New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புத்த தருமத்தின் அழிப்பும் இஸ்லாமும்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
புத்த தருமத்தின் அழிப்பும் இஸ்லாமும்
Permalink  
 



புத்த தருமத்தின் அழிப்பும் இஸ்லாமும்

 

 
is_fascism.gif

இந்த புத்தரை தூக்கில் தொங்க விட்டவர்கள் யார்?
விடை காண பாருங்கள்:
http://video.google.com/videoplay?docid=-6331994107023396223
பௌத்த மதம் அழிந்தது குறித்து அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்கிறார்?
ambedkar.gifbuddha.gif

"இந்தியாவில் பௌத்த தர்மத்தின் வீழ்ச்சிக்கு காரணம் முசல்மான்களின் படையெடுப்பு என்பதில் எவ்வித ஐயமும் இருக்க முடியாது." என்று கூறும் பாபா சாகேப் அம்பேத்கர் மேலும் தெள்ளத்தெளிவாக கூறுகிறார் "இஸ்லாம் இந்தியாவில் மட்டுமல்ல அது எங்கெங்கு சென்றதோ அங்கெல்லாம் அழித்தது." இக்கொடுமையை அவர் விவரிக்கிறார்,
"முஸ்லீம் படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்ட பௌத்த கலாசாலைகளில் ஒருசிலவற்றின் பெயர்களையாவது கூற வேண்டுமானால் நாலந்தா, விக்கிரமசீலா, ஜகத்தாலா, ஓடந்தபுரி ஆகிய இடங்களில் இருந்து முஸ்லீம் படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டவற்றைக் கூறலாம். முஸ்லீம் படையெடுப்பாளர்கள் நாடெங்கும் இருந்த பௌத்த மடாலயங்களையெல்லாம் அழித்தார்கள். பௌத்த துறவிகள் இந்தியாவிற்கு வெளியே நேபாளம், திபெத் என தப்பி ஓடினார்கள். மிக அதிக அளவில் பௌத்த துறவிகள் முஸ்லீம் தளபதிகளின் நேரடி ஆணைகளின் படி கொல்லப்பட்டார்கள். இசுலாமிய படையெடுப்பாளர்களின் வாளால் பௌத்த துறவிகள் அழிக்கப்பட்டதை முஸ்லீம் வரலாற்றாசிரியர்களே விவரித்து எழுதியுள்ளனர்" எனக்கூறும் அண்ணல் அம்பேத்கர் முடிக்கிறார்: " பௌத்த துறவிகள் மீது இஸ்லாமிய படையெடுப்பாளர்களால் ஏவப்பட்ட வன்கொலைகள் மிகக்கொடுமையானது. கோடாலியின் வெட்டு (பௌத்தம் எனும் மரத்தின்) அடிவேரிலேயே விழுந்தது. பௌத்த துறவிகளைக் கொன்றதன் மூலம் இஸ்லாம் பௌத்தத்தைக் கொன்றது. இதுவே பௌத்த சமயத்தின் மீது இந்தியாவில் ஏற்பட்ட மிகக் கொடுமையான அடியாகும்." (பாபா சாகேப் அம்பேத்கரின் எழுத்து தொகுப்பு பாகம்-2 பக். 229-38)


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பௌத்த தர்மத்தை அழிக்கும் இஸ்லாமிய ஆதிக்கம்-2

 

 
blood1.gif

"அந்த பௌத்த விகாரம் மலை சிகரத்தில் அமைந்திருந்தது, அந்த இடத்தை அடைந்த படையினர் அங்கிருந்த பெயர் தாங்கி நின்ற பலகையை அழித்தனர். படைதலைவர் ரஷீத்தினால் பௌத்த விகாரத்தின் உச்சியில் பறந்த தருமக் கொடி உடைத்தெறியப்பட்டது. பௌத்த துறவிகள் தங்கியிருந்த மடாலயம் தீ வைக்கப்பட்டது. மறுநாள் உள்ளூர் பௌத்த திருவிழாவிற்கு அந்த மடாலயத்திற்கும் விகாரத்திற்கும் மக்கள் எவரும் வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. அங்கு வழிபாட்டுக்கு நுழைந்த பெண்கள் தரதரவென வெளியே இழுத்து தள்ளப்பட்டனர். இரு பௌத்த வழிபாட்டாளர்கள் அங்கிருந்த தூணில் பிணைக்கப்பட்டனர். விகாரத்தின் நிலத்தில் ஒரு படைமுகாம் அமைக்கப்பட்டது. அங்கிருந்த விகாரத்தினை தகர்க்க படைவீரர்கள் முயற்சித்தனர். ஆனால் எல்லாவற்றையும் மீறி எதிர்ப்பு அதிகமாகவே அது சாத்தியப்படவில்லை. என்றாலும் பௌத்த விகாரத்தின் இடத்திலிருந்து படைகள் இன்னமும் நகரவில்லை."


மேலே கூறிய வர்ணனை எந்த மத்தியகால இஸ்லாமிய படையெடுப்பின் போது நிகழ்ந்ததென கூறமுடியுமா?

  • 1. முகமது கஜினி காந்தாரம் வழியாக வந்த போது (980களின் போது)
  • 2. பக்தியார் கில்ஜி நாலந்தா பல்கலைக்கழகத்தை எரியூட்டிய போது (1193)
  • 3. அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பின் போது (1297)

மன்னிக்கவும் எதுவுமே சரியான விடை அல்ல

இது நிகழ்ந்தது மே 27-28 2003 அன்று. பங்களா தேஷில் ஜும்மா பௌத்த வனவாசிகள் வாழும் ஃபாலி தாங்கியா மலை பகுதியில்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard