New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ‘டிவி சீரியல் ‘ பார்க்காதீர்கள் : கனிமொழி!


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: ‘டிவி சீரியல் ‘ பார்க்காதீர்கள் : கனிமொழி!
Permalink  
 


கருணாநிதியின் பேத்தி எழிலரசி கட்டிய அன்னதானக் கூடம்

June 10, 2010 by தேவப்ரியாஜி

அன்னதானகூடம் ஸ்டாலின் திறந்தார்

சென்னை, ஜூன் 10:மயிலாப்பூர் அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயிலில் ரூ. 13 லட்சம் செலவில் கட்டப்பட்ட அன்னதான மண்டபத்தை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
.
முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வி, இவரது மகள் எழிலரசியும், அவரது கணவர் டாக்டர் ஜோதிமணி ஆகியோர் மயிலாப்பூர் அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் கோயில் அருகே டாக்டர் ஜோதி மணியின் தந்தை கரந்தை. கப்பல் முருகேசன் செட்டியார், தாயார் ஜானகி அம்மாள் ஆகியோரது நினைவாக ரூ. 13 லட்சம் செலவில் அன்னதான மண்டபத்தை கட்டியுள்ளனர்.

இன்று காலை துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் அன்னதான மண்டபத்தையும், கல்வெட்டையும் திறந்து வைத்தார். முதலமைச்சரின் மனைவி தயாளு அம்மாள் குத்து விளக்கேற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சாந்தா ஸ்டாலின், செல்வி, மு.க. அழகிரி மகள் கயல்விழி, அவரது கணவர் வெங்கட், மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் மனைவி பிரியா, கலாநிதி மாறனின் மனைவி காவேரி மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்.

மேலும் எஸ்.வி.சேகர் எம்எல்ஏ, தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜே. அன்பழகன், 144வது வட்ட திமுக செயலாளரும், முண்டகக்கண்ணியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவருமான எல்.உதயகுமார், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சம்பத், முதன்மைச் செயலாளர் முத்துச்சாமி, ஆணையாளர் (பொறுப்பு) காவேரி, ஆலய செயல் அலுவலர் த.மோகனசுந்தரம் மற்றும் அறங்காவலர்கள் வாசுதேவன், டில்லி, கிருஷ்ணவேணி, ராமநாதன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். புதிய அன்னதான மண்டபம் திறப்பு விழாவையொட்டி ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அமைச்சர் பேட்டி¦தொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:தமிழ் நாட்டில் 360 திருக்கோயில்களில் அன்னதானம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து திருக்கோயில்கள் வளாகத்திற் குள்ளேயே தற்போது அன்னதான நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதன் அருகிலேயே தனியாக அன்னதான மண்டபங்களை உருவாக்கி தொடர்ந்து அன்னதானம் வழங்க திட்டமிட்டிருக்கிறோம். அந்த வகையில் டாக்டர் ஜோதிமணி எழிலரசி குடும்பத்தினர் முண்டகக்கண்ணியம்மன் கோயிலுக்கு ரூ. 13 லட்சம் செலவில் இந்த அன்னதான மண்டபத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதனை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்திருக்கிறார். அற நிலை யத் துறை சார்பில் தமிழகம் முழுவதும் பல திருக்கோயில்களில் திருப்பணிகள் செய்து திருக்குடமுழுக்கு நடந்து வருகிறது.

தற்போது மத்திய அரசின் 13வது நிதிக்குழு கோயில் திருப்பணிக்காக தமிழகத்திற்கு ரூ. 100 கோடி ஒதுக்கியிருக்கிறது. இந்த தொகை முழுவதையும் கொண்டு இன்னும் ஏராளமான திருக்கோயில்களில் திருப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.

பொது மக்களும் தாராளமாக நன்கொடை தந்தால் திருப்பணிகளுக்கும் இதுபோன்ற அன்னதான மண்டபங்கள் கட்டுவதற்கும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்..

முண்டகக்கண்ணி கோயிலில் முதல்வர் குடும்பத்தினர்
சென்னை, ஜுன்.10 (டிஎன்எஸ்) சென்னை மயிலாப்பூர் அருள்மிகு முண்டகக்கண்ணி அம்மன் திருக்கோயிலில் முதல்வரின் துணைவியார் தயாளு அம்மாள் உட்பட அக்குடும்பத்தினர் அம்மனை தரிசனம் செய்தனர்.

முண்டகக்கண்ணி அம்மன் கோயில் எதிரே முதல்வரின் பேத்தி எழிலரசி மற்றும் அவரது கணவர் டாக்டர் ஜோதிமணி ஆகியோர் 13 லட்சம் ரூபாய் செலவில் அன்னதான மண்டபம் ஒன்றை கட்டியுள்ளனர். இந்த மண்டபத்தை துணை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு கருணாநிதியின் மனைவி தயாளுஅம்மாள் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில் துணை முதல்வரின் மனைவி சாந்தா ஸ்டாலின், முதலமைச்சரின் மகளும், ஏழிலரசியின் தாயாருமான செல்வி, மு க அழகிரியின் மகள் கயல்விழி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் மனைவி பிரியா, கலாநிதி மாறனின் மனைவி காவேரி, முதல்வரின் மகன் மு க தமிழரசு குடும்பத்தினர் உட்பட முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் அன்னதான திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன், ஆணையர் சம்பத், முதன்மைச் செயலாளர் முத்துசாமி, முண்டகக்கண்ணி அம்மன் திருக்கோயிலின் அறங்காவலர் குழு தலைவர் உதயகுமார், செயல் அலுவலர் மோகன சுந்தரம், ஆணையாளர் காவேரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி முடிந்து துணை முதலமைச்சர் மு க ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றதும், தயாளு அம்மாள் உட்பட முதல்வரின் குடும்பத்தினர் முண்டகக்கண்ணி அம்மன் கோயிலுக்குச் சென்று பயபக்தியுடன் வழிபட்டனர்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஆபாச நடனம்தான் தமிழ்க் கலையா? கொதிக்கிறார் ராஜா

a.jpg


ராஜா... இப்போது உக்கிரத்தின் உச்சத்தில்!


''இசையும் கலையும் உலகமயமாகிடுச்சுன்னு சொல்றாங்க. இசையும் இசைக்கான கருவிகளும் உலகமயமாகலாம். அந்த இசையை உருவாக்கும் சக்தியின் இடம் எது? அது உள்ளுக்குள் ஆன்மாவில் இருக்கிறது. அந்தச் சக்தியை யாராலும் உலகமயமாக்க முடியாது'' - கண்மணிகள் உருள்கின்றன.

'ஜா டே ஜடுத்தி' என்ற இந்திப் படத்துக்கு இளையராஜாதான் இசை. இந்தியாவின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான விஸ்வாஸ் பாட்டீல் எழுதி, சாகித்ய அகாடமி விருதுபெற்ற கதை இது. இந்தப் படம், மாறி வரும் கிராமிய நடனக் கலைகளைப்பற்றியது. இதற்காக மகாராஷ்டிராவின் பூர்வீக இசை மற்றும் நடனக் கலைகள்பற்றி ஆறு நாட்கள் பயணம் செய்து நேரடிய£க அறிந்து வந்திருக்கிறார் ராஜா. 

''பாரம்பரியக் கலை வடிவங்களை எப்படிக் காப்பாற்றுவது என மராட்டிய மக்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இசையும் நடனமும் இணைந்த கலவையில் தங்களின் பண்பாடு, கலாசாரம், வீரம், சோகம், பக்தி என அத்தனை உணர்ச்சிகளையும் அழகாகச் சொல்கிறார்கள். அனைத்தும் அவர்களின் வாழ்க்கையை ஒட்டியே இருக்கின்றன. ஆதிகாலத்தின் போர் முறையைச் சொல்லும் நடனம் என்னை பிரமிக்கச் செய்தது. போரின்போது மனித சக்தி அதிகம் செலவாகாமல், போர் புரிய வேண்டும். அதேபோல அதிக சக்தி செலவாகாமல், ஆனால் பார்க்க மிக எனர்ஜியான நடனம் ஆடினார்கள். கத்தியைச் சுழற்றி வீசி ஆடுபவர் நடுவில் இருக்கிறார். அவரைச் சுற்றி நான்கு பேர்... ஒருவரின் முழங்காலில் வெங்காயம், இன்னொருவரின் உள்ளங்கையில் உருளைக்கிழக்கு, சாய்ந்து படுத்திருக்கும் ஒருவரின் கழுத்தில் வாழைப்பழம். என்ன நடக்கப் போகிறது என்று ஆவலாகப் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே, ரிதமிக்காக ஆடிக்கொண்டே கண் இமைக்கும் நேரத்தில் வெங்காயம், உருளைக்கிழங்கு, வாழைப்பழம் மூன்றையும் துண்டு துண்டாக வாளால் வெட்டுகிறார். வாள் சுழற்றும் வேகத்தில் உடல் மீது லேசாகப் பட்டாலும் ஆறு மாதங்களுக்கு எழ முடியாது. அப்படி ஒருவேகம், வீச்சு. இந்த எனர்ஜியை 'குளோப லைஸ்' பண்ண முடியுமா?a.jpg

சதாரா செல்லும் நெடுஞ்சாலையில் மாமரங்கள் நிறைந்த ஒரு தோப்பில், பழங்காலத்து நடனக் கலைகளை ஆடிக்கொண்டு இருக்கிறது ஒரு குழு. நவீன யுகத்தின் பாதிப்பு சிறிதும் இல்லாமல் ஆர்மோனியம், டோல்கி, லசிம் போன்ற பாரம்பரிய இசைக் கருவிகளை வைத்துக்கொண்டு கொஞ்சம்கூட சினிமா இசையின் பாதிப்பு இல்லாமல் ஆடுகிறார்கள். அவர்கள் அனைவரும் சத்ரபதி சிவாஜியின் வாரிசுகள். கலைக்காகவே தங்களின் வாழ்வை அர்ப்பணித்தவர்கள். 

என் பயணத்தின் இறுதி நாளில் பாலே நடனம் போன்ற ஒன்றைக் கண்டேன். நிகழ்ச்சி ஒரு மேடையில்தான் நடந்தது. ஆனால், கேரளப் படகுப் போட்டி முதல், மீனவனின் நடனம் வரை அனைத்தையும் அப்படியே கண் முன்னால் கொண்டுவந்தது, கலை ரசனையின் உச்சம். மகாராஷ்டிராவின் ஒரு குக்கிராமத்தில் இந்தக் கலையை நிகழ்த்துபவர் யார் என விசாரித்தால், மும்பைப் பல்கலைக்கழகம் ஒன்றின் தொல்லியல் துறைத் தலைவர். அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் ஏன் நம் ஆட்களுக்கு வரவில்லை? 

மேல் நாட்டில் பாலே டான்ஸ், ஓபராய், சிம்பொனி, பாப், ஜாஸ் என அந்த நாட்டுக் கலைகள் எல்லாம் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. ஏனெனில், அவை அவர்களுக்குக் கட்டாயப் பாடம் ஆக்கப்பட்டு இருக்கிறது. அங்கு 87 சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா இன்னும் இயங்கி வருகிறது. ஆனால், நம் தமிழ்க் கலைகளின் நிலைமை? 

மயிலாட்டம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம், தேவராட்டம், கோலாட்டம், பா¬வக் கூத்து, உடுக்குப் பாட்டு, கும்மிப் பாட்டு என நம்மிடம் 300 வகையான கிராமியக் கலைகள் இருந்தன. இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக 50 கலைகள் மட்டும் ஒரு சிலரின் சொந்த முயற்சியில் உயிர் வாழ்கின்றன. நலிந்துபோன கலைகளைக் கஷ்டப்பட்டுக் காப்பாற்றுபவர்கள், தங்கள் பிள்ளைகளாவது வேறு நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்றுதான் ஏங்குகிறார்கள். அந்த அளவுக்கு வருமானம் இல்லை. இந்த மாதிரியான கலைகளுக்கு உயிர் கொடுக்கவும், அவற்றை மக்களிடம் எடுத்துச் செல்லவும் நம்மிடம் போதுமான ஆற்றலும் திறமையும் இருக்கிறது. ஆனால் யாரும் செய்வது இல்லை. நம் ஊரில் என்ன நடக்கிறது? பிரமாண்ட மேடைகள் அமைத்து, அதில் அரைகுறை ஆடை அணிந்த சினிமா நடிகைகளை அழைத்து ஆடவிடுகிறார்கள். சினிமா விழாவில் அப்படி நடந்தால்கூடப் பரவாயில்லை. மற்ற விழாக்களிலும் இந்த ஆபாச நடனம் நடந்தால் நம் பாரம்பரியக் கலைகள் எப்படி வளரும்?a.jpg

இந்தியில் 'சாணக்கியா' என்ற மிகப் புகழ்பெற்ற தொடரின் இயக்குநர் சந்திரபிரகாஷ், 'சிலப்பதிகாரம் கதையை இந்தியில் எடுக்கப்போகிறேன். அதைப்பற்றிய ஆராய்ச்சி நூல்களைக் கொடுத்து உதவுங்கள்' என்று என்னைக் கேட்டார். 'என்னை விட, எல்லோரையும்விட சிலப்பதிகாரம் பற்றி அதிகம் தெரிந்தவர் முதல்வர் கருணாநிதிதான்' என்று சொல்லி முதல்வரைச் சந்திக்கச் சொன்னேன். ஓர் இந்திக்காரர் சிலப்பதிகாரத்தின் மீது ஆர்வம் காட்டுகிறார். ஆனால், நாம் மறந்துவிட்டோம். 

நான் திருவாசகம் இசை உருவாக்குவதற்கு முன்பு தமிழகக் கலைகளை மையமாகவைத்து இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. பொருளாதாரமும் நேரமும் ஒத்துழைக்கவில்லை. தமிழர்களின் பாரம்பரியக் கலைகளைக் காப்பாற்ற வேண்டும். அவை ஆயிரமாயிரம் ஆண்டு தமிழர் பண்பாட்டின் அடையாளங்கள்!''


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கொட்ட கொட்ட விழித்து...

ministersinkoil.jpg

shockan.blogspot.com

சொந்த ஊரான சாத்தமங்கலம் மீது மட்டற்ற பாசமும், சாத்தமங்கலம் மாடக்கோட்டையில் உள்ள தனது குலதெய்வமான முனீஸ்வரர் மீது மட்டற்ற பக்தியும் கொண்டவர் சென்னை கே.கே.நகர் கவுன்சிலரும் தி.மு.க. பகுதிச் செயலாளருமான தனசேகரன். வருடா வருடம் சென்னையில் இருந்து பெரிய திரை, சின்னத்திரை நாட்டியத் தாரகைகளை அழைத்து வந்து தனது ஊரில் கவர்ச்சி நடன நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்துவார் தனசேகரன். 2 வருடம் முன்பு நடிகை நமீதாவை அழைத்து வந்து ஆடவிட்டு, பஞ்சப்பிரதேசத் தின் இளைஞர் பட்டாள நெஞ்சங்களை இசை நாட்டிய கடலில் நீந்தவிட்டார்.
ministersinkoil1.jpg
இந்த ஆண்டோ... பாபிலோனா, நீபா, ஷில்பா, கீர்த்திகா, சுஜிபாலா என கவர்ச்சித் தோப்பையே இறக்குமதி செய்து சுமார் 20 ஆயிரம் மக்களை கவர்ச்சி நாட்டிய சுனாமியில் தத்தளிக்க விட்டு பாராட்டுகளை பெற்றிருக்கிறார்.

21.5.10 வெள்ளிக்கிழமை.

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகிலுள்ள சாத்தமங்கலத் தில், கே.கே.நகர் தனசேகரனின் பங்களாவில், அமைச்சர்கள் சுப.தங்கவேலன், பெரியகருப்பன், இளையாங்குடி எம்.எல்.ஏ. மதியரசன், எம்.பி.ரித்தீஷ், வைகைப்புயல் வடிவேலு உட்பட ஏராளமான வி.ஐ.பி.களும், கட்சிக்காரர்களும், உறவினர்களும் நட்பு வட்டாரமும் குவிந்திருக்க...

நண்டு, இறால், மீன், சிக்கன், மட்டனோடு வெரைட்டியான விருந்து தொடங்கியது. பந்தி முடிந்ததும்... கூட்டம் கோயில் நோக்கிச் சென்றது.

முனியன் கோயிலருகே... சென்னை நேரு ஸ்டேடிய லெவலுக்கு மேடை, ஒளிவெள்ளம் பாய்ச்சிய மின்விளக்குகள். லேசர் விளையாட்டுகளுக்கு பிறகு டான்ஸ் நிகழ்ச்சி தொடங்கியது.

""பாருங்கடா... கட்சிக் கூட்டம்னா எப்பவுமே லேட்டா வர்ற நம்ம அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன்... டான்ஸ் பார்க்க அட் வான்ஸா வந்துட்டாக... பக்கத்தில யாரு? அட நம்ம அமைச்சர் சுப.தங்க வேலன்தான்... பாருங்கடா... என்னமா ரசிக்கிறாக?'' -தொண்டர்கள் பலரின் பார்வை அமைச்சர்களின் ரசனை மீதே குவிந்திருந்தது.

நாட்டிய நிகழ்ச்சியின் நடுவில் மேடையேறி மைக்கைப் பிடித்தார் வைகைப்புயல் வடிவேலு.

""என் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய கூட்டத்தை நான் பார்த்ததே இல்லை... என் பங்காளி தனசேகரனுக்கு இம்புட்டுச் செல்வாக்கா? தலைவர் கலைஞரோட "இளைஞன்' பட சூட்டிங்குக்காக ஊட்டிக்குப் போற கேப்புல இங்கே வந்தேன். நானும் ஒரு காலத்தில இந்த மாதிரி கூட்டத்தோட கூட்டமா உக்காந்து வேடிக்கை பார்த்தவன்தான்... இன்னக்கி... ராத்திரியில... ஜனங்க எல்லாரும் கொட்டக் கொட்ட முழிச்சிருந்து, கவலையை மறந்து சந்தோஷமா இருக்கிறதுக்கு நானும் ஒரு காரணமா இருக்கேனே... இதுக்காக ரொம்ப சந்தோஷப்படுறேன்...''.

""அண்ணே... பேசுனது போதும் பாட்டுப் பாடுங்கண்ணே!'' கூட்டத்தினர் குரல் கொடுத்தனர்.

""என்ன பாட்டுப் பாட? எம்.ஜி.ஆர். பாட்டுப் பாடவா? வேணாம்... என் பாட்டையே பாடுறேன்... எட்டணா இருந்தா எட்டூருக்கென் பாட்டுக் கேட்கும்...'' பாடலைப் பாடி பலத்த கைதட்டலைப் பெற்றுக் கொண்டு இறங்குகிறார் வடிவேல். மீண்டும் நடன அலைகள்... கிராமத்து ஜனங்களை மூழ்கடிக்கின்றன.

கிராமத்து மக்கள் மட்டுந் தானா? அமைச்சர் பெருமக்கள் இருவரும் மற்ற வி.ஐ.பி.களோடு கொட்டக் கொட்ட விழித்திருந்து... ""நடன நிகழ்ச்சி'' மங்களம் பாடிய பிறகுதான் எழுந்தார்கள்.

இந்த நடன நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக, ரிக்கார்ட் டான்ஸ் கலைஞர்கள் சிலரும் வந்திருந் தனர். அவர்களில் ஒருவரான ராணியும் அவர் குடும்பத்தினரும் நம்மை நெருங்கினார்கள்.

""மிந்தியெல்லாம் திரு விழாக்கள்ல ரிக்கார்ட் டான்ஸ் வைப்பாக. எங்க மாதிரி ரொம்ப குடும்பங்கள் அதை வச்சுத்தான் அரை வயித்துக் கஞ்சிக் குடிச்சோம். ரொம்ப ஆபாசம்னு சொல்லி அதுக்கு தடை பண்ணிப்பிட்டாக.... நீங்களே சொல்லுங்க. இவுக போட்ட குத்தாட்டத்தை விடவா நாங்க அசிங்கமா ஆடுனம்? எங்களுக்கு அனுமதி இல்லை. மெட்ராஸ்ல இருந்து... டி.வி.யில, சினிமாவுல ஆடுறவுகளைக் கூட்டியாந்து ரிக்கார்ட் டான்ஸ் வச்சா... எம்புட்டு போலீஸ் பாதுகாக்கிறாக... மந்திரிய, எம்.பி., எம்.எல்.ஏ.வெல்லாம் ஈப்போறது கொடத் தெரியாம ரசிக்கிறாக!'' தனது ஆதங்கத்தை நம்மிடம் கொட்டிவிட்டுப் போனார் ராணி.

""இந்தக் கவர்ச்சி டான்சுக்கு எப்படி அனுமதியும் கொடுத்து பாதுகாப்பும் கொடுத்தீர்கள்?'' ஏ.எஸ்.பி. தலைமையில் வந்திருந்த போலீசாரிடம் கேட்டோம்.

""நாங்க கோயில் திருவிழாவுக்குத் தான் அனுமதி கொடுத்தோம். பாதுகாப்பும் கொடுக்கிறோம்!'' சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஓமணப் பெண்ணே...!

2.jpgநாமக்கல் மாவட்டத்தில் தகதகவென மின்னும் ஃப்ளெக்ஸ் பேனர்கள் அழைக்கின்றன... 'கேரள மணமகள் வேண்டுமா?' திரும்பும் திசை எல்லாம் 'இவ்விட வல்லிய குட்டி உண்டு' என வரவேற் கிறார்கள்.

''இது என்ன பெரிய அதிசயம்? பல வருஷமாவே இது நடக்குதே!'' என்கிறார்கள்.

ஹலோ, கற்பனையை ஓட்ட வேண்டாம். கேரளப் பெண்களை மணம் முடிப்பது இந்தப் பக்கம் ரொம்ப ஈஸி!1.jpg

லத்துவாடி கிராமத்து விவசாயி நல்லதம்பியைப் பார்த்தோம். ''ஆமாங்க... எனக்கு 48 வயசுங்க. ஊரு ஊராப் பொண்ணு தேடி வயசானதுதான் மிச்சம். அப்புறம்


தான் ஒரு புரோக்கர் மூலமா, கேரளா போனேன். பார்த்தேன்... பிடிச்சுப்போச்சு. டக்குனு கல்யாணம் முடிச்சுக்கிட்டு வந்துட்டேன். இந்தப் பகுதியில நிறைய பேரு இப்படித்தான் கல்யாணம் பண்றாங்க. இப்ப எனக்குக் கல்யாணம் முடிஞ்சு நாலு வருஷமாச்சு...'' என்றவர், ''சுனிதா... ஒரு கோஃபி கொண்டு வரூ...'' என்று குரல் கொடுக்க... புரூ காபிக் கோப்பையுடன் தேவதை போல் அழகான ஒரு பெண் நின்றார்... நல்லதம்பியின் மனைவி சுனிதா.

மலையாள வாடை கலந்த தமிழில் பேசினார் சுனிதா. ''ஞான் டென்த் கிளாஸ் வரை படிச்சிருக்கு. எங்க அச்சன் கேரளத்தில் ஒரு 'லோரி டிரைவர்'. எங்கூட பொறந்தது மூன்று பொண் குட்டிங்க. வீட்ல வசதி ரொம்பக் குறைச்சல். கேரளாவில் வரதட்சணை அதிகம். சரியான வரன் அமையலா. அப்புறம்தான் ஒரு புரோக்கர் மூலமா இவரு பெண் பார்க்க வந்தாரு. கல்யாணம் முடிஞ்சு, நல்லாப் பார்த்துக்கிறார். ஓணம், விஷ§ சமயங்களில் எங்ஙள் ஊருக்கு ஜோடியாப் போய் வர்றோம். எங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்களும் இங்க வந்து போறாங்க. லத்துவாடி கிராமக் கோயில் திருவிழா இப்ப நடக்கு. எங்க அச்சனும் அம்மாவும் வந்திருக்காங்க. அவங்களுக்கு இந்த ஊர் திருவிழா ரொம்ப பிடிச்சுப்போயி...'' எனத், தன் பெற்றோரையும் அழைத்து அறிமுகப் படுத்தினார்.



சுனிதாவின் அப்பா சுவாரஸ்யமாக நம்மிடம், ''எம் பேரு சுகுமாரன். இது என் மனைவி வல்சா. வந்து நாலுநாளாச்சு. தமிழ் நாட்டுக்கு எம் பொண்ணைக் கொடுத்தது சந்தோஷமா இருக்கு. நான் ஈழவர் சமுதாயத்தைச் சேர்ந்த வன். என்னோட மாப் பிள்ளை கவுண்டர் சாதிக்காரர். ஆனாலும் பழக்கத்தில் எங்களுக்குள் இப்போ எந்தப் பாகுபாடும் இல்லை. நல்லமுறையில் எம் பொண்ணு வாழ்க்கை போயிட்டிருக்கு... அதானே முக்கியம். என்னோட சின்னப் பொண்ணுக்கும்கூட இவங்க உறவில்தான் மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் முடிச்சிருக்கோம்...'' என்று கவுண்டர் வீட்டு சம்பந்தியாக உருகி உருகிச் சொல்லி முடிக்க... நமக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.

அடுத்ததாக, மாணிக்கம்பாளையம் பகுதி விவசாயியான ஆனந்தன், அவரது கேரள மனைவி சுஜா தம்பதியைச் சந்தித்தோம். கன்னமெல்லாம் வெட்கம் பூசி சுஜா நெளிய, ''திருமணம் முடிஞ்சு ஏழு மாசம்தான் ஆச்சு. 35 வயசாகியும் இங்கே பெண் கிடைக்கல. அப்புறம்தான் திருச்சூர் போய், சுஜாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்க பரம்பரையில் இதுதான் முதல் கலப்புத் திருமணம். வாழ்க்கை ரொம்ப ஜாலியா இருக்குங்க'' என்றார் ஆனந்தன். ஓரக் கண்ணில் கணவரைப் பெருமையாகப் பார்த்துக்கொண்டு இருந்தார் சுஜா.

அடுத்து, திருமணம் முடிந்து எட்டு வருடங்களான ஒரு முன்னோடித் தம்பதியும் அருகில் இருப்பதைக் கேள்விப் பட்டு, வடகால் புதூர் சென்றோம். கணவர் செங்கோடன், டவுனுக்குப் போயிருக்க... கறவை மாடுகளுக்குத் தீனி போட்டுக்கொண்டு இருந்தார் கீதா. ''என்னோட ஊரு மலப்புரம். இந்த நாமக்கல் பகுதிக்கு மருமகளா வந்த முதல் கேரளப் பெண் நானாத்தான் இருக்கும். இங்க வந்து விவசாய வேலைகள் எல்லாம் நல்லாக் கத்துக்கிட்டேன். அடிக்கடி எங்க நாட்டுக்கும் போயி வர்றேன். எங்க வீட்டுக்காரரு கவுண்டர் சாதி. நான் ஈழவர். அதனால, எல்லாம் ஏதோரு கொழப்பமும் இல்ல...'' என்று ஜம் தமிழில் சிரித்தார் கீதா.

கேரள மணமகள்களை ஏற்பாடு செய்துவரும் கல்யாண புரோக்கர்களில் ஒருவர் முருகரவி. ''இந்தப் பகுதியைச் சேர்ந்த பல ஜோடிகள் கொளுத்தும் நாமக்கல் வெயிலுக்குத் தப்பிக்க குளுகுளு மாமனார் வீடான கேரளாவில் போய் அடைக்கலமாயிட்டாங்க...'' என்ற சம்மர் ஸ்பெஷல் நியூஸ§டன் பேச்சைத் தொடங்கினார். ''நான் 10 வருஷமா கல்யாணத் தரகர் வேலை பண்றேன். முதலில் உள்ளூர் பொண்ணு, மாப்பிள்ளைன்னுதான் எல்லார் மாதிரியும் அலைஞ்சுட்டு இருந்தேன். நாமக்கல் மாவட்டத்தில் விவசாயம் செய்கிற கவுண்டர் சமூகத்து இளைஞர்களுக்கு இங்கே பெண் பொருத்தமான அந்தஸ்தில் கிடைக்கலைங்க. அதில், பொண்ணு பாத்துப் பாத்தே சலிச்சுப்போய், கல்யாண ஐடியாவைக் கைவிட்டவங்களும் உண்டு.

ஒரு கட்டத்தில், 'எந்த சாதி, மதம் ஊரு, நாடுன்னாலும் பரவாயில்லை. பொண்ணு கிடைச்சாப் போதும்'னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. நானும் அந்த சமயத்துல 'கேரளாவில் நிறையப் பெண்கள் வரதட்சணை காரணங்களினால் திருமணம் நடக்காமத் தவிக்கிறாங்க'ன்னு கேள்விப்பட்டேன். அங்கு புரோக்கர் மூலமா, இங்கே உள்ள இளைஞர்களுக்குப் பெண் தேடத் தொடங்கினேன். அது கேரளப் பெண்களுக்கும் உபகாரமா இருந்ததால, மளமளன்னு நிறைய ஜோடி களுக்கு திருமணம் நடக்க ஆரம்பிச்சது.

இதுவரை நான் இப்படி 60 கல்யாணம் செய்து வெச்சிருக்கேன் (அடேங்கப்பா!). எல்லாரும் ஜாம்ஜாம்னு இருக்காங்க. இன்னொரு விஷயம், தமிழ்நாட்டு ஆண் களைக் கல்யாணம் செய்துக்க கேரளப் பெண்கள் ரொம்ப ஆர்வமா இருக்காங்க. இப்பக்கூட 40 பெண்கள் ரெடியா இருக்காங்க... சீக்கிரமே ஜோடி சேர்த்துக் கெட்டிமேளம் கொட்டவெச்சிடுவேன், பாருங்க...'' என்று பூரிப்பாகச் சொன்னவரிடம்,

''கேரளா போனா, உடனே கல்யாணத்துக்கு பொண்ணு கிடைச்சிடுமா?'' என்று கேட்டோம்.



''அதான் இல்லை. கேரள மக்கள் ரொம்ப விவரம். மாப்பிள்ளைக்கு வயசு கொஞ்சம் கூடக் குறைய இருந்தாலும் கவலைப்பட மாட்டாங்க. ஆனா, மனை வியை அக்கறையா கவனிச்சுப்பாரா, அசையாச் சொத்து இருக்குதானு பார்க்குறாங்க...'' என்றவர், தொடர்ந்து அந்தத் திருமண நடவடிக் கைகளைப்பற்றி விரிவாகச் சொன்னார் -

''பெண் கேட்டு என்னி டம் வரும் நாமக்கல் மாப் பிள்ளைகளை கேரளா அழைச்சுட்டுப் போய், தகுந்த பெண்களைக் காட்டுவேன். இருவருக்கும் பிடிச்சிருந்தா, தனியா மனம் திறந்து இருவரையும் பேசவெப்போம். ரெண்டு தரப்பும் ஓகே சொன்னாப் போதும்... சாதி, ஜாதகம், படிப்பு, வயசு(?) இப்படி எதுவும் கேரளப் பெண் வீட்டார் கேட்க மாட்டார்கள். ஆனால், நிச்சயத்தாம்பூலம் மாற்றுவதற்குள், மணமகனின் 'மெடிக்கல் சர்டிஃபிகேட்'டை கண்டிப்பாக் கேட்பாங்க. குறிப்பா, ஹெச்.ஐ.வி. நெகட்டிவ் ரிசல்ட் கொடுத்தாகணும். அவங்க கேட்கிற அறிவியல்பூர்வமான ஜாதகம் அது ஒண்ணுதான். அதேபோல் பொருளாதார ஜாதகம் ஸ்ட்ராங்கா இருக்கான்னு சொத்து விவரங்களை உறுதிபடுத்திக்குவாங்க. கல்யாணம் கண்டிப்பா கேரளாவில்தான் நடக்கணும்கிறது அவங்களோட கண்டிஷன். திருமணத்தைப் பதிவு செஞ்சு, திருமணப் பதிவு நகலை காவல் துறை, வருவாய்த் துறை, மகளிர் மேம் பாட்டுத் துறைக்கெல்லாம் பக்காவாக அனுப்பி, பதிவு செஞ்சுட்டுத்தான் புகுந்த வீட்டுக்குப் பெண்ணை அனுப்பிவைப்பாங்க. அவங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையுது. நமக்கு நல்லாப் பொழைப்பு ஓடுது!'' என்று மகிழ்ந்து சிரிக்கிறார் முருகரவி,

''எப்படியோ... சாதி விஷயத்தில் விட்டுத்தராத கவுண்டர் சமூகத்தில் இருந்து, இப்படி பிராக்டிகலாகச் சிந்திக்க ஆரம்பித்திருப்பது நல்ல விஷயம். இது காலத்தின் கட்டாயம். வம்சம் விருத்தியடையவும், குழந்தைகள் ஆரோக்கியமாகப் பிறக்கவும், இதுபோல் சாதி மாறி மட்டுமின்றி, மாநிலம் மாறியும் கல்யாணம் பண்ணிக்கொள்வது ரொம்பவே துணை நிற்கும்!'' என்று அசத்தி முடித்தார்.

இந்தக் கலப்புத் திருமணங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் சமூக சேவகர் கபிலர்மலை சந்திரனைப் பார்த்தோம்.

''வறட்சியான நாமக்கல் மாவட் டத்தில், வரதட்சணை அதிகம் கொடுத்துத்தான் முன்பெல்லாம் பெண் களை திருமணம் செய்து கொடுத்தாக வேண்டும். ஒரு கட்டத்தில் அதுவே பெண்ணைப் பெற்றவர்களுக்கு பெரும் சுமையாகிவிட்டது. அதன் வெளிப்பாடாக, பெண் சிசுக் கொலைகள் இங்கும் அரங்கேறின. அதோடு, வயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று அறியும் ஸ்கேனிங் முறையாலும் 80-களில் பலர் பெண் சிசுக்களைக் கலைத்துவிட்டனர். அதுதான் இப்போது கல்யாண வயதில் இங்கே பெண்கள் இப்போது குறைவாக இருப்பதற்கு ஒரு காரணம்.

கவுண்டர் சமுதாயம்தான் என்றில்லை... லாரித் தொழில் அதிகம் உள்ள நாமக்கல்லில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் என்று பரவிவிட்ட தகவலை நம்பி, இங்கு உள்ள பையன்களுக்குப் பெண் கொடுக்கத் தயங்குபவர்களும் இருக்கிறார்கள். பெண் குழந்தைகளை விரும்பிப் பெற்றுக்கொண்டவர்கள், அவர்களை நன்றாகப் படிக்கவைக்கும் வழக்கம் இங்கு உண்டு. இதனால் நாமக்கல் பெண்கள் பலரும் உயர் கல்வி முடித்து நல்ல வேலையிலும் இருக்கிறார்கள். லாரி, விவசாயம் என்று தொழில் செய்துவரும் பல நடுத்தர வாலிபர்களின் அந்தஸ்து இவர்களோடு சரிப்படுவதில்லை. அதுதான், சொத்துப் பத்திரமும் மெடிக்கல் சர்டிபிகேட்டுமாக இளைஞர்கள் கேரளா பக்கம் படையெடுத்துச் செல்கின்றனர்'' சொல்லி முடித்தார் சந்திரன்! எல்லாம் பாரதியார் ஏற்கெனவே கண்ட கனவுதானே... சேர நன்னாட்டிளம் பெண்களுடனே' மாநில பேதம் கடந்து இன்னும் பலர் மணமுடித்து சந்தோஷ வாழ்க்கை வாழக்கடவது!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஓமணப் பெண்ணே...!

2.jpgநாமக்கல் மாவட்டத்தில் தகதகவென மின்னும் ஃப்ளெக்ஸ் பேனர்கள் அழைக்கின்றன... 'கேரள மணமகள் வேண்டுமா?' திரும்பும் திசை எல்லாம் 'இவ்விட வல்லிய குட்டி உண்டு' என வரவேற் கிறார்கள்.

''இது என்ன பெரிய அதிசயம்? பல வருஷமாவே இது நடக்குதே!'' என்கிறார்கள்.

ஹலோ, கற்பனையை ஓட்ட வேண்டாம். கேரளப் பெண்களை மணம் முடிப்பது இந்தப் பக்கம் ரொம்ப ஈஸி!1.jpg

லத்துவாடி கிராமத்து விவசாயி நல்லதம்பியைப் பார்த்தோம். ''ஆமாங்க... எனக்கு 48 வயசுங்க. ஊரு ஊராப் பொண்ணு தேடி வயசானதுதான் மிச்சம். அப்புறம்


தான் ஒரு புரோக்கர் மூலமா, கேரளா போனேன். பார்த்தேன்... பிடிச்சுப்போச்சு. டக்குனு கல்யாணம் முடிச்சுக்கிட்டு வந்துட்டேன். இந்தப் பகுதியில நிறைய பேரு இப்படித்தான் கல்யாணம் பண்றாங்க. இப்ப எனக்குக் கல்யாணம் முடிஞ்சு நாலு வருஷமாச்சு...'' என்றவர், ''சுனிதா... ஒரு கோஃபி கொண்டு வரூ...'' என்று குரல் கொடுக்க... புரூ காபிக் கோப்பையுடன் தேவதை போல் அழகான ஒரு பெண் நின்றார்... நல்லதம்பியின் மனைவி சுனிதா.

மலையாள வாடை கலந்த தமிழில் பேசினார் சுனிதா. ''ஞான் டென்த் கிளாஸ் வரை படிச்சிருக்கு. எங்க அச்சன் கேரளத்தில் ஒரு 'லோரி டிரைவர்'. எங்கூட பொறந்தது மூன்று பொண் குட்டிங்க. வீட்ல வசதி ரொம்பக் குறைச்சல். கேரளாவில் வரதட்சணை அதிகம். சரியான வரன் அமையலா. அப்புறம்தான் ஒரு புரோக்கர் மூலமா இவரு பெண் பார்க்க வந்தாரு. கல்யாணம் முடிஞ்சு, நல்லாப் பார்த்துக்கிறார். ஓணம், விஷ§ சமயங்களில் எங்ஙள் ஊருக்கு ஜோடியாப் போய் வர்றோம். எங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்களும் இங்க வந்து போறாங்க. லத்துவாடி கிராமக் கோயில் திருவிழா இப்ப நடக்கு. எங்க அச்சனும் அம்மாவும் வந்திருக்காங்க. அவங்களுக்கு இந்த ஊர் திருவிழா ரொம்ப பிடிச்சுப்போயி...'' எனத், தன் பெற்றோரையும் அழைத்து அறிமுகப் படுத்தினார்.



சுனிதாவின் அப்பா சுவாரஸ்யமாக நம்மிடம், ''எம் பேரு சுகுமாரன். இது என் மனைவி வல்சா. வந்து நாலுநாளாச்சு. தமிழ் நாட்டுக்கு எம் பொண்ணைக் கொடுத்தது சந்தோஷமா இருக்கு. நான் ஈழவர் சமுதாயத்தைச் சேர்ந்த வன். என்னோட மாப் பிள்ளை கவுண்டர் சாதிக்காரர். ஆனாலும் பழக்கத்தில் எங்களுக்குள் இப்போ எந்தப் பாகுபாடும் இல்லை. நல்லமுறையில் எம் பொண்ணு வாழ்க்கை போயிட்டிருக்கு... அதானே முக்கியம். என்னோட சின்னப் பொண்ணுக்கும்கூட இவங்க உறவில்தான் மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் முடிச்சிருக்கோம்...'' என்று கவுண்டர் வீட்டு சம்பந்தியாக உருகி உருகிச் சொல்லி முடிக்க... நமக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.

