கதைகள்

 
ஏசு என்பவர் ரோமன் கவர்னர் பொந்தியுஸ் பிலாத்துவினால் ரோமிற்கு எதிரான ஆயுத்க் கலகக்காரன், யூதப் புராண மூட நம்பிக்கையின்படி "கிறிஸ்து எனும் யூதர்களின் ராஜா" என்னும்படியாக மரண தண்டனையில் இறந்தார்.
யோவான் 18:3 ரோமன் படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.12 ரோமன் படைப்பிரிவினரும்  ரோமன்  படை ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,13 முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார்.
யோவான் 19:9 பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் ' நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன் ' என்று எழுதி இருந்தது.22 பிலாத்து அவர்களைப் பார்த்து, ' நான் எழுதியது எழுதியதே ' என்றான்.
images?q=tbn:ANd9GcTnwhhKCLq6rmMLZ3Us_7o8n3Gn8EG90TidqVsWEQcnQ1DbmTTq images?q=tbn:ANd9GcQS_4_mYdj1zGacuevoeZkRSL2JAgvcBqUCc5EL5z92CyBNBjaw7Q
இயேசு யூதர்களின் அரசன்  என்பதன் மூல கிரேக்கம், கிறிஸ்து, எபிரேயம் மேசியா

கதாசிரியர்கள் இறந்த இயேசு உயிர்த்து எழுந்தார் என்பதை நம்பி, அவர் கதையைப் பரப்ப புனைந்தவையே  சுவிசேஷங்கள். முதலில் புனையப்பட்டது மாற்கு, அதை பின்பற்றி அதை ஒத்து புனையப்பட்டவை மத்தேயு, லூக்கா சுவிகள், மாற்கு கதை அறிந்தும் மாறுபட்டபடி புனையப்பட்டது யோவான சுவிசேஷம்.பைபிளியல் அறிஞர்கள் சுவிசேஷங்களின் ஆரம்ப வடிவம்  புனைந்த காலம் என்பது.இயேசு பேசிய மொழி எபிரேயம் அல்லது அரெமிகம். ஆனால் சுவிகள் அனைத்தும் கிரேக்க மொழியில் புனையப்பட்டவை.

இயேசு மத்தேயு சுவிசேஷத்தின்படி பொ.மு. 6ல் பெத்லஹேம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப்- மேரி மகனாகப் பிறந்தார். லூக்கா சுவியின்படி பொ.கா.8ல் நாசரேத் வாழ் ஏலி மகன் ஜோசப்- மேரி மகனாகப் பிறந்தார். 
சீடரோடு இயங்கிய காலம் ஒரு வருடத்திற்கும் குறைவு, கடைசி வாரம் மட்டுமே யூதேயாவில் ஜெருசலேமில்.யோவான் சுவியின்படி, சீடரோடு 2 வருடத்திற்கும் சற்றெ அதிகமாக இயங்கினார். யோவான் கைதிற்கு முன்பே தொடங்கி யூதேயா- கலிலேயா என மாறிமாறி சுற்றினார். கடைசி 8 மாதங்கள் யூதஏயாவில் தான்.

Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதிய   ஏற்பாடு பேராசிரியர்ஹன்டர் பின்வருமாறுசொல்லுகிறார்-
“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned.
4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onward the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn 3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.
நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு இயங்கியதுகலிலேயாவில் என்றும், -ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக மரணத்தின் போது மட்டுமே ஜெருசலேம் வந்தார்மேலும் -ஞானஸ்நானர் யோவான்கைதிற்குப் பிறகு, கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும்நான்காவது   சுவியோ வேறுவிதமாக,  முதல் ஆறு அத்தியாயங்களில் யுதேயாவிலும்கலிலேயாவிலும் முன்னும்-பின்னும்   இயங்கியதாகவும்ழாம்   அத்தியாயத்திற்குப் பின் முழுமையாக ஜெருசலேமிலும் யூதேயாவிலும்எனச் சொல்கிறார்,   யோவான்3:24- ஞானஸ்நானர் யோவான்  கைதிற்குப்முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.
மேசியா - கிறிஸ்து
மேசியா - கிறிஸ்து என்பதன் நேரடிப் பொருள், மேலே எண்ணெய் ஊற்றப்பட்டவர். இஸ்ரேல் நாட்டில் மன்னர், யூத ஆலயத் தலைமைப் பாதிரி மற்றும் போர் தளபதி  ஆகியோர் பதவி ஏற்கும்போது தலையில் வாசனை எண்ணெய் தடவுதலை  (1சாமுவேல்10:12அரசர்கள்9:6;  யாத்திராகமம்29:5-7) வைத்து தேர்ந்தெடுக்கப் பட்டவர் எனும் சொல் ஆகும். 
மரணமடைந்த இயேசுவை- எனக் காட்ட மாற்கு பயன்படுத்தும் வசனம்
  மாற்கு1:2 ' இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார்.
மலாக்கி3: 1 இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்
ஞானஸ்நானர் யோவான் தான் எலியா என ஏசு சொல்வதாகவும் உள்ளது.
  மத்தேயு11:14 நியாயப்பிரமாணம் கூறியவற்றையும் தீர்க்கதரிசிகள் கூறியவற்றையும் நீங்கள் நம்பினால், யோவானே எலியா
 லூக்கா7: 27 ' இதோ! என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார் ' என இவரைப் பற்றித்தான் மறை நூலில் எழுதப்பட்டுள்ளது.
எலியா வருகைக்குப் பின் கர்த்தரின் நாளில் கர்த்தர் வருவார் என்பது தான் கதையின் நம்பிக்கை
மலாக்கி4:1 இதோ! சூளையைப்போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்: வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது: முற்றிலும் சுட்டெரித்து விடும், என்கிறார் படைகளின் ஆண்டவர். 5 இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்.6நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடிஅவர் பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார்.
//ஆண்டவரின் நாள் - என்றால் என்ன என்ன அதில் நடக்கும்?
 யோவேல்1:15 துக்கமாயிருங்கள். ஏனென்றால் கர்த்தருடைய சிறப்புக்குரிய நாள் அருகில் இருக்கிறது. அப்போது, தண்டனையானது சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து ஒரு சங்காரம் போன்று வரும். 
28 “இதற்குப் பிறகு நான் எனது ஆவியை அனைத்து ஜனங்கள் மேலும் ஊற்றுவேன்.
யோவேல்2:28உங்கள் மகன்களும், மகள்களும் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள்.    உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.     உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைக் காண்பார்கள். 29 அப்போது, நான் பணியாட்கள் மேலும் பணிப்பெண்கள் மேலும்     என் ஆவியை ஊற்றுவேன்.   30 நான் வானத்திலும் பூமியிலும் இரத்தம், நெருப்பு,     அடர்ந்த புகைபோன்ற அதிசயங்களைக் காட்டுவேன். 31 சூரியன் இருட்டாக மாற்றப்படும்.     சந்திரன் இரத்தமாக மாற்றப்படும்.     பிறகு கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள்வரும். 32 பிறகு,   கர்த்தருடைய நாமத்தை கூப்பிடுகிற எவரும் இரட்சிக்கப் படுவார்கள்.”  சீயோன் மலையின் மேலும், எருசலேமிலும் காப்பாற்றப்பட்ட ஜனங்கள் இருப்பார்கள்.     இது கர்த்தர் சொன்னது போன்று நிகழும். ஆம் கர்த்தரால் அழைக்கப்பட்ட மீதியிருக்கும் ஜனங்கள் திரும்பி வருவார்கள்.
 இதே வார்த்தைகளை ஏசுவும் சொன்னதாகக் கதை
 மாற்கு 13:23 எனவே கவனமாய் இருங்கள். இவை நடைபெறும் முன்னரே நான் உங்களை எச்சரிக்கை செய்துவிட்டேன்.
24 “அந்நாட்களில் அத்துன்பங்கள் நடந்த பிறகு, “‘சூரியன் இருளாகும்.    சந்திரன் ஒளி தராது.25 நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்.    வானிலுள்ள அத்தனையும் மாறிப்போகும்’26 “பிறகு மேகங்களுக்கு மேல் மனித குமாரன் மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும் வருவதைக் காண்பார்கள். 3நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன்.இப்பொழுது உள்ள மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே நான் சொன்னவை எல்லாம் நிகழும். 31 இந்த முழு உலகமும் பூமியும் வானமும் அழிந்துவிடும். ஆனால் நான் சொன்ன வார்த்தைகள் மாத்திரம் அழியாது.
ஏசு சீடரை அனுப்பும்போது சொலவதாக கதையில் உள்ளது.

மத்தேயு 10:1 இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார்.  5.இயேசு அவர்களிடம்,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். ஆனால் ஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள்.   நீங்கள் சென்று, ‘பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது’ என்று போதியுங்கள். 

23 ஒரு நகரத்தில் நீங்கள் மோசமான முறையில் நடத்தப்பட்டால், வேறொரு நகரத்திற்குச் சென்றுவிடுங்கள். உங்களுக்கு நான் உண்மையைச் சொல்லுகிறேன், மனிதகுமாரன் வருகிறவரைக்கும், நீங்கள் எல்லா யூதர்களின் நகரங்களுக்கும் செல்ல முடியாது.
யோவானை ஏலியா எனச் சொன்ன ஏசு, பழைய ஏற்பாட்டில் சட்டங்களும், தீர்க்கரகளும் சொன்னவை எல்லாம் யோவானோடு முடிந்தது என்கிறார்.
மத்தேயு11:13 ல்லாத் தீர்க்கதரிசனங்களும் மோசேயின் நியாயப் பிரமாணமும் யோவானின் வருகை வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தன. நடக்கவிருந்த செயல்களை அவை கூறின.  
லூக்கா16: 16திருச்சட்டமும் இறைவாக்கினர்களும் யோவான் காலம் வரையிலும் தான். 
 இது போலே பலப்பல வசனங்கள் உள்ளன. இஸ்ரேலின் யூத மதத்தில் ஒரு பிரிவினர் எபிரேய பைபிளில் அதீதமாக கற்பனை செய்து உலகம் அழியப் போகிறது, அதற்கு முன் கடைசி தலைமுறையில் மேசியா வருவார் என நம்பினர்.
 
 எலியா வந்த பின்னர் கர்த்தரின் நாளில் தான் வருகை, அது உலகம் அழிவிற்கு தான். இதுவே யூத பழைய ஏற்பாட்டுக் கதியின் நம்பிக்கை ஊகங்கள்.   எனவே தீர்ப்பு நாளில் வருபவர் மேசியா- இறுதி தூதர்.
 
ஆனால் ஏசுவின் காலத்தில் மோசேயின் நாற்காலியில் யூதத் தலைமை பாதிரியாக இருந்தவர்கள் சதுசேயர்கள். அவர்கள் நம்பியது.
அப்போஸ்தலர்  நடபடிகள் 23:8சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்: பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக் கொண்டனர்.
தேவனின் பெயரை வீணில் உச்சரிக்கக் கூடாது, அம்மதத்தில் கடவுள் மகனாக அவதரித்தல் எல்லாம் வெற்று கட்டுக் கதைகள்.
 
இயேசுவை கடவுள் என்கின்றனர்- அவர் சொன்னதாக

யோவான் 6:48 நானே ஜீவனளிக்கும் அப்பம். 49 உங்கள் மூதாதையர்கள்தேவன் கொடுத்த மன்னாவை வனாந்தரத்தில் உண்டார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களைப்போன்றே பூமியில் மாண்டுபோனார்கள். 50 நான்பரலோகத்தில் இருந்து வந்த அப்பம்ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன் என்றென்றைக்கும் பூமியில் உயிர்வாழ்வான். 51 என்னுடைய சரீரம் தான் அந்த அப்பம். 

 2000 வருடங்களாக மன்னாவை சாப்பிட்டவரைப் போல, ஏசு- பவுல், பேதுரு என அனைவருமே இறந்தனர். மேலும் ஏசு 12 சீடர் தேர்ந்தெடுத்தார், அவரின் புது உல்கம யூதருக்கு மட்டுமே, 12 கோத்திரத்தாருக்கு 12 பேர் ஆனால் அதில் ஒருவன் ஏசு கையால் அப்பம் பெற சாத்தான் நுழைந்ததாம்.
மத்தேயு19:28 இயேசு தன் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், புதிய உலகம் படைக்கப்படும்பொழுது, மனிதகுமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின்பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள். பன்னிரெண்டு அரியணைகளில் நீங்கள் அமர்ந்து, இஸ்ரவேலின் பன்னிரெண்டு இனங்களுக்கும் நீதி செய்வீர்கள்.

யோவான் 13:26 இயேசு அப்பத்துண்டை தோய்த்து எடுத்தார். சீமோனின் மகனான யூதாஸ்காரியோத்திடம் அதனைக் கொடுத்தார். 27 யூதாஸ் அந்த அப்பத்துண்டை வாங்கிக்கொண்டதும் சாத்தான் அவனுக்குள் புகுந்துகொண்டான். 


 

யூத மதம் என்பது வெறும் அரசியல் மதமே, அதில்  வரவேண்டிய கிறிஸ்து -இரண்டாவது வருகைஎல்லாமே வெறும் மூட நம்பிக்கைகளே



-- Edited by Admin on Thursday 15th of May 2014 09:23:32 PM



-- Edited by Admin on Thursday 15th of May 2014 09:24:08 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Foolish-இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் (புனித தோமா வழிப் பார்வை
Permalink  
 


நான் கிருத்துவ சமயத்தினைச் சார்ந்தவன் அல்ல!!!

இதனை இங்கே நான் முதலில் கூறிக் கொண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது. நான் சமயத்தால் ஒரு இந்து. ஆனால் இன்று அனைத்துச் சமயங்களும் அரசியல் கருவிகளாக மாறி அவற்றிற்கும் இறைவனுக்கும் சரி ஆன்மீகத்திற்கும் சரி சிறிதும் தொடர்பற்று இருக்கும் இந்நிலையில் ஒரு சமயத்தினைச் சார்ந்தவனாக என்னை அடையாளம் காட்டிக் கொள்வதனை விட 'நான் ஒரு இறை நம்பிக்கையாளன்' என்றே என்னை அடையாளம் காட்டிக் கொள்வது நன்றாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன். ஆனால் அதிலும் பிரச்சனை இருக்கத் தான் செய்கின்றது. இறை நம்பிக்கையாளன் என்றால் எந்த கடவுளை நீ நம்புகின்றாய் என்ற கேள்வியினை நாம் எதிர் கொண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது. அதற்கு பதிலாக 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும் 'ஒரே மந்தை ஒரே மேய்ப்பன்' என்றே நாம் விடையினை அளித்தாலும் அதனை பலர் ஏற்றுக் கொள்வது கடினம். காரணம் மக்கள் பல்வேறாக பிரிந்து இருக்கின்றனர்...பல்வேறு சமயங்கள் இருக்கின்றன...அச்சமயங்களிலேயே பல பிரிவுகள் இருக்கின்றன...அவைகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சண்டை இட்டுக் கொண்டே வேறு இருக்கின்றன. இந்நிலையில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றே நாம் பொதுவாக கூறினோம் என்றால் நிச்சயம் அதனை ஏற்றுக் கொள்வது என்பது கடினமான ஒன்றாகத் தான் இருக்கும்.

எனவே இந்நிலையில் இறை நம்பிக்கையாளராக விளங்கும் நம் மீது நம்மையும் நமது சமயங்களையும் நன்கு ஆராய்ந்து பார்த்து, நாம் உண்மையாகவே சரியான கருத்தில் தான் இருக்கின்றோமா...நமது சமயம் உண்மையாகக் கூறுகின்ற கருத்துக்களை நாம் அறிந்து இருக்கின்றோமா?...உலகில் உள்ள சமயங்கள் கூறுகின்ற கருத்துக்களும் நமது சமயக் கருத்துக்களும் வேறுபட்டவையா அல்லது அவை அனைத்தும் ஒரே கருத்தினைத் தான் கூறுகின்றனவா என்றும் நாம் ஆராய்ந்துப் பார்த்தாகத் தான் வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் அனைத்துச் சமய நூல்களையும் அவற்றின் வரலாற்றையும் அறிந்துப் பார்த்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

அதனை ஒரு ஆன்மீகத் தேடல் பயணம் என்றும் கூறலாம்...வரலாற்றுப் பயணம் என்றும் கூறலாம். எனதும் அப்படிப்பட்ட ஒரு தேடல் பயணம் தான். எனது தேடலில் நான் உண்மை என்று கண்டவற்றை இவ்வலைத்தளத்தின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்துக் கொண்டு வருகின்றேன். காரணம் அக்கருத்துக்களும் விடயங்களும் நிச்சயமாக மக்களால் அறியப்பட வேண்டியவைகள் என்றும் அறிந்து விவாதிக்கப்பட வேண்டியவைகள் என்றும் நான் எண்ணுவதே ஆகும். இப்பொழுது தொடங்கப் போகும் இப்பதிவும் அப்படிப்பட்ட ஒன்றே.

பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

எச்சரிப்பின் பகுதி:

"நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்றுப் போங்கள்" என்று (மத் 7: ) இயேசு கூறுகின்றார். யாரைப் பார்த்து?

"கர்த்தாவே; கர்த்தாவே; உமது நாமத்தினாலே தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா?
உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா?
உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?" (மத் - 7 :22 )


என்றுக் கூறும் ஊழியக்காரர்களைப் பார்த்து.

அதாவது அவர் நாமத்தினாலே ஊழியம் செய்யும் ஊழியக்காரர்களைப் பார்த்து இயேசு கிருத்து இவ்வாறு கூறுவது ஏன்?

இது ஊழியக்காரர் பலரால் புரிய முடியாத கேள்வி.
ஏன்?
இந்த ஊழியங்களை இவர்களுக்குக் கொடுத்ததே இயேசு கிருத்து தான்.

"இயேசு கிருத்து தம்முடைய (சீடர்களை) ஊழியக்காரர்களைத் தம்மிடத்தில் வரவழைத்து அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்." (மத் - 10 :1)

நோய்களையும் பேய்களையும் நீக்கும் அதிகாரத்தைக் கொடுத்த கர்த்தர், அவர் நாமத்தினாலே அவர் கொடுத்த ஊழியத்தைச் செய்கிறவர்களைப் பார்த்து "நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே; என்னை விட்டு அகன்றுப் போங்கள்" என்று கூறுவது எந்த விதத்தில் நியாயமானது என்னும் கேள்வி எழுகின்றது.

அவருடைய ஊழியக்காரர் அப்படி என்ன அக்கிரமத்தைச் செய்தார்கள்? என்பதைக் குறிப்பிடாமல் அவர்களை நோக்கி, "அக்கிரமச் செய்கைக்காரரே; என்னை விட்டு அகன்றுப் போங்கள்" என்று கூறுவது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை என்னும் எண்ணம் நமக்கு ஏற்படுகிறது.

அதாவது அவர் கொடுத்த ஊழியமாகிய, அவர் நாமத்தால் பிசாசுகளைத் துரத்தலும், அவர் நாமத்தால் தீர்க்கதரிசனம் உரைத்தலும், அவர் நாமத்தால் அநேக அற்புதங்களைச் செய்தலும் அக்கிரமச் செய்கையா? என்னும் கேள்விகள் எழுகின்றன.

இவற்றிற்கு விடைகாண இயேசு கிருத்து இவற்றிற்கான அதிகாரத்தைக் கொடுத்த பின்னணியைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

மத்தேயு 10 ஆம் அதிகாரத்தின் 7 ஆம் வசனம் இந்த அதிகாரத்தை அவர் தம் ஊழியக்காரர்களுக்குக் கொடுத்தது ஏன் என்பதற்கான காரணத்தைக் கூறுகிறது.

போகையில் "பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது" என்று பிரசங்கியுங்கள் என்னும் கட்டளையைச் சொல்லுகிறது. அவருடைய கட்டளையை அவர்கள் நிறைவேற்றச் செல்லும் பொழுது, தங்குவதற்கும், உணவுக்கும், உடுத்துவதற்கும் ஆகும் செலவுகளுக்காக எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று (மத் 10 : 9-10 ) கட்டளையிட்டதுடன், "வேலையாள் தன் ஆகாரத்திற்குப் பாத்திரமாவான்" (மத் 10: 10) என்றும் தெரிவித்து உள்ளார்.

இயேசு கிருத்து தம் சீடர்களுக்குக் கொடுத்திருக்கும் வேலையும், அந்த வேலையைச் செய்வதற்கான கூலியாகத் தங்குமிடம் முதலியன கிடைப்பதற்குரிய வாய்ப்பாக வரங்களைக் கொடுத்ததுடன்

"இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்" (மத் 10 :8 ) என்றும் கூறி உள்ளதை நாம் பார்கின்றோம்.

இந்தப் பகுதியில் முக்கியமாக நடைபெற வேண்டிய வேலையையும், அந்த வேலை தடையில்லாமல் நடைபெறுவதற்கு, வேலை செய்கிறவர்களுக்குக் கூலியாகக் கிடைக்க வேண்டிய வசதிகளுக்காக வரங்களும் கொடுக்கப்பட்டுள்ள நிலை விளக்கப்பட்டு உள்ளது.

இந்த விளக்கத்தின்படி,

"பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது" என்று அனைத்து இடங்களிலும் பிரசங்கம் செய்வதற்கு வாய்ப்பாக வரங்கள் கொடுக்கப்பட்டன என்பதை நாம் அறிகின்றோம். ஆனால் அந்த ஊழியக்காரர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வெளியாகிய பரலோக இராஜ்யத்தைப் பற்றியும், அதை அறிவிக்கும் முறைகளைப் பற்றியும் சிறிதும் சிந்திக்காமல், வசதிக்காகக் கொடுக்கப்பட்ட வரங்களைப் பயன்படுத்தி வசதியாக வாழ்ந்தமையால், அவர்களுடைய வாழ்க்கை முறை அக்கிரமச் செய்கை என்று கண்டிக்கப்படுவது நமக்கு விளங்குகிறது.

இன்றும் ஊழியக்காரர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளுகிற, இத்தகைய வரங்களையும் மற்ற வரங்களையும் பெற்றவர்கள், பரலோக இராஜ்யம் பற்றி எண்ணிப் பார்க்க இயலா நிலையில் பூலோக இராஜ்யம் பற்றிய சிந்தனையிலேயே வாழ்கின்றவர்களை நாம் பார்க்கின்றோம். இவர்களை இயேசு கிருத்து "அக்கிரமச் செய்கைக்காரர்களே, அகன்றுப் போங்கள்" என்று கூறும் நிலை இன்றும் இருப்பதைக் காணுகின்றோம்.

அதாவது 'பரலோக இராஜ்யம்' பற்றி அறிய விரும்பாமலும், அதைப்பற்றிப் பிரசங்கிக்க விரும்பாமலும், தங்களுக்குக் கிடைத்துள்ள வரங்களால் கிடைக்கும் வசதி வாய்ப்புகளை மட்டும் பயன்படுத்தும் பூலோக இராஜிய ஊழியக்காரர்கள் அக்கிரமச் செய்கைக்காரர்கள் என்று இன்றும் கண்டிக்கப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

இது மட்டுமன்று, பைபிளைக் கையில் வைத்துக் கொண்டு, ஊழியக்காரர் என்று உரிமை பாராட்டும் அனைவருக்கும் இது ஒரு எச்சரிப்பின் பகுதியாகும்.

இந்த எச்சரிப்பின் பகுதியைப் பின்னணியாகக் கொண்டு இயேசு கிருத்து தெளிவாகக் கூறியுள்ள பரலோக இராஜ்யத்தைப் பற்றியும், பரலோக இராஜ்யம் வரக் காரணமான இரண்டாம் வருகையைப் பற்றியும் பைபிளைப் பரிசுத்த ஆவியின் வெளிச்சத்தில் கூர்ந்து ஆராய்வோம் வாருங்கள். "பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது" என்று இயேசு கிருத்து பிரசங்கிக்கக் கூறியபடி பரலோக இராஜ்யம் கேட்டவர்களுக்குச் சமீபமாக வந்ததா?

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும் ஊழியக்காரர்கள் இப்படித்தான் மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ண வேண்டுமா? அல்லது பரலோக இராஜ்யம் இயேசு கிருத்து கூறி இருந்தபடி வந்துவிட்டது. ஆனால் நாம் அதை அறிய முடியாமல் இருக்கின்றோமா?

இப்பொழுது எப்படிப் பிரசங்கிக்க வேண்டும்? என்று இயேசு கிருத்து விரும்புகின்றார் என்பதை அறிந்துக் கொள்ள பைபிளை ஆராய்வோம் வாருங்கள்.

"எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்; பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்" (1 தெச. 5 :21 : 22)

உலகம் முழுவதிலுமுள்ள கிருத்தவர்கள் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக இரண்டாம் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். பலர் இரண்டாம் வருகையின் நாள் இது தான் என்று குறித்து ஏமாற்றமடைந்த வரலாறுகளும் இருக்கின்றன. இதன் அடிப்படைக் காரணம் என்ன? என்பதைப் பைபிளின் அடிப்படையில் நோக்குவோம்.

கிருத்துவர்களை பைபிள் இரண்டு பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கிறது.

1. யூதக் கிருத்தவர்கள்
2. புற ஜாதிக் கிருத்தவர்கள்.

இயேசு கிருத்து யூத மதத்தில் பிறந்தவர். இதனால் கிருத்துவை ஏற்றுக் கொண்டு முதலில் கிருத்தவர்கள் ஆனவர்கள் யூதர்கள். யூதக் கிருத்தவர்கள் தங்கள் நம்பிக்கையை யூதரல்லாத மற்ற புற ஜாதி மக்களிடையே பரப்பினார்கள். இதனால், பின்னர் புற ஜாதிக் கிருத்தவர்கள் உருவானார்கள்.

இதனால் புற ஜாதிக் கிருத்தவர்கள் யூதக் கிருத்தவர்களின் நம்பிக்கைகளைப் பின்பற்றி வருகின்றார்கள். இன்று உலகம் முழுவதிலுமுள்ள கிருத்தவர்கள் இரண்டாம் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், இது யூதக் கிருத்தவர்கள் கற்றுக் கொடுத்த எதிர்பார்ப்பே ஆகும்.

யூதக் கிருத்தவர்களுக்கு இந்த நம்பிக்கை எவ்வாறு வந்தது என்றால் யூதர்களுடைய வேதமாகிய பழைய ஏற்பாட்டில் இருந்து வந்தது ஆகும்.

பைபிள் முக்கியமாக மூன்று மதங்களின் நம்பிக்கைகளை விளக்குகிறது. அவை,
1. இசுரவேலர் மத நம்பிக்கை
2. யூதர் மத நம்பிக்கை
3. கிருத்துவ மத நம்பிக்கை
ஆகும்.

இசுரவேலர் மதம்:

இசுரவேலர் 12 கோத்திரத்தினர். இசுரவேல் என அழைக்கப்பட்ட யாக்கோபு தம் குடும்பத்தைப் பஞ்சத்தில் இருந்து காப்பாற்றிய யோசேப்பின் மக்கள் இருவரையும் இசுரவேல் கோத்திரங்களில் சேர்த்துக் கொண்ட காரணத்தால் இசுரவேல் கோத்திரத்தார் எண்ணிக்கை 13 ஆனது.

இந்த 13 கோத்திரத்தாரும் எகிப்தியர்களால் அடிமைப்படுத்தப்பட்டுத் துன்புற்றக் காலத்தில், இசுரவேலரை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து கானான் நாட்டுக்கு வழி நடத்தியவர் மோசே.

கானான் நாட்டை வென்று இசுரவேலருக்கு அந்நாட்டைப் பிரித்துக் கொடுத்தவர் யோசுவா.

கானான் நாட்டில் வாழ்ந்த இசுரவேலரைத் திறமையாக ஆட்சி செய்து, கூடாரங்களை ஆலயமாக வைத்திருந்த நாடோடி நிலையிலிருந்து, எருசலேமில் ஆலயம் கட்ட வழி வகுத்தவர் தாவீது.

தாவீதின் மகனாகிய சாலமோன் எருசலேமில் தேவாலயத்தைக் கட்டினார். சாலமோனின் மகன் ரெகொபெயாம் காலத்தில் இசுரவேல் நாடும் இசுரவேல் மதமும் இரண்டாக உடைந்தன.

13 கோத்திரங்களில், அரசாண்ட யூதக் கோத்திரமும், பென்யமின் கோத்திரமும், ஆசாரியராயிருந்த லேவி கோத்திரத்தில் ஒரு பகுதியும் ஆகிய இரண்டரை கோத்திரத்தார் எருசலேமைத் தலைநகராகக் கொண்ட யூத நாட்டில் தங்கினர்.

இசுரவேலரின் வழிபாட்டிடங்களில் வழிபடக் கூடாது. எருசலேம் கோவிலில் மட்டுமே பலி இட வேண்டும். மற்ற இசுரவேலர் வழிபாட்டிடங்களில் பலியிடக் கூடாது என்னும் கட்டுப்பாடுகளுடன், யூத மதத்தைத் தோற்றுவித்தனர். யூத மதத்தின் உயிர்நாடி எருசலேம் கோவில் ஆயிற்று.

யூத அரசனாகிய ரெகொபெயாமிடமிருந்து பிரிந்து சென்ற பத்தரைக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பழைய வழிபாட்டிடங்களான பெத்தேல், மிஸ்பா, சீனாய், கில்கால், சீகேம், எபனேசர் முதலிய இடங்களில் பலியிட்டு இசுரவேலர் மதத்தைத் தொடர்ந்து பின்பற்றியதுடன், எருசலேமுக்குப் பதில் சமாரியா பட்டணத்தைத் தலைநகராகக் கொண்டு இசுரவேல் நாட்டை ஆளத் தொடங்கினர்.

யோசுவா கானான் நாட்டை வென்று, பிரித்துக் கொடுக்கும் பொழுது, 13 கோத்திரங்களில் லேவி கோத்திரத்திற்குப் பங்கு கொடுக்கவில்லை. ஆலயத்தில் பணி செய்யும் பொறுப்புக் கொடுக்கப்பட்டு, தசமபாகம் லேவிக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் 12 கோத்திரம் என்று கூறும் வழக்கம் மீண்டும் வந்தது என்பது இங்கே நினைவு கூரத்தக்கது.

நாடு இரண்டாகப் பிரிந்த பின்னர், "யூத நாடு" என்னும் பெயரும், "யூத மதம்" என்னும் பெயரும் இசுரவேலர் வரலாற்றில் புதிதாகத் தோன்றின.

சமாரியா பட்டணத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட இசுரவேலரை, சமாரியர் என்றும், இசுரவேலரின் வழிபாட்டைச் சமாரியர் வழிபாடு என்றும் யூத நாடினர் அழைக்கலாயினர்.

சமாரியர் நாடு கி.மு. 721 இல் அசீரியர்களால் பிடிக்கப்பட்ட பின்னர், சமாரியர்களாகிய இசுரவேலரும், சமாரியர் வழிபாடாகிய இசுரவேலர் வழிபாடும், யூத இனத்தவராலும், யூத மதத்தவராலும் அலட்சியமாகவும் இழிவாகவும் நோக்கப்பட்டனர்.

சமாரியர் வழிபாட்டிடங்களாகிய இசுரவேலர் வழிபாட்டிடங்களில் சில, யூத மதத்தைச் சேர்ந்தவர்களால் இடிக்கப்பட்டதுடன், சமாரியர்களாகிய இசுரவேலரை, இசுரவேல் மதத்தில் இருந்து யூத மதத்திற்கு மாற்றும் முயற்சிகளும் அது முதல் மேற்கொள்ளப்பட்டன. இயேசு கிருத்து இவ்வாறு மதம் மாற்றுகிறவர்களைப் பற்றியே மத்.23 : 15 இல் குறிப்பிடுகின்றார்.

இதனால், இசுரவேலராகிய சமாரியர்கள் இழிவானவர்கள் எனவும், யூதர்கள் உயர்வானவர்கள் எனவும் எண்ணுகின்ற மனப்போக்கு யூதர்களிடையே வளர்ந்தது. இதனால் இசுரவேலர் மதம் அழியும் நிலையை அடைந்து, யூத மதம் சிறப்படையும் நிலை உருவானது.

இந்த நிலைகளுக்குக் காரணம் இசுரவேலர் ஆட்சியை இழந்தமையும், யூதர்கள் ஆட்சியில் இருந்தமையுமே ஆகும்.



-- Edited by Admin on Thursday 15th of May 2014 09:22:23 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: Foolish-இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் (புனித தோமா வழிப் பார்வை
Permalink  
 


யூத மதம்:

இசுரவேலராகிய சமாரியர் ஆட்சியை இழந்து துன்புற்று இழிவடைந்த காரணத்தால், யூதர்கள் தங்கள் நாட்டையும், தங்கள் ஆட்சியையும், தங்கள் மதத்தையும் மிகவும் உயர்ந்தவையாகவும், தாங்களே தங்கள் தெய்வத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புக்குரியவர்கள் எனவும் நம்பத் தொடங்கினர்.

தங்கள் நாடாகிய யூத நாடும், தங்கள் மதமாகிய யூத மதமும், தங்கள் கோவிலாகிய எருசலேம் கோவிலும் தங்கள் தெய்வத்தால் என்றும் அழியாமல் நிலையாகப் பாதுகாக்கப்படும் என்று உறுதியாக நம்பி, மற்றவர்களை இழிவாகவும் மற்ற வழிபாடுகளை இகழவும் தொடங்கினர். அதாவது ஆணவ நிலையின் உச்சத்தை அடைந்தனர்.

இந்த நிலையில் பாபிலோனில் இருந்து வந்த படை ஒன்று யூதர் நாட்டை வென்று, யூதர் தேவாலயத்தைத் தீயிட்டுக் கொளுத்தி, யூத வாலிபர்களைக் கைதிகளாக அடிமைப்படுத்தி கி.மு586 இல் பாபிலோனுக்குக் கொண்டு சென்றது.
 
யூதர்களின் நம்பிக்கைகள் அனைத்தும் தவிடு பொடியாகி, எஞ்சி இருந்த யூதர்கள் மிகவும் மனவேதனையில் இருந்தனர். அந்த நேரத்தில் அவர்களுடைய மனவேதனையைக் குறைக்கவும் மாற்றவும் தீர்க்கதரிசிகள் உருவாயினர்.
 
தாவீதின் கோத்திரத்தில் ஒரு வீர அரசன் தோன்றுவான்; அவன் யூத நாட்டையும் யூத மதத்தையும் யூதக் கோவிலையும் திரும்பவும் மிகச் சிறப்புகுரியனவாக எழுப்புவான் என்று யூத மக்களுக்குப் புத்துணர்ச்சியை ஊட்டினர். யூதர்களின் தெய்வம், யூதர்களின் எழுச்சிக்கு ஏற்ற வாக்குத்தத்த வாக்கியங்களைக் கொடுத்திருப்பதாகக் கூறி யூதர்களுடைய தளர்ச்சியிலிருந்து அவர்களுக்கு எழுச்சியை ஊட்டினர்.
 
பாபிலோனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டமையால், அடிமைப்படுத்தப்பட்ட யூதர்களுக்கு விடுதலை கிடைக்கத் தொடங்கியது. விடுதலை அடைந்தவர்கள் படிப்படியாகப் பெருகி, கி.மு 516 இல் திரும்பவும் எருசலேமின் கோவிலையும், எருசலேமின் மதிலையும் கட்டத் தொடங்கினர்.
 
யூத நாட்டிற்கும், யூத மதத்திற்கும், எருசலேமின் வழிப்பாட்டிற்கும் புத்துணர்வு கொடுக்க முயன்றனர்.
 
ஆயினும் பழைய பெருமைக்குரிய நிலையை அடைய வேண்டுமானால், எதிரி அரசர்களை எல்லாம் வீழ்த்தி ஆட்சி அமைத்த தாவீதைப் போன்ற பெரு வீரனாகிய அரசனைத் தங்கள் தெய்வம் தங்களுக்காக எழுப்புவார் என்று நம்பிச் செயல்பட்டு வந்தனர். இந்த நம்பிக்கை யூத மத நம்பிக்கையாக மாறியது.
 
இவரே யூத அரசனாகிய கிருத்து:
 
யூத மதத்தில் இயேசு கிருத்து பிறந்தார்;வளர்ந்தார்; இவரே யூதர்கள் எதிர்ப்பார்த்த யூத அரசனாகிய மேசியா என்று சிலர் நம்பத் தொடங்கினர். அவருடைய சீடர்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்ததை நாம் புதிய ஏற்பாட்டில் பார்க்கின்றோம்.
 
இயேசு கிருத்துவின் காலத்தில் யூத நாட்டை ஆண்டவர்கள் ரோமர்கள்.
 
யூத அரசனாகிய கிருத்து ரோம ஆட்சியாளர்களை வென்று, யூத இராச்சியத்தைத் திரும்பவும் நிலைநாட்டுவார் என்று யூத மதத்தினர் முழுமையாக நம்பினர்.
 
இயேசு கிருத்துவின் சீடர்கள் அனைவரும் யூத மதத்தில் பிறந்தவர்கள். ஆகையால் இயேசு கிருத்துவின் செயல்பாடுகளைப் பார்த்து இவரே யூத அரசனாகிய கிருத்து என்று முழுமையாக நம்பத் தொடங்கினர்.
 
யூத அரசனாகிய கிருத்துவின் முதல் வருகை:
 
இயேசு கிருத்துவே யூதர்கள் எதிர்பார்த்த கிருத்துவாகிய மேசியா என்று இயேசு கிருத்துவின் சீடர்கள் முழுமையாக நம்பியமையால், இயேசு கிருத்து ரோமர்களை விரட்டி யூத இராச்சியத்தை நிறுவும் பொழுது அவருடைய சீடர்களாகிய தாங்கள் பன்னிருவரும் பன்னிரு கோத்திரங்களாகிய இசுரவேலின் மொத்த மக்களையும் ஆளும் நிலையை அடைவோம் என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பு.
 
இதனால் இயேசு கிருத்து ஆளும் பொழுது சீடர்களின் யார் முக்கிய பொறுப்பில் இருப்பது என்பது பற்றி அவர்களிடையே போட்டி இருந்ததையும் நாம் பார்க்கின்றோம்.
 
இந்த நிலையில், அவர்கள் சிறிதும் எதிர்பார்க்காத முறையில் இயேசு கிருத்து சிலுவையில் அறையப்பட்டுக் கொலை செய்யப்பட்டது அவர்களுக்குப் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. எம்மாவூருக்குச் சென்றுக் கொண்டிருந்த சீடர்களின் உரையாடல் இதை வெளிப்படுத்துகிறது.
 
"அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம் இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது." - லூக்கா 24:21
 
ஆயினும், இயேசு கிருத்துவின் உயிர்த்தெழுதல் சீடர்களுக்குப் புதுத் தெம்பைக் கொடுத்தது. உயிர்த்தெழுந்த கிருத்து இசுரவேல் இராச்சியத்தை ரோமர்களிடமிருந்து மீட்டுக் கொடுத்து விடுவார் என நம்பினர்.
 
ஆனால், இயேசு கிருத்துவின் விண்ணேற்றம் அவர்களுக்குக் கேள்விக் குறியை ஏற்படுத்தியது. அதனால் அவர் விண்ணேற்றத்தை அடையும் பொழுது கூடி வந்திருந்தவர்கள்,
 
"அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்." - (அப். 1:6)
 
என்று கேட்டார்கள். அப்பொழுது அவர் கொடுத்த பதிலை அவர்களால் முழுமையாகப் புரிந்து கொள்ள இயலவில்லை.
 
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அவர் உயரே எடுத்துக் கொல்லப்பட்ட பின்னர் தேவதூதர், "அவர் எவ்வாறு மேலே போனாரோ அவ்வாறே மறுபடியும் வருவார்" என்று கூறியமையால் அவருடைய இரண்டாம் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கத் தொடங்கினர்.
 
"கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்."(அப்.1:11)
 
அவர் இரண்டாம் முறை விரைவில் வரப்போகிறார் என்று நம்பிய சீடர்கள், அவர் வந்து இசுரவேல் இராச்சியத்தை மீட்டு ஆளும் பொழுது, உடன் இருந்து பன்னிரண்டு கோத்திரங்களையும் ஆளுவதற்குப் பன்னிரண்டு சீடர்கள் உரிமையுடையவர்களாய் இருப்பதால், தற்கொலை செய்து கொண்ட யூதாஸ் காரியோத்துக்குப் பதிலாக மத்தியா என்பவரைத் தேர்ந்து எடுத்து 12 என்னும் எண்ணை நிறைவு செய்தார்கள்.
 
" பின்பு, அவர்களைக் குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்." - (அப். 1 : 26)
 
இவர்களுடைய 12 கோத்திரம் என்பது யாக்கோபின் பிள்ளைகள் 12 பேரையும் குறிக்கிறது என்பதை வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்துகிறது. (வெளி. 7: 5 - 8)
 
இதையே நம்பி மக்களுக்குப் போதித்தார்கள்.இதனால், யோவானுடைய வெளிப்படுத்துதல் நூலிலும் சீடர்கள் பன்னிருவருடைய சிறப்பு பற்றிக் கூறப்பட்டு உள்ளது.
 
"வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.  நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன." (வெளி. 21: 13-14)
 
யூத மதத்திலிருந்து கிருத்துவத்திற்கு வந்த யூதர்கள், இயேசு கிருத்துவின் முதல் வருகையில் கொடுக்காத இசுரவேல் இராச்சியத்தை இரண்டாம் வருகையில் கொடுக்கப் போவதாக உறுதியாகப் போதித்தார்கள்.
 
ஆனால் கிருத்தவர் அல்லாத மற்ற யூதர்கள் இயேசு கிருத்துவை அவர்கள் எதிர்பார்த்த கிருத்துவாகிய மேசியாவாக ஏற்றுக் கொள்ளவில்லை.
 
இதனால், கிருத்துவர் அல்லாத யூதர்கள் இன்று வரை யூத அரசனாகிய கிருத்து இன்னமும் வரவில்லை என்றும், இனிமேல் தான் யூத அரசனாகிய கிருத்து வரப்போகின்றார் என்றும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.
 
ஆகவே,
 
1. யூத மதத்தைச்சேர்ந்த யூதர்கள், யூத அரசனாகிய கிருத்துவின் முதல் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.
 
2) கிருத்துவ மதத்தைச் சேர்ந்த யூதர்களும், அவர்களைப் பின்பற்றிய புற ஜாதிக் கிருத்தவர்களும் யூத அரசனாகிய கிருத்துவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.
 
இந்த நிலையில் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டு இருக்கும் யூத அரசனாகிய கிருத்துவின் முதல் வருகை இயேசு கிருத்துவில் நிறைவேறிவிட்டது என்று பழைய ஏற்பாட்டுத் தீர்க்க தரிசனங்களுக்கு விளக்கம் கொடுக்கும் கடமையை கிருத்தவர்களாகிய யூதரும், கிருத்தவ யூதர்களைப் பின்பற்றும் புற ஜாதிக் கிருத்தவர்களும் இன்று வரை செய்து வருகின்றார்கள்.
 
ஆகவே இரண்டாம் வருகை என்பது யூதா கோத்திரத்தில் பிறந்த, யூத இனத்தைச் சேர்ந்த யூதனாகிய இவ்வுலக அரசனை எதிர்பார்க்கும் எதிர்பார்ப்பே ஆகும்.
 
யோசேப்புக்குப் பிறந்த யூதா கோத்திரக் கிருத்து:
 
இதனால், இரண்டாம் வருகையை எதிர்பார்த்த பேதுருவும், யோவானும், பவுலும், இயேசு கிருத்து யூதா கோத்திரத்தைச் சேர்ந்த யோசேப்புக்குப் பிறந்த யூத இனத்தைச் சேர்ந்தவர் என்று நம்பியமையை நாம் பார்க்கின்றோம். இவ்வாறு நம்பியமையே அவர்கள் இரண்டாம் வருகையை எதிர்பார்த்தமைக்கு அடிப்படை ஆகிறது. இந்த நம்பிக்கைக்குச் சில எடுத்துக்காட்டுகள் வருமாறு:
 
1. பேதுரு - அப். 2:30
"உன் சிங்காசனத்தில் வீற்று இருக்க மாம்சத்தின் படி உன் (தாவீது) சந்ததியிலே கிருத்துவை எழும்பப் பண்ணுவேன்."
 
2. பவுல் - ரோமர் :1:5
(இயேசு கிருத்து) மாம்சத்தின் படி தாவீதின் சந்ததியில் பிறந்தவர்.
 
3. யோவான் - வெளி.22:16
நான் (இயேசு கிருத்து) தாவீதின் வேரும் சந்ததியும்...
 
அவர்கள் எதிர்பார்த்த இரண்டாம் வருகை இசுரவேலரின் அரசியல் மீட்புக்காக இருப்பதாக எண்ணப்பட்டதே தவிர, உலக மக்களின் ஆன்ம மீட்புக்காக அன்று.
 
அதனால், அவருடைய இரண்டாம் வருகையில் பங்குள்ளவர்களாகிய ஊழியக்காரர்களாக முத்திரை போடப்பட்டவர்கள் இசுரவேல் புத்திரர் 12 கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரத்திலும் 12 ஆயிரம் பேர் வீதம் மொத்தம் ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் என்று குறிக்கப்படுகிறது. (வெளி. 7:3-8)
 
"அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம்பேரேயல்லாமல் ஒருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது. ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்." (வெளி. 14: 3-4)
 
இங்கே "ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள், கற்புள்ளவர்" என்று கூறப்படுவன கடவுள் மனிதனைப் படைத்த பொழுது ஒருவன் ஒருத்தியாக வாழ்ந்ததைப் போன்ற வாழ்க்கை உடையவர்கள் என்பதையும், யூத மதத்தில் பல மனைவியரை மணந்து ஒருவன் ஒருத்தியாக வாழாமல் கற்பு நெறி தவறி, பல மனைவியருடன் வாழ்ந்ததைப் போன்ற வாழ்க்கை இல்லாத கிருத்தவர்களாகிய, ஆட்டுக்குட்டியானவரின் ஊழியக்காரர்கள் என்று கூறுவதையும் குறிக்கின்றன.
 
ஆக, இரண்டாம் வருகையில் "இசுரவேலருக்கு இராச்சியமும், இசுரவேல் இராச்சியத்தை ஆளும் ஆட்டுக்குட்டியானவரும், ஆட்டுக்குட்டியானவரின் ஊழியக்காரர்களாகிய ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் இசுரவேலரும் சிறப்புக்குரியவர்களாக இருக்கின்றனர்" என்பது விளக்கப்படுகிறது.
 
தொடரும்...!!!


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இரண்டாம் வருகையில் யூதரல்லாத மற்ற புறஜாதியார்களின் நிலை என்ன?
 
யூதரல்லாத புறஜாதியாருக்கு நற்செய்தி அறிவிக்கும்படி பேதுருவுக்குக் காட்சியளித்து, ஆவியானவராலும் அறிவுறுத்தப்பட்டு, கொர்நெலியு வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அங்கு பேதுரு பேசிய பொழுது புறஜாதியார் பரிசுத்த ஆவியைப் பெற்றதைக் கண்டு பேதுருவுடன் சென்ற யூதர்கள் பிரமித்தார்கள் என்பது அப்போஸ்தலர் 10 ஆம் அதிகாரத்தில் விளக்கப்படுகிறது.
 
"பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்." - (அப்.10 : 46)
 
இயேசு கிருத்து யூதருக்கு இராச்சியத்தைக் கொடுக்கும் பொழுது "புறஜாதியாரின் நிலை என்ன?" என்னும் கேள்வி இப்பொழுது எழுகின்றது.
 
இயேசு கிருத்துவின் இரண்டாம் வருகையில் புரஜாதியினர் யூதருக்குச் சமமானவர்களாக இருக்க இயலாது. யூதர்கள் மோசேயின் நியாயப் பிரமாணத்தைப் பின்பற்றுகிறவர்கள்.
 
புறஜாதியாருக்கு அந்த நிலை கிடையாது. அவர்கள் யூதர்களின் ஆட்சியின் கீழ் வாழ வேண்டியவர்கள். அதனால் அவர்கள் யூதரைப் போன்று மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றவோ, விருத்தசேதனம் பெறவோ வேண்டியதில்லை என்றும், பொதுவான சில கட்டளைகளைப் பின்பற்றினால் போதும் என்றும் முடிவெடுத்ததை அப்போஸ்தலர் 15 ஆம் அதிகாரத்தில் பார்க்கின்றோம்.
 
இதனால் 1,44,000 பேர் இசுரவேலரில் ஆட்டுக் குட்டியானவருக்கு ஊழியக்காரராக முத்திரையிடப்பட்ட பொழுது, புறஜாதியார் யாருக்கும் ஊழியக்காரர்களாக முத்திரை போடப்படவில்லை. ஆனால்,
 
"சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்." - (வெளி. 7:9)
 
என்று கூறப்படுவதில், இரண்டாம் வருகையில் புறஜாதிகளுக்குப் பங்கு உண்டு; ஆனால் அது இரண்டாந்தரக் குடிமக்களுக்குண்டான உரிமை என்று விளக்கப்படுகிறது.
 
இதையே பவுல்,
 
"இசுரவேலரை நல்ல ஒலிவ மரத்தின் சுபாவக்கிளை" என்றும், "புறஜாதியாரை, காட்டு ஒலிவ மரக்கிளை" என்றும் வேறு பிரித்து விளக்குகின்றார். (ரோ. 11 : 13-24)
 
 
பிலதெல்பியா சபைக்கு யோவான் எழுதும் பொழுது
 
"யூதரில்லாதிருந்தும், தங்களை யூதரென்று பொய் சொல்லுகிற சாத்தானுடைய கூட்டம்" (வெளி. 3:9)
 
என்று குறிப்பிடுகின்றார். இக்கருத்தில் அச்சபையில் யூதர்கள் உயர்ந்தவர்கள் என்றும், புறஜாதியார் யூதர்களுக்குச் சமமானவர்கள் அல்லர் என்னும் கருத்தும் வெளிப்படுகிறது.
 
"இதோயூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர்" (வெளி. 5:5)
 
என்று இயேசு கிருத்து யூதா கோத்திரத்தைச் சேர்ந்த யோசேப்பிற்குப் பிறந்தவர் என்று கூறப்படுகிறது.
 
ஆகவே, இரண்டாம் வருகையை எதிர்பார்த்தவர்கள் யூதர்கள். இயேசு கிருத்து யூத இனத்தில் பிறந்தவர் என்று நம்பப்பட்டமையால், யூத இராச்சியத்தில் புறஜாதியார்களாகிய கிருத்துவர்கள் யூத கிருத்துவர்களால் அரவணைக்கப்படக் கூடிய இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படத்தக்கவர்களே தவிர, யூதர்களுக்குச் சமமாக நடத்தப்படும் உரிமையுடையவர்கள் அல்லர் என்னும் கருத்து அவர்கள் உள்ளத்தில் இடம் பெற்றிருந்தது.
 
தொடரும்...!!!
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சீடர்களின் அப்போஸ்தலர் பட்டமும் பவுலும்:
 
இயேசு கிருத்துவின் சீடர்கள் பன்னிருவர். யூதாஸ் காரியோத்து இறந்தமையால், அந்த இடத்திற்கு மத்தியா தேர்ந்து எடுக்கப்பட்டார்.
 
இந்த அப்போஸ்தலர் பட்டம் மற்றவர்களுக்குக் கிடையாது என்றும், இந்த பன்னிருவருக்கு மட்டுமே உரியது என்றும், அவர்கள் நம்பினார்கள் என்பதை அப்போஸ்தலர் முதலாம் அதிகாரம் 21 முதல் 26 வரை நாம் பார்கின்றோம்.
 
பவுல் போன்றவர்கள் இந்தப் பட்டத்திற்கு உரியவர்கள் அல்லர் என்றும், இதனால் இவர்கள் தங்களை அப்போஸ்தலர் என அழைத்துக் கொள்ளக் கூடாது என்றும் செயல்பட்டனர் என்பது,
 
"அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்; (வெளி. 2:2)
 
என்னும் வசனத்தால் விளங்குகிறது.
 
ஆயினும் பவுலைப் பற்றி அனனியாவுக்குக் கூறப்பட்ட செய்தி:
 
அதற்குக் கர்த்தர்: "நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்." என்றார். (அப். 9:15)
 
என்பதாகும். ஆகவே, பவுலைப் பன்னிருவருடன் ஒப்பிடுவது பொருத்த மற்ற ஒன்றாகும். அவர் இயேசுவால் சிறப்பாகத் தேர்ந்து எடுக்கப்பட்டவர் என்பதை உள்ளத்தில் வைத்தல் வேண்டும்.
 
உடனே இரண்டாம் வருகை என நம்பினர்:
 
இசுரவேலருக்கு இராச்சியத்தைக் கொடுக்கும் இரண்டாம் வருகை, இயேசு கிருத்து உயிர்த்தெழுந்து, பரலோகம் சென்று, சிறிது காலத்திலேயே இருக்கும் என்று சீடர்கள் உறுதியாக நம்பினார்கள். காரணம், இயேசு கிருத்து சிலுவையில் அடிக்கப்படும் முன்பே, இதைப் பற்றித் தெளிவாகக் கூறி இருந்தார். எவ்வாறு?:
 
"இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." (மத்.16:28, மாற். 9:1)
 
"அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று." (யோவான் 21:21-23)
 
இந்த வசனங்களின்படி, அவருடைய சீடர்களில் சிலர் வாழுங்காலத்திலேயே இரண்டாம் வருகை நிகழ்ந்து விடும் என்பது தெளிவாக இயேசு கிருத்துவால் கூறப்பட்டு உள்ளது.
 
இதனால் தங்கள் வாழ்நாளிலேயே தாங்கள் இரண்டாம் வருகையைப் பார்க்கப் போகின்றோம் என உறுதியாக நம்பினார்கள். பவுல் இதைக் குறித்து
 
"இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்." - (1 கொரி. 15:51)
 
"பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்." (1 தெச. 4:17)
 
என்று எழுதி உள்ளார்.
 
பவுலுடைய வாழ்நாளிலேயே இரண்டாம் வருகை நடைபெறப் போவதாக அவர் உறுதியாக நம்பினார். இயேசு கிருத்துவின் இரண்டாம் வருகை, தாமதமான பொது இன்னமும் நடைபெறவில்லையே, தாமதமாவது ஏன்? என்று கேட்கிறவர்களுக்கு பேதுரு
 
"தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." (2பேது. 3:9)
 
என்றும்
 
"தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்;" (2பேது 3:12)
 
என்றும் எழுதி உள்ளார்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இயேசு கிருத்து கூறியதும், அப்போஸ்தலர்கள் எதிர்பார்த்ததும், பவுல் திட்டமாக எதிர்பார்த்ததுமாகிய இரண்டாம் வருகை அவர்களுடைய வாழ்நாளில் நிறைவேறவில்லை. ஏன் நிறைவேறவில்லை? என்னும் கேள்வி எழுகின்றது.
 
அவர்களுடைய வாழ்நாளில் நிறைவேறாதது மட்டுமல்லாமல், இப்பொழுது ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து விட்டன. இன்னமும் நிறைவேறவில்லை.
 
இதுவரை அவர் வந்து விடுவார் என்று நம்பி, அவர் சொல்லி இருந்த அடையாளங்களைக் கணக்கிட்டு, இந்த நேரத்தில் வந்து விடுவார் என்று நம்பிக் காத்திருந்த பல கூட்டத்தினர் ஏமாற்றமடைந்த வரலாறுகள் இருக்கின்றன. இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
 
இயேசு கிருத்து ஏன் இப்படிச் செய்தார்?
 
பொய் சொல்ல அவர் மனிதரல்ல. அவர் கூறியது நிச்சயம் நடந்திருக்க வேண்டும். இரண்டாம் வருகை இன்னமும் நிறைவேறவில்லையா? அல்லது நிறைவேறி விட்டதை சீடர்கள் அறியாமல் போனார்களா? என்னும் கேள்விகள் எழுகின்றன.
 
யூத இன மீட்பரா? உலக மீட்பரா?
 
பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களை அடிப்படையாகக் கொண்டு, யூதருடைய இராச்சியத்தை மீட்டு அவர்களுக்குக் கொடுக்க வந்த யூத அரசனாகிய கிருத்துதான் இயேசு கிருத்துவா? அல்லது உலக மக்களை மீட்க்க வந்த உலக மீட்பராகிய அரசனாகிய கிருத்துவா? என்னும் கேள்வி இப்பொழுது எழுகின்றது. இயேசு கிருத்து தம்மை உலக மீட்பராகிய கிருத்து என்று அவருடைய சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.
 
ஆனால் அவர்களோ யூத மீட்பராகிய கிருத்து என்று புரிந்து கொண்டார்களே தவிர, உலக மீட்பராகிய கிருத்து என்பதை அவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை என்பதை அவருடைய வாழ்நாளில் நடந்த நிகழ்ச்சிகளே நமக்கு விளக்குகின்றன.
 
மத்தேயு 16 ஆம் அதிகாரத்தில் 13 முதல் 28 வரையுள்ள வசனங்கள் கூறும் நிகழ்ச்சி இதைத் தெளிவுபடுத்துகின்றது.
 
" அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்." (மத் 16 : 22-23)
 
இயேசு கிருத்துவோ தம்மை உலக மீட்பராக விளக்குகிறார். சீடர்களோ அவரை யூத இன மீட்பராகப் பார்க்கிறார்கள். அது அவர்களுக்கு விருப்பமான நிலை. அவர் தம்மை உலக மீட்பராக விளக்கினாலும், சீடர்கள் அவரை யூத இன மீட்பராகவே பார்த்தமைக்குக் காரணம் அவருடைய இராஜ்யத்தைப் பற்றி அவர்களால் புரிய இயலாமையேயாகும்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இயேசு கிருத்து உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய பரலோக இராச்சியத்தைப் பற்றிக் கூறி, பரலோக இராச்சியத்தைப் பூலோகத்திலேயே உருவாக்கவே தாம் வந்திருப்பதைக் கூறுகிறார்.
 
அவருடைய சீடர்களோ, யூதர்கள் இழந்து போன இராஜ்ஜியமாகிய பூலோக இராச்சியத்தை மீண்டும் அவர்களுக்கு கொடுக்க வந்தவராக அவரை நம்பினார்கள்.
 
முரண்பட்ட இரண்டு இராஜ்யங்கள்:
 
இவை ஒன்றுக்கொன்று எதிரான முரண்பட்ட இரண்டு நிலைகளாக இருக்கின்றன. பரலோக இராஜ்ஜியக் கருத்துக்கு எதிரானது பூலோக இராசியக் கருத்து என்பது பைபிளில் விளக்கப்படுகின்றது. எவ்வாறு?
 
பூலோக இராஜ்ஜியம் வன்முறையால் உருவாவது.
 
"ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான்;
 பலரைக் கொன்றவன் பட்டம் ஆள்வான்"
 
என்பது உலகம் முழுவதற்கும் பொருந்தும். வன்முறையும் கொலையுமே பூலோக இராஜ்யங்கள் உருவாகக் காரணமானவை.
 
இதனால், வன்முறைக்கும் கொலைக்கும் காரணமான சாத்தானுடைய கையிலே இப்பூலோக இராஜ்யங்கள் இருப்பதாக லூக்கா 4 ஆம் அதிகாரத்தின் 5 முதல் 8 வரையுள்ள வசனங்களின் வழி விளக்கப்படுகிறது.
 
பரலோக இராசியம் மனமாற்றத்தால் உருவாவது. மனமாற்றத்தை ஏற்படுத்துவது இயேசு கிருத்துவின் நற்செய்தி. இயேசு கிருத்துவின் நற்செய்தி அறிவிக்கப்படுவதற்குக் காரணமானவர் பரிசுத்த ஆவி.
 
ஆகவே, பரிசுத்த ஆவியால் உருவாக்கப்படுவது பரலோக இராஜ்யம்.
 
வன்முறை, கொலை முதலிய செயல்களுக்குக் காரணமான சாத்தானால் உருவாக்கப்படுவது பூலோக இராஜ்யம்.
 
இயேசு கிருத்து பரலோக இராஜ்யத்தை இந்த பூலோகத்தில் உருவாக்க வந்த கடவுளின் மகன்.
 
புரிந்துக் கொள்ள இயலாமை:

அவர் பரலோக இராஜ்யத்தை இப்பூலோகத்திலே உருவாக்க வந்த கடவுளின் மகன் என்பது அவருடைய சீடர்களால் புரிந்து கொள்ள இயலாமலிருந்தமையே, இயேசு கிருத்துவின் இரண்டாம் வருகையை அவர்கள் புரிந்து கொள்ளுவதில் அவர்களுக்கு இருந்த சிக்கல் ஆகும்.

ஏன் அவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை?

1. இயேசு கிருத்து யூத மதத்தில் பிறந்தவர். அவருடைய சீடர்கள் அனைவரும் யூத மதத்தில் பிறந்தவர்கள்.

2. யூத மதம் மேசியாவாகிய ஒரு அரசரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது.

3. அந்த மேசியாவாகிய அரசன் யூதா கோத்திரத்தில் பிறப்பார் என்பது பழைய ஏற்பாட்டிலுள்ள தீர்க்க தரிசனங்களின் வெளிப்பாடு.

4. இயேசு கிருத்து யூதா கோத்திரத்தில் பிறந்த யோசேப்பின் மகன் என்று அறியப்பட்டார்.

5. பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் கூறியுள்ள தீர்க்கதரிசனங்கள் இயேசு கிருத்துவில் நிறைவேறியதாக நம்பினார்கள்.

6. அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, இயேசு கிருத்து கொலை செய்யப்பட்டாலும், அவர் திரும்ப உயிரோடு எழுந்தது மட்டுமல்லாமல், திரும்பவும் வருவார் என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

7. இதனால், அவர் இறந்ததற்கும், திரும்பவும் உயிர்த்தெழுந்தமைக்கும் நாங்கள் சாட்சிகள் என்று அவர்கள் உறுதியாக எந்தத் தடையையும் பற்றிக் கவலைப்படாமல் சாட்சி கூறினார்கள்.

8. அவர் கூறிச் சென்றபடி, இரண்டாம் வருகையில் அவர் திரும்ப வரக் காத்திருக்கின்றார்கள்.

9. இந்தக் காத்திருத்தலே இன்று வரை வழிவழியாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.

10. இதன்படி இன்றும் அந்த நிலை போதிக்கப்பட்டு வருகிறது.

11. இன்று மொத்த பைபிளையும் கையில் வைத்திருப்பவர்களே பரலோக இராசியத்திற்கும் பூலோக இராசியதிற்கும் வேறுபாடு தெரியாமல் போதித்துக் கொண்டிருக்கையில், பைபிள் முழுமையாக உருவாகாத அந்தக் காலத்தில் சீடர்களால் புரிந்து கொள்ள இயலாமல் இருந்ததில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

சீடர்களால் அறிய முடியாதிருந்த இரண்டு காரியங்கள்:

1. இயேசு யூதா கோத்திரத்தில் பிறந்த யோசேப்பிற்குப் பிறந்தவர் இல்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அதாவது இயேசு கிருத்துவின் கன்னிப் பிறப்பு அவர்களுக்குத் தெரியவில்லை.

2. பூலோகத்தில் பரலோக இராஜ்யத்தை உருவாக்க வந்த கடவுளின் மகனே இயேசு கிருத்து என்பதையும் அவர்கள் அறிந்து இருக்கவில்லை. அதாவது பரலோக இராஜ்ஜியம் பற்றி அவர்களுக்குத் தெரியாது.

இவை இரண்டையும் இயேசு கிருத்துவின் சீடர்களால் ஏன் அறிய முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பு:
 
இது ஓர் அற்புதப் பிறப்பு. கடவுளால் திட்டமிடப்பட்ட பிறப்பு. இந்த பிறப்பை பற்றி மரியாள் உலகத்திற்குக் கூற இயலா நிலை.
 
தன் வயிற்றில் பிள்ளை உற்பத்தியாகி இருப்பதற்குக் காரணம் தன் கணவனாகிய யோசேப்பு இல்லை என்னும் உண்மையை மரியாள் வெளியே கூறினால், யூத மதச் சட்டத்தின்படி அவர் கல்லெறிந்து கொலை செய்யப்படுவார். இதனால்,
 
"மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்." (லூக். 2:19)
 
என்றும்,
 
"அவருடைய (இயேசு கிருத்துவினுடைய) தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்." (லூக். 2:51)
 
என்றும் குறிக்கப்பட்டு இருக்கிறது.
 
முன்னர் நாம் பார்த்துள்ளபடி, பேதுருவோ, யோவானோ, பவுலோ இயேசு கிருத்து யோசேப்பிற்குப் பிறந்தவர் என்பதைச் சிறிதும் சந்தேகப்படவில்லை.
 
இயேசு கிருத்து தம் ஊழியத்தைத் தொடங்கிய பொழுது அவருடைய ஞானம் அவர் வாழ்ந்த ஊர்க்காரர்களுக்கு வியப்பாக இருந்தது.
 
"இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா" (மத். 13:55) என்றும்,
"இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா" (லூக். 4:52) என்றும்
 
கூறியதை நாம் பார்க்கின்றோம். மேலும்
 
"தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்" என்று தேவையுடையவர்கள் அவரிடத்தில் வேண்டிக் கொண்டதையும் நாம் பார்க்கின்றோம்.
 
இதனால் அவர் வாழ்ந்தபோது, யூத மக்கள் அனைவரும் அவர் தாவீதின் கோத்திரத்தில் பிறந்த யோசேப்பின் மகன் என்றே நம்பினார்கள்.
 
இந்த நம்பிக்கையே அவருடைய சீடர்களுக்கும், பவுலுக்கும் இருந்ததை நாம் பார்க்கின்றோம்.
 
இயேசு கிருத்துவின் விண்ணேற்றத்திற்குப் பின்னர், இரண்டாம் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த பேதுரு, பவுல் போன்ற தலைவர்கள் எல்லாரும் கொல்லப்பட்ட பின்னர் இந்த வரலாறுகளை எழுதப் பலர் புறப்பட்டனர். பவுலோடு நற்செய்திப் பணியாற்றிய லூக்காவும் வரலாறு எழுத முற்பட்டார். அப்பொழுது,
 
"ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும்" (லூக். 1:3)
 
என்று தாம் வரலாறு எழுதத் தொடங்கியதைக் கூறுகின்றார்.
 
இவர் இவ்வாறு கன்னி மரியாளிடத்திலும் விசாரித்து அறிந்த பின்னர், இயேசு கிருத்து யூதா கோத்திரத்தில் பிறந்த யோசேப்புக்குப் பிறந்தவர் அல்லர் என்பதையும், பரிசுத்த ஆவியினால் பிறந்த கடவுளின் மகன் என்பதையும் உணர்ந்து, கன்னிப்பிறப்பின் நிகழ்ச்சியை விரிவாக எழுதுகின்றார் என்பதை நாம் பார்க்கின்றோம்.
 
ஆகவே இரண்டாம் வருகை இன்னமும் நடைபெறவில்லை என்று நம்புவதற்கு இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை அறியா நிலையே முக்கிய காரணம்.
 
இயேசு கிருத்துவின் கன்னிப் பிறப்பை உணர்ந்தவர்கள், அவரை யூத குலத்தில் பிறந்தவர் என்றோ, யூதர்கள் எதிர்பார்த்த யூத அரசனாகிய மேசியா என்றோ, அந்த மேசியா வரக் காத்திருக்கின்றோம் என்றோ நம்பவும் கூறவும் மாட்டார்கள்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கடவுளின் மகனால் கற்றுக் கொடுக்கப்பட்ட பரலோக இராஜ்ஜியம்:

இயேசு கிருத்துவின் முன்னோடியாக விளங்கிய யோவான் ஸ்நானகன்,

"மனந்திரும்புங்கள், பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது" என்று பிரசங்கம் பண்ணினார் (மத்.3 : 2).

இயேசு கிருத்து தம்முடைய பன்னிரு சீடர்களையும்

"பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது" என்று பிரசங்கியுங்கள் (மத்.10:7) என்று சொல்லி அனுப்பினார்.

'பரலோக இராஜ்யம்' என்னும் பெயர், இயேசு கிருத்து பேசிய அவருடைய சொந்த மொழியான அரமேயத்தில் முதலில் எழுதப்பட்ட மத்தேயு நற்செய்தி நூலில் மட்டுமே காணப்படுகிறது.

கிரேக்க மொழியில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் புதிய ஏற்பாட்டின் மற்ற நூல்களில் காணப்படவில்லை. மற்ற நூல்களில் "பரலோக இராஜ்யம்" என்பதற்குப் பதிலாக தேவனுடைய இராஜ்யம் என்னும் பெயர் காணப்படுகிறது.

'பரலோக இராஜ்யம் என்பது வேறு:
'தேவனுடைய இராஜ்யம்' என்பது வேறு.

இரண்டும் ஒன்று ஆக மாட்டாது.

"பரலோக இராஜ்யம்" என்பது இயேசு கற்றுக் கொடுத்த இராஜ்யம்.

"என்னுடைய இராஜ்யம் இந்த உலகத்திற்குரியது அன்று" என்று இயேசு கிருத்து பிலாத்துவினிடம் கூறினார். (யோ. 18 :36)

பிலாத்துவின் இராஜ்யம் இந்த உலகத்திற்குரிய இராஜ்யம். யூதர்கள் எதிர்பார்த்த இசுரவேலர் இராஜ்யமும் இவ்வுலகத்திற்குரிய இராஜ்யம்.

ஆனால் இயேசு கிருத்து கற்றுக் கொடுத்த பரலோக இராஜ்யம் அவர் உயிர்த்தெழுந்த பின்னர் இந்த உலகில் வர இருக்கும் இராஜ்யம். அதற்கு ஆயுத்தமாகுமாறு யோவான் ஸ்நானகனும் இயேசு கிருத்துவும் கற்றுக் கொடுத்தார்கள்.

1. யோவான் ஸ்நானகன்
 
மனந்திரும்புங்கள் பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான் (மத்.3:2)
 
2. இயேசு கிருத்து பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள் என்றார். (மத். 10:7)

"இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய இராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசி பார்ப்பதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்" (மத்.16:28).


இந்த வசனங்களின்படி, மனுஷ குமாரனின் இரண்டாம் வருகை விரைவில் இருப்பதாகவும், அந்த வருகையில் அவருடைய இராஜ்யமாகிய பரலோக இராஜ்யம் பூலோகத்தில் நிலை நிறுத்தப்படும் எனக் கூறப்படுவதும் ஆழ்ந்து நோக்கத்தக்கது.

அதாவது, இரண்டாம் வருகை சீடர்களில் சிலர் உயிரோடு இருக்கும் பொழுதே நடக்கும் என்பதும், அந்த இரண்டாம் வருகையில் பரலோக இராஜ்யம் இப்பூலோகத்தில் நிலை நிறுத்தப்படும் என்பதும் தெளிவாகக் கூறப்பட்டு உள்ளது.

இரண்டு நிலைகள்:

இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை அறியாதவர்களால், பூலோக இராஜ்யமாகிய இசுரவேலர் இராஜ்யம் இரண்டாம் வருகையில் நிலை நிறுத்தப்படும் என்று இன்று வரை தவறாக எதிர்பார்க்கப்படுகிறது.

இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை உணர்ந்தவர்களால், பரலோக இராஜ்யம் சீடர்கள் சிலர் உயிரோடு இருக்கும் பொழுதே நிலை நிறுத்தப்பட்டு விட்டது என்று புரிந்து கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது.

ஆகவே,

1. இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை அறியாதவர்களால் இரண்டாம் வருகையில் எதிர்பார்க்கப்படுவது பூலோக இராஜ்யமாகிய இசுரவேல் இராஜ்யம்.

2. இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை அறிந்தவர்களால் இரண்டாம் வருகையில் புரிந்துக் கொள்ளப்பட்டது பரலோக இராஜ்யமாகிய இயேசு கிருத்துவின் இராஜ்யம்.

ஆகிய இரு நிலைகள் இருக்கின்றன என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது.

ஆகவே, இயேசு கிருத்து கன்னிப்பிறப்பை உடையவர் என்றும், கடவுளின் மகன் என்றும் புரிந்துக் கொண்டவர்கள் இரண்டாம் வருகை 

நிறைவேறிவிட்டது என்றும், பரலோக இராஜ்யம் வந்து விட்டது என்றும் புரிந்து கொள்ளுவார்கள் என்பதில் ஐயம் இல்லை.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இரண்டாம் வருகை நிறைவேறி விட்டதா? திட்டமாய் அறிவது எவ்வாறு?

அப்படியானால், இயேசு கிருத்து கூறி இருந்தபடி இரண்டாம் வருகையில் நிறைவேற வேண்டிய பரலோக இராஜ்யம் நிலை நாட்டப்பட்டு விட்டதா? அவற்றை எவ்வாறு திட்டமாய் அறிவது? என்னும் கேள்விகள் எழுகின்றன.

இயேசு கிருத்துவின் இரண்டாம் வருகையைக் கூறும்,

மத்.16:28 ஆம் வசனத்திற்கு

"இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய இராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசி பார்ப்பதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்" (மத்.16:28).
  
Full Life Study Bible-இன் அடிக்குறிப்பில் கீழ்க்காணுமாறு விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

"COMING IN HIS KINGDOM. the "Son of man coming in his Kingdom" probably refers to the event of pentecost when christ Baptized his followers in the holy sprit and great power."

மேலே கூறப்பட்டு உள்ள விளக்கம் ஆழ்ந்து நோக்கத்தக்கது. "இரண்டாம் வருகை" என்பது கடவுள் பரிசுத்த ஆவியாக வரும் வருகையைக் குறிப்பதாக இங்கு கொள்ளப்படுவதற்கு இடம் இருக்கிறது என்று கூறப்பட்டு இருக்கிறது. இவ்வாறு கொள்ளுவது பொருத்தமானதா? என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.

இவ்வாறு விளக்கம் கூறுவது பொருத்தமானதா?

கிருத்துவ அனுபவம் கடவுளை மூன்று நிலைகளில் நோக்குவதாக அமைந்து உள்ளது.

1. என்றுமுள்ள கடவுள் - முதல் நிலை
2. என்றுமுள்ள கடவுள் குமாரனாக வந்த நிலை - இரண்டாம் நிலை
3. என்றுமுள்ள கடவுள் பரிசுத்த ஆவியாக வந்த நிலை - மூன்றாம் நிலை


இந்த மூன்று நிலைகளும் மூன்று வெவ்வேறு ஆட்களின் நிலை அன்று. ஒரே கடவுளின் மூன்று 'கால நிலை' ஆகும்.

மனிதனைப் படைத்த அதே கடவுள், மனிதனை மீட்கத் தானே மனிதனாக வந்தார். மனிதனை மீட்ட பின்னர், அவன் உள்ளத்தில் இருந்து அவனை வழி நடத்தத் தானே பரிசுத்த ஆவியாக வந்தார்.

ஆகவே, ஒரே கடவுளின் 'இரண்டு வருகை' மூன்று நிலைகளில் செயல் படுகிறது என்பது பரிசுத்த ஆவியை அனுபவிக்கிறவர்களின் அனுபவ நிலை ஆகும்.

என்றுமுள்ள கடவுள் மகனாக வந்த பின்னர், என்றுமுள்ள கடவுள், தந்தை என்று அழைக்கப்படுகின்றார். ஆகவே,

1. தந்தையாகிய கடவுள்
2. மகனாகிய கடவுள்
3. பரிசுத்த ஆவியாகிய கடவுள்

என்று கடவுளை மூன்று நிலைகளில் பார்க்கும் பார்வை கிருத்துவத்தில் நிறைவாகிறது.

இந்த மூன்று நிலைகளையும் தந்தை, மகன், பரிசுத்த ஆவி என்று இணைப்பதற்குக் கடவுளின் முதல் வருகை மகனாகவும், கடவுளின் இரண்டாம் வருகை பரிசுத்த ஆவியாகவும் வந்தால் தான் மூவொரு கடவுள் நிலை தெளிவுபடும்.

ஆகவே "இரண்டாம் வருகை" என்பது கடவுள் இரண்டாம் முறை பூமிக்கு வந்த பரிசுத்த ஆவி நிலையைக் குறிப்பதே ஏற்றதாகும். Full Life Study Bible-இன் அடிக்குறிப்பு சரியாகவே அமைந்துள்ளது.

இந்த நிலை இயேசு கிருத்து கூறியவாறு, யூதாசு காரியோத்தின் இறப்பிற்குப் பின்னர் உருவானமையால்

"இங்கே இருக்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய இராஜ்யத்தில் வருவதைக் காணுமுன் மரணத்தை ருசி பார்ப்பதில்லை" என்று இயேசு கிருத்து கூறியது நிறைவேறி உள்ளமையைக் காட்டுகிறது.

பரிசுத்த ஆவியின் வருகையை இரண்டாம் வருகை என்று கொள்ளாவிட்டால், இயேசு கிருத்து கூறியது தவறு என்னும் நிலையை உருவாக்கி விடும்.

இயேசு கிருத்துவின் இரண்டாம் வருகையா? கடவுளின் இரண்டாம் வருகையா?

இயேசு கிருத்துவை, யூத மதத்தில், யூத இனத்தில் வந்த யோசேப்புக்குப் பிறந்த, ஒரு யூதனாகிய மனிதனாகவே அவருடைய சீடர்கள் எண்ணினார்கள். அதனால் அவர் யூதர்கள் எதிர்பார்த்த யூத அரசனாகிய மேசியா என்று நம்பினார்கள். அவருடைய முதல் வருகையில் அவர் யூதர்களுடைய இராஜ்யத்தை ரோமர்களிடமிருந்து மீட்டுத் தராமல் சென்று விட்டமையால் அவருடைய இரண்டாம் வருகையில் யூதர்களுடைய இராஜ்யத்தை மீட்டு அவர்களுக்குத் தருவார் என்று நம்பினார்கள்.

உண்மையில் அவர் யூத இனத்தில் வந்த யோசேப்புக்குப் பிறந்த ஒரு யூதனாகிய மனிதன் இல்லை. அவர் கடவுளாகிய பரிசுத்த ஆவியினால் உருவான கடவுளின் மகனாகிய கடவுள் என்பதை அவர்கள் அறியவில்லை.

இதனால் இயேசு கிருத்து கூறிய இரண்டாம் வருகை கடவுளின் இரண்டாம் வருகையாகிய பரிசுத்த ஆவியின் வருகை என்பதை அவர்களால் உணர்ந்து கொள்ள இயலவில்லை.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மூவொரு கடவுள் என்னும் உண்மையை உணர்ந்தவர் புனித தோமா மட்டுமே. எவ்வாறு?

 
இயேசு கிருத்து உயிர்த்தெழுந்ததைக் கூறிய மகதலேனா மரியாளின் செய்தியை அவருடைய சீடர்களில் யாருமே நம்பவில்லை. உயிர்த்தெழுந்த கிருத்துவை நேரில் பார்த்த பிறகே நம்பினார்கள்.
 
மற்ற சீடர்கள் தாங்கள் பார்த்த செய்தியை தோமாவிடம் கூறிய பொழுது, அவர் அறிவியல் ரீதியாக நான் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று உறுதியாகச் சொன்னதற்குக் காரணம் அவர்கள் ஓர் ஆவியைப் பார்த்திருக்கலாம் என எண்ணினார் என்பது நமக்குத் தெரிகிறது.
 
இதனால் தாம் தோமா,
 
"மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றார்." (யோ. 20:25)
 
இவ்வளவு தெளிவாகப் பேசிய தோமா இயேசு கிருத்து அவர் முன் தோன்றி
 
" நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு," (யோ. 20:27)
 
என்று கூறிய பொழுது உண்மையை அறிந்து உணர்ந்து
 
"என் ஆண்டவரே! என் தேவனே!" (கடவுளே) (யோ.20:28)
 
என்றார். தோமா இவ்வாறு இரண்டு சொற்களால் இரண்டு உண்மைகளை வெளியிட்டார்.
 
"என் ஆண்டவரே" என்பது அவருக்கு குருவாகிய மனிதனாக வாழ்ந்த இயேசு கிருத்துவைக் குறிப்பிடுகிறது.
 
"என் தேவனே" என்பது மற்ற சீடர்களுக்கு விளங்காத அடிப்படை உண்மையாகிய இயேசு கிருத்து கடவுள் என்பதைக் குறிப்பிடுகிறது.
 
அதாவது இயேசு கிருத்து யூதர்கள் எதிர்பார்த்த யூத இனத்தில் பிறந்த, யூத இனத்தின் மீட்பராகிய இவ்வுலக அரசன் அல்லர். உலக மீட்பராகிய பரலோக அரசனாகிய கடவுள் என்பதைக் குறிக்கிறது.
 
அவர் பார்த்த உருவம், உயிர்தெழுந்த கிருத்துவின் உருவம். அந்த உருவத்தில் தந்தை, மகன், பரிசுத்த ஆவி ஆகிய மூவொரு கடவுளின் நிலை இருக்கிறது என்பதை உணர்ந்து உலகுக்கு முதன் முதலில் அறிவித்த பெருமை தோமாவையே சேர்க்கிறது. எவ்வாறு?
 
1. மகனும் தந்தையும் இணைந்த நிலை
 
"இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்". (லூக். 23:46)
 
என்று கூறினார்.
 
"என் ஆவியை உமது கையில் ஒப்படைக்கின்றேன்" எனக் கூறி தம் ஆவியைப் பிதாவிடம் ஒப்படைத்த பொழுது பிதாவும் மகனும் ஒன்றாகி விட்டார்கள்.
 
2. தந்தை மகனுடன் பரிசுத்த ஆவியும் இணைந்த நிலை
 
"(உயிர்த்தெழுந்த இயேசு) அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;" (யோ. 20:22)
 
என்று கூறிய பொழுது பிதாவிலும் மகனிலுமிருந்து பரிசுத்த ஆவியானவர் புறப்பட்டு வருவதை அந்த நிகழ்ச்சி காட்டுகிறது.
 
இதனால், உயிர்த்தெழுந்த கிருத்து, தந்தை, மகன், பரிசுத்த ஆவி ஆகிய மூவொருவராய் இருப்பது தெளிவுப்படுத்தப்படுகிறது.
 
மற்றச் சீடர்களின் நிலை
 
தோமாவைத் தவிர மற்ற சீடர்கள், இயேசு கிருத்துவை யூத இனத்தின் மீட்பராகிய யூத இனத்தினர் என்பதாக மட்டுமே அறிந்திருந்தார்கள் என்பதும், தோமா மட்டுமே உயிர்த்தெழுந்த கிருத்து உலக மீட்பராகிய மூவொரு கடவுள் என்பதாக அறிந்துக் கொண்டார் என்பதும் நமக்கு விளங்குகின்றன.
 
மூவொரு கடவுளாகத் தோமாவால் புரிந்து கொல்லப்பட்ட இந்த நிலையை மற்றச் சீடர்களுக்கு அவர் விளக்கினார் என்பதற்கு பைபிளில் ஆதாரம் இல்லை. விளக்கினாலும் அவர்களால் புரிந்து கொள்ள இயலுமா? என்பது அடுத்த கேள்வி. ஏனெனில் அவர்கள் யோசேப்புக்குப் பிறந்த யூதனாக இயேசுவை நம்பினார்கள் என்பதைப் பார்த்தோம்.
 
கடவுளின் இரண்டாம் வருகையாகிய பரிசுத்த ஆவியானவரின் பொழிவைப் பெற்ற பின்னர், இயேசு கிருத்து கொடுத்த கட்டளையாகிய
 
"பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்" (அப். 1:8)
 
இதன் படி, உலகின் கடைசி வரை தோமா சென்று விட்டார் என்பதை உலகில் வேறு எங்கும் இல்லாமல், தமிழகத்திலுள்ள அவருடைய அடக்க இடம் சுட்டிக் காட்டுகிறது. இதனால், அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரத்திற்குப் பின்னர் அவரைப் பற்றிய செய்தி எதுவும் பைபிளில் இல்லை.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 இயேசு கிருத்து நிலைநாட்டிய இராஜ்யம்

 
இயேசு கிருத்து "என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல" என்றார். (யோ. 18:36)
 
இதைப் புரிந்து கொள்ள இயலாத, தோமா நீங்கலான மற்ற சீடர்கள், இயேசு கிருத்து இரண்டாம் வருகையில் இந்த உலக இராச்சியமாகிய யூத இராச்சியத்தை ஏற்படுத்த வருவார் என்று போதித்தமை அவர்கள் இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை அறிய முடியாமல் ஏற்பட்டதன் விளைவைக் காட்டுகிறது என்பதைப் பார்த்தோம்.
 
திருச்சபை தவறாகப் போதிப்பது ஏன்?
 
இயேசு கிருத்து நிலைநாட்ட விரும்பியது பூலோக இராஜ்யமா? பரலோக இராஜ்யமா? என்னும் கேள்வி எழுந்தால் அவர் நிலைநாட்ட விரும்பியது பரலோக இராஜ்யம் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. ஆனால் அவர் பெயரால் செயல்படும் கிருத்துவத் திருச்சபை இன்று வரை, அவர் நிலைநாட்ட விரும்பியது பூலோக இராஜ்யமாகிய யூத இராஜ்யமாகிய இசுரவேல் இராஜ்யம் என்றும், இரண்டாம் வருகையில் இசுரவேலருக்கு இராஜ்யத்தை மீட்டுக் கொடுப்பார் என்றும் போதித்து வருவது ஏன்? என்னும் கேள்வி எழுகின்றது.
 
பரலோக இராஜ்யத்தை நிலைநாட்ட விரும்பிய இயேசு கிருத்துவின் செய்தி பூலோக இராஜ்யத்தை ஆளும் ரோம ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டு உள்ளது என்பதை வரலாறு காட்டுகிறது.
 
இயேசு கிருத்துவின் செய்தியை வரலாற்று அடிப்படையில் கூறும் நூல் பைபிள். இந்த பைபிளில் இயேசு கிருத்துவின் செய்தியைக் கூறும் வரலாற்றுப் பகுதி புதிய ஏற்பாடு. புதிய ஏற்பாட்டிலுள்ள 27 நூல்களைத் தொகுத்து, அவற்றை ஒழுங்குப்படுத்தித் திருச்சபைக்குக் கொடுத்து, திருச்சபையை கி.பி 312 முதல் இன்று வரை கடந்த 1700 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறவர்கள் ரோம ஆட்சியாளர்கள்.
 
இன்றும் திருச்சபையின் உலகத் தலைவராக விளங்கும் போப்பாண்டவர், தன்னுடைய அரசியல் இராஜ்யத்திற்கும் கிருத்துவ மதத்திற்கும் தலைவராக விளங்கிக் கொண்டிருக்கின்றார். அவருடைய அரசியல் தூதர்கள் உலக நாடுகளில் பரவி இருக்கின்றார்கள்.
 
ஆகவே, கிருத்துவ மதம் ரோமர் ஆட்சிக்கு உட்பட்ட ஓர் அரசியல் மதமாக இன்று விளங்கிக் கொண்டிருக்கின்றது என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

 

பூலோக இராஜ்யத்தின் பிடியில் பரலோக இராஜ்யம்
 
இயேசு கிருத்து கூறிய
 
"என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல"
 
என்பது என்ன ஆயிற்று? ரோம ஆட்சியாளர்களின் பூலோக இராஜ்யத்தின் பிடியில் பரலோக இராஜ்யம் மறைக்கப்பட்டு மறைந்து கிடக்கிறது.
 
இந்த நிலைக்கு ஏற்ப புதிய ஏற்பாட்டின் 27 நூல்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தொகுக்கப்பட்டு, ஒழுங்கு செய்யப்பட்டு, ரோமர்களின் பூலோக இராஜ்யத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப 27 புத்தகங்களுக்கும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
 
பூலோக இராஜ்யத்தின் தலைவர்களால், அவர்களால் உருவாக்கப்பட்ட பைபிளுக்கு அவர்களுடைய பூலோக இராஜ்யத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப விளக்கம் கொடுக்கப்படுவது இயல்பான ஒன்றேயாகும்.
 
இதனால் பூலோக இராஜ்யத்தைக் கொடுக்கும் இரண்டாம் வருகை இன்னமும் நடைபெறவில்லை என்றும், அந்தப் பூலோக இராஜ்யத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும் என்றும், பூலோக ஆட்சியாளர்களின் கையில் இருக்கும் திருச்சபைகளில் போதிக்கப்பட்டு வருகிறது.
 
வரலாற்றுப் பின்னணி
 
1. இயேசு கிருத்து ஆசியாவில் பிறந்த ஓர் ஆசியாக்காரர்.
 
2. இயேசு கிருத்துவின் சீடர்கள் அனைவரும் ஆசியாக்காரர்கள்.
 
3. இயேசு கிருத்து பேசிய அரமேய மொழி ஓர் ஆசிய மொழி.
 
4. கிருத்துவம் உருவான இடம் ஆசியா. இதனால், கிருத்துவம் ஓர் ஆசிய இயக்கம்.
 
5. கிருத்துவ வேதமாகக் கூறப்படும் பைபிளில் உள்ள நூல்கள் அனைத்தையும் எழுதிய அனைவரும் ஆசியாக்காரர்கள்.
 
6. கிருத்துவம் உட்பட உலகிலுள்ள அனைத்து மதங்களும் தோன்றிய இடம் ஆசியா.
 
ஆனால், ஆசியாவில் பிறந்த இயேசு கிருத்துவுக்கும், ஆசியாவில் தோன்றிய கிருத்துவ இயக்கத்திற்கும் எதிராகச் செயல்பட்டவர்கள் ஐரோப்பிய ஆட்சியாளர்கள். எவ்வாறு?
 
1. இயேசு கிருத்துவைக் கொலை செய்தவர் ரோம அரசனாகிய ஐரோப்பியர்.
 
2. கிருத்துவ இயக்கத்தைச் சேர்ந்த இயேசு கிருத்துவின் சீடர்களைக் கொலை செய்தவர்கள் ரோம ஆட்சியாளர்களாகிய ஐரோப்பியர்.
 
3. பவுல் போன்ற நற்செய்தியாளர்களைக் கொலை செய்தவர்கள் ரோம ஆட்சியாளர்களாகிய ஐரோப்பியர்.
 
4. கி.பி 312 வரை கிருத்துவ திருச்சபையை வேட்டையாடியவர்கள் ரோம ஆட்சியாளர்களாகிய ஐரோப்பியர்.
 
5. கி.பி 312 முதல் இன்று வரை கிருத்துவின் மீட்பின் செய்தியை அடிமைப்படுத்தி வைத்திருப்பவர்கள் ஐரோப்பியர். இதற்கு அவர்களுக்கு பயன்படும் கருவியாக அவர்களால் தொகுக்கப்பட்ட பைபிளைப் பயன்படுத்துகிறார்கள்.
 
ஆகவே, ஐரோப்பியர் கி.பி 312 வரை கிருத்துவையும், கிருத்துவின் மீட்பின் செய்தியைக் கூறும் கிருத்துவ இயக்கத்தையும் எதிர்த்து அழித்தவர்கள். கி.பி 312 முதல் ரோம ஆட்சியாளருக்கு உதவும் முறையில் திரித்தல், வெட்டல், ஒட்டல், இணைத்தல், மாற்றல், ஏமாற்றல், அழித்தல், மறைத்தல் ஆகிய எட்டு வகைகளில் பைபிளை உருவாக்கி, அதன் வழி கிருத்துவத்தை அரவணைத்து தங்கள் அரசியலுக்கு அடிமைப்படுத்தி வருகிறார்கள் என்பது வரலாறு.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 விவிலியத்தில் திரித்தல் - இரண்டாம் வருகை

 
ரோமர்கள் கிருத்துவத்தை அரவணைத்து தங்கள் அரசியலுக்கு அடிமைப்படுத்தி வருவதனால், இயேசு கிருத்துவின் ஆன்மீகச் செய்திகள் அனைத்தும் ரோம ஆட்சியாளர்களின் அரசியலுக்கு ஆதரவான செய்திகளாகத் திரிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு திரிக்கப்பட்ட செய்திகளில் ஒன்றே இரண்டாம் வருகை பற்றிய செய்தி என்பது விளங்குகிறது.
 
இதில் திரிப்பதற்கு என்ன இருக்கிறது? பேதுரு, யோவான், பவுல் போன்றவர்களின் நம்பிக்கைகளும் எழுத்துக்களும் தானே அப்படியே கொடுக்கப்பட்டு உள்ளன. ஒன்றையும் கூட்டியதாகவும் குறைத்ததாகவும் தெரியவில்லையே? அப்படி இருக்க தொகுத்தவர்களை எப்படிக் குறை கூறலாம்? என்னும் கேள்வி நியாயமாகத் தோன்றலாம். ஆழ்ந்து நோக்கினால் அதில் நியாயமில்லை என்பது புரியும். எவ்வாறு?
 
நாம் முன்பு பார்த்தவாறு இயேசு கிருத்துவின் கன்னிப் பிறப்பை, பேதுரு, யோவான், பவுல் போன்றவர்கள் அறிய இயலாத சூழலில், அவர்கள் தங்கள் நம்பிக்கையை எழுதி உள்ளார்கள்.
 
இவர்கள் இறந்த பின்னர், புதிய சூழலில் லூக்கா அனைத்தையும் விசாரித்துத் தெளிவாக எழுதிய பிறகு, பழைய நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு அதன் மீது தங்கள் அரசியல் ஆதாயக் கருத்துகளை உருவாக்கிப் போதித்து வருவது எவ்வளவு பெரிய மோசடி செயலாகும் என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது. இதுவரை நாம் பார்த்து வந்துள்ளவாறு, இன்றும் உலகம் முழுவதுமுள்ள கிருத்தவர்கள் எதிர்பார்க்கும் இரண்டாம் வருகை பற்றி ஐரோப்பியர் தலைமை தாங்கி நடத்தி வரும் போதனைகள் யாவும் அவர்களால் திரிக்கப்பட்ட போதனைகள் என்பதை யாரால் மறுக்க முடியும்?
 
கடவுளின் இரண்டாம் வருகையாகிய பரிசுத்த ஆவியானவரின் வருகையை மறைத்து, யூத மேசியாவின் வர இருக்கும் வருகையாகத் திரித்து போதித்து வருவது மோசடி என்று கூறுவதைத் தவிர வேறு எவ்வாறு கூறுவது?
 
விவிலியத்தில் வெட்டல் - பவுல் கொல்லப்பட்டமை
 
திருச்சபை வரலாற்றைக் கூறும் அப்போஸ்தலர் நடபடிகளை எழுதியுள்ள லூக்கா, கி.பி 84இல் இறந்துள்ளார். அதுவரை எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்து அறிந்து எழுதி உள்ளார். இவர் பவுலுடன் மிக நெருக்கமாக அவருடைய ஊழியத்தில் செயல்பட்டு உள்ளார்.
 
பவுல், பேதுரு போன்றவர்கள் ரோம ஆட்சியாளர்களால் கொலை செய்யப்பட்ட பிறகே திருச்சபை வரலாற்றை எழுதத் தொடங்கி உள்ளார்.
 
பவுல் கைது செய்யப்பட்டு, ரோமாபுரியில் காவலில் வைக்கப்பட்டு இருந்த பொழுது அவருடன் தாம் இருந்ததைப் பற்றி எழுதி உள்ளார்.
 
இதுவரை எழுதி உள்ள லூக்கா, பவுல் கொலை செய்யப்பட்ட பின்னர் எழுதத் தொடங்கிய நூலில் பவுல் ரோம ஆட்சியாளர்களால், கொலை செய்யப்பட்ட வரலாற்றை ஏன் எழுதவில்லை? என்னும் கேள்வி எழுகின்றது.
 
பவுல், பேதுரு போன்ற தலைவர்கள் ரோம ஆட்சியாளர்களால் கொலை செய்யப்பட்ட வரலாற்றை லூக்கா எழுதவில்லையா? அல்லது அந்த நூலைத் தொகுத்த ஆட்சியாளர்கள் பவுல், பேதுரு போன்ற தலைவர்கள் கொலை செய்யப்பட்ட வரலாற்றை வெட்டி விட்டார்களா? என்னும் கேள்விக்கு, ரோம ஆட்சியாளர் மேல் வாசிக்கின்றவர்களுக்கு வெறுப்பு வரும் பகுதியை வெட்டி நீக்கி விட்டார்கள் என்பதே இயல்பான பதில் ஆகும்.
 
அதாவது ரோம ஆட்சியாளர்களால் தொகுக்கப்பட்ட புதிய ஏற்பாடாகிய 27 நூல்களில் ரோமர்களின் மேல் வாசிக்கிறவர்களுக்கு வெறுப்பு வரும் பகுதிகள் வெட்டப்பட்டன என்பதில் ஐயம் இல்லை. இது ஆட்சியாளர்களுக்கு உரிய இயல்பு.dostovasky.jpg
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 விவிலியத்தில் ஒட்டல் - 7 வசனங்கள்

 
இயேசு கிருத்து முதல், திருச்சபைத் தலைவர்களை, கி.பி 312 வரை கொலை செய்த ரோம ஆட்சியாளர், புதிய ஏற்பாட்டை உருவாக்கும் பொழுது, திருச்சபையில் இருந்து ரோம ஆட்சியாளருக்கு எதிர்ப்புணர்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுவது இயல்பு.
 
இந்த இயல்பின்படி கடவுளின் ஊழியக்காரர்களாக திருச்சபைத் தலைவர்களை மட்டுமே கிருத்துவப் பொது மக்கள் நினைப்பதை மாற்றி, அரசாங்கத்தின் பணியாட்களும், கடவுளின் ஊழியக்காரர்களே என மூளைச் சலவை செய்ய வேண்டியது இன்றியமையாததாகும்.
 
இந்த முறையில் திருச்சபை மக்களை மூளைச்சலவை செய்யும் பகுதி புதிய ஏற்பாட்டில் ஒட்டப்பட்டு உள்ளது. அவ்வாறு ஒட்டப்பட்ட ரோமர் 13 ஆம் அதிகாரத்தின் 1 முதல் 7 வசனங்களில் நாம் பார்க்கலாம்.
 
"ஆட்சியாளர்களின் பணியாட்கள் அனைவரும் கடவுளின் ஊழியக்காரர்களே" என்று கூறும் இப்பகுதியின் நோக்கம், இயேசு கிருத்து முதல், திருச்சபைத் தலைவர்கள் வரை கொலை செய்யப்படக் காரணம், அவர்கள் ஆட்சியாளர்களாகிய கடவுளின் ஊழியக்காரர்களுக்கு விருப்பமில்லாத காரியங்களைப் பேசியதும் செயல்பட்டதுமேயாகும் என்று பொது மக்கள் நம்ப வேண்டும் என்பது தானே! இந்த எதிர்பார்ப்பை இன்று வரை ஐரோப்பிய ஆட்சியாளர்களின் தலைமையிலுள்ள திருச்சபைகள் நிறைவேற்றி வருகின்றன என்பதைப் பார்க்கின்றோம்.
 
அவ்வாறு ஒட்டப்பட்ட 7 வசனங்கள், (ரோமர்-13 1:7)
 
1. எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.

2. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்

3. மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.

4. உனக்கு நன்மை உண்டாகும்பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே.

5. ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும்.

6. இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவஊழியக்காரராயிருக்கிறார்களே.

7. ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

 

விவிலியத்தில் இணைத்தல் - யாக்கோபு நிருபம்
 
இயேசு கிருத்துவின் சகோதரராகிய யாக்கோபின் நிருபம் புதிய ஏற்பாட்டில் இணைக்கப்பட்டு உள்ளது. எதற்காக? அவருடைய யூத மத விசுவாசத்திற்காக; கிருத்துவ விசுவாசத்திற்காக அன்று.
 
"அனனியா சப்பீராள் மரணத்திற்குப் பின்னர், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று." (அப். 5:11)
"மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை" (அப். 5:13) 
 
காரணம் அனனியா சப்பீராளிடம் பேதுரு நடந்துக் கொண்ட முறை கிருத்து போதித்த முறை அன்று; அன்பின் முறை அன்று; ஆணவத்தின் முறை ஆகும்.
 
இதனால், பேதுருவின் தலைமை, இயேசு கிருத்துவின் சகோதரராகிய யாக்கோபிடம் சென்றது என்பதைப் பார்க்கின்றோம்.
 
"மறுநாளிலே பவுல் எங்களைக் கூட்டிக்கொண்டு, யாக்கோபினிடத்திற்குப் போனான்;" (அப். 21:18)
 
இது ஆரம்ப கால யூதக் கிருத்தவர்களின் நிலையை வெளிப்படுத்துகிறது.
 
இயேசு கிருத்துவின் சகோதரராகிய யாக்கோபு, மற்றவர்களுடன், உயிர்த்தெழுந்த கிருத்துவைக் கண்டவர் என்று 1.கொரிந்தியர் 15 ஆம் அதிகாரத்தில் பவுல் கூறி உள்ளார்.
 
"பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்" - 1 கொரி (15:7)
 
சகோதரர் என்னும் முறையில் உயிர்த்தெழுந்த கிருத்துவைத் தாயோடும் மற்றவர்களோடும் பார்த்தவரே, (அப். 1:14) தவிர, பவுலைப் போன்று மனம் மாறி கிருத்துவை ஏற்றுக் கொண்டவராக பைபிளில் குறிப்பு இல்லை.
 
"அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்." (அப். 1:14)
 
இயேசு கிருத்து உயிரோடு இருந்த காலத்தில் இயேசு கிருத்துவின் சிறப்பை உணர முடியாமல் கேலியாகப் பேசியவர்களில் இவரும் உண்டு. (யோவான் 7: 3-5)
 
"அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம். பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்." (யோவான் 7: 3-5)
 
ஆகவே யூத மத நம்பிக்கையிலிருந்து இவர் மாறியமைக்கான சான்று பைபிளில் இல்லை.
 
1. யூத மத நம்பிக்கையின்படி புறஜாதியாரை யூதர்களுக்குச் சமமானவர்கள் என்பதை இவர் ஏற்றுக் கொள்ளவில்லை. (அப். 15:13-21)
 
2. இதனால் புறஜாதியாரோடு ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுவதை இவர் எதிர்த்தார் என்று கலாத்தியர் 2:11-15 இன் வழி நாம் அறிகின்றோம்.
 
இவர் எதிர்த்தமையால் இவரைச் சேர்ந்த யூதர்களும் பேதுருவை எதிர்த்ததையும், இதனால் பேதுரு மாய்மாலம் பண்ணியதையும், பவுல் முகம் முகமாய் எதிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டமை கூறப்பட்டு உள்ளது.
 
3. பவுல் யூத மதக் கொள்கையிலிருந்து விலகி, கிருத்துவ இயக்கக் கொள்கையைப் போதித்தமையைத் தவறு என்று கண்டித்து அதற்குத் தண்டனை கொடுத்ததை அப். 21:21-24 காட்டுகிறது. 
 
"புறஜாதிகளிடத்திலிருக்கிற யூதரெல்லாரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம்பண்ணவும், முறைமைகளின்படி நடக்கவும் வேண்டுவதில்லையென்று நீர் சொல்லி, இவ்விதமாய் அவர்கள் மோசேயை விட்டுப் பிரிந்துபோகும்படி போதிக்கிறீரென்று இவர்கள் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீரென்று இவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாகக் கூட்டங்கூடுவார்கள்.ஆகையால் நாங்கள் உமக்குச் சொல்லுகிறபடி நீர் செய்யவேண்டும்;"(அப். 21:21-24)
 
4. இயேசு கிருத்துவின் பலியால் மீட்படைந்து கிருத்துவ இயக்கத்தை நடத்திய பவுலின் கொள்கை தவறானது என்று கண்டித்ததுடன் இயேசு கிருத்துவின் பலிக்கு எதிராக மீண்டும் எருசலேம் கோவிலில், யூத முறையின்படி பலியிடக் கட்டளையிட்டார். வேறு வழியின்றி அப்போதைய திருச்சபைத் தலைவரான யாக்கோபின் கட்டளையை நிறைவேற்ற தான் பலியிட உடன்படுவதாக பவுல் அறிவித்தார். (அப். 21:26)
 
"அப்பொழுது பவுல் அந்த மனுஷரைச் சேர்த்துக்கொண்டு, மறுநாளிலே அவர்களுடனேகூடத் தானும் சுத்திகரிப்பு செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காக வேண்டிய பலிசெலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான்." (அப். 21:26)
 
5. அவரால் எழுதப்பட்ட யாக்கோபு நிருபம் கிருத்தவர்களுக்காக எழுதப்பட்டது அன்று.  சிதறி இருக்கின்ற பன்னிரண்டு கோத்திரத்திற்கு எழுதப்பட்டது. (யாக். 1:1)
 
"தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது:" (யாக். 1:1)
 
சிதறியிருக்கும் 12 கோத்திரத்தில் உள்ள கிருத்தவர்களுக்குக் கூட எழுதப்படாமல், கிருத்துவ இயக்கத்திற்குத் தொடர்பே இல்லாத யூத மதத்தவருக்கு எழுதப்பட்ட நிருபம். கிறித்தவக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரண்பட்ட யூதர்களுக்கு யாக்கோபு எழுதிய நிருபம் பைபிளின் கிருத்துவப் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் இணைக்கப்பட்டது ஏன்?
 
6. இந்த நிருபம் புதிய ஏற்பாட்டின் வைப்பு முறையில் பேதுரு நிருபங்களுக்கு முன்னர் வைக்கப்பட்டு இருக்கும் முறை ரோம ஆட்சியாளர்களின், கிருத்துவக் கொள்கைக்கு எதிரான யூத மதக் கொள்கையின் பற்றுதலை வெளிப்படுத்துகிறது.
 
பவுல் பன்னிருவரில் ஒருவர் அல்லர். சிறப்பாகத் தேர்ந்து எடுக்கப்பட்டவர். அவருடைய நிருபங்களும் சிறப்பானவை. அவை வரிசையாகத் தொகுக்கப்பட்டு உள்ளன. கிருத்தவ விசுவாசத்திற்காகப் பவுலைத் தண்டித்த யூத விசுவாசத்தை உடைய யாக்கோபின் நிருபம் பேதுருவின் நிருபங்களுக்கு முன்னர் சிறப்பிடம் கொடுக்கப்பட்டு இருப்பதற்கு ரோமர்களின் அரசியலே காரணம்; ஆன்மிகம் அன்று.
 
இந்த நிருபம் கிருத்துவப் பகுதியில் இணைக்கப்பட்டு இருப்பதற்கும் ரோம ஆட்சியாளர்களின் அரசியல் தேவையே காரணம் ஆகும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 விவிலியத்தில் மாற்றல் - பரலோக இராஜ்யம்

 
"பரலோக இராஜ்யம்" என்னும் கொள்கைப் பெயரை "தேவனுடைய இராஜ்யம்" என்னும் கொள்கைப் பெயராக ரோம ஆட்சியாளர்கள் மாற்றியது ஏன்?
 
இயேசு கிருத்துவின் கன்னிப் பிறப்பும், இயேசு கிருத்துவின் பலியும், இயேசு கிருத்துவின் உயிர்த்தெழுதலும், இயேசு கிருத்துவின் இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யத்தை இப்பூலோகத்திலே நிலைநாட்டும் வரிசையான முயற்சிகளாகும்.
 
"பரலோக இராஜ்யம்" என்பது தன்னல வாழ்க்கை முறையில் இருந்து நீங்கி, பொது நல வாழ்க்கை முறையை ஏற்று வாழும் ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறையாகும் என்பதை ஓரளவு பார்த்து உள்ளோம்.
 
பரலோக வாழ்க்கை அனுபவத்தை இப்பூலோகத்திலே பெற்று அனுபவிக்கும் வாழ்க்கை முறையை உடையதே பரலோக இராஜ்ய வாழ்க்கை முறையாகும்.
 
இந்த அனுபவத்தைக் கொடுப்பவர் பரிசுத்த ஆவியானவர். பரிசுத்த ஆவியானவரிடம் தம்மை ஒப்படைத்து, பரிசுத்த ஆவியானாவர் தம் உள்ளத்திலே அமர்ந்திருந்து தம்மை வழி நடத்தும் அனுபவத்தைப் பெற்றவர்கள், 1. தியாகம் 2. இழப்பு 3. துன்பம் ஆகிய மூன்று நிலைகளிலும் தம் உள்ளத்தில் இன்பத்தை மட்டுமே அனுபவிக்கும் அனுபவத்தில் வாழ்வார்கள்.
 
தியாகம் - என்பது தாமே விரும்பி தம் பொருளையும், தம்மையும் தியாகம் செய்தல்
 
இழப்பு - என்பது இயற்கையாகவோ, செயற்கையாகவோ இழப்பு ஏற்படுதல்
 
துன்பம் - இயற்கையாகவோ, செயற்கையாகவோ துன்பம் வருதல்
 
இந்த மூன்று நிலைகளிலும், பரிசுத்த ஆவியின் நிறைவையும், வழி நடத்தலையும் அனுபவிக்கிறவர்கள் துன்பம் அனுபவிப்பதில்லை. அவர்கள் வாழ்க்கை இவ்வுலகிலும் இன்பமானது. மறு உலகிலும் இன்பமானது. இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை. இதுவே பரலோக இராஜ்ய அனுபவம்.
 
இதை மனிதர்களுக்குக் கொடுக்கவே மகனாகவும், பரிசுத்த ஆவியாகவும் இருமுறை கடவுள் இவ்வுலகிற்கு வந்தார்.
 
இரண்டாம் வருகையில் நிலைநாட்டப்பட்டதே பரலோக இராஜ்யம். ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறை.
 
இரண்டாம் வருகையில் நிலைநாட்டப்பட்ட ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறை என்பது பொருளாசையைக் கைவிட்டு அனைவருடனும் பகிர்ந்து உண்டு வாழ்தல். இது பணக்காரனாக வேண்டும் என்னும் எண்ணத்திற்கு எதிரானது. இதனால் பணக்காரனாக வாழும் வாழ்க்கை முறை இயேசு கிருத்துவால் கண்டிக்கப்படுகிறது. பணக்காரன் ஆக விருப்பமுடையவன், நரகத்தை அடைவான் என்று கூறப்படுகிறது.
 
"பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்;" (மத். 6:19)
 
"இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது." (மத். 6:24)
 
"ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்." (லூக். 18:25)
 
"அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது." (லூக். 18:240
 
"தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்." (லூக். 12:20)
 
" மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்." (லூக். 16:25)
 
இயேசு கிருத்துவின் இத்தகைய போதனைகளால் ஈர்க்கப்பட்ட மக்கள், கடவுளின் இரண்டாம் வருகையாகிய பரிசுத்த ஆவியின் வருகையால் வழி நடத்தப்படும் பொழுது, தங்கள் ஆஸ்திகளை விற்று, அதை அனைவருக்கும் பொதுவாக வைத்து ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறையில் வாழ்ந்தனர் என்பதைப் பார்க்கின்றோம்.
 
"விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி" (அப். 2: 44 - 46).
 
இதையே நாம் அப்.4 : 24-37, ஆம் பகுதியிலும் காணுகின்றோம்.
 
ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறையில் பண ஆசைக்கு இடம் இல்லை. உலக மக்களுக்கு முன் மாதிரியான வாழ்க்கை முறையாக அது அமைந்து இருந்தது. அதுவே பரலோக ராஜ்யத்தை வெளிப்படுத்தும் பரலோக வாழ்க்கை முறையாக இருந்தது.
 
திருச்சபை வரலாற்றில் கடவுளால் உருவாக்கப்பட்ட ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறை பாதிக்கப்பட்டமைக்குக் காரணமாக, யூத மதமும், ரோம அரசும் செயல்பட்டதை நாம் திருச்சபை வரலாற்றில் பார்க்கின்றோம். யூதர்களும் பூலோக ஆட்சியை எதிர்பார்த்தவர்கள். ரோமர்களும் பூலோக ஆட்சியில் இருந்தவர்கள்.
 
பூலோக ஆட்சி சாத்தானுடைய அதிகாரத்தில் இருப்பதை லூக். 4:5-7 தெளிவாக விளக்குகிறது.
 
"பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.நீர் என்னைப் பணிந்துகொண்டால், எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்." (லூக். 4:5-7)
 
ஆயினும் இயேசு கிருத்துவால் அவர் வாழ்நாளில் விளக்கப்பட்டு, பரிசுத்த ஆவியால் நிலை நாட்டப்பட்ட ஆன்மீகப் பொது உடைமையின் வாழ்க்கை முறை இன்று நம்மாலும் மற்றவர்களாலும் சிந்திக்கப்பட திருச்சபை வரலாறு நமக்குத் துணை புரிகிறது.
 
ஆகவே, பழைய ஏற்பாட்டின் வழி, யூதக் கிருத்துவர்கள் எதிர்பார்த்த இரண்டாம் வருகை சாத்தானோடு தொடர்புடைய இவ்வுலக ஆட்சி ஆகும்.
 
ஆனால், புதிய ஏற்பாட்டின் வழி இயேசு கிருத்துவால் விளக்கப்பட்டு, கடவுளின் இரண்டாம் வருகையில் பரிசுத்த ஆவியினால் நிலைநாட்டப்பட்ட ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறை, பரலோக இன்பத்தை இப்பூலோகத்தில் அனுபவிக்கும் ஆன்மீக அனுபவம் ஆகும்.
 
ஆகவே, பழைய ஏற்பாட்டு வாழ்க்கை முறை வேறு; புதிய ஏற்பாட்டு வாழ்க்கை முறை வேறு.
 
பழைய ஏற்பாட்டு வாழ்க்கை முறை சாத்தானோடு தொடர்பு உடையது. அதாவது இவ்வுலக ஆட்சியோடு தொடர்பு உடையது. புதிய ஏற்பாட்டு வாழ்க்கை முறை பரலோக இராஜ்யத்தோடு தொடர்பு உடையது.
 
இந்த இரண்டு வாழ்க்கை முறைகளும் ஒன்றுக்கொன்று முற்றிலும் முரண்பட்ட வாழ்க்கை முறை என்பது 2கொரிந். 3 ஆம் அதிகாரத்தில் சரியாக விளக்கப்படுகிறது.
 
"எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே.ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்?" - (2கொரிந். 3: 5-8)
 
Constantine-the-Great-Statue-at-York-300x225.jpg
கி.பி. 312 இல் ரோம ஆட்சியாளராகிய கான்ஸ்டன்டைன், அதுவரை வேட்டையாடப்பட்டு வந்த கிருத்தவர்களை, வேட்டையாடுவதை தடுத்தாரே தவிர, இயேசு கிருத்துவின் மீட்பை உணர்ந்து மனம் மாறிக் கிருத்துவத்தை ஏற்றுக் கொண்டவர் அல்லர்.
 
கலிங்கப் போரில் இறந்த வீரர்களின் குவியலைக் கண்ட அசோகர் மனம் மாறி பௌத்தத்தை ஏற்றுக் கொண்டு, பௌத்தத்தைப் பரப்ப தம் சொந்த மக்களையும் அனுப்பியதைப் போன்ற மாற்றத்தை நாம் கான்ஸ்டன்டைனில் காணுவதற்கில்லை.
 
கிருத்துவத்தை வேட்டையாடியதை நிறுத்தி, கிருத்துவத்தைத் தம் அரசியலுக்கு பயன்படுமாறு அவர் காலத்தில் புதிய ஏற்பாட்டின் தொகுப்பு வேலை தொடங்கப்பட்டு, திரித்தல், வெட்டல், ஒட்டல், இணைத்தல், மாற்றல் முதலிய பணிகளைச் செய்து கிருத்துவம் ரோம ஆட்சிக்கு கி.பி 312 முதல் இன்று வரை 1700 ஆண்டுகள் பயன்படுமாறு திறமையாகச் செயல் பட்டுள்ளமையை நாம் வரலாற்றில் பார்க்கின்றோம்.
 
இதற்கு ரோம ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்ட கருவி இரண்டாம் வருகைக் கோட்பாடு.
 
இரண்டாம் வருகைக் கோட்பாட்டின் வழி, புதிய ஏற்பாட்டிலுள்ள இயேசு கிருத்துவின் கொள்கைகள், பழைய ஏற்பாட்டில் உள்ள யூத மதக் கொள்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு கடந்த 1700 ஆண்டுகளாக மூளைச்சலவை செய்யப்பட்டு, பணக்காரன் லாசரு கதையில் இயேசு கிருத்து கூறி இருப்பதைப் போன்று, கிருத்தவர்கள் நரகத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றார்கள்.
 
இதில் மிகவும் பரிதாபப்பட வேண்டிய செய்தி கிருத்தவர்கள் தாங்கள் பழைய ஏற்பாட்டின் வழி நரகத்திற்கு ஆயுத்தப்படுத்தப்படுகின்றோம் என்பதை உணராமல் பைபிளைப் படிக்கும் பரிதாப நிலையேயாகும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 விவிலியத்தில் ஏமாற்றல் - வேத வாக்கியம்

 
புதிய ஏற்பாட்டிலுள்ள இயேசு கிருத்துவின் கொள்கைகள், பழைய ஏற்பாட்டிலுள்ள யூத மதக் கொள்கைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கு ஏற்ப புதிய ஏற்பாட்டு வசனங்களுக்கு, ஏமாற்று விளக்கம் கொடுக்கப்படுகிறது. அவற்றின் முக்கியமான ஒன்று

"வேத வாக்கியங்கள் யாவும் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.' (2தீமோ. 3:16) என்னும் பகுதியாகும்.

உலகத்தில் எத்தனையோ வேதங்கள் இருக்கின்றன. இந்துக்களின் வேதம் இருக்கிறது. இசுலாமியர்களின் வேதம் இருக்கிறது. கிருத்தவர்களின் வேதம் இருக்கிறது. யூதர்களின் வேதம் இருக்கிறது. இவற்றில் இங்கே இந்த வாக்கியத்தால் குறிக்கப்படும் வேதம் எது? என்று கூர்ந்து ஆராய்ந்தால், இந்த அதிகாரத்தின் 10ஆம் வசனத்தில் இருந்து தெளிவாக கிருத்துவ வேதத்தை மட்டுமே குறிக்கின்றனவே தவிர, யூத வேதத்தை நினைப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

ஆனால், ஐரோப்பியர் அரசியலுக்கு உட்பட்ட திருச்சபைத் தலைவர்கள் இந்த வசனம், உலகிலுள்ள வேதங்களில், யூத வேதத்தையும் கிருத்துவ வேதத்தையும் இணைத்துக் கூறுகிறது என்று போதிப்பது, இயேசு கிருத்துவின் ஆன்மீகக் கொள்கைகளை, யூத மதத்தின் அரசியல் கொள்கைகளுக்கு உட்படுத்தும் ஏமாற்று போதனை என்பது விளங்கும்.

ரோம ஆட்சியாளர்களின் அரசியலுக்குப் பழைய ஏற்பாடு தேவையே தவிர, புதிய ஏற்பாடு பயன்படாது. இதனால் புதிய ஏற்பாட்டுக் கருத்துக்களைப் பழைய ஏற்பாட்டுக் கருத்துக்களுக்கு உட்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கு இன்றியமையாததாகிறது.

புதிய ஏற்பாட்டிலுள்ள இயேசு கிருத்துவின் கொள்கைகளின்படி,

பணக்காரன் நரகத்திற்குரியவன்;
பிரபுக்கள் நரகத்திற்கு உரியவர்கள்;
அரசன் நரகத்திற்கு உரியவன்;

என்றா ரோம ஆட்சியாளர் போதிக்க முடியும்?

"பணக்காரன் ஆசீர்வதிக்கப்பட்டவன்;
பிரபுக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்;
அரசன் ஆசீர்வதிக்கப்பட்டவர்"

என்று கற்றுக் கொடுக்கப் புதிய ஏற்பாடு பயன்படாது. பழைய ஏற்பாடு தான் பயன்படும். இதற்கேற்ப புதிய ஏற்பாட்டுக் கருத்துகளைப் பழைய ஏற்பாட்டுக் கருத்துக்களுக்கு உட்படுத்திப் போதிக்க வேண்டிய நிலை ஆட்சியாளர்களின் தயவில் வாழுகிறவர்களுக்கு ஏற்படுகிறது.

இந்த நிலையே உலகத் திருச்சபைகளில் நடைபெற்று வருகிறது.

இதற்கேற்பவே "பரலோக இராஜ்யம்" என்பது "தேவனுடைய இராஜ்யம்" அல்லது "கடவுளுடைய இராஜ்யம்" என்று ஆக்கப்பட்டு உள்ளது.

"பரலோக இராஜ்யம்" என்பது ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறையைக் குறிப்பதை முன்னர் கண்டுள்ளோம்.

"தேவனுடைய இராஜ்யம்" என்பது அதற்கு நேர் எதிரான தனியுடைமை வாழ்க்கை முறையைக் குறிப்பது என்பது எண்ணிப்பார்த்தால் புரியக் கூடிய ஒன்றாகும்.

எவ்வாறு?

கடவுள் அல்லது தேவன் என்பது யூதர்களுடைய உள்ளத்தில் அவர்களுடைய விடுதலைக்குக் காரணமான யெகோவா கடவுளையே நினைவுப்படுத்தும். "தேவனுடைய இராஜ்யம்" என்பது யெகோவா கடவுளின் அருமைப் பிள்ளைகளாகிய இசுரவேலின் இராஜ்யத்தை நினைவுபடுத்தும்.

"இசுரவேல் இராஜ்யம்" என்பது இசுரவேலருக்கு மட்டுமே உரிமையுடைய தனியுடைமை இராஜ்யம் என்பதைக் குறிக்கிறது. ஆகவே உலகம் முழுவதிலுமுள்ள மக்களுக்குப் பொதுவான ஆன்மீகப் பொதுஉடைமை வாழ்க்கை முறை என்பது மாற்றப்பட்டு, இசுரவேலரின் தனியுடைமை வாழ்க்கை முறையைக் குறிப்பதாக மாற்றி, ஆன்மீக வாழ்க்கை முறை அரசியல் வாழ்க்கை முறைக்கு மாற்றப்படுகிறது.

இசுரவேலரின் அரசியல் வாழ்க்கை முறையைப் பாராட்ட வைத்து அதன் வழி ரோம அரசியலின் வாழ்க்கை முறையை நியாயப்படுத்த அது பயன்படுகிறது.

புதிய ஏற்பாட்டுக் கோட்பாட்டின்படி

"கடவுள் இராஜ்யம்" - என்பது வேறு;
"பரலோக இராஜ்யம்" - என்பது வேறு
.

"கடவுள் இராஜ்யம்" என்பது கடவுள் எப்பொழுது முதல் இருக்கின்றாரோ? அப்பொழுது முதல் கடவுள் இராஜ்யம் இருக்கிறது. கடவுள் இராஜ்யத்திற்கு வெளியே, அவருடைய ஆட்சிக்கு வெளியே வேறு எந்த ஆட்சியையும் கிடையாது; இருக்க முடியாது.

கடவுள் மனிதனைப் படைத்த பொழுது அவருடைய ஆட்சி உரிமையில் மனிதனுக்குப் பங்கு கொடுத்தார்.

"பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்." (ஆதி. 1:26-28)

மனிதன் அந்த ஆட்சி உரிமையை சாத்தானிடத்தில் இழந்து விட்டான். இதனால் பூலோக ஆட்சி உரிமை சாத்தானிடம் இருக்கிறது.

இந்த நிலையே லூக். 4:5-7 இல் விளக்கப்படுகிறது.

"பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்;நீர் என்னைப் பணிந்துகொண்டால், எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்." (லூக். 4: 5-7)
1. ஆகவே கடவுளுடைய இராஜ்யத்தின் ஒரு பகுதியாக சாத்தானுடைய இராஜ்யம் விளங்கிக் கொண்டிருக்கிறது. ஏனெனில் சாத்தான் கடவுளின் ஆளுகைக்கு உட்பட்டே ஆக வேண்டும்.

2. இயேசு கிருத்து போதித்த பரலோக இராஜ்யமும் கடவுளுக்கு எதிரானது அன்று. இதனால் பரலோக இராஜ்யமும் கடவுளின் இராஜ்யத்தின் ஒரு பகுதியே.
 
3. இவற்றைப் போன்றே, கிருத்துவுக்கு எதிரான அந்திக் கிருத்துவும் கடவுளை எதிர்க்க முடியாது. அந்திக் கிருத்துவின் இராஜ்யமும் கடவுள் இராஜ்யத்தின் ஒரு பகுதியாகவே இருக்கிறது.

இதனால் கடவுள் இராஜ்யத்திற்குள்,

1. சாத்தானின் இராஜ்யம்
2. பரலோக இராஜ்யம்
3. அந்திக் கிருத்துவின் இராஜ்யம்.

ஆகிய மூன்றும் அடங்கி இருக்கின்றன.

இதனால் பரலோக இராஜ்யம் என்பதை கடவுளின் இராஜ்யம் என்று குறிக்கும் பொழுது, பரலோக இராஜ்யத்தின் தனிச் சிறப்பு மறைக்கப்படுகிறது. ஆகவே எந்த விதத்திலும் இது தவறானது ஆகும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

விவிலியத்தில் அழித்தல் - அரமேய மொழி
 
அரமேயத்தில் மட்டுமே பரலோக இராஜ்யம்
 
புதிய ஏற்பாட்டு நூல்களில் இயேசு கிருத்து பேசிய அரமேயத்தில் முதலில் எழுதப்பட்ட மத்தேயு நூலில் மட்டுமே பரலோக இராஜ்யம் என்னும் பெயர் குறிக்கப்படுகிறது.
 
அரமேயத்திலிருந்து கிரேக்க மொழிக்கு மாற்றப்பட்ட மத்தேயு நூலிலேயே கூட "பரலோக இராஜ்யம்" என்னும் பெயருக்கு பதிலாக "தேவனுடைய இராஜ்யம்" என்னும் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளமை ரோம ஆட்சியாளர்களின் கைவரிசையையே காட்டுகிறது.
 
கிருத்தவத்தின் மூலமொழி ஆசியாவில் பிறந்த இயேசு கிருத்து பேசிய ஆசிய மொழியாகிய அரமேய மொழியாக இருத்தலே நியாயமானது.
 
அரமேய மொழியிலுள்ள நூல்களையெல்லாம் அழித்து விட்டு, ஐரோப்பிய மொழியாகிய கிரேக்க மொழியே கிருத்தவத்தின் மூல மொழி எனக் கூறுவது திட்டமிட்ட சதி ஆகும் என்பதில் ஐயம் இல்லை.
 
அரமேய மொழியில் எழுதப்பட்டு உள்ள நூல்கள் பழைய ஏற்பாட்டில் இருக்கின்றன. இந்தியாவில் அசோகருடைய கல்வெட்டு அரமேய மொழியில் இருக்கிறது. மத்தேயு நூலும் முதலில் அரமேயத்தில் எழுதப்பட்டது.
 
இப்படி இருக்க அரமேய மொழி பண்படாத மொழி எனக் கற்றுக் கொடுப்பது இயேசு கிருத்துவுக்கு எதிரான செயல் ஆகும்.
 
மேலும் இயேசு கிருத்து பேசிய அரமேய மொழியில் இயேசு கிருத்துவைப் பற்றிய நூல்கள் மறைக்கப்பட்டு இருக்கின்றனவா? என்னும் கேள்விகளுக்கு இப்பொழுது கிடைக்கும் பதில் அழிக்கப்பட்டு இருக்கின்றன என்பதேயாகும். இவ்வாறு அழிக்கப்பட்ட நூல்களில் பரலோக இராஜ்யம் பற்றிய விரிவான நூல்களும் அடங்கி இருக்க வாய்ப்பு உண்டு என்பதை எவரும் மறுத்தல் இயலாது. ஏனெனில் இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பு பரலோக இராஜ்யத்தைக் கற்றுக் கொடுக்க வந்த வருகை என்பதில் ஐயம் இல்லை.
 
விவிலியத்தில் மறைத்தல் - பலிக் கோட்பாடு
 
இயேசு கிருத்து உலக மீட்பர் என்பதை நிலைநாட்டுவது அவர் தம்மைப் பலியாக்கிய பலிக்கோட்பாடு. கடவுள் உலகில் மனிதனாகப் பிறந்து மனிதரை மீட்க தம்மைப் பலியாக ஒப்புக் கொடுத்தார் என்பதே கிருத்தவத்தின் ஆணிவேரான பலிக்கோட்பாடு.
 
இந்தப் பலிக் கோட்பாடு யூதர்கள் எதிர்பார்த்த யூத அரசனாகிய மேசியாவின் வருகைக் கோட்பாட்டுக்கு நேர் எதிரானது.
 
வருகைக் கோட்பாட்டில் இறந்தார், உயிர் பெற்றார், இரண்டாம் முறை வருவார் என்பன இன்றியமையாதவை.
 
இதனால், இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை அறியாத பேதுரு, யோவான் போன்றவர்கள், இயேசு கிருத்து இறந்தார்; மீண்டும் உயிர் பெற்றார்; இதற்கு நாங்கள் சாட்சிகள் (அப். 2 :32) என்று பிரசங்கித்ததை நாம் பார்க்கின்றோம்.
 
இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை விரிவாக லூக்கா எழுதிய பின்னர், வெகுகாலம் கழித்து ஐரோப்பியர் தலைமையில் உருவாக்கப்பட்ட, அபோஸ்தலர் விசுவாசப் பிரமாணம், அதநாசியஸ் விசுவாசப் பிரமாணம், நிசேயா விசுவாசப் பிரமாணம் முதலிய விசுவாசப் பிரமாணங்களில் இயேசு கிருத்துவின் பலிக் கோட்பாடு முழுவதுமாக மறைக்கப்பட்டு, யூதர்கள் எதிர்பார்த்த இரண்டாம் வருகைக் கோட்பாடான, இறந்தார், உயிர் பெற்றார், திரும்ப வருவார் என்னும் இரண்டாம் வருகைக் கோட்பாட்டை வற்புறுத்தல், இயேசு கிருத்துவின் உலக மீட்புக் கோட்பாட்டுக்கு எதிரான ஐரோப்பிய அரசியல் சதி ஆகும். இதனை எவரும் மறுத்தல் இயலாது.
 
திரித்தல்
வெட்டல்
ஒட்டல்
இணைத்தல்
மாற்றல்
ஏமாற்றல்
அழித்தல்
மறைத்தல்
 
ஆகிய எட்டு முறைகளின் வழி இன்றும் ஐரோப்பியர் கிருத்தவ மக்களையும், உலக மக்களையும், கடவுள் நிலைநாட்டிய ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறையிலிருந்து மாற்றி, சாத்தானின் கையிலுள்ள அரசியல் தனியுடைமை வாழ்க்கை முறையில் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை எவரும் மறுத்தல் இயலாது.
 
மன்னர் ஆட்சிக் காலமும் மக்கள் ஆட்சிக் காலமும்:
 
சாத்தானின் கையிலுள்ள அரசியல் தனியுடைமை வாழ்க்கை முறை மன்னர் ஆட்சிக்காலத்திற்கு உரியது. இப்பொழுது உலகில் நடைபெற்று வருவது மக்கள் ஆட்சிக்காலம். மன்னர் ஆட்சிக்காலம் படிப்படியாக மறைந்து வருகின்றது. மக்கள் ஆட்சிக்காலத்திற்கு உரியது இயேசு கிருத்து கற்றுக் கொடுத்த ஆன்மீகப் பொதுஉடைமை வாழ்க்கை முறையாகும்.
 
ஆன்மீகப் பொது உடைமையும் அரசியல் பொது உடைமையும்:
 
ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கைமுறை வேறு; அரசியல் பொது உடைமை வாழ்க்கைமுறை வேறு.
 
அரசியல் பொதுஉடைமை அரசியலுக்கு உரிய வன்முறையாலும் அடக்குமுறையாலும் வருவது.
 
ஆன்மீகப் பொதுஉடைமை வாழ்க்கைமுறை மனமாற்றத்தால் வருவது. மனமாற்றம் பரலோக இராஜ்யக் கொள்கையால் வருவது. பரலோக இராஜ்யக் கொள்கையைப் புரிய வைத்து மனமாற்றத்தை உருவாக்கி ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கைமுறைக்கு வழி நடத்துகிறவர் பரிசுத்த ஆவியானவர்; புதிய ஏற்பாட்டு ஆவியானவர்.
 
பழைய ஏற்பாட்டு ஆவி, வன்முறையை அடிப்படையாகக் கொண்ட தனியுடைமை வாழ்க்கை முறையையுடைய அரசியலுக்கு வழிநடத்துவது. ஆகவே பழைய ஏற்பாட்டு ஆவி வேறு; புதிய ஏற்பாட்டு ஆவி வேறு.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

பழைய ஏற்பாட்டு ஆவியும் புதிய ஏற்பாட்டு ஆவியும்:

பழைய ஏற்பாட்டிலுள்ள யோவேல் தீர்க்கதரிசி கூறியுள்ளபடி, புதிய ஏற்பாட்டில் அபோஸ்தலர் இரண்டாம் அதிகாரத்தில் பரிசுத்த ஆவி இறங்கியதாக இயேசு கிருத்துவின் சீடர்கள் நம்பியமையை (அப்.2: 16-21) நாம் பார்க்கின்றோம்.

"தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது." (அப்.2: 16) 

யோவேல் கூறி இருந்த ஆவிக்கும் இங்கே இறங்கிய ஆவிக்கும் உள்ள வேற்றுமையை சீடர்கள் உணர முடியாமல் போனமைக்குக் காரணம், இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை உணராமையும், இயேசு கிருத்து யூதா கோத்திரத்தில் பிறந்த இசுரவேலர் எதிர்பார்த்த யூத அரசனாகிய மேசியா என நம்பியமையுமேயாகும்.

பழைய ஏற்பாட்டு ஆவி, அழித்தல் தொழிலைச் செய்யுமாறு தூண்டுவது என்பதை, பழைய ஏற்பாட்டில், கிதியோன், சிம்சோன் போன்றவர்கள் ஆவியைப் பெற்றவுடன் செய்த கொலைகளால் நாம் அறிகின்றோம். அவ்வாறே யோவேல் கூறிய தீர்க்கதரிசனத்திலும்,

"உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்; " (யோவேல் : 3: 10)

"யூதா புத்திரரின் தேசத்திலே குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தி, அவர்களுக்குச் செய்த கொடுமையினிமித்தம் எகிப்து பாழாய்ப்போகும்; ஏதோம் பாழான வனாந்தரமாகும்." (யோவேல் : 3: 19)

"நான் தண்டியாமல் விட்டிருந்த அவர்களுடைய இரத்தப்பழியைத் தண்டியாமல் விடேன்; கர்த்தர் சீயோனிலே வாசமாயிருக்கிறார்." (யோவேல் : 3: 21)

என்னும் பகுதிகள் அவர்களைக் கொலை செய்யத் தூண்டும் பகுதிகளாகக் காட்டப்படுகின்றன.

ஆனால் பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய ஆவி கொலை செய்யும் ஆவி அன்று என்பதை நாம் அறிவோம்.

இந்த இரண்டு ஆவிகளுக்கும் உள்ள வேற்றுமையை இயேசு கிருத்து தெளிவாகத் தம் சீடர்களிடம் விளக்கியமையை நாம் அறிவோம்.

"அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள். அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி, மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார்." (லூக்கா 9: 54- 56)

இதில் பழைய ஏற்பாட்டு ஆவிக்கும் புதிய ஏற்பாட்டு ஆவிக்கும் உள்ள வேறுபாடு தெளிவாக விளக்கப்படுகிறது.

பழைய ஏற்பாட்டு ஆவி அழிக்கும் வேலையைச் செய்கிறது; புதிய ஏற்பாட்டு ஆவி இரட்சிப்பின் வேலையைச் செய்கிறது என்பதில் ஐயம் இல்லை.

"அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது." (அப்போஸ்தலர் 2:2-3)

1.பலத்தக்காற்று
2. முழக்கம்
3. வீடு முழுவதையும் நிரப்பிற்று
4. அக்கினிமயமான நாவுகள்
5. ஒவ்வொருவர் மேலும் அமர்ந்தது

இது இயற்கையை மீறிய செயல். இதை மனிதன் உருவாக்க முடியாது. இது கடவுளின் செயல்; யூதர்கள் யோவேலின் வழி நடக்கப் போவதாக எதிர்பார்த்தபடியே இது நடந்ததாக பேதுரு யூதமுறைப்படி அவருடைய நம்பிக்கையில் விளக்குவதை இதே அதிகாரத்தின் 19 முதல் 21 வரையிலான வசனங்கள் காட்டுகின்றன.

பரிசுத்த ஆவியானவர் வரும் பொழுது இங்கே பேதுரு விளக்கியபடியே நடக்கும் என்று இயேசு கிருத்து அவருடைய சீடர்களுக்குக் கூறி இருப்பதை மத்தேயு 24 ஆம் அதிகாரத்தில் 29 முதல் 31 வரையுள்ள வசனங்கள் வழி நாம் அறிகின்றோம்.

"அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்." (மத். 24: 29-31) 

இந்த இடத்தில் இயேசு கிருத்து கூறி இருப்பதும், பரிசுத்த ஆவி வரும் பொழுது நடந்த நிகழ்ச்சிகளும், மனிதரால் உருவாக்கக்கூடிய நிகழ்ச்சிகள் அல்ல. இறைத்திட்டதின் செயல்பாடு. கடவுள் பரிசுத்த ஆவியாக வந்த இரண்டாம் வருகையின் நிகழ்ச்சிகள். அனுபவப் பூர்வமாகக் காணப்படக் கூடியவை.

"அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்." (மத். 24:40)

போன்ற வசனங்கள் இவற்றை வெளிப்படுத்துகின்றன.

பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படும் அனுபவமுடையவர்களுக்கு இவற்றைப் புரிந்து கொள்ளுவதில் எந்தச் சிக்கலுக்கும் இடம் இல்லை.

யோவேல் கூறி இருக்கும் ஆவி வேறு, இயேசு கிருத்து விளக்கிய இரண்டாம் வருகையின் ஆவி வேறு என்பதையும் நாம் அறிவோம்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 விவிலியத்தில் கிருத்துவ வாழ்க்கை முறை விரிவாக இல்லையே ஏன்?
 
புதிய ஏற்பாட்டில் கிருத்தவ வாழ்க்கை முறையைக் கூறும் பகுதி, பழைய ஏற்பாட்டில் யூத வாழ்க்கை முறையைக் கூறும் பகுதி விரிவாக இருப்பதைப் போன்று விரிவாக இல்லையே - ஏன்?
 
கிருத்தவர்களை வேட்டையாடிய ரோம அரசர்கள் உருவாக்கியுள்ள புதிய ஏற்பாட்டில் கிருத்தவ வாழ்க்கை முறையை விரிவாகச் சேர்த்தால் அப்பகுதியில், கிருத்தவர்கள் ரோம ஆட்சியாளர்களின் பிடியில் பட்ட பாடுகளின் அனுபவமாகத்தானே இருக்கும்; அதை எப்படி ரோம ஆட்சியாளர்களின் புதிய ஏற்பாட்டில் சேர்க்க முடியும்?. முடியாது.
 
இது முதல் காரணம், இரண்டாம் காரணம், கிருத்தவ மதப் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில், கிருத்தவ வாழ்க்கை முறைப்பகுதி இல்லாமல் இருப்பதால் தானே, கிருத்தவ அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்கு பழைய ஏற்பாட்டுப் பகுதிகளை மேற்கோளாக வாசிக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்படுகிறது.
 
இதன் வழி இயேசு கிருத்துவின் ஆன்மீகச் செய்தி பழைய ஏற்பாட்டின் அரசியல் செய்திக்கு உட்படுத்தப்படுகிறது. இவற்றை உள்ளத்தில் கொண்டே ரோம ஆட்சியாளர்களால், புதிய ஏற்பாட்டில் கிருத்தவ வாழ்க்கை முறை பற்றிய செய்திகள் இணைக்கப்படவில்லை.
 
இவற்றை நாம் அறிய வேண்டுமானால் பைபிளை விட்டு திருச்சபை வரலாற்றுக்கு போக வேண்டி இருக்கிறது. இது ஐரோப்பிய ஆட்சியாளர்களின் இயேசு கிருத்துவின் இரட்சிப்பின் செய்திக்கு எதிரான திட்டமிட்ட சதியாகும்.
 
இந்த திட்டமிட்ட சதிகளால் ஐரோப்பியர்கள் அடைந்துள்ள இலாபங்கள் யாவை?
 
இன்று வரை உலகில் வாழ்ந்த உலகளாவிய ஆட்சியாளர்களில் முன்னிலையில் இருப்பவர்கள் ஐரோப்பியாவில் வாழும் ஐரோப்பியர்களும், ஐரோப்பாவிலிருந்து வேறு நாடுகளில் குடியேறி அங்கு ஆட்சி அமைத்த ஐரோப்பியர்களும் மட்டுமே.
 
இந்த நிலை இவர்களுக்கு கிடைக்க காரணமாக இருப்பவை இவர்களால் தொகுக்கப்பட்ட பைபிளும், பைபிளுக்கு இவர்களுடைய அரசியல் நோக்கில் இவர்களால் போதிக்கப்பட்டு வரும் விளக்கங்களுமே ஆகும்.
 
இவர்களால் தொகுக்கப்பட்ட பைபிளும், பைபிளுக்கு இவர்கள் கொடுக்கும் விளக்கங்களும், கடந்த ஆண்டுகளாக கிருத்தவ மதம் என்னும் நிலையில் ஐரோப்பியர் தலைமையிலேயே இன்று வரை இயங்கி வருகின்றன. இவர்களை மீறி யாரும் இதில் நுழையவும், இயங்கவும் முடியாதபடி கிருத்தவ மதத்தின் சட்டதிட்டங்கள் ஒரு சர்வாதிகார அமைப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
 
ஆகவே ஐரோப்பியர்களிடம் இரண்டு வகையான படைகள் இருக்கின்றன.
 
1. மற்றவர்களுடைய உடலை அடிமைப்படுத்த பயன்படும் படைக்கருவிகளைக் கொண்ட போர்ப் படை

2. மற்றவர்களுடைய உள்ளத்தை மூளைச் சலவை செய்து அடிமைப்படுத்தும் கிருத்தவ மதத் தலைவர்களும் பிரச்சாரர்களும் அடங்கிய மூளைச் சலவைப்படை.
 
கற்றுக் கொடுத்தல் வேறு; மூளைச் சலவை செய்தல் வேறு.
 
கற்றுக் கொடுத்தல் மற்றவர்களைச் சிந்திக்கவும், கேள்விகள் கேட்கவும் தூண்டுதல்.
 
மூளைச் சலவை செய்தல் நம்பு, சிந்திக்காதே, கேள்விகள் கேட்காதே என்று சிந்தனையைத் தடுத்தல்.
 
உடலை வன்முறையின்வழி அடிமைப்படுத்தும் போர்ப்படை அரசியல் களத்திலும், உள்ளத்தை மூளைச் சலவைச் செய்து அடிமைப்படுத்தும் படை, ஆன்மீகக் களத்திலும் இடைவிடாது வேலை செய்துக் கொண்டு இருக்கின்றன.
 
இதனால் ஐரோப்பியர் தங்கள் இனம் குறித்தும், நிறம் குறித்தும், தங்கள் ஆட்சி குறித்தும், செல்வம் குறித்தும், செல்வாக்குக் குறித்தும் பெருமைக் கொண்டு மற்றவர்களை அற்பமாக எண்ணும் ஆணவ நிலையில் இருக்கின்றனர் என்பதும், இயேசு கிருத்துவின் இரட்சிப்பு என்பது இவர்களுக்கு பயன்படும் ஒரு கருவி என்பதும் இவர்களுடம் நாம் நடத்திய கடிதப் போக்குவரத்தின் வழி நமக்குப் புரிந்தது.
 
"போப்பாண்டவர் பதவி" எனபது கிருத்துவின் மீட்பைச் சிறப்பிக்கும் பதவி என நாம் நம்பி, போப்பாண்டவருக்கு கடிதம் எழுதிய பொழுது, அப்பதவி ரோம ஆட்சியாளர்களின் அரசியலுக்கான பதவி என்பதை நாம் புரிந்துக் கொள்ளுமாறு போப்பாண்டவரின் பதில் இருந்தது.
 
போப்பாண்டவர் தேர்தலில் உள்ள குறைகளை நாம் சுட்டிக்காட்டி அதை நிறைவு செய்வதற்கான வழிவகைகளை நாம் எழுதிய பொழுது அவர்களால் அதற்கு பதில் எழுத இயலவில்லை.

அவ்வாறே உலகம் முழுவதிலும் உள்ள ஆங்கிலத்திருச்சபையின் தலைவராகிய "Arch Bishop of Canterbury" யுடன் நடத்திய கடிதப் போக்குவரத்திலும், இங்கிலாந்து ஆட்சியாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பதவியே திருச்சபைத் தலைவர் பதவி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியதாயிற்று.

அவ்வாறே பெந்தகொஸ்தே சபைக் கொள்கையின் உலக தலைவர்களோடு நடத்திய கடிதப் போக்குவரத்தும், அவர்களுடைய அரசியல் சிந்தனையையே நாம் புரிந்து கொள்ள வேண்டியதாயிற்று.

இன்று உலகிலுள்ள இனவெறி, நிறவெறி, ஜாதிவெறி அனைத்தையும் ஐரோப்பியர், கிருத்தவ மதத்தின் வழி எவ்வாறு பாதுகாத்து வளர்த்து வருகின்றார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியதாயிற்று.

இவர்கள் இவ்வாறு நடந்துக் கொள்வதற்கு அடிப்படைக் காரணம் என்ன? - அறியாமை

இவர்கள் கையில் விளக்கை வைத்துக் கொண்டு குழியில் விழுவது ஏன்? குருட்டாட்டம். மனிதனுக்கும், குரங்குக்கும் ஐரோப்பியர்களுக்கு வேறுபாடு தெரியாது.

ஐரோப்பியர்கள் எக்காலத்திலும் ஆன்மீகச் சிந்தனை உள்ளவர்கள் அல்லர் என்பது வரலாறு. வணிகத்தில் சிறந்தவர்கள். மற்றவர்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்வதில் வல்லவர்கள்.

"Man is a Social Animal" என நம்புகிறவர்கள்:

இவர்கள், அறிவியலில், அதாவது உடலைப்பற்றிய ஆய்வாகிய அறிவியலில் சிறந்தவர்கள். உலகிலுள்ள உயிரினங்களுக்கு இருக்கும் உயிரைப் பற்றியும், மனிதருக்கு மட்டுமே இருக்கும் ஆன்மாவைப் பற்றியும், மனிதருக்கு ஆன்மாவைக் கொடுத்த கடவுளைப் பற்றியும், கடவுளை உணர முடியாது தடுக்கும் ஆணவம் பற்றியும் இவர்களுக்குத் தெரியாது.

ஐரோப்பாவில் எந்த மதமும் உருவாகவில்லை. உலக மதங்கள் அனைத்தும் ஆசியாவில் மட்டுமே உருவாகியுள்ளன. இதனால் ஆன்மீக விசயத்தில் ஐரோப்பியர்களைக் குறை கூறிப் பயனில்லை. ஐரோப்பா ஒரு குளிர் கண்டம். இதனால் ஐரோப்பியர்கள் இயற்கையுடன் போராட வேண்டும். அவர்களுடைய கவனம் அதில் செல்லவில்லையானால் அவர்கள் இயற்கையால் அழிக்கப்பட்டு விடுவார்கள்.

ஆகவே அவர்கள் தங்கள் கவனத்தை எல்லாம் இவ்வுலக வாழ்விற்காகவே செலவழிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்காகவே தங்கள் நேரத்தைச் செலவழிக்கின்றார்கள். இதனால் இந்த உலக வாழ்வு நிலையில், அரசியலிலும், வணிகத்திலும் சிறந்து விளங்குகின்றார்கள்.

ஆன்மிகம் அவர்கள் கையில் மாட்டிக் கொண்டதே தவிர, அவர்கள் ஆன்மீகத்தை தேடிச் சென்று கண்டடைந்தவர்கள் அல்லர். ரோம அரசனாகிய கான்ஸ்டன்டின் ஆட்சியில் கிருத்துவம் இயல்பாக அவனுடைய அரவணைப்பின் கீழ் வந்தது. அதுவும், அரசியல் வெற்றிக்கான அவனுடைய காட்சியில் சிலுவையைப் போன்ற சின்னம் அவனுடைய அரசியல் வெற்றிக்குப் பயன்பட்டமையால், கிருத்துவத்தை அரவணைத்தான். பின்னரும் இவர்கள் வளர ரோம ஆட்சியாளர் கிருத்துவத்தை அவர்களுடைய அரசியலுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளுவது ஆட்சியாளர்களின் இயல்பு.

அந்த இயல்பின்படி அவர்கள் செய்து வருகின்றார்கள். இதனால் அவர்களைக் குறை கூறிப் பயனில்லை.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: கிறிஸ்து யார்? கடைசி காலம்- இரண்டாவது வருகை கட்டுக்கதைகள்
Permalink  
 


“வேதங்களில் இடைச்செருகல் - ஆங்காங்கே அவரவர் வசதிக்கேற்ப சேர்த்துக்கொண்டு விட்டனர்”

“திருமாலே ஒரே பரம்பொருள் என்றால், மற்ற தெய்வங்கள் பொய் என்றுதான் பொருள். அத்தெய்வங்களைச்சாத்தான்கள் என்று ஓப்பனாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.”

பழைய ஏற்பாடோ, அல்லது புதிய ஏற்பாடோ, … எல்லாவற்றிலும் அதிகம் இடைசெருகல் உள்ளது என்று ஒரு கிருஸ்துவ பெரியவரே என்னிடம் கூறினார். சிறுவயது முதல் எனக்கு என் மதத்தில் மீது பற்று இல்லை. எதோ எப்போதாவது தேவாலயம் செல்வேன். அனால், இயேசு என்ற ஒரு மகான் வாழ்ந்ததை நான் நம்புகிறேன்.

பைபளில் விக்கிரக வழிபாடு கண்டிக்கபடுகிறது என்றால், இங்கு நான் வசிக்கும் ஊரில் தேவாலயத்தில் இயேசுவே சுவரில் விக்ரகமாகதான் உள்ளார். இதை மட்டும் கிருஸ்தவர்கள் ஏன் வழிபடுகிறார்கள்? இந்த கேள்வி 15 வயதிலே நான் கேட்டுவிட்டேன். இன்னும் நிறைவான பதில் வரவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Question: "I am a Hindu, why should I consider becoming a Christian?"

Answer: 
Comparing Hinduism and Christianity is difficult, in part, because Hinduism is a slippery religion for Westerners to grasp. It represents limitless depths of profundity, a rich history, and an elaborate theology. There is perhaps no religion in the world that is more variegated or ornate. Comparing Hinduism and Christianity can easily overwhelm the novice of comparative religions. So, the proposed question should be considered carefully and humbly. The answer given here does not pretend to be comprehensive or assume even an "in-depth" understanding of Hinduism at any particular point. This answer merely compares a few points between the two religions in effort to show how Christianity is deserving of special consideration.

First, Christianity should be considered for its historical viability. Christianity has historically rooted characters and events within its schema which are identifiable through forensic sciences like archeology and textual criticism. Hinduism certainly has a history, but its theology, mythology, and history are so often blurred together that it becomes difficult to identify where one stops and the other begins. Mythology is openly admitted within Hinduism, which possesses elaborate myths used to explain the personalities and natures of the gods. Hinduism has a certain flexibility and adaptability through its historical ambiguity. But, where a religion is not historical, it is that much less testable. It may not be falsifiable at that point, but neither is it verifiable. It is the literal history of the Jewish and eventually Christian tradition that justifies the theology of Christianity. If Adam and Eve did not exist, if Israel did not have an exodus out of Egypt, if Jonah was just an allegory, or if Jesus did not walk the earth then the entire Christian religion can potentially crumble at those points. For Christianity, a fallacious history would mean a porous theology. Such historical rootedness could be a weakness of Christianity except that the historically testable parts of the Christian tradition are so often validated that the weakness becomes a strength.

Second, while both Christianity and Hinduism have key historical figures, only Jesus is shown to have risen bodily from the dead. Many people in history have been wise teachers or have started religious movements. Hinduism has its share of wise teachers and earthly leaders. But Jesus stands out. His spiritual teachings are confirmed with a test that only divine power could pass: death and bodily resurrection, which He prophesied and fulfilled in Himself (Matthew 16:2120:18-19Mark 8:311 Luke 9:22John 20-211 Corinthians 15).

Moreover, the Christian doctrine of resurrection stands apart from the Hindu doctrine of reincarnation. These two ideas are not the same. And it is only the resurrection which can be deduced convincingly from historical and evidential study. The resurrection of Jesus Christ in particular has considerable justification through secular and religious scholarship alike. Its verification does nothing to verify the Hindu doctrine of reincarnation. Consider the following differences:

Resurrection involves one death, one life, one mortal body, and one new and immortally glorified body. Resurrection happens by divine intervention, is monotheistic, is a deliverance from sin, and ultimately occurs only in the end times. Reincarnation, on the contrary, involves multiple deaths, multiple lives, multiple mortal bodies, and no immortal body. Furthermore, reincarnation happens by natural law, is usually pantheistic (God is all), operates on the basis of karma, and is always operative. Of course, listing the differences does not prove the truth of either account. However, if the resurrection is historically demonstrable, then distinguishing these two after-life options separates the justified account from the unjustified account. The resurrection of Christ and the larger Christian doctrine of resurrection are both deserving of consideration.

Third, the Christian Scriptures are historically outstanding, deserving serious consideration. In several tests the Bible surpasses the Hindu Vedas, and all other books of antiquity, for that matter. One could even say that the history of the Bible is so compelling that to doubt the Bible is to doubt history itself, since it is the most historically verifiable book of all antiquity. The only book more historically verifiable than the Old Testament (the Hebrew Bible) is the New Testament. Consider the following:

1) More manuscripts exist for the New Testament than for any other of antiquity—5,000 ancient Greek manuscripts, 24,000 in all including other languages. The multiplicity of manuscripts allows for a tremendous research base by which we can test the texts against each other and identify what the originals said.

2) The manuscripts of the New Testament are closer in age to the originals than are any other document of antiquity. All of the originals were written within the time of the contemporaries (eyewitnesses), in the first century A.D., and we currently have parts of manuscript as old as A.D. 125. Whole book copies surface by A.D. 200, and the complete New Testament can be found dating back to A.D. 250. Having all the books of the New Testament initially written within the times of eyewitnesses means that they did not have time to devolve into myth and folklore. Plus, their truth claims were held accountable by members of the church who, as personal witnesses to the events, could check the facts.

3) The New Testament documents are more accurate than any other of antiquity. John R. Robinson in Honest to God reports that the New Testament documents are 99.9% accurate (most accurate of any complete antique book). Bruce Metzger, an expert in the Greek New Testament, suggests a more modest 99.5%.

Fourth, Christian monotheism has advantages over pantheism and polytheism. It would not be fair to characterize Hinduism as only pantheistic ("God is all") or only polytheistic (having many gods). Depending on the stream of Hinduism to which one ascribes, one may be pantheistic, polytheistic, monistic ("all is one"), monotheistic, or a number of other options. However, two strong streams within Hinduism are polytheism and pantheism. Christian monotheism has marked advantages over both of these. Due to space considerations, these three worldviews are compared here in regards to only one point, ethics.

Polytheism and pantheism both have a questionable basis for their ethics. With polytheism, if there are many gods, then which god has the more ultimate standard of ethics for humans to keep? When there are multiple gods, then their ethical systems do not conflict, do conflict, or do not exist. If they do not exist, then ethics are invented and baseless. The weakness of that position is self-evident. If the ethical systems do not conflict, then on what principle do they align? Whatever that aligning principle is would be more ultimate than the gods. The gods are not ultimate since they answer to some other authority. Therefore, there is a higher reality to which one should adhere. This fact makes polytheism seem shallow if not empty. On the third option, if the gods conflict in their standards of right and wrong, then to obey one god is to risk disobeying another, incurring punishment. Ethics would be relative. Good for one god would not necessarily be "good" in an objective and universal sense. For example, sacrificing one's child to Kali would be commendable to one stream of Hinduism but reprehensible to many others. But surely, child sacrifice, as such, is objectionable regardless. Some things by all reason and appearance are right or wrong, regardless.

Pantheism does not fare much better than polytheism since it asserts that ultimately there is only one thing—one divine reality—thus disallowing any ultimate distinctions of "good" and "evil." If "good" and "evil" were really distinct, then there would not be one single, indivisible reality. Pantheism ultimately does not allow for moral distinctions of "good" and "evil." Good and evil dissolve into the same indivisible reality. And even if such distinctions as "good" and "evil" could be made, the context of karma voids the moral context of that distinction. Karma is an impersonal principle much like a natural law such as gravity or inertia. When karma comes calling on some sinful soul, it is not a divine policing that brings judgment. Rather, it is an impersonal reaction of nature. But morality requires personality, personality which karma cannot lend. For example, we do not blame a stick for being used in a beating. The stick is an object with no moral capacity or duty. Rather, we blame the person who used the stick abusively. That person has a moral capacity and a moral duty. Likewise, if karma is merely impersonal nature, then it is amoral ("without morality") and is not an adequate basis for ethics.

Christian monotheism, however, roots its ethics in the person of God. God's character is good, and, therefore, what conforms to Him and His will is good. What departs from God and His will is evil. Therefore, the one God serves as the absolute basis for ethics, allowing a personal basis for morality and justifying objective knowledge about good and evil.

Fifth, the question remains "What do you do with your sin?" Christianity has the strongest answer to this problem. Hinduism, like Buddhism, has at least two ideas of sin. Sin is sometimes understood as ignorance. It is sinful if one does not see or understand reality as Hinduism defines it. But there remains an idea of moral error termed "sin." To do something deliberately evil, to break a spiritual or earthly law, or to desire wrong things, these would be sins. But that moral definition of sin points to a kind of moral error that requires real atonement. From where can atonement rise? Can atonement come by adherence to karmic principles? Karma is impersonal and amoral. One could do good works to "even the balance," but one cannot ever dispose of sin. Karma does not even provide a context whereby moral error is even moral. Whom have we offended if we sin in private, for example? Karma does not care one way or the other because karma is not a person. For example, suppose one man kills another man's son. He may offer money, property, or his own son to the offended party. But he cannot un-kill the young man. No amount of compensation can make up for that sin. Can atonement come by prayer or devotion to Shiva or Vishnu? Even if those characters offer forgiveness, it seems like sin would still be an unpaid debt. They would forgive sin as if it were excusable, no big deal, and then wave people on through the gates of bliss.

Christianity, however, treats sin as moral error against a single, ultimate, and personal God. Ever since Adam, humans have been sinful creatures. Sin is real, and it sets an infinite gap between man and bliss. Sin demands justice. Yet it cannot be "balanced out" with an equal or greater number of good works. If someone has ten times more good works than bad works, then that person still has evil on his or her conscience. What happens to these remaining bad works? Are they just forgiven as if they were not a big deal in the first place? Are they permitted into bliss? Are they mere illusions, thus leaving no problem whatsoever? None of these options are suitable. Concerning illusion, sin is too real to us to be explained away as illusion. Concerning sinfulness, when we are honest with ourselves we all know we have sinned. Concerning forgiveness, to simply forgive sin at no cost treats sin like it is not of much consequence. We knWe know that to be false. Concerning bliss, bliss is not much good if sin keeps getting smuggled in. It seems that the scales of karma leave us with sin on our hearts and a sneaking suspicion that we have violated some ultimately personal standard of right and wrong. And bliss either cannot tolerate us, or it must cease being perfect so that we can come in.


With Christianity, however, all sin is punished though that punishment has already been satisfied in Christ's personal sacrifice on the cross. God become man, lived a perfect life, and died the death that we deserved. He was crucified on our behalf, a substitute for us, and a covering, or atonement, for our sins. And He was resurrected proving that not even death could conquer Him. Furthermore, He promises the same resurrection to eternal life for all who have faith in Him as their only Lord and Savior (Romans 3:10236:238:1210:9-10;Ephesians 2:8-9Philippians 3:21).

Finally, in Christianity we can know that we are saved. We do not have to rely on some fleeting experience, nor do we rely on our own good works or fervent meditation, nor do we put our faith in a false god whom we are trying to "believe into existence." We have a living and true God, a historically anchored faith, an abiding and testable revelation of God (Scripture), a theologically satisfying basis for ethical living, and a guaranteed home in heaven with God.

So, what does this mean for you? Jesus is the ultimate reality! Jesus was the perfect sacrifice for our sins. God offers all of us forgiveness and salvation if we will simply receive His gift to us (John 1:12), believing Jesus to be the Savior who laid down His life for us – His friends. If you place your trust in Jesus as your only Savior, you will have absolute assurance of eternal bliss in heaven. God will forgive your sins, cleanse your soul, renew your spirit, and give you abundant life in this world and eternal bliss in the next world. How can we reject such a precious gift? How can we turn our backs on God who loved us enough to sacrifice Himself for us?

If you are unsure about what you believe, we invite you to say the following prayer to God; “God, help me to know what is true. Help me to discern what is error. Help me to know what is the correct path to salvation.” God will always honor such a prayer.

If you want to receive Jesus as your Savior, simply speak to God, verbally or silently, and tell Him that you receive the gift of salvation through Jesus. If you want a prayer to say, here is an example: “God, thank you for your love for me. Thank you for sacrificing yourself for me. Thank you for providing for my forgiveness and salvation. I accept the gift of salvation through Jesus. I receive Jesus as my Savior. Amen!”

Have you made a decision to trust Jesus as your Savior because of what you have read here today? If so, please click on the "I have accepted Christ today" button below.

http://www.gotquestions.org/Hindu-Christian.html



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Thasneem Thasneem
 
Thasneem Thasneem பைபிள் வாக்கு மூலம் இயேசு யார் பாவத்தையும் சுமக்க வரவில்லை என்று...!!!!!! மத்தேயு-12 அதிகாரம் _______________ _______________ __________ 36. மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். But I say unto you, That every idle word that men shall speak, they shall give account thereof in the day of judgment. கலாத்தியர்-6 அதிகாரம் _______________ _______________ __________ 4. அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க ்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும். But let every man prove his own work, and then shall he have rejoicing in himself alone, and not in another. 5. அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே. For every man shall bear his own burden. எசேக்கியேல் -18 அதிகாரம் _______________ _______________ __________ 20. பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் ராஜாவினுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும். The soul that sinneth, it shall die. The son shall not bear the iniquity of the father, neither shall the father bear the iniquity of the son: the righteousness of the righteous shall be upon him, and the wickedness of the wicked shall be upon him. இந்த மூன்று வசனங்களும் போதும் சுய புத்தி உள்ள ஒருவர் தெளிவு பெற... இயேசு யார் பாவத்தையும் சுமக்க வரவில்லை. அவனவன் செயலுக்கு அவனே பொறுப்பு என்று. Like · Reply · Edit · 1 hour ago Thasneem Thasneem (மோசே,இயேசு,முஹ ம்மத் மூவரின் கர்த்தரும் ஒருவரே) யாத்திராகமம்-3 அதிகாரம்6. பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான். Moreover he said, I am the God of thy father, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob. And Moses hid his face; for he was afraid to look upon God. அப்போஸ்தலர்-3 அதிகாரம் 13. ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய சேவகர் ஆகிய இயேசுவை மகிமைப்படுத்தினார், The God of Abraham, Isaac and Jacob, the God of our fathers, has glorified his servant Jesus. குர்ஆன் 3:84- "அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்ற ையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Thasneem Thasneem
 
Thasneem Thasneem பைபிள் வாக்கு மூலம் இயேசு யார் பாவத்தையும் சுமக்க வரவில்லை என்று...!!!!!! மத்தேயு-12 அதிகாரம் _______________ _______________ __________ 36. மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். But I say unto you, That every idle word that men shall speak, they shall give account thereof in the day of judgment. கலாத்தியர்-6 அதிகாரம் _______________ _______________ __________ 4. அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க ்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும். But let every man prove his own work, and then shall he have rejoicing in himself alone, and not in another. 5. அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே. For every man shall bear his own burden. எசேக்கியேல் -18 அதிகாரம் _______________ _______________ __________ 20. பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் ராஜாவினுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும். The soul that sinneth, it shall die. The son shall not bear the iniquity of the father, neither shall the father bear the iniquity of the son: the righteousness of the righteous shall be upon him, and the wickedness of the wicked shall be upon him. இந்த மூன்று வசனங்களும் போதும் சுய புத்தி உள்ள ஒருவர் தெளிவு பெற... இயேசு யார் பாவத்தையும் சுமக்க வரவில்லை. அவனவன் செயலுக்கு அவனே பொறுப்பு என்று. Like · Reply · Edit · 1 hour ago Thasneem Thasneem (மோசே,இயேசு,முஹ ம்மத் மூவரின் கர்த்தரும் ஒருவரே) யாத்திராகமம்-3 அதிகாரம்6. பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான். Moreover he said, I am the God of thy father, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob. And Moses hid his face; for he was afraid to look upon God. அப்போஸ்தலர்-3 அதிகாரம் 13. ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய சேவகர் ஆகிய இயேசுவை மகிமைப்படுத்தினார், The God of Abraham, Isaac and Jacob, the God of our fathers, has glorified his servant Jesus. குர்ஆன் 3:84- "அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்ற ையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
 
Thasneem Thasneem
 
Thasneem Thasneem (மோசே,இயேசு,முஹ ம்மத் மூவரின் கர்த்தரும் ஒருவரே) யாத்திராகமம்-3 அதிகாரம்6. பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான். Moreover he said, I am the God of thy father, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob. And Moses hid his face; for he was afraid to look upon God. அப்போஸ்தலர்-3 அதிகாரம் 13. ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய சேவகர் ஆகிய இயேசுவை மகிமைப்படுத்தினார், The God of Abraham, Isaac and Jacob, the God of our fathers, has glorified his servant Jesus. குர்ஆன் 3:84- "அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்ற ையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard