ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு:
ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு: பி. கே. குன்ஹாலிக்குட்டி என்பவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் முக்கியமான தலைவர். அவர் இப்பொழுது மற்றொரு குற்றச்சாட்டிற்குட் பட்டுள்ளார். ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு கேரளாவில் மிகவும் பிரசித்தியானது. கோழிக்கோட்டில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் பார்லர் விபச்சாரத்தின் திரையாக உபயோகப்பட்டு வந்தது. இங்கு வரும் இளம்பெண்களை மயக்கி, விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தனர். அவ்வாறு பாதிக்கப் பட்ட பெண் ஒருத்தி கொத்தமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்ததால், இது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு என்றும் அழைக்கப் படுகிறது[1]. அதுமட்டுமல்லாத அந்த பாதிக்கப் பட்ட பெண் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பாலில் புணர்ச்சிகளுக்குட் பட்டு, கொத்தமங்கலத்தில் ஒரு வீட்டில் கிடந்தாள். அக்டோபர் 5, 1997 அன்று ஒரு இளம்பெண் தன்னை பலர் பாலியல் ரீதியில் வன்புணர்ச்சியில் ஈடுபட்டனர் என்று புகார் கொடுத்தாள். அதன் பிறகு அவள் அடையாளங்க்காட்டிய 43 பேர் குற்றஞ்சாட்டப் பட்டு, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அந்த ஏழுபேர்களில் ஒருவர் தான் இந்த குன்ஹாலிக்குட்டி(Kunhalikutty).