அடுத்ததாக, மாணிக்கம்பாளையம் பகுதி விவசாயியான ஆனந்தன், அவரது கேரள மனைவி சுஜா தம்பதியைச் சந்தித்தோம். கன்னமெல்லாம் வெட்கம் பூசி சுஜா நெளிய, ''திருமணம் முடிஞ்சு ஏழு மாசம்தான் ஆச்சு. 35 வயசாகியும் இங்கே பெண் கிடைக்கல. அப்புறம்தான் திருச்சூர் போய், சுஜாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்க பரம்பரையில் இதுதான் முதல் கலப்புத் திருமணம். வாழ்க்கை ரொம்ப ஜாலியா இருக்குங்க'' என்றார் ஆனந்தன். ஓரக் கண்ணில் கணவரைப் பெருமையாகப் பார்த்துக்கொண்டு இருந்தார் சுஜா.

அடுத்து, திருமணம் முடிந்து எட்டு வருடங்களான ஒரு முன்னோடித் தம்பதியும் அருகில் இருப்பதைக் கேள்விப் பட்டு, வடகால் புதூர் சென்றோம். கணவர் செங்கோடன், டவுனுக்குப் போயிருக்க... கறவை மாடுகளுக்குத் தீனி போட்டுக்கொண்டு இருந்தார் கீதா. ''என்னோட ஊரு மலப்புரம். இந்த நாமக்கல் பகுதிக்கு மருமகளா வந்த முதல் கேரளப் பெண் நானாத்தான் இருக்கும். இங்க வந்து விவசாய வேலைகள் எல்லாம் நல்லாக் கத்துக்கிட்டேன். அடிக்கடி எங்க நாட்டுக்கும் போயி வர்றேன். எங்க வீட்டுக்காரரு கவுண்டர் சாதி. நான் ஈழவர். அதனால, எல்லாம் ஏதோரு கொழப்பமும் இல்ல...'' என்று ஜம் தமிழில் சிரித்தார் கீதா.

கேரள மணமகள்களை ஏற்பாடு செய்துவரும் கல்யாண புரோக்கர்களில் ஒருவர் முருகரவி. ''இந்தப் பகுதியைச் சேர்ந்த பல ஜோடிகள் கொளுத்தும் நாமக்கல் வெயிலுக்குத் தப்பிக்க குளுகுளு மாமனார் வீடான கேரளாவில் போய் அடைக்கலமாயிட்டாங்க...'' என்ற சம்மர் ஸ்பெஷல் நியூஸ§டன் பேச்சைத் தொடங்கினார். ''நான் 10 வருஷமா கல்யாணத் தரகர் வேலை பண்றேன். முதலில் உள்ளூர் பொண்ணு, மாப்பிள்ளைன்னுதான் எல்லார் மாதிரியும் அலைஞ்சுட்டு இருந்தேன். நாமக்கல் மாவட்டத்தில் விவசாயம் செய்கிற கவுண்டர் சமூகத்து இளைஞர்களுக்கு இங்கே பெண் பொருத்தமான அந்தஸ்தில் கிடைக்கலைங்க. அதில், பொண்ணு பாத்துப் பாத்தே சலிச்சுப்போய், கல்யாண ஐடியாவைக் கைவிட்டவங்களும் உண்டு.

ஒரு கட்டத்தில், 'எந்த சாதி, மதம் ஊரு, நாடுன்னாலும் பரவாயில்லை. பொண்ணு கிடைச்சாப் போதும்'னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. நானும் அந்த சமயத்துல 'கேரளாவில் நிறையப் பெண்கள் வரதட்சணை காரணங்களினால் திருமணம் நடக்காமத் தவிக்கிறாங்க'ன்னு கேள்விப்பட்டேன். அங்கு புரோக்கர் மூலமா, இங்கே உள்ள இளைஞர்களுக்குப் பெண் தேடத் தொடங்கினேன். அது கேரளப் பெண்களுக்கும் உபகாரமா இருந்ததால, மளமளன்னு நிறைய ஜோடி களுக்கு திருமணம் நடக்க ஆரம்பிச்சது.

இதுவரை நான் இப்படி 60 கல்யாணம் செய்து வெச்சிருக்கேன் (அடேங்கப்பா!). எல்லாரும் ஜாம்ஜாம்னு இருக்காங்க. இன்னொரு விஷயம், தமிழ்நாட்டு ஆண் களைக் கல்யாணம் செய்துக்க கேரளப் பெண்கள் ரொம்ப ஆர்வமா இருக்காங்க. இப்பக்கூட 40 பெண்கள் ரெடியா இருக்காங்க... சீக்கிரமே ஜோடி சேர்த்துக் கெட்டிமேளம் கொட்டவெச்சிடுவேன், பாருங்க...'' என்று பூரிப்பாகச் சொன்னவரிடம்,

''கேரளா போனா, உடனே கல்யாணத்துக்கு பொண்ணு கிடைச்சிடுமா?'' என்று கேட்டோம்.



''அதான் இல்லை. கேரள மக்கள் ரொம்ப விவரம். மாப்பிள்ளைக்கு வயசு கொஞ்சம் கூடக் குறைய இருந்தாலும் கவலைப்பட மாட்டாங்க. ஆனா, மனை வியை அக்கறையா கவனிச்சுப்பாரா, அசையாச் சொத்து இருக்குதானு பார்க்குறாங்க...'' என்றவர், தொடர்ந்து அந்தத் திருமண நடவடிக் கைகளைப்பற்றி விரிவாகச் சொன்னார் -

''பெண் கேட்டு என்னி டம் வரும் நாமக்கல் மாப் பிள்ளைகளை கேரளா அழைச்சுட்டுப் போய், தகுந்த பெண்களைக் காட்டுவேன். இருவருக்கும் பிடிச்சிருந்தா, தனியா மனம் திறந்து இருவரையும் பேசவெப்போம். ரெண்டு தரப்பும் ஓகே சொன்னாப் போதும்... சாதி, ஜாதகம், படிப்பு, வயசு(?) இப்படி எதுவும் கேரளப் பெண் வீட்டார் கேட்க மாட்டார்கள். ஆனால், நிச்சயத்தாம்பூலம் மாற்றுவதற்குள், மணமகனின் 'மெடிக்கல் சர்டிஃபிகேட்'டை கண்டிப்பாக் கேட்பாங்க. குறிப்பா, ஹெச்.ஐ.வி. நெகட்டிவ் ரிசல்ட் கொடுத்தாகணும். அவங்க கேட்கிற அறிவியல்பூர்வமான ஜாதகம் அது ஒண்ணுதான். அதேபோல் பொருளாதார ஜாதகம் ஸ்ட்ராங்கா இருக்கான்னு சொத்து விவரங்களை உறுதிபடுத்திக்குவாங்க. கல்யாணம் கண்டிப்பா கேரளாவில்தான் நடக்கணும்கிறது அவங்களோட கண்டிஷன். திருமணத்தைப் பதிவு செஞ்சு, திருமணப் பதிவு நகலை காவல் துறை, வருவாய்த் துறை, மகளிர் மேம் பாட்டுத் துறைக்கெல்லாம் பக்காவாக அனுப்பி, பதிவு செஞ்சுட்டுத்தான் புகுந்த வீட்டுக்குப் பெண்ணை அனுப்பிவைப்பாங்க. அவங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையுது. நமக்கு நல்லாப் பொழைப்பு ஓடுது!'' என்று மகிழ்ந்து சிரிக்கிறார் முருகரவி,

''எப்படியோ... சாதி விஷயத்தில் விட்டுத்தராத கவுண்டர் சமூகத்தில் இருந்து, இப்படி பிராக்டிகலாகச் சிந்திக்க ஆரம்பித்திருப்பது நல்ல விஷயம். இது காலத்தின் கட்டாயம். வம்சம் விருத்தியடையவும், குழந்தைகள் ஆரோக்கியமாகப் பிறக்கவும், இதுபோல் சாதி மாறி மட்டுமின்றி, மாநிலம் மாறியும் கல்யாணம் பண்ணிக்கொள்வது ரொம்பவே துணை நிற்கும்!'' என்று அசத்தி முடித்தார்.

இந்தக் கலப்புத் திருமணங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் சமூக சேவகர் கபிலர்மலை சந்திரனைப் பார்த்தோம்.

''வறட்சியான நாமக்கல் மாவட் டத்தில், வரதட்சணை அதிகம் கொடுத்துத்தான் முன்பெல்லாம் பெண் களை திருமணம் செய்து கொடுத்தாக வேண்டும். ஒரு கட்டத்தில் அதுவே பெண்ணைப் பெற்றவர்களுக்கு பெரும் சுமையாகிவிட்டது. அதன் வெளிப்பாடாக, பெண் சிசுக் கொலைகள் இங்கும் அரங்கேறின. அதோடு, வயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று அறியும் ஸ்கேனிங் முறையாலும் 80-களில் பலர் பெண் சிசுக்களைக் கலைத்துவிட்டனர். அதுதான் இப்போது கல்யாண வயதில் இங்கே பெண்கள் இப்போது குறைவாக இருப்பதற்கு ஒரு காரணம்.

கவுண்டர் சமுதாயம்தான் என்றில்லை... லாரித் தொழில் அதிகம் உள்ள நாமக்கல்லில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் என்று பரவிவிட்ட தகவலை நம்பி, இங்கு உள்ள பையன்களுக்குப் பெண் கொடுக்கத் தயங்குபவர்களும் இருக்கிறார்கள். பெண் குழந்தைகளை விரும்பிப் பெற்றுக்கொண்டவர்கள், அவர்களை நன்றாகப் படிக்கவைக்கும் வழக்கம் இங்கு உண்டு. இதனால் நாமக்கல் பெண்கள் பலரும் உயர் கல்வி முடித்து நல்ல வேலையிலும் இருக்கிறார்கள். லாரி, விவசாயம் என்று தொழில் செய்துவரும் பல நடுத்தர வாலிபர்களின் அந்தஸ்து இவர்களோடு சரிப்படுவதில்லை. அதுதான், சொத்துப் பத்திரமும் மெடிக்கல் சர்டிபிகேட்டுமாக இளைஞர்கள் கேரளா பக்கம் படையெடுத்துச் செல்கின்றனர்'' சொல்லி முடித்தார் சந்திரன்! எல்லாம் பாரதியார் ஏற்கெனவே கண்ட கனவுதானே... சேர நன்னாட்டிளம் பெண்களுடனே' மாநில பேதம் கடந்து இன்னும் பலர் மணமுடித்து சந்தோஷ வாழ்க்கை வாழக்கடவது!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Thanks-Reporter shockan.blogspot.com

a.jpg

பூமிகாவின் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) பகீர் கதையைக் கேட்டு ஆடிப்போயிருக்கிறார்கள் மதுரைக் காரர்கள். மதுரையின் பிரபல கல்லூரியில் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படிக்கிறாள் பூமிகா. வீட்டின் செல்ல மகளாய் துருதுருவென வளைய வந்துகொண்டிருந்த அவளுக்கு காதல் வடிவில் விபரீதம் வந்தது. அந்த விபரீதம் வெளிப்பட்ட இடம் ஜெய்ஹிந்த்புரத்தில் இருக்கும் அந்த புரோட்டாக் கடை.

ராஜா ஷெரிப் என்கிற பப்லு, தன் நண்பர் களான மணிகண்டன், ஜெகதீசனுடன் டாஸ்மாக் பாருக்குப் போய்விட்டு… தள்ளாட்டமாய் அந்த புரோட்டா கடைக்கு வந்து சாப்பிட உட்கார்ந் தான். “”புரோட்டா இல்லைண்ணே தோசை போடவா?”’’ என சப்ளையர் கேட்க…. ’”"டேய் என்னங்கடா புரோட்டா இல்லைங்கிறீங்க?”’என நண்பர்களுடன் பப்லு தகராறு பண்ண … பக்கத்தில் இருக்கும் “டைபி’ அலுவலகத்தில் இருந்த நாகராஜன் போன்ற தோழர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்த னர்.’’எதுக்குப்பா தகராறு?’’ என பப்லு டீமை விலக்கி விட்டனர். அப்போது பப்லுவுக்குத் தெரியவில்லை தன் செல்ஃபோன் கீழே விழுந்தது. செல்ஃபோன் ஒருவர் கண்ணில் பட… யாருடையதாக இருக்கும் என அலுவலகத்தில் வைத்து சோதித்தார். அப்போது… செல்ஃபோனில் பூமிகாவின் அப்பட்டமான நிர்வாணப் படம் மானிட்டரில் ஓட…. ’அய்யோ… இது நம்ம நண்பரின் காலேஜ் படிக்கும் தங்கச்சியாச்சே…’’என்று பதற, அங்கிருந்தவர்கள் அத்தனை பேரும் அதிர்ச்சி விலகாமல் ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்துக்கு ஓடினார்கள்.

அங்கிருந்த காக்கிகள் அந்த போனை மேலும் சோதித்துத் திகைத்ததோடு … செல்ஃபோனுக்குச் சொந்தக்காரனான பப்லுவை மடக்கினர். “”"ஐயோ அடிக்காதீங்க. நானும் மணிகண்டனும் ஜெகதீசனும் சேர்ந்துதான் இப்படிப் பண்ணினோம்”’என்று பப்லு அலற… அவர்களையும் அள்ளிவந்தனர். மணிகண்டனும் ஜெகதீசனும், “”’பப்லுவின் அண்ணன் கார்த்திக்தான் இந்த விசயத்தில் குருநாதர். அவன் எடுத்த படங்களைப் பார்த்துதான் நாங்களும் பல மாணவிகளை வளைச்சி.. ஆசை தீர அனுபவிச்சி… படம் எடுத்தோம்”’என்று தங்களிடம் சிக்கிய பெண்களின் பட்டியலை ஒப்பித்தார்கள்.
a.jpg
இந்த தகவல் பப்லு வீட்டுக்குப்போக… பதறிப்போனார் பப்லுவின் அப்பா நாசர். தனது ஆளும்கட்சி நண்பர்கள் மூலம் காக்கிகளை அணுக... இதன்பின் ஜெய்ஹிந்த்புர காக்கிகளின் போக்கு அப்படியே மாறியது. இங்கு நீதி கிடைக்காது என தெரிந்து கொண்ட தோழர்கள்… ஏ.சி. வெள்ளதுரையிடம் ஓடினார்கள். தகவல் அறிந்து திடுக்கிட்ட பூமிகா…தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றாள். காப்பாற்றப்பட்டாள்.

“கல்லூரி மாணவியை இப்படிப் படம் பிடிச்சிருக்கானுங்களா?’’என பற்களைக் கடித்த ஏ.சி.வெள்ளதுரை… பூமிகா இருக்கும் இடத்துக்கே விரைந்தார்.’ “”பயப்படாம நடந்ததை எல்லாம் அப்படியே சொல்லும்மா?” என அவர் கேட்க… கண்ணீரும் கம்பலையுமாக… தான் ஏமாந்த கதையை விவரிக்க ஆரம்பித்தாள் பூமிகா.

“”முதல்ல பப்லுவின் அண்ணன் கார்த்திக் தான் என்னைக் காதலிப்பதா சொல்லித் துரத்தி னான். ஒரு கட்டத்தில் அவன் மீது இரக்கப்பட்டு நான் சம்மதித்தேன். சினிமா, பார்க்குன்னு என் னோடு சுத்தியவன்… ஒருநாள் தன் நண்பன் மணி கண்டனின் அறைக்கு அழைச்சிக்கிட்டுப் போனான். அங்க அவன் கூல்டிரிங்ஸ் கொடுத்தான். அதில் தூக்க மாத்திரை கலந்தது எனக்குத் தெரியாது. அதைக் குடிச்சிட்டு மயங்கிய என்னை…. சூறை யாடிட்டான். அப்ப எனக்குத் தெரியாமலே என்னை அப்பட்டமா அவன் படம்பிடிச்சிருக்கான். அந்த சம்ப வத்துக்குப் பின் சென்னைல வேலை கிடைச்சிருக் குன்னு போனவன்… என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை. இந்த நிலையில் அவன் கொடுத்துட்டுப்போன செல்ஃபோனில் என் படத் தைப் பார்த்த அவன் தம்பி பப்லு… ஒரு நாள் என் னைத் தேடி காலேஜுக்கு வந்தான். “எங்க அண்ண னோட நீ இருக்கும் படம் செல்ஃபோன்ல இருக்கு. நான் கூப்பிடும் இடத்துக்கு நீ வரலைன்னா இதை உன் பிரண்டுக்கெல்லாம் அனுப்பி வச்சிடுவேன்’னு மிரட்டி… என்னை அதே மணிகண்டன் அறைக்கு அழைச்சிக்கிட்டுப் போனான். “எங்க அண்ணன் கைவிட்ட உன்னை… நான் கைவிட மாட்டேன். காரணம் உன்னை காதலிக்கிறேன்’னு சத்தியம் பண்ணினான். தயங்கிய என்னை பப்லு பலவந்தமா கற்பழிச்சான். அப்புறம் என் கண் எதிரில்.. அவன் அண்ணன் எடுத்த படத்தை பப்லு அழிச்சான். ஆனால் அவனும் படம் எடுத்து விட்டான். பிறகு, தன்னோட நண்பர்களும் என் படத்தைப் பார்த்துட்டதாச் சொல்லி… அவங்க அதை வெளியே சொல்லாம இருக்க… அவங்களுக்கும் நான் விருந்தாகணும்னு மிரட்டி… மணிகண்டனையும் ஜெகதீசனையும் என்னை வேட்டையாட வச்சான்அதோட இப்படி பல பெண்களை ஏமாத்தி எடுத்த படங் களையும் என்னிடம் பப்லு காட்டினான். அதில் எங்க தெரு பிள்ளைகளும் இருந்தாங்க. இப்படிப்பட்ட பாவிகளை சும்மா விடாதீங்க சார்”’என கதறினாள்.

பூமிகாவுக்கு தைரியம் சொல்லிவிட்டு வெள்ளதுரை புறப்பட… அதற்குள் ஜெய்ஹிந்த்புரம் காக்கிகள் பல சித்துவேலைகளைநடத்திவிட்டார்கள். அது என்ன?a.jpg

சி.பி.எம்., மா.செ. அண்ணாதுரையே சொல்கிறார் “”"நிறைய பள்ளிக்கூடப் பிள்ளைகளையும் கல்லூரி மாணவி களையும் இந்தப் பயல்கள் காதலில் வீழ்த்தி… அசிங்கமா படம் எடுத்திருக்கானுங்க. அந்தப் படங்களை ஆபாச இணையதளங் களுக்கு அவனுங்க வித்திருக்கலாம்ங்கிறது எங்க யூகம். காரணம் பப்லுவின் அண்ணன் சென்னைல ஒரு இணையதள அலுவலகத்தில்தான் வேலை பார்க்கிறான். இந்த விவகாரத்தை போலீஸ் தீவிரமா விசாரிப்பதை பார்த்த பப்லுவின் அப்பா நாசர், தன் நண்பரான தி.மு.க. கவுன்சிலர் கேபிள் கண்ணன் மூலம் இன்ஸ்பெக்டர் ஜெயமுரளியை சரிபண்ணிட்டார். உடனே ஆபாசப்படங்கள் இருந்த பப்லுவின் செல்ஃபோன் மெமரி கார்டையே மாத்திட்டாங்க. இப்ப ஆபாச படமே எடுக்கலைன்னு சொல்லி… அவனுங்க மேல் ஈவ் டீஸிங் கேஸை மட்டும் போட்டு… சப் ஜெயிலுக்கு அனுப்பிவச்சிட்டாங்க. பல பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியா ஆக்கியிருக்கும் இந்த ஆபாசப் படக் கும்பலை தி.மு.க. ஆட்கள் காப்பாத்தறது மகா கொடுமை.இதை நாங்க சும்மாவிடமாட்டோம். அந்தப் பயல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காட்டி…. போலீஸைக் கண்டித்து… எங்க மாதர் சங்கம் பொது மக்களைத் திரட்டி… பெரிய போராட்டத்தை நடத்தும்” என்றார் கொந்தளிப்பாய்.

மதுரை போலீஸ் கடு மையான நடவடிக்கையில் இறங்குமா?




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Kayalvizhi heaps praise on grandpa in verse

Radha Venkatesan | TNN

Coimbatore: Crowds of DMK cadres and leaders and scholars waited eagerly to listen to her poetry.Chief minister and DMK president M Karunanidhi too was seated in the durbar hall with a warm smile to see his granddaughter unleash her Muse.
And ripples of applause swept through the conference venue at Coimbatore as Kayalvizhi Venkatesh,33,daughter of Union minister M K Alagiri,began her poetic outpouring on the theme Triumph of Equality.Lyricist Vairamuthu who chaired the poetry session gushed: The child who heard the Tamil lullaby of Kalaignar comes here to sing. 
In chaste,flowery Tamil,she opened with a customary salute to Kalaignar who had spread the voice of honey-like Tamil across the world. Kayalvizhi,who had memorised her eight-page verse,appeared to make a few candid political points.We need a leader who does not do double talk;We surely need truthful speech which is not wrapped in a blanket of dishonest selfishness 
Then,she went on to laud her grandfather,Like the door of power never shuts for Kalaignar,his door of magnanimity too will always remain 

Of Korean and Tamil 


At least 500 Tamil words are found in Korean language,insists JungNam Kim,president of the Korean Society of Tamil studies.Six years ago,when the Korean freelance journalist was travelling in a train in Canada,he was startled to hear a Tamil couple say,Amma and Appa.For,Koreans too addressed parents as Amma and Appa.And thus began his search for the similarities between the languages.The word nee (you) and naan (I) exists in Korean too,he said.

Is Valluvar a Hindu or Buddhist 


Is Tamil poet Tiruvalluvar,who rendered the ageless couplets of Tirukkural,a Hindu,a Buddhist or a Jain When K Nedunchezian presented a paper on Philosophy of Tiruvalluvar and the poets concept of destiny as underlined in Jainism and Buddhism,the delegates got into a debate.However,Nedunchezian said his findings were inconclusive and he needed time.TNN open.What else do we need to achieve social equality! 
Her ornate poetry did not strike a chord.Nonetheless,the crowd of ministers and celebrities seated in the front rows dutifully recorded their applause.Deputy chief minister M K Stalin,too was present.Education minister Thangam Thennarasus sister Thamizhachi Thangapandian too recited her verse on Promoting Mother Tamil.

Pc0051000.jpg
LACKLUSTRE PERFORMANCE: Kayalvizhi,daughter of Union minister M K Alagiri,at the poetry session of the Tamil meet on Friday


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இராவணனை அரக்கன் என்று சொல்லும் புறநானூறு

இராமாயண, மகாபாரதங்கள் சொல்லுவதும் புராணங்கள் பேசும் தொன்மங்களும் தென்னகத்தில் புழங்கி அது பின்னர் வடமொழியில் எழுதப்பட்டது என்றொரு முன்னீடு (Proposal) சில தமிழறிஞர்களால் வைக்கப்படுகின்றது. எனக்கும் பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போது அப்படித் தான் தோன்றுகிறது. பழைய இராமாயணங்கள் என்று திரு. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ள 'மறைந்து போன தமிழ் நூல்கள்' என்ற நூலில் காட்டப்படும் சில எடுத்துக்காட்டுகள் அந்தக் கருத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கின்றன. அதில் என் கவனத்தை மிகவும் கவர்ந்த ஒரு எடுத்துக்காட்டை இந்த இடுகையில் எடுத்து எழுதுகிறேன்.

இலம்பாடிழந்த என் இரும்பேர் ஒக்கல்
விரல்செறி மரபின செவித்தொடக்குநரும்
செவித்தொடர் மரபின விரற்செறிக்குநரும்
அரைக்கமை மரபின மிடற்றுயாக்குநரும்
மிடற்றமை மரபின அரைக்குயாக்குநரும்
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்தாஅங்கு
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே

(புறநானூறு பாடல் 378 வரிகள் 13 - 21)

முதலில் இந்தப் பாடலுக்கு எனக்குத் தெரிந்த வரை பொருள் சொல்லிவிட்டுப் பின்னர் இதில் இருந்து தோன்றும் எண்ணங்களை/கருத்துகளைச் சொல்கிறேன்.

இலம் பாடு - வறுமை; இல்லை என்பதால் படும் பாடு. வறுமை என்பதற்கு மிக அழகான தமிழ்ச்சொல்.
இழந்த - நீங்கிய
என் இரும் பேர் ஒக்கல் - என் மிக மிகப் பெரிய சுற்றத்தவர்
விரல் செறி மரபின - விரலில் அணிந்து கொள்ள வேண்டிய அணிகலன்களை (நகைகளை)
செவித்தொடக்குநரும் - காதில் தொடுத்துக் கொண்டவர்களும்
செவித்தொடர் மரபின - காதில் தொடுத்துக் கொள்ள வேண்டிய நகைகளை
விரற்செறிக்குநரும் - விரலில் அணிந்து கொண்டவர்களும்
அரைக்கமை மரபின - இடுப்பில் அணிந்து கொள்ள வேண்டியவைகளை
மிடற்று யாக்குநரும் - கழுத்தில் கட்டிக் கொண்டவர்களும்
மிடற்று அமை மரபின - கழுத்தில் அணிய வேண்டியவைகளை
அரைக்கு யாக்குநரும் - இடுப்பில் கட்டிக் கொண்டவர்களும்
(என நின்ற அவர்கள்)
கடுந்தெறல் - மிகக்கடுமையாகப் போர் புரிய கூடிய, மிக்க சினம் கொண்ட - முன்னர் 'மிக்க இன்பத்தை விளைவிக்கும் தேனை (நிறைய கொண்டிருக்கும், நிறைய உண்ட)'என்று எழுதியிருந்தேன். இந்த இடுகையை மின் தமிழ் குழுமத்தில் இட்ட போது திரு. வேந்தன் அரசு ஐயாவும் திரு. ஹரிகிருஷ்ணன் ஐயாவும் இந்தப் பிழையைச் சுட்டிக் காட்டினார்கள். இப்போது மாற்றிவிட்டேன்.

இராமன்
உடன் புணர் - உடன் வாழும்
சீதையை
வலித்தகை - வலித்த கை என்று பிரித்தால் மிகுந்த வலிமை மிகுந்த கைகளை உடைய, வலித் தகை என்று பிரித்தால் வலிமையில் சிறந்த
அரக்கன் - இராவணன் என்று பெயர் சொல்லவில்லை. ஆனால் அரக்கன் என்ற சொல்லைப் புழங்கியிருக்கிறார் புலவர்
வௌவிய ஞான்றை - கவர்ந்து சென்ற போது
நிலஞ்சேர் மதரணி - நிலத்தில் வீசப்பட்ட அணிகலன்களைக்
கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை - கண்ட குரங்கின் சிவந்த முகங்களைக் கொண்ட பெரிய கூட்டம்
இழைப்பொலிந்தாங்கு - அணிகலன்களை (இடம் மாற்றித் தம் உறுப்புகளில்) அணிந்து கொண்டதைப் போல (இருந்தது)
அறாஅ அருநகை - (அதனைக் கண்டு) நிறுத்த முடியாத அளவிற்குப் பெருஞ்சிரிப்பை
இனிது பெற்று இகுமே - இனிமையுடன் பெற்று சிரித்துக் கொண்டிருந்தேன்.

***
வறுமையில் இருந்த தம் சுற்றத்தார் ஒரு அரசன் தந்த பரிசில்களால் தம் வறுமை நீங்கிய போது அப்போது தான் முதன்முதலாகப் பார்க்கும் அணிகலன்களை இடம் மாற்றி அணிந்து கொண்டது குரங்குகள் நகைகளை இடம் மாற்றி அணிந்து கொண்டதைப் போல் மிக்க நகைச்சுவையாக இருந்தது என்கிறார் இந்தப் புலவர்.

இலம்பாடு இழந்த என்று சொல்லும் போது மிக்க சுவையுடன் இருக்கிறது. 'இல்லை என்னும் பாடு இனி ஒழிந்தது' என்ற மகிழ்ச்சி நன்கு தொனிக்கிறது.

என் இரும் பேர் ஒக்கல் என்ற போது தன் சுற்றத்தார் என்னும் பாச உணர்வும் சுற்றம் தழால் (சுற்றத்தைக் காப்பாற்றுதல்) என்னும் பெருங்குணமும் நன்கு காட்டப்படுகின்றன. பொருள் வந்த போது தானும் தன் குடும்பத்தாரும் மட்டுமே அனுபவிக்காமல் தன் மிகப்பெரிய சுற்றத்தவர்கள் எல்லாம் அதனை அனுபவிக்கக் கொடுத்து அதில் மகிழும் புலவரின் அருங்குணம் தெரிகிறது.

'கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் செம்முகப்பெருங்கிளை இழைப்பொலிந்தாங்கு' என்ற நான்கு அடிகளால் வால்மீகி இராமாயணத்திலும் கம்பராமாயணத்திலும் வரும் கதைப்பகுதியைச் சொல்கிறார். இந்தத் தொன்மம் ஆதிகாவியமாகிய வால்மீகியின் வடமொழி நூலில் தான் முதன் முதலில் வந்தது என்று சொல்வோம். அந்த ஆதிகாவியத்தில் வருவதற்கு முன்பே சங்ககாலப் புலவராகிய இவருக்கு இந்தத் தொன்மம் தெரிந்து இருந்திருக்கிறது.

உவமை அணியின் இலக்கணமே 'தெரியாத ஒன்றிற்கு தெரிந்த ஒன்றை உவமையாகச்' சொல்லுவதே. இங்கே சுற்றத்தவரின் நிலையைச் சொல்லும் போது குரங்குகளின் நிலையை உவமையாகக் காட்டுவது இந்தத் தொன்மம் புலவருக்கு மட்டும் இல்லாமல் இந்தப் பாடலை அரங்கேற்றும் அவையில் இருப்பவருக்கும் இந்தப் பாடலைப் படித்து அனுபவிக்கும் வாய்ப்பு உடையவருக்கும் இந்தத் தொன்மம் தெரிந்திருந்தது என்பதைக் காட்டுகிறது.
இப்படி பெரும்பாலாவருக்குத் தெரிந்த கதையாக இராமாயணக்கதை சங்ககாலத்திலேயே இருந்திருக்கிறது. கம்பனின் காலத்தில் காவிய வடிவை அது பெற்றிருந்திருக்கலாம். அவ்வளவே.

இராமன் சீதை என்று கதையின் தலைவன் தலைவி பெயரைச் சொன்ன புலவர் வில்லனின் பெயரைச் சொல்லாமல் அரக்கன் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது சங்ககாலத்திலேயே சீதையைக் கவர்ந்தவன் அரக்கன் என்ற கருத்து நன்கு நிலை நாட்டப்பெற்றிருந்தது என்று காட்டுகிறது.

சீதையின் நகைகளைக் கண்டபடி அணிந்தவர்கள் குரங்குகூட்டத்தினர் என்று மிகத்தெளிவாகச் சொல்லியிருப்பதும் கவனத்திற்குரியது.

தமிழர்களை அரக்கர்கள் என்றும் குரங்குகள் என்று வடநூலார் இராமாயணத்தில் எழுதியிருக்கிறார்கள் என்ற கருத்து மிகுந்த வலிவுடன் நம்மிடையே இருக்கிறது. சீதையை வௌவியவன் அரக்கன் என்று இந்தத் தமிழ்ப்புலவர் சங்ககாலத்திலேயே சொல்லியிருக்கிறார். வௌவியவன் தமிழன் என்றால் அவனை அரக்கன் என்று குறிப்பாரா? அவனை அரக்கன் என்று குறித்துவிட்டு இராமனையும் சீதையையும் பெயருடன் குறிப்பது சிந்திக்க வேண்டிய ஒன்று தானே?

தமிழர்களைக் குரங்குகள் என்று சொன்னார்கள் என்ற கருத்தும் இந்தப் பாடலினால் அடிபட்டுப் போகிறது. சங்கத் தமிழ்ப் பாடலிலேயே குரங்குகள் என்று தெளிவாக இருக்கிறது.

வன நரர்களை (காட்டு மனிதர்களை) வானரர்கள் (குரங்குகள்) என்று வால்மீகி இராமாயணம் சொல்லிவிட்டது என்றதொரு கருத்தும் இருக்கிறது. அந்த க்ருத்தின் வலிமையும் இந்தப் பாடலுக்கு முன் அடிபட்டுப் போகிறது.

தமிழர்களையோ மற்ற இனத்தவர்களையோ குரங்குகள் என்று வடநூலார் சொல்லவில்லை. இந்த தொன்மத்தின் படி அவை குரங்குகளே; அப்படித் தான் சங்ககாலத்திலும் தொன்மம் சொல்லப்பட்டிருக்கிறது; பின்னர் மற்ற காவிய இராமாயணங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றது.

இந்த ஒரு பாடல் எடுத்துக்காட்டால் இராமாயணம் ஆரிய திராவிட போரின் காவிய உருவம் என்றும் ஆரியர்கள் திராவிடர்களைக் கேவலமாக எழுதியிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படும் கருத்துகள் தூள் தூளாகிவிட்டன என்று சொல்லமாட்டேன். அந்தக் கருத்துகளுக்கும் தரவுகள் இருக்கலாம். பலர் ஆராய்ந்து சொன்னவைகளை அப்படி எளிதாக புறந்தள்ளிவிட முடியாது. ஆனால் அவை சொல்லும் கருத்துகளுக்கு எதிராக இப்படி ஒரு புறநானூற்றுப்பாடல் இருக்கிறது. அந்தத் தரவினைக் கண்டு நண்பர்கள் சிந்திக்கவேண்டும் என்பதே இந்த இடுகையின் நோக்கம்.
http://koodal1.blogspot.com/2007/09/blog-post_12.html


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கருணாநிதி குடும்பத்தால் பழிவாங்கப்படும் நேர்மையான அதிகாரி

July 2, 2010 by தேவப்ரியாஜி

தமிழகத்தின் நேர்மையான சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுள் உமாசங்கரும் ஒருவர் உமாசங்கரின் நேர்மையை தமிழகத்தில் எல்லா பத்திரிகைகளும் பல சமயங்களில் சுட்டிக் காட்டியுள்ளது.
ஆட்சியாளர்களின் அடிவருடியாக இல்லாமல் மக்களுக்காக அரசுப் பதவியை முழுமையாக பயன்படுத்த நினைத்தவர்களின் உமாசங்கரும் ஒருவர். கடந்த கால ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதும் அஞ்சாமல் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து மேலிடத்தின் எதிர்ப்பை சமாதித்தவர்.
இப்போது கருணாநிதி குடும்பத்தினரால் பழிவாங்கப்படுகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னால் தினகரன் நாழிதள் வெளியிட்ட கருத்துக்கணிப்பால் கருணாநிதி குடும்பத்தினருக்குள் பூசல் வெடித்தது. கலாநிதிமாறன் குடும்பத்தினருக்கு எதிராக மதுரையில் போர்க்கொடி தூக்கிய மு.க.அழகிரி தினகரன் அலுவலத்தை தீயிட்டுக் கொளுத்தி மூன்று ஊழியர்களையும் கொலை செய்தார். ஆனால் அது சாதாரண கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டது.
கொலையாளிகள் அடுத்த சில மாதங்களிலேயே விடுதலையாகிவிட்டார்கள். பின்னர் பூசல்கள் சரி செய்யப்பட்டு மறுபடியும் கருணாநிதி குடும்பம் ஒன்று சேர்ந்து விட்டது. பின்னர் கொல்லபப்ட்ட மூன்று ஊழியர்கள் குடும்பம் உயிரை இழந்து வாட விடுதலை செய்யப்பட்ட கொலையாளிகளுக்கு மதுரை மாவட்ட விவாசயத்துறையில் வாரியப் பதவியும் கட்சிப்பதவியும் வழங்கப்பட்டு இப்போது அந்த அரசியல் ரௌடிகள் அரசியல் வாதிகளாக மக்கள் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். இது கருணாநிதி குடும்ப வாரிசு அரசியல், சர்வாதிகார ஆட்சிக்கு ஒரு சின்ன எடுத்துக் காட்டு.
இந்நிலையில் கருணாநிதி குடும்பத்திலிருந்து மாறன் சகோதர்கள் பிரிந்ததும் சொத்து பங்கிடப்பட்டு எல்லோருக்கும் சேர வேண்டிய பாகம் பிரித்துக் கொடுக்கப்பட்டதோடு திமுகவுக்குச் சொந்தமான அறிவாலயத்திலிருந்தும் மாறன் சகோதர்களுக்குச் சொந்தமான சன் டிவி வெளியேறியது. இதுவரை தனக்கு ஆதர்வாக இருந்த சன் டிவி கை மீறிச் செல்கிறதே என்று கவலையடைந்த கருணாநிதி சன் தொலைக்காட்சியை முடக்க அரசு கேபிள் நிறுவனம் தொடங்கபப்ட போவதாக அதிகார பூர்வ ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.
அரசு கேபிள் கார்ப்பரேஷனுக்கு பொறுப்பதிகாரியாக உமாசங்கர் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் நியமிக்கப்பட்டார். குடும்பப் பகையானாலும் அரசு கேபிள் கார்ப்பரேஷனை எல்லா தரப்பினரும் ஆதரித்தனர். அதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட உமாசங்கர் இயல்பிலேயே நேர்மையான அதிகாரி என்பதால் அரசு கேபிள் நிறுவனத்தை முடக்க நினைத்த சன் குழுமத்திற்குச் சொந்தமான சுமங்கலி கேபிள் விஷன் ( மாறன் சகோதர்களுக்குச் சொந்தமானது) நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்தார். இது தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரியான உமாசங்கர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் விபரம்.
-தமிழ்நாடு-
பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக 1991-ம் ஆண்டு பதவியேற்றேன். பதவி ஏற்றது முதல் எந்தவித புகாருக்கும் ஆளாகாமல் நேர்மையாகப் பணியாற்றி வருகிறேன். அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக 2008, அக்டோபர் 30-ம் தேதி நியமிக்கப்பட்டேன். சன் டி.வி. குழுமத்துக்குச் சொந்தமான சுமங்கலி கேபிள் டி.வி. நிறுவனம் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை முடக்க அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டது.இந்த முயற்சிகளில் இருந்து அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொண்டேன். சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் சட்ட விரோத நடவடிக்கைகளையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன்.சுமங்கலி கேபிள் நிறுவனத்தை தேசியமயமாக்குவதுடன், அமைச்சர் ஒருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தேன். இதையடுத்து, சிறுசேமிப்புகள் துறை ஆணையராக நான் பணியிடமாற்றம் செய்யப்பட்டேன். இப்போது அரசு கேபிள் டி.வி. நிறுவனம் செயலிழந்து காணப்படுகிறது.சுமங்கலி கேபிள் நிறுவனத்தை தேசியமயமாக்க வேண்டும் என்ற பரிந்துரைத்த காரணத்தால், என் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டது.
சட்ட விரோதமான இந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தடை விதித்தது.இதைத் தொடர்ந்து, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி ஊழல் தடுப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் என்னிடம் விசாரணை நடத்தினார். ஆனால், என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதால் அவ்வப்போது எனது சொத்து விவரங்களை அரசிடம் சமர்ப்பித்து வருகிறேன். என் மீது விசாரணை நடத்துவதற்கு சட்டப்படி அனுமதியும் பெறப்படவில்லை.நேர்மையாகவும், பொதுமக்களுக்கு நன்மை தரும் வகையிலும் செயல்பட்டதால் என் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஊழல்வாதிகளையும், அதிகாரம் மிக்கவர்களையும் காப்பாற்றும் அரசு, அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்ததால் என்னை பழிவாங்குகிறது.
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக போதுமான ஆதாரங்கள் இருந்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், விசாரணை என்ற பெயரில் என் மீதும், எனது குடும்பத்தினர், நண்பர்கள் மீது போலீஸôரை ஏவி விட முடியாது. ” என்று தனது மனுவில் கூறியுள்ளார் உமாசங்கர்.

கருணாநிதி குடும்ப நலனுக்காக பழி வாங்கப்படுகிறார் உமாசங்கர் .
அரசு கேபிள் கார்ப்பரேஷன் என்பது ஒரு அரசு நிறுவனம் அந்த நிறுவனத்திற்கு தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்ற உமாசங்கர் ஒரு அரசு ஊழியர். அரசு நிறுவனத்தை முடக்க நினைக்கும் தனியார் முதலாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்த நினைத்த உமாசங்கர் மக்களுக்கு உண்மையாக இருந்த நேர்மையான அதிகாரி.
இந்த அதிகாரிதான் இன்று கருணாநிதி குடும்பத்தினரால் பழிவாங்கப்படுகிறார். கருணாநிதி மாறன் குடும்பத்தினருக்கிடையிலான வாரிசு அதிகாரப் போட்டியால் உருவான பிளவு ஒரு கட்டத்தில் சரி செய்யப்பட்டது. மீண்டும் திமுகவிலும் குடும்பத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட்ட மாறன் சகோதர்களுக்கு மீண்டும் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டன. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பதவியும் கலாநிதி மாறனுக்கு வழங்கப்பட்டது.
மீண்டும் தன் குடும்பம் ஒன்று சேர்ந்து விட்டதாலும் தானும் கலைஞர் டிவி என்னும் ஒரு தனியார் தொலைக்காட்சிக் குழுமத்தை துவங்கி விட்டதாலும் அரசு கேபிள் கார்ப்பரேஷனுக்கு அவசியமில்லாமல் போக கருணாநிதி துவங்கிய அரசு கேபிள் கார்ப்பரேஷனை அவரே குப்பையில் தூக்கிப் போட்டார்.ஆனால் அரசு கேபிள் கார்ப்பரேஷனின் அதிகாரியாக செயல்பட்டு நேர்மையாக நடவடிக்கைகள் எடுத்த உமசாங்கர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தி வருகிறது மாறனின் குடும்பம்.
கருணாநிதியும் இதைக் கண்டு கொள்ளாத நிலையில் பெரும் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கருணாநிதியும் அவரது குடும்ப ஊடகங்களும் தன்னை பழிவாங்கிடும் என்னும் அச்சத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளார் உமாசங்கர். கருணாநிதியின் குடும்ப சர்வாதிகார ஆட்சியில் பலியான இந்த அதிகாரிக்கு நீதி கிடைக்குமா?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

உதவியாளர் சுருட்டிய கோடிகள்:
‘‘ராஜாத்தி வீட்டில் கால் வைக்க மாட்டேன்!’’
உள்ளம் குமுறிய கலைஞர்

Cover.jpg


‘‘தி.மு.கழகம் ஏழைகளுடைய இயக்கம். இந்த மேடையில் எனக்கும், தம்பி ஸ்டாலினுக்கும் பொன்னாலான வரவேற்பு பத்திரங்களை தந்தார் அமைச்சர் பொன்முடி. நான் உள்ளபடியே வருத்தப்படுகிறேன். அது வெறும் தங்கமாக இருந்தால், வாங்கிய வேகத்திலேயே வீசியிருப்பேன். அதில், பெரியார் உருவமும் அண்ணா உருவமும் பொறிக்கப்பட்டிருந்தன. தங்கம் என்று எறிந்தால், தங்கத்தைவிட நாம் அதிகமாக நேசித்த சிங்கங்கள் பெரியாரையும், அண்ணாவையும் தூக்கி எறிந்ததாக ஆகிவிடும்’’& இது கலைஞரின் பேச்சு. எங்கே? மார்ச் 7-&ம் தேதி விழுப்புரத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில்! அதே மேடையில், ‘‘நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ, அப்படித்தான் மக்களும் நம்மைப் பார்த்து நடந்து கொள்வார்கள். நாம் ஏழ்மையிலிருந்து விடுபடவேண்டும் என்று எண்ணுகிறோம் என்றால், அதே நேரத்தில் அந்த மக்களையும் ஏழ்மையிலிருந்து விடுவிப்பவர்களாக இருக்கவேண்டும். அந்த சபதத்தை மேற்கொள்ள வேண்டும். இதைப் பற்றி அண்ணா ஒரு திரைப்படத்தில் வசனம் எழுதியிருந்தார். ‘பணம், பணம் என்று அலைகிறாயே, உன்னுடைய வீட்டிலே என்ன அரிசி? வெள்ளியால் அரிசியா? மரகதத்தால் குழம்பா? ஏழைக்குக் கிடைக்கிற அந்த அரிசிதான் பணக்காரர்களுக்கும். தங்கத்தை உட்கொண்டால் ஜீரணமாகாது. வைரத்தை சாப்பிட்டால், மறுநாள் ஆளே இருக்கமாட்டான். தங்கம், வைரம் எல்லாம் கண்ணுக்கு, காட்சிக்கு அதிசயம் தருவது. வாழ்க்கைக்கு உதவாது. உண்மையான வாழ்க்கை, மக்களை வாழ வைக்கின்ற மனத்திண்மை-யான வாழ்க்கை. பணத்தை, பொருளை, வைரத்தை, நகை நட்டுகளை வெறுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்பார் அண்ணா. அண்ணாவைப்போல, ஒரு வேட்டி, ஒரு துண்டோடு வாழ்ந்தாரே. சட்டையைக் கூட மாட்டத் தெரியாமல் பொத்தானைக்கூட மாத்திப் போட்டுக் கொள்வாரே அப்படிப்பட்ட எளிமைதான் நமக்குத் தேவை’’ என்று விளாசியிருக்கிறார் கலைஞர். கலைஞரின் பேச்சு, பொன்முடியை ரொம்பவே காயப்படுத்தி இருக்குமே என்று கட்சிக்காரர்கள் வருத்தப்பட்டார்கள். அப்படி வருத்தப்பட்டாரா பொன்முடி என்று நாமும் அப்பாவியாக விசாரித்தோம். கலைஞரின் பேச்சு சில நேரங்களில் பூடகமாக இருக்கும். சில விஷயங்களை பொருத்திப் பார்த்தால்தான் புரியும். கடந்த பிப்.14&ம் தேதி சங்கத் தமிழ் பேரவை நடத்திய விழாவில்கூட, பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கலைஞர் சிலையை, கலைஞருக்கே பரிசளித்தார் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன். அச்சிலை, இன்றும் கோபாலபுரம் வீட்டில் லிஃப்ட் அருகே அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. அப்படியானால், ஜெகத்துக்கு ஒரு நியாயம், பொன்முடிக்கு ஒரு நியாயம் என்று இருக்க முடியாது. ஆக, விழுப்புரத்தில் அவர் பேசியது, பொன்முடிக்காக அல்ல. தனது துணைவியார் ராஜாத்தியம்மாளை கண்டிக்கும் விதத்திலேயே கலைஞர் அப்படிப் பேசியிருக்கிறார் என்று அறிவாலய வட்டாரத்தில் சொல்லியபோதுதான், அந்த விவரங்கள், விபரீதங்கள் தெரிய வந்தன. ராஜாத்தியம்மாளுடன் லேசான மனவருத்தம் என்று கடந்த இதழிலேயே குறிப்பிட்டிருந்தோம். அதாவது பிப்.28-ம் தேதியிலிருந்து, ராஜாத்தியம்மாள் வசிக்கும் சி.ஐ.டி. காலனி வீட்டுக்கு கலைஞர் செல்லவில்லை. கோபாலபுரத்திலேயே இருக்கிறார் என்று சொல்லப்பட்டிருந்தது. அதன் பின்னணி அன்றைய நிலவரப்படி பெரிய அளவில் யாருக்குமே தெரியவில்லை.

ஆனால், விழுப்புரம் பேச்சு, குடும்பத்தில் விவகாரமாகிப் போச்சு என்று கட்சிக்காரர்கள் முணுமுணுத்த போதுதான், அத்தனை விவரங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து விழுந்தன.

ராஜாத்தியம்மாள் பெயரைச் சொல்லி அவரது வீட்டில் இருக்கும் டெலிபோன் ஆபரேட்டர் சரவணன், ஆடிட்டர் ரத்தினம் இவர்கள் பல கட்டப்பஞ்சாயத்து, நில விவகாரம், பணி மாறுதல்கள், கட்டடங்களை வாங்கி கைமாற்றுவதில் ஈடுபடுகிறார்கள் என்று அரசல் புரசலாக கலைஞரின் காதுக்கு வந்துவிட்டது. இதுதான் ராஜாத்தியம்மாளுடன் கலைஞருக்கு வந்த முதல் மோதல். சமீபத்தில் கோவை செல்வதாக கலைஞரிடம் சொல்லிவிட்டு சென்ற ராஜாத்தி, அங்கு செல்லாமல் திருச்சிக்கு சென்றாராம். அப்போது அவருடன் சென்ற ஆடிட்டர் சீனிவாசன் ரத்தினம் மூலமாக நடந்தேறிய சில சொத்து பரிமாற்றங்களைக் கேள்விப்பட்டு கோபம் காட்டி இருக்கிறார் கலைஞர். இதையடுத்துதான், ‘அவனுங்க, இங்க இருக்கற வரைக்கும் நான் வரமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு கிளம்பியவர்தான் கலைஞர் என்கிறார்கள் கட்சி வட்டாரத்தினர். 

அந்த இரண்டு பேருக்காகவா ராஜாத்தியம்மாளிடம் சண்டை போட்டார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. இந்தக் கேள்வியை, நமக்குத் தெரிந்த தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரிடம் முன் வைத்தோம்.

‘‘எதைச் சொல்வது? எதை விடுவது? கலைஞர், தனது குடும்பத்தில் நடக்கும் பதவிப் போட்டியை ரசிக்கவில்லை. இந்த நேரத்தில் சி.ஐ.டி. காலனியின் பெயரைச் சொல்லி பல கோடிகள் மதிப்பிலான நிலங்களை வாங்கிப் போட்ட விவகாரம் சுற்றிச் சுற்றி வந்தது.

Cover%201.jpgகுறிப்பாக, சி.ஐ.டி. காலனி வீட்டில் வேலை செய்யும் சரவணன், ராஜாத்தி அம்மாளுக்கு சொந்தமானதாகச் சொல்லப்படும் ‘வெஸ்ட்கேட் லாஜிஸ்டிக்ஸ்’ என்ற நிறுவனத்தில் பொறுப்பில் இருப்பதாக விசிட்டிங் கார்டு அடித்து வைத்திருக்கிறார். அந்த அடையாளத்துடன் பெரிய அதிகாரிகளை அணுகி சாதித்த காரியங்கள், அவரது பெயரில் இருக்கும் சுமார் 130 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பற்றிய அத்தனை விவரங்களும் கலைஞரிடம் ஆதாரமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. அதை கொடுத்தவர் மிக முக்கியமான அதிகாரி. இந்தக் குற்றச்சாட்டுக்களை விசாரித்து ஆதாரத்துடன் அறிக்கை தருமாறு, அவருக்கு உத்தரவிட்டிருந்ததே கலைஞர்தான்.

அந்த அறிக்கையில் கிடைத்த தகவல்களை கண்டு அதிர்ச்சியடைந்தார் கலைஞர். ‘ராஜாத்தியம்மாளின் பினாமி’ என்று கூறிக்கொண்டு சரவணன் நடத்திய விவகாரங்கள் ரொம்பவே அவருக்கு ஆத்திரமூட்டியிருக்கிறது. குறிப்பாக, சரவணன் தொடர்பாக பெரிய இடத்து தொழிலதிபர் ஒருவர் நேரடியாக கலைஞரிடமும், துணை முதல்வரிடமும் புகார் அளித்துவிட்டார். அதுதான் சரவணன் விஷயத்திற்கு பிள்ளையார் சுழி.

கிருஷ்ணா ரெட்டி என்பவர், சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் 33 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வாங்க ஒப்பந்தம் போட்டார். அந்த நேரத்தில், கிண்டியில் தனியார் நிறுவனத்தை நடத்திய முஸ்லிம் பிரமுகர், குரோம்பேட்டை நிலத்தை இரவோடு இரவாக ஆக்கிமிரத்துக் கொண்டார். இது தொடர்பாக, கிருஷ்ணா ரெட்டி புறநகர் போலீஸில் புகார் கொடுக்க, அங்கே சரவணனும், ஆடிட்டர் சீனிவாசன் ரத்தினமும் வந்தனர்.

‘இது ராஜாத்தியம்மாளின் இடம். இங்கே யாரும் தலையிட வேண்டாம்’ என்று போலீஸுக்கு சொல்ல, சத்தம் போடாமல் போலீஸார் ஒதுங்கிக் கொண்டனர். இந்த நேரத்தில், அந்த நிலத்தை வங்கி ஏலத்திலிருந்து 15 லட்ச ரூபாய்க்கு எடுத்துவிட்டதாக சரவணன், கிருஷ்ணா ரெட்டியிடம் தெரிவிக்க... பிரச்னை விஸ்வரூபமாகிவிட்டது. இந்த இடத்தைத் திரும்பத் தரவேண்டும் என்றால், பத்துக் கோடி ரூபாய் வேண்டும் என்று சரவணன் பேரம் பேசி, முன் பணமாக 50 லட்ச ரூபாய் வாங்கிவிட்டதாக கிருஷ்ணா ரெட்டி புகார் அனுப்பிவிட்டார்.

அடுத்து, வேலூரில் இருக்கும் தனியார் பல்கலைக்கழகத்திற்கு அரசு நிலம் ஒப்படைத்த விவகாரம் முடிந்ததும், அப்பல்கலைக்கழகத்தினருக்கு போன் செய்து ‘அம்மா 15 கோடி ரூபாய் கேட்கிறார்கள்’ என்று சரவணன் சொல்ல, அதுவும் கலைஞர் காதுக்குப் போய்விட்டது.

இதன் பின்புதான் கலைஞர் கடும் கோபமானார். இது தொடர்பாக பிப்.28-ம் தேதி ராஜாத்தியம்மாளிடம் கொஞ்சம் கடுமையாகவே விசாரித்திருக்கிறார். ‘உன் பெயரைச் சொல்லி சரவணன், பினாமி போல நடந்துகொள்கிறான். அவனை வீட்டை விட்டு துரத்து’ என்று கோபமாகச் சொல்லிவிட்டு வந்துவிட்டார் கலைஞர். இது கோபாலபுரத்தில் இருப்பவர்களுக்குத் தெரியவே தெரியாது. 

மார்ச் 2&ம் தேதியன்று பத்திரிகையாளர் சோலை எழுதிய ‘ஸ்டாலின்’ நூல் வெளியீட்டு விழா முடிந்த இரவுதான், கோபாலபுரத்தில் உள்ளவர்களுக்கு விஷயம் தெரிந்திருக்கிறது. அன்று இரவு திருச்சிக்கு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்படத் தயாராக இருந்தார் கலைஞர். அப்போது, கோபாலபுரத்துக்குச் சென்ற கனிமொழி, அழுதபடியே சி.ஐ.டி. காலனிக்கு வந்துவிட்டுச் செல்லுமாறு கூப்பிட்டபோதுதான், ஏதோ நடந்திருக்கிறது என்பது கட்சி சீனியர்களுக்குத் தெரிந்தது. அன்று இரவு சில சீனியர் சகாக்களிடம் கலைஞர் சொன்ன வார்த்தை, ‘‘அந்த வீட்டில் கால் வைக்க மாட்டேன்’ என்பதுதான்’’ என்றார் அந்தக் கட்சி நிர்வாகி.

இது போதாதா நமக்கு? அதற்கு மேல் என்ன நடந்தது என்று இங்கேயும் அங்கேயும் பேசிப் பேசி வாங்கிய தகவல்கள் அனைத்தும் கனன்று கொண்டிருக்கும் நெருப்பாகவே இருக்கிறது. அதை நீரை ஊற்றி இப்போதைக்கு அணைக்கவே முடியாது போலிருக்கிறது.

தனது மனைவியின் பெயரைச் சொல்லி, பல அதிகாரிகளையும் தொழிலதிபர்களையும் மிரட்டி காரியங்கள் சாதித்திருப்பதையும், அந்த நபருக்குத் தன் உறவுகளே ஊக்கம் கொடுத்ததையும் கண்டித்து தான் விழுப்புரத்தில் விளாசித் தள்ளியிருப்பதும் தெரிந்தது.

சி.ஐ.டி.காலனியின் பினாமி என்று சொல்லிக்கொண்ட சரவணன், முதலில் அந்த வீட்டின் டெலிபோன் ஆபரேட்டராகப் பணியில் சேர்ந்தவர். பின்பு, ஆடிட்டர் சீனிவாச ரத்தினத்துடன் சேர்ந்து ராஜாத்தியம்மாளுக்குத் தெரியாமல் பல வேலைகளைச் செய்துகொண்டு பணம், வீடு, நிலம் என்று வாரி குவித்துவிட்டதாக, உளவுத்துறை கண்டுபிடித்து விலாவாரியாக ஆதாரங்களுடன் கொடுத்த விஷயத்தைப் பார்த்து ராஜாத்தியம்மாளே கொந்தளித்துவிட்டாராம். தனது பெயரைச் சொல்லி மோசடி செய்ததாகச் சொல்லப்படும் சரவணனை, ராஜாத்தியம்மாள் அனுப்பிவிட்டார் என்று சி.ஐ.டி. காலனி வட்டாரம் சொல்கிறது.

சரவணன் மீது மட்டும் 130 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளதாம். எந்தச் சொத்துக்களும் பதிவு செய்யப்படவில்லை. அத்தனையும் ‘பவர்’ அதிகாரம் மட்டுமே சரவணன் பெயரில் எழுதித் தரப்பட்டிருக்கிறது. இதுதவிர, கலைஞர் கைது செய்யப்பட்ட போது, முரசொலி மாறனிடம் அடாவடியாக நடந்து கொண்ட போலீஸ் அதிகாரி, தற்போது கூடுதல் டி.ஜி.பி.யாக இருக்கிறார். ஐ.ஜி.யாக இருந்த அவருக்கு சமீபத்தில் பதவி உயர்வு தரப்பட்டது. அதற்கு 50 லகரம் வாங்கப்பட்டிருக்கிறது. அவரது பதவி உயர்வை தடுக்காமல் இருக்கவும், அவருக்கு நல்ல பதவி வாங்கித் தருவதாகவும் சொல்லி, அப்பணம் கைமாறி இருக்கிறது.

உள்ளபடியே, அவருக்குப் பதவி உயர்வு கிடைத்தது. ஆனால், ஏற்கெனவே அவர் டம்மியாக இருக்கும் அதே இடத்தில் அவரை நியமித்திருந்தார்கள். இதில் கொதித்துப் போன அந்த அதிகாரி, தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாகப் புலம்ப, இந்தச் செய்தியும் கலைஞரின் காதுக்கு வந்திருக்கிறது. இதில் ராஜாத்தியம்மாள் பெயரைச் சொல்லி, அவரது ஆட்களில் ஒருவர் பலன் அடைந்திருப்பதை உளவுத்துறையின் அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது.

இப்படி, பல விவகாரங்களை அலசி ஆராய்ந்திருக்கும் அந்த அறிக்கையில் இருக்கும் சில விவகாரங்கள் கலைஞரை உச்சபட்ச கோபத்தில் தள்ளிவிட்டிருப்பதாக அறிவாலய வட்டாரம் சொல்கிறது. அவரிடம் நெருங்கவே எல்லோரும் அச்சப்படுகிறார்கள். தனது பாரத்தை இறக்கி வைக்க முடியாமல் தவித்து வருகிறார் கலைஞர் என்கிறது அறிவாலய வட்டாரம்.

கலைஞரை நெருங்கி இருந்தவர்கள் ஆற்காட்டாரும், துரைமுருகனும்தான். இம் மாதிரி இக்கட்டான நேரங்களில், அது குடும்பப் பிரச்னையாக இருந்தாலும் ஆற்காட்டார் துணிந்து கலைஞரிடம் பேசி, அவரது மனக்குறையை ஆற்றிவிடுவார். சில நேரங்களில் குடும்பத்-தினரிடையேயும் பேசி சரிசெய்வார். அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதால், அந்தச் செயலை செய்ய வேண்டிய இடத்தில் இருப்பவர் துரைமுருகன்தான். அவரும் கலைஞரிடம் பழைய வேகத்தில் பேசும் நிலையில் இல்லை என்கிறார்கள்.

சரவணன் செய்த விஷயங்களால், ராஜாத்தியம்மாளின் மீது கோபப்பட்டு கலைஞர் சி.ஐ.டி. காலனிக்குச் சென்று இரண்டு வாரங்கள் நெருங்கப் போகிறது. இதுவரை கலைஞர் அப்படி இருந்ததே இல்லையாம். குறைந்தபட்சம் இரண்டு, மூன்று நாட்கள் சி.ஐ.டி. காலனிக்குப் போகாமல் இருந்திருக்கிறார் கலைஞர். ‘அவரைப் பார்க்க வருகிறேன்’ என்று ராஜாத்தியம்மாள் கிளம்பினால், அடுத்த சில மணி நேரத்தில், கலைஞரே அங்கு சென்றுவிடுவாராம்.

ஆனால், இம்முறை கலைஞரின் உறுதியும், விடாப்பிடியும் கடுமையாகவே இருக்கிறது. சி.ஐ.டி. காலனியிலிருந்து எந்த உதவி கேட்டு வந்தாலும், தனக்குத் தெரியாமல் செய்ய வேண்டாம் என்று தனது செயலாளர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார் கலைஞர். அடுத்து, தனது பாதுகாவலர்களில் மிக முக்கியமானவரான பாண்டியனையும் அங்கே போக வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையெல்லாம்விட, சி.ஐ.டி. காலனிக்கு போலீஸ் பாதுகாப்பையும் குறைத்துவிடுமாறு கலைஞர் கூறியிருப்பதுதான் தி.மு.க.வின் முக்கியத் தலைகளை புருவம் உயரச் செய்திருக்கிறது.

இது தொடர்பாக சி.ஐ.டி. காலனி வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘இங்கு எந்தப் பிரச்னையும் இல்லை. புதிய சட்டமன்ற வளாகம் கட்டி, திறப்பதில் கலைஞர் பிசியாக இருக்கிறார். மற்றபடி பத்திரிகைகளில் வரும் செய்திகள்போல எதுவுமே இல்லை. அப்படியே மனஸ்தாபம் இருந்தாலும். கலைஞர் எப்போதும் குடும்ப உறவுகளை கட்டிக்காப்பார்’’ என்று நம்பிக்கை வார்த்தைகள் வருகின்றன.

புதிய சட்டமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் ராஜாத்தியம்மாள் கலந்துகொள்வாரா? என்பதுதான் அடுத்த கேள்வி. அப்போது எல்லாவற்றிற்கும் விடை கிடைக்கத்தானே போகிறது!





காத்திருக்கும் கனிமொழி!
Cover%202.jpgவிமர்சனங்களை தடுக்கும் வகையில் தானே கவனமாகச் செயல்பட்டுவரும் நிலையில், இப்படி வில்லங்கத் தொடர்புகளை வளர்த்துக்கொண்டு, பல கோடிகள் சுருட்ட சரவணனை அனுமதித்த கோபம் கலைஞருக்கு. தன்னை மீறி நடந்த, தனக்குத் தெரியாமல் நடந்த சில விஷயங்களுக்காக இவ்வளவு கடுமையும், வெறுப்பும் காட்டுவது எந்த வகையில் நியாயம்? என்பது ராஜாத்தியம்மாளின் மனநிலை.

இந்த இருவருக்கும் இடையில் இருந்து ரொம்பவே மனம் நொந்திருப்பவர் கனிமொழிதான். எத்தனை பிஸிக்கும் இடையிலும் கனிமொழியுடனும், பேரன் ஆதித்யாவுடனும் அளவளாவுவதை வழக்கமாகக் கொண்ட கலைஞர், இந்த ஊடல் காலத்தில் தன்னுடனும் தூரம் காட்டுவதுதான் கனிமொழியின் கவலைக்குக் காரணம்.

இன்னும் சில சந்திப்புகளில் பேசித் தீர்த்துவிடக்கூடிய இந்தப் பிரச்னையை, இன்னும் ஊதிப் பெரிதாக்கும் வகையில் கலைஞரின் குடும்பத்திற்குள்ளேயே சிலர் முயற்சிக்கிறார்கள். அதன் மூலம் நிரந்தரமாகத் தங்கள் குடும்பத்தைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று வரும் செய்திகளும் கனிமொழியின் வேதனையைக் கூட்டியிருக்கின்றன.

இத்தனை வேதனைக்கு இடையிலும், ‘‘இன்னும் ஓரிரு நாட்களில் அப்பா எங்கள் வீட்டுக்கு வருவார். இப்போது எட்டி நின்று வேடிக்கை பார்ப்பவர்களின் முகத்தை நானும் பார்க்கத்தானே போகிறேன்’’ என்று தைரியம் கலந்த தெளிவுடன் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்கிறாராம் கனிமொழி.

நல்லது நடக்க வேண்டும். அது விரைந்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் இரண்டு குடும்பங்களின் மீது மட்டுமின்றி, கலைஞர் மீதும் பற்று வைத்துள்ள தி.மு.க. மூத்த தலைவர்கள் சிலர்.


 

 


நக்கீரன்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘‘நான் அல்லாவை உணர்ந்த இஸ்லாமியன்!’’
அப்துல்லாவாக மாறிய பெரியார்தாசன் பேட்டி

Periyardasan.jpg

 


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தியக் குடிமகன் எவரும் எந்த மதத்தையும் தழுவ உரிமை இருக்கிறது. இருந்தபோதிலும்... பெரியாரது பகுத்தறிவுக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரோடு பழகி, கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக பெரியாரிய கருத்துக்களை பரப்பி வந்த பெரியார்தாசன், சிலகாலமாகப் புத்த தத்துவங்களில் இயங்கினார். இப்போது சவுதி அரேபியா சென்று அப்துல்லா என பெயர் மாற்றி... இஸ்லாமியராகவும் மாறிவிட்டார் என்ற செய்தி, பெரியார்வாதிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரியாரிய அமைப்புகளோடு கடந்த சில ஆண்டுகளாகத் தனது தொடர்பைத் துண்டித்துக் கொண்டாலும்... பெரியார்தாசன் என்ற பெயரை வைத்திருந்தவர், திடீரென அப்துல்லா ஆனது எப்படி?

சவுதி அரேபியாவிலிருந்து விமானம் மூலம் அப்துல்லாவாக சென்னை திரும்பிய சில மணிநேரங்களில் திருவேற்காட்டிலுள்ள அவரது வீட்டில் பெரியார்தாசனை சந்தித்தோம்.

வந்துகொண்டிருந்த மொபைல் அழைப்பு களுக்கெல்லாம்... ‘அஸ்ஸலாம் அலைக்கும்’ என ஆரம்பித்து ‘இன்ஷா அல்லாஹ்’ என்று சொல்லி விடை கொடுத்துக் கொண்டிருந்தார் அப்துல்லா.

பெரியார்வாதியாகக் கருதப்படும் நீங்கள் எப்படி..?

45 வருடங்களாக பெரியாரைக் கற்றவன் நான். கடவுள் மறுப்பு, சாதிமத ஒழிப்பு, பெண் அடிமை ஒழிப்பு, சுதந்திரத் தமிழ்நாடு, சுரண்டல் ஒழிப்பு போன்ற பெரியாரியக் கொள்கைகளைப் பரப்ப என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். அதிலும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு என் பால்ய நண்பர் சிராஜுதினை சந்தித்தபோது... ‘நீ இறை மறுப்பாளனாகப் பிறக்கவில்லை. இறக்கும்போது இறை மறுப்பாளனாக இறக்கக் கூடாது’ என்றார். அது எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக இஸ்லாமிய நூல்களைப் படிக்க ஆரம்பித்தேன். பெரியாரது கொள்கையில் இறை மறுப்பு என்பதை மட்டும் கைவிட்டு ஏக இறைவனை ஏற்றுக்கொண்டேன். திடீரென ஏற்றுக்கொள்ளவில்லை. பத்து வருடங்கள் படித்த பிறகுதான் தெளிந்து ஏற்றுக்கொண்டேன். 

Periyardasan%201.jpgஅப்படியானால் பெரியாரின் மத ஒழிப்பை தாங்கள் பின்பற்றவில்லையா?

இஸ்லாம் ஒரு மதமே அல்ல. அது உலக மக்களை சமத்துவப்படுத்த எழுந்த ஓர் இயக்கம். அதை நான் மதமாகப் பார்க்கவில்லை. பெரியார் கூட ‘இழிவு நீக்க இஸ்லாம் மருந்து’ என சொல்லியிருக்கிறார். 

மூட நம்பிக்கை ஒழிப்பில் இன்னும் உறுதியாக இருப்பதாகச் சொல்கிறீர்கள். இஸ்லாத்தில் மூடநம்பிக்கைகளே இல்லையா?

நான் பரம்பரை இஸ்லாமியனை விட அதிகம் படித்த இஸ்லாமியன். குர்ஆனில் இறைவன் எந்த மூடநம்பிக்கையையும் வலியுறுத்தவில்லை. ஆனாலும் தர்கா வழிபாடு, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு ரத்தம் கொட்டுவது என இஸ்லாத்துக்குள் சில மூட நம்பிக்கைகள் ஊடுருவியிருக்கின்றன. இதை இறைவனுக்கு இணை வைத்தல் என்று சொல்லலாம். அதாவது இறைவன் ஒருவனே. அவனுக்கு இணையாக யாரையும் வழிபட்டால் அது மூட நம்பிக்கை.

நாகூர் தர்காவில் நிறையப் பேர் சென்று வருகிறார்கள். அங்கே சென்றால் சுத்தமாகிவிடலாம் என்கிறார்கள். ஆனால் அதற்குள் சென்று வந்தால் அசுத்தமாகத்தான் ஆகமுடியும். இறந்த ஒருவரை இறைவனுக்கு ஈடாக வழிபடுவது இஸ்லாத்படி தவறு. ஆனால், தர்காக்களில் அது மட்டுமல்ல, அதன் அடிப்படையில் நிறைய மூடநம்பிக்கைகள் இருக்கின்றன.

ஒரு கோழியை ஒருவர் நூறு ரூபாய்க்கு வாங்கி நாகூர் தர்காவில் கொண்டு வந்து பறக்கவிடுகிறார். அது கீழே இறங்கியதும் அதைப் பிடித்து இன்னொரு பக்தருக்கு விற்றால் அது புண்ணியமாம். அதனால் பலரும் அந்தக் கோழியைப் பிடித்து ஒவ்வொரு முறையும் விலையை ஏற்றி விற்பார்கள். காலையில் நூறு ரூபாய்க்கு விற்ற அந்தக் கோழி, மாலையில் ஒரு லட்ச ரூபாய்க்குக் கூட விற்கும். இது மூட நம்பிக்கை. இதை எதிர்த்து நான் பேசுவேன்.

அதேபோல, ஏர்வாடி தர்காவில் கொண்டுபோய் விட்டால் பைத்தியம் தெளியும் என்கிறார்கள். அங்கே கொண்டுபோய் விட்டால்தான் பைத்தியம் பிடிக்கும். நான் அடையாள இஸ்லாமியன் அல்ல... அல்லாவை உணர்ந்த இஸ்லாமியன்.

பெண்களுக்கான பர்தா போன்ற உடைக் கட்டுப்பாடுகள் பற்றி தங்கள் கருத்து?

அரேபியாவில் அடிக்கடி வலுவான புழுதிப் புயல்கள் ஏற்படும். அதைத் தடுப்பதற்காக அங்கே ஆண்கள்கூட முகத்தை மூடும்படிதான் உடை அணிகிறார்கள். அதை இங்கே பெண்கள் தொடர்கிறார்கள். இதை ஏன் குறை சொல்லவேண்டும்? அது அவர்களின் விருப்பம். சுடிதார் அணியக் கூடாது என யாரையும் நாம் கட்டாயப்படுத்த முடியுமா? அதுபோலத்தான் இதுவும்.

உலக மக்களை எல்லாம் சமத்துவப்படுத்த எழுந்த இயக்கம் இஸ்லாம் என்கிறீர்கள். அப்படியானால், சவுதி போய் இஸ்லாமைத் தழுவ வேண்டிய அவசியம் என்ன? இதுவே ஒரு மூடநம்பிக்கைதானே?

எனக்கு வசதி இருந்தது நான் போனேன். உனக்கென்ன? ரயில்ல ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் எடுக்க முடியறவன், அதுல போறான். காசு இல்லாதவன் செகண்ட் கிளாஸ்ல போறான். என்கிட்ட காசு இருந்தது அதனால போனேன்.

பொதுவாகவே பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும், மூளைச் சலவை காரணமாகவும்தானே தமிழ்நாட்டில் மத மாற்றம் நடக்கிறது...

எந்தப் பொருளாதார ஆசையையும் யாராலும் எனக்குக் காட்டமுடியாது. இந்துமதத்தை எதிர்த்துப் பேசினேன்... கிறிஸ்தவர்களையும் எதிர்த்துப் பிரசாரம் செய்திருக்கிறேன். அந்த மதங்களில் எல்லாம் கடவுள் சொன்னதாக வேறொருவர்தான் சொல்லுவார். ஆனால், இஸ்லாத்தில்தான் கடவுளே வேதத்தைச் சொல்கிறார். அதைப் படித்து தெளிந்து... என் சொந்த செலவில் பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட் எடுத்து சவுதி சென்றேன். கருத்துகளால் ஈர்க்கப்பட்டு வந்தவன் நான். இத்தனை வருடமாகப் பகுத்தறிவு பிரசாரம் செய்தோமே... என்ற குற்ற உணர்ச்சி உங்களுக்கு ஏற்படவில்லையா?

பெரியாரோடு இருந்த நாத்திக பாலசுப்பிரமணி என்ற சிறந்த பேச்சாளர், ‘இந்தி’ எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்றார். சிறையில் எப்படியோ ‘திருவாசகம்’ படித்த அவர், வெளியே வரும்போது, ‘திருவாசக’ பாலசுப்பிரமணி என மாறி ஆத்திகராகிவிட்டார். இதுபற்றி தோழர்கள் பெரியாரிடம் கேட்டபோது... ‘விடு, சுய-மரியாதைக்காரன் எங்கே இருந்தாலும் சுத்தமாக இருப்பான்’ என பதில் சொன்னார். அதை நினைவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லை.

சவுதியிலிருந்து அளித்த இணையப் பேட்டியில் ‘ஜிகாத்’துக்குத் தயார்ப்படுத்திக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறீர்களே?

இறைவனுக்கு இணையாக வைத்து வழிபடும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதுதான் ‘ஜிகாத்’.

தமிழ்நாட்டில் பகுத்தறிவு இயக்கங்கள் தோற்றுவிட்டனவா?

தமிழ்நாட்டில் பகுத்தறிவு இயக்கங்கள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். என்னை அழைத்துச் சென்று அதில் சேர்த்துவிடுங்களேன்! 





__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சரமாரி சோதனை………… சிலுப்பும் செவ்வாடை!!

Rate This

 

 

p42d.JPG
bits_verline.jpg
p42c.JPGமுதல் முறையாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களுக்குள் 200-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள், 100-க்கும் மேற்பட்ட போலீஸார் நுழைய ஆன்மிக வட்டாரமே அதிர்ச்சியில் உறைந்தது!

 

மத்திய, மாநில அமைச்சர்கள், உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள், உயர் அதிகாரிகள் என ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்கு விசிட் செய்யாதவர்களே இல்லை. செல்வாக்கின் உச்சத்தில் இருக்கும் ஓர் ஆன்மிக மையத்துக்குள்ளேயே நுழைந்து சுமார் 18 மணி நேரம் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்தது புயல் வேக அதிகாரிகள் குழு!

பங்காரு அடிகளாரைத் தலைவராகக்கொண்டு செயல்படும் அறக்கட்டளை நடத்தும் கல்லூரிகளில் சோதனை நடந்திருப்பது அரசியல்ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது!

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 10.30 மணிக்கு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பாத பூஜை செய்வது அடிகளாரின் வழக்கம். அவரைக் காண பலதிசைகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு இருப்பார்கள். மேல்மருவத்தூரே விழாக்கோலம் பூண்டிருக்கும். கடந்த 2-ம் தேதி வெள்ளிக்கிழமையும் வழக்கம்போல அடி களார் பாத பூஜை செய்யும் இடத்தில் அமர்ந்தார். அவரைச் சுற்றி பக்தர்கள் உணர்ச்சி வெள்ளத்தில் மிதக்க, இரண்டு அதிகாரிகள் அடிகளாரை அணுகினார்கள்.

”உங்களிடம் இருந்து சில விளக்கங்கள் எதிர்பார்க் கிறோம். ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்!” என இரண்டே வரிகளில் சொல்லிவிட்டு தாங்கள் யார் என்பதையும் சொன்னார்கள். இதற்குள் கோயிலைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுவிட்டது. அதிகாரிகள் முதலில் ஆங்கிலத்தில் கேட்க, அடிகளார் அமைதி காத்தார். அடுத்து தமிழில் அவரிடம் ஒத்து ழைப்பைக் கேட்க, மறு வார்த்தை பேசாமல் எழுந்த அடிகளார் பக்தர்களைப் பார்த்து வணங்கிவிட்டு அவர் களுடன் சென்றார்.

பக்கத்தில் இருந்த ஓர் அறைக்குள் அடிகளாரை அழைத்துப் போனார்கள். அறையிலேயே சுமார் 18 மணி நேரம் அமர்ந்திருந்தார் அடிகளார். அதாவது மறுநாள் அதிகாலை ஐந்து மணி வரையிலும் அடிகளார் முன்னிலையில் சோதனை நடந்தது.

p42b.JPG

ஆதிபராசக்தி சித்தர் பீடம், ஆதிபராசக்திபொறியியல் கல்லூரி, ஆதிபராசக்தி பாலிடெக்னிக், மருத்துவக் கல்லூரி, கோயிலுக்குப் பக்கத்தில் அடிகளார் தெருவில் இருக்கும் பங்காருவின் வீட்டிலும் வருமான வரித் துறை சோதனை அமர்க்களப்பட்டது. அடிகளார் தெருவுக்குள் இதுவரை தனியார் வாகனங்கள் நுழைந்ததுகூட இல்லை. அடிகளாரைப் பார்க்க வரும் வி.வி.ஐ.பி-க்களின் கார்கள்கூட தெரு முனையில் நிறுத்தப்பட்டுவிடும். அடிகளார் தெருவில் நடந்தேதான் அவரது வீட்டை அடைய முடியும். ஆனால், அன்று அடிகளார் தெருவுக்குள் அரசாங்கத்தின் 20 வாகனங்கள் அணி வகுத்து நின்றன. அதே தெருவில் இருக்கும் மூத்த மகன் அன்பழகன். இளைய மகன் செந்தில்குமார். மகள் ஸ்ரீதேவி, மற்றும் அடிகளாரின் அதி முக்கிய உதவியாளர் களின் வீடுகள் என அனைத்திலும் சோதனை நடை பெற்றது. நேரமாக நேரமாக, பாதுகாப்புக் காரணம் கருதி காவலர்களின் எண்ணிக்கை கூடத் தொடங்கியது.

தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்து சுமார் 2 மணி அளவில் அடிகளாரின் வழக்கறிஞர்கள், அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர்.

சோதனை தொடங்கியதுமே கோயிலைச் சுற்றியிருக் கும் கடைகள் மூடப்பட்டன. கல்லூரி விடுதி மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

சோதனையின்போது மௌனமாகவே இருந்த அடிக ளார், மாலை 4 மணிக்கு மேல்தான் அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தொடங்கினாராம். இரவு 8.30 மணிக்கு ‘நீங்கள் ரெஸ்ட் எடுத்துக்கொள்வதாக இருந்தால் ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு வரலாம்’ என அதிகாரிகள் சொல்ல, ‘எனக்கு ஓய்வு தேவை இல்லை!’ என்று சொல்லிவிட்டார் அடிகளார்.

ரெய்டு தகவல் கசியத் தொடங்கியதும், ஈரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக வழிபாட்டு மன்றத்தினர், பெரும் படையாக மேல்மருவத்தூருக்குப் புறப்பட்டு வந்தனர். இவர்கள் சுமார் இரவு 12 மணிக்கு கோயில் வளாகத்தை முற்றுகை இட்டார்கள். சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் எதையோ எடுக்க வெளியில் நின்றிருந்த தங்கள் கார்களுக்கு வந்தபோது, அவர்கள் காதுபடவே வசை பாடியது ஒரு கூட்டம்.

மேல்மருவத்தூரில் சோதனை தொடங்கிய அதே நேரம், சென்னை அடையாறில் உள்ள அடிகளாரின் மகன் அன்பழகன் வீடு மற்றும் அண்ணாநகரில் உள்ள அடிகளார் மகன் செந்திலின் மனைவி ஸ்ரீலேகாவின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. ஸ்ரீலேகா, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.

p42.JPG

மறுநாள் சனிக்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு விசாரணை முடித்து வெளியே வந்தார் அடிகளார். அப்போது பெண் பக்தர்கள் உட்பட சுமார் 400 பக்தர்கள் ‘அம்மா… அம்மா’ என்று கதற ஆரம்பித் தனர். எந்த ரியாக்ஷனும் காட்டாத அடிகளார், கோயிலைச் சுற்றி வந்து சாமி கும்பிட்டுவிட்டு கருவறையின் எதிரில் நிறுத்தப்பட்ட அவர் காரில் ஏறி வீட்டுக்குப் புறப்பட்டார். புதுச்சேரியில் உள்ள அடிகளாரின் பண்ணை வீடு, ஆதிபராசக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் செய்யூர் சாலையில் உள்ள ரைஸ் மில்லுடன் கூடிய பண்ணைகள் ஆகியவை சோதனையில் இடம் பெறவில்லை!

வழக்கமாக சோதனை முடிந்ததும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் அதிகாரி கள் மேல்மருவத்தூரில் மட்டும் ஏனோ பத்திரிகையாளர்களை தவிர்த்தார்கள். ஒட்டுமொத்த சோதனைகளையும் படமெடுக்கவும், செய்தி சேகரிக்கவும் சென்றிருந்த நிருபர்களுக்கும், புகைப்படக்காரர்களுக்கும் மருவத்தூர் கோயில் வாசலிலேயே முரட்டு ஆசாமிகள் அர்ச்சனை செய்தார்கள். சிலரது இரு சக்கர வாகனங்களும், கேமராக்களும் உடைய, மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் பத்திரிகையாளர்கள் ஒன்று திரண்டு டி.எஸ்.பி-யிடம் புகார் கொடுத்தார்கள். ஆனால், உடனடியான நடவடிக்கை எதுவும் இல்லை! இதனால் ஆத்திரமான பத்திரிகையாளர்கள் மதுராந்தகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், மார்க்சிஸ்ட் கட்சியும் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கின!

மேல்மருவத்தூர்போலவே தமிழகத்தில் இருக்கும் இன்னும் சில கல்லூரிகளிலும் சோதனை நடைபெற்றது. ஆனால், சோதனைக் காலம் நீண்டது மருவத்தூரில் மட்டுமே. டெல்லி வட்டாரங்களில் விசாரித்தோம். ”ஊழல் வழக்கில் கைதாகி p42a.JPGசிறையில் இருக்கும் முன்னாள் இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவர் கேதன் தேசாய் கடைசியாக அனுமதி அளித்த நான்கு கல்லூரிகளில் மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரியும் ஒன்று. தேசாயே இந்தக் கல்லூரிபற்றிய விவரங்களைச் சொல்லி இருக்க வேண்டும். அதனால் சி.பி.ஐ. அதிகாரிகள் முறைப்படி எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்து, வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு மற்றும் வருமானவரித் துறை ஆகிய மூன்று துறைகளையும் கூட்டாக இணைத்து இந்த ரெய்டை நடத்தி இருக்கிறார்கள். சோதனையில் இடம்பெற்ற அதிகாரிகள் முழுக்கவே சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த அதிகாரிகள்தான். இவர்களுக்கு உதவி செய்வதற்காகவே, தமிழ் பேசும் 20 அதிகாரிகளும் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஒரு குழுவாக கடந்த மாதம் முழுக்கவே மேல்மருவத்தூரில் தங்கினார்கள். செவ்வாடை உடுத்தி கோயிலுக்குச் சென்று வந்தார்கள். அடிகளாரின் வீடு, கோயில், கல்லூரி ஆகியவற்றின் உட்கட்டமைப்பு, அவற்றுக்குப் போய் வர எத்தனை வழிகள் என்பது வரை நோட்டம் விட்டார்கள். அடுத்து ஒரு மாணவரைத் தயார் செய்து, வருவாய்ப் புலனாய்வு அதிகாரியே மருத்துவக் கல்லூரிக்குப் போய் எம்.பி.பி.எஸ். ஸீட் கேட்டு இருக்கிறார். அப்போது நடைபெற்ற பேரத்தை அப்படியே ரகசிய கேமராவில் பதிவும் செய்திருக்கிறார். பூர்வாங்க விசாரணைகளை முடித்துக் கொண்டுதான் களத்தில் இறங்கினார்கள் அதிகாரிகள். ஆனால், அதற்கு முன்பு மாநில அரசிடமும் அனுமதி கேட்டு இருக் கிறார்கள். முதலில் மறுப்புத் தெரிவித்த மாநில அரசு, ‘எதுவானாலும் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்!’ எனக் கேட்டுக்கொண்டது. தங்களிடம் இருந்த ஆதாரங்களை வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு மாநில அரசுக்குச் சொன்னதும், சென்னை கோட்டையில் இருந்து மறுப்பு எதுவும் சொல்லப்படவில்லை’ என்கிறார்கள்.

இந்தச் சோதனைக்கு அரசியல்ரீதியான காரணங்களும் சொல்லப்படுகின்றன. அதுபற்றி விவரமான வட்டாரங்களில் விசாரித்தோம். தங்கள் அடையாளங்களை மறைத்து நம்மிடம் பேசியவர்கள், ”அரசியல்ரீதியாக தன்னை எப்போதுமே வெளிப் படுத்திக்கொள்ளாத ஆதிபராசக்தி பீடத்துக்கு அனைத்து அரசியல் தலைவர்களும் விசிறிகள்தான். முதலில் இந்தப் பகுதியில் பா.ம.க. வளரத் தொடங்கியபோது, இனரீதியாக அடிகளார் மீது பா.ம.க. பாசம் காட்டியது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் பா.ம.க-வின் ஏழு வேட்பாளர்களும் தனித்தனியாக அடிகளாரை சந்தித்து ஆசி வாங்கினார்கள். கூடவே தங்களுக்கு ஆதரவையும் வேண்டினார்கள். ஆனால், அப்போது அடிகளாரின் ஆதரவு தி.மு.க-வுக்குப் போனது. இதுவும் பா.ம.க-வின் தோல்விக்கு ஒரு முக்கியக் காரணம். இதையடுத்து, பா.ம.க-வின் மூத்த தலைவர் மேல்மருவத்தூரைச் சுற்றி இருக்கும் கிராமங்களுக்கு விசிட் அடித்து அடிகளாரைப்பற்றியும் அவரது பூர்வீகத்தைப்பற்றியும் அக்குவேறு ஆணிவேறாக அலசிப் பேசினார். இன்னொரு பக்கம், தி.மு.க-வுடன் சாதகமாகவே இருந்தாலும், செம்மொழி மாநாட்டுக்காக ஒரு சிலர் கணிசமான தொகையையும் சில உதவிகளையும் கேட்க, அதற்கு மேல்மருவத்தூர் கோயில் செவிசாய்க்கவில்லை. இதுதான் சோதனைக்கு முதல் படி!” என்றார்கள்.

டெல்லித் தலைவர்களுடன் நெருக்கம் பாராட்டும் சிலரோ, காஞ்சிபுரம் காங்கிரஸ் எம்.பி-யான விஸ்வ நாதன் மூலமாக, ப.சிதம்பரத்தையும் கோயில் தரப்பு தொடர்புகொண்டதாகவும் தகவல்கள் உள்ளன. ஆனால், ‘எல்லாம் நடந்த பிறகு என்னால் எதுவும் செய்ய முடியாது!’ என்று அவர் கை விரித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

சோதனை மட்டும்தான் என்று உள்ளே நுழைந்த அதிகாரிகள், அடுத்தடுத்துக் கிடைத்த ஆதாரங்களை வைத்து அடிகளாரையே கைது செய்யும் எண்ணத்தில் இருப்பதாக மாநில உளவுத் துறைக்குத் தகவல் வர, கொதித்துவிட்டாராம் தமிழகத்துத் தலைவர். ‘எனது ஆட்சியில் ஆன்மிகக் கைதுகள் இருக்கவே கூடாது. அது சட்டம் – ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்னை’ என்று எச்சரிக்கும் தொனியில் பேசியதாகவும் தகவல்!

ஆனாலும் எந்நேரமும் கைதுப் படலம் இருக்கலாம் என்பதை எதிர்பார்க்கும் ஆதிபராசக்தி அறக்கட்டளை யினர் மாவட்டம்தோறும் இருக்கும் வழிபாட்டு மன்ற உறுப்பினர்களை செவ்வாடை உடுத்தி மருவத்தூருக்கு வரவழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். கைதுப் படலம் ஆரம்பமானால், இந்த செவ்வாடை பக்தர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டுவார்கள் என்கிறார்கள்.

மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளாரின் பால்ய நண்பர்கள் வட்டாரத்திலும் பேசினோம்.

”சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூர் என்ற ஓர் ஊரையே அடையாளம் காட்டிய பெருமை அடிகளாரைத்தான் சாரும். அவரது குடும்பம் இந்தப் பகுதியில் செல்வாக்கான குடும்பம். அவரது முன்னோர்கள் பெரும் ரயில்வே ஒப்பந்தக்காரர்களாகவும், பெரும் நிலக்கிழார்களாகவும் இருந்தார்கள். ஆனாலும், அடிகளார் படித்து ஆசிரியர் பணிக்குச் சென்றார். பக்கத்தில் இருக்கும் அச்சரப் பாக்கம், அமரம்பேடு ஆகிய ஊர்களில் ஆசிரியராக வேலை பார்த்த அடிகளார், பெற்றோர் பார்த்துவைத்த பெண் லட்சுமியை மணந்துகொண்டார். இவரும் ஓர் ஆசிரியை. 70-களில் அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்த அடிகளார், அப்போதுதான் இந்தப் பகுதி மக்களுக்குப் பரிச்சயமானார். நெடுஞ்சாலை ஓரத்தில் புற்றுக் கோயிலாக இருந்த இடத்தில், 21 சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்த இடமாக அருள்வாக்கில் தெரிய வர, அதுதான் இன்று இவ்வளவு பெரிய ஆன்மிக சாம்ராஜ்யமாக விஸ்வரூபம் எடுத்தது.

ஆரம்பத்தில் சித்தர் பீடத்துக்கு வந்த பக்தர்களை, அன்னதானம், கண் நோய்க்கு சிகிச்சை அளிக்கக் கேட்டுக்கொண்டார். அதுதான் அவரது முதல் பொது வாழ்க்கைப் பணியாக இருந்தது. அதன் பிறகு பக்தர்கள் கூட்டம் குவிய, தனது ஆசிரியப் பணியை ராஜினாமா செய்தார் அடிகளார். அதன் பிறகு மருவத்தூருக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாகக் கொடுத்த நிதியில் முதலில் கல்வி நிலையங்களை அமைத்தார். மருவத்தூர் மக்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்புக்காக, அவர்களை மதுராந்தகத்துக்கோ, செங்கல் பட்டுக்கோதான் அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். மருவத்தூரிலேயே பள்ளிகளைக் கட்டிய அடிகளார் அதன் பிறகுதான் தற்போதைய ஆலயத்தை விரிவுபடுத்தத் தொடங்கினார். இப்போதும் தினமும் 9 மணிக்கு சரியாக கோயிலில் ஆஜராகிவிடும் அடிகளார், அம்மாவுக்கு தீபாராதனை காட்டிவிட்டு பக்தர்களுக்குத் தரிசனம் தருவார். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் அருள்வாக்குச் சொல்லத் தவறுவதில்லை!” என்றார்கள்.

சரி, வருமான வரித் துறை சோதனை, அடுக்கடுக் கான புகார்கள்பற்றி ஆதிபராசக்தி பீடம் என்ன நினைக்கிறது?

அடிகளாருக்கு அருகில் இருப்பவர்களிடம் பேசினோம். ”அரசியலுக்கும் எங்கள் ஆன்மிகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அம்மாவின் (அடிகளாரின்) மகள் திருமணத்துக்கு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா வந்திருந்தார். டாக்டர் ராமதாஸ் குடும்பத்தோடு வந்திருந்தார். தற்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்யாணம் முடியும் வரை அமர்ந்திருந்தார். இந்தக் கோயிலுக்கு, மத்திய, மாநில அமைச்சர்கள், முதலமைச்சர்கள், நாடாளுமன்ற சபா நாயகர்கள் என வந்தவர் களின் பட்டியலை நாங்கள் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

தற்போது நடைபெற்று இருக்கும் சோதனையை நாங்கள் நன்மையாகவே எடுத்துக்கொண்டு இருக்கி றோம். எங்கள் கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தை p43.JPGஎவ்வளவு தூய்மையாக வைத்து இருக்கிறோம் என்பதற்கு இந்த சோதனைகளின் முடிவில் வரும் அறிவிப்புகளே சாட்சியாக இருக்கும். பல வருட உழைப்பில் உருவான கல்வி சாம்ராஜ்யத்தை முழுவதுமாகப் பரிசோதித்துப் பார்க்க பல மணி நேரம் தேவைப்படும். அவ்வளவு நேரமும் அம்மா அவர்கள் மிகவும் பொறுமையாக அதிகாரிகளோடு ஒத்துழைத்தார். எங்களிடம் எந்த அரசியல் கட்சியும் நிதி கேட்டதில்லை. நாங்களும் கொடுத்ததில்லை. குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு நிதி கொடுக்காததால்தான் இந்த சோதனை என்று பரப்பப்படும் செய்திகள் வீண் வதந்திகள்தான். அதில் துளியும் உண்மை கிடையாது. மருவத்தூரில் விண்ணை முட்ட எழுந்து நிற்கும் கட்டடங்களும் கல்வி நிறுவனங்களும் கோடானுகோடி பக்தர்களுக்கு சொந்தமானவை. அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு மட்டும்தான் அம்மாவிடம் இருக்கிறது. மக்கள் கொடுத்ததை மக்களுக்காகவே பயன்படுத்தி வருகிறார் அம்மா!” என்றார்கள்.

ஹ்ம்ம்ம்… இது மருவத்தூருக்கு வந்த சோதனை

source:vikatan

 

கருத்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கனிமொழியின் கணவருக்கு இடமில்லை !

கனிமொழியின் கணவருக்கு இடமில்லை !

கலைஞரின் கடைசி மகன் மு.க.தமிழரசு
தயாரிப்பில், அவரது மகன்  அருள்நிதி
கதாநாயகனாக நடிக்கும்”வம்சம்” பட
இசை வெளியீட்டு விழாவிற்கு

?url=http%3A%2F%2Fvimarisanam.files.wordpress.com%2F2010%2F07%2Fmr-aravindan.jpg&key=e5a3c1e6dff5de35b1c6e7c470411886&src=pub-2311827-www.wordpress.com&cp=&sb=1&v=6.36&size=small&lang=en-us&search_type=spasense&vis=0&origin=shots_bubble&act=only_link&po=0&rp=null&tok=00034c3f67753f1f6e47aad65acf1ce8025b4a2e00&has_img=1&ol=0&ex=0&ad=unknown&ip=59.92.2.178&ua=Mozilla%2F5.0+%28Windows%3B+U%3B+Windows+NT+5.1%3B+en-US%29+AppleWebKit%2F533.4+%28KHTML%2C+like+Gecko%29+Chrome%2F5.0.375.99+Safari%2F533.4&vid=6bf9f5759717703e486896151203be2c&nl=0&referrer=http%3A%2F%2Fwebcache.googleusercontent.com%2Fsearch%3Fq%3Dcache%3Ahttp%3A%2F%2Fvimarisanam.wordpress.com%2F2010%2F07%2F13%2F%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%258A%25E0%25AE%25B4%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D-%25E0%25AE%2595%25E0%25AE%25A3%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581-%25E0%25AE%2587%2F&svc=&rt=1279095911904&view_id=6bf9f5759717703e486896151203be2c&goto=Go%20to%20%25URL&direct=1&sc=2&rss=1ருகை தந்த

கவிஞர் கனிமொழியின் கணவர் அரவிந்தன்
அவர்கள்  உட்கார இடம்
இல்லாமல் தவிக்கும் காட்சி !

இந்த புகைப்படத்தையும், செய்தியையும்
வெளியிட்டுள்ள ஆனந்த விகடன் இதழ்
குறும்பாகக் கூறுவது “அடிக்கடி வந்து போங்க
பாஸூ…இல்லைன்னா முகமே மறந்து போகும்”

mr-aravindan.jpg?w=387&h=462

பகுப்பு



-- Edited by devapriyaji on Wednesday 14th of July 2010 01:26:04 PM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூலை 2010 03:22
பகுத்தறிவுப் பாதையிலிருந்து பக்தி பாதைக்கு துணை முதல்வர்

நெற்றியில் பெரிய சந்தனப் பொட்டும் அதன் நடுவே குங்குமப் பொட்டுமாக பக்திப் பழமாக வந்தார் மதியார்.

"என்ன ஐயப்ப வழிபாடு எதற்கும் சென்று விட்டு வருகிறீரா?" என்றோம்.

"இல்லை... சென்னை, மயிலாப்பூரில் இருக்கும் ஷீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகத்துக்குப் போயிருந்தேன். அங்கே பூஜை முடிந்து பிரசாதம் கொடுத்தார்கள். உமக்கும் கொஞ்சம் வாங்கி வந்திருக்கிறேன். இந்தாரும். நீர் கொஞ்சம் எடுத்துக் கொண்டு விட்டு, அலுவலகத்தில் இருப்பவர்களுக்கும் கொஞ்சம் கொடும்..." என்று சொல்லி, பிரசாதப் பாக்கெட் ஒன்றைக் கொடுத்தார் மதியார்.

பிரசாதத்தை எடுத்து கொஞ்சம் வாயில் போட்டுக் கொண்டோம். பிறகு, மதியாரை செய்திக்காக உற்று நோக்க, அவர் கொண்டு வந்திருந்த செய்திக் கட்டுகளைப் பிரித்து நம்மிடம் கொடுக்க ஆரம்பித்தார்.

"நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை, மயிலாப்பூர் ஷீரடி சாய்பாபா கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அந்த கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்கு சென்னையில் இருக்கும் பல வி.வி.ஐ.பி-க்களும் முன்கூட்டியே கோயில் நிர்வாகத்திடம் சொல்லி வைத்து சிறப்பு அனுமதியெல்லாம் பெற்றிருந்தார்கள். ஆனால், திடுமென அங்கு வந்தார் ஒரு வி.ஐ.பி. முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்த அந்த வி.ஐ.பி-யைப் பார்த்ததும், அங்கிருப்பவர்கள் எல்லோருக்கும் கையும் ஓடலை காலும் ஓடலை. வேக வேகமாக ஓடிச் சென்று அவரை வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்று, சாய்பாபா அருளை வழங்கச் செய்தார்களாம்..."

 

"யாரந்த வி.ஐ.பி? எடுத்ததுமே ஆர்வத்தைக் கூட்டுகிறீரே?"

 

Durga_stalin_wife

"சாந்தாவாக இருந்து துர்காவாக மாறியிருக்கும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினின் மனைவிதான், அந்த வி.ஐ.பி. அவருக்கு பலமான வரவேற்பெல்லாம் கொடுத்த கோயில் நிர்வாகத்தினர், கோயிலுக்குள் அழைத்துச் சென்று வெகுநேரம் சிறப்பு பூஜைகளெல்லாம் செய்தார்களாம். கதாகாலசேபம், ஷீரடி சாய்பாபாவை போற்றிப் பாடப்பட்ட கோஷப் பாடல் நிகழ்ச்சிகளிலெல்லாம் வெகுநேரம் கலந்து கொண்டு விட்டுத்தான், அங்கிருந்து கிளம்பினாராம் துர்கா ஸ்டாலின்..."

"ஏன் ஏதும் வேண்டுதலா என்ன?"

"ஆமாம். கொஞ்ச காலத்துக்கு முன்னால், கணவர், துணை முதல்வர் ஸ்டாலினுக்கு உடல் ரீதியிலான பிரச்னைகள் இருந்து கஷ்டப்பட்டாரில்லையா? ஏன், இதற்காகவே லண்டனுக்குச் சென்று சிகிச்சையெல்லாம் எடுத்துத் திரும்பினாரில்லையா? அந்த சமயத்தில் ஷீரடி சாய்பாபாவிடம் வேண்டிக் கொண்டாராம் துர்கா. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு, அந்த வேண்டுதலையும் நினைத்து ஷீரடி சாய்பாபாவிடம் வெகுநேரம் வேண்டி உருகிவிட்டுத்தான் வீடு திரும்பினாராம், துர்கா."

"நாத்திகம் போற்றும் முதல்வர் குடும்பத்திலா இப்படியெல்லாம்?"

 

durga_2

"முதல்வர் குடும்பத்தைப் பொறுத்த வரையில் இந்த நாத்திகமெல்லாம் ஆத்திகமாகி விட்டக் கதை கொஞ்ச காலத்துக்கு முன்பே நடந்து விட்டது. அதுதான் இப்போது வெளிப்படையாக துர்கா மூலம் வந்திருக்கிறது. துர்கா, ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு மட்டுமல்ல, நிறைய கோயில்களுக்கு அவ்வப்போது சென்று வருகிறார். முதல்வர் குடும்பத்திலிருந்து நிறைய பேர் ஆன்மிகத்தின் பாதையில் பலமைல் தூரத்துக்கு பயணித்து விட்டார்கள். இப்பப் போய் நீர் ஆத்திகம், நாத்திகம் என்றெல்லாம் புரியாத்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறீரே..."

"கால ஓட்டம் நிறைய விஷயங்களை தலைகீழாகத்தான் புரட்டிப் போட்டிருக்கிறது...



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_07_2010_002_015.jpg

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_07_2010_004_010.jpg

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘‘கலைஞரின் பெற்றோர் சிலைகளை அகற்ற வேண்டும்!’’
- ராதாபுரத்தில் அடுத்த சர்ச்சை ஆரம்பம்

Radhapuram%201.jpg



ஒருவழியாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்டியிருக்கிறார் முதல்வர். ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு ராதாபுரம் எம்.எல்.ஏ.வான அப்பாவு, தமிழக முதல்வரின் பெற்றோர் முத்துவேலர்- அஞ்சுகத்தம்மாள் பெயரை சூட்ட முயற்சித்து, பேருந்து நிலையம் முன்பு முத்துவேலர் அஞ்சுகத்தம்மாள் சிலைகளையும் நிறுவினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்ப... பேருந்து நிலையத் திறப்பு விழாவுக்காக கடந்த வருடம் துணை முதல்வர் ஸ்டாலின் பெயரிடப்படாத பேருந்து நிலையத்தை திறந்து வைத்து விட்டு, சிலைகளைத் திறக்காமல் திரும்பினார்.

இதற்கிடையில் ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயரைச் சூட்டியே தீர வேண்டும் என்று கோரி, சுடலைமுத்து நாடார் என்ற தியாகி தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டு வந்தார். மேலும், ‘‘கலைஞரின் பெற்றோர் என்ன தியாகிகளா?’’ என்று கேட்டு ஜெயலலிதாவும் அறிக்கை விட்டார். ஆனாலும், ராதாபுரம் பஞ்சாயத்து தலைவர் சிவக்குமாரை வைத்து கலைஞரின் பெற்றோரின் சிலைகளை திறந்து விட்டார் அப்பாவு.

இந்நிலையில் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதிக்கு முதல்நாள், தியாகி சுடலைமுத்துவும், சிவாஜி முத்துக்குமார் என்பவரும், சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கே சென்று, ‘ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்’ என வலியுறுத்தி கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் தொடங்கினர். அவர்கள் மீது காங்கிரஸ் நிர்வாகி ஒருவரே புகார் கொடுக்க, கைது செய்யப்பட்டனர்.

Radhapuram.jpgஆனால், இ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்ற சிலரின் எதிர்ப்புக் குரல் கேட்கவே, ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயரை சூட்டியதோடு, தியாகி சுடலைமுத்து நாடார், சிவாஜி முத்துக்குமார் ஆகியோரை விடுதலை செய்தும் உத்தரவிட்டிருக்கிறார் கலைஞர்.

விடுதலையான சிவாஜி முத்துகுமாரிடம் பேசினோம். “காமராஜர் பெயரை பேருந்து நிலையத்துக்கு வைப்பதற்காக போராடும் நிலை ஏற்பட்டதே தமிழ்நாட்டுக்கு அவமானம். அதே பேருந்து நிலைய வளாகத்தில், பெருந்தலைவர் காமராஜர் மற்றும் கக்கன் சிலைகளை வைக்க வேண்டும்’’ என்றார்.

87 வயதான தியாகி சுடலைமுத்து நாடாரிடம் பேசியபோது, “நான் உண்ணாவிரதம் இருந்த நோக்கம் நிறைவேறியுள்ளது. இதற்கு தமிழக அரசுக்கும், பத்திரிகைகளுக்கும் நன்றி’’ என்றார்.

இந்நிலையில் காமராஜர் பெயர் சூட்டப்-பட்டதை அடுத்து ராதாபுரம் பேருந்து நிலையத்-திலிருந்து முத்துவேலர் & அஞ்சுகத்தம்மாள் சிலைகளை அகற்றவேண்டும் என்று கோரிக்கை-கள் எழுந்துள்ளன.

தே.மு.தி.க.வின் மாவட்டச் செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் இதுபற்றி நம்மிடம், “வரும் தேர்தலில் இந்தப் பகுதியில் உள்ள நாடார் சமுதாய ஓட்டு வங்கியில் சேதாரம் வந்து விடக் கூடாது என்றுதான் காமராஜர் பெயரை சூட்டியிருக்கிறார் கலைஞர். அவருக்கு காமராஜர் மீது உண்மையிலேயே மதிப்பு இருந்தால் ஏன் இத்தனை கால தாமதம்? கலைஞரின் பெற்றோர் சிலைகளும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும்” என்றார்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_07_2010_003_035.jpg

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_07_2010_002_042.jpg?w=630&h=210
[dinakaran.jpg][dn_100507_e1_04_cni.jpg][DN_10-05-07_E1-06-04 CNI.jpg]money.jpg?w=300kalainjar-karunanidhi-arjun-stalin-krishna-mahabarath.jpg?w=614
2008120257690101.jpg2007051001702203.jpg?w=300


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

30_07_2010_003_025horlics.jpg?w=610&h=441

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

உலகத் தமிழர்களே கருணாநிதி குடும்பம் தயாரிக்கும் திரைப்படங்களைப் புறக்கணிப்பீர்

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகிய தாங்கள் இன்றைய நிலையில் காக்கை வன்னியனைப் போலவும் எட்டப்பனைப் போலவும் நடந்து கொள்கிறாரோ என்கிற ஐயப்பாடு உலகத் தமிழர்களாகிய எங்களுக்கு ஏற்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தர் கூறியதுபோல் 'நன்மை செய்யப் பிறந்த நீ, நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாதிரு' என்பதற்கு அமைய கருணாநிதி தனது கையாலாகத்தனத்தை வெளிக்காட்டும் விதமாக செந்தமிழன் சீமான் போன்ற தமிழ் உணர்வாளர்களைக் கட்டுப்படுத்த கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

ரோம் எரியும் போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனைப் போல் இலங்கைத் தமிழர்களும் இந்திய மீனவர்களும் ஒருசேர அன்றாடம் அழிக்கப்பட்டுவரும் நிலையில் தன்னைத்தானே உலகத்தமிழினத் தலைவர் என்று தம்பட்டமடித்துக் கொள்ளும் தாங்கள் செம்மொழி மாநாட்டுக் கேளிக்கையிலும் நித்தம் ஒரு பாராட்டு விழாக் குளியலிலும் மூழ்கி களியாட்டம் போட்டதை உலகத் தமிழினம் ஒருபோதும் மன்னிக்காது. ஒரு இலட்சம் ஈழத்தமிழர் கொல்லப்பட்டதற்கு உங்களால் செம்மொழி மாநாட்டில் ஒரு இரங்கல் தீர்மானம்கூட போட முடியவில்லையா?

உலகில் 10 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்தும் 2009, முள்ளிவாய்க்கால் போரில் ஒரு இலட்சம் ஈழத்தமிழர்களாகிய நாங்கள் இனப்படுகொலைக்கு ஆளானதை யாராலும் தடுக்க முடியவில்லை. சராசரித் தமிழனுக்குச் சர்வதேச அரசியல் சதுரங்க ஆட்டத்தின் விளையாட்டு நுட்பங்கள் எதுவும் புரியவில்லை. யானையைப் பார்த்த குருடர்களின் கற்பனையைப் போல சர்வதேசங்களுக்கும் எங்களின் பிரச்சினை அவரவர்க்கும் ஒருவிதமாகத் தோன்றி, எங்களின் இலட்சியமான தாயகக் கனவு மீண்டும் முறியடிக்கப்பட்டது.

காங்கோ, சூடான், ருவாண்டா, காசா போன்ற பகுதிகளில் நடந்த இனப்படுகொலைகளைக் கண்டிக்கும் இந்தியா தனது காலடியில் அப்பாவி ஈழத்தமிழர்கள் இனஅழிப்புக்கு ஆளானதைக் கண்டிக்க மனமில்லை. தமிழையும், தமிழினத்தையும் காக்க உலகச் செம்மொழி மாநாடு நடத்துவதாகக் கூறிய உங்களால் (தமிழக முதல்வர் கருணாநிதியால்) ஈழத்தமிழரின் இனப்படுகொலையைக் கண்டிக்கத் துணிவு இல்லாவிட்டாலும், இலங்கைத் தீவு ஓரு இனப்படுகொலை; செய்த நாடாக உலகநாடுகள் பலவும் தற்போது அங்கீகரித்துவரும் நிலையிலும், உங்களுக்கு அதை ஏற்றுக்கொள்ளும் மனிதாபிமானம் ஏன் இல்லாமல் போனது?. சிங்கள அதிபர் ராஜபக்சேவும் அவரது இராணுவமும் செய்த போர்க்குற்றத்தை ஆராய ஐ.நா.மன்றம் நியமித்த மர்சூகி தரூஸ்மன் தலைமையிலான மதியுரைக் குழுபற்றி ஆதரிக்கின்றீர்களா, எதிர்க்கின்றீர்களா? என்பது பற்றி நீங்கள் இதுவரை வாய் திறக்கவில்லை. காரணம் கேட்டால், காங்கிரஸ் தயவில் ஆட்சிக்கட்டிலில் உள்ள என்னால், காங்கிரசின் தமிழின விரோதப் போக்கைத் தட்டிக்கேட்க இயலாது என்று போலிச் சமாதானம் கூறுவீர்கள்.

உணர்வுள்ள பிற அரசியல் கட்சிகள் காங்கிரசின் தமிழின விரோதச் செயல்களைத் தட்டிக்கேட்டு அம்பலப்படுத்தினால் கூட அவர்களையும் பிடித்து தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து விடுவது நியாயமா?. நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளும் அளவிற்கு அப்படி என்ன தவறாகப் பேசினார்?

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை பற்றி ஆலோசனை வழங்க ஐ.நா.மன்றம் நியமித்த மதியுரைக் குழவைப் பற்றிய மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாட்டை கூறுமாறு கேட்டதற்காகவா? அல்லது பல ஆண்டுகளாகச் சிங்களக் கடற்படையின் அட்டூழியத்தினால் நூற்றுக்கணக்கானத் தமிழக மீனவர்கள் மடிந்து கொண்டிருப்பதை மௌனமாக பார்த்துக்கொண்டு, கடிதம் மட்டும் எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டு, வெகுண்டு எழுந்து, இனியும் ஒரு தமிழக மீனவன் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டான் என்றால், தமிழகத்தில் வாழும் ஒரு சிங்கள மாணவனும் உயிருடன் திரும்ப மாட்டான் என்று எச்சரிக்கைச் செய்ததற்காகவா? எதற்காக துடிதுடித்து, பதைபதைத்து சீமானைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தீர்கள்.

இரண்டு இனத்திற்குள் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் பேசியதாக இந்திய நாட்டின் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் போட்டதென்பது, சிங்கள இனம் உங்களுக்கு உறவு அல்லவே! தமிழர்கள் உங்களின் தொப்புள்கொடி உறவல்லவா? மற்றொரு நாட்டில் வாழும் ஒரு இனத்தை, அது நமது இந்திய மீனவர்களைக் கொன்று குவிப்பதைக் கண்டு வெகுண்டு எழுந்து அந்தச் சிங்கள இனத்திற்கு எதிராகப் பேசுவது எந்த வகையில் இந்திய இறையாண்மைக்கு எதிரானது? 1990களில் நீங்கள் கூட தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டால் தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும்! என்று ஆவேசமாகப் பேசியது எல்லாம் எங்களுக்கு இன்னும் நினைவிருக்கிறதே.

சிங்களர்களுக்கு வக்காளத்து வாங்கி, சீமானைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளிய நீங்கள், முள்ளிவாய்க்கால் போரில் சிறு குழந்தைகளும், பெண்களும், முதியோர்களும் என பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பீரங்கிகளாலும் விமானத்தினாலும் சுற்றி வளைத்து சிங்களர்களால் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, இப்போது சிங்களர்களுக்காகக் கொதித்த உங்களது இரத்தம் ஏன் தமிழர்களுக்காக அன்று கொதிக்கவில்லை? மத்திய அரசின் கொள்கைதான் எங்களது கொள்கை என்று கூறும் நீங்கள், மத்திய அரசான காங்கிரசின் ஒட்டுமொத்த தமிழின விரோதப் போக்கை, பதவியைக் காப்பாற்றிக்கொள்ள நீங்கள் ஆதரிக்கலாம். ஆனால் உணர்வுள்ள தமிழர்கள் எப்படி ஆதரிக்க முடியும்? ஈழத்தமிழினத்தையும், தமிழக மீனவர்களையும் ஒட்டுமொத்தமாக அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படும் சிங்கள அரசை ஆதரிக்கும் மத்திய அரசின் அயலுறவுக் கொள்கைதான் தங்களதும், காங்கிரசினதுமான கொள்கையா?

இலங்கைக்கு ஒருபக்கம் ஆயதத் தளவாடங்களையும், உளவு வேலைகளையும் செய்து கொண்டே, போர் நிறுத்தம் கோரிப் போராடிக் கொண்டிருந்த தமிழர்களை ஏய்க்க, நீங்களும் போர் நிறுத்த உண்ணாவிரதம் மேற்கொண்டீர்கள். அப்போது உங்களது ஆதரவால் ஆட்சி செய்து கொண்டிருந்த சோனியாவின் நடுவண் அரசுக்கு நெருக்கடி கொடுத்திருந்தால், ஈழத்தில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி ஒரு இனப்படுகொலையை தடுத்து ஒரு இலட்சத்திற்கும் மேலான எமது தமிழ் உறவுகளைக் காப்பாற்றியிருக்கலாம். பண்டாரவன்னியன் கதை எழுதினால் போதுமா? எதிரிகளைத் துணிவுடன் எதிர்க்கும் அவரது வீரத்தில் சிறிதளவேனும் உங்களிடம் காணமுடியவில்லையே ஏன்? முள்ளிவாய்க்கால் போரில் கடைசி இரண்டு தினங்களில் 50,000 தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள் என மேலைநாடுகளின் செய்தி நாளேடுகள் ஆதாரபூர்வமாகச் செய்திகளை வெளியிட்டபோது, தங்களது வாரிசுகளின் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சி 20,000 தமிழர்கள் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள் எனச் செய்தி வெளியிட்டது. 'தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப்போட்டாலும், கட்டுமரமாய் மிதந்து தமிழர்களைக் காப்பேன்!' என்று நீங்கள் எழுதியபடி நடந்து காட்டியிருந்தால் உலகத் தமிழர்கள் எல்லாம் உங்களைப் போற்றி வணங்கி இருப்பார்கள்!

போர் முடீந்த பிறகு விழித்துக்கொண்ட மேற்குலக நாடுகளின் முயற்சியால், ஐ.நா.வின் மனிதஉரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்களின் ஆதரவோடு இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடத்த கடந்த ஆண்டு கொண்டு வந்த தீர்மானத்தைக்கூட இந்தியா தனது நட்பு நாடுகளைச் சேர்த்துக் கொண்டு முறியடித்தன. அப்போதுகூட தாங்கள், மத்திய அரசின் தமிழருக்கெதிரான போக்கை கண்டிக்காதது மட்டுமன்றி, ஒருபடி மேலேபோய், தமிழகத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி சர்வதேச அளவில், இராஜபக்சேவுக்கு வக்காலத்து வாங்கியது எந்த வகையில் தமிழினத் தலைவரெனத் தாங்கள் கூறிக்கொள்வது நியாயம்? தன் கைவிரலால் தனது கண்ணைக் குத்திக்கொள்வது போல், தமிழினத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவது துரோகத்தனமாகாதா?

போர் முடிந்த பிறகும், முள்வேலி முகாம்களில் சர்வதேச மனித உரிமைச்சட்டத்திற்குப் புறம்பாக அடைக்கப்பட்ட 3 இலட்சம் அப்பாவி ஈழத்தமிழர்களை, 4 மாதங்களில் அவரவர் வசிப்பிடங்களில், உரிய நிவாரண உதவிகளோடு மீள்குடியமர்த்தம் செய்வோம் என்று ராஜபக்சே இந்தியாவுக்கும், ஐ.நா.வுக்கும் அளித்த வாக்குறுதியைக்கூட இன்றுவரை நிறைவேற்றவில்லை. இன்றுவரை, 80,000 க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் முள்வேலி திறந்தவெளி சிறையில் அடிப்படைவசதிகளின்றியும், சிங்களர்களால் அன்றாடம் தங்களது கற்புகளைப் பறிக்கொடுத்தும் அல்லல்பட்டு வருகின்றனர்.

விசாரணை என்ற பெயரில் 20,000 இளைஞர்களும் சிறுவர்களும் சிங்களர்களின் கைகளில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களில் பாதிப்பேர் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை. விசாரணை என்ற பெயரில் பெண் கைதிகளைத் தனியே அழைத்து சென்று கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றனர். வன்னிப் பகுதியில் சுமார் 1,60,000 க்கும் மேற்பட்ட வீடுகள் குண்டுவீச்சுகளால் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா.மதிப்பீட்டுக்குழு தெரிவித்துள்ளது. இத்தனை பேரழிவுகளும் எங்களுக்கு வரக் காரணம், நாங்கள் நாதியற்ற தமிழினம் என்பதால், ஒருவகையில் எங்களைக் கொன்றது எங்களின் தாய்மொழி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது?

இத்தகைய பேரழிவுகளை அன்றாடம் ஈழத்தமிழர்கள் சந்தித்து வரும்போது, சர்வதேச அளவில் இராஜபக்சேவிற்கு நல்லபெயர் வாங்கித்தருவதற்கான உங்களது அயராத முயற்சியால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் வேலிக்கு ஓணான் சாட்சி கூறுவதுபோல், சிங்கள அரசு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக உலகத்தினர் காதுகளில் பூ சுற்றிப் பார்த்தனர். பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளைப் பார்வையிட, சர்வதேச பத்திரிகைகளையோ, தொலைக்காட்சிகளையோ, சர்வதேச மனித உரிமை அமைப்பினரையோ இலங்கை அரசு அனுமதிக்க வேண்டுமென்று நீங்களோ, இந்தியாவோ இதுவரை ஒருவார்த்தை இலங்கையிடம் கேட்டதுண்டா? இலங்கைத் தமிழரின் அரசியலில் ஒரு எதிரானப் பாதையை தாங்களும் மத்திய அரசும் எடுத்ததற்குக் காரணம் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், இனஅழிப்பு ஆகிய படுபாதகச் செயல்களில் நீங்களும் மத்திய அரசும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்காளிகளாக இருக்க வாய்ப்புகள் உள்ளன என்று அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். காந்தியடிகளைப் பெற்ற இந்திய தேசம்தான் இன்றைக்கு முசோலினி வழியில் செயல்பட்டுக் கொண்டிருப்பதை மனிதகுலம் ஒருபோதும் மன்னிக்காது.

இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணப்பணிகள் மேற்கொள்ள முன்னர் ரூ.500 கோடி, தற்போது ரூ.1000 கோடி எனக் கொலைவெறியர்களுக்கே கூலி தந்து கொண்டிருக்கிறீர்களே தவிர, அந்த நிவாரணத் தொகை தமிழர்களுக்காகச் செலவிடப்பட்டனவா? என்று சர்வதேசத் தொண்டு நிறுவனங்களையாவது அனுப்பி கண்காணித்தீர்களா? இப்போதுகூட உங்கள் வேண்டுகோளை ஏற்று இலங்கைக்கு அனுப்பப்படும் சிறப்புத் தூதர்குழு முன்னர் போர்நிறுத்தம் செய்யச்சென்ற இந்தியாவின் முயற்சிபோல் தேர்தலுக்காக நடத்தப்படும் ஓரங்க நாடகம்தானே தவிர, தமிழருக்கு எவ்விதப் பயனையும் தரப்போவதில்லை.

ஈழத்தமிழருக்குத்தான் இந்தியா துரோகம் செய்கிறது. இந்தியத் தமிழரான தமிழக மீனவர்களை இதுவரை 500க்கும் மேற்பட்டோரைச் சிங்கள கடற்படை சுட்டும், அடித்தும் கொன்று வருகிறதே. அதைக்கூட தட்டிக் கேட்காமல், அதற்கும் வெறும் கடிதங்களை மட்டும் அனுப்பி வந்தால், இதுவா தமிழரைக் காப்பாற்றும் இலட்சணம்? கடைசியாகச் சுட்டுக் கொல்லப்பட்ட செல்லப்பனுக்கு ரூ.3 இலட்சம் நிவாரண உதவி வழங்கினீர்கள். அரசு ஊழியர் ஊதிய உயர்வை முன்தேதியிட்டு வழங்கும் உங்கள் அரசு, இதற்குமுன் கொல்லப்பட்ட பிற மீனவர் குடும்பத்திற்கும் முன்தேதியிட்டு ஏன் ரூ.3 இலட்சம் நிவாரண உதவி வழங்கக்கூடாது? இரயில் விபத்தில் இறந்து போன குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய இந்திய அரசு, சிங்களக் கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பத்தாருக்கு வேலைவாய்ப்புத் தரவேண்டுமென்று கேட்டால்கூடவா உங்களது ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள்?

பிறமாநிலத்திலுள்ள முதலமைச்சர்கள், தங்கள் மாநிலத்தில் மட்டுமன்றி, உலகில் பிறநாடுகளில் தங்கள் இனத்தவர் பாதிக்கப்பட்டால், கூட்டணி வைத்து இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்திய அரசைத் துணிவுடன் தட்டிக்கேட்டு உரிய நிவாரணம் தேடும்போது, தாங்கள் மட்டும் வெறும் கடிதம் விடு தூது நடத்திக்கொண்டு, காவிரி நீர், முல்லைப் பெரியாறு, பாலாற்று நீர், கச்சத் தீவு போன்ற தமிழர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக காவு கொடுத்துக் கொண்டு தமிழர்களைக் கண்ணீரும், செந்நீரும் சிந்திக்கொண்டிருக்க விடலாமா? எல்லை தாண்டி வந்தாலும் பிறநாட்டு மீனவரை இந்தியா உட்பட எந்தநாடும் சுட்டுக்கொன்ற வரலாறு உலகில் இல்லை. ஆனால் நட்பு நாடாகக் கருதப்படும் இலங்கை மட்டும்தான் தமிழக மீனவரைச் சுட்டுக் கொல்கிறது. இதைக்கூடவா நீங்கள் தட்டிக்கேட்கக் கூடாது? தட்டிக்கேட்ட சீமானையாவது தாங்கள் விட்டுவைக்கக் கூடாதா? சீமான் என்றால் உங்களுக்குச் சிம்மசொப்பனமா?

வாக்களித்த மீனவத் தமிழரையும் காப்பாற்ற உங்களால் முடியவில்லை. வாழ்விழந்த ஈழத்தமிழருக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்க இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை நடைபெறுவதற்கு ஆதரவாகக் குரலெழுப்பவும் உங்களால் முடியவில்லை. ஆனால் உலகெங்கும் வாழும் தமிழர்கள் உங்களைத் தலைவராக மதித்துப் போற்ற வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள். தமிழர் வாழ்வு எங்கு, எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, உங்கள் குடும்பத்தார் எடுக்கும் படங்களைப் பார்த்து உங்கள் பெட்டிகளை நாங்கள் டாலர்களாலும், பவுண்டுகளாலும் நிரப்பிக் கொண்டிருக்க வேண்டுமா என்கிற சிந்தனை அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர்உள்ளிட்ட புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களிடம் உருவாகி, உறுதிபெற்று வருகிறது. எங்களுக்காக ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை இரத்து செய்து தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டும்போது, ஈழத்தமிழர்களாகிய நாங்கள் மட்டும் தமிழர்களைக் காக்க மனமில்லாத தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்தார் வெளியிடும் திரைப்படங்கள் அனைத்தையும் தமிழர்கள் யாரும் பார்க்காமல் புறக்கணிக்கும் இயக்கம் நடத்த முடிவு செய்து விட்டோம். இதுகூட ஒருவகையில் அண்ணல் காந்தி காட்டிய இந்திய வழிமுறைதான். அடிமைப்படுத்தியோரை வெளியேற்ற அன்று காந்தி நடத்தியது அந்நியத் துணிகள் எரிப்புப் போராட்டம்! எம்மினத்தைக் கொத்தடிமைகளாக்க விரும்புவோரை எதிர்க்க உலகத்தமிழர்கள் இன்று நடத்தப்போவது 'கருணாநிதி குடும்பத் திரைப்பட புறக்கணிப்புப் போராட்டம்!'

உலகெங்கும் வாழும் தமிழர்கள் நமது ஒற்றுமையின் வலிமையை எடுத்துக்காட்ட இந்த இனமானம் காக்கும் அறப்போருக்கு ஒத்துழைப்பு தந்து வெற்றிபெறச் செய்திட வேண்டுகிறோம். அத்துடன், ஐ.நா.மன்றம் மேற்கொள்ளும் இலங்கைமீதான போர்க்குற்ற விசாரணைக்கான மதியுரைக் குழுவை மட்டுமே நம்பிக்கொண்டிராமல், ஈழத்தமிழின படுகொலை பற்றிய ஆதார ஆவணங்களைத் தொகுத்து தமிழர்கள் வாழும் அந்தந்ந நாட்டின் நீதிமன்றங்களில் இராஜபக்சே கும்பல் மீதும், அவர்களுக்குத் துணைபோன சக்திகள்மீதும் போர்க்குற்ற விசாரணை வழக்குகள் தொடுக்க முன்வர வேண்டுகிறோம்.

இப்படிக்கு,
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்
நார்வே, சுவிஸ், ஜெர்மனி, பிரான்ஸ்,
இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா,
ஆஸ்திரேலியா.



அதிர்வு . காம்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

11_08_2010_015_007arasu.jpg?w=614&h=226

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஜல்லிக்கட்டு-பதிலளிக்குமாறு உத்தரவு
 
t.gif
ஜல்லிக்கட்டு விளையாட்டு
ஜல்லிக்கட்டு விளையாட்டு
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு எனப்படும் காளைகளை அடக்கும் நிகழ்வு தொடர்பாக விலங்குகள் நல வாரியம் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பில் 6 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவோர் காப்புத் தொகையாக இரண்டு லட்சம் செலுத்த வேண்டும் என்று இருக்கும் விதியை ஐந்து லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும், ஐந்து மாதங்கள் நடைபெறும் இந்த நிகழ்வுகளை இரண்டு மாதங்களாகக் குறைக்க வேண்டும் என்றும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் விலங்குகள் நல வாரியம் மனுத்தாக்கல் செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரவீந்திரன் மற்றும் கோகலே ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

விலங்குகள் நல வாரியத்தின் யோசனைகள் தொடர்பாக 6 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலைத் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் இதன்போது உத்தரவிட்டார்கள்.

தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு, பாரம்பரிய வீர விளையாட்டாகக் கருதப்படுகிறது. ஆனால், விலங்குகள் நல ஆர்வலர்கள், அதை மிருகவதை என்றும் அதைத் தடை செய்ய வேண்டும் என்றும் போராடி வருகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் இரு தினங்களுக்கு முன்பு இது தொடர்பாக நடந்த விவாதத்தின்போது, தமிழக அரசு ஜல்லிக்கட்டை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அரசு கேபிள் டிவி அடக்கம் செய்யப்பட்டு விட்டதா?: புதிய தமிழகம் கேள்வி

First Published : 13 Aug 2010 02:57:46 PM IST

Last Updated : 13 Aug 2010 03:03:56 PM IST

சென்னை. ஆக.13: அரசு கேபிள் டிவி அடக்கமாகச் செயல்படுகிறதா அல்லது அடக்கம் செய்யப்பட்டுவிட்டதா என புதிய தமிழகம் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

 

 

இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

 

மக்களின் வரிப் பணத்தில் மூன்று வருடங்களுக்கு முன்பு ரூபாய் 400 கோடி முதலீட்டில் அரசு கேபிள் டிவி தொடங்கப்பட்டது.  அரசு கேபிள் டிவிக்கு வெளிநாட்டிலிருந்து விலையுயர்ந்த நவீன கருவிகளும் வாங்கப்பட்டன.  அரசு கேபிள் டிவி அடக்கமாக செயல்படுகிறது என்று முதல்வர் சொல்லியிருக்கிறார்.

 

 

ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாக வரவு செலவு திட்டத்தை கையாளும் வல்லமை கொண்ட மாநில அரசால் துவங்கப்பெற்ற  அரசு கேபிள் டிவி அடக்கி வாசிக்க வேண்டிய நிலை யாரால் உருவாக்கப்பட்டது?

 

 

நீதி நேர்மையின் அடிப்படையில்  தமிழகத்தில் ஆட்சி நடைபெறுமேயானால் ஒளிவு மறைவின்றி அரசு கேபிள் டிவி துவக்கப்பட்ட நோக்கம், இன்றைய நிலை உட்பட அனைத்தையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பரலோகத்தில் இருக்கும் பிதாவே, இந்தப் போலிப் பாதிரியை மன்னியும்.

gaspar.jpg



மறக்க முடியுமா என்று ஒரு தொடர் ஜகத் கஸ்பரால் நக்கீரன் இதழில் தொடர்ந்து எழுதப்பட்டு வந்ததை அறிவீர்கள். அந்தத் தொடர் எழுதப்பட்டு வந்ததை சவுக்கு வாசகர்கள் அறிவீர்கள். அந்தத் தொடரைப் படித்தவர்களுக்கு, புலிகள் இயக்கமே, இந்த போலிப் பாதிரி கஸ்பரை நம்பித்தான் இருப்பது போலவும், இந்தக் கஸ்பர் சொன்ன பேச்சை பிரபாகரன் கேட்டிருந்தால், புலிகள் இயக்கம் வீழ்ந்திருக்காது என்பது போலவும் எழுதப் பட்டு வந்தது. 

இந்தத் தொடர் வெளிவந்த பல நக்கீரன் இதழ்களின் அட்டை படம், இந்த “மறக்க முடியுமா“ தான். இந்த கஸ்பரை இது போல ப்ரமோட் செய்ததில், கர்ம வீரர் காமராஜ் மற்றும் கஸ்பர் இருவருக்கும் மிகுந்த பலன் தரும் விஷயமாக இருந்ததால், ரொம்ப வசதியாகப் போனது.

யார் இந்த ஜகத் கஸ்பர் ?

இவர் ஒரு ரோமன் கத்தோலிக்கப் பாதிரி. இன்று தமிழ் மையம் என்ற ஒரு மடத்தை வைத்து நடத்தி இந்த மடத்தின் மூலம், மத்திய மாநில அரசுகளின் பணத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறார். இதைப் பற்றி விரிவாகப் பார்க்கும் முன், இந்தப் பன்னாடையின் பின் புலம் என்ன என்பதைப் பார்ப்போம்.

கஸ்பர் என்ற இந்தப் போலிப் பாதிரி, இறையியல், வரலாறு, தத்துவம், அரசியல் ஆகிய பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆனால், இந்தப பாடங்கள் எதிலும் சிறக்காமல், பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதுதான் கஸ்பரின் திறமை. 

1997 முதல், 2002 வரை பிலிப்பைன்ஸ் மணிலாவில் உள்ள வெரித்தாஸ் வானொலியில் பணியாற்றினார். வெரித்தாஸ் வானொலி என்பது, நம்ப ஊரில் ப்ரேயர் சேனல், ஏசு அழைக்கிறார் என்ற டுபாக்கூர் சேனல்கள் வருகிறதல்லவா ? 

இதன் ஒலி வடிவம் தான் ரேடியோ வெரித்தாஸ். இந்த வெரித்தாஸ் வானொலியின் மறுபக்கம் என்னவென்றால், இது அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏவால் நடத்தப் படுவது என்ற தகவல். மணிலாவில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே கஸ்பருக்கு, புலிகள் இயக்கத்துடன் தொடர்பு ஏற்படுகிறது.

கஸ்பரின் பாதிரி என்ற போர்வையும், சர்வதேச தொடர்புகளும், புலிகள் இயக்கத்திற்கு, இந்த ஆளை நாம் பயன்படுத்திக் கொண்டால் என்ன என்று எண்ணி, புலிகளின் நிதியைக் கையாளும் ஒரு பொறுப்பு கஸ்பர் தலையில் விழுகிறது.

2002ம் ஆண்டு வரை வெளிநாட்டிலேயே இருந்த கஸ்பர், இந்தியாவுக்குள் கால் பதித்தது இசை ஞானி இளையராஜா மூலமாகத் தான். இளையராஜாவின் திருவாசக சிம்பொனியை வெளியிடும் பொறுப்பை ஏற்று, பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த திருவாசகத்தை வெற்றிகரமாக வெளியிட்டார்.

kass.bmp

இதை வெளியிடும் போது, ஏற்பட்ட சினிமா தொடர்புகள் மூலம், அரசியல் தொடர்புகளை வளர்த்தெடுக்கிறார் கஸ்பர்.

கருணாநிதி குடும்பத்தோடு தொடர்புகள் ஏற்பட்டதும் கஸ்பருக்கு சுக்கிர திசைதான்.
கஸ்பரின் சர்வதேசத் தொடர்புகளை கருப்புப் பணத்தை வெள்ளையாக்க பயன் படுத்திக் கொள்ளலாம் என்று கருப்புப் பணத்தை மூட்டையாகக் கட்டி வைத்திருப்பவர்கள் முடிவெடுத்தார்கள். 

அதற்கான வழி முறைகளை கஸ்பரே வகுத்துக் கொடுத்தார். அவர் மூளையில் உதித்த திட்டம் தான் “தமிழ் மையம்“. இந்தத் தமிழ் மையம் 2002 ஜுலையில் தொடங்கப் பட்டது. இந்த மையத்தின் நோக்கம், மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வளர்த்தெடுப்பது என்று கூறினாலும், உண்மையான வேலை, கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவது. 

kaserere.jpg


இந்தத் தமிழ் மையத்தின் ட்ரஸ்டிக்கள் யார் தெரியுமா ? கனிமொழி. ஸ்ரீராம் சிட்ஸ் முதலாளியின் மனைவி, மாஃபா பாண்டியராஜனின் மனைவி, மற்றும் சதீஷ் டேவிட் என்பவர்கள். 

இந்தத் தமிழ் மையத்தில் என்ன நடக்கிறது என்பதற்கு ஒரு சிறு உதாரணம் கூறுகிறேன். Central Institute of Classical Tamil என்ற மத்திய அரசு நிதி உதவி பெறும் ஒரு நிறுவனம் இருக்கிறது. இதன் பணி, மொழியை மேம்படுத்தவது, மக்களுக்காக தமிழ் இலக்கியங்களை எளிமைப் படுத்தி வழங்குவது.

இந்த நிறுவனத்திடமிருந்து, திருக்குறளை இசையாக்குகிறேன் என்று ஒரு 8 கோடி ரூபாயை வாங்கினார் இந்தப் போலிப் பாதிரி. வாங்கி, திருக்குறளை இசையோடு கலந்த சிடியாக தயாரித்து, பேராசிரியர்.அன்பழகனை வைத்து வெளியிட வைத்து, ஒரு சிடியை 500 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கிறார் இந்தப் பாதிரி.


Kani.jpg

இந்தச் செம்மொழி மாநாட்டில், ஆடல் பாடல் தொடர்பான அனைத்து வேலைகளும், கஸ்பரின் தம்பி, ப்ரைட் ஜெகத் வசம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. அத்தனை வேலைகளிலும், 25 முதல் 40 சதவிகிதம் வரை கஸ்பர் குடும்பம் ஆட்டையைப் போட்டிருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.

செம்மொழி மாநாடு எப்போதாவது தானே நடக்கும். அதனால், ஆண்டுதோறும் சம்பாதிக்க கஸ்பர் கண்டு பிடித்த அற்புதமான வழி, மராத்தான் ஓட்டப் பந்தயம் நடத்துவது. இந்த ஓட்டப் பந்தயத்தை, தனக்கு இருக்கும் பணத்தாலும், பத்திரிக்கை செல்வாக்காலும், பிரபலப் படுத்தி பெரிய அளவில் ஸ்பான்சர்களைப் பிடித்து, ஒரு பெரிய அமவுண்ட்டை ஆட்டையப் போடுவது, கஸ்பருக்கு கை வந்த கலை.

இதே போல, ஆண்டுதோறும் நடக்கும் சென்னை சங்கமத்தில், கனிமொழியோடு சேர்ந்து கொண்டு, விழா ஏற்பாடுகள் அத்தனையும் கவனித்துக் கொள்வதாக உறுதியளித்து விட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, திமிங்கிலத்தையே முழுங்கி ஏப்பம் விடும், கனிமொழியே கடுப்பாகும் அளவுக்கு, 50 சதவிகிதத்துக்கு மேல் ஆட்டையப் போட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழ் ஆராய்ச்சிக்காக ஏறக்குறைய 300 கோடி ரூபாய்கள், Central Institute of Classical Tamil, International Institute of Tamil Studies, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவு, மொழிப் பிரிவு, போன்ற நிறுவனங்களிடம் குவிந்து கிடக்கின்றன. நான் தமிழில் ப்ராஜெக்ட் செய்கிறேன் என்று இந்த நிறுவனங்களிடமிருந்து இந்த ஆண்டு மட்டும் கஸ்பர் இது வரை பெற்ற தொகை ரூபாய் 16 கோடி.

இந்த நிறுவனங்களிடமிருந்து, ப்ராஜேக்ட் செய்கிறேன் என்று, பணத்தை வாங்கி, சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும், மற்ற கல்லூரிகளில் உள்ள தமிழ்த்துறை மாணவர்களை அழைத்து, உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை காட்டி, அவர்களை வைத்து, கடுமையாக வேலை வாங்கிக் கொள்வதாக தகவல்கள் கூறுகின்றன.


kanimozhi_gaspar.jpg

இந்தப் போலிப் பாதிரியோடு கூட்டணியில் இருப்பவர்கள், ஆ.ராசா, தங்கம் தென்னரசு, விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ ரவிக்குமார், அமைச்சர் பூங்கோதை. இவர்கள் கூட்டணி எப்படி வேலை செய்கிறது தெரியுமா ? இது தவிர, வழக்கமான “டர்ட்டி பாய்ஸ்“ இதில் உண்டு. “டர்ட்டி பாய்ஸ்“ குழுவிற்கு, கஸ்பர்தான் பொருளாளர்.

செட்டிநாட்டு சீமானின் மகன், கார்த்தி சிதம்பரம் இவரின் நெருங்கிய கூட்டாளி. எப்படி நெருங்கிய கூட்டாளி என்றால், மாலை வேளைகளில் கஸ்பரோடு அமர்ந்து Green Label ஸ்காட்ச் குடிக்கும் அளவுக்கு நெருங்கிய கூட்டாளி.

raja.jpg

பாதிரி நடத்திய கிரிஸ்துமஸ் விழாவில் பேசும் ஆ.ராசா



அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, மென்பொருள் ஆர்டர் வழங்குவது. இந்த மென் பொருள் ஆர்டர்கள், கஸ்பரோடு யார் ஒப்பந்தத்தில் ஈடுபடுகிறார்களோ, அவர்களுக்கே வழங்கப் படும். அதாவது, உங்களிடம் ஒரு மென்பொருள் இருக்கிறது என்றால், நீங்கள் கஸ்பரை சந்திக்க வேண்டும். 

அந்த மென்பொருளின் விலை 2000 ரூபாய் என்றால், கஸ்பர், உங்களிடம் 2000 ரூபாய் உங்களுக்கு வழங்கப் படும் என்று கூறுவார். இந்த மென்பொருளை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும், 5000 ரூபாய்க்கு கஸ்பர் வழங்குவார். கஸ்பருக்கு 3000. உங்களுக்கு 2000. 

kasper1.jpg

இது போல, ஆயிரக்கணக்கான மென்பொருள் உங்களிடம் வாங்கப் படும் என்பதால், கிடைத்த வரை லாபம் என்று நீங்களும் சந்தோஷப் படுவீர்கள். இந்த 3000த்தை கஸ்பர் முக்கியஸ்த்தர்களுக்கு பங்கு பிரித்துக் கொடுத்தது போக, ஒரு பெரும் பாகத்தை அமுக்குவார்.
கருப்பை வெள்ளையாக்க, தமிழ் மையத்தைத் தவிர, Give Life. நாம் என மொத்தம் எட்டு ட்ரஸ்ட்டுகள் வைத்துள்ளார் கஸ்பர். 

இந்த ட்ரஸ்ட்டுகள் மூலம், கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவது மட்டுமல்லாமல், வெளிநாட்டவர்களிடமிருந்தும், பணம் வசூல் செய்வது, கஸ்பரின் திறமை.
இது தவிர, Acrolinks Business Solutions Pvt. Ltd. என்ற மென்பாருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார் இந்தப் பாதிரி. இந்த நிறுவனம் சென்னையில் உள்ளது.

kas.jpg

திருடர்களின் கூட்டணி


இந்த நிறுவனம் போக, மும்பையில் மற்றொரு நிறுவனம் இருப்பதாகவும், தகவல்கள் கூறுகின்றன. மாதத்திற்கு இரு முறை, மும்பை செல்லும் கஸ்பரோடு, இவரது செயலாளரும், மேரி என்ற கன்னியாஸ்திரியும் செல்வார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.
சென்னையில் இருக்கும் நாட்களில் கஸ்பரின் முழுநேர வேலை, ப்ரோக்கர் தொழில். ப்ரோக்கர் என்றால் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். 

அரசு காண்ட்ராக்ட் பெற வேண்டும், அரசு வேலை பெற வேண்டும், நல்ல போஸ்டிங் வேண்டும் என்று பல்வேறு வேலைகளுக்காக, மயிலாப்பூரில் உள்ள தமிழ் மைய அலுவலகத்திற்கு, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, தொடர்ச்சியாக பார்வையாளர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.

எளிமையாக வாழ்க்கை நடத்த வேண்டிய இந்த கத்தோலிக்கப் பாதிரியிடம் இன்று எத்தனை வண்டிகள் தெரியுமா ?

1) ஹ்யுண்டாய் ஆக்சென்ட்
2) டொயோட்டா கரோல்லா
3) பியட் பாலியோ
4) டோயோட்டா இன்னோவா
5) போர்ட்

ஈழப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலத்தில், இந்தப் பாதிரி என்ன செய்தார் தெரியுமா ? நக்கீரனில் புருடா விடுவதைத் தவிர்த்து, ஒரு கூட்டமைப்பை அமைப்பார். முக்கியமான நபர்களை அழைத்து, அவர்களிடம் நாம் ஒரு கூட்டமைப்பை அமைத்து போராட்டம் நடத்துவோம் என்று கூறுவார்.
அந்தக் கூட்டமைப்பின் முதல் கூட்டம் மட்டும் 

நடக்கும். கூட்டமைப்புக்கு வருகை தரும் ஒருவர் கூட, இரு சக்கர வாகனத்திலோ, நடந்தோ வர மாட்டார்கள். அத்தனை பேரும், சொகுசு காரில் வருவார்கள். சொகுசு காரில் வருபவன், ஈழத் தமிழருக்காக தெருவில் இறங்குவானா ?

இப்படியே, பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்று தன் வண்டியை ஒட்டி, பல கோடிகளை குவித்துக் கொண்டிருக்கிறார் கஸ்பர்.

பாதிரியாக இருந்தாலும், கஸ்பர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் போலத்தான் தெரிகிறது. கடவுள் நம்பிக்கை இருந்தால், இத்தனை பாவங்களை தொடர்ந்து செய்வாரா கஸ்பர் ?

04a.jpg
சவுக்குக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. இருந்தால், பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரமபிதாவே, இந்தப் போலிப் பாதிரி கஸ்பரை மன்னியும் என்றுதானே பிரார்த்திக்க வேண்டும் ?.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பொன்னர் சங்கர்.... வாங்கினார் மார்ட்டின்!

1.jpg


















பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கும் பொன்னர் சங்கர் திரைப்படத்தை வாங்கினார் பிரபல லாட்டரி வர்த்தகரான மார்ட்டின்.

அவரது மார்ட்டின் புரொடக்ஷன் ஏற்கெனவே முதல்வர் கருணாநிதி கதை வசனத்தில் உருவாகும் இளைஞன் படத்தைத் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரசாந்த் நடிக்க கருணாநிதி கதை வசனத்தில் உருவாகும் மற்றொரு பிரமாண்ட வரலாற்றுப் படமான பொன்னர் சங்கரையும் வாங்கியுள்ளார். ஆரம்பத்தில் இந்தப் படத்தை தியாகராஜனே தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

பொன்னர் சங்கர் படத்தில் ராஜ்கிரண், சினேகா, குஷ்பு, சத்யராஜ், பிரகாஷ் ராஜ், நெப்போலியன், மற்றும் ஜெயராம் உள்பட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இதுவா ஜனநாயகம்? -மிரட்டிய விளம்பரமும் வெளியான செய்தியும்!

1.jpg

"ஜூனியர் விகடன் இதழை எதிர்த்து தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குக்கு சவால் விடும் மிகப்பெரும் போராட்டத்தை எங்கள் இயக்கம் நடத்தும்!' -தமிழ்நாடு இல்லத்துப் பிள்ளைமார் மாநில சங்கத்தின் தலைவர் வி.பி.எம்.சங்கர் பெயரில் வெளிவந்த இந்த விளம்பரத்தைப் பார்த்து... கருத்து சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் அத்தனை பேரும் கொந்தளித் தார்கள். 

இதை கண்டித்து சென்னைப் பத்திரிகையாளர் சங்கம், சென்னை பத்திரி கையாளர் மன்றம் உள்ளிட்ட பத்திரிகை யாளர் அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. விளம்பரம் வெளியான அன்றைய தினமே சென்னை பத்திரி கையாளர் மன்றத்தில் அவசரக் கூட்டம் ஒன்றும் கூட்டப்பட்டது. பத்திரிகையாளர்களுக்கு எதிரான வெளிப்படையான மிரட்டல் சவால்களை எதிர்கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்ட அந்தக் கூட்டமே பிறகு கண்டனக் கூட்டமாகவும் மாறியது. 

மிரட்டல் விளம் பரம் கொடுப்பது, பணி யாற்றும் ஊழியர்களின் பெயரைக் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டுவது, தொலைபேசியில் அச்சுறுத்தி வருவது உள்ளிட்ட ஜனநாயக விரோதச் செயலை கண்டிப்பதோடு, பத்திரி கையாளர்கள் உயிருக்கும், உடை மைக்கும் அச்சுறுத்தல் ஏற் பட்டுள்ள சூழ்நிலையை சென்னை உயர்நீதிமன்ற கவனத்துக்கு கொண்டுசென்று உரிய பாது காப்புக்கான உத்தரவை பெறுவது, பகிரங்க அச்சுறுத்தல் கொடுத்த தனி நபர்கள், சங்கங்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பது உள்ளிட்ட 8 தீர்மானங்களை நிறைவேற்றினார்கள் பத்திரிகையாளர்கள். 

கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருந்த ஜூனியர் விகடன் ஆசிரியர் அசோகன் பத்திரிகை யாளர்களிடம் பேசியபோது, ""சட்டம்-ஒழுங்கிற்கு சவால் விடும் வகையில் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை சென்னையில் உள்ள எங்கள் அலுவலகத் துக்கு முன்பு1.jpgநடத்தப்போவதாக வெளியான விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட செய்தியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இப்படிப்பட்ட விளம்பரங்கள் கொடுப்பது இந்திய தேசத்தின் அரசமைப்பு சட்டத்துக்கும், அடிப்படை கருத்துரிமைக்கும் எதிரானது மட்டுமல்ல -பத்திரிகையாளர்கள் அத்தனை பேருக்கும் விடுக்கப்படும் மறைமுக மிரட்டலாகவே அமைந்துள் ளது. யூகத்தின் அடிப்படையில் சில நிருபர்கள் பெயரைக் குறிப்பிட்டு மதுரை முழுக்க 10-க்கும் மேற்பட்ட வகையிலான போஸ்டர்களை ஒட்டி யிருப்பதன் மூலம் அவர்களின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படக் காரணமாகியுள்ளனர். தொலைபேசி வழியாகவும் முகம் தெரியாத மனிதர்களின் அச்சுறுத்தலும் தொடர்கிறது. இது பற்றி டி.ஜி.பி., சென்னை கமிஷனர் ஆகியோரிடம் முறைப்படி தெரிவித்திருக்கிறோம். ஜூ.வி. அலுவலக ஊழியர்களின் பாதுகாப்புக்கும், அலுவலகத்தின் அச்சமற்ற செயல்பாட்டுக்கும் வழி ஏற்படுத்த வேண்டி தமிழக முதல்வரிடம் மனு அளிக்க இருக்கிறோம்''’என்றதோடு, குறிப்பிட்ட அந்த செய்தி தொடர்பாக சட்டரீதியாக விடுக்கப்படும் சவால்களை சந்திக்க தயாராகவே இருக்கிறோம்''’என்றார் அழுத்தமாக. 

மிஸ்டர் கழுகு என்ற பகுதியில், ’மடக்கப்பட்ட மதுரை திலகம்’என்ற தலைப்பில் அவதூறான செய்தி வெளி யிடப்பட்டதாக குறிப்பிட்டது கண்டனத்துக்குரிய அந்த விளம்பரம். குறிப்பிடும் அந்த செய்தி என்ன?

""பேரென்ன ஊரென்ன என்றெல்லாம் குறுக்குக் கேள்வி கேட்கக் கூடாது. அமைச்சர்கள் தொடங்கி போலீஸ் வட்டாரம் வரை, இந்த விவகாரம்தான் இப்போது பெரிதாக பேசப்படுகிறது. மூத்த புள்ளிக்கு முழுநேர உடன்பிறப்பாக இருக்கும் குங்குமப் புள்ளியை போலீஸ் வகையாகக் கவனித்த கதைதான் அது. அமைச்சர் ஒருவர் கடந்த வாரம் அந்தக் குங்குமப் புள்ளிக்கு போன் போட்டிருக்கிறார். உடனடியாக சென்னைக்கு வாருங்கள் என்று’ அமைச்சர் அழைக்க, சரி எனத் தலையாட்டிய குங்குமப் புள்ளி சட்டென உஷாராகிவிட்டாராம். ‘நான் வரமுடியாது’ என அமைச்சரிடம் தடாலடியாக மறுத்திருக்கிறார். அடுத்தநாள் காலையில் முதல்வருக்கு நிழலான அதிகாரியிடம் இருந்து குங்குமப் புள்ளிக்கு போன் போயிருக்கிறது. அதி உயர்வான ஒரு பெயரைத் துணைக்கு அழைத்தவர், ‘அவருடைய ஆர்டர்... சீக்கிரம் வந்து சேருங்க’ எனச் சொல்லப்பட, தனது ‘சூப்பர்’ நண்பருடன் சென்னைக்கு வந்திருக்கிறார் குங்குமப் புள்ளி. ‘சூப்பரை’ வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு, குங்குமத்தை தனி அறைக்கு கூட்டிக்கொண்டு போனது கட்டுமஸ்தான ஒரு டீம். இதை போலீஸ் என்கிறார்கள் சிலர், இல்லை போலீஸ் மாதிரி என்கிறார்கள் இன்னொரு சிலர். உள்ளே தரப்பட்ட பிரசாதத்தில் வெலவெலத்துப்போன குங்குமம், ‘அண்ணனுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியும்ல...’ எனக் குமுற, ‘அவர் சொல்லித்தான் பூசை..’ என வரி வரியாகப் போட்டு அனுப்பினார்களாம்'' என்று போகிறது அந்த செய்தி.

குங்குமப் புள்ளி என்று தன்னைத்தான் குறிப்பிடுகிறார்கள் என மு.க.அழகிரிக்கு நெருக்கமாக இருக்கும் சுரேஷ் பாபு ஜூ.வி.க்கு எதிராக மதுரை ஜே.எம். நீதிமன்றத்தில் ஆஜராகி கிரிமினல் வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்திருக்கிறார். இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய சுரேஷ்பாபு, “""குங்குமப்புள்ளி என்று அவர்கள் குறிப்பிடுவது என்னைத்தான். அவர்கள் குறிப்பிடுவது போன்ற சம்பவமே நடக்கவில்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான ஆதாரங்கள் இருந்தால் அவர்கள் நிரூபிக்கட்டும். அதை விட்டு ஆதாரமில்லாத செய்தியை வெளியிட்டு என்னையும், மத்திய அமைச்சரையும் கொச்சைப்படுத்துவது எப்படி பத்திரிகை தர்மம் ஆகும். நீங்கள்கூட இப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்று என்னிடம் விசாரித்தீர்களே? அவர்களின் செய்தியால் எனக்கு கடுமையான மன உளைச்சல் ஏற் பட்டிருக்கிறது. எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஈடாக 10 கோடி ரூபாய் தரவேண்டும் என்று கிரிமினல் வழக்கு போட்டிருக்கிறேன்''’என்றார். 

சுரேஷ்பாபு தொடர்ந்திருக்கும் கிரிமினல் வழக்கில் விகடன் நிறு வனத்தை சேர்ந்த 7 பேர் பெயரைக் கொடுத்திருப்பதால் அவர்களுக்கு முன் ஜாமீன் உள்ளிட்ட சட்ட பாது காப்புக்கான வேலைகளை செய்து வருகிறார்கள். 

பத்திரிகை விளம்பரத்தை பார்த்து டென்ஷனான முதல்வரும் சம்பந்தப்பட்டவர்களை கடுமையாக கண்டித்திருக்கிறார். இதை ஒட்டி தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார் விளம்பரம் கொடுத்த வி.பி.எம். சங்கர். 

ஜனநாயக நாட்டில் சட்ட ரீதியாக எதையும் சந்திப்பது மட்டுமே நியாயமான செயலாக இருக்கும்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இளங்கோவனின் தடாலடிக்கு காங்கிரஸ் பதிலடி!

1.jpg
தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் அதிரடிப் பேச்சுக்களால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசல் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஒரு தோற்றம் உருவாகியிருக்கிறது. இந்தச் சூழலில், "தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறவு எப்படி இருக்கிறது?' என்று காங்கிரஸுக் குள் ஒரு ரவுண்ட் வந்தோம்.

மூத்த தலைவர்களில் ஒருவரும் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கொறடாவுமான பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ.விடம் பேசியபோது, ""2004 பாராளுமன்ற தேர்தலின் போது தி.மு.க.-காங்கிரஸ் உறவு ஆத்மார்த்தமாக உருவானது. அந்த உறவின் பிணைப்புகள் தளர்ந்து போவதற்கோ, அந்த கூட்டணி உறவு ஏற்பட்ட அன்றிருந்த அரசியல் அவசியங்கள் இன்று நீர்த்து போவதற்கோ எவ்வித காரணமும் இல்லாத சூழலில், இந்த கூட்டணி பலவீன மடையும் என்று எதிர்பார்ப்பது அறிவின்மை.

அரசியல் தோழமை என்பதும் தேர்தல் கூட்டணி என்பதும் அதிகாரத்தையும் ஆட்சியையும் பங்கு வைத்துக் கொள்வதற்காக மட்டுமே உருவாக்கப்படுபவை அல்ல. மேலும் சில தனிநபர்களை அமைச்சராக்கப்படுவ தற்காகவும் இந்த கூட்டணி உரு வாக்கப்படவில்லை. மதசார்பற்ற அரசியல் சக்திகளை தேசம் முழுவதும் ஒருங்கிணைப் பதற்கும் ஜன நாயகத்தில் நம்பிக்கை கொண்ட தலைவர்களை நாடு முழுவதும் இணைப்பதற்கும் இந்தியாவையும் பல மாநிலங்களை யும் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய அரசியல் சவால்களை முறியடித்து வெற்றி பெறுவதற்கும்தான் இந்த கூட்டணி உருவானது.

இந்த கூட்டணியின் அடித் தளத்தை பற்றி எடுக்கப்படும் சந்தேகங்கள்... இந்த கூட்டணியின் அரசியல் விரோதிகளால் கிளப்பி விடப்படுகிற வதந்திகளைத் தவிர வேறில்லை!'' என்கிறார் ஆணித்தரமாக.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்க பாலு, ""ஆட்சி வழியிலும் கூட்டணி ரீதியாகவும் ஒற்றுமையாக இருப்பதுதான் இந்த கூட்டணி. பரஸ்பர நல்லுறவுகளுடன் அன்னை சோனியா காந்திக்கும் கலைஞருக்கும் இருக்கும் அன்பின் வெளிப்பாடு கூட்டணியை வலிமைப்படுத்திக் கொண்டுதானிருக்கிறது. கூட்டணிக்குள் சிக்கல் என்கிற மாதிரியான எதுவும் டெல்லியில் எதிரொலிக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முக்கிய பிரச்சினைகள் எழும்போதெல்லாம்... முதல் ஃபோன் செய்து விவாதிப்பது கலைஞரிடம்தான் என்று வெளிப்படையாக தெரிவித்தவர் அன்னை சோனியாகாந்தி. அந்த செயல்களில் தற்போது வரை எவ்வித மாற்றமும் இல்லாதபோது... கூட்டணிக்குள் விரி சலா? என்கிற கேள்வியே அர்த்த மற்றது!'' என் கிறார் அழுத்த மாக.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப் பினரான கார்த்தி சிதம்பரம், ""தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி மிக வலிமையாக இருக்கிறது. இந்த கூட்டணி உறவு எதிர்காலத்தில் இன்னும் வலிமையாகவும் சமமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!'' என்கின்றார்.

அகில இந்திய மகிளா காங்கிரஸின் பொதுச் செய லாளர்களில் ஒருவரும் எம்.எல். ஏ.வுமான டாக்டர் காயத்ரி தேவி, ""2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவானபோது, யார் பிரதமர் என்ற கேள்வி எழுந்தது. சோனியாதான் பிரதமர் என்று இந்திய அளவில் முதலில் குரல் கொடுத்தவர் கலைஞர். இதனை அன்னை சோனியாகாந்தி மறக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. நான் டெல்லி செல் கிறபோது கட்சியின் மூத்த தலைவர்கள் அகமது படேல், குலாம் நபி ஆசாத், வயலார் ரவி ஆகியோர்களை சந்திக்கும் வாய்ப்பு அமையும். அப்போது அவர்கள் கலைஞரின் அரசியல் ஆளுமையையும் மத்திய அரசுக்கு அவர் கொடுத்து வரும் ஒத்துழைப்பையும் விவரிப் பார்கள். தி.மு.க.-காங்கிரஸ் உறவு வலிமையாக இருப்பதை அப்போது உணர முடியும். அதேபோல, ராகுல்காந்தியை நான் சந்தித்தபோது கூட மகிளா காங்கிரஸின் நிலை குறித்து நிறைய விவாதித்தாரே தவிர... கூட்டணி உறவு மாறும்ங்கிற மாதிரியான எந்த சமிக்ஞையும் அவரிடமிருந்து வெளிப்படவே இல்லை. ஜெய லலிதாவின் ஆசையை நிறை வேற்ற ஓரிருவர் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர... கூட்டணிக்குள் எந்த சிக்கலும் இல்லை என்பதே இங்கும் டெல்லியிலும் எதிரொலிக்கும் நிதர்சனம்'' என்கிறார்.

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் நம்பிக்கைக்குரியவரும் பள்ளிப்பட்டு எம்.எல்.ஏ.வுமான இ.எஸ்.ராமன், ""மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி... உறவு முறிவுக்கான சம்பவங்களும் காரணங்களும் இல்லாதபோது... இப்படிப்பட்ட பேச்சுக்களே ஒரு ஹம்பக்தான். சோனியாகாந்தி-கலைஞர் நட்பில் எவ்வித விரிசலும் எப்படி இல்லையோ அதேபோலத்தான் கூட்டணியிலும். மக்கள் பிரச்சினைக் காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைக்கிற கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தருகிறார் கலைஞர். உதாரணமாக, கைத்தறி நெச வாளர்களுக்காக சிட்டா நூலின் விற்பனை வரி 2 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டுமென்றேன். அதனை ஏற்று ரத்து செய்தார் கலைஞர். இப்படி நிறைய விஷயங்களை விவரிக்க முடியும். ஆக, ஆட்சி ரீதியாகவும் இப்படி உறவு கள் சுமுகமாக இருக்கும்போது... கூட்டணி உறவில் எங்கிருந்து சிக்கல் எழும்? அதனால், சோனியா உருவாக்கிய கூட்டணி உறுதியாகவே இருக்கிறது'' என்கின்றார்.

காங்கிரஸின் பொதுச் செயலாளர் கோபண்ணா, ""மத்திய அரசின் சாதனைகளுக்கு பின்புலமாகவும், உறுதுணையாகவும் இருப்பவர் கலைஞர். அதனால்தான் "ஐ.மு.கூட்டணியின் சிற்பி' என கலைஞரை புகழ்ந்துரைத்தார் சோனியா. அந்த நிலை இன்றளவும் நீடிக்கிறது. அதனால் கூட்டணியில் சிக்கல் என்பதெல்லாம் அபத்தம். தனி நபர் ஒருவரின் சுயநலன்களுக்காக பேசப்படுகிற பேச்சுக்களை வைத்தெல்லாம் கூட்டணி முறியும் என்கிற அளவுக்கு தி.மு.க.-காங்கிரஸ் உறவு பலகீனமானதல்ல. "தமக்கு முக்கியத்துவம் இல்லாத கூட்டணியை உடைத்துவிட வேண்டும்' என்று பகல் கனவு காண்பவர்களின் எண்ணம் நிறைவேறாது!'' என்கிறார் சூடாக


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அன்பு அட்டாக்! வீரபாண்டி பஞ்ச்!

1.jpg
பா.ம.க.வை கூட்டணியில் இணைத்துக் கொள்வது என தி.மு.க.வின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்ட தையும்... இதைத் தொடர்ந்து கோ.க.மணி தலைû மயிலான பா.ம.க.வின் ஐவர் குழு கலைஞரை இரு முறை நேரில் சந்தித்ததையும் நக்கீரனில் ஏற்கனவே பதிவுசெய்திருக்கிறோம்.

இந்த நிலையில்.. இந்த கூட்டணி முடிவை திசைமாற்றுவதுபோல்.... சேலத்தில் டாக்டர் அன்பு மணியின் பேச்சு அமைய... தி.மு.க., பா.ம.க. இடையே பரபரப்புத்தீ பற்ற ஆரம்பித்திருக்கிறது.

சேலம்-நாமக்கல் மாவட்ட பா.ம.க. பொதுக் குழு கூட்டம் சேலத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு மைக் பிடித்த அன்புமணி தடாலடியாகவே பேச்சைத் தொடங்கினார்.“""இங்கே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வருவதற்கு காரண மானவனே நான்தான். ஆனால் இங்குள்ள ஒரு அமைச்சர்(வீரபாண்டியார்) இதைத் தான் கொண்டு வந்ததாகத் தமுக்கடிக்கிறார். பென்னாகரம் இடைத்தேர்தலின்போது நம் கட்சிப்பிள்ளைகளிடம் பார்த்துக்கங்கப்பான்னு ஒரு வார்த்தைதான் சொன்னேன். அதற்கே அவர்கள்... "அண்ணே.. 4 பேர் மாட்டியிருக்கானுங்க. அப்படியே கொளுத்திட லாமா'ன்னு கேட்டாங்க. நான்தான் வேண்டாம்னு சொன்னேன். உள்ளூர் அமைச்சர் 100 பேரை அனுப்பினார். அவனுங்களை நம்ம பிள்ளைங்க அடிச்சே ஓடவிட்டானுங்க.. இதைப் புரிஞ்சிக்கங்க. நான் வாயைத் திறந்தா தமிழகமே தாங் காது''’என்றெல்லாம் ’காடுவெட்டி ரேஞ்சுக்கு’ அவர் பேச... உ.பி.க்கள் தரப்பில் அனலான அனல்.

நாம் அமைச்சர் வீரபாண்டியாரிடம் "சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை... சேலத்துக்கு கொண்டுவந்தவர் அன்புமணியாமே?' என்றோம். இதைக்கேட்டதும் காட்டமான வீரபாண்டியார், ""2004-ல் ஆ.ராசா மத்திய சுகா தார அமைச்சராக இருந்தபோது... எய்ம்ஸ் மருத்துவமனையைப் போல சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை 5 இடங்களில் கொண்டுவர முயற்சியெடுத்தார். காபினட்டிலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த 5-ல் ஒன்று திருச்சியில் அமைக்கப்பட இருந்தது. பின்னர் அன்புமணி பொறுப்புக்கு வந்தபோது... "ஏம்ப்பா... அந்த மருத்துவமனையை சேலத் துக்கு கொடுத்தா சிறப்பா இருக்குமே'ன்னு கேட்டேன். சரிங்க அங்கிள்ன்னார். ஆனா திருச்சியில் உள்ளதை இங்க மாற்றாமல்... திருச்சிக்கு வாங்கிய அப்ரூவலையும் பிரதமர்ட்ட சொல்லாமல்... சேலத்துக்குன்னு தனியா ஒரு அப்ரூவலை வாங்கினார் அன்புமணி. இது தவறு என்ப தால் ராசா... டெல்லியில் புகார் கொடுத்தார். உடனே பதறிப்போன அன்புமணி... என்னிடம் புலம்ப.. நான் தலை வரிடம் சொல்லி ராசாவின் புகாரை வாபஸ் பெறவைத் தேன். அப்ப "மாநில நிதியை வேணும்னா ஒதுக்குறேன். அதில் திருச்சியில் அப்படியொரு மருத்துவமனையைக் கட்டிக்க'ன்னு சொல்லித்தான் ராசாவை கலைஞர் சமா தானப்படுத்தினார். இதுதான் உண்மை. இதை மறைத்து மட்டமான அரசியல் பண்ணப்பாக்குறார் அன்புமணி. அவருக்கு ராஜ்யசபா சீட்டை வாங்கிக் கொடுத்தவனே நான்தான். பதவி கிடைக்காதுன்னு அவர் டெல்லியில் சோகமா மூட்டை முடிச்சைக் கட்டியபோது கலைஞர்தான்.. "மந்திரி பதவி உடனே கிடைச்சிடுமா? பொறுமையா இரு. வாங்கித் தர்றேன்'னு சொல்லி வாங்கிக்கொடுத்தார். யாராக இருந்தாலும் நாவடக்கம் வேண்டும்''’ என்றார் சூடாக


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

""ஜெயலலிதாவின் பூச்சாண்டிக்கு பயந்தவள் நானல்ல'' -சீறும் கனிமொழி எம்.பி!

1.jpg
இலக்கிய மேடை, பொது மேடை, அரசியல் மேடை என்கிற வித்தியாசம் இல்லாமல் எல்லா மேடைகளிலும் கனிவான பேச்சையே வெளிப்படுத்தி வருபவர் கவிஞர் கனிமொழி. அப்படிப்பட்டவரே தூத்துக்குடியில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஜெ.வுக்கு எதிராக சீறியிருக்கிறார். கோவை, திருச்சி என்று பொதுக்கூட்டங்களை கூட்டி தி.மு.க.வுக்கு எதிராகவும், கலைஞர் குடும்பத்துக்கு எதிராகவும் அதிரடி அட்டாக் பேச்சினை ஜெ. வெளிப்படுத்தி வரும் நிலையில் கனிமொழி எம்.பி.யுடன் பேசினோம். அவருடைய பேட்டியிலிருந்து...

தேர்தல் வருடம் தொடங்கிவிட்டது. பொதுத்தேர்தலுக்கு தயாராகி விட்டதா தி.மு.க.?

கனிமொழி எம்.பி. : சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்திக்க தி.மு.க. எப்போதும் தயாராகவே உள்ளது. 5-வது முறையாக முதல்வர் பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களே எங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். தலைவரின் ஆட்சிக்கு தங்கள் ஆதரவு என்ன என்பதை கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போதே வெளிப்படுத்தி விட்டார்கள் தமிழக மக்கள். அந்த தேர்தலுக்கு பிறகும் நிறைய திட்டங்கள் முழுமை பெற்றிருக் கின்றன. எனவே வரும் சட்டமன்றத் தேர்தலிலும் முழுமையான வெற்றியை தி.மு.க. கூட்டணி பெறும். 

நலத்திட்டங்களால் மட்டுமே வெற்றி பெற்று விட முடியும் என்று நினைக்கிறீர்களா? கடந்த 1996-2001 ஆட்சி காலத்திலும் நிறைய திட்டங்களை செயல்படுத்தியது தி.மு.க. ஆனால் அதன் பிறகு வந்த தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாமல் போனதே? 

கனிமொழி எம்.பி. : 2001-ம் ஆண்டு தேர்தலின் போது ஜெயலலிதாவின் வாய்ச்சவடால்களையும், பொய்ப்பிரச்சாரத்தையும் நம்பி மக்கள் வாக் களித்துவிட்டார்கள். ஆனால் தங்களின் நம் பிக்கை எவ்வளவு பொய்யானது என் பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டார்கள் அந்த அம்மையா ரின் 5 ஆண்டு கால ஆட்சி காலத்தில். அரசு ஊழியர் கள், ஆசிரியர் கள், விவசாயி கள், சாலைப் பணியாளர்கள், காவல்துறை யினர் என்று எத்தனை லட் சம் பேர் பாதிக்கப்பட்டார்கள் என் பதை எல்லோருமே நினைவில் வைத் திருக்கிறார்கள். அதனால் மீண்டும் ஒரு முறை ஜெயலலிதாவால் மக்களை ஏமாற்ற முடியாது.

கோவை, திருச்சி என்று ஜெயலலிதா பேச்சை கேட்க கூட்டம் கூடிவருகிறதே? 

கனிமொழி எம்.பி. : என்றைக்காவது ஒரு நாள் அத்திப்பூத்தார் போல கூட்டங்களுக்கு வருபவரை பார்க்க கூட்டம் வரும்தானே? 4 வருஷம் காணாமல் போன ஒருத்தர் வருகிறாரே... அவர் எப்படி இருக்கிறார் என்று பார்க்க வருகிறார்கள். வந்த கூட்டத்தில் பொதுமக்கள் எத்தனை பேர் இருந்தார்கள்? பெரும்பாலும் அ.தி. மு.க.வினர்தான் வந்திருப்பார்கள். தங்கள் கட்சித்தலைவியை சந்திக்கவே முடியாத நிலையில் இருக்கும் கட்சிக்காரர்கள் இப்படிப்பட்ட கூட்டங்களிலாவது தலைவியை பார்க்க முடியுமா என்ற நினைப்பில் வந்திருப்பார்கள். 

இந்த கூட்டமும் தானாக வந்த கூட்டமா? திரட்டப்பட்ட கூட்டம்தானே? அதுவும் தமிழகம் முழுவதிலும் இருந்து வண்டி வாகனம் வைத்து, தலைக்கு நூறு, இருநூறு என்று கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டம்தானே? 

அபூர்வமாக கூட்டம் போடு பவர்களுக்கு வருகிற கூட்டத்தை விட தினம் ஒரு நிகழ்ச்சி என்று கலந்துகொள்ளும் தலைவர் கலைஞர் பொதுக்கூட்டத்துக்கு வரும் கூட்டம் அதிகமாகத்தானே இருக்கிறது. 

ஒரு பெண் அரசியல்வாதியாக ஜெயலலிதாவின் பொதுக்கூட்ட பேச்சினை எப்படி பார்க்கிறீர்கள்? உங்களையும் அடிக்கடி விமர்சிக்கிறாரே?

கனிமொழி எம்.பி. : அரசியல்வாதியில் ஆண், பெண் என்கிற வித்தியாசம் எல்லாம் எனக்கு இல்லை. ஒரு அரசியல் கட்சியின் தலைவராக ஜெயலலிதாவின் பேச்சு யாருக் கும் முன் மாதிரி யாக அமைய வில்லை. ஜெய லலிதாவின் பொதுக்கூட்ட பேச்சினை எந்த அரசியல் கட்சி யின் அடிமட்ட பேச்சாளரும் கூட முன்மாதிரியாக எடுத் துக்கொள்ள கூடாது. 

ஜெயலலிதாவின் பூச்சாண்டிக்கெல்லாம் பயந்தவள் நானல்ல. எதிர்ப்புகள்தான் ரத்தினக்கம்பளங்கள் என்று பழகியவர்கள் தி.மு.க.வினர். ஒரு அரசியல் கட்சியின் தலைமையே அநாகரிகமாக பேசும்போது அந்த தலைமையின் கீழ் செயல்படும் பேச்சாளர்கள் எப்படி பேசுவார்கள் என்று எண்ணிப்பாருங்கள். நாகரிக அரசியலுக்கு ஏற்ற வகையில் ஜெயலலிதா பேசவில்லை.

தன்னுடைய பேச்சில் பிரதானமாக கலைஞர் குடும்ப அட்டாக்கைத்தான் வெளிப்படுத்துகிறார் ஜெ. தேர்தல் பிரச்சாரத்திலும் இதுவே எதிரொலிக்கும் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

கனிமொழி எம்.பி. : குடும்பமாக ஜெ.வை எதிர்கொள்வோம். தி.மு.க.வே ஒரு குடும்பம் என்ற உணர்வில்தான் எங்களை வளர்த்திருக்கிறார் தலைவர். ஒரு அரசியல் கட்சித் தலைவரின் மகள் என்பதற்காகவே எனக்கான அரசியல் வாய்ப்புகள் மறுக்கப்பட முடியாது. குடும்ப அரசியல் என்று பேசுகிற ஜெயலலிதாவின் யோக்கியதை என்ன? ஒரு குடும்பத்தையே தத்தெடுத்து அரசியலில் புகுத்தவில்லையா அவர்? ஆடம்பரமாக ஒரு திருமணம் செய்து வைப்பதற்காகவே ஒரு பிள்ளையை தத்தெடுக்கவில்லையா? 

காங்கிரஸ்-தி.மு.க. உறவு சரியில்லை என்றும் விரைவில் தங்களுடைய கூட்டணிக்கு காங்கிரஸ் வந்துவிடும் என்றும் காத்திருக்கிறதே அ.தி.மு.க.?

கனிமொழி எம்.பி. : கனவு காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. தூங்கி எழுந்ததும்தான் உண்மை எது என்பது புரியும். இப்போது கனவு கண்டு கொண்டி ருக்கிறார் ஜெயலலிதா. 4 ஆண்டுகால தூக்கத்திற்கு பிறகு இப்போதுதான் கண் விழித்திருக்கிறார். இன்னும் தூக்கம் முழுமையாக கலையவில்லை. உதயசூரியன் உண்மை நிலவரத்தை புரிய வைக்கும்.

இந்த கட்சி வருகிறது... அந்த கட்சி வருகிறது என்று சொல்லிக்கொண்டிருப்பதற்கு இன்னொரு காரணம்... சொந்தக் கட்சிக்காரர்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமே என்கிற கவலைதான். அ.தி.மு.க.வின் முன்னணி தலைவர்கள் எல்லோரும் தி.மு.க.விற்கு வந்துகொண்டிருப்ப தால் எங்கே தன் கூடாரம் காலியாகிவிடுமோ என்கிற கவலையில் இருக் கிறார் ஜெயலலிதா. கலைந்து கொண்டி ருக்கும் கூட்டத்தை தடுத்து நிறுத்து வதற்காகத்தான் இப்படிப்பட்ட பிரச்சாரங்களை செய்து வருகிறார்.

தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள் இடையிலான கூட்டணி உறுதியாக இருக்கிறது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களை சந்தித்து கொண்டுதான் இருக்கிறேன். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. வரும் சட்டமன்றத் தேர்த லிலும் எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும்.





புதிய தமிழகம், ம.ம.க. என்று புதிய கட்சிகளை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வருகிறது அ.தி.மு.க. உங்கள் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருமா?

கனிமொழி எம்.பி. : எங்களின் தற்போதைய கூட்டணியே மிக வலுவான கூட்டணியாகத்தான் இருக் கிறது. வலுவில்லாதவர்கள்தான் அவசரப்படவேண்டும். தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக் கின்றன. புதிய கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரலாம். வெற்றிக் கூட்டணி அமைப்பது எப்படி என்பது தலைவருக்கு நன்றாகவே தெரியும். உரிய காலத்தில் உறுதியான கூட்டணியை அமைப்பார் தலைவர் கலைஞர்.

கலைஞர் மீதும் அவருடைய ஆட்சி மீதும் அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகளை வைக்கிறாரே ஜெயலலிதா?

கனிமொழி எம்.பி. : ஜனநாயக நாட்டில் விமர்சிப்பதற்கு எல்லோ ருக்கும் உரிமை இருக்கிறது. அந்த வகையில் ஜெயலலிதாவும் குற்றச் சாட்டுகளை வைக்கட்டும். ஆனால் அவர் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு ஏதாவது ஆதாரங்கள் உண்டா? தான் சொன்ன குற்றச்சாட்டை இது வரை அவர் நிரூபித்தது உண்டா? ஜெய லலிதாவின் குற்றச்சாட்டுகளுக்கு உடனுக்குடன் ஆதாரப்பூர்வமாக பதிலடி கொடுத்து வரு கிறார் தலைவர் கலைஞர். ஆனால் அவரின் அறிக்கை களை படிக்காமலேயே மீண்டும் மீண்டும் பாடிய பழைய பல்லவியையே பாடி வருகிறார் ஜெயலலிதா. 

கலைஞர் தன்னுடைய கோபாலபுரம் வீட்டில் 780 சதுர அடி மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்திருப்பதாக கூட குற்றம் சாட்டியிருக்கிறாரே ஜெ.?





கனிமொழி எம்.பி. : இதற்கு தெளிவான பதிலை சென்னை மேயர் மா.சுப்ரமணியன் விளக்கமாகவே கொடுத்திருக்கிறார். தன்னுடைய கோபாலபுரம் வீட்டையே தானமாக தருகிறார் தலைவர் கலைஞர். அப்படிப்பட்ட தலைவரை பற்றி பேச ஜெயலலிதாவுக்கு தகுதி இருக்கிறதா? ஓய்வெடுப்பதற்காக அவர் கட்டியிருக்கும் சிறுதாவூர் பங்களா தலித் மக்களுக்காக கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது என்று அவருடன் கூட்டணியில் இருக்கும் தோழர்களே குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இன்னொரு ஓய்வுத்தலமான கொடநாடு எஸ்டேட் பகுதியில், பாதையை மறைத்து தன் எஸ்டேட் வழியாகச் செல்ல அந்தப் பகுதி மக்களுக்கு தகுதி இல்லை என்று சொல்பவர்தானே அம்மையார் ஜெயலலிதா! 

தஞ்சை அல்லது திருவாரூரில் கலைஞர் போட்டியிடலாம் என்றும் கூட பேசப்படுகிறதே?

கனிமொழி எம்.பி. : தமிழகத்தின் எந்த தொகுதியில் நின்றாலும் பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் தலைவர். 

தஞ்சை பெரிய கோயில் விழா குறித்த செண்டிமெண்ட் பயம் ஒரு சில தி.மு.க.வினர் மத்தியிலேயே நிலவுகிறது. கலைஞரின் முடிவை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

கனிமொழி எம்.பி.: பகுத்தறிவு பாசறையில் வளர்ந்த பெரியாரின் வழித் தோன்றலுக்கு எந்த செண்டிமெண் டும் கிடையாது என்று நிரூபித்திருக்கிறார் தலைவர்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

என் பேரன் திரைப்படத் துறையில் ஈடுபடக் கூடாதா? முதல்வர் கருணாநிதி கேள்வி

First Published : 23 Aug 2010 12:16:32 AM IST

22mkfun.jpg
திரைப்படத் துறையினருக்கு வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட (இடமிருந்து) நடிகைகள் ரோஜா, ராதிகா, குஷ்பூ, நடிகர் கார்த்திக், நடி
சென்னை, ஆக.22: என்னுடைய பேரன் திரைப்படத் துறையில் ஈடுபடக் கூடாதா என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

திரைப்படத் துறையினருக்கு குடியிருப்புகள் கட்ட காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் 96 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியது. இந்தக் குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டு விழா  சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 

விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியது:

 

இந்த விழாவுக்கு வரும் நேரத்தில், காலைப் பத்திரிகையில் விகடத் துணுக்கு பார்த்தேன். அதில், கலைஞர் வரலாற்றிலேயே முதல் முறையாக... கலைஞர் கதை வசனத்தில்... கலைஞர் பேரன் தயாரிப்பில்... கலைஞர் பேரன் இயக்கத்தில்... கலைஞர் பேரன் நடித்த... புத்தம் புதிய திரைக்காவியம்... கலைஞர் டி.வி.வியில் மிக விரைவில்! காணத்தவறாதீர்கள் என்று விளம்பரம் போன்ற துணுக்கு.

 

"அடடே...!' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

 

கலைஞருக்கு மகன் இருக்கக் கூடாதா? பேரன், பேத்தி இருக்கக் கூடாதா? அவர்கள் திரைப்படத்துறையில் ஈடுபடக் கூடாதா? வேறு யாருக்கும் வாரிசு இருந்து அவர்கள் இந்தத் துறையிலே ஈடுபட்டதே கிடையாதா?

 

மகத்தான நடிகர் பிருத்வி ராஜ் கபூரின் மகன் ராஜ் கபூர் நடிகர் இல்லையா? அவரும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்தானே? ராஜ் கபூரின் தம்பிகள் ஷம்மி கபூர், சசி கபூர், அவருடைய மகன்கள் ரிஷி கபூர், ரணதீப் கபூர் - இந்தக் கபூர்கள் எல்லாம் யார்? ஒரே குடும்பத்தினர் அல்லவா?

 

கலைஞர் வீட்டில் மாத்திரம் உதய நிதி, கலா நிதி, தயா நிதி, அருள் நிதி, அறிவு நிதி என்று வந்தால் அது ஆகாது. இதற்காகப் பெரிய கேலிச் சித்திரம் வரைகிறார்கள் என்றால் நான் அவர்களைக் கோபித்துக்கொள்ளவில்லை. அவர்கள் மீது வருத்தப்படவில்லை. ஆனால், உண்மையை நீங்கள்தான் உணர்ந்துகொள்ள வேண்டும்.

 

பிருதிவிராஜ் கபூரின் பேரன், கொள்ளுப் பேரன், பேத்தி வரை கலைத்துறையில் இருக்கலாம். சிவாஜி கணேசனின் மகன் பிரபு இருக்கலாம். அவரது மகன் துஷ்யந்த் இருக்கலாம். ஆனால், கருணாநிதி மட்டும் இருக்கக் கூடாது.

 

ஏனென்றால், கருணாநிதி செய்கிற ஒரே ஒரு குற்றம் திராவிட இனத்திற்காக அவன் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான். அதை ஒழிக்க வேண்டும், வீழ்த்த வேண்டும் என்ற குறுகிய நோக்கமே அவர்களுக்கு உள்ளது. அதைத் தவிர வேறு உண்மையான எண்ணமிருந்தால் என் பெயர் ஞாபகத்துக்கு வரும்போது பிருதிவிராஜ் கபூரின் பெயரும் ஞாபகத்துக்கு வந்திருக்க வேண்டும்.

 

அதேபோல், ரஜினிகாந்தின் மருமகனும் நடிப்பதால் அவருடைய பெயரும் ஞாபகத்துக்கு வந்திருக்க வேண்டும். ரஜினி முழுநேர அரசியலில் இல்லாத காரணத்தால், அவரை விட்டு விடுகிறார்கள் என்றார் முதல்வர் கருணாநிதி.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘‘அழகிரி ஆளாக மாறிவிட்டாரா வீரபாண்டியார்?’’
கல்யாணப் பந்தியில் பாலிடிக்ஸ்!

Salem%202.jpg



முதல்வரின் சாதாரண விசிட்டையே ஸ்பெஷலாக்கி விடுவார்கள் உடன்பிறப்புகள். அப்படியிருக்க... சேலம் அரசு ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, புதிய கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., கமிஷனர் அலுவலகங்களின் புதிய கட்டட திறப்பு விழா... இவற்றோடு, அமைச்சர் வீரபாண்டியார் வீட்டுத் திருமணம், பொதுக்கூட்டம் என ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும் முதல்வருக்காக சேலத்தையே தடபுடல் பண்ணியிருக்கிறார்கள் தி.மு.க.வினர். 

Salem.jpgதனது மகன் பிரபு திருமணத்தை கலைஞர் முன்னிலையில் நடத்த வேண்டும் என்பது வீரபாண்டியாரின் ஆசை. முதல்வரின் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளோடு வீரபாண்டியாரின் இந்த ஆசையும் ஆகஸ்ட் 20-ம்தேதி நிறைவேறியிருக்கிறது. திருமண ஏற்பாடுகள் ஒரு புறம், அரசு விழாக்கள் ஒரு புறம், முதல்வர் வருகை சம்பந்தப்பட்ட பணிகள் ஒரு புறம் என்று கடந்த ஒரு மாதமாகவே காலில் சக்கரம் கட்டிக்கொண்டிருந்தார் வீரபாண்டியார். கட்-அவுட், பேனர்களில் முதல்வர், துணை முதல்வர் படம் போதும் என்று தொண்டர்களை கேட்டுக்கொண்டாலும், அவர்கள் யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. வரவேற்பு கட்-அவுட் முழுவதும் வீரபாண்டியாரும், மகன் ராஜா எம்.எல்.ஏ.வும் இருக்கிறார்கள். 

திருமணத்தில் கலந்துகொண்டு, திறப்புவிழாவில் பங்கேற்று செல்வதாகத்தான் முதலில் முதல்வரின் பிளான். ஸ்டாலினை கலந்தோசித்த முதல்வர் சேலத்தில் ஒரு பொதுக்கூட்டம் போட்டால் கட்சிக்கும் நல்லது, என்ற ஐடியாவை முன்வைத்திருக்கிறார்.

Salem%204.jpgஇதையடுத்து களத்தில் இறங்கிய வீரபாண்டியார் போக்குவரத்து நெருக்கடி இல்லாமல், பொதுக்கூட்டம் முடிந்து முதல்வர் ஜங்ஷன் செல்லவும் வசதியாக இருக்கும் என்பதால் மூன்று ரோடு பக்கமாக உள்ள ஜவஹர் மில் இடத்தை ‘டிக்’ செய்தார். சேலத்தின் எல்லா ஊர்களிலும் கிளைக் கழக கூட்டங்களை நடத்தச் சொல்லி ஒரு கிளைக்கு மூன்றுக்கும் குறையாத வண்டிகள் வர வேண்டும் என்று கட்டளை இட்டிருக்கிறார் வீரபாண்டியார். 

பக்கத்து மாவட்டத்திலும் சேர்த்து லட்சம் பேருக்கும் அதிகமான கூட்டத்தை கூட்டி முதல்வரிடம் பாராட்டை பெற்று விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் வீரபாண்டியார். கோவைக்கு அடுத்த பொதுக்கூட்டம் என்பதாலும், ஜெயலலிதாவின் திருச்சி கூட்டத்துக்கு பிறகு கூடும் கூட்டம் என்பதாலும் சேலத்தில் கலைஞரின் அரசியல் அதிரடிக்கு பஞ்சமிருக்காது என்பது கழக கண்மணிகளின் ஒருமித்த கருத்து.

சேலத்தில் இவ்வளவு தடபுடல் செய்தாலும் வீரபாண்டியார் வீட்டுத் திருமணத்தில் முதலில் கலந்துகொள்வதாக இருந்த துணை முதல்வர் ஸ்டாலின் திடீரென லண்டன் சென்றுவிட்டது, சேலம் தி.மு.க தொண்டர்களை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளது.

ஸ்டாலின் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்றிருந்தாலும் சேலத்து தி.மு.க. நிர்வாகிகள் இதற்கு இன்னொரு முடிச்சும் போடுகிறார்கள். 

‘‘இரண்டு மாதத்துக்கு முன் தனது பனைமரத்துப்பட்டி தொகுதியில் குமரகிரி மலைக்கு ரோடு போடுவதற்கு பூமி பூஜை போட்டார் ஸ்டாலின் ஆதரவாளரான ராஜேந்திரன் எம்.எல்.ஏ. அவர் பூஜை போட்டு கிளம்பிய பிறகு அங்கு வந்த வீரபாண்டியார் மகன் ராஜா எம்.எல்.ஏ., அதே ரோட்டுக்காக மறுபடியும் ஒரு பூமி பூஜையை நடத்தினார். 

Salem%203.jpgஇது ராஜேந்திரனுக்கு ரொம்பவே டென்ஷனை உருவாக்க, தகுந்த நேரத்தை பார்த்துக் கொண்டிருந்தார் ராஜேந்திரன். இப்போது சேலத்தில் போஸ்டர் முதற்கொண்டு அழகிரிக்கு வீரபாண்டியார் கொடுக்கும் முக்கியத்துவம் பற்றி ஸ்டாலின் காதுக்கு கொண்டு போனதால் ஸ்டாலின் வராமல் கழன்றுகொண்டார்’’ என்கிறார்கள் அவர்கள்.

வீரபாண்டியார் ஆதரவாளர்களோ, ‘‘ஸ்டாலின் தவிர்க்க இயலாத காரணத்தை, வீரபாண்டியாரிடம் வருத்ததோடு சொல்லிவிட்டுத்தான் போயிருக்கிறார். எதிர் கோஷ்டிகள் இட்டுகட்டி பரப்புகிறார்கள்’’ என்கிறார்கள். 

ஸ்டாலின் சேலம் நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார் என ஆகிவிட, அடுத்த பரபரப்பு அழகிரியை மையமாக வைத்து கிளம்பியிருக்கிறது. 

வரவேற்பு கட்-அவுட், பேனர்களில் ஸ்டாலினுக்கு சமமாக, அழகிரி படமும் இடம் பெற்றுள்ளது சேலம் தி.மு.க.வில் சலசலப்பை உண்டு பண்ணியுள்ளது. 

‘‘ஸ்டாலினின் கடைக்கண் பார்வை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மீது விழுந்ததில் இருந்து அழகிரி பக்கத்தை நாட ஆரம்பித்தார் வீரபாண்டியார். கடந்த தேர்தலில் அழகிரி ஆதரவில் எம்.பி.யான கே.பி.ராமலிங்கத்தை சேலம் எல்லையிலேயே வைத்து வரவேற்பு கொடுத்து அசத்திய வீரபாண்டியார், ஸ்டாலினின் ஆதரவாளரான செல்வகணபதி வந்தபோது ஒப்புக்கு சப்பாகத்தான் அவரை வரவேற்றார். முதல்வர் வரவேற்பு பற்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் கூட செல்வகணபதி ‘50, 60 வண்டிகள் ஏற்பாடு செய்து கொடுத்தால் அதிகமான கூட்டத்தை கூட்டுகிறேன் என்று சொன்னபோது, ‘வண்டிகள் கொடுத்தால் நானும் கூட ஏற்பாடு செய்வேன்’ என்று நக்கலடித்தார். இதையெல்லாம் கவனிக்கும்போது ‘அழகிரி ஆதரவாளர்’ என்ற முத்திரை வீரபாண்டியார் மீது வெளிப்படையாக விழத் தொடங்கியிருக்கிறது. அழகிரியும் கண்டிப்பாக கல்யாணத்துக்கு வருவதாகத் தகவல்’’ என்கிறார்கள் மதுரைக்கும் சேலத்துக்குமான ரூட் அறிந்த தி.மு.க.வினர். 

தன் வீட்டு திருமணத்துக்கு வரும் தொண்டர்களுக்கு காலை, மதியம், இரவு என பொதுக்கூட்டம் வரை சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் வீரபாண்டியார். ஆனால், அதைவிட, ‘ஸ்டாலின் ஏன் வரலை, அழகிரி ஆளா மாறிட்டாரா வீரபாண்டியார்?’ என பாலிடிக்ஸ் பந்தி பரிமாறிவருகிறார்கள் மாங்கனி மாநகரத்து உடன்பிறப்புகள்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘‘பேசிப் பேசியே நொந்து போனோம்..!’’
-கலைஞரையே காய்ச்சிய தி.மு.க. பேச்சாளர்கள்

DMK%202.jpg



‘எதைப் பேசினால் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம்’ என்று தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளரான கலைஞரே வகுப்பெடுக்க... அவர் முன்னிலையிலேயே பேச்சாளர்கள் ஆட்சியை பிடிப்பது பற்றி பேசாமல், தங்கள் கஷ்ட நஷ்டங்களை பற்றிப் பேசி அவரை டென்ஷனாக்கிவிட்டனர். 

சென்னை அண்ணா அறிவாலயம் ஆகஸ்ட் 8-ம் தேதி சொற்பொழிவாளர்களின் சரணாலயமாக மாறிவிட்டிருந்தது. பலர் காலில் செருப்பு இல்லாமலும், சிலர் சொகுசு காரிலும் அறிவாலயத்திற்கு வந்திருந்தனர்.

DMK.jpgமேடையில் பேச விரும்பும் பேச்சாளர்கள் வரலாம் என்று அறிவிக்கப்பட்டும், கூட்டத்தில் இருந்து சிறு மூச்சு கூட வரவில்லை. காரணம், கலைஞர் முன்னிலையில் எதைப்பேசுவது? எப்படி பேசுவது, பாராட்டி பேசுவதா? தங்கள் பிரச்னைகளை எடுத்துப் பேசுவதா? என்று இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்தனர்.

அப்போது மேடையேறிய கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, ‘‘தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. தி.மு.க. அரசு பல்வேறு சாதனைத் திட்டங்களை தீட்டி வருகிறது. அதை பொதுமக்கள் மத்தியில் நாம் கொண்டு செல்ல வேண்டும். ஜெயலலிதா தினந்தோறும் ஒரு அறிக்கையை விட்டு கொண்டிருக்கிறார். அதற்கு நாம் பதிலடி தரவேண்டும். தேர்தல் வருவதால் நமது மனமாச்சர்யங்களை மறந்துவிட்டு கட்சி மேடையில் மக்களை கவரும் வகையில் நாம் பேச வேண்டும்’’ என்று பேசிவிட்டு உட்கார்ந்தார். 

தி.மு.க. மேடைகளில் எதிர்க்கட்சிகளை வறுத்தெடுக்கும் புதுக்கோட்டை விஜயா ‘‘தி.மு.க. பேச்சாளர்களை அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மதிப்பதே இல்லை. முரசொலியில் நாங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து போடப்பட்டிருந்தால், அந்த மாவட்ட செயலாளருக்கு போன் செய்து, ‘அண்ணே, எப்போ நிகழ்ச்சி?’ என்று கேட்டால், ‘அப்பறம் பேசலாம்’ என்று சொல்லி போனை வைத்துவிடுகிறார்கள். பொதுக் கூட்ட மேடையில் நிகழ்ச்சி நடக்கும்போதே பல மாவட்டச் செயலாளர்கள் வீட்டுக்குச் சென்றுவிடுகின்றனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட நாங்கள் பணம் கேட்டால் வட்டம், வார்டு, ஒன்றியம், நகரம் என்று மற்றொருவரை கைகாட்டி விடுகின்றனர். அவர்களும் மாவட்ட செயலாளரை கைகாட்டி விடுகின்றனர். அவருக்கு போன் செய்தால், அவர் தூங்கிக் கொண்டு இருப்பதாக உதவியாளர்கள் சொல்கின்றனர். குடிக்க டீ கூட வாங்கித் தருவதில்லை’’ என்று பொரிந்து தள்ளிவிட்டு போனார். 

இந்த வரிசையில் பேச அழைக்கப்பட்டார் சொற்பொழிவாளர்(?) குஷ்பு. 

‘‘கலைஞர், துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கடுமையாக உழைத்துதான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளனர். கட்சியில் நாமும் உழைத்தால் அதேபோன்ற உயர்ந்த நிலையை அடையலாம். கலைஞர் காப்பீட்டு திட்டம், ‘108’ ஆம்புலன்ஸ் என்று பல்வேறு திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்துள்ளார். அதை மக்கள் மத்தியில் நாம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்’’ என்று பேசிவிட்டு உட்கார்ந்தார் அவர்.

திருச்சி செல்வேந்திரன் தன் பேச்சில், ‘‘கழக அரசு ஏழைகளுக்கு இலவச நிலம், டி.வி. உள்ளிட்டபல வற்றை வழங்குகிறது. அதேபோல தி.மு.க. பேச்சாளர்களுக்கும் வழங்க வேண்டும்’’ என்று கொளுத்திவிட்டுபோனார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களை குறைகூறி புதுக்கோட்டை விஜயா, சுப்பு, திருச்சி செல்வேந்திரன் உள்ளிட்ட 8 பேர் பேசும்போது கைத்தட்டலில் அரங்கமே அதிர்ந்தது. 

அதேநேரம், கலைஞரை சாந்தப்படுத்தும் வகையில் இருந்த திருச்சி சிவா, குஷ்பு, பாக்யராஜ் போன்றவர்களின் பேச்சுக்கு பேச்சாளர்கள் மத்தியில் எதிர்ப்பும் முணுமுணுப்பும் காணப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சில பேச்சாளர்களிடம் தனியாக பேசினோம். 
DMK%201.jpg
‘‘பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்தவங்க தி.மு.க.காரனுங்கன்னு சொல்லுவாங்க. ஆனால் இன்று பேசிப் பேசியே நாங்க வாழ்க்கையை தொலைச்சிட்டு நொந்துபோயி நிற்கிறோம்னு தோணுது. காரணம் கலைஞர் ஆட்சியில கோடிக்கணக்கில் நடந்த நலத்திட்ட உதவிகளை நாங்க சொல்றோம். ஆனால் எங்க வீட்டுல அடுப்பு எரியறதே கஷ்டம். எங்களுக்கு தேவை என்ன? அழைக்கிற கூட்டத்துக்கு உரிய பணம். அதைக் கொடுத்தா நாங்க ஏன் கூட்டத்துக்கு போகாம இருக்கிறோம்? இந்த கூட்டத்துல இந்த பேச்சாளர் பேசறாங்கன்னு முரசொலியில் கட்டம் கட்டி போடறாங்க. ஆனால், என் உடல் நிலைமை என்ன? பணம் இருக்கா இல்லையான்னு விசாரிக்கலாம் இல்லையா? பல பேச்சாளருங்களுக்கு பஸ்ல போக பணம் இல்லாம நிகழ்ச்சிக்கே போறது இல்லை. அதுதான் உண்மை’’ என்று தன் மனக்குமுறலை கொட்டினார் நம்மிடம்.

கலைஞர் பேசியபோது, ‘‘பேச்சாளர்கள் ஒரு சாதி, நிர்வாகிகள் ஒரு சாதி என்று தி.மு.க.வில் இல்லை. அவர்கள் பேச்சாளராக இருந்தாலும், நிர்வாகிகளாக இருந்தாலும் எல்லோரும் ஒரே சாதிதான். எல்லோரும் தி.மு.க. என்ற இந்த சாதிதான். இதிலே இருக்கின்ற மனக்குறையை ஒரு பொது இடத்திலே, அதுவும் இதுபோன்ற முக்கியமான, எப்படி கட்சியை நடத்துவதற்கு நம்முடையை பேச்சாற்றலை பயன்படுத்தப்போகிறோம் என்று யோசிக்கின்ற இடத்தில் பேதங்களோடு நாம் திரும்பிச் செல்லக் கூடாது. அந்த பேத உணர்வுகள் நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்களிடம் ஏற்பட்டுவிடக் கூடாது’’ என்றார்.

தன் முன்னாலேயே தி.மு.க. பேச்சாளர்களிடம் கைத்தட்டலை பெற்ற புதுக்கோட்டை விஜயா, திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை தன் பேச்சில் வறுத்தெடுத்துவிட்டார் கலைஞர். என்னதான் முதல்வராக இருந்தாலும் அவரும் ஒரு பேச்சாளர்தானே!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘‘கலைஞரின் பெற்றோர் சிலைகளை அகற்ற வேண்டும்!’’
- ராதாபுரத்தில் அடுத்த சர்ச்சை ஆரம்பம்

Radhapuram%201.jpg



ஒருவழியாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்டியிருக்கிறார் முதல்வர். ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு ராதாபுரம் எம்.எல்.ஏ.வான அப்பாவு, தமிழக முதல்வரின் பெற்றோர் முத்துவேலர்- அஞ்சுகத்தம்மாள் பெயரை சூட்ட முயற்சித்து, பேருந்து நிலையம் முன்பு முத்துவேலர் அஞ்சுகத்தம்மாள் சிலைகளையும் நிறுவினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்ப... பேருந்து நிலையத் திறப்பு விழாவுக்காக கடந்த வருடம் துணை முதல்வர் ஸ்டாலின் பெயரிடப்படாத பேருந்து நிலையத்தை திறந்து வைத்து விட்டு, சிலைகளைத் திறக்காமல் திரும்பினார்.

இதற்கிடையில் ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயரைச் சூட்டியே தீர வேண்டும் என்று கோரி, சுடலைமுத்து நாடார் என்ற தியாகி தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டு வந்தார். மேலும், ‘‘கலைஞரின் பெற்றோர் என்ன தியாகிகளா?’’ என்று கேட்டு ஜெயலலிதாவும் அறிக்கை விட்டார். ஆனாலும், ராதாபுரம் பஞ்சாயத்து தலைவர் சிவக்குமாரை வைத்து கலைஞரின் பெற்றோரின் சிலைகளை திறந்து விட்டார் அப்பாவு.

இந்நிலையில் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதிக்கு முதல்நாள், தியாகி சுடலைமுத்துவும், சிவாஜி முத்துக்குமார் என்பவரும், சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கே சென்று, ‘ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்’ என வலியுறுத்தி கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் தொடங்கினர். அவர்கள் மீது காங்கிரஸ் நிர்வாகி ஒருவரே புகார் கொடுக்க, கைது செய்யப்பட்டனர்.

Radhapuram.jpgஆனால், இ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்ற சிலரின் எதிர்ப்புக் குரல் கேட்கவே, ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயரை சூட்டியதோடு, தியாகி சுடலைமுத்து நாடார், சிவாஜி முத்துக்குமார் ஆகியோரை விடுதலை செய்தும் உத்தரவிட்டிருக்கிறார் கலைஞர்.

விடுதலையான சிவாஜி முத்துகுமாரிடம் பேசினோம். “காமராஜர் பெயரை பேருந்து நிலையத்துக்கு வைப்பதற்காக போராடும் நிலை ஏற்பட்டதே தமிழ்நாட்டுக்கு அவமானம். அதே பேருந்து நிலைய வளாகத்தில், பெருந்தலைவர் காமராஜர் மற்றும் கக்கன் சிலைகளை வைக்க வேண்டும்’’ என்றார்.

87 வயதான தியாகி சுடலைமுத்து நாடாரிடம் பேசியபோது, “நான் உண்ணாவிரதம் இருந்த நோக்கம் நிறைவேறியுள்ளது. இதற்கு தமிழக அரசுக்கும், பத்திரிகைகளுக்கும் நன்றி’’ என்றார்.

இந்நிலையில் காமராஜர் பெயர் சூட்டப்-பட்டதை அடுத்து ராதாபுரம் பேருந்து நிலையத்-திலிருந்து முத்துவேலர் & அஞ்சுகத்தம்மாள் சிலைகளை அகற்றவேண்டும் என்று கோரிக்கை-கள் எழுந்துள்ளன.

தே.மு.தி.க.வின் மாவட்டச் செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் இதுபற்றி நம்மிடம், “வரும் தேர்தலில் இந்தப் பகுதியில் உள்ள நாடார் சமுதாய ஓட்டு வங்கியில் சேதாரம் வந்து விடக் கூடாது என்றுதான் காமராஜர் பெயரை சூட்டியிருக்கிறார் கலைஞர். அவருக்கு காமராஜர் மீது உண்மையிலேயே மதிப்பு இருந்தால் ஏன் இத்தனை கால தாமதம்? கலைஞரின் பெற்றோர் சிலைகளும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும்” என்றார்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Allow demo in support of IAS man: HC

You Cant Ban Agitations But Can Only Regulate Them,Court Tells Police 

Pc0051500.jpgTIMES NEWS NETWORK

Chennai: In a small victory for suspended IAS officer C Umashankar,the Madras high court has rapped the city police for denying permission to the state unit of Bahujan Samaj Party (BSP) to hold a demonstration in his support.The court asked the authorities to give permission for a demonstration.
Justice V Dhanapalan,relying on a host of judicial pronouncements on the freedom of expression and the right to hold demonstrations,said the authorities cannot impose blanket ban on demonstrations.At best,they can regulate the agitations,by deploying police personnel at the venue,the judge said.
After Umashankar was placed under suspension last month,the state unit of the BSP approached the city police on July 24 for permission to hold a demonstration at Memorial Hall,which is the scheduled place for such demonstrations.The petitioner was called to appear for an inquiry on July 26,which he complied with.The city police refused permission on July 28.
Advocate P Vijendran filed the present petition on behalf of C Sakthivel,district secretary of the BSP,stating that the police had no authority to prohibit a democratic activity.
The demonstration was against a particular action of the government,and not in support of an individual,counsel argued.
N Senthilkumar,additional government pleader,however,argued that condemning the governments administrative action against an individual officer would create unrest and would affect its administrative functioning.It would amount to an indirect threat to the government officials who initiate disciplinary proceedings against errant and delinquent officials,he said.
Justice Dhanapalan,rejecting the governments stand,cited the Supreme Courts ruling in the famous S Rangarajans case,which said: Open criticism of government policies and operations is not a ground for restricting expression.We must practice tolerance to the views of others.Intolerance is as much dangerous to democracy as to the person himself. 
Justice Dhanapalan also said the Constitution had specifically mandated that no authority can prohibit a democratic activity,unless it is prohibited under Article 19(2) of the Constitution,which imposes certain reasonable restrictions.
Referring to an earlier judgment of the Madras high court,Justice Dhanapalan said the Madras City Police Act was a pre-Constitution enactment,and the powers were conferred on the authorities at a time when the country was under the colonial regime and when suppression of dissent was considered to be a legitimate policy of the state.Such powers cannot be exercised in the same manner after the enactment of the Constitution.
Justice Dhanapalan also pointed out that the earlier orders of the court made it clear that a mere apprehension that some disturbance may be caused in the meeting place would not be sufficient (to deny permission for the meeting ).If,at the meeting,police officers find anything illegal being done,it will be open to them to take necessary action,the judge said.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வில்லிவாக்கத்தை குறி வைப்பது...
கலைஞரா? ஸ்டாலினா?

Villivakkam%203.jpg


திடீர் சுறுசுறுப்பாகி இருக்கிறது சென்னை வில்லிவாக்கம் தொகுதி தி.மு.க.! ஏரியாவின் பல இடங்களிலும் தி.மு.க.வினர் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து, ‘உங்கள் வீட்டுக்கு ரேஷன் பொருட்கள் ஒழுங்காகக் கிடைக்கிறதா? இலவச டி.வி. வாங்கி விட்டீர்களா? இலவச கேஸ் அடுப்பு வாங்கி விட்டீர்களா?’ என்றெல்லாம் அரசின் திட்டங்கள் குறித்து கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

எந்த வீட்டிலாவது சிறிய முணுமுணுப்பு கேட்டாலும்... அடுத்ததடுத்த நாட்களிலேயே அந்த வீடு நோக்கி இலவசங்களை இழுத்துச் சென்று கொடுக்கிறார்கள். 

Villivakkam%206.jpgவில்லிவாக்கம் பகுதி மக்கள் மீது மட்டும் தி.மு.க.காரர்களுக்கு ஏன் இந்த திடீர் பாசம்? தொகுதியில் இருக்கும் தி.மு.க. தலைகளிடம் விசாரித்தோம்.

‘‘என்ன ஏதுன்னு தெரியாதுங்க. ஒரு வாரத்துக்கு முன்னால, எங்களையெல்லாம் கூப்பிட்டாரு மாவட்டச் செயலாளரு. ‘நம்ம வில்லிவாக்கம் தொகுதியில இந்த முறை ஒரு முக்கிய வி.ஐ.பி., போட்டிப் போடப் போறாரு. அதுக்காக தொகுதியை தயார்படுத்துங்கன்னு கட்சி மேலிடத்துல இருந்து உத்தரவு வந்திருக்கு. அதுனால, வார்டுக்கு எட்டு எட்டு பேரா பிரிச்சுக்கங்க. தொகுதி முழுக்க போங்க. மக்களுக்கு முதல்ல இலவசங்கள் வந்து சேர்ந்துடுச்சான்னு கேளுங்க. அரசு தரப்பு மீது அவங்களுக்கு ஏதும் சங்கடங்கள் இருந்தாலும் கேளுங்க. அதெல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு, குறைகளை நிவர்த்தி பண்ண முடியும்னா செஞ்சிடலாம். இல்லைன்னா, அதிகாரிங்களை விட்டு செய்யச் சொல்லிடலாம். அதிகாரிங்களுக்கெல்லாம் ஏற்கனவே உத்தரவு போயிடுச்சு’னு சொன்னாரு.

அதனாலதான் களத்துல இறங்கிட்டோம். டி.வி., கேஸ் ஸ்டவ் கூட சமாளிச்சிடறோம். பட்டா இல்லைன்னு கேக்கறவங்களைப் பத்தி வருவாய்த் துறை அதிகாரிங்க கிட்ட சொன்னா மட்டும் கண்டுக்கமாட்டேங்குறாங்க’’ என்றவர்கள், ‘‘அனேகமாக தலைவர் கலைஞருக்காக தொகுதி தயார் பண்ணப்படுதுன்னுதான் நாங்க நினைக்கிறோம்... இல்லைன்னா, தளபதி மு.க.ஸ்டாலின்கூட இந்த முறை தொகுதி மாறி வந்து இங்க போட்டியிடலாம்...’’ என ஹாட் பிட்டையும் போட்டார்கள்.

கள நிலவரத்தை அறிந்தபடி தி.மு.க.வின் சில பிரமுகர்களைப் பிடித்தோம்.

Villivakkam%205.jpg ‘கடந்த மூன்று தேர்தல்களாக வில்லிவாக்கம் தொகுதியில் தி.மு.க. கூட்டணிதான் ஜெயித்து-வருகிறது. அந்த வகையில் இந்தத் தொகுதி தி.மு.க. தலைவர்கள் போட்டி போட பாதுகாப்பான தொகுதிதான். கடந்த தேர்தல் வரையில் இந்தத் தொகுதிதான் தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக இருந்தது. ஆனால், தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் இந்தத் தொகுதியிலிருந்து சில ஏரியாக்களைப் பிரித்து, அம்பத்தூர் என்ற புதுத் தொகுதியை உருவாக்கிவிட்டனர். அதனால், கிட்டத்தட்ட ஒன்பது லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களை உள்ளடக்கி இருந்த இந்தத் தொகுதியின் இப்போதைய வாக்களர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர்தான். ஆக, குறைந்த அளவுள்ள வாக்காளர்களுக்கு வசதிகளைச் செய்து கொடுத்து, அவர்களை தங்கள் பக்கம் அரவணைத்துக் கொண்டுவிட்டால், எளிதாக ஜெயித்துவிடலாம் அல்லவா? 

இங்கே மாவட்டச் செயலாளர் வி.எஸ்.பாபு ஒரு கோஷ்டியாகவும், இப்போது வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ரங்கநாதன் ஒரு கோஷ்டியுமாக செயல்படுகிறார்கள். ஆனால், முதல்வரோ, துணை முதல்வரோ போட்டியிடுவார்கள் எனத் தெரிந்தால் அடுத்த நொடியே கோஷ்டிகளை மறந்து ஒன்றாகிவிடுவார்கள். வழக்கம்போல புரசை-வாக்கம் தொகுதியில வி.எஸ்.பாபு போட்டிபோட... வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து பிரிந்த அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ரங்கநாதன் நிறுத்தப்படலாம். 

ரங்கநாதனுக்கு அம்பத்தூர் ஏரியாவில் செல்வாக்கு உண்டு. ஆனால் இந்த முறை வில்லிவாக்கம் தொகுதியை காங்கிரஸ்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஜவஹர்பாபு, டாக்டர் செல்லக்குமார், எஸ்.ஜி.விநாயக-மூர்த்தி என நிறையபேர் தொகுதி மேல கண் வைத்திருக்கிறார்கள். முதல்வரே போட்டியிட விரும்பினால், அவர்கள் என்ன செய்ய முடியும்?’’ என்கிறார்கள்.

முதல்வரோ, துணை முதல்வரோ போட்டியிடும் அளவுக்கு தி.மு.க.வுக்கு பாதுகாப்பானதுதானா வில்லிவாக்கம் தொகுதி?

‘‘தொகுதி சின்னத் தொகுதியா மாறிடுச்சுன்னு இந்தத் தொகுதியை பாதுகாப்பானதா நினைக்கலாம். ஆனா, அடிப்படை வசதிகள் எதுவுமே இந்தத் தொகுதியில் இல்லை. ரோட்டை விட ஒண்ணரை அடி பள்ளத்துல இருக்கு பஸ் ஸ்டாண்ட். மழை பெஞ்சா போதும், பஸ் ஸ்டாண்ட் வெள்ளக்-காடாயிடும். பக்கத்துலயே இருக்குற பால மாரியம்மன் கோயில் பகுதி பொதுக் கழிவறை ரேஞ்சுக்கு ஆயிடுச்சு. சாக்கடை நீர் வெளியேற்றப் பிரச்னை தொகுதி முழுக்க எதிரொலிப்பதால், துர்நாற்றம் இந்தத் தொகுதிக்கு அடையாளமாக இருக்கு. 

Villivakkam%204.jpgகொசுக்களும் மனிதர்களோடு போட்டிப்போட்டு வாழ்ந்துகிட்டு இருக்கு. புழல் ஏரியில் இருந்து நியூ ஆவடி ரோடு டேங்க்கிற்கு குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. அந்த குழாயின் இரண்டு பக்கமும் குடியிருக்கும் மக்கள் குழாய்க்குள்ளேயே எல்லாக் கடன்களையும் முடிக்கிறார்கள். சுகாதாரமில்லாமல் இருப்பதால், அந்த குழாய் பக்கத்தில் வாழும் பனிரெண்டாயிரம் குடும்பங்களை அகற்ற அரசு முயற்சித்து வருகிறது. அது பெரும் பிரச்னையாக இருக்கிறது. தொகுதிக்குள் ரவுடிகள் ராஜ்யம், கட்டுப்படுத்த முடியாமல் சென்று கொண்டிருக்கிறது. இப்படி மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். இதையெல்லாம் ஆறுமாத இடைவெளிக்குள் தீர்த்து விட முடியுமா?’’ என்கிறார்கள் லோக்கல் சமூக ஆர்வலர்கள்.

தி.மு.க.வின் இந்த மூவ் அ.தி.மு.க.வுக்குத் தெரியுமா?

‘‘நாங்களும் கேள்விப்பட்டோம். எங்க கட்சிக்குள் சேகர்பாபு, நீலகண்டன் ஆகிய இருவர் கோஷ்டிக்கும் இருக்கும் பிரச்னைகளை மீறி, இந்தத் தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுமா என்பது தெரியவில்லை. அனேகமாக தொகுதி, கம்யூனிஸ்ட்களுக்குத்தான் ஒதுக்கப்படும்’’ என்று சுருதி குறைவாகவே பேசுகிறார்கள்.

முதல்வர் பார்வை வில்லிவாக்கத்தில் இருக்கிறதோ இல்லையோ... தி.மு.க.வினர் திடுமென தொகுதிக்குள் புகுந்து அள்ளிக் கொடுப்பதால், வாக்காளர்களுக்கு சந்தோஷம்தான்!




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மீண்டும் ஓ !

7 votes

Gnani-inner.jpg
http://idlyvadai.blogspot.com/2010/08/blog-post_1252.html

தமிழ்நாட்டில் நிலவும் விசித்திரமான சமூக, அரசியல், பத்திரிகைச் சூழல் என் ‘ஓ’பக்கங்கள் பகுதிக்கு இதழியல் வரலாற்றில் இடம் தேடிக் கொடுத்திருக்கிறது. ஓர் எழுத்தாளரின் ‘பத்தி’ தொடர்ந்து வெவ்வேறு பத்திரிகைகளில் வருடக்கணக்காக வெளியாவது இதுவே முதல் முறை. கடந்த ஏழாண்டுகளில் இரண்டு பத்திரிகைகளில் இடம் மாறி இப்போது மூன்றாவதாக ‘கல்கி’ இதழுக்கு வந்திருக்கிறது. காரணங்கள் விமர்சனங்களைச் சகிக்காத அரசியல் சூழலும், கருத்துச் சுதந்திரத்தைவிட வணிகத்தை முதன்மைப்படுத்துகிற பத்திரிகைச் சூழலும் தான்.

கல்கி இதழில் நான் எழுதும் முதல் தொடர் பகுதி இதுவேயாகும். என்னுடைய இரண்டு சிறுகதைகள் எழுபதுகளில் கல்கியில் வெளிவந்திருக்கின்றன. அதில் ஒரு கதை ‘டெலிவிஷன்’. நேரடி ஒளிபரப்பில் பங்கேற்கும் ஒரு வேலையற்ற பட்டதாரி இளைஞன், யாரும் எதிர்பாராதபோது லஞ்சம் ஊழல் பற்றிப் பகிரங்கமாகப் பேசி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதைப் பற்றிய கதை. இது வெளியானதும் அப்போது தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்புகளைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டார்கள். வெவ்வேறு தேர்தல் சமயங்களில் சிறப்பு நிருபராக கல்கி சார்பில் சென்று தொகுதி நிலவரங்கள் பற்றி சில கட்டுரைகள் எழுதி யிருக்கிறேன். 1978-இல் நாங்கள் பரீக்‌ஷா நாடகக் குழு தொடங்கியபோது. முதல் நாடகம் பற்றி எழுதிய ஒரே வார இதழ் ‘கல்கி’தான்.

லஞ்சம் ஊழல் இல்லாத நேர்மையான அரசு நிர்வாகம் வேண்டும்; சக மனிதர்களிடம் அன்பும் சமத்துவமும் பேணும் வாழ்க்கை நெறி குழந்தையிலிருந்தே ஊட்டு விக்கப்படவேண்டும்; ஆபாசமும் வக்கிரமும் வன்முறையும் ஆதிக்கம் செலுத்தாத கலை இலக்கியச் சூழல் வேண்டும்... என்ற பார்வைகள்தான் நானும் ‘கல்கி’ இதழும் சந்திக்கும் புள்ளிகள். என்னை ‘ஓ’ போடவைக்கும் ஆச்சரியமான, அதிர்ச்சியான, அவலமான, அக்கறைக்குரிய விஷயங்களைப் பற்றி இங்கே வாசகர்களுடன் பகிர்வதே இந்தப் பகுதியின் நோக்கம். பல விஷயங்களைப் பற்றி நம் கருத்து உடன்படலாம்; மாறுபடலாம். ஆனால் எல்லாவற்றைப் பற்றியும் விவாதிப்பதற்கும் சிந்திப் பதற்குமான ஒரு கருத்துச் சுதந்திரச் சூழல் தேவை என்பதே நம்மை இணைக்கும் ஒற்றைப் பார்வை.


பொதுவாக நடிகர்களுக்குக் கூச்சம் இருக்கக்கூடாது என்பது நடிப்பின் தேவைகளில் ஒன்று. எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நடிக்க அப்போதுதான் முடியும். முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, வசனகர்த்தாவாக நாடகத்திலும்

சினிமாவிலும் பெயர் வாங்கியவர்; நடிகராக அல்ல. ஆரம்ப நாட்களில் ஒரு சில நாடகங்களில் நடித்திருக்கிறார். அப்போதுதான் அவருக்குக் கூச்சம் விட்டுப் போயிருக்க வேண்டும்.

இன்று தமிழ்நாட்டில் எதைப் பற்றியும் எந்தக் கூச்சமும் இல்லாத அரசியல்வாதிகளில் முதன்மையானவர் அவர் ஒருவர்தான்.

அரசு திட்டங்களுக்கும் கட்டடங்களுக்கும் தலைவர்களின் பெயர் சூட்டும் வழக்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அபூர்வ மாக இருந்ததை, எழுபதுகளில் தாம் ஆட்சிக்கு வந்தபிறகு மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தியவர் கலைஞர் கருணாநிதி.

இதற்கு முன்பெல்லாம் அரசு திட்டங்களுக்கு பெரியார், அண்ணா பெயரையோ அஞ்சுகம் அம்மையார் பெயரையோ முத்துவேலர், முத்துலட்சுமி பெயர்களையோ சூட்டிக்கொண்டிருந்தவர், இப்போதெல்லாம் தம் பெயரையே சூட்டிக் கொண்டிருக்கிறார். கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீட்டு வசதி திட்டம், கலைஞர் மாளிகை என்று பெயர்கள் சூட்டப்படுகின்றன.

அரசாங்கத்தின் ராணி மேரி மகளிர் கல்லூரியில் புதிய கட்டடத்துக்குத் தம் பெயரைச் சூட்டிவிட்டு தானே அதைத் திறந்தும் வைத்திருக்கிறார். ஒப்புக்காக அதைத் திறக்கப் பேராசிரியர் அன்பழகனாரைக் கூட அழைக்கவில்லை. இன்னும் பாக்கியிருப்பது தமக்கான சிலை, தம் உருவப்படம், தம் பெயரில் அருங் காட்சியகம்... இவற்றையும் அவரே திறந்து வைப்பதுதான்.

கலைஞர் பெயர் சூட்டப்பட்ட வீட்டு வசதி திட்டம், மத்திய அரசின் நிதி உதவியுடன் நடக்கிறது என்று கூட்டணியை ‘வலி’க்கச் செய்யும் ஒரு பேச்சை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதும், அதற்கு கருணாநிதி ஒரு விரிவான பதில் அறிக்கை வெளியிட்டார். கலைஞர் வீட்டு வசதி திட்டம் முழுக்க மாநில நிதியில் நடக்கிறது. மத்திய அரசின் இந்திரா காந்தி திட்டத்துடன் அதை இளங்கோவன் குழப்பிக்கொண்டு விட்டார் என்பதுதான் அறிக்கையின் சாராம்சம். ஆனால் மாநில அரசு நிதியில் நடப்பதால், அதற்கு தம் பெயரை ஏன் சூட்ட வேண்டும் என்பது பற்றி பதிலே கிடையாது.

இதில் இன்னொரு பிரச்னை என்ன வென்றால் கலைஞர் என்பதை தம் பெயர் என்று கலைஞர் கருணாநிதியே நம்பத் தொடங்கிவிட்டார் என்பதுதான். அதனால் தான் ஜெயலலிதா தன்னைக் கருணாநிதி என்று குறிப்பிட்டுப் பேசுவதைக் கண்டித்து ஒரு பொதுக் கூட்டத்தில் பொரிந்து தள்ளியிருக்கிறார். ‘என் வயது என்ன, உன் வயது என்ன’ என்றெல்லாம் ஏகவசனம் வேறு. கூடவே ‘நான் வயதில் பெரியவன் என்பதால் உன்னைக் குழந்தையிலிருந்தே எனக்குத் தெரியும் என்பதால் ஏகவசனத்தில் கூப்பிடும் உரிமை எனக்கு உண்டு’ என்று சமாதானம் வேறு.

ஒருவரை அவர் பெயர் சொல்லி அழைப் பது தவறு என்ற விசித்திரமான பண்பாடு தமிழக அரசியலில் மட்டும்தான் இருக்கிறது. இதில் இடதுசாரிக் கட்சிகளைத் தவிர மீதி எல்லா கட்சிகளும் தங்கள் தலைவர்களுக்கு அடைமொழி சூட்டும் கலாசாரத்தில் விழுந்திருக்கின்றன.

தமிழ்நாட்டுக்கு வெளியே பத்திரிகையாளர்கள் பிரதமரை ‘மிஸ்டர் மன்மோகன் சிங்’ என்றோ மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர் என்றோ முகத்துக்கு நேரே கூப்பிடுகிறார்கள். இங்கே அப்படிப் பேசினால் உதை விழும். அலுவலகத்துக்கு ஃபோன் செய்து நிருபரைப் பற்றிப் புகார் செய்வார்கள்.

ஜெயலலிதா தம்மைக் கருணாநிதி என்று அழைப்பது பண்பாட்டுக் குறைவு என்று அறிக்கை விடுத்திருக்கும் இதே கருணாநிதி தான், தொடர்ந்து தம் ஆட்சியை மைனாரிட்டி தி.மு.க அரசு என்று ஜெயலலிதா பேசினால், அவரை திருமதி ஜெயலலிதா என்று அழைப்பேன் என்று பண்பாடு பொங்கித் ததும்பும் ஓர் எச்சரிக்கையை வெளியிட்டார். ஜெயலலிதா திருமதியா இல்லையா என்பதற்கும் தி.மு.க. மைனாரிட்டி அரசா இல்லையா என்பதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

உலகத்தில் எந்த நாட்டிலும் இங் குள்ளது போல அரசியல்வாதிகளின் பெயர் சூட்டும் கலாசாரம் இல்லை. மிகப் பெரும் தலைவர்களின் பெயர்களை விமான நிலை யத்துக்கோ நூலகத்துக்கோ சூட்டும் போதுகூட அவர் இறந்த பிறகே சூட்டுகிறார்கள். சிலைகள் வைப்பதும் அப்படித்தான்.

ஜாதிச் சண்டைகள் வருகின்றன என்பதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், மாவட்டங்கள் பெயர்களில் இருந்த தலைவர்கள் பெயர்களையெல்லாம் நீக்கி உத்தரவிட்டவர் கலைஞர் கருணாநிதி. தம் நெஞ்சறிவது பொய்யற்க என்ற கூச்சம் இன்னும் கொஞ்சமேனும் அவருக்கு மீதம் இருக்குமானால், உடனடியாக அரசு திட்டங்கள், கட்டடங்கள் பெயர்களிலிருந்து தம் பெயரை நீக்க அவர் உத்தரவிட முன்வரவேண்டும். இல்லாவிட்டாலும் பின்னாளில் ஆட்சி கைமாறும்போது, இந்தப் பெயர்களெல்லாம் அடுத்த ஆட்சியாளரால் நீக்கப்படும் என்ற உண்மையாவது அவருக்கு உறைக்க வேண்டும்.

இன்னும் நூறு வருடம் கழித்து வரும் தமிழ்க் குழந்தைகள் இப்படித் தம் பெயரை தாமே சூட்டி மகிழ்ந்த தலைவர்கள் பற்றி என்ன நினைப்பார்கள் என்று தயவுசெய்து கற்பனை செய்து பாருங்கள். கூச்சமாக இருக்கும்.
கல்கி, ஞாநிக்கு வாழ்த்துகள்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மக்கள் பணத்துல இப்படியா திம்பானுங்க ?


எவ்வளவுதான் திட்டினாலும் நம்ம அரசியல்வியாதிகளுக்கு உரைக்கவே மாட்டேங்குது.. எருமை மாட்டு மேல கல்லெறிஞ்ச மாதிரி.. “நீ என்ன வேண்ணாலும் செஞ்சுக்க.. சொல்லிக்க.. திட்டிக்க.. நாங்க அப்படித்தான் ஊர்க் காசுலதான் ஊர் மேய்வோம்” என்கிறார்கள் இவர்கள்.

எதுல, எதுலதான் திருடுறதுன்னு விவஸ்தையே இல்லாம போயிருச்சு இவனுகளுக்கு.. சுதந்திர தினம், குடியரசு தினத்துல நமக்கு ஒரு நாள் லீவை கொடுத்திட்டு, நம்ம காசுல இவனுக விருந்து வைச்சு கொண்டாடுறானுக பாருங்க..

இன்னிக்கு வந்த ஜூனியர் விகடன்ல இந்தக் கட்டுரையைப் படிச்சவுடனேயே பி.பி. உச்சத்துக்குப் போயிருச்சு.. ஒரு குவார்ட்டரை வாங்கி ராவா அடிச்சுத்தான் பி.பி.யை குறைச்சேன்.. நீங்களும் படிச்சுப் பாருங்க..

இனி ஜூனியர் விகடன் கட்டுரை..

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கின்றன. இந்த விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்ச்சியும் நடந்து முடிந்திருக்கிறது.

இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சிகள், சுதந்திரம் மற்றும் குடியரசு தினத்தில் அரசின் சார்பில் நடத்தப்படுவது வழக்கம். இந்த தினங்களில் மத்திய அரசில் ஜனாதிபதியும், மாநில அரசுகளில் கவர்னரும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை நடத்துவார்கள்.

எப்போது இந்த நடைமுறை அமலுக்கு வந்தது என்பது தெரியவில்லை. மத்திய அரசின் வழிகாட்டுதலில் இந்த விருந்து நிகழ்ச்சிகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் இந்த தேநீர் விருந்துகளை கூட்ட “இது எதற்கு? இதனால் என்ன பயம்..? இதற்காக எவ்வளவு செலவு?” என்ற கேள்விகளுடன் கவர்னர் மாளிகையையும், கோட்டையையும் ஆராய்ந்தோம்.

தமிழகத்தில் பரந்து விரிந்து கிடக்கும் கவர்னர் மாளிகையின் பெரிய புல்வெளியில் தேநீர் விருந்து. இதற்காக கவர்னர் மாளிகையை மலர் மற்றும் அலங்கார விளக்குகளால் ஜொலிக்க வைத்தார்கள். புல்வெளியில் வட்ட வடிவில் போடப்பட்ட மேஜைகளில் விருந்து நிகழ்ச்சி நடைபெற.. நடுநாயகமாக கவர்னரும், முதல்வரும் பங்கேற்பார்கள்.

மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், துணைவேந்தர்கள், பத்ம விருது பெற்றவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், பிரபலங்கள் என்று 48 பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விருந்துக்கான அழைப்பு போகும்.

தேநீர் விருந்து என்றதும் வெறும் டீ, காபி என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. குளிர்பானம், காஜர் அல்வா, சாக்லேட் பிரெளனி, ஜிலேபி, பிஸ்தா கேசரி போன்ற இனிப்பு வகைகளும், டால் கச்சோரி, வெங்காயம் மற்றும் தக்காளி சட்னியுடன் கூடிய ச்சீஸ் க்ராய்சன்ட், புளிச் சட்னியுடன் கூடிய சமூசா, மின்ட் சட்னியுடன் கூடிய டோக்லா போன்ற கார வகைகளோடு வெண்ணிலா ஐஸ்கிரீம், டீ, காபி போன்ற அயிட்டங்கள் அனைத்தும் பரிமாறப்படும். இந்த அயிட்டங்கள் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ஆர்டர் செய்யப்படும். 3000 பேருக்கு விருந்து ஆர்டர் செய்வார்கள்.

இந்த விருந்துக்கான செலவுகளை தமிழக அரசின் பொதுத்துறைதான் பொறுப்பேற்றுச் செய்கிறது. அழைப்பிதழ் அச்சடித்தல் தொடங்கி, விருந்து முடியும்வரையில் உள்ள எல்லா ஏற்பாடுகளும் இவர்கள் பொறுப்புதான். நடனக் கலைஞர்களுக்குப் பொன்னாடை, பரிசுப் பொருட்கள், மேடை அலங்காரம், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களுக்கு ஊதியம், போக்குவரத்துச் செலவு, ஊக்கத் தொகை, தற்காலிகப் பணியாளர்களுக்குத் தினக்கூலி என்று விருந்துக்காக நிறைய செலவாகும்.

கடந்தாண்டுக்கான சுதந்திரம் மற்றும் குடியரசு தின விருந்துக்காக தலா 3000 அழைப்பிதழ்கள் அச்சாயின. அரசு அச்சகத்தில் அச்சானாலும் இதற்காக 34 ஆயிரத்து 503 ரூபாய் செலவானது. இவற்றை விநியோகம் செய்வதற்காக 10,836 ரூபாய் செலவாகியிருக்கிறது.

கலை நிகழ்ச்சி ஏற்பாடுகளை தஞ்சாவூரில் இருக்கும் தென்னகப் பண்பாட்டு மையம் செய்யும். கடந்தாண்டு இந்த நிகழ்ச்சிகளுக்காக மட்டும் 1,72,960 ரூபாய் ஒதுக்கப்பட்டது. அப்போது தேநீர் விருந்துக்காக ஜி.ஆர்.டி.கிராண்ட் ஹோட்டலில் உணவுப் பொருட்கள் ஆர்டர் தரப்பட்டது.

இப்படி கடந்த ஆண்டு சுதந்திர தினத்துக்கு 4,92,225 ரூபாயும், குடியரசு தினத்துக்கு 5,98,619 ரூபாயும் செலவாகியிருக்கிறது.

1994 முதல் 2009-ம் ஆண்டு வரை ஒவ்வொரு வருட சுதந்திர தின தேநீர் விருந்துக்காகவும் செலவழிக்கப்பட்ட ஒட்டு மொத்தத் தொகை 75,93,000 ரூபாய்.

இதே போல குடியரசு தின விருந்து செலவு 75,75,000 ரூபாய். இரண்டையும் சேர்த்தால் கடந்த 16 ஆண்டுகளில் 1,51,71,265 ரூபாய் செலவாகியுள்ளது.

ஆண்டு வாரியாக செலவழிக்கப்பட்ட தொகையைப் பாருங்கள்..

ஆண்டு – சுதந்திர தினச் செலவு – குடியரசு தினச் செலவு

1994 – 1,05,702 – 97,660

1995 – 1,98,609 – 1,28,359

1996 – 6,29,643 – 4,70,115

1997 – 6,85,866 – 6,01,452

1998 – 7,71,003 – 6,06,399

1999 – 6,08,732 – 7,43,266

2000 – 6,94,306 – 7,72,607

2001 – 5,35,712 – 8,61,075

2002 – 4,39,712 – 5,47,154

2003 – 4,33,274 – 5,03,654

2004 – – 1,87,563

2005 – 4,22,648 -

2006 – 3,52,441 – 4,96,621

2007 – 5,38,026 – 5,74,887

2008 – 6,86,005 – 5,87,230

2009 – 4,92,225 – 5,98,919

இனி நான்..

யாரோ ஒரு புண்ணியவான் தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் இந்த விவரங்களைப் பெற்றிருக்கிறார் போலிருக்கிறது..

பாருங்க.. இந்த அரசியல் வியாதிகளுக்கு மூணு மணி நேரம் உக்காந்து டீ சாப்பிடுற செலவு 7 லட்சம் ரூபாய்ன்னா நாடு என்னங்க ஆகுறது..?

இவனுக சொந்தக் காசுன்னு இப்படி செலவு செய்வானுகளா..? கொஞ்சமாவது யோசிக்க மாட்டானுங்களா இந்தக் கஸ்மாலங்க..? டீ, காபி, பிஸ்கட்ன்னு முடிச்சிட்டுப் போறதை விட்டுட்டு பிஸ்தா கேசரி வேணுமாம்ல இந்த அயோக்கிய ராஸ்கல்களுக்கு..?

ஊனமுற்றவர்களுக்கு உதவித் தொகையாக கொடுப்பது மாதம் வெறும் 300 ரூபாய்.. ஆதரவற்ற விதவைகளுக்கு உதவித் தொகையாக வழங்குவது மாதம் வெறும் 400 ரூபாய்.. வேலையற்ற இளைஞர்களுக்குக் கொடுக்கும் உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்று ‘அள்ளி’ வழங்குகின்ற இந்த அயோக்கியர்கள்தான், ஒரு நாளில் முழுங்குவதற்கு மட்டும் லட்சக்கணக்கில் மக்கள் பணத்தில் செலவு செய்கிறார்கள்.

வேலையற்ற இளைஞர்கள் 200 ரூபாயை வைத்து ஒரு மாதத்தில் என்ன செலவு செய்துவிடுவார்கள்..? ஆதரவற்ற விதவைகள் 400 ரூபாயில் குடும்பம் நடத்தி விடுவார்களா..? உடல் ஊனமுற்றவர்கள் 300 ரூபாயில் தங்களுடைய உடல் உபாதைகளுக்கு மருத்துவம் பார்த்துக் கொள்வார்களா..? இதையெல்லாம் இந்த அரசியல்வியாதிகள் யோசிக்க மாட்டார்களா..?

சொந்த வீட்டில் இருந்தாலும் அதற்காக வாடகைப் படியையும், வெள்ளையடிக்க.. வீட்டின் பரமாரிப்பு, சோபா செட்டுக்களை வாங்கிப் போட என்று மக்கள் பணத்தில் கை வைத்து சுரண்டியெடுக்கும் இந்தக் கேடு கெட்டவர்களை என்னவென்றுதான் சொல்வது..?

3000 பேரை கூப்பிடுறோம்.. அதுனால.. என்று இழுக்காதீங்கடா பரதேசிகளா.. பன்னாடைகளா..? உங்களை எவன்டா இப்போ பார்ட்டி வைச்சு கொண்டாடச் சொன்னான்..?

இந்தியால அரசியல்வியாதிகளுக்கு மட்டும்தான் சுதந்திரம்.. மக்களுக்கு இல்லைன்றதுதான் உலகத்துக்கே நல்லாத் தெரியுமே.. அதான் காலைல ஊர்வலம் நடத்தி, கொடியேத்தி நீங்களே கொண்டாடிக்கிறீங்களே.. அந்தச் செலவு பத்தாதா..? வட்டமா உக்காந்து தின்னு வேற எங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கணுமா?

நாசமாப் போகப் போறீங்கடா..

Read more: http://truetamilans.blogspot.com/2010/08/blog-post_19.html#ixzz0y3BKTpIL



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

03_09_2010_014_002-saxsena.jpg?w=300&h=90

இளம் பெண்ணை தாக்கிய வழக்கில் சன் டிவி சக்சேனா

நேற்றைய இரவு ஜெயா டிவி நியூசில் தீபா என்ற பெண்ணின் பேட்டியையும், இவரின் அம்மாவின் பேட்டியையும் காண நேர்ந்தது.

சன் டிவியின் மேலாளர் சக்‌ஷேனாவுக்கும், தீபாவின் தம்பிக்கும் பிரச்சினையானதாகவும், அதன் காரணமாய் நாற்பது ஆட்டோக்களில் ரவுடிகள் வந்து, தீபா குடும்பத்திற்கு உதவ வந்தவர்களின் ஹோட்டலைத் தாக்கியதாகவும், தீபா மற்றும் அவரின் தம்பியை அடித்து உதைத்ததாகவும் சொன்னார் தீபா.

தீபாவின் கையில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இது பற்றிய எந்த ஒரு செய்தியும் எந்த நாளிதழிலும் வரவில்லை. ப்ளாக்கர்ஸ் யாரும் எழுதவும் இல்லை. ஜெயா டிவியில் மட்டுமே செய்தி வெளியானது.

“ எந்த டிவியும் வராது, ஜெயா டிவி மட்டும் தான் வருவார்கள் என்று சக்‌ஷேனா சொன்னார்” என்று தீபா பேட்டியில் சொன்னார்.

இதுபற்றிய செய்தியை கீழே இருக்கும் லிங்கில் படித்துப் பார்க்கவும்.

http://www.jayanews.co.in/detailpagenew.aspx?NEWS=c4a5b9bf-a246-4bcc-99d2-7b336a293be7



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ராஜா vs ராஜேந்திரன்!

1.jpg

ராஜாவா? ராஜேந்திரனா? கிங் ஆஃப் சேலம் யார்? -இதுதான் இப்போ தைக்கு சேலம் உ.பி.க்கள் எழுப்பும் கேள்வி. அந்தளவு இருதரப்பும் கோஷ்டி பூசலால் முட்டிக் கொண்டு நிற்க இது சமீபத்தில் சேலம் வந்த ஸ்டாலின் வரவேற்பில் பூதாகரமாய் வெடித்து உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஈரோடு கூட்டத்திற்கு செல்ல சேலம் கமலாபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஸ்டாலினை வரவேற்க பனைமரத்துப்பட்டி எம்.எல்.ஏ. ராஜேந்திரன் செல்ல, "நீங்க போகக்கூடாது' என வீரபாண்டி எம்.எல்.ஏ. ராஜா பார்வையாளர் பகுதியிலேயே தடுத்து நிறுத்தினார். "என்னை தடுக்க நீங்க யார்?' என ராஜேந்திரன் திருப்பிக் கேட்க ராஜா மீண்டும் தடுக்க இவர்களின் நீயா? நானா? சண்டையால் விமான நிலையமே பரபரப்பானது.

என்ன நடந்தது? அங்கிருந்த உ.பி.க்களிடம் கேட்டோம்.

""ராஜா தன்னோட ஆதரவாளர்களுடன் வெயிட்டிங் ரூம்கிட்ட இருந்தாரு அப்போ ராஜேந்திரன் தன்னோட ஆதரவாளர்களோட வந்தாரு. உடனே ராஜா, ராஜேந்திரனை "போகக் கூடாதுன்னு' தடுக்க இவர் மீறிப் போனாரு. நான் சொல்ல சொல்ல போறாங்களானு ராஜா சத்தம் போட, கடுப்பான ராஜேந்திரன் "யார்கிட்ட சத்தம் போ டுறீங்க'ன்னு முறைச்சுக்கிட்டே திரும்பி வந்தாரு. அங்க இருந்த வங்க மட்டும் சமாதானம் செய்ய லேன்னா ஸ்டாலின் முன்னாடியே அடிதடி வரைக்கும் போயிருக்கும்' என்றனர் பீதியோடு.
1.jpg
இது உண்மையா? என அறிய பனைமரத்துப்பட்டி எம்.எல்.ஏ. ராஜேந்திரனிடம் பேசினோம். ""அஞ்சு பேருதான் ஓடுதளம் வரை செல்ல ஏர்போர்ட் அனுமதி தந் திருக்குனு' ராஜா சொன்னாரு. நான் ஏர்போர்ட் அத்தாரிடிகிட்ட கேட்டப்போ அப்படிலாம் இல் லைன்னு சொன்னாங்க. இருந் தாலும் நான் அங்க அமைதி யாத்தான் இருந்தேன். திடீர்னு பார்த்தா ராஜா கூட 50 பேருக்கு மேல திபுதிபுன்னு உள்ளே போனாங்க. கட்சி யில் உறுப்பினரா இல்லா தவங்க கூட உள்ள போ னாங்க. அப்புறம்தான் நம்மள வேணுமின்னே அவாய்ட் பண்றாங்கன்னு புரிஞ்சுக்கிட்டு நானும் தடா லடியா துணை முதல்வரை வரவேற்க உள்ளே போ னேன். அவ்வளவுதான்' என மேற்கொண்டு விரிவாய் பேச தயங்க அவரின் ஆதரவாளர் களிடம் கேட்டோம்.

"ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மட்டுமல்ல, மாநில இளைஞரணி துணை செயலாளர் துணை முதல் வர் வரும்போது அண்ணன் அங்க வரவேற்க இல்லாம போனா ஸ்டாலின்கிட்டே கெட்ட பேரு வரும்னுதான் ராஜா தடுத்து இருக்காரு. இதேபோலதான் ஒரு மாசத்துக்கு முன்னாடி ராஜேந் திரன் தன்னோட பனைமரத்துப் பட்டி தொகுதியில் உள்ள குமார கிரி கோயிலுக்கு. நமக்கு நாமே திட்டத்தில் தார்ச்சாலை போடும் வேலையை தொடங்கி வைத்து விட்டு போனாரு. "நான் இருக்கும் போது அவரெப்படி தொடங்கி வைக்கலாம்னு' சொல்லி மறுபடி யும் ஒரு பூஜை போட்டாரு ராஜா. முதல்வர் சேலம் வருகையப்போ அஸ்தம்பட்டியில் ராஜேந்திரன் பேர் போட்டு வச்சு இருந்த வளைவு பேனரை அமைச்சர் வீர பாண்டியார் சொல்லி ராஜா ஆளுங்க அதை கிழிச்சாங்க. முதல்வர் வரும்போது பிரச்சினை வேணாம்னு தான் இன்னும் இருபது இடத்துல வைக்க இருந்த பேனரை கூட வைக்காம அஸ்தம்பட்டி காவல்நிலையத்துல புகார் மட்டும் குடுத்துட்டு நிறுத் திக்கிட்டோம். ஆனா தன்னை தாண்டி ராஜேந்திரனுக்கு செல் வாக்கு பெருகிறத பொறுக்காமத் தான் ராஜா இப்படிப் பண்ணி னாரு'னு குமுறியவர்கள் தொ டர்ந்து "ராஜேந்திரன் ஸ்டாலின் ஆதரவாளர் என்பதால் எங்கே பிரச்சனை பெருசாகிடுமோனு ஏர் போர்ட் உள்ளே வந்த ராஜா "நான் வேணும்னு உங்கள தடுக்கல கூட் டம் அதிகம் வேணாம்னு நினைச்சு தான் சொன்னேன்'னு காம்ப்ர மைஸ் பேசுறாரு'' என்றனர்.

""ஸ்டாலினிடம் கெட்ட பெயர் வாங்கணும்னு தான் நீங்கள் ராஜேந்திரனை தடுத்த தாக கூறுகிறார்களே?'' என்றோம் வீரபாண்டி ராஜாவிடம்.

""அந்த அவசியம் எனக்கில்லை'' கோபத் தோடு பேசத் தொடங் கிய ராஜா, ""ஏர்போர்ட்ல தடுத்தா சென்னையில் போயி இவங்க துணை முதல்வரை பாக்குறது இல்லையா இல்ல தனியா அவரை ரூம்ல போயி தான் பாக்காம இருக்காங் களா? நாங்க யார்கிட்ட யாவது ராஜேந்திரனுக்கு முக்கியத்துவம் குடுக்கா தீங்க'னு சொல்றமா? இல்லையே நாங்க யாரையுமே ஏர்போர்ட்ல தடுக்க கிடையாது'' என்றவர் தொடர்ந்து "இவர் கூட தான் என் படம் கூட இல்லாம பேனர் வைக்கிறாரு. அத நான் பெருசா எடுத்துக்கலையே. இவர் பேனர் வச்சுதான் எனக்கு அடையாளம் கிடைக்கணும்னு இல்லை. இந்த ராஜாவ சேலம் மக்களுக்கு அடையாளம் தெரியும். மாவட்ட மாநகர ஒன்றிய கூட்டத்தில் பேசி முதல்வர் வரப்போ யார் யாருக்கு எந்த எந்த இடத்துல கட் அவுட் பேனர் வைக்கணும்னு ஏரியா பிக்ஸ் பண்ணி தந்துட்டாங்க. அதன்படி கட்சித் தொண்டர்கள் இரவு பகல் பாக்காம வேலை செய்யும் போது இவர் பாட்டுக்கும் போயி இன்னொருத்தர் ஏரியால "வளைவு' வச்சா யார்தான் ஏத் துக்குவாங்க. ஒரு மொராலிட்டி வேணாமா? இவரு தொழிற்சங்கத்துல. இளைஞ ரணியில பொறுப்புல இருக்கலாம். ஆனாலும் கட்சி மாவட்ட நிர்வாகத்துல எடுக்கிற முடிவுக்கு கட்டுப்படணும் அதைத்தாண்டி இவர் பிரியப்பட்டாருனா எங்ககிட்ட வந்து இடம் ஒதுக்கிதாங்கன்னு கேட்டா ஒதுக்கி தந்துருப்போம் எல்லாமே தலைவருக்காக (கலைஞர்) தானே. வாய்தாராணி ஆர்ப்பாட்டத்துலகூட தனியா நின்னுகிட்டு இருந்தாரு. நான்தான் கூப்பிட்டு மேடையில மைக் தந்து பேசச் சொன்னேன். மற்றபடி அவரு தான் (ராஜேந்திரன்) பெரிய மனுசனாக ணும்னு என்னென்னமோ சொல்லிக் கிட்டு இருக்காரு. அதையெல்லாம் நான் பெரிசா எடுத்துக்கல'' என்றார் கூலாக.

சேலம் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை விழாவில் ""அனை வரும் ஒற்றுமையாய் இருந்தால் தமிழகத்திற்கு பல நன்மைகள் உண்டு'' என கலைஞர் பேசினார். இது கட்சிக்குள்ளும் தான் என புரிந்து கொள்வார்களா உரசிக் கொள்ளும் எம்.எல்.ஏ.க்கள்?

அப்படியா!

அந்த முன்னாள் முதல் குடிமகனை மேடம் சேனலுக்காக பேட்டியெடுக்க பகீரத முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின் றன. தனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக் காமல் போனதற்கு தமிழகத்தின் ஆட்சித் தலைமைதான் காரணம் என்றும், மொழி மாநாட்டிற்கு அழைக்காததற்கும் அதே கார ணம்தான் என்றும் அவர் வாயால் சொல்ல வைக்க வேண்டும் என்பதுதான் பேட்டியின் நோக்கமாம். அப்படியெல்லாம் பொய்சொல்ல மாட்டேன் என மறுத்துவிட்டாராம் முன்னாள் முதல் குடிமகன்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

viewer?pid=sites&srcid=ZGVmYXVsdGRvbWFpbnxpZGx5dmFkYWkyMDA3fGd4OjY4OTEzMzM1OGRiNDM2ZDk&docid=06ce4f770a72f701d44ced3159fad8af%7Cb848ee963d0300b980781408d765a991&a=bi&pagenumber=1&w=789
viewer?pid=sites&srcid=ZGVmYXVsdGRvbWFpbnxpZGx5dmFkYWkyMDA3fGd4OjY4OTEzMzM1OGRiNDM2ZDk&docid=06ce4f770a72f701d44ced3159fad8af%7Cb848ee963d0300b980781408d765a991&a=bi&pagenumber=2&w=789


-- Edited by devapriyaji on Sunday 5th of September 2010 06:43:10 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

viewer?pid=sites&srcid=ZGVmYXVsdGRvbWFpbnxpZGx5dmFkYWkyMDA3fGd4OjY4OTEzMzM1OGRiNDM2ZDk&docid=06ce4f770a72f701d44ced3159fad8af%7Cb848ee963d0300b980781408d765a991&a=bi&pagenumber=3&w=789

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

viewer?pid=sites&srcid=ZGVmYXVsdGRvbWFpbnxpZGx5dmFkYWkyMDA3fGd4OjY4OTEzMzM1OGRiNDM2ZDk&docid=06ce4f770a72f701d44ced3159fad8af%7Cb848ee963d0300b980781408d765a991&a=bi&pagenumber=4&w=789

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

viewer?pid=sites&srcid=ZGVmYXVsdGRvbWFpbnxpZGx5dmFkYWkyMDA3fGd4OjY4OTEzMzM1OGRiNDM2ZDk&docid=06ce4f770a72f701d44ced3159fad8af%7Cb848ee963d0300b980781408d765a991&a=bi&pagenumber=5&w=789

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

viewer?pid=sites&srcid=ZGVmYXVsdGRvbWFpbnxpZGx5dmFkYWkyMDA3fGd4OjY4OTEzMzM1OGRiNDM2ZDk&docid=06ce4f770a72f701d44ced3159fad8af%7Cb848ee963d0300b980781408d765a991&a=bi&pagenumber=6&w=789

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

viewer?pid=sites&srcid=ZGVmYXVsdGRvbWFpbnxpZGx5dmFkYWkyMDA3fGd4OjY4OTEzMzM1OGRiNDM2ZDk&docid=06ce4f770a72f701d44ced3159fad8af%7Cb848ee963d0300b980781408d765a991&a=bi&pagenumber=7&w=789

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஜன்னல் வழியே 
கருணாநிதி காமராஜுமல்ல, கர்ண மகாப் பிரபுவுமல்ல ! – துர்வாசர்

கருணாநிதிக்கு அடிக்கடி தன்னை ‘நேர்மையின் திருவுருவம்’ என்று உலகத்துக்கு காட்டிக் கொள்ளும் அடங்காத ஆசை ஏற்படுகிறது. ஒருவன் தனக்குத்தானே ‘நேர்மையாளன்’ என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்துக் கொண்டால், அவனைப் பார்த்து உலகம் எள்ளி நகையாடும். 




மகாத்மா காந்தி தன்னைத்தானே ‘மகாத்மா’ என்று சொல்லிக் கொள்ளவில்லை. ‘மகாத்மா’ என்ற பட்டம் உலகம் கொடுத்தது. ‘காமராஜ் ஊழலில்லாத ஆட்சியைத் தந்தார்’ என்று இன்றும் ஜனங்கள் காமராஜை நினைவு கூர்கிறார்கள். ஒருநாளும் காமராஜ், தன்னைத்தானே ‘நான் நேர்மையாளன்’ என்று கொட்டடித்துக் கொண்டு திரிந்தது கிடையாது. ‘நேர்மையானவர்’ என்பதை ஜனங்கள் சொல்ல வேண்டும். 

கட்சிக்காரர்களைத் தவிர வேறு யாரும் கருணாநிதியைப் புகழ மாட்டேன் என்கிறார்கள். அதனால் கருணாநிதி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார். 

கருணாநிதிக்குத் தன்னைப் பற்றிப் பல தவறான உயர் மதிப்பீடுகள் உண்டு. தான் ஒரு மிகச் சிறந்த இலக்கியவாதி, நேர்மையாளன், மிகச் சிறந்த கவிஞர், மிகச் சிறந்த முதலமைச்சர் என்று தன்னைப் பற்றி, அளவுக்கதிகமான மதிப்பீடுகளை வைத்துக் கொண்டு, படாதபாடுபடுகிறார். 

‘நேர்மையான முதல்வர்’ என்றால் காமராஜும், பக்தவத்சலமும்தான் ஜனங்களுக்கு ஞாபகத்துக்கு வருவார்கள். கருணாநிதி மிகச் சிறந்த கதை – வசனகர்த்தாவாக இருந்தது பராசக்தி, மனோகரா காலத்தில். பராசக்தி, மனோகராவைப் போல் அவரது உளியின் ஓசையோ, மண்ணின் மைந்தனோ, கண்ணம்மாவோ வசனத்துக்காக ஓடவில்லை. இந்தத் திரைப்படங்கள் பராசக்தி, மனோகரா அளவுக்கு வெற்றிகரமான படங்களல்ல. வந்த சுவடு தெரியாமல் ஓடிவிட்ட படங்கள் இவை. இவர் முதல்வராகவோ, ஒரு கட்சியின் தலைவராகவோ இல்லாவிட்டால், இவரது கதை – வசனத்துக்கு எவனாவது 50 லட்சம், 70 லட்சம் என்று அள்ளிக் கொடுப்பானா? 

மிகச் சிறந்த எழுத்தாளன் என்று பெருமை கொண்டாட புதுமைப்பித்தன், கு.ப.ரா., மௌனி, கு. அழகிரிசாமி... என்று இலக்கியத்துக்காகப் பாடுபட்ட பலர் இருக்கிறார்கள். வெகுஜன எழுத்தாளர்கள் வரிசையில் கூட கருணாநிதியின் எழுத்து வராது. கல்கி, ஜெயகாந்தன், அகிலன், நா.பார்த்தசாரதி, பாலகுமாரன்... என்று ஒரு பெரிய வரிசையே இருக்கிறது. இதற்காகவும் கருணாநிதி பெருமைப்பட முடியாது.
பேச்சாளர்கள் என்றால், இதிலும் கருணாநிதிக்கு முதலிடத்தையோ, நான்காவது இடத்தையோ கூட தூக்கித் தந்துவிட முடியாது. தி.மு.க.வில் அந்தக் காலத்திலேயே அண்ணாதுரை, ஈ.வெ.கி. சம்பத், நெடுஞ்செழியன் இவர்களைத்தான் சிறந்த பேச்சாளர்கள் என்பார்கள். காங்கிரஸில் சின்ன அண்ணாமலையை நல்ல பேச்சாளர் என்பார்கள். அரசியலுக்கு அப்பால் கி.வா.ஜ., திருக்குறள் முனுசாமி என்றுதான் பட்டியலிட முடியும். 

கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் மாறி மாறி முதல்வர்களாக வருகிறபோது, அவர்களுக்கு விழா எடுப்பதையும், ‘அவர்களை விட்டால் தமிழ்நாட்டை ஆள வேறு ஆளே இல்லை’ என்கிற மாதிரி விழுந்து விழுந்து பாராட்டுவதையும் தங்களுடைய மேடை தர்மமாகவே சினிமா உலகினர் வரித்துக் கொண்டு விட்டார்கள். இந்த ரகமான சினிமா உலக ஜால்ராக்களின் வீடு கட்டும் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய டாக்டர், கலைஞர், முத்தமிழ் வித்தகரான கருணாநிதி, தனது குடும்பத்தினர் சினிமா துறையில் ஈடுபடுவதை விமர்சிப்பவர்களைப் பார்த்து, பிருதிவிராஜ் கபூர் குடும்பம் சினிமாவில் ஈடுபடவில்லையா, ரஜினிகாந்தின் குடும்பம் சினிமாவில் ஈடுபடவில்லையா என்றெல்லாம் பேசியிருக்கிறார். 

பிருதிவிராஜ் கபூர் ஒரு காலத்திலும் முதல்வராக இருந்ததில்லை. அவர் முதல்வராக இருந்து, அந்தச் செல்வாக்கை வைத்துக் கொண்டு ராஜ்கபூர், ஷம்மிகபூர், சசிகபூர் இவர்களெல்லாம் சினிமாவுக்கு வரவில்லை. பிருதிவிராஜ் கபூரும், அவரது மகன்களும் நடிகர்கள். அவ்வளவுதான். 

ரஜினிகாந்த் மகளைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே தனுஷ் நடிகராகி விட்டார். தமிழர்கள் அறிந்த நடிகராகி விட்டார். ‘நான் ரஜினிகாந்தின் மருமகன்’ என்று சொல்லிக் கொண்டு தனுஷ் யாரிடமும் தனது சினிமா செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவில்லை. அந்தத் தேவையும் தனுஷுக்கு ஏற்படவில்லை. 

ஆனால், சன் டி.வி. தமிழ்நாட்டிலும், இதர மாநிலங்களிலும் எப்படி வேரூன்றியது? இதற்கு கருணாநிதி, முரசொலி மாறனின் அரசியல் செல்வாக்கும், அதிகாரமும் எப்படிப் பயன்பட்டது என்பதைப் பிறந்த குழந்தை கூட அறியும். கருணாநிதி குடும்பத்தில் உள்ள ஏகப்பட்ட நிதிகள் இப்போது சினிமா துறையில் ஈடுபட்டுப் படங்களைத் தயாரிக்கிறார்கள், வாங்கித் திரையிடுகிறார்கள். இவர்கள் எல்லாம் 2006-க்கு முன்னால், கருணாநிதி மீண்டும் முதல்வராவதற்கு முன்னால் எங்கே இருந்தார்கள்? 2006-க்கு முன்னால் இந்த உதயநிதி, கலாநிதி, துரை. தயாநிதி, அருள்நிதி முதலான நிதிகள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இப்போது எப்படி சினிமாவுலகில் தனிக்காட்டு ராஜாக்களாக வலம் வருகிறார்கள் என்பதெல்லாம் ஊர் உலகத்துக்கே தெரியும்.

ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி, இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்கிற மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு கருணாநிதி ‘என் குடும்பத்தினர் சினிமாத் துறையில் ஈடுபடக் கூடாதா’ என்று சமூகத்தைப் பார்த்துக் கேட்கிறார். காமராஜ் தன் தாயார் இருந்த தெருவுக்கு தண்ணீர் குழாய் போட்டுத் தரும் சலுகையைக் கூட காட்டவில்லை. அப்படிப்பட்ட காமராஜை உலகம் நேர்மையாளர் என்று சொல்லுமா, தனது மகன், மகள், பேரன், பேத்தி, பூட்டன் என்று சகலரையும் அரசியலிலும், சினிமாவிலும் நுழைக்கிற கருணாநிதியை நேர்மையானவர் என்று உலகம் சொல்லுமா? மக்களை சர்வ மடையர்கள் என்று கருணாநிதி நினைத்து விட்டார். கருணாநிதியை நேர்மையானவர் என்று சொன்னால், ‘நேர்மை’ என்ற சொல்லே தன்னை மாய்த்துக் கொண்டு விடும். 

நமது முத்தமிழ் வித்தகர், டாக்டர், கலைஞர் கருணாநிதிக்கு, தான் கர்ணன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரன் என்றும் நினைப்பு. தி.மு.க.வை ‘ஊழல் கட்சி’ என்று விஜயகாந்த் சொன்னதற்குப் பதில் சொல்ல, தான் வழக்கமாக எழுதி எழுதி மாயும் முரசொலி கேள்வி – பதில் பகுதியைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். தனது தான தர்மங்களைப் பெரிய பட்டியலே இட்டுள்ளார். ‘திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதில் கிடைத்த பணத்தை எது எதற்கெல்லாம் தானமாகக் கொடுத்தேன், எத்தனை பேருக்குப் பொற்கிழி கொடுத்தேன், வீட்டை ஆஸ்பத்திரிக்கு எழுதி வைத்தேன், இப்படிப்பட்ட கர்ணப் பிரபுவான என்னைப் போயா, ஊழல்வாதி என்பது? என்று விஜயகாந்திடம் சீறியிருக்கிறார்
கர்ணன், வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாமல் கொடுத்த மாமனிதன். கருணாநிதியை யாரும் வள்ளல், கொடையாளி என்று சொல்ல மாட்டேன் என்கிறார்கள். வழக்கமாக மேடைக்கு மேடை புகழ்ந்து தள்ளும் அவரது ஜால்ரா கூட்டம் கூட, கருணாநிதியை கடையேழு வள்ளல்களுக்குப் பின் வந்த எட்டாவது வள்ளல் என்று சொல்ல மாட்டேன் என்கிறது. 

பாவம், முத்தமிழ்காரர். பார்த்தார். தானே அவ்வப்போது ‘நான் கொடுத்தேன், நான் கொடுத்தேன்’என்று கொட்டடிக்கிறார். ரோட்டோரம் இருக்கிற பிள்ளையார் கோவிலில் நாற்பது ரூபாய்க்கு ஒரு டியூப் லைட்டை வாங்கிப் போட்டு விட்டு, அதில் ‘உபயம் : ஆத.கணபதி. ஆத.பழ. கந்தசாமி’ என்று சிலர் தங்கள் பெயர்களைப் போட்டுக் கொள்வதற்கும், கருணாநிதி மேடைக்கு மேடை சமயம் கிடைக்கிறபோதெல்லாம் ‘நான் வீட்டைத் தானமாகக் கொடுத்தேன், நான் பொற்கிழி கொடுத்தேன், அதைக் கொடுத்தேன், இதைக் கொடுத்தேன்’ என்று தம்பட்டம் அடிப்பதற்கும் என்ன வித்தியாசம்? கருணாநிதி ஒரு காலத்திலும் கர்ணனாக முடியாது. அவரிடம் கைநீட்டி வாங்கியவர்கள், ஐயோ பாவம்...! 

‘நான் உனக்குப் பணம் கொடுத்தேனே, பணம் கொடுத்தேனே’ என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்கிற ரகத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. கருணாநிதி காமராஜுமல்ல. கர்ண மகாப் பிரபுவுமல்ல. 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘‘கலைஞர் சாமி கும்பிட்டதை நானே பார்த்தேன்!’’
‘விட்னஸ்’ விஜயகாந்த்

Raja%201.jpg



தனது 58-வது பிறந்தநாளை வீட்டிலேயே கொண்டாடிவிட்டு 27-ம் தேதி அதிகாலை திண்டிவனம் புறப்பட்டார் விஜயகாந்த். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தே.மு.தி.க. கழக நகரச்செயலாளர் வெங்கடேசன் - கலைப்பிரதா திருமணத்தை நடத்தி வைப்பதற்குத்தான் இந்த அதிகாலை பயணம். 

செல்லும் வழியில் பாதரி கிராமத்தைச் சேர்ந்த மக்கள், ‘வண்டியை விட்டு இறங்குங்க தலைவரே’ என்று விஜயகாந்த்தை வழிமறிக்க சற்றே யோசனையுடன்தான் இறங்கினார் விஜயகாந்த். 

திடீரென கிராம மக்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து விஜயகாந்த் மீது தண்ணீர் மாதிரி எதையோ தெளிக்க... மேலும் குழப்பம் அவருக்கு. பிறகுதான், ‘தலைவரே... இது முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக புனிதநீர். உங்க மேல தெளிக்கறதுக்காக விடிகாலைலேர்ந்து காத்துக் கெடக்கோம்’ என சொல்லியவாறே, விஜயகாந்த் மீது தெளித்து பூரண கும்ப மரியாதை செலுத்தி ஆரத்தி எடுத்து பூசணிக்காய் உடைத்து திருஷ்டியை கழித்தார்கள். 

மக்களின் இந்த எதிர்பாராத தெய்வீகமான வரவேற்பால் குஷியான விஜயகாந்துக்கு ஒலக்கூரில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். திண்டிவனத்திற்கு வந்து அடைவதற்குள்ளே 4 கிலோ மீட்டர் தூரம் டிராபிக் ஜாமில் சென்னை தேசிய நெடுஞ்சாலை திக்குமுக்காடியது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸின் சொந்த ஊர் என்பதால் திண்டிவனத்தில் எந்த கட்சியாக இருந்தாலும் கூட்டத்தைத் திரட்ட முனைப்பு காட்டுவார்கள். இதற்கு தே.மு.தி.க.வும் விதிவிலக்கா என்ன? திருமண விழாவை பொதுக்கூட்டம் போல பிரமாண்டமாய் ஏற்பாடு செய்திருந்தனர். 

Raja.jpgகாலை 9.50 மணிக்கு வெற்றி முரசு ஒலிக்க விஜயகாந்த் கார் திருமணப் பந்தலுக்குள் நுழைந்தது. தாம்பூலத் தட்டில் இருந்த மாங்கல்யத்தை எடுத்து மணமகன் கையில் கொடுத்தார் விஜயகாந்த். கட்டி முடித்ததும் ஆசீர்வதித்துவிட்டு, மணமக்களை கையோடு கூப்பிட்டு வந்து மண்டபத்துக்கு வெளியே பொதுக்கூட்ட மேடையில் உட்காரவைத்தார்.

திருமணப் பொதுக்கூட்டத்தை தலைமை தாங்கி முதலில் பேச ஆரம்பித்த விழுப்புரம் மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன், 

‘‘அமைச்சர் பொன்முடி இதற்கு முன்னால் பேராசிரியராக இருந்தவர். சாதாரண ஸ்கூட்டரில் போனவர். இன்றைக்கு கோடிகளில் புரளுகிறார். இவையெல்லாம் எப்படி வந்தது? ஊழல் செய்கிறார் என்று தி.மு.க.வை, எங்கள் தலைவர் குறைசொன்னால் நாங்கள் கருப்பு பணம் வைத்திருக்கிறோம் என்று குற்றம்சாட்டுகிறார்’’ என கலைஞர் பற்றியும் பேசிவிட்டு ஜெயலலிதா பற்றி பேச வாயை எடுத்தார். அதற்குள், நேரம் போதவில்லை என சொல்லப்பட்டதால் பேச்சை முடித்துவிட்டார்

. மணமக்களை வாழ்த்திய பின் மேட்டருக்கு வந்தார் விஜயகாந்த். 

‘‘ ‘விருத்தகிரி’ படப்பிடிப்பிற்காக மலேசியா சென்றேன். இதற்கிடையில் அரசியல்வாதிகள் ஏதேதோ பேசியதற்கு பதில் சொல்லும் வாய்ப்பு இந்த திண்டிவனம் கூட்டத்தில் அமைந்துவிட்டது. 

எம்.ஜி.ஆருக்குப் பின் வந்தவர்கள் எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள். இவர்கள் எந்த வகையில் மக்களுக்கு நன்மை செய்கிறார்கள். கேட்டால் இலவச டி.வி., கேஸ் அடுப்பு, ஒரு ரூபாய் அரிசி வழங்குகிறோம் என்று கூறுகிறார். அண்ணா ஆட்சி அமைக்கும்போது, ‘ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம்; ஒரு படி நிச்சயம்’ என அறிவித்ததை 40 ஆண்டுகளுக்குப் பின் அறிவித்தீர்களே? இவ்வளவு ஆண்டுகளாக செய்யாமல் இப்போது அறிவித்தது ஏன்? மக்களை இவ்வளவு காலமாக ஏமாற்றி வந்தீங்களா? ரோடு போட்டேன் என்று சொல்றீங்களே? வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவர்தான் தங்க நாற்கரச் சாலை போடும் திட்டத்தை ஆரம்பித்தார். இதை நான் மட்டும் சொல்லவில்லை, காங்கிரஸ் தலைவர்களும் இதை சொல்கிறார்கள். மத்திய அரசின் திட்டமான மகளிர் சுயஉதவிக் குழுக்கள் திட்டத்தை, இவர் ஏதோ தானே ஆரம்பித்ததைப் போல கூறுகிறார். 

இன்று தமிழ்நாட்டில் 62 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் தனது ஆட்சியில் நாலரை லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்துள்ளதாக கலைஞர் கூறியுள்ளார். என்னைக் கண்டு பயப்படுகிறார்கள். நான் உங்களிடம் கூட்டணி சேர தூதுவிட்டேனா? நான் கூட்டணி குறித்து பேசவும் இல்லை. நான் ஊழல் செய்து படம் தயாரிக்கவில்லை, உழைத்து சம்பாதிக்கிறேன். கொடை வள்ளல் என்று என்றைக்காவது உங்களுக்கு பட்டம் கொடுத்திருக்கிறார்களா? இந்த பட்டம் எம்.ஜி.ஆரை மட்டுமே சேரும். 

தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் ஊழல் கட்சிகள் என்று தெரிவித்தேன். அதற்கு நான் கருப்பு பணம் வைத்திருக்கிறேன் என்று கலைஞர் சொல்கிறார். நான் கருப்புப் பணம் வைத்திருக்கிறேன் என்று உறுதி செய்யுங்களேன் பார்ப்போம். இதெல்லாம் சொல்லப்போனால் மின்வெட்டு வீராசாமிக்கு கோபம் வரும்.ஒப்புக்கு சப்பானி ஊருக்கு மாங்கொட்டையா இருக்கிற நீங்க அறிக்கை விடுறீங்களா? 

ஊழல் ஆட்சி செய்கிறது என்று சொன்னால், நான் மனுநீதி சோழன் ஆட்சி செய்கிறேன் என்று சொல்கிறார். மனுநீதி சோழன் மாட்டுக்கு நீதிகிடைக்கணும்னு தன் பிள்ளையையே தேர்க்காலில் இட்டார். ஆனால் இவர் ஆட்சியில் நீதியே செத்துப்போச்சு. கடவுள் பக்தி இல்லையென்று சொல்றீங்களே உங்கள் வீட்டுக்கு முன்னாலே கிருஷ்ணர் கோயில் இருக்கு. நான் ஒருநாள் அதை கண்குளிர பார்த்தேன் ஒரு போலீஸ்காரர் ஓடி போய் முதல்வர் கையில் ஒரு எலுமிச்சை பழம் கொடுத்தார். வாங்கிக்கொண்டு அவர் கிருஷ்ணர் கோயிலை பார்த்து கையெடுத்து கும்பிட்டார். அப்பதான் கலைஞரின் மறுபக்கம் தெரியவந்தது. கடவுளே இல்லையென சொல்றீங்களே. மஞ்ச துண்டையும், சிவப்புக்கல் பவள மோதிரத்தை கழற்றி எறியுங்களேன் பார்ப்போம்? 

30 பேரை எம்.எல்.ஏ.வாக ஆக்கவும், 10 பேரை எம்.பி.யாக்கவும் நான் கட்சி நடத்தவில்லை ஏழைகளுக்காக கட்சி நடத்துகிறேன். மக்கள் விரும்புகிற கட்சியுடன்தான் கூட்டணி அமைப்போம். அனைவருக்கும் விடிவுகாலம் வரும்’’ என பேசி முடித்தார் விஜயகாந்த்.

கோவையில் பேசிய ஜெயலலிதா, ‘மக்கள் விரும்பும் கூட்டணி அமையும்’ என்றார். அதேபோல விஜயகாந்த் பேசியதையும் ஒப்பிட்டுக்காட்டும் சில தே.மு.தி.க.வினர் மக்கள் விரும்புவதை இந்த இருவரும் விரும்புகிறார்கள் போலிருக்கிறது என்கிறார்கள் சூசகமாய். 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Jaya summoned in case filed by Stalins son-in-law

TIMES NEWS NETWORK

Chennai: A magistrate court here has issued summons to former chief minister Jayalalithaa in connection with a defamation complaint lodged by deputy chief minister MK Stalins sonin-law,V Sabareesan,on Tuesday.
Chief metropolitan magistrate (CMM) R Killivalavan issued the summons,and directed the AIADMK supremo to be present in court on October 15.The magistrate had earlier recorded the sworn statement of Sabareesan and took cognizance of the matter.Sabareesan said Jayalalithaa had made a baseless statement against him during her speech at Coimbatore on July 13,alleging that he had accepted a costly imported car as gift from persons,who are accused in the expired drugs scam that rocked the state a few weeks ago.Noting that he was in no way connected with such persons,Sabareesan said he had nothing to do with drugs trade and industry.He said he was a chief executive officer of a private research company,and that he was managing a team of scientists and engineers working in cutting-edge semi-conductor technology offering IT solutions.He said the false and malicious statements made by Jayalalithaa were published in print and visual media,bringing down his reputation.He wanted the court to punish the AIADMK chief for criminal defamation.

Pc0031500.jpg
IN THE DOCK


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Karunanidhi criticises Hindu practice of sporting 'tilaks'

CHENNAI: Flaying the Hindu practice of smearing ash or saffron or sporting a 'tilak' on the forehead for yet another time, Tamil Nadu Chief Minister M Karunanidhi on Wednesday questioned the need for "such things in a country which preached equality of all religions." 

Karunanidhi also questioned the rationale behind Brahmins wearing sacred thread. 

"What is the need for these things in a country that has accepted all religions and preached equality of the same," he asked in a poem penned by him in the wake of caste-related violence in Madurai yesterday in which one person was killed in police firing. 

He had on earlier occasions also ridiculed the practice of smearing ash or saffron on the forehead. 

The DMK chief had made similar remarks on certain other Hindu customs earlier and described Hindus as "robbers". But later he clarified that he meant Hindus were robbers "who stole hearts". 

In the height of the Sethusamudram controversy, he had described Lord Ram as a "drunkard" and wondered whether he was a qualified engineer to have built the Ramasethu. 

In the poem, Karunanidhi described truth as God, adding that all people were equal before God and described as "ignorance" those who were not aware of it. 

"Caste differences are the offshoot of the branches called differences based on religion... lets chop off not only the branches but also uproot the tree to witness the emergence of a beautiful concept called equality," he said. 

He also described as useless the face-off between believers and non-believers on the concept of God and said there was no point fighting over which faith was supreme.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Karunanidhi-criticises-Hindu-practice-of-sporting-tilaks/articleshow/3677616.cms#ixzz0z2Aorn00

Why not you shout at Muslims for wearing Cap?
Pastors for wearing cross? and
Your own family members
stalinmayiladudurai11.jpg?w=300&h=199

Don't Preach when your own house people do not follow you.



[dinakaran.jpg][dn_100507_e1_04_cni.jpg]


-- Edited by devapriyaji on Thursday 9th of September 2010 05:31:38 PM

__________________
« First  <  Page 3  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard