New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Christian World-பாதிரியார்- மதபோதகர் பலான விதம்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: Christian World-பாதிரியார்- மதபோதகர் பலான விதம்
Permalink  
 


வானத்தின் பொல்லாத ஆவிகளை கட்டிவிட்டோம்:

ஏஞ்சல் டிவியில் 27.8.2013 சகோ.மோகன் சி.லாசரஸ், சாதுசெல்வராஜ், வின்சென்ட் செல்வகுமார்ஆகியோரின் சம்பாஷணைகளில் கூறப்பட்டது. கடந்த நாட்களில் நாங்கள் ஜெபித்தபின் வானத்தின் பொல்லாத ஆவிகள் கட்டப்பட்டது. இனி வானத்தின் பொல்லாத ஆவிகளால் யாருக்கும் தொல்லை இருக்காது. தடையிருக்காது. நாம் வாலிபர்களையும், மற்றவர்களையும் இனி எப்படி ஜெபிக்க வேண்டும் என்று நாம் சொல்லி கொடுக்கவேண்டும். இனி செய்யும் ஜெபங்கள் தடையில்லாது நேரே பரலோகம் செல்லும்.

ஜெபிப்பவர்கள் கவனிக்கவும்: இவர்கள் கூறுவதுபோல் பிசாசை யாரும் கட்டிவைக்க முடியாது, பிசாசை சபிக்கவும், பாதாளத்துக்கு அனுப்பவும் மனிதர்கள் யாருக்கும் அதிகாரம் கிடையாது. இதுபொய்யான செய்தி. இவர்கள் கூற்றை நம்பவேண்டாம். இப்படி இவர்கள் கூறும் புதுபுதுவெளிப்பாடுகளையும் நம்ப வேண்டாம்.


ஜாமக்காரனை போட்டு தள்ளப்போறோம்:

27.8.2013 அன்று சேலத்தில் நான் என் அலுவலகத்தில் இருந்தபோது தொலைபேசியில் பேசியவர்கள் ஆரம்பத்தில் மிக மிக மரியாதையாகத்தான் பேசினார்கள். நான் பதில்கூறிய உடன் அவர்களின் இயல்பான வார்த்தை வெளியாயின.

"நாலுமாவடி திறப்பின் வாசல் பற்றி எழுத நீ யார்?. அங்கு கட்டிடம் இடிந்து விழவில்லையே? நீ போய் பார்த்தாயா? அப்படி உனக்கு சொன்னது யார் என்ற விலாசம் ஏன் ஜாமக்காரனில் எழுதவில்லை. சன் டிவியில் செய்தி வந்தது உண்மை. ஆனால் அந்த செய்தி உண்மையா! இல்லையா! என்று ஏன் நீ கேட்கவில்லை?". இப்படி படபடவென்று அடக்கமுடியாத கோபத்தோடு வார்த்தைகள் வெளிவந்தது.

"திறப்பின் வாசல் கட்டிடம் இடிந்து இரண்டு பேர் செத்தார்கள் உண்மைதான்!. ஆனால் கட்டிடம் ஒரு பக்கம் இடிந்து விழவில்லையே! இன்றும் அது நன்றாகத்தானே காணப்படுகிறது (27.8.2013 மதியம் 2.30) நாங்கள் வேன் வைத்து இன்று நாலுமாவடி போகிறோம். கட்டிடம் இடிந்ததா? என்பதை நேரில சென்று விசாரிப்போம்!. அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று நாங்கள் அறிந்தால், அங்கு இருந்து நேரே சேலம் வந்து உங்களை போட்டு தள்ளிவிட்டுதான் மறுவேலை!". நானும் அவர்களோடு "நான் வீட்டில் இருக்கும் நேரம் பார்த்துவாருங்கள்" என்றேன்.

தொலைபேசி செய்தியில் அவர்களின் பெயரும், பேசும் இடம் கோயமுத்தூர் என்றும் மட்டும் கூறினார்கள். இவர்கள் என் வீட்டில் தொலைபேசியில் பேசியது பதிவாகியுள்ளது. என்னிடம் பேசிய இவர்கள் இயேசு விடுவிக்கிறார் ஜெபகுழுவினர் என்று எண்ணுகிறேன். இவர்கள் நாலுமாவடி திறப்பின் வாசல் கட்டிடத்தைகுறித்து மிக நல்ல வைராக்கியம் கொண்டுள்ளார்கள் என்று விளங்கிக்கொண்டேன்.திறப்பின் வாசலுக்கு எதிராக பேசுபவர்களை போட்டுதள்ளும் பாரம் உள்ள ஜெபவீரர்கள். சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்களுடன் இருப்பது எத்தனை சிறப்பு பார்த்தீர்களா? இப்படித்தான் திருப்பத்தூர் 3 நாள் உபவாச ஜெபக்கூட்டத்தில் பல வருடங்களுக்குமுன், ஆண்டவரே, ஊழியர்களைப்பற்றி தவறாக செய்தி எழுதும் ஜாமக்காரனை அழியும், எழும்பவிடாதிரும், ஊழியர்களுக்கு விரோதமாய் செய்திகளை பரப்பும் ஜாமக்காரனை அழியும். இப்படிப்பட்ட ஜெபத்தை ஏறெடுக்க சகோ.சாம்ஜெபதுரையுடன் இவரும் இணைந்து நால்வர் அணி ஜெப ஊழியர்களாக ஜெபித்ததை கேள்விப்பட்டு அந்த ஜெபத்தை என்னால் மறக்கமுடியவில்லை. ஜெபிக்க சென்ற ஜெபவீரர்கள் எப்படிப்பட்ட ஆவியை பெற்றவர்கள் என்பது இப்போதாவது வாசகர்கள் விளங்கிக்கொண்டால் சரி. இந்த ஊழியர்களுடன் அணி நிற்கும் ஜெப வீரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நான் விளக்காமலே விளங்குகிறதா? இவர்களா பிசாசை கயிறு போட்டு கட்டி வைத்தார்கள்? இப்போது பிசாசு என்பவன் வானத்தில் இல்லை என்கிறார்கள். ஒருவேளை இது உண்மையாக இருக்குமா? காரணம், எல்லா பிசாசும் இப்போது பூமியில் என்னை போன்றவர்களைபோட்டு தள்ளவும், என் ஊழியத்தை அழிக்கவும் பூமியில்தான் உலாவிக்கொண்டு இருப்பதாக அறியமுடிகிறதே! திருப்பத்தூரிலும், திறப்பின் வாசலிலும், ஜெபகோபுரங்களிலும் ஜெபிக்கவேண்டி அங்கு கூடும் மக்களை எண்ணிப் பரிதாபப்படுகிறேன். இவர்களுக்காகவும், இவர்களை ஆசீர்வதித்தும் ஜெபிப்போம். இப்படி ஆசீர்வதித்து ஜெபிக்கதான் நம் தேவன் நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தசமபாகம்
ஒரு நீதிமன்ற வழக்கு
(2013 ஏப்ரல் மாத தொடர்ச்சி....)
(குற்றவாளி-பாஸ்டர்.ஜோன்ஸ் V/S நீதிபதி)
(பெயர்கள் யாவும் கற்பனை பெயர்கள்)

star2.gif12x12.gif2013 ஏப்ரல் மாத ஜாமக்காரனில் நம் ஜாமக்காரன் வாசகர் ஒருவர் மிக அருமையான அதே சமயம் யாரும் மறுக்க முடியாதபடி தசமபாக வேத சத்தியத்தை விளக்கும் ஒரு கற்பனை நாடகத்தை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து எனக்கு அனுப்பினார். அவருக்கு உங்கள் சார்பில் நன்றி கூறிக்கொள்கிறேன். இப்படிப்பட்ட வாசகர்கள் எனக்கு இருப்பதால் என் வாசகர்களுக்கு தேவையானது எது என்பதை என் வாசகர்களே அறிந்து இப்படிப்பட்ட நல்ல செய்திகளை எங்கிருந்தாவது தொகுத்து எனக்கு அனுப்பி உதவுகிறார்கள். அப்படிப்பட்ட வாசகர்களுக்காக நான் பெருமைப்படுகிறேன்.

இந்த செய்தி ஜாமக்காரனில் தமிழிலும், மலையாளத்திலும், இன்டர்நெட்டிலும்வெளியிட்டத்திலிருந்து அதை வாசித்த பெந்தேகோஸ்தே சபையினர், அந்த சபை மூப்பர்கள் ஆகிய ஏராளமானவர்கள் தசமபாக உபதேசத்தில் நாங்கள் இப்போது தெளிவுப்பெற்றோம் என்று கடிதம் மூலம், தொலைபேசி மூலம் எனக்கு எழுதி நன்றி அறிவித்துக்கொண்டிருக்கின்றனர்.

star2.gif12x12.gifஒருவர் எழுதினார்: இவ்வளவு நாட்கள் எங்கள் சபை பாஸ்டர் தசமபாக விஷயத்தில் மிகவும் பொய் பேசியிருக்கிறார், அவர் எங்களை பயமுறுத்தி பணம் பெற்றிருக்கிறார். தசமபாகம் கொடுக்காதவர்கள் மீது சாபமிட்டிருக்கிறார் என்று மிகுந்த கோபத்தோடு எனக்கு எழுதி அறிவித்திருக்கிறார். (இப்படி எத்தனையோ பேர் ஏமார்ந்திருக்கின்றனர்).

star2.gif12x12.gifமற்றொருவர் கோயமுத்தூரிலிருந்து எனக்கு எழுதினார்: அன்பான ஐயா, எங்கள் சபைக்குபாஸ்டர்.பாலசுந்தரம் என்பவர் வந்திருந்தார், பிரசங்க வேளையில் தாவீது தனக்கான எல்லாவற்றையும்தேவனுக்கு கொடுத்தார். ஆனால் ஆபிரகாம் தாவீதுப்போல எல்லாவற்றையும் கர்த்தருக்கு கொடுக்கவில்லை. ஒருவேளை தாவீதுக்கு பிறகு ஆபிரகாம் பிறந்திருந்தால் ஆபிரகாம் நரகத்துக்குதான் போயிருப்பார் என்று அவர் மடதனமாக பிரசங்கம் செய்தார். பின்பு எல்லா விசுவாசிகளிடமும் இரண்டு பேப்பர்களை கொடுத்து எவ்வளவு பணம் சபைக்கு காணிக்கை கொடுப்பீர்கள் என்பதை அந்த பேப்பரில் எழுதுங்கள் என்றார் - சபை ஜனங்கள் எழுதிக்கொடுத்ததை அவர் வாங்கிக்கொண்டார்.

இதன்மூலம் அன்று எழுதி கொடுத்தவர்கள் உண்மை விசுவாசிகள் போலவும், எழுதி கொடுக்காதவர்கள் அவிசுவாசிகள் போன்ற குற்ற உணர்ச்சியை சபை மக்களிடையே உண்டாக்கிவிட்டு அவர் போய்விட்டார். இது எவ்வளவு பெரிய தவறான உபதேசம் அதுமட்டுமல்ல, அது தவறான செயல் ஆகும். எங்கள் பாஸ்டருக்காக இவர் நன்மை செய்ததாக நினைத்து அன்று ஆராதனையில் பிரசங்கித்த அந்த பாஸ்டர்.பாலசுந்தரத்தை எங்கள் பாஸ்டர் புகழ்ந்து தள்ளிவிட்டார் என்று இன்னொரு நபரும் அதே சபையிலிருந்து எனக்கு எழுதியுள்ளார். அதே சபையைச் சேர்ந்த மற்றொருவர் அன்று கிடைத்த ஏமாற்று காணிக்கையில் சபை பாஸ்டருக்கும் - பாஸ்டர்.பாலசுந்தரம் என்ற அந்த பாஸ்டருக்கும் 50/50 - என்று அன்றைய காணிக்கையை பாதிக்கு பாதி பிரித்தெடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறோம். இது எத்தனை பெரிய ஏமாற்று.

ஆனால் இதை உங்களுக்கு எழுதி அறிவித்த நாங்கள் ஏமாறவில்லை. இவர்கள் எத்தனை சாபமிட்டாலும், பயமுறுத்தி பிரசங்கித்தாலும் இவர்கள் திருடர்கள் என்பதை நாங்கள் உணர்ந்துக் கொண்டதால் நாங்கள் ஏமாறவில்லை. ஆனால் எங்கள் சபையில் பெரும்பான்மையினர் அந்த பாஸ்டர் கூறியபடி எழுதி கொடுத்துவிட்டு அல்லேலுயா என்று கூறி கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். இதுதான் எங்கள் மனதை வேதனைப்படுத்தினது. எங்கள் சபை மக்கள் அறியாமையை நினைத்து வெட்கப்படுகிறோம். இப்படிப்பட்டதசமபாக ஏமாற்று பெந்தேகோஸ்தே சபைகளில்தான் பெருகியிருக்கிறது.

star2.gif12x12.gifஇன்னொரு வாசகர் எழுதினார்: நீங்கள் எழுதிய தசமபாக செய்தியை பல பாஸ்டர்மார்களுக்கு கொடுத்தேன். அதைக்குறித்து நான் விளக்கம் கேட்டு விசாரித்த எந்த பாஸ்டரும் அதற்கு பதில் கூறமுடியவில்லை.

star2.gif12x12.gifஇன்னொரு கடிதத்தில் ஒருவர் இப்படி எழுதினார்: ஜாமக்காரனில் வந்த தசமபாக செய்தியை 5000 போட்டோ காப்பி எடுத்தோம். எல்லா பெந்தேகோஸ்தே பாஸ்டர்களுக்கும் விநியோகம் செய்து எங்கள் பாஸ்டரிடமும் ஒன்றை கொடுத்து வாசிக்க சொன்னோம். வாசித்தபின் - பாஸ்டர் நீங்கள் இதைக்குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்றோம். அதற்கு அவர் செய்தி மிக சரியாக இருக்கிறது. எழுதியதில் தவறில்லை. ஆனால் ஜாமக்காரனில் தசமபாகத்தைக்குறித்த எழுதாத முக்கிய வேறு விஷயங்கள் உண்டு என்றார். அப்படியானால் தசமபாகம் புதிய ஏற்பாட்டு சபைக்கு உண்டா? நாங்கள் மாதாமாதம் தசமபாக காணிக்கையை உங்களிடம் ஒப்படைக்கிறோமே அது வசனத்தின்படி சரியா-தவறா? என்று வரும் ஞாயிறு ஆராதனையில் கூறுங்கள் என்றோம். ஆனால் அவர் அன்று வேறு விஷயத்தைக்குறித்து பிரசங்கத்துவிட்டு தசமபாகத்தைக் குறித்து அன்று அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை. வாராவாரம் காணிக்கை நேரத்தில் தசமபாகத்தை குறித்து பேசும் வழக்கம் உள்ள அவர் அன்று ஒரு வார்த்தைகூட அதைப்பற்றி பேசவில்லை. ஆராதனை முடிந்தவுடன் பாஸ்டரை கேட்டோம். ஏன் தசமபாக விளக்கம் கொடுக்கவில்லை என்றோம். கர்த்தர் இன்றைக்கு எதை பேச சொன்னாரோ அதைத்தான் பேச எனக்கு உரிமை உண்டு. ஒருவேளை அடுத்த வாரம் பேசும்படி கர்த்தர் ஏவினால்தான் அதைப்பற்றி பேசுவேன் என்றார். 3 வாரம் கடந்தது. இதுவரை தசமபாகத்தைக்குறித்து பாஸ்டர் வாய் திறக்கவில்லை!. அந்த பாஸ்டரை இப்போதும் நாங்கள் மிகவும் மதிக்கிறோம். ஆனால் இதுவரை தசமபாக விஷயத்தில் பொய் பேசியிருக்கிறார் என்பதை புரிந்துக் கொண்டோம். தசமபாகத்துக்கு அவர் பழைய ஏற்பாட்டு வசனங்களையே சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். அவர்மேல் எங்களுக்கு இருந்த மரியாதை நீங்கிப்போனது.

star2.gif12x12.gifசகோ.மோகன் சி.லாசரஸ் உங்கள் ஜாமக்காரனை வாசித்துவிட்டு மிகவும் கோப்பட்டிருப்பார் என்று எண்ணுகிறோம். அதனால் கடந்த 2013 ஜூன் மாதம்தான் பத்திரிக்கையில் முழுவதும் தசமபாகம் கொடுப்பதால் உள்ள ஆசீர்வாதத்தையும் அதை கொடுக்கிறவர்களின் சாட்சிகளையும் புகைப்படத்துடன் பக்கம்பக்கமாக எழுதி தள்ளிவிட்டார்கள். ஜீன்மாதம் அவர் பத்திரிக்கையில் தலைப்பே நீங்கள் செழித்திருப்பீர்கள் என்பதாகும். இப்போது வேண்டுமென்றே தான் பேசும் கூட்டங்களில் தசமபாகத்தைப்பற்றியே பேசுகிறார். அதனால்வரும் ஆசீர்வாதங்களைக்குறித்து அவர் பேசி அதற்கு அடுக்கடுக்கான பொய் உதாரணங்களைக்கூறி பேசினார், அந்த உதாரணங்களை தன் பத்திரிக்கையிலும் அப்படியே எழுதியுருமிருக்கிறார். இவர்களொல்லாம் கிறிஸ்தவர்களை மாங்காமடையர்கள் என்று நன்றாக அறிந்துக்கொண்டார்கள். அதில் பலர் எங்களைப்போல் வசனத்தின்படி ஆராய்பவர்கள் உண்டு என்பதை இவர்கள் யாரும் அறியவில்லை.

 

ஒரே ஒரு பெந்தேகோஸ்தே பாஸ்டர்
எனக்கு எழுதிய விமர்சன கடிதம்:

star2.gif12x12.gifபாஸ்டர்.ஜான் (மதுரை) அவர்கள் எனக்கு தசமபாகத்தைக்குறித்து நான் ஜாமக்காரனில் வெளியிட்டதை விமர்சித்து எழுதினார். இதுவரை இந்த பாஸ்டர் மட்டும்தான் நான் எழுதியதற்கு மறுப்பு தெரிவித்து தைரியமாக எனக்கு எழுதினார். இதற்காக அவரை பாராட்டுகிறேன். ஆனால் அவர் எழுதிய விளக்கம் பிழையானது அவர் எழுதியது முழுவதும் தவறு ஆகும்.

"நான் பாஸ்டர்.ஜான் (மதுரை) சுதந்திர பெந்தேகோஸ்தே சபையை நடத்துகிறேன். எல்லா மாதமும் உங்கள் ஜாமக்காரனை நான் தவறாமல் வாசிக்கிறேன். பலமுறை உங்கள் ஜாமக்காரன் செய்தி என்னை உற்சாகப்படுத்தியுள்ளது. ஆனால் தசமபாகத்தைப்பற்றி நீங்கள் எழுதியது பலரை தவறாக வழிநடத்தும்.நீங்கள் எடுத்து எழுதிய தசமபாக விவரத்தை போட்டோ காப்பி எடுத்து பாஸ்டராகிய எனக்கு அனுப்பிய நபர் நிச்சயம் தசமபாகம் செலுத்த மனமில்லாதவராக இருக்கும்".

star2.gif12x12.gifதசமபாகம் கொடுப்பது என்பது விருப்பமிருந்தால்(Option)மட்டும் கொடுக்கலாம் என்பது அல்ல - தசமபாகமென்பது ஒவ்வொருவரும் கண்டிப்பாக, கட்டாயமாக கொடுக்க வேண்டியதாகும். பாஸ்டர் அவர்கள் இப்படி எழுதியதற்கு அந்த ஒரு வசன ஆதாரத்தையும் அவர் தன் கடிதத்தில் குறிப்பிடமுடியவில்லை. அதற்கு பதிலாக 1 கொரி 9:7 வாசித்துப்பாருங்கள் என்கிறார். அதில் தசமபாகத்தைக்குறித்து ஒரு வார்த்தையும் எழுதப்படவில்லை என்பதை எப்படி அவர் அறியாமல்போனார். சம்பந்தமேயில்லா ஒரு வசனத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். வாசகர்களாகிய நீங்களே வாசித்துப்பாருங்களேன்.

1 கொரி 9:7ல் எவன் தன் சொந்தப் பணத்தைச் செலவழித்து, தண்டிலே சேவகம்பண்ணுவான்? 
எவன் திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியில் புசியாதிருப்பான்?, 
எவன் மந்தையை மேய்த்து, அதன் பாலைச் சாப்பிடாதிருப்பான்?. என்று இந்த வசனத்தை குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

ஜாமக்காரன்: மேலே குறிப்பிட்ட வசனம் முழுநேர ஊழியர்களுக்கும், சபையை நடத்தும் முழுநேர மேய்ப்பர்களுக்கும் (பாஸ்டர்களுக்கும்) உரியது ஆகும்.

அதுவும் வேலையில்லாமல் சுவிசேஷத்தைமட்டும் அறிவிக்கிற ஊழியத்தை செய்பவர்களுக்கு (வசன ஆகாரத்தை சபையில் உள்ள விசுவாசிகளுக்கு கொடுக்கும் முழுநேர ஊழியம் செய்யும் பாஸ்டர்களுக்குசுவிசேஷத்தினாலேயே (சபை ஊழியத்தினாலேயே வாழ்க்கை நடத்தவேண்டும்) பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டுருக்கிறார். 1 கொரி 9:14.

வேத வசனம் ஊழியக்காரருக்கும் குறிப்பாக தொழிலோ, வேலையோ செய்தவர்களுக்கு அவர்களை ஜெபத்தில் தாங்குகிறவர்கள், அல்லது அவர்களுடைய சபை மக்கள்தான் அந்த ஊழியர்களுக்கு சாப்பாடு, உடை ஆகியவைகளை விளங்கிக்கொள்ளவும் அவர்கள் பிள்ளைகளின் படிப்பு செலவு ஆகிய எல்லாவற்றையும் விசுவாசிகள் தான் கொடுத்து உதவவேண்டும். அப்படி செய்வது சபை மக்களின் கடமையாகும். அதாவது அந்த சுவிசேஷ ஊழியர்களை அல்லது மிஷனரிகளை அவர்கள் குடும்பங்களை தனிப்பட்ட முறையில் யார் தாங்குகிறார்களோ அவர்கள் தொடர்ந்து அவர்களுக்கு உதவுவது அவர்களின் கடமையாகும். அதை பாஸ்டரோ, சுவிசேஷகரோ அந்த உதவியை அதிகாரம் செய்து அல்லது கட்டாயப்படுத்தி அவர்களிடம் செலவுக்கு பணம் கேட்க வேதம் அனுமதிக்கிறதில்லை. அப்படி கட்டாயப்படுத்தி கேட்கும்நிலை அந்த சபையின் பாஸ்டர் அல்லது சுவிசேஷகர்களுக்கு வருமானால் அந்த சபையிலுள்ள அங்கத்தினர்களை அந்த ஊழியர்களே சுவிசேஷம் அறிவித்து கஷ்டப்பட்டு சம்பாதித்த உண்மையான விசுவாசிகளாக (அங்கத்தினர்களாக) இருக்கமுடியாது. நீங்கள் அந்த சபையில் ஒரு வாடகை ஊழியக்காரனாகத்தான் அந்த சபையில் இருப்பதாக அர்த்தம்.

star2.gif12x12.gifஅவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, மனபூர்வத்தோடு கர்த்தருக்கு கொடுக்கவேண்டும். அப்படி கொடுப்பவர்கள் ஊழியர்களின் தேவைகளையும் அறிந்து அவர்களாகவே அந்த ஊழியருக்கு கொடுப்பவர்களாக இருப்பார்கள் என்பதே வேதம் நமக்கு போதிப்பதாகும்.

star2.gif12x12.gifஒரு சபையின் பாஸ்டர் அல்லது ஜெபக்குழுவில் உள்ள சில குடும்பங்களின் மூலமாக தாங்கப்படும்சுவிசேஷகன் அல்லது அவர் ஒரு மிஷனரியாக இருந்தால் அப்படிப்பட்ட ஊழியன் உண்மையுள்ளவனாக உண்மையாக ஜெபிப்பவனாக, ஆத்தும ஆதாயம் செய்ய இரவும்-பகலும் அலைகிறவனாக இருப்பான். இப்படிப்பட்ட உண்மையான ஊழியக்காரனை தாங்குகிறவர்கள், அந்த உண்மை ஊழியர்களுக்கு கணக்கு பார்க்காமல் அள்ளிகொடுக்கிறவர்களாக மாறுவார்கள். சபை ஆரம்பித்து அல்லது மிஷனரி ஊழியம்தொடங்கி பல வருடமாகியும் ஒரு ஆத்துமாவையும் கொண்டுவராத ஒரு புதிய ஆத்துமாவையும், சபையில் சேர்க்காத ஊழியராக இருந்து ஞாயிறு ஆராதனையைமட்டும் கடமைக்காக நடத்துபவராக இருக்கும் அந்த ஊழியனை இவர் ஒரு போலி என்று எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அந்த கிராமம் போனேன், துண்டுப்பிரதி விநியோகித்தேன் என்று மனதார பொய் சொல்லும் ஊழியர்களும் உண்டு. அப்படிப்பட்ட எந்த ஊழியனையும்அல்லது பாஸ்டரையும் சபை மக்கள் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். இவர்கள் கிறிஸ்தவ வீடுகளுக்குமட்டும் சென்று ஜெபித்து அங்கு காணிக்கை வாங்கிவிட்டு அந்த கிறிஸ்தவ வீடுகளிலேயே சாப்பிட்டுவிட்டு வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட ஊழியர்களை விசுவாசிகள் காணிக்கை கொடுத்து ஊக்கப்படுத்தாதீர்கள், அவர்களை கெடுக்காதீர்கள்.

இவர்களுக்கு எப்போதும் கிறிஸ்தவ பணக்கார குடும்பங்கள், உயர்பதவியில் உள்ள கிறிஸ்தவ அதிகாரிகளின் வீடுகளில் ஒரு கண் உண்டு. அவர்களை CSI, லூத்தரன் போன்ற சபைகளிலிருந்து எப்படியாவது அவர்களோடு பேசி அவர்களை களவாடி தங்கள் சபைகளுக்கு அவர்கள் வரும்படி செய்து விடுவார்கள். காரணம் CSI, லூத்தரன் சபை ஆயர்களில் முக்கால்வாசி ஊழியர்களுக்கு வீடுகள் சந்திப்பு இல்லை. ஆனால் பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்மார்களின் வாரம் 6 நாட்களும் புதுபுது கிறிஸ்தவ வீடுகளைமட்டும்தேடி கண்டுபிடித்து அவர்கள் வீடுகளுக்கு சென்று ஜெபித்து அவர்களை ஆசீர்வதித்து அவர்களுக்கு சில தீர்க்கதரிசனங்களையும் கூறி வீட்டில் பிசாசு இருக்கிறது, பில்லிசூனியம் இருக்கிறது, அவைகளுக்காக நான் தனியாக உபவாசிக்கிறேன், நீங்கள் உபவாசிக்கவேண்டாம். நான் உபவாசித்து உங்கள் வீட்டைவிட்டு பிசாசை விரட்டுகிறேன் என்பார்கள். அவ்வளவுதான். நாம் கஷ்டப்பட்டு உபவாசிக்காமல் இருக்க நமக்காக இந்த பாஸ்டரே உபவாசிக்கிறார் என்றால் இவர்தான் உண்மை ஊழியர் என்று அப்படியே நம்பிவிடும் ஏமாளிகளாக பல கிறிஸ்தவர்கள் மாறிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்கள் பாரம்பரிய சபையான CSI, லூத்தரன் சபைக்கு போவதையும் விடமாட்டார்கள்.

பிள்ளைகளின் கல்யாணம், கல்லறை, டீச்சர் வேலை, கல்லூரி அட்மிஷன் இதற்காக இப்படிப்பட்ட சபைகள் CSI, லூத்தரன் சபைகள் இவர்களுக்கு அவசியம். CSI, லூத்தரன் சபைகளில் இவர்கள் ஒரு ரூபாய் காணிக்கைமட்டும் போடுவார்கள் - ஆனால் பெந்தேகோஸ்தே சபைகளில் வல்லமை, அபிஷேகம், குதித்தல், கைத்தட்டல், வாத்திய கருவிகள், பாடல்கள் இவைகளால் பெரிதும் கவரப்பட்டு ஒரு வாரத்துக்கு ஒரு வாக்குத்தத்தம் கர்த்தர் தீர்க்கதரிசனமாக அந்த பாஸ்டர்மூலம் அறிவிப்பார் என்ற குருட்டு நம்பிக்கையினால் இவர்கள் தசமபாகம் என்ற பெயரில் எவ்வளவு கேட்டாலும், ஆபரண காணிக்கைபோடுங்கள் என்று ஏமாற்றினாலும், அப்படியே நகைகளை கழற்றி போட்டுவிடுவார்கள். செங்கலில் அபிஷேகம் என்று கூறி செங்கலை எவ்வளவுக்கு விற்றாலும் அதையும் விலைகொடுத்து வாங்கும்ஏமாளிகள் நிறைந்த சபைகளாகத்தான் இன்றைக்கு பெரும்பாலான பெந்தேகோஸ்தே சபைகள் காணப்படுகின்றன.

மதுரை பாஸ்டர்.ஜான் அவர்கள் மேலும் கூறுகிறார்: பாஸ்டர்களாகிய எங்களுக்கு குடும்பம் உண்டு, பிள்ளைகள் உண்டு, அவர்களின் படிப்பு செலவு உண்டு. இவைகளுக்கு எந்த பணத்திலிருந்து செலவு செய்வது என்று நல்ல ஒரு கேள்வி கேட்டார். இதுவும் உண்மைதான். அதனால்தான் 1 கொரி 9:7ம் வசனத்தை சுட்டிக்காட்டினார்.

நான் வெளியிட்ட தசமபாக நீதிமன்ற நாடகத்தில் பேசிய பாஸ்டரும் இதைத்தானே சுட்டிக்காட்டினார். அது நியாயமான தேவைகள்தான். அதைக்குறித்துதான் நானே தெளிவாக மேலே எழுதியிருக்கிறேன். ஊழியர்களின் குடும்ப தேவைகளை விசுவாசிகள்தான் சந்திக்கவேண்டும். இதை வேதமும் மறுக்கவில்லை, நானும் மறுக்கவில்லை. ஆனால் நான் எழுதிய விஷயத்தில் முக்கிய விஷயம் என்ன என்பதை இந்த பாஸ்டர்கள் மறைக்கிறதை கவனித்தீர்களா? பாஸ்டர்.ஜான் எழுதியதை வாதிக்கும்போது பாஸ்டருடைய தேவைகள் சந்திக்கப்படவேண்டும் என்பது நியாயம்தானே என்றுதான் நாம் எல்லாரும் கூறுவோம். ஆனால் அது தசமபாகம் என்ற பெயரில் கொடுக்கவேண்டும் என்று இவர்கள் கேட்பதும் போதிப்பதையும்தானே வேதவசனத்துக்கு விரோதமானது என்று அப்படி கூறினால் அது ஏமாற்று தனம் என்கிறேன். புதிய ஏற்பாட்டு சபை உபதேசத்தில் தசமபாக உபதேசம் இல்லையே? 1கொரி 16ம் அதிகாரத்தில் வரவுக்கு தக்கப்படி காணிக்கை வாரம்தோறும் கொண்டுவர கேட்கிறார். இது சபை பாஸ்டர் செலவுக்கல்ல, ஏழைகளின் உதவி நிதிக்கு நான் வருவதற்குமுன் சேர்த்து வைத்திருங்கள் என்கிறார் பவுல்.

அதனால் தசமபாகம் உபதேசம் புதிய ஏற்பாடு சபைக்கு இல்லை என்பதை இப்போது வேறு வழியில்லாமல் எல்லா பாஸ்டர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். அவர்களால் தசமபாகத்தைக்குறித்து இனி பேச வழியில்லை. அப்படி பேசினால் அவர் பொய் பேசுகிறார் என்று கூறலாம். இதுவரை பழைய ஏற்பாட்டையும், ஆபிரகாம், யாக்கோபு, மல்கியா, தாவீது என்று கூறி தசமபாகம் கொடுத்தே தீரவேண்டும் என்று கூறியும், பயமுறுத்தியும் சாபமிட்டும் ஜனங்களிடம் வசூலித்தது இனி செல்லாது என்பதுதான் இவர்கள் கோபம் என்மேல் திரும்பியுள்ளது என்றாலும் இப்போதும்கூட வேண்டுமென்றே தசமபாகம் பற்றி சகோ.மோகன் சி.லாசரஸ் மாதிரி சுபையில் பிரசங்கிக்கும் பாஸ்டர்கள் உண்டு. விசுவாசிகள் ஏமாறாதீர்கள்.

star2.gif12x12.gifஆனால் உண்மையான விசுவாசி சபையின் பராமரிப்பு தேவை, ஊழியனின் தேவை, ஊழியனின் குடும்ப செலவின் தேவை. இவைகளை மனதில்கொண்டு தசமபாகம் என்ற பெயரில் பணத்தை கணக்கு போட்டு கொடுக்காதபடி தேவைக்கு ஏற்ப காணிக்கை கொடுக்க முயலவேண்டும். சிலசமயம் அந்தத் தொகை தசமபாக காணிக்கையைவிட அதிகமாகவும் கொடுக்கவேண்டிய நிலை வரும். அப்படிப்பட்ட தேவையுள்ள சமயத்தில் ஒரு விசுவாசி தசமபாக கணக்கு பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது. அதற்கு அதிகமாகவே கொக்கலாம்.

தேவன் நமக்கு செய்த கிருபைகளையும், அவர் நம்மை பலமுறை மன்னித்ததையும், அவர் சிந்தியஇரத்தத்தையும், நம் படிப்புக்குமேல், நம் தகுதிக்குமேல் நாம் உயர்த்தப்படும்போது, ஆசீர்வதிக்கப்படும்போது அவைகளை நினைத்துப்பார்க்கும் ஒரு விசுவாசி காணிக்கை கொடுப்பதில்தசமபாக கணக்கு பார்க்கமாட்டான், தசமபாகத்துக்குமேல் அள்ளி கொடுப்பான். நன்றி உணர்வு ஒருவனுக்கு இருக்குமேயானால் தன் வீட்டின் தேவைகள் அதிகம் இருந்தாலும், திருச்சபையின் ஒரு முக்கிய தேவை என்று அறியும்போது, அவசர தேவை, மிஷனரிகளின் அவசிய தேவைகள் இவைகளை அறியநேரும்போது, மக்கதொனியா சபையினர் தங்கள் தரித்திரத்தில், கொடிய சோதனையின் நேரத்தில்,உபத்திரவ நேரத்தில், தங்கள் திராணிக்குதக்கதாகவும், திராணிக்கு மிஞ்சியும் அவர்களாகவே கொடுத்தார்கள் என்பதற்கு நான் சாட்சி என்று பவுல் அந்த ஏழை சபை மக்களை புகழ்ந்து பேசுவதைப்போல நாம் கொடுக்க ஆசைப்படுவோம். அதுவும் பவுல் கூறுகிறார் அவர்கள் என் பிரசங்கம் கேட்டபின் அவர்கள் அப்படி கொடுக்கவில்லை. பிரசங்கம் கேட்கும்முன்பே அவர்களாகவே கொடுத்தார்கள் என்று குறிப்பிடுவதை கவனியுங்கள். 2 கொரி 8:1-3.

இந்த ஏழை சபை ஜனங்கள் எப்படிப்பட்ட ஆவிக்குரியவர்கள் என்பதையும் பவுல் குறிப்பிடுகிறார். இந்த சபை ஜனங்கள் முதலாவது தங்களை கர்த்தருக்கு அர்பணித்தார்கள். இவர்கள் மனந்திரும்பி தங்களையே முழுவதுமாக கர்த்தருக்கு அர்பணித்தார்கள். அதன்பின்தான் தங்களுடையதை தசமபாகம் என்றகணக்கு பார்க்காமல் அள்ளி கொடுத்திருக்கிறார்கள். கையில் இருந்த இரண்டு காசு காணிக்கையாக போட்ட அந்த விதவையைப்போல தன் தேவையைகூட யோசித்து பார்க்காமல் நன்றிப்பெருக்கு மேலோங்கஉள்ளதை அப்படியே போட்டுவிடும் அந்த நன்றி உணர்ச்சி அதைத்தான் ஆண்டவர் புகழுகிறார். மக்களுக்குநன்றியைக்குறித்து போதனையிருந்தால் பாஸ்டர்கள் சபையில் தசமபாகம் என்ற வார்த்தையை உபயோகிக்கமாட்டார்கள்.

star2.gif12x12.gifஒருவனுக்கு நான் படித்தது என் சாமர்த்தியம் அல்ல, 
star2.gif12x12.gifநான் ஜீவிப்பது என் சம்பளத்தால் அல்ல,
star2.gif12x12.gifஎனக்கு கிடைத்த இந்த வேலை நான் படித்த டிகிரியால் அல்ல,
star2.gif12x12.gifஎனக்கு கிடைத்த இந்த கூலி என் சரீர பலத்தினால் கிடைத்ததல்ல,
star2.gif12x12.gifஇந்த சரீரம் என் ஆண்டவர் தந்தது, இது எல்லாம் என் தேவனின் கிருபை.
star2.gif12x12.gifஎல்லாம் என் கர்த்தர் எனக்கு போட்ட பிச்சை என்று எவன் உணருகிறானோ! அவனிடம் தசமபாகம்என்று வார்த்தையைகூறி பயமுறுத்த தேவையில்லை. சாபம்போட்டு பயமுறுத்ததேவையயில்லை.ஆபிரகாமை, தாவீதை, யாக்கோபை உதாரணம் காட்டி ஏமாற்ற வேண்டிய தேவையில்லை. நன்றியுள்ள அவன் தானாகவே யாரும் கட்டாயப்படுத்தாமலே, தேவையை அறிந்து ஆசையோடு காணிக்கை கொடுப்பான், யாத் 25:1. மனப்பூர்வமாய் கொடுக்கிறவனிடம் காணிக்கை வாங்குங்கள் என்று எழுதியுள்ளது. இது பழைய ஏற்பாட்டு வசனம்தான். இந்த கட்டளையை கொடுத்த அன்றைய கர்த்தர்தான் இன்றும் இருக்கிறார். இப்போது ஏன் மனபூர்வமாக, ஆசையாக காணிக்கை போடுவதில்லை. தசமபாகம்கொடுக்காவிட்டால் சாபம், இது ஆண்டவர் கட்டளை என்று ஏன் பொய் சொல்லி கேட்கிறார்கள். காரணம் காணிக்கை கேட்கிற அந்த பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களிடம் உண்மையில்லை. ஜனங்கள் அவர்களை நம்பவில்லை. அவர்கள் பேசும் அந்நியபாஷையில் உண்மையில்லை. அதனால் தங்கள் பாஸ்டர்களைக்குறித்து சபை ஜனங்ககளுக்கு சந்தேகம் உண்டு. ஆகவேதான் இவர்கள் தசமபாகம் என்று கூறி பிரசங்கிக்கும்போது அந்த பாஸ்டர் உண்மையில்லாதவர் என்று நன்றாக விளங்கும். மேலும் இப்போதுள்ள பெந்தேகோஸ்தே சபைகளில் காணிக்கை எவ்வளவு வருகிறது? தசமபாகம் எவ்வளவு வருகிறது? ஸ்தோத்திர காணிக்கை எவ்வளவு வருகிறது? என்பதை இதுவரை அந்தந்த சபை மக்கள் ஒருவருக்கும் தெரியாது. அந்த காணிக்கையிலிருந்து பாஸ்டர் எவ்வளவு எடுத்துக்கொள்கிறார். அதுவும் சபை மக்களுக்கு தெரியாது? தப்பிதவறி யாராவது கணக்கு கேட்டால் அவ்வளவுதான். மிரியாம் குஷ்டம்முதல் பலவித சாபங்கள் கூறி அந்த விசுவாசியை அல்லது கேள்வி கேட்ட உதவி பாஸ்டரை ஓரத்தில் தீண்டத்தகாதவன்போல் ஒதுக்கித் தள்ளிவிடுவார்கள்.

star2.gif12x12.gifஇவ்வளவு பணம் காணிக்கையாக போடுகிறோமே அவ்வளவு பணமும் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஒருவருக்கும் கேட்க தோன்றவில்லையே?. கேள்வி கேட்க தைரியம் இல்லையே! ஏன்?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

தசமபாக கொடுமை:

star2.gif12x12.gifபுதிய ஏற்பாட்டு சபைக்கு இல்லாத உபதேசமான தசமபாகம் என்ற பெயரை சொல்லி பல பெந்தேகோஸ்தே சபைகளில் நடக்கும் கொடுமையான விஷயங்களைப்பற்றி சபை பெயரை, பாஸ்டர் பெயரை அறிவித்து வெளிவந்த பகிரங்கமான விஷயம்:

 

வீட்டு லோனில் தசமபாகம்:

star2.gif12x12.gifஒரு ஏழை சகோதரி நகைகளை அடமானம் வைத்து வட்டிக்கு பணம் வாங்கி, பேங்க் மூலமாக கிடைத்த வீட்டு லோன் தொகையையும் சேர்த்து ஒரு வீடு கட்டினார். வாங்கிய லோன் தொகையிலும், அடமானம் வைத்த நகைமூலம் கிடைத்த பணத்திலும் தசமபாகம் சபைக்கு கொடுக்காவிட்டால் அந்த புதிய வீட்டை கர்த்தர் ஆசீர்வதிக்கமாட்டார், அந்த வீட்டுக்குள் பிசாசு புகுந்துவிடும் என்று அந்த சகோதரியின் சபையான பெந்தேகோஸ்தேசபை பாஸ்டர் அந்த பெண்ணை எச்சரித்திருக்கிறார். இப்படி யாராவது புறமதத்தினர் கடவுள் பெயரில் மக்களை பயமுறுத்தி பணம் பிடுங்குவார்களா? ஆனால் பெந்தேகோஸ்தே சபையில் இந்த ஏமாற்று நடக்கிறது.

star2.gif12x12.gifமகள் திருமணத்துக்கு கொடுத்த வரதட்சணையும், கொடுத்த நகைகளிலும் அதன் தொகைக்குஏற்ப தசமபாகத்தை முதலில் கொடுத்தால்தான் திருமணத்தை சபையில் நடத்தவிடுவேன். இப்படி கராராக தசமபாகத்தை கேட்டு வாங்கிய விவரம் எனக்கு வந்துள்ளது. வட்டிக்கடைக்காரன்கூட இப்படி கேட்டு வாங்கமாட்டான் என்று சபை மக்கள் கூறி வேதனைப்படுகிறார்கள். ஆனால் இந்த பாஸ்டர்களுக்கு இதைப்பற்றி ஒரு தயக்கமோ, தெய்வ பயமோ இல்லை!.

star2.gif12x12.gifஅரசாங்க உத்யோகஸ்தனிடம், டீச்சர்களிடம் பி.எப் - P.F (பிராவிடன்ட் ஃபண்ட்) தொகையிலும் தசமபாகம் கொடுத்தாக வேண்டும் என்று இந்த பாஸ்டர்கள் பகிரங்கமாக கேட்டதால் பல புகார்கள் பெந்தேகோஸ்தே சபை விசுவாசிகளிடமிருந்து வந்த வண்ணமிருக்கின்றன.

star2.gif12x12.gifநான் தசமபாகம் செய்தி ஜாமக்காரனில் எழுதினேன். புதிய ஏற்பாட்டு சபைக்கு தசமபாகம் இல்லைஎன்று ஜாமக்காரனில் வசன ஆதாரத்துடன் ஆணித்தரமாக நான் எழுதியதால் இன்று பல பெந்தேகோஸ்தே பாஸ்டர்மார்கள் எனக்கு கடிதம் எழுதும்போது ஜாமக்காரனாகிய நீங்கள் எங்கள் வயிற்றில் அடித்துவிட்டீர்கள் என்று புலம்புகிறார்கள். எங்கள் சாபம் உங்களை சும்மாவிடாது என்றும் ஒரு பாஸ்டர் எனக்கு முகவரியே இல்லாமல் கடிதம் எழுதி தன் ஆத்திரத்தை வெளியிட்டிருக்கிறார்.

star2.gif12x12.gifபாஸ்டர்களினாலும் அல்லது எங்களைப்போன்ற ஊழியர்கள் யாராக இருந்தாலும் கர்த்தரிடம் நாம் உண்மையாக இருந்தால், சபை மக்களிடமும் நம்மை ஜெபத்தில் தாங்கும் குடும்பங்களிடமும், விசுவாசிகளிடமும் உண்மையாக இருப்போம். அப்போது கர்த்தரும் நம்மிடம் உண்மையாக இருப்பார்.அப்படிப்பட்ட விசுவாசம் உங்களிடம் இருந்தால்போதும் நீங்கள் காணிக்கையே யாரிடமும் கேட்கவேண்டாம். கர்த்தரே விசுவாசிகளின் உள்ளத்தில் ஏவி ஊழியர்களை போஷிப்பார். இப்படிப்பட்ட விசுவாச வழியில் ஊழியர்கள் வாழாமல் இருப்பதால்தான் ரூ.1000 கொடுத்தால் 4000 கிடைக்கும் என்ற அண்டப்புளுகு பொய்களை பேசி விசுவாசிகளை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சமாக காணிக்கை கொடுக்கும் ஏழை வீடுகளுக்கு பாஸ்டர்கள் அடிக்கடிபோகாமல் ஒரு ஜெபத்துக்கு குறைந்தது 100 ரூபாய் கொடுக்கும் குடும்பங்களை பாஸ்டர் அடிக்கடி சந்திக்கிறார். இப்படி ஜெபத்துக்கு காணிக்கை வாங்கும் ஊழியர்களை நம்பாதீர்கள்.

star2.gif12x12.gifநம் தேவையை முதலில் கர்த்தரிடம் சொல்ல பழகுங்கள். உங்கள் தேவைகளை சபை மக்களிடம் கேட்கவேண்டாம், வாசகர்களிடம் கேட்கவேண்டாம், உங்களை தாங்குகிறவர்களிடம் கேட்கவேண்டாம்,கர்த்தரே நமக்கு தருவார். நீங்கள் வேண்டிக்கொள்வதற்கு முன்பே உங்களுக்கு இன்னது தேவை என்று கர்த்தர் அறிந்திருக்கிறார் என்று நம் வேதம் உறுதிகூறவில்லையா? பின் ஏன் விசுவாசிகளிடம் கை ஏந்த வேண்டும்? எலியாவை காக்காவை கொண்டு போஷித்த கர்த்தர் நம்மையும் காக்காய் போன்ற மணி-ஆர்டரில் விமானத்தின் வழியாக போஷிப்பார் என்று ஒவ்வொருநாளும் போஸ்ட்மேனையும், மணியார்டரையும் எதிர்ப்பார்க்க வேண்டாம்?. என் சொந்த அனுபவத்திலிருந்து இதை அறிவிக்கிறேன். ஆகவே தசமபாகம்கேட்கும் எந்த ஊழியரும், பாஸ்டரும் புதிய ஏற்பாட்டு சபை உபதேசத்தை நம்புகிறவர்களல்ல, அவர்கள் பொய்யர்கள் ஜெபித்து, ஆசீர்வாத வசனம்கூறி மக்களை வாழ்த்தும் பொய் ஊழியர்கள். இவர்கள்மக்களின் குற்றங்களை சுட்டிக்காட்டமாட்டார்கள். ஆனால் ஆசீர்வாதம் கூறி ஜெபிப்பார்கள். அப்போதுதான் காணிக்கை அதிகம் கிடைக்கும் என்பது இவர்களின் எதிர்ப்பார்ப்பு. இவர்களை ஆவிக்குரிய பிச்சைக்காரர்கள் என்றும் கூறலாம். இப்படி தசமபாகம் சுரண்டும் ஆவிக்குரிய பிச்சைக்காரர்களை விசுவாசிகள் யாரும் ஊக்கப்படுத்தாதிருங்கள்.

star2.gif12x12.gifநம் வேதம் செய்யதக்கவர்களுக்கு செய்யுங்கள் என்று நீதிமொழிகள் மூலமாய் பேசுகிறது.

star2.gif12x12.gifபாஸ்டர்.ஜான் (மதுரை) அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் தன் சொந்த அனுபவத்தை உதாரணமாக எழுதினார். "நான் குடியிருக்கும் வீட்டின் முதலாளி பெரிய கோடீஸ்வரர். அவருக்கு நிறைய வீடுகள் உண்டு. அவர் கோடீஸ்வரராக இருப்பதால் நான் குடியிருக்கும் வீட்டின் வாடகையை உங்களுக்கு கொடுக்கமுடியாது என்று நான் அவரிடம் சொல்லமுடியுமா?" என்று எழுதி தன் கடிதத்தை முடித்திருக்கிறார். அவர் கூறிய இந்த உதாரணம் சபைக்கோ - தசமபாகத்துக்கோ - கர்த்தருக்கு காணிக்கை கொடுப்பதற்கோ பொருந்தாதது ஆகும். பாஸ்டரானாலும் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை கொடுத்துதான் ஆகவேண்டும். காரணம் வீட்டு முதலாளி பாஸ்டரின் சொந்தக்காரரோ, சித்தப்பாவோ, பெரியப்பாவோ அல்லவே? அப்படி இருந்தாலும் சொந்தக்காரர்கள்கூட தன் உறவினரையே தன் வீட்டில் குடியிருக்க வைத்தாலும் வாடகையை மாதம் தவறாமல் வாங்கிவிடுவார்கள். நம் ஆண்டவர் வானத்துக்கும் பூமிக்கும் முதலாளி, அவர் பிள்ளைகள் நாம். அவர் நம்மிடம் வாடகை வாங்கிதான் அவர் வாழவேண்டும் என்ற அவசியம் அவருக்கில்லை. அவர்தான் நமக்கு கொடுப்பவர்.

நாம் வாழ இந்த உடல் அவர் கொடுத்தது, இந்த உயிர் அவர் கொடுத்தது. இந்த வாழ்க்கை அவர் பிச்சையாக நமக்கு கொடுத்தது. நாம் சம்பாதிக்கும் எல்லா சம்பாத்தியத்திலும் அவர் கிருபை வேண்டும். நாம் ஆரோக்கியமாக நலமாக வாழ அவர் கிருபை நமக்கு வேண்டும். எத்தனை நிலம் இருந்து அதை உழுது எறுபோட்டு தண்ணீர்விட்டாலும் விளைய செய்பவர் ஆண்டவர்தான். ஒரு விசுவாசி இதை உணர்ந்தால் நன்றி பெருக்கால் உனக்கு ஆண்டவருக்கு அல்லது ஊழியத்துக்கு அல்லது சபைக்கு அவன் அள்ளி கொடுப்பான்.

ஆகவே இதை ஒரு கிறிஸ்தவ விசுவாசி உணர்ந்தால் அவர்களுக்கு கிடைக்கும் எல்லா வரவிலும்லாபத்திலும், விளைச்சலிலும், சம்பாத்தியத்திலும் கர்த்தருக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை உணருவார்கள். அப்போது அவர்கள் தசமபாகம் அல்ல நன்றி பெருக்கினால் என்னுடையது அனைத்தும் அவருக்கே என்று நன்றியுடன் சமர்பிப்பார்கள்.

மதுரை பாஸ்டர்.ஜான் அவர்கள் கூறிய உதாரணத்தின்படி வீட்டு முதலாளிக்கு வாடகை கொடுப்பது போல சிந்திக்கவே கூடாது. நம் வருமானம் எதுவானாலும் அது ஆண்டவர் நமக்கு கொடுத்தது ஆகும். அதைஅவருக்கே திரும்ப கொடுக்கிறோம்.

இதை நன்றி அடிப்படையில் கொடுக்கிறோமா அல்லது வாடகைபோல் கடமைக்காக கொடுக்கிறோமா! என்பதைத்தான் ஆண்டவர் கவனிக்கிறார். "கொடுக்கும் அளவை அவர் கவனிப்பதில்லை, நம் உள்ளத்தின் ஆழத்தில் உள்ள நன்றியை நாம்கொடுக்கும் காணிக்கையின்மூலம் அறிய ஆசைப்படுகிறார்".

 

சிறை தண்டனை சட்டம் 420:

மேலே நீங்கள் வாசித்தப்படி பல வகையில் பயமுறுத்தியும், இரட்டிப்பு ஆசை காட்டியும், விளம்பரயுக்திமூலம் பணம் பெறுபவர்களுக்கு சட்டம் 420 அல்லது ஊழியர்கள் ஜனங்களை ஏமாற்றிய தொகைக்கு ஏற்ப 10 லட்ச அபராதம், 2 வருட சிறை தண்டனை கொடுக்கலாம். இதை 3.6.2013 அன்று மத்திய அரசாங்கத்தில் புதிய சட்டமாக இயற்றியிருக்கிறார்கள்.. இந்த சட்டம் கிறிஸ்த பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்கள்மேல் அல்லது தசமபாகம் என்ற பெயரில் சபை மக்களை பல விதங்களில் ஏமாற்றி பணம் பறிக்கும் அந்த பாஸ்டர்கள்மேல் இந்த சட்டம் பாயுமா?.

ஒருவேளை இந்திய சட்டத்தின்படி சிறுபான்மை இனம் (மதம்) என்ற பெயரில் இந்த தண்டனையிலிருந்து இவர்கள் தப்பிக்கலாம், ஆனால் கர்த்தரின் தீர்ப்பிலிருந்து இவர்கள் யாரும் தப்பிக்கமுடியாது!.

star2.gif12x12.gifஇதற்குமுன்பே இளம்பங்காளர் திட்டம் என்பதும் ஒரு ஏமாற்று திட்டம் என்று ஒருவர் பொதுநல வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்தார். அவர் அந்த வழக்கை தொடர்ந்து நடத்த பணம் இல்லாதபடியால் அந்த வழக்கு பாதியிலேயே நிற்கிறதாக கேள்விப்பட்டேன்.

star2.gif12x12.gifதசமபாக விளக்கத்தை இதோடு நிறுத்திக்கொள்கிறேன். இனி தசமபாகம் கொடுங்கள் என்ற பழைய ஏற்பாடு உபதேச வார்த்தையை உபயோகித்து சபை மக்களிடம் தசமபாகம் யாரும் கேட்கவேண்டாம்.

star2.gif12x12.gifகடந்தமுறை தசமபாக நீதிமன்ற செய்தியை ஜாமக்காரனில் வெளியிட்டதை பலர் ஆங்கிலத்தில்வெளியிடவேண்டும் என்று கேட்டதால் அதை அப்படியே அவர்களுக்காக ஆங்கிலத்தில் வெளியிடுகிறேன். எல்லா நாட்டிலும் உள்ள பெந்தேகோஸ்தே சபைகளிலும் தசமபாகம் கேட்டு பிரசங்கங்கள் செய்பவர்கள் உண்டு. அவர்களுக்கு ஆங்கிலத்தில் வெளியிடும் இதை விநியோகம் செய்யுங்கள். அதன் பின்னாவது தங்கள் ஊழியத்தை உண்மையாக செய்கிறார்களா என்று பார்ப்போம்.

star2.gif12x12.gifசுவிசேஷம் அறிவித்து புதிய ஆத்துமாக்களை கர்த்தரிடம் கொண்டுவராத எந்த ஊழியர்களுக்கும், பாஸ்டர்களுக்கும், மிஷனரிகளுக்கும் காணிக்கை கொடுத்து கெடுக்காதீர்கள். அவர்களை அவர்களை ஊக்கப்படுத்தாதீர்கள்.

star2.gif12x12.gifநீங்கள் இவர்களுக்கு கொடுக்கும் பணம் உங்களுடையது அல்ல, கர்த்தர் உங்களுக்கு கொடுத்த ஆசீர்வாதத்தின் பங்கு ஆகும். அதை தவறான விதத்தில், தவறானவர்களுக்கு அல்லது தவறானசபைகளுக்கு கொடுத்தால் தேவன் உங்களை சும்மாவிடமாட்டார். நம் தேவன் காணிக்கைகளை கவனிக்கிறவர். எதிலிருந்து கொடுக்கிறாய், என்ன நோக்கத்தில் கொடுக்கிறாய், எதை எதிர்ப்பார்த்துகொடுக்கிறாய், சரியான ஊழியத்திற்கு தான் கொடுக்கிறாயா? என்பதையெல்லாம் கர்த்தர் கவனிக்கிறார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆவிக்குரிய வியாபாரிகள்
ஜெபகோபுரங்கள் வாடகைக்கு விடப்படுகிறது.
av01.jpgav02.jpg

இயேசு அழைக்கிறார் ஜெபகோபுரங்களுக்கு இப்போது ஆட்கள் வருவது குறைந்தது. இதைக்குறித்து விசாரித்தபோது நாலுமாவடி திறப்பின் வாசலுக்கு பஸ்கள், வேன்கள் மூலம் சில ஏஜன்ட்கள் சபை மக்களை அழைத்துக்கொண்டு போகிறார்கள். ஒவ்வொரு CSI ஆலயங்களுக்குமுன் ஆட்களை வரவழைத்து அவர்களை ஏற்றிக்கொண்டு நாலுமாவடிக்கு கொண்டுபோய் விடுகிறார்களாம். கழக கட்சி கூட்டங்களுக்கு ஆள்சேர்க்க அவர்களுக்கு சாப்பாடு பொட்டலங்களை கொடுப்பதைப்போல கொடுக்கிறார்களாம். (தமிழக அரசியல் கழகங்களில் கொடுப்பது பிரியாணி பொட்டலம். இங்கு என்ன பொட்டலமோ தெரியவில்லை). இப்படி இலவச பயணம், இலவச சாப்பாடு நாலுமாவடியில் கொடுப்பதால் ஜனங்கள் இயேசு அழைக்கிறார்ஜெப கோபுரங்களுக்கு வருவதில்லை என்கிறார்கள். ஆனால் ஜெபகோபுர கட்டிடங்களுக்கு வாடகை செலுத்த பணம் வேண்டும். அந்த கட்டிடங்களை அல்லது அந்த ஜெபஅரங்கு(Auditorium)களை பராமரிக்க பணம் வேண்டுமே? என்ன செய்ய? மேலே நீங்கள் படத்தில் பார்த்த ஜெபகோபுரங்களைப்போல, ஜெபிக்கும் இடம் கல்யாண மண்டபமாக மாறிவிட்டது. இப்போது கல்யாணம் நடத்த, நிச்சியதார்த்தம் நடத்த,பிறந்தநாள் வைபவங்கள் நடத்த, மற்ற சபைகளின் கூட்டங்களை நடத்த ஜெபகோபுரம் வாடகைக்குவிடப்படுகிறது. ஜெபகோபுர கட்டிடத்தின் முன்புறம் வைக்கப்பட்டுள்ள விளம்பரபோர்டைப் பாருங்கள். நல்ல பிஸனஸ்! அல்லவா?.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இஸ்ரேல் ஜெபகோபுர லாட்ஜ் மற்றும் ஓட்டல்:
av03.jpgav04.jpg

இந்த மாதம் இயேசு அழைக்கிறார் குடும்பம் சுமார் 1000 ஆட்களை இஸ்ரவேல் தேசத்துக்கு அழைத்து செல்லுகிறார்கள். அங்கு கட்டப்பட்டிருக்கும் இயேசு அழைக்கிறார் ஜெபகோபுரத்தை சில மாதத்துக்குமுன் குறிப்பிட்ட சிலரைமட்டும் அழைத்து திறப்புவிழாவை சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். இந்த கட்டிடத்தை படத்தில் பாருங்கள். ஜெபகோபுரம் என்று அழைக்கப்படும் இந்த பல மாடி கட்டிடத்தில் ஜெபிக்க ஒரு சிறு அறையும், அலுவலத்துக்கு ஒரு அறையும், அலுவலர் தங்க ஒரு அறையும்மட்டும் இருந்தால் போதுமானது. ஆனால் நெடுக உயர்ந்து நிற்கும் மீதியுள்ள பலமாடி கட்டிடங்களும் அறைகளும் எதற்கு? கேள்விப்பட்டதை அறிவிக்கிறேன். அந்த கட்டிடத்தில் வேறு சில வியாபார கம்பெனி அலுவலகங்கள் இயங்க அவர்களிடம் பெரிய தொகையாக அட்வான்ஸ் பெறப்பட்டதாக சில செய்திகள் கூறுகிறது.

இப்போது இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் புனித யாத்திரை என்பது அனைத்து கிறிஸ்தவ சபைக்குள்ளும் அதிகமாகிவிட்டது. கிறிஸ்தவ சபை மக்களுக்கு இஸ்ரேல் புனித யாத்திரை என்ற ஆசை தொற்று வியாதிபோல் பரவி பலர் உள்ளத்தில் இஸ்ரேல் போவது மிகப்பெரிய ஏக்கமாக மாறிவிட்டது. கிறிஸ்தவ சபைமக்கள் தாங்கள் மரிப்பதற்குள் எப்படியாவது ஒருமுறை இயேசுகிறிஸ்து நடந்த இடம், சிலுவையில் அறையப்பட்ட இடம், ஜெபித்த இடம், கல்லறை ஆகிய இடங்களுக்கு சென்று டிவி நிகழ்ச்சியில் பால்தினகரன் குடும்பம் முகம்குப்புற விழுந்து முத்தம் செய்ததைப்போல் தாங்களும் முத்தம் செய்யவேண்டும் அதன்பிறகு நான் செத்துவிட்டால் அதுபோதும் என்று புற மதத்தினரைப்போல் ஏங்குகிறார்கள். இப்படி புறமதத்தினர் காசி யாத்திரை செல்வதைப்போல் ஏங்குகிற கிறிஸ்தவர்கள் இப்போது ஏராளமாகி விட்டனர்.

சகோ.DGS.தினகரன் அவர்கள் தன் மகனை திட்டமிட்டே வியாபார துறையில் டாக்டரேட், MBA., PhD., படிக்க வைத்த அவரின் ஆசையை இஸ்ரேலில் இவர்கள் வாங்கிய இடத்தில் ஜெபகோபுரம் கட்டியதாலும்,காருண்யா கல்லூரி கட்டப்பட்டதின் மூலமும் பூர்த்தியாக்கிவிட்டது. தம்பி.பால்தினகரன் அவர்கள் தகப்பனின் ஆசையை நிறைவேற்றி, ஏமார்ந்த மக்கள் கொடுத்த காணிக்கைகளைக்கொண்டு பல பில்லியன்அதாவது மில்லியன் அல்ல, பில்லியன் கணக்கில் பணத்தை செலவழித்து அந்த உயர்ந்த பலமாடி கட்டிடங்களை எருசலேமில் வாங்கிவிட்டதாகவும், அந்த கட்டிட திறப்புவிழாவும் நடைபெற்றதாகவும் கேள்விப்பட்டேன். எருசலேமில் உள்ள இந்த ஜெபகோபுரத்துக்கு ஒரு இஸ்ரேல் நாட்டு ஒரு யூதனாவதுஜெபிக்க வருவானா? வேறு யார் அங்கு ஜெபிக்க வருவார்கள்!. ஏற்கனவே இந்தியாவில் ஜெபகோபுரத்துக்கு போவோர் எண்ணிக்கை இறங்கு முகமாகிவிட்டது. அதனால்தான் ஜெபகோபுரம் வாடகைக்கு விடப்படும் என்ற போர்டையே ஆதாரமாக வெளியிட்டிருக்கிறேன். ஆக இந்தியாவிலேயே நிலைமை இப்படியிருக்கஇஸ்ரேலில் யார் ஜெபிக்க கூடுவார்கள்?. தமிழ்நாட்டு கிறிஸ்தவர்கள் விமானம்மூலம் இஸ்ரேலுக்கு சென்று தினசரி ஜெபிக்கமுடியுமா? ஆகவேதான் இவர்களின் வியாபார மூளையில் தோன்றியதுதான் இஸ்ரேல் ஜெபகோபுர ஓட்டல் அல்லது லாட்ஜ் என்பதாகும்.

இது உலக கவர்ச்சியான நல்ல வியாபாரமாகும். இந்தியாவிலிருந்து கிறிஸ்தவர்கள் அல்லாதஏராளமானவர்களும் தினசரி வடஇந்தியா முதல் கன்னியாகுமரி வரை வாழும் கிறிஸ்தவர்களும், மற்றபுறமத்தினரும் ஏராளமாக இஸ்ரேல் புனித பயணம் மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு அங்கு ரொட்டி, அறைவேக்காடு கோழி, மாடு இறைச்சி, பச்சை இலைகள் கொண்ட சேன்ட்விட்ச் அடங்கிய ரொட்டி துண்டுகள் ஆகியவைகள்தான் உணவாக கிடைக்கும். ஆனால் அவைகளை நம் இந்தியர்கள் சாப்பிட விருப்பம் இல்லை. ஆகவே இந்திய ஆகாரம், தமிழ்நாட்டு இட்லி, வடஇந்திய ரொட்டி அல்லது நான் என்று அழைக்கப்படும் ரொட்டி போன்ற அனைத்து இந்தியவகை ஆகாரம், ஜெபகோபுர ஓட்டலில் மட்டுமே கிடைக்கும் என்றால் இந்தியாவிலிருந்து இஸ்ரேல் வரும் அனைத்து டூரிஸ்ட்களையும், இந்த விளம்பரம் வெகுவாக கவருமே! இந்தியா நாட்டு சாப்பாடுக்கு ஒரே ஓட்டல் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுர ஓட்டலாகும் என்பதுதான் இதன் சிறப்பு. அங்கு தங்கும் அறைகளில் கிடைக்கும் வாடகையே தினசரி பல லட்சங்கள் லாபம் தரும் அதுவே நல்ல தொழிலுமாகும் என்கிறார்கள். இந்த ஜெபகோபுரத்தின் திறப்புவிழா சமயத்தில் அந்த ஜெபகோபுரத்தில் ஜெபித்தது சுமார் 20 நிமிடம் மட்டுமே என்றனர். இனிவரும் நாட்களில் ஜெபகோபுரத்தில் எத்தனைபேர் உட்கார்ந்து ஜெபிக்க போகிறார்களோ!. இஸ்ரேலை சுற்றி பார்க்க டூர் நாட்கள் மொத்தம் 7 அல்லது 10 நாட்கள் மட்டுமே. இஸ்ரேலை சுற்றிப்பார்க்க வருகிறவர்களுக்கு முக்கிய இடங்கள் முழுவதையும் சுற்றிப்பார்க்கவே நேரம் போதாது. அப்படி இஸ்ரேலை சுற்றி பார்த்து கொல்கதாமலை ஏறிவந்தாலே போதும், உடனே அறைக்கு சென்று அப்பாடா என்று களைப்புடன் படுக்க தோன்றுமா? ஜெபகோபுர AC-அறைக்கு சென்று ஜெபிக்க தோன்றுமா?. இதில் கவனிக்கவேண்டியது: யூதர்களுக்காக விசுவாசிகள் ஜெபிக்க எருசலேமில்தான் ஜெபகோபுர கட்டிடம் கட்டி ஜெபிக்கவேண்டுமா? டெல்லி எம்பிகளுக்காக மந்திரிமார்களுக்காக ஜெபிக்க பார்லிமெண்ட் கட்டிடம் அருகே பல கோடிகளுக்கு கட்டிடம் வாங்கி பார்லிமெண்ட்டை பார்த்தப்படி ஜெபித்தால்தான் ஜெபத்தை கர்த்தர் கேட்பாரா? அவரவர்கள் இருக்கும் இடத்தில் ஜெபித்தால் அந்த ஜெபம் கேட்கப்படாதா? யோசியுங்கள்.

பிரச்சனையுள்ள இடத்தில் ஜெபித்தால்தான் கர்த்தர் கேட்பார் என்றால் தினசரி குண்டு மழையில் மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கும் சிரியா, பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானில் அங்கு சென்று ஜெபகோபுரம் அமைக்கலாமே?. இவர்கள் ஏன் அந்த இடத்தில் ஜெபகோபுரம் கட்டவில்லை?

இயேசு அழைக்கிறார், காருண்யா கல்லூரி யாவும் டிரஸ்ட் அறங்காவலர் சட்டத்தில் பதிவு செய்யப்பட்டவை. டிரஸ்ட்டில் இயேசு அழைக்கிறார் குடும்பத்தினர்மட்டும் மெம்பர்களாக இருக்கிறார்கள். பேருக்கு வெளியிலிருந்து ஒன்று, இரண்டு பேர் நீட்டிய இடத்தில் கையெழுத்து போடுபவர்களை பார்த்து சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஆகவே குடும்ப பரம்பரையாக சொத்தாக இயேசு அழைக்கிறார் - பால்தினகரன்குடும்பம் மட்டும் ஏகபோக உரிமையோடு கோடிக்கணக்கான லாபத்தை அனுபவிக்கலாம். சொசைட்டியாகபதிவு செய்யப்பட்டிருக்குமேயானால் பால்தினகரன் குடும்பத்தினர் அதன் லாபத்தை ஏகபோக உரிமையாக அனுபவிக்க இயலாது. ஆக உலககெங்கும் பல பில்லியன் சொத்துக்கள் பால்தினகரன் பிள்ளைகளுக்கு தினகரன் சந்ததிக்கு இப்போதே ஆயத்தமாகிவிட்டது என்று சட்டம் படித்தவர்கள் பேசிக்கொள்கிறார்கள். இப்போதெல்லாம் குடும்ப ஊழியம்கூட குடும்ப சொத்துக்களாக மாறிவிட்டது.

எருசலேம் ஜெபகோபுர லாட்ஜில் அங்கு தங்க வருபவர்களுக்கொல்லாம் இயேசுவின் கல்லறையைகாட்டவும், சிலுவையில் அறைப்பட்ட இடத்தை காட்டவும் இவர்களே நல்ல கைடுகளையும் ஏற்பாடு செய்வார்கள்.

கைகாட்டிமரம் பலருக்கு வழிகளை காட்டும், போர்டில் எழுதி வைத்த பரலோக வழியைக்கூட அந்த கைகாட்டி மரம் காட்டும்.

ஆனால்

கைகாட்டி மரம் மட்டும். மேலே குறிப்பிட்ட அந்த இடங்கள்லேயே நிற்கும். அந்த கைகாட்டி மரம் மட்டும் எங்கும் போகாது. நட்ட இடத்திலேயே அது நிற்கும். இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்று ஜெபிப்போம்.

(தொடர்ந்து இஸ்ரேல் புனித பயணம் பற்றிய கட்டுரையையும் வாசியுங்கள்).

 

இஸ்ரேல் புனித பயணம்

இந்தியாவில் தமிழ்நாடு அரசு கிறிஸ்தவர்களுக்கு புனித பயண சலுகை அறிவித்த பிறகு கிறிஸ்தவர்கள் இஸ்ரேல் செல்வது அதிகரித்திருக்கிறது. ஆட்சிக்கு வருகிறவர்கள் ஓட்டுக்காக மக்களை கவரும் வண்ணம் பல சலுகைகள் வழங்குவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் கிறிஸ்தவ தலைவர்கள் இதை புனிதப் பயணம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளலாமா? அதை தெளிவுப்படுத்த வேண்டிய கடமை கிறிஸ்தவ தலைவர்களுக்கு இருக்கிறதல்லவா?.

இந்திய கலாச்சார பின்னணியில் புனிதப் பயணம் என்றாலே அது மதசடங்கு என்பதாக கருதப்படும். மற்ற மதங்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால் கிறிஸ்தவ மார்க்கம் மட்டுமே கிருபை மார்க்கமாகும். உலகத்தில் உள்ள அனைத்து மதமும் கிரியை மார்க்கமாகும். நோன்பு இருப்பது, மொட்டை அடிப்பது, காவடி எடுப்பது, குறிப்பிட்ட புனித ஸ்தலங்களுக்குப் பயணம்செல்வது இவையெல்லாம் தாங்கள் முக்தியடைவதற்கு மனிதன் உலகத்தில் சேர்த்து வைக்கும்புண்ணியங்களில் ஒன்றுதான் புண்ணியஸ்தலம் சென்று வருவது என்று கருதப்படுகிறது.

ஆனால் கிறிஸ்தவம் அப்படி போதிக்கவில்லை நாம் நம்முடைய புண்ணியத்தினாலேமுக்தியடையாமல் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரித்து நமக்கு புண்ணியத்தை சேர்த்து வைத்திருக்கிறார். அதை விசுவாசிப்பதினால் அல்லது நம்புவதினால் மட்டுமே நமக்கு முக்தி(இரட்சிப்பு) கிடைக்கிறது. (எபே 2:8, 2 தீமோ 1:9) பாவிகளாகிய மனிதர்கள் செய்யும் எந்த புண்ணியமும் பரிசுத்த கடவுளுக்கு அருவருப்பானது என்று வேதம் போகிக்கிறது. (ஏசா 64:6).

இயேசுகிறிஸ்து பிறந்த, வளர்ந்த, மரித்த, உயிர்த்த இடங்களை சென்று பார்ப்பதில் தவறில்லை.ஏனென்றால் இயேசுகிறிஸ்து கற்பனை கதையில் வருகின்ற ஒரு கதாநாயகன் அல்ல. அவர் வரலாற்றில் மனிதராக வந்த தேவகுமாரன் என்பது விளங்கும். ஆனால் உண்மை கிறிஸ்தவர்களாகிய நாம்காணாதிருந்தும் விசுவாசிப்பவர்கள் பாக்கியவான்கள் (யோவான் 20:29,2 கொரி 5:6) என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மேலும் எங்கே மதம் உள்ளே நுழைகிறதோ அங்கே வியாபாரமும் உள்ளே நுழைந்துவிடும். இஸ்ரேல் போவதினால் புண்ணியம் கிடைக்கும். அங்கிருந்து கொண்டுவரப்படும் யோர்தான் நதியின் தண்ணீர், ஒலிவ எண்ணெய், திராட்சை ரசம் போன்றவை புனிதமானது என்று யாராவது சொன்னால் அது முட்டாள்தனமானது. அதுமட்டுமல்ல, அது விக்கிரகமாக மாறும். ஆகவே உண்மை விசுவாசிகள் விழிப்பாயிருப்போம். மற்றவர்களையும் எச்சரிப்போம்.

ஜாமக்காரன்: இதுவரை இஸ்ரேல் புனித பயணம் என்ற தலைப்பில் வாசித்தது ஒரு பத்திரிக்கையிலிருந்து எடுத்தாளப்பட்டதாகும். மேலே கூறப்பட்டதுபோல கிறிஸ்தவர்களும் இன்று புனித பயணம் மேற்கொள்வதும்மொட்டையடிப்பதும் இவை யாவும் புறமதத்தினரின் செயல்கள் என்று உணருவதில்லை.

star2.gif12x12.gif(திருநெல்வேலி) பாளையங்கோட்டையில் CSI சபை குடும்பத்தில் பிறந்த ஒரு குழந்தைக்கு ஒருவருடம் முடியப்போகிறது. தலை முடியெடுக்கவேண்டும் அதற்காக நாங்கள் சொந்தக்காரர்களையும் உடன் அழைத்துக்கொண்டு குடும்பமாக வேளாங்கண்ணி சென்று குழந்தைக்கு தலை மொட்டையடித்துவிட்டு வரும் வழியில் சகோ.தினகரன் உண்டாக்கிய காருண்யா வளாகத்திலுள்ளபெதஸ்தா குளமும் கண்டுவிட்டு அந்த குளத்தில் காணிக்கைகளையும் போட்டுவிட்டு திரும்பபோகிறோம் என்று எழுதி புறப்படும் தேதியை குறிப்பிட்டு எங்கள் பிரயாணத்தை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிக்கும்படி எனக்கு கடிதம் எழுதினார்கள். உடனே நான் பதில் எழுதினேன். நீங்கள் பல வருடமாக ஜாமக்காரன் வாசிக்கும் என் வாசக குடும்பமாகும். அதனால் உங்கள் பிரயாணத்தில் ஆபத்து நேரிடாமல் சுகமாக வந்துசேர மட்டும் ஜெபிப்பேன். ஆனால் குழந்தைக்கு செய்யும் மொட்டைக்காக ஜெபிக்கமாட்டேன். இத்தனை வருடங்களாக ஜாமக்காரனை வாசிக்கும் குடும்பத்தினராக இருந்து இந்த முட்டாள்தனமானமொட்டை அடிக்கும் செய்கையை குறித்து தெளிவில்லாமல் போனதென்ன? மொட்டையடிக்க லோக்கலில்முடிவெட்டுபவர்கள் இல்லையா? உங்களுக்கும் இந்துமத மக்களுக்கும், கத்தோலிக்க சபை மக்களுக்கும், திருப்பதி-பழனி போகும் மக்களுக்கும் ஒருவித்தியாசமும் இல்லாமல் போனதே! உங்கள் செயலுக்காக வெட்கப்படுகிறேன் என்று எழுதினேன்.

இப்படி நான் பதில் எழுதிய மறு மாதத்திலிருந்து அவர்களே வழமையாக எனக்கு அனுப்பும் காணிக்கையை நிறுத்திவிட்டனர். பல வருடங்களாக மாதாமாதம் காணிக்கை அனுப்பிக்கொண்டிருந்த அந்த குடும்பம் நான் கொடுத்த ஆவிக்குரிய ஆலோசனையால் கோபப்பட்டு காணிக்கையை நிறுத்திவிட்டனர். இப்படி நான் பல விஷயங்களில், குறிப்பாக திருமண விஷயங்களில் நேர்ச்சை என்று கூறி ஜெபிக்க கேட்டுக்கொண்ட குடும்பங்களுக்கு, திருமணத்திற்கு மாப்பிள்ளை-பெண் தேடும் விஷயத்திலும் டவுரி (வரதட்சணை) கொடுக்கும் விஷயத்தில் நான் வசன அடிப்படையில் அவர்களுக்கு ஆலோசனை எழுதியதாலும் அது அவர்கள் எண்ணத்துக்கும், தீர்மானத்துக்கு விரோதமானதாக இருந்ததால் உடனே அவர்கள் என்மேல் வெறுப்பு கொண்டு எனக்கு அவர்கள் தண்டனை கொடுப்பதாக எண்ணிக்கொண்டு தொடர்ந்து அனுப்பும் காணிக்கையை நிறுத்தி விடுவார்கள். நான் என் வாசகர் பலருக்கு அவர்களுக்கு பிடிக்காத நான் எழுதிய நல்ல ஆலோசனையால் நான் இழந்த வாசக குடும்பங்கள் ஏராளம். இவர்களின் அறியாமை நினைத்து பரிதாபப்படுகிறேன். மேலே நான் எழுதிய மொட்டை கேசில் மொட்டையடிக்கும் நிகழ்ச்சிக்கு ஆதரவாக நான் எழுதியிருந்தால் வேளாங்கண்ணியிலிருந்து இவர்கள் வீடு திரும்பியவுடன் பெரிய தொகையை காணிக்கையாக எனக்கு அனுப்பியிருப்பார்கள்.

 

என்றைக்கு இப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் திருந்தப்போகிறார்களோ?.

star2.gif12x12.gifசுமார் 32 வருடத்துக்கு முன்னாள் எகிப்து நாட்டுக்கு நான் 3 நாள் கன்வென்ஷனுக்காக சென்றபோது அந்த நாட்டில் கூட்ட ஏற்பாடுகளை செய்த சகோ.சாதிக் (இஸ்லாமிலிருந்து இயேசுவை ஏற்றுக்கொண்டு மிஷனரி ஊழியம் செய்பவர்) என்பவர் அவர் கூறினார். நான் இந்தியா திரும்பும் வழியில் 3 நாட்கள் அருகில் உள்ள இஸ்ரேல் தேசம் சென்று சுற்றி பார்த்துவிட்டு அங்கிருந்தே நீங்கள் இந்தியா திரும்பலாமே என்று எனக்கு ஆலோசனை கூறி, அவரே விமான டிக்கட் ஏற்பாடுகளும் அதற்கேற்றபடி எனக்காக செய்திருந்தார். இஸ்ரேல் நாட்டை சுற்றி காண்பிக்க அவருடைய நண்பரான ஒரு யூதன் ஒருவரையும் என்கூட அனுப்பி அருமையான ஏற்பாட்டை எனக்காக செய்தார். இஸ்ரவேலில் எல்லா இடங்களுக்கும் என் கூடவே உடன்வந்த அந்த யூதன் இயேசுவின் கல்லறைக்குள் மட்டும் வரவில்லை. நான் மட்டும் உள்ளே சென்றேன். டூரிஸ்டுகளாக வந்த பல்வேறு நாட்டு கத்தோலிக்க பிஷப்மார்கள், கன்னியாஸ்திரீகள் என்று பலர் என்னோடு கல்லறைக்குள் நுழைந்தனர். நூற்றுக்கணக்கான மெழுகுதிரிகள் அங்கு எரிந்துகொண்டிருந்தன. அங்கு இயேசுகிறிஸ்துவின் உடல் வைக்கப்பட்டதாக கூறப்படுகிற திட்டு ஒன்று உண்டு. எல்லாரும் சாஷ்டாங்கமாய் கீழே விழுந்து அதை தொட்டு வணங்கினார்கள். சிலர் அந்த திட்டை முத்தம் செய்தார்கள். சிலர் கண்ணீர்விட்டு அழுதார்கள். நான் மட்டும் நின்றவாறு பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கு நின்ற பலர் என்னை சந்தேக கண்களோடு பார்த்தனர். சில நிமிடங்களில் எல்லாரும் வெளியேறினோம், அப்போது கன்னியாஸ்திரீகளுக்குள் தலைவியான மதர்சுப்பீரியருடன் நான்கு பேர் என் அருகே வந்து என்னை பார்த்து "நீங்கள் கிறிஸ்தவரா?" என்றனர். "ஆம். ஏன் கேட்கிறீர்கள்?" என்றேன். "பிஷப் முதல் நாங்கள் அனைவரும் வேற்று மதத்தினர் சிலரும் இயேசுவின் கல்லறையில் விழுந்து வணங்கும்போது நீங்கள் விழவுமில்லை, கைகூப்பி வணங்கவுமில்லை. காரணம் அறியலாமா?" என்றனர். "நீங்கள் எல்லாரும் முகங்குப்புற விழுந்து வணங்கின அந்த இயேசுகிறிஸ்து எனக்குள் வாழ்கிறார் (யோ 14:24). அப்படியிருக்க வெறும் கல்லறையை நான் ஏன் வணங்கவேண்டும்?. இயேசுகிறிஸ்து செத்துப்போனவர் அல்ல அவர் உயிரோடு இருக்கிறார்"என்றேன். "ஆனாலும் மரியாதைக்காவது நீங்கள் வணங்கியிருக்கலாமே" என்றார்கள். நான் சொன்னேன். "அப்படி அந்த வெறும் மண்திட்டை நான் வணங்கியிருந்தால் அது நிச்சயம் விக்கிரக ஆராதனையாகஅமைந்திருக்கும். நம் தேவன் அதை விரும்பமாட்டார், மட்டுமல்ல அவர் இந்த செய்கைக்காக மிகவும் கோபப்படுவார்" என்று கூறினேன். அதற்குள் பலர் என்னை குழ்ந்துகொண்டனர். ஒருவரிடம் மட்டும் கையில் ஆங்கில வேத புத்தகம் இருந்தது. அதை வாங்கி கிறிஸ்து நம் இருதயத்துள் எப்படி பிரவேசிக்கிறார் எப்போது பிரவேசிக்கிறார், அதை எப்படி நாம் உணரமுடியும் என்பதை விளக்கினேன். அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு நீங்கள் எந்த சபையை சார்ந்தவர் என்று கேட்டார்கள். நான் ஒரு CSI சபையை சேர்ந்தவன் என்று கூறினால் அவர்களுக்கு விளங்காது என்பதால் என் சபை எந்த பெயரில் இருந்தாலும் நான் இந்த வேத வசனத்தின்படி வாழ்கிறவன் என்று அவர்களுக்கு பதில் அளித்தேன். அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டனர். எனக்கும் மனம் திருப்தியாக இருந்தது. இஸ்ரேல் நாட்டில் கிறிஸ்து இம்மானுவேலாய் நமக்குள் வாசம்பண்ணவிரும்புகிறவர் என்பதை கூற எனக்கு சந்தர்ப்பம் கிடைத்ததே என்று பூரித்தேன். ஆண்டவரை துதித்தேன்.

சமீபத்தில் இயேசு அழைக்கிறார் டிவி நிகழ்ச்சி இஸ்ரேல் ஜெபகோபுர விளம்பரத்தில் பால்தினகரனும் அவர் பிள்ளைகளும் ஒவ்வொருவராக பெத்லகேமில் இயேசு பிறந்ததாக கூறப்படும் இடத்தில் விழுந்து வணங்கி அந்த தரையை முத்தம் செய்தததைக் கண்டேன். அப்படியே அவர்களுடன் வந்த எல்லாரும்விழுந்து முத்தம் செய்து பால்தினகரனின் பிள்ளைகளின் செயலை பின்பற்றினார்கள். ஆகவேதான் அப்படி வணங்குவது விக்கிரக வணக்கத்துக்கு ஒப்பாகும். அது தவறு என்பதை வாசகர்கள் அறிய இதை எழுதினேன். இப்படிப்பட்ட புனித யாத்திரை விக்கிரக வணக்கத்துக்கு நேராக மக்களை வழிநடத்தும். அன்று கல்லறைக்கு வந்திருந்த மகதலேனா மரியாளோடும், மற்ற சீஷர்களோடும், தூதர்கள் கூறினதை ஞாபகப்படுத்துகிறேன். இயேசுவையா தேடுகிறீர்கள், அவர் இங்கில்லை என்றார்களே!, இஸ்ரவேல் செல்ல ஆசைப்படும் எல்லாருக்கும் கூறுகிறேன். இயேசு இல்லாத இடத்தில் உங்களுக்கு என்ன வேலை?. கிறிஸ்து வாழ்ந்த சரித்திர பிரசித்தப்பெற்ற இடங்களை பணம் இருப்பவர் சுற்றிப்பார்த்து வருவதில் பிழை ஏதுமில்லை. ஆனால் அந்த இடத்தை விக்கிரகமாக்கி வணங்கி வராதீர்கள்.

star2.gif12x12.gifகோயமுத்தூர் IBT மொழிபெயர்ப்பு ஸ்தாபன தலைவர் சமீபத்தில் மறைந்த புரொபஸர் டாக்டர்.பன்னீர்செல்வம் அவர்கள் தன் பிரசங்கத்தில் கூறியதாவது: ஒரு நபர் அவரிடம் கூறினாராம்: "நான் இஸ்ரவேல் தேசத்துக்கு போகும் பாக்கியம் கிடைத்தது. அங்கு சீனாய் மலைக்கு சென்று அங்கு ஆண்டவரை தொழுதுகொண்டேன்" என்றாராம். அப்போது சகோ.பன்னீர்செல்வம் அவர்கள் கேட்டாராம், "சீனாய் மலைக்கு போன உங்களுக்கு மோசேக்கு கர்த்தரால் கொடுக்கப்பட்ட 10 கட்டளைகளைப்பற்றி தெரியுமா?" கொஞ்சநேரம் யோசித்து "ஒன்று இரண்டு மட்டும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. மற்றது மறந்துப்போனேன்" என்றாராம். "மோசே மூலமாக கர்த்தர் கொடுத்த கட்டளைகளைப்பற்றியே அறியாமல், அதற்கு கீழ்ப்படியாமல் இஸ்ரவேல் தேசத்துக்கும், எருசலேமுக்கும், சீனாய் மலைக்கும் போய் என்ன பிரயோஜனம். நீங்கள் பரலோகம் போகமுடியாதே!" என்றாராம்.

இப்படி பலர் இஸ்ரவேல் தேசத்தில் எருசலேம் சென்று அங்கேயே நான் மரித்தால் நான் பாக்கியம் செய்தவனாவேன் என்கிறார்கள். இரட்சிக்கப்பட்ட வேறு விசுவாசிகள் பலர் இஸ்ரவேல் பிரயாணத்தை மனதில் வைத்து அங்கு போகும்போது யோர்தான் நதியில் நான் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும் என்பதற்காகவே பல வருடங்களாக ஞானஸ்நானம் எடுக்காமல் இருக்கிறேன் என்று பெருமையோடு கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஞானஸ்நானத்தை எங்கு எடுத்தாலும் பரலோகம் போகமுடியாதே!, பரலோகம் செல்ல மனந்திரும்புதல்தான் ஒரே ஒரு வழி. (யோ 3:3) என்று இயேசு கூறினார்.

இப்போதும் இந்தியாவில் திருச்சியில் ஒரு பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர் தன் சபையில் கொடுக்கும் திருவிருந்தில் ஒரு துளி யோர்தான் நதியிலிருந்து கொண்டுவந்த தண்ணீரை கலக்கிறேன் என்று அறிவித்ததால் அந்த திருவிருந்து கைக்கொள்வதற்காகவே அந்த குறிப்பிட்ட சபைக்கு சென்ற பல முட்டாள் கிறிஸ்தவ விசுவாசிகள் இன்னும் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் சரளமாக அந்நியபாஷைபேசுகிறவர்கள் என்பது குறிபிடத்தக்கது. இயேசுகிறிஸ்து வாழ்ந்த சரித்திர பிரசித்தி பெற்ற இடம், அவர் சிலுவை சுமந்த சரித்திர பாதை சிலுவையில் அறையப்பட்ட கொல்கதாமலை இவைகளை பார்ப்பது நமக்குள் வாழும் இயேசுவைப்பற்றிய விசுவாசத்தை உறுதிப்படுத்துவதாக இருக்கவேண்டுமே. தவிர எருசலேம் ஆலய மதில் அருகேயும் கொல்கதா மலைக்கும் சென்று ஜெபித்தால் கர்த்தர் விசேஷமான முறையில் நம்மை கர்த்தர் ஆசீர்வதிப்பார் என்ற குருட்டு பக்தி, உங்களுக்குள் வராமல் இருக்க பாருங்கள்.எத்தியோப்பியாவிலிருந்து எருசலேமில் தொழுதுக்கொள்ள வந்த மந்திரியை பிலிப் என்ற ஊழியக்காரன் மூலமாக ஆண்டவர் பேசி ஆண்டவரை எங்கும் தொழுதுக்கொள்ளலாம் என்ற சத்தியத்தை அறியவைத்து இனி தொழுதுக்கொள்ள எருசலேம் வரவேண்டாம் என்று திருப்பி அனுப்பினாரே?. விபச்சார பாவத்தில் வாழ்ந்த சமாரிய ஸ்தீரிக்கு இயேசுகிறிஸ்து கூறிய ஆலோசனை எங்கும் கர்த்தரை தொழுதுக்கொள்ளலாம் என்பதாகும். ஆகவே இஸ்ரவேல் தேசம் சென்றுவர உங்களுக்கு பணவசதி - ஆரோக்கியம் ஆகியவை இருக்குமானால் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு உல்லாச பயணம் செல்வதுபோல சரித்திர பிரசித்திப்பெற்ற அந்த எருசலேம் கல்வாரிமலை, யோர்தான் நதி ஆகியவைகளை பார்த்து வரலாம், பிழையில்லை, ஆனால் (இஸ்ரவேல்) எருசலேம் சென்று வந்தால் பெரும் ஆசீர்வாதம் வரும். அது ஒரு புனிதபூமி என்று நினைத்து நீங்கள் அங்கு சென்றால், காசிப்போனால், கங்கைப்போனால் புண்ணியம் கிடைக்கும், பாவம் போகும் என்பதை போன்ற அவர்களின் தவறான எதிர்ப்பார்ப்புபோல ஒரு எண்ணம் உங்கள் மனதிலும் அப்படிப்பட்ட ஒரு சபலம் உண்டானாலும் போதும். அது விக்கிரகமாககருதப்பட்டு தேவகோபம் நிச்சயம் உங்கள்மேல் வரும். ஒருவேளை இஸ்ரவேல் தேசம் சென்று அங்கு எருசலேம் அருகிலோ இயேசு சிலுவையில் அறையப்பட்ட கொல்கதாமலை சென்று பார்த்து அங்கேயே செத்துப்போனால் அல்லது எருசலேமில் தற்கொலை செய்துகொண்டாலோ அல்லது இருதய வியாதியாலோ நீங்கள் அந்த நாட்டில் மரித்துப்போனால் அதை நல்ல மரணம் என்று நினைத்துவிடாதீர்கள். நீங்கள் எங்கு மரித்தாலும் மனந்திரும்புதலின் அனுபவத்தோடு மரித்தால் மட்டுமே பரலோகம் போகமுடியும் என்பதை மறக்கவேண்டாம். ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், அவன் தேவனுடைய ராஜ்யத்தை காணமாட்டான். யோ 3:3.

டூரிஸ்ட் கம்பெனி வியாபாரம்: 10 டிக்கட் வாங்கினால் ஒரு டிக்கட் இலவசம். இப்படி சில ஏர் லைன்ஸ்ஸில் சலுகைகள் தருவதால் ஏராளமான ஊழியர்கள் இப்போது இஸ்ரவேல் டூர் விளம்பரம் செய்து தாங்களே ஒவ்வொரு முறையும் இஸ்ரவேல் வருபவர்களுடன் கூடவருவதுபோல் கவர்ச்சி விளம்பரம் செய்தததை அறிந்தேன். சகோ.சாம்ஜெபதுரை, சகோ.மோகன் சி.லாசரஸ், சகோ.பால்தினகரன், சகோ.ஜான் சாலமோன் இன்னும் பலர் டூரிஸ்ட் கம்பெனி தொடங்கியிருப்பதாக அறிந்தேன். இவர்கள் ஜனங்களுக்கு நன்மை செய்வதாக நினைத்து டூரிஸ்ட் கம்பெனி முதலாளிகள் என்ற கெட்ட பெயரை சம்பாதித்துகொண்டார்கள்.

குறிப்பு: முடிவாக நான் வாசகர்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் உங்களுக்கு பணம் அளவுக்குமேல்இருந்தால் இஸ்ரவேல் தேசத்துக்கு மட்டுமல்ல, பேதுரு ஊழியம் செய்த இத்தாலி, ரோம் போன்ற நாடுகளுக்கு டூரிஸ்டாக போய்வருவது என்பது உங்கள் ஆவிக்குரிய ஆழம் எப்படிப்பட்டது என்பதை காண்பிக்கும்.

ஆனால் ஒரு வேண்டுகோள்: நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் இஸ்ரவேல் தேச நாடுகளில் இயேசுகிறிஸ்துவை தேடாதீர்கள். அவர் வாழ்ந்த, நடந்த இடங்களை வணங்கி அதை புண்ணிய ஸ்தலமாக்கிவிடாதீர்கள். அங்கு விழுந்து வணங்கி முத்தம் செய்து கர்த்தர் வெறுக்கும் விக்கிரக வணக்க கிறிஸ்தவர்கள் என்ற தேவ கோபத்துக்கு ஆளாகாதீர்கள். அங்கு யோர்தான் நதியில் எடுக்கும்ஞானஸ்நானம் உங்களை பரிசுத்தமாக்காது. நீங்கள் பரலோகம் செல்ல அந்த ஞானஸ்நானம் உதவாது.

இஸ்ரவேல் போவதற்கென்று நேர்ச்சையோ, பணசேமிப்போ செய்யாதிருங்கள். அந்த பணத்தை இயேசுகிறிஸ்துவை ஒருமுறைகூட கேள்விப்படாத மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும் மிஷனரிபணிகளுக்கு கொடுத்து உதவுங்கள். அதன்மூலம் பரலோகத்தில் உங்கள் பொக்கிஷத்தை சேர்க்கவும், சேமிக்கவும் பிரயோஜனப்படும். ஜெபித்து செயல்படுங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

07_01_2014_002_010



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சர்ச் பொருட்கள் சூறை: 2 பாதிரியார்கள் காயம்

http://www.dinamalar.com/news_detail.asp?id=919632&

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவெற்றியூரில் ஏழைகளின் அன்னை சர்ச் பாதிரியார்களை,

10 பேர் கொண்ட கும்பல் தாக்கியது. திருவாடானை அருகே திருவெற்றியூரில் ஏழைகளின் அன்னை சர்ச்

பாதிரியார்கள் பிரான்சிஸ், 59, ஆரோக்கியசாமி, 37. ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஓடைக்கால் கிராமத்தை

சேர்ந்த மெய்க்கேல்ராசுக்கு, குரு பட்டம் வழங்காததது தொடர்பாக பாதிரியார்களுக்கும், திருவெற்றியூர்

கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினருக்கும், பல மாதங்களாக முன்விரோதம் இருந்து வருகிறது. 
சில மாதங்களுக்கு முன், திருப்பலி நடத்தக்கூடாது என ஒரு பிரிவினர், எதிர்ப்பு தெரிவித்தால் இந்த சர்ச்

மூடப்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாக நேற்றிரவு 8 மணிக்கு, 10 பேர் கொண்ட கும்பல் அங்குள்ள

அலுலக கண்ணாடி, சேர்கள்,பள்ளி வேனை அடித்து நொறுக்கினர். பின்னர் பாதிரியார்கள் தாக்கினர்.

பாதிரியார்கள் புகாரின்படி, அதே கிராமத்தை சேர்ந்த பாலு உட்பட 10 பேரை, தொண்டி போலீசார் தேடி வருகின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Bishop tells Christians to vote wisely in polls 

TIMES NEWS NETWORK 

Trichy: While votebank politics is generally frowned upon,the Catholic Association of Trichy Diocese,with bishop Dr Antony Devotta as its patron,has embarked upon creating a minority vote bank which they described as a fight for their collective rights.
The association met at St Josephs college on Sunday and passed resolutions,one of which stressed the need to create a votebank for Christians.Other demands included converting dalit christians for the purpose of reservations.
The first ever socio-religious revival meeting pressed for the implementation of the recommendations of the National Commission for Religious and Linguistic Minorities.The Ranganath Misra Commission had recommended that a 15% share be earmarked for minorities with a break-up of 10% for Muslims (as they form 73% of the minority population) and 5% for other minorities in all government schemes.
The meeting demanded that Christian dalits should be accorded the status of dalits under the constitution for sake of availing the benefits of reservations.The meeting passed 10 resolutions including one against death penalty,and asked Christians to vote wisely for candidates with no religious or caste leanings.
Interestingly,Muslims had also organized a first-of-itskind conference for welfare of minorities.The organizers had invited Sehba Farooqui of the All India Democratic Womens Association,the womens wing of the CPI(M),to Trichy to plead for 10% reservation for Muslims.In an impassioned speech in Hindi,Farooqui said that a mere meeting will not bring in the desired effect,but it must be a sustained fight for a social upliftment of minorities,including Muslims,rather than the change of government or seeking sops from political masters.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

164848546_1 165024593 165718437_1 maip11_6 maip11_9 04_06_2014_004_015 20140604aK013100004 maip12_9 maip12_11 maip13_9 15345109_1 20140603a_008101017 153250765 02_06_2014_014_008 

 03_06_2014_014_011 02_06_2014_014_009 02_06_2014_014_013 02_06_2014_014_016 20140601a_011100002 153118343 maip12_7 maip12_12 20140530aL013100006  20140617aH009100003maip6_11 maip9_6 maip9_12 12_06_2014_001_006 12_06_2014_016_019 12_06_2014_016_023 12_06_2014_016_021 13_06_2014_004_003 13_06_2014_014_00813_06_2014_011_018 16_06_2014_014_013 14_06_2014_009_024 15_06_2014_112_022 16_06_2014_013_003  13_06_2014_014_013 20140612a_013100004 20140615aL013100008 20140616a_011100003 152535343155110428_1maip7_3maip7_5 maip7_12 (1) maip8_6 (1) maip8_7 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

20140709a_015100006 16490250 20140709a_003100003 09_07_2014_018_029 20140709aL014100005 CHN_2014-07-09_maip10_10 CHN_2014-07-09_maip11_7 CHN_2014-07-09_maip11_9 maip9_2 maip9_8 20140708a_011100004 20140708a_012101016 20140708aE006100009 HYD_2014-07-06_maip8_13 HYD_2014-07-06_maip8_14 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

10_07_2014_006_011 CHN_2014-07-10_maip7_10 CHN_2014-07-10_maip11_6 CHN_2014-07-10_maip11_10 CHN_2014-07-10_maip11_17 CHN_2014-07-10_maip11_20 CHN_2014-07-10_maip11_22 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

11_07_2014_020_013 17357906 20140711a_011100005 20140711aM016100001 20140711aM016100007 173527625 CHN_2014-07-11_maip13_2 CHN_2014-07-11_maip13_3 CHN_2014-07-11_maip13_7 CHN_2014-07-11_maip13_10 CHN_2014-07-11_maip13_12 CHN_2014-07-11_maip13_18 CHN_2014-07-11_maip13_19 CHN_2014-07-11_maip13_20 CHN_2014-07-11_maip13_21 maip14_8 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ‘Dead’ baby comes alive at her own funeral

3 hours ago, clipko
A 3-year-old girl, who was pronounced dead woke up during her funeral at a church in Philippines. Video footage uploaded on social networks went viral and shows the parents of the girl removing her from the wooden coffin. The toddler was taken to a hospital and then allowed to return home after a thorough check-up.
https://in.screen.yahoo.com/dead-baby-comes-alive-her-041000674.html



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 maip7_17 maip9_14 maip9_16 maip6_12maip11_920140715aL013100006maip10_14maip9_5



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Aug 25 2014 : The Times of India (Chennai)
 
Lack of transparency denies activists access to govt homes
Chennai:
 
 
 
 
The tiled walls and floors had been scrubbed clean and shabby travel bags, stuffed with clothes, stacked on shelves.Clothes lines run across the dormitories. There's not much cheer here, not even a soiled stuffed teddy to bring a smile to the lips. But, high up on the wall, where the tiles end, there is a spot of brightness, a poignant picture of a happy home, surrounded by trees with stick figure sketches of a family , holding hands, coloured deep red, green and blue with crayons.

The government home for girls in need of care and protection at Kellys, Kilpauk, in Chennai is a depressing sprawl. Structures on the vast premises are crumbling and the unpainted walls reveal neglect.

The four dormitories in a separate two-storey block are fairly clean, but step into the toilets and they are a shocking sight. Submerged in water, filth floating on the surface, the toilets on the ground floor and first floor are cesspools of disease. “The girls defecate in the open,“ admitted warden D Ragini, who has been working here for the last six years. She said she had been complaining to officials to have them cleaned.

Dirt stains showed clearly on 10-year-old Sugunamma's (name changed) beige blouse and long maroon skirt, her uniform in the school.Bending to scratch the sores on her feet, she said, “I have only one uniform.“ Warden Ragini shouted her down: `No, no, two pairs'.

Located at the far end is a huge, dirty kitchen, strewn with rusty utensils and cooking gadgets. Close to the kitchen building is an appalling pool of sewage, from a broken pipe. An inspection team would undoubtedly recommend the closure of this home.

There is also the question of safety of the girls. This correspondent walked right into the home as there were no security personnel at the main gate to screen visitors. There can be no keener revelation of a society's soul than the way in which it treats its children, said Nelson Mandela. If children are the yardstick, then Tamil Nadu has a lot of soul-searching to do. In June, when the rape of two minor girls in a private childcare home in Pollachi by a man fleeing the police made headlines, the government woke up to the Dickensian state of such institutions. Several private childcare homes were shut, but the 30 state-run homes were ignored. In a series beginning today, TOI analyses facilities in these homes, the treatment of inmates and the state's failure to protect its children Department of social defence director C T Manimekalai, who took charge of the department in May, said, “We will set things right as soon as possible and get back to you.” After a man being chased by police entered a private children’s home in Pollachi and raped two minor girls at knifepoint, the government in a kneejerk reaction ordered inspection and raids of homes across the state. It passed laws to tighten security and improve facilities in private homes but it failed to check its own institutions.

As teams of child welfare committees fan out across the state, raiding private child care homes, inspecting conditions and ordering their closure, homes in the government’s backyard violate almost every rule laid down by the Juvenile Justice Act, 2010. “It is strange that this home [in Kellys] has never been inspected, that too when the child welfare committee is functioning on its premises,” said Kancheepuram Child Welfare Committee member I Zaheeruddin Mohamed. Lack of transparency and strict norms deny activists or media access to government homes and ensure they remain in a state of despair. “It’s not just child care homes run by NGOs, but government children’s homes too lack infrastructure, qualified manpower, medical care, counselling and rehabilitation measures. While the JJ Act mandates inspections every three months, they are never carried out,” said child rights activist A Narayanan.

A few years ago, some talented girls from the Kellys home were taken to the US consulate where they brightened the outer walls with sketches. An officer said the girls, awestruck by vehicles and buildings, had confided that they had never stepped out of the home for years until then.

25_08_2014_004_059_007.jpg

25_08_2014_001_018_010.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

CHN_2014-09-17_maip12_1517_09_2014_001_005CHN_2014-09-15_maip11_2CHN_2014-09-16_maip12_8 CHN_2014-09-17_maip12_10 CHN_2014-09-16_maip13_3 20140914aK012100006 20140915aH013100005 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

09_10_2014_004_01320141009e_015101005 09_10_2014_014_0091914586419159821



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 Dec 05 2014 : The Times of India (Chennai)

 
Court: Drinking while pregnant not a crime
London
. REUTERS
 
 
 
Britain's Court of Appeal on Thursday rejected claims that a child born with severe brain damage because her mother drank excessively , while pregnant, was a victim of crime, a ruling which has important consequences for expectant women.

Lawyers acting for the girl, now aged 7 and known only as CP , argued that she should be entitled to compensation from the Criminal Injuries Compensation Authority as her mother, who had an alcohol addiction, had inflicted “grievous bodily harm“ by poisoning her. The girl, now in the care of a local authority which brought the claim, was born with Foetal Alcohol Spectrum Disorder that can cause severe learning difficulties and growth problems. The mother had been drinking eight cans of strong lager and half a bottle of vodka a day.

Three Court of Appeal judges accepted that CP was poisoned and had suffered harm, but ruled that under English law a foetus was not considered a person, and so, the mother could not have committed a crime. Campaigners said a contrary decision could have led to pregnant women being liable for criminal offences for a growing list of activities which could risk their babies' health.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 CHN_2014-12-04_maip11_6



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 CHN_2014-12-04_maip11_6 11403028_10207166407184757_8798788219143336675_n.jpg?oh=944eaa0a7fcca7bfeca2079524e16e03&oe=56280B1810986629_10207166407024753_3621477464495788988_n.jpg?oh=c29bc6f97db2ff8508e7e414fe0a6cea&oe=55F1EAEC 11403111_1665022220376719_4272438433247563399_n.jpg?oh=f300089594acb1c2a1e9c57166dcc1cb&oe=55ED80F3



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 51916594_1.jpg20150623a_007101014.jpg 20150623a_012101008.jpg 55627300.jpg CHN_2015-06-23_maip12_24.jpg chruch%2Bxt.jpg conversion-land-grab-kolai-14_12_2012_004_039.jpg images%2B%25281%2529.jpg images%2B%25283%2529.jpg images%2B%25285%2529.jpg images%2B%252811%2529.jpg images%2B%252812%2529.jpg RSS%2BMaoist%2B-%2Bxt.jpg Tamil%2BChristian%2BTown%2Bnames.jpg thodappam.gif Yuutham%2Bthamiz%2Banpazakan.jpgCHN_2015-06-23_maip12_2.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

24_06_2015_001_006.jpg 24_06_2015_016_017.jpg 23_06_2015_014_010.jpg 5226468_1.jpg 10349223_10202988169183756_8317717709257131844_n.jpg 10301507_1449602038691326_3694773775255339568_n.jpg 10858586_10203017611319791_1123503588812439370_n.jpg 11039139_10203017621720051_5924742388516012231_n.jpg 11054790_10203017603039584_3960361805814452019_n.jpg 11074098_1633219663558865_479921693421383641_n.jpg 11141350_719614681480692_8696845604784346329_n.jpg 11219680_10203017608279715_4454958699801184999_n.jpg 11219680_10203017608279715_4454958699801184999_n.jpg11219680_10203017608279715_4454958699801184999_n.jpg 11214202_928013433929929_2774826466213261798_n.jpg 11227923_10203017612679825_8603824239996538313_n.jpg 11401192_1001502679862369_871466565567340643_n.jpg 52451887.jpg BB.jpg BB%2B2.jpg CHN_2015-06-24_maip4_9.jpg CHN_2015-06-24_maip7_12.jpg CHN_2015-06-24_maip8_18.jpg CHN_2015-06-24_maip9_8.jpg CHN_2015-06-24_maip12_14.jpg CHN_2015-06-24_maip12_19.jpg conversion-land-grab-kolai-14_12_2012_004_039.jpg csi%2Bdefault.jpg page1_08.jpg page3_04.jpg RSS%2BMaoist%2B-%2Bxt.jpg Sofia.jpg Tamil%2BChristian%2BTown%2Bnames.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

DEVASAHAYAM EXPOSED YET ANOTHER TIME!

 
Real propagation of the gospel by our disgraceful church leaders. The stage has come when the public has started taking action, but we Christians are protecting these misfits by our silence, inefficient handling and at times extending support too.
Real shame on Christians !!!


அறிவர் ஞானவரம் - அறிவர் தேவசகாயம் அவர்களைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
-------------------------------------------------------
மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் பி.எச்.டி படித்த மணிப்பூரைச் சேர்ந்த பழங்குடியின மாணவியை கல்லூரி முதல்வர் அறிவர்.ஞானவரம் பாலியல் தொந்தரவு செய்ததாகவும், அதற்கு தான் உடன்படாததால் ஆய்வை முடிக்க இயலாத சூழலுக்குத் தள்ளப்பட்டதாகவும், அந்தமாணவிக்கு வழங்கப்பட்ட 6 லட்சத்து 50 ஆயிரத்தை யு.ஜி.சி -க்கு திருப்பி அனுப்பியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகார் கல்லூரியின்ஆசிரியர்களாலும், செராம்பூர் பல்கலைக்கழக  நிர்வாகிகளாலும் உறுதி செய்யப்பட்டு மதுரை எஸ். எஸ். காலனி காவல்நிலைய முதல் தகவல்அறிக்கை எண்: 425/2013, US 354 (4) IPC -யின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளியான கல்லூரியின் முதல்வர் அறிவர். ஞானவரம் இதுவரை கைது செய்யப்படாததைக் கண்டித்தும், அவரின் தலித் - பழங்குடி விரோதப் போக்கின் எதேச்சதிகாரத்துக்கு முழுக்க ஆதரவாகச் செயல்படும்,தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் ஆட்சிமன்றக்குழு தலைவரும், சென்னை பேராயருமான‌ அறிவர். தேவசகாயம் அவர்களைக் கண்டித்தும்,தமிழக அரசு உடனே தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழக தலித் இயக்கங்கள் நிகழ்த்தும் கண்டன‌ ஆர்ப்பாட்டம்.

நாள்: 14 நவமபர் 2013  காலை 10 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு.

தலித் பெயரைச் சொல்லி, தலித்துகளையே பகடைக்காய்களாக்கி, சுயநல சந்தர்ப்பவாத அரசியல் பிழைப்பு நடத்தி தலித் மற்றும் பழங்குடியினர்விரோதப்போக்கைக் கடைப்பிடிக்கும் அறிவர் ஞானவரம் - அறிவர் தேவசகாயம் அவர்களைக் கண்டித்து நடைபெறும் இந்தக் கண்டனஆர்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்க தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

ஒருங்கிணைப்பு
-------------------------
தலித் விடுதலை இயக்கம் - DLM - தமிழ்நாடு
தொடர்புக்கு - 9047838080,  9443815252


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 DICHPALLI MEDICAL COLLEGE SCANDAL

 
Bishop Devasahayam, as the chairman of MDTA then gave a letter authorising bishop Suganthar to use the Dichpalli vast stretch of land as he wished absolutely against the advice of the commission instituted by the Synod. Suganthar decided to start a medical college with the sole aim of collecting capitation fees to the tune of say 50 lakhs per student admission. It is said that he bribed the MCI - Medical Council of India and got a temporary permission to start it. A medical college needs a hospital to be attached and so he spent some meager amount to develop the Dichpalli leprosy treatment centre into a names sake hospital. His son was the chief administrator of all of these. His family members and friends were accommodated too generously to meet all expenses involved plus his personal needs. He took loans left right and center from different banks running into more than 50 crores - all by pledging the lands.

When the cheating details were brought to the notice of the President, P.M, F.M, Chief vigilance commissioner, CBI etc. the office and the houses of the Chairman of the MCI were raided and sacks and sacks of money and property were confiscated and the chairman was dismissed and imprisoned too. They also sent a team of the fresh MCI to re-inspect the Dichpalli medical college. To manage the show Suganthar is said to have hired 33 final year medical college students from Hyderabad to pose and pretend as the medical college staff. During the inspection days, he forced some pastors and teachers of the CSI to be on the hospital beds (with leave and remuneration!!!). When all these were exposed, the recognition given temporarily to the college was withdrawn. The Andhra government was subsequently pressured to accommodate all the students in their government medical colleges after freezing the deposit of Rs. 6.25 crores that the CSI had made. CSI lost Rs. 6.25 crores.

Then Suganthar tried to sell both the hospital and the college to a NRI. This was effectively blocked by bringing all the truth out to that NRI and warning him. Now the interest comes to whopping say 10 crores and the CSI Synod is paying it. WHOSE money?

Strangely, even after all these criminal havocs, Suganthar was allowed by this all powerful CSI synod with including his fat pension benefits etc. Since the lands are pledged, it is said that the banks are likely to auction it soon in all probability. That is the administration of CSI - the so called supreme CSI administrative body. The officers of the Synod are also NONEFFECTIVE entities.

The moral of the story is: Bishop Devasahayam is very closely following the same pattern of operation. Will he also escape with treasures in another 6 months, leaving behind crores and crores of liability to the CSI? Let the administrators be able administrators or let them quit or let us force them out and SAVE the CSI!

Please continue to send in your anonymous posts at http://bit.ly/166lg70


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

A MEGA LOAN IN THE MAKING AT CHENNAI'S CSI KALYANI HOSPITAL - YOUTH4CSI REPORTS

 
AS PUBLISHED IN YOUTH4CSI  https://www.facebook.com/youth4csi

Youth4CSI readers may recall our posting of January this year under the title: ‘Mega Scandal – How CSI Gifts Federal Bank Nearly Rs One Lakh Every Day’ (see Youth4CSI Campaign 2.2 of January 26, 2013). This chronicled the ongoing financial disaster where the loan taken by former Moderator B.P. Sugandhar for establishing a capitation fee-driven medical college on the premises of the former Methodist Mission run Leprosy Hospital at Dichpally, North of Hyderabad, hangs like a heavy boulder around the neck of the CSI. While the former Moderator continues to enjoy the crores he looted when in office and still receives his bishop’s pension the CSI currently pays over Rs 3 crores every year in interest servicing a loan whose principal stood at a whopping Rs 16 crore in December 2012.

What is mind-numbingly shocking is that more than eight years since the medical college was shut down (after the government withdrew recognition citing poor infrastructure), successive Synod administrations have opted to service the huge interest burden rather than close the loan for which the 40-acre Dichpally property stands mortgaged. Apparently no CSI leader wants to be blamed for losing the property and has taken the easier, but financially disastrous route, of continuing to pour good money after bad for the brief period they hold high office. In the last four years that three top CSI leaders (Moderator G. Devakadasham, General Secretary M.M. Philip and Treasurer Bennet Abraham) have been Officers of the Synod, along with Bishop G. Dyvasirvadam who became Deputy Moderator in 2012, more than Rs 10 crore has been gifted to Federal Bank as interest alone for a medical college that does not even exist! Now if this is not criminal negligence on the part of those who are supposed to safeguard the financial interests of the church, then what is?

Apparently no lessons have been learned from this episode and the CSI leadership continues to pile on huge amounts of debt mortgaging valuable CSI properties for availing huge loans. We give below an extract from the Minutes of the Church of South India Trust Association (CSITA) meeting of August 26, 2013 which illustrate the point we are making:

“It was reported that in the last CSITA Committee of Management meeting held on 24/7/2013 the CSI Kalyani Hospital, Madras Diocese, was permitted to avail a term loan of Rs 15 crores from Indian Bank, Radhakrishnan Salai, Mylapore, Chennai for construction of additional buildings and purchase of new equipments for upgrading the Hospital into Multi-Speciality Hospital by mortgaging 4.54 acres of hospital land with buildings. Though Mr Koshy Kuruvilla, Financial Consultant of CSITA, had recommended that they may be permitted to avail a bank loan to the extent of Rs 20 crores, the permission was given only for Rs 15 crores as per the request of the Madras Diocese. Further it was reported that now the Medical Director of the Kalyani Hospital has intimated that the request to avail a loan of Rs 15 crores was based on December 2012 estimate of the construction project. Further she had intimated that now the cost of construction materials like cement, steel and labour has gone up which has had a cascading effect on the total cost of the project. Therefore she has requested to revise the approval to a loan of Rs 20 crores.

Mr Koshy Kuruvilla, Financial Consultant of CSITA, who was present in the meeting reported that he had personally visited the Hospital and found out that the present building is not fit enough for upgrading the hospital by taking such a loan and cannot charge more fees from the patients and pay back the loans. Further he had suggested that the above project can be taken up in the vacant land adjacent to the Hospital by constructing a new building and more fees can be charged from the patients. As per the revised proposal the Hospital would need nearly Rs 34 crores of bank loans. Accordingly he had advised the Hospital authorities and the hospital authorities will be sending a revised building proposal and the loan requirement as per the revised proposal. After the detailed discussion it was RESOLVED to request the Madras Diocese to send the revised project proposal with estimated cost and the requirement of bank loan along with the Diocesan Executive Committee Minutes recommending thd same.”

What is shocking about the above is the entirely cavalier manner in which an initial Rs 15 crore loan proposal is inflated to Rs 20 crore and then to Rs 34 crore. Nowhere is there any mention of any detailed feasibility study having been conducted or presented to the CSITA management regarding how the interest burden from this huge loan is going to be serviced. The CSI-run Karakaonam Medical College Hospital near Thiruvananthapuram, which has also availed huge bank loans, found to its grief that when it raised patient charges, its price advantage vis-a-vis private hospitals diminished and many patients opted to go to the private hospitals which provide better value for money. As one doctor there told Youth4CSI the situation became so bad that students studying for medicine at the medical college found they had no patients to examine as part of their studies.

Inflating the loan amount in the Kalyani Hospital case is a natural temptation given the 4.54 acre property situated in the heart of Chennai on prime Dr. Radhakrishnan Salai is worth well over Rs 500 crore. Banks would thus love to give out a massive loan secure in the knowledge that if things go bad they have a property that is a virtual goldmine. Many private banks are also know to give an attractive incentive as a commission to those who can swing the deal for them and this often influences the recommendations that are made. With Bishop V. Devasahayam of Madras Diocese set to retire shortly, such mega projects with long gestation periods -- even assuming they were to go ahead -- should be piloted only by the new bishop that comes in (there should be a moratorium on financial dealings a bishop can enter into just ahead of his retirement similar to the prohibition in sanctioning new government projects before elections are held).

Another important question that arises is whether the CSI should be aspiring to massively improve infrastructure at its hospitals so that it can, as the minutes record, “charge more fees.” Most CSI hospitals were set up by missionaries as charitable institutions. In fact the website of the CSI Kalyani Hospital ( see http://www.csikalyanihospital.com/NewAboutus.html ) , which was established by the Methodists more than a century ago, says it “functions as a Charitable Institution and our aim is to provide subsidized medical care for the poor and downtrodden irrespective of caste, creed or religion.” With rare exceptions like the CSI Hospital in Gadag, Northern Karnataka, most CSI hospitals are badly run as constant interference from bishops and other functionaries ensure that corruption and nepotism is rampant and even committed Christian doctors give them a wide berth.

YOUTH4CSI HEREBY CALLS ON THE MEMBERS OF MADRAS DIOCESE TO URGENTLY DEMAND FROM THEIR BISHOP AND THE SYNOD FULL DISCLOSURE OF THE FINANCIAL FEASIBILITY OF THE HUGE LOAN THAT IS BEING PLANNED FOR KALYANI HOSPITAL. WE ALSO ASK THAT THE CHARITABLE CHARACTER OF THE HOSPITAL -- WHICH IS THE FUNDAMENTAL REASON SUCH HOSPITALS CAME TO BE ESTABLISHED SO THAT PEOPLE WHO USE THEM WILL COME TO KNOW AND GLORIFY THE LORD --IS NOT COMPROMISED. WE WOULD SUGGEST THAT CSI MEMBERS IN CHENNAI FORM A “KALYANI HOSPITAL WATCH GROUP” TO CLOSELY MONITOR DEVELOPMENTS GOING FORWARD AND HAVE PERSONAL MEETINGS WITH DIOCESAN AND SYNOD OFFICIALS. OTHERWISE WE COULD HAVE ANOTHER DICHPALLY SITUATION REPEAT ITSELF AND THE FOUR ACRE PROPERTY IN THE HEART OF CHENNAI COULD WELL GO FROM THE BANK THAT ADVANCES THE LOAN INTO THE HANDS OF A PRIVATE DEVELOPER FOR A HUGE COMMERCIAL OR HOUSING COMPLEX. THE SECURITISATION AND RECONSTRUCTION OF FINANCIAL ASSETS ACT OF 2002, WHICH WAS NOT AROUND WHEN THE DICHPALLY LOAN WAS AVAILED, MAKES IT VERY EASY FOR BANKS TO DISPOSE OFF MORTGAGED ASSETS.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கத்தோலிக்க ஆயர் பேரவை கூட்டத்தில் சர்சையால் பரபரப்பு: போலீஸ் குவிப்பு

பதிவு செய்த நாள்

07ஜூலை
2014 
06:09
 

 

சேலம்: சேலத்தில், நேற்று நடந்த, தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவைக் கூட்டத்தில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தலித் கிறிஸ்தவர்கள், தங்கள் ஆயருக்கு நியமன உத்தரவு வழங்க கோரிக்கை விடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டதால், பதட்டம் ஏற்பட்டது. அதையடுத்து, பாதுகாப்புக்காக, போலீஸார் குவிக்கப்பட்டனர்.
சிவகங்கை மறை மாவட்டத்தை சேர்ந்த மிக்கேல்ராஜா என்பவர், இறையியல் படிப்பினை, 17 ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில், இறுதியாண்டில் வெளியேற்றப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும், பொய் என தெரிய வந்ததோடு, தன்னை குற்றமற்றவர் என நிரூபித்தார்.ஆனால், அவரை, மறைமாவட்ட ஆயராக அறிவிக்க, திருச்சி புனித பவுல் இறையியல் கல்லூரியின் செபஸ்தியனும், ஆயர் சூசைமாணிக்கமும் மறுத்து வருகின்றனர். இதற்கு, மிக்கேல் ராஜா, தலித் கிறிஸ்தவ இனத்தை சேர்ந்தவர் என்பதால்தான், பதவி உயர்வு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று, சேலம் குழந்தை ஏசு பேராலய வளாகத்தில் உள்ள மூவேந்தர் அரங்கில், தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவைக் கூட்டம், தலைவர் பீட்டர் ரெஜிமன்ஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள, 17 திருச்சபைகளில் இருந்து, ஆயர்கள் கலந்து கொண்டனர்.
இதில், சிவகங்கை, ராமநாதபுரம் மறை மாவட்டங்களின் ஆயர் சூசைமாணிக்கமும் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில், தங்களுக்கு நியாயம் கேட்டும், ஆயர் மிக்கேல்ராஜாவுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரிக்கை விடுத்தும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தலித் கிறிஸ்தவர்கள், 200க்கும் மேற்பட்டோர், குழந்தை ஏசு பேராலய வளாகத்துக்குச் சென்றனர்.
அங்கு, தமிழக கத்தோலிக்க திருச்சபை ஆயர்களின் தலைவர் பீட்டர் ரெஜிமன்ஸை சந்தித்து, தங்களது கோரிக்கையை வழங்க உள்ளதாக தெரிவித்தனர். அதனால், குழந்தை ஏசு பேராலயத்தின் நிர்வாகிகள், பாதுகாப்புகோரி, பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
அதையடுத்து, சேலம் மேற்கு சரக சட்டம்-ஒழுங்கு உதவி கமிஷனர் விவேகானந்தன் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீஸார், அங்கு குவிக்கப்பட்டனர். கூட்டத்தில் கலந்து கொள்ள முயற்சித்தவர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால், அவர்கள், "தங்களது கோரிக்கை குறித்து, ஆயர்களிடம் தெரிவிக்காமல் செல்ல முடியாது' என தெரிவித்தனர். அதையடுத்து, சேலம் மறை மாவட்ட முதன்மை குரு பிளவேந்திரன் தலைமையில் நிர்வாகிகள், சிவகங்கை மாவட்ட தலித் கிறிஸ்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்பட்டதூல், அவர்கள் கலைந்து சென்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

FALSE CLAIMS ABOUT EVANGELISM

 
On Sunday 23rd March a News sheet (in Tamil) about the activities Evangelism of the Diocese of Madras were placed on the pews.

Some of the achievements as highlighted are presented to those who could not read Tamil.

1.8,057 persons baptized during 2013. A sum of Rs.1.00,38,310/- collected towards this ministry. In 17 villages land purchased to build Churches. In 10 more villages land to be registered.

2.For 2014 also and the target is Rs. 2 crore. The cost of land per sq. ft. is Rs.1,000,- in rural areas!

3.To raise money for evangelism in the newly annexed areas of the Corporation of Chennai, formerly parts of Tiruvallur and Kanchipuram Districts. Proposed to undertake a ‘Prayer March’ in the city of Chennai on the Easter Day.

4.‘Full Life Evangelical Ministry’ in the slums of Chennai, assuring: Good News to the poor, Liberation for the Prisoners, Healing the sick, Liberation for the oppressed, Sight to the Blind and so on.

5.‘Full Life Ministry’ has brought young believers from Kollamedu, Neithavoyal, T.P. Chatram, Annai Sathya Nagar and Dr. Ambedkar Nagar to ‘Vision Divine’ on third Sundays. These young believers receive Good News with the help of pictures depicted at Vision Divine.

COUNTER POINTS:

1.Where is the proof for the number of Baptisms reported? How many of them were forced? How many are remaining in Faith? Furnish details of land purchased with cost? Rs.1000 per sq. ft. in villages! Big Cheat!

2.In 2013 Rs. 1.00,38,310/- was collected. For 2014 target is Rs. 2 crore! What will be its fate?  This will disappear like the Rs.26 lakhs collected for the Dalit victims of Dharmapuri. First, produce evidence for Rs.26 lakhs distributed to Dharmapuri Dalits. BEWARE OF THIS PATTA THIRUDAN – THE PUCCA THIRUDAN, WHO STOLE THE PROPERTY OF CATHEDRAL, THE MOTHER CHURCH! WHO KNOWS, HE WOULD HAVE REGISTERED ALL THESE LANDS IN HIS OWN NAME. WHY HE TALKS ABOUT NEW LANDS JUST BEFORE BEING KICKED OUT?

3.Why start Evangelism in new Chennai Corporation areas taken from Tiruvallur and Kanchipuram Districts? This is sheer ‘humbug’. What was the Diocese doing in those areas in the past? This is how this crook always exploits the congregation.

4.What is ‘Full Life Evangelical Ministry’ in the slums?  Good news to the poor, liberation of prisoners, healing of the sick, liberation for the oppressed! The poor DON”T want WORDS of Good News, but DEEDS. They need FOOD for HUNGRY STOMACHS, SHELTER in the place of HUTS. REMEMBER, HE SWALLOWED CRORES OF RUPEES RECEIVED FOR TSUNAMI VICTIMS! What is liberation to Prisoners? IS he going to release all prisoners from prisons? This is another humbug. What is healing the sick? HE IS A VERY LEARNED THEOLOGIAN! STEALING MINISTRY THEOLOGIAN! Who is he to give sight to the blind? The cheat will collect money in the name of the sick and blind and swallow it as he swallowed Rs. 4.5 CRORE donated MEDICAL EQUIPMENT for poor patients of Nagari hospital. What liberation to the oppressed? To liberate the oppressed money is not needed. Friends, to put an end to all this NONSENSE, JUST ONE SIMPLE ACT IS NEEDED. HE IS THE MOST CROOKED OPPRESSOR, IF HE IS REMOVED, LIBERATION TO THE OPPRESSED IS ASSURED. HE IS OPPRESSING HIS FELLOW PASTORS, EMPLOYEES IN THE INSTITUTIONS, CONGREGATION MEMBERS WHO OPPOSE HIS EVIL ACTS AND SO ON. IF HE IS THROWN OUT THE DIOCESE WILL BE LIBERATED. (Many retired pastors denied pension. HE WANTS TWO PENSIONS, ONE FROM SYNOD AND OTHER FROM DIOCESE)

5.VISION DIVINE - He claims that many believers come and get strengthened HERE. This place is against the very Christian Faith, in other words, as bad as ‘IDOL WORSHIP’. VISION DIVINE is an un-authorised construction after demolishing the Martha’s Canteen, built like TAJ MAHAL FOR A BELOVED, WHO? He has not only demolished Martha’s Canteen, BUT THE ENTIRE DIOCESE during 15 years of dictatorship. BEWARE!

WHENEVER HE IS IN TROUBLE, HE WILL ALWAYS DIVERT THE ATTENTION OF PEOPLE. HE DOES NOT KNOW THAT PASTORS AND MANY PEOPLE ARE FASTING AND PRAYING THAT HE SHOULD BE BOOKED FOR ALL THE CRIMES COMMITTED BY HIM.

SO, MEMBERS OF THE CONGREGATION AND THE DIOCESE, PLEASE BE SENSIBLE. DON’T BE CARRIED AWAY BY THE GIMMICS OF THIS WORLD’S BIGGEST CROOK.

PLEASE DO NOT CONTRIBUTE. IF YOU ARE INTERESTED YOU CAN GIVE THE HELP DIRECT TO THE NEEDY POOR OF YOUR CHOICE.
 
http://stgeorgescathedral.blogspot.in/2014_03_01_archive.html


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம்

திங்கள் 29, ஜூன் 2015 5:21:04 PM (IST)

 

 
தூத்துக்குடியில் சிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்தக்கோரியும், சினாட் மாடரேட்டர் தேவாசீர்வாதத்தை கண்டித்தும் சிஎஸ்ஐ கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. 
 
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்தக் கோரியும், சினாட் மாடரேட்டர் தேவாசீர்வாதத்தை கண்டித்தும் அகில இந்திய கிறிஸ்தவ உரிமை இயக்கம் சார்பாக தூத்துக்குடியில், திருச்செந்தூர் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை இறையியல் கல்லுாரி முன்னாள் முதல்வர் தியான்சந்த் கார் தலைமை வகித்து கண்டனஉரையாற்றினார். 
 
அப்போது அவர் பேசுகையில், துாத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் ஜெபச்சந்திரன், தமிழக திருச்சபைகளில் உள்ள பேராயர்களில் மிகவும் நேர்மையானவர், உண்மையானவர், கடவுளுக்கும், மனசாட்சிக்கும் பயந்து பணிசெய்யக் கூடியவர். திருச்சபையின் நிர்வாகத்திலும், ஊழியத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். திருச்சபைகளின் அநீதிக்கு துணை போகவில்லை என்ற காரணத்தால் தென்னிந்திய திருச்சபையின் சினாட் அமைப்பு, திருச்சபை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராயர் ஜெபச்சந்திரனை பணி நீக்கம் செய்து 2.5 ஆண்டுகள் ஆகியுள்ளன.
 
மேலும் ஆளுங்கட்சி சர்வாதிகாரம் இவர் மீது பொய் வழக்கை போட்டு இவரை பணி செய்யவிடாமல் அலைக்கழித்து வருகின்றனர். இந்த படுபாதக செயலுக்கு சினாட் மாடரேட்டர் தேவாசீர்வாதம் உடந்தையாக இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளன. ஆந்திர மாநிலத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்க மிஷன் கொடுத்த 35 கோடியில் 25 கோடியை ஊழல் செய்து வழக்கில் சிக்கியவர் இந்த மாடரேட்டர். 
 
மதுரை பேராயத்தில் பேராயராக போட்டியிட்டு பேனலில் கூட வரமுடியாத ஜேசுசகாயம் என்பவரிடம் லஞ்சப்பணத்திற்கு விசுவாசமாக பேராய கமிஷரி என்ற பெயரில் அவரை பணியமர்த்தி திருச்சபைக்கு எதிராக நிர்வாகம் செய்து வருகிறார். தேர்தலில் பணி நியமனங்களில் தமிழர்களை தரம் தாழ்ததி தமிழ் விரோத போக்கையும் கட்டவி்ழ்த்து உள்ளார். எனவே பேராயர் ஜெபச்சந்திரனை உடனடியாக பணியமர்தத வேண்டும். சினாட் மாடரேட்டர் ஊழல் குற்றவாளி தேவாசீர்வாதம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.
 
இதில், பெடரல் சர்ச் ஆப் இந்தியா தலைவர் மரியராஜ், கிங்ஸ் சர்ச்சஸ் இந்தியா தலைவர் எட்வர்டு ராஜன், தலித் விடுதலை இயக்க மாநில பொதுச் செயலாளர் டேனியல் ஞானசேகரன், அகில இந்திய கிறிஸ்தவ உரிமை இயக்க தலைவர் சாம் தேவதாஸ், தெற்கு மாவட்ட திமுக நிர்வாகி வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், சாத்ராஜ், மாமல்லன், சாலமோன் ஜார்ஜ், பாஜக எம்.ஆர். கனகராஜ், பாமாக வழக்கறிஜர் பிரிவு ரசல்,  உட்பட சிஎஸ்ஐ கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 04_07_2015_002_014.jpg04_07_2015_006_017.jpg 20150703a_003101009.jpg 20150704a_007101004.jpg 20150703a_012101016.jpg CHN_2015-07-04_maip9_3.jpg CHN_2015-07-04_maip9_19.jpg CHN_2015-07-04_maip9_20.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

04_07_2015_112_004.jpg?w=497  04_07_2015_103_023.jpg CHN_2015-07-04_maip9_12.jpg CHN_2015-07-04_maip9_19.jpg  04_07_2015_016_012.jpgCHN_2015-07-04_maip9_3.jpg CHN_2015-07-04_maip9_5.jpg CHN_2015-07-04_maip9_10.jpg CHN_2015-07-04_maip6_16.jpg 61343357.jpg 61359714.jpg 20150703a_010101019.jpg 20150703a_003101009.jpg 20150702a_012101011.jpg tamilnad%2Bthoma.jpg03_07_2015_018_005.jpg 19500.jpg4145281.jpg 10685332_1052733604743691_948063183697329491_n.jpg 41455995.jpgCHN_2015-07-03_maip5_7.jpg CHN_2015-07-03_maip6_12.jpg CHN_2015-07-03_maip10_2.jpg CHN_2015-07-03_maip11_19.jpgCHN_2015-07-03_maip11_3.jpg CHN_2015-07-03_maip12_7.jpg 03_07_2015_018_008.jpg 3511.jpg 03_07_2015_018_003.jpg CHN_2015-07-03_maip11_18.jpg csi_arpattam.jpg Guna.jpg CHN_2015-07-03_maip11_5.jpg 03_07_2015_018_003.jpgCHN_2015-07-03_maip11_8.jpgIMG_1246.JPG IMG_9790.JPG Invitation.JPG  CHN_2015-07-03_maip11_9.jpg CHN_2015-07-03_maip11_18.jpgmatham%2BmaaRa%2Bland.jpgCHN_2015-07-03_maip11_13.jpg CHN_2015-07-03_maip11_17.jpgwife%2Bto%2Bpastor.jpg page8_11.jpg page1_30.jpg page1_27.jpg 11699064_910084689039911_9063471089894067731_o.jpg 11693806_910088945706152_8388636722643943049_n.jpg11174498_881769425204771_2202237359896262663_o.jpg11174890_881134035268310_3548514795802727811_n.jpgCHN_2015-07-03_maip12_8.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

02_07_2015_011_023.jpg10341615_10204196756265340_1089402905680251445_n.jpg?oh=33f4effaedccf46e4a72a5eb96abaf7b&oe=560EC845 1011816_10203780912309501_7102013894426644605_n.jpg?oh=fc9d3cfcc1f70da0e919e29576ef9307&oe=56318DCA&__gda__=1444572659_78b2418b3c47f0ad16c47b8fe26289f4 

10177481_10203674883698852_192649914638985283_n.jpg?oh=d60e626239e1bc89e2993cf56deb6a79&oe=565CAD64 1888512_10203649050173030_5814543990485367148_n.jpg?oh=7150be70dacb337969d78db7ea50d7c3&oe=5631092E&__gda__=1445167121_8c3e4851f6f59cdc70e194211fac8a04 10153133_10203649050213031_8597195554334699195_n.jpg?oh=03a8f17914ac207382bc833ddfed65d7&oe=56305C42

1510364_10203674883658851_3219989336920431123_n.jpg?oh=5655a500c349bbef74fc0b2ec85e9e92&oe=561966F3&__gda__=1444919442_8ae202c3d7509b4a92c8524dc1b4b4e8 1970891_10203394682173989_1776076614_n.jpg?oh=2db300f729c25d1d30e4994c8a4e997e&oe=56151325&__gda__=1448788483_00a911b1ce2d145ddf110fa5f94e868e1796534_10203394681973984_1364579842_n.jpg?oh=8d03dd6663643b9bb05a9714e4c4a322&oe=5627A97B1978736_10203394681733978_967153264_n.jpg?oh=e262675a2cba549e7b6272a3353cdb4a&oe=5623283D&__gda__=1445738080_cfb6649498a99c71899ab65f46e046221959524_10203394672253741_107704151_n.jpg?oh=3ead7e98990c579765983e9d72e3677c&oe=56242806&__gda__=1444390748_29d50d745984a2ab3524350d6267a3d71920331_10203394554490797_1661951217_n.jpg?oh=8f0b84cde39d0c6e5cfe783a3ded8641&oe=56321292 1912407_10203343319409952_328439158_o.jpg

1920289_10203343319129945_799583829_n.jpg?oh=406255d2b606baf57becd4c043122527&oe=56275D74 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

page6_06.jpg page6_04.jpg page2_03.jpg page2_05.jpg CHN_2015-07-07_maip11_14.jpg

CHN_2015-07-07_maip11_13.jpg CHN_2015-07-07_maip12_7.jpg CHN_2015-07-07_maip11_6.jpg CHN_2015-07-07_maip11_3.jpg 

CHN_2015-07-07_maip11_2.jpgCHN_2015-07-07_maip9_3.jpg CHN_2015-07-07_maip3_3.jpg 55624931_1.jpg 

55440353.jpg 55431915.jpg 55427839.jpg 55327592.jpg 20150707a_012101012.jpg

20150707a_010101005.jpg 20150707a_010101004.jpg v07_07_2015_014_029.jpg 07_07_2015_011_011.jpg07_07_2015_005_014.jpg07_07_2015_002_008.jpg 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

08_07_2015_016_007 CHN_2015-07-08_maip11_16 viduthalai.jpg?w=614 page2_05.jpg 

5037245_1.jpg  20150708a_003101003.jpg CHN_2015-07-08_maip6_2.jpg

CHN_2015-07-08_maip10_22.jpg CHN_2015-07-08_maip11_6.jpg CHN_2015-07-08_maip11_10.jpg CHN_2015-07-08_maip11_14.jpg CHN_2015-07-08_maip11_18.jpg

koester.jpg mervin.jpg  



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

08_07_2015_007_015.jpg08_07_2015_003_003.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Image result for கிறிஸ்துவ சர்ச் இடம் நிலம்Image result for கிறிஸ்துவ சர்ச் இடம் நிலம் Image result for கிறிஸ்துவ சர்ச் இடம் நிலம் Image result for கிறிஸ்துவ சர்ச் இடம் நிலம் Image result for கிறிஸ்துவ சர்ச் இடம் நிலம்

Image result for கிறிஸ்துவ சர்ச் இடம் நிலம் Image result for கிறிஸ்துவ சர்ச் இடம் நிலம்Image result for கிறிஸ்துவ சர்ச் இடம் நிலம் Image result for கிறிஸ்துவ சர்ச் இடம் நிலம்  

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

   Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் 

Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் 

Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார்Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார்

Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார்  Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார்  Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் 

Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார்

Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார்

Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார்Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் 

Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் 

Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார்Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார்Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார் Image result for கிறிஸ்துவ சர்ச் பாதிரியார்    



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கட்டாய மதம் மாற்றத்துக்கு முயற்சிக்கும் சொந்தம் : கருணை கொலை செய்யக்கோரி பிரம்மச்சாரி கதறல்  http://www.dinamalar.com/news_detail.asp?id=605638&Print=1

பதிவு செய்த நாள்

14டிச
2012 
00:57
 

Tamil_News_large_605638.jpg

திருச்சி : தனக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து சர்ச் கட்டியதோடு, கட்டாய மதம் மாற்ற செய்ய முயற்சிக்கும், அக்கா, தம்பி மீது, புகார் தெரிவித்துள்ள சகோதரர், தன்னை கருணை கொலை செய்யக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார். திருச்சி மணிகண்டம், கொளத்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பாலகணேஷ், 53. கட்டிட கான்ட்ராக்டரான இவர், அப்பகுதியில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு, இலவசமாக டியூசன் எடுப்பது போன்ற சமூக சேவை செய்கிறார்.
இவர், திருச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொன்னியின் செல்வத்திடம், நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
என் அக்கா பங்கஜத்துக்கும், ஓய்வு பெற்ற செய்தித் துறை இணை இயக்குனர் சாமிநாதனுக்கும், 1977ல் இந்து முறைப்படி, எங்கள் குல வழக்கப்படியும் திருமணம் நடந்தது. என் அக்கா கணவர், செய்தித் துறையில் இருந்ததால், தி.மு.க., ஆட்சியில் செல்வாக்கோடு வலம் வந்தார். என் அக்கா, அவரது கணவர் இருவரும் கிறிஸ்துவ மதத்தை தழுவினர். தொடர்ந்து என் தாயார் உள்பட என் குடும்பத்தில் உள்ள அனைவரையும், மூளைச்சலவை செய்து கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றினர். இதை நான் விரும்பவில்லை. என்னை கட்டாய மதம் மாற்றம் செய்ய முயன்றதால், நான் என் பூர்வீக வீட்டை விட்டு வெளியேறி, கொளத்தநாயக்கன்பட்டியில், 80 சென்ட் நிலம் வாங்கி குடியேறினேன்.


"நீ ஆசைப்பட்டது போல...' : என் அக்கா பங்கஜம், "என் மகன் திருமணத்துக்கு பணம் தேவை உள்ளது. உன் நிலத்தை கொடுத்தால், வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கி, திருமணம் நடத்தி, மூன்று மாதத்தில் அந்த இடத்தை தருவேன். நீ ஆசைப்பட்டது போல, முதியோர் இல்லம் கட்டித்தருகிறேன்' என்றார். இடம் தர சம்மதித்தேன்.
ஆனால், 2011, பிப்., 21ம் தேதி அக்கா பங்கஜமும், என் தம்பி வைத்தீஸ்வரனும், உடனே இடத்தை எழுதித் தரும்படி கேட்டனர். "எதற்காக அவசரப்படுகிறீர்கள்?' என, கேட்டேன். பயங்கர ஆயுதங்களுடன் ஆள் வைத்து மிரட்டி, என் இடத்தை அவர்களது பெயருக்கு பத்திரம் பதிவு செய்து கொண்டனர். கே.கே.,நகர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் என்னிடம் விசாரணை கூட செய்யாமல், உடனே பத்திரம் செய்து கொடுத்தனர்.

நடவடிக்கை இல்லை : அதன்பின் என்னை அந்த இடத்திலிருந்து துரத்தியடித்தனர். மணிகண்டம் போலீஸ் ஸ்டேஷன், எஸ்.பி., அலுவலகம், முதல்வர் தனிப்பிரிவு என, பலரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. என் தம்பி வைத்தீஸ்வரன், தனிப்படை இன்ஸ்பெக்டர் மணிமாறனும் நெருங்கிய நண்பர்கள். இதனால் போலீஸ் ஸ்டேஷனில் என் புகாரை ஏற்கவில்லை.
தொடர்ந்து என்னை கட்டாய மதம் மாற்ற செய்ய முயற்சிக்கின்றனர். என்னிடம் மிரட்டி பறித்த இடத்தில், சர்ச் கட்டியுள்ளனர். என் தம்பி மிகவும் கேவலமாகவும், மோசமாகவும் என்னை நடத்துகிறான். ஆதரவின்றி நிற்கதியாக உள்ளேன். நான் உயிரோடு இருந்தால் பிரச்னை என்பதால், என்னை கொலை செய்ய, இரண்டு முறை முயற்சித்துள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் என்னை கருணை கொலை செய்ய உத்தரவிடுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பாலகணேஷ் தம்பி வைத்தீஸ்வரன் என்ற வில்பிரட்டை தொடர்பு கொண்டபோது, ""நீ வந்து பார்த்தியா? கட்டாய மதம் மாற்றம் செய்ய அவன் என்ன பப்பாவா? '' என்று, அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் காட்டுத்தனமாக திட்டி, இணைப்பை துண்டித்தார். அதன்பின் அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் போனை எடுக்கவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 சர்ச் கட்ட எதிர்ப்பு; வீடுகளில் கருப்பு கொடி

பதிவு செய்த நாள்

09ஜூன்
2012 
00:19
 

 

சிவகாசி:சிவகாசி அருகே சர்ச் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியினர் தெருக்கள் வீடுகளில், கருப்பு கொடி ஏற்றினர்.சிவகாசி சிவகாமிபுரம் காலனியில், கிறிஸ்துவ அமைப்பினர், ஏழு ஏக்கர் நிலம் வாங்கி "பெந்தகொஸ்தே சர்ச்' கட்ட ஏற்பாடு செய்தனர். சர்ச் கட்டினால், "மதமாற்ற முயற்சி நடைபெறும். 
முருகன் காலனி செல்லும் ஓடை பாதை ஆக்கிரமித்து தடுக்கப்படும். திருவிழா நாட்களில் ஓடையில் சுவாமி கும்பிடுவதும் தடுக்கப்படும், 'என கூறியப்படி ,சிவகாமிபுரம் காலனி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே, சர்ச் கட்ட வழங்கிய கட்டட வரைபட அனுமதியை,விஸ்வநத்தம் ஊராட்சி ரத்து செய்தது. இதன் தொடர் பிரச்னைகளால் இதற்கு ,கடந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்த கிறிஸ்துவ அமைப்பினர் , சர்ச் கட்ட அனுமதி பெற்றனர். இதில் பிரச்னை ஏற்பட்டால் போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் கோர்ட் உத்தரவிட்டது. இருதரப்பினர் இடையே, வருவாய் துறையினர் பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. தற்போது போலீஸ் பாதுகாப்புடன் சர்ச் கட்டும் பணியும் நடந்து வருகிறது. 
இப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவகாமிபுரம் காலனி மக்கள் தங்கள் வீடுகள்,தெருக்களில் நேற்று கருப்பு கொடி ஏற்றினர். காலனி நிர்வாக குழு தலைவர் பிரபு,"" சர்ச் கட்டினால் தங்கள் பகுதி மக்களின் அமைதி பாதிக்கப்படும். 
மதமாற்ற முயற்சி நடக்கும். சர்ச் கட்டுவதை கண்டித்து தெருக்களில் கருப்பு கொடி ஏற்றியுள்ளளோம். ஒரு வாரத்தில் பிரச்னையை தீர்க்கவிட்டால், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை கலெக்டரிடம் ஒப்படைப்போம். 
அதன்பின்னும் பிரச்னை தீராவிட்டால் தெருவை காலி செய்து, அருகில் உள்ள சுடுகாடு, பஸ் ஸ்டாண்டில் குடியேறுவோம்,'' என்றார்.பெந்தகொஸ்தே சபை பாஸ்டர் கெர்சோன் ,"" எங்களது சொந்த இடத்தில் ,கோர்ட் அனுமதியோடு சர்ச் கட்டும் பணி நடக்கிறது. எந்த இடத்தையும் நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை ,''என்றார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 Image result for பலான  பாதிரியார்Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார்  Image result for பலான  பாதிரியார்  Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் Image result for பலான  பாதிரியார் 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

09_07_2015_011_003.jpg 09_07_2015_016_007.jpg CHN_2015-07-09_maip11_19.jpg CHN_2015-07-09_maip11_15.jpg CHN_2015-07-09_maip11_8.jpg CHN_2015-07-09_maip11_5.jpg CHN_2015-07-09_maip11_4.jpg 73920801.jpg CHN_2015-07-09_maip11_3.jpg 20150709a_012101001.jpg 11329928_404796236391366_6670922709768665555_n.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

images%2B%25282%2529.jpg images%2B%25283%2529.jpg images%2B%25284%2529.jpg images%2B%25285%2529.jpg 

images%2B%25281%2529.jpg Baskara-Doss.jpgBaskaradoss.jpgDeiva-%2Bveeramani-%2Bseeman%2B-%2Bezra%2Bsarkunam.jpg

 

deiva.jpgdeivanay.jpgdeivanayagi.jpgdevakala.jpgdownload%2B%25281%2529.jpg

 

download.jpggpura%252C.jpgiaas10.jpgiaas11.jpgiaas51.jpg

 

iaas56.jpgiaas60.jpgiaas70.jpg
images%2B%25281%2529.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

images%2B%25287%2529.jpgimages.jpgJohn%2Bsamuel.jpgKodumudi%2Bshanmugams.jpg
scan0009.jpg Moses%2BMichael%2Bfaraday.jpgmoses.jpgkumara.jpgthomo%2Bguna.jpg 
seeman-protest.jpgsinnappa%2527.jpgtamilclasses3.jpgthaniwaayakam.jpg06_07_2015_009_027.jpg 06_07_2015_016_011.jpg 20150706a_012101011.jpgCHN_2015-07-06_maip5_3.jpg CHN_2015-07-06_maip10_3.jpg CHN_2015-07-06_maip10_4.jpg CHN_2015-07-06_maip10_5.jpg CHN_2015-07-06_maip10_6.jpg CHN_2015-07-06_maip10_8.jpg CHN_2015-07-06_maip10_18.jpg CHN_2015-07-06_maip10_19.jpg CHN_2015-07-06_maip11_2.jpgCHN_2015-07-06_maip11_5.jpg 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

05_07_2015_016_012.jpg 05_07_2015_016_015.jpg 05_07_2015_405_020.jpg v32833.jpg 32337397.jpgCHN_2015-07-05_maip7_6.jpg CHN_2015-07-05_maip7_7.jpgCHN_2015-07-05_maip7_18.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Four-legged snake discovered

Fossil discovered of four-legged snake from 113 million years ago

An artist's impression of a four-legged snake, Tetrapodophis amplectus catching its prey, a salamander
An artist's impression of a four-legged snake, Tetrapodophis amplectus catching its prey, a salamander Photo: James Brown/ University of Portsmouth/PA
 

Scientists have discovered a 113 million-year-old fossil of a snake which has four legs with fingers and toes.

The Tetrapodophis amplectus - nicknamed 'huggy snake' - is the first evidence found of a four-legged snake.

The 20cm-long skeleton, which is thought to be from Brazil, has a tiny head the size of a human fingernail.

It has two very small front legs with wrists, elbows and hands and slightly longer back legs, which would have been used to grasp its prey.

A_skeleton_of_a_Te_3387281b.jpg
A skeleton of a Tetrapodophis (EPA)

The fossil, which is of a juvenile, also shows adaptations for burrowing, rather than swimming, strengthening the idea that snakes evolved on land.

Dr Dave Martill, who discovered the unseen fossil in a collection in a German museum, said it is "an incredibly significant specimen".

The University of Portsmouth professor said: "It is generally accepted that snakes evolved from lizards at some point in the distant past.

"What scientists don't know yet is when they evolved, why they evolved, and what type of lizard they evolved from.

"This fossil answers some very important questions, for example it now seems clear to us that snakes evolved from burrowing lizards, not from marine lizards."

• Fossil with hips shows snakes' lizard past

Dr Martill has been working with expert German palaeontologist Helmut Tischlinger and Dr Nick Longrich, of the University of Bath, who studied the evolutionary relationships of the snake.

Dr Longrich, who had previously worked on the origins of snakes, became intrigued when Dr Martill told him the story at the local pub in Bath.

He said he was initially sceptical, but when Dr Martill showed him photographs, he knew immediately that it was a fossil snake.

He said: "A four-legged snake seemed fantastic and as an evolutionary biologist, just too good to be true.

"It is a perfect little snake, except it has these little arms and legs, and they have these strange long fingers and toes.

• Scientists discover fossilised remains of world's longest snake

"The hands and feet are very specialised for grasping. So when snakes stopped walking and started slithering, the legs didn't just become useless little vestiges - they started using them for something else.

"We're not entirely sure what that would be, but they may have been used for grasping prey, or perhaps mates."

Interestingly, the fossilised snake also has the remains of its last meal in its intestine, including some fragments of bone.

The prey was probably a salamander, showing that snakes were carnivorous much earlier in evolutionary history than previously believed.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Police say 'drifter' killed 2, injured 9 in Lafayette, La. movie theater shooting

072315_shooting_phillips_640.jpg?ve=1&tl=1
 

The man who opened fire in a Louisiana movie theater Thursday night, killing two patrons before turning the gun on himself when police blocked his escape, was a “drifter” from Alabama who had a collection of disguises in his motel room and a trick license plate on his 20-year-old Lincoln Continental, police said Friday.

Lafayette Police identified John Russel Houser, 59 as the gunman who fired into a crowd of 100 people at the Grand 16 Theater during a screening of Amy Schumer’s “Trainwreck.” The gunfire killed Jillian Johnson, 33, a well-known local businesswoman and Mayci Breaux, 21, an employee at a fashionable woman’s boutique. Nine others were injured in the shooting, including reportedly Breaux's boyfriend.

“He’s kind of a drifter,” Police Chief Jim Craft told a news conference.

Details about the gunman quickly emerged from the press conference and online postings believed to be Houser's, painting a picture of a troubled and erratic man who had described his occupation as “hustling.”

Craft said Houser was from Phenix City, Alabama, but had been staying at a motel in Lafayette, he said.

"This is such a senseless, tragic action," Craft said Friday night. "Why would you come here and do something like this?"

More on this...

  • Police, governor share facts about theater shooting

  • Theater shooter identified as 59-year-old John Russel Houser

  • Witnesses describe Lafayette theater shooting aftermath

  • What drove gunman to target Louisiana movie theater?

Craft said Houser bought the weapon legally at a pawnshop in Phenix City, last year, and that he had visited the theater more than once, perhaps to determine "whether there was anything that could be a soft target for him."

Police recovered disguises, including wigs and glasses, during a search of the room. His 1995 Lincoln Continental "with switched license tags" was parked next to the movie theater exit, Craft said.

“It is apparent that he was intent on shooting and escaping,” he said. He said police found 13 spent round from Houser's semi-automatic .40 caliber handgun.

In one online profile believed to have been filled out by Houser in 2013, he wrote that he believes the U.S. will have a “Mad Max”-style societal breakdown by 2018, he claimed no political affiliation and said voting was a “waste of time.”

It is also believed he authored a rambling rant on the online forum about death in which he said that he would rather die than live without truth.

“My greatest fear is that I could die making a decision for the good of myself against everyone else," he wrote. "The death I fear is the death fools will experience.”

In 2008, Houser's family had him committed because of his violent-prone, erratic behavior.

A judge ordered him hospitalized, records show. While he was waiting to be taken to the hospital, Houser told his wife that when he got out “he would continue his erratic as well as threatening behavior” to try and stop his daughter’s wedding, according to the court papers.

His wife also removed guns from their home in 2008. Kellie Maddox Houser, "has become so worried about the defendant's volatile mental state that she has removed all guns and/or weapons from their marital residence."

On a Facebook page believed to be his, Houser wrote, "The bible doesn't ask me to like what it says, only to obey it. Death comes soon to the financially failing filth farm called the US."

In the 1990s Houser spouted inflammatory views on a local television call-in show in Columbus, Georgia, including advocating violence against people involved in abortions, host Calvin Floyd told the AP.

Floyd described Houser as an "angry man" who made "wild accusations" about all sorts of topics, and said he put him on to counter a Democratic voice because "he could make the phones ring."

Craft said investigators believe the gunman had originally tried to leave the theater by blending in with the fleeing crowd. However, as he attempted to do so, he spotted two police officers who had been in the parking lot and were responding to the reported shooting.

"It looks like he spotted the officers coming in and he turned around and he went against the crowd, and he fired a single gunshot," Craft said. "He was seated in the theater just like everybody else."

"The information we have at this time indicates that he was by himself, sat by himself and the first two people he shot were sitting right in front of him," the chief added.

Craft said Houser had a criminal record, but had not been in trouble with the law recently.

Two of the wounded victims were released from the hospital Friday. One of the injured had been brought to the hospital in critical condition. The hospital said Friday afternoon that after treatment his condition had improved to stable. 

Stories of heroism immediately began to emerge with presidential hopeful Gov. Bobby Jindal, who traveled to the scene within hours of the shooting, telling reporters that a teacher who was in the theater jumped in front of a second teacher, saving her life. The second teacher then managed to pull a fire alarm to alert other moviegoers, he said.

"Her friend literally jumped over her and, by her account, actually saved her life," Jindal said.

The shooting happened about 20 minutes into a 7:10 p.m. showing of "Trainwreck," according to The Daily Advertiser, which quoted theatergoer Katie Domingue. Authorities said approximately 100 people were inside the theater at the time.

"We heard a loud pop we thought was a firecracker," Domingue told the newspaper. Domingue said she saw "an older white man" standing up and shooting down into the theater, but not in her direction.

"He wasn't saying anything. I didn't hear anybody screaming either," Domingue said.

Domingue told the newspaper she heard about six shots before she and her fiance ran to the nearest exit, leaving behind her shoes and purse.

Emily Mann, 21, was watching the movie while seated with a friend in the second row from the top of the theater. Her father, Randall Mann, told The Daily Advertiser that Emily heard popping noises and saw the gunman standing at the other end of her row.

Jalen Fernell told The Daily Advertiser he was watching the film "Southpaw" with friends in an adjacent theater when he heard the first shots. Initially, he thought they were part of the movie.

"About five seconds later, sirens went off and I realized it wasn't the movie," said Fernell, who added that moviegoers were told to leave the area over a loudspeaker. Outside the theater, the 20-year-old said "I saw a woman lying on the ground outside with blood everywhere. She was shot in the leg."

"We didn't know what to do. You're scared to walk through the parking lot. You don't know if the guy's in a car, hiding in the parking lot," Fernell said. He watched as police with assault rifles entered the building and described hearing a barrage of gunshots "like a war going on."

Fernell said he heard from a police car radio that six people were down in Theater 14. After more gunshots, he heard that the suspect was down and had committed suicide.

Police said they had closed other theaters in the area as a precaution. State and federal personnel were on hand to assist in the investigation.

Jindal praised the response of local law enforcement and asked for prayers on behalf of the victims.

"The best thing anybody can do right now is to think about them, pray for them, shower them with your love is the most important thing we will get through this," Jindal said. "We will get through this. We are a resilient community. This is an awful night for Lafayette. This is an awful night for Louisiana. This is an awful night for the United States."

The White House said early Friday that President Obama had been briefed on the shooting by his homeland security team while aboard Air Force One en route to Kenya. 

"The thoughts and prayers of everyone at the White House, including the President and First Lady, are with the community of Lafayette, Louisiana, especially the families of those who were killed," White House spokesman Josh Earnest said. 

Comedian Amy Schumer, the star of "Trainwreck," tweeted her condolences late Thursday.

 

The Louisiana shooting occurred almost exactly three years after James Holmes entered a crowded movie theater in suburban Denver and opened fire during the premier of "The Dark Knight Rises", killing 12 people and injuring 70 others.

The Associated Press contributed to this report.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

T John Victor -Man makes bid to sell unborn baby for Rs 2 lakh

CHENNAI: Police are searching for a man who locked up his pregnant girlfriend for a week while he struck a deal to sell their unborn child in Tiruvallur, 60km from Chennai.

Police said T John Victor, 27, a resident of Kondancherry near Tiruvallur, went into hiding on Friday after 18-year-old G Bharathi escaped and lodged a police complaint at the Tiruvallur all-woman police station.

Bharathi said in her complaint that Victor had locked her up in a room and offered to sell their child to a couple soon after birth for Rs2 lakh.

Investigators said Bharathi was now with her parents. They are also searching for two of Victor's friends who helped him detain Bharathi.

"After Victor learned that Bharathi had escaped and approached police, he disappeared from the house with his friends," a senior officer said. He said a police team led by the inspector of the Tiruvallur all-woman police station is searching for the suspects.

A preliminary police investigation found that Bharathi lived in Kondancherry Colony and was Victor's neighbour. "Bharathi told us that she started a relationship with Victor and trusted him completely," an investigating officer said.

Bharathi said she informed Victor that she was pregnant and asked him to marry her.

"Victor was annoyed and told her that he would marry her only if she had an abortion," the officer said. "She agreed and went with him to a hospital in Poonamallee where doctors told them it would be too risky for Bharathi to have an abortion. Victor then took Bharathi to a friend's house in the same area and, after introducing her as his wife, detained her there."

Bharathi told police that she overheard Victor speaking to a friend on his cellphone, telling him that he had detained her and had made a deal to sell the child for Rs2 lakh to a childless couple in Ponnagaram, Tiruvallur.

She escaped from the house and spoke to her parents after a passerby heard her story and helped her.

"Her father Ganesan and relatives rescued her and took her to a hospital nearby," the officer said. "She later lodged a police complaint against Victor."



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் திருவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து

 
 
 
 
 
 
 
 
Rate This

 


இரண்டாயிரம் கோழி, 800 ஆடுஅறுத்து சிலைக்கு படைத்து விடிய, விடிய விருந்து

http://www.dinamalar.com/news_detail.asp?id=1310865

பதிவு செய்த நாள்

04ஆக
2015
22:38

 
Tamil_News_large_1310865
 

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவில்2 ஆயிரம் கோழி, 800 ஆடுகள் சமைத்து அனைத்து மதத்தினரும் பங்கேற்ற சமபந்தி விருந்து நடந்தது.

திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் திருவிழா கடந்த ஆக.2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 6 மணிக்குபாதிரியார் ஆரோக்கியசாமி தலைமை யில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

ஊர் பொதுமக்கள் சார்பாகவும், சங்கங்கள், குடும்பங்கள், வெளியூர் பொதுமக்கள் சார்பாக செபஸ்தியாருக்கு ஆடு, கோழி, அரிசி காணிக்கையாக அளிக்கப்பட்டது. இதில் 2 ஆயிரம் கோழிகள், 800 ஆடுகள், 130 மூடை அரிசி கிடைத்தது. அனைத்து மதத்தினரும் ஆடு, கோழி, அரிசியை காணிக்கையாக செலுத்தினர். இதில் வந்த மாடு மற்றும் சில பொருட்கள் உடனடியாக ஏலம் விடப்பட்டு, அந்த தொகை சர்ச் நிதியில் சேர்க்கப்பட்டது.

திண்டுக்கல் அருகேயுள்ள கிராமத்தினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.சமபந்தி விருந்து: நேற்று மாலை 6 மணிக்கு சமபந்தி விருந்து துவங்கியது. முதல் கட்டமாக 800 கோழி, 135 ஆடுகள் அறுக்கப்பட்டு பொது விருந்து விடிய, விடிய நடந்தது. இன்று பகல் 1 மணி வரை நடக்கிறது. பகல் 2 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. ஏற்பாடுகளை பாதிரியார் சேவியர் ராஜ், ஊர் பொதுமக்களும் செய்துஉள்ளனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கொடைக்கானலில் கொலை வழக்கில் போதகர் மகன் கைது.. சர்ச்சை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள கவுஞ்சி கிராமத்தில் பலசரக்குக் கடை நடத்தி வரும் பாலகிருஷ்ணன் மனைவி வீரலட்சுமி கடந்த 18 ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார்.

Villagers ransack church in Kodaikanal
கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள கவுஞ்சி கிராமத்தில் பலசரக்குக் கடை நடத்தி வரும் பாலகிருஷ்ணன் மனைவி வீரலட்சுமி கடந்த 18 ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார்.

Villagers ransack church in Kodaikanal

இது குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை செய்து வந்தனர்.

Villagers ransack church in Kodaikanal

இந்த நிலையில் அந்த ஊரில் உள்ள ஒரு தேவாலயத்தில் போதகராகப் பணியாற்றி வரும் தங்கராஜ் என்பவரின் மகன் பிரகாஷ் மற்றும் இவரது நண்பர் ஜெயக்குமார் ஆகிய இருவரும் நகைக்காகவும் பணத்திற்காகவும் வீரலட்சுமியை கொலை செய்ததாக தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தையும் மீட்டனர். Villagers ransack church in Kodaikanal

இந்நிலையில் கொலையாளி போதகரின் மகன் என்பதால் ஆவேசமடைந்த பொதுமக்கள் பிரகாஷின் வீட்டையும் அவரது உறவினரின் வீட்டையும் அடித்து நொறுக்கியதோடு போதகரான அவரது தகப்பனார் நடத்தி வரும் தேவாலயத்தையும் அடித்து நொறுக்கினர். மேலும் ஒன்று கூடிய பொதுமக்கள் இந்த கொலைக்கு மது போதையே காரணம் என்பதால் அந்த கிராமத்தில் அனுமதி இல்லாமல் மதுபானங்கள் விற்பனை செய்து வரும் அதிமுக கிளைச் செயலாளர் கிருஷ்ணனை கைது செய்யக் கோரி போராட்டத்தில் குதித்தனர். மேலும் அவர் இவர் சட்ட விரோதமாக நடத்தி வரும் மதுபானக் கடையை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவாலயம் மற்றும் போதகரின் வீடு தாக்கப்பட்ட சம்பவம் மலைக் கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/villagers-ransack-church-kodaikanal-231561.html



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

11816882_1630832303865435_885583423499789583_n.jpg?oh=625d36dc2e3f4a4048ba9476595f3ea5&oe=5651A4C0 11846588_1630832310532101_7912526374460529085_n.jpg?oh=87f4d32683a3d29a30476483c834406d&oe=563D04A1&__gda__=1447845312_f8104ef9050683c24862a4831bf0fe92 

 திருமாவளவன் டாக்டர் பட்டம் - லுத்ரன் - குருகுலம் அகடாமி & ஆராய்ச்சி நிறுவனம்http://www.thiruma.in/2009/07/blog-post_120.html

 இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சர்ச் மேனேஜ்மென்ட் விஜயகாந்துக்கு டாக்டர் பட்டம்http://nakkheeran.in/users/frmNews.aspx?N=44456

விஜயகாந்துக்கு நாளை டாக்டர் பட்டம்...
NAKKHEERAN.IN

 

 

 



__________________



__________________
« First  <  Page 22  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard