New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழர் சமயம்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: தமிழர் சமயம்
Permalink  
 


kamba ramayan20120403a_010101013



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Largest Iskcon temple in TN comes up in Chennai 

B Sivakumar TNN 

Chennai: A large Krishna temple on two acres of land at Akkarai village,off East Coast Road,near Sholinganallur will be opened on April 26.Constructed by the International Society for Krishna Consciousness (Iskcon ),the temple will be consecrated on the same day.
Construction of the complex,called Centre for Spiritual Art and Culture,began in 2003.We bought six acres of land and built the temple on two acres.The temple will have three shrines, said R Subramanian,ISKCON communication representative.
The 6,000 sq ft prayer hall will be on the first floor,while the auditorium will be on the ground floor and the prasadam distribution hall in the basement.Of the three shrines one will be for Krishna,Rukmini and Sathyabhama;another for Chaitanya,Nityananda and Jagannath;and,the last for Baladev and Subhadra.While most of the idols are 4ft tall marble statues from Jaipur,a few were made of wood in Odisha.The construction is almost complete and preparations are on for the consecration.This is the biggest ISKCON temple in Tamil Nadu, said Subramanian.The organisation has temples in Madurai,Vellore and a few other places.
The temple is blend of different styles of architecture,including Pallava,but the dominant influence is north Indian.Bhanu Swami,Japanese by birth and associated with Hare Krishna movement for 40 years,is supervising the construction.
The rituals will be done as per the Srimad Bhagavatham,a religious treatise on Lord Krishna,said a devotee.The temple will open at 4.15am and close at 12.30pm.It will be open again at 4.30pm and close at 8.30pm.The administration plans to conduct summer camps,painting competitions and debates for school and college students.
Devotees of the ISKCON temple in Chennai have enlisted 8,000 life patrons and it is with their support the temple has been completed,says Subramanian.
sivakumar.b@timesgroup.com

Pc0071200.jpg 
WONDER STRUCTURE: The Krishna temple is under construction and will open on April 26 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

States largest temple bell to chime in Trichy soon 

K A Shaji TNN 

Erode: The largest temple bell in the state,weighing more than 1.5 tonnes,will be ready to ring in two months at the premises of Ugrakaliamman Temple at Thennur near Trichy.
The brass bells sound will be heard within a 20km radius.Over two dozen artisans from Kumbakonam and Thanjavur will work with award winning sculptor L Radhakrishnan in Erode city round the clock to get the bell ready by the last week of May.
The wooden mould has been made and works regarding its replica was completed on Monday.Sculpting of the brass bell began on Tuesday.It will be transported to Trichy by the first week of June.
According to Radhakrishnan,the bell will be six feet in length and the estimated cost is more than Rs 20 lakh.
Most temple bells in the state weigh less than a tonne.It has been my long cherished dream to make the states largest bell, says Radhakrishnan,who has made more than 300 huge temple bells.
Though most temples in Tamil Nadu are located in the Thanjavur-Kumbakonam belt,the bell manufacturing business has remained in Erode for the last several centuries.However,due to manpower shortage I had to depute artisans from Kumbakonam and Thanjavur, says Radhakrishnan.

Pc0091500.jpg 
LOUD AND CLEAR: The sound of the brass bell will be heard in a 20km radius 
 






__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

pitchandarar 05_04_2012_101_007



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

mayilai 63var 20120405a_003101005



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

mayilai kabali 63var 05_04_2012_101_006



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Kabali kalvettu06_04_2012_101_031



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Temple bells to ring in Hanuman Jayanti 

Bella Jaisinghani TNN 

Mumbai: Temple bells will peal joyfully at the sunrise hour on Friday as lakhs of devout Hindus celebrate the birth of Lord Hanuman.The avatar of Lord Shiva is worshipped with offerings of sesame oil,banana,blue flowers and vermilion.
Goswami Tulsidas Hanuman Chalisa narrates the various episodes that exemplify the singular devotion showed by the monkey god for his master,Ram.
After the battle of Lanka was won and the demon king,Ravan,was slain,it was time for Rams coronation in Ayodhya.Each of the generals in battle had received prizes and honour when Sitas attention was drawn to Hanuman who stood silently by.Urging him forward,she gave him her own necklace made of the choicest pearls.However,to her astonishment,Hanuman began to take it apart with his teeth,breaking open each pearl,peering closely,then casting it aside with a look of disappointment.
When she asked why,Hanuman said he was seeking the image of his beloved Ram inside them but because he saw nothing,they became worthless.A sharp courtier interjected to ask if Hanuman saw Ram within himself.To everybodys amazement,the monkey king rended his chest to show the image of Ram and Sita embedded in his heart.
It is this supreme love that holds devotees in thrall to this day.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Mayilai 20120407a_004101010



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

sriranga m07_04_2012_011_022



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Arjun Hanuman temple 161515906_2



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Narayanasamy in temple 1624631



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Tamil New year 163753781



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Nandam bakkam muniswarar 09_04_2012_101_038



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Thiruthan i10_04_2012_103_047



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Trirupathi 142529921_1



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Iskon 09_04_2012_006_046



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Tiruparangundram 09_04_2012_003_017



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Tamil Bakthi 09_04_2012_006_043



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Bannariamman 20120411a_005101010



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

new year 14_04_2012_007_015



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

New year 20120414a_007101008



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

new year tamil temples 18517734



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Hindu social work 151423812_1



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

temple-16_04_2012_006_041.jpg Temples 16_04_2012_154_010



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

HC says art of living can save marriages,slams live-ins 

Rosy Sequeira TNN 

Mumbai: Instead of live-ins,the institution of marriage should be preserved in India,the Bombay high court said on Wednesday,adding that there should be art of living in family life so that marriages can be saved.
A division bench of Justice P B Majmudar and Justice Anoop Mohta was hearing cross appeals filed by Kalachowki residents Anil,50,and Shraddha Mane,38.Shraddha challenged the family courts January 19,2012,order granting divorce to Anil on ground of cruelty and desertion and directing him to pay monthly maintenance of Rs 7,500.She urged for restitution of conjugal rights.Anil challenged the maintenance part,saying he was willing to pay for their daughter but not Shraddha as she is a computer engineer and could earn for herself.
The judges rued that rising divorces were eroding the institution of marriage.Going by the rate of the cases,we are getting,marriage as an institution will be abolished in 10-15 years.The tolerance level of people has gone down, said Justice Majmudar.
The judges said if traditional marriage is abolished,live-ins will get a boost.Livein relationships should not mean the traditional marriage system in India is given the go-by.Marriage is instituted so that people can live in civilized society.Or else,it will be rule of the jungle, said Justice Majmudar.The judges asked Anils advocate if there was hope of a settlement and were informed that Anil was unwilling.He said Shraddha had questioned Anils paternity and made allegations against his family.The judges said parties should take care before making allegations.(Names changed to protect identity)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 sithirai 18_04_2012_153_016



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Thiruvotriyur 2331312_1



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Kabali 17_04_2012_101_003



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Iskcon 7729906_1



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Mathuranthakam sivalingam 23_04_2012_155_038



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஜகம் நீ... அகம் நீ..! - 5

 

 

1.jpg
சிகாகோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான மில்டன் சிங்கர் என்பவரும் மகாபெரியவாளை தரிசித்துள்ளார். அந்தச் சந்திப்பு குறித்து சிகாகோ பல்கலைக்கழக வெளியீடான, 'ஒரு மிகப்பெரிய பாரம்பரியம் நவீனமயமாகும்போது, இந்திய நாகரிகத்தின் அணுகுமுறையில் ஒரு வரலாற்று ஆய்வு’ (When a Great Tradition Modernizes: An Anthropological Approach to Indian Civilization, University of Chicago) என்ற தொகுப்பிலும் குறிப்பிட்டுள்ளார் மில்டன். இந்தத் தகவலை சங்கர பக்தஜன சபா செயலர் வைத்தியநாதன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
மில்டன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
நான் சென்னைக்கு 1954-55 வாக்கில் வந்தபோது, பலரும் சங்கராச்சார்யர் சுவாமிகளைப் பற்றி நிறையத் தகவல்கள் தந்தனர். அதில் அவரை விமர்சித்தவர்களும் உண்டு. ஆனால், இரு சாராருமே அவர் அசாதாரண இடத்தை வகிப்பவர் என்றே கூறினர். என்னைப் பொறுத்தவரையிலும் அவரைச் சந்தித்ததும் உரையாடியதும் என் மனத்தில் நீங்கா இடம்பெற்றுவிட்டன.ஓர் அமெரிக்கனான எனக்கு, ஓர் ஆசிரமத்தின் மரத்தடியில் அமர்ந்திருக்கும் சந்நியாசி ஒருவருடன் தரையில் அமர்ந்து பேசுவதில் ஓர் ஈர்ப்பு இருப்பதாகப்பட்டது. என்னுடன் வந்தவர்கள் தரையில் விழுந்து அவரை வணங்கினார்கள்.சனாதன ஹிந்து தர்மம் குறித்து இரண்டு வருடங்கள் நான் படித்துத் தெரிந்துகொண்டதைவிட, அவருடனான உரையாடலில் இருந்து நிறைய தெரிந்து கொண்டேன். அவர், அமெரிக்க இந்தியர்களின் பழக்கவழக்கங்கள், உணவுமுறை, சரித்திரம் எல்லாவற்றையும் என்னிடம் கேட்டார். அவருடைய மனம் வெகு தெளிவாக இருந்தது. அவரிடம் நடத்திய பேட்டியை விடவும், அவரே சுவாரஸ்யமாகத் தெரிந்தார். ஹிந்து மதக் கோட்பாடுகள் தனித்துத் தெரிவதற்கு அதன் கொள்கைகளோ, அதன் அடிப்படைகளோ அல்லது ஆசாரங்களோ காரணம் அல்ல என்றார்.சமீபகாலமாக இந்தக் கொள்கைகள் எல்லாம் நீர்த்துப் போயிருப்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டினாலும், ஆன்மிகப் பற்றுக்கொண்ட பிராமணர் அல்லாதவர்கள், பிராமணர்களுடன் கைகோத்துக் கொண்டு செயல்படுவதைப் பார்க்கையில், ஹிந்து மதத்துக்கு நல்ல எதிர்காலம் இருப்பது தமக்கு புலப்படுவதாகக் கூறினார்.
ஹிந்து மதத்தின் எதிர்காலம் குறித்து சுவாமிகள் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தாலும், புத்துணர்ச்சிமிக்க அவரது உரையாடலும், மெலிதான நகைச்சுவையும், அவரது பற்றற்ற துறவு வாழ்க்கையும் வித்தியாசமாக இருந்தன. அவரை எல்லோரும் மடத்தில் வந்து பார்க்கவேண்டும் எனும் கட்டாயம் உண்டா எனக் கேட்டேன். சங்கர மடத்தைப் பொறுத்தவரை அப்படி கடுமையான நெறிமுறை எதுவும் இல்லை என்றார். ஒரு கட்டத்தில் திராவிட இயக்கம் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, 'தென்னிந்தியக் கலாசாரம் பற்றி நீங்கள் நடத்த விரும்பும் ஆய்வு, அந்த இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவரையாவது பார்த்துப் பேசாவிட்டால், முழுமை ஆகாது!’ என்று ஆலோசனை கூறினார்.இந்தியாவுக்கு வருமுன், பண்டைய ஞானிகளின் ஆன்மிகத் தாக்கம் பற்றிப் படித்திருந்தாலும், அது பழங்கதை என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், இங்கே வந்து சங்கராச்சார்யரைப் பார்த்த பின், அது இன்றைக்கும் இந்து மதத்தின் ஆதார சக்தியாக இருப்பதை உணர்ந்துகொண்டேன்.1954-ல் நான் சென்னைக்கு வந்தபோது, பல துறைகளைச் சேர்ந்தவர்களும் சங்கராச்சார்யர் சுவாமிகளைக் குறித்து பாராட்டுதலான செய்திகளையே தெரிவித்தார்கள். அப்போது சென்னைப் பல்கலைக்கழக சம்ஸ்கிருத பேராசிரியர் டாக்டர். வே.ராகவன் அவர்களிடம், பெரியவாளுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யமுடியுமா என்று கேட்டுக்கொண்டேன். அவர்தான் ஆசிரமத்தில் அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். சுவாமிகளின் அறிவாற்றலும், இந்தியாவின் வறுமைப் பிரச்னை பற்றிய சிந்தனைகளும், தொழில் மேம்பாட்டு முயற்சிகளில் இந்து தர்மத்தின் தாக்கம் பற்றிய கருத்துக்களும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. ஆசிரமத்தின் மரத்தடியில் அவரைச் சுற்றி அமர்ந்திருந்தோம்.அவரது சீடர்களும் எங்களுடன் அமர்ந்திருந்தார்கள்.
இந்தியாவின் வறுமையை ஒழிக்க, நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் தானமாகக் கொடுக்கலாம் என்றார். சமூக நலன் சார்ந்த செயல்கள்,
ஐந்தாண்டுத் திட்டங்கள் எல்லாம் மேலும் உதவும் என்றார். அவை தவிர, இது வெறும் பொருளாதாரப் பிரச்னை மட்டும் அல்ல, ஆன்மிகம் சார்ந்த பிரச்னை என்றார். பிராமணர்களும் தொழிலாளர் வர்க்கமும் ஆடம்பர வாழ்க்கைக்கும் அயல்நாட்டுப் பொருள்களுக்கும் ஆசைப்படுவதை விட்டுவிட்டு, பாரம்பரியமான குடும்ப நடைமுறைக்கேற்ற எளிமையான வாழ்க்கை வாழ முடியுமானால், இடைப்பட்ட இரண்டு வர்க்கத்தினரால் நமது நாகரிகத்தை வளமாக்கி சிறப்பாக நிர்வாகம் செய்ய இயலும் என்றார்.
 
சாதி, சடங்குகள் மற்றும் ஏனைய லௌகீக விஷயங்கள் குறித்த விமா¢சனங்கள்... சரித்திர ரீதியாகக் கூறப்படுவதெல்லாம் சரியானதாக இருக்க முடியாது என்றார். ஏனெனில் இந்தியர்கள் சுறுசுறுப்பானவர்கள்; எத்தனையோ போர்களைச் சந்தித்தவர்கள்; யதார்த்த மானவர்கள்; பல கலைகளை அறிந்தவர் கள்; உலகம் அநித்தியமானது என்பது தத்துவ ரீதியான ஒரு கருத்து என்பதை அறிந்தே இருக்கிறோம். அதற்காக நாம் செய்ய வேண்டிய செயல்களில் ஈடுபடாமல் இருந்துவிடுவதில்லை. உணவை உட்கொண்டால்தான் உயிர்வாழ முடியும் என்பதை நம்புகிறோம். அதனால்தான் உணவு உட்கொள்வதை நாம் நிறுத்திவிடவில்லை. ஹிந்து தர்மத்தின் எதிர்காலம் இனி இம்மாதிரி பழம் சிந்தனைகளை நம்பி இல்லை. ஹிந்து தர்மம் அதன் சமூக அஸ்திவாரத் தில்தான் நிலைத்து நிற்கும். எப்படித் தெரியுமா? பிராமணர் அல்லாதவரும்கூட தமது பாரம்பரியக் குடும்பப் பழக்கவழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் போதும். அந்த அஸ்திவாரம் நிலைத்து நிற்கும். அப்படித் தொடர்ந்து செய்யப்படுமானால், ஒரு தொழிலதிபர்கூட சிறந்த ஹிந்துவாக இருக்க முடியும் என்றார்.
மகாசுவாமிகளுடைய சொந்த வாழ்க்கையைப் பொறுத்தமட்டில், அவர் எளிமையான உணவே உட்கொள்கிறார். அதிலேயே அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். அவர் நூறாண்டுகள் வாழ்வதைக் கொண்டாடும் சமயத்தில், யார்தான் இதைச் சந்தேகிக்க முடியும்?!
- என்கிறது மில்டன் சிங்கரின் அந்தக் கட்டுரைக் குறிப்பு!


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திருவாசகம்: கண்ணப்பன் ஒப்பதோர்...


Vishnu Temple, Parakkai, Kanyakumari district

கண்ணப்ப னொப்பதோ
ரன்பின்மை கண்டபின்
னென்னப்ப னென்னொப்பி
லென்னையுமாட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வாவென்ற வான்கருணைச்
சுண்ணப் பொன்நீற்றற்கே
சென்றூதாய்! கோத்தும்பீ!

[கண்ணப்ப நாயனார் தூண் சிற்பம்; விஷ்ணு கோவில் உட்பிராகாரம், பறக்கை கிராமம், கன்னியாகுமரி மாவட்டம்]



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Meenakshi 04_05_2012_005_008



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Kazzazagar 03_05_2012_005_027



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Surprise find links city temple to Pallava era 

M T Saju TNN 

Chennai: A beautiful sculpture,perhaps the only material evidence to prove that the famous Kapaleeswarar temple in Mylapore was built by the Pallavas,has been found abandoned below a tree near the temple tank.The 8th century sculpture of Jyeshthadevi,considered to be the elder sister of Goddess Lakshmi,was found with its lower portion buried under the earth.
P D Balaji,head,department of ancient history and archaeology,University of Madras,said he noticed the sculpture lying abandoned when he went to see the annual float festival a couple of months ago.I was taking a walk around the temple tank when I noticed this abandoned sculpture.The lower portion of it was fully buried under the earth.On a closer look,I saw that it was a beautiful Jyeshtha image,flanked by a male figure with bovine head on her right and a female figure on her left.The iconographical features show that it belongs to the 8th century AD, he said.
It is believed that Saiva saint Thirugnanasambandar,who lived during 6-7 th century AD,came to the temple and composed hymns in praise of the presiding deity.Even though the temple was in existence during the time of the Pallavas,there is unfortunately no vestige or sculptures inside it dating back to that period,as it underwent reconstructions and renovations at different points of time.Jyeshthadevi was once worshipped as one of the ashtaparivaradevatas in temples.You can see many sculptures of Jyeshthadevi in the Kailasanathar temple in Kancheepuram.Her image could also be seen in the early Pandya rock-cut art.But by the end of 11th century,due to some unknown reasons,the worship was stopped and the images of Jyeshtha were thrown out of the temples.The Jyeshthadevi must have faced the same fate, said Balaji.
Though this image was examined by archaeologist T A Gopinatha Rao in 1914 and included in his book Elements of Hindu Iconography, the sculpture got buried in passage of time.
mt.saju@timesgroup.com

Pc0071700.jpg 
BLAST FROM THE PAST: The Jyeshthadevi sculpture was found half-buried near the Kapaleeswarar temple tank 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Funds crunch blocks rebuilding of buried Pallava temple near Kanchi 

M T Saju TNN 

Chennai: A year ago when a team of heritage enthusiasts tried to excavate a Pallava-era temple at Kidangarai in Kancheepuram district,they first wanted to cut down twin tamarind trees which stood on the site.But the villagers were against the move.The trees,according to them,were gods Indran and Chandran.Soon a devaprasanam,an occult consultation,was organized and this revealed there was no objection to their removal.
The site is off the Salavakkam-Thirumukkudal triangular road.The excavation,led by the REACH Foundation head T Sathyamurthy,began with many surprise findings.A neatly constructed basement wall made of bricks was excavated first followed by a Pallava-era Chandikeswara sculpture.The presence of a Shivalingam and Nandi at the site led the team to conclude that there was a temple beneath.The trees must have grown after the temple was covered under mud years ago.The basement was very strong.But still we waited for a strong proof.Luckily,we found the lingam and a sculpture of Nandi at the same site.This clearly showed that the ruined structure was where a temple once existed, said J Chandrasekaran,a member of the excavation team.
The Lord is named Runahara Iswar,which means one who removes debts.The two ponds nearby were revealed as Runahara Theertham and Danaagarshana Theertham.It is believed that a dip in one pond will rid debts and a dip in the other will help beget wealth.The rare idols are now kept in a thatched shed in the premises.The cost of rebuilding the temple is estimated at Rs 10 lakh,but lack of funds poses a stumbling block to the renovation plan.
We have now completely excavated the basement of the old temple which was buried for years.Since the temple doesnt belong to the Hindu religious and charitable endowments department or the Archaeological Survey of India,nobody is there to take care of it.The villagers are interested,but they dont have money, said Chandrasekaran.Since the basement of the Pallava-era temple is strong,its easy to rebuild the temple,according to architects.Finding a basement made of country bricks like this is rare.So when a plan is there,there wont be any problem working on it, Chandrasekaran said.
The villagers also want to see the temple in its old form.We didnt know that a temple existed there.What we did was to offer prayers to the twin trees.Now we are happy to know more about the Pallava-era temple.We want to see it rebuilt, said Muniyappan,a villager.


Pc0081900.jpg 

Pc0082000.jpg 
THE HIDDEN TREASURE: (Left) A Shivalingam found hidden between two trees;(above) an idol excavated at Kidangarai village near Kancheepuram 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Man donates 1.5cr gold to Kanchi temple 

Chennai: Adevoteeon Saturdaydonated gold jewels worth 1.5 crore to the Varadaraja Perumal Temple in Kancheepuram.The centuries-old temple is one of the 1,008 Vishnu temples.Temple authorities said the gold jewels weighed around 5kg.S Narayanan,a businessman in Chennai,donated a conch,a chakram and other ornaments made of gold, said V Sundaramoorthy,assistant commissioner of thetemple.
This is the second time in the last one year that the temple has got such a huge donation.In September 2011,a devotee donated a sheet of silver for the temples main door.The sheet was bereft of embellishments.But when the temple opened the next day morning,it was found with a symbol of the vadagalai sect,leading toobjectionsfrom thethengalaisect.
I am an ardent devotee of the presiding deity of the temple.I was planning to donate gold for a temple tower.But another devotee donated the required gold.Therefore,I donatedornaments, saidN arayanan.TNN


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Temples 22_06_2012_151_002



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Hindu Marriage20120617a_005101010



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

US OM Yoga 24_06_2012_412_010



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Vialngattukuppam temple 24_06_2012_004_002



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

vellore kottai silaikaL 17252115



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நான்மறை சொல்லினும் மெய்தனை அறி? என்ற தலைப்பில் சிறகு இதழில் பெரியண்ணன் சந்திரசேகரன் எழுதிய கட்டுரையை வாசித்தேன். வேதங்களைப்பற்றிய ஒரு கறாரான கட்டுரை. http://www.jeyamohan.in/?p=27410

வேதங்களைப்பற்றி நம்மிடையே எழுதப்படும் சாதக பாதக விமர்சனங்களில் பெரும்பகுதி வேதங்களைப்பற்றிய பிரமைகளில் இருந்து எழக்கூடியவை. வேதங்களில் இல்லாதது இல்லை, உலக ஞானத்துக்கே அவைதான் அடிப்படை, அவை மாபெரும் தத்துவக் களஞ்சியங்கள் என்றவகையிலே ஒரு தரப்பு எழுதிக்கொண்டிருக்கும். அதற்கு மாறாக வேதங்கள் சாதியவெறுப்பை உருவாக்கும் பார்ப்பனியக்குப்பைகள் என்ற கருத்து சொல்லப்படும்

தமிழில் வேதங்கள் கிடைக்கின்றன. ஜம்புநாதன் மொழியாக்கம்செய்த வேதங்களை ஒரு வாசகன் வாசித்தால் நேரடியாக சம்ஸ்கிருதம் படித்த நிறைவை அடைவான் – ஒன்றும் புரியாது. எழுவாய்பயனிலையைக்கூட கவனத்தில் கொள்ளாத மொழியாக்கம். ‘கண்ராவி’ என்ற சொல்லின் அர்த்தம் எனக்குத் தெரியாது. அச்சொல்லை அம்மொழியாக்கத்துக்குப் பயன்படுத்தலாமென உறுதியாகச் சொல்வேன்.

வேதங்கள் உண்மையில் என்ன வகையான நூல்கள்? வேதங்களைப்பற்றி இந்து மரபில் மூவாயிரம் வருடங்களாக இருந்து வரும் பெருமிதமும் அவற்றுக்கு சுருதிகள் என்ற வகையில் முக்கியத்துவமும் சரியானவைதானா?

பெரியண்ணன் சந்திரசேகரன் வேதங்களுக்கு அளிக்கப்பட்டுவந்த அதீத முக்கியத்துவம் என்பது அவற்றை அவற்றின் ஆதரவாளர்களல்லாதவர்கள் பயில வாய்ப்பில்லாத நிலையில் அவற்றின் தொன்மை காரணமாக உருவான பிரமையே என்று சொல்கிறார்.

வழக்கமாக இவ்வகை நிலைப்பாடு கொள்பவர்கள் சட்டென்று அடுத்த கட்டத்துக்குச் சென்று எல்லாம் பார்ப்பன சதி என்று சொல்லி விடுவார்கள். அதை இவர் செய்வதில்லை என்பதே இக்கட்டுரையின் சமநிலைக்கு ஆதாரம் என நினைக்கிறேன். வேதங்களைத் தொன்மையான பண்பாட்டுக்கருவூலங்கள், தென்னகப்பண்பாட்டின் கூறுகளையும் உள்ளடக்கியவை என்று அவர் சொல்கிறார்.

வேதங்கள் எவ்வகை நூல்கள்? ஏன் அந்த முக்கியத்துவம் அவற்றுக்கு வந்தது? அந்த முக்கியத்துவத்துக்கான அடிப்படை அவற்றில் உண்டா? சுருக்கமாகச் சொன்னால் என்னுடைய விளக்கமாக இப்படிச் சொல்வேன்.

வேதங்கள் இந்து ஞானமரபின் வைதீகத்தரப்புகளுக்கு சுருதிகள். சுருதி என்ற சொல்லை மூலநூல் canon பொருளில் பயன்படுத்துவதே உகந்தது. ஆனால் செவ்விலக்கியம் classic என்ற பொருளிலும் பயன்படுத்தலாம்.

செவ்விலக்கியம் என்பது அந்தப்பண்பாட்டில் பின்னர் உருவான அனைத்து சிந்தனைகளுக்கும் அழகியலுக்கும் தொடக்கப்புள்ளிகள் கொண்ட ஒரு தொன்மையான இலக்கியத்தொகை. அது அந்தப்பண்பாட்டின் விதைநிலம்.

தமிழில் சங்க இலக்கியங்களை செவ்விலக்கியம் என்று சொல்லலாம். இன்றுவரை தமிழில் உருவான எல்லா இலக்கிய எழுச்சிகளுக்கும் அதில் தொடக்கத்தைக் காணமுடியும். தமிழ்ப்புதுக்கவிதைக்குக்கூட சங்க இலக்கியமே தொடக்கம் என்று பிரமிள் எழுத்யிருக்கிறார்.

செவ்விலக்கியம் என்பது இலக்கிய உச்சம் அல்ல. அதன் பெரும்பகுதி இலக்கியரீதியாக பொருட்படுத்தக்கூடியதாக இருப்பதில்லை. அது தொன்மையான பழங்குடிவாழ்க்கையில் இருந்து இலக்கியம் முளைவிட்டபோது உருவான முதல் வடிவம் அவ்வளவுதான்.

ஆகவே பழங்குடி வாழ்க்கையில் உள்ள எல்லாமே அதில் இலக்கியமாக மாறியிருக்கும்.தண்ணீர் பட்டதும் மண்ணில் உள்ள எல்லா விதைகளும் முளைப்பது போல. அதிலிருந்து தேவையானவற்றை மட்டுமே அடுத்தடுத்த தலைமுறைகள் வளர்த்தெடுத்துக்கொள்கின்றன.

ஒரு வகையில் செவ்விலக்கியத்தை ஒரு பண்பாட்டின் ஆழ்மனம் என்று சொல்லலாம். அங்கே இருப்பவற்றை அவ்வப்போது அப்பண்பாடு கனவுகளாக க்ண்டுகொண்டிருக்கிறது. மறு ஆக்கம்செய்து நனவாக்கிக்கொண்டிருக்கிறது.

வேதங்கள் அத்தகையவை. வேதங்களைப்பற்றிய ஒரு கட்டுரையில் ஷெர்பாட்ஸ்கி அவற்றை தொல்பிரதிகள் [primitive texts] பண்படாபிரதிகள் [savage texts] என்று சொல்வதை வாசித்து அதிர்ந்ததை நினைவுகூர்கிறேன். ஆனால் பின்னர் அந்த விவரணை மிகச்சரியானது என புரிந்துகொண்டேன். அது ஓர் எதிர்மறைக்குறிப்பல்ல.

பண்பாடு என்னும்போது நாம் உத்தேசிப்பது ஒரு மக்கள்தொகுதி காலப்போக்கில் உருவாக்கிக்கொண்டுள்ள ஞானத்தொகுதியைத்தான். பண்படுதல் என்பது அந்த ஞானத்தொகுதியுடன் கொள்ளும் இசைவு மட்டுமே. அந்த ஞானத்தொகுதி உருவாவதற்கு முந்தைய நூல்களையே தொல்பிரதிகள் பண்படாபிரதிகள் என்கிறோம்.

பண்பாட்டில் பொருந்திய மனம் அனைத்தையும் அது பொருந்தியிருக்கும் பண்பாட்டுச்சூழலின் நீட்சியாகவே அணுகுகிறது. வேறு வழியே இல்லை.ஆனால் பண்படாமனம் பிரபஞ்சத்தின் முடிவின்மையையும் இயற்கையின் பேரழகையும் புத்தம்புதிய கண்களுடன் அணுகுகிறது. புத்தம்புதிய தரிசனங்களை நோக்கிச் செல்கிறது.

உலகமெங்குமுள்ள பழங்குடிக்கற்பனைகளில் உள்ள பிரமிப்பூட்டும் கற்பனைவளத்தின் ரகசியம் இதுவே. செவ்வியல் என்பது இந்த ஆதிக்கற்பனைகளின் நாற்றங்கால். ஆனால் பெரும்பாலான பழங்குடிக்கற்பனைகள் இயற்கையை தன்னுடைய வாழ்க்கைக்கு ஏற்ப விளங்கிக்கொள்வதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன. இயற்கையை தன்னை நோக்கி இழுத்துக்கொள்கின்றன. தன்னை இயற்கையையும் பிரபஞ்சத்தையும் நோக்கி விரித்துக்கொள்வதில்லை.

வேதங்கள் அதி உக்கிரமாக தங்களை இயற்கைநோக்கி விரித்துக்கொண்டு பிரபஞ்சதரிசனத்தை சென்றடைபவை. எளியபழங்குடிப்பாடல்களாக ஆரம்பிப்பவை தத்துவத்தளம் நோக்கி விரிந்து என்றுமுள ஞானச்சிக்கல்களை தொட்டு விடுகின்றன. அதுவே அவற்றின் சிறப்பு.

வேதங்களில் முதன்மையானதும் மூத்ததுமான ரிக்வேதத்தையே உதாரணமாகக் கொள்ளலாம். அதன் ஆரம்பப்பாடல்கள் மிக எளிமையான பிரார்த்தனைகள். முதலில் அப்பாடல்களில் இயற்கைச்சக்திகள் நேரடியாகவே அடையாளம் காணப்படுகின்றன, அவற்றை நோக்கி பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன

ஆனால் அடுத்தகட்டத்தில் அந்த இயற்கைச்சக்திகள் குறியீடுகளாக ஆகின்றன. ஒரு பருப்பொருளை குறியீடாக ஆக்கிக்கொள்வதன் பரிணாம மாற்றம் என்பது மிகமிக வியப்புக்குரியது. பருப்பொருள் என்பது திட்டவட்டமாக அறியப்படுவது. குறியீடு என்பது நுண்மையானது, பல அர்த்தங்கள் நோக்கி விரியக்கூடியது

தீ என்ற பருப்பொருளை ரிக்வேதம் அறியும் விதத்தை மட்டுமே வைத்து இதைப்புரிந்துகொள்ளலாம். தீ முதலில் பருப்பொருளான ஒன்றாக அறியப்படுகிறது. பின்பு அதன் குணங்களே தீ என குறிக்கப்படுகின்றன. ஒளியும் வெப்பமும் நிறமும் எல்லாம் ஒன்றா ச் வெஇரு என்பது பற்பல நெருப்புகளாக மாறுகிறது. ஒளியும் வெப்பமும் செம்மையும் எல்லாமான ஒன்று என அறியப்படுகிறது

மெல்ல தீ ஒரு ஆற்றலாக அறியப்படுகிறது. பின்பு ஓர் இயல்பாக விரித்தெடுக்கப்படுகிறது. பிரபஞ்சவெளி முழுக்க நிறைந்துள்ள ஒரு பெருவல்லமை அது. நீரிலும் தளிரிலும் அது இருப்பதாக உணர்கிறார்கள் வேதரிஷிகள். சொல்லிலும் எண்ணங்களிலும் அதை காண ஆரம்பிக்கிறார்கள்.

அறிதலின் இந்தப்பயணம் மெல்ல மண்ணில் அறியப்படும் அனைத்தையும் பிரபஞ்ச அளவுக்குக் கொண்டுசென்று புரிந்துகொள்ள அவர்களை தூண்டுகிறது. மண், நீர், காற்று அனைத்துமே பிரபஞ்சமளாவிய பொருளில் ஆராயபப்டுகின்றன. காலம் தூரம் ஆகியவை அவ்வாறு அணுகப்படுகின்றன. பசி, ருசி, மூச்சு எல்லாமே பிரபஞ்ச அர்த்ததில் விளக்கப்படுகின்றன

இந்த தளத்தில் எழும் பிரபஞ்சவினாக்களை நாம் ரிக்வேதத்தின் முதிர்வுப்பகுதியாகிய பத்தாம் காண்டத்தில் தொடர்ச்சியாகப் பார்க்க ஆரம்பிக்கிறோம். இன்றைய அறிவியல் பிரபஞ்சம் நோக்கி கேட்கும் கேள்விகள் எல்லாமே அதில் கேட்கப்பட்டுவிட்டன. இன்று நம்மிடம் உள்ள உருவகங்கள் பெரும்பாலும் அங்கேயே உருவாக்கப்பட்டுவிட்டன.

வேதங்கள் பெரும் தொகைநூல்கள். அவற்றின் மிகப்பழைய கவிதையில் இருந்து மிகப்புதிய கவிதை வரைக்குமான காலமென்பது குறைந்தது இரண்டாயிரம் வருடமாக இருக்கலாம். இந்த பெரும் காலவெளியில் மனிதசிந்தனை அடைந்த வளர்ச்சி, தாவல் அவற்றில் பதிவாகி இருக்கிறது. ஆகவேதான் அது எப்போதும் ஆய்வாளர்களை கவர்கிறது

இந்தியமரபில் பின்னர் உருவான சிந்தனைகளைப் பொறுத்தவரை வேதங்கள் அவற்றின் தொடக்கப்ப்புள்ளிகளின் தொகுப்பு. ஆகவே அவற்றை சுருதிகள் என்றார்கள். சுருதி என்ற முக்கியத்துவம் எப்போதும் அந்நூல்தொகைக்கு இந்திய ஞானமரபில் இருந்துகொண்டே இருந்தது.

சுருதி என்றால் முன்னறிவு என்று பொருள். நேர்க்காட்சி [பிரத்யட்சம்] உய்த்தறிவு [அனுமானம்] ஆகிய இரு அறிதல்முறைகளுக்கு நிகரான முக்கியத்துவமுள்ள ஒன்றுதான் முன்னறிவு [சுருதி] வேதங்களை வைதீக மரபுகள் எல்லாம் சுருதி என்று கொண்டன. வேதமறுப்பு சிந்தனைகள் வேதங்களையும் அவற்றைப்போன்ற எல்லா பழைய சிந்தனைகளையும் ஒட்டுமொத்தமாக சுருதி என்றன.

வேதங்களை அணுகுவதில் உள்ள இருவகை பிழைப்போக்குகள் உள்ளன.வேதங்களில் உள்ள எளிய பாடல்களை மட்டுமே எடுத்துக்காட்டி அவை வெறும்பழங்குடிப்பாடல்கள் மட்டுமே என வாதிடுவது ஒன்று. அவற்றில் உள்ள ஞானக்குறிப்புள்ள வரிகளை மட்டுமே சுட்டிக்காட்டி அவற்றை உலகஞானம் அனைத்தும் அடங்கிய பெட்டகங்களாக அணுகுவது.

வேதங்களை இந்தியஞான மரபின் செவ்வியல் பரப்பாக, இவையனைத்தும் உருவாகி வந்த தொடக்கநிலமாக, இந்திய ஞானமரபின் ஆழ்மனமாக , எடுத்துக்கொள்வதே சரியானது.

பெரியண்ணன் சந்திரசேகரன் வேதங்களில் சாபங்கள், அழிவுக்கான பிரார்த்தனைகள் ஆகியவை இல்லை என புறநாநூறு குறிப்பிடுவதைச் சொல்லி, உண்மையில் வேதங்களில் அவை உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். வேதங்கள் மீதான பெருமதிப்பு காரணமாக அவற்றில் இவையெல்லாம் இருக்காது என்னும் பிரமை அக்காலகட்டத்தில் நிலவியது என்கிறார்.

வேதங்கள் அவற்றை பிறர் வாசிக்க வாய்ப்பில்லாத நிலையில் நெடுங்காலமாக இருந்தமையால் இந்த நம்பிக்கை உருவாகி நீடித்திருக்கலாம் என அவர் ஊகிக்கிறார். வேதங்கள் வெறுமே சடங்குகளுக்கான மந்திரங்களாக மட்டுமே நீடித்தன என்றும் ஆகவே அவை நலமளிக்கும் சொற்கள் என்ற அளவிலேயே எண்ணப்பட்டன என்றும் நினைக்கிறார்.

பெரியண்ணன் சந்திரசேகரன் அவர்கள் ‘மக்கள் தத்தம் காலநிலைகளில் நிலவிய கொள்கைகளை நான்மறைகளின்மேல் ஏற்றிப் பேசியுள்ளனர் என்பதனையும் அந்தப் பிழைகளை இனிமேலாவது தவிர்த்து மெய்யினை அறியவேண்டும்’ என்று குறிப்பிடுகிறார். அது உண்மை.

இரு விளக்கங்களை மட்டும் இதைச்சார்ந்து அளிக்க விரும்புகிறேன். ஒன்று, இன்று நாம் வேதங்கள் என்னும்போது உத்தேசிப்பது ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட மனச்சித்திரத்தைத்தான். கீழை ஞான மரபைப்பற்றி பேசும்போது ஐரோப்பியர் வருகைக்கு முன் வருகைக்குப்பின் என பிரித்துக்கொண்டுதான் ஆராயவேண்டும்.

ஒரு கண்ணாடியில் நம்மைப்பார்த்துக்கொள்வதுபோலத்தான் இது. இந்திய ஞானமரபு அதன் தோற்றுவாயில் இருந்து ஐரோப்பியர் வருகை என்ற புள்ளிவரை வந்து அங்கே நின்றுவிடுகிறது. கண்ணாடிப்பிம்பம் கண்ணாடிக்கும் வெகுதூரத்தில் ஆரம்பித்து கண்ணாடிப்பரப்பு வரை வந்து நின்றுவிடுவது போல. நாம் இப்பால் நின்று அதை பார்க்கிறோம். நம் பார்வை நம்மிடம் தொடங்கி அந்த கண்ணாடிப்பரப்பு வரை சென்று தொடுகிறது, அவ்வளவுதான்.

நம்முடைய ஞானமரபுக்குள் நாம் இல்லை. நாம் அதை வெளியே இருந்து பார்ப்பவர்களகாவே இன்று இருந்துகொண்டிருக்கிறோம். அதற்கு அன்னியமானவர்களாகவே இருக்கிறோம். ஆகவே நம்முடையதாக அல்ல ,நம்மால் பார்க்கப்படுவதாகவே அது உள்ளது. நம்முடைய நேர் எதிர் பிம்பமாக , இடவலம் திரும்பியதாக தெரிகிறது.

இந்திய சிந்தனை மரபுக்கு ஒரு பரிணாமத் தொடர்ச்சி இருந்தது. அது அறிந்து நிலைத்து செயலற்றுவிட்டபின் ஐரோப்பியர் அவர்களின் அறிவுக்கருவிகளைக் கொண்டு அவற்றை கண்டுபிடித்து மீட்டு கட்டி எழுப்பினார்கள். அந்த ஐரோப்பிய கட்டுமானத்தையே நாம் இன்று இந்தியசிந்தனை என அறிகிறோம்.

ஆகவே நம்முடைய பண்டை நூல்களை புரிந்துகொள்ள நம்முடைய இன்றைய நோக்கில் அவை எப்படி பொருள் கொள்கின்றன என்பது எப்போதுமே உதவாது. அவை அன்று எப்படி அணுகப்பட்டன என்பதை பல்வேரு ஊகங்கள் மூலம் ஆராயவேண்டியிருக்கிறது

நான்கு வேதங்கள் என நமக்கு இன்று கிடைக்கும் நூல்கள் ஐரோப்பியரால் அச்சுக்குக் கொண்டுவரப்பட்டவை. அவர்களுக்கு நூல்பகுப்புக்கு இருந்துவந்த முறைமைப்படி அவர்கள் அவற்றை பகுத்து அச்சாக்கினார்கள். வேதங்களாக இன்று நாம் நினைப்பவை சம்ஹிதைகளை மட்டுமே. சென்றகாலத்தில் வேதங்கள் இப்படி தனியான நான்கு நூல்களாக இருந்ததில்லை.

வேதம் என்பது ஒரு ஒட்டுமொத்த ஞானத்தொகையாகவே சென்றகாலகட்டத்தில் கருதப்பட்டது. மரபான பார்வையின்படி வேதம் என்பது நான்கு பகுதிகளால் ஆனது. சம்ஹிதை, ஆரய்ணயகம், பிராம்மணம், உபநிடதம். இவற்றை பிரித்துப்பார்க்க்கும் வழக்கம் இருக்கவில்லை.

சம்ஹிதைகளை மட்டுமே வேதங்களாகக் கொள்ளவேண்டும் என வாதிட்டு அதை நிறுவியவர் ஆரிய சமாஜத்தின் தலைவரான சுவாமி தயானந்த சரஸ்வதிதான். அது ஐரோப்பிய அரிதல்முறையை அடியொற்றிய ஒரு நோக்கு. இந்திய ஞானமரபில் ஐரோப்பிய பாணியிலான ஒரு மூலநூல் வாதத்தை உருவாக்க முயன்றவர் அவர்.

எல்லா வேதங்களுக்கு கிருஷ்ண விபாகமும் சுக்ல விபாகமும் உண்டு. அதவாது இருண்ட பகுதி , வெண்மையான பகுதி. ரிக்வேதத்துக்கு நான்கு கிருஷ்ண சுக்ல விபாகங்க இருந்தன. யஜூர்வேதத்துக்கு எட்டு. சாமவேதத்துக்கு பத்து . அதர்வ வேதத்துக்கு பத்து. இப்போது யஜுர்வேதத்தின் விபாகங்கள் மட்டுமே அறியப்படுகின்றன.

வேதங்களுக்கு விளக்கங்கள் வேத சாகைகள் எனப்பட்டன. வேதங்களின் கிளைகள். ரிக்வேதத்துக்கு 21 கிளைகள். யஜூர்வேதத்துக்கு நூறும் சாமவேதத்த்க்கு ஆயிரமும் அதர்வத்துக்கு ஒன்பதும் கிளைகள் இருந்தன என்று சொல்லப்படுகிறது.

இதைத்தவிர ஒவ்வொரு வேதத்துக்கும் வேதாங்கங்களும் உபவேதங்களும் உள்ளன. வேத ஞானம் என்பது வேதவேதாங்கஞானம் என்றே சொல்லப்பட்டது. ரிக்வேதத்துக்கு ஆயுர்வேதம் [மருத்துவம்] உபவேதமாகும்ம். யஜூர்வேதத்துக்கு தனுர்வேதம் [ஆயுதஞானம்]. சாமவேதத்துக்கு கந்தர்வ வேதம் [இசைஞானம்]. அதர்வவேதத்துக்கு ஸ்தாபத்யவேதம்[ சிற்பஞானம்].

ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல வேதங்களின் சம்ஹிதைகள் என்பவை ஒரு தொடடக்கம் மட்டுமே. அவற்றில் இருந்து வெவ்வேறு கோணங்களில் விரித்தெடுக்கப்பட்டும் விளக்கப்பட்டும் வளர்ந்துருவானதே வேதஞானம் என்பது.

வேதங்களை மனு தர்ம நோக்கிலும் பிருஹஸ்பதி அர்த்த நோக்கிலும் நந்தி காமநோக்கிலும் பாதராயணன் மோட்சநோக்கிலும் ஜைமினி சொர்க்கநோக்கிலும் விளக்கினார் என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது பலகோணங்களில் விளக்கப்பட்டு வேதத்தொகுதி ஒரு ஞானவழியாக ஆக்கப்பட்டிருக்கிறது

வேதம் எனப்படும் இந்த ஞானத்தொகுதிக்குள்ளேயே வேதங்களைப்பற்றிய விமர்சனங்களும் விலக்கல்களும் ஏற்புகளும் உள்ளன. சாந்தோக்ய உபநிதடம் சாமவேதத்தின் பிராமணமான சாந்தோக்யபிராமணத்தைச் சேர்ந்தது. அது வேதங்களின் சடங்குமரபை மிகக்கடுமையாக விமர்சனம் செய்கிறது. பல உபநிடதங்கள் அதர்வ வேதத்தை முழுமையாக நிராகரிக்கின்றன.

அதாவது வேதம் என்ற சொல்லால் சுட்டப்பட்டது நான்கு சம்ஹிதைகள் மட்டுமல்ல. அந்த சம்ஹிதைகளில் தொடங்கி பல்வேறு நூல்கள் விளக்கங்கள் விவாதங்கள் வழியாக வளர்ந்து திரண்டு வந்த ஒரு ஞானதரிசனத்தையே. வேதங்களை வெறுமே மனனம் செய்து புரோகிதத்துக்கு மட்டும் பயன்படுத்தும் போக்கு பிற்காலத்தில் வந்தது.

எனவே புறநாநூறு வேதங்களைப்பற்றிப் பேசும் காலகட்டத்தில் வேதம் என்ற சொல் நான்கு வேதசம்ஹிதைகளை மட்டும் சுட்டியிருக்காது. இந்த ஒட்டுமொத்தம் ஞானப்பரப்பையும், அதன் சாராம்சத்தையுமே சுட்டியிருக்கும்.

அதாவது புறநாநூறு வேதங்களை ‘தெரியாமல்’ அப்படிச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. வேதங்களை நாம் இன்று பார்க்கும் பார்வையில் அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். வேதத்தை ‘தெரியாமல்’ இருப்பது நாமே ஒழிய அவர்கள் அல்ல. நாம் அவற்றிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறோம், காலத்தால்.

வேதக்கல்வி பிராமணரல்லாதவர்களுக்கு மறுக்கப்பட்டது என்ற வாததை நான் ஏற்கவில்லை. அது உண்மையில் ஐரோப்பியரால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பிதம். இங்கிருந்த மரபுகள் பெரும்பாலும் அழிந்து விட்ட, தொடர்பிழந்து நின்றுவிட்ட காலகட்டத்தில் ஐரோப்பியர் இங்கே வந்தார்கள். அவர்கள் வேதங்களை பைபிள் போன்று இந்துமதத்துக்கான மையநூலாக கருதினார்கள். அவை பைபிள் போல அனைவருக்கும் ஏன் கற்பிக்கப்படவில்லை என்று வியந்தார்கள். அவ்வாறு கற்பிக்கப்படாமல் பிராமணர் தடுப்பதாக ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொண்டார்கள்.

உண்மையில் பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப்பின் வேதஞானம் ஒரு பொதுவான அறிவுவழியாக இல்லாமலாகிவிட்டிருந்தது. சடங்குக்கான மந்திரமாகவே வேதங்கள் எஞ்சின.மந்திரம் என்ற சொல்லுக்கே ரகசியமானது என்றுதான் பொருள். தமிழில் மறை. ஆகவே அவை ரகசியமான சொற்களாக நீடித்தன. ஆனால் அப்போதும்கூட அவை பிராமணார்களுக்கு மட்டுமானவையாக இருக்கவில்லை.

வேதத்தை வேள்விச் சடங்குகளுக்கான மந்திரங்களாக கற்பதற்கு பிராமணர்களுக்கு மட்டுமே அமைப்புகள் இருந்தன, அவர்கள் மட்டுமே அப்படி கற்றார்கள் அவ்வளவுதான். பிறர் அப்படி கற்பது வேள்விகளின் மறைத்தன்மையை இல்லாமலாக்கிவிடும் என்ற நம்பிக்கை இருந்ததனால் பிறர் அவற்றை கற்பது தடைசெய்யப்பட்டது. ஆனால் மற்ற துறையைச் சேர்ந்தவர்கள் அவர்களுடைய துறைசார்ந்த தேவைக்கேற்ப அவர்களுக்கான வேதங்களை கற்றிருக்கிறார்கள்.

உதாரணமாக ஆயுர்வேதம் பயில ரிக்வேத மந்திரங்கள் சிலவற்றையேனும் கற்றேயாகவேண்டும். மருந்துகள் அரைக்கும்போது சொல்வதற்கான மந்திரங்கள் பல பதினேழாம் நூற்றாண்டில்கூட இருந்திருக்கின்றன. அவற்றை கற்பிக்க தனி குருமரபும் ஆசாரங்களும் இருந்தன. அவற்றை சூத்திரர்களும் கற்றிருக்கிறார்கள். சிற்ப சாஸ்திரத்தை பொறுத்தவரை சமீபத்தில் கூட அவர்களின் மரபான கல்வியில் அதர்வ வேதத்தின் சில பகுதிகள் கற்பிக்கப்பட்டன.

கேரளத்தில் ஆசாரிகள் சென்ற தலைமுறையில்கூட அதர்வ வேதத்தின் சில மந்திரங்களை தங்கள் சாதிசார்ந்த ஆசாரங்களில் இருந்து கற்றுக்கொண்டு கடைப்பிடிப்பவர்களாக இருந்தார்கள். இங்கே தச்சு கழித்தல் என்ற சடங்கு இருந்தது. காட்டில் முறித்த மரத்தைக்கொண்டு வீடுகட்டும்போது அந்தக்காட்டுமரத்தில் வாழ்ந்த அமானுட சக்திகள் அதிருப்தி அடைகின்றன எனறு நம்பப்பட்டது. அந்த மூர்த்திகளை அகற்றுவதற்கான இச்சடங்கு நள்ளிரவில் மிக ரகசியமாகச் செய்யப்படும். உயிர்ப்பலி உண்டு. சென்றகாலங்களில் நரபலியும்.

அச்சடங்கு ஒன்றை நானே கண்டிருக்கிறேன். முழுக்க முழுக்க அதர்வ வேத முறைப்படிச் செய்யப்பட்ட அச்சடங்கு கொஞ்சம் கொடூரமானது. அதனுடன் மூத்தாசாரியால் ஓதப்பட்ட மந்திரங்கள் அதர்வவேதத்தைச் சேர்ந்தவை.

இன்னொரு வேடிக்கை உண்டு அந்த அதர்வ வேதச் சடங்கை ஒரு பிராமணன் தவறிப்போய் கேட்டுவிட்டால் அவனுக்கு தீட்டும் விலக்கும் வந்துவிடும். கேரளத்தில் உள்ள வலியதளி என்ற கோயிலைப்பற்றிய கதை உதாரணம். அங்கே நதிக்கரையில் இருந்த இரு சூலாயுதங்களை இரு நம்பூதிரி சிறுவர்கள் பூசை செய்து வந்தார்கள். இளையவன் அப்பகுதியில் உள்ள ஆசாரிகள் செய்யும் ஒரு அதர்வவேதச் சடங்கை ஒருமுறை கவனித்து மந்திரத்தை மனனம் செய்துகொண்டான்

ஒருநாள் பூசை செய்யும்போது ஒரு சூலம் பயங்கரமாக ஆடியது. எந்த மந்திரத்தாலும் ஆட்டத்தை நிறுத்தமுடியவில்லை. இளையவன் ஒரு தேங்காயை எடுத்து அதர்வ வேத மந்திரம் சொல்லி தாந்த்ரீக விதிப்படி அதை உயிர்ப்பலியாக உருவகித்து அந்த சூலத்தில் அடித்து பிளந்தான்.ஆட்டம் நின்றது

ஆனால் அவனுக்கு எப்படி அதர்வம் தெரியும் என்று நம்பூதிரி சபை விசாரித்து கண்டுபிடித்தது. அந்த இளையநம்பூதிரியும் அவன் வம்சத்தில் வருபவர்களும் நிரந்தரமாக சாதிவிலக்கு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒரு உபசாதியாக நீடித்தார்கள். கேரளத்தின் உயிர்ப்பலி இருந்த கோயில்களில் தாந்த்ரீக பூசைகள் செய்பவர்கள் அவர்களே. அவர்கள் இளையது என அழைக்கப்பட்டார்கள்.

இந்தியாவில் வேதங்கள் உட்பட எந்த ஞானமும் துறவிகளுக்கு விலக்கப்படவில்லை. ரிஷிமூலம் பார்க்கப்படலாகாது என்ற நெறி என்றும் இருந்தது. தீண்டப்படாத சாதியைச்சேந்த நாராயண குரு துறவு வாழ்க்கையில் வேதவேதாங்கங்களை ஐயம்திரிபறக் கற்றார் என்பது நம் முன் உள்ள வரலாறு.

வேதம் பிற வர்ணத்தவருக்கு விலக்கப்பட்டது என்றெல்லாம் பொத்தாம்பொதுவாக ஐரோப்பியர் சொல்லி நாம் கற்றுக்கொண்ட விஷயங்களை விரிவாக ஆராய்ந்து மறுபரிசீலனை செய்யவேண்டிய காலம் இது. இந்தியாவெங்கும் உள்ள ஆசாரங்கள் சடங்குகளை ஆரய்ந்து நம் வரலாற்றை நாமே எழுதிக்கொள்ளமுடியும். அப்போது பதினெட்டாம் நூற்றாண்டில் அன்றைய குறைவான தகவல்களுடன் ஐரோப்ப்பியர் உருவாக்கிக்கொண்ட பல முன்முடிவுகள் உடையும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அன்புள்ள ஜெ,

வழக்கம் போல உங்களின் விசாலமான பார்வையுடன் எழுதப்பட்ட கட்டுரை. நன்றி.

வேதக்கல்வி பிராமணரல்லாதவர்களுக்கு மறுக்கப்பட்டது என்ற வாததை நான் ஏற்கவில்லை.

ஆம் ஜெ, எங்கள் ஊரில் விஸ்வகர்மா கர்மா இனத்தவர்க்கு உபநயனம், கல்யானம், இறுதிக் கருமங்கள் என சடங்குகள் செய்து வைக்கும் அவர்கள் குல வைதீகரை அறிவேன். ஆச்சார்லு என்று அழைப்பார்கள். அவரிடம் கிரந்த லிபியில் வேத நூல்கள் மற்றும் பிரயோக விதிகள் பற்றின பழைய கையெழுத்துப்பிரதிகள் பார்த்திருக்கிறேன். அவர் வேதம் கற்றவர். பல கோயில்களுக்கு தலைமைப் பொறுப்பில் இருந்து கும்பாபிஷாகம் நடத்தி வைத்துள்ளார். இப்போது உயிருடன் இல்லை. அவருடைய தந்தை தான் அவர்கள் குல பாடசாலையில் ஆசிரியராக இருந்திருக்கிறார். வேதக் கல்வியில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. பாரம்பரியம் அறுபடக்கூடாது என்று தனது மகனுக்கு கற்றுக் கொடுத்திருந்திருக்கிறார். அவர்கள் குடும்பத்திலேயே அடுத்த தலைமுறை அதைக் கற்கவில்லை. எனக்குத் தெரிந்து பிராமணரல்லாத வேதமறிந்த ஒரு குடும்பத்தின் தொடர் அறுபடுவதைக் கண் முன்னால் காண்கிறேன்.

இன்னொரு ஸ்தபதியை அறிவேன், பல யஜுர் வேத மந்திரங்களை அழகாகச் சொல்வார். அவரும் பாரம்பரியமாகக் கற்றவர் தான். பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அநேகமாக அவர் பிள்ளைகளும் பாரம்பரிய வேதக் கல்வியை படிக்காமல் விட்டிருக்க வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட குடும்பங்களை கேள்விப்பட்டிராதவர்கள் வேதக்கல்வி என்பது பிராமணரல்லாதவர்க்கு மறுக்கபட்டது என்றே வாதிடுவார்கள். இது போலவே தொடர்ந்து அனைவரும் கைவிடும் போது, இயல்பாகவே வேதக்கல்வியில் பிராமண முற்றதிகாரம் என்ற மாயை உருவாக ஆரம்பிக்கும்.

எனக்கு ஒரு சந்தேகம். பிராமண, சத்திரிய, வைஸ்ய என மூன்று வர்ணத்தவரும் கண்டிப்பாக வேதம் பயில வேண்டும் என்பது இந்துமதத்தின் விதியாக இருந்த பொழுது, பிராமணர் அல்லாதவர் வேதக் கல்வியை கைவிட்டதற்கு ஏதாவது வரலாற்றுக் காரணம் உண்டா? எந்தக் காலக் கட்டத்தில் அப்படி பெருவாரியான பிராமணரல்லாதவர்கள் வேதக்கல்வியை கைவிட ஆரம்பித்தனர். இஸ்லாமியர் ஊடுருவலின் போதா அல்லது ஐரோப்பிய ஆதிக்கத்தின் போதா, இல்லை இவற்றுக்கெல்லாம் முன்பேவா?

வேதம் கற்பித்தலும், சடங்குகள் செய்வித்தலும் தொழிலாக இருந்த பிராமணர்களில் மாறிவரும் காலச்சூழலில் அதன் பொருளியல் ரீதியான லாபமின்மையைக் கருதி மிகக் கணிசமானவர்கள் வேதகல்வியை கைவிட்டிருக்கின்றனர். ஆனால் சத்திரிய, வைசியர்களுக்கு அது தொழிலாக இல்லாததால் பொருளியல் காரணமும் இருந்திருக்கமுடியாது என்று எண்ணுகிறேன். மேலும் வேதக்கல்வி என்பது பெருமைக்குரிய, பிறருக்கு கிடைக்காத சிறப்புத் தகுதியாக, கௌரவமாகக் கருதப்பட்ட காலகட்டத்தில் ஏன் வேதக் கல்வியை தொடராமல் விட்டார்கள்?
நன்றி,

பிரகாஷ்

அன்புள்ள பிரகாஷ்,

இந்தியமெய்ஞானம் சம்பந்தமான விஷயங்களில் இன்று நிலவும்பெரும்பாலான கருத்துக்கள் அரைகுறையான ஆரம்பகட்ட புரிதல்களுடன் அல்லது தெளிவான உள்நோக்கத்துடன் ஐரோப்பிய ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டவை. இன்றுகூட நம் கல்வித்துறையை அந்த எல்லைகளை விட்டு விலகிச்சிந்திக்க ஐரோப்பிய ஆதிக்கம் அனுமதிப்பதில்லை.

ஓர் ஆய்வுக்கு ஐரோப்பிய அங்கீகாரம் தேவை என்ற தாழ்வுணர்ச்சி நம்மிடம் உள்ளது. பல்வேறு கருத்தரங்குகள், நிதியளிப்புகள் வழியாக தங்கள் ஆதிக்கத்தை நம் கல்வித்துறையில் நிலைநாட்டி வருகிறது ஐரோப்பியமைய நோக்கு. அதன் கூலிப்படைகளின் கூச்சல்களையே நாம் அதிகமும் கேட்டு வருகிறோம்.

இதிலிருந்து விலகிச் சிந்திப்பதற்குத் தேவையானது இந்தப்பொது மரபுக்கு வெளியே உள்ள ஏதேனும் குருமரபுகளுடனான தொடர்பு. நீடித்ததும் தொடர்ந்ததுமான ஆராய்ச்சி. என்னைப்பொறுத்தவரை இவ்விஷயத்தில் பிற ஆய்வாளர்கள் செய்யும் ஆய்வுகளை வாசித்தறியும் இடத்திலேயே உள்ளேன். அசலான ஆய்வுகளைச் செய்ய என்னுடைய மனநிலையும் நான் ஈடுபாடு கொண்டுள்ள கலையும் என்னை அனுமதிப்பதில்லை.

இந்தியஞான மரபு பற்றிய என்னுடைய பார்வை இவ்விஷயத்தில் விரிவான ஆய்வுகளைச் செய்த நித்ய சைதன்ய யதி மற்றும் முனி நாராயணபிரசாத், சுவாமி வியாஸப்பிரசாத் போன்றவர்களின் நூல்கள் மற்றும் விவாதங்கள் வழியாக உருவானது. இவற்றிலிருந்து நான் அடைந்த சிலப்பொதுப்புரிதல்களைக் கொண்டே இவ்விஷயத்தில் கருத்துச் சொல்கிறேன். இவை இந்தக்கோணத்தில் சிந்திப்பவர்களுக்கான தொடக்கமாக அமையும் என்ற நம்பிக்கையில்.

இந்தியா என்ற மாபெரும் நிலப்பரப்பு எப்போதுமே ஒற்றைப்போக்கு கொண்டதாக இருந்ததில்லை என்ற யதார்த்தத்தில் இருந்தே நாம் ஆரம்பிக்கவேண்டும். ஏதேனும் ஒரு விஷயம் இந்தியா முழுக்க ஒரேசமயம் ஒன்றுபோல கடைப்பிடிக்கப்பட்டது என்று சொல்வதைப்போல அபத்தமான ஏதுமில்லை. இந்தியா பல்வேறு சமூக சக்திகளின் முரணியக்கத்தின் விளைவாக பல்வேறு கலாச்சாரப்படிநிலைகளில் வளர்ந்து வந்தது. பல்வேறு கருத்தியல்நிலைகள் ஒரே சமயம் இருந்துகொண்டிருந்தன.

மிக எளிமையாக இந்தியாவை ஒற்றைக் கலாச்சாரவெளியாகவும் , இங்கே நிலவிய கருத்தியலை ஒற்றைப்படையான இயக்கமாகவும் வகுத்துக்கொண்டதே ஆரம்பகால இந்தியவியலாளர்களின் மிகப்பெரிய பிழையாகும்.

அதற்கு மிகச்சிறந்த உதாரணம் மனுநீதிக்கும் வர்ணாசிரமதர்மத்துக்குமெல்லாம் ஐரோப்பியர்களால் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம். இந்தியாவையே மனுநீதி என்னும் நெறிநூல்தான் ஆட்சி செய்கிறது என்றும், இந்தியாவின் ஒட்டுமொத்த சமூக அமைப்பும் மனுநீதியால் வகுக்கப்பட்ட வர்ணாசிரம அமைப்புக்கு கட்டுப்பட்டு உருவானது என்றும் அவர்கள் வகுத்துக்கொண்டார்கள்.

இன்றுவரை இந்தியாவின் பொதுவான கருத்தியல்விவாதத்தளத்தில் மையக்குரலாக ஒலிப்பது இந்தக்குரலே. இதை திட்டவட்டமாக நிலைநிறுத்த ஐரோப்பிய ஆய்வாளர்கள் இன்றுகூட அவர்கள் நூல்களில் படும்பாடு ஆச்சரியமூட்டுவது. மேற்கோள்காட்டுவதையே சிந்தனை என்று கற்றுக்கொண்ட நம்மூர் அசடுகள் அதற்கு உரிய பின்பாட்டும் பாடிவருகிறார்கள்.

வேறு ஒரு கோணத்தில் சாதாரணமாக ஒருவர் சிந்திக்கமுயல்வதுகூட பெரும்பிழையாக, அத்துமீறலாக இவர்களால் கருதப்படுகிறது. கல்வித்துறையில் ஒருவர் அப்படிச் சிந்திக்கப்புகுந்தால் அவர் பல்வேறு முத்திரைகுத்தல்களுக்கு ஆளாவார். விலக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு அழிவார் என்பதே இன்றைய நிலை. ஆனாலும் எதிர்காலத்தில் இந்த கோணத்திலான ஆய்வுகள் உருவாகி வரும் என்றே நான் நினைக்கிறேன்.

வியாசமகாபாரதம் பல்வேறு ஸ்மிருதிகளைக் குறிப்பிடுகிறது.பல ஸ்மிருதிகள் பெயர் மட்டுமே அறியப்பட்டவை. உதாரணம் லஹிமாதேவி என்ற சத்ரியப்பெண் எழுதிய விவாதசந்த்ரம் என்ற ஸ்மிருதி. ஸ்மிருதிகள் உருவாகிக்கொண்டே இருந்திருக்கின்றன. என் வீட்டிலேயே நான் யாக்ஞவால்கிய ஸ்மிருதி உட்பட மூன்று ஸ்மிருதிநூல்களை வைத்திருக்கிறேன். அவற்றில் ஒன்றே மனுஸ்மிருதி

ஸ்மிருதிகள் ஓர் அதிகாரச்சூழலில் அச்சூழலின் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டவை. பல ஸ்மிருதிகள் நான்குவருணத்தவரும் அவரவருக்கான வேதமந்திரங்களை கற்று அவரவருக்குரிய வேள்விச்சடங்குகளை செய்யவேண்டுமென அறிவுறுத்துகின்றன. நாரதஸ்மிருதி சூத்திரர்கள் உட்பட அனைவருக்கும் வேதஞானத்தை கட்டாயப்படுத்துவதோடு வருணம் விட்டு வருணத்துக்கு மாறுவதையும்கூட அங்கீகரிக்கிறது.

இந்த ஸ்மிருதிகள் ஒரேசமயம் இந்தியாவின் பல இடங்களில் செல்வாக்குடன் இருந்தன. பொதுவாக புரோகிதப் பிராமணர்களுக்கு அதிக இடம் கொடுக்கும் மனு ஸ்மிருதி அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. எங்கே புரோகிதமரபு செல்வாக்கு பெறுகிறதோ அங்கு மனுஸ்மிருதி நிறுவப்பட்டது. பத்தாம் நூற்றாண்டுக்குப்பின்னர்தான் மனுஸ்மிருதியின் இடம் மையமான ஒன்றாகியது.

அப்போதுகூட மனுஸ்மிருதி உட்பட எந்த ஸ்மிருதியும் இந்தியாவின் கோடானுகோடி சாமானிய மக்களின் சமூக அமைப்பை வடிவமைத்தது , அவர்களை நேரடியாக கட்டுப்படுத்தியது என்று சொல்லிவிடமுடியாது. பத்தொன்பதாம்நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட இந்தியாவின் பெரும்பாலான மக்கள் தங்கள் குலநீதிகளின்படியே ஆளப்பட்டனர். குல ஆசாரங்களிலேயே வாழ்ந்தனர். அவை அம்மக்களின் வாழ்க்கையின் போக்கில் தொல்பழங்காலம் முதலே உருவாகி வந்தவை.

மனுநீதி உட்பட்ட ஸ்மிருதிகள் எல்லாமே பெரும்பாலும் உயர்மட்டத்தில்தான் இருந்தன. சொல்லப்போனால் அவை செல்வாக்குடனிருந்த இடங்களில்கூட ஒருவகையில் கொள்கையடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக மட்டுமே இருந்தன, திட்டவட்டமான நடைமுறைகளாக அல்ல.

அப்படி இறுக்கமான நடத்தைவிதிகளின் படி இந்தியா என்ற இந்த மாபெரும் மக்கள்பரப்பு செயல்பட்டிருக்க முடியாது என்பதே யதார்த்தம். மனுஸ்மிருதி இரண்டாயிரம் வருடம் முன்னரே வர்ணக்கலப்பை கடுமையாக தடைசெய்துவிட்டது. அப்படியென்றால் அடுத்த இரண்டாயிரமாண்டுக்காலம் இந்தியாவில் சாதிக்கலப்பும் இனக்கலப்பும் நிகழவில்லை என்றா பொருள்?

மனுஸ்மிருதியின் விதிகள் மகாபாரதத்தில் எங்குமே செல்லுபடியாவதில்லை என்பதை எவரும் உணரலாம். பாரதத்தின் மையமான சத்ரிய குலமான குருவம்சம் மீனவப்பெண்ணான சத்யவதியின் கொடிவழி வந்தது. சத்யவதி பட்டத்தரசியாக இருந்து அஸ்தினபுரியை ஆள அன்றைய புரோகித மதமோ,சமூக அமைப்போ, அல்லது பிற சத்ரியர்களோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சில குரல்கள் ஒலிக்கின்றன, அவை வலுப்பெறமுடியவில்லை.

இந்தியாவின் பிரம்மாண்டமான சாதியசமூக அமைப்பை வர்ணாசிரமபிரிவைக்கொண்டு விளக்க முயன்ற ஆரம்பகட்ட இந்தியவியலாளர்கள் எவரும் ஷத்ரியர் என்ற வர்ணத்தை அடையாளம் காண முடியவில்லை. அப்படி ஒரு வர்ணமே இந்தியாவில் இருக்கவில்லை. பெரும்பாலான இந்திய ஆட்சியாளர்கள் யாதவர்களோ , நாடோடி மலைச்சாதியினரோ, விவசாயக்குடிகளாகவோ இருந்து நாடாள்பவர்களாக உருவானவர்களே

தேவகிரியின் யாதவர்கள் முதல் கடைசியாக விஜயநகர நாயக்கர்கள் வரை பெரும்பாலானவர்கள் மேய்ச்சல்தொழில் செய்துவந்தவர்கள். அவர்கள் பெரும்திரளாக ஆகி நிலத்தைக் கைப்பற்றி அரசை உருவாக்கும்போது இயல்பாகவே ஷத்ரியர்கள் ஆகிவிடுகிறார்கள். தக்கலை அருகே உள்ள தலக்குளம் என்ற கிராமத்தைச்சேர்ந்த நாயர்குடும்பம் ஒன்று திருவிதாங்கூர் அரசர்களாக ஆனபோது அவர்கள் ஷத்ரியர்களாக ஆனார்கள். நம்பூதிரிகள் அவர்களை ஷத்ரியர்களாக அங்கீகரித்து தங்கள் வேள்விகளுக்கு காவலர்களாக ஆக்கினார்கள்.

இந்தப்பரிணாமம் ஓர் அன்றாடச்செயலாக நடந்துகொண்டிருந்தது. மனுஸ்மிருதியைக் கொண்டு அல்லது வேறு ஸ்மிருதிகளைக்கொண்டு இதை விளக்கிவிடமுடியாது. ஒற்றைப்படையான எளிய வாய்ப்பாடுகள் எவையும் இதை விளக்க உதவாது.

நான் இப்படித்தான் புரிந்துகொள்கிறேன். இந்தியாவின் நிலப்பரப்பின் பல்லாயிரம் இனக்குழுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ,ஒருவர் மேல் ஒருவர் மேலாதிக்கம் பெற்று, அதற்கேற்ப சமூக அதிகார அமைப்பை உருவாக்கிக் கொண்டார்கள். அந்தப்பரிணாமத்தில் அதற்குத்தேவையான அளவுக்கு ஸ்மிருதிகளை பயன்படுத்திக்கொண்டார்கள்.

இந்தியாவிலிருந்த ஸ்மிருதிகள் பல அனைவரும் வேதங்கள் கற்பதை அனுமதித்திருந்தன. ஆகவே வைத்தியம் , சிற்பவியல், ஆயுதவித்தை போன்ற தொழில்கற்பவர்களும் வேதம் கற்றிருக்கிறார்கள். ஆனால் பழங்காலம் முதலே வேதங்கள் ஒரு தொன்மையின் தொடர்ச்சியை நிலைநிறுத்தும் மந்திரங்களாகவே ஓதப்பட்டிருக்கின்றன. சிற்சில குருமரபுகள் தவிர்த்து வெளியே அவை கற்று ஆராயப்படவில்லை.

மனுஸ்மிருதி பிற வர்ணத்தவர் வேதம் கற்பதை விலக்கினாலும் பற்பல இனக்குழுவினர் மனுஸ்மிருதியின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. குறிப்பாக இந்தியாவில் மருத்துவம், ஆயுதவித்தை, சிற்பவியல் போன்ற கலைகளை குலமரபாக கற்பவர்கள் பொதுச்சமூகத்தின் கட்டுப்பாடில்லாத தனித்த துணைச்சமூகங்களாகவே இயங்கிவந்தனர். அரசனால் கூட கட்டுப்படுத்தமுடியாதவர்களாக அக்குழுக்கள் இருந்தன.

அவர்களிடம் தாந்த்ரீக வழிபாடுகள் செல்வாக்குடன் இருந்தன. அவற்றின்பகுதியாக அதர்வ வேதம் போன்றவையும் இருந்தன.அவர்களின் ஆசாரங்களும் வழிமுறைகளும் பிறருக்கு ரகசியங்களாகவே இருந்தன. சமீபகாலம் வரைக்கும் கூட இந்தநிலை நிலவியது.

புரோகிதர்களின் ஆதிக்கம் இந்தியாவில் சீராக அதிகரித்து அதன் விளைவாக மனுஸ்மிருதி மையமாக ஆனபோது பிறர் வேதங்களை ஓதுவது இல்லாமலாகி தொழில் சார்ந்த சடங்குகளுக்குள் மட்டுமே ஒடுங்கியிருக்கலாம்.

பொதுவாக ஒன்றைப்பார்க்கிறேன். மரபான ஞானத்தில் எது நடைமுறைத்தேவை கொண்டதோ அது எளிதாக அழிந்துவிடுகிறது. இன்னும் நடைமுறைத்தேவை கொண்ட ஒன்று வந்து விடுகிறது. மருத்துவமும், தச்சு சாஸ்திரமும், ஆயுதவித்தையும் வேகமாக தொடர்ச்சியறுந்து அழிந்தன.
ஆனால் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் அழிவதில்லை. நம்பிக்கை அவற்றை பிடிவாதமாக நிலைநிறுத்துகிறது. வேள்விச்சடங்குகள் மட்டுமல்ல சோதிடம்கூட அப்படித்தான் தாக்குப்பிடித்தது.

இந்தியாவின் மருத்துவம் சிற்பம் ஆயுதவித்தை போன்றவை எல்லாமே பதினாறாம் நூற்றாண்டு முதல் சரிவுக்கு ஆளாயின. அவற்றைப்பேணுவதற்கான அதிகார அமைப்புகள் இல்லாமலாயின. அவற்றை நிலைநிறுத்தியிருந்த தொழில்சார்ந்த குலக்குழுக்கள் அவற்றின் கட்டமைப்பை இழந்தன. இந்தியாவின் இருபெரும் பஞ்சங்களுக்குப்பின்னர் இந்த தொழிற்குழுக்கள் அனேகமாக மறைந்து சாதிசார்ந்த சில செயல்முறை பயிற்சிகள் மட்டுமே எஞ்சின.

வேதக்கல்வி என்பது பெருமைக்குரிய, பிறருக்கு கிடைக்காத சிறப்புத் தகுதியாக, கௌரவமாக இருக்கவில்லை. தொழிலின் ஒரு பகுதியான உச்சாடனச் சடங்காக மட்டுமே இருந்தது. அந்த தொழில் அழிந்தபோது அதுவும் அழிந்தது.

இந்தியாவின் இந்த நடைமுறைசார்ந்த ஞானங்கள் பெரும்பாலும் ஏட்டுச்சுவடிகளில் இருந்து பின்னாளில் மீட்கப்பட்டன என்பதைக் காணலாம். உதாரணமாக மருத்துவம். எந்த மருத்துவக்குடும்பத்தைக் கேட்டாலும் நூறு வருடம் முன்பு ஒரு துறவி அவர்களுக்கு ஒரு சுவடிக்கட்டை கொடுத்தார் என்றும் அதைக்கொண்டு வைத்தியம் செய்வதாகவும் சொல்வார்கள். அந்தச்சுவடியை வாசிக்கும் முறையும் அதனுடன் ஒட்டிய ஆசாரங்களும் எல்லாம் மறைந்துவிட்டன.ஆங்கிலவழிக்கல்வி வந்த பின்புள்ள சூழலில் அச்சுவடிகள் வாசிக்கப்ப்பட்டு பொருள்கொள்ளப்பட்டு அந்த ஞானம் மீட்கப்பட்டுள்ளது. அதற்கும் மரபுக்கும் தொடர்பில்லை.

கேரளத்து கோயில்களில் கூம்புவடிவக்கூரையின் மையத்தில் எல்லா கழுக்கோல்களும் சென்று இணையும் இடத்தை குடம் என்பார்கள். அந்த மையம் மிகநுட்பமான கணக்குகளால் ஆனது. ஆனால் நூறுவருடம் முன்னரே குடம்கூட்டத் தெரிந்த மூத்தாசாரிகள் மறைந்துவிட்டார்கள். பேச்சிப்பாறை அணையைக் கட்டிய பொறியாளர் தச்சுநூல்களை வாசித்து அந்த முறைக்கு ஒரு புதிய வரைபடத்தை உருவாக்கினார் என்று சமீபத்தில் ஒரு ஆசாரி சொன்னார்..

ஆதிக்கவாதிகள் அளித்த எளிய அரசியல் வரைபடங்களைச் சுமந்தலையாமல் நம்முடைய பண்பாட்டையும் அணுகும் புதிய தலைமுறை உருவாகி வரக்கூடும். அவர்கள் நமக்கு புதிய வெளிச்சங்களை அளிக்கலாம்

ஜெ

ஜெ,

அருமையான கட்டுரை. மிக்க நன்றி.

அடுத்து வேதம்பாடின ஆரியர்களின் வழித்தோன்றல்கள் மதம்மாறி விட்டார்கள்: அத்தாவது, வேதங்களில் பாடியுள்ள கடவுளர்களை விட்டுவிட்டு முற்றிலும் வேறுபட்ட கடவுளர்களைப் பேணத் தொடங்கினார்கள்[iv]. சான்றாகப் பூசன் (Pūṣan), மித்திரன், வருணன் போன்ற தலைசிறந்த வேதக்கடவுளர் மறந்து பின்னர் அவற்றில் சொல்லாத கிருட்டிணன், இராமன், சிவன் போன்றோர் ஆரியரிடையே ஊன்றினர். அதனால் இன்னும் வேதங்களின் பொருள் விளங்காமல் மறைந்தது. ஆயினும் பொருள்தெரியாவிடினும் வேதத்தினைச் செய்வினைகளில் (சடங்குகளில்) ஓதுவதையும் அதன் பெருமதிப்பினையும் கைவிடவில்லை. எனவே வெறுமனே அதனைப் பேணிப்பாராட்டல் என்பதையேகூடப் பெரிதாகக் கருதினர். இந்த மதிப்பால் பின்னால் ஏற்றுக்கொண்ட கடவுளர்களைப் பாராட்டும்பொழுதுகூட அவர்களை வேதத்தோடு இணைத்துப் பாடுவதும் வழக்கமாகிவிட்டது.

இவரது புரிதல் எவ்வளவு மேம்போக்கானது என்று இதிலிருந்து தெரிகிறது. ராமனும், கிருஷ்ணனும், சிவனும் திடீரென்று எங்கிருந்தோ முளைத்தவர்களல்ல – வேத தெய்வங்களின் பரிணாமும் நீட்சியுமே அவர்கள். ஸ்ரீஅரவிந்தர் பிற்காலத்திய புராண தெய்வங்களின் உருவாக்கம் அனைத்தும் எப்படி அக்னி, ருத்திரன், விஷ்ணு போன்ற வேத தெய்வங்களிலிருந்தே உருவானது என்று தெளிவாக விளக்கியிருக்கிறார். வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபன் என்று வைணவ மரபில் புக்ழப் படும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் ஏராளமான வரிகள் ரிக்,யஜுர்,சாம வேத மந்திரங்களின் நேரடி மொழியாக்கம் போலவே உள்ளன என்பதனை இருமொழியும் கற்றறிந்த பெரும்புலவர்களான வைணவ அறிஞர்கள் விளக்கியுள்ளார்கள். கார்காத்த வேளாளர் குடியில் பிறந்த திருநாவுக்கரசர் ‘உருத்திர திருத்தாண்டகம்’ என்ற பதிகத்தைப் பாடியுள்ளார். இதன் வரிகள் கிருஷ்ண யஜுர்வேதத்தில் உள்ள ஸ்ரீருத்ரம் என்ற துதியின் சாரமாக, அதன் நேரடி மொழிபெயர்ப்பாகவே உள்ளது என்றும் சைவ அறிஞர்கள் விளக்கியுள்ளனர்.

மந்திரத்தின் சப்தம் மட்டுமே முக்கியம் பொருளல்ல என்று கூறும் சடங்கர்களைப் பரிகசித்து நிருக்தம் என்ற வேத இலக்கணம் வகுத்த யாஸ்கர் என்பவரே தன் நூலில் எழுதியுள்ளார். சடங்கில் பொருளறியாது மந்திரங்களை ஓதுவது என்பது ஒருவகைப் புரோகிதப் போக்கு. அது பண்டைக்காலம் முதல் தொடங்கி இன்று வரை நீடித்து வரும் ஒன்று தான். ஆனால் அந்தப் போக்கு மட்டுமே அல்ல வேதம். உண்மையில் தெய்வீக ஞானம் அனைத்தின் தொகையே அது என்று தான் தமிழ் பக்தி இலக்கியங்களைப் பாடிய ஆழ்வார்களும் நாயன்மார்களும் கருதினார்கள், புறநானூற்றுப் புலவர்கள் கருதியது போல. அதனால் தான் அவர்கள் பாசுரம் தோறும் சிவனையும் திருமாலையும் வேதத்துடன் இணைத்தே பாடினார்கள். வேதம் என்றால் என்ன என்று மிகச் சரியாகவே புரிந்து கொண்டிருந்தவர்கள் தான் அவர்கள்.

அன்புடன்,
ஜடாயு

அன்புள்ள ஜடாயு

சமணநூலான நீலகேசியில் இருந்து நாஞ்சில்நாடன் எடுத்துக்காட்டிய செய்யுளை சற்றுமுன் வாசித்தேன்.

தோற்றமும் நாற்றமும் சுவையுடன் ஊறு இவற்றால் தொடங்கி
ஆதரவும் ஆயிருவல்லார்கள் அஃது அறிந்துரைப்ப
மேற்குலத்தோரோடு இழிந்தவர் என்பது மெய்மைபெறா
நூற்றிறம் செய்தவர் அறிகுவர் நுழைந்தறிவு உடையவரே

இதற்கான உரையாசிரியர் கூற்று. மருத்துவநூல் கற்று தேர்ந்தவர்கள் மலத்தில் நிறம் நாற்றம் சுவை ஊறு என்னும் தன்மைகளால் ஆராய்ந்து அது நோயாளியின் மலமா ஆரோக்கியமுள்ளவனின் மலமா என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் அது மேற்குலத்தாரின் மலமா இல்லை கீழைக்குலத்தோரின் மலமா என்று சொல்லமுடியாது. அதைப்போல நுண்ணறிவுடைய சான்றோர் வேதத்தைச் செய்தவர் சிறந்த அறிவுடையவரா அல்லது அறிவில்குறைந்தவரா என்று நூலை ஆராய்ந்து சொல்ல முடியும். அதனைச்செய்தவர் மேற்குலத்தாரா அல்லது கீழ்க்குலத்தாரா என்று சொல்லிவிடமுடியாது

இந்திய மரபில் சாதியப்போக்கும் சாதிமறுப்புப்போக்கும் என்றும் இணையான வலுவுடன் இருந்துள்ளன. எல்லா காலத்திலும் அறிவார்ந்த போக்குகள் ஆசாரங்களை தாண்டிசென்றுள்ளன. சாதி மறுப்பு நோக்கை இல்லையென மறுத்து இந்தியாவை ஒற்றைப்படையாக காட்டும் முயற்சிகளுக்குப்பின்னாலுள்ளது வெறும் ஆதிக்க அரசியல்

ஜெ



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 


  
 
 
 
Sanskrit Education: Bowing Our Heads To Tradition?
Looking backwards, inwards or finding one's roots -- the why, what and how (and how not) to teach Sanskrit

MICHAEL WITZEL  http://www.outlookindia.com/article.aspx?212581

Recently, there have been moves to strengthen the position of Sanskrit in schools and colleges. This is the time, therefore, to reflect critically on the teaching of Sanskrit and the culture its represents.

Like some other great civilizations such as those of China, Japan or Europe, Indian culture can look back to several thousands years of continuity. Other early civilizations, such as those of Old Egypt and Mesopotamia have undergone great changes, starting with the influence of the ancient Persians and Greeks and then notably Islam -- changes that have largely overlaid the old indigenous foundations as to render them almost invisible.

These influences affect most of the superstructure, the 'ideology' of the cultures involved, even though many individual ideas and beliefs continue on the popular and folklore levels. India and China, too, have both been affected time and again by foreign influences and even by the domination of outsiders.

 
 
 
 In order to understand what we are and how we live today, we have to study the past in a critical and comprehensive fashion. 
 
 
 
This began with the Persians and various Central Asian steppe peoples.

But, both cultures have managed to keep their inherent structure intact, modified as it may have been by each encounter. Due to such influences, the world view, say, of a modern Taiwanese is by no means identical or comparable with that of a citizen of the Tang period, or of Confucian times, or of the still earlier Shang kingdom of northern China.

One should not forget, as is often done, and nowadays even on purpose, that the same applies to modern Indians as well. The man in the street in Mathura, Chennai or Gopalpur village looks at the world in a way markedly different from that of a trader of the Gupta period or a Panjab Vaishya of Rigvedic times.

Both China and India have also kept their old language and literature intact, in differing ways and for different historical reasons. Even in communist China, Mao wrote classically inspired poems which were prominently posted.

 
 
 
 However, Sanskrit is followed on its heels by early Tamil Sangam literature and early Tamil inscriptions date from the second century BCE. 
 
 
 
Not to speak about other countries with a deep appreciation, indeed a love of their past, such as Japan, Israel, Greece or Italy. Japan, for example, is now running a large and comprehensive Government sponsored program, the"Reconstitution of Classics" (which includes all the classical cultures from Rome to Japan)

***

The Japanese have done that for a good reason. Contemporary people usually forget that wherever we look, we are surrounded by our past: by ancient buildings, rituals, music, and even everyday customs (such as, in India, the habit of women eating only after the men have finished, a custom already attested in the early Yajurveda).

Obviously, in order to understand what we are and how we live today, we have to study the past in a critical and comprehensive fashion. This must be done, as in the Japanese Classics project, through a study of the ancient texts. In India, most of them have been composed in the classical language, Sanskrit, which is important for the traditions of more than 80% of the population.

However, Sanskrit is followed on its heels by early Tamil Sangam literature and early Tamil inscriptions date from the second century BCE, as will be seen in the forthcoming edition by Iravatham Mahadevan (2001).

And, there are classical texts for other larger or smaller sections of the population: the Pali and Tibetan canons of Buddhism, the Gurugranth, the Quran, the Bible, the mythological texts of the Munda, Khasi or Manipur peoples.

 
 
 
 Sanskrit, though a classical language, is still alive, in a fashion: it is not quite as "dead" as Latin in the west. 
 
 
 
This variety is a great asset of India and should not be neglected or even suppressed.

Sanskrit, though a classical language, is still alive, in a fashion: it is not quite as "dead" as Latin in the west, where only catholic priests occasionally still converse in it and regularly broadcast it from the Vatican. Publishing in Latin had definitely ceased by 1900 CE.

In India, on the contrary, Sanskrit is not only printed but actually spoken: according to the last census of 1991, by 49,736 people, though not as mother tongue. And, Sanskrit permeates Indian culture even more than Latin did the European.

In both Asian subcontinents, the European and the Indian, the classical languages also have a number of other functions. Importantly, they provide building blocks for forming neologisms for new inventions, such as television, exactly copied as dura-darshana 'far-seeing' in Sanskrit, Hindi, etc.

In fact, there has been a secret Sanskritization of all languages of the Indian Union since independence. At that time some scholars, such as Raghu Vira, strove to have Sanskrit instituted as the national language. This was not to be -- in spite of token adherence such as Sanskrit printed on Rupee notes and the daily, five minute news broadcast.

Yet, the Sanskritized administrative and scholarly vocabulary has increased exponentially, from pradhana mantri to jala vidyut ayoga (hydel project).

 
 
 
 In Sanskrit (or Latin), you have to think in complex structures. The more complicated the better, though certainly not in first grade, but gradually, as pupils' minds develop. 
 
 
 
In that sense, Sanskrit already is the second national language.

***

If we agree, that classical languages such as Sanskrit are important for our self-image and for our sense of feeling at home in our own traditions, it must be deliberated how to proceed, in theory and practice, with its study.

Three separate aspects are to be distinguished: (1) the process of learning of an ancient language, (2) the actual reading of ancient texts (either in Sanskrit, or accompanied by a good modern translation), and (3) an understanding of the ancient texts (discussed in modern languages). Each point is discussed below.

Learning and Teaching Sanskrit

The present discussion in India whether one should learn an old, 'nearly extinct' classical language or not has also raged in other countries, and for decades.

All over Europe and America, the teaching of Latin (not to speak of Greek) has been slashed, though each larger town usually still has Latin in at least one high school, and some offer classical Greek as well.

The argument usually was that we rather should study other, 'more important' things than a 'dead' language. This completely overlooks the foundational value of our classical languages.

Also, it must be noted that all of this 'reform' has not improved the standard of education in any of the countries where the US system has been imitated.

 
 
 
 Sanskrit texts are usually taught with a heavy reliance on medieval commentaries, that means, reliance on people who often are as distant from the original culture of the texts as we are today. 
 
 
 
Complaints about European and especially about American high school standards abound.

However, learning a classical language such as Sanskrit has a value of its own, apart from the link it provides with one's living past, identity and sense of well-being within one's culture. Certainly, students everywhere complain about such 'unnecessary' and laborious extra tasks. But they overlook that such learning helps to train one's mind in certain ways that one cannot achieve by learning modern languages such as English or French.

In Sanskrit (or Latin), you have to think in complex structures. The more complicated the better, though certainly not in first grade, but gradually, as pupils' minds develop. Other possible choices of languages, say modern Japanese, are useful but not quite as difficult (the complex script apart), as the Japanese grammatical structure and thus the way to express oneself and even to think is surprisingly close to that of Hindi or Tamil.

In the actual teaching of Sanskrit or any other classical language, mindless learning by rote of one declension and verb class after another has to be abolished. This discourages most students at once.

The necessary memorization of certain important features of the language must be accompanied by pointing out the inherent cultural features and special meanings (now lost or changed) of certain words and concepts, or by showing the differences in the structure of the Sanskrit language when compared with, say Hindi, Tamil or Mundari.

 
 
 
 Just as reading the Bible by oneself in Latin or in translation set off a wave of reform in Christianity some 500 years ago, it can be hoped that something good will come out in the Indian context too. 
 
 
 
It is high time that new, really pedagogical tools for teaching the language are developed.

Reading and Interpretation

Once students have progressed beyond Beginner's Sanskrit, they can start reading the old texts in class and by themselves, beginning with comparatively easy stories, such as those in the Mahabharata, Ramayana or parts of the Gita. As it is the case in the study of texts in any other classical language, it can and should be done with a critical bent of mind.

This means: without constant reference to traditional commentaries or religious teachers. To do so would be to base modern teaching on an uncritical belief in the myth of the infallibility of the great commentators. Sanskrit texts are usually taught with a heavy reliance on such medieval commentaries, that means, reliance on people who often are as distant from the original culture of the texts as we are today.

Commentators help, but they do not know more or better than Sanskrit specialists do now. When first establishing a critical understanding of Sanskrit texts some two hundred years ago, such commentaries have been very useful. But by now we have enough tools and aids (dictionaries, grammars, indexes, specialized studies, etc.) that allow us to come to our own conclusions, to supplement or even correct the commentaries.

In today's world, students have to see themselves what the texts really have to tell, rather than to be taught ex cathedra by a modern guru or a medieval scholastic.

 
 
 
 Beauty lies in variety and diversity, not in boring uniformity. Inclusivism should be the watchword, not a monolithic exclusion of 'unwanted' or worse, "un-Indian" traditions. 
 
 
 
If proceeding in critical fashion, students will gradually improve their knowledge of the cultural and religious background of the period of the text in question and will gain a better understanding of the texts. In other words, such critical reading leads to self-reliance and self-emancipation.

Just as reading the Bible by oneself in Latin or in translation set off a wave of reform in Christianity some 500 years ago, the renewed study of the foundational texts of Indian culture and of Hinduism, including the difficult and archaic Vedas, will enlighten the average student or citizen -- provided he/she is willing to be drawn into the matter, to invest some time, and if one does not blindly follow traditional interpretations or sectarian teachings.

Initially, it does not even matter too much if the reader erroneously projects certain modern concepts back in time: this will be remedied as soon as one progresses in reading and if one is willing to pay close attention to the texts.

There is no need to belabor the fact that Sanskrit Literature is a very rich one, from old religious texts (Veda, Puranas) to the great epics, from classical dramas to historical inscriptions, and on to medicine, law, Machiavellian state craft, agriculture, etc. Even the science of gems, cook books, and the art of thievery (Shanmukhakalpa) are found.

All these traditions represent the foundation and often also the spiritual support of what makes up today's Indians, due to the implicit values found in the texts, values that are often imperceptibly transmitted and imbibed from childhood onwards.

In short, there is a whole new world to be discovered, which is now shut off to average Hindus, just because they have to rely on a limited range of traditional teachings and informal beliefs.

 
 
 
 The traditional stress on the "unchanging nature" of Hinduism obfuscates much of the development of Indian thought. In fact, it falsifies history. 
 
 
 
The situation reminds me of a novel I read long ago, of how a village woman learned to read and write and, on reading the Mahabharata in translation, found strength in the Epic women's character to emancipate herself. Knowledge is power, everywhere and any time.

***

Even a little Sanskrit will help the average reader to control and check translations as well as medieval and modern scholars' commentaries. It will allow readers to see through much of what is bandied about now -- such as a never-changing Hinduism (sanatana dharma), Ram's golden age, the supposedly egalitarian role of women in the Vedic period, the autochthonous 'Aryans', and so on.

Much of the literature, especially the more difficult texts, can and perhaps should be read in good modern translations, which can, however, be checked by someone who has learned some Sanskrit.

This is not utopian at all: for example, in Japanese high schools one reads, next to a lot of old and modern Japanese and next to some translated Western literature, also old Chinese literature in the original Chinese characters (kambun, with some Japanese annotations); or, in my own high school, we did so with respect to some of the old European texts (partially, with modern translations attached).

In India, one could emulate such systems, but one should also include the other traditions represented, whether Tamil, Islamic, or else they should at least be taught in eclectic, paradigmatic fashion as to give an inkling of the enormous variety of cultures actually present in the subcontinent.

Beauty lies in variety and diversity, not in boring uniformity.

 
 
 
 It is extremely important to realize that the past is a foreign country. We cannot assume that we can understand people of a few hundred years ago as well we do our contemporaries. 
 
 
 
Inclusivism should be the watchword, not a monolithic exclusion of 'unwanted' or worse, "un-Indian" traditions. Which brings us to the next point.

Changing World Views

Most important would be a serious effort by the teachers of Sanskrit language and texts to let their students understand the world view (weltanschauung) of the texts they read. As indicated, a Vedic merchant, a Gupta time trader and a modern Baniya certainly are not the same kind of person. Their outlook has changed several times over: too much water has flown down the Ganga since.

For example, around the beginning of the Common Era ("A.D."), a relative openness to other cultures and religions prevailed, due to the prominence of Buddhism and Jainism in Indian culture.

 
 
 
 Much of what is being told now in comics, popular books, on TV and in Bombay films is historically impossible, pure and simple. 
 
 
 
This was furthered by the many open corridors and links with West and Central Asia, especially in Kushana times.

However, during the more inward looking Gupta times and certainly later on, such contacts persisted at a much lower level. (Incidentally, we may now live just at such a critical turning point, again: the question is whether India will turn inward again or whether she will continue keep an open mind towards a variety of influences, from west and east).

Later on, during the Middle Ages, the strong Muslim and West Asian influence again affected many aspects of daily life, from cooking to greetings. And the more recent British (European) and now the 'global' (American) influences again have seriously changed peoples' outlook.

Such changes and their reflection in the literature of the times must be studied and laid out clearly by teachers. The commonly found stress on mindlessly regurgitating college handbooks does not help in the development of critical thinking, and the traditional stress on the "unchanging nature" of Hinduism obfuscates much of the development of Indian thought. In fact, it falsifies history.

However, students can benefit greatly from the exposure to the very facts of the ancient and medieval texts themselves. Especially so when taught in an enlightened way, as I remember even now from my own high school days. I had the good luck to have some excellent University level teachers, all refugees of conscience from communist East Germany, who made precisely that effort, and taught at college level even in high school.

 
 
 
 "Vedic Astrology," apart from the fact that it is not Vedic at all but squarely post-Vedic, is only for the superstitious weak who need to seek self-reconfirmation and solace about the uncertainties of life from shaman-like figures. 
 
 
 
You carry this influence with you for life.

In studying the old texts, it will come as a shock to a young mind that people even 300 or years ago did not think at all as we do now. There was little reason then, e.g., of voluntarily leaving one's own traditional surroundings, and of crossing the ocean (kala pani) -- which was not a thing to be done.

Few then wanted, as former US ambassador to India in Kennedy's time, J.K. Galbraith, has quipped recently, "to be reborn on the banks of the Hudson," while we now have more than a million people from South Asia who have chosen to do so, and who have quickly developed their own views of India, clearly idealized and glamorized in certain cases.

On the contrary, it is extremely important to realize that the past is a foreign country. We cannot assume that we can understand people of a few hundred years ago as well we do our contemporaries. We have to study those times in great detail. The more we know about the recent and not so recent past, the better we can understand where we come from -- and where we might go!

This is especially valuable and important right now, when the distant past frequently is glorified and described as a lost Golden Age. There is no need to go into an intercultural comparison of the dangers involved with such thinking; they are obvious to any student of 20th century history.

Indeed, much of the present wave of revising history, instead of critically investigating the past, simply creates new and wrong mythology.

 
 
 
 Theory apart, the real life question is of course: how to find the teachers who are able to teach in the way delineated? as they themselves have grown up with all sorts of myths. 
 
 
 
This has been happening imperceptibly for quite some time on the important popular level. For example, most of the pictures in Amar Chitra Katha are historically wrong. (By comparison, Japanese historical comics have been meticulously researched, be it for dress, buildings, older forms of speech, etc.)

As visual beings, we are constantly exposed now to wrong, elaborate Mahabharata chariots with (not attested) roofs, with four (not two) wheels, and with the driver sitting in front of (not, like Arjuna, standing on) the chariot; or we find Mughal style palaces in the Epic period, and so on.

Not to speak of simply improbable items like great stone-built towns in Rama's mythical Ayodhya of c. 3000 BCE, at a time, when just a few subsistence level, village agriculturalists and hunter-gatherers lived there. Much of what is being told now in comics, popular books, on TV and in Bombay films is historically impossible, pure and simple.

It makes for nice viewing, perhaps, but it educates the majority of the public the wrong way, by creating a golden, mythical age that never was. Reading the Sanskrit texts themselves will immediately destroy such fantasies.

Or, to give a limited but more serious example: a thorough study of the Vedic texts would show that items such as the recent booklet accompanying the Indus exhibition at the National Museum are not based on facts -- that is, on a systematic interpretation of the Vedas.

 
 
 
 It is necessary, however, that the texts of both classical Tamil and of Sanskrit are included in any curriculum as both are part and parcel of what constitutes the Indian cultural complex. 
 
 
 
One cannot have, as in popular books, the Rigveda at 2500 or even 5000 BCE, simply because the horse- and chariot-rich Rigveda is possible only after the invention of this quick vehicle in the Russian steppes or in Mesopotamia at c. 2000 BCE .

If this would be obvious to any reader of a good encyclopedia who can compare such facts with the Sanskrit texts themselves, why is it not obvious to leading archaeologists riding their particular hobby horse? This kind of project leads to the dumbing down of the people -- a point in case being the uninitiated visitors to the museum.

Knowing Sanskrit and reading the texts themselves, even reading them in the local languages, will enlighten the people, and they can finally judge for themselves.

Obviously, this cannot be done by decreeing the study of "scientific astrology" or some such non-verifiable topic that is shunned by serious researchers the world over.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

http://www.shaivam.org/articles/art-kumaraguru-thelivukkaka.htm

தெளிவுக்காக


திருச்சிற்றம்பலம்

முன்னுரை :

தமிழில் உள்ள இலக்கண இலக்கியங்கள், திருக்குறள், சைவ சமய சாத்திரங்கள், தோத்திரங்கள், புராணங்கள் அனைத்திலும் வேதத்தைப் பற்றிய செதிகள் உள்ளன. வேதத்தை மறுத்த செய்தி ஏதும் இல்லை. சைவ சமயாசாரியர்கள், சந்தானாசாரியர்கள், அதன் வழிவரும் ஆதீனம், திருமடங்களும் வேதாகமங்களை ஏற்றுப் போற்றுகின்றன. சிலர் தமிழிலும், திருமுறைகளிலும் இல்லாததை இருப்பது போல் "தமிழ் நெறி", "திருமுறை நெறி" என்று சொல்லி, "சலத்தாற் பொருள் செய்து ஏமார்த்தல்" செய்து வருகின்றனர். அது கூடாதென்பதை, 5, 6, 7-02-2010-இல் தில்லையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பன்னிரண்டாவது உலகச் சைவ மாநாட்டின் நிறைவு நாளில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட செய்தியை, காசிமடம் வெளியிட்ட "வேதநெறி தழைத்தோங்க, மிகுசைவத் துறை விளங்க!" என்ற நூலின் முன்னுரையின் முதலிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. வேதத்தை 'உலகத்தார் உண்டு' என்று ஏற்பதையும் காட்டி உள்ளோம். 'எத்திறத்தானும் தேறார்' என்ற நிலையில் இதுதான் அது, அதுதான் இது என்பதுபோல் பேசியும் எழுதியும் வருகின்றனர். தெளிவுபெற விரும்புபவர்களுக்கு பயன்படும் என்று கருதி இது எழுதப்பெறுகிறது.

ஏத்தல் - வழிபாடாகுமா?

	ஏத்து - ஏத்து! என்னும் ஏவல் - துதி.
	ஏத்தல் - துதித்தல், வணங்குதல்.
	ஏத்துதல் - துதித்தல், வணங்குதல்.
				(வெள்ளி விழா - தமிழ்ப் பேரகராதி - 1, பக்.264)

இம்மூன்று சொற்கள் பூசை செய்தலைக் குறிக்காது. தோத்தரித்தல், அட்டாங்க, பஞ்சாங்க வணக்கங்கள், கைகூப்பு ஆகியவற்றைக் குறிக்கும்.

இறைவனை எம் மொழியிலும் துதிக்கலாம். பதினெட்டு மொழிகளில் ஏத்தலாம் என்பது சரியே. மேலும், அறிந்த மொழி எதுவாயினும் அவ்வம் மொழியும் துதிப்பதற்கு உரியதே. இல்லுறை தெய்வத்தைத் தீட்சை பெற்றவர்கள், குரு உபதேசித்தபடியும், ஏனையோர் அறிந்த மொழிகளிலும் தோத்தரிக்கலாம். சித்தாந்த சைவர்கள் பன்னிரு திருமுறைப் பாடல்களைப் பாடித் துதிப்பதே சிறப்பு. பாடும் வாய்ப்பு இல்லாதவர்கள் வந்தவணம் ஏத்தலாம்.

கோயில்களின் பூசனை என்பது வேறு. அதனை வேதாகம நெறிப்படி, சிவாசாரியர் செய்ய வேண்டும். வழிபட வரும் பக்தர்கள் அரன் சிந்தனையே கொண்டு பிற சிந்தனைகளை மறந்து திருமுறைகளைப் பாடுதல் - சொல்லுதல் வேண்டும்; அல்லது அரன் நாமங்களைச் சொல்லுதல் வேண்டும்.

சிவாசாரியர்கள் மட்டுமின்றித் துறவியரும் வேதாகம நெறிப்படி இறைவைப் பூசித்தற்கு உரியவரேயாவர்.

	"தென்னாடுடைய சிவனே போற்றி
	எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
					- (திருவா. போற்றி.164, 165)

என்ற தொடர்களை மகுடமாகச் சொல்கிறோம். தென்னாட்டவர் துதிக்க உரிய சிவன் எந்நாட்டவரும் உரிய இறைவனாவார். தென்னாட்டவர் தென் மொழியிலும், அவ்வந் நாட்டவர் அவ்வம் மொழிகளிலும் துதிசெய்ய - தோத்தரிக்க ஆகமத்தில் விதியுள்ளது. எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவன் என்பதால், எந்நாட்டவர்க்கும் பொது மொழியாக நம் சமயம் விதித்துள்ள - இறைமொழியில் வழிபாட்டுக் கிரியைகளைச் செய்ய வேண்டும். 'ஆகமம் ஆகி என்று அண்ணிப்பான் தாள் வாழ்க' என்ற திருவாசகத் தொடரை உரக்க முழக்கம் செய்துவிட்டு அவ்வாகம விதிக்கெதிரான சதிசெய்பவர்களை என்னவென்று சொல்வது.

தமிழ் வேதங்கள் இருந்தன. அவை மறைந்தன. மறைந்தவற்றிலிருந்து தோன்றியவை வடமொழி வேதங்கள் என்றெல்லாம் எழுதப்பெறுவன கற்பனை வாதங்கள். பல நல்லறிஞர்களால் பலமுறை மறுக்கப்பட்ட பின்பும், மறுப்பைக் காணாமல் கேளாமல் மீண்டும் மீண்டும் சொன்னவற்றையே சொல்லுவது நன்றன்று. எந்தவொரு சமயமும் தன் மூல முதல் நூலை எந்த நிலையிலும் இழக்காது. எத்தகைய நிர்ப்பந்தத்தாலும் இழப்பை ஏற்படுத்த முடியாது. வேதமே மறைந்திருந்தால் - மொழி மாற்றப்பட்டிருந்தால் உலக வரலாற்றில் குறிக்கத்தக்க அவ்வளவு பெரிய அசாதாரண நிகழ்ச்சியைப் பின்னர் வந்த கவிஞர்கள் கதறிக் கதறிப் பதிவு செய்திருப்பார்களே!? நடக்காத கதையைச் சொல்லி நம்மை நாமே ஏன் தாழ்த்திக்கொள்ள வேண்டும்?

காலில் முள் குத்தினால் காலுக்கு மட்டும் துன்பம் என்பதில்லை. கண்களில் நீர் வரும்; ஒட்டுமொத்த உடம்பையுமே அசௌகரியப்படுத்திவிடும். திருமுறைகள் காட்டிய மறைவழியைத் திருமுறைகளைக் கொண்டே கிரியைகள் செய்து கொச்சைப்படுத்தும் செயல்களை, எங்கோ சிலர்தானே செய்கிறார்கள்; அதைப் பொருட்படுத்த வேண்டாமே எனச் சிலர் கருதக்கூடும். பேருருவுடைய நம் உயிர்ச் சைவ சமயத்தின் பேரால் செய்யப்படும் அந்த, மரபுப் பிறழ்ச்சி முள் குத்துவது போன்றது. சைவ சமயப் பேருருவில் அங்கங்களான சைவர்கள் அனைவரையுமே அத்தீச்செயல் அசௌகரியப்படுத்திவிடும். ஆகவே அந்த முட்களை தூக்கித் தூர எறிந்து, திருமுறைப் பெருமைகளை நாம் காத்தாக வேண்டும்.

'காத்தாள்பவர் காவல் இகந்தால்' சமயம் கறைபட்டுப்போகும். சைவத்திற்குக் காத்தாள்பவர் உள்ளனர். பதினெட்டு ஆதீனங்கள், சைவம் காக்கத் தோன்றியவை. அவ்வாதீனங்களில் சிலவற்றுக்குத் தக்க வாரிசுகள் கிடைக்காத நிலையும் உள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, தண்டல்காரர்கள் புறப்படுகின்றனர். இறைவனின் திருவருளால், பதினெண் ஆதீனங்களில் சிலபல ஆதீனகர்த்தர்களாகிய காத்தாள்பவர்கள், பிறர் பிறர் செய்யும் மரபுப் பிறழ்ச்சிகளை அனுமதிக்காமல் வேத நெறிச் சைவத்தைக் காத்தாளும் கடமையைச் செய்து கொண்டுதான் உள்ளனர். ஆசாரிய பீடங்களில் உள்ள அவர்களை மதியாமல் ஒதுக்கினால், தத்தம் பிழைகளைப் - பிழைப்புகளைக் கூச்சமின்றிச் செயற்படுத்தலாம் என்று மரபுப் பிறழ்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

திருமுறைகளைக் கும்பாபிஷேகக் கிரியைகளுக்கும், திருக்கோயில் வழிபாட்டுக் கிரியைகளுக்கும், திருமணம் முதலிய வாழ்வியல் கிரியைகட்கும் பயன்படுத்துபவர்கள் திர்முறைகளின் உயர் தரத்தைக் குறைப்பவர்களே ஆவர். அவர்களிடம் திருக்கோயில்களில் குடமுழுக்கு, இல்லறத்தில் திருமணம் போன்ற கிரியைகள் செய்ய வேண்டுமென்று விதிக்கும் விதிநூல் உண்டா? திருமுறைகளால் கிரியைகள் செய்வதற்கு, ஆட்சி உண்டா? ஆவணம் உண்டா? முன்னோர்களாகிய சான்றோர்களின் சாட்சி உண்டா? என்ற நம் வினாக்களுக்குப் பதிலில்லாமையால், சொல்ல முடியாமல் தவிப்பவர்கள் எத்திறத்தாலும் திருந்தாதவர்களாக உள்ளனர். சென்ற நூற்றாண்டில் தோன்றிய வேத மறுப்புச் செய்திகள் மறுக்கப்பட்டவை. திருமுறைச் சடங்குகளுக்கு அவைகள் விடைகள் ஆகா என்பதும் அவர்களுக்குப் புரியவில்லை.

சமயம், சமயச் சடங்குகளில் நம்பிக்கை என்பதே சமயியின் முதல் தகுதி. வேதாகம முறைப்படியே திருக்கோயில் பூசனைகள், நடைபெற வேண்டும்; அவ்வாறே தொன்றுதொட்டு நடந்தன. படைப்புக் காலம் தொட்டுச் சைவத்தின் கோட்பாடுகளும், நியதியும், நடைமுறையும் இவையே என்பதற்கான மிகப்பல ஆட்சிகள், ஆவணங்கள், சமயாசாரியர், சந்தானாச்சாரியர்கள், சமயச் சான்றோர்களின் திருவாக்குகள் ஆகியவற்றை காசிமடம் எழுதிய நூல்களில் தந்துள்ளார்கள். தொடர்ந்து நம் ஸ்ரீகுமரகுருபர திங்களிதழில் மெய்யுரை, வைதிகச் சைவம் ஆகிய தொடர்களில் தெரிவித்து வருகிறார்கள். அவற்றைக் கற்றுத் தெளிந்து மிகப் பலர், திருமுறைகள் போற்றும் நான்மறைச் சைவச் செந்நெறியில் பிடிப்புக்கொண்டுள்ளமை பரம்பொருளின் கருணையினாலேயே ஆகும்.

		"........................ - வீழ்த்த 
		புறநெறி ஆற்றாது அறநெறி போற்றி 
		நெறிநின்று ஒழுகுதிர் மன்ற 
		துறை அறி மாந்தர்க்குச் சூழ்கடன் இதுவே"

என்றருளிய நம் ஆதி முன்னவராகிய ஸ்ரீ குமரகுருபர சுவாமிகளின் அறவுரை முழுமையாக வென்றேறும்.

வேதம் என்றால் வடமொழி வேதத்தையே குறிக்கும் என்பது ஏன்?

இனச்சுட்டு - இனம் காட்டும் சுட்டு; இரண்டும் பலவும் இருந்தால் ஒன்றை அடையாளப்படுத்தும் சுட்டு.

ஞாயிறு என உதிப்பது ஒன்றுதான். அது தரும் வெயிலை, ஞாயிற்று வெயில் என்றாலே போதும். திங்கள் என உதிப்பது ஒன்றுதான். அது தரும் நிலவை, திங்கள் நிலவு என்றாலே போதும். ஒன்றே ஒன்றாக இருப்பவற்றிற்கு இனம் காட்டும் சுட்டு, பேச்சு வழக்கில் தேவையில்லை. செய்யுள் வழக்கில் ஒன்றே ஒன்றானவற்றிற்கும் பண்புச் சொல்லை இனம் சுட்டும் வகையில் சொல்லலாம் என்று,

		'இனச்சுட்டு இல்லாப் பண்புகொள் பெயர்க்கொடை
		வழக்கு ஆறு அல்ல; செய்யுள் ஆறே'

என்ற நூற்பா வாயிலாகத் தொல்காப்பியர் தெரிவித்துள்ளார். இதற்கு உதாரணம் 'செஞ்ஞாயிற்று வெயில் வேண்டினும், வெண் திங்களின் நிலவு வேண்டினும்' என்ற செய்யுள் தொடர். இதில், கரு ஞாயிறு என வேறொரு ஞாயிறோ, கருந்திங்கள் என வேறொரு திங்களோ இல்லையென்றாலும், 'செஞ்ஞாயிறு' என்றும், 'வெண்திங்கள்' என்றும் இனங்காட்டும் பண்படை வருகிறது.

மொழியால் இனஞ்சுட்டுதலும் உண்டு, மொழி, பண்பன்றெனினும் இனம் சுட்டத் தேவைப்படும். தண்டியார் என வடமொழிப் புலவர் ஒருவர்; தண்டியார் எனத் தமிழ்ப் புலவர் ஒருவர். இருவரும் ஒருவரே என்ற ஆய்வும் உண்டு. வடமொழியில் தண்டியார் செய்த நூல் 'காவ்யாதர்கம்' தமிழில் தண்டியார் செய்த நூல், ஆக்கியோன் பெயரால் தண்டியலங்காரம் எனப்படுகிறது. இரண்டும் அணி இலக்கண நூல்கள். தமிழில் உள்ள தண்டியலங்காரப் பாடலை, மேற்கோள் சொல்லும்போது, 'என்றார் தமிழ்த் தண்டியார்' என மொழிப் பெயரை இனம் சுட்டும் சொல்லாகச் சேர்த்துச் சொல்கிறோம்.

தமிழில் நான்மறை, வடமொழியில் நான்மறை என இரண்டு இருக்குமானால், மொழிப் பெயரைச் சேர்த்து இனம் சுட்டாவிட்டால், எந்த மொழியின் நான்மறை எனக் குழப்பம் ஏற்படும். தமிழில் எக்காலத்தும் நான்மறை - வேதம் இன்மையால், வடமொழியில் மட்டுமே நான்மறை - வேதம் உள்ளமையால் நம் முன்னோர் நான்மறை - வேதம் எனப் பொதுவாகவே குறிப்பிட்டனர்.

'அந்தணர் மறை' என்பதில் உள்ள அந்தணர் என்பது அடையாளப்படுத்துகின்ற இனச்சுட்டு ஆகாதா? என ஒரு வினா வரலாம். 'இந்தப் பெரியபுராணம் என்னுடையது' என்று ஒரு நூல் பிரதியைச் சுட்டிக்காட்டும்போது, பயன்பாட்டினால் உள்ள உரிமையை அடையாளப்படுத்துகிறோம். பயணங்களின்போது முன் பதிவு செய்த இடத்தை 'இது என் இடம்' என்கிறோமே அதைப்போல, குலத் தொழில்கள் ஆறனுள் ஒன்றாக வேதம் ஓதுதல், அத்யயனம் செய்தல் உரிமை பற்றிய சிறப்பு அடையே 'அந்தணர் மறை' என்பது. அந்த அடையில் அந்தணர்க்கு மட்டுமே உரிமையுடையது என்ற குறிப்பும் இல்லை. எனவே இது பயன்பாடு தொடர்பான அடைவே அன்றி இனச்சுட்டு ஆகாது.

எனவே, நான்மறை என்பதற்கும் வேதம் என்பதற்கும் மொழி குறித்த இனச்சுட்டு யாண்டும் இன்மையால் தமிழில் நான்மறை இருந்ததில்லை என உணர்க.

வேத காலம் - சைவத்தின் கொள்கை என்ன?

வேத காலம், தொல்காப்பியர் காலத்திற்குச் சில பல நூற்றாண்டுகட்கு முற்பட்டது எனச் சொல்லுவதுகூட, நம் சமய மரபுக்குப் புறகாகும். அநாதி காலத்தில் பெருமான் வேதம் அருளினார். ஒவ்வொரு யுகத் தொடக்கத்திலும் மீண்டும் மீண்டும் அவ்வவ்யுகங்களுக்கும் தருகிறார் என்பதே அனைத்துப் புராணங்களிலும் சூதர் அருளிய செய்தியாகும். திருவிளையாடற் புராணத்தில், வேதத்துக்குப் பொருள் அருளிச்செய்த படலத்தில், பெருமான், ஓரூழியை ஒடுக்கிப் பிறிதோரூழியை மலர்த்திய நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. புது ஊழியில் மீண்டும் பெருமான் திருவாக்கிலிருந்து ‘பிரணவம் உதித்து, அதனிடை வேதம் பிறந்தன’ (செ.4) என வருகிறது. இதுவே நம் சமயம் சொல்லும் வேதகாலமாகும். வேதாகமங்கள் என்றும் உள்ளவை. அவற்றின் பூசனைகள், சடங்குகள், கிரியைகள் மூலமான மையக் கோட்பாட்டினின்றும் பிறழ்வதில்லை.

இறைவன் வேதத்திற்குத் துணையாக ஆறு அங்கங்களையும் தோற்றுவித்தார். அனைத்தின் மூலங்களும் பெருமானின் அருளிப்பாடுகளே. வியாசர் நெறிப்படுத்துதலாகிய தொகுப்பு முறை செய்தார். வியாசரைப் பெருமைப்படுத்த - அப்பணி செய்ய - பெருமான் அவருக்கு அருள்பாலித்தார். பெருமான் அருளிய அதி நுட்ப மந்திரங்கள் முதலியவற்றுடன், அவர்தம் அருளாரமுதத்தில் ஊறித் திளைத்த இருடிகள் முதலாயினோரின் படையல்களையும் இணைத்து வகுத்ததில் வேத நுட்பங்கள் சற்றே இளகின. வேதங்களின் உண்மைப் பொருள் இறைவனால் மட்டுமே தரக்கூடியவை என்பதற்கான சான்றுகளை காசிமட நூல்களில் தந்துள்ளார்கள்.

நமக்குக் கற்பிக்கப்பெற்றவை

சைவத்தின் தலைமைச் சான்றுகள் இவையிவை என காசிமடம் ‘மெய்யும் பொய்யும்’ நூலுள் அறிவித்துள்ளது. சமய ஊற்றத்துடன் வேதம், திருமுறைகள் படித்தவர்கள் சொல்வதைத்தான் நாம் பரிசீலிக்க முடியும். பரம நாத்திகர்களுள் சிலர், வேதம் படித்தவர்கள். ‘முல்லர், வேதம் படித்தார். வேதம் அவரைப் பிழை செய்ய விடாது’ என்பது வேத சக்தியின்மேல் உள்ள நம்பிக்கையைக் காட்ட உதவுமே தவிர, பக்தியும், சமய ஊற்றமும், நம்பிக்கையும் இல்லாதவர்களுக்கு வேதசக்தி நலம் செய்யாது. அந்தத் துரைமார்கள் அதையும் இதையும் சொல்லி, சாதிகளால், மொழியால் இவையொத்த உணர்ச்சி வசப்பட வைக்கும் பொருண்மைகளால் பிரித்த பிரிப்புகள் மாபெரும் வெற்றியடைந்து இன்னமும் தொடர்ந்து கொண்டுள்ளன. சமயம் என்று வரும்போது கடைசிவரை அவர்கள், அவர்களாகத்தான் இருந்தார்கள். அது ஏன் என்று நாம் சிந்திப்பதே இல்லை. விவிலியத்தின் பழையஏற்பாட்டை, நம்பிக்கையின்றிப் பக்தியின்றிச் சீண்டினால் விளைவு என்னவாகும்? பிரிவுகளுக்காகவும் பிணக்குகளுக்காகவும் மேற்கொள்ளப்படுவன நம்பிக்கைகளிலிருந்து நம்மை நகர்த்திவிடும்.

மொழி பற்றித் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள்; சமயம் பற்றி, வழிபாடுகள் பற்றி, சடங்குகள் பற்றி, நெறிமுறைகள் பற்றித் திருமுறைகள், சாத்திரங்கள் - அருளாளர்களின் இலக்கியங்கள் ஆகியவற்றுக்கு மேலாக நமக்கு யாரும் எதுவும் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை.

எங்களுக்கு எந்த மொழியின் பேரிலும் என்றைக்கும் வெறுப்பில்லை. வடமொழி இனிப்பா? தமிழ்மொழி இனிப்பா? திருமுறை இனிப்பா? வேதம் இனிப்பா? என்ற ஆராய்ச்சிகளும் எங்களுக்கு இல்லை. எதுவொன்றையும் கசப்பு என்று சொல்வது மில்லை. இறைவன் அருளிய மொழிகள், இறைவன் அருளிய வேதாகமங்கள், இறைவன் உள்நின்று உணர்த்த வெளிப்பட்ட தேவார - திருமுறைகள், திருவருட் சம்மதத்துடன் அமைந்த, சாத்திரங்கள், சமய இலக்கியங்கள் இவற்றில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.

தேவகாரியங்களுக்காக வகுக்கப்பட்டதால் வடமொழி தேவபாஷை - என்றால் அதனால் தமிழின் சமத்துவ ஏற்றம் குறைவுபடாது. தெய்வபாஷை - தெய்வத்தினால் அருளப்பட்டது எனக் கொண்டால் தமிழும் தெய்வபாஷையே ஆகும்.

		“ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்
		காரிகை யார்க்கும் கருணை செய்தானே” - திருமந்திரம் - 65.

ஆசாரியன் யார்?

நம் தமிழ் நூல்களில் தற்போது கிடைக்கும் முதன்மை நூல் தொல்காப்பியம் ஆகும். அதன் பாயிரம், அதங்கோட்டாசான் என்ற தமிழறிஞரை, ‘நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்” என்கிறது. உலகப் பொதுமறை எனப் போற்றப்பெறும் திருக்குறள், வேதங்களை, ‘அந்தணர் நூல்’ என்றும், ‘ஓத்து’ என்றும், ‘அறு தொழிலோர் நூல்’ என்றும் சுட்டுகிறது. நம் பன்னிரு திருமுறைகள் சற்றொப்ப 1600 இடங்களில் வேதங்களை, அகமங்களைச் சிறப்பித்து உரைத்து, வேதங்கலை அருளியவர் நம்பெருமான் என்றும், அவர் வேதம் பாடுபவர் என்றும், வேத வடிவினர் என்றும் பலவாறாக விதப்பித்துப் புகழ்கின்றன. அவற்றுள் ‘வேதமோடாகமம் மெய்யாம் இறைவன் நூல்’ என்றும், ‘வேதத்தை விட்ட அறம் இல்லை’ என்றும் திருமந்திரம் முத்தாய்ப்பாக அறிவிக்கும் செய்திகள் பெரிதும் உளங்கொள்ளத் தக்கனவாகும். நால்வர் நெறியும், நால்வர் நெறியை உள்ளிட்ட திருமுறைகளின் நெறியும், சந்தானாசாரியர் நெறியும், தொகுமொத்தச் சைவத் தமிழ் நூல்கள் அனைத்தின் நெறியும் வேத நெறியே ஆகும். இவ்வனைத்திற்கும் முரண்பட்டு, முரண்டு பிடித்து, நாம் பின்பற்றுவதற்காகத் திருமுறைகள் சுட்டிக்காட்டும் வேதாகம நெறிக்கு விரோதமாக, அத்திருமுறைகளையே வைத்துப் புதுநெறி என்பதாகப் புறநெறி செய்கிறார்களே, அது நிச்சயமாக வேறொரு சமயமே ஆகும். அது சிவநெறிக்கு விரோதச் சமயமே ஆகும்.

நால்வர் காட்டிய வேதாகம நெறிக்கு நால்வர் பெருமக்களே ஆசாரியர்கள். அதற்கு முரணான நெறிக்கு நால்வர் பெருமக்கள் ஆசாரியர் ஆகார்.

ஆசாரியன் இல்லாமல் ஒரு நெறி உருவாக முடியாது; கூடாது. வேதாகம நெறிக்குப் புறம்பான இந்த முரண் சமயத்திற்கு ஆசாரியன் யார்? ஆசாரியன் இல்லையென்றால் அது தான்தோன்றியா? ஆசாரியன் இல்லாத அநாதையா?

வேதம் கற்க வேண்டுமா?

வேதம் கற்க வேண்டுமென்று நாம் சைவர்கள் யாரையும் வற்புறுத்துவதில்லை. வேதநிந்தனை கூடாது என்று நம் முன்னோர்கள் அறிவித்ததையும், வேத நிந்தனையே சைவ நிந்தனை, சிவ நிந்தனை என்ற சைவக் கோட்பாட்டையுமே தெரிவிக்கிறோம். வேத பாராயணத்துக்கும் எமக்கும் உள்ள தொடர்பு பற்றி நாம் பிறருக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை.

சதுர்வேதமும் கனாந்தரம் அத்யயனம் செய்தவர்களே தமக்கு வேதம் தெரியும் என்பதைக் கூசித்தான் பேசுவர். வேதம் என்ற சொல் சதுர்வேதத்தையும் உள்ளடக்கியது. வேதம் தெரியும் என்றால் சதுர்வேதமும் அத்யயனம் செய்வதாக அர்த்தப்படும். இந்தியத்தில் நூற்றுக்கும் குறைவானவர்களே சதுர்வேத பண்டிதர்களாக உள்ளனர்.

நாம் வற்புறுத்துவதெல்லாம் நமது சமயாசாரியர்கள் அருளியுள்ளபடி, திருமுறைகளை ஓதுங்கள், படியுங்கள் என்பதையே ஆகும். கோயிலில் வழிபாடுகள், இல்லச் சடங்குகள் வேதாகம முறைப்படியே நடைபெற வேண்டும் என்பதே ஆசாரியப் பெருமக்களின் அருளிப்பாடு. அதுவே சைவத்தின் தொன்றுதொட்ட மரபு. திருக்கோயில்களிலும், இல்லச் சடங்குகளிலும் ஓதுவாமூர்த்திகளைக் கொண்டு பெருமளவுக்குத் திருமுறைகளைப் பண்ணொன்ற ஓதுவித்தும் கேட்டும் பயன்பெறுக! பிழையின்றிப் படிக்கத் தெரிந்தவர்கள் நாளும் திருமுறைப் பாராயணம் செய்து இகபர சௌபாக்யம் அடைவிராகுக!

 

- திருச்சிற்றம்பலம் -

  • தொகுக்கப்பட்டது (Edited version); 
    நன்றி - ஸ்ரீ குமரகுருபரர் (18-10-2011 இதழ்), காசிமடம், திருப்பனந்தாள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

murugan.jpg
எம்.எஸ். சுப்பிரமணியம்


                முருகன் தமிழ்க் கடவுள். தமிழர் வாழும் இடமெல்லாம் முருக வழிபாடு உண்டு. இலங்கையில் திரிகோண மலைப்பகுதியும் தமிழர் வாழும் பகுதிதான். அங்கு கடைச் சங்க காலத்தில் ஒரு குறுநில மன்னன் ஆண்டு வந்தான். அவன் பெயர் நல்லியக் கோடன்.

தமிழகத்தின் வடபகுதி தொண்டை நாடு எனப் பட்டது. தொண்டை நாட்டிலுள்ள எயிற்பட்டினம், ஆமூர், வேலூர், மூதூர் ஆகிய நகரங்களை நல்லியக்கோடன் கைப்பற்றினான். அங்கு கோட்டைகள் அமைத்து அரசு புரிந்தான். இவனது குலதெய்வம் குமரக் கடவுள்.

தமிழகத்தில் இவன் ஆண்ட பகுதி ஓய்மா நாடு என வழங்கியது. இவனும் ஓய்மா நாட்டு நல்லியக்கோடன் எனப்பட்டான். இன்றைய திண்டிவனம் (திண்டிருணிவனம்- புளியங்காடு)கூட ஓய்மாநாட்டின் ஒரு பகுதிதான்! திண்டிவனத்தில் இப்பொழுது கிடங்கில் எனப்படும் பகுதியில் நல்லியக்கோடனின் கோட்டை இருந்துள்ளது. கிடங்கில் என்பது கோட்டையைக் குறிக்கும்.

திண்டிவனத்திற்கு அருகேயுள்ள மரக்காணம் பகுதியைச் சேர்ந்தது இடைக்கழிநாட்டு நல்லூர். இடைக்கழிநாடு என்பது மரக்காணம் அருகே இன்றும் உள்ளது. இந்த நல்லூரைச் சேர்ந்த புலவர் நந்தத்தனார். இவர் நல்லியக்கோடன்மீது பாடியது தான் சிறுபாணாற்றுப்படை என்னும் நூல்.     இது சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டில் ஒன்றாகும். நல்லியக்கோடன் புலவர்க்குப் பரிசிலாக யானைக் குட்டியும் வளநாடும் பொற்குவியலும் வழங்கிப் போற்றியுள்ளான்.

நல்லியக்கோடன் புகழ் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றதை அறிந்தனர் மூவேந்தர்.          அவர்கள் உள்ளத்தில் பொறாமைத் தீ மூண்டது. மூவேந்தரும் நல்லியக்கோடன்மீது திடீர் படையெடுப்பு நடத்தினர்.

"முருகனை நம்பினோர் முழு வெற்றி பெறுவர்' எனும் கொள்கையுடையவன்  நல்லியக்கோடன். அந்த நம்பிக்கையோடு  தன் படைகளுடன் மூவேந்தரை எதிர் கொண்டான்.

நல்லியக்கோடனின் அமைச்சன் ஒருவன் கெடுமதியாளன். அவன் பகைவருக்கு உளவு சொல்லித் தந்தான். அதனால் நல்லியக் கோடனின் படைகள் மூவேந்தர் படைகளின் தாக்குதலை சமாளிக்க  முடியாமல் சிதறின. தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்தான் நல்லியக்கோடன். இரவோடு இரவாக மனைவியுடன் வேலூர் சென்றுவிட்டான்.

murugan1.jpg


இந்த வேலூர் இன்று மாவட்டத் தலைநகராயுள்ள வேலூர் அல்ல. இது மரக்காணத்திற்கு அருகேயுள்ளது. இப்பொழுது "உப்பு வேலூர்' என வழங்கி வருகிறது.

நல்லியக்கோடன் வேலூரிலுள்ள முருகப் பெருமானின் திருவடிகளைச் சரணடைந்தான். ""ஐயனே, தோல்வியால் மானமழிந்தபின் இனி உயிர் வாழேன்'' என்று கூறிவிட்டு அயர்ந்து உறங்கி விட்டான். கனவில் கந்தவேள் கைவேலுடனும் மயிலுடனும் காட்சி தந்தான். ""நல்லியக்கோடனே, யாமிருக்க பயமேன்? வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை. நீ நீராடும் கேணி (கிணறு) நீரில் பூக்கும் ஒற்றைத் தாமரை மலரைப் பறித்து எமது ஆறெழுத்து மந்திரத்தை (ஓம் சரவணபவ) சொல்லி பகைவர்மீது வீசி எறிவாயாக'' என்று திருவருளாணையிட்டு  மறைந்தார்.

விழித்தெழுந்த நல்லியக்கோடன் புத்துணர்ச்சி பெற்றான். போர்க்களம் சென்றான்.

வள்ளிமணாளன் முருகன் சொன்னபடி கேணியில் பறித்த தாமரை மலரை பகைவர்மீது வீசினான். மலரே வேலாக மாறியது. பகைவர் தலைகளைச் சாய்த்தது. அவனது போர்ப்படைகள் செய்ய முடியாததை முருகனின் வேற்படை செய்து முடித்தது.

"அம்மலர் அயிலென அணுகி ஆங்குள 
வெம்மைசேர் படைகளை வீட்டி தெவ்வர்கள் 
தம்முழி அமைச்சன் தன் தலையைக் கொய்து உயர் 
செம்மனக் கோடன்தன் திருக்கை சேர்ந்ததே'

என்கிறது பாடல்.

(அயில்- வேல்; வீட்டி- அழித்து; தெவ்வர்கள்- பகைவர்கள்; கொய்து- பறித்து.)

murugan2.jpg


வேலாக மாறிய தாமரை மலர் பகைவர்களை அழித்து, கொடிய அமைச்சன் தலையை வெட்டி நல்லியக்கோடன் கையில் சேர்த்தது! நல்லியக்கோடனைக் காக்கும் வேல் கொடிய    அமைச்சனைத் தாக்கும் வேலாகியது. கடவுள் கை ஆயுதங்கள் என்றுமே நல்லோருக்குத் தீங்கு செய்யாது. எனவே அவற்றிற்கு கொடியோர்தான் அஞ்ச வேண்டும். அதிலும் மனந்திருந்திவிட்டால் அவர்களையும் வாழ வைக்கும் வேலாயுதம் என்பதற்கு மயிலாக வாழ்ந்து கொண்டிருக்கும் சூரபத்மனே சான்று!

பொறாமைத் தீ மூவேந்தர்க்கு தோல்வியைத் தந்தது. குறுநில மன்னன் நல்லியக்கோடனிடம் பணிந்தனர் மூவேந்தர்.

தனக்கு வெற்றி தந்த வேலவனுக்கு நல்லியக்கோடன் ஓர் ஆலயம் எடுத்தான். அந்த ஊர் பெயரும் அன்று முதல் வேலூரானது.

(வாரியார் சுவாமிகள் கூறியதை ஆதாரமாய்க் கொண்டு எழுதப்பட்டது).

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=8615



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சங்கத் தமிழ் இலக்கியத்தில் காளிதாசனின் உவமைகள்

காளிதாசனின் காலம் குறித்து நீண்ட காலமாக பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தன. கி. மு முதல் நூற்றாண்டு முதல் குப்தர்களின் காலமான நான்காம் நுற்றாண்டு வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் பல தேதிகளைக் குறிப்பிட்டார்கள். ஆனால் அவைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் நல்ல சான்றுகள் சங்கத் தமிழ் இலக்கியத்தில் கிடைத்துள்ளன. இதன் மூலம் காளிதாசனின் காலம் சங்க காலத்துக்கு முன் என்பது தெள்ளத் தெளிவாகிறது. புகழ்பெற்ற வரலாற்று நிபுணரும் கலைத்துறை வல்லுனருமான சிவராம மூர்த்தி போன்றோர் காளிதாசனை விக்ரமாதிதன் காலத்தில் வைத்தனர். சங்க இலக்கியமும் அவர் காலம் கி.மு முதல் நூற்றாண்டு என்பதை உறுதி செய்கிறது.

 

காளிதாசன் உலக மகா கவிஞர்களில் ஒருவன். மிகப் பெரிய நாடகாசிரியன். அவனுடைய ஏழு நூல்கள் அவனுக்கு உலகப் உகழை ஈட்டித் தந்துள்ளன. காளிதாசன் உவமை மன்னன். ஆயிரத்துக்கும் அதிகமான உவமைகளை ரத்தினக் கற்கள் போல ஆங்காங்கு பொருத்தமாகப் பயன்படுத்தியுள்ளான். சங்க இலக்கிய நூல்களில் இவனுடைய ஆயிரம் உவமைகளில் அல்லது சொற்றொடர்களில் 225 வரை அப்படியே கையாளப்பட்டுள்ளன.

 

ஜி யு போப் கண்டுபிடிப்பு

இந்திய பண்பாடு பற்றிப் பேசும் யாவரும் காளிதாசனின் காவியங்களைப் படித்திருக்க வேண்டும். அல்லது அவர்களுடைய அறிவு முழுமை பெற்றதாகாது. ஆங்கில இலக்கியத்துக்கு ஷேக்ஸ்பியர் எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு இந்தியப் பண்பாட்டுப் படிப்புக்கு காளிதாசன் முக்கியம். அவனது காவியங்களும் நாடகங்களும் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் ஆங்கிலம் போன்ற முக்கிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. கபிலரின் குறிஞ்சிப் பாட்டைப் படித்த பிரபல தமிழ் அறிஞர் ஜி யு போப் அது காளிதாசன் காவியத்தின் தழுவலே என்று கூறிவிட்டார். இரண்டு நூல்களையும் படிக்கும் எவருக்கும் இது எளிதில் புலப்படும். கபிலரும் குறிஞ்சிப் பாட்டை தமிழை இகழ்ந்த பிரமதத்தனுக்குப் பாடம் புகட்டவே செய்ததால் காளிதாசன் போலவே எழுதி அவனை ஒரு வழிக்குக் கொண்டுவந்தார் என்றால் அது மிகையாகாது. பிரகதத்தனை மனம் மாற்றியதோடு அவனையும் தமிழில் கவிதை எழுத வைத்தார் கபிலர்.

 

கபிலர் ஒரு பிராமணப் புலவர். அவர் ஆரிய மன்னன் பிரகததனுக்கு சம்ஸ்கிருதம் மூலம் தான் தமிழ் கற்றுத் தர முடியும். அப்போது காளிதாசனின் உவமைகலைப் போல தமிழிலும் செய்ய முடியும் என்பதைக் காட்டியிருப்பார். சங்கத் தமிழ் கவிகளில் அதிகம் புனைந்தவர் (235 பாடல்கள்) கபிலர்தான். இவருக்கு அடுத்தபடியாகப் பெயர் பெற்றவர் பரணர். இவரும் பிராமணப் புலவரே. தமிழ் அறிஞர்கள் கபில-பரணர் என்று இரட்டையர்களாகவே எப்போதும் எழுதுவர். பரணரோவெனில் காளிதாசனின் வாசகங்களை அப்படியே எடுத்தாண்டுள்ளார். பரணர் வேதங்களில் கரைகண்டவராக இருக்க வேண்டும். கடல்கள் சத்தியம் தவறாது. எத்தனை ஆறுகள் எவ்வளவு தண்ணீர் கொண்டுவந்து கொட்டினாலும் கடல் எல்லை தாண்டாது, நிரம்பிவழியாது என்ற வேத வாசகத்தையும் பரணர் அப்படியே சங்கப் பாடலில் வடித்துள்ளார்.

தமிழ்ப் புலவர்கள் இமயம் வரை சென்றிருப்பது அரிதே. அவர்கள் கார், ரயில் விமானம், சாலை, நதிப் பாலங்கள் இல்லாத காலத்தில் காடுகள்  வழியே போய் வருவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் கபிலர், பரணர் முதலிய பிராமணப் புலவர்கள் கங்கை நதி குறித்தும் இமயம் குறித்தும் சர்வ சாதாரணமாகப் பாடுகின்றனர். ஒருவேளை இமயத்திப் புலி, வில், மீன் பொறித்த மூவேந்தர்களுடன் போயிருந்தாலும் காளிதாசனின் சொற்றொடர்கள் இல்லாது வேறு விஷயங்களைக் கூறியிருப்பர்.

 

காளிதாசன் ஒரு மாமேதை. அவன் பேசாத பொருள் இல்லை. அவனுடைய பூகோள அறிவோ மூக்கில் விரலை வைத்து வியக்கும் வண்ணம் உள்ளது. இமய மலையை பூமியை அளக்கவந்த அடிக் கோல் என்கிறார். வரை படம் இல்லாத காலத்தில் 1500 மைல் நீளமுள்ள இமயமலையை அவர் எப்படி இப்படி வருணித்தார் என்பது ஆச்சரியமே.

 

ஈரான் முதல் இந்தோனேஷியா வரை பல இடங்களை அவர் குறிப்பிடுகிறார். கப்பல் கவிழ்ந்தால் அந்த சொத்துயாருக்குப் போய்ச் சேரும் என்ற சட்ட விசயங்களை அலசுகிறார். ரகு வம்ச காவியத்தில் ஸ்வயம்வரத்துக்கு வந்த மன்னர்களை வருணிக்கையிலும் ரகுவின் திக் விஜயத்தை வருணிக்கையிலும் ஒவ்வோரு நாடு பற்றியும் முக்கியமான வியப்பூட்டும் குறிப்புகளைக் கொடுக்கிறார்.

இமயமலையை “தேவதாத்மா இமாலய:” என்று குமார சம்பவத்தில் அவர் கூறியதை சங்க இலக்கியத்தில் அப்படியே காண்கிறோம். பொற்கோட்டு இமயம் என்ற காஞ்சன ஸ்ருங்கத்தையும் இப்போதைய பெயர் கஞ்சன் ஜங்கா) தமிழில் காண்கிறோம். நாகரத்தினம், ஸ்வாதி நட்சத்திர மழையில் முத்து உருவாதல், முருகனுக்கும் அணங்குக்கும் உள்ள தொடர்பு, மகளிர் முருகன் கோட்டத்துக்குச் செல்ல அஞ்சுதல் (கலம் தொடா மாக்கள்), பறவைகள் குடியேற்றம், பாண்டியனுக்கும் அகத்தியனுக்கும் உள்ள தொடர்பு, பாண்டிய மன்னரின் அஸ்வமேத யாகம் (பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதியின் அவப்ருத ஸ்நானம்), ஜாவா சுமத்ராவிலிருந்து வரும் வாசனைத் திரவியங்கள், யவனர்களின் இந்திய தொடர்பு, தீப சிகா உவமை (மதுரைக் காஞ்சி)  இப்படி 225 இடங்களில் காளிதாசனின் உவமைகளையும் சொற்றொடர்களையும் சங்கத்தமிழில் காண்கிறோம். தமிழ்ப் புலவர்கள் எழுதியதை எல்லாம் காளிதாசன் படித்துக் “காப்பி” அடித்திருந்தால் அவனை உவமை மன்னன் என்று உலகம் போற்றாது. ஆனால் பல தமிழ் கவிஞர்கள் காளிதாசனைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்பற்றினார்கள் என்றால் அதை நம்ப முடியும்.

 கோணல் பார்வை வெள்ளைக்காரர்கள், பிராக்ருத மொழியில் எழுதப்பட்ட காமச் சுவை சொட்டும் காதா சப்த சதியை காளிதாசனுக்கு முன் வைத்து பல கதைகளைக் கட்டிவிட்டிருந்தனர். ஆனால் அந்த நூலோ தமிழ் முருகனைக் கண்டுகொள்ளவே இல்லை. வினாயகர் பற்றி ஓரிடத்தில் பேசுகிறது. காளிதாசனோ பழம்தமிழ் நூல்களோ கணபதியைப் பற்றிப் பேசவே இல்லை. ஏனெனில் இரண்டும் கணபதி வழிபாடு பெரிய அளவில் பரவும் முன்னரே எழுதப்பட்டவை. (கட்டுரையின் இரண்டாம் பகுதியில் மேலும் பால சான்றுகளைத் தருவேன்).



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Mathuranthakam arrers rents 20121119c_016101009



__________________
«First  <  1 2 3 4 5  >  Last»  | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard